Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:25:35 PM
ஞாயிறு | 6 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1893, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்08:35
மறைவு18:06மறைவு20:29
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2005:44
உச்சி
12:05
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2718:5119:15
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7436
#KOTW7436
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், அக்டோபர் 25, 2011
நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் பதவியேற்பு விழா! நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைமை தேர்தல் அலுவலர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 6176 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (34) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 6)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கடந்த 17.10.2011 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் நகர்மன்றத் தலைமைக்கு 6 பேரும், 18 வார்டுகளின் உறுப்பினர்கள் பொறுப்பிற்கு 86 பேரும் போட்டியிட்டனர். 21.10.2011 அன்று வெளியான தேர்தல் முடிவுகளின்படி காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவராக, காயல்பட்டினம் மகுதூம் தெருவைச் சார்ந்த ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளி இயக்குனர் ஆபிதா நான்காயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வார்டு 01 உறுப்பினராக ஏ.லுக்மான்,
வார்டு 02 உறுப்பினராக வி.எச்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா (போட்டியின்றி தேர்வு),
வார்டு 03 உறுப்பினராக பி.எம்.எஸ்.சாரா உம்மாள்,
வார்டு 04 உறுப்பினராக முத்து ஹாஜரா,
வார்டு 05 உறுப்பினராக ஜஹாங்கீர்,

வார்டு 06 உறுப்பினராக ஏ.கே.முஹம்மத் முகைதீன்,
வார்டு 07 உறுப்பினராக அந்தோணி,
வார்டு 08 உறுப்பினராக பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய்,
வார்டு 09 உறுப்பினராக ஹைரிய்யா,
வார்டு 10 உறுப்பினராக பத்ருல் ஹக்,

வார்டு 11 உறுப்பினராக எஸ்.எம்.முகைதீன்,
வார்டு 12 உறுப்பினராக ரெங்கநாதன் என்ற சுகு,
வார்டு 13 உறுப்பினராக எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன்,
வார்டு 14 உறுப்பினராக பாக்கியஷீலா,
வார்டு 15 உறுப்பினராக ஜமால்,

வார்டு 16 உறுப்பினராக தைக்கா சாமு,
வார்டு 17 உறுப்பினராக அபூபக்கர் அஜ்வாத்,
வார்டு 18 உறுப்பினராக இ.எம்.சாமி
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களின் பதவியேற்பு விழா இன்று காலை 11.00 மணிக்கு காயல்பட்டினம் நகர்மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.



நகர்மன்றத் தேர்தல் துணை அலுவலர் செல்வமணி விழா நிகழ்ச்சிகள் துவங்குவதாக அறிவித்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, நகர்மன்றத் தேர்தல் துணை அலுவலர் சக்தி குமார் வரவேற்றுப் பேசினார்.





பின்னர், இவ்விழாவிற்குத் தலைமை வகித்த காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் தலைமை அலுவலரும், நகர்மன்ற ஆணையருமான கண்ணையா, துவக்கமாக நகர்மன்றத் தலைவர் ஆபிதாவுக்கும், பின்னர் நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் சால்வை அளித்தும் / அணிவித்தும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.







............................. என்ற நான், சட்ட முறைப்படி நிறுவப்பெற்றுள்ள இந்திய அரசியல் அமைப்பின் மீது முழுமையான நம்பிக்கையும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ளவிருக்கும் கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் கடவுள் அறிய உளமார உறுதி கூறுகிறேன்...

இவ்வாறு பதவிப்பிரமான வாசகம் அமைந்திருந்தது.


01ஆம் வார்டு உறுப்பினர் லுக்மான் பதவியேற்ற காட்சி...


02ஆம் வார்டு உறுப்பினர் முஹம்மத் செய்யித் ஃபாத்திமா பதவியேற்ற காட்சி...


03ஆம் வார்டு உறுப்பினர் சாரா உம்மாள் பதவியேற்ற காட்சி...


04ஆம் வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா பதவியேற்ற காட்சி...


05ஆம் வார்டு உறுப்பினர் ஜஹாங்கீர் பதவியேற்ற காட்சி...


06ஆம் வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் பதவியேற்ற காட்சி...


07ஆம் வார்டு உறுப்பினர் அந்தோணி பதவியேற்ற காட்சி...


08ஆம் வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய் பதவியேற்ற காட்சி...


09ஆம் வார்டு உறுப்பினர் ஹைரிய்யா பதவியேற்ற காட்சி...


10ஆம் வார்டு உறுப்பினர் பத்ருல் ஹக் பதவியேற்ற காட்சி...


11ஆம் வார்டு உறுப்பினர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் பதவியேற்ற காட்சி...


12ஆம் வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு பதவியேற்ற காட்சி...


13ஆம் வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் பதவியேற்ற காட்சி...


14ஆம் வார்டு உறுப்பினர் பாக்யஷீலா பதவியேற்ற காட்சி...


15ஆம் வார்டு உறுப்பினர் ஜமால் பதவியேற்ற காட்சி...


16ஆம் வார்டு உறுப்பினர் தைக்கா சாமு பதவியேற்ற காட்சி...


17ஆம் வார்டு உறுப்பினர் அபூபக்கர் அஜ்வாத் பதவியேற்ற காட்சி...


18ஆம் வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி பதவியேற்ற காட்சி...

பதவிப்பிரமானத்தின்போது, “கடவுள் அறிய” என்ற வாசகத்தை நகர்மன்ற ஆணையர் முன்மொழிந்தபோது, பெரும்பாலான முஸ்லிம் உறுப்பினர்கள் “அல்லாஹ் அறிய” என்றும், “எல்லாம்வல்ல அல்லாஹ் அறிய” என்றும், “இறைவன் அறிய” என்றும் கூறினர்.

அதுபோல, பதவிப்பிரமான வாசகங்களை உச்சரிக்கும் முன் “அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...” என்ற பொருள் கொண்ட “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று கூறி, குழுமியிருந்தோருக்கு “உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டுமாக!” என்ற பொருள் கொண்ட “அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற முகமனையும் கூறி பதவிப்பிரமான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்று முடிந்ததும், குழுமியிருந்தோர் உரத்த குரலில் “இறைவன் மிகப் பெரியவன்” என்ற பொருள் கொண்ட “அல்லாஹு அக்பர்” என்ற முழக்கத்தை உரத்த குரலில் கூறினர்.

தேசிய கீதத்துடன் நிகழ்ச்சிகள் பதவியேற்புவிழா நிறைவுற்றது.

விழாவில், ஊண்டி செய்யித் முஹம்மத் ஆலிம், ஹாஜி செய்யித் முஹம்மத் அலீ, மஹ்ழரத்துல் காதிரிய்யா சபை நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஜி வி.பி.எம்.இக்பால், ஜாவியத்துல் ஃபாஸிய்யத்துஷ் ஷாதுலிய்யா நிர்வாகக் குழுவினருள் ஒருவரான ஹாஜி இப்றாஹீம், ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, புதுப்பள்ளி துணைத்தலைவர் ஹாஜி செய்யித் முஹம்மத் புகாரீ, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர், கே.எம்.டி.மருத்துவமனை செயலர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ‘மெகா‘ செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் மற்றும் நகர ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள், அங்கத்தினர் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

















முன்தினம் இரவில் பெய்யத் துவங்கிய மழை, பதவியேற்பு நாளன்று காலை 09.30 மணி வரை நீடித்ததால், விழாவை நகர்மன்ற அலுவலக வளாகத்திற்குள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், பின்னர் மழை ஓய்ந்துவிட்ட காரணத்தால், மேடையில் நிகழ்ச்சி நடைபெற்றது. பெய்த மழை காரணமாக குளிர்ச்சியுடன் கூடிய - மிகவும் இதமான வானிலை நகரில் நிலவியதால், விழாவிற்கு வந்தவர்கள் இறுதி வரை ஆர்வத்துடன் கலந்துகொண்டதைக் காண முடிந்தது.





களத்தொகுப்பில் உதவி:
M.W.ஹாமித் ரிஃபாய்.

படங்கள்:
செய்யித் இப்றாஹீம்.


செய்தி திருத்தப்பட்டது. (26.10.2011 - 13:20hrs)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நகர்மன்றத் தலைவர், உறுப்ப...
posted by s.e.m. abdul cader (bahrain) [25 October 2011]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 12203

MASHALLAH, I PRAY ALMIGHTY ALLAH TO KEEP KAYAL AT UNITY AS I SEE IN THIS EVENT. IT IS VERY GLAD TO SEE THIS GROUP PHOTOS, WELL, OUR CONCEPT MUST BE IN THE PATH OF KAYAL'S WELFARE ALTHOUGH HAVING DIFFERENT VIEW POINTS AMOUNG US. UNITY IS BEST WAY TO REACH OUR GOAL. I WISH YOU ALL THE BEST. WASSALAM.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நகர்மன்றத் தலைவர், உறுப்ப...
posted by ASHIK RAHMAN M.H (mikhwa (via al baha) saudi arabia) [25 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12206

காயல் நகர்மன்ற தலைவி பொறுப்பு ஏற்றிருக்கும் சகோதரி ஆபிதாவுக்கும் மற்றும் அணைத்து வார்டு உறுப்பினருக்கும் மனமார்ந்த இனிய ஸலாத்துடன் நல் வாழ்த்துக்கள்.

நீதி நேர்மை,கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவை அனைத்தையும் மனதில் கொண்டு சிறந்த நிர்வாகத் திறமையுடன், ஒற்றுமையுடன், காயல் மா நகர மக்களுக்கு, தவறுகள் நடைபெறவண்னம், ஊழல் அற்ற நல்லாட்சி வழங்கி நல்லதொரு நகரமன்றமாக்கிட நல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நகர்மன்றத் தலைவர், உறுப்ப...
posted by Abdul Cader S.H. (Jeddah) [25 October 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12208

அல்ஹம்துலில்லாஹ்!

பதவிப்பிரமாணம் காட்சிகள், நாமும் ஊரில் இல்லையே கலந்துகொள்ள என்ற ஆதங்கத்தை ஏற்படுத்தியது. அத்தனை பிரமாதம் மேலும் இயற்கை தந்த ஒத்துழைப்பு, காயலின் பசுமை ஆரம்ப அறிகுறி.

நிச்சயம் நம் கண்முன் காயலின் ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது. தலைவியின் அணுகுமுறை எம்மை மெய்சிலிர்க்க வைத்தது. இன்றுமுதல் ஆரம்பமாகிவிட்டது உங்கள் பணி தொடரட்டும் வல்ல அல்லாஹ்வின் துணைகொண்டு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நகர்மன்றத் தலைவர், உறுப்ப...
posted by mohamed abdul kader (dubai) [25 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12209

அஸ்ஸலாமு அழைக்கும்

பதவியேற்பு விழா நிகழ்ச்சிஐ அயல்நாடுகளில் உள்ள காயலர்களின் கண்களுக்கு விருந்தஹா தந்த காயல் வலைதளத்திற்கு மிக்க நன்றி.

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது நகர் மன்றத்தை லஞ்ச லாவண்யம் இல்லாத நகர் மன்றமாக புதிய தலைமைன்கீல் அமைத்து தருவானாக.ஆமீன் வஸ்ஸலாம்

S.H.MOHAMED ABDUL KADER
K.T.M.STREET


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நகர்மன்றத் தலைவர், உறுப்ப...
posted by ஹாஜி (Riyadh) [25 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12210

மாஷா அல்லாஹ் இதேபோன்று ஒற்றுமை என்றும் வேண்டும் நம் மக்களிடையில்...

இன்ஷாஅல்லாஹ் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நம் காயல் மாநகரத்தையும் , நம் மக்களையும் பாதுகாப்போம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:நகர்மன்றத் தலைவர், உறுப்ப...
posted by ismail (Jeddah K.S.A.) [25 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12211

ALHAMDHU LILLAH wish you all the best for our new young president and new ward members, by inviting directly to our kayal`s senior citizens and important aikiya peravai members shows your maturity and their absence shows their adament and sustaining failure to impress public especially youths.

ALLAH is with you அடிக்கிற கை ஒரு நாள் அணைக்கும் இன்ஷா அல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நகர்மன்றத் தலைவர், உறுப்ப...
posted by Vilack SMA (Kangxi) [26 October 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 12212

நல்லதொரு தொடக்கம் .

அப்புறம், தலைவி சகோதரிக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் அலுவல் முடிந்து வீடு செல்லும்போது , உங்கள் பள்ளித்தோழி , உயிர்தோழி வீடு வழியாக ( யார் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் ) கொஞ்சம் நடந்து சென்று பாருங்களேன்.

மழை பெய்தால் , தெருவில் தண்ணீர் குளம் . ( குறிப்பாக உங்கள் தோழியின் வீட்டின் முன் பகுதி ) பலமுறை நகர் மன்றத்தில் முறையிட்டும் பலன் இல்லை . நீங்களாவது , அந்த இடத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க கொஞ்சம் உதவி பண்ணுங்களேன் . உங்கள் பள்ளி தோழிக்கு செய்யும் உதவியாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:பிஸ்மில்லா என்றே கூறி ஆரம்பம் செய்யுங்கள்!!!.
posted by OMER ANAS (DOHA QATAR.) [26 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 12215

அஸ்ஸலாமு அழைக்கும்!!!

கடவுளுக்கும் இறைவனுக்கும், வித்தியாசம் காட்டியமைக்கு நன்றி!!! அதே நேரம் தமிழ் தாய் வாழ்த்தையும், தேசிய கீதத்தையும், பாடி அதற்க்கான அர்த்தம் என்ன என்று புரியாத மக்களுக்கு சொன்னால் நல்லது!!! இதை பாடியோர் விபரமும் அவர் தம் இஸ்லாமிய கொள்கையும் அவர் யார் என்றும், மக்களுக்கு சொன்னால், என்னை போன்றோரும் புரிய முடியும்!!!

எது எப்படியோ பதவி பிரமாணம் பதவி ஆசை இன்றி முடிந்தால் நன்று!!! எது எப்படியோ எப்பவும் பிஸ்மில்லாஹ் என்று கூறியே ஆரம்பிக்கவும்!!! நம் பெருமான் ரஸூலுல்லாஹ் அவர்கள் காட்டிய வழியிலேயே நடக்கவும்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:நகர்மன்றத் தலைவர், உறுப்ப...
posted by Ibraheem (Kayalpattinam) [26 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 12218

மாஷா அல்லாஹ், நிகழ்வுகளும் படங்களும் மிக அருமை. "இறைவனிடம் பிரார்த்திக்கும் உதடுகளைவிட மனிதர்களுக்கு உதவும் கரங்களே மேலானவை"

தலைவி மற்றும் அனைத்து உறுப்பினர்களும் ஊழலற்ற மற்றும் மக்களுக்கு உதவக்கூடிய நகராட்சியை உருவாக்கிட வேண்டும். அல்லாஹ் அனைவருக்கும் நற்சேவை புரிந்திட அருள்வானாகவும்... ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:நகர்மன்றத் தலைவர், உறுப்ப...
posted by Samu.A.B (Dubai) [26 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12223

Happy to see people’s choice swearing in as chairperson. All the best to Sister Abida and members. Hope all the members will work together to create a better kayal for generations to come.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. வாழ்த்துக்கள்
posted by Mauroof (Dubai) [26 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12227

காயல்பட்டிணம் நகர்மன்றத்தின் தலைவியாகவும், உறுப்பினர்களாகவும் பதவியேற்றிருக்கும் சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்.

தங்களது பதவிக்காலம் முழுவதும் லஞ்சலாவன்யங்களுக்கு இடமளிக்காது சிறப்பான மக்கள் பணி ஆற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

நகர்மான்றத்தலைவி நேரில் அழைப்பு விடுத்தும் ஐக்கியப்பேரவை சார்பில் நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் போனது வருத்தமளிக்கிறது எனினும் பேரவையின் சார்பில் வாழ்த்து அறிக்கை ஒன்று விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கும் ஏனைய நடுநிலை/நாகரீகம் தவறா சகோதரர்களுடன் நானும் எதிர்பார்க்கிறேன். பிளவுபட்ட இருதயங்களை ஒன்றிணைக்க அல்லாஹ் போதுமானவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. வேண்டுகோளை உதாசீனப்படுத்தாதீர்!!
posted by N.S.E. மஹ்மூது (KAYALPATNAM ) [26 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12228

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா! சிறப்பாக நடைபெற்ற செய்தியறிந்து மகிழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ்!.

பதவிப்பிரமானத்தின்போது, “கடவுள் அறிய” என்றும் “அல்லாஹ் அறிய” என்றும், “எல்லாம்வல்ல அல்லாஹ் அறிய” என்றும், “இறைவன் அறிய” என்றும் இப்படியாக ஒரே பொருளைத் தரக்கூடிய பல வார்த்தைகளில் ஏக இறைவனாகிய அல்லாஹ்வை முன்னிறுத்தி சத்திய பிரமாணம் செய்து தங்களது பொறுப்புகளை ஒப்புக்கொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தாங்கள் அனைவரும் சத்தியம் செய்து ஒப்புக்கொண்ட இந்த பொதுச்சேவையை எந்த ஒரு பாகுபாடுமின்றி , மிகத்திறமையாக , சிறப்பாக செய்து நமது நகர்மன்றம் சிறந்த மன்றமாக இயங்கிட சேவையாற்றும்படி உங்கள் அனைவரையும் வேண்டுகிறேன்.
----------------------------------------------------
பொதுவான கண்ணோட்டம் :

இந்த தேர்தலிலே நாம் அரசியல் சாயம் பூசாது போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தாலும் நம் உறுப்பினர்களில் பலரும் பல அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களாகவும் , அரசியல் கட்சி அபிமானிகளாகவும் இருப்பார்கள் என்பதே உண்மை.

என்னதான் கட்சி விசுவாசங்கள் இருந்தாலும் அவைகளை எல்லாம் நமது நகர் மன்றத்திற்கு வெளியே வைத்துவிட்டு - நகர் மன்றத்திற்கு உள்ளே அதுவும் நகர் மன்ற செயல்பாடுகளிலே கட்சி பாகுபாடுகளை களைந்து, கொள்கை வேறுபாடுகளை மறந்து எந்த ஒரு முடிவையும் பொதுவான கண்ணோட்டத்தில் சிந்தித்து செயலாற்றிட வேண்டுகிறேன்.

எந்த ஒரு செயலையும் பொதுவான கண்ணோட்டத்தில் பார்க்கும்போது நல்ல முடிவுகளே வரும்! அது நன்மையையேத் தரும்!! இறைவனின் அருளும் பெருகும்!!!.
--------------------------------------------------
சரித்திர மாற்றங்கள் :

நமது நகர்மன்றம் பல மாற்றங்களை கண்டிருக்கிறது - நகர்மன்ற தலைவர் ஆண் என்றிருந்தது பெண்ணாக மாறியதிலிருந்து தேர்தல் நடந்து முடிந்தவரை பல வகையிலும் நாம் விரும்பியோ , விரும்பாமலோ பல சரித்திர மாற்றங்கள் நிகழ்ந்தது - அது இறைவனின் நாட்டமே!.

தேர்தல் முடியும் வரை ஏற்பட்ட மாற்றங்கள் எல்லா செயல்களிலும் தொடர்ந்து மாற்றங்களை ஏற்படுத்தி ஊழலில்லாத மன்றமாக - சில, பல புதுமையான திட்டங்களுடன் செயல்பட வேண்டும்.

தலைவர் / மற்றும் உறுப்பினர்கள் எதையும் அவசரக் கோணத்தில் பார்க்காமல் சிந்தித்து செயலாற்ற வேண்டுகிறோம் - அவசரமாக செய்ய வேண்டியதை தவிர்த்து மற்றவைகளுக்கு - எக்காரணம் கொண்டும் அவசரம் தேவை இல்லை என்பதை நினைவில் நிறுத்தவும்.
---------------------------------------------------
உங்களை எவரும் அசைக்க முடியாது:

உங்கள் அனைவருக்கும் தேர்தல் காலங்களிலே உங்கள் நண்பர்கள் பலரும் பல விதத்திலே நீங்கள் வெற்றி பெறுவதற்காக பல உதவிகளை செய்திருக்கக் கூடும் அதுவெல்லாம் தேர்தல் காலத்தோடு முடிந்துவிட்டது.

அவர்கள் உங்களுக்கு எப்போதும் நல்ல நண்பர்களாகவே இருக்கட்டும் - உங்கள் நிர்வாகத்திலே தலையிட அனுமதிக்க வேண்டாம்.

ஊருக்கு மிக முக்கியமான திட்டம் , ஊரின் கலாச்சாரத்திற்கு மாற்றமான திட்டம், அல்லது காலாகாலமாக இருந்துவந்த சில விசயங்களில் மாற்றம் என்று எதுவும் வருமானால் அந்த மாதிரி விசயங்களில் நம் ஊர் பெரியவர்களை அணுகி அவர்களின் அணுகுமுறையை, அனுபவத்தை தெரிந்து அவர்கள் தரும் அறிவுரையை பின்பற்றி செயல்பட வேண்டியது - இது எல்லா உள்ளாட்சி நிர்வாகங்களிலும் வழமையானது தான்.

இப்பொழுது நமது நகர்மன்ற நிர்வாகம் உங்கள் பொறுப்புக்கு வந்துவிட்டதால் தலைவர் மற்றும் 18 உறுப்பினர்களாகிய நீங்கள் 19 பேர்கள் மட்டும்தான் அதனுடைய நன்மை , தீமைகளுக்கு பதில் சொல்ல கடமை பட்டிருக்கிறீர்கள் எனவே நீங்கள் 19 பேர்களும் நேர்மையான வழியில் ஒற்றுமையாக செயல்படும் காலம்வரை உங்களை எவரும் அசைக்க முடியாது.

ஆகையால் நீங்கள் இறைவனுக்கு பயந்தவர்களாக மக்கள் மகிழ்ந்தவர்களாக பணியாற்றுங்கள் இறைவனின் அருள் என்றும் உங்கள் மீது உண்டாகும்.
-----------------------------------------------------
வேண்டுகோள் :

ஐந்து விரல்களும் ஒன்றுபோல் இல்லை! எல்லா நேரமும் , காலமும் ஒன்றுபோல் இருக்காது.

இன்று நீங்கள் எல்லாம் நல்லவர்களாக இருக்கலாம் ஒருகால் கால சூழ்நிலை உங்களை தவறான பாதைக்கு இழுத்து சென்றுவிடலாம் (இறைவன் காப்பாற்றட்டும்).

ஒரு வேளை அப்படி தவறான பாதைக்கு உங்களில் எவரும் போய் அதற்கான தண்டனையை நீங்கள் அனுபவிக்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தலைவர் முதல் அத்தனை உறுப்பினர்களுக்கும் என்னுடைய தனிப்பட்ட ஒரு வேண்டுகோள்.

முதலாவதாக நீங்கள் ஒவ்வொருவரும் மருத்துவமனை சென்று உங்கள் உடல் நிலைகளை முழுப்பரிசோதனை செய்து உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி தெரிந்து அதை நீங்களே இரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஆதரவில் உள்ள உங்கள் குடும்பத்தவர்களின் ஆரோக்கியத்தையும் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

இரண்டாவதாக உங்களின் மன அமைதி - உங்கள் குடும்ப வாழ்க்கை - நண்பர்கள் வட்டாரம் இன்றைய தினம் எப்படி உள்ளது என்பதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

மூன்றாவதாக இன்றைய தினம் - உங்களுடைய அசையா சொத்து, அசையும் சொத்து எவ்வளவு ? வரவு, செலவு மற்றும் கடன் எவ்வளவு என்பதையெல்லாம் கணக்கு எழுதி வையுங்கள்.

இவைகள் எல்லாம் உங்களுக்கும் இறைவனுக்கும் தெரிந்தவையாகவே இருக்கட்டும் வேறு யாருக்கும் தெரிய வேண்டிய அவசியமில்லை.

இந்த மூன்று வேண்டுகோளையும் ஒவ்வொரு ஆறு மாதமும் செய்து உங்கள் நேர்மையை நீங்களே பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள்.

தவறுகள் ஏதும் நடந்திருப்பின் நீங்களாகவே திருத்தி, திருந்திக்கொள்வீர்கள் இறைவன் அருள் கிட்டும் - திருந்தாதிருப்பின் இறைவனின் தண்டனையை அனுபவிப்பீர்.

" அரசன் அன்றே கொல்வான் - இறைவன் நின்று (தாமதித்து) கொல்வான் " என்பது அன்றைய பழமொழி.

ஆனால் இன்று மாறி வருகிறது அரசன் நின்று (அரசாங்கம் இலஞ்சம் வாங்கி, அல்லது வேண்டிய ஆள் என்று தாமதப்படுத்தி ) கொல்கிறான் - இறைவன் அன்றே (உலகத்திலேயே படிப்பினைக்காக நோய், கோர்ட், கேஸ், கைது என்று கேவலப்படுத்தி ) கொல்கிறான் "

உலகம் முழுவதும் ஊழல் செய்த எவரும் தப்பியது இல்லை இதை நாம் தினமும் கண்டும், கேட்டும் வருகிறோம் - இந்த நிலை நம் நகர்மன்ற அங்கத்தினர்களுக்கு வரக்கூடாது என்பதே எனது ஆசை.

எனவே நமது நகர்மன்ற அங்கத்தினர்களே! எனது வேண்டுகோளை உதாசீனப்படுத்தாதீர்!! இரகசியமாக செய்து பயனடைவீர்!!!.
--------------------------------------------------
மக்களே!

நேற்றையதினம் அல்லாஹ்! அருளால் நமது நகர்மன்றம் புதிய தலைவர்களையும், உறுப்பினர்களையும் கொண்டு செயல்பட துவங்கி இருக்கிறது.

முதலில் பொது மக்களாகிய நாம்தான் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும், எந்த ஒரு விசயத்திற்கும் இலஞ்சம் கொடுக்கக் கூடாது, யாரும் இலஞ்சம் கேட்டால் அதை தலைவரிடமோ , உருப்பினரிடமோ போய் சொல்ல வேண்டும்.

எந்த ஒரு தவறுக்கும் பொது மக்களாகிய நாம் காரணமாக இருக்கக்கூடாது - இந்த மன்றம் நமக்காக சேவை செய்கிற மன்றம் நாமே தவறு செய்தால் தட்டிக் கேட்பது யார் ?

நேற்றுதான் புதிய மன்றம் தொடங்கி இருப்பதால் இன்ஷா அல்லாஹ்! விரைவில் பல மாற்றங்கள் உருவாகி நல்ல சேவைகள் தொடர்ந்து நடைபெறும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் நகர்மன்றத்தை நல்ல சேவை நிறைந்த மன்றமாக செயல்பட செய்திடுவானாக ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:நகர்மன்றத் தலைவர், உறுப்ப...
posted by mackie noohuthambi (kayalpatnam) [26 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12230

WISH U ALL A COLOURFUL OATH TAKING SWEARING IN CEREMONY. DEAR SISTER AABIDHA THE RESPECTED CHAIRMAN OF KAYALPATNAM: PLEASE FOLLOW JAYALALITHAA IN TAKING ACTIONS BOLD.

FOLLOW ANNA HASARE IN FIGHTING CORRUPTION STRONG.

FOLLOW KARUNANIDHI IN SOLVING PROBLEMS IN TAKE-IT-EASY WAY.

FOLLOW MANMOHAN SINGH IN PUTTING OFF ANSWERING EXCHANGE OF HEATED WORDS FROM OPPOSITIONS.

FOLLOW MUHAMMAD SALLALLAHU ALAIHI VASALLAM IN ALL WALKS OF YOUR LILFE.

WISH U AND YOUR COUNCIL OF MEMBERS ALL GOODLUCK IN YOUR FUTURE ENDEAVOURS.

BEST REGARDS
MACKIE NOOHUTHAMBI
51 NEW BAZAAR STREET, KAYALPATNAM
MOB: 9865263588


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:நகர்மன்றத் தலைவர், உறுப்ப...
posted by S.M.B Faizal (Abu-Dhabi) [26 October 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12231

அஸ்ஸலாமு அழைக்கும்

நமது காயல் நகர்மன்றதில் புதியதாக பதவி ஏற்றுள தலைவி சகோதரி ஐ ஆபிதா மற்றும் 18 வார்டு உறுப்பினர்கள் அனைவர்க்கும் எனது நல்வாழ்துகளை தெரிவிப்பதுடன் ஊழல்லற்ற நகர்மன்றதை தருவிர்கள் என நம்புகிறான் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:நகர்மன்றத் தலைவர், உறுப்ப...
posted by Mohamed Ali and Amanullah (Kuwait) [26 October 2011]
IP: 195.*.*.* Kuwait | Comment Reference Number: 12235

அல்ஹம்துலில்லாஹ்

காயல்பட்டிணம் நகர்மன்றத்தின் தலைவியாகவும், உறுப்பினர்களாகவும் பதவியேற்றிருக்கும் சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள். என்றென்றும் இறைஅருள் நிறைக.

காயல்பட்டினத்தின் கோலாகலம், நேரில் காண வாய்ப்பு கிடைக்காதது சிறு வருத்தமே இருந்தாலும் நடந்ததை கண்டு பெரும் மகிழ்ச்சி. அல்ஹம்துலில்லாஹ்

தங்களது பதவிக்காலம் முழுவதும் இறைவனுக்கு பயந்து சிறப்பான மக்கள் பணி ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

நகர்மான்றத்தலைவி நேரில் அழைப்பு விடுத்தும் சிலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் போனது வருத்தமளிக்கிறது. வல்ல இறைவன் அவர்கள் மனதை மாற்றி ஒற்றுமையை தருவான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:நகர்மன்றத் தலைவர், உறுப்ப...
posted by ASHIMACADER (kayalpatnam) [26 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 12236

அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்]

நமது நகரிலே நல்ல பணிகளை செய்வதற்கு நம் மக்களால் அமோக வெற்றி பெற்று தலைவியாக! வந்த ஆபிதாஷேக் அவர்களுக்கு உலக காயல் நல மன்றங்கள் போட்டி போட்டு வாழ்த்துவதை எண்ணி எண்ணி........உவகை கொள்கிறேன். இது போதும் அவர்களுக்கு ஒரு உத்வேகத்தை உண்டு பண்ணும்.

பசுமையாக மாறப்போகும் நம் காயல் நகருக்கும், அவர்கள் செய்யும் நற்காரியங்களுக்கும், உலக நல மன்றங்களின் ஒத்துழைப்பும் துஆவும் எப்போதும் வேண்டும் ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:நகர்மன்றத் தலைவர், உறுப்ப...
posted by M.S.Kaja Mahlari. (Singapore.) [26 October 2011]
IP: 49.*.*.* Singapore | Comment Reference Number: 12237

நகர் மன்ற தலைவர் ,மற்றும் உறுப்பினர் அனைவருக்கும் எனது சலாமும், நல்வாழ்த்துக்கள்.அ ஸ்ஸலாமு அழைக்கும். உங்கள் பணிகள் அனைத்தும், நீதியாகவும், நியாயமாகவும் நடைபெறட்டும்.

நமதூரில் குடிநீர் பிரைச்சனை தீர முன்னுரிமை தாருங்கள். குறிப்பாக மின்சார மோட்டார் வைத்து,தனக்கு மாத்திரம் தண்ணீர் வேண்டும் என நினைக்கும் சுயநலவாதிகளின் சுயரூபத்தை தடுத்து நிறுத்துங்கள். இவர்கள் பிறரின் இரத்தத்தை தான் உறிஞ்சிகிரார்கள்.

இதில் பணக்காரன், ஏழை, தெரிந்தவன், தெரியாதவன், பெரியவர், சிறியவர், முஸ்லிம், முஸ்லிமல்லாதவர், ஆண்டி, அரசன் என்று எந்த பாகுபாடும் காட்டாதீர்கள்.

முன்பு மர்ஹூம் வீ,எம்.எஸ்.லெப்பை மாமா அவர்களின் நிர்வாகத்தின்போது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அடுத்து நமதூரின் அனைத்து குடிநீர் இணைப்புக்கும் தானாகவோ, அல்லது அடிப்பைப்பு மூலமாகவோ தண்ணீர் வரும் ஏற்பாடை செய்யுங்கள்.

லஞ்சம் அற்ற நிர்வாகத்தை ஏற்படுத்துங்கள். ஐக்கிய பேரவை இந்நகர்மன்ற குழுவினருக்கு முழுமையான ஒத்துழைப்பை கொடுங்கள். நாம் அறிவித்த பொது வேட்பாளர் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டாரே என கௌரவம் பார்க்காமல், பெருன்பான்மையான மக்கள் தெரிவு செய்த நகர்மன்ற தலைவர் குழுவினருக்கு எல்லா உதவிகளையும், ஆலோசனைகளையும் ஊர் நலன் கருதி செயல்படுங்கள்.

பேரவையால் தெரிவு செய்யப்பட்ட நகர்மன்ற தலைவரின் வெற்றி வாய்ப்பு ஏன் இழந்தது என மீள் பரிசீலனை செய்யுங்கள்.

இத்தேர்தலில் பொதுமக்களின் ஆதரவு ஐக்கிய பேரவையின் முடிவுக்கு எதிராக பிரதிபலித்துள்ளது ஏன் ? என மீள்பரிசீலனை செய்யுங்கள். தவறுகள் எங்கு, யாரால் ஏற்பட்டது என்பதை கண்டறிந்து அதனை களைந்து, சீரமைக்கும் பணியை மேற்கொள்ளுங்கள். அப்போதுதான் பேரவையின் செயல்பாடுகளுக்கு வரும்காலங்களில் பொது மக்களின் ஆதரவும், ஒத்துழைப்புகளும் கிடைக்கும்.

அதற்க்கான சூழல் ஏற்பட வழிசெய்யுங்கள். இதில் சுயகௌரவம் பார்த்தால் பேரவையின் மதிப்பு மக்களிடம் எடுபடாமல் போகும் சூழல் ஏற்படும்.

ஆகவே ! நமதூர் நகர்நல மன்றம் மூலம் நாம் எல்லா வளர்சிகளையும், நன்மைகளையும் பெற ஐக்கிய பேரவையும், மற்றும் நமது அனைத்து பொதுநல சேவை மன்றங்களும் இணைந்து செயல்படுவோமாக! எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்க்கான சூழலை ஏற்படுத்துவானாக! ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. மாமியார் உடைச்சா மண் குடம் மருமகள் உடைச்ச பொன்குடமா ....??
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [26 October 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12238

இங்கு ஒரு சகோதரர் ஒரு கேள்வி கேட்டிருந்தார் "

தமிழ் தாய் வாழ்த்தையும், தேசிய கீதத்தையும், பாடி அதற்க்கான அர்த்தம் என்ன என்று புரியாத மக்களுக்கு சொன்னால் நல்லது!!! இதை பாடியோர் விபரமும் அவர் தம் இஸ்லாமிய கொள்கையும் அவர் யார் என்றும், மக்களுக்கு சொன்னால், என்னை போன்றோரும் புரிய முடியும்!!!" என்று .

இது ஒரு நியாயமான கேள்வி தான் என்றாலும் அவங்களுக்கு பிடித்தமானவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிற்கு இதே சகோதரர் எழுதின கருத்தை பாருங்கள் மக்களே ...

===================================================

Comment Reference Number: 12088

நிச்சயமாக இந்த நிகழ்ச்சி இஸ்லாமிய நாட்டில் நடைபெறவில்லையே? எல்லா மதமும் கொண்ட சுதந்திர இந்தியாவில் காயல் பதியில்தானே நடந்ததது? அப்புறம் என்ன பூ வைத்தவன் யாரு, பொட்டு வைத்தவன் யாரு, துஆ செய்து திறந்து வைத்தது யாரு, என்று கூட தெரியாமல் விமர்சனம் செய்யும் கண்ணியவான்களே!!! உங்களுக்கு எல்லாம் பதில் சொல்லக் கூட எங்கள் நாவு கூசுகிறது!!!

எல்லாவற்றையும் விமர்சனமாக எண்ணி கருத்தை பதிவு செய்வது நல்ல மனிதனுக்கு அழகில்லை.

====================================================

என்னங்க நியாயம் மாமியார் உடைச்சா மண் குடம் மருமகள் உடைச்ச பொன்குடமா ....??


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:நகர்மன்றத் தலைவர், உறுப்ப...
posted by syed omer kalami (colombo) [26 October 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 12239

ALLHAMDULLILLAH, MASHA ALLAH,

VERY PLEASING TO SEE OATH TAKING CEREMONY BY PRESIDENT..

HOPE TO DO GOOD FOR ALL SECTION OF PEOPLE WITHOUT ANY DIFFERENCE OF RELIGION .AND DON'T WINDUP YOURSELF TO A PARTICULAR SECTION .YOU TO BE COMMON.YOU ARE PRESIDENT TO WHOLE KAYAL.

.AND ALSO DON'T FORGET PEOPLE WHO DIE HARDLY WORKED FOR YOU.LADDER IN WHICH YOU CLIMBED TO THE CROWN SEAT.

ALLAH WILL HELP YOU AND BE WITH YOU IN ALL WALKS OF PRESIDENTIAL WORKS


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:நகர்மன்றத் தலைவர், உறுப்ப...
posted by Kudack Mohudoom Mohamed (Kuwait) [26 October 2011]
IP: 213.*.*.* Kuwait | Comment Reference Number: 12240

அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்], வாழ்த்துக்கள்,

பசுமையான காயலை உண்டாக்க அனைவரும் பாடுபடுங்கள்,

எண்கள் வார்டு உறுப்பினர் (17) சகோதரர் அஜ்வாத் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. பதவிஏற்பு நிகழ்ச்சியில் கண்ணியத்துக்குரிய செய்கு ஊண்டி செய்யித் முஹம்மத் ஆலிம் அவர்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:புதிய காயல் உருவாக வாழ்த்தும் நெஞ்சம்கள்
posted by suaidiya buhari (chennai) [26 October 2011]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 12242

ASSALMAULAIKAM

பதவி பிரமாணம் எடுத்துகொண்ட all Candidate and Dear friiend new president abida கூ என் உடைய இனிய வாழ்த்துகள்.

வாழ்த்தும் நெஞ்சம்கள் : -

amina syed
suaidiya buhari
numaira buhari
nameera buhari
noorjahan farooq

nusaifa yaseen & afrida mohamed ali

rabiya ali and our family members


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:நகர்மன்றத் தலைவர், உறுப்ப...
posted by Shahul Hameed (Hong Kong) [26 October 2011]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 12244

நகர்மன்ற தலைவி மற்றும் அனைத்து உறுபினர்களுக்கும் வாழ்த்துக்கள்!

முந்திய நகர் மன்றம் ஆரம்பமாகும் போது கடனுக்கு வட்டி கட்டும் அளவுக்கு இருந்த நிதி ஆதாரம் இப்போது நான்கு கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய்யை (surplus) வைத்து விட்டு சென்று உள்ளனர், அல்ஹம்து லில்லாஹ்!

தற்போதிய நகர் மன்றம் நல்ல முறையில் நிர்வாகம் செய்து மக்களுக்கு நல்ல பல திட்டங்களை செயல்படுத்திட தாழ்மையுடன் வேண்டுகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:நகர்மன்றத் தலைவர், உறுப்ப...
posted by S.M.A.RAHMATH RAFEEKA (KAYALPATNAM) [26 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12245

அஸ்ஸலாமு அலைக்கும்

புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட நகர்மன்ற தலைவி மற்றும் வார்டு கவுன்சிலர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் உங்கள் யாவர்களுடைய நல்ல சேவைகளும் நமதூர் மக்களுக்கு தேவை & எதிர்பார்கிறோம். வஸ்ஸலாம்

HAJA S.M.A .RAHMATH RAFEEKA
HAJI . K.D.N MOHAMED LEBBAI
KML. FATHIMA SHIREEN FARHATH. B.COM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:நகர்மன்றத் தலைவர், உறுப்ப...
posted by K.D.N.MOHAMED LEBBAI (Jeddah) [26 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12248

அஸ்ஸலாமு அலைக்கும்

புதியதாக செலக்ட் ஆகிஉள்ள NEW CHAIRMAN & COUNCILER அவர்களுக்கும். என்னுடைய இதயமார்ந்த நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக >>>>>>>>>>>>>>>>>.

உங்கள் யவர்களின் நல்ல செயல்பாடுகளை நம் ஊர் மக்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் .செய்வீர்கள் என்று ஆவலுடன் ( நம்பிக்கை உள்ளது ) எதிர் பார்த்து உள்ளோம் .

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. தலைவர், & உறுப்பினர்கள்
posted by Noohu T (Maana Paana) [26 October 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 12249

மழை காலத்தில் பொறுப்பை ஏற்பதின் மூலம் அறிவது மழையும் மண்வாசனையும் போலே தலைவரும் உறுப்பினர்களும் ஈகோக்களை விட்டு , ஊரின் நன்மைக்கு மட்டும் செல்பட வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன்

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:நகர்மன்றத் தலைவர், உறுப்ப...
posted by P.S.ABDUL KADER (JEDDAH) [26 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12251

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நகர்மன்றத் தலைவர் மற்றும் ,எல்லா வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா! சிறப்பாக நடைபெற்ற செய்தி கண்டு மகிழ்ச்சி. அல்ஹம்துலில்லாஹ

இந்த முறை நமது நகர்மன்றம் பல மாற்றங்களை கண்டிருக்கிறது - நகர்மன்ற தலைவர் ஆண் என்றிருந்தது பெண்ணாக மாறியது. இது போலவே துணை தலைவர் பதவியும் பெண்ணைதான் கொண்டுவந்தால் நல்ல இருக்கும், முந்திய துணை தலைவர் போல இல்லாது இருக்கட்டும் .....புரிந்து இருப்பீர்.

தலைவர், மற்றும் எல்லா உறுப்பினர்கலும் சிந்தித்து செயலாற்ற வேண்டும். ஆகையால் நீங்கள் இறைவனுக்கு பயந்தவர்களாக மக்கள் மகிழ்ந்தவர்களாக பணியாற்றுங்கள் இறைவனின் அருள் மலரட்டும். இன்ஷா அல்லாஹ்! விரைவில் பல மாற்றங்கள் உருவாகி நல்ல சேவைகள் தொடர்ந்து நடைபெறும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் நகர்மன்றத்தை நல்ல சேவை நிறைந்த மன்றமாக செயல்பட செய்திடுவானாக ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:நகர்மன்றத் தலைவர், உறுப்ப...
posted by Riyas (Al Ain, UAE) [26 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12252

எல்லோரும் தனது கடமையே சரியான முறையில் தொடரவும் முடிவு வரை நேர்மையாக நடக்கவும் ஆரம்பமாக பிஸ்மில்லாஹ் ஹிரஹுமான் நிர்ரஹீம் என்று ஆரம்பம் செய்து இருக்கூறிர்கள்... அல்லாஹ் போதுமானவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:நகர்மன்றத் தலைவர், உறுப்ப...
posted by Ahamed (Dubai) [26 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12257

Assalamu Alaikum. Congratulation to sister Aabidha & to the new team. Insha Allah we hope for the clean, corruptionless, efficient & effective administration under your patronage. Also we hope you & your team will stand for our expectation.

Moderator: சகோ. அஹ்மத் அவர்களே! தங்கள் கருத்துக்களை வருங்காலத்திலும் வெளியிடும் பொருட்டு, தங்கள் முழுப் பெயருடன் கருத்தனுப்பவும். ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. தங்கள் வரவு நல்வரவாகட்டும்.
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [26 October 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12259

அஸ்ஸலாமு அழைக்கும்.

WELCOME ALL AND I WISH TO YOUR PARTICIPATION IN OUR TOWN MUNICIPALITY WILL BE THE ROLE MODEL OF OUR NATION AND ONCE AGAIN WANTED TO PRAY THIS WHOLE TEAM INSAALLAH WILL BE THE BEST EVER TEAM IN THE KAYAL ALSO THE NATION AND TO GET NATIONAL AWARD FROM HONARABLE PRSEDENT OF INDIA. AAMEEN.

அன்பார்ந்த தலைவி மற்றும் அணைத்து நகரமன்ற உறுப்பினர்களின் வரவு நல்வரவாகட்டும்.

அன்பான வேண்டுகோள்!

1 .இந்த இணையத்தளத்தில் வெளியான அணைத்து கட்டுரைகலையும் கவனித்தல் வைத்து தங்களால் முடிந்த அனைத்தையும் நிறைவேற்றுங்கள்.

2 . அனைவர்களும் தங்களுடைய வார்ட்களின் ஒவ்வரு வீடுகளுக்கும் சென்று அவர்களின் தேவை, குறைகளை கண்டறிந்து பிரச்சனைகளை வரிசைபடுத்தி, ஒவோவேன்ற்றாக நிறைவேற்றி அவர்களின் அன்பைபெற்று கடமையாற்றுங்கள்.

3 எந்த ஒரு செயல்பாடாக இருந்தாலும் WORK ORDER REPORT வேலை செய்த இடம், நாள், நபர், முடிந்த நாள், மாற்றிய பொருட்கள்,தற்போதிய நிலைமை,சுனகினால் அதன் காரணம் இறுதியாக குறைகூரியவரின் வேலை முடிந்ததற்கான கையெப்பம் போன்ற பிரிண்டிங் புக்குடேன் ரெகார்ட்ஸ் வைத்துக்கொள்ளவும்.

4 ஒவொரு நபரும் குறைந்தது மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது தங்களின் வார்டின் மக்களை கூடி நடந்து முடிந்துள்ள, நடக்கின்ற வேலைகள், பிரட்சனைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இவன்,
முகியதீன் அப்துல் காதிர்,
ஐக்கிய அரபு பாராளுமன்றம்,
அபுதாபி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. வாழ்த்துக்கள்- புதிய ஆட்சியாளர்களே
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [26 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12265

வாழ்த்துக்கள்! காயல் நகர சபையின் ஆட்சியாளர்களே!

இன்று பதவியேற்றிருக்கும் தாங்கள் வாக்களித்த படி நம் நகர் மன்றத்தை ஊழலற்ற மன்றமாகவும், எல்லா பொது பணிகளிலும் நிறைவுற்ற மன்றமாகவும், மற்ற நகராட்சி களுக்கு முன்மாதிரியாக நம் மாநகராட்சியை மாற்றிக்காட்டுவீர்கள் என்ற நல்ல எதிர் பார்ப்புடன் வாழ்த்துகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. காயல் நகர் மன்றம் மற்றும் அனைத்துலக காயல் நற்பணி மன்றதிர்க்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [26 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12270

அஸ்ஸலாமு அழைக்கும்.

அன்பார்ந்த காயல் நகர் மன்றம் மற்றும் அனைத்துலக காயல் நற்பணி மன்றதிர்க்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

தாங்கள் தற்போதுள்ள மன்றத்தில் ஒவ்வரு வருடமும் தலை சிறந்த உறுபினர், அலுவலர், அதிகாரி, தொழிலாளி, பொதுமக்களில் ஒருவர் [ மன்றத்திற்கு உறுதுணையாக] ஆகியோர்களுக்கு விருது வழங்கி கவ்ரவிக்க ஏற்பாடு செய்தால் அது நமக்காக நமது சொந்தகளுகாக நம்மை வெளிநாட்டில் நிம்மதியாக உழைக்க விட்டு அவர்கள் சையும் இந்த பொது சேவைக்கு நாம் சையும் ஒரு மரியாதை. மேலும் திறமையான வேலைகள் நடைபெற்று விருது பெரும் நோக்கில் போட்டிகள் கை சுத்தம் என்று எல்லாமே கிடைக்கும்.

அன்பு தலைவி அவர்களே! 18 வது வார்டு அன்பர் சாமி அவர்களின் கருத்துரைபடி அனுபவிமிக்கவராக தெரிவதால் அவரின் மற்ற ஏனைய நல்ல ஆக்கபூர்வமான செயல் திட்டங்களை செயல் பட ஆலோசனைக்கு பயன்படுத்துங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:நகர்மன்றத் தலைவர், உறுப்ப...
posted by Nainaysh (Chennai) [27 October 2011]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 12307

Salaams,

Its good to see Abida latha taking oath for D-PRESIDENT of United (Hoping soon) Kayal...

Best Wishes for The President and all the Members... Wish the people of Kayal for the Choosing the eligible person. Lets all be united and support Mrs.Abitha for her act for the welfare of kayal.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. காயல் களைகட்டுதுன்னு சொல்லுங்க...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா.) [27 October 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12315

நமதூரில், எதனையோ தேர்தல் வந்திருக்கு, யார்? யாரோ? ஜெயிச்சிருக்காங்க! பதவி(?) யும் வகிச்சிருக்காங்க! ஆனால், இது ஒரு வித்தியாசமா இருக்கில்லே? இதுதான் பின் வரும் மாற்றத்திற்கு முன் வரும் தோற்றமோ?

அப்ப, காயல் களைகட்டுதுன்னு சொல்லுங்க! உண்மையிலேயே சந்தோஷமா இருக்குங்க...!!! எல்லோரும் நல்லா இருக்கட்டும்...!!!

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:நகர்மன்றத் தலைவர், உறுப்ப...
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [27 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 12329

'''பதவிப்பிரமானத்தின்போது, “கடவுள் அறிய” என்ற வாசகத்தை நகர்மன்ற ஆணையர் முன்மொழிந்தபோது, பெரும்பாலான முஸ்லிம் உறுப்பினர்கள் “அல்லாஹ் அறிய” என்றும், “எல்லாம்வல்ல அல்லாஹ் அறிய” என்றும், “இறைவன் அறிய” என்றும் கூறினர்.' (Cut & பேஸ்ட்)

"இறைவன்" என்ற தமிழ் சொல் எப்படி அல்லாஹுவின் பெயரில்லையோ, அதுபோல "அல்லாஹ்" என்ற அரபு சொல் இறைவனுடைய பெயரல்ல. "அல்லாஹ்' என்றால் அரபு மொழியில் இறைவன் அல்லது கடவுள் என்றுதான் பொருள். அதை நாம் நம்முடைய தாய் மொழியில் "இறைவன்" என்றோ அல்லது "கடவுள்" என்றோ சொல்லுவதனால் எந்த ஒரு நன்மையையும் இழந்துவிடமாட்டோம். "அல்லாஹ்" என்று அரபியில் சொல்லுவதனால் "extra" நம்மைகள் கிடைக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை.

உருது மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் அல்லாஹ் என்று மட்டும் கூறுவதில்லை, பல நேரங்களில் "ஹுதா" என்ற வார்த்தையையும் உபயோகிக்கிறார்கள்.

அரபு மொழியை தாய் மொழியாக கொண்ட கிறிஸ்த்தவர்கள். ஈசா (அலை) நபியை அல்லாஹ்வென்றும் , அல்லாஹிவின் மகன் என்றும் நம்புவது மட்டுமல்ல அல்லாஹ் என்றே அரபியில் (தங்களது தாய் மொழியில்) அழைக்கிறார்கள்.
அவர்களின் அரபு பைபிளில் இறைவனை குறிப்பிடும்போதெல்லாம் "அல்லாஹ்" என்ற சொல்லையே பயன்படுத்த்தியுள்ளார்கள். காரணம் அவர்களின் தாய் மொழி அரபு மொழி என்பதால்.

அதைப்போல அரபு மொழியை தாய் மொழியாக கொண்ட யூதர்கள் ஹீப்ரு மொழியில் "YAHWEH" ( Jehovah in English) அல்லது "Elohim" ( Eli in Aramaic) என்று இறைவனை அழைப்பதில்லை மாறாக "அல்லாஹ்" என்றே தங்களுடைய (தாய் மொழியில்) அழைக்கிறார்கள். அவர்களுடைய வேதநூலில் - அரபு பைபிளில் (பழைய ஏற்பாடு) அல்லாஹ் என்றுதான் உள்ளது.

தமிழை தாய் மொழியாகக்கொண்ட நாம் "கடவுள்" என்றோ "இறைவன்" என்றோ சொல்லுவதனால் எந்த தவறும் கிடையாது.

சில இஸ்லாமிய அறிஞ்ஞர்கள் இது பற்றி தங்களுடைய கருத்துகளை சொல்லும்போது, தமிழில் "கடவுள்" என்ற வார்த்தைக்கு ஒருமை, பன்மை, ஆண்பால், பெண்பால் உள்ளது. அல்லாஹ் என்ற அரபு வார்த்தைக்கு இவைகள் எதுவும் இல்லை. என்ற வாதத்தை முன் வைக்கிறார்கள். இவர்களுடைய இந்த வாதம் சரியாக தென்பட்டாலும், இந்த வாதத்திற்கு மார்க்க அடிப்படையில் (கடவுள் அல்லது இறைவன் என்று கூறக் கூடாது மாறாக "அல்லாஹ்" என்றுதான் கூற வேண்டும்) எந்த ஆதாரத்தையும் (எனக்கு தெரிந்தவகையில்) இவர்கள் தரவில்லை.

"அல்லாஹ்" என்பவன் முஸ்லிம்களுடைய கடவுள் என்று முஸ்லிம் அல்லாதவர்கள் பெரும்பாலானோர் தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இதற்க்கு சில நேரங்களில் நாம் நம்முடைய செயல்பாடுகள் மூலம் தெரிந்தோ தெரியாமலோ காரணமாக இருக்கிறோம்.

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. முரன்பாடுள்ளவர்கள் ஆதாரத்துடன் (குர்-ஆன் and or ஹதீஸ்) மாற்றுக் கருத்தை தெரிவித்தால், ஏற்றுக்கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
காணவில்லை! (?!)  (27/10/2011) [Views - 4813; Comments - 30]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved