Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:05:19 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7392
#KOTW7392
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், அக்டோபர் 18, 2011
YUF செயலாளர் அறிக்கைக்கு காக்கும் கரங்கள் விரிவான விளக்கம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 6354 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (52) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அக்டோபர் 14 - வெள்ளியன்று - காக்கும் கரங்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்து பொதுக்கூட்டத்தில் அழைப்பின் பேரில் பேச வந்த தான் அவமதிக்கப்பட்டதாகக் கூறி, காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார்.

அதற்கு பதில் ஒன்று காக்கும் கரங்கள் அமைப்பு சார்பாக வெளியிடபப்ட்டுள்ளது:

அஸ்ஸலாமு அலைக்கும். கடந்த 14\10\2011 அன்று வள்ளல் சீதக்காதி திடலில் நடைப்பெற்ற காக்கும் கரங்களின் நகராட்சி தேர்தல் விழிப்புணர்வு பொதுக் கூட்டத்தில் YUF செயலர் கவிஞ்ர் அல்ஹாஜ் SAK.முஹியத்தீன் அப்துல் காதர் காக்கா அவர்கள் அவமதிக்கப்பட்டதாக வந்த செய்தியை பார்த்து மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

அங்கே நடந்தது என்னவென்றால், கூட்ட நோட்டிஸ் அச்சடிக்கப்பட்ட பிறகு YUF செயலர் கவிஞ்ர் அல்ஹாஜ் SAK.முஹியத்தீன் அப்துல் காதர் காக்கா அவர்களை சந்தித்த நான் கூட்டம் நடக்கும் செய்தியை தெரிவித்தேன்.அதில் நீங்கள் மூன்று நிமிடம் பேசுங்கள்.என்றும் ஆறரை மணிக்கு கூட்டம் ஆரம்பிக்கும், கிராஅத், வரவேற்புரைக்கு அடுத்து நீங்கள் பேசவேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தேன். ஆனால் கூட்டம் ஆரம்பிப்பதற்கு ஏழு மணியாகிவிட்டது.

இதற்கிடையில் மரணமடைந்த ஜலாலியா நிக்காஹ் மஜ்லிசின் தலைவர் அவர்களின் நல்லடக்கம் இரவு 9.30 மணிக்கு நடைபெற இருந்தது.கூட்டம் துவங்குவதற்கு முன்பும் நான் YUF இல் இருந்த மைதீன் காக்காவிற்கு போன் செய்து கூட்டம் ஆரம்பிக்கப்போகுது, சீக்கிரம் வாருங்கள் என்ற தகவலும் சொல்லி இருக்கிறேன்.

ஏழு மணிக்கு துவங்கிய கூட்டம் கிராஅத், வரவேற்புரைக்கு அடுத்தும் மைதீன் காக்கா அவர்கள் வரவில்லை. அதனால் தலைவருக்கான வேட்பாளர் தேர்தலில் அனைத்து ஜமாஅத்தையும், பொதுநல அமைப்புகளையும் ஒருங்கிணைத்த காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட இருவரில் ஒருவரான மரியாதைக்குரிய காயல் அமானுல்லாஹ் காக்கா அவர்களைப் பேச சொன்னேன். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதும் மைதீன் காக்கா அவர்கள் வரவில்லை.

அடுத்ததாக முஸ்லிம் லீக் மாநில பொது செயலாளர் KAM அபுபக்கர் அவர்கள் பேசிகொண்டிருக்கும் போது தேர்தல் பொறுப்பாளர்களான மரியாதைக்குரிய காயல் அமானுல்லாஹ் காக்கா, அப்துர்ரஷீத்(அவ்லியா) ஆகியோரிடம் மைதீன் காக்கவிடம் பேச வர சொல்லி இருந்தேன், இதுவரை வரக் காணோம். நமக்கு நேரம் வேற இல்லை. அதனால் மைதீன் காக்காவை எப்படியாவது சமாளிக்கவும். நீங்கள் சொன்னால் கண்டிப்பாக கேட்பார்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அவர்கள் வந்தும் விட்டார்கள்.

வந்ததும் அவர்கள் நிலைமையை சொல்லி இருக்கிறார்கள். அதற்கு மைதீன் காக்கா அவர்கள் கோபப்பட்டு சென்றுவிட்டார்கள். அதற்கு பிறகு அவர்களை உவைஸ் ஹாஜியார் அவர்கள் கூப்பிடுவதாக சொன்னவுடன் வந்தார்கள். அவர்களிடம் நிலைமையை சொல்லி தயவு செய்து மூன்று நிமிடம் மட்டும் பேசவும் என்று சொல்லி அனுப்பினோம்.

மேடைக்கு சென்ற அவர்கள் ஐந்து நிமிடங்கள் தாண்டியும் பேச்சை முடிவுக்கு கொண்டு வரவில்லை. அப்போது நான் அவர்களின் காலை சுரண்டினேன். இருந்தும் நிப்பாட்டாமல் "அந்த மேடைக்கு" சம்பந்தம் இல்லாத்த விஷயங்களை பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அமானுல்லாஹ் காக்கா அவர்கள் மேடைக்கு அருகே கீழே இருந்து (அவர்களுக்கு மட்டும் தான் விளங்கி இருக்கும்) மைதீன் அப்துல் காதர் நேரம் இல்லை, சீக்கிரம் முடி என்று தான் சொன்னார்கள்.

சுமார் பத்து நிமிடங்கள் பேசிய பிறகு, என்னை பேச அழைத்தால் பேசவிடுங்கள், இல்லைஎன்றால் கூப்பிடாதீர்கள் என்று சொல்லி கோபமாக மேடையை விட்டும் இறங்கி சென்று விட்டார்கள், அறிக்கையும் கொடுத்துவிட்டார்கள். இதில் காக்கும் கரங்கள் என்ன தவறு செய்தது?

அந்த அறிக்கையை படித்த அடுத்த நாள் நான் YUF சென்று மைதீன் காக்காவை சந்தித்து நாங்கள் என்ன தவறு செய்தோம்? என்று கேட்டேன். காக்கும் கரங்களோடு எனக்கு எந்த விதமான கோபமும் இல்லை. நான் விரும்பும் அமைப்புகளில் காக்கும் கரங்கள் சேவை எனக்கு மிகவும் பிடிக்கும். என்னால் உங்களுடைய பேருக்கு களங்கம் வந்தது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

அதற்கு நான் என்ன செய்ய வேண்டுமோ சொல், நான் செய்கிறேன் என்று வருத்தத்துடன் சொன்னார்கள். அதற்கு நான் சொன்னேன், நான் எத்தனை அமைப்புகளின் பொறுப்புகளில் இருந்தாலும் என்னுடைய முதல் அமைப்பு, தாய் அமைப்பு YUF தான், காக்கும் கரங்களின் தீவிர ஆதரவாளராகவும், ஆலோசகராகவும் நீங்கள் இருக்கிறீர்கள். நம்முடைய ஜமாஅத்தை சார்ந்தவர்கள் மட்டும் அல்லாது மற்றவர்களும் தவறாக நினைக்கிறார்கள். ஆதலால் நீங்கள் அதற்கு விளக்க அறிக்கை மட்டும் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு, நடந்த சம்பவம் எங்களால் உங்களை புண்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

காக்கும் கரங்கள் என்றைக்கும் யாரையும் மனது நோகும் படி செய்யாது. தவறு என்பது எல்லா மனிதருக்கும் ஏற்படுகிற ஒன்று. காக்கும் கரங்கள் ஊருக்கும்,நாட்டுக்கும் நன்மை செய்யக்கூடிய நபர்கள், பொதுநல அமைப்புகள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக ஆதரிப்போம். ஊருக்கும், நாட்டுக்கும் தீமையான காரியங்களில் யார் ஈடுபட்டாலும் மிகக் கடுமையாக எதிர்ப்போம்.

அல்லாஹ் மிகப் பெரியவன். அவனே எல்லாம் அறியக் கூடியவனாக இருக்கிறான். நன்றி. அஸ்ஸலாமு அலைக்கும்.

இவண்,
MAK ஜெயினுல் ஆப்தீன்,
தலைவர், காக்கும் கரங்கள் நற்பணி மன்றம்,
காயல்பட்டணம்.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by Mohideen(Durai) (Abu Dhbai) [18 October 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11216

Do only social service dont go for politics

Mohideen (Durai)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by Zainul Abdeen (Dubai) [18 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11219

ஒரு வீட்டில் சஞ்சலங்கள் எழுவது சகஜம்தான். அதை நாங்கள் யாரும் பெரிதாக எடுக்க வில்லை. இரண்டு தனி நபர்களுக்குள் நடந்த மன வேற்றுமையை அறிக்கையாக விட்டது ஏனோ தேவை இல்லாத ஒன்றாகதான் எண்ண தோன்றியது . இதையே மிகை படுத்தி அப்படி இப்படி என்று வெசத்தை ஐக்கிய பேரவைமேல் கக்கினார்கள் சிலர் . இங்கு ஐக்கிய பேரவை எங்கிருந்து வந்தது.......

காக்கும் கரங்கள் , உங்களுடைய எல்ல நல்ல காரியங்களையும் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி செயல் படவேண்டும் என வேண்டுகிறேன். உங்களுக்கு வரும் தேவை இல்லாத விமர்சனங்களுக்கு பதில் கொடுப்பதில் காலத்தை வீணடிக்க வேண்டாம்.

பாலிடிக்ஸும் ஒரு சோசியல் சர்வீசுதான் ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by farook (jeddah) [18 October 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11222

ஜைனுலாப்தீன் கருத்து அருமை. இதில் கூட தேவை இல்லாமல் ஐக்கிய பேரவையை திட்டி எழுதி தீர்த்துவிட்டார்கள். என்ன செய்ய? ஐந்து பேரு எதிரித்து எழுதினால், ஊரே ஐக்கிய பேரவைக்கு எதிராகி விடுமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. சின்ன சின்ன சல சலப்புக்கள் வரும் போகும் அதை நாம் பெரிது படுத்த தேவையில்லை.
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [18 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11227

எங்கோ தவறு நடந்து விட்டது...

சின்ன சின்ன சல சலப்புக்கள் வரும் போகும் அதை நாம் பெரிது படுத்த தேவையில்லை... சரி சரி அனைவரும் ஒற்றுமையாக இருந்து.. பல நல்ல காரியம் செய்யுங்கள்...

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by sholukku.aj (kayalpatnam) [18 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 11229

SALAAM 2 ALL

அன்பின் காக்கும் கரங்களின் தலைவர் தம்பி MAC.J.ஆப்தீன் அவர்களே

1 .தங்களின் விளக்கம் உண்மையாகவும் தெளிவாகவும் இருந்தது . தாங்கள் எங்கள் { YUF } இன் செயலாலர்வுடன் நேரிடையாகவும் இந்த அறிக்கை மூலமாகவும் தந்த விளக்கங்கள் அவரது மன வேதனையை போக்கி இருக்கும் என்று நிச்சியமாக நம்புகின்றேன்.

2 இது பற்றி காயல் SE. அமானுல்லாஹ் (EX PRESIDENT IN YUF ) அவர்களிடம் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு என்ன நடந்தது என்று வினவியதில் நேரத்தின் அருமை கருதி "நான் முஸ்லீம் லீகுவின் பொது செயலாளர் சகோ.அபூபக்கர்க்கு எவ்வாறு சைகை செய்தோனோ அதை போல்தான் தம்பி முஹியதீன் அவர்களுக்கும் சைகை செய்தேன் என்று கூறியுடன் நிறுத்தாமல் என் மேல் அதிக மரியாதை கொண்ட SAK.அவர்களை அவமரியாதை செய்யும் தேவை எனக்கு என்ன அவசியம் வந்தது என்றும் ELECTION BUSY ஆக இருந்த நேரத்திலும் விளக்கமாக கூறினார். நான் இது பற்றி பின்னால் SAK விடம் பேசி கொள்வதாகவும் கூறினார்.

3 . எனவே இந்த அறிக்கை விமர்சனங்களை இத்துடன் முடித்து கொள்வது நம் அனைவர்களுக்கும் நன்மையை பயக்கும் .ரப்புல் ஆலமீன் இதைப்போன்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் துணை நிற்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by mohamed abdul kader (dubai) [18 October 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11230

அஸ்ஸலாமு அலைக்கும்.

தாங்கள் எல்லா மக்களுக்கும் போற்றும் பொது அமைப்பாக இருங்கள்.அரசியலில் சாடியது முதல் தவறு அதிலும் ஒருவர் பக்கம் சாய்த்தது அடுத்த தவறு ஜெயினுல் ஆப்தீன் காக்கா அவர்களே.

ஜெயினுல் ஆப்தீன் காக்கா தாங்களிடம் வோர் கேல்வி?

( அங்கே நடந்தது என்னவென்றால், கூட்ட நோட்டிஸ் அச்சடிக்கப்பட்ட பிறகு YUF செயலர் கவிஞ்ர் அல்ஹாஜ் SAK.முஹியத்தீன் அப்துல் காதர் காக்கா அவர்களை சந்தித்த நான் கூட்டம் நடக்கும் செய்தியை தெரிவித்தேன்.அதில் நீங்கள் மூன்று நிமிடம் பேசுங்கள்.என்றும் ஆறரை மணிக்கு கூட்டம் ஆரம்பிக்கும், கிராஅத், வரவேற்புரைக்கு அடுத்து நீங்கள் பேசவேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தேன்.)

இதனை தாங்களே .முஹியத்தீன் அப்துல் காதர் காக்கா அவர்களை சந்தித்து சொன்னதாக சொல்றீர்கள்.

இதனை சொன்ன தாங்கள் அவர்கள் தாமதமாக வந்தபோது தாங்களே அவர்களை சமாதனம் செய்து இருக்கலாமே அதை விட்டு விட்டு மற்றவர்களை வைத்து அவர்களை சமாதனம் செய்ய காரணம் என்ன?

எதுவாகினும் காக்கும் கரங்கள் செய்தது வருத்தத்துக்கு வூரியதே.

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by AbdulKader (Abu Dhabi) [18 October 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11234

அஸ்ஸலாமு அழைக்கும்......

மிக்க சரியான தகவல் என்று தெரிகிறது. நடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும்..... இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

இதற்குமேலும் சிலருக்கு சந்தேகம் வரும்.... MAK ஜெயினுல் ஆப்தீன் அவர்களே.... அடுத்த அறிக்கையை உடனே தயார் நிலையில் வைத்திருங்கள்.

வஸ்ஸலாம்
அப்துல்காதர்(பாதுல்அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by Refai (Dar Es Salaam) [18 October 2011]
IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 11235

Dear Zain Bhai,

Machan office la work illaya ? Epadida unnaku mattum ipadilam tonuthu ?

Cool machan , eppavamey ivanga ippadithan.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by mohamed abdul kader (dubai) [18 October 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11236

நண்பர் அப்தீன் அவர்களே ஒரு வீட்டில் சஞ்சலங்கள் எழுவது சகஜம்தான்.ஆனால் மற்றவர்களை கூப்பிடு மனதை காயப்படுத்துவது என்பது வருந்த தக்க ஒன்று .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by சாளை நவாஸ் (Singapore) [18 October 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 11237

இபோதெல்லாம் இணையத்தில் அறிக்கை விடுவது பேஷன் ஆகி விட்டது. இனிமேல் கணவன் மனைவி சண்டை கூட அறிக்கையாக இணையதளத்தில் வரலாம்.

ஒற்றுமை ஒற்றுமை என்று கோசமிட்டவர்களே, ஒற்றுமையை குலைக்க முதல் படி அறிக்கை விடுவது என்று மறந்தது ஏனோ?

காக்கும் கரங்களை பார்க்கும் கரங்கள் என்று மாற்றி விடலாம். ஊரில் அவ்வளவு அட்டூழியம் நடந்து இருக்கு, அதை தட்டி கேட்காமல் பார்த்துகொண்டிருந்தவர்களை எப்படி அழைப்பதாம்? அறிக்கை விடுவதற்கு மட்டும் குறைச்சல் இல்லை

-வருத்ததுடன் மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by ISMAIL(KTM) (Hong Kong) [18 October 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 11244

அனைவருமே பெரியவர்களை மதிக்க வேண்டும் பெரியவர்களை மதிக்க வேண்டும் என அரட்டிக் கொள்கிறார்கள். அப்பெரியவர்கள் சிறியவர்களை அவமானப்படுத்துவது மட்டும் தப்பில்லையாம். தப்புதான் என்று சொல்பவர்களுக்கு மட்டும் ஒரு வேண்டுகோள்.

சகோதரி ஆபிதா அவர்கள் வாக்கு சேகரிக்க தெருத் தெருவாய் வீடு வீடாய் அழைந்த போது ஒரு பணக்கார பெரியவர் ஆபிதா அவர்களை மிகவும் அவமானப் படுத்தி இழிவாகப் பேசியிருக்கிறார்.

அப்பெரியவர் மிகவும் சிறுமையாக நடந்து கொண்டார். 15 வயது பாலகன் போல சிறுபிள்ளைத்தனமாக நடப்பது தான் இவர் போன்ற பெரிவர்களின் நற்குணமாம்.

ஆனால் சகோதரி ஆபிதாவோ அதை ஒரு பெரிய விஷயாமாக பொருட்படுத்தாமல் ஒரு அனுபவமிக்க முதியவர் போல நடந்து கொண்டார்.

அன்பான காயல் வாசிகளே, இது போன்ற நிலையில் பெரியவர்கள் நடக்காமல் இருக்க தயவு செய்து பெரியவர்களை அறிவுறுத்துங்கள்.

பெரியவர்களை மதிக்க வேண்டும் என ஐ.பே. ஆதரவாளர்கள் வெற்று வேதாந்தம் பேசிக்கொண்டு திரியாமல் நடக்க வேண்டிய நல்லவற்றைப் பற்றிப் பேசுங்கள்.

அல்லாஹ்வின் நாட்டத்தால், மக்கள் யாரைத் தேர்வு செய்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்து மக்களின் தீர்ப்பை மனதார மதித்து ஏற்றுக்கொள்வோம்.

இப்படி சொல்வதால் தோல்வி பயம் என எண்ணிக் கொள்பவர்களுக்கு சொல்லிக்கொள்வது யாதெனில்,

எங்களுக்கு சிறுபிள்ளைத்தனமாக நடக்கத்தெரியாது என்பதுதான். வெற்றிக் களிப்பில் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கவும் மாட்டோம், தோல்வியால் ஒருக்காலும் துவண்டு போகவும் மாட்டோம்.

எங்கள் உயிர் உள்ளவரை ஊர் நலனைக் கேள்விக்குறி யாக்குபவர்களுக்கு தொடர்ந்து தலைவலியைக் கொடுத்துக் கொண்டே இருப்போம்.

இத்தேர்தல் முடிந்த பிறகாவது ஐக்கியப் பேரவையின் ஆதரவாளர்கள் தற்போதுள்ள பேரவையைக் கலைத்து விட்டு, வெளிப்படையான தேர்தலை நடத்தி, ஊர் ஜமாஅத்துகளின் முழுமையான பிரதிநிதித் துவத்துடனும், பிரதிநிதிகளின் முழுமையான ஈடுபாட்டுடனும்,

சுயநலனையோ, ஈகோவையோ எதிர்பார்க்காமல் ஊர் நலனையும் சிறப்பான காயல்பட்டணம் நகராட்சியையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஓர் ஐக்கியப்பேரவை தான் ஊரின் பெருவாரியான மக்களின் எதிர்ப் பார்ப்பாய் இருக்கிறது என்பதைப் பதிவு செய்கிறோம்.

அன்புடன்,
இஸ்மாயில் KTM ST., (ஹாங்காங்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by Vilack SMA (Kangxi) [18 October 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 11247

தம்பி சாலை நவாஸ் , உங்களுக்கும்தான் அறிக்கை விடுவது என்பது அவ்வளவு பிரியம் . நீங்கள் விடாத அறிக்கைகளா ?

பொதுவாக இது போன்ற கூட்டங்கள் நடக்கும்போது , சிறு தவறுகள் நடக்கும் , சகஜம்தான் . இதில் தவறு என்று நினைத்தவருக்கு , சரியான விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது .

தம்பி நேற்று நீங்கள் எங்கு இருந்தீர்கள் ? ஊரிலா அல்லது சிங்கையிலா ? அமைதியாக வாக்களிப்பு நடந்த நேரத்தில் , அராஜகம் எங்கிருந்து வந்தது என்பது எங்களுக்கும் தெரியும் . மிகவும் உறுதியான சாட்சிகளுடந்தான் இதை சொல்கிறேன் . ஒரு பள்ளியில் , பெண்கள் அமைதியாக வாக்களித்த நேரத்தில் , உங்கள் ஆதரவு வேட்பாளர் அங்கு சென்று , அங்குள்ள பெண்களிடம் " அராஜகமாக " நடந்து கொண்டது , அனைவரும் அறிந்தது . மொபைல் போன் கேமராவில் இது பதிவாகி விட்டது .

இது போன்று பல இடங்களில் உங்கள் வேட்பாளரின் ஆதரவாளர்கள் அராஜகம் பண்ணியது , வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது , கண்ணால் பார்த்த சாட்சியங்கள் நிறையவே உண்டு.

ஆக அராஜகம் நீங்கள் பண்ணிவிட்டு , அடுத்தவனை குறை சொல்வானேன் .!

" காயல் மண்ணின் மைந்தன் "

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by MAK.JAINULABDEEN.(president,kaakkum karangal narpani mandram) (kayalpatnam) [18 October 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 11248

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமதூரில் எந்த ஒரு அரசியல் கட்சியுமே போட்டியிடவில்லையே,நாங்கள் எங்கே அரசியல் செய்தோம். ஒரு சகோதரர்,எல்லா மக்களுக்கும் பொது அமைப்பாக இருங்கள் என்று சொல்லிஇருக்கிறார்கள். ஊரில் உள்ள நான் சார்ந்திரிக்கும் ஜமாஅத் உள்பட அனைத்து ஜமாஅத்துகளும்,நான் சார்ந்திரிக்கும் YUF உள்பட அனைத்து பொதுநல அமைப்புகளும் ஒன்றினைந்து தேர்ந்தெடுத்த ஒருவரை காக்கும் கரங்கள் மட்டும் ஆதரிக்காமல் இருந்தால் காக்கும் கரங்களுக்கு நல்ல பெயர் கிடைத்து விடுமா?

இங்கே காயல்பட்டினத்தில் யாருடா "தும்ம"மாட்டா?அச் என்று தும்மாமல் இட்ச் என்று தும்முகிறான் என்று குறை சொல்ல ஒரு கூட்டமே கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி பார்த்து கொண்டு இருக்கு. அதனால ஒருத்தன் நல்லது செய்யும் போது நாலு பேரு குறை சொல்லத்தான் செய்வார்கள். நாலு பேர் நல்லது செய்தாலும் ஒருத்தன் குறை சொல்லத்தான் செய்வான்.

ஏன் என்றால் அவர்கள் மண்ணின் மைந்தர்கள்,ஆனால் அவர் சிங்கப்பூரில் இருந்து கமெண்ட்ஸ் மட்டும் தான் குடுப்பார்,மற்றவர்கள் ஆப்ரிக்காவில் இருந்து வந்தவர்கள்.நல்லதை சொல்ல கொஞ்சமாவது பழகுங்க,நல்லதை கொஞ்சமாவது சிந்தியுங்க.

இறைவன் மிகப் பெரியவன். இறைவன் மிகப் பெரியவன். எல்லாம் அறிந்தவன் அவனே.

அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by Shahul Hameed (Hong Kong) [18 October 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 11249

சாலை நவாஸ் அவர்களே! சரியாக சொன்னீர்கள். இந்த செய்தி தளத்தில் வெளியான அறிக்கைக்கு இங்குதான் பதில் அளிக்க வேண்டியுள்ளது.ஒரு வேலை காக்கும் கரங்கள் பதில் அளிக்காவிட்டாலும் அவர்களை வறுத்து எடுக்க சிலர் இருக்கிறார்கள்.

சகோதரர் அப்துல் காதர் அவர்கள் காக்கும் கரங்கள் அமைப்புக்கு கடிதம் எழுதி இருந்தால் அவர்கள் கடிதம் வாயிலாக பதில் அளித்திருப்பார்கள்.

ஆகவே இனி வரும் காலங்களில் எவருடைய தனிபட்ட அறிக்கைகளையும் இத்தளத்தில் வெளி இடாமல் இருப்பது நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by சாளை நவாஸ் (singapore) [18 October 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 11251

செய்மாலி காக்கா, நேற்று நான் சிங்கையில் இருந்தாலும் ஊர் தொடர்பிலே இருந்தேன். எல்லா விஷயமும் நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.

ஆக யார் தப்பு செய்தாலும் கண்டிப்பாக தண்டிக்கபடவேண்டும். நீங்கள் கேட்கும் பாணி நாங்கள் மட்டுமா தப்பு செய்தோம் நீங்கள் செய்யவில்லையா என்பது போல் உள்ளது. தப்பை நியாய படுத்துவது எங்கள் கோட்பாடு அல்ல. உங்களிடம் ஆதாரம் இருந்தால் யாவருக்கும் அனுப்புங்கள்,

ஆமா நீங்க மட்டும் நேற்று எங்கே இருந்தீங்கலாம்? கருத்துக்கள் எழுதுபவர்கள் கொஞ்சம் நாகரீகமாக எழுத பழகி கொள்ளலாமே!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by farook (Jeddah) [18 October 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11252

mak ஜைனுலாப்தீன் விளக்கம் சரி தான். ஒருவர் எழுதிறார், ஊரு ஒற்றுமை கேள்விகுறி ஆகினால், தலைவலி கொடுப்பாராம்? முயற்சி செய்து திருத்துவோம் என்பார் நல்லவர்கள், தலைவலி கொடுப்போம் என்பார் பெரியாரை மதிக்காத ஒற்றுமை எத்ரிகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by AbdulKader (Abu Dhabi) [18 October 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11256

அஸ்ஸலாமு அழைக்கும்.... சகோ.. ஷாஹுல்ஹமீத் (HK) அவர்களே...

நான் ஒன்றும் தவறாக எழுதவில்லையே?!! ஒருவேளை "அடுத்த அறிக்கையை உடனே தயார் நிலையில் வைத்திருங்கள்." என்பதை நீங்கள் தவறாக புரிந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்!?!?

நான் "அறிக்கையை" என்ற இடத்தில் "பதிலை" என்று எழுதியிருக்கவேண்டும்... (சாளை நவாஸ்ஸின் கருத்துக்கு பிறகு என்னிடைய்ய கருத்தின் அருத்தம் மாறிவிட்டது!) சிறு தவறு ஏதும் நடந்து விட்டதோ!!!???

MAK ஜெயினுல் ஆப்தீன் அவர்களே.... என்னுடைய்ய கருத்தில் வரம்பு மீறுதல் இருந்தால் சொல்லவும். நான் என்னை திருத்திக்கொள்வேன்! தவறு என்றால் மன்னிப்பும் கேட்க வெட்கப்படமாட்டேன். யாருடைய மனதையும் என்னுடைய கருத்து புண் படுத்தக்கூடாது என்பதில் நான் மிக தெளிவாக இருக்கிறேன். உங்களின் பதிலை எதிர்பார்த்தவனாக......

வஸ்ஸலாம்
அப்துல்காதர்(பாதுல்அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by Palayam MAC (Kayalpatnam) [18 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 11257

"தம்பி நேற்று நீங்கள் எங்கு இருந்தீர்கள் ? ஊரிலா அல்லது சிங்கையிலா ? அமைதியாக வாக்களிப்பு நடந்த நேரத்தில் , அராஜகம் எங்கிருந்து வந்தது என்பது எங்களுக்கும் தெரியும் . மிகவும் உறுதியான சாட்சிகளுடந்தான் இதை சொல்கிறேன் . ஒரு பள்ளியில் , பெண்கள் அமைதியாக வாக்களித்த நேரத்தில் , உங்கள் ஆதரவு வேட்பாளர் அங்கு சென்று , அங்குள்ள பெண்களிடம் " அராஜகமாக " நடந்து கொண்டது , அனைவரும் அறிந்தது . மொபைல் போன் கேமராவில் இது பதிவாகி விட்டது ". comment ref 11247

தயவுசெய்து அந்த வீடியோ காட்சியை நாங்கள் பார்ப்பதற்காக வெலிடமுடியுமா. உண்மை என்னவென்று எல்லோரும் தெரிந்து கொள்ளலாம்.

சதுக்கை தெருவில் வைத்து சகோதரி ஆபிதா அவர்களை பல பெண்கள் சூழ்ந்துகொண்டு கண்ணியமற்ற, எழுத முடியாத வார்த்தைகளால் , தனிப்பட்ட விமர்சனங்களால் திட்டி இருக்கிறர்கள். நீங்களே உங்கள் தெருவில் இது பற்றி விசாரித்து தெரிந்து கொள்ளலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by MS MOHAMMED LEBBAI (dxb) [18 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11258

அஸ்ஸலாமு அழைக்கும் அன்பின் சகோதரர் ஜைனுலபீன் அவர்களுக்கு ,,,,,,,,,,,,, tooooooooooo late ,,,,,,,,,,,,,,, கொஞ்சம் முந்தியிருந்தால் இத்தனை பிரச்சனை வந்திருக்காது;;;;;; சரி கைர்,,,,,,,,,, நடந்தவை நடந்துவிட்டது ,,,,,,,,,,,,,,,, நடப்பவை நல்லதாக இருக்கட்டும்,,,,,,,,,, அனைத்தும் அறிந்தவன் இறைவன் ஒருவனே,,,,,,,,,,,, அல்ஹம்துலில்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by mohamed abdul kader (dubai) [18 October 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11259

அஸ்ஸலாமு அலைக்கும்.

Comment Reference Number: 11248

( அனைத்து பொதுநல அமைப்புகளும் ஒன்றினைந்து தேர்ந்தெடுத்த ஒருவரை காக்கும் கரங்கள் மட்டும் ஆதரிக்காமல் இருந்தால் காக்கும் கரங்களுக்கு நல்ல பெயர் கிடைத்து விடுமா? )

ஜெயினுல் ஆப்தீன் காக்கா அவர்களே நிச்சயமாக சொல்லமுடியும் தாங்களுக்கு நல்ல பெயர் மற்றும் தாங்கலின் காக்கும் கரங்கள் மன்றத்திற்கு நல்ல மரியாதையும் கிடைதிருக்கும்.யாரும் காக்கும் கரத்தினை விமர்சனம் செயதிருக்கமாட்டர்கள்.

எதிர்த்து போட்டி இட்ட சகோதரியும் நம் சகோதரிதான் என்பதை மறந்து விட்டீர்கல்போலும்.

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by OMER ANAS (DOHA QATAR) [18 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 11261

ஆப்தீன் விளக்கம் அருமை தொடரட்டும் உங்கள் பணி!!!விளக்கு S M A .அருமையான விளக்கம். ஆனா எவ்வளவு விளக்கிச்சொன்னாலும், ........?

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by MOHAMED ISMAIL (Chennai) [18 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 11263

Belated response. Unacceptable reason. Why he alone has been asked to conclude the speech in three minutes, while others let free to take their own time?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by KMT Shaikna Lebbai (Singapore) [18 October 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 11264

ஆமா காக்கும் கரங்கள்ன்னு பேரு வச்சிக்கிட்டு பின்னாடி ஒரு இளைஞர் பட்டாளத்தை கூட்டி வச்சிக்கிட்டு, அவர்களுக்கு கல்வி அறிவு மார்க்க அறிவு சமுதாய அறிவு எல்லாவற்றையும் போதிப்பதை விட்டு விட்டு அவர்களையும் உங்கள் பின்னாடி நின்று யாரோ ஒருவருக்கு வால் பிடிக்கும் வேலையை செய்வது நியாயமா? உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் இருந்து கொள்ளுங்கள், மற்ற இளைய சமுதாயத்தை வழி கெடுக்க வேண்டாமே?

YUF இயக்கம் இந்த பாகுபாடின்றி எல்லோராலும் மதிக்கபடுகின்ற இயக்கம். தப்பு யார் மீதிருந்தாலும் பொருத்து போங்கள். ஊதி பெரிதாக்கி விட வேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by Eassa Zakkariya (Jeddah) [18 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11271

அன்பு ஜைனுலாப்தீன் அவர்களின் விளக்கம் மனதிற்கு இதமாக பக்குவுதுடன் இருகிறதே ? எல்லாம் நன்மைக்கே: என் பாகத்திலிருந்து வார்த்தைகள் தடிதிருக்குமேயானால் மன்னிப்பு நல்க வேண்டுகிறேன் ; மன்னிபீர்கள் என நம்புகிறேன்

"மனிதன் தன்னைதானே சுய மதிப்பீடு செயிகின்ற நேரத்தில் எவ்வளவு பலஹினமனவான்"

"ஒரு சமூக சிந்தனையாளன் எல்லா வற்றையும் கடந்து சிந்திக்கிறான்"

எல்லாம் அவன் நாட்டப்படி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by omar (riyadh) [18 October 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11277

காக்கும் கரங்கள் காயல் ஆணவ , ஆதிக்க கும்பலின் கரங்களாக செயல்பட்டது .அது காயல் மக்களை தாக்கும் கரங்களாக மாற அனுமதிக்க கூடாது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by Shahul Hameed (Hong Kong) [18 October 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 11280

அப்துல் காதர் (பாதுல் அஷ்ஹாப்) அவர்களே!

அப்துல் காதர் என்று நான் குறிபிட்டது உங்களை அல்ல. S .A .K முஹியதீன் அப்துல் காதர் அவர்களை. நான் சொன்ன கருத்து "S .A .K முஹியதீன் அப்துல் காதர் அவர்களும் காக்கும் கரங்கள் அமைப்பும் இந்த வலைதளம் தவிர்த்து அவர்களுக்குள் கடிதம் மூலமாகவோ அல்லது நேராகவோ பேசி இருந்தால், இவ்வளவு பிரச்சினை வந்து இருக்காது" என்பது தான்.

நான் வெறும் அப்துல் காதர் என்று குறிப்பிட்டதில் இத்தனை குழப்பம். இதை போல தான் பல நேரங்களில் புரிந்து கொள்வதில் நேரும் சிறு சிறு இடர்ப்பாட்டால் பெரும் பிரச்சினையாக மாறி விடுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by Refai (Dar Es Salaam) [18 October 2011]
IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 11290

Dear S.A.K

My 1st comment for Dxb zain not for you or Kakkum Karangal.

Hope you understand and all the best for your social service.

Thank you


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by Mukthar (Hong Kong) [18 October 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 11294

Comment Reference Number: 11263

அஸ்ஸலாமு அலைக்கும்...

சகோதரர் முத்து இஸ்மாயில்

தாங்கள் மீண்டும் அறிக்கையை நன்றாக படித்து விட்டு உங்கள் கருத்தை பதியுங்கள்... வஸ்ஸலாம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by Mohamed Abdul Kader (Al Khobar) [18 October 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11299

பாளையம் காக்கா அவர்களே,

தாங்கள் கேமரா வின் வீடியோ கிளிப் எல்லோருக்கும் அவர்களின் ஈமெயில் அனுப்புங்கள்.

அப்பொழுதுதான் உன்மையான காயல்பட்டினம் பாபா ராம் தேவ் மக்களால் அடையாளம் கொள்ள முடியும்.

யார் ஜெய்தாலும் நம்ம பிள்ளை தான் என்ற மனோபக்குவம் எல்லோருக்கும் வர வேண்டும். பெரியவர்களை மதிக்கவும் வேண்டும். ஊருக்கு கட்டுப்பட்டு நடக்கவும் வேண்டும். நான் சம்பாதித்து விட்டேன் என்கிற தலைகனம் நம்மை போன்றே இளைனர்களுக்கு ஒரு பொழுதும் வரக்கூடாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by NIZAR.A.L. (kayalpatnam) [18 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11304

SAK அவர்கள் சில மேடைகளில் பேச அழைத்து சரியான நேரம் கொடுக்காமல் செய்வது அவர்கள் மனதை காயபடிதிஉள்ளது. காக்கும் கரங்கள் மேடையில் வேறு எந்த உள்நோக்கமில்லை. வரையறைக்கு உட்பட்ட நேரத்தில் கூட்டத்தை முடிக்கவேண்டும் என்பதுதான் பிரச்சனை.எனவே நடந்தது எதார்த்தமே.மேட்டரை முடித்துவிடலாம்.எல்லாம் நன்மையாக அமைய வல்லவனை நாடுவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by yahya mohiadeen (cholukkar street) (dubai) [18 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11307

காயல்பட்டணம்.காம் மற்றும் எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) ஆகியோர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். இச்செய்திக்குத் தொடர்பான, அக்டோபர் 15 அன்று வெளியான (http://www.kayalpatnam.com/shownews.asp?id=7380 ) அறிக்கைக்கு சிறு விளக்கம் தர வேண்டுகிறேன்.

அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் YUF சங்கத்தினரால் தரப்பட்டதா அல்லது உங்களில் யாருடனோ அவர்களின் மனக்குறையை சொல்லியபோது அதனை அறிக்கையாக வெளியிட்டீர்களா?

ஏனெனில், பொதுவாகவே இது மாதிரி அறிக்கைகள், பொதுநல அமைப்புகளிலிருந்து பெற்று இவ்வலைத்தளத்தில் வெளியிடும்போது, அவ்வமைப்புகளின் லெட்டர் ஹெட்-ல் அதன் முத்திரையுடன் வெளியிட்டு இத்தளத்தின் நம்பகத் தன்மையை பாதுகாப்பீர்கள். ஆனால், இங்கே மிகவும் மாறுபட்டிருக்கிறதே.

அறிக்கை தந்தவர் தனி நபரானால் விளக்கம் தேவைபட்டிருக்காது. 1967 ம் ஆண்டு துவங்கி 1968 ம் ஆண்டு அரசு பதிவுபெற்று (பதிவு எண் 18) இன்றுவரை பல சேவைகளை ஆற்றிவரும் ஒரு முன்னணியின் செயலர்.

இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களில் ஜனாப் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் அவர்கள், எம்முன்னணியின் நிறுவனர்களில் ஒருவர். சகோதரர் அப்துர்ரஷீது (அவ்லியா) அவர்கள் எம்முன்னணியின் செயல் வீரர்களில் ஒருவர்.

இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள வாசகங்கள், உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னணியின் அபிமானிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் நெருடலைத் தருகின்றன.

எனவே, இச்செய்தி பெறப்பட்ட விதத்தை சற்று விளக்கினால் நன்று.

(மேற்கண்ட அறிக்கையின் இறுதியில்

"மிகவும் காயப்பட்ட மனதுடன்,
உங்கள் அன்பு YUF செயலர்,

(ஒப்பம்)
எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர்."


என்ற வரிகள் இடம்பெற்றிருப்பதை நினைவூட்டுகிறேன்)

Moderator: “காக்கும் கரங்கள் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட இக்கூட்டம் குறித்து ஓர் அறிக்கை உள்ளது... அதனை உடனடியாக உங்கள் வலைதளத்தில் வெளியிட வேண்டும்” என்று கோரி எம்மிடம் அறிக்கை தரப்பட்டது.

“தனி நபராக இக்கருத்தை தாங்கள் தெரிவிக்க விரும்பினால் அதை comments பகுதியிலேயே வெளியிட்டுக்கொள்ளுங்கள்! செய்தியாகத்தான் வெளியிட வேண்டும் என்று கோரினால், தங்கள் அலுவலக லெட்டர் பேடில், கையொப்பமிட்டு, அலுவலக முத்திரையுடன் தந்தால் மட்டுமே வெளியிட இயலும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி அவர்களால் தரப்பட்ட பின்பு, “மீண்டும் ஒன்றுக்கு பலமுறை யோசித்துக்கொள்ளுங்கள்! செய்தி வெளியிடப்பட்ட பின்னர் அதை நீக்கம் செய்வதற்கு வாய்ப்பில்லை... ஒருவேளை தாங்கள் இச்செய்தி குறித்து ஏதேனும் மாற்றமோ, நீக்கமோ செய்ய விரும்பினால், மீண்டும் தங்கள் அலுவலக லெட்டர் பேடில், அலுவலக முத்திரையுடன் அறிக்கையாகத்தான் தர வேண்டும்!” என்று நாம் தெரிவித்தோம்.

இவ்வனைத்து விதிமுறைகளையும் மதித்தே இளைஞர் ஐக்கிய முன்னணி செயலர் அவர்கள் நம்மிடம் கடிதம் தந்துள்ளார். அவரது விருப்பத்தின் பெயரிலேயே வெளியிடப்பட்டுள்ளது.

இருக்கும் செய்திகளை வெளியிடவே இன்னும் நேரம் தேவை என்ற நிலையிருக்க, செய்திகளையும், அறிக்கைகளையும் தேடி அலைந்து பெற்று வர வேண்டிய நிலையில் இவ்வலைதள குழுமம் இல்லை என வாசகர்களின் அன்பான கவனத்திற்கு அறியத்தரப்படுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. இதை ஏன் கவனிக்கவில்லை யாரும்?
posted by Seyed Ibrahim (Kayalpatnam) [19 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11312

சகோதரர்களே, கக்கும் கரங்கள் அழைப்பின் பேரில்தான் இளைஞர் ஐக்கிய முன்னணி செயலர் உரையாற்ற சென்றிருக்கிறார். ஒருவேளை அவர் அழைக்கப்பட்ட நேரத்தை விட தாமதமாக வந்திருந்தாலும், கூட்டமும் அறிவிக்கப்பட்ட நேரத்தில் துவங்கவில்லைதானே?

சரி போகட்டும்! வந்தவரை பேச வைக்க வாய்ப்பே இல்லையென்றால் கூட அதை நளினமாகச் சொல்லியிருக்கலாமே?

ஐக்கியப் பேரவையின் வேட்பாளரை ஆதரித்து பேசச் சென்ற என்னை மரியாதைக்குரிய சகோதரர் அப்துர்ரஷீது (அவ்லியா) அவர்களும், ஜனாப் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் காக்கா அவர்களும், “உன்னை யார் பேச அழைத்தது? முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் பேசிய பின்பு நீ பேசுவது முறையா?? என்று கேட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார். இதுதான் அழைக்கப்பட்ட ஒருவரை கண்ணியப்படுத்தும் முறையா? அத்துடன், செய்தியில் இவ்வளவுதான் உள்ளது. அதற்குப் பிறகு நடந்தவற்றை நான் தெரிவிக்கிறேன். உண்மைதானா என்று கக்கும் கரங்கள் தலைவர் விளக்கம் தரட்டும்!

“நான் கக்கும் கரங்கள் தலைவர் தம்பி ஜெய்னுல் ஆப்தீன் அழைத்ததால்தான் வந்துள்ளேன். அழைக்காத இடத்திற்கு ஒருபோதும் நான் வந்ததில்லை” என்று அவர் தெரிவித்தவுடன், “யார்ட கேட்டுட்டு நீ இவனை அழைத்தாய்?” என்று மரியாதைக்குரிய அவ்விருவரும் கக்கும் கரங்கள் தலைவர் ஜெய்னுல் ஆப்தீனிடம் கேட்டிருக்கிறார்கள். ஆகா, சூப்பர்! ஒரு பொதுக்கூட்டத்தை இப்படியல்லவா நடத்த வேண்டும்?

நான் தெரியாமல்தான் கேட்கிறேன். “கக்கும் கரங்கள் நடத்திய கூட்டத்தில் பேரவைக்கு என்னப்பா சம்பந்தம்? ஏன் அதையே இழுக்கிறீங்க? என்று சொல்பவர்களே! மேலே உள்ள பத்தியைப் படித்துவிட்டு சொல்லுங்கள் உண்மையிலேயே இது கக்கும் கரங்கள் நடத்திய கூட்டம்தானா அல்லது அந்தப் பெயர் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்று! கக்கும் கரங்கள் நடத்திய கூட்டம்தான் அது என்றால், “யார்ட கேட்டுட்டு நீ இவனை அழைத்தாய்?” என்று எப்படி கேட்கலாம்? அதைக் கேட்ட பின்னாடியும் அவங்க எழுதித் தர்றதையெல்லாம் அறிக்கையாக விடுகிறாரே கக்கும் கரங்கள் தலைவர்? இதுவல்லவா அமைப்பு? இவங்களைப் பார்த்து அல்லவா பாடம் படிக்கனும் ஒரு அமைப்பை எப்படி நடத்துறது என்று?

அது போகட்டும்! கக்கும் கரங்கள் அமைப்பின் தலைவர் இந்த வெப்சைட்டில் எந்தக் கருத்து தெரிவித்தாலும், அவருடைய பெயரைப் போட்டு அமைப்பின் பெயரையும் போட்டு, அதன் தலைவர் என்று போட்டுதான் இதுவரை கருத்து வெளியிட்டு இருக்கிறார்.

தனது தனிப்பட்ட கருத்தைக் கூட அமைப்பின் பெயரில், அதிலும் குறிப்பாக ஆத்திரத்தில் சில வார்த்தைகளைக் கக்கி, அவ்வளவு “பக்குவமாக” செயல்படுபவர்தான் கக்கும் கரங்கள் அமைப்பின் தலைவர். அவ்வளவு பக்குவமான அமைப்புதான் கக்கும் கரங்கள் அமைப்பு.

அது சரி... இந்தக் கூட்டத்திற்கு மேடை அமைப்பு, டெகரேஷன், சவுண்ட் சர்வீஸ், நோட்டிஸ், சேர் வாடகை, சுத்தப்படுத்துவது, ஆட்டோ பிரச்சாரம் என பல வேலைகளுக்கும் சேர்த்து ஒரு முப்பதாயிரமாவது செலவாகியிருக்குமே? ஒரு வேட்பாளரை ஆதரிப்பதற்கு நடத்தப்பட்ட இக்கூட்டத்திற்கு உண்மையிலேயே செலவு செய்தது கக்கும் கரங்கள்தானா? அதற்கு அவர்களிடம் என்ன வரவு உள்ளது? என்ன செலவு உள்ளது? தெரிவிப்பாங்களா? கேக்குறவன் கேணையனா இருக்கும் வரை கேப்பையில் தேன் வடியுதுன்னு சொன்னாலும் கூட சிலர் நம்புவர்கள். அதை விமர்சனம் செய்பவர்களை ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என்று சொல்லுவார்கள்.

ஒருபக்கம் தவறான நடவடிக்கைகள் கணக்கின்றி நடந்துகொண்டிருக்கும். அதைக் கண்டிக்க அந்த கமிட்டியில்தான் நாதியில்லை. குறைஞ்சபட்சம் ஒரு காயலனாக அதை வெளிப்படுத்துவது கூட குற்றம் என்றால், அந்தக் குற்றத்தை ஒவ்வொரு காயலனும் செய்ய வேண்டும் என்பது என் கருத்து.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. காக்கும் பேரவை!!
posted by Salai.Mohamed Mohideen (USA) [19 October 2011]
IP: 68.*.*.* United States | Comment Reference Number: 11317

எனக்கு ஒரு சிறு ஆச்சர்யம். ஊரில் எத்தனையோ அமைப்புகள் ஆண்டுகாலமாக சமுக சேவையில் அமைதியாக ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் கூட யாருக்கும் ஆதரவு வேண்டி பொது கூட்டம் நடத்தியதாக தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் தோன்றிய காக்கும் பேரவைக்கும் மட்டும் எப்படி இவ்வளவு பெரிய அளவில்... அதுவும் இது ஒரு பொது சேவைக்கு கூட்டிய கூட்டம் கூட அல்ல... ஜஸ்ட் லோக்கல் முனிசிபாலிட்டி தேர்தல்க்கு இவ்வளவு பெரிய கூட்டம். சிரிப்புதான் வருகிறது.

காக்கும் கரங்களின் குறிக்கோள் தான் என்ன????? பேரவை ஏற்கனவே மக்களின் செல்வாக்கை இழந்து... கேவலம் ஒரு தேர்தலில் தான் நினைத்ததை சாதிக்க வேண்டி.... பொது வேட்பாளர் வெற்றி பெற வைப்பதற்க்கு... எவ்வளவோ கேடு/தரம் கேட்ட செயல்களில் (பணம், கள்ள வோட்டு, கள்ள சாராயம், சென்னை டு காயல் ப்ரீ பஸ், போட்டி வேட்பாளரை முடிந்த வரை எல்லா இடத்திலும் கேவலபடுதியது) ஈடுபட்டு ஊரை அசிங்க படுத்தி அரசியல் மற்றும் பண பலம் கொண்டு ஜனநாயகத்தை சாகடித்த ஜாம்பவான்களிடம் இந்த கரங்களும் கரை பட்டு விட்டதோ என்று நினைக்க தோனுகிறது.

ஊரை காக்க வேண்டிய கரங்கள்... கடைசியில் பொது வேட்பாளர் தேர்தலில் மூக்கறுபட்ட பொது மக்களால் கைவிட பட்ட... ஊரை ரண்டு துண்டாக ஆக்கிவிட்டவர்களை காக்க புறப்பட்டது வருத்தம் அளிக்கிறது. இப்போது காக்கும் கரங்களும் தேவை இல்லாத பிரச்னையில் பலிகடா ஆக்கப்பட்டு விட்டார்கள்.

யாருக்கு தெரியும்... பணம் பாதாளம் வரை பாயும். அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்!! அவனே எல்லாவற்றிக்கும் சாட்சியாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by Mukthar (Hong Kong) [19 October 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 11320

அஸ்ஸலாமு அலைக்கும்... என்னுடைய Comment Reference Number: 11294 - ல் சகோதரர் முஹம்மத் இஸ்மாயில் என்பதற்கு பதிலாக முத்து இஸ்மாயில் என்று தவறுதலாக பதித்துள்ளேன்.... அட்மின் அவர்களே அதை திருத்தி கொள்ளவும்...

வஸ்ஸலாம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by yahya mohiadeen (cholukkar street) (dubai) [19 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11322

காயல்பட்டணம்.காம் மற்றும் எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) ஆகியோர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். உங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி.

உங்கள் விளக்கத்தில், "இவ்வனைத்து விதிமுறைகளையும் மதித்தே இளைஞர் ஐக்கிய முன்னணி செயலர் அவர்கள் நம்மிடம் கடிதம் தந்துள்ளார். அவரது விருப்பத்தின் பெயரிலேயே வெளியிடப்பட்டுள்ளது" என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த கடிதத்தை பதித்து, செய்தியை திருத்தி வெளியிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [19 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 11328

This refer to comment # 11241

I knew Mr. S.A.K. Mohideen Abdul Kader for the last 45 yrs. In short I knew him well before you were born. He is not a kind of person who does things for fame. He is one of the genuine social workers around. He is a down to earth soul. When I heard that he was hurt, I knew immediately that something went wrong.

I have clearly stated in my previous comment that I spoke to him in person regarding his grievance and I understood from our conversation that he has no ill-feelings toward "காக்கும் கரங்கள்" . He requires no apology from "காக்கும் கரங்கள்" (as suggested by some with good faith).

"It went out of their control" (My comment # 11093)

I believed the meeting was conducted by “காக்கும் கரங்கள்” and is supposed to be controlled by its leader/ president.. . But it was obvious that, "It was not the case". People who attended the meeting know very well, "who called the shot".

I also mentioned that "It is my understanding that the meeting (of "காக்கும் கரங்கள்') was allowed to be High-jacked by an infamous person".

Now you (Author of comment # 11241) want to know who that “Infamous person" is? Well I do not have to reveal everything we discussed in our (private) conversation and it is not my style to name such people. If you have strong back bone, you may ask Mr. S.A.K. Mohideen Abdul Kader to find out who that person was.

According to Mr. S.A. K., he was given 3 minutes, but not allowed complete that 3 minutes. Mr. Zainul Abudeen (காக்கும் கரங்கள்) says he (Mr. S.A.K.) spoke for about 10 minutes.

Now you tell me whom to believe? Should I believe a person whom I have known for 45 years or a person I hardly knew?

Moreover you are advising me to get the answer for my comment (11093) from News Id # 7392. Read my comment carefully. I am not looking for any answer. I have nothing to explain to the readers. I have simply typed my understanding about the issue. The readers know exactly what I said. They have enough grasping power.

If you fail to understand, again I say "Get real". "Get in touch with real people". Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATINAM) [19 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11331

"காக்கும் கரங்கள்" நடத்திய பொதுக்கூட்டம் உண்மையிலேயே அந்த அமைப்பு நடத்தியதுதானா...? அல்லது அந்த அமைப்பை கேடையமாக வைத்துக்கொண்டு ஐக்கியபேரவை போட்ட நாடகமா..?என்று இங்கு சில வாசகர்களால் கேட்கப்பட்டிருக்கிறது.

உண்மையில் இது நியாயமான கேள்வியே. இன்றைய நிலையில் ஒரு பொதுக்கூட்டம் போடுவதற்கு எறத்தாழ இருபத்து ஐந்தாயிரம் ரூபாய் செலவாகும். காக்கும் கரங்கள் அமைப்புக்கு இவ்வளவு நிதிவசதி இருக்கிறதா? அப்படியே இருந்தாலும் யாரோ ஒரு வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு இவர்கள் இவ்வளவு பணத்தை செலவழிக்க வேண்டிய அவசியம் என்ன? என்பன போன்ற கேள்விகள் யார் மனதிலும் எழுவது இயல்பே.

ஆனால் நான் கேள்விப்பட்டவரை ஒரு முக்கிய பிரமுகரை மேடையேற்ற ஐக்கியபேரவையின் பெயர் தடையாக இருக்கிறதென்றும் எனவே வேறு அமைப்பின் பெயரில் இந்த கூட்டத்தை நடத்தினால் அந்த பிரமுகர் சஞ்சலம் இல்லாமல் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்பதால் காக்கும் கரங்கள் பெயர் உபயோகிக்கப்பட்டதாகவும் தகவல்.

இது எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்று எனக்கு தெரியாது. அப்படி இருந்தாலும் பெயரை கடன்"கொடுக்கும் அமைப்புதானா..... காக்கும் கரங்கள் அமைப்பு என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் தெளிவு படுத்தவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. அவதூறு
posted by Solukku M.I. Seyed Mohamed Sahib (SMI) (Jeddah, KSA.) [19 October 2011]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 11334

"""காக்கும் கரங்களின் குறிக்கோள் தான் என்ன????? பேரவை ஏற்கனவே மக்களின் செல்வாக்கை இழந்து... கேவலம் ஒரு தேர்தலில் தான் நினைத்ததை சாதிக்க வேண்டி.... பொது வேட்பாளர் வெற்றி பெற வைப்பதற்க்கு... எவ்வளவோ கேடு/தரம் கேட்ட செயல்களில் (பணம், கள்ள வோட்டு, கள்ள சாராயம், சென்னை டு காயல் ப்ரீ பஸ், போட்டி வேட்பாளரை முடிந்த வரை எல்லா இடத்திலும் கேவலபடுதியது) ஈடுபட்டு ஊரை அசிங்க படுத்தி அரசியல் மற்றும் பண பலம் கொண்டு ஜனநாயகத்தை சாகடித்த ஜாம்பவான்களிடம் இந்த கரங்களும் கரை பட்டு விட்டதோ என்று நினைக்க தோனுகிறது. """"

"""யாருக்கு தெரியும்... பணம் பாதாளம் வரை பாயும். அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்!! அவனே எல்லாவற்றிக்கும் சாட்சியாளன். """" - posted by Salai.Mohamed Mohideen (USA) [Wednesday, October 19, 2011]

ஒரு வழியாக தேர்தல் முடிந்தது, இப்போதே சில நல்லவர்கள் இருவகையான கருத்துக்களை தயார்செய்து வைத்திருப்பார்கள், சார்ந்தவர் வெற்றியை இழந்திருந்தால் அதற்க்கு எதிரணியின் கள்ள ஓட்டும், பண நாயகமும்தன் என்றும், வெற்றிபெற்றுவிட்டால் அதற்கும் எதிரணியின் சர்வாதிகாரத்தின், ஒற்றுமையின் தோல்வி என்றும் இது வழமையில் உள்ளதுதான்.

ஆனால் மது விளம்பப்பட்டது ஐக்கிய பேரவை என்பதாக எழுதி இருக்கிறார், இப்போது ஊரில் எது நடந்தாலும் அதற்க்கு காரணம் ஐக்கிய பேரவைதானா?, அன்று மழை தூரியதும் அவர்களால்தானோ?. மது விநியோகம் நடைபெற்றிருந்தாலும் அதற்கும் ஐக்கிய பேரவைக்கும் என்ன சம்பந்தம்?.

மாற்று மத சகோதரர்களும் போட்டியில் இருக்கின்றார்கள் அவர்கள் தங்களுடைய வெற்றிக்காக விநியோகம் செய்திருந்தால் அதற்கும் ஐக்கிய பேரவைதான் காரணமா?. அல்லது ஐக்கிய பேரவையின் நிர்வாகம்தான் தூண்டியது என்று தகுந்த ஆதாரத்துடன் பதிவு செய்தால் நாங்களும் சேர்ந்து எதிர்போம் இல்லையா?

எங்கெங்கோ இருந்துகொண்டு யார் யாரோ சொல்வதை கொண்டு மற்றவரின் மீது அவதூறு கூறுவது நல்ல முக்மீனுக்கு அழகா. எதெற்கெல்லாம், எடுத்ததற்கெல்லாம் மார்க்கத்தில் ஆதாரம் காட்டும் நாம் ஒருவரின் மீது அவதூறு கூறும் போது மட்டும் நம் உள்ளதை மார்க்கத்திலிருந்து திருப்பிகொள்வது அனுமதிக்கப்பட்டதோ? அல்லது மது வழங்கப்பட்டது ஐக்கிய பேரவைதான் என்று தகுந்த ஆதாரத்துடன் பதிவு செய்யுங்கள் நாங்களும் சேர்த்து எதிர்க்கிறோம்.

அல்லாது எதிரணியை தாக்க எப்படிவேண்டும் என்றாலும் சொல்லலாம் என்று நமது மதிக்கு திரையிட்டுக்கொண்டு எழுதினால் அதன் விளைவு நமக்கே வந்து சேரும், அல்லது நீங்கள் சொன்னது போல் மதுவை விநியோகித்தது எந்த முஸ்லிமாக இருந்தாலும் அவர்களுக்கு இறைவனின் சாபம் உண்டாகட்டும், அதுபோலவே அதாரம் இல்லாமல் அவதூறு கூறும் நபர்கள் மீதும் அல்லாஹ்வின் கோபம் உண்டாகட்டும் அவர்களின் குற்றசாட்டுகள் பொய்யாக இருந்தால், ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by NOOHU SAHIB (DUBAI) [19 October 2011]
IP: 80.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11337

தயவு செய்து இளைஞ்சர் ஐக்கிய முன்னணி கடிதத்தை வெளியுடவும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by MAK.JAINULABDEEN.(president,kaakkum karangal narpani mandram) (kayalpatnam) [19 October 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 11340

அஸ்ஸலாமுஅலைக்கும்.

காக்கும்கரங்கள் மாத சந்தா வைத்து இயங்கக் கூடிய அமைப்பு அல்ல. ஏன் என்றால் எங்கள் அமைப்பில் உள்ளவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள்.அதனால் அவர்களிடம் வாங்கமுடியாது. வெளிநாடுகளில் உள்ள எங்களுடைய உறுப்பினர்களும், ஊரில் தொழில் செய்துகொண்டிருக்கும் நானும்,ஒன்றிரண்டு சகோதரர்களின் ஒத்துழைப்புடன் தான் எங்கள் காக்கும் கரங்கள் இயங்கி கொண்டிருக்கிறது.அல்ஹம்து லில்லாஹ்.

ஊரின் நலனுக்காக 25000 ,30000 என்ன?அதற்கு மேலும் செலவு செய்யக் கூடிய சக்தியை ரப்புல் ஆலமீன் அல்லாஹ் எங்களுக்கு தந்திருக்கிறான். அல்ஹம்து லில்லாஹ்.நான் இதை பெருமைக்காக சொல்லவில்லை.யாரையும் திருப்தி படுத்துவதர்க்காகவும் சொல்லவில்லை. யாரையும் திருப்திப் படுத்தவும்,பதில் சொல்லவும் தேவையும் எங்களுக்கு இல்லை.

எங்களுடைய அறிவுக்கு எது சரி என்று தெரிகிறதோ அதை முழுமையாக செய்வோம்.யார் நல்லது செய்தாலும் அதை குறை கூறும் வல்லுனர்கள், நல்லவர்கள் இருக்கத் தான் செய்வார்கள்.அதையெல்லாம் பார்த்தால் உலகத்தில் ஒரு நல்லதும் நடக்காது.எல்லாம் அறிந்தவன் அல்லாஹ்.அவனே மிகப் பெரியவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by Mohideen(Durai) (Abu dhabi) [19 October 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11341

ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் ஆகையால் தயவு செய்து நம்ம பிரச்சனைகளை மற்றவர்களுக்கு தெரியபடுதுனா யாருக்கு நட்டம் .

மொஹிடீன் (துரை)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. Re:பட்டால் தெரியும்!!!.
posted by OMER ANAS (DOHA QATAR.) [19 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 11351

தம்பி ஜெய்னுல் ஆப்தீன்!!! உங்கள் வேலை நிறைய இருக்கும் போது,௦௦ ௦ஜீரோ வாட்ஸ் பல்பான இவர்களுக்கு எல்லாம் தம்பி நீ பதில் சொல்வது சரியாக எனக்கு படவில்லை!!! நாம் உண்மையின் வழியில் செல்வோம்!!! உங்கள் பொது சேவைகளுக்கு வாழ்த்துக்கள்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by yahya mohiadeen (cholukkar street) (dubai) [19 October 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11352

காயல்பட்டணம்.காம் மற்றும் எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) ஆகியோர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.

என் அன்பான வேண்டுகோளுக்கிணங்க செய்தியை திருத்தி வெளியிட்டிருக்கிறீர்கள் - மிக்க நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by Eassa Zakkariya (Jeddah) [19 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11355

சில உண்மைகள் நிதானமாக ; விவேகத்துடன் வெளிபடுகிறது; பல நேரங்களில் அவதூறுகள் உண்மையை போல் பலரால் சித்தரிக்கபடுகிறது ; ஆகவே அன்பு தம்பி ஜைனுல் அதைப்பற்றி கவலைகொள்ள தேவையில்லை ; தங்களில் பணிகள் விவேகத்துடன் தொடரட்டும் ; உண்மையுடன் அல்லா இருக்கிறான்;

"Half Knowledge is Worse than Ignorance"

" ஒரு விஷயத்தை அரைகுறையாக விளங்குவதைவிடவும் : அதை பற்றிய ஞானம் இல்லாமல் இருப்பது மிகவும் சிறப்பானது"

"என்னுடைய கருத்துகள் பெரும்பாலும் FIR (முதல் தகவல் அடிப்படையில்) வேகமாக இருக்கும் ; பிரதிவாதம் பொறுத்து அதனின் வேகம் மட்டுபடுததபடுகிறது ;

"மாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது" (எங்கையோ கேட்டது)

குறிப்பு :- இந்த கருத்து எந்த கருத்துக்கும் விளக்கம் அளிக்க எழுதப்பட்டது இல்லை " தாழ்மையுடன்

The Whole Mankind is Accountable Themselves ( Himself) வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [19 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11357

அஸ்ஸலாமு அலைக்கும்

Mr MAK ஜெயினுல் ஆப்தீன்,தலைவர், காக்கும் கரங்கள்

உங்கள் அன்பான """""விளக்க"" உரை படித்தேன் .அருமையானது . ''Y U F '' நிர்வாகதினர்கள்.புரிந்து கொண்டாள்.சரிதான் . ''''''''''''''''''''''''

MR சாளை. நவாஸ் .நீங்கள் ஏன் """""காக்கும் கரங்கள் """" அமைப்பை குறை கூறுகிறீர்கள் '''''' .ப்ளீஸ்.''''' ப்ளீஸ் '''''.அவர்களை நீங்கள் பாராட்டி . ஊக்கப்படுத்துங்கள் .

வஸ்ஸலாம்

K .D .N .MOHAMED LEBBAI
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
46. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by Salai. Mohamed Mohideen (USA) [19 October 2011]
IP: 63.*.*.* United States | Comment Reference Number: 11358

SMI சொளுக்கு (ஜித்தா) காக்கா அவர்களின் கருத்தை ஏற்கிறேன். ஐக்கிய பேரவை தான் இதை செய்தது என்று சாட்சியம் இல்லாமல் கூறுவதில் நியாயம் இல்லை. ஐக்கிய பேரவை என்ற வார்த்தைக்கு பதிலாக "சமுக விரோதிகள்" என்று என்னுடைய முந்திய கமெண்டில் அட்மின் முடிந்தால் மாற்றி கொள்ளவும் அல்லது படிக்கும் அன்பர்கள் மாற்றி படிக்கவும்.

நான் அறிந்த வரையில் கள்ள ஓட்டு, ப்ரீ பஸ், ஓட்டுக்கு பணம், மது போன்றவைகள்....பொது வேட்பாளர் வெற்றி பெறுவதற்காக வேண்டி செய்யபட்ட ஜனநாயக படு கொலைகள். Plz correct me if am wrong. பொதுவாக இவையெல்லாம் மற்ற ஊர்களில் நடக்கும்...நாம் செய்திகள் வாயிலா அறிவோம். ஆனால் இவைகள் நம் ஊரில் நடந்து இருப்பது மிகுந்த வருத்தத்தையும்...நமது ஊரிலா இவை அனைத்தும் என்ற வியப்பையும் தருகிறது.

இவைகளை செய்ய சொன்னது/தூண்டியது யார்...இந்த கீழ்த்தரமான செயல்களுக்கு பணத்தை வாரி இறைத்த அந்த புண்ணியவான்கள் (தரம் தாழ்த்திய மனிதர்கள்???) யார்...அவர்கள் இதன் மூலம் எதை சாதிக்க (ஊரை தங்கள் கண்ட்ரோலில் கொண்டுவர நினைக்கிறார்களோ???) நினைக்கிறார்கள் அல்லது சொல்ல வருகிறார்கள்....நிச்சயமாக இதை யார் செய்து இருந்தாலும் அவர்களின் இந்த செயல்கள் "ஒரு கேடு கெட்ட உதாரணங்கள்" என்பதில் நம் அனைவருக்கும் மாற்று கருத்து இல்லை என்று நினைக்கிறேன்.

இவையெல்லாம் யார் செய்தார்கள் என்பது கள்ள ஒட்டு போட்ட அந்த 'அன்பு கரங்களுக்கு' சொந்தக்காரர்கள், குறிப்பிட வேட்பாளர் வெற்றி பெறுவதற்காக ப்ரீ பஸ்ஸில் பயணம் செய்தவர்கள், பணம் கையூட்டு பெற்ற மகான்கள், மதுவில் மயங்கிய மன்னவர்கள்...இவர்களுக்கும், பணத்தை வாரி இறைத்த அந்த புண்ணியவான்களுக்கும் நடுவில் செயல் பட்ட இடை தரகர்களுக்கும்....இதை எல்லாம் அறிந்தும் கண்டும் காணாமல்/தடுக்காமல் இருந்த பெரியவர்களுக்கும்/அன்பர்களுக்கும் தான் இவை அனைத்தும் வெளிச்சம். உண்மை என்றாவது ஒரு நாள் வெளிவந்தே தீரும்!!

நடுநிலையார்கள் எல்லோரும் மிக நன்றாக அறிவார்கள்...போட்டி வேட்பாளர் (போட்டி வேட்பாளர் என்பதை விட...ஆபிதா அவர்களுக்கு கிடைத்த அமோக மக்கள் ஆதரவை வைத்து பார்த்தால் "மக்கள் வேட்பாளர்" என்று அழைப்பதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன்) மக்கள் மனதில் இடம் பெற்று என்றோ வெற்றி பெற்றுவிட்டார். இந்த தேர்தல் வேண்டுமானால்... முடிவுகளை மாற்றலாம் அல்லது ஒரு சிலரால் மாற்றி அமைக்க பட்டு இருக்கலாம். எது எப்படியோ யார் வெற்றி பெற்றாலும் ஊருக்கு நன்மையாக இருந்தால் நம் எல்லோருக்கும் சந்தோசமே!!. இந்த தேர்தல் தந்த பாடத்தை வைத்து இது போன்று கேடு கெட்ட சமாச்சாரங்கள்...இனி வரும் காலங்களில் நடை பெறாமல் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!!

காக்கும் கரங்கள் ஊரில் செய்வதற்க்கு எவ்வளவோ இருக்கிறது. இது போன்ற ஒரு சார்பான/சர்ச்சையான பொது கூட்டங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது என்பது தாழ்மையான வேண்டுகோள்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
47. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by MAK.JAINULABDEEN.(president,kaakkum karangal narpani mandram) (kayalpatnam) [19 October 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 11364

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோதரர் சாளை முஹம்மது முஹியதீன் அவர்களே,

1.காக்கும் கரங்களுக்கு என்ன பணி,மற்ற அமைப்புகளுக்கு என்னென்ன பணிகள் இருக்கிறது என்று அறிவாளியான நீங்கள் வரையறுத்து சொன்னால் அதன்படி செயல்பட அறிவில்லாத நாங்கள் கேட்டு செயல்படுகிறோம்.

2.காக்கும் கரங்கள் ஊரின் நன்மைக்காக எந்த பணிகள் செய்யவில்லை என்பதையும் விளக்கவும்.

3.காக்கும் கரங்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்.நண்பர் கோபப்படாமல் சொல்லவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
48. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by saha (chennai) [19 October 2011]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 11368

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரர் சாளை முஹம்மது முஹியதீன் அவர்களே தலைப்பு (YUF செயலாளர் அறிக்கைக்கு காக்கும் கரங்கள் விரிவான விளக்கம்) என்று கொடுக்கப்பட்டுல்லது நீங்கள் எளுதிய எளுத்திற்கு தொடற்பு எதுவும் இல்லை.

ஓரு கூட்டம் ஊருக்கு நன்மையாக இருந்தால் நம் எல்லோருக்கும் சந்தோசம் தாநெ அதற்கு எந்த கரங்கள் ஆகஇருக்கட்டும் நன்மையானது தான்.

தங்களின் பணிகள் வேகமாகவும் விவேகத்துடன் தொடரட்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
49. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by Refai (Dar Es Salaam) [19 October 2011]
IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 11371

அஸ்ஸலாமு அழைக்கும்

சகோதரர் M.A.K ஜைனுல் ஆபிதீன் அவர்களே உங்கள் பொன்னான நேரத்தை இந்த இடத்தில் வேஸ்டு பண்ண வேணாம்.

நமக்கு ஏதற்கு தேவை இல்லதவர்ஹளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் உங்கள் சேவை காயலுக்கு தேவை.

தொடருங்கள் உங்கள் சேவை வல்ல அல்லாஹ் வெற்றி தருவான் ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
50. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by Zainul Abdeen (DUBAI) [20 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11382

அன்பு KK President MAK Zain அவரகளே ,

துடிப்பான மாணவர்கள், இளைஞர்களை சேர்த்துக்கொண்டு நீங்கள் செய்திவரும் தொண்டு நமதூருக்கு இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியம். தூற்றுபவர்கள் தூற்றட்டும் நீங்கள் உங்கள் இலக்கை நோக்கி உங்கள் பயணத்தை செலுத்துங்கள். "சாலை" யோரம் அசிங்கங்கள், அசுத்தங்கள் இருக்கத்தான் செய்யும் , உங்கள் மீதும் வீசத்தான் செய்வார்கள் அதை நீங்கள் பொருபடுத்தாமல் நோக்கம் நிறைவேற உழைதிடுங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு உறுதுணையாக இருப்பான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
51. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by HASBULLAH MACKIE (dubai) [20 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11395

அன்புள்ள kayal அட்மின் அவர்களிடம் கேட்பது என்னவென்றால்

நீங்கள் comments reject செய்யபடுவதற்கு சில காரணங்களை சொல்லியிருக்கிறீர்கள்....

இதில் ஒன்று செய்திக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்கள் வந்தால் comments reject ஆகும் என்று.

ஆனால் இங்கே சில comments -il இந்த செய்திக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்கள் இடம் பெற்றுள்ளன ....

அதையெல்லாம் நீக்கி வெளியிடுவது தான் நல்லது ....

இந்த செய்தி தளம் இப்போது நக்கீரன் ஓர் குமுதம் range-க்கு போயி கொண்டிருக்கிறது....

இதில் மக்கள் அடைந்த நன்மை என்ன...

குற்றத்தை துருவி துருவி ஆராய்ந்து அதனை இங்கு வெளியிடுவதால் என்ன இலாபத்தை கண்டீர்கள்.. மார்க்கம் என்ன சொல்லுகிறது

இறைவனுக்கு அஞ்சி செயல் படுங்கள்.... இதை வெளியிடுபவர்கள் ஒன்னும் மகான் அல்ல....

செய்திகளில் அதிக விமர்சனங்கள் வரும் போது அதை நீக்கி விடுவது நல்லது.....

புத்தியை யோசித்து செய்தி வெளியிடுங்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
52. Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ...
posted by Administrator (Chennai) [20 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 11412

No new comments would be approved for this news item


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved