Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:16:54 PM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5776
#KOTW5776
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மார்ச் 8, 2011
திமுக - காங்கிரஸ் உடன்பாடு: காங்கிரசுக்கு 63 இடம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 6035 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (51) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 7)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வரும் ஏப்ரல் 13 அன்று நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் விபரம் வருமாறு -

திமுக - 121
காங்கிரஸ் - 63
பா.ம.க - 30
விடுதலை சிறுத்தைகள் - 10
கொங்குநாடு முன்னேற்ற கழகம் - 7
முஸ்லிம் லீக் - 2
மூவேந்தர் முன்னேற்ற கழகம் - 1

தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையின் போது காங்கிரஸ் 63 இடம் கேட்பதாக கூறி மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவதாக திமுக அறிவித்திருந்தது. காங்கிரசுக்கு 60 இடம் மட்டுமே கொடுக்கமுடியும் என தெரிவித்திருந்தது.

தற்போது காங்கிரசுக்கு கூடுதலாக கொடுக்குப்பட்டுள்ள 3 இடங்கள் - திமுகவின் சார்பாக 1 தொகுதி மூலமும், முஸ்லிம் லீகுக்கு கொடுக்கப்பட்ட 3 இடம், 2 இடமாக குறைக்கப்பட்டும், பா.ம.க க்கு கொடுக்கப்பட்ட 31 இடம் 30 இடமாக குறைக்கப்பட்டும் வழங்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. NAYAVANJAGA KARUNANITHI
posted by amzedmoosa (DAMMAM) [08 March 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3083

ASLAMUALIKUM SAGATHARA SAGOTHIRIKAL SINTHIKA VANDUM KALAINGER ISLAMIYARKALIN KAVALAR ENDRU KOORUM(KOOVUM) NABARKAL SINTHIKAVANDUM AVARGAL KOOTANIKAGA(ADITHA KOOLAI POOTHATHA?INNUM NAMATHU NAATAI SOORAIYADA VANDUM YENDRU MURINTHA KOOTANI MARUBADIUM INAINTHU) NAMAKU KIDAITHA 3 IL 1 PIDUNGUBAVAR NAMATHU KAVALARA???????????????????? NANDRAGA SINTHITHU VAKALIUNGAL WASALAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Drama
posted by Thamby (Dubai) [08 March 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3084

Finally Mr.Karunanithi's drama saved his family members. Mr.Kavimagan & Mr.Salai Jeeyaudeen (alkhobar ) we are waiting for your comments in this issue.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. BACK STABBING BY KALAIGNAR
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [09 March 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 3087

3 கொடுக்கப்பட்ட முஸ்லிம் லீக் இடம் இருந்து ஒன்று புடுங்கி கூட்டணி தர்மத்தை காப்பாற்ற CONGRESSKKU கொடுத்தது நியாயம் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும் , அதே நியாப்படி விடுதலை சிறுத்தைகளிடம் இருந்து குறைந்தது 3 பிடுங்கி இருக்கணும்.

31 சீட் கொடுத்த PMK இடம் இருந்து 10 பிடுங்கி இருக்கணும்.முஸ்லிம்கள் தான் என்ன துரோகம் செய்தாலும் கலைஞருக்கு VOTE போடுவது இஸ்லாத்தில் ஆறாவது கடமை போல் செயல்பட்டால், கொடுத்த மூன்றை சதவீத இட வோதுக்கீட்டையும் பிடுங்கி விட்டு, முஸ்லிம்களுக்கு என் இதயத்தில் இடம் என்றுமே உண்டு என்று ஆப்பு அடித்தாலும் அடிப்பார்.

2006 ELECTIONILUM பாளையங்கோட்டை தொகுதியை இப்படி தான் ஏப்பம் விட்டு முஸ்லிம் லீக் இடம் இருந்து பிடின்கினார்கள். இத்தனைக்கும் முஸ்லிம் லீக் உதய சூரியன் சின்னத்தில் நிற்க ஒப்பு கொண்ட பின்னும் இப்படி ஏமாற்று. முஸ்லிம் லீக் குட்ட குட்ட குனிந்தால் , கடைசியில் வடிவேலு தலயில் ஹொஸ்டல் ஸ்டூடெண்ட்ஸ் குட்டி வீங்கின கதைப்போல் ஆகி விடும்..

2009 லோக் சபா ELECTION டைமிலும் , ம ம க வுக்கு 1 சீட் மேல் தர முடியாது என்று பிடிவாதம் பிடித்து, கேட்காத விடுதலை சிறுத்தைக்கு 2 தொகுதி கொடுத்தார்கள். பரம்பரை பரம்பரையாக DMKக்கு VOTE போட்டு வரும் முஸ்லிம் கட்சிக்கு இந்த நிலை, சென்ற ELECTION வரை எதிரணியில் இருந்த வி சி க்கு கவுரவம். இனியும் முஸ்லிம்கள் தங்களுக்கு முன்னேற வழி வகுக்கும் கட்ட்சியை தேர்ந்து எடுக்கணும் . சலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. League
posted by Ahamed mustafa (Dubai) [09 March 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3088

We would have appreciated, had the league pulled out of this alliance, to garner some few left out respects. Din't really know what the deal was upto.

After so many years of running a party packed with heritages, it is really a shameful decision of the league falling prey to the clutches of the scandal prone DMK.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. எச்சரிக்கிறோம் கலைஞரே!
posted by kavimagan (dubai) [09 March 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3089

நெஞ்சுக்கு நீதி! வெறும்
இலக்கியத்திற்குத்தானா கலைஞரே!
இதயத்திற்கு இல்லையா?

கோடிகள் போதுமா தலைவரே?
பச்சிளம் பிறைக்கொடி வேண்டாமா?

மத்திய ஆட்சியின் பங்கிற்காக
மனசாட்சிக்கு பங்கம் செய்தீர்!

எச்சரிக்கிறோம் கலைஞரே!
எங்களின் ஒவ்வொரு ஓட்டும்
உமது குடும்ப ஆட்சிக்கு
வைத்திடும் மிகப்பெரும் வேட்டு!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. நாடகம்
posted by vsm ali (kangxi, jiangmen, china) [09 March 2011]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 3090

நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல ஒரு நாடகத்தை பார்த்த சந்தோசம் தமிழக மக்களுக்கு. நம் சமுதாய மக்களுக்கு தலையில் "தொப்பி".


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. கருணாநிதி கருணாநிதி ஒரு முஸ்லிம் சமுதாய காவலர்
posted by Cnash (Makkah) [09 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3092

Politics are almost as exciting as war, and quite as dangerous. In war you can only be killed once, but in politics many times - Winston Churchill

The aforesaid quote ousted out of the understanding of Winston Churchill seeing him as a prominent politician besides known for his leadership during the Second World War. He had observed the politics as the most awful weapon to wipe out the people lives eternally than a cruel war to kill in once.

In the same way, the DMK chief is staging his political excitement against the Muslims for some decades in showing the piece of bone to our community to nod its tail forever and our anesthetized mentality is ready to accept any shameless deeds against our community in the name of disgraced broadmindedness.

The reason behind our tolerance is our mindset, that ever had fixed with voting to DMK is Islam’s sixth obligation since we were practicing from our forefathers and even our DMK devotees has showed their enmity towards veteran politician MGR for no reason while he visited to our town.

For all those blind gratitude and vain loyalty that we have been extending to DMK almost five decades, we are being reciprocated by Mani Mandapam, Meelad Holidays and 2 assembly seats in addition to Waqf board chairmanship.

The heritage of this 100 years Banyan Muslim political party is bending its backbone to accept this beggary act whilst some mushrooms after rain stands with its spinal cord. Either Karunanithi or his party is not the one to blame as along as some chameleon leaders of our community is existing in the name of various alphabets. MMK, TMMK, IUML (with all the letter of English alphabet).

இது போன்ற சூடு சொரணை அற்ற முஸ்லிம் கட்சிகள், தலைவர்கள் இருக்கும் வரை...கருணாநிதி தன்னை ஒரு முஸ்லிம் சமுதாய காவலர் என்று மட்டும் அல்ல...உலக முஸ்லிம், மற்றும், கடல் வாழ், விண்வெளி வாழ் முஸ்லிம்களுக்கும் பாதுகாவலர் என்று சொல்லி கொன்றே தான் இருப்பார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Thorogathin Maru peyer.....
posted by Shaik (Kayalpatnam) [09 March 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 3094

Anbarntha islamia vakkalargale ushar ushar.. Thoragthin mottha uruvamana kalainaridam namathu muslim league- i adagu vaikka venduma? vendumanal perasirier kader mohideen 1009 vathu katchiyai thodangi kalaigarodu kootu vaithirukkalam.thayavu seithu muslim endra kanniya namathai ungaludaya pilaypukku payanpaduthatheergal.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. MUSLIM SHOULD BE UNITY
posted by sulaiman lebbai (RIYADH - S.ARBAI) [09 March 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3095

ALL MUSLIMS SHOULD BE STAND UNDER ONE ROOF. WE MUSLIMS ARE 3,4 PARTIES. THEN HOW WE CAN DEMAND MORE SEATS? V.C & P.M.K ARE TOGETHER. THEY ARE DEMANDING THEIR SEAT STRONGLY. FIRST ALL MUSLIMS ARE COME UNDER ONE GROUP THEN WE CAN DEMAND MORE SEATS. MAY ALLAH GIVES US UNITY TO OUR COMMUNITY.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. என்ன நியாயம் ?
posted by MUTHU ISMAIL (kayalpatnam ) [09 March 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3099

அரசியல் களத்தில் ஊனமாக இருக்கும் நமக்கு கிடைத்த ஒரு சீட்டை நல்ல உடல் பலமுள்ள ஒரு ஆரோக்கியவானுக்கு விட்டுக் கொடுப்பது போன்று உள்ள இந்த செயலுக்கு என்ன நியாயம் கற்பித்தாலும் அது சரியானது இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Alien Vs Predator: Whoever wins... We loose...
posted by Zackariya Moulana (Kayalpatnam) [09 March 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3100

Alien Vs Predator was a movie released in 2004 with a tagline "Whoever wins... We loose..".

The story is that both Aliens and Predators attack each other and end up killing human beings.

The same story can be compared in TN politics.

Aliens - DMK Alliance
Predators - ADMK Alliance
We - Muslims

Whoever Wins... We Loose...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. ம்ம்.......ஹும்ம்
posted by இப்னு சாகிப் (Dammam, Saudi Arabia) [09 March 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3101

திமுக, முஸ்லிம் லீக்கிற்கு சீட் ஒதுக்கியுள்ளது, ஆனால் ஒதுக்கவில்லை. 3 அல்லது 2 சீட் எதுவாகினும் முஸ்லிம் லீக் உறுப்பினர் திமுக உறுப்பினராகி உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். எனவே இச்செய்தியை திமுகவிலிருந்து 62ம், பாமகவிலிருந்து 1 சீட் புடுங்கி மொத்தம் 63 காங்கிரஸிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று வாசிக்கவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Kamati kemati....
posted by M.S.SABDULAZEEZ (CHINA) [09 March 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 3102

Ha ha ha ........ VERY GOOD (2011) JOKE. Yangala vajou kamati kemati panalaya?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. காயல்பட்டிணம் - கலைஞர்பட்டிணம்
posted by IBN SAHIB (Dammam, Saudi Arabia) [09 March 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3105

MGRரை ஆதரித்த பல சமுகங்களை அவர் முன்னேற்றி உள்ளார் முஸ்லிம் சமுதாயம் கருணாநிதியின் இனிப்பான வார்த்தை ஜாலங்களுக்காக காலம் காலமாக திமுகவை ஆதரித்துள்ளோம். நான் உட்பட. MGRரின் 13 வருட ஆட்சிக் காலத்தில் திமுகவை நாம் கண்மூடித்தனமாக ஆதரித்தோம். ஆதலால் திமுக முஸ்லிம் சமுதாயத்திற்கு கடமைபட்டுள்ளது. ஆனால் இன்று நடப்பதோ வேறு.

ஏன்? நம் ஊரை காயல்பட்டிணம் - கலைஞர்பட்டிணம் என்று பெருமைபட்டோம். என்ன ஆகியது. சென்ற திமுக ஆட்சியில்தான் மீன்வளத் துறை அமைச்சராக இருந்த ஜெனிபர் சந்திரனின் மேல் பார்வையில் கடற்கரையில் தொகுப்பு வீடுகள் வெளியில் இருந்து வந்தவர்களுக்கு... இம்முறை பஞ்சாயத்துக்கு அறிவிக்காமலே கற்புடையார் பகுதியில் சுனாமி தொகுப்பு வீடுகள். திமுக ஆட்சியில் கலைஞர்பட்டிண மக்களிடம் ஆலோசனை செய்தால் கெட்டா விடப் போகிறார்கள்?

ஒன்று நிச்சயம். நம் சமுதாயம் யாரையும் கண்மூடித்தனமாக ஆதரித்தால் நிர்கதியாகி விடுவோம் என்பது கலைஞரின் தற்போதைய நடவடிக்கை ஊர்ஜிதப்படுத்துகிறது. கலைஞர் முன்பு முஸ்லிம்கள் சவலப்பிள்ளைகள் என்று தேர்தலில் இடம் கொடுக்காமல் நெஞ்சில் சீட்டு கொடுத்த சம்பவங்களும் உண்டு.

உண்மை என்னவென்றால் ஜெ.ஜெ. எதிரி. இங்கிதமில்லாமல் நெஞ்சில் குத்துவார். கருணாநிதி துரோகி. தடவிக் கொடுத்து முதுகில் குத்துவார். எதிரியை எதிர்க்கலாம், மன்னிக்கலாம். ஆனால் துரோகியை?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. உதய சூரியன் இனி அஸ்தமன சூரியன்
posted by Sulthan (Sudan) [09 March 2011]
IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 3106

அடேங்கப்பா........இவனுக பண்ற கூத்தெல்லாம் 'அவதார்' படத்த எடுத்த ஜேம்ஸ் கேமரான் பாத்தாருன்னா, நம்ம ஆளுங்கள எல்லாம் அமுக்கி போட்டு 'அவதார் part 2 ' எடுக்க ஆரம்பிச்சுடுவாரு........அந்த அளவுக்கு தாவுறதும், பறக்குறதும்......நம்ம ஆளுங்க ஓவ்வொருத்தனும் தனி தனி அவதாரம்யா.........மக்களோட கோவணத்த உருவுற வரைக்கும் விட மாட்டாங்க.

நல்லா ஒன்னு தெரிஞ்சுக்ங்க பாமக கிட்ட ஒரு தொகுதி பிடுங்கினது பரவாஇல்ல ஏன்னா அவங்ககிட்ட மீதி முப்பது தொகுதி இருக்கு ஐயோ பாவம் முஸ்லிம் லீகுகிட்ட வெறும் ரெண்டு தொகுதி மட்டும் தான் இருக்கு அதையும் கேட்டா உடனே கொடுத்துடுவாரு எங்க தலைவர் காதர் மொய்தீன். மீதி இந்த 2 யையும் கேட்டாலும் கொடுத்துடுவார்..... இவர்கள் முஸ்லிம்களின் பாதுகாவலர்கள்...

காங்கிரசிற்கு எதிராக அண்ணா உருவாக்கிய கட்சியை காங்கிரசிடம் அடமானம் வைத்து விட்டார்கள். உதய சூரியன் இனி அஸ்தமன சூரியன் தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. டீலா, நோ டீலா..
posted by சாளை.S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [09 March 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3107

சென்ற பதிவில் சுடானில் இருந்து சகோ. சுல்தான் குறிப்பிட்டது நடந்து விட்டதே.!. வெல்டன்.. சுடானில் தனியாக இருப்பதால் நன்கு யோசிக்கின்றார் போல. பார்த்து பார்த்து..

என்ன கலைஞர் அவர்களே, தாங்களின் சானக்கியத்தனம், சானத்தை நக்கி விட்டதே!

அவிக 63 கேட்டார்களாம், இவிக 60 தான் தருவதாக ஒற்றை காலில் நின்று முறித்து விட்டார்களாம்(கூட்டணியை). இன்னும் மக்களை ஏமாற்றலாம் என்று நினைப்பு.

60 கொடுத்தவருக்கு,63 கொடுப்பது ஒன்றும் பெரிய கஷ்டம் இல்லை.(இளிச்சவாயன் பாய்கள் இருக்கின்றார்கள், அவர்களிடம் இருந்து மூன்றையும் பிடுங்கி (தொகுதிகள் தான்..) கொடுத்தாலும் ஒன்றும் குடிமுழுகிவிடாது,அதான் மனதில் இடம் உள்ளதே!).

தலைவரின் குடுமி(அவருக்கு பிடித்த வார்த்தை குடுமி,பூணூல்), காங்கிரசாரின் "கை" இல் சிக்கி விடுவிப்பதில் வந்த சிக்கல் தான் இந்த ராஜினாமா நாடகம்.( ராஜினாமா பண்ணினால் உடனே பிரதமருக்கு பாக்ஸ் அனுப்ப வேண்டியது தானே, மற்ற விசயத்திற்கு எல்லாம் கடிதம் கடிதம் என்று உடனே பாக்ஸ் அனுப்புறேலே..).

ஆக மொத்தம் தலைவரின் அதிமுக்கியமான மூன்று தொகுதிகள் அண்ணா அறிவாலயம், சி.ஐ.டி காலனி, கலைஞர் டிவி ஆகியவை பறிபோகாமல் இருக்கனும் என்றால் மற்ற மூன்று தொகுதிகள் பறி போயிதான் ஆகணும்- டீலா, நோ டீலா..

ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள் தலைவரே (என்ன தலைவரே.. தலைவரே..) கலைஞர் அவர்களே, தாங்களின் குடுமி, பூணூல் போட்ட ஆளிடம் தான் உள்ளது-உச்ச நீதிமன்றத்தின் நேரடி பார்வையில். எப்புடி..ஆப்பு. ஆப்புதான்.

ஆமாம், டாக்டரின் கை எழுத்து புரியாது என்பார்கள், டாக்டர். Mohamed Khizar நன்றாக எழுதுகிறாரே. வாழ்த்துக்கள்.(ஓஹ்ஹ்.. டைப் அடித்ததா..)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. NEED OF UNITY
posted by MOHIDEEN ABDUL KADER (ABU DHABI) [09 March 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3108

ASSALAMU ALIKKUM.VARAH. Dear all brothers and sisters this is one of the lesson from many more action and not only from DMK also from all political parties.

Eery body known very well about our UNUNITY, so they are clearly taking like this action without fear and affection. For this & even more bad than this, we are all responsible.

Before get angry or comments pls every one think reason for this situation that is NEED OF UNITY. We are simply proud by telling of our jamath system, But realy shall we have one leader for whole Tamilnadu Muslim and count how many division of our muslim brothers & parties are available.

We are very shelfish than others and i can say no one have real sprit of social works and very much shame, that is we are getting feedback very low level than others like viduthalai siruchai, pmk, kunggunadu, and may more who all were our workers once upon a time.But they have good UNITY and Only one leader.

Any one thinking to form unity with our brothers is very hard. No because, we have good system than any one, That is islam and prophet MOHAMED Peace Be Upon Him teached very clear that Jumma speach and Jamath system can work to form one UNITY AND ONE LEADER FOR WHOLE TAMIL MUSLIM by rotation method, if we segregate politics[under our islamic faith] and shariya. Until otherwise we have to face this and even less than this.

IUML by this 2 seats, what they are giong to achieve and for this 2 seats why they have to keep allaince or left their historical flag mark. Instead of this they can face seperate may can get more than 2 seats even our ununity. But realy if they or any one want to get respect,power,decision making in TAMILNADU AND IN CENTRAL, we should think and get workout for one unity & one leader with us.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. தாமரை
posted by syad ahamed (riyadh) [09 March 2011]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3109

ஏணி சின்னத கைல வச்சிட்டு மேல மேல..... ஏறி போகாம ஏணி தூகோ வச்சிட்டு இருகிக்க நீக என்ன சொன்னாலும் இனி முஸ்லீம் லீக் அதுக்கு சரிபட்டு வராது இந்த வடிவேலு காமடித எனக்கு நேபகோ வருது.

அய்யோ அய்யோ..................................... ஹ... ஹ ............ ஹ... ஒன்று மட்டு சொல்லுற இவகள நம்பறத விட தாமரைய நா.........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Otrumai
posted by Sayna (Bangkok) [09 March 2011]
IP: 203.*.*.* Thailand | Comment Reference Number: 3111

Sagotharar galay,

Namakul otrumai illai yanpathai Thalavar nangu tharinthu kondar, Aakavey thaan intha nilamai, Namakul otrumaiyaga irunthu oru katchieku thaan ottu poduoom yadu sollunga parkalam,

Apoluthu Arasiyal sanakiyan kooda , muslim galin ottu illamal onnum saiya yalathu yandru vanthu veduvargal, Otrumaiyaga Irunga, Oongie kinalam, Adithalum , pidithalum namakul vaithu kollungal, Publisity pannatheergal,

Muslimgal yallam sarthu oru katchie kooda arambikalam, Kuthadie yallam katchie arambikum poluthu, Naam yaan katchie arambika koodathu, Osithu sayal padungal


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. தாய் கழகமே தாரை வார்த்தது (முஸ்லிம் சமுதாயத்தை) போதும் விளித்து எழு!!
posted by Salai.Mohamed Mohideen (California) [09 March 2011]
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 3112

நாம் எல்லோரும் நம்முடைய தாய் கழகத்துக்கு (முஸ்லிம் லீக்) ஒரு சீட் போய் விட்டதே என்று கவலை பட்டு கொண்டு இருக்கிறோம். ஆனால் தாய் கழகம் இதை பற்றி கவலை பட்டதாய் தெரிய வில்லை. அதற்கு பதிலாக "தி.மு.க - காங்கிரஸ் உடன்பாடு ஏற்பட முழு முயற்சி மேற்கொண்டஇந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு கலைஞர் -சோனியா நன்றி" - - கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்

மாநில பொதுச் செயலாளர்

http://www.muslimleaguetn.com/news.asp?id=2169

என்ன ஒரு பெருந்தன்மை நம்மவர்களுக்கு. எதோ இருபது சீட் கிடைத்து ஒரு சீட்டை விட்டு கொடுத்தது போல. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள். ஒட்டு மொத்த தாய் கழகத்தையும் கருணாநிதி குடும்பத்துக்கு தாரை வார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. சூடும் சொரணையும் வீரமும் வீராப்பும் மலையேறி போய் விட்டது. விடுதலை சிறுத்தையி டமோ அல்லது கொங்கு வேளாளர் கட்சிகளிடம் போய் கேட்டு தான் (கருணாநிதி) அசிங்க படுவதை விட முஸ்லிம் லீக்கிடம் (ஏமாந்த சோமந்த கிரி?) கேட்டால் நடக்கும் என்று பலம் திண்டு கொட்டை போட்ட (சாரி..அது கூட போடுவார இல்லை அதையும் ஏப்பம் விட்டு முழுங்கி விடுவாரோ என்னவோ) தானைய தலைவர் முதல்வர் (முன்னாள் முதல்வர் என்று சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை!!) கருணாநிதி அவர்களுக்கு தெரியாதா என்ன?

தாய் கழகத்தின் பேச்சை கேட்கின்ற கேவலமான நிலையில் இன்றைய முஸ்லிம் சமுதாயம் இல்லை என்று உங்களுக்கு மிக நன்றாக தெரிந்ததினால் தான் என்னவோ தாய் கழகத்திடம் ஒரு சீட்டை புடுங்கி விட்டீர்கள். மேலும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுகத்தையும் எங்களுடைய தாய் கழகம் உங்களுடைய குடும்ப அரசியலுக்கு அடகு வைத்து விட்டதற்காக, வெட்கமும் & சொரணையும் கெட்ட கட்சி என்று எண்ணி கொண்டு இருக்காதீர்கள். ஆனால் நிச்சயம் அவர்களும் ஒரு நாள் விழிப்பார்கள்...நீங்கள் திகைப்பில் விளிப்பீர்கள் ஆனால் நாங்கள் ஓரணியில் நிற்போம்.

இன்னொரு முறை கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தையே தனது குடும்ப நலனுக்காக சூறையாடிவிடுவார். ஏற்கனவே அவருடைய ஒட்டு மொத்த குடும்பமும் ஆட்சி கட்டிலில் அமர்ந்து மக்கள் பணத்தை கோடி கணக்கில் கொள்ளை அடித்து ஏப்பம் விட்டு கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எந்த துறையையும் விட்டு வைக்க வில்லை சினிமா (Production ) துறை உட்பட.

கருணாநிதி குடும்பத்தின் நண்டு சுண்டு பேரர்கள் எல்லாம் கோடி கணக்கில் இன்வெஸ்ட் பண்ணிக்கொண்டு இருக்கின்ற இன்றைய தயாரிப்பாளர்கள். அங்கேயும் அவர்கள் வைத்ததுதான் சட்டம். அது எல்லாம் யாருடைய பணம்? இந்த ஊழல் நிறைந்த குடும்ப அரசியலுக்கு யாரும் வாய்ப்பு கொடுக்க கூடாது என்பதே சாதாரண மக்களின் எதிர்பார்ப்பு. ADMK க்கு வோட்டு போட விருப்பம் இல்லையென்றால் கூட தயவு செய்து DMK க்கு வோட்டு போட்டு, ஒட்டு மொத்த தமிழகத்தையும் & தமிழக முஸ்லிம்களையும் கருணாநிதியின் கேவலமான சுயநலம் கொண்ட குடும்ப அரசியலுக்கு அடகு வைத்து விடாதீர்கள் சகோதர்களே!!

என்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் விழித்து எழுகின்றதோ (அரசியல் புரட்சி) அன்றுதான் தமிழகத்தில் உண்மையான நல்லதொரு ஆட்சியை பார்க்க முடியும் & சமுதாய அரசியல் விடயலை காண முடியும். இறைவன் நாடினால் அதை காணும் தூரம் வெகு தூரம் இல்லை சகோதர்களே!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. வாழ்க,,,,,ஒற்றுமை
posted by MSML (dxb) [09 March 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3114

தமிழ்நாட்டில் உள்ள எல்லா பிஜேபி காரர்களையும் ஒரு தொகுதிக்கு கொண்டுவந்து வோட்டுப்போட வைத்தாலும் ஒரு எம்.எல்.ஏ ஜெயிக்க முடியாது

..ஆனா ,,, தமிழ்நாட்டில் உள்ள எல்லா முஸ்லிம் அமைப்புகளையும் ஒரு தொகுதிக்கு கொண்டுவந்து அமைப்பு சார்பா ஒரு வோட்டு போட்டாலும் ஜெயசுடுலாம்..

என்னா???????? சகோதர்களே ,,,,,,,,, சொல்றது புரியுதானே??????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. INC Vs ML
posted by Abu Rushda (Dubai) [09 March 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3115

"It is not a question of seats. It is not a question of my prestige. The prestige of the Indian National Congress has been hurt," the Congress chief is learnt to have told Karunanidhi's interlocutors on Saturday.

(http://timesofindia.indiatimes.com/india/Dont-care-if-govt-lives-or-goes-Sonia-told-DMK/articleshow/7658914.cms)

Can you compare Sonia Gandhi’s bold statement and Muslim leagues feeble stand. It shows the leadership qualities of INC and ML. Muslim league, a party as equal as INC in tradition and prestige, is just like a spineless worm wobbling in a sewer and living at the mercy of others now. Shame on you ML for selling us short. This alliance categorically showed the fragility of Muslim league’s leadership.

Leadership is an “Amanah”. When shabby chaps are entrusted with leadership, this will be the result. ML has retained its lapdog status by proving its loyalty to MK and usual betrayal to its community.

In fact we are fools to expect more from ML.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. ARISE ! AWAKE!
posted by Cnash (Makkah) [09 March 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3116

Br. Sulaiman Lebbai,

Please do not try to justify this Karunathi’s fox minded view on Muslim and realize at least his usual style of stabbing at the back.

•Do you think this traitor Karunaanidhi will generously bestow to our community to contest in 35-40 seats (according to the percentage of our population), if the Muslim political groups stand in unite!!!

•Just back to mid 80’s (MGR’s reign) where our community were not disunited as now with so called parties (MMK,TMMK, IUML(A to Z), we wholeheartedly extended our support to DMK and the followers of Muslims have forfeited their belongings to their lives for DMK………

Open your eyes honestly, how far we were benefited and with how many seats? The same seat and same slogan of leasing a permanent place in his tainted HEART ONLY FOR EVER.

Arise ! Awake at least now my deceived community!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. முஸ்லீம் லீக்!!!!!!!!!!!!
posted by தைக்கா சாஹிப் (ரியாத்) [09 March 2011]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3119

சகோதரர்களே குறைந்த பட்சம் இந்த செய்தி மற்றும் அதை சார்ந்த கமெண்ட்ஸ் படிக்கும் காயல் நகர முஸ்லீம் லீக் சகோதரர்கள் தங்கள் நிலைபாட்டை மாற்றி கொள்வார்களா???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. பட், அந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது
posted by முத்துவாப்பா...... (al khobar) [09 March 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3120

முத்துவாப்பா : கலைஞரே தன் மானம், சுயம் மரியாதை, 63 சீட் கேட்பது நியாயமா என்றெல்லாம் வாய் கிழிய பேசிவிட்டு, அவர்கள் கேட்டதையே கொடுத்து விட்டீர்களே ஏன்?

கலைஞர் : சோனியா அம்மா சொன்னாங்க கூடுதல் 3 தொகுதியை நான் வச்சுகிறேன், அண்ணா அறிவாலயம் ,சி.ஐ.டி. காலனி, கலைஞர் டிவி இந்த 3க்கும் பிரச்சனை வராம நான் பார்த்துகிறேனு சொன்னாங்க..

முத்துவாப்பா : !!!!!!!!!! அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க ?

கலைஞர் : பட், அந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது. அதனால ஒத்துக்கிட்டேன்.

முத்துவாப்பா : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. yarukuthan votu?
posted by rahman (kayal) [09 March 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 3121

jiyaudeen mama innum comment tharalaye yannadanu pathen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. நமது பலம் அவர்களுக்கு புரியணும்
posted by SUBHAN (abu dhabi) [09 March 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3123

இத்தனை பேசும் நண்பர்களே கொஞ்சம் சிந்தித்து நாம் ஏன் சுயேச்சையாக திருச்செந்தூர் தொகுதியில் ஒருவரை நிறுத்திஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாய பலத்தை காட்ட முன்னோடியாக இருக்க கூடாது வெற்றி முக்கியமல்ல நமது பலம் அவர்களுக்கு புரியணும் வாருங்கள் இது தன்நல்ல சந்தர்பம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா - முஸ்லிம்லீக் அகால
posted by sahibnawaz (Dammam ) [09 March 2011]
IP: 65.*.*.* Anonymous Proxy | Comment Reference Number: 3124

எங்களுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் வேண்டும். எங்களின் கோரிக்கையை எடுத்துக்கூற பிரதிநிதிகள் சட்டமன்றத்தின் இருக்கையில் இடம் வேண்டும்!. எவர்களின் இதயத்திலும் எங்களுக்கு இடம் வேண்டாம்!. ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் மனிதர்களின் இதயத்திற்கு அட்டாக் வந்துவிடலாம்!.

ஏன் கொடுத்த மூன்று தொகுதியையும் திரும்ப தர வேண்டும் என்று கேட்டால் (பிடுங்கினால்) கூட, சரணம் சரணம் கச்சாமி....! சாமிசரணம் கச்சாமி.....! என்று அதை தாராளமாக வாரி கொடுப்பதற்கு கொடைவள்ளல் காதிர்முகைதீன் தயாராக இருந்திருப்பார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. மமக உருவாகியது ஏன்?
posted by IBN SAHIB (Dammam, Saudi Arabia) [09 March 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3130

இங்கு சிலர் ஒற்றுமையுடன் சென்றால் அதிக தொகுதிகளை பெறலாம் என்பது போல கருத்து எழுதுகிறார்கள். முஸ்லிம்களிடம் ஒற்றுமை இல்லை என்று சாடுகிறார்கள்.

உண்மை நிலை வேறு. மமக என்ற கட்சி உறுவாகுவதற்கு காரணமே முஸ்லிம் லீக் தான் என்றால் இங்கு பலர் ஆச்சரியப்படுவீர்கள். சென்ற சட்டமன்ற தேர்தலில் தமுமுக ஓர் ஆலோசனையை முஸ்லிம் லீக்கிடம் வைத்தது. அதாவது தமுமுக தேர்தலில் போட்டியிடாத சமுதாய இயக்கமாகவே இருக்கும். அதே நேரத்தில் முஸ்லிம் லீக்கை அரசியல் ரீதியாக ஆதரிக்கும். எந்த கட்சியிடம் சீட்டு பேசப்போனாலும் ஒன்றாக சேர்ந்து செல்ல வேண்டும் எனவும், கிடைக்கும் சீட்டில் சிலவற்றில் தமுமுக கை காட்டும் முஸ்லிம் லீக்கை சேர்ந்தவர்களை நிறுத்த வேண்டும் எனவும் ஆலோசனையை முன் வைக்க, இரு அமைப்பினரும் ஒத்துக் கொண்டனர்.

ஆனால் இதை விரும்பாத கருணாநிதி தமுமுகவினரிடம் நீங்கள்(தமுமுக) தேர்தலில் நின்றால் அதிக தொகுதிகளை கொடுக்கத் தயார் என்று பிரித்தாலும் சூழ்ச்சியுடன் நூல் விட்டார். ஆனால் தமுமுகவினர் எங்களுக்கு தரும் சீட்டையும் சேர்த்து முஸ்லிம் லீகினருக்கே கொடுத்து விடுங்கள் என்று சொல்ல, கருணாநிதி மூன்(சந்திரன்)க்கு மூன்று சீட்டு கொடுக்கிறேன் என்று எதுகை மோனையுடன் பதிலளித்தார்.

இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. முஸ்லிம் லீக் தலைவர் வாக்கு மாறி திமுகவுடன் சீட்டு பற்றி பேச செல்லும்போது தமுமுகவிற்கு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. அவர்கள் மூன்று சீட்டு வாங்கிய பிறகு தமுமுகவிடம் எந்த விதமான பேச்சு வார்த்தைக்கும் அவர்கள் தயாரில்லை. பாவம் அவருக்கு என்ன அழுத்தமோ, சங்கடமோ தெரியவில்லை. இந்த இழுபறி நிலையை பயன்படுத்தி கலைஞர் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கிய பாளையம்கோட்டை சீட்டை பிடுங்கி திமுகவின் மைதீன் கானுக்கு கொடுத்து விட்டார்.

சமுதாய நலன் கருதி, தமுமுக ஒற்றுமைக்கான கையை நீட்டிய போதும், முஸ்லிம் லீக் உதறியதுதான், இன்று மமக என்ற அரசியல் பிரிவை தமுமுக ஆரம்பிக்க காரணமாகி விட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. அடுத்த நாடகதுக்கு தயாராகிட்டாங்க....
posted by Sulthan (Sudan) [09 March 2011]
IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 3131

நன்றி... சகோ: சாளை ஜியாவுதினுக்கு அவர்களே.. வரும் ஆனா வராது... கொடுக்க மாட்டோம் ஆனா கொடுத்திடுவோம்... குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு... அரசியல்வாதி பேச்சு அறிக்கை விட்டவுடன் போச்சு....

63 தொகுதி தரமுடியாது என்று சொல்லித்தானே ராஜினாமா நாடகம் நடத்தினீர்கள்.. இப்போது என்ன 23 சீட்டா கொடுத்திருக்கிறீர்கள்? உங்கள் நாடகத்தை பல தடவை பார்த்து விட்டதாலோ என்னவோ இந்த முறை டெல்லியிலே ஒருத்தர்கூட கூட சீண்டவில்லை . நல்லவேளை, அண்ணா உயிரோடு இல்லை. இருந்திருந்தால், இந்நிலை கண்டு வெட்கி செத்திருப்பான் அந்த இனமானத்தமிழன்.

இந்த நாடகத்துக்கு கதை, திரைக்கதை , வசனம் , டைரக்சன் எல்லாம் கலைஞர்ன்னு நினைக்கிறேன்.. அதான் ரெண்டே நாளில் எல்லாம் முடிஞ்சி போச்சு.... இனி அடுத்த நாடகதுக்கு தயாராகிட்டாங்க....

நாளைய முக்கிய செய்தி

தி.மு.க. தலைவர் தங்கபாலுவுடன் பேச்சு வார்த்தை .... தொகுதி பங்கிடு குறித்து தீவிர ஆலோசனை கூட்டம்.. தொகுதி பங்கீடு பேசுசுவார்த்தை காங்கிரசுக்கும், தி.மு.க. விற்கும் சுமுகமாக முடிந்தது...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. LETTER TO KARUNANITHI FROM TAMIL ARUVI MANIYAN
posted by A.R.REFAYE (Abudhabi) [09 March 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3132

தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம்!

என் பால்ய காலந்தொட்டு உங்கள் அரசியலை நான் பார்த்து வருகிறேன். நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை! தமிழகம் கண்ட தலைவர்களில் பல வகைகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர். காமராஜரைப் போலவே பாரம்பரியப் பின்புலம், உயர்குடிப் பிறப்பு, செல்வ வளம், கல்லூரிப் படிப்பு என்று எதுவுமின்றி, விலாசமற்ற ஊரில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, அயராது உழைத்து அரசியல் உலகின் உச்சம் கண்டவர் நீங்கள். காமராஜர் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, ஏழையாகவே வாழ்ந்து மறைந்தவர். நீங்கள் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, இன்று கோடீஸ்வரர்களில் ஒருவராகக் கொடிகட்டிப் பறப்பவர். காமராஜர் நாட்டுப் பணியில் தாயின் உறவு உட்பட சகலத்தையும் துறந்தார். நீங்கள் எதையும் துறக்காமல் பொதுவாழ்வின் மூலம் சகல நலன்களையும் வீட்டுடைமையாக்கிக்கொண்ட வித்தகராய் விளங்குகிறீர்கள்!

ஈ.வெ.கி.சம்பத் தி.மு.கழகத்திலிருந்து அவசரப்பட்டு விலகிய பின்பு, அண்ணாவுக்கு அடுத்த நாற்காலியில் அமர்ந்திருந்த நெடுஞ்செழியனை இரண்டாம் இடத்திலேயே இருக்கவிட்டு, முதலிடத்தைப் பிடித்து நீங்கள் முதல்வரானது - உங்கள் சாகசச் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படக்கூடியது! ஓர் உறையில் இரு வாட்கள் இருக்கலாகாது என்று சிந்தித்த நீங்கள் செயற்குழுவின் ஆதரவைத் திரட்டி, செல்வாக்குமிக்க எம்.ஜி.ஆரையே விரட்டி, தனிக்காட்டு ராஜாவாக மகுடம் சூட்டிக்கொண்ட மகத்துவத்தை யார் மறக்கமுடியும்? அரசியல் விளக்கங்களை எழுதவிடாமல் அன்றைய 'இந்திரா தர்பார்’, செய்தித் தணிக்கையைக் கொண்டு வந்தபோது, 'கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள்’ என்ற முல்லைக் கவி பாடல் மூலம் இலக்கியப் போர்வையில் அரசியல் வகுப்பு நடத்திய உங்கள் ஆற்றல் யாருக்கு வரும்? 'மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது’ என்ற மறக்கமுடியாத வசனத்தைப் 'பூம்புகார்’ திரைப்படத்தில் தீட்டிய உங்கள் மனசாட்சி முற்றாக உறங்கிப் போனதுதான் தமிழருக்கு வாய்த்த சாபம்.

'தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில், தமிழ் வீரம் போதித்த அறிஞர் அண்ணா கல்லூரியில் பயின்ற எனக்கு அந்த உணர்வும் மழுங்கி விடுமேயானால், நடைப் பிணம் நிகர்த்தவனாகி விடுவேன்’ (கலைஞர் கடிதம் தொகுதி - 5) என்றீர்களே, எந்தெந்த வகையில் நீங்கள் பெரியாரையும், அண்ணாவையும் இன்று பின்பற்றுகிறீர்கள் என்று எங்களுக்குக் கொஞ்சம் விளக்க முடியுமா? 'சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை என்ன தெரியுமா? ஐந்து கொள்கைகள்தான். கடவுள் ஒழிய வேண்டும். மதம் ஒழிய வேண்டும். காங்கிரஸ் ஒழிய வேண்டும். காந்தி ஒழிய வேண்டும். பார்ப்பான் ஒழிய வேண்டும். அன்று முதல் இன்று வரை அதே கொள்கைதான் (இறுதிப் பேருரை- 19-12-73) என்றார் பெரியார். இந்த 5 கொள்கைகளில், தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில் பயின்ற நீங்கள் இன்று எதைப் பின்பற்றுகிறீர்கள்? மஞ்சள் துண்டு எந்தப் பகுத்தறிவின் அடையாளம்? சாய்பாபாவை வீட்டில் வரவேற்றுப் பேசியதும், உங்கள் வீட்டார் அவர் கால்களில் விழுந்து ஆசி பெற்றதும் பெரியாரின் பகுத்தறிவுப் பாசறை தந்த பாடமா? தன்னை வாழ்த்தினால் 'நண்பர்’ என்று புகழ்வதும், விமர்சனம் செய்தால் 'பூணூல்’ என்று எள்ளி நகையாடுவதும் எந்த வகையில் பார்ப்பன எதிர்ப்பு? கஸ்தூரிபாயைத் தன் வழியில் திருப்பியவர் காந்தி. நாகம்மையையும், மணியம்மையையும் தன் மனதின் போக்குக்கேற்ப மாற்றியவர் பெரியார். வீட்டில் கொண்டுவர முடியாத மாற்றத்தை நாட்டில் கொண்டுவருவேன் என்பது நகைப்புக்குரியது அல்லவா! பக்திப் பரவசத்தில் கோயில் கோயிலாகச் சுற்றுவது ஜெயலலிதா மட்டுமன்று, உங்கள் வீட்டு உறவுகளுந்தானே!

அண்ணா இறுதி நாள் வரை காங்கிரஸை ஆதரிக்கவில்லை. மதுவிலக்கை எதிர்க்கவில்லை. ஆனால், நீங்கள் இரண்டு நிலைகளிலும் அண்ணா வழியில் நிற்கவில்லையே; 'என்னைப் பொறுத்த வரையில் பதவி முடிவு மட்டுமல்ல, வாழ்வின் முடிவே ஏற்படப் போகிறது என்று தெரிந்தாலும், அப்போதும் என் நினைவு உள்ளவரையில் பெரியாரையும் அண்ணாவையும் அவர்கள் தந்த லட்சியங்களையும் கொள்கைகளையுந்தான் கூறிக்கொண்டிருப்பேன். மரணப் படுக்கையில் என் நாக்கு அசையும் சக்தியை இழந்துவிடுமானால், என் நெஞ்சத் துடிப்புகள் கழகத்தின் பெருமைக்குரிய கொள்கைகளையே ஒலித்துக் கொண்டிருக்கும். அம்மா, அப்பா என்று சொல்லி உயிர் பிரியப் போவதில்லை. 'அண்ணா! அண்ணா!’ என்று சொல்லித்தான் இந்த உயிர்த் துடிப்புகள் இறுதியாக அடங்கும்’ (கலைஞர் கடிதம் தொகுதி - 5) என்று சொன்ன நீங்கள் அண்ணா எதிர்த்த காங்கிரஸின் உறவுக்காக ஏங்கி நின்றதும், நிற்பதும் நியாயந்தானா கலைஞரே?

'சித்ரவதை, தூக்கு மேடை, கால் வேறு கை வேறாக வெட்டிக் கடலில் எறிவது போன்ற எந்தக் கொடுமையையும், கொண்ட கொள்கைகளுக்காகத் தாங்கத் தயார்! இது அண்ணாவின் மீது ஆணையாக எடுத்துக்கொண்டுள்ள சூளுரை’ என்று சொன்ன கலைஞரே... உங்களால் ஈழத் தமிழருக்காக மூன்று மணி நேரத்துக்கு மேல் உண்ணாவிரதம்கூட இருக்க இயலவில்லையே? எதையுமே நீங்கள் அழகாக எழுதுகிறீர்கள். உணர்வு ததும்பப் பேசுகிறீர்கள்... ஆனால், எழுத்துக்கும் பேச்சுக்கும் எதிராகவே நடக்கிறீர்கள். அது ஏன்?

'முந்திரா ஊழல் முப்பத்து முக்கோடி தேவர்களும் அறிந்த விவகாரம். அமீர்சந்த் பியாரிலால் விவகாரம், அதிலே சிக்கிக் கொண்டு தவித்த தவிப்பு, இதெல்லாம் ஈரேழு பதினாலு உலகமும் சிரிப்பாய்ச் சிரித்ததை யாரும் மறந்து விடவில்லை’ என்றும் 'காங்கிரஸ் மாளிகை பாழடைந்த மண்டபமாகி விட்டது. அதிலே வெளவால்கள் குடியேறத்தான் செய்யும்’ என்றும் (கலைஞர் கடிதம், தொகுதி - 1) 1968-69-களில் உடன்பிறப்புகளிடம் கடிதங்கள் மூலம் காங்கிரஸ் எதிர்ப்பைக் கடுமையாக விதைத்துவிட்டு, 1971 தேர்தலில் அதே காங்கிரஸைக் கட்டித் தழுவியபடி களத்தில் நின்றீர்களே... அந்த நட்புக்குச் செலுத்திய நன்றிதான் கழகத்தின் மீது காங்கிரஸ் பொழிந்த புகழுரைகள்(!).

நீங்கள் பதவிப் பல்லக்கில் பவனி வருவதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் தோள் கொடுத்தால் காங்கிரஸ் சமதர்மம் இனிக்கும். சுமப்பதை விட்டுவிட்டு, அவர்களும் உங்களோடு சேர்ந்து பல்லக்கில் சவாரி செய்ய நினைத்தால் காங்கிரஸின் ஆதிக்கம் கசக்கும். 'சமத்துவம் இன்மையே... உனக்குப் பெயர்தான் இந்து மதமா?’ என்று கேட்டார் அண்ணல் அம்பேத்கர். 'சுயநலமே... உனக்குப் பெயர்தான் தி.மு.கழகமா?’ என்று கேட்கத் தோன்றுகிறது கலைஞரே! 'பதவிகளுக்காக, பவிசுகளுக்காக, அந்தஸ்துகளுக்காக, அதிகாரங்களுக்காக இந்த இனத்தைக் காட்டிக் கொடுக்கிற இழி செயலுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கின்ற ஒரு சாதாரணத் தொண்டன்கூடத் தயாராக இல்லை’ (முரசொலி 7-7-1981) என்று வீர முழக்கமிட்டவர் நீங்கள். ஆனால், ஈழம் எரிந்தபோது, நம் இனம் கரிந்தபோது களத்துக்கு வராமல் பாசறையிலேயே பதுங்கிவிட்டது ஏன் கலைஞரே? 'தியாகத் திருவிளக்கு சோனியா காந்தி’ என்று பரவசம் பொங்கப் புகழ்மாலை சூட்டிய நீங்கள், வீரத்தின் விளைநிலம் பிரபாகரனை ஈன்ற பார்வதி அன்னையை மனிதநேயமின்றி விமான நிலையத்தில் பாதம் பதிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய இந்திய அரசின் வன்கொடுமைக்கு எதிர்ப்புக்குரல் எழுப்பாதது ஏன் கலைஞரே? பதவி நாற்காலியைத் தக்க வைத்துக்கொள்ள சோனியா காந்தி என்னும் 'சொக்கத் தங்கத்தின்’ கருணைப் பார்வைக்கு இவ்வளவு தூரம் முதுகு வளைந்திருக்க வேண்டுமா முத்தமிழறிஞரே!

கலைஞரே... கடந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் இரண்டு முறை மட்டும் புதுடெல்லிக்குப் புறப்பட்டீர்கள். பிரபாகரன் சடலம் என்று ஒரு சடலத்தை ஊடகங்கள் ஓயாமல் காட்டிக் கொண்டிருந்தபோது, உலகத் தமிழர்கள் செய்வதறியாது சோகம் கனக்க விழிநீர் வெள்ளமாய்ப் பெருக்கியபோது, தள்ளு வண்டியில் அமர்ந்தபடி சோனியாவிடம் உங்கள் மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும் அமைச்சர் பதவி கேட்டு அலைக்கழிந்தீர்கள். அதற்குப் பின்பு ஆயிரம் பிரச்னைகள் தமிழகத்தில் அரங்கேறின. ராமேஸ்வரம் முதல் நாகப்பட்டினம் வரை அன்றாடம் மீனவர்கள் சிங்களரால் வேட்டையாடப் பட்டனர். இன்று வரை 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நீங்கள் கைநோக மன்மோகன்சிங் அரசுக்குக் கடிதம் எழுதிக் கடமையாற்றினீர்கள். இப்போது இரண்டாவது முறையாக முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கும் போர்வையில் புதுடெல்லி சென்று ஆ.ராசாவைக் காக்கவும், காங்கிரஸ் கூட்டணி நிலைக்கவும் அரும்பாடு பட்டீர்கள். உங்கள் கொள்கைப் பிடிப்பு, நினைக்கும்போதே நெஞ்சமெல்லாம் சிலிர்க்கச் செய்கிறது கலைஞரே!

'எந்தப் பதவியானாலும், எந்த மட்டத்திலானாலும் அதனைத் தேடிப்போய் நெருக்கடி கொடுத்துப் பெற முனையும்போதோ, அல்லது பெற்றுவிட்ட பிறகோ, உன்னைப் பற்றி உனக்கே ஒரு வெறுப்பு தோன்றும், உனக்குத் தோன்றுகிறதோ இல்லையோ, நாட்டுக்குத் தோன்றும்’ (கலைஞர் கடிதம் - தொகுதி 1) என்று உடன்பிறப்புக்கு எவ்வளவு தெளிவாக 9-11-68-ல் நீங்கள் கடிதம் தீட்டியிருக்கிறீர்கள்! அவ்வளவும் சத்திய வார்த்தைகள். இன்று உங்களைப் பற்றி நாட்டுக்கு அப்படித்தான் தோன்றிவிட்டது. 'வாண்டையார், வடபாதி மங்கலத்தார், நெடும்பலத்தார், குன்னியூரார், மூப்பனார், மன்றாடியார், பேட்டையார், பெரும்பண்ணையார், செட்டி நாட்டார், சிவகங்கை சீமையார்’ என்று அண்ணா அன்று மேடைதோறும் காங்கிரஸில் இருந்த பணக்காரர்களைப் பட்டியலிட்டார்; சென்னையில் 1951 டிசம்பரில் நடைபெற்ற தி.மு.க. முதல் மாநில மாநாட்டில், 'தமிழகத்தில் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.கழகம்தான்’ என்று பிரகடனம் செய்தார். நீங்களும் பல்வேறு தருணங்களில் 'நானும் ஒரு கம்யூனிஸ்ட்’ என்று 'நகைச்சுவை’ ததும்பப் பேசியிருக்கிறீர்கள். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குபேரபுரியின் வாரிசுகளாக விண்ணிலும் மண்ணிலும் வலம் வருகின்றனர். இந்த ரசவாத மாற்றம் எப்படி நிகழ்ந்தது கலைஞரே! நாற்பதாண்டுகளுக்கு முன்பு நடைபாதை மனிதர்களாக இருந்த உங்கள் அமைச்சர்களும், தானைத் தளகர்த்தர்களும் தமிழகத்து அம்பானிகளாய் உருமாறிய ரகசியத்தை உருக்குலைந்து நிற்கும் எந்தமிழர் அனைவருக்கும் நீங்கள் சொல்லிக் கொடுத்து விட்டால் இலவசங்களுக்கே இடமிருக்காது கலைஞரே!

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா சிக்கிச் சிறைப்பட்டதும், சி.பி.ஐ. கரங்கள் கலைஞர் தொலைக்காட்சி வரை விரிந்ததும் உங்கள் அம்பறாத் தூணியில் தூங்கிக் கொண்டிருந்த ஆரிய - திராவிட அம்பெடுத்து வீசி விட்டீர்கள். காமராஜரின் வேட்பாளராக சஞ்சீவரெட்டியும், இந்திராவின் வேட்பாளராக வி.வி.கிரியும் குடியரசுத் தலைவர் தேர்தலில் நின்றபோது நீங்கள் வி.வி.கிரியைத்தானே வெற்றி பெறச் செய்தீர்கள். இந்திராவும், கிரியும் உங்கள் வார்த்தையில் ஆரியர்; காமராஜரும், சஞ்சீவரெட்டியும் திராவிடர். அப்போது எங்கே போனது உங்கள் இனமான உணர்வு? 'இராமன் இரு பேச்சாளன் இல்லை’ என்பான் வான்மீகி. இரு பேச்சு இல்லாமல் நீங்கள் இல்லை என்பதுதானே உண்மை கலைஞரே!

ஆறாவது முறை நீங்கள் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறீர்கள். நல்லது. ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன சாதித்தீர்கள்? மாநில சுயாட்சி வாங்கிக் கொடுத்து விட்டீர்களா? தமிழை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கி விட்டீர்களா? உங்களால் ஊழல் வழக்குகளுக்குள்ளான கண்ணப்பன், செல்வகணபதி, இந்திரகுமாரி, ரகுபதி, முத்துசாமி போன்றவர்களைக் கழகத்தில் சேர்க்காமல் அரசியல் ஆரோக்கியம் காத்தீர்களா? சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு மேலவையைக் கொண்டுவர நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் பத்தில் ஒரு பங்காவது தமிழை உயர் நீதிமன்ற மொழியாக்க முனைந்தீர்களா? நிர்வாக மொழியாகத் தமிழை நூறு விழுக்காடு நடைமுறைப்படுத்தி விட்டீர்களா? 'உணவு, உடை, குடியிருப்பிடம் எனும் மூன்று அடிப்படைத் தேவைகளைக்கூட 17 ஆண்டு ஆட்சிக்குப் பிறகும் நிறைவேற்றிக் கொடுத்திட இயலாத காங்கிரஸ் ஏன் ஆட்சியில் நீடிக்க வேண்டும்?’ என்று கேட்டார் அண்ணா... அதையே உங்களிடம் நாங்கள் கேட்கிறோம். ஊழலற்ற ஆட்சிக்கும் உங்களுக்கும் என்றாவது தொடர்பிருந்ததுண்டா?

ஈழத் தமிழர் நலன் காக்கத் தவறிய நீங்கள் ஆட்சியில் நீடிப்பதால், உலகத் தமிழருக்கு என்ன நன்மை? தாயக மீனவர் மீது நடக்கும் தாக்குதலைத் தடுக்க முடியாததும் உண்மை தானே! வீதிக்கு வீதி மதுக்கடை திறந்து ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழை மக்களை மயக்கி வாங்கி, இலவச நாடகம் நடத்தி அதே மக்களிடம் பிச்சைக்கார மனோபாவத்தை வளர்க்கும் உங்களுக்கு ஏன் நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று லட்சக்கணக்கான மகளிர் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா? நீங்களும், உங்கள் வாரிசுகளும், கழக உடன்பிறப்புகளும் அதிகாரத்தைத் தொடர்ந்து சுவைக்கவும், சொத்துகளை எல்லையின்றிக் குவிக்கவும், மணற் கொள்ளையிலிருந்து அரிசிக் கடத்தல் வரை அமோகமாக நடத்தவும் 'திருமங்கலம் ஃபார்முலா’வை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். எந்தப் பணத்தை நம்புகிறீர்களோ அது தான் உங்கள் காலையும் வாரப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்!

இப்படிக்கு,

ஐந்தாவது முறையாவாது நல்லாட்சி தருவீர்கள் என்று நம்பி ஏமாந்த,

தமிழருவி மணியன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. MMK Vs Muslim
posted by Cnash (Makkah) [09 March 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3134

Br. Ibnusahib,

அங்கே (மமக) மட்டும் என்ன வாழுதாம்!! பெரிய ரோமன் Empire உருவான கதை மாறி மமக கதை சொல்லுறீங்க!!! 3 வருஷம் முன்னாடி இதே கருணாநிதி உடனும் இதே திருடர்கள் முன்னேற்ற கழகம் (DMK) உடனும் உறவு கொண்டாடும் போடும் Waqf போர்டு தலைவர் பதவி வாங்கும் போடும் நீங்க புகழ் மாலை போட்டது கீ.வீரமணியே உங்க கிட்டே Tuition படிக்க வேண்டி இருந்தது... அவை எல்லாம் இன்னும் old edition http://www.tmmkonline.com/ லே இருக்கலாம்.. எடுத்து விட்டார்கள் என்றல் அவரை எதிர்ப்பதர்க்காகவே இருக்கும் www.tntj.net click பண்ணி பாருங்க!!

எதோ இன்னைக்குதான் இந்த கருணாநிதி சூழ்ச்சி தெரிஞ்ச மாறி பேசுறீங்க!!

அங்க உங்களுக்கு மட்டும் ஜெயலலிதா 30 சீட் அள்ளி தந்து விட்டாரா அங்கேயும் அந்த கதை தானே !!! கடைசிலே வாணியம்பாடி , வேலூர் மாறி முஸ்லிம் தொகுதிலே முஸ்லிம் லீக் Vs மமக என்று சரியா ரெண்டு முஸ்லிம் கட்சி யை மோத விட்டு ...ரெத்தம் குடிக்க கருணாநிதியும் ஜெயலலிதாவும் ரெடி!!! அப்பாவி தொண்டர்கள் மண்டையே உடச்சிட்டு hospital கோர்ட் கேஸ் என்று அடுத்த 5 வருஷத்துக்கு அலையணும்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. வலிக்குது.. தாங்க முடியலே.
posted by சாளை. S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [09 March 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3137

மாஷா அல்லாஹ். எல்லோரும் நன்றாக எழுதுகிறார்களே. படிப்பதில் மகிழ்ச்சி.

அனைவர்களின் கருத்துக்களையும் அவதானிக்கும் போது ஒன்று மட்டும் புரிகின்றது. அனைவர்களும் விரும்புவது ஒற்றுமையே, ஒற்றுமையே,ஒற்றுமையே. ஆனால் அது நடக்குமா? எப்படி? எவ்வாறு? என்று? இது மாதிரி பல வினவுகள் மனதுக்குள் வந்து, வந்து பதில் கிடைக்காமலே சென்று விடுகின்றது.

நாம் இப்படி 400 கூறுகளாக இருக்கின்றோமே!!. (சகோ.முத்துவாப்பா அவர்களே, நாம் இப்படி கூறுகளாக இருப்பது உண்மைதான். சென்ற உன்னுடைய பதிவிற்க்கு பதில் போடலாம் என்றுதான் இருந்தேன், பல வேலைகள் அதிலும் குறிப்பாக சட்டையில் பட்டன் அறுந்துவிட்டது.. என்ன சிரிக்கின்றீர்கள், இங்கு சட்டைக்கு பட்டன் தைப்பதுதான் கஷ்டமான,கடினமான வேலை).

எனக்கு ஒரு அனுபவம், என்னுடைய நண்பர் வீட்டிற்க்கு(நம் ஊர் தான்) சென்று இருந்தபோது பேச்சு அவர்களின் மகளுக்கு வரன் பார்ப்பது பற்றி வந்ததும்,

நான் "ஏன் அங்கும் இங்கும் பார்க்கின்றீர்கள், உங்களின் குடும்பத்திலேயே ஒரு சூப்பர் மாப்பிள்ளை உள்ளானே" என்றதும்,

யார்.. யார்? எங்கள் குடும்பத்திலேயா..!

ஆமாம். உங்கள் பெரியப்பா வீட்டு காக்கா முடித்து இருக்கின்றார்களே,நல்ல குடும்பம்,வசதியானவர்கள், மார்க்க பற்று உள்ள பையன், BE முடித்து கைநிறைய சம்பளம், நம்ம IOB பேங்க் மேனேஜர் கூட இவனை உட்க்கார வைத்து பேசுகிறார் என்றால் பாருங்களேன், என்று விளக்கியதும்,

உடனே அவர்கள் "எல்லாம் சரி தான் ஜியாவுதீன், ஆனால்..."

என்ன "ஆனால்" என்று சொல்லுறீர்கள்.

"இல்லை தம்பி.. கொள்கை இடிக்கின்றதே.." என்று சொன்னதும்,

எனக்கு அதிர்ச்சி, யாரோ உலக்கையால் என்னை இடிப்பது மாதிரி இருந்தது. இப்படி ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனை பிளவுகள். யார் மணி கட்டுவது.



நாம் எப்படி ஒற்றுமையை பற்றி பேசுவது.

ஒரே குடையின் கீழ் வாருங்கள் என்றால், அது கருப்பு குடை, இது கலர் குடை அப்படி இப்படி என்று பிரிவதில்தான் அக்கறையே தவிர... என்னத்த சொல்ல.

“பிர்அவுன்” வந்து கட்சி ஆரம்பித்தால் கூட நம்ம ஆள் பலர் அங்கு இருப்பான், கேட்டால் அதற்க்கும் ஒரு பதில் இருக்கும். என்ன என்று வினவினால் "பிர்அவுன் இருக்கின்றாரே அவர் ஈசா(அலை) அவர்களை நேரில் பார்த்தவர், யார் யார் எல்லாம் நபிமார்களை நேரில் பார்த்தார்களோ.." என்று ஒரு நியாயம் கற்பிப்பார்கள்.

நான் சென்ற மாதம் பதித்த கருத்தில் நம்மிடம் உள்ள பிரிவுகளை பட்டியலிட்டேன், அதை மீண்டும் இங்கு பதிப்பது சிறந்ததுதான்..

1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
2. இந்திய தேசியலீக்
3. தேசியலீக் கட்சி
4. தமிழ் மாநில தேசிய லீக் (அல்தாப்)
5. தமிழ் மாநில முஸ்லிம் லீக்(ஷேக் தாவூத்)

6. தமிழ்நாடு முஸ்லிம் லீக் (தாவுத் மியக்கான்)
7. தமிழ்நாடு மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் (சலிமுத்தீன்)
8. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்
9. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
10. இஸ்லாமிய இலக்கியக் கழகம்

11. இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம்
12. முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம்
13. மனிதநேய மக்கள் கட்சி
14. மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் (பாலை ரபீக்)
15. ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம் (சென்னை ஹமீத்)

16. ஜனநாயக மக்கள் கட்சி
17. இந்திய தேசிய மக்கள் கட்சி
18. இந்திய தேசிய மக்கள் கட்சி (குத்புதீன் ஐபக்)
19. தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்
20. இந்திய தவ்ஹீது ஜமாத்

21. இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்ட்
22. மறுமலர்ச்சி தவ்ஹீத் ஜமாஅத் (இணையதளம்)
23. ஜமாத் இ இஸ்லாமி
24. ஜமாத்துல் உலமா
25. ஷரியத் பாதுகாப்பு பேரவை

26. இஸ்லாமிய இலக்கிய பேரவை
27. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா
28. எஸ்.டி.பி.ஐ -சோசியல் டெமோகிராடிக் பார்ட்டி ஆப் இந்தியா
29. பாரதிய முஸ்லிம் பார்ட்டி (சித்தீக்)
30. மில்லி கவுன்ஸில்

31. மஜ்லிஸே முஷாவரத்
32. ஜம்மியத்துல் உலமா இ ஹிந்த்
33. தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன்
34. முஸ்லிம் தனியார் சட்டவாரியம்
35. ஜம்மியத்துல் உலாமா (அர்ஷத் மதனி)

36. தமிழக முஸ்லிம் தொண்டு இயக்கம்
37. சிறுபான்மை புரட்சி இயக்கம் (லியாகத்அலிக்கான்)
38. சென்னை சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் கூட்டமைப்பு
39. தமிழ்நாடு சுன்னத்வல் ஜமாஅத் ஐக்கிய பேரவை (ஷேஹூ அப்துல்லாஹ் ஜமாலி)

இப்போ ஒற்றுமை என்றால் என்ன என்று சொல்லுங்க.

யாருடைய மனதையும் புண்படுத்துவது நோக்கம் அல்ல. மனதில் உள்ள பாரத்தை இறக்கிய நிம்மதி. களம் அமைத்துக்கொடுத்த ADMINISTRATOR அவர்களுக்கு நன்றிகள்.

(கருத்து எடிட் பண்ணிமுடித்து பார்த்தல் அதற்க்குள் நமக்குள்ளேயே கருத்து மோதல் ஆரம்பித்து விட்டது பார்தீர்களா. நீ அப்படி நான் இப்படி என்று, அந்த கட்சி இப்படி இந்த கட்சி இப்படி என்று. வலிக்குது.. தாங்க முடியலே...)

Moderator's Note: comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [09 March 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3139

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அன்பு சகோதரர்களே! அரசியல் பேசும்போதும், எழுதும்போதும் உதாரணத்திற்காகக்கூட மார்க்க விசயங்களை பேசவோ, எழுதவோ வேண்டாம் என்பது எனது அன்பான வேண்டுகோள்.

காரணம் சகோதரர் தவறான தகவலை பதிந்திருக்கிறார் :>
..............................................
“பிர்அவுன்” வந்து கட்சி ஆரம்பித்தால் கூட நம்ம ஆள் பலர் அங்கு இருப்பான், கேட்டால் அதற்க்கும் ஒரு பதில் இருக்கும். என்ன என்று வினவினால் "பிர்அவுன் இருக்கின்றாரே அவர் ஈசா(அலை) அவர்களை நேரில் பார்த்தவர், யார் யார் எல்லாம் நபிமார்களை நேரில் பார்த்தார்களோ.." என்று ஒரு நியாயம் கற்பிப்பார்கள்.
................................
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்திலேயே ஃபிர்அவுன் மற்றும் அவன் கூட்டத்தார்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டு ஒழிந்தார்கள் என்று குர்ஆன் விளக்கமாக கூறுகிறது.

ஆனால் சகோதரர் குறிப்பிடும்போது " ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களை " என்று தவறுதலாக குறிப்பிடுகிறார்.

ஆகையால் மக்களே! மார்க்க சம்பந்தமான உதாரணங்களை அவசியமின்றி பதிய வேண்டாம்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. kayal unity
posted by sahibnawaz (Dammam ) [10 March 2011]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3140

எல்லா நாடகமும் முடிவுக்கு வருகிறது... தேர்தலில் நமது முடிவை நாமே எடுப்போம்... இன்னும் கதை பேசி காலத்தை ஓட்டாமல் சிந்திப்போம்... சில மாற்றங்களையாவது நாம் சந்திப்போம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. AADU NANAITHUNNU ONAI ALUTHUCHAM.
posted by SATNI.S.A.SEYEDMEERAN (JEDDAH.KSA) [10 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3141

ASSALAMUALAIKKUM.NAMO ELLORUMEY KADAL KADNTHU VANTHUVITTU, AMAITHI THAVALUM ALAGIYA TAMILAKATHIL KUDUMBATHAIYUM VITUVITU POLAIPPU THEDI ULAGIN OVVORU MULAIYELUM SUDAN,UAE,SAUDI,USA,CHINA PONDRA PALA NADUKALIL VALKIROM.ALHAMDULILLAH.NEENGAL YERUM IUML MEMBERO,ANUDHABIYO ILLAI.ELLORUM SANTHAIKU PORANGANNU NARIYUM SANTHAIKU PONADU THAN NINAIVUKKU VARUKIRATHU.NAMO ORUTHARUM VOTE PODA POGAPORATHU ILLAI.EDUKKU VERUM VAYELE AVALAI MELLANUM WAAPAMARGALA.40 MUSLIM AMAIPPU TAMILAKATHIL,ADUKKUM MELAGA KAYALIL?ADUTHU VARUVATHU KALAINGER AATCHEYE,PROF.KADERMOHIDEEN AVARGAL WAKF BOARD CHAIRMAN INSHAALLAH.NAREY THAKBEER ALLAHU AKBAR.TAMILUM,TAMILANUM VALKA. INTHA KARUTHU ELLAM INNUM 4,5 NALAIKKUTHAN PARPANGO NAM MAKKAL.NAMO INGU VANTHA KARIYATHAI PARTHU KASAI ANUPPUVOM RATTHAMARUKKU.EDUKKU EDAIYO KEDUTHA MATHIRI ENAKU UNGALAI POLA TAMIL TYPE ADIKKIRATHU VARATHATHU.KHAIR.CYCLE CAPELA PULDOSARAI VIDAVA PARKIREYO?ENGALUKKUM TERIYUM KALAINGERIN ANBU THABMI VADIVEL ANNANDA COMMEDY.MAPPU VAIKKATHEY AAPPU. SALIH KAKAMARKALA ENAKU VANTHATHAI ELUTHI ULLEN CUT PANNIRATHIYO.WASSALAM.MARAM VITTU MARAM MARATHU ANDRU MUDAL INDRU VARAI KALAINGER KARUNANITHIYEN UNMAI THONDAN.(PATHIKKITU VARUTHO)SATNI.S.A.SEYEDMEERAN.JEDDAH.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. அரசியல் என்பது ஒரு சாக்கடை (நஜீஸ்).
posted by Mahmood Seyed (Kingdom Of Saudi Arabia.) [10 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3143

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.

எல்லோரும் கருணாநிதியை குறைச் சொல்லியேயேயே......... பதிவு செய்துள்ளீர்கள். யாராவது இதற்கு ஒரு முடிவை சொல்லி இருக்கிறீர்களா ? எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று ? பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு.

இதில் கருணாநிதியை விமர்சித்தவர்கள் யாருக்கும் சொல்ல முடியாது. ஏனென்றால், அனைவருக்கும் தெரியும் நம்மிடத்தில் ஒற்றுமை இல்லை என்று. ஒன்று தங்கள் எல்லோருடைய நல்ல முடிவை நம் ஊர் மக்களுக்கு தெரிவியுங்கள். இல்லை என்றால் தயவு செய்து ஆளுக்கு ஆள் குழப்புவதை நிறுத்துங்கள்.

ஏற்கனவே நமது ஊரிலும், நமது நாட்டிலும் குழப்பவாதிகள் நிறைவாக இருக்கிறார்கள். தயவு செய்து நீங்களும் அந்த List ல் சேர்ந்து விடாதீர்கள்.

நான் இப்படி பதிவு செய்துள்ளேன் என்று யாரும் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக நான் இதைப் இங்கு பதிவு செய்யவில்லை. மாறாக எனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளேன். அவ்வளவு தான்.

அன்பார்ந்த காயல் மாநகர சகோதர , சகோதரிகளே ! அரசியல் என்பது ஒரு சாக்கடை (நஜீஸ்). அதில் கள்ளை எறிந்தால் அந்த நஜீஸ் நம்மீதுதான் தெறிக்கும்.

இதில் கருணாநிதியும் சுத்தமில்லை. ஜெயலலிதாவும் சுத்தமில்லை. இவர்களுக்கு துணைப் போகக்கூடிய அமைப்புகளும் ( இஸ்லாமிய போர்வையில் உள்ள அமைப்புகள் உட்பட ) சுத்தமில்லை. ஏனென்றால், முஸ்லிம்களுக்காக பாடுபடுகிறோம் என்று சொல்கின்ற அமைப்புகளும் கூட ஏதாவது ஆதாயம் இல்லாமல் இதில் இறங்கமாட்டார்கள்.

நமக்கெல்லாம் நன்றாக தெரிந்த ஒரு விஷயம். ( இதை நடுநிலையோடு எல்லோரும் சிந்தியுங்கள் சகோதரர்களே ).

முன்பு ஒன்றாக ( இஸ்லாமிய போர்வையில் ) இருந்த அமைப்பு. அவர்கள் இரண்டாக பிரிந்ததற்கு சொன்ன காரணம் அவன் ”சுனாமி பணத்தை” அமுக்கிவிட்டான். இவன் ”ஃபித்ரா” பணத்தை அமுக்கி விட்டான் / ஜகாத் பணத்தை அமுக்கி விட்டான் என்பதாகத்தான்.

இஸ்லாத்தில் ”இபாதத்துள்ள” இந்த விஷயத்தில் இவர்கள் இப்படி என்றால், இவர்கள் “கையில்” ஆட்சி வந்தால் ? அல்லது இவர்கள் ஆதரிக்கின்ற கட்சி ஆட்சி அமைத்தால் ? ஆகவே எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். தேனைத் தொட்டவன் நக்கத்தான் செய்வானே தவிர்த்து ஒரு போதும் புற முதுகில் தடவிக் கொள்ளமாட்டான்.

இதற்கு ஒரே ஒரு வழி என்னவென்றால் இதை நம்மூர் முஸ்லிம் லீக் சகோதரர்கள் முஹம்மது அபூ பக்கர், வாவு நாசர் காக்கா, ஸலாஹுத்தீன் காக்கா, அபு ஸாலிஹ் காக்கா, மஹ்பூப் காக்கா, மன்னர் பாஜுல் அஸ்ஹப் இன்னும் மக்கி இது போன்ற முன்னணி அமைப்பைச் சார்ந்தவர்கள் நமது பேராசிரியரிடம் கலந்தாலோசித்து தி.மு.காவிற்கு கொடுத்த ஆதரவை மறு பரிசீலனை செய்யும் படி கோருங்கள். ஏனென்றால் நம்மூர் மக்கள் எவ்வளவு கொதித்துப் போய் இருக்கிறார்கள் என்பதை இந்தப் பதிவுகளின் மூலம் நீங்கள் எல்லோரும் தெரிந்திருப்பீர்கள்.

தயவு செய்து இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதை உங்கள் “கைகளில்” அல்லாஹு சுபுஹானஹுத்தாஆலா அமைத்து இருக்கிறான். தனித்துப் போட்டியிட முயற்சி செய்யுங்கள். இந்த சந்தர்ப்பம் இனி இந்த அமைப்புக்கு கிடைக்க சத்தியமில்லை.

நம் கிருபை உள்ள ரஹ்மானின் பெயரால் துணிந்து செயல் படுங்கள். நமக்கு வெற்றி அளிக்கக் கூடியவன் நிச்சியமாக வெற்றியைத்தருவான் என்ற உறுதியோடு செயல் படுங்கள்.

எல்லாவற்றிற்கும் கிருபையுள்ள ரஹ்மான் போதுமானவன். வஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. குடோன்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் பதுக்கல்: மனித நேய மக்கள் கட்சி தலைவர்
posted by Pirabu Shuaibu (Hongkong) [10 March 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 3145

குடோன்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் பதுக்கல்:

மனித நேய மக்கள் கட்சி தலைவர் "பகீர்
-----------------------------------------
பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களே, நீங்கள் கருணாநிதியை பற்றி இப்படி கூறுகிறீர்கள், முஸ்லிம் லீக் தலைவர் என்னவென்றால் கருணாநிதியை காயிதேமில்லதுக்கு சமமாக பேசுகிறார். நீங்கள் ஒற்றுமையாக இருந்து களவாணிகளை வேறேடுக்க வேண்டும்.

பிரித்தாளும் சூழ்ச்சி செய்யும் கேடுகெட்ட அரசியல் கட்சிகளை வேறேடுக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. லீக்... லீக்காயிடுச்சுங்க...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்(அபு ரிஃபாத்) (புனித மக்கா.) [10 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3146

வாசகர்களின் அனைத்துக் கருத்துகளையும் பொறுமையாகப் படித்தேன். ஆதங்கம் அனல் பறக்கிறது. ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது நம் சமுதாய மக்களுக்கு கலைஞர் துரோகம் செய்துவிட்டார். விரோதிகளை மன்னிக்கலாம் அனால் துரோகிகளை ஒரு போதும் மன்னிக்கவே கூடாது. இதற்கு மேலும் ஒரு அவமானம் முஸ்லிம் லீக் கட்சிக்கு வராமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!!!

ஜெயலலிதா மேடையில் கொளுவீற்றிருக்க சிராஜுல் மில்லத் பவ்யமாக கைகட்டி நின்றாரே அப்போதே லீக் லீக்காயிடுச்சுங்க இப்போ இருக்கிறது வெறும் காலி டப்பா தாங்க! சூடாவது? சொரணையாவது?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. துரோகத்தை வேரறுப்போம்!
posted by kavimagan (dubai) [10 March 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3150

வளைகுடாவில் இருக்கும் நாம் வாக்களிக்கப்போவதில்லை. அப்படியிருக்க நாட்டு நடப்புகளை ஏன் வீணாக விவாதிக்க வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்திருக்கும் இதே நண்பர், இதே வலைதளத்தில் டிசம்பர் 15 ஆம் தேதி பதிவு செய்த கருத்தைப் பாருங்கள்.

http://www.kayalpatnam.com/shownews.asp?id=5262 கருணாதி செய்த, செய்கின்ற சலுகைகளை அனுபவித்து, நன்றி மறந்து விட்டார்கள் என்று எழுதியிருக்கின்ற நண்பர் அவர்களே! கருணாநிதியின் துரோகங்கள் இங்கே அடுக்கடுக்காய் பட்டியலிடப்படுகின்றதே!

உங்களால் அவர் நமது சமூகத்திற்கு செய்த நன்மைகளைப் பட்டியலிட முடியுமா? எவர் வேண்டுமானாலும் வக்ப் போர்டு தலைவர் ஆகிவிட்டுப் போகட்டும். அதற்கான விலை இந்த சமூகத்தின மானமும், மரியாதையுமா?

காயிதேமில்லத்திற்கு மணிமண்டபம் அமைத்தோம், மீலாதுன்னபிக்கு விடுமுறை அளித்தோம் என்று சமூகத்திற்கு எந்தப் பயனுமே இல்லாத கதைகளை சொல்லி சொல்லி அடுத்து வரும் சந்ததியினரையும் கருணாநிதியிடம் அடகு வைக்க நினைப்பது வரலாற்றுக் குற்றம் இல்லையா?

எல்லாரும் மொட்டையாக எழுதுவதாக குற்றம் சாட்டும் நண்பர்களே! கருணாநிதியின் அக்கிரமங்கள், அநியாயங்கள், துரோகங்கள், வீழ்த்தப்பட வேண்டுமேயானால், என்ன செய்ய வேண்டும் என்று அறியாத பாப்பாக்களா நாம்? சிந்தியுங்கள் சகோதரர்களே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. VENTUM OTRUMAI
posted by M.S.MAHMOOD RAJVI (KAYALPATNAM) [10 March 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 3156

அஸ்ஸலாமுஅலைக்கும்...... நம் சமுதாயத்தை அடகு வைக்கும் யாராக இருப்பினும் அவர்களை தூக்கி எறிவோம். ஒற்றுமையை கடைபிடிப்போம்,எந்தெந்த தொகுதிகளில் நம் வாக்குகள் அதிகம் உள்ளதோ அங்கெல்லாம் நம் சமுதாயத்தின் சார்பாக பொது வேட்பாளரை நிறுத்த முயற்சிப்போம் இனி வரும் காலங்களில். அப்போதுதான் நம் பலம் தெரியும். வெற்றி முக்கியமல்ல. மக்களின் உணர்வுகளை மதித்து நம் சமுதாயம் ஒன்று கூடுமா? இல்லை இப்படி தான் இறுதிவரை உறங்குமா? சிந்திப்போம் செயல்படுவோம்.நன்றி! வஸ்ஸலாம். மஹ்மூத் ரஜ்வி,காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. கண்ணீர்க் கடிதம்
posted by abdul basith. (tuticorin) [10 March 2011]
IP: 210.*.*.* India | Comment Reference Number: 3158

engoe paditha naabagam.....

anbu sahodararhalukku Assalamu alaikum var.....

கண்ணீர்க் கடிதம்

இன்று இஸ்லாமியச் சமுதாயத்தின் நலனுக்காகப் பாடுபட பல்வேறு முஸ்லிம் கட்சிகள் இருந்தாலும் இஸ்லாமிய மக்களுக்காகப் பாடுபட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் முதன் முதலில் தொடங்கப்பட்ட கட்சி முஸ்லிம் லீக் என்று அனைவருக்கும் தெரியும். 1948-ஆம் வருடம் மார்ச் மாதம் 10ஆம் தேதி சென்னை இராஜாஜி மண்டபத்தில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஹம்மது இஸ் மாயீல் அவர்களால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடங்கப்பட்டது.

கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் இருந்த வரை முஸ்லிம் லீக் கட்சிக்கு பெருமதிப்பும் மரியாதையும் இருந்தன. அவர்களின் மறைவுக்குப் பிறகு அப்துஸ் ஸமது, அப்துல் லத்தீப், பனாத்வாலா உள்ளிட்டோர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை வழிநடத்திச் சென்றனர். ஆனால் தற்போது முஸ்லிம் லீக் கட்சி சிதறுண்டு கிடக்கிறது. இக்கட்சி என்னுடைய தாத்தா காயிதே மில்லத் அவர்களால் தொடங்கப்பட்டது. எனவே அவர்களுக்குப் பிறகு இக்கட்சியின் தலைமைப் பொறுப்பு எனக்கே உரியது என்று கூறி தாவூத் மியாகான் தொடுத்துள்ள வழக்கு உச்சநீதி மன்றத்தில் உள்ளது.

இதனால் முஸ்லிம் லீக் கட்சி தற்போது `இல்லாத கட்சியாகவே அரசியல் தலைவர்களால் கருதப்படுகிறது. இதனால்தான், இன்று திமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள பல கட்சிகள் தமக்கென நிறையத் தொகுதிகளைக் கேட்டுப் பெறுகின்றன. ஈராண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கொ.மு.க. கூட 7 தொகுதிகளைப் பெற்றுள்ளது. ஆனால் முஸ்லிம் லீக் கட்சிக்கு இரண்டே இரண்டு தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இழிநிலைக்குக் காரணம் என்ன? இதற்கு யார் பொறுப்பேற்றுக்கொள்வார்?

சமுதாயத்திற்காகப் பாடுபட வேண்டும் என்ற எண்ணம் அற்றுப் போனதால்தான் நம்மிடையே பதவிச் சண்டைகள் மேலோங்குகின்றன; பிரிவினைகள் தோன்றுகின்றன; இறுதியில் நீதி மன்றப் படிக்கட்டுகளை மிதிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடிக்காததால் நம்மைக் கூறும்போடும் சக்திகளுக்கு நாம் இரையாகிக் கொண்டிருக்கிறோம் என்பதை எப்போது உணரப்போகிறோம்?

70 இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்கின்ற தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தொகுதியில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகள் இரண்டே இரண்டு என்றால் என்ன நியாயம்? இதற்குத் தீர்வு என்னவெனில், நீதிமன்றத்தில் உள்ள வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டு ஒரே அணியாக முஸ்லிம் லீக் உருவாக வேண்டும். அல்லாஹ்வுக்காக மனக்கசப்புகளை மறந்து ஓரணியில் ஒன்றிணைய வேண்டும். முஸ்லிம் லீக் தனக்கென ஒதுக்கப்பட்டுள்ள பிறைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும். அப்போதுதான் முஸ்லிம்களின் பிரதிநிதிகள் சட்டப்பேரவையில் மிகுதியாக முடியும். நம் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகக் குரல்கொடுக்க முடியும்.

இரண்டு நபர்களுடைய மனக்கசப்பின் காரணமாக இஸ்லாமியச் சமுதாயம் இதுவரை இழந்தது போதும். இனியாகிலும் ஒரு முடிவு ஏற்பட முடிந்தவரை முயல்வோம். அல்லாஹ் அதற்கான வழியை ஏற்படுத்துவான். இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. துரோகி
posted by தைக்கா சாஹிப் (ரியாத்) [10 March 2011]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3163

இந்தியா எங்கள் தாய் நாடு
இஸ்லாம் எங்கள் வழிபாடு
தமிழே எங்கள் மொழியாகும்
தன்மானம் எங்கள் உயிராகும்
.
.
.
மறைத்து விட்டார்கள்
நன்றியை மறந்து விட்டார்கள்
இதுதான் துரோகமா
நாங்கள் செய்த பாவமா?
.
.
.
எங்கோ கேட்ட பாடல்........
.
.
எதிரியை விட துரோகி மிக கொடுமையானவன்..........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. குணாதியத்தின் பிரதிபலிப்பு
posted by IBN SAHIB (Dammam, Saudi Arabia) [10 March 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3164

Br. Cnash,

உங்கள் விமர்சனம், பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு என்ன விலை? என்று வினவுவது போல் உள்ளது. என்னுடைய கருத்து, இரு பெரிய இயக்கங்களும் இணைந்து செயல்பட இருந்த வாய்ப்பு பறிபோய் விட்டதே என்ற ஆதங்கத்தின் வெளிபாடு. மற்றபடி மமக வாழ்கிறதா? தாழ்கிறதா? என்பது அல்ல. இன்னும் கூட அவ்விரு இயக்கங்களும் ஒற்றுமையுடன் செயல்பட கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவே கருதுகிறேன். சமீபத்ததில் கூட அரசின் முஸ்லிம் திருமண சட்டத்திற்காக அரசை ஒன்றாக சந்தித்து பல முஸ்லிம் இயக்கத்தினர் (காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா உட்பட) மனு கொடுத்தார்கள். (ததஜவை தவிர)

சகோதரரே, சிறிய வேண்டுகோள். அனைத்து முஸ்லிம் இயக்கங்களை விமர்சனம் செய்யும்போது கண்ணியத்துடன் எழுதுங்கள். முஸ்லிம் லீக் பிச்சைக்ககாரர்கள் என்பது போன்ற விமர்சனங்களை தவிர்க்கவும். உங்களின் விமர்சனம் உங்கள் குணாதியத்தின் பிரதிபலிப்பு என்பதை மறந்து விடாதீர்கள்.

ஆமாம் ததஜ மமகவை எதிர்ப்பதாக எழுதியுள்ளீர்கள். ததஜ எதிர்க்காத / விமர்சனம் செய்யாத எதாவது முஸ்லிம் அமைப்புகள் உலகத்தில் உள்ளதா?!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. பொறியாளருக்கும் கிபோர்ட் சறுக்கும் தானே.
posted by சாளை. S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [10 March 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3167

அன்புள்ள சகோ. N.S.E. மஹ்மூது அவர்களுக்கு மிக்க நன்றி, தவறை சுற்றி காட்டியதற்கு.

என்ன மூசா/ஈசா ஒரு எழுத்து தானே வித்தியாசம் என்று பார்த்தல் அது பெரிய வித்தியாசம் மற்றும் வரலாறு பிழை தானே. மன்னிக்கவும். நான் கொஞ்சம் வரலாறில் வீக்.

பொறியாளருக்கும் கிபோர்ட் சறுக்கும் தானே.

அப்புறம், அரசியலும் மார்க்கத்தில் ஒரு அங்கம் தான். நம் தலைவர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் எந்த துறையில் கால் பதித்து முத்திரை பதிக்கவில்லை, சொல்லுங்கள். குடும்பவியலில் ஆரம்பித்து அரசியலில் வரை அனைத்தையும் கத்துக்கொடுத்து முன்மாதிரியாக இருப்பது தாங்கள் அறியாததா..!!

அடுத்தது, அரசியல் சாக்கடை அல்ல,அது புனிதம் தான். பல சாக்கடைகள் அதில் கலந்ததால் அது மாறி உள்ளது. அதை புனித படுத்தும் வேலைக்காத்தான் நாம் எல்லாம் இப்படி பதிவு போட்டு ஆதங்கத்தை கொட்டுகிறோம்.

சகோ. மஹ்மூத் செய்யத் அவர்கள் அரசியல் என்பது ஒரு சாக்கடை (நஜீஸ்) என்று சொல்லிவிட்டு, "இதற்கு ஒரே ஒரு வழி என்னவென்றால்" என்று அதை சுத்தப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கின்றீர்களே, இத..இத..இதைத்தான் சமுதாயம் எதிர்பார்க்கின்றது-அதுவும் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரே வழியில், இன்ஷா அல்லாஹ்.. நடக்கும்.

அன்புடன்

சாளை. S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
46. Only 2 seats for Muslim League!!!!!!!
posted by Riyath (Hong Kong) [10 March 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 3177

Muslim League still continuing with DMK party holding only 2 seats. Any lifetime agreement or sacrifice???????????

Newly born communities are being well addressed by leading parties. But why cant they consider well known Muslim League for more seats based on the % of people.

Hopefully, the day will come again and our muslim party will lead others... Inshaallah ***Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
47. எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்னு தான்
posted by Thowfeeq (NJ, USA) [11 March 2011]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 3187

அஸ்ஸலாமு அலைக்கும்.

கமென்ட்ஸ் எழுத வேணாம்னு நினச்சேன் ஆனா எழுதாம முடியலப்பா. கை குறுகுறுக்குது.

எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்னுதான். என்ன, நம்ம சமுதாயத்தை சார்ந்த கட்சிகள் முஸ்லிம் என்ற போர்வையை போர்த்திக்கிட்டு இருக்கு. எல்லா கட்சிகளுக்கும் சீட்டுக்கும் நோட்டுக்கும் தான் போட்ட போட்டி. தனியா நிக்க தைரியம் இல்லை.

அட, ஜெயிக்க வேணாம்பா! அட்லீஸ்ட் நம்ம வோட்டு பலத்தயாவது காட்டலாமுள்ளே. ஒரு தேர்தலிலாவது நம்மட மொத்த முஸ்லிம்களின் வோட்டு எண்ணிக்கையை காட்டணும். ஆனா நம்ம சமுதாயத்தை சார்ந்த கட்சி தலைவர்கள் அய்யா ( கருணாநிதி ) போடும் பிச்சைக்கும் அம்மா ( ஜெயலலிதா ) போடும் பிச்சைக்கும் கை கட்டி நிக்கிராங்கப்பா. சொரண கெட்ட ஜென்மங்கள்.

சீட்டு கணக்கு போகிற போக்கை பார்த்தா தி.மு.க -ல இவங்களும் அ.தி.மு.க -ல அவங்களும் நிரந்தரமா இணைஞ்சாலும் இணைஞ்சிடுவாங்கபா.

என்னைக்கு முஸ்லிம் சமுதாயதிற்காக தங்களுடைய வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு ஒன்றுபடுவார்களோ அன்னைக்கு தான் நமக்கு விடிவு காலம். அது வரை செவுடன் காதுல சங்கு ஊதுன மாதிரி தான்.

நடக்கட்டும் நடக்கட்டும். நம் மக்களா பார்த்து மாறாத வரைக்கும் அல்லாஹ் நம்ம கண்டிஷன மாத்த போவது கிடையாது.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
48. Dina Malar
posted by Cnash (Makkah) [11 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3189

இன்றைய தின மலர், டவுட் தனபாலு பகுதியில் வந்த நக்கல்!! நம்ம Discussion ku added value!!! ரெம்ப பொருத்தமான பதில், நம்ம ஒற்றுமையை பார்த்து தினமலர் கூட சிரிக்குது ...

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிரணி மாநில அமைப்பாளர் பாத்திமா முசப்பர்: தி.மு.க., - காங்கிரஸ் பிரச்னையில், ஒரு தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விட்டுக் கொடுத்தது, சர்வாதிகாரமாக எடுக்கப்பட்ட முடிவு. முஸ்லிம் சமுதாயத்தின் நன்மை கருதி முடிவு எடுக்காமல் செயல்பட்ட கட்சித் தலைமையை, உடனே மாற்ற வேண்டும்.

டவுட் தனபாலு: மாத்திடுவோம்... மாத்திட்டா, நீங்க எல்லாரும் தனிச்சுப் போட்டியிட்டு, பத்து தொகுதியில வெற்றி பெற்றிடுவீங்களா...? உங்களுக்குள்ள ஒற்றுமை இல்லைங்கிறதால தான், கிடைச்சதை வச்சு ஆறுதல் அடைய வேண்டிய நிலைமையில இருக்கீங்க... அதுவும் பிடிக்காம உடைச்சுக்கிட்டா, யாருக்கு நன்மை...?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
49. KULAPPAM
posted by Rahman (kayal) [11 March 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 3202

Yallorum avaga, avaga aathagathaum, kovathaum kati kulapitaga. kadaisiya yarukuthan namma votu? atha yarum sollalaye.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
50. ”நம்ம கலைஞர் முஸ்லிமா மாறிடணும்.”
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்(அபு ரிஃபாத்) (புனித மக்கா.) [12 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3210

டியர் பிரதர் அப்துர்ரஹ்மானுக்கு ஸலாம்.

ஹலோ! யாருக்கு ஓட்டுப் போடணுன்னு குழம்ப வேணாம். இதுக்கெல்லாம் ஒரே வழி நம்ம கலைஞர் தாத்தா முஸ்லிமா மாறிடணும். அப்புறம் திமுக தீமுக வாக மாறிடும். என்ன பார்க்கிறீங்க? தீன் முஃமின் கழகம் அல்லது, தீன் முன்னேற்றக் கழகம் ன்னு பெயர் வந்துவிடும் அப்போ நாம எல்லோரும் அவருக்கே ஓட்டுப் போடலாம்.

என்னக் கேள்வி ஸார் இது? சூழ்நிலைக்கு தகுந்தவாறு நாம் நம் பலத்தை நிரூபிக்க வேண்டும். ஒட்டுமொத்த இஸ்லாமியரின் வாக்குகளை நாம் சிதறடித்தாலே போதும் ஒருத்தனும் ஒழுங்கா ஆட்சி அமைக்க இயலாது! அல்லது சுயேட்ச்சை வேட்பாளருக்கு போடுங்களேன்?

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
51. விட்டுக்கொடுத்தோர் கெட்டுப்போனதில்லை...
posted by Pirabu Shuaibu (Hongkong) [12 March 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 3216

விட்டுக்கொடுத்தோர் கெட்டுப்போனதில்லை...! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மூன்று சீட்டில் ஒன்றை கூட்டணியில் பிணக்கு வந்து விடாமல்,இணக்கமான சூழ்நிலை உருவாக ஒரு சீட்டை விட்டுக்கொடுத்து கூட்டணி நிலை தொடர வழி வகுத்தது.

முஸ்லிம் லீக் ஒரு சீட் விட்டுக் கொடுத்ததற்கு, ஒரு துளி அளவு கூட திமுக காரணமில்லை என்பது வெளிச்சத்திற்கு வரும் முன்னே அக்கட்சியின் தொண்டர்கள் வெகுண்டெழுந்தார்கள். தலைமையின் அறிவிப்பு அதிர்ச்சிக்குள்ளாக்கியதை அதே வேகத்தில் இதற்கு முடிவு காண பல மாவட்டங்களிலிருந்தும் விடிய விடிய தலைமையகத்தை தொலைபேசியின் வாயிலாகவும், இ-மெயில்களின் வாயிலாகவும், திக்குமுக்காட வைத்தது ஒரு புறமிருந்தாலும், பலர் தலைமையகத்தை நோக்கி படையெடுக்க துவங்கினர்.

நிலமை விபரீதம் அடைவதை உணர்ந்து கொண்ட தலைமையும், தொண்டர்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மாற்று வழிக்கான ஏற்பாட்டினை யோசிக்கத் துவங்கியது.

இதனை உளவுத்துறை மூலமாக எப்படியோ மோப்பம் பிடித்து திமுக தலைமை சுதாரிக்க, முஸ்லிம் லீக் தலைவர்களை அறிவாலயத்திற்கு வரும்படி அவசர அழைப்பு விடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் முஸ்லிம்களுக்கு மத்தியில் இருக்கும் கொந்தளிப்பான சூழ்நிலையையும் உளவுத்துறை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றது.

இதை கவனமுடன் கையாள துணை முதல்வரும் களத்தில் இறங்கினார். திமுகவின் நம்பிக்கைக்குரிய தோழமை கட்சியாக இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரச்சினையில் சிக்கி தவிப்பதை தவிர்க்க, திமுக தன் தரப்பிலிருந்து ஒரு சீட்டை விட்டுத் தருவதென்று முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம் லீக் இழந்த ஒரு தொகுதி மீண்டும் கிடைக்கப் போகும் செய்தியறிந்து அக்கட்சியினரும், முஸ்லிம் சமுதாயத்தினரும் அமைதி அடைய துவங்கியுள்ளனர். எல்லாவற்றையும் உறுதி படுத்தும் விதமாக நேற்று சென்னையில் நடைபெற்ற முஸ்லிம் லீக் கட்சியின் 64வது ஆண்டு நிறுவன தின பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய தலைவர்கள் தொல்.திருமா, ஜி.கே.மணி, அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் பேராசிரியர் காதர்மொய்தீன் உடைய விட்டுக்கொடுத்த மனப்பான்மையை வெகுவாக பாராட்டியதுடன், விட்டுக்கொடுத்தோர் கெட்டுப்போனதில்லை என்பதை சூசகமாக தெரிவித்தனர்.

கூட்டத்தில் பேசிய திருமாவளவன்: பேராசிரியர் காதர்மொய்தீன் செய்த இந்த தியாகம் இன்று இந்தியா முழுவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பற்றியே பேச வைத்திருக்கிறது என்று குறிப்பிட்டு அனைவர்களின் மனதிற்கும் மருந்திட்டார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved