Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:43:23 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8396
#KOTW8396
Increase Font Size Decrease Font Size
வியாழன், மே 3, 2012
நகராட்சியில் பேருந்து நிலைய வணிக வளாக குத்தகைதாரர்கள் கூட்டம்! குத்தகை சட்டதிட்டங்களை நகர்மன்றத் தலைவர் விளக்கினார்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2805 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஒரு நகராட்சியின் முக்கிய வருமான ஆதாராங்களில் ஒன்று, கடைகள் மற்றும் நிலங்களை குத்தகைக்கு விடுவது. காயல்பட்டினம் நகராட்சியில் குத்தகைக்கு விடப்பட்டுள்ள கடைகளில் பெருவாரியானவை, சந்தை விலைக்குக் குறைந்த அளவிலேயே வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அவற்றுள், காயல்பட்டினம் பேருந்து நிலைய வணிக வளாக கடைகளும் உள்ளடக்கம்.

இவ்வணிக வளாகத்தின் வருமான இழப்பை சரிசெய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கடைகளை குத்தகைக்கு எடுத்திருப்போருடன் கலந்தாலோசனைக் கூட்டம் காயல்பட்டினம் நகராட்சி கூட்டரங்கில், 02.05.2012 அன்று மதியம் 03.00 மணியளவில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமையில் நடைபெற்றது.





இக்கூட்டத்தில், அவர் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு:-



1. குத்தகைதாரர்கள் - தங்கள் வாடகை பாக்கிகளை 15 நாட்களுக்குள் செலுத்தவேண்டும். அதற்கான நோட்டீஸ் உடனடியாக வழங்கப்படும்...

2. 15 நாட்களுக்குள் வாடகை பாக்கியை செலுத்தாவிட்டால் - வாடகை பாக்கி உள்ள கடைகள் - உடனடியாக பொது ஏலம் மூலம் புதிதாக குத்தகைக்கு விடப்படும்...

3. குத்தகைதாரரை தவிர வேறு எவரும் - குத்தகையை அனுபவித்து வந்தால் (பினாமி) - அவர்கள் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும்...

4. தமிழக அரசின் 2007ஆம் ஆண்டு (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை) அரசாணை 92 படி - குத்தகையை வேறொருவர் அனுபவித்து வந்தால் (பினாமி) -அவரின் பெயருக்கே - அதற்குரிய கட்டணம் பெற்று - பெயர் மாற்றம் செய்ய ஒரு முறை சலுகை வழங்கப்படும். இதற்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்...

5. மற்றொருவரின் பெயரில் உள்ள குத்தகையை அனுபவித்து வருபவர் - அதற்குரிய பெயர் மாற்றம் கட்டணம் செலுத்தி, தனது பெயருக்கு மாற்றம் செய்ய முன்வராத பட்சத்தில் - கடையை காலி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு - உடனடியாக பொது ஏலம் மூலம் புதிதாக குத்தகைக்கு விடப்படும்...

6. தற்போது கடைகள் மூலம் பெறப்படும் வாடகை சந்தை விலையை விட குறைவாக உள்ளதால் - புதிய கட்டணமாக சதுர அடிக்கு ரூபாய் 20 என்ற பட்சத்தில் வாடகை நிர்ணயம் செய்யப்படுகிறது...

7. வாடகை பாக்கி இல்லாத குத்தகைதாரருக்கும், குத்தகைதாரரே அனுபவித்து வரும் கடைகளுக்கும் அல்லது வேறுபெயரில் உள்ள கடையை தனது பெயருக்கு மாற்ற கட்டணம் செலுத்த ஒப்புக்கொண்டுள்ள கடைகளுக்கும், புதிய உயர்த்தப்பட்ட,மாதாந்திர வாடகை - ஒப்பந்தம் வழங்கப்படும்...

8. புதிய வாடகையை ஒப்புக்கொண்ட குத்தகைதாரர்களின் குத்தகை புதுப்பிக்கப்படும்...

9. புதிய வாடகையை ஒப்புக்கொள்ள மறுத்த குத்தகைதாரர்களின் குத்தகை ரத்து செய்யப்பட்டு - பொது ஏலம் மூலம் குத்தகை மீண்டும் வழங்கப்படும்...


இவ்வாறு நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, குத்தகை - நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான கடைகள், நிலங்கள் ஆகியவற்றை குத்தகைக்கு விடுதல் - குத்தகையை புதுப்பித்தல் குறித்த பின்வரும் அரசாணையை அவர் கூட்டத்தில் கலந்துகொண்டோரிடம் அளித்தார்.

விதிமுறைகள்:

1. முதல் தடவையாக குத்தகைக்கு விடப்படும்போது நகராட்சியின் அசையா சொத்துக்கள் அனைத்தும் பொது ஏலத்தின் மூலமாக குத்தகைக்கு விடப்பட வேண்டும்.

2. நகராட்சிக் கடைகள், ஒரே நேரத்தில் மூன்றாண்டு காலத்திற்குக் குத்தகைக்கு விடப்படலாம். மூன்று ஆண்டு கால அளவு முடிவடைவதன் பேரில், அக்குத்தகை தன்னியல்பாகவே (automatically) புதுப்பிக்கப்படும். இவ்வாறாக ஒன்பதாண்டுகள் வரை புதுப்பிக்கப்படும்.

3. மூன்றாண்டுக்கு ஒரு முறை குத்தகைத் தொகை 15 சதவீதம் உயர்த்தப்படும்.

4. ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர், குத்தகை வாடகை மறுமதிப்பீடு செய்யப்படவேண்டும்.

5. தற்போதைய குத்தகைதாரருக்கு அப்போதைய அங்காடி மதிப்பின் அடிப்படையிலான திருத்தியமைக்கப்பட்ட குத்தகை வீதத்தில், மேற்கொண்டு 9 ஆண்டுகளுக்கு குத்தகை கால் அளவை நீட்டித்து கொள்ள முன்னுரிமை அளிக்கலாம்.

6. அவர் ஒப்புக்கொள்ளவில்லையானால், அச்சொத்து பொது ஏலத்தின் மூலம் குத்தகைக்கு விட வேண்டும்.

மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை செய்யவேண்டியவை:

குத்தகை மூன்றாண்டு காலம் முடிந்து தன்னியல்பாகவே புதுப்பிக்கப்படும்போது கீழ்க்காணும் விஷயங்கள் செய்யப்படவேண்டும்:

1. வாடகை 15 சதவீதம் உயர்த்தப்படவேண்டும்.

2. புதுப்பித்தல் கட்டணம் கீழே விவரிக்கப்பட்டுள்ள வகையில் பெறப்படவேண்டும்.



ஒன்பதாண்டுகளுக்கு ஒரு முறை செய்ய வேண்டிவை:

1. ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர், குத்தகை வாடகை மறுமதிப்பீடு செய்யப்படவேண்டும்.

2. தற்போதைய குத்தகைதாரருக்கு அப்போதைய அங்காடி மதிப்பின் அடிப்படையிலான திருத்தியமைக்கப்பட்ட குத்தகை வீதத்தில், மேற்கொண்டு 9 ஆண்டுகளுக்கு குத்தகை கால் அளவை நீட்டித்து கொள்ள முன்னுரிமை அளிக்கலாம்.

3. அவர் ஒப்புக்கொள்ளவில்லையானால், அச் சொத்து பொது ஏலத்தின் மூலம் குத்தகைக்கு விட வேண்டும்.

பெயர் மாற்றம்:

குத்தகைதாரரை தவிர பிறர் அனுபவித்து வந்தால் - ஒரு முறை சலுகையாக, தற்போது அனுபவிப்பவர் பெயருக்கே - குத்தகையை மாற்றலாம்

1. விண்ணப்பதாரர் (தற்போது அனுபவித்து வருபவர்) 12 மாதங்களுக்குரிய மாதந்திர குத்தகை தொகைக்கு சமமான தொகையை முன்பணமாகச் (12 Months Advance) செலுத்த வேண்டும்.

2. மேலும், கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு குறையாமல், கூடியாதாக 12 மாத வாடகைக்கு சமமான தொகையை பெயர் மாற்ற கட்டணமாக (Name Change Fee) செலுத்த வேண்டும் (whichever is higher)



வாரிசுதாரருக்கு பெயர் மாற்றம்:

குத்தகைதாரர் காலமாகிவிட்டால் - அவரின் வாரிசுகளான கணவன் அல்லது மனைவி அல்லது குழந்தைகள் பெயருக்கு குத்தகையை மாற்றலாம்

1. வாடகை பாக்கிகள் ஒன்று இல்லாமல் முழுவதும் முதலில் செலுத்த வேண்டும்.

2. உள்ளாட்சி மன்றம் - அவ்வப்போது நிர்ணயிக்கும் குத்தகைத் தொகையைச் செலுத்த ஒப்புதல் அளிக்க வேண்டும்.

3. பெயர் மாற்றம் கட்டணமாக ரூபாய் 500 செலுத்த வேண்டும்.


இவ்வாறு அந்த அரசானை அமைந்துள்ளது.

நகர்மன்றத் தலைவர் தெரிவித்த கருத்துக்களைக் கேட்டறிந்த வணிக வளாக குத்தகைதாரர்கள் மற்றும் கடைக்காரர்கள் இதுகுறித்து தமக்குள் கலந்தாலோசித்துவிட்டு விரைவில் கருத்து தெரிவிப்பதாகத் தெரிவித்தனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட பலர், வணிக வளாகக் கடைகளைக் குத்தகைக்கு எடுத்தோரிடம் உள் வாடகை அடிப்படையில் கடை நடத்தி வருவோர் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, ஏ.ஹைரிய்யா, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், கே.ஜமால், எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன், இ.எம்.சாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved