Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:31:43 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5624
#KOTW5624
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, பிப்ரவரி 6, 2011
நியாயவிலைக் கடையில் சலசலப்பு! பதுக்கல் நடைபெறுவதாக பொதுமக்கள் புகார்!! குறைந்தளவிலேயே சரக்கு வருவதாக கடைக்காரர் விளக்கம்!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3425 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் தாயிம்பள்ளிவாசலையொட்டி கிழக்கே செல்லும் குறுக்குச் சாலையின் மேல்முனையில் அமைந்துள்ளது AKL 3 என்ற எண்ணுடைய நியாயவிலைக் கடை. காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெரு, பரிமார் தெரு, அலியார் தெரு, கே.டி.எம். தெரு, சின்ன நெசவுத் தெரு, பெரிய நெசவுத் தெரு, மேல நெசவுத் தெரு, ஆசாரிமார் தெரு ஆகிய தெருக்களிலுள்ள குடும்ப அட்டைதாரர்கள் இக்கடையிலேயே பொருட்கள் வாங்க வேண்டும்.

04.02.2011 வெள்ளிக்கிழமை மாலையில் இக்கடையில் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது.

நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வைக்கின்றனர்...

தனக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கு பத்து முதல் பதினைந்து கார்டுகள் வரை ஒரே நேரத்தில் பொருட்கள் வழங்குவதால், பள்ளி மாணவர்கள், வயதானவர்கள் உட்பட இயலா நிலை பொதுமக்கள் பலர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை...

சரக்கு வந்து முதல் நாள் விட்டு அடுத்த நாள் வாங்க வந்தால் சரக்கில்லை என்று கடைக்காரர் சொல்கிறார்...

எப்போதும் எடை குறைவாகவே அளக்கப்படுகிறது...

இலவச வேஷ்டி சேலை பலருக்கு வழங்கப்படவில்லை...

சரக்கு இருப்பு குறித்த தகவல் பலகையில் எந்த தகவலும் இல்லை...

கடை திறப்பதோ தாமதமாக... அடைப்பதோ நேரம் வந்தவுடன்...

வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு அனைவரும் சென்ற பின்னர் பொருட்கள் பதுக்கப்படுகிறது...


இவை அக்கடையில் பொருள் வாங்க காத்திருந்த பொதுமக்கள் பலரின் குற்றச்சாட்டு.



இதுகுறித்து, கடை அலுவலர் கோஸ்லேயிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

இக்கடையில் 1092 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர் என்றும், சென்ற மாதம் சீனி 900 பேருக்கு மட்டுமே அனுப்பித் தரப்பட்டது என்றும் தெரிவித்த அவர், சரக்கு முடிந்துவிட்ட நிலையில் வாங்க வரும் எஞ்சிய 200 பேருக்கு கொடுக்க இயலாமல் போவதால் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும், தன் புறத்திலிருந்து இதில் எத்தவறும் நிகழவில்லை என்றும் தெரிவித்தார்.

பொங்கல் இலவச வேஷ்டி சேலை 700 பேருக்கு மட்டுமே வந்தது என்றும், எனவேதான் பலர் வாங்க முடியாமல் போனதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் முகைதீன்,

இங்கு நியமிக்கப்படும் அலுவலர்கள் துவக்கத்தில் நல்லவர்களாகவே இருக்கிறார்கள்.. சரக்கு எடை போட்டு கொடுப்பதற்காக இக்கடையில் இருக்கும் அலியார் தெருவைச் சார்ந்த முகைதீன் அப்துல் காதர் என்பவர்தான் அனைவரையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்...

வேண்டுமென்றே எடையைக் குறைத்து மக்களுக்கு பொருள் வழங்குவது, கடை அலுவலருக்கு அவ்வப்போது ஏதேனும் கொடுத்து, அங்கு கிடைக்கும் பொருட்களை கருப்புச் சந்தையில் விற்பது, பதுக்கல் செய்வது உள்ளிட்ட பல வேண்டாத செயல்களை அவர் செய்வதாக எனக்கும், இப்பகுதிக்குட்பட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் பலருக்கும் அடிக்கடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதன் பேரில், வட்ட வழங்கல் அலுவலரிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளோம்...

அதுமட்டுமின்றி, இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்காக தாயிம்பள்ளி ஜமாஅத் நிர்வாகிகளால் இவர் பலமுறை கண்டிக்கப்பட்டிருந்தும் திருந்த ஆயத்தமாக இல்லை...
என்று தெரிவித்தார்.



இப்படி தினமும் பிரச்சினை ஏற்படுவதால் இப்பகுதியில் அமைதி கெட்டு வருவதாகத் தெரிவித்த அவர், வரும் திங்கட்கிழமை (நாளை) இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலரிடம் எழுத்து மூலம் புகார் அளிக்கப்போவதாக தெரிவித்தார்.

சம்பத்தைக் கேள்வியுற்று அவ்விடம் வந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர கிளை நிர்வாகிகள் ஜப்பான் சுலைமான், லக்கி மக்கீ ஆகியோர், இக்குற்றச்சாட்டுகள் இங்கு மட்டுமின்றி நகரின் பல கடைகளிலிருந்தும் பெறப்படுவதாகவும், சரக்கு பதுக்கல் குறித்து பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் மிகுந்த கண்காணிப்புடன் இருக்க வேண்டுமென்றும் தெரிவித்ததோடு, இக்கடையில் சரக்கு எடை போட்டு வழங்கும் முகைதீன் அப்துல் காதர் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தமதமைப்பின் சார்பில் முறையிடப்படும் என்றும் தெரிவித்தனர்.



வாங்காத பொருட்களுக்கும் குடும்ப அட்டையில் பதிவு செய்து, அப்பொருட்களை பின்பு கருப்புச் சந்தையில் விற்றல், தரமான அரிசியுள்ள மூடைகளை தனியே ஒதுக்கி, கூடுதல் விலைக்கு கருப்புச் சந்தையில் விற்றல், நள்ளிரவில் வாகனத்துடன் வந்து மூடை மூடையாக பொருட்களைக் கடத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காயல்பட்டினம் நகரின் பெரும்பாலான நியாயவிலைக் கடைகளைச் சார்ந்த பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டு வந்தாலும், அந்நடவடிக்கைகளின்போது கையும் களவுமாகப் பிடிக்க அவர்கள் ஆயத்தப்படாதது வேதனைக்குரிய உண்மை.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நியாயவிலைக் கடையில் சலசலப்பு! பதுக்கல்
posted by kb syed ahamed (riyadh-ksa) [07 February 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2558

உங்க ஆபீஸ்லே லிஞ்சி டைம் அதிகமா? லஞ்ச டைம் தான் அதிகம் சார் ........

இந்த மிகப்பெரிய தவறை உடனடியாக தடுக்க வேண்டும். சரி இருக்குற ஈ தொல்ல காணாதுன்னு இந்த ஈக்கள் வேறைய என்ன கொடுமை சாரே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. விழிப்புணர்வு அவசியம்...
posted by HASAN IRSATH K.R (KTM Street) [07 February 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 2560

மக்களின் இந்த அவல நிலையை நறுக்கு என்று வெளி கொண்டு வந்த ஸாலிஹ் காக்கா அவர்களுக்கு நன்றி ..!

இதனுடன் நின்று விடாமல், இதனை படிக்கும் பொறுப்பாளர்களும், அதிகாரிகளும் மற்றும் நகராட்சியும் தக்க நடவடிக்கை எடுத்து, தீர்வு காண வேண்டும்.

இதில் மக்களுக்கும் விழிப்புணர்வு அவசியம்...

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. சிவில் சப்ளை
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [08 February 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 2583

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

சரக்கு எடை போட்டு கொடுப்பதற்காக இக்கடையில் இருப்பவர்தான் அனைவரையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்... என்று அப்பகுதி நகர்மன்ற உறுப்பினரே கூறுவதோடு மட்டுமல்லாது,

வேண்டுமென்றே எடையைக் குறைத்து மக்களுக்கு பொருள் வழங்குவது, கடை அலுவலருக்கு அவ்வப்போது ஏதேனும் கொடுத்து, அங்கு கிடைக்கும் பொருட்களை கருப்புச் சந்தையில் விற்பது, பதுக்கல் போன்ற பல குற்றச்சாட்டுக்களும் அவர்மீது கூறுகிறார்.

அது மட்டுமின்றி, இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்காக ஜமாஅத் நிர்வாகிகளால் இவர் பலமுறை கண்டிக்கப்பட்டிருந்தும் திருந்த ஆயத்தமாக இல்லை என்று சொல்லும்போது அவருக்கு எந்த கருணையும் காட்டாமல் அவரை நீக்குவதற்குண்டான நடவடிக்கைகளை சட்ட ரீதியாக எடுத்து உடனே அவரை நீக்குவதுதான் நல்லது.
--------------------------------------------------
பொதுவாக நியாய விலைக்கடைகளைப் பொறுத்தவரை என்றைக்குமே மக்களிடம் நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை.

மக்கள் கடைக்கார்களை குறை சொல்வார்கள் - கடைக்காரர்கள் அரசாங்கத்தை குறை சொல்வார்கள் சரியான 'சப்ளை' இல்லை என்று. மொத்தத்தில் அலசிப்பார்த்தால் அரசாங்கத்தின் பக்கம் 10 சதவிகிதமும் ; மக்களின் பக்கம் 20 சதவிகிதமும் ; கடைக்காரரின் பக்கம் 70 சதவிகிதமும் என்று பரவலாக எல்லோரிடமும் குறைகள் இருக்கும்.

அரசாங்கம் (சிவில் சப்ளை) :

அ. சரியான நேரத்திற்கு பொருட்களை அனுப்புவதில்லை.

ஆ. தேவையான அளவுக்கு பொருட்கள் அனுப்புவதில்லை.

இ. பொருட்களின் தரம் குறைவாக இருக்கும். இப்படியான சில, பல குறைபாடுகள்.

பொது மக்கள் :

அ. நம்ம ஊரை பொறுத்தவரை பெரும்பாலும் வீட்டில் (குடும்ப அட்டையில்) உள்ளவர்கள் ரேஷன் கடைக்கு போய் வாங்குவதில்லை, வேலையாட்களை அனுப்பியே பொருட்களை வாங்குவார்கள் ( இது கடைக்காரருக்கு பல விதத்திலும் சாதமாகிவிடும்).

ஆ.வாங்கிய பொருள் மட்டும்தான் குடும்ப அட்டையில் பதிந்திருக்கிறார்களா? அல்லது வேறு ஏதும் கொடுத்ததாக சேர்த்து பதிந்திருக்கிறார்களா ? என்பதை பெரும்பாலானவர்கள் கவனிப்பதில்லை.(இதுவும் கடைக்காரருக்கு பல விதத்திலும் சாதகமே).

இ. இன்னும் சில வீடுகளில் ஏன் பல வீடுகளில் ரேஷன் கடையில் கொடுக்கும் பொருட்களில் ஒரு சிலதை மட்டும் வாங்கி விட்டு மற்றபொருட்களை வீட்டில் உள்ள வேலைக்காரர்களை வாங்கிக் கொள்ள அனுமதிக்கிறார்கள். (இதுவும் கடைகாரருக்கு மிகுந்த சாதகத்தை கொடுக்கிறது).

கடைக்காரர் :

அரசாங்கத்தினுடைய குறைபாடுகளும் மற்றும் மக்களுடைய கவனக் குறைவுகளும். கடைக்காரருக்கு பல வகையிலும் தவறு செய்வதற்கு வசதியாக அமைந்துவிடுகிறது.

அ. பொருட்கள் நேரம் தவறி வந்தால் - வந்த சுவடுத் தெரியாமல் கை மாறுகிறது.

ஆ.தேவையான அளவுக்கு வராமல் இருந்தால் - சிலருக்கு மட்டும் கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு இல்லை என்று சொல்ல வசதியாகிவிடுகிறது.

இ. சில சமயம் தரம் குறைவாக ஏதும் கொஞ்சம் வந்தால் - அந்த தரம் குறைந்ததை மட்டும் முன்னுக்கு காட்டி மற்றதை அமுக்குவது.

ஈ. வேலைக்காரிதானே! என்று சரியான பதில் கொடுப்பதில்லை(அதே நேரத்தில் வாயாடியான வேலையாட்களிடம் வால் ஆட்டுவதில்லை).

உ. வாங்காத பொருட்களை வாங்கியதாக அட்டையில் பதிந்துவிடுவது. யாரும் அட்டையை பார்க்க மாட்டார்கள் என்ற தைரியம்.

ஊ.இந்த வீட்டில் இன்னின்ன பொருள் வாங்க மாட்டார்கள், இது வேலைக்காரிக்குதான் என்று தெரிந்து வைத்துக்கொண்டு வேலைக்காரி இடம் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்வது.
--------------------------------------------------
மொத்தத்தில் சிவில் சப்ளை மற்றும் பொது மக்களுடைய சில பலகீனங்களை பயன்படுத்திக்கொண்டு பெரும்பாலான ரேஷன் கடைக்காரர்கள் எடைக்குறைப்பு , பதுக்கல் , கடத்தல் போன்றவைகளை செய்து, மக்களுக்கு சேரவேண்டியவைகளை சூறையாடுகிறார்கள். மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் இவைகளை களைய முடியும்.

நம்ம ஊர் மக்களுக்கு நன்மைகளை செய்வதற்காக எத்தனையோ நலமன்றங்களும், சங்கங்களும் செயல்படுவதுபோல், ஊரில் அந்தந்த பகுதியில் உள்ள பொதுத்தொண்டு நிறுவனங்கள் தலையிட்டு "ரேஷன் கடை வினியோகத்தில்" ஏற்படக்கூடிய குறைகளை நீக்க நடவடிக்கைகளை எடுப்பது சிறந்ததாக இருக்கும். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Amazing
posted by Ibrahim (Chennai) [08 February 2011]
IP: 58.*.*.* India | Comment Reference Number: 2591

Epadippa tamil la salaikkama ippadi type panreenga... mudiyala, ipave kanna kattuthae..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved