Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:06:54 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7896
#KOTW7896
Increase Font Size Decrease Font Size
புதன், ஐனவரி 25, 2012
முட்டினால் மோட்சம்தான்! (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3859 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் பேருந்து நிலையம் அமைப்புப் பணிகள் நிறைவுற்று முறைப்படி துவக்கப்பட்ட பின்னரும், பெரும்பாலான பேருந்துகளின் ஓட்டுனர்கள் பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல், மகாத்மா காந்தி ஞாபகார்த்த வளைவின் வழியாக பேருந்துகளை ஓட்டிச் செல்வது வழமையாக இருந்துவந்தது. இதனால், பேருந்துகளை எதிர்பார்த்து பேருந்து நிலையத்திற்குள் காத்திருந்த பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

இதனையடுத்து சில மாதங்களில், மகாத்மா காந்தி வளைவின் நடுவில் பெரிய இரும்பு உருளையைக் கிடத்தி, பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் செல்ல வழிவகை செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக இந்நடைமுறையே வழமையில் உள்ளது.





ஆனால், கிடைக்கும் இடைவெளியைப் பயன்படுத்தி, ‘திறமை‘யுள்ள சில பேருந்து ஓட்டுனர்கள் மீண்டும் மகாத்மா காந்தி வளைவு வழியாகவே தமது வாகனங்களை இயக்கி வருவதாக அறியப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, தற்காலங்களில் தினமும் குறைந்தபட்சம் 5 மணி நேரம் மின் தடை செய்யப்பட்டு வருகிறது. இரவு நேரங்களிலும் மின்தடை செய்யப்படுவது வழமையாக உள்ளது. மகாத்மா காந்தி வளைவிற்கிடையில் கிடத்தப்பட்டுள்ள இரும்பு உருளையில் சாலை பாதுகாப்புக் குறியீடுகள் எதுவும் இல்லாத காரணத்தால், அவ்வழியே அடிக்கடி வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் இரும்பு உருளை அவ்விடத்தில் இருப்பதை உணர்ந்து ஓட்டிச் செல்கின்றனர். ஆனால், புதிதாக அவ்வழியே இருசக்கர - நாற்சக்கர வாகனங்களை ஓட்டி வருபவர்கள், குறிப்பாக மின் தடை நேரங்களில் மிகவும் அருகில் வந்த பின்னரே அங்கு இரும்பு உருளை இருப்பதை உணர்ந்து அதிர்ச்சியுடன் தமது வாகனங்களை இடைவெளி வழியே ஓட்டிச் செல்கின்றனர். இதன் காரணமாக பெரும் விபத்துக்கள் ஏற்படுமென அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சதக்கத்துல்லாஹ், “பேருந்து நிலையம் என்று ஒன்று இருந்தால் அங்கே பேருந்துகள் உட்சென்றுதான் வரவேண்டும் என அதிகாரிகள் ஓட்டுனர்களுக்கு உத்தரவிட்டு, அதைக் கண்காணிக்க வேண்டுமேயல்லாது, இதுபோன்று ஆங்காங்கே தடைகளை நிறுவுவது அவர்களின் கையாலாகத்தனத்தையே காண்பிக்கிறது...

அதுமட்டுமின்றி, மகாத்மா காந்தி வளைவிற்கிடையில் இரும்பு உருளை கிடத்தப்பட்டுள்ளதால், பேருந்துகளைப் போல பெரிய சரக்குந்துகள் பலவும் பேருந்து நிலையத்திற்குள் சென்று வருவதால், பேருந்து நிலைய வளாகத்திலுள்ள சாலைகளின் தரம் திட்டமிடப்பட்ட ஆயுட்காலத்திற்கு முன்பாகவே குறைய வாய்ப்புள்ளது... அதிகாரிகள் இது விஷயத்தில் கவனம் செலுத்தி, எந்த தடையுமின்றியே பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லவும், இதர கனரக வாகனங்கள் மகாத்மா காந்தி வளைவு வழியாக – பேருந்து நிலையத்திற்குள் வராமலேயே செல்லவும் வழிவகை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்! தற்போதைக்கு, அந்த உருயின் மீது பிரதிபலிக்கும் (reflector) ஸ்டிக்கர் எதையேனும் ஒட்டி, குறைந்தபட்சம் வாகன ஓட்டிகளுக்கு உணர்த்தலாம்...” என்றார்.

“பேருந்து நிலையத்திற்குள் செல்லும் மேற்புற நுழைவாயில் பெரிய கோட்டைச் சுவருடன் காணப்படுவதால், உள்ளிருந்து வெளியே வரும் வாகனங்களை, சாலை வழியே வருவோர் உணர முடிவதில்லை...





எனவே, அக்கோட்டைச் சுவர்களை அகற்றி, கம்பி வளை போன்று எதையேனும் நிறுவி, உட்புறத்திலுள்ள வாகனங்கள் வருவதை வெளியிலிருந்தே பார்க்க வழிவகை செய்ய வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

தகவல்:
A.T.ரியாஸ்தீன்,
பிரதான வீதி, காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:முட்டினால் மோட்சம்தான்! (...
posted by s.e.m. abdul cader (bahrain) [25 January 2012]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 16201

exactly right point to be noted by mrs.abditha shaik. please take this point into your profile. i have strong believe that you are the right person who come over this needy as well as urgent problem. if we do pity on others ALMIGHTY ALLAH do mercy on us as well as this world and other world.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ப்ரீ! FREE !.
posted by OMER ANAS (DOHA QATAR.) [25 January 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 16205

அல்வா குடுக்கிறதில திருநெல்வேலி காரங்கதான் ஃபேமஸ் என்றால் அரசு பஸ் காரன்கள் அதைவிட ஃபேமஸ்! மாற்றுவழி?

-----------------1

உள்ளே வந்தால் நடத்துனருக்கும்,ஓட்டுனருக்கும் டீ,காபி,free !

மாற்றுவழி?

-----------------2

காலை என்றால்,இட்லி தோசை free !

மாற்றுவழி?

----------------3

மதியம் என்றால், வடை பாயாசத்தோட சாப்பாடு free ! மாற்றுவழி?

----------------4

சாயங்காலம் என்றால், பரோட்டா குருமா free !

எங்கப்பா இருக்கிறீங்கள் ஜியாவுதீனும், ராபியா மணாளனும், விளக்கு S M A வும்? இல்ல குடாககும், சீனாசும், தமிழர் முத்து இஸ்மாயீலும்? அல்லது நம்ம கவிமகனாவது ஐடியா சொல்லுங்கப்பா!!! ரொம்பத்தான் குடைச்சல் குடுக்கிறார் தம்பி S K !!! டீசல் மிச்சம் பிடிக்காம வந்து கருத்தை சொல்லுங்க!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:முட்டினால் மோட்சம்தான்! (...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [25 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16210

செய்தியாளரின் கருத்து உண்மைதான். ஆத்தூரில் இப்படித்தான் ஒரு பேருந்து நிலையம் வீணாய் போய்விட்டது. பேருந்து நிலைய சாலைகளும் மிக மோசமாய் இருக்கின்றன. ஆனால் செய்தியாளர் சொல்வது போல எல்லா நேரமும் இது போன்று போகவில்லை இரவு நேரங்களில் மட்டும் சில பேருந்துகள் இது போன்று முறைகேடாக போகின்றன.

பேருந்து அல்லாத கனரக வாகனங்களை பொருத்தமட்டில் செய்தியாளர் சொல்வது உண்மைதான், அரசு இதில் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:முட்டினால் மோட்சம்தான்! (...
posted by S.A.Muhammad Ali (Velli) (Kayalpatnam) [25 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16214

இரவு நேரத்தில் பெரும்பாலான பேருந்துகள் ஊருக்குள்ளே வருவதே இல்லை. அப்புறம் எங்கே பேருந்து நிலையத்திற்குள் வருவது. கண்டிப்பாக இந்த தடுப்பு அவசியமான ஒன்று தான். நீங்கள் கூறியது போல் அதற்கு அடையாள குறி வைப்பது தான் சரியான யோசனை. கனரக பேருந்துகள் உள்ளே செல்வதால் பேருந்து நிலையம் பாதிக்க படும் என்றாலும் கூட அதை விட பெரிய பாதிப்பு பேருந்து நிலையத்திற்குள் வராமல் செல்லும் பேருந்துகளே.

Go Slow at Mahatma Gandhi remembrance Go Fast to Meet Mahatma Gandhi.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:முட்டினால் மோட்சம்தான்! (...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [25 January 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16215

முட்டி மோதி மோட்சம் போனாலும், விடிவு காலம் வருமா!!. தெரியவில்லை.

பைக், ஆட்டோ காரர்களாவது உருளையை கடக்கும் போதாவது அவரவர் சைடில் செல்லுகிறார்களா என்றால் அதுவும் இல்லை.

ஒழுங்காக லெப்டில் செல்லுறவன், மகாத்மா காந்தி ஆர்ச்சு வந்தவுடன், சட் என்று உருளையின் ரைட் சைடில் ஒடித்து செல்லுகிறான். கேட்டால் காந்தி "ஆல்வேய்ஸ் கோ ஆன் ரைட் பாத்" (Always go on right path) என்று சொன்னாராம்.

சில மாதங்களுக்கு முன்பு திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரி துணை முதல்வர் அவர்கள், குடும்பத்துடன் என் வீட்டிற்க்கு வந்தார்கள். நானும் போன் மூலம் இப்படி வாருங்க, அப்படி வாருங்கள் என்று சொல்லிக்கொண்டு, இரத்தினாபுரியை தாண்டி வந்துவிட்டார்கள்.

LF ரோட்டு வீடுகளை பார்த்ததும், மீண்டும் போன் பண்ணினார்கள். நான் மகாத்மா காந்தி ஆர்ச் வரும், அதை தாண்டி வாருங்கள் என்றதும், இரு.. இரு டிரைவரிடம் விபரம் சொல்லு என்று போன் கை மாறியதும், அவரிடம் விபரம் சொல்லவும், காந்தி வளைவு வரவும், அவரும் இருட்டில் மகாத்மா காந்தி வளைவு தானா என்று மேலே பார்க்கவும், கருத்த உருளையை பார்க்க தவறவும், சடார் என்று சுதாகரித்து வண்டியை ஒரு ஓடி ஒடிக்கவும், நல்ல வேலையாக பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு, வண்டியின் பின்பக்கம் மட்டும் உருளையை முத்தம் கொடுத்து விட்டது.

ஒரு சிகப்பு பிரதிபலிப்பு ஸ்டிக்கர் ஒட்டி இருந்தாலும் கொஞ்சம் உசாராகி இருப்பார்கள். இது மாதிரி ஏத்தனை சம்பவங்களோ.

_______________________________________

சரி, காந்தி சிலைக்கு மேலே ஏன் காக்கைகள் கக்கா போவது இல்லை தெரியுமா?

ஏன் என்றால் காந்தி கையில் கம்பு இருக்கின்றது.. என்னது இது பழைய கடியா..

ஆனால், இப்போது உள்ள காக்கைகள் மிகவும் உசாரு. கம்பு இருந்தாலும் அது பயம் இல்லாமல், தலையில் உட்கார்ந்து கக்கா போட்டு விடுகிறது. அதற்க்கு தெரியும், மகாத்மா காந்தி அவர்கள் அகிம்சாவாதி, எந்த உயிரையும் துன்புறுத்த மாட்டார், நம்மையும் அடிக்க மாட்டார் என்று.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:முட்டினால் மோட்சம்தான்! (...
posted by Vilack SMA (kayalpatnam) [26 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 16216

காங்கிரஸ் சதக்கதுல்லா அவர்கள் சொன்னதுபோல , பேரூந்து நிலையம் என்று ஒன்று இருந்தால் , பேரூந்துகள் கண்டிப்பாக அதன் உள்ளே வந்துதான் செல்லவேண்டும் . மேலும் , செய்தியில் சொல்லப்பட்டதுபோல , " உருளை " யால் , கனரக , சரக்கு வாகனங்கள் அனைத்தும் பேரூந்து நிலையம் உள்ளே சென்று வருவதால் , அதன் சாலைகள் பழுதடைந்து விடும் , இதுவும் சரியே .

ஆக , " உருளை " வேண்டும் என்பவர்களின் வாதமும் , வேண்டாம் என்பவர்களின் வாதமும் சரியாகவே இருக்கிறது .

OMAR ANAS காக்கா , நீங்க சொன்ன Free items , இங்கே சாத்தியமே இல்லை .

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. கிடைக்கிற கேப்பிலே.... கேம் கொடுப்பவர்கள்.
posted by s.s.md meerasahib (zubair) (riyadh) [26 January 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16223

அன்பு நண்பர்களே..... கிடைக்கிற கேப்பிலே.... கேம் கொடுக்கும் பஸ் டிரைவர்களை சட்டப்படி நடவடிக்கை எடுக்கணும். இந்த கேப்புல எப்படிப்பா பஸ்ஸை ஓட்டுறானுவோ...... கில்லாடி டிரைவர்கள். காந்தி ஆர்ச்வழியா போனா அது காந்தி கணக்குளோ.... ?

மேலும் இப்படி செல்லாமல் இருக்க ரிஃப்லக்ட்டர் ஒட்டிய இரண்டு உருளையை வலது, இடது பக்கம் போட்டு நடுவில் ஆட்டோ போக மட்டும் கேப் விட்டால் நன்றாக இருக்கும். கனரக வாகனம்களும் நிர்பந்தத்தின் அடிப்படையில் பஸ் ஸ்டாண்டுக்குள் போகுவது இந்த சூழ்நிலையில் தவிக்க முடியாத ஒன்று. இல்லை என்றால் கனரக வாகனம்களுடன் பஸ் டிரைவர்களும்.... பழைய குருடி கதவை திறடி என்ற கதையில் ஒன்னுக்குள் ஒன்னு நம்ம கண்ணுக்குள் மண்ணை போட்டு விடுவார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:முட்டினால் மோட்சம்தான்! (...
posted by hasbullah mackie (dubai) [26 January 2012]
IP: 65.*.*.* Anonymous Proxy | Comment Reference Number: 16225

காணாமல் போகும் காயல் பஸ் ஸ்டாண்ட்
....................

usc கோட்டை முடிந்து L.F. ரோடு TURNING இல் அந்த உருளையை விட்டிருந்தால் எல்லா பஸ்சும் புதிய பஸ் ஸ்டாண்ட் வழியே தான் வெளியே போகும் என்பது எனது அபிப்பிராயம் .........

அதற்க்கு முன் புதிய பஸ் ஸ்டாண்ட் இல் ரோடின் தரம் ஒரு மழை பெய்து விட்டால் PAPER மிதக்குமோ இல்லையோ பஸ் மிதந்தே செல்லும். என்றாலும் அதுவும் ஒரு புதிய அனுபவம் தானே..

மின் விளக்குகள் , தேவையான வெளிச்சம் இல்லை ...... நகர்ச்சி நிர்வாகம் இது போன்ற விஷயங்களில் முழு முயற்சி எடுத்து பயணிகளுக்கு சிரமமில்லாத சூழ்நிலையை உருவாக வேண்டும்.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved