Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:36:03 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7412
#KOTW7412
Increase Font Size Decrease Font Size
சனி, அக்டோபர் 22, 2011
ஆபிதா நகர்மன்ற தலைவியாக தேர்வு! துபையில் காயலர்கள் மகிழ்ச்சி!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4223 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நடைபெற்று முடிந்த காயல்பட்டின நகர்மன்றதிற்கான தேர்தலின் முடிவுகளை கொண்டாடும் முகமாக நேற்றிரவு (அக்டோபர் 21)- துபாய் வாழ் காயலர்கள் - முதீனா பகுதியில் அமைந்திருக்கும் மகாராஜா உணவு விடுதியில் ஒன்று கூடினர்.

இதற்கான ஏற்பாடுகளை அமீரக காயல் நல மன்றத்தின் துணை தலைவரும், MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION - MEGA எனும் நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சாளை ஷேக் ஸலீம் செய்திருந்தார். 20க்கும் மேற்பட்ட காயலர்கள் இதில் கலந்துக்கொண்டனர்.











நகர்மன்ற தலைவியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆபிதா ஷேக் மற்றும் தேர்வு செய்யப்பட்டுள்ள 18 நகர்மன்ற உறுப்பினர்களுக்கும், கூடியோர் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆபிதா தலைமையில் இயங்க இருக்கும் நகராட்சி மன்றத்தின் நிர்வாகத்திற்கு அனைத்து கவுன்சிலர்களும் தங்களின் மேலான ஆதரவு மற்றும் ஒத்துழைப்புகளையும் வழங்குவதோடு, நகராட்சியில் நல்லாட்சி நிலைத்திட அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும என்ற ஒருமித்த கருத்து பதிவு செய்யப்பட்டது.











தற்போது காயல்பட்டினத்தில் நிலவி வரும் சூழ்நிலைகள், எதிர்காலத்தில் ஒற்றுமையை நிலைநாட்ட எடுக்க வேண்டிய செயல் திட்டங்கள், தடுக்கப்பட வேண்டிய தவறுகள் உட்பட ஊரின் ஒற்றுமைக்கு இளைய தலைமுறையினர் ஆற்ற வேண்டிய கடைமைகள் மற்றும் பெரியோர்களிடம் இருந்திருக்க வேண்டிய பரந்த மனப்பான்மை போன்ற பல கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

MEGA போன்று ஓர் அமைப்பை மீண்டும் துவக்கி, ஊரில் இயங்கி வரும் ஐக்கிய பேரவையை புதிய பரிணாம வளர்ச்சிபாதையில் கொண்டு செல்ல வேண்டும என்றும் விவாதிக்கப்பட்டது.







தகவல் / புகைப்படங்கள்:
ஆசாத்,
அமீரகம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஊர் ஒற்றுமையை கருத்தில் கொண்டு பேரவையை மாற்றி அமைப்பதே... கால சிறந்தது...!
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [22 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11727

இதுபோல் அணைத்து வெளி நாடு மற்றும் உள் நாட்டு காயல் நல மன்றங்களும் ஒருமித்த கருத்தோடு கண்டிப்பாக ஊரில் ஒருதலை பட்சமாக இயங்கி வரும் நமது ஐக்கிய பேரவையை புதிய மாற்றத்துடன் புதிய பரிணாம வளர்ச்சிபாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரத்த குரல் கொடுக்க வேண்டும்...

காரணம் 12,500 க்கும் மேல் நகரமன்ற தேர்தலில் ஐக்கிய பேரவையை எதிர்த்து வாக்கு அளித்து இருக்கிறார்கள்...! பேரவைக்கு உள்ள ஆதரவு வெறும் 5,500 மட்டுமே....! !

இது பேரவையின் மேல் உள்ள அதிருப்தியை ஊர் மக்கள் அனைவரும் காட்டி இருக்கிறார்கள்... ஆகையால் வரும்காலத்தில் ஊர் ஒற்றுமையை கருத்தில் கொண்டு பேரவையை மாற்றி அமைப்பதே... கால சிறந்தது...!

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (வி.சி.கட்சி)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஆபிதா நகர்மன்ற தலைவியாக த...
posted by Shahul Hameed (Hong Kong) [22 October 2011]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 11729

நட்புடன் இஸ்மாயில் அவர்களே!

6000 திற்கும் அதிகமாக மாற்று மத சகோதரர்களும் வாக்களித்து இருக்கிறார்கள். இனி அவர்களையும் நீங்கள் நினைப்பது போல் உருவாகும் பேரவையில் அங்கம் அளிக்க வேண்டும். அப்போது தான் ஊர் ஆரோக்கிய பாதையில் செல்ல இயலும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ஆபிதா நகர்மன்ற தலைவியாக த...
posted by I.B.S.Sintha Mathar (Chennai) [22 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 11730

காயல் பதியின் முதல் எழுத்தாய் விளங்கும் அன்புச் சகோதரி ஆபிதாவுக்கு " உயிர் எழுத்தால் ஒரு வாழ்த்து "

அ - அன்புச் சகோதரி
ஆ - ஆபிதா - காயல் நகராட்சி
இ - இனி உன்னால் காணட்டும் நல்லாட்சி !
ஈ - ஈடு இணையில்லா வெற்றி தந்தோம்
உ - உன் வெற்றி முகம்
ஊ - ஊருக்கு இனி வெற்றி யுகம் !
எ - எதிர்த்தவர்களை எல்லாம்
ஏ - ஏடு (புத்தகம்) கொண்டு வீழ்த்தினாய் !
ஐ - ஐந்தாண்டுகள் காயல் அரசியாய் இருந்து
ஒ - ஒருபோதும் ஊழலின்றி - ஊருக்காக
ஓ - ஓய்வின்றி உழைப்பாய் - பெண்
ஒள - ஒளரங்கசீப் என புகழ் பெறுவாய்

அன்புடன் "காயல் கவியருவி"
ஐ.பி.சிந்தா மதார், எம் .காம்., எம்.எஸ். டபுள்யு., எம்.பி.ஏ.
பெரிய நெசவு தெரு
காயல் பட்டணம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. உண்மையான ஒரு ஐக்கிய பேரவை நமதூருக்கு அவசியம் தேவை
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [22 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 11738

அஸ்ஸலாமு அலைக்கும்,

ரொம்பவும் சிறப்பாக உள்ளது. இந்த நிகழ்வுக்கு ஏற்ப்பாடு செய்தவர்களுக்கெல்லாம் ஒரு அமைப்பு இருந்தும் இந்த நிகழ்வை அந்த அமைப்பின் மூலம் செய்யாதிருந்தது ரொம்பவும் பாராட்டுதலுக்குரியது.

அமைப்புகள் என்பது பொதுவானது, நிறைய வேற்றுமைகளுக்கிடையில் உதவி மனப்பான்மை போன்ற சில சில காரணங்களை பொதுவாக வைத்து நாம் ஒற்றுமையாக இருக்கிறோம். என்பதுவே உண்மை. இதெல்லாம் மனதில் கொண்டும் நமக்கு இடையில் இன்னும் ஒரு பிரிவிவை வரக்கூடாது என்பதற்காவும் வேண்டி இப்படி ஒரு ஏற்பாடு பண்ணியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

சந்தோஷம் பங்கிட்டு சாப்பிட்டு விட்டு பிரியாமல் சிறந்த ஒரு கருத்தையும் சகோதரர்கள் எடுத்து வைத்துள்ளனர். அதையே நானும் சொல்கிறேன்:

""உண்மையான ஒரு ஐக்கிய பேரவை நமதூருக்கு அவசியம் தேவை""

ஒற்றுமை, தற்போது நம் எல்லோராலும் அதிகமாக பேசப்படும் ஒரு வார்த்தை. இந்த ஒற்றுமையை பற்றி எடுத்து சொல்லும் நாம் புனித குர்-ஆனில் இருந்து (3:103) இந்த வசனத்தை எடுத்து வைப்போம். அந்த வசனத்தை பொருளுடன் பூரணமாக ஆராய்ந்து பார்த்தால் நம்மிடம் ஒற்றுமை இன்னும் உறுதியாகனும். அது தான் உண்மையும்.

இனி ஒரு கட்சியின், அல்லது கொள்கையின் மூலம் ஒற்றுமை என்றால் அதுவும் பல பல காரணங்களால் ஒரு பட்டியலிட்டு அதுவும் ஒற்றுமையை விட அதிகமாக வேற்றுமையில் தான் சென்று முடியும்.

அப்படீன்னா எப்படி தான் ஒற்றுமை வரும்? அதைபற்றி சில தகவல்கள்:-

1) எல்லா தரப்பிலும் கொள்கையிலும் உள்ள நமதூரின் ஒற்றுமையை மதிக்கும் மக்களை ஒரு அவையில் திரட்டுவது.

2) நாம் கூடியிருக்கும் எல்லோரும் ஊர் ஒற்றுமை என்ற அடிப்படையை மட்டுமே குறிக்கோளாக வைதது திரண்டுள்ளோம் என்பதை உணர்த்துவதுடன், அரசியல், மட்டும் நம்மிடமுள்ள பல தரப்பட்ட கொள்கைகளை நாம் இந்த அவையில் ஒதுக்கி வைப்போம் என்று உணர்த்துவது.

3) எதையும் அவசரமில்லாமல் எல்லோரும் புரிந்து கொண்டு எல்லோருக்கும் வாய்ப்புகள் கொடுத்து, பல கருத்துகளில் இருந்து நல்லதை எடுத்து கொள்வது.

4) அப்படி கூட்டப்படும் பேரவைக்கு அதை வழி நடத்த ஒரு குழுவை தேர்ந்தெடுப்பது. இங்கு தான் மிக கவனிக்க வேண்டிய விஷயம். நீங்க தலைவரா இருங்கோ, அவரு செயலாளரா இருப்பார், இவர் பொருளாளரா இருப்பார். வழமையான இந்த கதையெல்லாம் தூக்கி போட்டு விட்டு, இவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையை வந்த மக்களுக்கே வழங்குவது.

5) இப்படி தேர்தெடுக்கும் பொறுப்பாளர்கள் எப்படி நடந்து கொள்ளணும்? அவர்களின் பொறுப்புகள், பொறுப்புகாலம், கூட்டங்கள் கூட்ட வேண்டிய முறை துவங்கி எல்லா காரியங்களுக்கும் ஒரு "பைலா" மக்கள் மன்றத்திலேயே தயார் செய்து வைப்பது.

இப்படி எல்லா விஷயங்களையும் ரொம்பவும் கவனமாக பார்த்து பார்த்து ஒரு பேரவை உருவானால் அதுவல்லவா உண்மையான ஐக்கிய பேரவை! இந்த மாதிரியான ஒரு பேரவை நம்ம ஊருக்கு அவசியம் தேவை!! தேவை!!!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ஆபிதா நகர்மன்ற தலைவியாக த...
posted by mohamednizam (india) [22 October 2011]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 11739

முத்து இஸ்மாயில் அவர்களே உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். ஐக்கிய பேரவைக்கு ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அது எல்லா ஜமாஅதுக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

அதுபோல் அடுத்த முனிசிபல் தேர்தலில் பொது வேட்பாளரை தேர்வு செய்யுமுன் ஊர் மக்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. காயலின் சுதந்திர தின விழா..
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [22 October 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11740

காயலின் சுதந்திர தின விழாவை கொண்டாடிய நல்லுள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் .

இந்த சுதந்திர போரில் கலந்து கொண்ட அணைத்து தியாகிகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. வாழ்த்துகள் வரவேற்கிறோம்...
posted by Mohamed Buhary (Chennai) [22 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 11785

MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION - MEGA எனும் நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாளை ஷேக் சலீம் அவர்களின் விருந்து ஏற்பாடு பிரமாதம்.

“MEGA போன்று ஓர் அமைப்பை மீண்டும் துவக்கி, ஊரில் இயங்கி வரும் ஐக்கிய பேரவையை புதிய பரிணாம வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும என்றும் விவாதிக்கப்பட்டது” என்ற கலந்துரையாடலை இன்னும் வீரியமாகத் துவக்குங்கள்.

ஐக்கிய ஜமாஅத் பேரவையில் உள்ள கறுப்பு ஆடுகளை முதலில் இனம் காண்பதுடன், அவர்களுக்குக் கையூட்டளிக்கும் பண முதலைகளையும் இனம் கண்டு அப்புறப்படுத்துங்கள்.

முதலில் களையெடுங்கள். அப்புறமாக நாத்து நடுங்கள். அப்போதுதான் நாம் விதைக்கும் பயிர் செழிப்பாகவும் பசுமையாக அமோக விளைச்சலைத் தரும்.

பாவம் ஐக்கியப் பேரவையின் மூத்தவர்கள். இனி எந்தப் பொறுப்புகளும் பதவிகளும் கௌரவத்திற்காகவோ குலப் பெருமைக்காகவோ இன்ன சிந்தனைப் போக்குள்ளவர் என்பதற்காகவோ அலங்கரிக்கப்படக் கூடாது.

தலைமைப் பொறுப்பு இறையச்சம், இக்லாஸ் (உளத்தூய்மை) உடைய நபர்களுக்கே அளிக்கப்பட வேண்டும். வேண்டாம் இந்தப் பொறுப்பு என்பவரைக் கண்டறிந்து நியமிக்க வேண்டும்.

எப்போது துவங்கப் போகிறீர்கள்...? எவ்வாறு இயங்கப் போகிறீர்கள்...? ஆரோக்கியமான ஒளிமயமான காயலை உருவாக்குவோம்.

மெகா என்ற பெயரே இருக்கலாம் அதை இப்படி அமைத்துக்கொள்ளுங்கள். MUHALLA ELECTION GUIDANCE ASSOCIATION - MEGA

அல்லாஹ் உங்கள் எண்ணங்களைத் தூய்மைப்படுத்தி அவற்றை நிறைவேற்றுவதற்கு நல்லருள் புரிவானாக!

வாழ்த்துகள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:ஆபிதா நகர்மன்ற தலைவியாக த...
posted by peena abdul rasheed (Riyadh) [22 October 2011]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11789

சாளை சலீம் நான் அப்துல்றஷீத் ஏன் என்னை குபிடவில்லை? சரிதான் உங்கள் போட்டோவை பார்து நாங்களும் அதில் ஐக்கியம் அஹிவிடோம். என்னடா (உடபை) சுரைவதெய் இன்னும் மறகலியா?

பீனா அப்துல்றஷீத்
பதாஹ் ரியாத்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. படைத் தலைவன் பண்பு பாராட்டுக்குரியதே...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [22 October 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11825

என் முன்னேற்றத்திற்கு முதல் படியாக தன் முதுகை வளைத்துத் தந்து நீண்டநாள் எம்மைச் (சஸஹாரா காக்கா குரூப்) சுமந்துச் சென்ற பெருமை சகோதரர் ஹுவைலீத், மற்றும் சாளை-ஸலீம் காக்கா, இவர்களுக்குத் தான் சேரும்!

பந்திக்கு முந்து! படைக்குப் பிந்துன்னு சொல்வாங்க! ஆனால்,நீங்க படைக்கு முந்தி பந்திக்குப் பிந்தி இருக்கீங்க! புரியல்லீயா? பேரவையை சீர் செய்ய போர் தொடுத்து படை நாயகனாய் முந்திட்டீங்க! ஜெயிச்ச சந்தோஷத்துலெ பார்ட்டி கொடுக்கும் போது சாப்பிடுற இடத்துலெ இடிச்சி புடிச்சு ஒருத்தர் உங்க முன்னாலெ கட்டு கட்டுறாரு! நீங்க என்னடான்னா? பிந்தீட்டீங்களே?

மதுரை அப்துல்லாஹ் எங்கே இருக்கானோ? மவன் மட்டும் பார்த்தான்னா... நொந்தேப் போயிருவான். பத்து பிளேட்டை ஸ்வாஹா பண்ணிட்டு காக்கா இன்னும் எதாவது வருமான்னு கேட்பானே? அது ஓர் இனிய கனாக் காலம்...!!! இனி வராது...!!!

-அபு ரிஃபாத்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:ஆபிதா நகர்மன்ற தலைவியாக த...
posted by Shahul Hameed (Hong Kong) [22 October 2011]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 11828

என்னுடைய கருத்து ஐகிய ஜமாஅத் என்பது அவசியம் தேவை. அது நமதூர் ஜமாஅத்களின் கூட்டமைப்பு.

ஐகிய பேரவை என்பது அணைத்து ஊர் மக்களின் பொது அமைப்பாக இருக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:ஆபிதா நகர்மன்ற தலைவியாக த...
posted by Habeeb Rahman (Dubai) [22 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11869

தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சஹோதரி ஆபிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்! இது எங்களால்தான் முடிந்தது என்று யாரும் மார்தட்டிகொள்ளும் தருணம் அல்ல.அது ஐக்கிய பேரவை புரிய நினைத்த அதே தவறை இந்த இயக்கங்களும் செய்ய நினைக்கும் அபாய நிலைக்கு தள்ளிவிடும்.

தன்னிச்சையாக செயல்பட்ட ஐக்கிய பேரவைக்கு 'மக்கள்' நல்ல பாடம் புகட்டியிருக்கின்றார்கள். இனிமேலாவது இதை உணர்ந்து ஐக்கிய பேரவை செயல் பட்டால் நல்லது. இல்லையேல் நாம் அனைவரும் ஐக்கய பேரவையில் புகுந்து செயல் படுத்த வேண்டியிருக்கும்.

இங்கு சிலர் ஒற்றுமையை கிண்டலாக பார்ப்பது வேதனையை தருகின்றது. நம் மார்க்கம் ஜனநாயகத்தை வழியிருத்தவில்லை.(அதனை எதிர்க்கவும் இல்லை) மாறாக பக்கத்துக்கு பக்கம் ஒற்றுமையை தான் வழியிருத்துகின்றது.

நாம் போற்றும் இந்த நவீன ஜனநாயகம் நல்ல கிளாமரும் ஸ்டைலும் உள்ள புரட்சிதளைவிகளையும் சூப்பர் ஸ்டார் களையும்தான் ஆட்சிக்கு கொண்டு வரும். அறியாமையிலும் கல்லாமையிலும் இருக்கும் நம் மக்கள் அவர்களைத்தான் விரும்புவார்கள். ஆனால் இஸ்லாம் கொண்டுவர நினைப்பது மக்களை விரும்புவர்களை. அவர்களை மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பரவாயில்லை.

யாரை தேர்தெடுக்க வேண்டியது என்று முறைகளை விதிக்கும் மார்க்கம் அவர்களை இப்படித்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதிக்கவில்லை. கலீபாக்களின் ஆட்சிமுறையை படித்தால் இதை உணரலாம்.

இதையே காரணமாக வைத்து ஐக்கிய பேரவைக்கு எதிராக ஒரு இயக்கம் தொடங்கினால் ஊர் முழுவதும் இயாக்கமாகத்தான் இருக்கும். தயவு செய்து இதை ஐக்கிய பேரவையை சீர் அமைக்கும் தருணமாக நினைத்து அதற்க்கான முயர்ச்சிகளில் இறங்கவேண்டும்.

அது முடியாத நிலையில் மட்டுமே பெரும்பாலான மக்களை உள்ளடிக்கிய எல்லாராலும் ஏற்றுகொள்ள கூடிய ஒரு அமைப்பு தேவை ஆகின்றது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. தன்னிலை விளக்கம்
posted by சாளை ஷேய்க் சலீம் (Dubai) [23 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11899

மேலே குறிப்பிட்டுள்ள இரவு விருந்து என்னுடைய சொந்த அழைப்பின் பேரில் நடந்த ஒன்றே தவிர இதற்கும் இங்கே பதிவு செய்யப்பட்ட கருத்துக்களுக்கும் அமீரக காயல் நல மன்றத்திற்கும் MEGA அமைப்பிற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவுபடுத்திக்கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:ஆபிதா நகர்மன்ற தலைவியாக த...
posted by MOHAMED ADAM SULTAN (KAYAL PATNAM) [23 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 11917

ஊரில் ஒரு புதிய சத்தமில்லா சரித்திர புரட்சி நடந்தேறி இருக்கிறதென்றால் அதற்கு அச்சாணியாக,

அனைத்து அறிவுரையையும் அள்ளிகொடுத்த பெருமைக்குரியவர்கள் அயல் நாட்டில் வாழும் அன்புக்குரிய காயல் நகர் கண்மணிகளே.!

உங்களின் சீரிய ஆலோசனை சிந்தனை ஊற்று என்றும் சுரந்துகொண்டே இருக்கவேண்டும் அத் தெளிவான தண்ணீரை பருக புதிய நகராட்சி தலைவி முதற்கொண்டு அணைத்து மக்களும் ஆவலுடன் அவதானித்தவர்களாக இருகிறோம்!

பூத்துகுலுங்கும் புன்னகை பூக்களைபோன்ற புகைபடத்தை பார்த்து பூரித்துபோனேன்.. .

குறிப்பாக நண்பர் தாவூத் ஹாஜி அவர்கள் அருகில் இருப்பதுபோல் ஒரு பிரமையை ஏற்படுத்தி விட்டார் எல்லோருக்கும் என் இனிய சலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved