Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:40:09 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8393
#KOTW8393
Increase Font Size Decrease Font Size
வியாழன், மே 3, 2012
கி.மு.கச்சேரி தெரு குடிநீர் குழாய் திறப்பு தொட்டி, நகர்மன்ற உறுப்பினர் ஜஹாங்கீர் சொந்த முயற்சியில் சரிசெய்யப்பட்டது!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3456 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (22) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}





காயல்பட்டினம் 05ஆவது வார்டுக்குட்பட்ட கி.மு.கச்சேரி தெரு - பிரதான வீதி சந்திப்பிலுள்ள குடிநீர் வினியோகக் குழாய் திறப்புத் தொட்டியின் நடப்பு காட்சிகள்தான் இவை.

பல ஆண்டு காலமாக இவ்விரு தொட்டிகளும், மழை நீர் சேமிப்புத் தளமாகவும், குப்பை கூளங்களை சேகரிக்கும் தொட்டியாகவும் பயன்பட்டு வந்ததை ஏற்கனவே காயல்பட்டணம்.காம் செய்திகளாக வெளியிட்டுள்ளது.

பலரும், பல இடங்களிலும், பல முறைகளிலும் சுட்டிக்காட்டிய பின்பும் இக்குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாமல், அவ்வப்போது அதற்கு புதுப்புது விளக்கம் மட்டும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தரப்பட்டு வந்தது.

இந்நிலையில், புதிய நகர்மன்றம் பொறுப்பேற்ற பின்பு இத்தொட்டி அமைந்துள்ள 05ஆவது வார்டு உறுப்பினராகப் பொறுப்பேற்றுள்ள எம்.ஜஹாங்கீர் பலமுறை இதுகுறித்து நகர்மன்றக் கூட்டத்தில் கோரிக்கை எழுப்பி, அக்கோரிக்கைகள் ஏற்கப்பட்டு தீர்மானம் இயற்றப்பட்ட பின்பும், நகராட்சி நிர்வாகம் இது விஷயத்தில் மந்தப் போக்கையே கடைப்பிடித்து வருவதாகக் கூறிய அவர், தன் சொந்த முயற்சியில் 02.05.2012 அன்று (நேற்று), இத்தொட்டியை பாதுகாப்பான முறையில் செப்பனிடும் பணியை செய்து முடித்துள்ளார்.






Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. தலைவர் மற்றும் ஆணையர் பணி அறைகளை முற்றுகை இட வேண்டும்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல்) [03 May 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18632

ஒரு பொறுப்புள்ள நகராட்சி நிர்வாகம் சரி செய்து கொடுக்க வேண்டிய வேலையை நகராட்சி நிர்வாகம் சரி செய்து கொடுக்க முடியாமல் அதை அந்த வார்டு உறுப்பினரே தனது சொந்த செலவில் சரி செய்ய கூடிய அளவுக்கு நமது நகராட்சி நிர்வாகம் ஊனமுற்று விட்டதா...?

இப்படியே அணைத்து குறைகளையும் சீர் செய்யாமல் கிடப்பில் போட்டு அவரவர்கள் தனது சொந்த செலவில் செய்து கொள்ளட்டும் என்ற எண்ணம் நமது நகராட்சிக்கு வந்து விட்டது....

சகோதரர்.. உறுப்பினர் ஜகாங்கீர் அவர்கள் செய்தது இது மிக பெரிய மோசமான முன் உதாரணம் என்றே நான் கருதுகிறேன்....

இனி அனைத்தையும் இப்படியே தனது சொந்த செலவில் சரி செய்து கொள்வார்கள் என்ற போக்கு நிர்வாகத்திற்கு வந்து விடும்...! விட்டது போலே தோன்றுகிறது...! நமது வரி பணத்தை வாங்கி என்ன செய்கிறார்கள்...

குறைகள் கிடக்கும் அந்த தெரு மக்களை ஓன்று திரட்டி நகராட்சி முன் போராட சகோதரர்.. உறுப்பினர் ஜகாங்கீர் அவர்கள் அழைத்து போக வேண்டும்... தலைவர் மற்றும் ஆணையர் பணி அறைகளை முற்றுகை இட வேண்டும்...

சும்மா வேலைகள் இல்லாமல் விட்டிக்காக நகர சங்கங்களில் மக்கள் குறை கேட்பு கூட்டம் என்ற பெயரில் வெட்டி கூட்டங்கள் போடுவதை தவிர்க்க பட வேண்டும்...

போன முறை குறை கேட்பு கூட்டத்தில் குறைகளை சரி செய்ய கி.மு.கச்சேரி தெரு மக்கள் சார்பாக கொடுத்த மனுக்கு குறை சரி செய்ய பட வில்லை என்பது குறிப்பிடதக்கது...

என்ன நிர்வாகமோ பொறுத்து இருந்து பார்போம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வாழ்த்துக்கள்
posted by Habeeb Mohamed (Doha - Qatar) [03 May 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 18633

உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:கி.மு.கச்சேரி தெரு குடிநீ...
posted by S.A.HABEEB MOHAMED NIZAR (JEDDAH - K.S.A.) [03 May 2012]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18635

அன்பு தம்பி ஜகாங்கிர் அவர்களுக்கு கீ.மு.கச்சேரி தெரு , மக்கள் சார்பாக நன்றியை தெரிவிக்கிறோம்... தங்கள் சமுக பனி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்...

வல்ல நாயன் தங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், பரக்கத்தையும், தருவானாக ....ஆமின்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:கி.மு.கச்சேரி தெரு குடிநீ...
posted by hylee (colombo) [03 May 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 18636

பணி தொடர வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:கி.மு.கச்சேரி தெரு குடிநீ...
posted by Soofi Ibrahim (Riyadh) [03 May 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18637

ரொம்ப சந்தோஷம் ஜகாங்கிர், தெரு சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:சபாஸ்டா தப்பி ஜகாங்கீர்!
posted by OMER ANAS (DOHA QATAR.) [03 May 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 18638

ஒரு நல்ல உறுப்பினரை 5 ஆவது வார்டு மக்கள் தேர்ந்து எடுத்தது வீண் போகவில்லை. உண்மையில் அல்லாஹ் உனக்கு என்றும் துணை நிற்ப்பான். சபாஸ் தம்பி சபாஸ்!

ஆயிரம் கை மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. வாக்குகள் தந்தே யார் ஏமாற்றினாலும், தம்பியின் தொண்டு இனியும் ஓயப்போவதில்லை!

வீண் பேச்சும்,வெற்றுக் கூட்டமும்,செயலின்மேல் இருந்தால்,தம்பி ஜகாங்கீர் போல் நமது பஞ்சாயத்தும் முன்னேறும், இல்லையேல் வெளிப்படையான நிவாகம் என்று கூறி கூறியே கிடந்தது நாரும்!

ஏதோ ஒரு பழமொழி சொல்வாங்களே,எல்லோரும் சந்தைக்கு போறாங்கன்னு ...................? போச்சாம். அது போலத்தான் இருக்கு. நம் பஞ்சாயத்து லச்சணம். உண்மையை சொன்னா பொத்துக்கொண்டுவரும் சிலருக்கு. என்ன செய்ய சொல்லித்தான் ஆக வேண்டும்.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:கி.மு.கச்சேரி தெரு குடிநீ...
posted by Fuad (Singapore) [03 May 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 18639

சகோதரர் ஜகாங்கீர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும்,வாழ்த்துக்களும். சகோதரர் தமிழன் முத்து இஸ்மாயில் அவர்களின் கருத்துக்களை நான் அப்படியே வழிமொழிகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:கி.மு.கச்சேரி தெரு குடிநீ...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [03 May 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 18641

தம்பி ஜஹாங்கீர் அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். காயல் நகர்மன்றதிற்கு இது வெட்கமாக இல்லையா ?? இன்னும் நல்லா சொல்ல வருகிறது.... ? ஆனா நம்ம அட்மின் அண்ணா கட் சொல்லிடுவாரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:கி.மு.கச்சேரி தெரு குடிநீ...
posted by M.Jahangir (Kayalpatnam) [03 May 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 18643

அன்புள்ள சகோதரர் முத்து இஸ்மாயில் அவர்களே... தாங்கள் சுட்டிக் காட்டியது போல் இது தவறான முன்உதாரணம் என்றால் எப்போது இந்த பாதாளகுழிக்கு விடிவுகாலம் பிறப்பது? இக்குழியில் விழுந்து அடிபட்டவர்களிடம் நீங்கள் இந்த கருத்தினை கூறிப்பாருங்கள், யார் இப்பணியினை செய்தார்கள் என்பது முக்கியம் அல்ல, இப்பணி முக்கியமானதுதானா என்பதை மட்டும்தான் பார்க்க வேண்டும்.

நான் நகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பே இந்த வால்வு தொட்டி மூடிகள் உடைந்துவிட்டன. இதனை சரிசெய்ய நகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதன் முதலில் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது.

பலமுறை டெண்டர் விடப்பட்ட போதிலும் இப்பணியினை எந்த டெண்டர்காரர்களும் எடுக்க முன்வரவில்லை. இறுதியாக கடந்த மாதம் 23-ந் தேதியும் டெண்டர் விடப்பட்டு இருந்தது. அதிலும் யாரும் இப்பணியை செய்ய முன்வராததால் இனிமேல் நம் மக்கள் அப்படுகுழியில் விழுவதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க இயலாது என்ற எண்ணத்திலேயே இதற்கு மூடி அமைக்கும் முயற்சியை நான் கையில் எடுத்தேன்.

சரி நட்புடன் தமிழர் அவர்களே தாங்கள் இவ்வளவு அற்புதமாக தங்கள் கருத்துக்களை இணையதளத்தில் சமூக அக்கறையோடு பதித்து வருகின்றீர்களே... நீங்கள் ஒப்பந்ததாரராக பதிவு செய்து இதுபோன்ற பணிகளை எடுத்தால் அதுபெறும் சமூகசேவையாக இருக்கும்.

ம.ஜஹாங்கிர்,
5-வது வார்டு உறுப்பினர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:கி.மு.கச்சேரி தெரு குடிநீ...
posted by Peena Abdul Rasheed (Riyadh) [03 May 2012]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18645

வீண் பலி எழுதி ஊர் தலைவரை ஏளனம் அடிக்க வேண்டாம். அன்பானவர் இந்த 6 மாதத்தில் என தான் செய்ய முடியும் ? பொறுத்து இருந்து பார்போம் . ஆக்க பொறுத்தவர் ஆற பொறுங்கள் காத்து இருபோம் இன்ஷால்லாஹ் காலம் பதில் சொல்லும்.

பீனா அப்துல் ரஷீத்
பதாஹ் ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:கி.மு.கச்சேரி தெரு குடிநீ...
posted by Seyed Mohamed (Seyna) (Bangkok) [03 May 2012]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 18646

அஸ்ஸலாமு அழைக்கும்,

சகோதரர்.. உறுப்பினர் ஜகாங்கீர் அவர்கள் செய்தது இது மிக பெரிய மோசமான முன் உதாரணம் என்றே நான் கருதுகிறேன்...(COPY PASTE)

இந்த கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

காரணம் , இந்த வேலையை பொதுமக்கள் செய்தால் வாழ்த்துக்கள் விடுஒம் வார்டு மெம்பெர் செய்தால் மோசமான உதாரணம் என்று சொல்லுவதா , வர்டுமேம்பேர் செய்தது சரி ,

இத்தனை வருடங்கள் , இத்தனை தலைவர்கள் வந்தார்கள் யாரும் கண்டு கொள்ளாததை இந்த இளைய வர்டுமேம்பேர் செய்து காதி இருகிறார் , வாழ்த்துக்கள் இவரை வார்டு மெம்பர எங்களுக்கு கிடைத்தது சந்தோசம் ,

உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் ,
உங்களுக்கு நாங்கள் துணி இருப்போம்
இது போன்று பல தெய்ருகளில் கிடக்கின்றது , அத்துணையும் சரி செய்து காட்டுங்கள் , இதற்கு சிலவாகும் பணத்தில் நானும் பங்கு கொல்கி ரெய்ன் ,

கொசு இது போன்ற தொட்டிகளில் இருந்து தான் வருகின்றது
நோய் இது போன்ற தொட்டி களில் இருந்து தான் பரவுகின்றது

உறுப்பினர் ஜஹாங்கீர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க

இப்படிக்கு

Seyed Mohamed (Seyna)
Kayal Ikiya Mandram (KIM)
Bangkok Thailand


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:கி.மு.கச்சேரி தெரு குடிநீ...
posted by kulam.kabeer (chennai) [03 May 2012]
IP: 113.*.*.* India | Comment Reference Number: 18648

அஸ்ஸலாமு அழைக்கும்

Good job.....very happy to see the work done but some dis appointment that it was done by his own interest(money)....i wish him to continue his social work.....wasalam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. அவரவர் கைகாசு போட்டு இனி எல்லா குறைகளையும் செய்து கொள்ளுங்கள்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல்) [03 May 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18649

தம்பி ஜகாங்கீர் அவர்களின் விளக்கம் சரியானது உங்களை பாராட்டுகிறேன்.. இதோ உங்கள் விளக்கம்:- நம் மக்கள் அப்படுகுழியில் விழுவதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க இயலாது என்ற எண்ணத்திலேயே இதற்கு மூடி அமைக்கும் முயற்சியை நான் கையில் எடுத்தேன்.

இப்படி எத்தனை மூடி அமைக்கும் முயற்சியை (பணியை) கையில் எடுப்பீர்கள்...?

எனது கேள்வி... நமது நகராட்சி நிர்வாகம் ஊனமுற்று விட்டதா...?

அப்படுகுழியில் விழும் நம் மக்களில் சில பேர்களை அழைத்து நகராட்சி முன் போராட்டம் நடத்த வேண்டும்... என்னையும் அழைத்து கொள்ளுங்கள்

தாங்கள் செய்தது நன்மையான காரியம் அதை மறுக்கவில்லை...தாங்கள் செய்து முடித்த இந்த முயற்சிக்காக (பணிக்காக) நன்மைக்காக பல பேர் உங்களுக்கு துவா செய்வார்கள் (நான் உட்பட) அதில் சந்தேகம் இல்லை.. ஆனால் இதுவே நமது நகராட்சிக்கு தொடர் கதையாகி விடக்கூடாது என்ற அடிப்படையில் தான் எனது கருத்தை பதிவு செய்தேன்...

இந்த மூடி அமைக்கும் சிறிய பணியை நிர்வாகம் டெண்டரை தான் எதிர்பார்க்கனுமா...?

டெண்டர் இல்லாமல் நிர்வாகம் நேரடியாக (தாங்கள் செய்து முடித்தது போல்) செய்ய முடியாதா..?

ஆக மொத்தத்தில் சகோதரர்.. உறுப்பினர் ஜகாங்கீர் அவர்கள் செய்தது இது மிக பெரிய மோசமான முன் உதாரணம் என்றே நான் கருதுகிறேன்.... முதலில் இதை அவசரமாக சரி செய்து தரும்படி மக்களை திரட்டி நகராட்சியை முற்றுகை போராட்டம் செய்து இருக்க வேண்டும்... மனு கொடுத்து ஒரு காரியமும் உருப்படியாக நடக்க போவது இல்லை...

போராட்டம்....போராட்டம்...போராட்டம்... இது இல்லாமல் இந்த நகராட்சியில் எதுவும் நடக்காது... இல்லை எனில் அவரவர் கைகாசு போட்டு இனி எல்லா குறைகளையும் செய்து கொள்ளுங்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:கி.மு.கச்சேரி தெரு குடிநீ...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [03 May 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18650

அஸ்ஸலாமு அழைக்கும்.

நமது அன்பு சகோதரர் ஜஹாங்கீர் அவர்களின் இந்த செயல் பாடு மிக சிறப்பானது தான். பொதுவாக நம்மிடம் குறை கூறுவது தான் அதிகம் உள்ளதே தவிர ....... நம் நகர்மன்ற உறுப்பினர் ஜஹாங்கீர் சொந்த முயற்சியில் இதை சரி செய்தாரே என்று எண்ணி நம் மக்கள் அவரை பாராட்டுவது இல்லை.தயவு செய்து நம் ஊருக்கு நல்லது செய்ய கூடிய நமது நகர்மன்ற உறுப்பினர் யாவர்களையும் மக்கள் ஆகிய நாம் தான், தலைவி & உறுப்பினர் யாவர்களையும் ஊக்குவித்து. இவர்களுக்கு சப்போட்டாக இருக்கணும்.

நம் அன்பு சகோதரர் ஒருவர் குறை கூறி உள்ளார் . அதாவது.நமதூர் ஜமாத்து தலைவர் + ஊர் பொது மக்கள் & நல்ல காரியங்கள் செய்ய கூடிய சங்கங்கள். இவர்கள் யாவர்களையும் ஒன்றாக கூட்டி நடத்தி வருகின்ற நம் நகர்மன்ற தலைவி அவர்களின் நல்ல செயல் பாட்டை தான். ஓரு சில மனு மீதான நடவடிக்கைகள் கால தாமதம் ஆகத்தான் செய்யும். நிச்சயம் நம் மக்களின் குறைகளை இப்போதைய தலைவி + உறுப்பினர்கள் யாவர்களும் நீக்குவார்கள் என்று நம்புவோமாக.

பொதுவாக நம் உழைப்புக்கு முதலே ***** நம்பிக்கை தான் ***** அதுபோல் நாம் இவர்களை நம்புவோமாக.

அருமை சகோதரர் .ஜஹாங்கீர் அவர்களின் நல்ல செயல்பாடுகள்.மென் மேலும் தொடர எங்களின் நல் வாழ்த்துக்கள்.மிக முக்கியமான பகுதியாக இருப்பதால் எல்லா மக்களின் துவா நிச்சயம் உங்களுக்கு உண்டு.

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. இன்னும் நிறைய தெரிய வேண்டும்...
posted by S.K.Salih (Kayalpatnam) [03 May 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18651

நகராட்சி நிர்வாகத்திற்கென நிறைய சட்டதிட்டங்கள் உள்ளன. தனிமனிதர் ஒரு காரியத்தைச் செய்கையில், அதற்கு அரிதாக ஏற்படும் எதிர்ப்பின் வீரியத்தைப் பொறுத்தே சட்டம் குறுக்கே வரும். ஆனால், நகராட்சி போன்ற உள்ளாட்சித் துறை (அரசுத்துறை) நிர்வாகங்கள் அதுபோன்று அலட்சியமாக குருட்டாம்போக்கில் செய்து விட முடியாது என்பது எனக்கும் தாமதமாகத்தான் விளங்கியது.

டெண்டர் இன்றி நகராட்சியில் இதுபோன்ற சிறு காரியத்தைக் கூட செய்யவியலாது என்பதை விளங்க - ”நேரப்போக்கு”க்காக கருத்தெழுதும் அன்பர்கள் புரிய இன்னும் கூட கால தாமதமாகலாம். நாம்தான் அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:கி.மு.கச்சேரி தெரு குடிநீ...
posted by S.A.Muhammad Ali (Dubai) [03 May 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18653

மீண்டும் அதே பணிக்கு டெண்டர் விட்டு நண்பர் ஜஹாங்கிருக்கு எவ்வளவு செலவு ஆனதோ அதை அவருக்கு கொடுத்தால் நல்லது. இந்த பணி முடிந்து விட்டாலும், ஊர் நன்மையை கருதி அவர் செய்த உதவிக்கு அவருக்கு நஷ்டம் ஏற்படாமல் பார்த்து கொண்டால் இனிமேல் இது போன்ற காரணங்களுக்காக காலதாமதம் ஆகாமல் அவரே உடனுக்குடன் ஏற்பாடு செய்ய இது ஒரு நல்ல உதாரணமாக அமையும்.

ஒப்பந்ததாரராக பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும் என்று தெரியபடுத்தினால் நானும் பதிவு செய்து கொள்கிறேன். தீர விசாரிக்காமல், வேரை மறந்த விழுதை போல் பிறரை பற்றி அவதூறு கூறுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

--------------------------

அல்லாஹ் கூறுகிறான்:-

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. பிரச்சனை நகராட்சி அல்ல... டெண்டர்கள் எடுக்கபடாததே!!
posted by Salai.Mohamed Mohideen (USA) [03 May 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 18654

குடிநீர் குழாய் திறப்பு தொட்டியை தன சொந்த பணத்திலேயே சரி செய்த நண்பர் & கவுன்சிலர் ஜஹாங்கிர்க்கு நன்றிகள்.வல்ல இறைவன் இதற்கான நற்கூலியை தருவானாக!!

" தீர்மானம் இயற்றப்பட்ட பின்பும், நகராட்சி நிர்வாகம் இது விஷயத்தில் 'மந்தப் போக்கையே' கடைப்பிடித்து வருவதாகக் கூறிய அவர்... " என்று செய்தியில் படித்தவுடன், நகராட்சியின் மீது தவறுள்ளது போல் தோன்றியது. பின்னர் கீழே உள்ள ஜகாங்கீர் அவர்களின் கமண்ட்டை படித்தவுடன் தான் விளங்கியது, இது டெண்டர் விவகாரம் என்று. செய்தியை தரும்போது 'முழுமையாக' தந்தால் குழப்பங்களை தவிர்க்கலாம்.

" முதன் முதலில் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது. பலமுறை டெண்டர் விடப்பட்ட போதிலும் இப்பணியினை எந்த டெண்டர்காரர்களும் எடுக்க முன்வரவில்லை. இறுதியாக கடந்த மாதம் 23-ந் தேதியும் டெண்டர் விடப்பட்டு இருந்தது. அதிலும் யாரும் இப்பணியை செய்ய முன்வராததால்...."

டெண்டர் விடப்பட்டும் அதை எவரும் எடுக்க முன்வராததிட்கும் நகராட்சியை குறை சொல்லுவதில் நியாமில்லை. டெண்டர் இன்றி நகராட்சியில் இதுபோன்ற சிறு காரியத்தைக் கூட செய்யவியலாது என்பதற்க்கு இது மற்றுமன்றி, நகர்மன்ற தலைவருக்கான அறையை சரி செய்ய 'நான்கு' முறை டெண்டர் (2 .5 லட்சம்) விடப்பட்டும் அதையும் எவரும் எடுக்க முன்வரவில்லை.

பிரச்சனை நகராட்சி அல்ல... டெண்டர் எடுப்பதில் / எடுப்பவர்கள். இதற்க்கான தீர்வை கண்டறிய வேண்டும். சிறு வேலைக்கான டெண்டர்கள்... பெரிய டெண்டர்கள் (ரோடு கான்ட்ராக்ட்) போன்று கொள்ளை லாபம் தராத டெண்டர்கள் என்பதினால் அவைகள் எவராலும் எடுக்க படுவதில்லையோ என்னவோ? இது போன்ற சிறு அல்லது கொள்ளை லாபம் தராத கான்ட்ராக்ட்களை பெரிய கான்ட்ராக்ட் (Ex : ரோடு கான்ட்ராக்ட்) களுடன் சேர்த்து விடுங்கள். அப்பத்தான் வேறு வழியில்லாமல் இவைகளையும் எடுத்து செய்வார்கள்.

பல முறை டெண்டர் விடப்பட்டும் அதை எவரும் எடுக்க முன்வர வில்லையென்றால் அதற்காக அப்படியே கிடப்பில் போடுவதைத்தவிர வேற வழியில்லையா??? நகராட்சியே அதனை எடுத்து செய்வதற்க்கு வழி இருக்கிறதா அல்லது அதற்க்கு மாற்று வழி என்ன. சட்ட விதி என்ன சொல்கின்றது?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:கி.மு.கச்சேரி தெரு குடிநீ...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [04 May 2012]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 18655

Ref :Comment Reference Number: 18651

”நேரப்போக்கு”க்காக கருத்தெழுதும் அன்பர்களுக்கு அறிவுரைகூரும் சகோதரருக்கு , நகர் மன்ற தலைவரின் அறையை புனரமைக்கும் பணிக்கும் இதுபோன்ற நடைமுறைகளைதான் கையாள வேண்டியதிருக்கும் என்ற விதி முறை தெரியாதா?

அதற்க்கு யாரோ ஒருவர் தடையாக இருப்பதுபோன்ற தோரணையில் செய்தியாக வெளியிட்டு தலைவிக்கு ஆதரவாக பெரிய விளம்பரம் தேடிகொடுக்க வேண்டுமா?

இதற்கு ஆதரவு எதிர்ப்பு என் பல கருத்துக்கள் வேறு!

மிகைபடுத்தப்பட்ட ஆதரவு கருத்தை பிரசுரிப்பது . எதிர் கருத்தை காரணமின்றி நிராகரிப்பது. இதுதான் நீங்கள் செய்யும் பத்திரிக்கை தர்மமா?

Administrator: நகர்மன்றத் தலைவரின் அறை குறித்த - செய்தியின் பின்னணி, அச்செய்தியிலேயே - தெளிவாக்கப்பட்டுள்ளது. அறையினை புனரமைக்க - இருமுறை டெண்டர் விடப்பட்டப்பின்னும் எவரும் அதை எடுக்கவில்லை. ஏப்ரல் மாதம் புதிதாக வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பில் - நிலுவையில் உள்ள நகர்மன்ற தலைவரின் அறை குறித்த டெண்டர் இணைக்கப்படாததே - அச்செய்தி வெளியிட காரணம். எமது இணையதளத்தை பொறுத்தவரை - காயல்பட்டினம் நகராட்சியின் தலைவர் என்பவர் பெருவாரியான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் பணிபுரிய அவருக்கு 6 மாதங்கள் ஆகியும் - அறை வழங்காமல் இருப்பது, இணையதளத்தை பொறுத்தவரை - மக்கள் அறிய வேண்டிய செய்தி. அதன் அடிப்படையிலேயே செய்தி வெளியிடப்பட்டது.

ஒரு செய்தியின் முக்கியத்துவம் குறித்த முடிவு செய்வது ஆசிரியர் குழுவின் முழு உரிமை. ஒவ்வொரு செய்தியும் வெளியிடும்போது அதற்கு உள்நோக்கம் கற்பிப்பது சரியாக தெரியவில்லை. ஊடகம், அதன் ஆசிரியர்/செய்தி வழங்குவோர் குழு, வாசகர்கள் குழு என்பது - ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வட்டம். ஒவ்வொரு செய்தியையும் வெளியிடும்போதும், ஒவ்வொரு கருத்தினை வெளியிடும்போதோ / நிராகரிக்கும்போதோ - அதற்கு உள்நோக்கம் கற்பிக்கப்பட்டு, அதற்கு விளக்கம் அளிக்க நிர்பந்திப்பது, ஈமெயில் மூலம் அவதூறுகளை பரப்புவது - போன்ற செயல்கள் முறையில்லை.

நியாயமான கருத்துக்களுக்கு காயல்பட்டணம்.காம் என்றும் இடம் கொடுக்கும். கொடுத்துள்ளது. இதற்கு நூற்றுக்கணக்கான வாசகர்கள் சாட்சியளிப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம். காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் அனைத்து கருத்துக்களுக்கும் இடம் உண்டு. ஆனால் அனைவரின் கருத்துக்களுக்கும் அல்ல. இதில் உள்ள வித்தியாசத்தை - வாசகர்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறோம். கருத்துக்கள் கூறுகிறோம் - என அர்த்தமற்ற, ஆதாரமற்ற விமரசனங்களுக்கு - மேடையாக இவ்விணையதளம் என்றும் அமையாது.

நேரப்போக்குக்கு எழுதும் சிலர் என எமது செய்தியாளர் எஸ்.கே.ஸாலிஹ் - கூறியதற்கு காரணம் - சில கருத்துக்களை பதிவு செய்துவிட்டு, அதே வாசகர்கள் - பிரச்சனையை கிளப்பத்தான் எழுதினேன், சுவாரசியமாக போகுமே என்றுதான் எழுதினேன் என அவரிடம் நேரில் கூறியதுதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:கி.மு.கச்சேரி தெரு குடிநீ...
posted by Fuad (Singapore) [04 May 2012]
IP: 203.*.*.* Singapore | Comment Reference Number: 18656

தம்பி சாலிஹின் கருத்துக்களை வன்மையாக ஆட்சேபிக்கிறேன். கருத்துக்கள் தெரிவிப்பது போழுதுபோவதற்கோ அல்லது எங்கள் பெயர் வலைதளத்தில் வரவேண்டும் என்ற எண்ணத்திலோ அல்ல என்பதை தம்பி ஸாலிஹ் புரிந்து கொள்ளவேண்டும். எல்லா வேலைகளுக்கும் நகராட்சி டெண்டர் விட்டுத்தான் செய்யவேண்டும் என்பது எங்களுக்கும் தெரியும். Some important & exceptional case ல் தலைவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சிறு வேலைகளை டெண்டர் இல்லாமல் செய்யலாமே?

சகோதரர் தமிழன் முத்து இஸ்மாயில் தெரிவித்த கருத்து நியாயமானதே. இதே மாதிரியான கருத்ததை (ஆறாம்பள்ளித் தெருவில் ஆரம்பிக்கப்பட்ட குப்பை சேகரிக்கும் திட்டம்) நான் பதிவு செய்திருக்கிறேன்.

இப்படி ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் வார்டிலுள்ள சிறு சிறு வேலைகளை தங்களின் சொந்த செலவில் செய்ய ஆரம்பித்தால் தம்பி ஸாலிஹ் அவைகளை சரிதான் என்று சொல்வாரா?

Administrator: இது சிறு வேலை அல்ல. நகரில் இது போல் பல இடங்களில் வேலைகள் செய்ய ஏழு லட்ச ரூபாய்க்கான டெண்டர் விடப்பட்டது. பார்க்கவும் டெண்டர் எண் 15 [நகராட்சி சிறப்பு பக்கத்தில்].


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:கி.மு.கச்சேரி தெரு குடிநீ...
posted by Muthu Ibrahim (Hong Kong) [04 May 2012]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 18658

ஊர் பொது அமைப்புகள் இனைந்து இது போல் உள்ள சிறிய ஒப்பத்தங்களை கையில் எதுத்து செய்யலாம். நமக்கு லாபநோக்கு இல்லை வேலை சுத்தமாக இருக்கனும் அவளளவுதான் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:கி.மு.கச்சேரி தெரு குடிநீ...
posted by Kaleel Rahman (Chennai) [04 May 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 18662

குடிநீர் குழாய் திறப்பு தொட்டியை தன சொந்த பணத்திலேயே சரி செய்த கவுன்சிலர் ஜஹாங்கிர்க்கு நன்றிகள்.வல்ல இறைவன் இதற்கான நற்கூலியை தருவானாக!!

நாம் இங்கு கருத்துகளை எழுதுவதற்கு பதில் நமதூர் பொது அமைப்புகளின் பார்வைக்கு இந்த டெண்டர் விசயத்தை எடுத்து செல்லலாம் .

டெண்டர் இன்றி நகராட்சியில் இதுபோன்ற சிறு காரியத்தைக் கூட செய்யவியலாது என்பார்கள் ஆனால் பல இலட்சத்திற்கு நமது வரி பணத்தை ஆட்டையை போடுவார்கள்!!!. (வெளிச்சத்திற்கு கொண்டு வந்த kayalpatnam.com க்கு நன்றி)

கவுன்சிலர் ஜஹாங்கிர் போல் அணைத்து கவுன்சிலர்களும் செய்வார்களா? அவர்களின் உதவியை நாடி தான் நமது இரண்டாம் நிலை நகராட்சி உள்ளதா?

இதனை நடைமுறை படுத்துவதற்கு தலைவர் , ஆணையரால் முடியாதா ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:கி.மு.கச்சேரி தெரு குடிநீ...
posted by N.T.S.SULAIMAN (YANBU K.S.A) [10 May 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18778

வாழ்த்துக்கள் .வாழ்த்துக்கள் ...வாழ்த்துக்கள் .....

தம்பி ஜகாங்கிரின் தன்னலமற்ற சேவைக்கு பாராட்டுகள்

உமது சேவை இந்த ஊருக்கு தேவை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved