Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:33:40 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8380
#KOTW8380
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஏப்ரல் 29, 2012
ஐக்கிய சமாதானப் பேரவை முப்பெரும் விழா: முதல் நாள் நிகழ்ச்சியில் நாஞ்சில் கி.சம்பத் சிறப்புரை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3404 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஐக்கிய சமாதானப் பேரவை சார்பில், உத்தம திருநபியின் உதயதின விழா, அழைப்பியல் நூற்கள் வெளியீட்டு விழா, நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியன அடங்கிய முப்பெரும் விழா இம்மாதம் மாதம் 27, 28, 29 தேதிகளில், காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் உள்ளரங்கிலும், வெளிமேடையிலும் நடைபெற்று வருகிறது.

27.04.2012 அன்று “உத்தம நபியின் உதயதின விழா” என்ற தலைப்பில், துவக்க முதல் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று காலையில், காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் உள்ளரங்கில் பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இரவு 07.00 மணியளவில், ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் அருகிலுள்ள வெளிமேடையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஐக்கிய சமாதானப் பேரவையின் துணைத்தலைவர் மவ்லவீ நெல்லை ஏ.சுலைமான் சேட் தலைமை தாங்கினார். ஹாஜி எஸ்.ஏ.எம்.முஹ்யித்தீன் தம்பி, ஹாஜி சொளுக்கு எஸ்.எம்.கபீர், கவிஞர் ஹாஜி எஸ்.செய்யித் அஹ்மத் மற்றும் நகரப் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.

மாணவர் ஏ.ஆர்.இப்றாஹீம் அப்துர்ரஷீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஐக்கிய சமாதானப் பேரவையின் பரப்புரையாளர் கே.முஹம்மத் ஆஷிக் வரவேற்புரையாற்றினார். தலைமையுரையைத் தொடர்ந்து, மவ்லவீ என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ, மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து, “இந்தியாவில் இஸ்லாத்தின் வருகையும், கலாச்சாரப் புரட்சியும்” என்ற தலைப்பில் ஐக்கிய சமாதானப் பேரவை செய்திப்பிரிவு செயலாளர் மவ்லவீ அப்துர்ரஹ்மான் ஷிப்லீ மிஸ்பாஹீ உரையாற்றினார்.

அடுத்து, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மதிமுக கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் கி.சம்பத், “சமூகத் தீமைகளுக்கு எதிராக நபிகள் நாயகம் (ஸல்)” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.



ஐக்கிய சமாதானப் பேரவையின் அலுவலக மேலாளர் எம்.செய்யித் முஹம்மத் புகாரீ நன்றி கூற, அதன் தலைவர் மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.

காயல் அமானுல்லாஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில், நகரின் பல பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஐக்கிய சமாதானப் பேரவை முப...
posted by mackie noohuthambi (kayalpatnam) [30 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18598

வாழ்த்துரை வழங்குபவர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி பேசிக்கொள்ளும் பழக்கம் நம்மவர்களிடையே பரவலாக காணப்படுகிறது. நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்களுக்கு இது தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது. பேசுகின்றவரை இடை நிறுத்தவும் முடியவில்லை இனி பேச இருப்பவரில் நேரத்தை குறைக்கவும் முடியவில்லை.

குறிப்பாக அப்துர் ரஹ்மான் ஷிப்லி அவர்களின் அற்புதமான புதிய கருத்துக்களை அவர் பேசிக்கொண்டே வரும்போது அவர் இன்னும் பேச வேண்டும் என்று எல்லோரும் நினைதுக்கொண்டிருக்கும்போது அவருடைய நேரம் முடிந்து அவர் அதை சுருக்கிகொள்கிறார். சிறப்பு அழைப்பாளர் பேசிக்கொண்டிருக்கும்போது நள்ளிரவு நெருங்கி விடுவதால் மக்கள் சோர்ந்து விடுகிறார்கள். பேச்சாளருக்கும் மூட் போய்விடுகிறது.

எனவே தமக்கு தரும் நேரத்துக்குள் தனது கருத்துக்களை பேச முடியாது என்று நினைக்கும் பேச்சாளர்கள் முன் கூட்டியே கூட்ட ஒருன்கினைப்பளர்களுடன் கலந்து பேசி அதிக நேரத்தை வாங்கிக்கொள்ள வேண்டும் அல்லது தனக்கு அவர்கள் தரும் இடைவெளியில் பேச முடியாது என்று ஒதுங்கி கொள்ள வேண்டும்.

இந்த இரண்டு நிலையிலும் பேச்சாளரின் மதிப்பு உயரும் என்பதை இந்த இனைய தளம் மூலம் சம்பந்த பட்டவர்களுக்கு பணிவுடன் அறியத்தருகிறேன். நன்றி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஐக்கிய சமாதானப் பேரவை முப...
posted by Askar Ali (jeddah) [03 May 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18631

எங்கள் கீழக்கரை சுற்று வட்டார பகுதிகளில் ஆர்பாட்டம், ஆடம்பரம் இல்லாமல் தஹ்வா (இறை அழைப்பு ) பணியினை ஐக்கிய சமாதான பேரவை சிறப்பாக செயல் பட்டு வருகிறது. அதன் முப்பெரும் விழாவின் நிகழ்சிகளை உங்கள் காயல் பட்டினம் இனைய தளம் மூலம் அறிந்து மிக்க மகிழ்ச்சி.

ஒரு நாள் நிகழ்ச்சி செய்திகள் மட்டும் வந்து இருந்தது.மற்ற இரண்டு நாள் நிகழ்சிகளின் தொகுப்பினை வெளியிட்டால் நலம்.அது போன்று மாற்று மத நண்பர்கள் அறிந்து கொள்ளும் வகையில் நாஞ்சில் சம்பத், பல கருப்பையா, உள்ளிட்ட மாற்றுமத அறிஜர்களின் உரையை உங்கள் காயல் வெப்சைட் அல்லது யுடீப் மூலம் வெளியிட்டால் மிக்க நன்றாக இருக்கும்

அது வகைக்கு தங்களின் விரைவான நடவடிக்கையை ஆவலுடன் எதிர்பார்கிறோம் .

அஸ்கர் அலி
நத்தம், கும்பனமாதுரை கிராமம்
கீழக்கரை சுற்றுவட்டார பகுதி நண்பர்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved