Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:53:50 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6096
#KOTW6096
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மே 6, 2011
நகர்நலனுக்காக காயல் வெல்ஃபர் ட்ரஸ்ட் என்ற பெயரில் புதியதோர் அமைப்பு துவக்கம்! நிர்வாகிகள் தேர்வு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3376 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் நகர்நலப் பணிகளுக்காக காயல்பட்டினம் வெல்ஃபர் ட்ரஸ்ட் என்ற பெயரில் புதியதோர் அமைப்பு துவக்கப்பட்டு, 73/2011 என்ற எண் படி அரசுப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காயல்பட்டினத்திலுள்ள ஏழை-எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை இயன்றளவு செய்திடவும், நகர மாணவர் கல்வி மேம்பாட்டிற்கும், அவர்களின் வேலைவாய்ப்பிற்கும் அக்கறையுடன் செயலாற்றிடவும், நகரில் சுகாதாரமான சுற்றுச்சூழல் உருவாக்கப்படவும், கையூட்டு உள்ளிட்ட சமூகத் தீமைகளுக்கெதிரான விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், நகரின் ஒழுக்கம், இறையாண்மை, பண்பாடு, பாதுகாப்பு, சுயமரியாதை போன்றவற்றை சட்டத்திற்குட்பட்டு கண்காணித்திடவும் இவ்வமைப்பு துவங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வமைப்பிற்கு புதிய நிர்வாகக் குழு பின்வருமாறு தேர்வு செய்யப்பட்டுள்ளது:-

எஸ்.ஐ.அபூபக்கர் - தலைவர்
எம்.ஏ.இஜ்ஜத்தீன் - துணைத்தலைவர்

முஹம்மத் ஆதம் சுல்தான் - பொதுச் செயலாளர்
எம்.எம்.முஜாஹித் அலீ - இணைச்செயலாளர்
எம்.என்.அஹ்மத் ஸாஹிப் - இணைச்செயலாளர்

எம்.எஸ்.செய்யித் முஹம்மத் - பொருளாளர்
எஸ்.ஐ.செய்யித் மொகுதூம் - துணைப் பொருளாளர்

ஏ.எஸ்.எச்.நூர் முஹம்மத் ஃபிர்தவ்ஸ் - செய்தித் தொடர்பாளர்.




இவ்வமைப்பின் துவக்கக் கூட்டம் 17.04.2011 அன்றும், முதலாவது பொதுக்குழுக் கூட்டம் 21.04.2011 அன்றும் காயல்பட்டினம் காயிதேமில்லத் நகரிலுள்ள அன்னை கதீஜா மத்ரஸாவில் நடைபெற்றுள்ளது.





பொதுக்குழுக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன:-

தீர்மானம் 01 - காயலரின் கல்வி:
நமதூர் மாணவர்கள் பயனுள்ள தரமான கல்வி பெற்றிட இவ்வமைப்புதொடர்ந்து பாடுபடும். கல்வி உதவிகள், கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள்நடத்தப்படும். மாணவ மாணவியருக்கு உலக்கல்வியோடு கூடியஇஸ்லாமிய கல்வியும், மார்க்கக் கல்வியோடு உலகக்கல்வியைவழங்கிடவும் முயற்சி மேற்கொள்ளப்படும். இம்முயற்சியைநிலைநாட்ட பாடுபடும் பிற அமைப்புகளுக்கு தகுந்தவழிகாட்டுதல்களும், ஒத்துழைப்புகளும் வழங்கப்படும்.

தீர்மானம் 02 - காயல்பட்டினம் கலாச்சாரம்:
நமதூர் முன்னோர்கள் கட்டிக்காத்த கலாச்சார முறை பாதுகாக்கமுயற்சி மேற்கொள்ளப்படும். நகரில் பெருகிவிட்ட விபச்சாரம், வட்டி,வரதட்சணை, மது, சூது போன்ற சமூகத்தீமைகளுக்கு எதிராகபோர்க்குரல் எழுப்பப்படும். நம் இந்திய நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டுமேற்கண்ட தீமைகள் நம் நகரில் தொடரா வண்ணம் அனைத்துநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

தீர்மானம் 03 - நோய் தடுப்பு மற்றும் மருத்துவ உதவிகள்:
நமதூர் மக்களை பாதிக்கும் கொடிய நோய்களான புற்றுநோய்,இதயக்கோளாறு, மூளை வளர்ச்சியின்மை, ஆஸ்துமா, நரம்புதளர்ச்சி போன்ற கொடிய நோய்களுக்கான அறிகுறிகளையும்,காரணங்களையும் முற்கூட்டியே கண்டறிந்து சம்பந்தப்பட்ட அரசுதுறைகளுக்கு அறிக்கை அளித்து அவைகளை தடுப்பதற்கு முயற்சிமேற்கொள்ளப்படும்.

நோய்களை குணப்படுத்துவதற்கான மருத்துவ உதவிகள், மருத்துவஆலோசனைகள், மருந்துகள், மருத்துவக் கருவிகள் என்றுஅனைத்தும் முடிந்தவரை இலவசமாக வழங்கப்படும். நகரிலுள்ளமருத்துவமனைகளை அணுகி மேற்படி கொடிய நோய்களைதீர்ப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் முடிந்த அளவுவழங்கப்படும்.

தீர்மானம் 04 - சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு:
காயல்பட்டினம் நகரின் சுத்தம் சுகாதாரத்திற்கு பெரும் சவாலாகஇருக்கும் தொழிற்சாலை கழிவுகள், நச்சுப் புகை, சாக்கடை கழிவுகள்,முறைபடுத்தாத குப்பை கூளங்கள், அசுத்தமான குடிநீர்முதலியனவற்றின் தீங்கை விட்டும் மக்களை பாதுகாக்கும்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நகரின் நிலத்தடிநீரை சேமித்தல், நகரைச் சுற்றி மரம் நட்டுதல்போன்ற இயற்கை பாதுகாப்பு விஷயங்களிலும் கவனம் எடுக்கப்படும்.

தீர்மானம் 05 - வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை:
நகரின் படித்த இளைஞர்களுக்;கு தகுந்த வேலைகள் பெற்றிடஇவ்வமைப்பு வழிகாட்டும். பட்டம் பெற்ற காயல் வாசிகள் அந்நியநாட்டு மண்ணில் அல்லல்படும் அவலத்தை குறைக்கும் வகையில்அவர்களுக்கு அரசு வேலைகள் கிடைக்க இவ்வமைப்பு பாடுபடும்.

நகரில் சிறுதொழில்கள் பெருக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.காய்கறி வியாபாரம், கட்டிடத்துறை, மரவேலைகள் செய்தல் போன்றதொழில் துறைகளில் காயல்பட்டின மக்களின் பிரதிநிதித்துவத்தைபெருமளவில் உயர்த்தப்படும்.

தீர்மானம் 06 - கலப்படம்:
நகரில் விற்பனையாகும் அனைத்து உணவுப்பொருட்கள், மற்றும்உணவு பதார்த்தங்களின் கலப்பட நிலை பற்றி ஆராயப்படும்.இதுவிஷயமாக சம்பந்தப்பட்ட அரசு துறைகளை தொடர்பு கொண்டுகலப்பட வியாபாரிகள் மீது தகுந்த நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படும்.

தீர்மானம் 07 - போலி விலைவாசியை கட்டுபடுத்துதல்:
விற்பனை பொருட்களுக்கு அரசு மற்றும் வியாபார சங்கங்கள்நிர்னயித்துள்ள தொகையைவிட நம் நகருக்கென்றே பிரத்யேகமாகவிலையைக் கூட்டி விற்கப்படும் சம்பந்தப்பட்ட பொருட்களைகண்டறிந்து, அவைகளின் விலையை கட்டுக்குள் கொண்டுவரும்நடவடிக்கைகள் எடுக்கப்படும். இப்போலி விலையேற்றத்தின் மூலம்காயல்பட்டின மக்களின் செல்வத்தை சுரண்டும் இதுபோன்றகொடுமைகளை தடுப்பதற்கு சட்டத்திற்கு உட்பட்டு அனைத்துநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

தீர்மானம் 08 - அரசியல் மற்றும் ஆன்மீகம்:
அரசியலிலும் ஆன்மீகத்திலும் காயல்பட்டினம் மக்கள் சிறந்துவிளங்க நமது அமைப்பு தொடர்ந்து வழிகாட்டும், அதற்காக பாடுபடும்.அரசியலிலும் ஆன்மீகத்திலும் நமது அமைப்பு அவசியம் ஏற்பட்டால்நேரடியாகவும் ஈடுபடும்.

தீர்மானம் 09 - நகரின் தனித்துவம் மற்றும் ஒற்றுமை பேணல்:
நகரின் பாதுகாப்பு, கலாச்சாரம், பண்பாடு, தொழில்முறைபோன்றவற்றில் காயல்பட்டினத்திற்கென்றே உள்ள தனித்துவம்தொடர்ந்து கட்டிக்காக்கப்படும். மதம் இனம் ஜாதி பிரிவுகளுக்குஅப்பார்ப்பட்டு காயல்பட்டின குடிமக்களின் ஒற்றுமைக்காகஇவ்வமைப்பு தொடர்ந்து பாடுபடும்.

தீர்மானம் 10 - செய்தி ஊடகம்:
வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் காயல்வாசிகளுக்குஅமைப்பின் செயல்பாடுகளை தெரிவிக்கவும், மேற்காணும் நல்லவிஷயங்களை பிரச்சாரமாக எடுத்துச் செல்லவும் நமதுஅமைப்பிற்கென்றே தனி இணையதளம் உட்பட செய்தி ஊடகங்கள்அமைப்பதில் கவனம் செலுத்தப்படும்.


மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. CONGRATS !!!
posted by K.V.A.T.HABIB MOHAMED (QATAR) [06 May 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 4245

WE, K.V.A.T. BUHARI HAJI TRUST WELCOMES YOU THOSE WHO ALL ARE INVOLVING TO SERVE OUR MOTHER LAND KAYALPATNAM . ALSO WE ARE READY TO SUPPORT AND GIVE OUR SHOULDER AS MUCH AS WE CAN FOR SUCH A SOCIAL ACTIVITIES AND OUR NATIVE UNITY.

K.V.A.T. HABIB MOHMAED
KVAT BUHARI HAJI CHARITABLE TRUST
DOHA WING
QATAR. 00974 55232799
00974 55657147.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஏற்கனவே நம்மிடம் ஒரு பேரவை
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [06 May 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4246

பலநாள் கனவு மெய்ப்பட ஆரம்பித்து உள்ளது. சாட்டையை சுழற்றவும், அரவணைத்து உதவி செய்யவும் புறப்பட்டுள்ள உங்களை வாழ்த்தி பாராட்டுகிறேன்.

இந்த தீர்மானங்களை எல்லாம் நிறைவேற்ற ஏற்கனவே நம்மிடம் ஒரு பேரவை இருந்தும், எந்த பயனும் கிட்டவில்லையே என்ற ஏக்கம் தீர்க்க புறப்பட்டு விட்டீர்களோ..... புறப்படுங்க.. புறப்படுங்க...

இரண்டு கிலோ மீட்டருக்கு இடைப்பட்ட இரு ஊர்களுக்குள் உள்ள விலைவாசி பல கிலோ மீட்டர்கள், இந்த அதிசயம் நம்மூரில்தான் நடக்கும்.

அத்துடன், அந்நியர்களின் நடமாட்டம், திருட்டு பயம் ஆகியவற்றுக்கும் ஒரு ஆப்பு வைக்கணும்.

ஒரு மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு மக்ரிப் நேரத்தில், என் நண்பர் வீட்டுக்கு போன் செய்ததில், அவர் வீட்டில் இல்லை.

விசாரித்ததில் முஹைதீன் பள்ளி அருகில் யாரோ ஒரு திருடனை ஒரு வீட்டில் இருந்து பிடித்து, கட்டி வைத்து, அடித்து, போலீஸ்க்கு தகவல் கொடுத்து உள்ளார்கள், ஒரே ஜே.. ஜே என்று கூட்டம் அதை பார்க்க சென்று உள்ளார் என்று கூறினார்கள்..

எனக்கோ ஒரே பதட்டம்... நம் ஊரிலா...இப்படியா..

(அதற்கு ஒரு வாரம் முன்புதான் அதே இடத்தில் அதே நேரத்தில் முடுக்கில் ஒரு பெண்ணின் தங்க செயின் பறிக்கப்பட்டு உள்ளது)

திரும்பவும் நண்பனிடம் விசாரித்ததில், எனக்கு பயங்கர அதிர்ச்சி...

என்னப்பா.. போலீஸ் வந்ததா..

ஆமாம்.. வந்தது..

அவனை பிடித்து சென்றார்களா?

இல்லை மச்சான்....

என்னடா.. சொல்லுகிறாய்..

இல்லைடா.. அதற்கு முன்பு..

என்னடா.. அதற்கு முன்பு.. ராணுவம் வந்ததா?... இதற்கு எல்லாம் ராணுவம் அவசியம் இல்லையடா.

இல்லை.. நம் ஆட்களில் சிலர் ஆட்டோவில் அவசர, அவசரமாக வந்து, எங்க ஆளுதான் என்று அழைத்து சென்று விட்டார்கள்..

எனக்கு இதுவரை ஒன்றுமே புடிபடவில்லை.. நம் ஊரில் என்ன நடக்கின்றது என்றே....

இதற்க்கு எல்லாம் ஒரு முடிவு கட்டுங்க...

நோய் இல்லாத, வறுமை, பயம் இல்லாத, நிம்மதியான, உண்மையான இஸ்லாமிய ஊராக மாற்ற உங்களாலும் முடியும். வல்ல இறைவன் உறுதுணை செய்வான்.. இன்ஷாஹ் அல்லாஹ்.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஊருக்கெல்லாம் ஒரு விலையெனில் நம்மூருக்கு ஒர் விலை!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக் (ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.) [07 May 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4247

காத்திருந்து, காத்திருந்து கண்கள் பூத்துவிட்ட நிலையில் காட்சி தந்து கவலை தீர்க்க வந்த காயல் நலமன்றமே! வருக, வருக!

ஒற்றுமை எனும் போர்வை தனில் அட்டூழிய கிழிசல்களாயிரம்
அத்தனையும் இழுத்துத் தைக்க ஆக்கமெனும் ஊசிதனில்
ஊக்கமெனும் நூல் கோர்த்து மானம் காக்க வந்த கூட்டமைப்பே!

கடற்கரையில் கலங்கரை விளக்கு இருக்கும்,
ஆனால், நம் கடற்கரையோ களங்கக்கரையாய் மாறிவிட்ட இந் நிலையில்
களையெடுக்கப் புறப்படுங்கள் காயல் செழிக்கும்.

ஊருக்கெல்லாம் ஒரு விலையெனில் நம்மூருக்கு ஒர் விலை!
புரட்டுங்கள் சரித்திரத்தை, விரட்டுங்கள் தரித்திரத்தை!

அகிம்சை வழியில் ஐக்கியப் பேரவை அமைதியாகவே இருக்கட்டும்.
ஆகின்ற வேலையை ஆக்கப்பூர்வமாக நீங்கள் பாருங்கள்.

சட்டம் ஒழுங்கு இவற்றைப் பேணி சாட்டயைச் சுழற்றுங்கள்.
சரித்திரப் புகழ் வாய்ந்த நம் காயலின் கன்னியத்தைக் காப்பாற்ற களமிறங்குங்கள்.

காயல் வெஃபர் ட்ரஸ்ட் இஸ் ஆல்வேஸ் ஃப்ஸ்ட் எனும் நிலை உருவாக வாழ்த்துகின்றேன்.

Moderator:Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...
posted by MUTHU ISMAIL (kayalpatnam ) [07 May 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4250

அருமையான முயற்சி, நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. கண்ணியம் காக்கப்பட வேண்டும்
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [07 May 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4252

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நமது ஊரின் நன்மைக்காக புதியதோர் அமைப்பை "காயல்பட்டினம் நல அறக்கட்டளை" என்ற பெயரில் துவங்கியிருப்பதை அறிகிறோம். இந்த அமைப்பு முழு மனதுடன், எந்த ஒரு பாகுபாடுமில்லாமல் ஊரின் ஒட்டுமொத்த நன்மைக்காக மட்டுமே தொடங்கி அதன்படி செயல்பட்டால் அது வரவேற்கத்தக்கதும், பயன் தரக்கூடியதுமாகும்.

இந்த அமைப்பு பற்றி வலைதளங்களிலும், பிரசுரத்திலும் வெளியான செய்திகளை பார்வையிட்டேன். அதில் கூறப்பட்டிருக்கும் செய்திகள் யாவும் ஊரின் நன்மையை பிரதிபலிப்பதாக இருந்தாலும் சில ஐயப்பாடுகள் தோன்றுகின்றன, அவைகளை பகிர்ந்துகொள்ள ஆசைபடுகிறேன்.
---------------------------------------
முதலாவதாக: மார்க்கம், கல்வி, சுகாதாரம் , நோய், பொருளாதாரம், அரசியல், விளையாட்டு, பாதுகாப்பு, தொழில், விலைவாசி மற்றும் நமது ஊரின் கலாச்சாரம் என்பது போன்ற ஒவ்வொன்றையும் தனித்தனியாக பார்க்காமல் ஒட்டுமொத்தமாக நமது மக்கள் அனுபவித்து வரும் இன்னல்களை அகற்றவே இந்த அமைப்பு அமைக்கபட்டிருக்கிறது என்றால், அவசியம் ஊரின் அனைத்து ஜமாஅத்தார்களையும் இந்த அமைப்பிலே இணைக்க வேண்டும்.

அப்படி ஊரின் ஒட்டுமொத்த ஜமாஅத்தும் இணையாதிருக்கும் பட்சத்தில் இந்த நல்ல நோக்கங்கள் எல்லாம் ஏட்டளவிலே இருக்குமே தவிர - செயலிலே நடைபெறாது என்பதை கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்.
--------------------------------------
இரண்டாவதாக: நமது ஊரிலே பல சங்கங்கள், அமைப்புகள், பேரவைகள் என்று பல பொதுத்தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. அவைகளில் சில நல்ல தொண்டுகளை முறையாக செய்து வருகின்றன. சில அரைகுறையுடனும், வேறு சில செயல்படாமலும் இருக்கின்றன.

ஆகையால் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற கல்வி உதவி, மருத்துவம், கேன்சர் ......... இது போன்ற சில தொண்டுகளை நீங்களும் சிரமம் எடுத்து செய்வதைவிட அது அல்லாத அரைகுறையுள்ள, செயல்பாடில்லாமல் இருக்கின்ற மற்றும் புதிய தொண்டுகளை செய்வது பயன்தரும். அப்பொழுதுதான் ஒரு செயலை முழுவதுமாக செய்து பயன்பெற முடியும்.
-----------------------------------------
மூன்றாவதாக: சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை, கலப்படம், போலி விலைவாசியை கட்டுபடுத்துதல் இது போன்ற உங்கள் செயல்திட்டங்களில் நீங்கள் கவனம் செலுத்தினால் மிகவும் பலன் கிடைக்கும். மேலும் இதுவே இன்றைய மக்களின் எதிபார்ப்பாக உள்ளது.
-------------------------------------------------
நான்காவதாக: அரசியல் மற்றும் ஆன்மிகம் இந்த இரண்டிலும் நேரிடையாக ஈடுபடாது இருப்பதே உங்களுடைய மற்ற செயல்பாடுகளுக்கு நல்ல பலனை அளிக்கும்.

ஆனால் அரசியல் கட்சிகள் கலக்காத நல்லதொரு நகராட்சி மன்றம் அமைய வழிகளை உருவாக்கினால் அது நமது ஊருக்கு மிகப்பெரிய பயனை தரும்.
------------------------------------
ஐந்தாவதாக: நமது ஊரின் கலாச்சாரம், தனித்துவம் மற்றும் ஒற்றுமைப் பேணல் இவைகளை கட்டிக்காக்க விரும்பும் நாம் முதலில் நமக்குள்ளே ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

வல்லினம்-மெல்லினம் பார்த்து, எதை மறைமுகமாக சொல்லணும், எதை வெளிப்படியாக சொல்லணும் என்பதை அறிந்து செயல்பட்டாலொழிய எவரும், எந்த அமைப்பும் ஒருபோதும் முன்னேற்றம் காண முடியாது.

சில அமைப்புக்கள் ஊரின் சில விசயங்களை செயலிலே காட்டாவிட்டாலும் கண்ணியம் காக்கிறார்கள். கலாச்சாரமும் கண்ணியமும் காக்கப்பட வேண்டும் என்றால் வெளிப்படுத்தக் கூடியவைகளை வெளிப்படுத்த வேண்டும், மறைக்கக் கூடியவைகளை மறைக்க வேண்டும்.
---------------------------------------
KWT அமைப்பாளர்களே!

நல்ல பல திட்டங்களை செய்ய துடிக்கும் நீங்கள் மிகவும் சிரமம் எடுத்து செயல்பட்டு, வரும் நகராட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகள் இல்லாத பொதுநலனையே விரும்பக்கூடிய ஒழுக்கமுள்ள, இறைவனுக்கு பயந்த, சுறுசுறுப்பான வார்டு மெம்பர்களை தேர்ந்தெடுக்கச் செய்து அனுப்பினால் நமது நகராட்சி மலர்ச்சியடையும். அதன் மூலம் உங்கள் திட்டங்களில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

மக்களுக்காக பாடுபட இருக்கிற இந்த புதிய அமைப்பிலே நல்நோக்கு திட்டத்திற்கு எதிராக செயல்படக்கூடிய எவர் இருந்தாலும், பாரபட்சமின்றி வெளியேற்றி உங்கள் அமைப்பை தூய அமைப்பாக வைத்து செயல்படுங்கள் அல்லாஹ்! வெற்றியைத் தருவான்.

எல்லாம் வல்ல அல்லாஹ்! உங்களது இந்த புதிய முயற்சிக்கு ஊர் மக்கள் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்க செய்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved