Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:06:05 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8814
#KOTW8814
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுலை 31, 2012
தீ விபத்திற்குள்ளான தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரெயிலில் பயணித்த காயலர் மரணம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5333 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தீ விபத்திற்குள்ளான தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரெயிலில் பயணித்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த வி.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன் என்ற விளக்கு முஹ்யித்தீன் தீயில் கருகி உயிரிழந்தார். விபரம் பின்வருமாறு:-

டில்லியிலிருந்து சென்னை நோக்கி தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரெயில் 29.07.2012 அன்று இரவு 10.00 மணிக்கு புறப்பட்டு, 30.07.2012 அன்று அதிகாலை 04.14 மணிக்கு ஆந்திர மாநிலம் நெல்லூர் விதயபாலம் தொடர்வண்டி நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்து சென்னை நோக்கி ரெயில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அதன் S11 பெட்டியில் தீ கொளுந்து விட்டெரிந்தது. இந்த வண்டியில் பயணித்த பல பயணியர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

இந்த ரெயிலில், காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் விளக்கு ஸாஹிப் என்பவரின் மகன் வி.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன் என்ற விளக்கு முஹ்யித்தீன் பயணித்துள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடா நகருக்கு அருகிலுள்ள ஏலூரில் கடந்த 12 ஆண்டுகளாக மாணிக்க வணிகம் செய்து வந்த இவர், சொந்த ஊரான காயல்பட்டினம் வருவதற்காக, விஜயவாடா ரெயில் நிலையத்திலிருந்து - விபத்து நேர்ந்த தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரெயிலில் சென்னை நோக்கி பயணித்துள்ளார். இவரது நிலை குறித்த தகவல்கள் தீவிரமாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

விபத்தில் இறந்த பயணியர் உடல்களை உறவினர்கள் அடையாளங்காட்டுமாறு தொடர்வண்டித் துறை விடுத்த வேண்டுகோளையடுத்து, விளக்கு முஹ்யித்தீனின் தம்பி அல்தாஃப், மகன் காதிர் ஸாஹிப், சகலை எல்.எம்.இ.கைலானீ, முஹ்யித்தீன் அப்துல் காதிர், பேராசிரியர் தமீமுல் அன்ஸாரீ உள்ளிட்டோர் 30.07.2012 அன்று மாலையில் காயல்பட்டினத்திலிருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் புறப்பட்டுச் சென்றனர்.

அங்கு, தீயில் கருகி இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பகுதிக்குச் சென்ற இவர்கள், விளக்கு முஹ்யித்தீன் அணிந்திருந்த மோதிரம், அவரது சாம்பல் நிற கண் ஆகியவற்றைக் கொண்டு அவரது உடலை அடையாளங்காட்டியுள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம், விளக்கு முஹ்யித்தீன் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தீ விபத்தில் மரணமான விளக்கு முஹ்யித்தீன், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாதின் சகோதரி முஹம்மத் செய்யித் ஃபாத்திமாவை திருமணம் செய்திருந்தார். இத்தம்பதிக்கு காதிர் ஸாஹிப் (வயது 17) என்ற மகனும், அஹ்மத் அர்ஷதா (வயது 11) என்ற மகளும் உள்ளனர். காதிர் ஸாஹிப் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். அஹ்மத் அர்ஷதா ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார்.

இவரது மனைவி முஹம்மத் செய்யித் ஃபாத்திமா மரணித்த பிறகு, மர்ழிய்யா என்ற பெண்ணைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இத்தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

ரெயில் தீ விபத்தில் மரணித்த விளக்கு முஹ்யித்தீனின் உடல் ஆந்திர மாநிலம் நெல்லூரில் நேற்று மாலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது..

தகவல்:
V.S.லத்தீஃப்,
(மறைந்த விளக்கு முஹ்யித்தீனின் சகோதரர்)

படம்:
M.ஜஹாங்கீர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.
posted by Mohamed Salih (Bangalore) [03 August 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 20323

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோன்.

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எனது ஸலாம்.

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் ஸாலிஹ் கே.கே.எஸ் மற்றும்
குடும்பத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by sheikhmohamed (jeddah.) [03 August 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20325

இன்னலிள்ளஹி வ இன்ன இலிஹி ராஜிவூன். யா அல்லா என் நண்பனின் இறப்பு என்னையும் அவர்களை சார்ந்தவர்களையும் மிகவும் பாதித்துள்ளது.யா அல்லா அன்னாருடைய பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சுவனபூங்காவில் சேர்ப்பாயாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ரயில் விபத்து மிக பெரிய அதிர்ச்சியாகவும் துயரமாகவும் உள்ளது
posted by M.A.C. AHAMED THAHIR (NEW DELHI) [03 August 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20326

அஸ்ஸலாமு அழைக்கும். நம் யாவருக்கும் இந்த ரயில் விபத்து மிக பெரிய அதிர்ச்சியாகவும் துயரமாகவும் உள்ளது. அதிலும் காயலர் விளக்கு முஹியுத்தீன் அதில் பயணம் செய்து சிக்கிக்கொண்டார் என்ற செய்திக்கேட்டு மனம் நொந்து நூலாகி விட்டது.

நேற்றைய தினத்தில் இருந்து அதே சிந்தனையில் இருப்பதால் சரியாக தூக்கம் கூட இல்லை. அல்லாஹ் தான் நம் யாவருக்கும் பொறுமை, மன உறுதி, தன்னம்பிக்கை மற்றும் தைரியம் கொடுக்க போதுமானவன்.

நம்மை போன்ற சாதாரண நபர்களே இவ்வளவு கவலையிலும், துக்கத்திலும் ஆள்திருக்கும்பொழுது, அவரின் குடும்பத்தார்கள் எவ்வளவு சோகத்தில் இருப்பார்கள் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. மனது மிகவும் வலிக்கிறது.. கஷ்டமாக உள்ளது...!

அல்லாஹுதஆலா அவரின் உறவினர்களை தன் பொறுப்பில் எடுத்து '' ஸபுருன் ஜமீல்'' என்ற அழகிய பொறுமையை அவர்களின் இதயத்தில் பொருத்துவானாக.. ஆமீன்..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Kaleel (Chennai) [04 August 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 21061

கடந்த 30 ம் தேதி அன்று அதிகாலையில் ஏற்பட்ட தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் கோர தீ விபத்தில் சிக்கி எனது ஆருயிர் நண்பர் விளக்கு வி.எஸ்.முஹம்மது முஹைதீன் மரணமடைந்தார் என்ற துயர செய்தியை கேட்டு மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன்.

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் பாவத்தை மன்னித்து மறுமையில் மேலான சுவனபதியை கொடுத்துதருள்வானாக ஆமீன்!

அவனை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த துக்கத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

பொக்கு எஸ். ஐ. முஹம்மது முஹியித்தீன் (ரம்ஜான்)
Chennai


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by mohideen thambi (jeddah) [04 August 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21062

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இந்த துயர சம்பவத்தை அறிந்து துயரம் அடைந்தோம்.. இறுதிவரை அனைவர்களும் ஆறுதலான ஒரு செய்தி கிடைத்து விடாதா என்று துஆ கேட்டுக்கொண்டு படபடப்புடன் இருந்தோம்( நலமுடன் இருக்கின்றார்/ சிறு காயத்துடன் தப்பிவிட்டார் என்று) . இந்த துயர சம்பவத்தை அறிந்து துயரம் அடைந்தோம்

அல்லாஹு அவருடைய பாவங்களை மன்னித்து ,மேலான சுவனத்தை அடைய நாம் அனைவரும் பிரார்த்திப்பதுடன் அவர்களின் குடும்பத்தாருக்கு சபூரையும் தெரிய படுத்தி கொள்கிறோம்

அன்புக்குரிய மச்சி மகனை இழந்த துக்கமுடன்

மொஹிதீன்தம்பி jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by D.N.Mohamed Mohideen (Chennai) [04 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21064

My heartfelt condolences to sudden demise of my most intimate friend Vilakku. My friendship with him unforgettable. May ALLAH SWT GIVES HIM JANNATHUL FIRDOUSH. AAMEEN

BY
D.N.Mohamed Mohideen,
Chennai


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. பாவப் பிழைகளை பொறுத்தருள்வாய் ரஹ்மானே !
posted by Soluukku . M.E. Syed Moosa (Qatar) [11 August 2012]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 21196

அஸ்ஸலாமு அலைக்கும்.

நடந்து முடிந்த இந்த துயர சம்பவத்தை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அல்லாஹ்வின் கலாகதரின் படி நடந்த இந்த நிகழ்வுக்கு நாம் அனைவரும் சபர் செய்ய கடமை பட்டுள்ளோம். அன்னாரின் குடும்பத்தாரின் மனதுக்கு சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வல்ல அல்லாஹ் கொடுப்பானாகவும், ஆமீன்.

கிருபையுள்ள ரஹ்மான் , மர்ஹூம் அவர்களின் சகல பிழைகளையும் பொறுத்து , நல்ல அமல்களை மிகவும் இரக்கத்தோடு அங்கீகரித்து , கப்ரை விசாலமாக்கி வைத்து , மறுமையில் , பெருமானாரின் சபா அத்தோடு , மேலான ஜன்னத்துல் பிர்தவ்சில் அஃலா எனும் உயரிய சுவன பதி அடைய இருகரம் ஏந்தி இறைஞ்சுகிறேன் . ஆமீன் .

அன்னாரின் குடும்பத்தாருக்கு எங்கள் அனைவரின் அன்பான ஸலாத்தினை (அஸ்ஸலாமு அலைக்கும் ) தெரிவித்துக்கொள் கிறோம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved