Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:10:59 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8385
#KOTW8385
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 30, 2012
இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்குழுவில் நகர புதிய நிர்வாகிகள் தேர்வு! மாநில பொதுச் செயலாளர் சிறப்புரை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3220 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்குழுவில் நகர புதிய நிர்வாகிகள் தேர்வு! மாநில பொதுச் செயலாளர் சிறப்புரை!! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை பொதுக்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் நகர நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்புரையாற்றினார்.

கூட்ட நிகழ்வுகள் குறித்து, அக்கட்சியின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை பொதுக்குழுக் கூட்டம், 28.04.2012 சனிக்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள - பாங்காக் காயிதெமில்லத் பேரவை அமைப்பாளர் ஹாஜி வாவு ஷம்சுத்தீன் இல்லத்தில் நடைபெற்றது.

ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தைக்கா உமர் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

தலைமையுரையைத் தொடர்ந்து, கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், ஹாஜி எஸ்.டி.வெள்ளைத் தம்பி, ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம், ஹாஜி வாவு ஷம்சுத்தீன், துளிர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை, எஸ்.கே.ஸாலிஹ், ஹாஜி ஆர்.பி.ஷம்சுத்தீன், ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், எம்.எல்.முஹம்மத் முஹ்யித்தீன், எம்.இசட்.சித்தீக் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.



அதனைத் தொடர்ந்து, கட்சியின் நகர நிர்வாகிகள் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பின்னர், புதிய நிர்வாகிகளை வாழ்த்தியும், கட்சியின் அண்மை நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும், மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்புரையாற்றினார். அவரது உரையில் இடம்பெற்ற தகவல்கள் பின்வருமாறு:-



வரலாற்றுப் பேரியக்கமான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதுப்பொலிவுடன் செயலாற்றி வருகிறது. மூத்தவர்களின் வழிகாட்டுதல், இளைஞர்களின் செயல்திறன் இணைந்த உத்வேகத்துடன் செயலாற்றி வரும் இக்கட்சியின் வளர்ச்சியைப் பொருந்திக்கொள்ள இயலாத - சமுதாய அக்கறையற்ற சிலர் கட்சியின் பெயரையும், கொடியையும் தவறான முறையில் பயன்படுத்தி வந்தனர்.

கட்சிக்கு அங்கீகாரம், தனிச்சின்னம்:
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம், இ.அஹ்மத் ஸாஹிப் தலைமையில் செயல்பட்டு வரும் கட்சிதான் அங்கீகரிக்கப்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி என்று அறிவித்துள்ளதோடு, கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமாக ஏணி சின்னத்தையும் ஒதுக்கித் தந்துள்ளது. இது மாபெரும் வரலாற்றுச் சாதனையாகும்.

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி:
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பின் மூலம், இனி கட்சியின் பெயரையோ, சின்னத்தையோ யாரும் முறைகேடாகப் பயன்படுத்திட இயலாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், அதிருப்தியாளர்களின் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கட்சிக்கு புதிதாக கிடைக்கப்பெற்றுள்ள ஏணி சின்னத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது கட்சியின் தலைமை முதல், கடைமட்ட ஊழியர் வரை அனைவரின் பொறுப்புமாகும்.

கேரள முஸ்லிம் லீகிற்கு நன்றி:
தேர்தல் ஆணையத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு கிடைத்தமைக்கு, கட்சியின் தேசிய தலைவரும், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சருமான இ.அஹ்மத் ஸாஹிப், தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் மற்றும் கேரள மாநில முஸ்லிம் லீகிற்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

கேரள மாநில முஸ்லிம் லீக் நிர்வாகத்தின் - விளைவுகளைப் பற்றி அஞ்சாத துணிச்சலான நடவடிக்கை மூலமாகத்தான் இவ்வளவு பெரிய வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம்:
சச்சார் கமிஷனால் பரிந்துரைக்கப்பட்ட 74 பரிந்துரைகளில் 71 பரிந்துரைகள் இந்திய அரசால் ஏற்கப்பட்டுள்ளது. ஏற்கப்படா நிலையிலிருந்த எஞ்சிய பரிந்துரைகளில், மத ரீதியான மக்கள் தொகை அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதும் ஒன்றாகும்.

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் வழங்கியுள்ள பரிந்துரையில், இந்தியாவில் சிறுபான்மையினருக்கு 15 சதவிகித இடஒதுக்கீடும், அதில் முஸ்லிம்களுக்கு 10 சதவிகித உள் ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பரிந்துரைகளின்படி முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென, அண்மையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீ்க் தமிழ்நாடு மாநில பொதுக்குழு தீர்மானமியற்றியிருந்தது. இத்தீர்மானத்திற்கு பதிலளித்துள்ள தமிழக அரசு, 1931இல் வெள்ளையராட்சியின்போது எடுக்கப்பட்ட மத ரீதியான கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தற்போது முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக எடுக்கப்படும் கணக்கெடுப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை உயர்த்துவது பற்றி பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

எனவே, 81 ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்படும் இக்கணக்கெடுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இக்கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு நம் சமுதாயத்தினர் ஒளிவு-மறைவு, அச்சம், தயக்கம் எதுவுமின்றி சரியான தகவல்களைத் தரவேண்டியதும், பதியப்பட்ட தகவல்களை சரிபார்க்க வேண்டியதும் மிகவும் அவசியமாகும்.

இக்கணக்கெடுப்பில் பெறப்படும் தகவல்கள் அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் அனைத்து சலுகைகளையும் நம் சமுதாயம் பெற்றுக்கொள்ள முடியும் என்பதைக் கருத்திற்கொள்ள வேண்டும்.


இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-

தீர்மானம் 01 - புதிய நிர்வாகக் குழு:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளைக்கு பின்வருமாறு புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது:-

கவுரவ ஆலோசகர்கள்:
கட்சியின் மூத்த அங்கத்தினரான
ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப்
ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி
எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம்
ஹாஜி வாவு சித்தீக்
ஹாஜி எம்.எம்.அஹ்மத்

ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர்
ஹாஜி வாவு அப்துல் கஃப்ஃபார்
ஆகியோர் கவுரவ ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலைவர்:
ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர்

துணைத்தலைவர்கள்:
ஹாஜி எம்.எம்.மொகுதூம் கண்டு ஸாஹிப்
ஹாஜி எஸ்.டி.முஸ்தஃபா கமால்
ஹாஜி எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா
ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ்
அரபி ஷாஹுல் ஹமீத்
ஹாஜி எம்.பி.ஏ.ஸலீம்

செயலாளர்:
ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ்

துணைச் செயலாளர்கள்:
துளிர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை
ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன்
எம்.எச்.அப்துல் வாஹித்
பெத்தப்பா சுல்தான்
ஹாஜி ஹாஜா முஹ்யித்தீன்
ஜுவெல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான்

பொருளாளர்:
ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன்



இளைஞரணி அமைப்பாளர்:
கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை

மாணவரணி அமைப்பாளர்:
டி.ஏ.நூஹ் நஜீயுல்லாஹ்

சுதந்திர தொழிலாளர் யூனியன் அமைப்பாளர்:
எச்.முஹம்மத் இஸ்மாஈல்

மகளிரணி அமைப்பாளர்:
கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா

காயிதெமில்லத் பேரவை அமைப்பாளர்:
ஆசிரியர் அப்துல் ரசாக்

கல்வி மேம்பாட்டு அணி அமைப்பாளர்:
ஹாஃபிழ் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக்

அலுவலக செயலாளர்:
எம்.டி.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன்

தீர்மானம் 02 - பழைய கட்டிடத்தை விற்று புதிய கட்டிடம் வாங்கல்:
காயல்பட்டினம் சீதக்காதி நகரிலுள்ள கட்சிக்குச் சொந்தமான கட்டிடத்தை விற்று, கட்சி அலுவலகத்திற்காக சதுக்கைத் தெருவில் புதிதாக கட்டிடம் வாங்கிட இக்கூட்டம் ஒப்புதலளிக்கிறது.

தீர்மானம் 03 - புதிய அலுவலகத்திற்கு பெயர்:
கட்சி அலுவலகத்திற்காக காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் வாங்கப்படும் புதிய கட்டிடத்திற்கு, தியாகி பி.எச்.எம்.அப்துல் காதிர் மன்ஸில் என்று பெயர் சூட்டப்படுகிறது. தரை தளம், மேல் தளம் ஆகிய இரண்டு தளங்களைக் கொண்ட இக்கட்டிடத்தின் மேல் தளத்தை கட்சி அலுவலகத்திற்கு பயன்படுத்திக்கொள்வது என்றும், தரை தளத்தை வாடகைக்கு விடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டு, வாடகைதாரர்கள், வாடகை தொகை குறித்து முடிவு செய்ய,

ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர்,
ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர்,
ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன்,
பெத்தப்பா சுல்தான்,
எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன்
ஆகியோரடங்கிய குழுவை நியமித்து இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 04 - அலுவலக திறப்பு விழா:
காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் வாங்கப்படும் கட்சியின் புதிய அலுவலகமான தியாகி பி.எச்.எம்.அப்துல் காதிர் மன்ஸிலை, 24.05.2012 அன்று, நகர பிரமுகர்கள் முன்னிலையில், கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களைக் கொண்டு திறப்பு விழா நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 05 - அலுவலக நேரம்:
தினமும் காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரையிலும், மீண்டும் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 வரையிலும் கட்சி அலுவலகம் செயல்படும் நேரமாக தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 06 - சொத்து வாங்க-விற்க ஒத்துழைத்தோருக்கு நன்றி:
சீதக்காதி நகரிலுள்ள கட்டிடத்தை விற்பதற்கு ஒத்துழைத்த பெத்தப்பா சுல்தான், சதுக்கைத் தெருவில் கட்டிடம் வாங்கிட ஒத்துழைத்த ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் ஆகியோருக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 07 - வரவு செலவு கணக்கறிக்கை:
கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட கட்சியின் வரவு-செலவு கணக்கறிக்கைக்கு இக்கூட்டம் ஒருமனதாக ஒப்புதலளிக்கிறது.

வரவு-செலவு கணக்கறிக்கையில் காண்பிக்கப்பட்ட நிலுவைத் தொகையான ரூ.21,025 தொகையை சரிசெய்ய இணைந்து அனுசரணை வழங்கிய கட்சியின் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 08 - மகளிரணி சிறப்பு நிகழ்ச்சி:
நகர பெண்கள் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு, கட்சியின் மகளிரணி மாநில அமைப்பாளர் பேராசிரியை தஸ்ரிஃப் ஜஹான் அவர்களைக் கொண்டு, சிறப்பு நிகழ்ச்சியை விரைவில் நடத்திட தீர்மானிக்கப்படுவதுடன், அதற்கான தேதி குறித்து நகர நிர்வாகக் குழு கலந்தாலோசித்து இறுதி முடிவு செய்ய இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 09 - பேருந்து நிலைய சுவரை அகற்றக் கோரிக்கை:
காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தின் தென்புறத்தில் - எல்.எஃப்.வீதியையொட்டி அமைந்துள்ள சுவர், எதிரில் வரும் வாகனத்தைப் பார்க்க இயலாத நிலையில் மறைத்திருப்பதால், அச்சுவற்றை அகற்றிட, நகராட்சியை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 10 - தொடர்வண்டி நிலைய நிலுவைப்பணி:
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் சுமார் 70 லட்சம் ரூபாய் செலவு மதிப்பீட்டில் நடைபெற்று வந்த மேம்பாட்டுப் பணிகள் தகுந்த காரணமின்றி நீண்ட காலமாக நிறைவேற்றி முடிக்கப்படாமலிருப்பதைச் சுட்டிக்காட்டி தொடர்வண்டித் துறை மதுரை கோட்ட அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து விரைவில் சாதகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிடில், செய்யப்பட வேண்டிய போராட்ட வழிமுறைகள் குறித்து இறுதி முடிவெடுக்க,
ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப்,
ஹாஜி ஆர்.பி.எஸ்.ஷம்சுத்தீன்
உள்ளிட்டோரடங்கிய குழுவை இக்கூட்டம் நியமிக்கிறது.

தீர்மானம் 11 - மணிச்சுடர் நாளிதழ் வினியோகப் பொறுப்பு:
நகர நிர்வாகிகள் அனைவரும், கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான மணிச்சுடர் நாளிதழில் சந்தாதாரராகுமாறு இக்கூட்டம் கேட்டுக்கொள்வதோடு, சந்தாதாரர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, ஆசிரியர் மு.அப்துல் ரசாக் அவர்களை மணிச்சுடர் நாளிதழ் வினியோகப் பொறுப்பாளராக இக்கூட்டம் நியமிக்கிறது.


மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில், நகர புதிய செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ் நன்றி கூற, எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், நகர முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.




இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[செய்தி திருத்தப்பட்டது @ 09:53/02.05.2012]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்...
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (காயல்பட்டினம்.) [30 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18605

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் புதிய நகர நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் என் உளம் கனிந்த நல் வாழ்த்துக்கள்!

அன்பு இளவல் துடிப்பு மிக்க பொதுச் செயலாளர் அபூபக்கர் கூறியது முற்றிலும் உண்மை! பாரம்பரிய மிக்க கட்சியான லீக் பெரியவர்களின் வழிகாட்டுதலில் இளைஞர்களின் செயல்பாட்டில் தழைத்து வருவதைக் கண்கூடாக நாம் பார்த்து வருகின்றோம்.

இன்ஷா அல்லாஹ் கேரளாவை போன்று நாமும் நம் சமுதாயமும் இக் கட்சியின் செயலாக்கங்களில் ஈடுபட்டு ஆட்சியமைக்கும் பொறுப்பை நாம் கைப்பற்றும் காலம் வெகு தூரத்தில் இல்லை! அதற்கான ஏணியை இளைய சமுதாயத்தினர் எடுத்து வைத்துள்ளனர். -ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [30 April 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18607

புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.

தேந்தெடுக்கப்பட்ட நகர புதிய நிர்வாகிகள் முன்பை விட சிறப்பாக செயல் படுவதுடன், சமுதாய சேவை யையும் திறம்பட செய்திட வாழ்த்துகிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஒரே கொடியின் கீழ் ஒற்றுமையின் கயிற்றை பற்றிப் பிடிக்க அனைவரும் அணி திரள்வீர் !!!
posted by K.V.A.T.HABIB MOHAMED (QATAR) [01 May 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 18610

காயல்பட்டினம் என்பது ஒற்றுமைக்கு புகழ் பெற்ற ஊர் என்பதை இனியாவது இந்த தருணத்தில் உலகிற்கு பறை சாற்றுவதற்கு ஒரே அணியின் கீழ் , பிறை கொடியின் நிழலில் வீறு நடை போடுவதற்கு உங்கள் அனைவரையும் , இந்த தருணத்தில் அன்பு அழைப்பை இந்த வளைய தளத்தின் மூலம் விடுத்து, அணி அணியாய், வரும் மே மாதம் நடக்க இருக்கும் சமுதாய விழாவின் போது, அன்பு இளைய தளபதி , துடிப்பு மிக்க , சமுதாய நலனில் சதாவும் சிந்தனை கொண்ட சகோதரர் அபூபக்கர் அவர்கள் முன்னிலையில் தாய் சபையின் பச்சிளம் பிறைக்கொடியை தங்கள் கரம் பற்றி , இந்த காயல் மாநகரம் , மா நபிகள் கண்ட பசுமை கொடியின் பட்டாளத்து நகரம் என்பதை , நிரூபிக்க வாரீர் ...வாரீர் என ....ஹிஜாஸ் மைந்தன் அவர்களோடு நானும் உங்கள் அனைவரையும் தாய் சபை சார்பாக அன்பு அழைப்பை விடுக்கிறேன்.

தூய்மையான கரத்துக்கு சொந்தக்காரர் பேராசிரியர் காதர் மொஹிதீன் மற்றும் அப்துல் சமத் சமதானி அவர்கள் பங்கேற்கும் இந்த விழா ...காயல் மாநகரத்து குடும்ப விழாவோ என ஆச்சர்யப்படும் வகையில், அனைவரும் தவறாது பங்கேற்று , சிறப்பிக்குமாறும் அன்போடு உங்கள் அனைவரையும் வேண்டி விரும்பி அழைக்கிறோம். இன்ஷா அல்லாஹ்....

துடிப்பு மிக்க மாணவர் பட்டாளமே.... உன் சமுதாய மானம் காக்க மறக்காமல் உன்னை இன்றே இந்த சமுதாய மாணவர் அணியில் இணைத்துக்கொள் !

பொறுப்பு மிக்க நம் நகரத்து வாலிப தோழர்களே.... நாம் மற்றவர்களுக்காக பல வர்ண கோடி (flag) பிடித்து வாழ்க கோஷங்கள் எழுப்பியது போதும் ....இனியும் மாற்றார் புகழ் பாடி நம் சமுதாய வீழ்ச்சிக்கு வித்திட வேண்டாம் .... இதுவே தருணம் ....தயங்காது தாய் சபையில் இணைய வாரீர் !!

கண்ணியம் மிக்க பெரியவர்களே...தாய் மார்களே...சகோதர சகோதரிகளே....பாரம்பர்யம் மிக்க , நம் பெரியோர்கள் அங்கம் வகித்த ...தாய் சபையாம் முஸ்லிம் லீகில் தயக்கம் இல்லாமல் தங்களை இணைப்பதற்கு இப்பொழுதே தயாராவீர் !!!

கேரளாவில் முஸ்லிம்கள் கண்ட வெற்றியை இன்ஷா அல்லாஹ்.....நம் தாயகமாம் தமிழகத்திலும் , தாய் சபையில் இணைவதன் மூலம் வெகு விரைவில் ....ஆட்சிப்பீடத்தில் நம்மவர் அமர்ந்து சமுதாய நலன் காக்க வாரீர் ...வாரீர் என அன்போடு அழைக்கிறேன் . நம் அனைவருக்கும் வல்ல ரஹ்மான் தவ்பீக் செய்வானாகவும் ....ஆமீன் ! ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!.

அன்புடன் இருகரம் நீட்டி ஆரத்தழுவ அழைக்கும் உங்கள் அன்பு சகோதரன் ,
K.V.A.T. ஹபீப் முஹமத்
(தோஹா காயிதே மில்லத் பேரவை ஒருங்கிணைப்பாளர் )
கத்தார் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நான் ரெடி..... நீங்க ரெடியா.....?
posted by s.s.md meerasahib (riyadh) [01 May 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18614

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு என் காயல் கண்மணிகளே................... ஒற்றுமை என்னும் கையிற்றை பற்றிபிடியுங்கள், தனி மரம் தோப்பு ஆகாது, ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. என்றெல்லாம் எழுத்து வடிவிலும், வாய் மொழியிலும் தான் உபயோகப்படுத்துகிறோமே தவிர நடை முறையில் கொண்டு வந்தது இல்லை.

இனி வரும் காலம்களில் கண்டிப்பாக நம் மக்களுக்கு ஒற்றுமை என்றால் என்ன? என்பதை நாம் தானே... காட்டிக்கொடுக்கணும்?. தற்ச்சமயம் எல்லா முஸ்லிம் ஊர்களிலும்... முஸ்லிம்கள் பிறைக்கொடியை ஏற்க முன் வந்துள்ள நிலையில் நம் காயல்பதி இதில் தயக்கம் காட்டுவது சரியில்லை.

நம் ஊர்..... பிரைகொடியின் கீழ் அணி வகுக்க தாயாராங்கில் இரு வர்ண கொடியை மாற்றி வைத்து நானும் எங்களின் குடும்பமும் பிறை கொடியை ஏற்க்க தயார். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்...
posted by mackie noohuthambi (kayalpatnam) [02 May 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18623

வாழ்த்துக்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்களும் கவ்மின் காவலர் காய்தே மில்லத் அவர்களும் 1967 இல் கூட்டணி அமைத்து வெற்றிபெற்று வரலாற்று பெருமை மிக்க தமிழக சட்டமன்றத்தை அலங்கரித்த காலத்தை நினைத்து பார்கிறேன்.

அதன் பிறகு நடைபெற்ற அரசியல் மாற்றங்கள், இஸ்லாமிய புது கட்சிகள், இஸ்லாத்தை அதன் தூய வடிவில் கொண்டுவருவதாக சொல்லி இளைஞர்களை உசுப்பிவிட்டு அவர்கள் வெஞ்சிரைகளின் வேக்காட்டில் தங்கள் இளமையை கழிக்கவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது.

பிறைக்கொடியின் பாதுகாவலர்கள் பிறை இல்லாத ஒரு பசைக்கொடியின் பின்னால் பிரிந்து சென்றபோது மனம் கனத்தது. தங்கள் ஏணி சின்னத்தை அவர்கள் உதயசூரியனின் காலடியில்அடகு வைத்தபோது அவர்கள் எங்கே போகிறார்கள் என்று மனம் வேதனைப்பட்டது.ஆணி குத்தியது போன்ற ரணம் ஏற்பட்டது.

போர்க்குணம் இல்லாத, தவறு செய்யும் அரசுகளை தட்டி கேட்காத சமுதாயத்தை சுறுசுறுப்புடன் செயலாற்ற முன்னெடுத்து செல்லும் கொள்கை எதுவும் தன வசம் இல்லாத இயக்கமாக மக்கள் அதை பார்க்க ஆரம்பித்ததன் விளைவு இடையிலே ஏற்பட்ட தொய்வு.

ஆனால் இப்போது நெருப்பாற்றில் நீந்தி வந்து நீறு பூத்த நெருப்பிலிருந்து புறப்பட்ட பீனிக்ஸ் பறவை போல் முஸ்லிம் லீக் மீண்டும் களம்இறங்கி இருப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத அரசியல், இஸ்லாமிய உணர்வுகள், தோற்றங்கள், தனது பாரம்பரியத்தை தக்க வைத்துக்கொண்டு அதே வேளை, இடையிலே காளான்களாக முளைத்து முன்னால் வந்த செவியை பின்னால் வந்த கொம்பு மறைத்ததுபோல் நடந்து விட்ட ஒரு விபத்திலிருந்து ஓர் மாயையிலிருந்து முஸ்லிம்கள் விடுபட்டு முஸ்லிம் லீக்கை ஏறிட்டு பார்க்க வைத்திருக்கிறீர்கள்.

இளைய தளபதியாக அபூபக்கர் அவர்களை களம் இறக்கியிருக்கிரீர்கள். இழந்த ஏணியை மீண்டும் நிமிர்த்தி வைத்திருக்கிறீர்கள். காயிதே மில்லத் என்று இல்லாமல் "காதிமே மில்லத்"தாக இப்போதுள்ள தலைவர் எல்லோரையும் அரவணைத்து ஒரு கொடியின் கீழ் கொண்டுவந்துள்ளது மிக்க மகிழ்ச்சியை தருகிறது.

இன்று தூத்துக்குடி பள்ளியில் மக்ரிப் தொழுது விட்டு அவர்கள் எல்லோரும் வெளியே வந்தபோது ஒரு கண் கொள்ளா காட்சியாக இருந்தது. இஸ்லாமிய இலச்சனை அவர்கள் முகங்களில் ஒளிர்ந்தன அல்ஹம்து லில்லாஹ். உங்கள் பணி தொடர, சிறக்க வாழ்த்துக்கள். நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்.

அன்புடன் மக்கி நூஹுத்தம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்...
posted by Albul Rahman (Abu Dhabi) [07 May 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18699

காயல்பட்டினத்தை போன்று அனைத்து இஸ்லாமிய ஊர்களிலும் தாய்ச்சபை இந்திய யுனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு சொந்த அலுவலக கட்டிடம் அமைய வல்ல அல்லாஹ் உதவி புரிவானாக! காயல் நகர புதிய நிர்வாகிகளுக்கு நெஞ்சம் நிறைந்த நல வாழ்த்துக்கள்..

அன்புடன்
லால்பேட்டை அப்துல் ரஹ்மான்,
அபுதாபி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved