Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:01:32 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7453
#KOTW7453
Increase Font Size Decrease Font Size
சனி, அக்டோபர் 29, 2011
நகரில் மழை நீர் தேங்கிய பகுதிகளை நகர்மன்றத் தலைவர் பார்வையிட்டார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3956 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கடந்த சில நாட்களாக காயல்பட்டினம் நகரில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

மழை நீர் தேங்கிய பகுதிகளை, அந்தந்த பகுதி வார்டு உறுப்பினர்களின் துணையுடன் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஆபிதா 27.10.2011 அன்று காலை முதல் மாலை வரை பார்வையிட்டார். காட்சிகள் பின்வருமாறு:-

கொச்சியார் தெருவில்...


தேங்காய் பண்டகசாலை தெருவில்...


சுலைமான் நகர் (மாட்டுக்குளம்) பகுதியில்...


ஸீ-கஸ்டம்ஸ் சாலை எல்.கே.துவக்கப்பள்ளி வளாகம் அருகில்...




அப்பாபள்ளித் தெருவில்...


பரிமார் தெரு மீன் சந்தையில்...


பரிமார் தெருவில்...


அலியார் தெருவில்...


ரெட் ஸ்டார் சங்க பின்புறத்தில்...


கீழநெய்னார் தெருவில்...




சென்ற இடங்களில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த நகர்மன்றத் தலைவர், அவற்றை எழுதியெடுத்துக்கொண்டார். மழை நீர் வடிகால் திட்டத்தை இரண்டு வகைகளாகப் பிரித்து, உடனடியாக செய்யப்பட வேண்டிய பணிகளை விரைந்து முடிக்க ஆவன செய்வதாகவும், நகர கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு, துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாலோசனை செய்து, நீண்ட கால செயல்திட்டம் ஒன்றை வகுத்து, அதனடிப்படையில் நகரில் மழை நீர் வடிகாலுக்கு நிரந்தர தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அவர் பொதுமக்களிடம் தெரிவித்தார்.

நகர்மன்றத் தலைவருடன், நகர்மன்ற உறுப்பினர்களான கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, ஜஹாங்கீர், அந்தோணி, எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், ஹைரிய்யா, பத்ருல் ஹக், அபூபக்கர் அஜ்வாத் ஆகியோர் சென்றிருந்தனர்.

நகர்மன்ற சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜன், குடிநீர் குழாய் பொருத்துனர் (ஃபிட்டர்) நிஜார் ஆகியோர் உடனிருந்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நகரில் மழை நீர் தேங்கிய ப...
posted by Salai.S.L.Khaja Muhyideen (Dubai) [29 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12429

Dear Ms.Abitha,
Assalamu Alaikum.

Your visit is highly appreciated. In my opinion to find out the solution for the drainage and staging water for the permanent solution technically and commercially, immediatly you have to take action for the technical advisory board for these issues. B'cas you are new to these problems. So my sugession is kindly involve our native technical experienced engineers like Janab.P.H.M.Syed Ismail B.E.(Hons),
Janab.S.A.Mohideen (Director-ECCI),
Er.Sheik Abdul Cader (Appa palli St),
Er.Nawaz.
Janab.Land mark Abu Hasan kaka
like peoples are there to helpful for more supportive to upgrade the systems of our native and evaluate the goverment tenders.

Dear Admin,
Kindly forward this mail to Ms.Abitha-President for review.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நகரில் மழை நீர் தேங்கிய ப...
posted by Vilack SMA (Hetang) [29 October 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 12433

தலைவி , பதவி ஏத்ததுல இருந்து , ஊட்டுல " ஒருவேள " சோறு கூட உங்க முடியாம இப்புடி " பம்பரமா " சுத்துராங்கலேப்பா !

அப்புடியே குத்துக்கள் தெரு பக்கமும் கொஞ்சம் சுத்தி வாங்களேன். ரேஷன் கடை பக்கம் நிலைமை படு டேஞ்சரா போயிட்டிருக்கு . தண்ணியில " படகு போட்டி " நடத்த போறாங்களாம் . கொஞ்சம் சீக்கரமா போயி பாருங்கோ .!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re: Cheap publicity
posted by V D SADAK THAMBY (Guangzhou (China)) [29 October 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 12472

The people of Kayalpatnam expect a clever, sensitive, aggressive and vibrant president and not a president who come to the streets for cheap publicity.

This kind of cheap publicity will tarnish the president’s image and credibility. We need mere action than words.

So,I request the president to be more cautious to the bugs surrounded by her.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நகரில் மழை நீர் தேங்கிய ப...
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா.) [29 October 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12476

தலைவியின் இது போன்ற விசிட் மிகவும் அவசியமானது. பாதிக்கப் பட்டவர்களையும், பாதிக்கப்பட்ட இடங்களையும் நேரில் சென்று பார்வையிடும் போதுதான் பாதிப்பின் அழம் தெரியும்! படைத் தலைவனின் பண்பு படைக்கு முன் நிற்பது தானே?

மிகப் பெரிய அளவில் காயல்பட்டணத்திற்கு மாற்றங்கள் வராவிட்டாலும். ஓர் அளவிற்கு ஆபிதா அவர்களின் செயல் திறனால் காயலுக்கு நன்மை கிடைக்கும் என்பது உறுதி!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நகரில் மழை நீர் தேங்கிய ப...
posted by Meera sahib (kayalpatnam) [29 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12484

மழை காலத்தில் நமது மக்கள் படும் அவஸ்தையை பார்த்தீர்களா ? இது இவ்வளவு காலமாக தீர்க்க முடியாமல் இருக்கிறது ! எத்தனையோ தலைவர்கள் வந்தாயிற்று . வருடாவருடம் மழையும் வருகிறது . மக்கள் கஷ்டமும் தீர்ந்தபாடில்லை . இந்த தலைவியாவது தீர்த்து வைக்கிறர்களா பார்போம் .

இதற்கு பாதாள சாக்கடை திட்டம் ஒன்றே நிரந்தர தீர்வு ! தேங்கைபண்டகசலை பகுதியில் தண்ணீர் குளமாய் கட்டிகிடப்பதை பார்த்தார்களா? அங்கு சரியான ரோடு வசதி கூட செய்துதரவில்லை ! தலைவியின் மகத்தான பார்வைக்கு இது வருமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:நகரில் மழை நீர் தேங்கிய ப...
posted by Muthu Magdoom VSH (Kayalpatnam) [29 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 12489

செய்மாலி காக்கா,

நமது தலைவி ஒன்றும் ஊருக்கு புதுசு இல்லை. தினமும் பஞ்சாயத்துக்கு அந்த வழியாகத்தானே போய் வருவார். அப்போது கவனித்து இருப்பார். விரைவில் நடவடிக்கை எடுப்பார்.

ஒட்டு % படி நடவடிக்கை வருமோ என்னவோ?

வார்டு கவுன்சிலரை அணுகுங்கள். விரைந்து நடவடிக்கை எடுப்பார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நகரில் மழை நீர் தேங்கிய ப...
posted by zubair rahman (Qatar-Doha) [29 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 12495

இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் நம் நகரில் மற்றம் நிச்சயம் வரும் என்பதில், இதுபோன்ற சுறுசுறுப்பு ஒரு உதாரணம். தங்களின் பணி தொடர என் உளங்கனிந்த வாழ்த்தக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. பயனுள்ள நடவடிக்கை.
posted by Abdul Razzaq Lukman (Dubai) [29 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12496

அஸ்ஸலாமு அலைக்கும்.

நகரின் தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளுக்கு நகரமன்ற தலைவி, அந்தந்த நகரமன்ற உறுப்பினர்களுடன் சென்று குறைகளை கேட்பது வரவேற்கத்தக்க ஒன்று. அதன் மீது வெகு விரைவில் நடவடிக்கை எடுத்தால் நல்லது.

இது போன்ற நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டுமே தவிர தம்பி, V.D. சதக் தம்பி போன்று தவறான முறையில் விமர்சனம் கூடாது. உங்களுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவர்தான் நமக்கு(உனக்கும்) இன்னும் 5 வருடங்களுக்கு தலைவி என்பதை மறந்துவிட வேண்டாம்.

முடிந்தால் நல்ல, பயனுள்ள யோசனை ஊர் நலனுக்காக சொல்லவும். இல்லையென்றால் உன் விரலை தேவை இல்லாமல் துர்விமர்சங்கள் செய்ய பயன்படுத்த வேண்டாம். வேண்டாத மருமகள் கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்று குறை கண்டு பிடிக்க வேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:நகரில் மழை நீர் தேங்கிய ப...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [30 October 2011]
IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12503

அனைவருக்கும் அஸ்ஸலாமு அழைக்கும்.

அவதூறு சொல்பவர்களை அல்லாஹ் பார்த்துக்கொள்வான். ஊர் நன்மைக்கு நம்மால் முடிந்ததை நாம் செய்வோம். அல்லாஹ் நமக்கு வெற்றியைதர நாம் துவா செய்வோமாக.ஆமீன்.

சகோதரர் VD சதைக்கு தம்பி அவர்களே இது உங்களுடைய கருத்தில் இருந்து (Comment Reference Number: 11037) எடுக்கப்பட்டது தான் (copy/paste).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:நகரில் மழை நீர் தேங்கிய ப...
posted by mohd.ikram (saudi arbia) [30 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12504

இந்த கடும் மழையினால் பாதிக்க பட்டது நமது ஊரு மட்டும் அல்ல,மாறாக நம் தமிழ் நாட்டில் பல இடங்களில் இதே நிலை தான் உள்ளது.

மழை காலங்களில் " சிங்கார சென்னை " எப்படி தண்ணீரில் மிதக்கிறது என்று தினமும் செய்திகளில் பார்த்தலே புரியும். என்றும் பயன் அளிக்கும் நல்ல திட்டங்கள் கொண்டு வந்தால் தான், வரும் மழை காலங்களில் இந்த நிலைகள் வராமல் பாது காக்க முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. சரியாக சொன்னிங்க ரஜாக் காகா!!!
posted by Nilofar (kayal) [30 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 12518

ரஜாக் காக்கா நீங்க சொன்னனது மிகவும் சரியே. தயவு செய்து காகாமார்களே , உங்களுக்கு நேரம் போகலன்று எங்கயோ இருந்து கொண்டு இங்கு நடப்பது என்னனு தெரியாம ,யதும் எழுதலாம்னு எழுதாதிங்க .

நம் ஊருக்கு எதபண்ணின யன்ன நன்மைகிடைக்கும் , நம் ஊர்மக்கள் எல்லாவித பயனும் பெற யன்ன வழி இருக்கிறதுன்னு காயல் காக்காமார்க்கள் சிந்தித்து நம் ஊர்க்காக செயல்வடிவம் கொடுக்கலாமே .

அத விட்டுட்டு இன்னும் குறை இல்லாமலே எடுத்ததுக்கெல்லாம் குறை குறிக்கொண்டு இருந்தால் வேலைக்கு ஆகாது.

அதனால் தலைவராக நம் ஊருக்கு ஏதும் குறைசெய்து, ஊர் மக்களாகிய நமக்கும் அதனால் பயனில்லை என்றால் நாம் அனிவரும் குரல் கண்டிப்பாக கொடுப்போம்.இன்ஷா அல்லாஹ்! அப்டி ஒரு நிலைமை நம் ஊருக்கு வராதுஎன்பதுக்கு நாம் துஆ கேட்போம் .

தலைவர் சாப்பிட்டு ஊரை சுத்தி பார்த்தால் நமக்குயன்ன, சாபிடாமல் பார்த்தல் நமக்குயன்ன .அது அவங்க விருப்பம் . அவங்களோட சொந்த விசயத்தில் ,அடுத்தவங்க தலையிட யாருக்கு யன்ன உரிமை .

கேலியோ ,கிண்டலோ பண்றது நல்ல பண்பாளிக்கு உள்ள செயல் கிடையாது என்பதை அனைவரும் மனதில் கொண்டு ,இனி வரும் காலத்தில் நம் காயல் முன்மாதிரி காயலாக வருவதற்கு நாமும் நம் நகராட்சியோடு ஒத்துழைத்து பயன் அடைவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. நமது ஒத்துழைப்பு avasiyam
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [30 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12550

நகர் மன்ற தலைவி மற்றும் அநதந்த பகுதியின் புதிய உறுப்பினர்களின் அணுகுமுறை பாராட்டுக்குரியது. இதற்கு துரித நடவடிக்கை தேவை.

அவர்களின் நடவடிக்கை மட்டுமல்லாமல் பொது மக்களாகிய நாம் அனைவரும் அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும்.

ரோட்டை தோண்டி வேலை பார்த்தபின் முறையாக மூடாமல் ஏதோ நம் காரியம் முடிந்து விட்டது என விட்டுவிடுவிடாமல் முறையாக செய்வது,

வீடு கட்டும் நாம் ரோட்டில் போடும் கட்டிட கழிவுகளை முறையாக சுத்தம் செய்வது.

குப்பைகளை உரிய இடத்தில், அல்லது அதற்கான கழிவுகளை அகற்றும் வண்டிகள் வரும் போது அதில் கொட்டுவது,

எல்லாவற்றிகு மேலாக அணைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு வசதி செய்வது,

இது போன்ற இன்னும் எல்லா விசயங்களிலும் நாம் அவர்களோடு ஒத்துழைத்தால் நிச்சயம் மழை நேரமட்டுமல்லாமல் எல்லா நேரத்திலும் அவர்கள் சிறப்பாக செயல் படுவார்கள்.

ஒத்துழைப்போமா நாம்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
மும்தாஜ்தான் மிஸ்ஸிங்! (?!)  (30/10/2011) [Views - 5184; Comments - 16]
அக்.27 மழைக்காட்சிகள்!  (29/10/2011) [Views - 3591; Comments - 6]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved