காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் உள்ள எக்ஸ்ரே கருவி இயங்காததால் பயனாளிகள் அவதிக்குள்ளாகியிருப்பதாகவும், விரைந்து சரி செய்து தருமாறும் காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் சார்பில் அரசிடம் முறையிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பயன்பாட்டில் உள்ள XRAY கருவி (100 ma) - 30 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. திறன் குறைவான இந்த கருவி - அவ்வப்போது பழுதடைவதால் - இந்த கருவியினை மாற்றி, நவீன கருவியினை வழங்கிட பலமுறை - சம்பந்தப்பட்ட அரசு துறைகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் - கடந்த சில தினங்களாக - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் உள்ள XRAY கருவி வேலை செய்யவில்லை என தெரிகிறது. இதனால் - மருத்துவமனையை பயன்படுத்தும் பயனாளிகள், சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.
இது குறித்து - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பாக இன்று - சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை செயலர் டாக்டர் பீலா ராஜேஷ் IAS அவர்களிடமும், ஊரக மருத்துவ சேவைகள் இயக்குனர் (DMS) டாக்டர் ஸ்வாதி ரத்தினாவதி ஆகியோரிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டது.
மேலும் - தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் (JD) அவர்களுக்கும் இது குறித்து மனு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|