Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:56:18 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7709
#KOTW7709
Increase Font Size Decrease Font Size
புதன், டிசம்பர் 14, 2011
தமிழக அரசின் விலைவாசி உயர்வைக் கண்டித்து, கொட்டும் மழையில் திமுக பொதுக்கூட்டம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3224 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் மற்றும் பால் விலை அண்மையில் அதிமுக அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழக காயல்பட்டினம் கிளை சார்பில் 13.12.2011 அன்று (நேற்று) இரவு 07.00 மணிக்கு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

திமுக நகர அவைத்தலைவர் ஜெ.எம்.கிதுரு முஹம்மது கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஐ.அப்துல் காதர், மாவட்ட பிரதிநிதி ஆ.பன்னீர் செல்வன், காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் டி.மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திமுக நகரச் செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் வரவேற்புரையாற்றினார்.



‘மெகா‘ என்ற பெயரில் மேடையைப் போட்டு, நால்வரை உட்கார வைத்து, அரசியல் கட்சிகளைக் குறை கூறி, இந்த அரசியல் கட்சிகள் என்ன செய்தன என்று கேட்கின்றனர்...

இன்று நாங்கள் ஆட்சியிலிருப்போம்... நாளை அதிமுக இருக்கும்... நாங்கள் மாறி மாறி பல விஷயங்களைச் செய்கிறோம்... அவற்றை வெறுமனே மேடை போட்டு விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது...?

ஒரு கம்ப்யூட்டரையும், ஒரு கேமராவையும் வைத்துக்கொண்டு, நீங்கள் நினைப்பதையெல்லாம் செய்தியாக எழுதி, நீங்களாகவே செட்டப் செய்து வெவ்வேறு பெயர்களில் கமெண்ட்டும் வெளியிடுகிறீர்களே...? நாங்கள் இதுபோல செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?

பொன்னன்குறிச்சி கூட்டுக் குடிநீர்த் திட்டம் விரைவில் வர இருக்கிறது... இதனை துவக்கத்திலிருந்தே கொண்டு வர முயற்சித்தது தி.மு.க. அரசுதான்...

மருத்துவர்களே நியமிக்கப்படாதிருந்த காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு டாக்டர் பாவநாசகுமார் என்ற எம்.டி. டாக்டரை கொண்டு வந்தது எங்கள் அரசுதான்...

அரசு மருத்துவமனை நலப்பணிகளுக்காக 10 லட்சம் ரூபாயை நாங்கள் பெற்றுக்கொடுத்துள்ளோம்...

இன்று நகரெங்கும் போடப்படும் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான சிமெண்ட் சாலைகளைப் போடச் செய்தது எங்கள் ஆட்சியில்தான்...

பத்திரப்பதிவு அலுவலகம் அமைய இடம் வாங்கிக் கொடுத்தது... துணை மின் நிலையத்தை காயல்பட்டினத்தில் அமைக்க அன்றைய அமைச்சர் கீதாஜீவன் மூலம் பல முயற்சிகள் மேற்கொண்டது அனைத்தும் நாங்கள்தான்...

பல ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஊர் கலவரத்தில் கைது செய்யப்பட்ட 116 பேரை, இரவோடு இரவாக விடுதலை செய்தது திமுக அரசுதான்...

இத்தனையையும் செய்த காரணத்தால்தான் துணைத்தலைவராக எங்கள் கட்சியைச் சார்ந்த மும்பை முகைதீன் தேர்வு செய்யப்பட்டார்... போட்டி போட்டவர்கள் பெற்ற ஓட்டுகளோ மிகவும் சொற்பமே...


இவ்வாறு அவர் உரையாற்றினார்.

அவரைத் தொடர்ந்து, பி.கே.டி.உமர், நகர்மன்ற உறுப்பினர் ஜமால், நகர முன்னாள் செயலாளர் எம்.என்.சொளுக்கு ஆகியோர், திமுகவின் சாதனைகளாகவும், எதிர்க்கட்சிகளின் தவறுகளாகவும் பல அம்சங்களை விளக்கிப் பேசியதோடு, உள்ளாட்சித் தேர்தலையொட்டி கட்சியின் நடவடிக்கைகளையும் விளக்கிப் பேசினர்.



“நான் தேர்தலில் போட்டியிட்டது என்னவோ சுயேட்சையாகத்தான்... ஆனால் இவன் திமுக காரன் என்றுதான் எங்கள் நெற்றியிலேயே ஒட்டியிருக்கிறதே...? அதனால்தான், என்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சொற்ப வாக்குகளைப் பெற்றிருக்க, நான் ஐநூறுக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளேன்...” என்றார் நகர்மன்ற உறுப்பினர் ஜமால்.

பின்னர், திமுக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமி உரையாற்றினார்.



கடந்த சட்டமன்றத் தேர்தலில் எப்படியேனும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக படாத பாடுபட்டோம்... எங்கள் சொந்தத் தொகுதியான தூத்துக்குடியிலேயே நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில்... ஏன், தமிழகம் முழுக்க வெற்றி வாய்ப்பு பறிபோன நிலையிலும், ஒட்டுமொத்தமாக திமுகவிற்கு வாக்களித்து, இந்த மாவட்டத்தின் மானத்தைக் காப்பாற்றியது இந்த காயல்பட்டினம் நகர மக்களே...

எனவே, யாரும் எதையும் சொல்லட்டும்! அதற்கெல்லாம் கவலைப்படத் தேவையில்லை... காயல்பட்டினம் என்றும் கலைஞர்பட்டினம்தான்! அப்படிப்பட்ட இந்த ஊர் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டுதான், நாங்கள் போட்டியிட நினைத்தும், கட்சி ரீதியாக காயல்பட்டினம் நகராட்சித் தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்தோம்...


இவ்வாறு அவர் உரையாற்றினார்.

பின்னர், திமுக தலைமைக்கழக பேச்சாளரும், தமிழக சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.பி.ராஜன் உரையாற்றினார்.



அதிமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரையிலான அதன் நடவடிக்கைகள், தேர்தல் பரப்புரையின்போது தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு நேர்மாறான செயல்பாடுகள் என பல அம்சங்களை அவர் விளக்கிப் பேசியதுடன், விலைவாசி உயர்வு குறித்து விரிவாகப் பேசினார்.

அதுவரை சாரலாகப் பெய்துகொண்டிருந்த மழை திடீரென கனமழையானது. இருந்தபோதிலும், மேடையிலிருந்தவர்கள் குடை பிடித்த நிலையிலும், கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் ஆங்காங்கே ஓரங்களில் நின்றிருந்த நிலையிலும் கூட்டம் தொடர்ந்தது.



இரவு 10.00 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், ஜெ.ஜெயக்குமார் ரூபன், சி.எஸ்.ராஜா, கல்யாண சுந்தரம், காதர் சாஹிப், ராஜ்மோகன், குழந்தைவேலு, ஏ.கதிரவன், முன்னா அகமது, ஹாஜி, தீன், முகம்மது முகைதீன், மொகுதூம், மரைக்கார், முகைதீன், அப்துல்லாஹ் சாகிப், குத்புத்தீன், மொகுதூம் நெய்னா மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.கே.முஹம்மத் முகைதீன், அஜ்வாத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:தமிழக அரசின் விலைவாசி உயர...
posted by siddiq (chennai) [14 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14526

அப்படியே கொஞ்சம் DCW பற்றி சிந்திக்கவும் போராடவும். அடுத்த கட்ட போராட்டம் DCW வை மூட சொல்லும் போராட்டமாக இருக்கட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:தமிழக அரசின் விலைவாசி உயர...
posted by PS ABDUL KADER (jeddah) [14 December 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14528

உறுப்பினர் ஜமால்க்கு கிடைத்த ஓட்டு எல்லாம் அ தி மு க காரர்களின் ஓட்டு, அவர் தி மு க வில் இருப்பது வார்டு மக்களுக்கு தெரியாது.

காயல் பட்டணத்தை .....அடுத்தவர் பெயர்க்கு ஒப்பாக கூரிவருவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:தமிழக அரசின் விலைவாசி உயர...
posted by M.N. Seyed Ahmed Buhari (Chennai(Mannady)) [14 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14532

ஒரு வெளிஊர் நண்பர் வந்து நமது ஊரை கலைஞர் பட்டணம் என்று சொல்ல தகுதியே இல்லை...

காயல்பட்டணம் என்றும் காயல்பட்டணம் தான்... ஒரு போதும் பெயரை மாற்ற வேண்டாம்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:வில்லங்கம்!..
posted by OMER ANAS (DOHA QATAR.) [14 December 2011]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 14533

ஆஹா கிளப்பி விட்டுடாங்கையா கிளப்பி விட்டுடாங்கையா! வில்லங்கம் தானா விலை குடுத்து வாங்கப்பட்டு இருக்குகிறது. இது அண்ணா திமுக எதிர்ப்பு (விலைவாசி ஏற்றம்)கூட்டமா? மெகா எதிர்ப்பு கூட்டமா? எது எப்படியோ ஜாம்பவான்களே, குறையாமல் வந்து விழும் வில்லங்க கருத்துக்கள்!

அது போட்டும், 2 கோடி ரோட்டை போட்டது சரி. அதில் நிறைய( முன்னால்)உறுப்பினர்கள் போட்ட ஆட்டை எவ்வளவு? அதையும் சொன்னால் நன்றாக இருந்து இருக்கும்!

ஐய்யா பெரியசாமி அவர்களே நாங்கள் ஜெயிக்க வைத்தது அனிதாவின் கையை. வேறு யாரை இங்கு நிறுத்திஇருந்தாலும் ஊ.........!!!.சங்குதானுங்கோ !!!

எங்கள் உண்மையான காயளர்கள் கட்ச்சிக்காக ஊரை நிச்சயம் அடமானம் வைக்க மாட்டானுங்கோ!!! அப்படி சொல்பவன் நிச்சயம்>>>>>>>>>>>>>???தானுங்கோ!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:தமிழக அரசின் விலைவாசி உயர...
posted by M.S.ABDULAZEEZ (G Z) [14 December 2011]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 14534

மேடையில் இருபவர்கள் குடையுடன் இருகிர்ரர்கள். திறந்தவெளியில் இருபவர்கள் குடை இல்லாமல் இருகிர்ரர்கள்???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:தமிழக அரசின் விலைவாசி உயர...
posted by Mohmed Younus (Trivandram) [14 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14536

ஒரு கம்ப்யூட்டரையும், ஒரு கேமராவையும் வைத்துக்கொண்டு, நீங்கள் நினைப்பதையெல்லாம் செய்தியாக எழுதி, நீங்களாகவே செட்டப் செய்து வெவ்வேறு பெயர்களில் கமெண்ட்டும் வெளியிடுகிறீர்களே...? நாங்கள் இதுபோல செய்ய எவ்வளவு நேரம் ஆகும்.... மு.ஜைனுதீன் அவர்கள் உரை... செய்யுங்கள்-நீங்கள் இதுபோல் செய்தவர்கள் தானே!.

அம்மா உங்கள் தலைவரை கைது செய்தபோது "ஐயா,அம்மா" என்று அலறி அடித்த குரல் உங்கள் தலைவரின் குரலா? செட்டப் செய்த குரல் அல்லவா?. புடவை மாற்றி பர்தா, பர்தா மாற்றி புடவை என்று கள்ள ஒட்டு போட்டது யார்?

இந்த கேமராவும், கம்ப்யுடரின் உதவி கொண்டு நீங்கள் மட்டும் கவிழவில்லை. டுநிசின் பென் அலி முதல் லிபியா கடாபி வரை..... முரசொலி மட்டும் படித்தால் போதாது. வெளிய வந்த கனிமொழி முதல் உள்ளே இருக்கும் ராஜாவரை கேட்டுபாருங்கள்.இந்த இரண்டின் மகத்துவம் புரியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:தமிழக அரசின் விலைவாசி உயர...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [14 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14537

ஆமாம்..அண்ணாச்சி அனிதா எங்கே....? அம்மாவின் கோபத்திற்கு பயந்து ஆப்சென்ட்டா?

பத்திரப்பதிவு அலுவலகம் அமைந்தது சென்ற அ. தி. மு க ஆட்ச்சியில்தான். தி.மு.க ஆட்சியில் என்று பொய் சொல்லக்கூடாது.



Moderator: தனிநபர் விமர்சனம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. விவாதம் தவிர்த்தல் நன்று
posted by Mauroof (Dubai) [14 December 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14541

விலைவாசி உயர்வை கண்டித்து நடத்தப்பட்ட இந்த திமுக கூட்டத்தில் எதை பேச வேண்டுமோ அதை விட்டு விட்டார்கள். திமுக ஆட்சியில் அதிமுக எதிர்ப்பு கூட்டமும் அதிமுக ஆட்சியில் திமுக எதிர்ப்பு கூட்டமும், காங்கிரஸ் ஆட்சியில் பிஜேபி எதிர்ப்பு கூட்டமும் பிஜேபி ஆட்சியில் காங்கிரஸ் எதிர்ப்பு கூட்டமும் இவை எல்லாமே அரசியல் விளையாட்டுக்களே தவிர மக்கள் நலனில் கொண்ட அக்கறையே காரணம் என்று யாரும் சொல்வதற்கில்லை.

இலவசம் என்ற உடன் முண்டி அடித்து அதனை பெற்று பிறரையும் பெறச்செய்து ஓட்டு போட்டு விட்டு அய்யகோ என்ன அநியாயம் இது இப்படி விலைகளை உயர்த்துகிறார்களே என்று கத்துவது என்ன நியாயம்.

போதுமான விழிப்புணர்வு, கல்வி அறிவு, மக்கள் நலனில் அக்கறை, படைத்தவனுக்கு மட்டுமே அஞ்சி நடக்கும் உள்ளம் கொண்ட நல்லவர்களை அடையாளம் கண்டு ஆட்சி அதிகாரங்களில் அமர வைத்தால் மட்டுமே ஒரு நல்ல மாற்றத்தை நம் இந்திய நாடு அடையும். அது வெகு சுலபத்தில் நடக்காது ஒரு மாபெரும் மக்கள் புரட்சி காணாமல்.

இந்த புரட்சி ஒவ்வொரு தாய் தந்தையிடமிருந்து தங்களது குழந்தைகளுக்கு ஊட்டப்பட வேண்டும். என்ன நடந்தால் நமக்கென்ன என்ற எண்ணம் ஒழிய வேண்டும் ஆனால் சிந்திக்காது மதி மயங்கி உசுப்பேற்றல்களுக்கு ஆளாகி போலிகளுக்கு பலியும் ஆகி விடக்கூடாது.

காயல்பட்டிணம் என்பதை கலைஞர் பட்டிணம் என்றோ அல்லது வேறு ஒரு பெயர் வைத்து அழைப்பதின் மூலமோ அதன் பெயர் மாறி விடாது. இவ்வாறு அழைப்பதெல்லாம் அவரவர் சார்ந்திருக்கும் கட்சியின் தலைமையை தலைக்கு மேல் வைத்து ஆடி சில அற்ப சொற்ப சுய அல்லது பொது லாபம் பெற அயராது உழைக்கும் சகோதரர்களின் வழிமுறை. இதை பெரிதுபடுத்துதல் சரி அன்று.

மேலும் "மெகா" என்ற அமைப்பின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளது தேவையற்றது. அவர்கள் ஒன்றும் அரசியல் கட்சிகளை சாடவில்லை என்றே எனக்கு நியாபகம் இருக்கிறது. "மெகா" இது குறித்து தனது விளக்கங்களை/விமர்சனங்களை தெரிவித்து நேரத்தை வீணடிக்கும் வேளையில் இறங்க வேண்டாம்.

சகோ. சித்தீக் தனது கருத்தில் சொன்னது போன்று DCW வின் நாசகார வேலைகளுக்கு மூடு விழா நடத்த இவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள், அது நமது சமுதாயத்தில் இருந்து துவங்க வேண்டும், அதுவும் ஆங்கில மோகத்தின் உச்சத்தில் இருந்து கொண்டு அவர்கள் நடத்தும் நிறுவனங்களில் பயிலும்/பணிபுரியும் நபர்களிடமிருந்து.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:தமிழக அரசின் விலைவாசி உயர...
posted by MOHAMMED LEBBAI MS (dxb) [14 December 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14543

இதுபோல பேசி,,, பேசி,,, காயலில் இருக்கின்ற DMK ஓட்டுக்களை நாசமாக்கிடாதிங்க சகோதர்களே,,,,, விலைவாசி வுயர்வை கண்டித்து பேச மேடை போட்டுட்டு,,, சம்பந்தம் இல்லாததை பேசுவானேன்,,,,

நாம நகராச்சி தலைவரைத்தான் ஊர் ஐக்கியபேரவை சார்பில் பொதுவேட்பாளரை நிறித்தினோம்,,, வார்டு உறுப்பினருக்கு இல்லைதானே????

அப்படி இருக்கும்போது ஜமால் அவர்கள் DMK சார்பாக நின்டிருக்க வேண்டியதுதானே??? யார் வேண்டாம் என்று சொன்னது???

மற்றபடி துணை நகராட்சி தலைவர் எப்படி வெற்றிபெற்றார் என்பது ஊருக்கே தெரியுமே........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:தமிழக அரசின் விலைவாசி உயர...
posted by saburudeen (dubai) [14 December 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14547

மெகாவிற்கு என்ன தகுதி இருக்கு என்று கேட்கிறிர்கள் இந்த விலைவாசி உயர காரணம் உங்களின் கடந்த கால ஆட்சியின் நிர்வாக சீர்கேடு தான் காரணம் என சொல்லும் அரசை எதிர்த்து பேச ஜனநாயக நாட்டில் உங்களுக்கு தகுதி இருக்கும் போது . நகராட்சி தலைவர் தேர்தலில் உண்மையான ஜனநாயகத்தை நிலை நாட்டி வென்று காட்டிய மெகா போன்ற அமைப்புகளுக்கு ஜனநாயக நாட்டில் உங்களின் தவறுகளை மேடை போட்டு சுட்டிக்காட்ட அணைத்து தகுதிகளும் உண்டு .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:தமிழக அரசின் விலைவாசி உயர...
posted by Salai. Mohamed Mohideen (USA) [14 December 2011]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 14558

தனக்கு தானே ஆப்பு வைத்து கொள்வதில் தீமுக-வுக்கு நிகர் தீமுக-வே தான் என்பது நகரச் செயலாளர் உரையிலிருந்து மிக தெளிவாக தெரிகிறது. தேவை இல்லாமால் வேலியில் போன ஓணானை.......விட்ட கதையாய், மேகாவை வம்புக்கு இழுத்து இருப்பது.

இன்று நாங்கள் ஆட்சியிலிருப்போம்... நாளை அதிமுக இருக்கும்... நாங்கள் மாறி மாறி "ஊழல்" செய்கிறோம்...செய்து கொண்டே இருப்போம் என்று சொன்னால் மிக சரியாக இருக்கும். இந்த மேடையில் இருக்கும் அல்லது வாய் கிழிய பேசுபவர்களில் எத்தனை பேர் கரை படியாத கைகளுக்கு சொந்தக்காரர்கள்?????

எதற்க்கோ மேடை போட்டு விட்டு "மெகா" வை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதனை முதலில் சொல்லுங்கள். "பொது ஜனத்திற்கு" நன்றாக தெரியும்...யார் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று.

"த்தனையையும் செய்த காரணத்தால்தான் துணைத்தலைவராக எங்கள் கட்சியைச் சார்ந்த மும்பை முகைதீன் தேர்வு செய்யப்பட்டார்... " -- சென்னை ஆண்டவரின் Blessings இல்லேனா ஜெயிச்சு இருப்பார்னு என்று நம்மால் உறுதியா சொல்ல முடியுமா???

"நான் தேர்தலில் போட்டியிட்டது என்னவோ சுயேட்சையாகத்தான்... ஆனால் இவன் திமுக காரன் என்றுதான் எங்கள் நெற்றியிலேயே ஒட்டியிருக்கிறதே...? " ---- ஊர் ஓற்றுமைக்காக நாங்கள் நகராட்சி மன்ற தேர்தலில் கட்சி சின்னத்தில் போட்டியிட வில்லை என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு திரியும் இவர்கள், மறுபக்கம் வெற்றி பெற்றவுடன் தங்கள் சுயருபத்தை (அதாவது கட்சிக்காரன்...அதற்க்காகத்தான் மக்கள் ஒட்டு போட்டு எதோ வெற்றி பெற்ற மாதிரி) காண்பிக்கிறார்கள். இதை ஒருவேளை தேர்தலுக்கு முன்னே இதை சொல்லி இருந்தால் டெபாசிட் இழந்து இருப்பார்கள். இந்தா பீலாவை மட்டும் வெட்டி பந்தாவை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு உங்க வார்டு மக்களுக்கு எதாவது நல்லது செய்யுங்களேன்...ப்ளீஸ்!

முதலில் இவர்களுக்கு தங்களுடைய கடமைக்கும் சாதனைக்கும் வித்தியாசமே இந்த அரசியல்வாதிகளுக்கு தெரிய வில்லை. MLA /MP மற்றும் தேர்ந்தெடுக்க பட்ட எவரும், மக்களுக்கு "கடமை" செய்வதற்காகத்தான் தேர்ந்தெடுக்க படுகிறார்கள். தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளை, எத்தனை காலம் 'எங்கள் சாதனை' என்று மக்களை ஏமாற்றி வருவீர்கள். சாதனை என்று சொல்லாதீர்கள். கடமை என்பதுதான் உண்மை. அதற்காகத்தான் அவர்கள் தேர்ந்தெடுக்க பட்டார்கள்...ஒவ்வொரு மாதமும் அதற்கான ஊதியம் பெறுகிறார்கள். ஒன்னும் ஓசியில் வேலை செய்ய வில்லை.

ஒருவேளை காலாகாலமாக தீர்த்து விட முடியாமல் இருக்கும் பிரச்சனைகளை தீர்த்து வைத்தால் அதனை சாதனை என்று சொல்லலாம். இவ்வளவு வாய் கிழிய பேசும் இவர்கள் நாசக்கார DCW விற்கு சாவு மணி அடித்து இருந்தால் அல்லது குறைந்தா பட்சம் முயற்சியாவது செய்து இருந்தால் சாதனை என்று சொல்லலாம். ஊரில் கேன்சர் என்று கொடிய நோய் பரவி கிடக்கிறதே. அதனை ஒழிக்க என்ன முயற்சி செய்தீர்கள். எங்கே காசு புழங்கு கிறதோ (அது எழவு வீடா இருந்தாலும்) அங்கேதானே நம்ப அரசியல் வாதிகள் இருக்கிறார்கள். எப்ப பாரு ரோடு போட்டோம், டிவி குடுத்தோம்னு தம்பட்டம் அடித்து கிட்டு.

ஐயே...எத்தனை முறைதான் காயல்பட்டினம் - கலைகர்பட்டினம் என்று கூவி கிட்டே இருப்பிங்க. ஒரு பயலும் கேட்க்க மாட்டேன்குறான். எத்தனை முறை திரும்ப திரும்ப உரைத்தாலும், காயல்பட்டினம் என்றும் காயல்பட்டினமே!! அதில் தான் ஊருக்கும் பெருமை...எங்களுக்கும் பெருமை. உங்கள் அரசியல் பொழப்பை மட்டும் பார்த்து கிட்டு போங்களேன்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:தமிழக அரசின் விலைவாசி உயர...
posted by Salai Nawas (Singapore) [15 December 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 14561

முரட்டு பக்தா தூத்துகுடிய வேண்டும் என்றால் கலைஞர்குடி என்று மாற்றி வையுங்கள். இங்கே வந்து பேசுவதால் பிரயோசனபடாது. இங்கே விழுந்த ஓட்டுக்கள் யாவும் அனிதாவுக்கு விழுந்த ஓட்டுகள் தான் கலைஞர்க்கு அல்ல என்பதை தெளிவு படுத்துங்கள்.

இப்படி பேசி பேசியே காலங்கலமாக முஸ்லிம் மக்களுக்கு தொப்பிய போட்டது போதும். இவர்களை இனியும் நம்பும் நம் சமூகதார்களை நினைத்தால் கவலைதான் மிஞ்சுது.

இவ்வளவு விலை ஏற்றத்திற்கு காரணம் அய்யா குடும்பம் அரசாங்கத்திற்கே போட்ட பெரிய குல்லான்னு தெரியுமா? ஆட்சியா நடந்திச்சு? தமிழகத்தின் சாபகேடு

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:தமிழக அரசின் விலைவாசி உயர...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [15 December 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14576

கொடுத்த வேலையை ஒழுங்கா செய்யுங்க சகோதரர்களே... எதற்க்கு கூட்டம் போட்டோமோ அதை ஒழுங்கா செய்யுங்க...

விலைவாசி உயர்வை கண்டித்து கூட்டம் போட்டதால் விலைவாசி குறைந்து விட்டதா...

நீங்கள் இன்னும் இருப்பதாக காட்டிக்கொள்ளவே இது மாதிரியான கூட்டங்கள் நடத்துகிறீர்கள்.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் சகோ. ஜைனுதீன் அவர்களே. MEGA வில் இருப்பவர்களும், அதற்க்கு ஆதரவு கொடுப்பவர்களும் பல கட்சிகளுடைய அனுதாபிகள் தான். குறிப்பாக உங்கள் கட்சிக்காரர்களும் அதிகம்.

ஊரில் இருக்கும் கொஞ்ச ஒற்றுமையும் கெடுத்து விடாதீர்கள். தாங்கள் நகராட்சி மன்ற தேர்தல் சமயம், மேடையில் உளறியதை இன்னும் மக்கள் மறக்கவில்லை..
_________________________________________________
நமது ஐக்கியப் பேரவையின் இந்த அணியில் ஒற்றுமை உள்ளது, ஒருமைப்பாடு உள்ளது. எதிரணியை ஒரு சில கொள்கை குதர்க்கவாதிகள்தான் வழிநடத்தி வருகின்றனர். அவர்கள் மாற்று வேட்பாளருக்கு தவறான வழிகாட்டிக் கொண்டிருக்கின்றனர். நமதூர் வெப்சைட்டில் பல பொய்யான, அசிங்கமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை நான் அடையாளம் காட்டுவேன். அவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள் என்பது பற்றி என்னால் பல விஷயங்களை தெரிவிக்க முடியும்...
______________________________________________
தாங்கள் கூறியதுதான் இது.. கொள்கை குதர்க்கவாதிகள், பொய்யர்கள், அசிங்கமானவர்கள் என்ற வாதங்களை எல்லாம் மறக்க சொல்லுகிறீர்களா?

இங்கு கருத்து பதிவு செய்த அனைவர்களும் மிகவும் அருமையாக கருத்தை கூறியுள்ளார்கள். அனைவர்களுக்கும் நன்றிகள்.

குறிப்பாக சகோதரர்கள் . மஹ்ரூப், சாளை முஹம்மது முஹைதீன், முஹம்மது யூனுஸ் ஆகியோருக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

கடமைக்கும், சேவைக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

" சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான சிமெண்ட் சாலைகளைப் போட்டதாக கூறுகிறீர்களே " உண்மைதான்.

இந்த சிமெண்ட் சாலை போட ஒப்பந்தம் எடுத்த தூத்துக்குடி நிறுவனம் எது, யாருடைய பினாமி போன்ற விவரங்கள் எல்லாம் தெரியாமல் இல்லை.

ஒழுங்காக மக்களுக்கு நல்ல சேவைகள் புரிந்து, மக்களிடம் நன் மதிப்பை பெற்று, மீண்டும் தி.மு.க வை வலுவான் கட்சியாக ஆக்கும் முயற்சியை எடுங்க, காக்கா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:தமிழக அரசின் விலைவாசி உயர...
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [15 December 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14581

நாம என்னதான் சொன்னாலும் அது அது மேல மழை பேஞ்ச கதையா தான் ( கரெக்ட்டா மழையும் பேஞ்சிருக்கு....) சகோதரர் பேசிய இந்த வசனம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு " இன்று நாங்கள் ஆட்சியிலிருப்போம்... நாளை அதிமுக இருக்கும்... நாங்கள் மாறி மாறி பல விஷயங்களைச் செய்கிறோம்... " இதை நீங்க தஞ்சாவூர் கல்வெட்டுல பதிச்சு வச்சா வருங்கால சந்ததியினருக்கு ரொம்ப உதவியா இருக்கும் . நான் தெரியாமத்தான் கேட்கின்றேன் உங்க கட்சி நல்லது தானே பண்ணுறீங்க அப்படின்னா உங்க கட்சி மட்டும் தானே ஆட்சில இருக்கணும் அப்புறம் ஏன் மாறி மாறி ஆட்சிக்கு வரீங்க...

சுயேட்சையா நின்னு ஜெயிச்சவரையே திமுக அமோக வெற்றின்னு போஸ்டர் அடிக்க உங்களுக்கு தகுதி இருக்கும் பொழுது ..எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் மக்கள் நலனில் மட்டும் அக்கறை கொண்டு சுயேட்சையாக நின்று செயல்படும் மெகாவிற்கு என்ன தகுதி இல்லை ... அதை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது ...?

பேச வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசாதீர்கள் ..... பல்லாயிர முஸ்லிம்கள் ,ஆலிம்கள் வாழ்ந்த.. வாழுகின்ற இந்த புனிதமான ஊரை ஒரு கடவுள் கொள்கையே இல்லாதவரோடு ஒப்பிட்டு கூற உங்களுக்கு நா கூசவில்லை ...???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரில் இதமழை!  (13/12/2011) [Views - 3458; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsAKM Jewellers
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved