Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:55:08 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8277
#KOTW8277
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஏப்ரல் 8, 2012
தன்னிறைவு திட்டம் மூலம் காயல்பட்டினம் நூலகத்தை விரிவாக்க ஆர்வலர்கள் உதவிட வேண்டுகோள்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2653 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழக அரசின் தன்னிறைவு திட்டம் (SELF SUFFICIENCY SCHEME) மூலம் காயல்பட்டினத்தில் அமைந்துள்ள மாவட்ட நூலகத்தினை விரிவாக்க அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்காக ஆர்வலர்களின் உதவியினை - நூலக வாசகர் வட்ட தலைவர் டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் கோரியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-



காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் மாவட்ட நூலகம் இயங்கி வருகிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிப்புகளுக்குத் தேவையான தகவல்களடங்கிய நூல்கள் உட்பட பல அரிய நூல்களைக் கொண்டுள்ள இந்நூலகத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக - புத்தகங்களை பார்வைக்கு வைக்க போதிய இட வசதி இல்லை. மேலும் பெண்களும் இந்நூலகத்தை பாதுகாப்பான முறையில் பயன்படுத்த போதிய இடவசதி இல்லை.

இக்கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு, விரிவாக்கம் செய்யப்படவேண்டிய அவசியம் உள்ளது என இந்நூலகத்தைப் பயன்படுத்தும் பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இது போன்ற - பொதுமக்களுக்கு பயன்தரக்கூடிய பணிகளுக்கு - அரசின் தன்னிறைவு திட்டம் (SELF SUFFICIENCY SCHEME) மூலம் உதவி பெற அனுமதி உள்ளது. தன்னிறைவு திட்டத்தின் விதிகள் படி - திட்ட மதிப்பீட்டில், பொது மக்கள் மூன்றில் ஒரு பங்கு வழங்கினால், தமிழக அரசு இரண்டு பங்கு வழங்கும். ஆனால் கட்டிடப் பணியை அரசு ஒப்பந்தக்காரர்களே செய்வர். ஆனால், 50% பொதுமக்கள் செலுத்தினால் கட்டிடப் பணியை - ஆர்வலரே தரமான முறையில் கட்டலாம் என்பது விதிமுறை.

இதனைக் கருத்திற்கொண்டு நகர்மன்றத் தலைவரும், நூலக வாசகர் வட்டத்தின் புரவலர்களில் ஒருவருமான ஐ.ஆபிதா - நூலக விரிவாக்கம் குறித்து நகரில் உள்ள சில சமூக ஆர்வலர்களிடம் எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து 14 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கத் திட்டம் வடிவமைக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் 50 சதவீத பங்கு பொதுமக்கள் வழங்குவர் என்றும், மீதி பங்கினை அரசு தன்னிறைவு திட்டம் மூலம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 50 சதவீத பங்குத் தொகையை சமூக ஆர்வலர்கள் வழங்குவதால் - இப்பணிகள், பங்களிக்கும் சமூக ஆர்வலர்கள் மூலமே மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்திற்கான ஒப்புதல் சில நாட்களுக்கு முன்னர் அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் மாணவ/மாணவியர் சமுதாயத்தின் அறிவு பெட்டகமான காயல்பட்டின நூலகத்தை விரிவாக்க, ஆர்வலர்கள் - பொதுமக்களின் பங்களிப்பான 7 லட்ச ரூபாயில் - தங்கள் பங்கினை வழங்க கேட்டுகொள்கிறோம்.

அரசு விதிகளின் படி, உதவி செய்யும் ஆர்வலர்களின் பெயர்கள் நூலக கட்டிடத்தில் அறிவிப்பு பலகையில் பதிவு செய்யலாம். எதிர்வரும் காலங்களில் விரிவாக்கப்படும் நூலகத்தை பயன்படுத்தும் அனைவரும் இப்பணிக்கு உதவிபுரிந்த அனைத்து ஆர்வலர்களுக்கும் - நூலகம் பயன்தரும் காலங்கள் வரை - பிரார்த்தனை செய்வர்.

ஆகவே நகர ஆர்வலர்கள் இத்திட்டத்தில் இணைந்து தங்கள் பங்கினை நல்கிடும்படி கேட்டுக்கொள்கிறேன். இது குறித்து மேலதிக விபரங்களைப் பெற தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி / தொலைபேசி எண் / மின்னஞ்சல் முகவரி :

டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர்
+91 99650 14744
noolagamproject@gmail.com


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:தன்னிறைவு திட்டம் மூலம் க...
posted by mackie noohuthambi (colombo) [08 April 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 18123

முதன்முதலாக நூலகம் அமைந்துள்ள இடம் மாற்றப்பட வேண்டும். மக்கள் சஞ்சாரமில்லாத அல்லது மக்கள் கூட்டம் இல்லாத இடத்தில நூலகம் அமைந்துள்ளது, முன்பு மெயின் ரோட்டில் இருந்தது. எல்லோரும் உள்ளே போய் படிக்க வாய்ப்பு இருந்தது. மாணவர்கள், தொழில் செய்பவர்கள் பேருந்துக்காக காத்து நிற்பவர்கள், மற்றவர்களை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் எல்லோருமே அந்த நூலகத்தை பயன்படுத்தினார்கள்.

மக்கள் தருகின்ற புத்தகங்களை நன்கொடையாக ஏற்றுக்கொள்வதற்கு அரசு ஆணையை எதிர்பார்த்திருக்ககூடாது. தனியார் நூலகங்கள் இயங்குவதுபோல் சுயாட்சி உள்ளதாக இருக்க வேண்டும். நூலகர் மட்டும் அரசு தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவும் உள்ளூர் வாசிகள், நூலகத்தை நடத்தும் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும். கூடியவரை மாற்றுதிரனாளிகளுக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

சம்பதப்பட்டவர்கள் அல்லது நாமாது நகராட்சி தலைவர் மேலே சொன்ன கோரிக்கைகள் சரியாக தெரிந்தால் அவற்றை அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனபது எனது தாழ்மையான கருத்து

மக்கி நூஹுதம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஐ.ஆபிதா அவர்களை அழைக்காமல் நூலக வாசகர் வட்டம் விழா நடத்தியது வேதனைக்குரியது..!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல்) [09 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18137

சமீபத்தில் ஒரு தனியார் ஆங்கில பள்ளி கூடத்தில் நூலக வாசகர் வட்டம் நடத்திய விழாவில் நூலக வாசகர் வட்ட நிறுவனரின் மகளும், நகர்மன்றத் தலைவரும், நூலக வாசகர் வட்டத்தின் புரவலர்களில் ஒருவருமான ஐ.ஆபிதா அவர்களை அழைக்காமல் நூலக வாசகர் வட்டம் விழா நடத்தியது வேதனைக்குரியது..!

சமீபத்தில் நடத்திய நூலக வாசகர் வட்ட விழாவில் தான் புறக்களிக்க பட்டதை வேதனை அனைத்தையும் மறந்து நூலக விரிவாக்கம் குறித்து நகரில் உள்ள சில சமூக ஆர்வலர்களிடம் எடுத்துரைக்கிறார் என்பது அவரின் பெருந்தன்மையை எடுத்துகாட்டுகிறது..

நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் மற்றும் துணை தலைவர் இதை நன்கு உணர வேண்டும்...

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. முன் வாருங்கள் ... முன்னேற்றலாம்...முன்னேறலாம்.
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். ஹிஜாஸ் மைந்தன். (காயல்பட்டணம்.) [09 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18144

அரசுப் பொது நூலகத்தின் நூலகர் சகோதரர்-முஜீப் அவர்கள் தம்மால் இயன்ற அளவு நூலகத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வருகின்றார். மாற்றுத்திறனாளியான அவர் தம் உடல் உறுப்பில் ஏற்பட்ட குறைகளையும் பொருப்படுத்தாமல் திறம்பட செயல்பட்டு பல புதிய புரவலர்களைச் சேர்த்து நூலகத்தின் செயல்பாட்டிற்கு புத்துயிர் நல்கி சேவையாற்றி வருகின்றார்.

இந் நூலகத்தின் வசதி மற்றும் புத்தகங்களைப் பாதுகாக்க விவாக்கப்பணிகள் அவசியம் என்பதை பலரிடமும் எடுத்துரைத்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். சாதிக்க வேண்டும் எனும் துடிப்பும், சிறந்த நிவாகத் திறமையும் கொண்ட அவர் நம் நூலகதிற்கு கிடைத்த பெரும் பாக்கியமே!

வாசித்தல் மூலம் சாதித்த (சங்கதிகள்) சந்ததிகள் ஏராளம்.எனவே பொதுமக்கள் ஆர்வத்துடன் நிதி உதவியளித்து நூலகத்தை நிலை நிறுத்த முன் வரவேண்டும்.

-ராபியா மணாளன். காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:தன்னிறைவு திட்டம் மூலம் க...
posted by fathimas (kayalpatnam) [09 April 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 18149

அஸ்ஸலாமு அலைக்கும்.. சீனா தேசம் சென்றாலும் சீரிய கல்வி பயில வேண்டும் அது போல நாமா தான் நூலகம் இருக்கும் இடத்தில் சென்று பயன் பெற வேண்டுமே தவிர நூலகத்தை நாம் நினைக்கும் இடத்திற்கு கொண்டு வர கூடாது..... அது இருக்கும் இடம் நல்ல இடம் நூலகத்திற்கு இதுபோல இடம் அமையாது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. நூலகம்!!
posted by Salai.Mohamed Mohideen (USA) [10 April 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 18168

நமது நூலகர் நண்பர் முஜீபிடம், நானும் பலமுறை இது பற்றி பேசியிருக்கின்றேன். அவருடைய ஆர்வம் மட்டும் இல்லையென்றால்... இத்தனை வருடமாக எவரும் பேசாமல் இருந்த இந்த நூலகத்தை பற்றி நாம் இந்த அளவுக்கு பேசிகொண்டிருக்க மாட்டோம். காரணம் நமதூரை சார்ந்த ஆர்வ மிக்க ஒருவர் நமது நூலகத்துக்கு நூலகராக வந்து சேர்ந்தது ஒரு வரப்பிரசாதம். நாம் அனைவரும் கைகோர்த்து இம்முயற்சி வெற்றிபெற உறுதுணையாய் இருப்போம்.

ஆண்களும் பெண்களும் கலந்திட இயலாதவாறு பெண்களுக்கென தனியிடத்தை அல்லது நேரத்தை ஒதுக்குங்கள். நம் நூலகத்துக்கென ஒரு இணைய தளத்தை தொடங்கி என்னென்ன புத்தகங்கள் இருக்கிறதென்று தெரியபடுத்துங்கள். நூலகத்தில் ஒன்றிரண்டு கணினிக்கொண்டு இன்டர்நெட் வசதியும் ஏற்படுத்தி இன்டர்நெட் ப்ரொவ்சிங் / சாட் என்றில்லாமல்... புதுவரவுகள் / வெளியீடுகள், வாசகர்களின் புத்தக விமர்சனங்கள் மற்றும் கருத்து பதிவிற்க்கும் மட்டும் வழிவகுங்கள். இது, வெளியூர் வெளிநாடுகளில் வசிக்கும் நமதூர் மக்கள் ஆர்வமடைந்து அனுசரணை தரவும் தங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளை வழங்கவும் மிக தோதுவாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved