Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:34:11 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8389
#KOTW8389
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மே 1, 2012
நகர்மன்றத் தலைவரின் மக்கள் கூட்டமைப்புகள் சந்திப்பு 2ஆவது கூட்டம்! ரெட் ஸ்டார் சங்கத்தில் நடைபெற்றது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4367 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, தேர்தலில் போட்டியிட்டபோது அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான வெளிப்படை நிர்வாகத்தை தற்சமயம் நடைமுறைப்படுத்தி வருகிறார்.

பொதுமக்களைச் சந்தித்து, நகராட்சி சேவைகளில் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் களைந்திட, மக்கள் குறைதீர் மாதாந்திர கூட்டம், நகர்மன்றக் கூட்டங்களைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு, பார்வையாளர்களுக்கென தனி இருக்கை வசதிகள், விரைவில் நகர்மன்றக் கூட்டங்கள் வீடியோ ஒளிப்பதிவு, நகராட்சியின் பொதுவான நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது தகவல் தெரிவித்து, தேவையான அம்சங்களுக்கு கலந்தாலோசனை மூலம் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக, அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக்கமிட்டியினர் கலந்துகொள்ளும் மாதாந்திர கூட்டம் ஆகியன அவரது வெளிப்படை நிர்வாகத்தின் முக்கிய அம்சங்கள்.

அந்த அடிப்படையில், மக்கள் கூட்டமைப்புகள் சந்திப்பு முதல் கூட்டத்தை, காயல்பட்டினம் மகுதூம் தெருவில் இயங்கி வரும் ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியில் நகர்மன்றத் தலைவர் நடத்தினார். இரண்டாவது கூட்டம், 28.04.2012 அன்று காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்க வளாகத்தில் நடைபெற்றது.





அன்று மாலை 05.00 மணியளவில் துவங்கிய இக்கூட்டத்திற்கு, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமை தாங்கினார். அப்பாபள்ளி ஜமாஅத் தலைவர் ஹாஜி எம்.எஸ்.கே.எஸ்.மரைக்கார் என்ற சி.எம்.கே., அப்பகுதி (09ஆவது வார்டு) நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஹைரிய்யா, நகர்மன்ற உறுப்பினர்களான கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, ஜே.அந்தோணி, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் கே.ஜமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிராஅத்தைத் தொடர்ந்து, கூட்டத் தலைவரும் நகர்மன்றத் தலைவருமான ஐ.ஆபிதா உரையாற்றினார். அவரது உரை பின்வருமாறு:-



எல்லாப்புகழும் இறைவனுக்கே வல்லோன் அவனே துணை நமக்கே!

எனது மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய காயல்மாநகரின் ஜமாத்துக்கள், பொது நல அமைப்புக்கள் மற்றும் புறநகரின் ஊர் தலைவர்களின் பிரதிநிதிகளாக வருகை தந்துள்ள அனைத்து சமுதாயத்தை சேர்ந்த சகோதரர்களே உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் ஒற்றுமையும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.

இறையருளால் காயல்பட்டினம் நகராட்சியில் புதிய நகர்மன்றம் பொறுப்பேற்று இந்த மாதம் 25ஆம் தேதியுடன் 6 மாதங்கள் நிறைவு பெற்றுள்ளது அல்ஹம்துலில்லாஹ். புதிய நகர்மன்றமானது பொறுப்பேற்ற காலத்தில் நம் ஊரின் முக்கிய பிரச்சனைகள், அதற்க்கான தீர்வுகள் மக்களின் தேவைகள், அதற்கான நலத்திட்டங்கள், மக்களின் எதிர்ப்பார்ப்புகள், மக்கள் விரும்பும் மாற்றங்கள் இவைகளுக்கு மக்களின் பிரதிநிகளாகிய நாங்கள் - எங்களை தேர்ந்தெடுத்து நகராட்சிக்கு அனுப்பிவைத்த மக்களாகிய உங்களுடன் கலந்தாலோசித்து, உங்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து, மக்களின் குரலை மக்கள் மன்றத்தில் ஒலிக்க செய்ய வென்டும் என்ற நல்ல நோக்கத்தோடும், அதன் மூலம் நல்ல மாற்றங்களையும் ஏற்றங்களையும் நம் காயல்மாநகர் காணவேண்டும் என்ற கனவுகளோடும் இந்த மக்கள் சந்திப்பு கலந்தாய்வு கூட்டமானது - முதன் முதலாக ஜனவரி மாதம் 15ஆம் தேதி அன்று மகுதூம் தெரு ரப்யாஸ் ரோசரி மழலையர் பள்ளியில் வைத்து நடைபெற்றது.

அக்கூட்டத்தில் இதுபோன்ற சந்திப்பு நமது நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற வேண்டும் என்ற கருத்து மக்களால் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் 2 வது கூட்டமானது இன்று இங்கே ரெட் ஸ்டார் சங்கத்தில் நடைபெற்று கொண்டுள்ளது. இதற்க்கான ஏற்பாடுகளை செய்து ஒத்துழைப்பு தந்த இந்த சங்கத்தின் அங்கத்தினருக்கு அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

எங்களது புதிய நகர்மன்றமானது இந்த 6 மாத காலத்தில் அத்தியாவசியமான பணிகளை நிறைவேற்றி மக்களுக்கு நல்ல முறையில் அதன் பலன்கள் கிடைக்க வேண்டும் மென்று அடிப்படையளவிலே நாங்கள் எடுத்து கொண்டு இருக்கின்ற முயற்சிகள் அனைத்திலும் போராட்டத்துடன் கூடிய சவால்களை சந்தித்து கொண்டு இருக்கின்றோம்.

எங்கள் முன்னால் நின்று இயக்கும் இறைவனின் சக்தி, எங்களுக்கு பின்னால் நின்று இயக்கும் மக்கள் சக்தி - இந்த இரு சக்திகளும் எங்களுடன் இணைத்து நிற்கும் காலமெல்லாம், இறைவனின் அளவிலா அருளும், இணை இல்லா கருணையும் கொண்டு, அனைத்து சவால்களையும் துணிவுடன் சந்தித்து வெற்றி பெறுவோம், இன்ஷா அல்லாஹ்.

எந்த ஒரு ஆதிக்க சத்திகளுக்கும், எந்த ஒரு காலத்திலும் பயப்படவும் மாட்டோம், பணியவும் மாட்டோம். ஊசி தங்கத்திலே இருந்தாலும் கண்ணிலே குத்த முடியாது என்பதனை மக்கள் தெளிவாகப் புரிந்துவிட்டார்கள். உண்மை என்னவென்று மக்கள் உணர்ந்து விட்டார்கள். அக்கிரமங்களுக்கு எதிராக போராட மக்கள் துணிந்து விட்டார்கள்.

என்னுடைய தேர்தல் அறிக்கையின் முதல் அம்சமே வெளிப்படையான - தூய்மையான நிர்வாகம். அதனை மக்களுக்கு காட்டவேண்டும் என்பதற்காக நாங்கள் எடுக்கும் அனைத்து நல்ல விசயங்களிலும் தடைக்கற்கள் எத்தனை வந்தாலும், அதனை உடைத்து படிக்கற்களாக்கி சாதித்துக் காட்டுவோம், இன்ஷா அல்லாஹ்.

மக்கள் நீங்கள் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து செயல்படுங்கள். உங்களின் தேவைகளைச் சொல்வதற்கும், உங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், உங்கள் வீட்டுப் பிள்ளையாக நகராட்சிக்கு அனுப்பிவைத்த உங்கள் பிரதிநிதிகளிடம் கலந்து ஆலோசியுங்கள். உங்களின் ஒருமித்த எண்ணங்களை, அவர்கள் குரல் மூலம் நகராட்சியில் நிச்சயம் ஒலிப்பார்கள். ஏனென்றால், எம்முடைய சகோதர சகோதரிகளாகிய நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவருமே மக்கள் பணி செய்ய ஓடோடி உழைக்கும் நல்ல மனதிற்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றார்கள். அவர்களின் செயல்பாடுகளை பாராட்டுகிறேன். அவர்கள் மக்களுக்காற்றும் தூய நற்பணியில் என்றும் அவர்களுடன் இணைந்து நின்று செயலாற்றுவேன், இன்ஷா அல்லாஹ்.

தொலைநோக்கு பார்வையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் எடுத்து கொண்டு இருக்கின்ற முயற்சிகள் பலன் தருவதற்கு சற்று காலதாமதம் ஆனாலும், எதிர்காலத்தில் அவைகள் அனைத்தும் ஒரு பெரிய மாற்றத்தை நாம் பிறந்த மண்ணில் - இன்ஷா அல்லாஹ் - நிச்சயம் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

மக்களிடம் தற்போது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வானது தவறுகளை சுட்டிக்காட்டி தட்டிகேட்கும் மனப்பாங்கினை தந்ததுடன், நம் ஊர், நம் மக்கள் - நம் ஊரின் வளர்ச்சியில் - நம் ஊரின் முன்னேற்றத்தில் நம் பங்கு நிச்சயம் இருக்க வேண்டும் என்ற அக்கறை சீமையில் இருந்தாலும் கூட, சமுக அக்கறையுடன் கூடிய உன்னதமான சிந்தனைகள் நம் இளைய சமுதாயத்தினரின் உள்ளத்திலே உதித்துக் கொண்டே இருப்பது நமதூருக்கு நல்லதொரு விடியல் காத்திருக்கிறது என்பதனை காட்டுகிறது. அவர்களின் பயணங்கள் காயலின் வெளிச்சத்தை நோக்கி புறப்படட்டும்.

இந்த 6 மாத காலத்தின் நகரமன்றத்தின் அனைத்து பிரிவுகளிலும் உள்ள நன்மை, தீமைகளை அலசி ஆராய்ந்து தெளிந்து தெரிந்து கொண்டுள்ளோம். அதன் அடிப்படையிலே அதனை நல்ல முறையில் சீர்செய்வதற்கு பல மாற்றங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டி உள்ளது.

மக்கள் பிரதிநிதிகளின் மகத்தான ஒத்துழைப்புடன் அவைகள் அனைத்தையும் சரி செய்வதற்குரிய முயற்சிகளை தொடர்ச்சியாக எடுத்துகொண்டு இருக்கிறோம்.

சென்னையில் மாண்புமிகு தமிழக அமைச்சர்கள், நகராட்சி நிர்வாக அதிகாரிகளை என அனைவரையும் - நகர்மன்ற உறுப்பினர்களுடன் நேரில் சந்தித்து, நமது நகராட்சிக்கு நிரந்தர ஆணையர் நியமனம், காலிப் பணியிடங்களுக்கு அலுவலர்களை நியமித்தல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை கோரிக்கையாக முன்வைத்து வந்தோம். அதன் பலனாக, தற்போது நம் நகராட்சிக்கு திரு. அசோக் குமார் என்பவர் நிரந்தர ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். நகராட்சிக்கு நிர்வாக அதிகாரி என்ற நிலை மாறி, ஆணையர் பொறுப்பு என்று ஆனது முதல் தற்போதுதான் நிரந்தர ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமதூரின் பிரதான பிரச்னை குடிநீர். தற்போது பெறப்படும் தண்ணீரை முறையாக விநியோகிக்க ஆலோசனை வழங்க குழு ஒன்றினை காயல்பட்டினதிற்கு அனுப்ப - நாங்கள் சென்னை சென்றிருந்தப்போது கோரிக்கைவைத்துள்ளோம். அது குறித்த முடிவினை அதிகாரிகள் விரைவில் எடுப்பார்கள் என நான் நம்புகிறேன்.

மேலும் - நீண்டகாலமாக நாம் அனைவரும் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் - இரண்டாம் குடிநீர் திட்டத்திற்கான, நிர்வாக ஒப்புதல் தற்போது பெறப்பட்டுள்ளது. இத்தருணத்தில் - இதற்காக உழைத்த முன்னாள் நகர்மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், அதிகாரிகள், பொது நல அமைப்புகள் மற்றும் அரசாங்கங்களுக்கு எனது நன்றியினை கூறிகொள்கிறேன்.

தெருவிளக்கு பராமரிப்பு பணியில் ஏற்ப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண மின்வாரிய உயர் அதிகாரியை சந்தித்து கோரிக்கைகளை முன் வைத்து தேவையான விளக்கங்களை பெற்றுள்ளோம். நகராட்சியின் விதிப்படி நம் நகர் மன்றத்தின் மூலமே ஒப்பந்த அடிப்படையில் நாமே இரண்டு வயர் மேன்களை நியமித்தும், நல்ல தரமான முன்னணி நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக மின்சாதன பொருட்களை கொள்முதல் செய்தும், தெருவிளக்கு பராமரிப்பு பணிகளை நல்ல முறையில் செய்திட நாடி உள்ளோம்.

மின்சார சேமிப்பிற்கு உதவும் சூரியன் மின்சக்தி மற்றும் எல்.இ.டி. போன்ற நவீன தொழில் நுட்ப விளக்குகளை வருங்காலத்தில் நமதூரில் அறிமுகப்படுத்த முயற்சிகள் எடுக்க உள்ளோம்.

நவீன முறையில் குப்பைகளை உரமாக்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்த உள்ளோம்.

தமிழக அரசின் புதிய திட்டமான பிளாஸ்டிக் சாலை அமைக்கும் திட்டமானது நமதூரிலும் செயல்படுத்த பட வேண்டி இருப்பதால் அத்திட்டம் பற்றிய விளக்கங்களை எடுத்துரைக்கவும் நம் ஊரின் தெருக்களை ஆய்வு செய்யவும் - அந்த தொழில்நுட்பத்தை கண்டுப்பிடித்த - டாக்டர் வாசுதேவன் அவர்கள் நமதூருக்கு வருகை தர இருக்கிறார்கள் என்பதனையும் தெரிவித்து கொள்கிறேன்.

இத்திட்டங்கள் எல்லாம் சிறப்பாக செயல்பட்டு அதன் பலன்கள் எல்லாம் நமதூருக்கும் நமது மக்களுக்கும் முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் உங்கள் அனைவர்கள்ளுடைய அன்பான ஆதரவும் அனுசரணையும் ஆலோசனையும் என்றும் எங்களுக்கு நீங்கள் தந்திட வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.

புதிய நகர்மன்றம் பொறுப்பேற்ற காலம் முதல் பொதுமக்களாகிய உங்களுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய சேவைகள் பல உடனடியாக நிறைவேற்றப்பட முடியாமல் இருக்கின்றது. நேர்மையாகவும், வெளிப்படையாகவும் உங்கள் நன்மைக்காகவே செயல்பட்டு கொண்டிருக்கும் எங்களுக்காக அச்சிரமங்களை சற்றே பொறுத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களாகிய உங்களுக்கு நகராட்சி மூலம் கிடைக்க வேண்டிய அனைத்து சேவைகளும் தங்குதடையின்றி கிடைத்திட ஆவன அனைத்தும் செய்யப்படும் என்பதைத் தெரிவித்து கொண்டு எனதுரையை நிறைவு செய்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.


இவ்வாறு, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா உரையாற்றினார். பின்னர், நகர்மன்றம் மற்றும் நகராட்சி நிர்வாகம் குறித்த சில சந்தேகங்களை பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் கேள்வியாகக் கேட்டு, தேவையான விளக்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.



இக்கூட்டத்தில் நகரின் ஜமாஅத் - பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள், புறநகர் ஊர் நலக்கமிட்டி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.





தகவல் மற்றும் படங்களில் உதவி:
ஹிஜாஸ் மைந்தன்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நகர்மன்றத் தலைவரின் மக்கள...
posted by mackie noohuthambi (kayalpatnam) [02 May 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18616

நாம் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த வெளிப்படையான நிர்வாகம் பற்றி அறிய சந்தோசமாக இருக்கிறது. எனக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் சில முன் திட்டமிடப்பட்ட நிகழ்சிகளில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் கூடியிருந்த கூட்டத்தை பார்த்து மனம் வேதனைப்பட்டது. எல்லோருக்கும் இப்படி ஒரு கட்டாயம் இருந்ததா அல்லது வேண்டுமென்றே புறக்கநிக்கிரார்களா என்று தெரியவில்லை. சீதக்காதி திடல் போன்ற பொது இடங்களில் நடத்தப்பட்டால் இந்த நிலையை தவிர்க்கலாமா ஒன்றுமே புரியவில்லையே.

நாம் விரும்பிய ஆட்சி வரவில்லை நாம் விரும்பியவர்கள் நகரமன்ற தலைவராக வரவில்லை என்பதால் இந்த நிலைப்பாட்டை சிலர் எடுத்திருந்தால் அது ஒரு மோசமான முன் உதாரணம்.

ஒரு கருப்பு நிற நீக்ரோ உங்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவருக்கு கீழ்ப்படிவது உங்கள் கடமை என்று நபிகள் நாயகம் சொன்னதாக மார்க்க உலமாக்கள் சொல்கிறார்களே..மார்கத்துக்கு முரணான வழியில் நடக்காதவரை அவர் முன்னெடுத்து செல்லும் நல்ல பணிகளுக்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டியது நம் கடமை அல்லவா?

ஒரு இயக்கத்தை விட ஒரு ஊர் முக்கியம் அல்லவா?ஊரின் முன்னேற்ற திட்டங்கள் அமுல்படுத்தபடுவதற்கு அந்த ஊரின் எல்லா முஹல்லா வாசிகளும் ஒத்துழைக்க வேண்டுமல்லவா, ஆட்சியாளர்கள் நமது நலத்திட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்கும்போது இதெல்லாம் யோசிப்பார்களே, இந்த கூட்டத்தின் வலுவையும் கணக்கில் எடுத்து கொள்வார்களே, நாம் எங்கே செல்கிறோம் என்பது புரியவில்லையே.

தனிப்பட்ட ஒரு ஆபிதாவை எதிர்கிரோமா அல்லது நமது நகரம் முன்னேற யார் மூலம் திட்டங்கள் சமர்பிக்கப்படவேண்டுமோ அவரை எதிர்கிரோமா என்று சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.நாம் எல்லோரும் கற்றறிந்தவர்கள் வாழும் ஊர் என்று உலக நாடுகள் நம்மை புகழ்கின்றன, இந்த நிலையில் நமது சுய நலத்தை முன் வைக்காமல் ஊர் நலத்துக்கு முன்னுரிமை கொடுப்பது நம் எல்லோரது கடமை அல்லவா, ராமன் ஆண்டாள் என்ன ராவணன் ஆண்டாள் என்ன என்ற எண்ணம் நன்மை தருமா, அல்லாஹ் மிக அறிந்தவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நகர்மன்றத் தலைவரின் மக்கள...
posted by Kader K.M (Dubai) [02 May 2012]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18617

நீங்கள் என்னவேண்டுமென்றாலும் சொல்லுங்கள் சார் நாங்கள் அப்படித்தான் இருப்போம்! அடுத்தவன் வந்து அடித்தாலே எங்களுக்கு சொரணை வராது! நீங்கள் சொல்லியா நாங்கள் கேட்கப்போகிறோம் ! இந்த ஊர் எப்படிப்போனால் எங்களுக்கு என்ன? கடலில் திராவகத்தை கலந்தால் எங்களுக்கு என்ன? வெந்ததை தின்றுவிட்டு விதி வந்தால் சாவோம்! என்று இருக்கும் எங்கள் ஊர் மக்களிடையே இப்படி ஒரு தங்கத் தலைவி! மாஷா அல்லாஹ்!

அன்பு சகோதர சகோதரிகளே! நல்லோருக்கு பெய்யும் மழை எல்லோருக்கும்! எனவே இது போன்ற கூட்டங்களில் கலந்துக்கொண்டு நகர் மன்றத்தினர்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்! சிறு படை பெரும்படையை வென்றது! அது இஸ்லாமிய வரலாறு! (தக்வா இருந்தால் மாத்திரம் )

ஆனால் உலக அரசியல் சட்டப்படி பெருங்கூட்டத்தை கூட்டி மெஜாரிட்டியை காட்டினால் தான் நமக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளும் கிடைக்கும்! இல்லையென்றால் நமக்குதான் நஸ்ட்டம்!

சகோதரா! ஏன் இன்னும் இந்த பிடிவாதம்? ஒன்றுபடுவோம்!நகர் மன்றத்தினர்களுக்கு ஒத்துழைப்போம்! இன்ஷா அல்லாஹ் வெற்றி பெறுவோம்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மக்களுக்காக உழைக்கும் இத்தலைவிக்கு அவசியம் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் அவசியம் கொடுக்கப்பட வேண்டும்!
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [02 May 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18618

அஸ்ஸலாமு அழைக்கும்.

அன்பான காயல் நகர பெருமக்களே! நேரமான காலத்தை பற்றி அல்லாஹ் தனது திருமறையில் பல இடங்களில் கண்டிப்புடன் கட்டாயப்படுத்தி உள்ளான் என்பதை நினைவு கூர்ந்தவனாக..... தேர்தல் காலக்கட்டத்தின் சூழ்நிலையில் சிலரின் விருப்பத்திற்கு மாறாக இத்தலைவர் பெரும்பான்மையான மக்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டதால் நமது இஸ்லாத்தின் அடிபடையில் அவரே ஒட்டுமொத்த மக்களின் தலைவர், அத்துடன் அவரை ஆதரிப்பதும் அனைவரின் கட்டாய கடமையும் கூட!

இத்தலவியை தேர்ந்தெடுக்க விருப்பமில்லாத சிலரின் நோக்கமாகிய ஊரின் ஒற்றுமை, வெளிபடையான நிர்வாகம், கையூட்டு முற்றிலுமாக ஒழிப்பு, நகர்மன்றத்தின் அனைத்து தவறுகளையும் வெளிக்கொண்டுவந்து நேர்மையானவர்களை மட்டும் நகர்மன்றத்தில் அனுமதிப்பது, ஒட்டுமொத்த சமுதாய ஒற்றுமை, பாகுபாடு இல்லா பழகுதல், மக்களுக்காக மட்டும் உழைப்பது, பெரியோர்களை மதிப்பது என்று அனைத்தையும் சரிவர செய்து கொண்டிருக்கும் இந்நகர் மன்ற தலைவி முதல் அனைத்து உறுப்பினர்களின் [ஒரு சில உறுப்பினர்களை தவிர] செயல்பாடுகள் அவர்களின் நோக்கங்களை பூர்த்தி செய்கிறது என்பதை அனைவர்களின் உள்ளங்களும் பதில் சொல்லும் என்பதில் சந்தேகமில்லை.

அன்பானவர்களே! சற்று சிந்தித்துபாருங்கள்! அரசியல்வாதிகள் போல் ஏதும் செய்யாமல் வெறும் விளம்பரத்திற்க்காக அது வரப் போகிறது, இது விரைவில் வந்து விடும், அமைச்சர்களுடன் பேசுகின்றோம் இதுவெல்லாம் எங்கள் சாதனை என்று வெட்டிக்கு பேட்டிகொடுக்கும் தலைவியாக இந்த அறிக்கை தெரியவில்லை. மாறாக நேர்மையான மிக தைரியமான தன்னம்பிக்கை கொண்ட உண்மையான எந்த ஒன்றும் இதுவரை ஆறு மாதகாலத்தில் செய்து முடித்துவிட்டோம் என்று வெட்டி பேட்டியாக இல்லாமல் எதார்த்தத்தை அவர்களின் முயற்சிகளுக்கு பல முட்டுகட்டைகளும் காலதாமதங்களும் ஏற்படுத்தபடுகிறது என்பதை மிக தெளிவாக தெரிவித்து அவற்றை பெற அனைத்து தரப்பு மக்களின் ஆதரவு என்றால் ஒருவேளை அநியாயக்கார்களின் சதியால் வேண்டுமென்றே தொடர்ந்து நமது மக்கள் தலைவி மற்றும் பிரதிநிதிகளை புறக்கனித்துக் கொண்டிருந்தால் மக்கள் புரட்சி என்பது மிக மிக அவசியம் என்பதை காயல் மக்களாகிய அனைத்து தரப்பு மக்களும் புரிந்து அவர்களுக்கு முழு ஆதரவு கொடுப்பது அனைவர்களின் மீதும் தலையாய கடமை.

காரணம் இத்தலைவி மற்றும் உறுப்பினர்கள் அவர்களுக்காக இல்லாமல் மக்களாகிய நமக்காகத்தான் பாடுபடுகிறார்கள் என்பதை மனதில் ஆழ பதியவேண்டும்.

இக்காலக்கட்டத்தை விட்டோமானால் இது போன்ற ஓர் அழகான அமைப்பு கிடைப்பது மிக மிக கடினம்! அல்லாஹ் நமது காயலின் மறுமலர்ச்சிக்கு இவர்கள் மூலம் அருள் பாளித்துல்லான் என்பதில் சந்தேகமில்லை!

உறங்கியது போதும் காயலா!
விரைவில் விழித்தெழு காயலா!
வினோதமான வித்தைகளை விட்டு!
வரலாற்றில் சாதனைகளை வித்திடு!

வஸ்ஸலாம்.

இவன்,
முகியதீன் அப்துல் காதர்,
அபுதாபி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Good things take time to reach people
posted by Riyath (HongKong) [02 May 2012]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 18619

Less crowd during 'solution to people problem' meeting is because of I assume people widely unaware of such meeting taken place in Red star ground this month and if that so then no one can blame them.

In current situation, practically speaking, People stonrgly believe that politician wont do any good things with out taking advantage or people thinking of why wasting valuable time. This situation will change only the time will come when people realize the good things are happening for them.

In my thoughts, The issue is not only with people, its also with organizers. If say election is coming in few days, then candidates would visit all houses, distributing notice leaf, advertisement and doing all attractive things to grab votes.

Why cant think about such activities after election to encourage people to attend this usefull meeting instead of blaming poeple for whom the ward councliers socially volunteered to work. World wont change without changing ourselves.

Continue this monthly scheduled meeting with/without croud to achive good result, oneday in near future people realize and join with good hand.

Our leaders are best in the world and hope reach this message to people as like i felt today.

**Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நகர்மன்றத் தலைவரின் மக்கள...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [02 May 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18620

ஒரு நகரமன்ற தலைவி நகரின் நலம் காக்கும் பொருட்டு கூட்டிய கூட்டத்திற்கு இவ்வளவு குறைந்த "ரெஸ்பான்ஸ்" இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

தயங்க வேண்டாம் தொடர்ந்து பணி புரியுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. சும்மா கண் தூசி தொடைப்பு கூட்டம்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல்) [02 May 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18622

மக்கள் குறை தீர்க்கும் கூட்டமா...!

இப்படி பல கூட்டங்களை பார்த்தாச்சி... ஒரு குறையும் சரி செய்த மாதிரி தெரியவில்லை...

சும்மா கண் தூசி தொடைப்பு கூட்டம்...

நகராட்சி செய்ய வேண்டிய கி.மு கச்சேரி தெரு முனையில் அமைந்திருக்கும் திறந்த வழி குடிநீர் அடைப்பான் தொட்டிகளை ஐந்தாம் வார்டு நகர்மன்ற உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தம் சொந்த செலவில் செப்பனிடுகிறார்..

அப்பகுதி மக்களும் கடந்த பல மாதங்களாக தனியாகவும்... அந்த வார்டு உறுப்பினர் மூலம் பல முறை மனு கொடுத்தும் சரி செய்யப்படவில்லை..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நகர்மன்றத் தலைவரின் மக்கள...
posted by NOOHU U (Hong Kong) [02 May 2012]
IP: 168.*.*.* Hong Kong | Comment Reference Number: 18626

No CROWD, because No MEGA

Dear MEGA members you had promised after election still serve for KAYAL, what happened now ?

Dear Admin
I hope you will approve this comment


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. புரிந்துகொள்ள சில தகவல்கள்...
posted by S.K.Salih (Kayalpatnam) [02 May 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18627

இச்செய்திக்கு கருத்துப்பதிவு செய்துள்ள சில அன்பர்கள், இக்கூட்டம் பொதுமக்களுக்காக நடத்தப்பட்டது என்று புரிந்துகொண்டனர்.

மக்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் கூட்டம்தான் இது. நமதூரில், 27 பள்ளிவாசல்கள், சுமார் 15 முதல் 20 பொதுநல அமைப்புகள் உள்ளன. அவற்றின் சார்பில் ஒவ்வோர் அமைப்பிலிருந்தும் ஓரிரு பிரதிநிதிகள் வந்தாலும், 50 பேர்தான் பங்கேற்க இயலும்.

நகர்மன்றத் தலைவர் அவர்கள் இக்கூட்டத்திற்காக, மாதந்தோறும் நம் நகரின் அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநல அமைப்புகளுக்கும் முறையாக கடிதம் மூலம் அழைப்பனுப்பி, கடிதம் பெற்றுக்கொண்டதற்கு கைச்சான்றும் பெறுகிறார். இம்முறையும் அதைச் செய்திடத் தவறவில்லை என்று அறிகிறேன்.

மக்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்கும் இக்கூட்டத்திற்கு அந்தந்த அமைப்புகளுக்கு கடிதம் அனுப்பி ஒப்புதல் வாங்குவது மட்டுமே போதுமாக இருக்கும்.

பொதுமக்களுக்காக நடத்தப்படும் கூட்டம் என்றால் இந்த சிறிய இடம் காணாது. இருக்கைகளும் போதாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re Panchayat President meet at Red Star Society
posted by Hameed Sultan (Kayalpatnam) [07 May 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18704

Assalamu Alaikkum WRBH

I deeply regret that I could not attend this meeting since I overlooked the notice board at Appapalli vassal thinking it is a previous notice.

It was very heartening to note the ‘Open Policy/Administration’ of our beloved President Mrs. Abhida and other ward members. Our best wishes with the dua to fulfil her wishes to overcome all the hurdles she is facing in recent times.

I would like to point out certain things which can be done without any hindrance. For example, we notice lot of water leaks at the valves, underground pipeline leakages in our wards. The underground leakage is more serious since at rainy season when the water supply is stopped , the dirty water from the ground level may seep into the pipes and and logs inside the pipe. When water valve is opened this contaminated water will be carried along with the fresh water and supplied to the households. This requires digging of the road and plugs the leakages with adequate safe chemicals available.

The second one is gland leakages at the opening of water valves. This requires only a minimum effort to tighten the gland’s two nuts. If the leakage persists, we have to put addition gland pickings like graphite impregnated Teflon which will last longer and stops the leakage. This can be done by any plumber.

The administration can request the people in that ward to contribute small amount for this purpose and I can supervise the work free without any cost to undertake this work in our ward no 9 and in solukar /kochiaar street. I am available at our native place till 21st of this month. If the panchayat gives permission I can undertake a sample job at near our water tanks shut off valves (Near Red star Sangam).

Similarly it can be done in other areas. This will save water and avoid water wars in the near future.

Regarding the Solar street lights, it is a good idea except someone should take a responsibility in that area to safe guards the lights and the batteries. My experience in my area where I am working (Maharashtra) lot of lights have been provided by the NGO’s, and all the batteries had been stolen and became non functional. One lamp with the suitable battery may cost around 35,000/- with installation cost.

With that once again I regret my inability to attend the last meeting and my late response for my opinion in this portal.

Zazakullahu Heira.

M.K Hameed Sultan B.E’, M.B.A (IIM A), Maricar Palli street.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved