Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:08:56 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9141
#KOTW9141
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, செப்டம்பர் 14, 2012
நகர்மன்ற சமாதான முயற்சிகள் குறித்து ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை சலீம் - காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு தந்த பதில்கள்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4591 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்ற செயல்பாடுகள் பிரச்சனைகள் இன்றி தொடர சில உலக காயல் நல மன்றங்கள் சார்பாக முயற்சிகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக்கொண்ட பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து - நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் உடனும், நகர்மன்ற உறுப்பினர்கள் உடனும் - காயல் நல மன்றங்கள் சார்பாக, அதன் பிரதிநிதிகள் உரையாடினர்.

சில காயல் நல மன்றங்கள் சார்பாக மேற்கொள்ளப்பட்ட அந்த முயற்சிகள் குறித்து - சில தகவல்கள் நகரில் வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்து - இந்த முயற்சியில் இறுதி வரை ஈடுப்பட்ட ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை சேக் சலீமிடம் - காயல்பட்டணம்.காம் சில விளக்கங்கள் கேட்டிருந்தது. அதற்கு அவர் வழங்கிய பதில்கள் வருமாறு:

நகராட்சியில் சுமூக சூழல் நிலவ சில காயல் நல மன்றங்கள் சார்பாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து ...

காயல்பட்டினம் நகராட்சி கூட்டங்கள் நல்லபடியாக நடைபெறவேண்டும் என்ற அவாவோடு கடந்த சில வாரங்களாக உலக காயல் நல மன்ற அங்கத்தினர்கள் சில முயற்சிகள் மேற்கொண்டோம். பெருநாள் ஒன்று கூடல், அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் மற்றும் நகர்மன்றத் தலைவரிடம் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டவை இதில் அடங்கும். தீர்வுக்கான வழிகள் என அனைத்து தரப்பில் இருந்தும் பெறப்பட்ட ஆலோசனைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

துவக்கமாக நடந்த கலந்தாலோசனையில் 8 பேர் கொண்ட உறுப்பினர்கள் குழு, கடந்த சில மாதங்களாக - தங்களுக்கும், தலைவிக்கும் இடையில் நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் குறித்து தெரிவித்தனர். பிரதானமாக மீடியா மற்றும் வீடியோ நகராட்சிக்கு வரவில்லை என்றால் கூட்டம் சுமுகமாக நடைபெறும் என்றும் வழியுறுத்தினர்.

வீடியோ பதிவு செய்யக்கூடாது என்பதற்கு உறுப்பினர்கள் கூறிய காரணம்:
கூட்டத்தில் விவாதிக்கப்படும் சில விஷயங்கள் - வீடியோ பதிவு மூலம் வெளியில் வந்தால் பிரச்சனைகள் எழலாம்

வீடியோ பதிவு செய்யவேண்டும் என்பதற்கு நகர்மன்றத் தலைவர் கூறிய காரணம்:
வீடியோ பதிவை நான் முதலில் கேட்டதற்கு காரணம் வெளிப்படையான நிர்வாகம் அவசியம் என்பதற்காக. இருப்பினும் கடந்த சில மாதங்களாக என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் (உறுப்பினரை நான் திட்டினேன் என்றும், நான் பெருவாரியான உறுப்பினர்கள் சம்மதிக்காத விஷயத்தை தீர்மான புத்தகத்தில் எழுதினேன் என்றும்). வீடியோ பதிவு இருந்தால்தான் கூட்டத்தை நல்லப்படி நடத்த முடியும் என நினைக்க வைத்துள்ளது. மேலும் ஊடகங்கள் - இல்லாததை எழுதுகிறது என்ற குற்றச்சாட்டு, வீடியோ பதிவு இருந்தால் இனி எழாது.

வீடியோ பதிவிற்கு உறுப்பினர்கள் சம்மதிக்கவில்லை. அதற்கு மாற்றாக உறுப்பினர்கள் வேறொரு தீர்வை முன்வைத்தனர். அதன்படி இரண்டு கூட்டங்களுக்கு வீடியோ பதிவு வேண்டாம் என்றும், மீடியா உட்பட பொதுமக்கள் கூட்ட அரங்கிற்கு வெளியே அமர்ந்து, கூட்ட நிகழ்வுகளை தொலைக்காட்சி மூலம் அவதானிக்க வேண்டும் என்றும் கூறினர். மேலும், இரண்டு கூட்டங்களுக்குப் பிறகு, வீடியோ பதிவின் தேவை குறித்து, நகர்மன்றத் தலைவி - அதற்க்குண்டான நியாயமான காரணங்களை விளக்கி, கொண்டு வரலாம் என்றும் தெரிவித்தனர். உறுப்பினர்களின் இந்தக் கருத்து நகர்மன்றத் தலைவரிடம் தெரிவிக்கப்பட்டது.

மீடியா மற்றும் பொதுமக்கள் வெளியில் இருந்து, தொலைகாட்சி மூலம் கூட்டத்தை அவதானிக்கலாம் என்ற ஆலோசனையை ஏற்றுக்கொண்ட தலைவர், வீடியோ பதிவை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்கலாம் என்றும் சம்மதம் தெரிவித்தார். இருப்பினும், வீடியோ பதிவின் அவசியத்திற்கான காரணங்களை விளக்கி, இரண்டு மாதங்களுக்குப் பிறகு வீடியோ பதிவு துவங்க வேண்டும் என்றும், அது குறித்து எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் செய்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த தகவலை, நான் உறுப்பினர்கள் சார்பாக என்னிடம் பேசிவந்த உறுப்பினர்கள் சுகு மற்றும் ஜகாங்கீர் ஆகியோரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

கூட்டம் நடைபெற்ற அன்று காலையில், நகர்மன்றத் தலைவியிடம் மீண்டும் பேசி, வீடியோ பதிவு விசயத்தில் விட்டுக்கொடுக்கும்படியும், மீண்டும் பிரச்சனை வந்தால் - அப்போது நீங்கள் அதுகுறித்து ஆலோசனை செய்யலாம் என்றும் கூறினேன். சில காலங்களுக்கு (பிரச்சனைகள் எழாத வரை) வீடியோ பதிவை ஒத்திவைக்க நகர்மன்றத் தலைவி சம்மதம் தெரிவித்தார். மேலும், இந்தக் கூட்டம் நல்லபடி நடைபெற, கூட்ட அரங்கிற்கு வெளியே தொலைக்காட்சி ஏற்பாடு செய்து, வீடியோ பதிவு இல்லாமல், நேரடி ஒளிப்பதிவு செய்ய தான் உடனடியாக ஏற்பாடு செய்வதாக நகர்மன்றத் தலைவர் கூறினார். இந்த தகவலை நான் உறுப்பினர் சுகு மற்றும் ஜகாங்கீர் ஆகியோரிடம் தெரிவித்தேன்.

உறுப்பினர் சுகு அவர்கள், வெளி ஊடகங்கள் அனைத்திற்கும் நாங்கள் தகவல் கொடுத்துவிட்டோம்; அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்; காவல்துறைக்கும் தகவல் கொடுத்து விட்டோம்; இந்த ஒரு கூட்டம் மட்டும் அப்படியே நடக்கட்டும்; அடுத்த கூட்டதை சில தினங்களில் பிரச்சனையின்றி நடத்தலாம்! என்று கூறினார். இதே கருத்தை உறுப்பினர் ஜகாங்கீரும் கூறினார்.

நகர்மன்றத் தலைவி அலைக்கழிக்க வைத்ததாக கூறப்படுவது குறித்து ...

நாங்கள் மேற்கொண்டது இரு தரப்புக்கும் இடையில் ஒரு சமரச முயற்சி. அவர்கள் கூறும் கருத்தை இவர்களிடமும், இவர்கள் கூறும் கருத்தை அவர்களிடமும் தெரிவித்தோம். நாம் கூறிய ஒன்றை, ஒருவர் உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்ப்பார்ப்பது தவறு. இதில் யாரும், யாரையும் அலைக்கழித்ததாக கூறுவது சரியல்ல.

சமாதானத்தில் ஈடுப்பட்டவர்கள் மன உளைச்சலுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து ...

எல்லா முயற்சிகளும் எடுத்தும், உறுப்பினர்கள் கூறிய அனைத்து நிபந்தனைகளுக்கும் நகர்மன்றத் தலைவி சம்மதம் தெரிவித்த பிறகும், உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாது, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதில் காட்டிய ஆர்வம் தான் எனக்கு மன உளைச்சலைத் தந்தது.

தீர்வு காண வழி குறித்து ...

நகர்மன்றத் தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் நான் கூறிக்கொள்ள விரும்புவது - நீங்கள் யாரையும் மத்திஸ்தம் செய்ய எதிர்பார்க்காதீர்கள். நீங்களே ஒன்றாக அமர்ந்து, நடந்தவற்றைப் பற்றி பேசாமல், நடக்க வேண்டியவை குறித்து பேசி, சுமுக சூழலை உருவாக்குவதே சிறந்த வழி என நான் கருதுகிறேன். இந்த கருத்தையே நான் நகர்மன்றத் தலைவியிடம் இறுதியாக தெரிவித்துவிட்டு வந்தேன். அவர்களும் அதனை முழுவதுமாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள். Now the ball is in members court. எல்லாம் வல்ல அல்லாஹ், நம் நகராட்சியில் சுமுக சூழலை உருவாக்கி, நமது நகராட்சி, பிற நகராட்சிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ அருள் புரிவானாக. ஆமீன்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...நான் சொல்கின்றபடி தீர்ப்பு சொல்லுங்கள்!
posted by mackie noohuthambi (kayalpatnam) [14 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22163

சகோதரர் சலீம் அவர்கள் சொல்வதை பார்த்தால் முற்கூட்டியே இரண்டு சாரார்களிடமும் சமரச குழுவினர்" நீங்கள் சொல்லும் தீர்வுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்" என்ற ஒப்புதல் வாங்காமல் சமரச முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. சமரச முயற்சியில் ஈடுபடும் எந்த ஒரு அமைப்பும் இப்படி ஒப்புதல் வாங்கிக்கொள்வது தான் வழக்கம். நான் சொல்கிறபடி தீர்ப்பு சொல்லுங்கள் என்று எந்த நீதிமன்றத்திலும் சொல்ல முடியுமா?

பேச்சுவார்த்தையின் முடிவு திருப்தியளிக்காததால் நீங்கள் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என்று நீங்கள் தீர்ப்பு அளித்து இருப்பது எவ்வளவு மன வேதனையான விஷயம் . உலக காயல்நல மன்றங்களின் கோரிக்கைகளை தலைவரும் உறுப்பினர்களும் உதாசீனம் செய்ததை சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

IF YOU CANNOT SOLVE A PROBLEM, THEN YOU ARE PART OF THAT PROBLEM என்று சொல்வார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால் இரு சாராருமே சமரசத்துக்கு வர தயார் இல்லை. சமரசம் வரவேண்டுமானால் யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்க முன் வந்திருக்க வேண்டும்.

ஒரு பாலத்தில் எதிர் எதிரே வந்த ஆடுகள் நடுவிலே சந்தித்துக்கொண்டன. அந்த பக்கம் போகவேண்டுமானால் ஒரு ஆடு படுத்து அடுத்த ஆட்டுக்கு வழி கொடுக்கவேண்டும். இரண்டு ஆடுகளுமே நான் ஏன் படுக்கவேண்டும் என்று தர்க்கம் செய்ததால் வந்த விளைவு, இரண்டு ஆடுகளுமே பாலத்தில் இருந்து தவறி விழுந்து கீழே உள்ள ஆற்றில் விழுந்து அடித்து செல்லப்பட்டு இரண்டுமே உயிரிழந்தன.

இது எல்லோரும் இரண்டாம் வகுப்பில் படித்த கதைகள். இப்போது நமது நகர்மன்றதுக்கு நல்ல பொருத்தமான கதை. அந்த கதை முடிவுக்கு வந்தது, ஆனால் நகர்மன்றது கதை இன்னும் நான்கு ஐந்து வருடங்களுக்கு தொடரும் கன்னித்தீவு கதை ஆகிவிட்டதே....வேதனைப்படுபவர்கள் இவர்களை தேர்ந்தெடுத்த பொது மக்கள்தான்.

என்ன செய்வது, சுட்டால்தானே தெரிகிறது தொட்டால் சுடுவது நெருப்பென்று..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. From the horse's mouth.
posted by Abdul Wahid .S (Kayalpatnam) [14 September 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 22164

"From the horse's mouth"
That is what it is.

My Learned friend Mr. Saleem said," Now the ball is in members court".

Technically speaking he is correct. But in reality "The ball is somebody's court who is in Chennai who calls the shots. These are shadow puppets. The master has the key. I mean the pay master, who can have the final say.

Even though I do not belongs to any political party, I urge the chairman to Join A.I.A.D.M.K. to nail these puppets and their master down. That is the only way I guess.

I know it will be a hard one for her. But again, The Creator will not hold her accountable for this deed which she was forced upon.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by M.Jahangir (kayalpatnam) [14 September 2012]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 22165

இங்கு பதிந்துள்ள அனைத்தும் உண்மை என்று சாளை சலீம் காக்கா இறைவன் மீது ஆணையிட்டு சொல்ல தயாரா? இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். மறுமமையில் பதில் சொல்லியே ஆகவேண்டும். இதற்கு முன் மற்ற இணையதளத்தில் "காவாலங்கா தலைவர் அவர்களுக்கும், ஊர் பொதுமக்களுக்கும் 5-வது வார்டு உறுப்பினரின் விளக்கம்!" என்ற தலைப்பில் வெளிவந்த செய்தியை வாசித்து இதில் கூறப்பட்டவை அனைத்தும் சரிதான் என்று என்னிடம் சாளை சலீம் காக்கா நீங்கள் கூறவில்லையா?

இவண்,
ம.ஜஹாங்கீர்,
5-வது வார்டு உறுப்பினர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Great .!!!
posted by M Sajith (DUBAI) [14 September 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22168

சலீம் காக்கா,

அடுத்த ரவுன்ட் விமர்சனத்து தயாராகுங்கள், துதிபாடி என்றும் ரிமோட் கண்ட்ரோல் என்றும் வரப்போகும் தேர்தல் காலத்து எரிச்சல்களை சொரிந்தது கொள்ளத் தயாராகும் 'சிந்தனை சிற்பிகளை' எதிர்கொள்ளுங்கள் ...

ஏற்கனவே ஐந்தாவது வார்டு உறுப்பினரின் பகிரங்க சவால் அவரின் வலைதளத்தில் வெளியாகியும் விட்டது ....

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by salai s nawas (singapore) [15 September 2012]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 22173

இந்த கருத்தை படித்து விட்டு என் காக்காவிடம் தொடர்பு கொண்டு பேசினேன். துபாய் செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்த படியால் சுருக்கமாக விவரத்தை சொல்லி விட்டேன். அங்கு சென்று பதில் அளிப்பார்கள். அதுவரை ஜகாங்கீர் காத்து இருக்கவும்.

மச்சான் சாஜித் ஒரு ஆறு மணி நேரம் கழிச்சு காக்காக்கு போன் போட்டு விவரம் அறிந்து கொள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. கேள்வியும் நானே பதிலும் நானே???
posted by Habeeb Mohamed Nasrudeen (Kayalpatnam) [15 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22180

கேள்வியும் நானே பதிலும் நானே என்ற இந்த நாவல் நன்றாக இருந்தது. நாவலை எழுதிய ஆசிர்யருக்கு பாராட்டுக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by OMER ANAS (DOHA QATAR.) [15 September 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 22181

சகோ சாளை சலீம் அவர்களின் விளக்கத்தினை கூர்ந்து படித்தோம். சலீம் பாய்க்கு நன்றி!

ஊரில் நல்லது நடக்க வேண்டும் என்று உங்களைப்போல் எல்லோருக்கும் விருப்பமே! நீங்கள் எந்த அளவிற்கு உண்மையினை சொல்கிறீர்கள் என்று புரிந்து கொண்டேன். புரிந்து கொண்டோம்!

ஒன்றை மட்டும் உலக காயல்நல மன்ற உறுப்பினர்கள், மற்றும் எல்லோரும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள். தனிப்பட்ட மனிதர்கள் எந்த கொள்கையிலும், எந்த அரசியலிலும், எங்கும் யாருக்காகவும் செயல்படுவோராக இருக்கலாம். இது அவரவர் உரிமை!ஆனால்!!!?

நம் உலக காயல் நல மன்றம் என்பது எல்லா மார்க்க கொள்கை உடையோரையும், ஒருங்கிணைத்து எல்லா வித கோட்பாடுகளையும் தாண்டி ஊருக்கு தேவையான முக்கியமான சேவையில் தனித்தே செயல் பட வேண்டுமே அல்லாது ஊர் பஞ்சாயத்தில் ஒரு போதும் நாம் தலையிடக் கூடாது. அது போல் மார்க்க விசயத்திலும், அரசியல் விசயங்களிலும் ஒரு போதும் நாம் தலையிடக் கூடாது. இதை யார் மீறினாலும் வீழ்ச்சி நமக்கும், நம் மன்றத்திர்க்கும்தான் என்பது கடந்த கால காயல் நல மன்றங்கள் நமக்கு தந்த பாடம்!

இப்ப நடப்பது பஞ்சாயத்தே அல்ல!
அதைதிருத்த இனி யாராலும் முடியாது.
இனி முடியவே முடியாது!
அதை உலக காயல் நல மன்றங்கள் திருத்த நினைப்பது?
தன் தலையில்,,,?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. தயவு செய்து... உங்கள் இணையதள போட்டியால் நமது நகர்மன்றதை பலிகட ஆக்காதீர்கள்... உங்கள் வார்டு மக்களின் ஒருவனாக கேட்டு கொள்ளகிறேன்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227) [15 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22185

திருவாளர் ஜகாங்கீர் அவர்களே...

சகோதரர் சலீம் அவர்களை நகர்மன்றத் தலைவி அலைக்கழிக்க வைத்ததாக கூறப்படுவது குறித்து ... உங்கள் பதில் என்ன...?

சமாதானத்தில் ஈடுப்பட்டவர்கள் மன உளைச்சலுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து ... உங்கள் பதில் என்ன...?

உறுப்பினர்கள் கூறிய அனைத்து நிபந்தனைகளுக்கும் நகர்மன்றத் தலைவி சம்மதம் தெரிவித்த பிறகும், உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாது, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதில் காட்டிய ஆர்வம் தான் சலீம் அவர்களுக்கும் மற்றும் காவலங்கா தலைவர் ஜனாப் சாஜஹான் (துரை) அவர்களுக்கும் மிக பெரிய மன உளைச்சலைத் தந்ததுள்ளது என்று கூறுகிறார்கள்.. அதற்கு உங்கள் பதில் என்ன...?

சலீம் அவர்கள் உங்களிடம் தலைவியால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது என்று கூறினாரா...?

சம்பந்தப்பட்டவர் அவரே தான் அலைகழிக்க படவில்லை என்று கூறும் போது தாங்கள் ஏன் மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரம் மொட்டை நோட்டீஸ் இது ஏன்...?

உங்களை நகர்மன்றதிற்க்கு உறுப்பினராக அனுப்பிய 5 வது வார்டு மக்களுக்கும் நகருக்கும் ஆகவேண்டிய நல்ல பல தீர்மானங்களை ஆதரித்து உங்கள் இணையதள (போட்டி) போர் அறிக்கைகளை ஒதுக்கி வைத்து ஊருக்காவும், மக்களுக்காவும் சேவை புரியுங்கள்... வார்டு மக்கள் உங்கள் கையில் அமானிதத்தை தந்துள்ளார்கள் அதை மறந்து விடாதீர்கள்...

நட்புடன் -
ஊழல் இல்லா நகராட்சியை ஒரு ஆண்டு சாதனையாக நிர்வகித்து வரும்.. மக்கள் தலைவி திருமதி ஆபிதாவின் ஆதரவாளன்...
மற்றும் உங்கள் வெற்றிக்காக பிரச்சாரம் செய்து ஆதரித்தவன்...
- தமிழன் முத்து இஸ்மாயில்.

(குறிப்பு) - அடுத்து உங்கள் மற்றும் உங்களின் ஆதரவாளர்களின் அறிக்கை போர் தொடரட்டும்...

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. இதற்கும் வீடியோ பதிவு இருந்தால்...
posted by Firdous (Colombo) [15 September 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 22188

சமரச உரையாடலின் போது வீடியோ ரெகார்டிங் செய்திருந்தால் உண்மை வெளிவந்திருக்கும். தேவையற்ற அறிக்கை (அக்க) போர் வந்திருக்காது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. தன்னிலை விளக்கம்
posted by Salai Sheikh Saleem (Dubai) [16 September 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22195

அன்புள்ள சகோதரர் ஜகாங்கீர் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.

முதலாவதாக, மேலே பதிவுசெய்யப்பட்ட கருத்துக்கள் எல்லாம் நான் சென்னையில் இருந்தபோது காயல்பட்டணம் டாட் காம் என்னை நேர்காணல் செய்ததில் நான் பகிர்ந்து கொண்ட என்னுடைய சொந்த அனுபவங்களும், கருத்துக்களும் ஆகும்.

தாங்கள் - மதிப்பிற்குரிய காவலங்கா தலைவர் ஷாஜஹான் காக்கா வெளியிட்ட கட்டுரைக்குப் பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்டீர்கள். அதனை தயார் செய்து விட்டு என்னை அழைத்தீர்கள். நான் தங்களை சந்திக்க வந்தபோது, நான் வர காலதாமதம் ஆகிவிட்டதால் அறிக்கையை இணையதளத்தில் வெளியிட்டுவிட்டேன் என கூறினீர்கள். அதன் பிறகு தான் தங்களின் அறிக்கையை நான் அவசர கதியில் பார்க்க நேரிட்டது. அதில் தாங்கள் நடந்த சம்பவங்களை பட்டியலிட்டிருந்தீர்கள்.

நான் தற்போது காயல்பட்டணம் காம் இணையதளத்திற்கு தந்துள்ள நேர்காணலில் பதிவுசெய்யப்பட்டிருக்கிற கருத்துக்களுக்கும், நீங்கள் விவரித்திருந்த சம்பவங்களுக்கும் பெரிய வித்தியாசம் என்னால் காண முடிய வில்லை. ஆனால் தாங்கள் பதிவுசெய்த "அலைக்கழித்தார்கள்" போன்ற வாசகங்கள் நான் சரிவர படிக்க வில்லை. நான் உங்கள் கருத்துக்களுடன் ஒத்து போனது சம்பவங்களின் தொகுப்புதானே ஒழிய, இந்த மாதிரி யாரையும் புண் படுத்தும் வாசகங்களை அல்ல. ஒரு நல்ல காரியத்தில் ஈடுபட்டிருக்கும் என்னை போல் யாரும் இப்படித்தான் நடப்பார்கள்.

மேலும் தாங்கள் அறிக்கையில் நகர்மன்ற கூட்டம் நடந்த அன்று காலை - தலைவி அவர்கள் நீங்கள் முன்வைத்த அத்தனை கோரிக்கைகளுக்கும் சம்மதம் தெரிவித்து, அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ளாதது மட்டும் அல்லாமல், ஏனைய உறுப்பினர்களுக்கும் இத்தகவல்களை சொல்லாமல் மறைத்தது (இது நான் சகோதரர் லுக்மான் அவர்களிடம் கடற்கரையில் வைத்து பேசிய போதுதான் தெளிவானது), மேலும் வெளி ஊடகங்களுக்கு உறுப்பினர்கள் தரப்பில் தகவல் கொடுக்கப்பட்டது போன்ற எந்த விசயங்களையும் குறிப்பிடவில்லை.

நான் மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் நடக்கவில்லை என்று தாங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

இவை மட்டுமே என்னுடைய நேர்காணலில் உள்ள கருத்துக்களுக்கும், நீங்கள் எழுதிய தன்னிலை விளக்க கருத்துக்களுக்கும் உள்ள பெரிய வித்தியாசம்.

நான் அறிய - நடக்காத ஒன்றை நான் இதில் எங்கும் குறிப்பிட வில்லை. அது உங்களுக்கும் நன்கு தெரியும், மேலும் அந்த வல்ல இறைவனும் அறிவான். ஊரில் உலாவும் சில துண்டு பிரசுரங்களில் எங்களின் முயற்சி குறித்து குறிப்பிடப்பட்டிருப்பதால் காயல்பட்டணம்.காம் என்னை சென்னையில் தொலைபேசிமூலம் கேட்டறிந்த தகவல்களை தான் இங்கே தொகுத்து அளித்திருக்கிறார்கள்.

இருக்கும் சூழலில் நான் விவாதத்தை வளர்க்க விரும்பவில்லை. சுமூக சூழல் உருவாக வேணடும் என்ற எண்ணத்தில் தான் நான் விடுமுறையில் ஊர் வந்திருந்த போதும் என் மாமனாரின் வபாத்திற்கு பிறகும் இந்த முயற்சியில் ஈடுபட்டேன். எல்லாம் வல்ல அல்லாஹ் நமது முயற்சிகளை வெற்றியாக்கி தந்தருள்வானாகவும். ஆமீன்.

மக்கி நூஹு தம்பி காக்கா அவர்களுக்கு. நாங்கள் நடத்தியது சமரச கூட்டம் அல்ல. இரு தரப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்து எங்களுடைய ஆலோசனைகளை வழங்கி அவர்களுக்கிடையில் உள்ள கருத்து வேறுபாடுகளை களைய முயற்சித்தோம்.

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Now the ball is in chairperson's court
posted by Saalai.Abdul Razzaq Lukman (Kayalpatnam) [16 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22200

சாளை சலீம் காக்கா அவர்களுக்கு,

உங்கள் பதிலின் கடைசி பாராவை நீங்கள் மீண்டும் வாசியுங்கள். நகர்மன்றத் தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் நான் கூறிக்கொள்ள விரும்புவது - நீங்கள் யாரையும் மத்திஸ்தம் செய்ய எதிர்பார்க்காதீர்கள். நீங்களே ஒன்றாக அமர்ந்து, நடந்தவற்றைப் பற்றி பேசாமல், நடக்க வேண்டியவை குறித்து பேசி, சுமுக சூழலை உருவாக்குவதே சிறந்த வழி என நான் கருதுகிறேன். இந்த கருத்தையே நான் நகர்மன்றத் தலைவியிடம் இறுதியாக தெரிவித்துவிட்டு வந்தேன். அவர்களும் அதனை முழுவதுமாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள். Now the ball is in members court. எல்லாம் வல்ல அல்லாஹ், நம் நகராட்சியில் சுமுக சூழலை உருவாக்கி, நமது நகராட்சி, பிற நகராட்சிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ அருள் புரிவானாக. ஆமீன்.(cut & paste)

நீங்கள் கூறியது போல் நகரமன்ற உறுப்பினர்கள் முன்பு முயற்சி எடுத்ததற்கு, தலைவி சொன்னதாக 1 வது வார்டு உறுப்பினர் லுக்மான் காக்கா அவர்கள் தெரிவித்த, இந்த வலயதலத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை( news ID 8861)

உறுப்பினர்களுடன் பழகியது குறித்து :
உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை பெற்ற பிறகு எல்லா உறுப்பினர்களுடன் ஒன்றாக அமர்ந்து பேச மாட்டேன், வேண்டுமானால் தனித்தனியாக பேசத்தயார் என்று கூறினீர்கள். இப்போது வசதியாக ஒன்றாக அமர்ந்து பேச மாட்டேன் என்று சொன்னதை மறைத்து விட்டு கூறுகிறீர்களே ஏன்? தனித்தனியாக அழைத்து பேசுவது தான் TEAM WORK ஆகுமோ? ஏன் இந்த பிரித்தாளும் சூழ்ச்சி.

இந்த சந்திப்பின் போது கவுன்சிலர்கள் எல்லோர்களும் லஞ்சம் வாங்க முடியாமல் போனதால் தான் எல்லோர்களும் ஒன்று சேர்ந்திருக்கிறீர்கள் என்று ஆவேசமாக ஒட்டுமொத்தமாக எல்லோர்கள் மீதும் பழி சுமத்தினீர்களே? இது உண்மை தானா? என்று உங்கள் மனசாட்சிக்கும,; இறைவனுக்கும் நன்கு தெரியும் தானே? (copy & paste)

. துணைக் குழுக்கள் அமைத்திட முயற்சி :
தலைவி அவர்களே, துணைக்குழுக்கான ஆலோசனைக் கூட்டத்தை 12-வது வார்டு உறுப்பினர் சுகு அவர்கள் வீட்டில் நடத்த தலைவி ஆகிய நீங்களும் சேர்ந்து தான் ஆர்வத்துடன் முடிவெடுத்து விட்டு, மற்றவர்கள் கூறினர் என்று சொல்லியிருக்கிறீர்கள். இப்படி முடிவெடுத்த மறுநாள், தலைவி ஆகிய நீங்கள் எனக்கு போன் செய்து சுகு வீட்டிற்கு வர முடியாது, உங்கள் வீட்டில் நடத்தலாம் என்றீர்கள். அதற்கு நான், உங்கள் வீட்டிற்கு வரமாட்டோம், எங்கள் வீட்டில் கூட்டத்தை நடத்துவோம் என்று சுகு அவர்களிடம் தடாலடியாக என்னால் சொல்ல இயலாது. வேண்டுமானால் நகர்மன்றத்தில் நடத்தலாம் என்று கூறி அதன்படி நடந்தது.

அப்படி குழுக்கள் அமைப்பது பற்றி ஆலோசனையிலும் கூட, குழுக்கள் அமைத்தாலும் நான் சொல்வதுபடி தான் முடிவெடுக்க வேண்டும். அந்த குழுக்களுக்கு அதிகாரம் இருக்கக் கூடாது என்று TEAM WORK முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டீர்கள். இப்போது உறுப்பினர்கள் ஒத்துழைக்கவில்லை என்ற பொய்யான குற்றச்சாட்டை கூறுகிறீர்கள். (copy & paste)

இறுதியாக உங்களைப்போல் தான் நாங்களும் கூறுகிறோம். உறுப்பினர்களின் உதவியோடு ஒன்றிணைந்து செயல்படுவோம், வாருங்கள் என்று. ஆனால் நீங்கள் தான் உறுப்பினர்கள் ஒன்றிணை வேண்டாம். தனித்தனியாக என்னிடம் ஆலோசனை கூறுங்கள் என்கிறீர்கள்.

தலைவி அவர்களே! இன்னும் காலங்கள் இருக்கிறது. உறுப்பினர்களை அரவணைத்து அவர்களும் உங்களைப் போல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் என்று மதித்து, அவர்களின் நல்ல ஆலோசனைகளை ஏற்று கூட்டாக செயல்பட்டு நல்ல நிர்வாகத்தை மக்களுக்கு அளிக்க முன்வாருங்கள். (copy & paste)

Now comment, ball is in whose court?. Certainly in Chairperson's court.

தலைவி மட்டுமல்ல அனைத்து உறுப்பினர்களும் ( ஒரு பெண் உறுப்பினர், போட்டியின்றி) மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்க பட்டவர்கள் தான். அதனால் உறுப்பினர்கள் பெரியவர்களா அல்லது தலைவி பெரியவரா என்று EGO பார்க்காமல் ஊருக்கு நன்மை செய்யுங்கள். அப்படி உங்களின் (உறுப்பினர்கள் & தலைவி) ego பார்த்து மக்களுக்கு நன்மை செய்யாவிடில் மக்களும், அல்லாஹ்வும் மன்னிக்க மாட்டான்.

இந்த நகரமன்றம் அமைந்ததில் இருந்து பலர் , கமெண்ட்ஸ் பதிவு பண்ணும் போது, ஒருவரை, pay master என்றும் சென்னை எஜமான் என்றும் ring master என்றும் மூடகமாக கருத்து தெரிவிக்கின்றனர். ஆதாரம் இல்லாமல் அப்படி பதிவு செய்திருக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் அப்படி அந்த நபரை, ஊரை ஆட்டுவிக்கும் நபரை, pay master of members, சென்னை எஜமானரை, பெயரை குறிப்பிட்டு அடையாளம் காட்டினால், என்னை போன்றவர்கள், அந்த கருப்பு ஆட்டை தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். இந்த பதிவின் மூலம் என்னை போன்றோருக்கு அப்படி கமெண்ட்ஸ் பதிவு செய்தவர்கள் பதில் தருவார்கள் என்று நம்புகிறேன்.

- சாளை அப்துல் ரஜாக் லுக்மான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [16 September 2012]
IP: 37.*.*.* | Comment Reference Number: 22204

அஸ்ஸலாமு அலைக்கும்

அருமை நம் சகோதரர்.Mr .சாளை சலீம் அவர்களின். நகர்மன்ற சமாதான முயற்சிகள் குறித்து தந்த பதில்கள் அருமையானது. அன்பு சகோதரர் MR ஜகாகிர் அவர்கள் ஒன்றை மட்டும் நிதானமான முறையில் புரிந்து கொள்ள வேண்டியது. சகோதரர்.Mr .சாளை சலீம் அவர்கள். ஏன் தம் சொந்த வேலைகளை எல்லாம் விட்டு... விட்டு தங்களின் ( நகர் மன்ற தலைவி + உறுப்பினர்கள் ) ஒற்றுமைக்காக பாடு பட வேணும்....

இந்த ஒரு வருட காலத்தில் நம் நகர் மன்றத்தால் நம் ஊருக்கு எந்த ஒரு நல்ல திட்டங்களும் சுத்தமாகவே நடை பெறாததால் தான். உங்களின் ஒற்றுமைக்காக தானே பாடுபட்டு இருவர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஒரு சில உறுப்பினர்கள் ஏன் இந்த வீடியோ பதிவு விஷயதில் இப்படி கடுமையாக நடந்து கொள்கிறீர்கள். வீடியோ பதிவால் தங்களின் தேவைகற்ற பேச்சால் பிரச்சனைகள் வரலாம் & ஊர் பொது மக்களுக்கு தெரிந்து விடலாம் என்கிற பயமா ???என்ன /

"""" வீடியோ பதிவு செய்யக்கூடாது என்பதற்கு உறுப்பினர்கள் கூறிய காரணம்: '''''' கூட்டத்தில் விவாதிக்கப்படும் சில விஷயங்கள் - வீடியோ பதிவு மூலம் வெளியில் வந்தால் பிரச்சனைகள் எழலாம்...... தங்களின் இந்த காரணம் ......படு முட்டாள் தனமானது

என்னையா பிரச்சனை எழும் .... சொல்லுக்கள் ..... நம் மடியில்...கணம் ..இருந்தால் தானே .... நாம் பயப்பட வேணும்... நீங்கள் யாவர்களும் வீடியோ கிளிப் விசியதில் தங்களின் தொகுதி வேலைகளை எல்லாம் மறந்து விட்டு ...முழுமையான இதில் கவனம் செலுத்துவதை பார்க்கும் போது பொது மக்களாகிய எங்களுக்கே கொஞ்சம் சந்தேகம் வருகிறது......

நகர் மன்ற தலைவி அவர்களின் இந்த வீடியோ பதிவு விஷயதில் அவர்கள் சொல்வது தான் முழுக்க ,,முழக்க,, சரியானது. வீடியோ பதிவு மூலம் தான் '' வெளிப்படையான ''நிர்வாகம் கண்டிப்பாக பொது மக்களுக்கு கிடைக்கும் + நகர் மன்ற கூட்டத்தையும் நல்லப்படி நடத்த முடியும். இதில் எள் அளவும் சந்தேகமே இல்லை. உண்மையான சொல் .

அருமை நம் சகோதரர்.Mr .சாளை சலீம் அவர்களின். கட்டுரையை பார்த்தாவது. நாம் புரிந்து கொள்ளவேணும். நமக்கு நகர் மன்றதின் ஒற்றுமை தான் முக்கியம்.

பொது மக்களாகிய நமக்கு தலைவியும் + உறுப்பினர்களும் இரு கண்கள் போன்று. இவர்களின் ஒற்றுமையான நிர்வாகம் தான் நமக்கு முக்கியம்.

தமிழ் நாட்டிலேயே இந்த ஒரு வருஷமாக ஒன்றுமே நடக்காத... ஒரு நகர் மன்றம் எது ? வென்று யாராவது கேட்டால் ...அது நம் ஊர் நகர் மன்றம் தான். சந்தேகமே இல்லை. அசிங்கதிலும்.. அசிங்கம்.... நம் ஊர் பொது மக்களின் வரி பணம் இப்படி வேஸ்டாகிறது என்கிற கவலைதான்.

இந்த உறுப்பினர்கள் இனியும் நகர் மன்றத்தை ஒழுங்காக நடத்த விடுவார்களா?? என்பது தான். நமக்கே சந்தேகமாக உள்ளது. தங்களை முழுமையாக நம்பி உள்ள தொகுதி மக்களுக்கு ஒன்றுமே செய்ய மாட்டார்கள் என்பது நிச்சயம்.

என் அன்பு நண்பர். வங்காளம்.உமர் அவர்கள் சொல்வது சரியான கருத்து தான். இருப்பினும் நம் ஊர் நகர் மன்ற ஒற்றுமை நமக்கு முக்கியம் அல்லவா ....ஆதலால் நம் ஊர் உலக காயல் நற்பணி மன்றங்களும் & நம் ஊர் அமைப்புகளும் / சங்ககளும் / ஊர் ஜாமத்துகளும் + நம் ஐக்கிய பேரவை ....இதில் உள்ள முக்கியமான தலைவர்கள் எல்லாம் ஒன்றாக கூடிபேசி ....நம் நகர் மன்ற தலைவி + உறுப்பினர்களையும் அழைத்து பேசினால் தான் இதற்கு நல்லதோர் முடிவு கிடைக்கும். கண்டிப்பாக இதில் அமைப்புகள் தளையிட்டாக வேணும். நம் அருமை சகோதரர்.Mr .சாளை சலீம் அவர்களின் இந்த முயற்ச்சிக்கும் இன்ஷா அல்லாஹ் நல்ல பலன் நிச்சயமாக கிடைக்கும்.

சகோதரர் உறுப்பினர் ஜகாங்கீர் நீங்களும் / உறுப்பினர் சுகுவும் சேர்ந்து தானே எல்லா மீடியாவுக்கும் அழைப்பு கொடுத்து உள்ளீர்கள். இந்த வீடியோ கிழிப்பு மட்டும் தேவையா ?

பல நிபந்தனைகளுக்கும் நகர்மன்றத் தலைவி சம்மதம் தெரிவித்த பிறகும், உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாது, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதில் காட்டிய ஆர்வம் தான் என்னா? நீங்கள் எல்லாம் ஒரு முடிவோடு தான் இருக்கிறீர்கள்.அதாவது நம் ஊருக்கு நல்லது நடக்க கூடாது & நடக்க விடவும் மாட்டோம். என்று ... நல்ல எண்ணம் தான்.

ஒரு சின்ன பிரச்சனையை தேவைக்கு இல்லாமல் ஊதி பெரியதாக்கி விட்டீர்கள்............................ என்னதான் நடக்கிறது என்று நாம் பொறுமையாக இருந்து இன்னும் 4 வருஷம் பார்ப்போமே. வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by M.A. Muhammad Ibrahim (Guangzhou) [17 September 2012]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 22212

அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரி ஆபிதா அவர்களே,

நண்பன் Kalami செயத் உமர், அப்துல் வாஹிது காக்கா இன்னும் மற்றும் பலர் சொல்லுறது போல் நீங்கள் A.I.A.D.M.K வில் சேருவது தான் சரியான புத்தி சாலிதனம் என்று என் மனதிலும் தோன்றுகிறது.

இது என்னோடு தனி பட்ட கருத்தே!

The loss is to everyone including the counsilers as well. Most of them might not be reelected again if it is shuffled! Hope they knew this!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by vilack sma (Nha Be , Vietnam) [17 September 2012]
IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 22216

ஒட்டு வாங்கும்போது தனியாக நின்று சாதிப்பேன் என்று சொல்லித்தானே ஒட்டு வாங்கினார் .மக்கள் நம்பினார்கள் . ஜெயிக்க வைத்தார்கள் . இப்போது ஆளும் கட்சியில் சேருங்கள் என்று சொன்னால் எப்படி ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved