Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:35:07 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6092
#KOTW6092
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மே 6, 2011
தூத்துக்குடியில் 6 முதல் 14 வயது வரை மாற்றுத்திறனாளி குழந்தைகள் 4,451 பேர்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2917 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 முதல் 14 வயதுவரை உள்ள மாற்று திறனாளிகள் மொத்தம் 4 ஆயிரத்து 451 பேர் இருப்பதாக கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஆண்டை விட 386 பேர் அதிகரித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பள்ளி செல்லாக் குழந்தைகள், மாற்று திறனாளி குழந்தைகள் கணக்கெடுப்பு பணி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அதிகாரி பகவதி ஆலோசனையின் பேரில் மாற்று திறனாளிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணம்மா மற்றும் 168 ஆசிரியர் பயிற்றுநர்கள், 54 சிறப்பாசிரியர்கள் சேர்த்து மொத்தம் 222 பேர் இம்மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் எவ்வளவு பேர் இருக்கின்றனர் என்று வீடு, வீடாகச் சென்று சோதனை நடத்தினர்.

ஏப்ரல் மாதம் இறுதியில் சுமார் பத்து நாட்கள் மேற்கொள்ளப்பட்ட இந்த கணக்கெடுப்பின் படி 6 முதல் 14 வயதுடைய கை, கால் உடல் ஊனமுற்ற, மனநலம் குன்றிய, செவித்திறன் குறைந்த, கண்பார்வை அற்ற உள்ளிட்ட உடல் ஊனமுற்ற குழந்தைகள் அனைவரும் முழுமையாக கணக்கெடுக்கப்பட்டனர்.

இதில் ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் 416 உடல் ஊனமுற்றோரும்,
கருங்குளம் வட்டாரத்தில் 330 பேரும்,
கயத்தாறு வட்டாரத்தில் 271 பேரும்,
கோவில்பட்டி வட்டாரத்தில் 406 பேரும்,
ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் 399 பேரும்,

புதூர் வட்டாரத்தில் 338 பேரும்,
சாத்தான்குளம் வட்டாரத்தில் 380 பேரும்,
ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் 396 பேரும்,
திருச்செந்தூர் வட்டாரத்தில் 386 பேரும்,
தூத்துக்குடி ரூரல் பகுதியில் 418 பேரும்,

உடன்குடி வட்டாரத்தில் 269 பேரும்,
விளாத்திகுளம் வட்டாரத்தில் 312 பேரும்,
தூத்துக்குடி நகர்புற பகுதியில் 516 ஊனமுற்றோரும் உள்ளனர்.

மொத்தம் இம் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 837 மாற்றுதிறனாளிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதேபோன்று கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டபோது 4 ஆயிரத்து 451 பேர் இருந்தது கண்டறியப்பட்டது. தற்போது 386 மாற்றுதிறனாளிகள் அதிகரித்திருப்பது தற்போதைய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது கண்டறியப்பட்டுள்ள 4 ஆயிரத்து 837 மாற்றுதிறனாளிகளுக்கு வேண்டிய அனைத்து அரசு உதவிகள், சலுகைகள் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று எஸ்.எஸ்.ஏ திட்ட அதிகாரி பகவதி தெரிவித்தார். மேலும் அவர் இது குறித்து கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுதிறனாளிகள் நலனுக்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கண்டறியப்பட்டுள்ள அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் அரசின் அனைத்து சலுகைகளும் கிடைப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்று திறனாளிகள் குழந்தைகளுக்கு கல்வி அளித்தல், பாதுகாத்தல் உள்ளிடவற்றிற்கு 13 பகல் நேர பாதுகாப்பு மையம் செயல்படுகிறது.

இது தவிர அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்குதல், மருத்துவ முகாம் நடத்துதல் போன்ற அனைத்து உதவிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டு நல்ல முறையில் அவர்களுக்கு அரசு சார்பில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

இன்னும் கணக்கெடுப்பில் மாற்றுதிறனாளிகள் குழந்தைகள் விடுபட்டிருந்தாலும் அவர்கள் உடனடியாக அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தை அணுகி அந்த குழந்தையின் பெயரை தெரிவிக்கலாம்.


இவ்வாறு பகவதி தெரிவித்தார்.

நன்றி:
தினமலர் (05.05.2011)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. யா அல்லா உன் அருள்
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [06 May 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 4243

யா அல்லா இக் குழதைகளுக்கு நீ கருணை செய் வாயாக ஆமின்.........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மாற்று திறநாளிகள் விழிப்புணர்வு
posted by T.M.Rahmathullah (kayalpatnam) [06 May 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4244

அஸ்ஸலாமு அலைக்கும்,

மாற்று திறநாளிகள் உருவாவதற்கு பல காரணங்களில் ஒரு சில,

1- நாடுகளில், குறிப்பாக நமதூரில் ஒலி மாசு ஏற்படுத்துதல் ஒரு காரணம், முக்கியமாக நமதூரில் மஸ்ஜித், ஹதீத் மஜ்லிஸ் கோயில், சர்ச், பாட்டு கச்சேரி போன்றவைகளில் சுமர்ர் வருடத்திற்கு 10000 மணிகள் குழாய் ரேடியோ மூலம் தெருக்கு தெரு ஒலிபெருக்க படுகிறது,

இந்த ஒலிபெருக்கியின் சப்தமானி கருவி கணக்கு படி 200-250 decipal அளவு வருகிறது. அனால் மனித சக்தி அதிகபட்சமாக 50-70 டெசிபல் வரை மட்டுமே கேட்க முடியும். இப்படி இருந்தால் கர்ப்பிணிகளின் கருவில் உருவாகும் குழந்தைகளுக்கு கூறு விழைவிக்காமல் என்ன செய்யும்?

இது பிரபல மேல்நாட்டு ஆராய்வலர்களின் கூற்று. இதை பற்றி விழிளிப்புணர்வு முகாம்கள் அமைத்தாலே தவிர விமோசனம் ஏற்படாது.அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்.

இந்த குறிப்புகள் நமதூர் துளிர் ஸ்தாபனம் ஆயுக்குடி அமர் சேவா சங்கம் பிரபல E.N.T.மருத்துவர்கள் குறிப்பாக நமதூர் டாக்டர் P.M.செயத் அகமத் அவர்களின் ஆலோசனை படி சமர்பிக்கிறேன். இதில் அனைவரும் கட்டாயம் கவனம் எடுக்குமாறும் வேண்டிக்கொள்கிறேன்

T.M.R.\KPM 6-5-2011 Fr 2-6-1432.

04639-280852


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved