Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:50:37 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7429
#KOTW7429
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 23, 2011
புதிய நகர்மன்ற தலைவர் - உறுப்பினர்கள் அறிமுகம் மற்றும் திட்டமிடல் கூட்டம்! தலைவர், 14 வார்டு உறுப்பினர்கள் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 7203 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (44) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 9)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நேற்று இரவு நடைபெற்ற புதிய நகர்மன்றத் தலைவர் - உறுப்பினர்கள் அறிமுகம் மற்றும் திட்டமிடல் கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஆபிதா மற்றும் 14 வார்டுகளைச் சார்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். விபரம் பின்வருமாறு:-

தேர்தல் முடிவுகள்:
கடந்த 17.10.2011 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் நகர்மன்றத் தலைமைக்கு 6 பேரும், 18 வார்டுகளின் உறுப்பினர்கள் பொறுப்பிற்கு 86 பேரும் போட்டியிட்டனர். 21.10.2011 அன்று வெளியான தேர்தல் முடிவுகளின்படி காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவராக ஆபிதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வார்டு 01 உறுப்பினராக ஏ.லுக்மான்,
வார்டு 02 உறுப்பினராக வி.எச்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா (போட்டியின்றி தேர்வு),
வார்டு 03 உறுப்பினராக பி.எம்.எஸ்.சாரா உம்மாள்,
வார்டு 04 உறுப்பினராக முத்து ஹாஜரா,
வார்டு 05 உறுப்பினராக ஜஹாங்கீர்,

வார்டு 06 உறுப்பினராக ஏ.கே.முஹம்மத் முகைதீன்,
வார்டு 07 உறுப்பினராக அந்தோணி,
வார்டு 08 உறுப்பினராக பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய்,
வார்டு 09 உறுப்பினராக ஹைரிய்யா,
வார்டு 10 உறுப்பினராக பத்ருல் ஹக்,

வார்டு 11 உறுப்பினராக எஸ்.எம்.முகைதீன்,
வார்டு 12 உறுப்பினராக ரெங்கநாதன் என்ற சுகு,
வார்டு 13 உறுப்பினராக எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன்,
வார்டு 14 உறுப்பினராக பாக்கியஷீலா,
வார்டு 15 உறுப்பினராக ஜமால்,

வார்டு 16 உறுப்பினராக தைக்கா சாமு,
வார்டு 17 உறுப்பினராக அபூபக்கர் அஜ்வாத்,
வார்டு 18 உறுப்பினராக இ.எம்.சாமி
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நகர்மன்ற அங்கத்தினர் அறிமுகக் கூட்டம்:
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் தமக்குள் அறிமுகம் செய்துகொள்ளும் பொருட்டும், தத்தம் பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய செயல்திட்டங்கள் குறித்தும் கலந்து பேசி, புதிய நகர்மன்ற செயல்பாடுகளைத் திட்டமிடுவதற்காக, நகர்மன்றத் தலைவர் ஆபிதா சார்பில் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவரவர் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று அழைப்புக் கடிதம் வழங்கப்பட்டிருந்தது.

கூட்ட நிகழ்வுகள்:
கூட்டம் 22.10.2011 சனிக்கிழமை (நேற்று) இரவு 07.00 மணிக்கு காயல்பட்டினம் துளிர் அறக்கட்டளை கேளரங்கில், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் தலைவியர் நாச்சி தம்பி, அ.வஹீதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அழைப்பின் பேரில் நகர்மன்ற உறுப்பினர்களும், நகரின் அனைத்துப்பகுதி பிரமுகர்களும் இக்கூட்டத்தில் சங்கமித்திருந்தனர்.













கூட்ட நிகழ்வுகளை அப்துல் காதிர் நெய்னா நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.

வரவேற்புரை:
கே.எம்.டி. மருத்துவமனை செயலர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.



அவரது உரை பின்வருமாறு:-

அன்பு சகோதர சகோதரிகளே,

எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் நிறைவாக நின்று நிலவட்டுமாக. நாம் பிறந்த மண்ணின் ஆட்சிப் பிரதிநிதிகளாக உங்களை நம் மக்கள் தெரிவு செய்துள்ளார்கள். உங்களையும் உங்களுக்கு பக்கபலமாக நின்று தேவையான ஆலோசனைகள் வழங்கி வழி நடத்தவுள்ள நகரப் பிரமுகர்களையும் சகோதரி ஆபிதா ஷேக் அவர்கள் சார்பாக வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்.

இறையருளால் நடந்து முடிந்த நமது நகர்மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற நகர்மன்றத் தலைவி மற்றும் உறுப்பினர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி பெற்ற நீங்கள் அனைவரும் உங்களுடைய கடமைகளை செவ்வனே நிறைவேற்ற வல்ல இறைவன் அருள்புரிவானாக.

நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள் என்று சொல்வதைவிட உங்கள் மீது புதிய பொறுப்புகள் சுமத்தப்பட்டிருக்கின்றன என்று நீங்கள் எண்ணவேண்டும். விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராமல் உங்களுடைய கடமைகளை இறைவனுக்காக நிறைவேற்ற வேண்டும். மக்கள் நடந்து செல்லும் பாதையில் கிடக்கும் முள்ளை அப்புறப்படுத்திய மனிதருக்கு இறைவன் நன்றி தெரிவிக்கிறான், அவருடைய பாவங்களையும் மன்னிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

மக்களுக்கு பணி செய்வதை இறைவனும் இறைத்தூதரும் எந்த அளவுக்கு நேசித்தார்கள் என்பதை இந்தச் செய்தி நமக்கு எடுத்துக் காட்டுகிறது. எனவே மக்களுக்காக நாம் செய்ய வேண்டிய கடமைகளை எந்தவித பாகுமாடுமில்லாமல் எந்தவிதமான பலனையும் எதிர்பாராமல் இறைவனுக்குச் செய்யவேண்டிய கடமையாக எண்ணி செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சகோதரி ஆபிதா அவர்கள் நிறைய கனவுகளோடும், அவருடன் உழைத்த சகோதரர்களின் ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்த உங்களின் பூரண ஒத்துழைப்பை எதிர்நோக்கியவராகவும் தனது பொறுப்பை ஏற்க உள்ளார்கள். தனது திட்டங்களுடன், சக உறுப்பினர்களின் எண்ண ஓட்டங்களையும் தேவைகளையும் அறிந்து அதற்கேற்ப தனது செயல்பாடுகளை அமைத்து திறம்பட செயல்படவேண்டும் என்ற நோக்கத்தில் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் பரிச்சயமாகிக் கொள்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்புச் சகோதர சகோதரிகளே இந்த நகர்மன்றத்திடமிருந்து நகர மக்கள் நிறையவே எதிர்பார்க்கின்றனர். எனவே வீண் அரசியலோ ஒருவருக்கொருவர் அணி சேர்த்துக் கொண்டு நமக்கிடையே போட்டி பொறாமை உணர்வுகளை வளர்த்துக் கொள்ளாமல், சகோதர வாஞ்சையோடு ஒருவருக்கொருவர் உதவி செய்து, மிகத் தேவையுள்ள பகுதிகளுக்கு அதிகம் செய்து, ஒரு சிறந்த முன் மாதிரியான நகராட்சி நிர்வாகத்தைத் தருவீர்கள் என முழுமையாக நம்புகிறோம்.

அன்புச் சகோதர சகோதரிகளே தேர்தல் காலத்தில் நிகழ்ந்துவிட்ட சில கசப்பான நிகழ்வுகளை மறந்துவிட்டு, நம்மிடையே சகோதர உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். எல்லாம் இறைவனுடைய நாட்டப்படியே நடந்துள்ளது என்ற நம்பிக்கையோடு, தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்து நகர்நலப் பணிகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மக்களின் தீர்ப்பை கொச்சைப் படுத்தும் விதத்தில் செயல்படாமல் மிகவும் வெளிப்படையான, ஊழலற்ற, செயலாக்கமிக்க ஒரு நிர்வாகத்தைத் தரவேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டு அமர்கிறேன். நன்றி.


இவ்வாறு ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் வரவேற்புரையாற்றினார்.

நகர்மன்ற முன்னாள் தலைவியரின் வழிகாட்டு உரை:

(அ) நாச்சி தம்பி:
பின்னர், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் தலைவர் நாச்சி தம்பி வழிகாட்டு உரையாற்றினார்.



நகர்மன்றத் தலைவராக புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆபிதா அவர்கள் பெரும் சோதனைகளைச் சந்தித்து இந்த வெற்றியை ஈட்டியிருக்கின்றார். அவருக்கு எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர், மக்கள் உணர்வுகளை மதித்து, மக்கள் வேட்பாளராகப் போட்டியிட்டு இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.

நாங்கள் இந்த நகராட்சியில் அங்கம் வகித்த காலங்களில் பணம் சேர்ப்பதற்காக செல்லவில்லை. ஏதோ நம்மைக்கொண்டு நம் நகருக்கு நல்லது நடக்கட்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் சென்றோம். அதுபோல, தங்கை ஆபிதாவும் தனது பணியை நகர்நலனை முன்னிறுத்தி செய்திட வேண்டும்.

நம் நகரின் பெரும்பாலான முஸ்லிம் மக்களும், புறநகரில் வசிக்கும் அனைத்து சமயங்களைச் சார்ந்தவர்களும் இவருக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்துள்ளனர். அவர்களிடையே எவ்வித பாரபட்சமும் இன்றி, நியாய அடிப்படையில் நடுநிலையோடு இவர் செயல்பட வேண்டும். அவ்வாறு இவர் செயல்படுவதற்கு எங்கள் ஆதரவையும், வழிகாட்டுதல்களையும் எப்போதும் வழங்கக் காத்திருக்கிறோம்.

புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு என் சார்பில் ஒரு முக்கிய வேண்டுகோள்...

நம் நகரில் சிமெண்ட் சாலை என்பது தேவையில்லாத ஒன்று. இந்த சாலைகளால் மழை நீர் மணலுக்குள் செல்லாமல் பல நாட்கள் சாலையின் மேற்பரப்பிலேயே தேங்கி, கொசுக்களை உற்பத்தி செய்கின்றன. அதுபோல நமது இல்லங்களுக்கான குடிநீர் இணைப்புகளுக்கு பள்ளம் தோண்டும்போதும் இதர தேவைகளின்போதும் இந்த சிமெண்ட் சாலைகள் மிகவும் இடைஞ்சலாக அமைந்துவிடுகின்றன.

எனவே, புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள், இனி வருங்காலங்களில் நம் நகரில் எந்தப் பகுதியில் புதிய சாலை அமைத்திட தீர்மானித்தாலும் அது தார் சாலையாக மட்டும் இருக்கட்டும். சிமெண்ட் சாலை நம் நகருக்கு வேண்டாம். இதை எனது அன்பான வேண்டுகோளாக உங்கள் முன் வைத்து விடைபெறுகிறேன்.


இவ்வாறு காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் நாச்சி தம்பி உரையாற்றினார்.

(ஆ) அ.வஹீதா:
அவரைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் அ.வஹீதா வழிகாட்டு உரையாற்றினார்.



புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் செயலாற்றிட இந்த get together மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நிகழ்ச்சியை திட்டமிட்டு நடத்தும் நகர்மன்றத் தலைவி மற்றும் அவருடன் இணைந்து நடத்தும் அனைவரையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

நான் நகர்மன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில், தினமும் நகர்மன்ற அலுவலகத்திற்குச் சென்று பணிகளைப் பார்வையிடுவேன். அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டிய நமதூருக்கான குடிநீர் வினியோகத் தொட்டிகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் பல்லாண்டு காலமாக சுத்தமே செய்யப்படாமல் இருந்தது. இந்நிலை எனக்கு முன் பணியாற்றிய யாருடைய கவனத்திற்கும் வராமலேயே போனது.

வெயில் காலங்களில் கெட்ட நாற்றத்துடன் தண்ணீர் வினியோகிக்கப்படுவதையறிந்து, அதற்கான காரணிகளைக் கண்டறியும் பொருட்டு எனது பணிக்காலத்தில் கடும் முயற்சிகள் மேற்கொண்டேன். நகர்மன்ற அளவில் இதற்கான தீர்வைக் காண இயலாத நிலையில், மாவட்ட ஆட்சியரை சந்தித்தேன். அவர் தன் குழுவினருடன் வந்து பார்வையிட்டு, பல்லாண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் சேறும், சகதியுமாக இருந்த குடிநீர் வினியோகப் பகுதிகளைப் பார்வையிட்ட பின், இதனை நாம் மட்டும் சரிசெய்ய இயலாது என்று தெரிவிக்க, யாரைக் கொண்டு சரி செய்ய வேண்டுமோ அவர்களைக் கொண்டு சரிசெய்து தாருங்கள்! என்று நான் தொடர்ந்து வலியுறுத்தினேன்.

இறுதியில், அவரது முயற்சியில் சென்னையிலிருந்து குழு வரவழைக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

இதை நான் இங்கு ஏன் தெரிவிக்கிறேன் என்றால், இதுதான் நமது தலையாயப் பணி என்பதை நகர்மன்றத் தலைவி உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

இளமைத் துடிப்புடன் கூடிய இவரது செயல்பாடுகளால் நமது நகர்மன்றம் மென்மேலும் வளர்ச்சியடையட்டும். அதற்கு நாங்கள் என்றும் உறுதுணையாக இருப்போம்.


இவ்வாறு காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் அ.வஹீதா உரையாற்றினார்.

நகர்மன்ற உறுப்பினர்கள் கருத்துரை:
பின்னர், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் வார்டு உறுப்பினர்கள் தமது கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட்டது.

06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன்,
11ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன்,
12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு,
15ஆவது வார்டு உறுப்பினர் ஜமால்
ஆகிய நான்கு வார்டு உறுப்பினர்களைத் தவிர மற்ற அனைத்து வார்டுகளின் உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, தமது கருத்துக்களைப் பதிவு செய்தனர்.







கருத்துரை வழங்குவதற்காக வார்டு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டபோது, அவர்களது பெயர், தந்தை / கணவர் பெயர், தொழில், சமூக சேவையில் அவர்களது முன்னனுபவம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

வார்டு 01:
துவக்கமாக, 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் உரையாற்றினார்.

01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பு எனக்கு தரப்பட்டுள்ளது. இதற்கு நான் தகுதியானவன்தானா என்பதை நான் அறியேன்... இருப்பினும் என்னாலியன்ற அளவுக்கு சிறப்பாக எனது பொறுப்பை நிறைவேற்றுவேன்.

ஒன்றை மட்டும் நான் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்... நான் ஒருபோதும் லஞ்சம் வாங்க மாட்டேன்... பிறரை வாங்க விடவும் மாட்டேன்... இதை அல்லாஹ்வை முன்னிறுத்தி இக்கூட்டத்தில் வாக்குறுதியளிக்கிறேன்...

சுருக்கமாச் சொன்னால், எனக்கு முன் எங்கள் 01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பை அலங்கரித்த திருத்துவராஜ் அவர்களது பெயரைப் பாதுகாக்கும் விதமாக எனது செயல்பாடுகளை அமைத்துக்கொள்வேன்.

First ward is the best ward என்று அனைவரும் போற்றும் வகையில் எனது நகர்மன்றப் பணிகளை அமைத்திடுவேன்...

தலைவியின் கனவான ‘பசுமைக் காயல்‘ திட்டம் முனைப்புடன் செயல்படுத்தப்பட என்னாலான அனைத்து ஒத்துழைப்புகளையும் நிறைவாக வழங்குவேன்...


இவ்வாறு அவர் உரையாற்றினார்.

வார்டு 02:
அடுத்து இரண்டாவது வார்டு உறுப்பினராக போட்டியின்றித் தேர்வான வி.எச்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா உரையாற்றினார். 02ஆவது வார்டுக்குட்பட்ட தனது பகுதியில் சீரான குடிநீர் வினியோகம், தெரு விளக்கு பராமரிப்பு, குப்பை அகற்றம் ஆகிய பணிகளுக்கு முன்னரிமை கொடுப்பதாக அவர் தனதுரையில் தெரிவித்தார்.

வார்டு 03:
அடுத்து, மூன்றாவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள் உரையாற்றினார். 03ஆவது வார்டுக்குட்பட்ட தனது பகுதியில் சீரான குடிநீர் வினியோகம், தெரு விளக்கு பராமரிப்பு, குப்பை அகற்றம் ஆகிய பணிகளுக்கு முன்னரிமை கொடுப்பதாக அவர் தனதுரையில் தெரிவித்தார்.



வார்டு 04:
அடுத்து, நான்காவது வார்டு உறுப்பினர் முத்து ஹாஜரா உரையாற்றினார்.

நகர்மன்றத்திற்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவியின் அனைத்து நல்ல செயல்பாடுகளுக்கும் எனது முழு ஆதரவை அளிப்பேன்...

எனது வீட்டின் பின்புறமுள்ள குப்பைத் தேக்கத்தை அகற்றி, அதனை சிறுவர் பூங்காவாக மாற்றிட ஆவன செய்வேன்...

தெரு விளக்கு பழுதின்றி இயங்கவும், சீரான குடிநீர் வினியோகத்திற்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். குறிப்பாக, குடிநீர் வினியோகத்தின்போது மின் வினியோகத்தைத் துண்டித்து, முறைகேடாக குடிநீர் உறிஞ்சப்படுவதைத் தடுக்க ஆவன செய்திடுவேன்...


இவ்வாறு அவர் உரையாற்றினார்.

வார்டு 05:
அடுத்து, ஐந்தாவது வார்டு உறுப்பினர் ஜஹாங்கீர் உரையாற்றினார்.

நகர்மன்ற அலுவலகத்திற்கு பொதுமக்கள் அடிக்கடி வருவது குடிநீர் இணைப்பு பெற்றிட, வீடு வரைபட ஒப்புதல் பெற்றிட, பிறப்பு - இறப்பு சான்றிதழ் பெற்றிட... இதுபோன்ற காரியங்களுக்காகத்தான்.

எனவே, இவ்வகையான காரியங்களுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை மக்கள் பார்வையில் படுமாறு தெளிவாக நகர்மன்றத்தில் அறிவிப்புப் பலகை நிறுவப்பட வேண்டும்...

இக்கட்டண நிர்ணயத்தைத் தாண்டி எந்த அலுவலராவது கட்டணம் வசூலிக்க முற்பட்டால், அதுகுறித்து புகார் அளிக்க என்னென்ன வழிமுறைகள் உண்டு என்பதையும் பொதுமக்கள் பார்வைக்கு அறிவிப்புப் பலகையாக நிறுவ வேண்டும்...

யாரும் லஞ்சம் வாங்கவும் கூடாது... யாரையும் லஞ்சம் வாங்கவோ, கொடுக்கவோ விடவும் கூடாது! இதை நகர்மன்றத் தலைவர் கவனத்தில் கொண்டு ஆவன செய்ய வேண்டும். அதற்கு நாங்கள் எங்கள் முழு ஒத்துழைப்புகளையும் தர ஆயத்தமாக உள்ளோம்.


இவ்வாறு அவர் உரையாற்றினார்.

வார்டு 07:
ஆறாவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. எனவே, ஏழாவது வார்டு உறுப்பினர் அந்தோணி அடுத்து உரையாற்றினார்.

நகர்மன்ற உறுப்பினராக தனது அனைத்துப் பணிகளையும், மன்றத் தலைவியுடன் கலந்தாலோசித்தே மேற்கொள்வேன்... எனது செயல்பாடுகள் எதுவும் தன்னிச்சையாக இருக்காது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வார்டு 08:
அடுத்து, எட்டாவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய் உரையாற்றினார்.

என்னை நகர்மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த என் வார்டு மக்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

எனது குணநலன்களில் நம்பிக்கை வைத்து, என்னை எனது வார்டுக்குட்பட்ட குருவித்துறைப்பள்ளி ஜமாஅத் பொது வேட்பாளராக அறிவித்தது. அவர்களின் அம்முடிவை எனது வார்டுக்குட்பட்ட மரைக்கார் பள்ளி, அப்பா பள்ளி ஜமாஅத்துகள் ஆதரித்து தீர்மானமியற்றியதோடு, எனக்காக பிரச்சாரமும் செய்தது.

இத்தனை ஜமாஅத்துகளின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட நான் எனது அனைத்து செயல்பாடுகளையும் இந்த ஜமாஅத்துகளின் கலந்தாலோசனையின்படியே செய்வேன்.

ஒருபோதும் நானும் லஞ்சம் வாங்க மாட்டேன்... மற்றவர்களையும் வாங்க விட மாட்டேன்.


இவ்வாறு அவர் உரையாற்றினார்.

வார்டு 09:
அடுத்து, ஒன்பதாவது வார்டு உறுப்பினர் ஹைரிய்யா உரையாற்றினார்.

லஞ்சமற்ற - நேர்மையான நடவடிக்கைகளாக எனது செயல்பாடுகளை அமைத்துக்கொள்வேன்... எனது பகுதி தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன்...

எனது வார்டுக்குட்பட்ட ரெட் ஸ்டார் சங்க வளாகத்தை மக்கள் நலப் பணிகளாற்ற களமாகப் பயன்படுத்துவேன்...

என்னிடம் குறைகளிருப்பின், வெளியில் பேசாமல் என்னிடம் தெரிவித்தால், அதைப் புரிந்து செயல்படுவேன்...

ப்ளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக களப்பணியாற்றி, சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பேன்.


இவ்வாறு அவர் உரையாற்றினார்.

வார்டு 10:
அடுத்து, பத்தாவது வார்டு உறுப்பினர் பத்ருல் ஹக் உரையாற்றினார்.

எனது வார்டுக்குட்பட்ட பரிமார் தெரு மீன் மார்க்கெட்டை சுகாதாரமாகப் பராமரிக்க ஆவன செய்வேன்.. தினமும் அதை சுத்தப்படுத்திட நடவடிக்கைகளை மேற்கொள்வேன்...

ஒருவழிப்பாதை மிகவும் அவசியம். அதைக் கருத்திற்கொண்டு, நடைமுறைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.

தாயிம்பள்ளியையொட்டிய பேருந்து நிறத்தத்தில் ஒருசில சிற்றுந்துகள் மட்டுமே நின்று செல்கின்ற நிலையை மாற்றி, அரசு விதிகளின்படி நிறுத்தப்பட வேண்டிய அனைத்து பேருந்துகளையும் நிறுத்திட ஆவன செய்வேன்.

இருளில் மூழ்கியிருக்கும் காயிதேமில்லத் நகரை ஒளிமயமாக்க தேவையான தெரு விளக்குகளை நிறுவ நடவடிக்கைகளை மேற்கொள்வேன்...


இவ்வாறு அவர் உரையாற்றினார்.

வார்டு 13:
11அவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

அடுத்து, 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் உரையாற்றினார்.

எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் எல்.கே.மேனிலைப்பள்ளி - தாமரை ஸ்கூல் வளாகத்திற்கருகிலுள்ள் குப்பை மேட்டைத் துப்புரவாக்கி, மாணவர்களுக்கு சுகாதாரமான சூழலை உருவாக்கிக் கொடுப்பேன்...

ஊழலற்ற நகராட்சிக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன்...

நம் தலைவியின் அனைத்து நகர்நலப் பணிகளிலும் துணை நிற்பேன்...


இவ்வாறு அவர் உரையாற்றினார்.

வார்டு 14:
அடுத்து, 14ஆவது வார்டு உறுப்பினர் பாக்கியஷீலா உரையாற்றினார்.

எனது பகுதியில் சீரான குடிநீர் வினியோகம், பழுதில்லா தெரு விளக்கு பராமரிப்பு, சுத்தமான சுற்றுப்புறச் சூழல் அமைய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்...

நகர்நலப் பணிகளில் நம் தலைவிக்கு உறுதுணையாக இருந்து உதவிகள் செய்வேன்.


இவ்வாறு அவர் உரையாற்றினார்.

வார்டு 16:
பதினைந்தாவது வார்டு உறுப்பினர் ஜமால் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அடுத்து, பதினாறாவது வார்டு உறுப்பினர் தைக்கா சாமு உரையாற்றினார்.

எனக்கு மேடைப்பேச்சு பேசி பழக்கமில்லை...

ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்கிறேன்... ஒருபோதும் லஞ்சம் வாங்கவும் மாட்டேன்... யாரையும் வாங்கவிடவும் மாட்டேன்... இது உறுதி.

என் வார்டுக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளையும் குறையில்லாத பகுதியாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.


இவ்வாறு அவர் உரையாற்றினார்.

வார்டு 17:
அடுத்து, 17ஆவது வார்டு உறுப்பினர் அபூபக்கர் அஜ்வாத் உரையாற்ற அழைக்கப்பட்டார். தொண்டை வலி காரணமாக அவரது உரையை கவிமகன் காதர் வாசித்தார்.

எனக்கு வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் உறுப்பினராகப் பணியாற்றிடுவேன்...

மகுதூம் பள்ளியில் கட்டப்பட்டு, செயல்படாமல் இருக்கும் நீர்த்தேக்கத் தொட்டியை செயல்பாட்டிற்குக் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்...

காட்டு தைக்கா தெரு பகுதியில் மழை நீர் தேங்குவதைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்...

எனது வார்டுக்குட்பட்ட மகுதூம் பள்ளி, முஹ்யித்தீன் பள்ளி, அரூஸிய்யா பள்ளி ஆகிய பள்ளிகளிலும், அவற்றையொட்டிய சங்கங்களிலும் புகார் பெட்டி வைத்து, மக்கள் குறைகளை அவ்வப்போது சேகரித்து, அவற்றை நிவர்த்தி செய்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.


இவ்வாறு அவர் உரையாற்றினார்.

வார்டு 18:
நிறைவாக, பதினெட்டாவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி உரையாற்றினார்.

திருச்சியில் பணியாற்றிய நான் பணி ஓய்வு பெற்று, காயல்பட்டினத்தில் ஓய்வெடுக்கலாம் என்று எண்ணியிருந்தேன். என் பகுதி மக்களின் தொடரான விருப்பத்தைக் கருத்திற்கொண்டு, ஓய்வுக்கு ஓய்வளிக்க முடிவு செய்து மீண்டும் பொதுப்பணியாற்ற முடிவு செய்துள்ளேன்...

நான் எனது நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில் சுமார் 50 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுத்திருக்கிறேன். நல்ல ஊதியத்திலான அந்த வேலைகளைப் பெற்றுத் தருவதற்காக நான் ஒரு பைசா கூட லஞ்சமாக யாரிடமும் பெற்றதில்லை.

என் கம்பெனி துவக்கத்தில் 500 கோடி ரூபாய் லாபம் பெற்று வந்தது. Truth, Discipline, Punctuality, Hardwork ஆகிய தாரக மந்திரங்களை உள்ளடக்கிய எங்கள் கூட்டு முயற்சி காரணமாக அதன் வருவாய் 1000 கோடி என இரட்டிப்பானது.

நாம் செய்ய முனையும் எந்தப் பணியையும் ஒரு கால நிர்ணயத்திற்குட்பட்ட பணியாக வகைப்படுத்தி செய்தால் அது செம்மையாக அமையும்.

நமது புதிய தலைவரின் திட்டங்கள் அனைத்தும் மக்களைக் கவருவதாக உள்ளது. என்னையும் அது வெகுவாகக் கவர்ந்துள்ளது. அவை நிறைவேற்றப்பட நான் உற்ற துணையாக இருப்பேன்.

இன்று நமதூரில் ஜீவாதாரப் பிரச்சினை குடிநீர் பிரச்சினைதான். இக்குறையைப் போக்கிட, இரண்டாவது பைப் லைன் திட்டத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் என்னளவில் மேற்கொள்வேன்.

நீர்த்தேக்கத் தொட்டி சுத்தப்படுத்தலுக்கு போதிய கவனம் செலுத்தி செயல்படுவேன்.

மூன்று சக்கர (ட்ரை சைக்கிள்) வண்டிகள் மூலம் அந்தந்த வார்டுகளின் குப்பைகளை சேகரித்துச் செல்ல ஆவன செய்வேன். வெறுமனே குப்பை லாரிகளை மட்டும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையை மாற்றி, நகர சுகாதாரத்திற்கு வழிவகை செய்வேன்.

திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் நடைபெறுமிடங்களில் சிறப்புப் பணியாளர்களை அனுப்பி, அப்பகுதிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பேன்...

ஆடு அறுப்பிடத்தை போதிய சுகாதாரத்துடன் பராமரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்வேன்.

இருளான பகுதிகளில் தெரு விளக்கு அமைத்தல், பழுதான சாலைகளை சரிசெய்தல் உள்ளிட்டவற்றை இயன்றளவு சிறப்பாக செய்வேன்...

சேது ராஜா தெரு, கோமான் புதூர், முத்தாரம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகள் வழியே சுடுகாட்டுக்குச் செல்லும் வழி முட்புதருடன் காட்சி தருகிறது. பிணத்தைச் சுமந்து செல்வோர் செருப்பின்றிதான் செல்வர். அவர்களது சிரமங்களைப் போக்கும் வகையில் அப்பகுதியை மேடு பள்ளமற்ற சமதளமாக்கி, முட்புதரை அகற்றிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்...

என் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை என் பதவிக்காலத்திற்குள் குறைவின்றி நிறைவேற்றப் பாடுபடுவேன்...


இவ்வாறு அவர் உரையாற்றினார்.

பின்னர், அனைத்து வார்டுகளின் நகர்மன்ற ஆண் உறுப்பினர்கள் நகர்மன்றத் தலைவர் ஆபிதாவுக்கு சால்வை அளித்தும், பெண் உறுப்பினர்கள் சால்வை அணிவித்தும் தமது வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.



















காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளி, ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ், டி.சி.டபிள்.யு. நிறுவனம், முத்தாரம்மன் கோயில் தெரு, ரிஸ்வான் சங்கம், இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF), திருவனந்தபுரம் காயல் நல மன்றம் உள்ளிட்ட ஜமாஅத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பிலும் நகர்மன்றத் தலைவருக்கு சால்வை அளிக்கப்பட்டது.

பின்னர், வரும் நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பின் (மெகா) சார்பில், நகர்மன்றத்தின் புதிய அங்கத்தினரை வாழ்த்தும் வகையில் பாராட்டு விழா பொதுக்கூட்டம், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடத்தப்படவுள்ளதாக, ‘மெகா‘ செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் இக்கூட்டத்தில் அறிவித்தார்.



நிறைவாக, நகர்மன்றத் தலைவர் ஆபிதா சிறப்புரையாற்றினார். (அவரது உரை தனிச்செய்தியாக தரப்படும்.)



நன்றியுரைக்குப் பின் துஆ ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், அழைப்பின் பேரில் நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இரவு விருந்து வழங்கி உபசரிக்கப்பட்டது.









நிறைவாக, நகர்மன்றத்தின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.



களத்தொகுப்பில் உதவி:
M.W.ஹாமித் ரிஃபாய்,
காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. உடனடியாக யாராவது அல்லது MEGA வோ....
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [23 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 12019

அஸ்ஸலாமு அலைக்கும்,

நல்ல அருமையான ஒரு நிகழ்ச்சி,

துவக்கமே தூள் கிளப்புதே.

சரி..., துணை தலைவர் தேர்ந்தெடுப்பு பற்றி வருகை தந்திருந்த உறுப்பினர்களுக்கு யாரும் ஒரு வேண்டுகோளும் வைத்தது போல தெரியவில்லையே? நல்ல சந்தர்ப்பமல்லவா யாரவது இது பற்றி பேசினார்களா?

இப்பவும் ஒன்னும் கேட்டு போகல, உடனடியாக யாராவது அல்லது MEGA வோ எல்லாவரையும் ஒருங்கிணைத்து ஒற்றுமையாக ஒருவரை தேர்தெடுக்க ஆலோசனை கொடுங்களேன். ரொம்பவும் தாமதம் இல்லாமல் செய்யுங்கள்.

http://www.kayalpatnam.com/shownews.asp?id=7418 இந்த செய்தியின் கருத்துக்கள் உதவியாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by Mohiadeen (Phoenix) [23 October 2011]
IP: 71.*.*.* United States | Comment Reference Number: 12020

வாழுக ஜனநாயஹம் வளுருக காயல் மக்கள்.

ஐக்கிய பேரவை should have joined in this get together and contribute their service by guiding if they really respect kayal unity.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by suaidiya buhari (chennai) [23 October 2011]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 12022

all candidate and my dear friend abida speech is very well and clear.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Missing in Action
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [23 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 12023

I was there that night, It was like a get together to get to know each other. A great opportunity for the members to introduce themselves to the chairman/ President and to the public.

Unfortunately 4 elected ward members were missing. No reason was given. At least they should have the courtesy/decency to call the chairman or the organizers to explain their absence. People start wondering why are they missing? Are they busy thanking their voters or are they under high command and were ordered not to participate?

They missed the boat.

Above all our ex-president Mr. Wavoo Seyed Abdul Rahman failed to appear. No reason was given. Was he in town? or Was Egoism play its part? Is it not his moral duty to attend such meeting? At least he should have send a message to the new comers.

Probably he will attend the inaugural ceremony on 25th of this month.

It was nice to see both our ex-presidents Mrs. Naatchi Thamby and Mrs.Waheeda.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலெ வந்ததே...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [23 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12025

அன்று! நான் எழுதிய கருத்தில் விளையாட்டாக குறிப்பிட்ட நாள் இந்த நாளைத்தானோ...???

யார் அந்தப் பட்டத்து ராணி...?

காயல் வேந்தன் 64 ஆம் புலிகேசி: ம்ம்ம்...சபாஷ்...!!! சரியான போட்டி! யார் அங்கே? (நகர) சபையின் அலுவல்கள் ஆரம்பமாகட்டும், மகா மந்திரி அவர்களே! அரச குரு வகுத்துத் தந்த போட்டிக்கான விதிமுறை(லஞ்சம் வாங்கவே மாட்டேன் என அல்லாஹ்வின் மீது ஆனையிட்டுக் கூறும் உறுதி மொழி)களை போட்டியாளர்கள் புரிந்து கொண்டு களமிறங்கச் சொல்லும்!

கடுமையான போட்டியின் இறுதியில் வாய்ப்புகளின் வரம் பெற்று வெற்றிதனை ஏற்போர்க்கு வாழ்த்தொலிகள் சபை முழங்க, வானம் வரை அது கேட்க, நலிந்தோர்தம் நலம் காக்க, நல்லோர்க்கு வளம் ஏக, பட்டத்து ராணியாய் பதவியேற்று, காயல் திருநாட்டை மறு நாட்டிற்கெல்லாம் முன் மாதிரியாய் மலரச் செய்திட மணி ஒலிக்கட்டும் இப்போதே!

ம்ம்.... போட்டி ஆரம்பமாகட்டும்...!!!

மந்திரி: தங்கள் ஆணை! அப்படியே ஆகட்டும் மாமன்னா...!!!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. புதியதோர் உலகம் செய்வோம்…!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [23 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12026

புதிய வெளிச்சம் பிறந்தது! மாயப் புழுதிப் புயல் மறைந்தது! நம் நகர் மன்றத்தைத் தூர்வாரி தூய தெளிநீர் ஊற்றெடுக்க, ஆழமாய்ப் புதைந்துள்ள ஊழல் அழுக்குதனை ஆழ்குழாய்த் துளையிட்டு, அனைத்தையும் வெளியேற்றிட, மண்டிக்கிடக்கும் மனித குப்பைகளை அகற்றிட, அரசியலை அண்டவிடாமல் அதிகாரப் பொறுப்பேற்று சதிகாரக் கும்பல்தனை விதி மாற்றம் செய்திடவே அணிதிரண்ட நல்லோரே! நும் பணி சிறக்க வாழ்த்துகின்றேன்!

புறப்படுங்கள்.... புதியதோர் உலகம் செய்வோம்...!!!அதில் புனிதர்களைப் பொறுப்பேற்கச் சொல்வோம்...!!! பசுமைக் காயலை உருவாக்கப் பாடுபடுவோம்…!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by Abdul Cader S.H. (Jeddah) [23 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12031

புதியதோர் முயற்சி இதுவரை இப்படியொரு அறிமுக கூட்டம் இதற்குமுன் நடந்ததாக நான் அறியேன்! வார்டு உறுப்பினர்களின் உறுதி மொழி தன்னம்பிக்கை தருவதாக இருந்தது.

நம் காயல் விழித்துக்கொண்டது. இனி லஞ்ச லாவனியம் இல்லாத ஒரு சிறந்த பேரூராட்சியாக திகழும் என்ற ஒரு எதிர் பார்ப்பு நம் எண்ணம்களிலே உதையமாகி விட்டது.

நல்லதொரு எதிர்காலம் நோக்கி நாம் நடை பயில்வோம். ஏழை எழியோர் பாகுபாடின்றி அனைவர்க்கும் பயனுள்ள பேரூராட்சியாக அமைந்து, பசுமையான காயலை உருவாக்க நாம் அனைவரும் ஒத்துழைப்போம்! வல்ல அல்லாஹ் அதற்கு துணை புரிவானாக ஆமின்.!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. அதிரடி ஆரம்பம் - வாழ்த்துக்கள்.
posted by M Sajith (DUBAI) [23 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12033

தம்பி ஸாலிஹ், கொஞ்சம் லேட்டா இந்த செய்தியை தந்தாலும் விரிவாக தந்துக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்..

எல்லோருமே லஞ்சத்துக்கு துணைபோக மாட்டோம் என உறுதியளித்திருப்பது உள்ளம் குளிரச்செய்கிறது - வல்ல இறைவனின் இவர்களின் செயல்களில் இதே உறுதி நிலைக்கச்செய்வானாக..

இதில் ஒற்றுமை மிளிருகிறது

- லஞ்சம் வாங்க மாட்டோம் என்ற 'கருத்து' ஒற்றுமை

- நல்லது நடக்கவேண்டும் என்னும் 'மன' ஒற்றுமை

சரியை மட்டுமே சரிகாணும் பெரியவர்களை கண்டதில் மகிழ்ச்சி.

- முன்வந்து வாழ்த்தவும், அறிவுருத்தவும், மாற்றங்களை வரவேற்கவும் நல்ல மனம் வேண்டும்.

- மனமுவந்து முன்னிற்கும் இவர்களின் வழிநடத்தல்களில் நன்மை மட்டுமே வரும் என்பதில் சந்தேகமில்லை.

திருமறை வசனம் (3:103) கட்டளையிடும் இறைவனின் கயிறை ஒற்றுமையாக பிடிக்கவும், அதில் பிரிந்துவிடாமல் இருக்கவும் இறைவனிடமே வேண்டுவோம்..

தலைவியின் உரையை கேட்க காத்திருக்கிறோம் ஆவலாய்.. வரட்டும் வேகமாய்...
_____________________________________________
“உனக்கொரு பிரச்சனை இருப்பது தெரிந்தால் உறுதியோடு நீ அதை தீர்வு செய்ய முனைந்திடு! அதுவே வல்லமை படைத்தோர் செய்வது. முதியோர் ஆலோசனையைக் கேட்டுக் கொள் மேலும் உன் முடிவை நீயே எடு" - கலில் ஜிப்ரான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by CNash (Makkah) [23 October 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12035

GOOD INITIATIVE AND TREMENDOUS BEGINING... GO ON YOUR WAY THAT IS THE WAY OF TRUST AND TRUTH.

தேர்தெடுக்கப்பட்ட உங்கள் அனைவரையும் ஒருங்கே பார்பதற்கு மிக்க மகிழ்ச்சி!! வராதவர்கள் பற்றியும்.. இதுவரை ஒரு வாழ்த்து செய்தி கூட அனுப்ப மனம் வராத ஒற்றுமையின் சிகரங்கள் பற்றியும் எந்த கவலையும் இல்லாமல் ..... இனி உள்ளத்தால் குணத்தால் அறிவால் பண்பால் சிறந்த பெரியோர்கள் துணையும் துவாவையும் கொண்டு வெற்றி நடை போடுங்கள்!!!

முதலில் யாருமே ஆதரிக்காத, 4 பேரு கைகளுடன் தலைவர் கையும் சேர்த்து உயர்த்தி வைத்து துவங்கபட்ட ஊருக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லாத பாதாள சாக்கடை திட்டம் பற்றி பரிசீலனை செய்து.. அந்த துறை சம்பந்தப்பட்ட வல்லுனர்களின் ஆலோசனை பெற்று... ஊரு மக்களின் கருத்தையும் அறிந்து... இனி செயல்படுத்த வேண்டுமா? இல்லையா என்பதை முடிவு செய்யுங்கள்!!

நீங்கள் செய்யும் எல்லா நற்காரியங்களுக்கும் ஆதரவு அளிக்கும் அதே வேளையில் எந்த ஒரு கோணல் வந்தாலும் சுட்டிக்காட்டி எதிர்க்கும் முதல் கணை இந்த தளத்தில் இருந்தும், முடிந்தால் களத்திலும் இருந்து வரும் என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by mohamed abdul kader (dubai) [23 October 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12036

அஸ்ஸலாமு அழைக்கும்

துளிர் அறக்கட்டளை கேளரங்கில் இவ்வலவூ பிரம்மான்றமாக நகர்மன்றத் தலைவர் - உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் நடந்துள்ளது நகரின் அணைத்து சகோதரர்களும், புறநகர் சகோதரர்களும் மற்றும் ,முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர் மிக்க மகிழ்ச்சி.

தேர்தல் நேரத்தில் வூடகம் வாயலாக பல பல மாறுபட்ட கருத்துகளை பரிமாறிக்கொண்ட பல இயக்கங்களும் மற்றும் அமைப்புகளும் நடந்ததை மறந்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டன ( வயதில் சிறியவர்கள் ) மிக்க மகிழ்ச்சி. இறைவன் இந்த ஒற்றுமையை இன்னும் இருக்கமானதஹா ஆக்கியாருல்வானாக ஆமீன் .

ஆனால் பேரவைஇன் ( வயதில் முத்த ) பெரியோர்களே ஒரு வாழ்த்து செய்தியைகூட அனுப்ப மனம் வறாத காரணம் என்ன ? அப்படி என்ன தவறு செய்துவிட்டார்? நகரத்தின் புதிய தலைவி அவர்கள்.

வஸ்ஸலாம்

S.H.MOHAMED ABDUL KADER
K.T.M.STREET

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by Vilack SMA (Kangxi) [23 October 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 12037

அஸ்ஸலாமு அழைக்கும் .

அனைத்து உறுப்பினர்களின் எண்ணங்களும் நிறைவேற மக்கள் , நாம் ஒத்துளைப்போமாக . அனைத்து உறுப்பினர்களுமே , குறிப்பாக , சீரான குடிநீர் விநியோகம் , குப்பை அகற்றுதல் , லஞ்சம் ஒழிப்பு பற்றிதான் பேசியுள்ளனர் . அதி முக்கியமான திட்டங்கள்.

மேலும் வார்டு எண் 9 ஹைரிய்யா ராத்தா சொன்னதுபோல் , குறை இருப்பின் , தயவுசெய்து வெளியில் இருந்து பேசிக்கொண்டிராமல் , உறுப்பினரிடம் நேரிடையாக முறையிட வேண்டும்.

அனைத்து உறுப்பினர்களுக்கும் , தங்கள் பணியின் காலங்கள் சீராக இருக்க மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Hats off to this new team!!
posted by Salai Mohamed Mohideen (USA) [24 October 2011]
IP: 68.*.*.* United States | Comment Reference Number: 12042

இந்த செய்தியை படித்து முடித்த பொழுது மனதிற்குள் ஒரு சந்தோசம் எனக்குள் பரவியது. அது ஒரு தன்னம்பிக்கையும் தருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. முன்னால் நகர்மன்ற தலைவிகளின் ஆலோசனைகள், தற்போது வெற்றி பெற்றுள்ள உறுப்பினர்களின் உரைகள்/செயலாக்க திட்டங்கள், ஊர் நலனில் அக்கறை கொண்ட அனைத்து (சுயநலமற்ற) இயக்கங்கள்/ பெரியவர்கள்.... அதிலும் குறிப்பாக இளைய சமுதாயத்தினரின் பங்களிப்பையும் பார்க்கும் போது... நமது நகர்மன்றதுக்கு ஒரு விடியல் உதித்து விட்டதாகவே நினைக்க தோனுகிறது.

நகர்மன்ற உறப்பினர்கள் தங்கள் செயல்திட்டங்களை வெறும் பேச்சோடு நிறுத்தி கொள்ளாமல் உங்கள் வார்டு மக்களுக்காக... நீங்கள் உண்மையாகவே உழைக்கும் போது உங்கள் வார்டோடு சேர்த்து ஊரும் வளர்ச்சி பெரும்.

வல்ல அல்லாஹ் உங்களை "கறைபடாத கரங்களுக்கு" சொந்தக்காரர்கள் என்று அடையாளம் காணப்படும் நல்லோர்கள் கூட்டத்தில் உங்களையும் சேர்த்து, உங்கள் சொந்த வாழ்க்கையும் மேன்மையாக்கி, எவருக்கும் எந்த சூழ்நிலையிலும் எந்த ஒரு அதிகார/ஆணவ வர்க்கத்துக்கும் விலை போய்/குனிந்து விடாமல், பணக்காரன்/ஏழை தெரிஞ்சவன்/தெரியாதவன், முஸ்லிம்/மாற்று மதத்தினர் என்ற பாரபட்சமின்றி எவருக்கும் பயப்படமால், நம்மை படைத்த ரப்புல் ஆலமீன் ஒருவனுக்கு மட்டும் பயந்து , எல்லா மக்களின் (எந்த ஒரு பாரபட்ச மின்றி) குறைகளை அறிந்து அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உங்கள் கடைமைகளை செவ்வென செய்ய துஆ செய்கிறேன்.

இது போன்ற கூட்டங்கள் quarterly /half yearly once இதே மாதிரி சான்றோர்கள் மற்றும் போது மக்கள் முன்னிலையில் நகராட்சியில் என்ன நடக்கின்றது, என்ன மாதிரியான சப்போர்ட் மக்களிடம் எதிர்பார்க்க படுகிறது. மக்களின் குறைகளை இந்த கூட்டத்தில் கேட்டு அதை களைந்திட என்ன முயற்சிகள் எடுக்க படும் என்பதனை உறுப்பினர்கள் மற்றும் தலைவர் விளக்கம் அளிக்கலாம். நமது நகர்மன்றம் தமிழகத்துக்கே ஒரு முன்மாதிரியான நகர்மன்றமாக விளங்க உளமார்ந்த வாழ்த்துக்கள்!!

பேரவையின் பெரியவர்கள் முகங்களை இங்கே காணவில்லை. ஒரு வேளை பேரவையின் பெரியவர்கள் இந்த கூட்டத்துக்கு அழைக்க்பட்டர்களா அல்லது அழைக்கப்பட்டு அவர்கள் வரவில்லையா என்று தெரியவில்லை. பேரவையின் தனிச்சையான செயல்பாட்டில்/முடிவில் வேண்டுமானால் நமக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம் நிச்சயமா அவர்களும் நம்மில் ஒரு அங்கம். அவர்களின் பங்களிப்பும், "ஊருக்கு நன்மை பயக்கும்" விலை மதிப்பற்ற ஆலோசனைகள் நிச்சயம் நமக்கு தேவை. அவர்களும் நம்முடம் சேர்ந்து செயலாற்ற வேண்டும். நம்மில் உள்ள கருத்து வேறுபாடுகளை மனக்கசப்புகளை தூக்கி வெளியே போற்றுவிட்டு ஒரு கூட்டு பறவைகளாக செயல்படவேண்டும்.

தலைவியின் உரை படிக்க மிக ஆக உள்ளது. சீக்கிரம் செய்தியை வெளிடவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by D.SEYED ISMAIL (HONGKONG) [24 October 2011]
IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 12045

அஸ்ஸலாமு அலைக்கும்

(உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)

நல்லதொரு ஆரம்பம். வாழ்த்துக்கள்

இந்த நிகழ்வில் பேசியதை தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் இறைவன் துணையுடன் செயல்படுத்த வேண்டும். தவறினால் மக்கள் மன்றத்திலும், இறைவனிடத்திலும் பதில் சொல்லவேண்டும்.

தமிழகத்தின் முன்மாதிரி மாநகராட்சியாக பெயரெடுக்க வேண்டும்

இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by AbdulKader (Abu Dhabi) [24 October 2011]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12048

அஸ்ஸலாமு அழைக்கும்...

எப்படி ஆரம்பிக்க? என்ன சொல்ல?.... கலக்கிடீங்க போ.... அணைத்து மக்களையும் அரவணைத்து "பாரபட்சமில்லாமல்" நான் செயல் படுவேன் என்று சொன்னதற்கு இந்த கூட்டம் ஒரு உதாரணம்.

நகர் மன்ற உறுப்பினர்களின் பேச்சை பார்த்தால்.... நம் ஊருக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் தேவையில்லை!! இவர்களே போதும் போல் தெரிகிறது. நகர் மன்ற உறுப்பினர்களே.... கடைசிவரை உங்கள் வாக்குறுதிகளை மண உறுதியுடன் நிறைவேற்றுங்கள். அல்லாஹ் உங்களுக்கு பக்கபலமாக இருக்க நான் அல்லாஹ்வை வேண்டுகிறேன்.

தம்பி CNash குறிப்பிட்டது போல்... நம் ஊரின் நடைமுறைக்கு ஒத்துவராத, ஒரு பிரயோஜனமும் இல்லாத பாதாள சாக்கடை திட்டம் பற்றி பரிசீலனை செய்து.. நம் ஊருக்கு இத்திட்டத்தை கொண்டு பெறப்போகும் பலனை ஆராய, அந்த துறை சம்பந்தப்பட்ட வல்லுனர்களின் ஆலோசனை பெற்று... ஊர் மக்களின் தேவைகளை அறிந்து... இனி இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டுமா... வேண்டாமா என்பதை, நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஓர் அணியில் நின்று செயல்பட சகோதரி ஆபிதா அவர்கள் எல்லா முயற்ச்சிகளையும் இப்போதே எடுக்க வேண்டும்.

மேலும்.... Vilack SMA காக்கா குறிப்பிட்டது போல "வார்டு எண் 9 ஹைரிய்யா ராத்தா சொன்னதுபோல் , குறை இருப்பின் , தயவுசெய்து வெளியில் இருந்து பேசிக்கொண்டிராமல் , உறுப்பினரிடம் நேரிடையாக முறையிட வேண்டும்". இது நம்மிடையே ஒற்றுமையை நிலைநிருத்தச்செய்யும்.

இறுதியாக... நம் நகர்மன்ற தலைவியால் ஊரின் நன்மைக்காக ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டால்..... அதற்க்கு செயல் வடிவம் தர (நகர்மன்ற உறுப்பினர்கள்) அனைவர்களும் தலைவிக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்று நான் என்னுடைய கருத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

அல்லாஹ் நம் ஊரில் அமைதியும், சுகாதாரமும், ஒற்றுமையும் தர போதுமானவன். வஸ்ஸலாம்

அப்துல்காதர்(பாதுல்அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15.
posted by M.S.Kaja Mahlari. (Singapore.) [24 October 2011]
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 12050

("குறிப்பாக, குடிநீர் வினியோகத்தின்போது மின் வினியோகத்தைத் துண்டித்து, முறைகேடாக குடிநீர் உறிஞ்சப்படுவதைத் தடுக்க ஆவன செய்திடுவேன்...") வார்டு :04 உறுப்பினரின் உறுதிமொழி. கண்டிப்பாக செயல் படுத்த வேண்டும். அப்போதுதான் எல்லா மக்களுக்கும் குடிநீர் கிடைக்கும்.

மின்சார மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சும் சுயநலவாதிகள் அல்லாஹ்வை பயப்படவேண்டும். நீங்கள் குடிநீரை உறிஞ்சவில்லை. பிறரின் இரத்தத்தை உறிஞ்சிகிறீர்கள். அவ்வாறு செயல்படுபவர்களை அடையாளம் கண்டு ,மோட்டாரை கைப்பற்றுவதுடன் குடிநீர் இணைப்பையும் நிரந்தரமாக துண்டிக்க வேண்டும்.

அதுபோல் யாரும், எதற்கும், எவர்க்கும் லஞ்சம் கொடுக்க முன்வராதீர்கள். முதலில் நாம் கொடுக்க மாட்டோம் என முடிவுக்கு வந்தால் வாங்குபவர்கள் வாங்க மாட்டார்கள். அதையும் மீறி லஞ்சம் கேட்டால் "லஞ்ச ஒழிப்பு துறைக்கு" புகார் செய்யவும். (புகாரை பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க அவன் லஞ்சம் கேட்காமல் இருக்கவேண்டும். )

ஆகவே ! அனைவரும் பொறுப்பாளிகள். நமது பொறுப்புகளை பற்றி நாளை மறுமையில் விசாரிக்கப்படுவோம். எனவே ! அவரவர்கள் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து செயல் பட எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக ! ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by Shaik MMS (Hong Kong) [24 October 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 12051

அல்ஹம்துலில்லாஹ்.

உறுப்பினர்கள் இவ்வளவு தெளிவானதாகவும், வெளிப்படையான உறுதிமொழி அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. மீதமுள்ள உறுப்பினர்களும் வந்திருந்தால் இன்னும் சிறப்பானதாக இருந்திருக்கும்.

லஞ்சத்தை பற்றி பேசும்போது நகராட்சியோடு விட்டு விடாமல் அனைத்து தரப்பு அரசு அலுவலகங்களையும் தட்டி கேட்க வேண்டும். குறிப்பாக நம்முடைய பதிவு அலுவலகம் சென்றால் ஏணி படிக்குகூட பசி எடுக்கிறது.

நாங்கள் வாழும் இந்த நாட்டை போல் பொதுமக்களே அனைத்து காரியங்களுக்கும் நேரிடையாக அணுகக்கூடிய வகையில் நம் நகராட்சி அமையுமா... இன்ஷா அல்லாஹ் எதிர் பார்ப்போம்.!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by Seyed Mohamed ( Seyna ) (Bangkok Thailand ) [24 October 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 12053

அஸ்ஸலாமு அழைக்கும்

இந்த செய்தியை , படத்தையும் பார்க்கும் பொழுது சந்தோசமும் , மகிழ்ச்சயுமாக இருக்கிறது , அனைவர்க்கும் என்னுடைய வாழ்த்துக்கள் , இங்கு அனைவர் களும் கவலை படுவது எல்லோரும் வாழ்த்து தெரிவிகிரர்கள் பேரவையை தவிர

இன்றையா தலைவி மற்றும் பல உறுபினர்கள் வயதில் சிறியவர்கள், பேரவை இல் உள்ள வர்கள் வயதில் முதிய வர்கள் அண்ட் அனுபவ சாலிகள் , அவர்கள் செய்த தப்பை பெரிது படுத்தாமல் , அவர்களிடம் நாம் மன்னிப்பு கேட்டு விட்டு அவர்களை ஆளைபதில் தப்பு இல்லை, நம்மலுடைய தந்தை இடம் நாம் மன்னிப்பு கேட்பது இல்லையா , அதை போன்று நடப்பது நல்லது ,

அவர்களும் மனசாட்சி உள்ளவர்கள் தான் , அவர்கள் செய்த தப்புக்கு இறவன் இடத்தில மன்னிப்பு தேடி கொள்ளுவார்கள் , நாமும் அவர்கள் செய்த தப்புக்கு இறைவன் இடத்தில மன்னிக்க துஆ செய் ஓமக ,

வயதில் பெரியவர்களை அழைத்து அவர்களுக்கு மரியாதை குடுத்து அவர்களை அழைத்து உபசரிப்பதில் தப்பு இல்லை,

நகரமன்ற தலைவர் பேரவைக்கு சென்று அவர்களிடம் துஆ செய்ய சொல்லுங்கள் அவர்களயும் அழைத்து வாருங்கள் , உங்களுக்கு எதிர்த்து போட்டி இட்ட மு அசரிய லாத்தவயும் அழைத்து நட்புனருடன் ஆலோசனை செய்து கொள்ளுங்கள் அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மது செய்வானாக ,

விட்டு கொடுக்கும் மனப்பான்மை எல்லோருக்கும் வேண்டும் , அப்பொழுதுதான் எதிலும் வெற்றி பெற முடியும்

நான் வயதில் சிறியவன் , நன் கூறியதில் தவறு இருப்பின் எடுத்து சொல்லுங்கள் திருத்தி கொள்கிறான் , மாசலம்

இப்படிக்கு
Seyed Mohamed ( Seyna )
Kayal Ikiya Mandram - Bangkok - Thailand


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [24 October 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12056

" FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION " என்பது ஆங்கில பழமொழி. துவக்கமே மிக அருமையாக உள்ளது .

எல்லா வார்டு உறுப்பினர்களுடன் ஓன்று இணைந்து , நம் காயலின் எல்லா தரப்பு பகுதிகளும் நல்ல முன்னேற்றம் அடைவதின் மூலம் தான், நாம் ஒரு முழுமையான, சுத்தமான & சுகராத காயலை அடைய முடியும்.

அதற்க்கு நாம் அனைவரும் ஓன்று இணைந்து நமது வெறுப்புகளை மறந்து ஒத்துழைப்பு கொடுப்பது தான் நாம் நமது ஊருக்கு செய்கிற சேவை. அது நமது கடமையும் கூட.

வல்ல நாயன் நமக்கு அருள்புரிவானக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by Mohamed Abdul Kader (Al Khobar) [24 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12058

மாஷா அல்லாஹ்

அழகான கட்ட அமைப்பு கூட்டம். எல்லா வார்டு மெம்பர்களும் லஞ்சம் வாங்க மாட்டேன் என்று உறுதி கொடுத்துள்ளார்கள்.

இது என்னப்பா one side லவ் ஆலோ உள்ளது. ஒரு காரியம் முழமையான மனதுடன் நிறைவேறுமானால் one side goal மட்டும் போதாது.

ஊர் மக்களாகிய நாமும் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று உருதி கொடுக்க வேண்டும் அல்லவா?

ஒரு சில நபர்கள் தங்கள் வேலையை துரிதமாக முடிபதற்கு கொடுக்கும் கிபிட் தான் பிரதான லஞ்சம் இது தான் வளர்ந்து கட்டாய கிபிட் (லஞ்சமாக) மாறிவிடுகிறது. இது ஒழிய வேண்டும்

ஒரு காரியம் வெற்றியான முறையில் முடிய வேண்டும் என்றால் செயல் திறனும், பண திறனும் வேண்டும் அல்லவா?

உதாரணம் : முன்னால் chairman 2nd pipe லைன்க்கு கொடுத்த உதவி

செயல் திறன் உள்ள தலைவியை தேர்ந்து எடுத்து விட்டோம் பண திறனும் தேவை - ஆகையால் அபிதா அவர்கள், அவர்கள் இவர்கள் வாழ்த்தவில்லை என்றெல்லாம் இருக்காமல் பெரியவர்களை அணுகி வாழ்த்தும் அவர்களின் துஅ பரகத்தும் பெற்றிட வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன்.

ஒரு முக்கியமான செய்தி : - இந்த பஞ்சயத் அமைந்திருக்கும் இடத்தை தந்த நபர் நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம் - குத்துக்கல் தெருவை சார்ந்த கம்பெனியார் வீடு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by Thaika Ubaidullah (Macau) [24 October 2011]
IP: 202.*.*.* Macau | Comment Reference Number: 12061

Good Start.... Maasha Allah. Well done for putting together this meeting. First Impression is the best impression. Its in the right directions.

All the best for the new team. Look forward to see the team in ACTION !!! with lots of expectations from all Kayalites.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [24 October 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12066

அருமையான நிகழ்ச்சி தொகுப்பு

புகைப்படங்களின் தெளிவு

ஊரில் இருந்தது போல் ஓர் உணர்வு ..

உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் இதே முனைப்போடு செயல் பட்டால் நமதூர் கண்டிப்பாக முன்னேறும் என்பதில் மாற்று கருத்திற்கே இடமில்லை .

எனக்கு பெரிய வருத்தம் நம் பேரவை பெரியவர்கள் இடம் பெறாததுதான். நான் என்னுடைய தேர்தல் கருத்துகளில் பேரவை சாடி இருந்தாலும் அவர்கள் ஒரு நற்செயல் செய்யும் பொழுது முதலில் கருத்து எழுதி பாரட்டியவனும் நான் தான் (Comment : 11945). பாதிக்கபட்டவர்களையே பயங்கரவாதிகளாக , குழப்பவாதிகளாக சித்தரித்தது தான் இத்தனை போராட்டத்திற்கு காரணம் . பெரியவர்களே நாங்கள் தொடுத்த வார்த்தைகளில் வேண்டுமானால் தவறு இருக்கலாம் ஆனால் எங்கள் போராட்டத்தில் நியாயம் இருந்தது .

ஆகவே தயவு செய்து கசப்பான நிகழ்வுகளை மறந்து , உங்களிலிருந்து உங்கள் பெயரை கெடுக்கும் கருப்பு ஆடுகளை களை எடுத்து பசுமையான காயலை உருவாக்க உங்கள் ஆதரவை கொடுத்து உங்கள் பேரக் குழந்தைகளை வாழ்த்துங்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by mackie noohuthambi (kayalpatnam) [24 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12067

புதிய நகரமன்ற தலைவியாக தேர்ந்தேடுக்கப்பட்டவுடன் கூடிய முதல் கூட்டத்துக்கே என் போன்ற சாதாரண ஆட்களையும் அதுவும் தனக்கு வாக்களிக்காத ஒருவன் என்று தெரிந்த நிலையிலும் அழைப்பு அனுப்பியிருந்த தலைவியின் செயல்பாடு வியப்பளித்தது.

17m திகதிக்கும் 21m திகதிக்கும் இடையில் பெரிய வித்தியாசம் உள்ளது. 21m திகதி மாலை சகோதரி ஆபிதா அவர்கள் நமது நகர்மன்றதலைவராக பெரும்பான்மை மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்டு உள்ளார்கள். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர் நமது நகர் மன்ற தலைவர் என்பதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் வெற்றி தோல்விகளை இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதே போல் நகரமன்ற தலைவி அவர்களும் இந்த சந்தர்ப்பம் நமதூர் மக்கள் எல்லோருக்கும் சேவை செய்வதற்கு அல்லாஹ் வழங்கிய வாய்ப்பாக நினைத்து தன் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.

எனவே நடந்தவைகள், ஏற்பட்ட காயங்கள் ரணங்கள், ஏமாற்றங்கள் இவை ஆறுவது காலப்போக்கில்தான் சாத்தியமாகும். காலபோக்கில் காயமெல்லாம் அறிப்போகும் மாயம் நடந்தே தீரும். அதுவரை யாரும் யாரையும் சீண்டி பார்த்து வேதனையை தீ மூட்டி எண்ணெய் விட்டு வளர்க்க வேண்டாம்.

நமதூரின் முன்னேற்றத்தில் இளைஞர்களுக்கு முதியவர்கள் சளைத்தவர்கள் இல்லை. பொறுமையுடனும் நிதானத்துடனும் இளைஞர்கள் புதிய தலைவருடன் செயலாற்ற ஆரம்பியுங்கள். முதியவர்களை கலந்து கொள்ளுங்கள் பெரியோர்கள் தோற்றுவிட்டார்கள் என்று சொல்வதை விட இளைஞர்கள் வெற்றிபெற்றார்கள் என்று POSITIVE ஆக பேசுங்கள்.

எல்லோரும் ஒன்றாக இனைந்து நம் ஊரை வளப்படுத்துவோம். வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by jamal (kayalpatnam) [24 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 12072

இதுவரை நகர் வளர்ச்சி திட்டமிடல் கூட்டம் நடடைபெற்றதாக நான் அறியவில்லை. கன்னிமுயற்சியே நன்றாக இருக்கிறது.

அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பார்கள் என்று நினைத்து இந்த செய்தியை வாசித்தேன். ஆனால் அதில் நான்கு பேர் மட்டும் மிஸ்ஸிங்.

தேர்தல் நேரத்தில் பிரச்சாரங்கள் அனைவரும் பண்ணுவார்கள். அதையே காரணமாக கடைசிவரை வைத்துக் கொண்டு செயல்படக்கூடாது. தேர்தலோடு அனைத்தையும் மறந்து விட்டு ஊர் முன்னேற்றத்திற்காக பாடுபட முன்வர வேண்டும்.

ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மிஸ்ஸிங் 4 பேரும் ஊரின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டிருப்பின் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பார்கள். ஆனால் என்ன செய்ய? அவர்களுக்கு 'மேலிடத்து' உத்திரவு போலும். கலந்து கொள்வதை தவிர்த்திருக்கிறார்கள்.

எப்படியோ? ஊர் முன்னேற்றத்திற்கு தடையாக இல்லாமல் இருந்தால் சரிதான். தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நால்வரின் வார்டு பொதுமக்கள்தான் இதைப் பற்றி அவர்களிடம் விசாரித்து புத்தி சொல்ல வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:ஊருக்கு உழைப்போம்!!!.
posted by OMER ANAS (DOHA QATAR.) [24 October 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 12074

ஆஹா... என்ன அருமையான கூட்டம். வெற்றி மமதை இல்லாமல் பொதுவான, அதே நேரம் உறுதியாக லஞ்சம் வாங்க மாட்டோம் வாங்கவும் விட மாட்டோம் என்ற சொல் வாயில் இருந்து மட்டும் வராமல் அனைவர்களின் மனதில் இருந்து வந்ததாகவே கருதுகிறோம்.

பெரியோரே! ஊரை நினைப்போரே! ஊரை பற்றியே சிந்திப்போரே! இவர்களின் கருத்தை பாராட்டுவோரே! உங்களுக்கு ஒரு வேண்டுகோள்! நம் சமுதாயம் வளம் பெற, நாம் நினைத்த நகர் மன்றம் அமைய, அரசாங்கம் தரும் சம்பளம் எல்லோருக்கும் பத்தாது! அப்படி நீங்கள் யாரையாவது கருதுவீர்களானால், அவர்களுக்கு, வெளிநாடுவாழ் எல்லா காயல் நற்பணி மன்றங்கள் மூலமும், தனவந்தர்கள் மூலமும், ஒரு நிர்ணயம் வைத்து, ஆர்வமூட்ட நாமும் ஒரு தொகையை அவர்களுக்கு கொடுத்தால், நிச்சயம் அவர்கள் வழி தடுமாற மாட்டார்கள்.

அதற்காக MEGA வே முன் நின்றாலும், நல்ல வழிக்காக எனது சொந்த கஷ்டங்களுக்கு மத்தியிலும், ஊர் நன்மை கருதி நானும் என்னால் ஆன ஒரு தொகையினை தருவேன் என உறுதி கூறுவதுடன், அதை தம்பி பஜ்ளுள் கரீம் மூலம் எங்கள கத்தார் வாழ் காயல் நற்பணி மன்றம் செயல் படுத்த ஆவன செய்வேன்!

இது நம் எல்லோர் கருத்தாக கருதியே வெளியிடுகிறேன்! இதையும் தப்பாக கருதுவோர் இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கின்றேன்! தம்பி ஜகாங்கீர் சொன்ன மாதிரி எல்லா தொகையும் பலகையில் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அது மட்டும் அல்ல. எல்லா வித காரியங்களும் மக்கள் பார்க்கும் விதமாக இருக்க வேண்டும். நன்றியுடன் நிரந்தர மண்ணின் மைந்தன்.

V M S அனசுதீன் மகன்.
இப்னு அனஸ்!&அபு அனஸ்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by M.N.Sulaiman (Bangalore) [24 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 12075

மாஷா அல்லாஹ்...!!!

அருமையான ஆரம்பம்... அனைவரிடமும் நல்லது செய்ய வேண்டுமென வேகம் உள்ளது. குறிப்பாக, லஞ்ச ஒழிப்பு , சுற்றுப்புற சுழல் சுகாதாரம், குடிநீர் சேவை, etc என மிகச்சிறந்த ஒற்றுமையை பறை சாற்றுகிறது.

மேலும், வார்டு 4 & 5 க்கு பாத்தியப்பட்ட இடத்தில் மிகப்பெரிய குப்பைமேடு பல ஆண்டுகளாக உள்ளது. இதனால் சுற்றுசுழல் மாசு பட்டு பலவிதமான நோய்கள் பரவிக்கொண்டிருக்கிறது. அதனை அடியோடு அகற்ற முயற்சிகள் பல செய்தும் பயனில்லை. தற்சமயம், வார்டு 4 : கவுன்சிலர் முத்து ஹாஜர் அவர்கள் அதனை அகற்றி சிறுவர் பூங்கா அமைக்க வாக்குறுதி அளித்திருப்பது அனைவரும் பாராட்ட தக்கது.

முத்து ஹாஜர் அவர்களே, தயவுகூர்ந்து இதனை நீங்கள் மிக விரைவில் சீர்படுத்த வேண்டும். பல குடும்பங்களின் துஆக்கள் உங்களுக்கு காத்திருக்கிறது.

உங்கள் யாவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by MS MOHAMMED LEBBAI (dxb) [24 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12077

அஸ்ஸலாமு அழைக்கும்.

நல்ல ஒரு அருமையான முன்மாதுரி, இதற்கு முன் இப்படியாக நடந்ததா? என்று எனக்கு தெரியவில்லை..

வார்டு மெம்பெர்ஸ் எல்லாம் அழகாக உரையாற்றினார்கள்,,, மன்ற ஆயுள் வரையிலும் அவர்கள் அதனை கடைபிடிக்க வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக ஆமீன்

ஐக்கிய பேரவை பெரியவங்க யாரும் வந்த மாதிரி போடோஸ் இல்லையே? ஏன்?,,, ஏன்? ஏன்?..........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. புத்துணர்வுடன் துவக்கம்
posted by Khatheeb Mamuna Labbai (Makkah) [24 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12078

களத்தில் வெற்றி வாகை சூடிய சகோதரி ஆபிதா அவர்களுக்கும், ஸம்சுத்தீன் காக்கா,ஜஹாங்கீர் மற்றும் அனைத்து அன்பர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்!

அழகிய கண்குளிர் நிகழ்ச்சி மூலம் இனிய துவக்கம்! அல்ஹம்து லில்லாஹ்!!

சகோதரி ஆபிதா அவர்களே!

த‌ங்களுக்கும், பொதுநலக் களப்பணியாளரான தங்கள் த‌ந்தையாருக்கும், மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்க‌ள் அன்பு ஸ‌லாம். உங்கள் தந்தை நெறிப்படுத்திய பொதுநலச்சேவைகள், இனி உங்கள் மூலம் தொடரட்டும். உங்களுக்கும், உங்கள் தந்தைக்கும் அல்லாஹ் நல்ல ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் தந்து, நல்ல சேவைகளை தொடர செய்வானாக.

சகோதர சமுதாயத்தினர் தங்களுக்கு அளித்த முழு ஆதரவை என்றும் மறக்க வேண்டாம். அனைத்து மக்களோடும் அன்புடனும், இணக்கத்துடனும் தங்கள் நல்லாட்சியைத் துவங்கி, தொடர்ந்திட வாழ்த்துகிறேன்

நுண் முய‌ற்சிக‌ள் மூல‌ம் பெண்க‌ள் முன்னேற்ற‌த்திற்கான‌ க‌ள‌ப்ப‌ணிக‌ளை செய‌ற்ப‌டுத்த உடனடியாக முயலுங்கள்.

ம‌த‌வாதிகள், இய‌க்க‌வாதிகள், ஊழல் அரசியல்வாதிகள், செல்வந்தர்களின் கைப்பாவையாக‌ என்றும் மாறி விடாமல், இறைய‌ச்ச‌த்துட‌னும், துணிவுட‌னும், விவேக‌த்துட‌னும், இஸ்திகாரா தொழுகை / மஷூரா மூல‌ம் இறை உவ‌ப்புட‌னும் உங்க‌ள் க‌ள‌ப்ப‌ணியை தொட‌ர்ந்து செய‌ல்ப‌டுத்துங்க‌ள்.

ந‌ம‌தூர் பொது நூல‌க‌ மேம்பாட்டிற்காக‌வும், பெண்க‌ளுக்கான‌ த‌னி இட‌ வ‌ச‌தி, அத‌ற்கான‌ க‌ட்டுமான‌த்திற்காக‌வும் உங்க‌ளின் சேவை தேவை.

த‌லைசிற‌ந்த‌ ந‌க‌ராட்சி த‌லைவியாக‌ நீங்க‌ள் சிற‌ப்புறும் அந்நாளை நாங்க‌ள் ஆவ‌லுட‌ன் எதிர்பார்க்கிறோம்.

---கத்தீபு மாமுனா லெப்பை [மக்கா]----


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by P.S.ABDUL KADER (JEDDAH) [24 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12081

அஸ்ஸலாமு அலைக்கும்

நல்லதொரு வாழ்த்துக்கள். இந்த நிகழ்வில் பேசியதை தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் லஞ்சம் வாங்கவே மாட்டேன் என அல்லாஹ்வின் மீது ஆனையிட்டுக் கூறும் உறுதி மொழிகளை புரிந்து கொண்டு பட்டத்து ராணியாய் பதவியேற்று, காயல் திருநாட்டை மறு நாட்டிற்கெல்லாம் முன் மாதிரியாய் மலரச் செய்திட மணி ஒலிக்கட்டும். இன்று முதல் தமிழகத்தின் முன்மாதிரி மாநகராட்சியாக நமதூர் பெயரெடுக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்......

இந்த விழாவில் நகர் தலைவி ஆபிதா உரையை கேட்க காத்திருக்கிறோம் ஆவலாய்., வெளியீடும் வேகமாய்.

மத்திய காயல் மைந்தன்
ப.ச.அப்துல் காதர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by M.S.K. SULTHAN (Deira, dubai) [24 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12085

Its a beautiful gettogether party.

My Congrats to Chairwoman Ms. Abitha and our 18 ward members. I read our ward members promisory reports is everything good like anti-corruption, drinking water problem, road activities, disposable garbbage etc

Allah helps to your all activities.

My best wishes


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by rahmath (chennai) [24 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 12086

அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரி ஆபிதா அவர்களே, நீங்கள் இப்படி ஒரு get together ஏற்பாடு செய்து, நம் முன்னாள் தலைவிகளையும் இன்னும் ஊரில் உள்ள மற்றவர்களையும் அழைத்தது மிகவும் சந்தோசபடகூடிய விஷயம்.

ஆனால் நீங்களாவது பெருந்தன்மையோடு இந்த விழாவுக்கு ஐக்கிய பேரவைக்கு அழைப்பு கொடுத்திருக்கலாமே. ஒரு வேலை உங்கள் அழைப்பை ஏற்று அவர்கள் வந்திருந்தால் நம் சகோதரர்களுக்குள் இருந்த கசப்பு நீங்கி இருக்கலாம்.

அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by Shahul Hameed (Hong Kong) [24 October 2011]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 12087

நல்ல துவக்கம், உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.

இந்த வலை தளம் அன்பர்களுக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்!

சென்ற நகர் மன்றம் ஆரம்பமாகும் போது நம் நகர் மன்றத்தின் நிதி ஆதாரம் எவ்வளவு இருந்தது? தற்போது எவ்வளவு? அதை வைத்து தான் இப்புதிய நகர் மன்றம் செயல்பாட்டை கணக்கிட முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by hylee (colombo) [24 October 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 12092

நண்பர் முஹமது லெப்பை அவரின் கருத்து முடிவில் ஏன் ஏன் என்று' வசந்த மாளிகை' படத்தில் வரும் பாடல் போல் கேள்வி கேட்டுள்ளார். நம்முடைய பதில்" தெரியாதோ நோக்கு தெரியாதோ"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by Seyed Ibrahim S.R. (Dubai) [24 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12093

Best wishes to our chair woman and other ward members. Now it's there ground to score goals as much as they can to win the match.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by peena abdul rasheed (Riyadh) [24 October 2011]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12094

நகரமன்ற தலைவி & வெற்றி பெற்ற அனைவர் முகமும் மகிழ்ச்சி அடைந்து இருபது போல் உங்கள் சேவையால் ஊரில் உள்ள அனைவர் முகமும் மகிழ்சி அடைய வல்ல ரகுமான் கிருபை செய்வான் அமீன் யாரபுள்ளலாமீன்.

இனி வரும் காலங்களில் காயல் சிங்கார காயல் அமைவது உறுதி தங்கை ஆபித சேவை சிறக்க நமது ஆதரவை கொடுப்போம் அல்லாஹ் உதவிய இருப்பான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by Mohideen (Jeddah) [24 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12099

வார்டு 05: சகோதரர் ஜஹாங்கீர் உரை வரவேற்கத்தக்கது.

**********நகர்மன்ற அலுவலகத்திற்கு பொதுமக்கள் அடிக்கடி வருவது குடிநீர் இணைப்பு பெற்றிட, வீடு வரைபட ஒப்புதல் பெற்றிட, பிறப்பு - இறப்பு சான்றிதழ் பெற்றிட... இதுபோன்ற காரியங்களுக்காகத்தான்.

எனவே, இவ்வகையான காரியங்களுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை மக்கள் பார்வையில் படுமாறு தெளிவாக நகர்மன்றத்தில் அறிவிப்புப் பலகை நிறுவப்பட வேண்டும்**********

மேலும் ஒரு சிறிய விண்ணப்பம்.

இதற்கு ஆகும் கால நேரத்தையும் குறிபிட்டால் நன்றாக இருக்கும். இல்லையென்றால் காசு கொடுக்க வில்லை என்பதற்காக அலையவிட்டுருவார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by Jamal (Kayalpatnam) [24 October 2011]
IP: 141.*.*.* United States | Comment Reference Number: 12102

Abida invited to ikiya peravai president, member etc. But they ignored that meeting. Hellow Rahmath madam, first enquire througly after write comment. THAT IS BIG MANS.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by Seyed Ibrahim (kayalpatnam) [24 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12105

அஸ்ஸலாமு அழைக்கும்

சகோதரி ரஹ்மத் மற்றும் சில சகோதரர்கள் இங்கே ஒரு கேள்வியை எழுப்பினார்கள் ஐக்கிய பேரவை பெரியோர்களை அழைத்திருக்கலாமே ?அழைத்தீர்களா ? என்று

உண்மை என்னவென்றால் ஐக்கிய பேரவை பெரியோர்கல் அனைவர்களும் முறைப்படி கடிதம் கொடுக்கப்பட்டு அழைத்து இருக்கிறார்கள் மேலும் வீடு தேடி சென்று அழைத்தும் இருக்கிறார்கள்

இதுவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்ற தலைவியை வாழ்த்து சொல்லவே மனம் வராத இவர்களா இந்த கூட்டத்தில் கலந்தொகொள்ள போகிறார்கள் உங்கள் ஆசைக்கு அளவே இல்லையா

வந்தால் ஒற்றுமை வந்துவிடுமே என வராமல் இருக்கிறார்கள் போலும் அனைத்தையும் அறிந்தவன் அல்லா ஒருவனே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATNAM) [24 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 12108

மிக நல்ல முயற்சி .என்றபோதிலும் இது பொது மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கவேண்டும். அதன் காரணமாக என்போன்றவர்கள் இதில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. மிக அரிதாக நடைபெற்ற தேர்தல் என்பதால் பின்வரும் சம்பவங்களும் வித்தியாசமாகத்தான் நடைபெறுகின்றன. பேரவையினர் இதில் கலந்து கொள்ளாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. நகராட்சி விவகாரங்களில் இனி அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதற்கு கட்டியம் கூறுவதுபோல் அமைந்தது இந்த நிகழ்ச்சி. (இன்ஷா அல்லாஹ்)வரும் காலத்தில் அவர்கள் மனம் மாறக்கூடும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by Mohideen(Durai) (Abu Dhabi) [24 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12110

Dear Sister Abida sheik,

what a good introduction realy we are happy to see this , Please keep on mind these quote

“Success isn't how far you got, but the distance you traveled from where you started”


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. பிளானில் உள்ளது போல் நமது வீட்டை நாம் கட்டினால் எவனுக்கும் நாம் ஏன் லஞ்சம் கொடுக்கணும்...! லஞ்சம் நம் தாய் நாட்டில் ஒழிக்க முடியாத நோய்...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [24 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12113

தம்பி ஜகாங்கீர் அவர்களின் யோசனை வரவேற்க கூடியது.. பிறப்பு - இறப்பு சான்றிதல் பெருவதற்க்கு கூட மக்களிடம் லஞ்சம் எதிர்பார்க்கும் நகர்மன்றமாக தான் 5 ஆண்டு காலம் செயல்பட்டது அதில் சிறு அளவும் சந்தேகம் கிடையாது..!

வீட்டு பிளான் அப்புருவல் லஞ்சம் கொடுத்தே... ஆக வேண்டும் காரணம் யாரும் பிளானில் உள்ள மாதிரி வீடு கட்டுவது இல்லை மாடி மற்றும் பல அமைப்புகளை பிளானில் காட்டுவது இல்லை அப்படி இருக்கும் போது அவர் லஞ்சம் கொடுக்காமல் அவர் வீட்டை கட்ட முடியாது..! அவர் லஞ்சம் வாங்காமல் அப்புருவல் கையப்பம் போடா மாட்டார்...

லஞ்சத்திற்கு நாமும் காரணம் தான் மறுக்க கூடாது...!

பிளானில் உள்ளது போல் நமது வீட்டை நாம் கட்டினால் எவனுக்கும் நாம் ஏன் லஞ்சம் கொடுக்கணும்...!

லஞ்சம் நம் தாய் நாட்டில் ஒழிக்க முடியாத நோய்... அதற்க்கு இன்னும் எவனும் மருந்து கண்டு பிடிக்கவில்லை..

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by THOWFEEK (Gujarat) [24 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12128

துவக்கமே சூப்பர்

எல்லாருடைய பேச்சயும் கேக்கும்போது நல்லாத்தான் இருக்கு எல்லாரும் ஒற்றுமையாக சேர்ந்து செய்தால் நன்றாக இருக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. எந்த பகட்டும், பந்தாவும் இல்லை.
posted by N.S.E. மஹ்மூது (KAYALPATNAM) [24 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12134

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நகர்மன்ற தலைவராகவும், உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கபட்டவர்களை அவர்கள் பதவி ஏற்பதற்கு முன்பாக ஓன்று கூடச்செய்து எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தது மிகவும் சிறப்பாக இருந்தது.

அவர்கள் எல்லோரும் பதவி ஏற்கும்போது ஒருவருக்கொருவர் புதிதாக சந்தித்து சம்பிரதாயத்திற்காக நலம் விசாரித்து அதன் பின் பணியைத் தொடங்குவதை காட்டிலும் பதவி ஏற்கும் முன்பே இப்படி ஓர் அறிமுகம் கூட்டம் ஏற்பாடு செய்து ஒவ்வொருவரைப் பற்றியும் விளக்கம் தந்தது நன்றாக இருந்தது.

மேலும் அவர்கள் செய்யப்போகிற சேவை மற்றும் தேவையை அவர்கள் வாயாலே சொல்ல செய்தது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை தருகிறது.

உறுப்பினர்கள் அவர்கள் வாயாலேயே இலஞ்சம் வாங்க மாட்டோம், வாங்க விட மாட்டோம் என்று மக்கள் முன்னிலையிலேயே கூறியது மிகவும் சந்தோசத்தை தந்தது.
-------------------------------------------------------
இந்த அறிமுகம் மற்றும் திட்டமிடல் கூட்டத்திற்கு வருகைத் தந்த நமது நகர்மன்ற முன்னாள் தலைவர்களான சகோதரி நாச்சி தம்பி மற்றும் சகோதரி வஹிதா அவர்கள் மிகவும் நன்றாக பேசினார்கள்.

அவர்களுடைய ஆட்சி காலத்தில் நகர் மன்றத்தில் ஏற்பட்ட அனுபவங்களை மக்களுடன் பகிர்ந்துக்கொண்டது புதியவர்களுக்கு உற்சாகமாக இருந்தது.

முன்னாள் தலைவிகள் இருவரும் சகோதரி ஆபிதாவிற்கு வலது புறமும் இடது புறமுமாக அமர்ந்திருந்து சகோதரி ஆபிதாவை உற்சாகப்படுத்தியதோடு அல்லாமல் தேவையான ஆலோசனைகளையும் எப்போதும் வழங்குவதாக அவர்கள் இருவரும் உறுதியளித்தது மக்களிடம் நன்மதிப்பை பெற்றது.
-----------------------------------------------------
பெண் உறுப்பினர்களுடைய பேச்சுகளில் - அவர்களுடைய தொனியில் - நிச்சயமாக அவர்கள் நமது நகர்மன்றத்தை ஊழல் இல்லாத ஒரு சிறந்த மன்றமாக செயல்பட செய்வார்கள் என்ற நம்பிக்கை பிறந்தது.

சில பெண் உறுப்பினர்களிடம் பேசியபோது அவர்கள் சேவையை விட ஊழலை ஒழிப்பதற்காகவே நகர் மன்றத்திற்கு போகிறதாக சொன்னது உண்மையிலேயே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
-----------------------------------------------------
சகோதரி ஆபிதா உடைய பேச்சு - அதில் உள்ள உறுதியை பார்க்கும்போது - நம்முடைய நகர்மன்றம் உறுதியாக ஒரு சிறந்த மன்றமாக செயல்படும் என்பதை தெளிவுப்படுத்துகிறது.

சகோதரியுடைய நடை , பாவனையை பார்க்கும்போது தேர்தலில் வெற்றிப் பெறுவதற்காக நண்பர்களும் , சொந்தமும், பந்தமும் இன்னும் பலதும் உழைத்தாலும் இறைவனே எனக்கு வெற்றியைத் தந்தான் என்பதை சொல்லாமல் சொல்கிறது - சகோதரியின் முகத்திலே எந்த பகட்டும், பந்தாவும் இல்லை.

இறைவனருளால் அத்தனை உறுப்பினர்களும் நல்ல முறையில் ஒத்துழைத்து நம் நகர்மன்றம் சிறப்புடன் செயல்பட எல்லாம் வல்ல அல்லாஹ்! கிருபை செய்வானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. மாஷா அல்லாஹ்!!! ஆரம்ப்பதிலையே நிருபித்துவிட்டீர்கள் K.V.A.T. முத்து ஹாஜரா அவர்களே!
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [26 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12243

அஸ்ஸலாமு அழைக்கும்.

புரட்சிகரமாக நாங்கள் புதிய மாற்றத்தை நகர்மன்றத்தில் மக்களின் மிகில்வான வாழ்விற்காக ஏற்படுத்த புரபுட்டு விட்டோம் என்பதை ஆரம்பதிலேயே நிருபித்து விட்டீர்கள்.

எங்கள் வார்ட் கவுன்சிலர் அன்பு சகோதரி K.V.A.T. முத்து ஹாஜரா அவர்களே! நாங்கள் பல ஆண்டுகள் பல முறை பல பேர்களிடம் தங்கள் வீட்டு அருகில் உள்ள குப்பைகளை அகற்ற முறையிட்டும் நம்பிக்கை தரும் வார்த்திகள் கூட தரவில்லை. ஆனால் தாங்கள் தங்கள் மற்றும் தங்கள் குடும்ப அந்தஸ்திற்கு ஏற்ப தாங்கள் நாமினேசன் செய்த நாள் முதல் இன்று வரை நம்பிக்கையான வார்த்தைகள் மட்டும் சொல்லாமல் தங்களின் பல கடமைகளுக்கு மத்தியில் தங்களின் ஆலோசகரில் ஒருவரான சாலை S.L.பறக்கத் பரீதா மற்றும் நானும் கேட்டுக்கொண்டபடி முதன் முதலிலே தங்களின் வாக்கை நிறைவேற்ற அணைத்து மக்களின் முன்னும் உறுதி செய்ததை நினைத்து மிக பெருமிதம் கொள்கிரேன்.

அல்லாஹ் தங்கள் யாவரின் நாட்ட தேட்டங்களை வெகுவிரைவில் நிறைவேற்றி தந்து ஈருலக பாக்கியத்தை தருவானாக ஆமீன். வஸ்ஸலாம்.

இவன்
முகியதீன் அப்துல் காதிர்.
ஐக்கிய அமீரக பாராளுமன்றம்,
அபுதாபி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Re:புதிய நகர்மன்ற தலைவர் - உ...
posted by Noohu T (Maana Paana) [27 October 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 12277

ஒன்பதாவது வார்டு உறுப்பினர் ஹைரிய்யா லாதாவுக்கு வாழ்த்துக்கள்

தயவு செய்து மாட்டு குலத்தை சுத்தம் செய்து மீண்டும் கால் பந்து விளையாடு வதக்கு முயற்சி செய்தால் நம்ம மக்கள் ரொம்ப சந்தோஷ படுவார்கள்
=======================================================
பல உறுப்பினர்கள் பேசும்போது ......................

பொறுப்பை நிறைவேற்றுவேன்.
வாக்குறுதியளிக்கிறேன்..
அமைத்துக்கொள்வேன்.
பணிகளை அமைத்திடுவேன்
நிறைவாக வழங்குவேன்...
பணிகளுக்கு முன்னரிமை
ஆவன செய்வேன்
லஞ்சம் வாங்க மாட்டேன்.
பணியாற்றுவேன்.
பாதுகாப்பேன்.
நடவடிக்கைகளை மேற்கொள்வேன்..
உதவிகள் செய்வேன்.
etc..........

Will they keep their Promises?

வஸ்ஸலாம்

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் நகரில் கனமழை!  (23/10/2011) [Views - 4615; Comments - 13]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved