Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:48:52 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7390
#KOTW7390
Increase Font Size Decrease Font Size
திங்கள், அக்டோபர் 17, 2011
வாக்குபதிவு இன்று காலை துவங்கியது! மாலை ஐந்து மணி வரை நடைபெறும்!! (Updated)
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 12408 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (83) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 6)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி மன்றங்களுக்கான முதற் கட்ட தேர்தல்கள் இன்று (அக்டோபர் 17) காலை 7 மணிக்கு துவங்கியது. மாலை ஐந்து மணி வரை வாக்குபதிவுகள் நடைபெறும். முதல் கட்டத்தில் 9 மாநகராட்சிகளுக்கும், 60 நகராட்சிகளுக்கும், 259 பேரூராட்சிகளுக்கும், 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தேர்தல்கள் நடைபெறுகின்றன.



காயல்பட்டின நகர்மன்றதிற்கான தேர்தலும் இன்று நடைபெறுகின்றன. பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நகர்மன்ற தலைமை பொறுப்புக்கு 6 பேர் போட்டியிடுகின்றன. பிரதான போட்டி - புத்தக சின்னத்தில் போட்டியிடும் பி.எம்.ஐ. ஆபிதா மற்றும் பேரூந்து சின்னத்தில் போட்டியிடும் மைமூனத்துல் மிஸ்ரியா ஆகியோர் இடையே நிலவுகிறது.

இது தவிர - நகரில் உள்ள 18 வார்டுகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. 18 வார்டுகளில் 6 வார்டுகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டு எண் 2 க்கான உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

18 வார்டுகளிலும் சேர்த்து மொத்தம் 86 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

காயல்பட்டினத்தின் சமீக வரலாற்றில் காணாத அளவு மிகவும் கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் இத்தேர்தல் நடைபெறுகிறது.

சென்னையில் இருந்து ஏற்பாடு செய்யப்பட பல பேரூந்துகளில் வாக்காளர்கள் காயல்பட்டினம் வந்துள்ளனர். மேலும் - நகரில் பரவலாக - பண பட்டுவாடாவும் செய்யப்பட்டுள்ளது. புறநகர் பகுதிகளில் மது விநியோகம் நடைபெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

காயல்பட்டினத்தில் வாக்கு பதிவுகள் இன்று காலை 7 மணி அளவில் துவங்கின. பெரும்வாரியான வாக்குச்சாவடிகளில் தேர்தல் அமைதியாக நடைபெற்றுவருகிறது.

இருப்பினும் - தற்போதைய நிலவரப்படி - முஹைதீன் மெட்ரிகுலேசன் மற்றும் சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில், கள்ள ஒட்டு போட முயற்சிகள் நடைபெறுவதாக கூறி, அவ்வாக்குச்சாவடிகளில் பதட்டம் நிலவுகிறது.

சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளியில் கள்ள ஒட்டு போட முயன்றதாக மூன்று பெண்கள் விசாரணைக்காக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.

தீவு தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கூட வளாகத்தில் அமைந்துள்ள (வார்ட் 6 க்கான) வாக்கு சாவடியில் கள்ள ஒட்டு போட முயன்றதாக ஒருவர் பிடிக்கப்பட்டுள்ளார்.

[updated at 1:00 pm]

நகரில் Superintendent of Police மற்றும் அதிரடிப் படை ரோந்து மேற்கொண்டுள்ளனர்

[updated at 2:30 pm]

மாலை ஐந்து மணி அளவில் வாக்கு பதிவு நிறைவுற்றது. சில பகுதிகளில் - இறுதி நேரத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், token வழங்கப்பட்டது.

[updated at 5:00 pm]

புகைப்பட உதவி:
ஒய்.எம்.முஹம்மத் தம்பி,
ஏ.கே.எம். ஜுவல்லர்ஸ்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by I.M.Abdur Rahim (MADURAI) [17 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 11104

அன்பான நண்பர்களே , அஸ்ஸலாமு அலைக்கும்.

என்னே ஒரு கேவலம், இந்த வார குமுதத்தில் நமதூரை பற்றிய ஓர் சிறிய கட்டுரை : அதில் நமதூரில் போலீஸ் ஸ்டேஷன், ஒயின் ஷாப் கிடையாது என்று. அனால் இன்று , மது தருகிரார்கலாம். வேற என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறார்களோ ?? அந்த வல்லோனுக்கே வெளிச்சம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by Deen (Hkg) [17 October 2011]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 11106

Dear Admin,

Please remove these sentances - this will mislead the people and create unnecessary more tension in our native for this poling time - also our viewers will put non-sense coments on this

இருப்பினும் - தற்போதைய நிலவரப்படி - முஹைதீன் மெட்ரிகுலேசன் மற்றும் சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில், கள்ள ஒட்டு போட முயற்சிகள் நடைபெறுவதாக கூறி, அவ்வாக்குச்சாவடிகளில் பதட்டம் நிலவுகிறது.

சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளியில் கள்ள ஒட்டு போட முயன்றதாக பெண் ஒருவர் விசாரணைக்காக பிடித்து வைக்கப்பட்டுள்ளார்.

Administrator: This is an election update news. They are verified carefully before being updated


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by Mohamed Buhary (Chennai) [17 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 11108

பூத் வாரியாக வாக்குப் பதிவு படங்கள் இடம்பெறுவதை எதிர்பார்க்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by Aarif O.L.M (Lanka) [17 October 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 11109

Dear Admin : மது குற்றச்சாட்டு அத்தோட இருக்கட்டுமே ... ஏன் பிரசுரிக்கணும் அதனை எடிட் செய்திருக்கலாமே .... புற நகரில் அல்லவா நடந்துது நமதூரில் நடப்பவைகளை மட்டும் பதிவு செய்தால் நல்லது ...

பணம் பற்றுவாடா எங்கும் நடப்பவைதான் நேற்றிரவு ஒரு மார்க்க பக்தியுள்ள தனவந்தரின் வாகனமும் சிக்கியுள்ளது. No problem

இருண்டவன் கண்ணுக்கு கண்டதெல்லாம் பேயி ....

வதந்திகளை பரப்ப கோக்க்ள்ஸ் மாட்டிகிட்டிருக்காணுக சில கழுகுகள்....

வெற்றி சத்தியத்துக்கே......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:அண்டா புளுகு.
posted by OMER ANAS (DOHA QATAR) [17 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 11110

அந்தப் புளுகு!!! உண்மை இல்லை!!! இப்ப கேள்வி பட்டவரை, உங்களுக்கு தகவல் தந்த இடத்தில்தான் மூன்று குடிமக்களை பிடித்து வைத்துள்ளார்களாம்.எது உண்மையோ? அமைதியாகத்தான் ஒட்டு நடை பெறுகிறது.நாங்களும் அடிக்கடி தகவல் பெற்றுத்தான் வருகிறோம். புரளிகளை காயல் இணைய தளம் நம்ப வேண்டாம்.!!! அவசர பட்டு தகவலும் தர வேணாம்!!! இனி ஒன்றும் நடக்கப் போவதில்லை. வெற்றிக்காக நம் சகோதரிகளை காட்டிக் கொடுப்பதும். பயமுறுத்துவதும், வீணான செயல்.இது நம்ம பக்கம் திரும்ப வாய்ப்புள்ளது. கெடுவான் கேடு நினைப்பான்.இது உண்மை........!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by nahvi ibnu nahvi (abudhabi) [17 October 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11111

தயஉ பண்ணி உங்களிடம் vanduvathu காயல் நகரின் கண்ணியம் பாதுகாத்து கொள்ளுங்கள் அற்ப துன்யாவிர்காஹா ஹராமிற்க்கு துனை போகதிர்கள்

நஹ்வி இப்னு நஹ்வி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by M Sajith (DUBAI) [17 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11116

ஊர் ஒற்றுமையின் பெயரால் சீரழிக்கப்படும் சமுதாயம்.

துணை செய்யும் கண்னியவான்களே..!!

கள்ள வோட்டும், பணமும், மதுவும் யார் செய்தாலும் இது இறைவனுக்கு பொருத்தமான செயலில்லை.

இந்த தேர்தலில் ஜெயிக்க மறுமையில் தோற்றுவிடதீர்.. வரம்பு மீறுதலுக்கு சம்பந்தப்பட்டவர் மன்னிக்காதவரை மன்னிப்பில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. உஷாரையா! உஷாரூரூரூ........
posted by சதக் (இப்னு சாகிப்) (Dammam, Saudi Arabia) [17 October 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11118

வெற்றி பெருபவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

ஒன்றை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். பதவியில் இருக்கும் போது, அல்லாஹ்விற்கு பயந்து மக்களுக்கு பணி செய்யுங்கள்.

முன்பு போல் அல்லாமல், லஞ்சம் லாவண்யத்திற்கு சிறுதும் இடம் கொடுக்காதீர்கள். காயல் இளைஞர்கள் உஷராகி விட்டார்கள். நீங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவீர்கள். தவறிழைப்பவர்கள் யாராகிலும், திருந்த முயற்சியுங்கள். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கைக்கு மக்களால் ஆட்படுத்தப்படுவீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. ச்சீ வெட்க கேடு ..... தூத்தூ மானக்கேடு .....
posted by முத்துவாப்பா (அல்-கோபர்) [17 October 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11119

ச்சீ வெட்க கேடு ..... தூத்தூ மானக்கேடு ..... இன்று நமதூரில் நடைபெற்று கொண்டிருக்கும் ஜனநாயக படுகொலை கண்டு நெஞ்சம் துடிக்கின்றது .... அதுவும் பெண்கள் அதிக அளவு கள்ள ஓட்டு போடும் நிலை உருவாக்கி இருக்கிறதை பார்க்கும் பொழுது ... அவூது பில்லாஹ் ...

குத்துக்கல் தெரு வாக்கு சாவடியில் குடும்பத்து பெண்கள் ( நாகரிகம் கருதி பெயர் வெளியிடவில்லை ) மாறி மாறி கள்ள ஓட்டு போடா முயர்ந்துள்ளனர் .அதுமட்டுமல்லாமல் ஆளுக்கு பத்து கள்ள ஓட்டு போடுவோம் என்று கூக்குரல் வேறு ......

இதுதான் உங்கள் ஐக்கியமா ...? இது தான் உங்கள் ஒற்றுமையா ....? இறைவனுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள் .... இவ்வுலக பதவிக்காக மறுவுலக பதவியை இழந்து விடாதீர்கள் .

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by OMER ANAS (DOHA QATAR.) [17 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 11120

I M அப்துல் ரஹீம் சாப்

தாராங்கலாமா? அல்லது உங்களுக்கு தந்தாங்கலாமா? என்ன சாப் ஊரில் நடக்குது!!! இவ்வளவு கேவலமாக் கீழ்த்தரமாக சிந்திபோர்க்கு, உங்களை போன்றோர் மறுப்பு தெரிவிக்க வேண்டாம்! அதே நேரம் ஒரு ஓட்டுக்காக ஊரை கேவலமாக பேசும் போது உங்கள் குடும்பமும் அதில் ஒன்று என்று ஏன் நினைக்க மாட்டேன் என்கிறீர்கள்.

எங்கிருந்து வந்தோம் என்பதை விட எப்படி இருக்கிறோம் என்று பாருங்கள். அவூது பில்லாஹ் வாயை கழுவுங்கள்!!!

கேவலம் ஈமானை காட்டி கொடுப்பதை விட ஆபிதா வெற்றி பெற்றாள், என்று நாங்கள் அறிவிக்கின்றோம்.!!! எப்படியும் உங்களால் ஜெயிக்க முடியாது. இப்படியாவது. வெற்றி பெறுங்கள்.

நாங்கள் விட்டுத் தருகிறோம். !!! அட்மின் ஒடுக்கத்து புதனுக்கு,அழகா ஓலை எழுதி பரக்கத்துக்கு என்று தலையில் தடவி அழித்தது போல் இதையும் ஒரு பரக்கத்துக்கு என்று, அழித்து விடாதீர்கள். வாழ்க ஒற்றுமை வளர்க காயலை மதிப்போர்!!! இல்லை, ...............கொடுப்போர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by sulaiman (manama) [17 October 2011]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 11121

AVOODHU BILLAHI MANASHAITHANIRRAJEEM,

ASTHAGFIRULLAHL ALEEM

TWO THINGS I LEARN FROM THIS MUNICIPAL DRAMA

1-DON'T RESPECT ELDER'S DECISION

2-DON'T ACCEPT YOUTH'S SUGGESTION

ALLAH WILL SAVE ALL OUR BROTHERS N SISTERS IN ISLAM FROM ABOVE.

PLEASE AVOID DISLIKES AND AVERSION TOWARDS BOTH ELDERS AND YOUNGER

PLEASE SPREAD BROTHERHOOD,

SO MANY DAYS, SO MANY COMMENTS, FORGET EVERYTHING, EVERY HURTS, LIVE LIKE A IDEAL MUSLIM WHAT OUR PROPHET THOUGHT US, AND OFCOURSE WE WANT TO SEE THE KAYAL WITHOUT THE POLITICIAN'S INTERRUPTION.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. ரே முயற்சி எதிர் வினையாக்கும்....
posted by OMER ANAS (DOHA QATAR.) [17 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 11122

முத்துவாப்பா தம்பி,,, குத்துக்கல் தெரு குடும்ப பெண்கள்.கள்ள ஒட்டு போடா....... முயற்ச்சிதான் எடுத்துள்ளார்கள்.(உங்கள் கமாண்டை பார்க்கவும்) இதற்க்கு ஏன் சீ,சீ, துத் தூ? ......முதலில் படுத்து கொண்டு காரி உமிழ்வதை பயிற்சி செய்து பார்க்கவும். அப்ப விளங்கும் எங்கு எச்சில் விழுகிறது என்று. சரிதானா? நான் சொல்வது? ஓசை படாமல் நம்ம வீட்டில் எத்தனை கள்ள ஒட்டு போட்டார்களாம்? கேட்கலையா? இப்ப கேள்வி பட்டது. எல்லா இடங்களிலும் மக்கள் நல்ல படிதான் வாக்கு போடுகிறார்களாம் பஸ்ஸில் போய்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by zainab (kayalpatnam) [17 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 11123

அஸ்ஸலாமு அழைக்கும் ....

யார் யாரோ தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக கள்ள வோட்டு போட்டு இஸ்லாமியர்களே நீங்கள் இறைவன் நமக்கு வைக்கும் தேர்வில், ஈமானில் ,தோற்க வேண்டாம் .........

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு வீண் புடிவாதம் வறட்டு கௌரவம், சிலவற்றின் மேல் கொண்ட அபரிமிதமான ,கண்மூடித்தனமான நம்பிக்கை,மரியாத ...இவற்றை எல்லாம் விட்டு விட்டு நல்ல முமினாக,நல்ல குடிமக்களாக வல்ல இறைவனிடம் நம் அனைவரின்(ஊர் நன்மைக்கு உறுதியான ஒரு தலைவி வர்வதகு) நன்மைக்காகவும் பிரார்த்திப்போம் ...

கமன்ட் எண் :10

இப்படியாவது வெற்றியா ?? ..இந்த வெற்றிக்கு ""பாடுபட்டு"" மறுமை வெற்றியை மறந்து விடாதீர்கள் ..அது தான் நிலையானது .. உங்கள் அபிமானிகளிடம் சொல்லுங்கள் kaka ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by sulaiman (abudhabi) [17 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11124

அஸ்ஸலாமு அலைக்கும், அட்மின் அவர்கள் மது பரிமாறப்பட்டது என்ற இந்த தவறான தகவலை நீக்கவேண்டும் .கள்ளவோட் போடுவது உண்மையாக இருந்தாலும் கூட. மண்ணின் மைந்தர்கள் ஊரின் கண்ணியம் பாதுகாக ஊரில் இல்லாமல் வோட்டு போடா முடியாமல் தவிக்கின்ற எங்களைபோண்டோர்களின் வோட்டுகளைதான் எங்கள் சொந்தங்கள் போடுகிறார்கள். இப்படி போடுகின்ற (நல்ல வோட்) எங்களின் வோட்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. நெஞ்சு பொறுக்குதில்லையே !!!
posted by Salai Sheikh Saleem (Dubai) [17 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11125

நான் காயலில் பிறந்தவன் என பெருமையாக மார்தட்டிய காலங்கள் விரைவில் மறைந்துவிடும் என்ற அச்சத்தால், இது நாள் வரை ஒரு அமைப்பின் பொறுப்பில் இருந்தேன் என்பதற்காகவும், சர்சைகளில் நேரடியாக பங்கெடுக்காமல் ஆக்கப்பூர்வமாக நல்ல திறமையை பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலும் தொடங்கிய MEGAவின் பணிகளை தொடர்ந்து செய்யவும் கருத்துக்கள் ஏதும் பதியாமல் இருந்தேன்..

ஆனால் நடப்புகளை அறிந்து என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை.

மனிதன் என்ற முறையில் தவறுகள் நடப்பது தான், அதை திருத்திக்கொள்ளலாம், சிறு வருத்தம் வெளியிடலாம் இது போல ஆயிரம் வழிகள் இருந்தும் அதை மறைக்க பொய்யும் புரட்டுமாக காலம் தள்ளுவது என்ன நியாயம்.

பின்னாலிருந்து பெருந்தகைகளை (பெரும் தொகைக்காக) ஆட்டிவைக்கும் சிலர், தங்களின் முகங்களை காக்க இறைவனின் மீது சத்தியம் செய்யவும் துணிந்ததோடு, பேரவையின் பெரியவர்களை இந்த சத்தியத்துக்கு பொருப்பாளராகவும் ஆக்கிய அவலம் காயலைத்தவிர கடவுள் நம்பிக்கை இல்லாத ஊர்களிலும் நடக்காது.

இதென்ன கேவலம், காசும், கள்ள வோட்டும், மதுவும்.. இப்படி ஒரு செய்தி வெளியானதுக்கு வானத்திக்கும் பூமிக்கும் குதித்த உங்களையும் இறைவன் சாட்சியத்துக்கு நிறுத்த மாட்டானா?

தவறுகள் நடந்தால், கையாலும், வார்த்தைகளாலும் தட்டிக்கேட்கவும், குறைந்தது மனதளவிலாவது ஒதுங்க வேண்டும் என நபி(ஸல்) அவர்களின் அறிவுரைகள் என்கே? 1400 வருடம் முன் சொன்னது இப்போ செல்லது என மற்றவர் சொன்னது போல் நாமும் இருந்தால்தான் ஒற்றுமை வருமா?

என்னென்ன நாடகமெல்லாம் நடத்தியாகிவிட்டது, எல்லாம் தம் வசம் கன்ட்ரோல் வேண்டும் என்பதால் -இதை கண்னைமோடி ரிக்கும் நன்பர்களே சந்தடி சாக்கிகில் கொம்புத்துறை, சிங்கித்துறையும் சரிககானத்தான் அத்துனை தனவந்தர்களும் மேடையை அலங்கரித்தார்களா? இதே பெயரால் நடத்திய போரட்டம் எங்கே? தங்களின் முகம் காக்க தாரைவார்க்கத்தானா?

மாற்று வேட்பாளருக்குத்தான் எத்துனை கதைகளும் முறன்பாடுகளும் ..எதை சொல்ல எதை விட.. இதெல்லாம் முக்கியமில்லை ஒற்றுமைதான் என்றால் ஒற்றுமை எதற்கு? சேர்ந்து தவறுகள் செய்து இதற்கு முன் சென்ற சமுதாயங்களைப் போல் சீரழியவா?

பதவிக்கும், பொறுப்புகளுக்கும் கேள்வி கேட்டும் இறைவன் சிந்திக்கும் திறன் தந்துள்ளதுக்கும், அநீதிக்கு துணை செய்ததுக்கும் கேள்வி கேட்கமாட்டானா?

அற்பமான இந்த உலகிற்காகா கீழ்தரமாக செயல்படுவதால் மறுமையை மறப்பது என்ன நியாயம். சிந்தித்து செயல்படுங்கள் - இறைவன் துணையிருப்பான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by MOHAMED ISMAIL (Chennai) [17 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 11127

who is behind this heinous act? what they really want to do? money and muscle powers join hand in hand to achieve their goal. how can they discharge their duty in a fair manner, if money played a crucial role.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by Eassa Zakkariya (Jeddah) [17 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11128

அருமை நண்பர் I.M ABDURAHIMIN கருத்துக்கு

சண்டாளர்கள் சமூகம் என்கிற ஆழ மரத்தின் அடி வேரிலே தண்ணீரோடு "திரவத்தையும்" அல்லவா ஊற்றுகிறார்கள்

நன்மையையும் ; அதற்கு மாற்றமான தீமையும் குழைத்து சமூகத்தின் உணர்வுகளை மந்தபடுதுகிரர்ஹலே - பாவிகள்

எதையும் செய்வார்கள் ;

பாவம் பெரியவர்கள்

நாளைய விதி நிர்ணயத்தின்போது இவர்களின் நிலை ?????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by Dustagir (Dubai) [17 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11129

அஸ்ஸலாமு அலைக்கும்

பண பட்டுவாடா நேற்றே தொடங்கிடிச்சு. அதுபோல எதிர் பக்கமும் ஒரு பெரிய மனிதரின் வாகனம் மாட்டிகிசுன்னு ஒரு சகோதரர் சொல்றார். தவறுக்கு தவற சரி பண்ணாதீங்க. தவறு யார் செய்தாலும் அது தவறுதான். இந்த பணம் உழைக்காமல் வரும் பணம். இதற்கு என்ன பெயர்? இப்படி ஒரு வெற்றி ரெண்டு பக்கமுமே தேவையா? இதற்கு அரசியல் கட்சிகள் போட்டி போட்டு இருக்கலாமே?

இதில் ஏன் குடும்ப பெண்களையும் ஈடுபடுதுறீங்க? இந்த வெற்றிக்காக பணம் செலவு செய்தவர் நாளை போட்ட பணத்தை திரும்ப எடுக்கத்தான் முயற்சி செய்வார் அல்லது தனக்கு சாதகமாக காரியங்களை நடத்த பார்பார். பிறகு எப்படி ஊழல் இல்லாத நகராட்சி கிடைக்கும்?

சகோதரி மிஸ்ரியாவோட வெற்றி உறுதி ஆகிடிச்சுன்னு சொல்றாங்க. பின்ன பயண படியும், வழி செலவுக்கும் பணம் கொடுத்தால் வெற்றி பெற chance இருக்கத்தான் செய்யும். பார்த்துக்கோங்க போன சட்டசபை தேர்தல் போல காச வாங்கிட்டு மாற்றம் வேண்டி எதிர் அணிக்கு வோட்டு போட்டுட போறாங்க.

நல்லா மனசாட்சிய தொட்டு கேட்டு பாருங்க, இப்படி ஒரு வெற்றி இருவருக்குமே தேவையா? திருடர்கள் செய்யும் வேலையை பெரியவர்கள் செய்றாங்க.

வெற்றி தோல்வி தருபவன் அண்டத்தையும் தன் ஆளுமைக்கு கீழ் வைத்து இருக்கும் அல்லாஹ் ஒருவனே. அதனால் அவன் வல்லமையை, அவனது அதிகாரத்தை மறந்து அதிகபடியா ஆட்டம் போடாதீங்க.

இதற்கெல்லாம் பதில் சொல்லும், வருத்தப்படும் காலம் வரும்.

தஸ்தகீர் - KTM Street


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. என்னே விளக்கம்.. சூப்பர் விளக்கம்...
posted by M Sajith (DUBAI) [17 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11131

பேரவை அகராதியில் சேர்த்துக்கொள்ளவேண்டிய புதிய வார்த்தைகள்..

கள்ள வோட்டு Comment #14 சகோதரர் சுலைமானின் விளக்கத்துடன்

குறிப்பு:
இந்திய சட்டங்கள் இந்த பேரவையின் சிறப்பு அகராதியை அங்கீகரிக்க பேரவை சார்பாக ஒரு போராட்டம் நடத்தலாம்.. அல்லது எல்லா தனவந்தர்களிடமும் பணம் வசூலித்து ஒரு 25 லட்சம் கொடுத்து தானமாக வழங்கலாம்.

அந்த விழாவில் மறக்காமல் எல்லோரையும் மேடையில் ஏற்றி அழகும் பார்க்கலாம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by CNash (Makkah ) [17 October 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11132

ஈமான் உள்ள உங்களில் யாராவது மறுக்க முடிமா சென்னையில் இருந்து பல பேருந்து அனுப்பி வைக்கபட்டிர்ப்பதையும், அதில் எத்தனை பேர் வந்து இறங்கி இருக்கிறார்கள் என்பதையும்!! அவர்கள் தங்கள் சொந்த செலவில் ஜனநாயக கடமை செய்யவந்தால் அதில் தப்பு இல்லை! வரவேற்கிறோம் அடுத்தவன் பணத்தில் ஏறி வருவதுதான் சுய மரியாதையா? ஒரு பணநாயகரில் செலவில் வந்துதான் ஜனநாயக கடமை செய்யணுமா? ஆதம் உடைய மக்களை அல்லாஹ் சிறப்பாகி இருக்கிறான்!!! ஏன் இந்த அற்ப விஷயத்திற்கு இழிவடைய வேண்டும்?

கள்ள ஒட்டுபோட முயன்ற பெண்கள்!!! ஷரியத்இன் காவலர்களே இப்போது குரல் கொடுங்கள் !!! இந்த செய்தி உண்மையாகவும் நீங்களும் உண்மையாளர்கள இருந்தால்!! ஓட்டுகேட்ட ஆலிம்களும் ஆலிமாக்களும் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லி கொள்ளுங்கள்!! ஏன் இப்படி தரம் தாழ்த்து போகிறீர்கள் சாதாரண ஒரு தேர்தலுக்காக!!

மதுவும் பணமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது..என்ற செய்தியை நம் செய்தியாளர் மீண்டும் போட்டு இருக்கிறார் என்றால் அவர் உறுதி செய்து இருக்கலாம்...அந்த செய்தி உண்மையா என்பதை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே அப்படி இத்தனை ஆண்டுகள் இல்லாத ஒரு காலாச்சாரத்தை சீர்கேட்டை அற்ப தேர்தலுக்காக எவன் கொண்டு வந்தாலும் அதனால் நீதி மறுக்கபட்டவர்களும், இதனால் பாதிக்கபட்ட அனைவரும் அல்லாஹ்விடத்தில் கைஏந்தி அந்த கயவர்களை அவனிடத்திலே ஒப்படைத்து விடுவோம்..ஆனானப்பட்ட ஒரு ஆது சமூகத்தையும், அபு ஜகீல் கூட்டத்தையும், பிர்அவுன்யும் நாசமாக்கிய இறைவா உனக்கு!!

எங்கள் சுமுதயத்தை நாசாமாக்கும் இந்த சக்தி எல்லாம் உனக்கு ஒரு பொருட்டா!! அன்றைய அபு ஜகீலையும், உத்பா, செய்பா போன்றவர்களையும் அவர்கள் செய்த அநியாயத்தை பொறுக்க முடியாமல் எப்படி எங்கள் நபி உன்னிடம் ஒப்படைதார்களோ அதே போல் எங்களால் ஒன்றும் செய்ய முடியாதா நிலையில் நாங்களும் உன்னிடத்தில் ஒப்படைக்கிறோம்!!! இந்த அநீதியை தந்தவர்களையும், அதற்க்கு துணை போன அனைவரையும் நீயே பார்த்துக்கொள்!! இறைவா நீயே நீதியாளன்!! தண்டனை வழங்குவதில் சிறந்தவன்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by peena abdul rasheed (Riyadh) [17 October 2011]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11134

இந்த மாதிரி கள்ள ஓட் போட்டு சாராயம் பணம் பட்டுவாடா இது நமது ஊர் கலாசாராம? பார்க்க மனதுக்கு கஷ்டமா இருக்கு இப்படி அந்த வேட்பாளர் ஜைக்னுமா? ஐகியம் வேண்டாமா? எப்படி பட்ட நல்லவர்ஹல் வாழ்ந்தாஊர் அல்லாஹ்வின் தண்டனைக்கு பயபடுங்கள்.

பீனா அப்துல்றஷீத்
பதாஹ் ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by OMER ANAS. (DOHA QATAR.) [17 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 11135

கமன்ட் 13 நான் எழுதும் கருத்து உரியவரை பாதிக்காமல், என் உடன் பிறவா சகோதரை ஏன் பாதிக்கின்றது என்று விளங்க வில்லை. நிச்சயமாக வல்ல இறைவன் தன அடியார்க்கு விதித்த முடிவைத்தான் மறுமையில் தருவான். இதில் எனக்கும் உங்களுக்கும் மாற்று கருத்து இல்லை!!!

ஒரு தோழிக்காக, உழைக்கும் உங்கள் உண்மையான முயற்சி எப்படியோ, அது போல் என்னை பெற்றோர், நல வழி செல், நல்லோரிடம் பழகு, ஜமாத்துக்கு கட்டுப் படு,ஊரை கூறு போடுவோர் இனிமையாக பேசி வழி கெடுப்பார்கள். அதை நம்பாதே என்று சொல்லிக் கொடுத்ததை நான் பின் பற்றுவதும் கடமை இல்லையா? சகோதரி!!!

உண்மையில் சகோதரி ஆபிதாவும், நற்குணம் உடையவரே! யாரோ தன சுய நலத்திற்க்காக சகோதரிக்கு மாற்று வழியை காட்டி விட்டார்கள். நான் பொதுவானவன். அதனால்தான் பொது வேட்பாளருக்கு ஓட்டு கேட்டேன். என் முடிவு தவறில்லை!!! இது எங்கள் ஜமாத்துக்கும் தெரியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. பித்தாலாட்ட காரர்கள்.
posted by zubair (riyadh) [17 October 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11136

வாக்குபதிவு இன்று காலை துவங்கியது! மாலை ஐந்து மணி வரை நடைபெறும்!! என்று தலைப்பை உப்பு சப்பு இல்லாமல் வைத்துக்கொண்டு...... பூவுக்குல்லேயே..... பூகம்பத்தையே.... வைத்துள்ளார் நமது அட்மின். இந்த நியூஸ் தற்சமயம் தேவை இல்லாத்த ஒன்று. அமைதி காத்து நடுநிலை பேணவேண்டிய நேரத்தில் ஒரிஜினல் கலரை காட்டி உள்ளார். நீங்களும் அல்லாஹுக்கு பதில் சொல்லணும் மனிதர்களின் மனதில் விரிசலை ஏற்ப்பட காரணமாக இருந்தமைக்கு. ஊர் ஒற்றுமை உறுதியாக தெரிய வருவதால் பித்தலாட்ட காரர்களின் கைவருசைக்கு துணை போகும் காயல்பட்டினம் டாட் காம். இனியாவது தங்களின் நிலையை மாற்றி காயலுக்கு கண்ணியம் தரும் செய்திகளை வெளியிட்டு தங்களின் கண்ணியம் காக்கவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:முடிவாகி விட்டது...
posted by OMER ANAS (DOHA QATAR.) [17 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 11137

எது எப்படியோ மக்களே!!!! உங்கள் முடிவு தீர்மானிக்கப் பட்டு விட்டது. இனி MEGA , வள்ளல் சீதக்காதி திடலில்,வெற்றிவாகையுடன் வருபவரை வாழ்த்தி விட்டு, ஒரேயடியாக மூடு விழா போட்டுருங்கோ!!! பட்டுன்னு விட்டு விட்டு போயிராதீங்கோ!!! அது மவுன அஞ்சலி ஆகிவிடும்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by kabeer (chennai) [17 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 11138

பெண்களுக்கு ஒட்டு போட தனி இடம் என்று செய்திகள் மட்டும் போதுமே? எதற்கு புகைப்படம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Sad & Shame
posted by ahamed mustafa (Dubai) [17 October 2011]
IP: 91.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11140

Gentlemen,

It was more authentic news that money & Alcohol are in free flow in Kayalpatnam now. A well Known political personality in the main streets of Kayalpatnam, not in the outskirts has made his house to an Alcohol Den.

Owing to diplomacy I refrain from naming him. If this is true, they can't escape from the clutches of Allah. Lots of women kayalites been caught in the கள்ள வோட்டு scandal. We bow our heads in shame.

Victory if got in this manner will surely be a shame on the History of kayalpatnam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by MN Seyed Ahmed Buhari (Chennai-Mannady) [17 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 11142

அஸ்ஸலாமு அழைக்கும்... ஆஹா மொத்தம் காயல் நகரின் கண்ணியம் தேர்தலை முன்னிட்டு கெட்டு போனது.. காயல் நகரின் பாரம்பரியம் அழிவை நோக்கி செல்கிறது... இரு வேட்பாளர்கள் மத்தியில் பிளவை உண்டாகியது ஐக்கிய பேரவை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by Administrator (Chennai ) [17 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 11143

சகோதரர் ஜுபைர் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

கள்ள ஒட்டு போட முயன்றதாக பிடிப்பட்ட பெண்கள் மூவரின் முழுவிபரமும், மற்றொரு இடத்தில பிடப்பட்ட ஆண் உடைய முழு விபரமும் அறிந்தே - இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அவர்களின் கண்ணியம் கருதியே அவர்கள் பெயர் வெளியிடப்படவில்லை.

அது தவிர - பணப்பட்டுவாடா யார் மூலம் செய்யப்பட்டது போன்ற அடிப்படை தகவல்கள், சாட்சிகள் விபரங்கள் பெற்றே இச்செய்திகள் வெளியிடப்படுகின்றன.

இச்செய்திகள் உங்களுக்கு மட்டும் அல்ல, எங்களுக்கும் வெளியிட அருவருப்பாக உள்ளது. இருப்பினும் - நடப்பவையை மூடி மறைத்தால் பெறக்கூடிய நன்மையை விட , அது வெளிவந்தால் பெறக்கூடிய நன்மைகள் ஏராளம் என்ற காரணத்திற்காகவே இதுபோன்ற செய்திகள் வெளியிடப்படுகின்றன.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by mohideen (iran) [17 October 2011]
IP: 94.*.*.* Iran, Islamic Republic of | Comment Reference Number: 11144

dear editor

salaam

request not to publish some sensitive and damaging the name of the town. this is website everyone is watching. some readers wrote whatever they want without thinking about the effect will come in future. pls stop all comments and better edit the news

regards
mohideen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by Mohideen (Jeddah) [17 October 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11145

Comment Reference Number: 11119

குத்துக்கல் தெரு மக்கள் கண்ணியமானவர்கள். 3 ப்ரெசிடென்ட் கொடுத்தவர்கள். தெரு மக்களை அவமதிக்கிரமாதிரி உங்கள் கருத்து உள்ளது

MKT Appa, LK Appa, Nachi Thambi லாத்தா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by Shahul Hameed (Hong Kong) [17 October 2011]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 11147

எத்தனை பஸ்சில் வெளி ஊரில் இருந்து ஊருக்கு வர எற்பாடு செய்யபட்டது என்று சொல்ல முடியுமா? நான் கேள்விபட்ட வரை அப்படி ஏதும் வரவில்லை என்று.... எது உண்மை அல்லாஹு அறிவான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by farook (Jeddah) [17 October 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11149

மெட்ராஸ் பஸ்ல வந்து கள்ள ஒட்டு போட்டார்களா? சொந்த ஓட்டை போட்டார்களா? அங்கெ இங்கே என்று சில கள்ள ஒட்டு எல்லா போதிலும் தான் நடந்தது இருக்கும்? அது இரண்டு வேற்பாளர்க்கும் கிடைத்து இருக்கும். மற்றபடி மது ஓவர் buildup .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. மண்ணிப்பை தெரிவித்து கொள்கிறேன்
posted by முத்துவாப்பா (அல்-கோபர்) [17 October 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11151

குத்துக்கல் தெரு மக்களை நான் குறை கூறவில்லை , என்னுடைய கருத்து எடிட் செய்யப்பட்டதால் அதன் அர்த்தம் மாறிவிட்டது . என்னுடைய கருத்தில் குத்துக்கல் தெரு வாக்கு சாவடியில் ஒரு குறிப்பிட்ட நபரின் குடும்பம் கள்ள ஓட்டு போடா முயற்சித்ததை கூறி இருந்தேன் , அட்மின் அதற்கு கத்திரி போட்டதால் அர்த்தமே மாறி குத்துக்கல் தெரு குடும்பத்து பெண்கள் கள்ள ஓட்டு போடா முயற்சி செய்தார்கள் என்ற அர்த்தத்திற்கு மாறிவிட்டது .என்னுடைய கருத்து தவறுதலாக மாறியதால் இது குத்துக்கல் தெரு மக்களை கண்டிப்பாக காயப்படுத்தியிருக்கும் அதற்காக நான் வருந்துகிறேன் மேலும் என்னுடைய மண்ணிப்பையும் தெரிவித்து கொள்கிறேன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by Seyed Mohamed Sayna (Bangkok -Thailand ) [17 October 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 11152

அஸ்ஸலாமு அழைக்கும்,
என்னுடைய ஒரு சிறிய வேண்டுகோள் ,
கள்ள ஒட்டு ஒரு பார்வை ,
கள்ள ஒட்டு என்றால் என்ன ?
அடுத்தவர்களின் ஓட்டை போடுவது .
ஆண்கள்:
கள்ள ஒட்டு போட வேண்டும் என்றால் பெற்ற தகப்பனை மாற்ற வேண்டும்,
பெண்கள் :
கள்ள ஒட்டு போட வேண்டும் என்றால் தன்னுடைய கணவனையோ இல்லை தகபனையோ மாற்ற வேண்டும் ,

இப்படி உங்கள் குடும்பத்தை சீரழித்து அலுப்பா ஓட்டுக்க மானத்தை விட்டு குடுத்து ஒட்டு போட்டு , ஜெயக வைத்தால் உங்களுக்கு கோல்ட் மெடல் தர போகிறார்கள

கள்ள ஒட்டு போட்ட வர்களும் ,போட முயற்சி செய்தவர்களும் , சற்று சித்தித்து பாருங்கள் , வருங்கலத்தில் இப்படி ஒரு தப்பை செய்து விடாதீர்கள்

உங்களுடைய உரிமையை அலுப்பா 500,1000 துக்கும் விற்றவர்களும் , விக்க முயற்சி செய்தவர்களும் , சற்று சிந்தித்து பாருங்கள் நாளைய நகராட்சி இல் உங்களால் எதையாவது லஞ்சம் இல்லாமல் முடிக்க முடிமா ,

என்னுடைய கருத்து :
அபிதா லாத்தா வெற்றி பெற்றால் தனிச்சைய முடிவு எடுப்பார்கள் என்று நான் நினைக்கிறான், முஅசரிய லாத்தா வெற்றி பெற்றால் இநோருவரிடம் கேட்டு தான் முடிவு எடுக்க முடியும் டூ நான் நினைக்கிறான் ,

தாங்கள் இருவரில் யார் வெற்றி பெற்றாலும் , கரை படிந்த காயல் பத்தியை , கரையை அகற்றி , வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்கள் , அல்லா ஆணைவர்கலையும் பாது காப்பானாக

கமெண்ட்ஸ் குடுத்த அனைவருகளும் நல்ல சண்டை இட்டு ஊரில் நடத்த ஆனைத்து விசயங்களையும் பகிர்த்து கொண்டோம் , அடுத்து தகவல் அறியும் சட்டதை பற்றி கொஞ்சம் விளக்கமா சொல்லி , மெம்பெர் கவுன்சிலர் , யாழ்ளர் மலையும் தகவல் அறியும் சட்டம் முலமா நாம சந்திக்கலாம்

Seyed Mohamed ( Seyna )
Elanzer Ikiya Mandram - Bangkok Thailand


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATNAM) [17 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11154

சகோதர்களே....கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டது உண்மை. இதற்காக இங்கு சண்டை வேண்டாம். அது ஒன்றும் இன்று புதிதாக போடப்படுவதல்ல. எம். எல். எ எலெக்ஷன் எம்.பி.எலெக்சன் எல்லாவற்றிலும் அது வழக்கமாக போடப்படுவதுதான். இன்றைக்கு இங்கு இதை சுட்டிக்காடியவர்களும் அதற்க்கு மறுப்பு சொல்லி கொந்தளிப்பவர்களும் அன்றைக்கு அதை ஆட்சேபித்தீர்களா எனபது தெரியவில்லை. இனியேனும் இந்த முறை கேட்ட செயலை ஒழித்துகட்ட எல்லோரும் முன் வரவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம் ) [17 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11155

இங்கு பதிவு செய்துள்ள செய்திகள் உண்மைதான்.

கள்ள ஓட்டு, பணப்பட்டுவாடா, பாட்டில் சப்லை அனைத்தும் கண்டு மனது வெதும்பி தான் இருக்கின்றேன்.

குத்துக்கல் தெருவில் உள்ள சுபைதா பள்ளியில் ஒரு சிறுவன் கள்ள ஓட்டு போட வந்து, மாட்டிக்கொண்டு, பின்பு எச்சரித்து அனுப்பப்பட்டார். ஒரு பெண் மட்டும் ஓட்டுப் போட அனுமதிக்கப்பட்டார் ( அவரின் போட்டோ மட்டும் சரி, மற்ற விவரங்கள் பெயர், தந்தை பெயர் ஆகியவை மட்டும் தவறாக இருந்தன). வேறு எந்த கள்ள ஓட்டும் விழவில்லை.

சென்ட்ரல் மற்றும் முஹியத்தீன் பள்ளிகளில் மட்டும் வழமையான பரபரப்புடன் கள்ளஓட்டு போடப்பட்டது. பெண்கள் பேசியதை நானே கேட்டது.

யார் என்று தெரியாத ஆணிடம் விரலை காட்டி, நம் பெண்மணிகள் உடைய விரலை பிடித்து மையை அழித்த காட்சியை என்ன என்று சொல்லுவது. இறைவனுக்கு பயந்து கொள்ளுங்கள். எங்கா... இந்த இரண்டு தெருவிலும் தான்.

இன்னும் ஒரு கொடுமை தெரியுமா, போட்டி வேட்பாளரான ரூத் அம்மாள் உடைய பூத் ஏஜென்ட் சிலிப் உடன் பூத்தில் நடமாடிய ஐக்கிய பேரவை உடைய மிக்கிய பிரமுகரின் மகனை என்ன வென்று சொல்லுவது. ஆக மொத்தம் ரூத் அம்மாளை நிறுத்தியது யார் என்று எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு புரிந்து இருக்குமே.

இன்னும் பல கொடுமைகள் உள்ளன..பகிர்ந்து கொள்ள வலை தளம் சரி இல்லை.

சாளை S.I.ஜியாவுதீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by sulaiman (abudhabi) [17 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11157

அஸ்ஸலாமு அலைக்கும்,அன்பின் சகோதரர் M.SAJITH அவர்களே! ஒன்று தவறாக நமக்கு படுமேயானால் அதை எப்பொழுது செய்தாலும் தவறாகத்தான் இருக்கவேண்டும்.ஆனால் பார்லிமென்ட் தேர்தலிலும் ,சட்டசபை தேர்தலிலும் யாருக்காகவோ நம்மெல்லாம் போட்டமே,அல்லது நமது குடும்பத்தார் போட்டார்களே அல்லது குறைந்த பட்சம் மனதால் கூட வெறுக்காமல் ஊக்கபடுதிணோமே கள்ள வோட்டுகளை.அப்பொழுது போட்ட இந்த கள்ள வோட்டுகளை எல்லாம் எந்த லிஸ்டில் சேர்ப்பது ?எந்த ஏட்டில் எழுதுவது ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by zainab (kayalpatnam) [17 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 11158

அஸ்ஸலாமு அழைக்கும்

கள்ள வோட்டிற்கு ஒரு நல்ல்ல்ல விளக்கம் ,,,,, கமெண்ட்:14 சட்டத்திற்கும் ,சமூகத்திற்கும்,மார்க்கத்திற்கும் புறம்பான செயல்களை ஒற்றுமை என்ற பெயரில் செய்வது தானே நம் ஊரின் latest அந்த லிஸ்டில் இதையும் serthu விட வேண்டியது தான் நமக்கு ஒற்றுமை ஒன்றே உயிர் மூச்சு .....

மற்றவற்றை பற்றி எதற்கு பேச்சு ...

கமெண்ட்:22 ... nan தோழி என்று எந்த கம்மேன்டிலும் சொல்ல வில்லை உங்கள் ஊகம்... அப்படி தான் எல்லா கம்மேன்ட்சும் அனால் ""WE ALL ARE BROTHERS AND SISTERS IN ISLAM ''"' PLS DONT FORGET THAT !!!

நமது உடன் பிறவா சகோதரியை விமர்சிக்கலாம ?? அவரை பற்றின அவதூறை பரப்பலாம ?? அல்லது அதை seibavarukku துணை போகலாமா ??? இது போன்ற நல்ல விஷயங்களை நம் மார்க்கமே கற்றுத் தருகிறதே .... அந்த மாதிரி தவறுகளை நம் maaarkkam வன்மையாக கண்டிக்கிறதே ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by Vilack SMA (Hetang) [17 October 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 11165

தைக்கா தெரு , புதுக்கடை தெருவில் மிகுதியான அளவுக்கு கள்ள வோட்டு போடப்பட்டிருக்கிறது என்று நம்பத்தகுந்த செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது . ஒரு ஆசாரிக்கு பணம் கொடுத்ததை , என் உறவினர் ஒருவர் நேரில் பார்த்த சாட்சியும் உண்டு. ஆக , dear gentlemen , , யாரைப்பற்றியும் குறை கூறாதீர்கள்.



Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [17 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11166

kayalpatnam.com நடு நிலை தவறியுள்ளதை கீழ் கண்ட வாசகமே உறுதிபடுத்தியுள்ளது

" மேலும் - நகரில் பரவலாக - பண பட்டுவாடாவும் செய்யப்பட்டுள்ளது. புறநகர் பகுதிகளில் மது விநியோகம் நடைபெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன."

உண்மைக்கு புறம் பான செய்திகள், ஊர்ஜித படுத்தாத செய்திகள் பிரசுரிக்க படாது என்பது தங்களின் சித்தாந்தம் அது எங்கு போனதோ? நம் பாட்டனார்கள் கட்டிக்காத்த ஊரின் சிறப்பை நாமே கெடுத்துக்கொள்ள வேண்டாம் .

தம்பி சாளை ஜியாவுதீன் மற்றவர்களை சிந்திக்க வைப்பது போல் சிரிக்க வைக்க எதையும் எழுதுவார். இதை ஹாமிதியா மதரசாவின் விசயத்தில் உணர்ந்ததே!

இனியாவது நமக்குள் பாகுபாடு இருந்தாலும், இல்லாததை எழுதி நம்மை நாமே காய படுத்திக்கொள்ள வேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by CNash (Kayalpatnam) [17 October 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11168

பெண்கள் வீதிக்கு வருவதை பற்றி அன்று திருவாய் மலர்ந்தருளிய ஷரியத்தின் காவலர்கள்!! இன்று சிறிது கூட வெட்கம் அல்லாஹ்வை பற்றிய பயம் சிறிது கூட இல்லாமல் தாங்கள் நினைத்தவர்கள் வெற்றி பெற கள்ள ஓட்டுக்கும் ஹலால் முத்திரை குத்தி ...அது என்ன கள்ள ஒட்டா!! எங்கள் ஓட்டைதானே எங்கள் சொந்தங்கள் நல்ல வோட்டாகா நாங்கள் ஊரில் இல்லாததால் போடுகிறார்கள் என்று மதிப்புரை வழங்கி இருக்கிறார். அடுத்து சாராயத்திற்கு என்ன சர்டிபிகட் கொடுக்கிறார் என்று பார்ப்போம்.

ஆகா நாம இங்கே இருப்பதால் எவனும் நம் பேரை சொல்லி நான் என்றும் நம் தகப்பன் மனைவி பெயரை சொல்லி இன்னார் மகள் கணவன் என்றும் ஒட்டு போடலாம்.. சிறந்த விளக்கம் நோட்டீஸ் அடிச்சி விநியோகம் பண்ணுங்க!!

இன்னும் சிலர் பஸ்இல் வந்து அவர்கள் ஓட்டை தானே போட்டார்கள் கள்ள ஓட்ட என்று வேற கேக்குறார்!! உங்களுக்கு என்னிடம் பதில் இல்லை!! கீழே உள்ள ஹதீஸுக்கும் அல்ல்லஹ்வின் வேத வரிக்கும் நீங்களே பதில் சொல்லி கொள்ளுங்கள்!!

தீர்ப்புக்காக லஞ்சம் கொடுப்பவனையும் லஞ்சம் வாங்குபவனையும் அல்லாஹ் சபிப்பானாக! (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹமத்)

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘லஞ்சம் கொடுப்பவர் மீதும் லஞ்சம் வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இப்னுமாஜா)

மேலும் உங்களுடைய செல்வங்களை உங்களுக்கடையில் உரிமையின்றி உண்ணாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே (பிற) மனிதர்களின் செல்வங்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணுவதற்காக அவற்றை (இலஞ்சமாகக் கொடுக்க) அதிகாரிகளின்பால் கொண்டும் செல்லாதீர்கள். (அல்குர்ஆன் 2:188)

இணையதளத்தில் இறை பயம் இன்றி எழுதும் நீங்கள் ...நாம் எல்லாம் இறுதியாக இணையபோகும் ஒரு தளத்திற்கு உங்களை தயார் செய்து கொள்ளுகள்!! அங்கு நீங்கள் பேசியதும் எழுதியதும் எழுதப்பட்டு நம்முன் கொண்டுவரப்படும்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. ஆபிதா வந்தா ஆப்புதான்...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [17 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11175

ச்சே...!!! கொடுமைடா...!!! ஜியாவுத்தீனின் வார்த்தைகள் கழுத்துக்கு வந்த சுருக்குக் கயிறாய் உறுத்துகிறது! அந்த வரிகளை மீண்டும் ஒரு முறைப் படித்துப் பாருங்கள்.

“ இன்னும் ஒரு கொடுமை தெரியுமா, போட்டி வேட்பாளரான ரூத் அம்மாள் உடைய பூத் ஏஜென்ட் சிலிப் உடன் பூத்தில் நடமாடிய ஐக்கிய பேரவை உடைய மிக்கிய பிரமுகரின் மகனை என்ன வென்று சொல்லுவது. ஆக மொத்தம் ரூத் அம்மாளை நிறுத்தியது யார் என்று எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு புரிந்து இருக்குமே.”-நன்றி, ஜியாவுத்தீன்,

இப்ப தெரியுதா? பேரவை ஒற்றுமை என்று கூறி ஊர் மக்களை எந்த அளவிற்கு முட்டாளாய் [edited] ஆக்கியுள்ளது என்று? ஆபிதா வந்தா ஆப்புதன்னு! அவங்க எப்பவோ முடிவு பண்ணிட்டாங்க..நம்ம தான் அடிச்சிக்கிட்டோம்! தேவையில்லமெ...!!!

குசும்பு:
உங்களுக்கு குட்டு பட்டாலும் புத்தி வராதே? கேட்டால்,கெட்டாலும் மேன்மக்கள்...மேன்மக்களேன்னுதான் சொல்லுவீங்க, எப்படியும் போங்க!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [17 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 11180

1 ) ஓட்டு போடுவதற்காக சென்னையிலிருந்து பஸ்ஸிலும், இரயிலிலும் வந்தவர்கள்,அதற்கான பயணச்சீட்டை காட்டி கே.டி. எம். தெருவிலுள்ள ஐக்கியமான ஒரு பெரியவரிடம் பணம் பெற்றிருக்கிறார்கள். அப்பெரியவர் அன்று மேடையை அலங்கரித்தவர்களில் ஒருவர் எனபது குறிப்பிடத்தக்கது.

2 ) ஐக்கியமான மற்றொரு நபரின் அன்புமகன் கள்ள ஓட்டு போடும்பொழுது, சகோதரி ஆபிதாவின் பூத் ஏஜெண்டால் அடையாளம் காண்பிக்கப்பட்டு அதிகாரிகளால் கூடிசெல்லப்பட்டார். இந்த செய்தி காட்டு தீ போல் ஊர் முழுவதும் பரவிய நிலையில், அவரின் ஜமாத்தை சார்ந்தவர்களும், சொந்த பந்தங்களும் வாக்குக் சாவடியை முற்றுகையிட்டு அந்த பூத் ஏஜெண்டை பயமுறுத்தினார்கள். இந்நிலையில் ஓட்டு போடும் நேரம் முடிந்ததும், காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பில் அந்த பூத் ஏஜென்ட் தன் இல்லம் திரும்பினார்.

3 ) கள்ள ஓட்டு அதிகமாக ஒரு குறிப்பிட்ட வாக்குக் சாவடியில் போடப்படுவதாக வந்த தகவல் அறிந்து சகோதரி ஆபிதா அவர்கள் அங்கு சென்றிருக்கிறார். அங்கு அவரை கண்ட எதிரணி சகோதரிகள் அசிங்கமான வார்த்தைகளால் ஏசியிருக்கிறார்கள். இதை நேரடியாக பார்த்த சகோதரர் ஒருவர் என்னிடம் சொல்லும்போது, " குடும்பப்பெண்கள் சொல்ல நாவுகூசும் வார்த்தைகளால் ஏசினார்கள்". என்றார்.

இதில் முதல் இரண்டு சம்பவங்களையும் நான் ஊர்ஜிதம் செய்துகொண்டேன். மூன்றாவது சம்பவத்தை என்னிடம் கூறியவர் ஒரு சமூக நலவாதி. பல சமூக சேவைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு சுயநலம் பாராது, நமதூர் நலனுக்காக பாடுபடுபவர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by kudack buhari (doha-qatar) [17 October 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 11183

இப்பவே நிறைய பேருக்கு குளிர் விட்டு ஆட்டுது போல இருக்கு,

Vilack SMA ,Shahul Hameed (Hong Kong) , ஒமர் க்கா ,எல்லாம் பாரேன்சது ukke செரியா ,கொரேயா சேட்டம்மாறு இப்பெளும் பேடிச்சு நடக்குன்னு ,

மத்திய காயல் மாபெரும் சரித்திரம் படைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. இஹ்லாசான எண்ணம்
posted by N.S.E.மஹ்மூது (KAYALPATNAM) [17 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11187

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அன்பான சகோதரர்களே !

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை தேர்தல் சம்பந்தமான செய்திகளை இணையத் தளங்களிலே படிக்கும்போது மனம் வேதனை அடைகிறது.

கருத்துக்கள் எழுதும் சகோதரர்களில் பெரும்பாலோர் எதை பற்றி எழுதுகிறோம், ஏன்? எதற்காக அந்த கருத்தை எழுதுகிறோம் - அதனால் ஏதேனும் நன்மை உண்டா ? அல்லது ஏதும் பாதிப்பு உண்டாகுமா ? - என்ற அடிப்படை எண்ணம் கூட தெரியாமல் எழுதுகிறார்கள் , இது உண்மையாகவே வேதனைக்குரியது.

இந்த வலைத்தளம் மட்டுமல்ல மற்ற வலைத்தளங்களிலும் ஒவ்வொருவரும் இந்த தேர்தல் காலங்களில் எழுதிய கருத்துக்களை மீண்டும் , மீண்டும் படித்துப் பாருங்கள் அது உங்களுக்கே தெரியும் நீங்கள் எழுதி இருப்பது சரியா ? இல்லை தவறா? என்பது. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உண்மையை உணர்வீர்கள்.

-------------------------------------------------------------

குறுகிய மனப்பான்மை :

கள்ள ஓட்டுப்போடுவது என்பதில் எனக்கு உடன்பாடில்லை - மனிதாபிமானப்படியும் , மார்க்கப்படியும் தடை செய்யப்பட்டது அதிலே மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் வலைத் தளங்களிலே கருத்துக்களை எழுதும் பெரும்பாலோர் குறுகிய வட்டத்திலே இருந்து பார்க்கிறார்களே தவிர - பரந்த மனப்பான்மையுடன் சிந்திப்பதில்லை.

நமது ஊரிலே கள்ள ஒட்டு போட்டதாகவும் , ஓட்டுக்கு பணம் கொடுத்ததாகவும் , இன்னும் சில மோசமான தகவல்களையும் இணையதளங்கள் மூலமாக அவைகளை மிகைப்படுத்தி கூறுவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை.

நம்ம ஊரில் மட்டும்தான் இப்படி நடக்கிறது வேறு எங்கும் இந்த மாதிரி இல்லை என்றால் ஏதோ ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்த தேர்தல் நடக்கும் பல ஊர்களில் இந்த மோசடிகள் நடந்திருக்கிறது - அதற்காக பலரை பிடித்து கைதும் செய்திருக்கின்றனர் - என்பது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை காரணம் பெரும்பாலான மக்களிடம் இருக்கும் குறுகிய மனப்பான்மையும் , ஒரு தலைபட்ச ஆதரவும்தான்.

----------------------------------------------------------

அநாகரீக அரசியல்வாதிகள் :

மேலும் அரசியல் கட்சிகள் கலக்காத தேர்தல் என்றாலும் - ஒற்றுமை இல்லாமல் மக்கள் இரண்டாக பிரிந்து செயல்பட்ட காரணத்தால் மறைமுகமாக பல தொல்லைகளை இன்று இல்லை என்றாலும் நாளை சந்திக்கப் போகிறோம் என்பதை மக்கள் உணரவில்லை என்றே தோன்றுகிறது.

பாராளுமன்ற , சட்டசபைத் தேர்தலில்கூட இல்லாத அளவுக்கு மக்களை பிரித்தாளும் செயல் இந்த உள்ளாட்சித் தேர்தலில் நடந்தது வேதனைக்குரியது.

வார்டுகளில் மக்களை நேருக்கு நேர் சந்தித்து சுதந்திரமாக கேட்டுப் பெற வேண்டிய ஓட்டுக்களை சில அநாகரீக அரசியல்வாதிகள் தலையிட்டு, கெடுத்து நேர்மையானவர்களுக்கு எதிராக ஒட்டு போடச்செய்திருக்கிறார்கள்.

இப்படி ஊர் முன்னேற்றத்தையும் , ஊர் மக்களையும் கெடுப்பவர்கள் அல்லாஹ்வின் பிடியிலிருந்து தப்பமாட்டார்கள் என்பதை உணர வேண்டும்.

----------------------------------------------------------

அல்லாஹ்வின் பிடி :

ஊர் மக்களின் ஐக்கியத்தை கெடுத்து பிரிவினையை ஏற்படுத்தி தமக்கென்று ஒரு பாதையை அமைத்துக்கொள்ள நினைப்பவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளவேண்டும்.

அவர்கள் அறிவிலே சிறந்தவர்களாகவும் - பணத்திலே மிகைத்தவர்களாகவும் - அரசியலிலேயே சானக்கியர்களாகவும் எப்படி இருந்தாலும் சரியே அல்லாஹ்வின் பிடியை விட்டு தப்பிக்க முடியாது என்பதை மறந்துவிடக் கூடாது.

---------------------------------------------------------

இஹ்லாசான எண்ணம் :

இந்த தேர்தலின் முடிவு யார் பக்கம் வெற்றியானாலும் அது உண்மையில் தோல்விதான் - எவருக்கும் உண்மையான வெற்றி ஆகாது.

எவர் மனதில் உண்மையான - இஹ்லாசான எண்ணம் இல்லையோ! எங்கனம் வெற்றிக் கிட்டும்?.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
46. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by Mohiadeen (Phoenix) [17 October 2011]
IP: 199.*.*.* United States | Comment Reference Number: 11188

Guys. Please stop critising each other through web site. It is internet not intranet means is a public site any one in the world can see your debate and it is not safe to our kayal integrity and security.

Dear Admin,

Do you have user authentication particularly for comments section? My suggestion is whenever go for comments each user needs to login, prior to this all the user have to upload their address proof with photo identity(passport/voter id/any gov proof) in the user id registration page.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
47. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by Mohiadeen (Phoenix) [17 October 2011]
IP: 199.*.*.* United States | Comment Reference Number: 11191

Thanks to the internet. Now we are elected our chairman through democracy unlike the past.

Few fake votes wont alone destroy the democracy. If fake vote there let government officials will take necessary actions.

At the end of the day we should respect people's verdict.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
48. பதில் தேவை ?
posted by kudack buhari (doha-qatar) [17 October 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 11193

சென்ட்ரல் மற்றும் முஹியத்தீன் பள்ளிகளில் மட்டும் வழமையான பரபரப்புடன் கள்ளஓட்டு போடப்பட்டது. பெண்கள் பேசியதை நானே கேட்டது.என்று சொன்ன ஜியாவுதீன் எப்படி மிக துல்லியமாக கேட்டிருக்க முடியும் என்று நினைத்தேன், ,ஒருவேளை அவர் பெண்களின் உடை அணிந்து பெண்களின் கூட்டத்தில் கலந்திருபாரோ? இல்லை வேறு எப்படி விளக்கம் தாரும் நண்பரே .

யார் என்று தெரியாத ஆணிடம் விரலை காட்டி, நம் பெண்மணிகள் உடைய விரலை பிடித்து மையை அழித்த காட்சியை என்ன என்று சொல்லுவது. இறைவனுக்கு பயந்து கொள்ளுங்கள். எங்கா... இந்த இரண்டு தெருவிலும் தான். என்று பட்ச பொய் சொன்ன ஜியாவுதீன் இந்த இரண்டு தெருவுக்குமே ,இந்த இரண்டு வார்டுக்குமே சம்பந்தம் இல்லாத தான்,ஏன் இந்த இரண்டு தெருவிலும் வலம் வந்து கொண்டிருந்தார் ,இவர் பத்திரிகை காரனும் அல்ல, போலீஸ் காரரும் அல்ல, உங்களின் நோக்கம் எதுவாக இருந்திருக்க முடியும் ? நண்பரே பதில் தாரும்,

இன்னும் பல உண்மைகள் உள்ளன..பகிர்ந்து கொள்ள வலை தளம் சரி இல்லை.

*******************************

குசும்பு புதுசு (verson 2 )

--------------------------------

பொதுவாகவே நான் ஆணுடை அணிந்த பெண்களின் கருத்துக்களை விரும்புவதில்லை கூடவே பெண்ணுடை அணிந்த ஆண்களின் கருத்தும் இதற்கு விதி விலக்கு அல்ல.

********************************


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
49. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by M Sajith (DUBAI) [17 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11194

சகோதரர் சுலைமான் (அபுதாபி) அவர்களுக்கு,

நீங்கள் சொன்னது மிகவும் சரி,எந்த சூழலிலும் தவறு தவறுதான், முன்னர் பல பதிப்புகளிலும் இதைத்தான் சொல்ல வந்தேன்..

அகராதிப்பொருள் செய்யும் சூழ்நிலை பொருத்து மாறாது.

நம்மவர்கள், வேண்டியவர்கள் என்னும் பாசத்தால் சரிகாண்பதன் விளைவுகள் நல்லதாக இருக்க இயலாது.

கொலையையும், கற்பழிப்பு போன்ற குற்றங்கங்கள் பத்திரிக்கைகளில் வரும் போது முஸ்லிம் கற்பழிப்பு என்றோ, இந்து கற்பழிப்பு என்றோ குறிப்பிடுவதில்லை.. அதே சமயம் தீவிரவாதம் மட்டும் முஸ்லிம் தீவிரவாதம் ஆனது இது போல நம்மவர்கள் என்ற அனுதாபத்தால் ஆரம்பத்திலேயே உறக்க கண்டிக்க தவறியதால் தான்.

நம்மைச் சார்ந்த்வர் என்பதால் கண்டுகொள்ளாமல் விட்டால், பதிப்புக்குள்ளானவர் வேதனை அதற்கும் கேள்விகள் உண்டு.

தவறை நியாப்படுத்துவது தான், அழிவின் ஆரம்பம்.

எனவே இந்த தேர்தல் மட்டும் இல்லை, எந்ததேர்தலிலும் கள்ள வோட்டு போடுவதை முழுவதுமாக வெறுத்து ஒதுக்குங்கள்.. உங்கள் உரிமைகளை விலை பேசவும் வேண்டாம், அடுத்தவர் உரிமைகளை அபகரிக்கவும் வேண்டாம்.

இறைவன் நல்ல விஷ்யங்களில் ஒற்றுமையை தருவானக. தீமைகளை விட்டும் பாதுகாப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
50. Rதான் திருடி பிறன் கள்ளி என்பாளாம்.
posted by Abu Misbah (Jeddah KSA) [17 October 2011]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11197

தான் திருடி பிறன் கள்ளி என்பாளாம். உங்கள் வலைத்தளம் உண்மையை சொல்வதற்கு பதிலாக பொய்யையும் புரட்டையும் சொல்கிறது. இங்கு கருத்து சொல்லும் 10 பேர்கள் மட்டும் திரும்ப திரும்ப ஆட்டை கழுதையாக்குன கதையாக ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் கூறி நம் காயல் நகரின் கண்ணியத்தை கூறு போட நினைக்கிறார்கள். அல்லாஹ் அவர்களின் முகத்திரையை கூடிய விடிவில் கிழிப்பான்.

உங்கள் வலைத்தளம் நடுநிலை மாறி யாரையோ திருப்தி படுத்தவோ ஏதோ பிரதிபலனுக்ககவோ மத்திய காயலை கேவலபடுத்தி எழுதுகிறீகள். உங்களுக்கும் ஐக்கிய பேரவைக்கும் தனிப்பட்ட பிரச்சனை இருந்தால் அதை தீர்த்துக்கொள்ள வழி தேடுவதை விட்டுவிட்டு கீழ்த்தரமான நிலையை எடுக்காதீர்கள். நாளை மறுமை உண்டு என்று நம்புங்கள். உங்களுடைய வலைதளத்தின் க்ளிக் எண்ணிக்கை கூடுவதற்காக தரம் தாளதீர்கள்.

என்னை இதுமாதிரி எழுத வைத்து விட்டீர்களே என வருந்தும், காயலுக்கு சொந்தக்காரன்

குளம் அஹமது முஹியதீன்
ஜெட்டாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
51. Re:நீ உன்னை அறிந்தால்,
posted by OMER ANAS (DOHA QATAR) [17 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 11198

SM SAINA இல்லை பாங்காங் சைனா, உங்கள் கருத்தை தினமும் பார்த்துதான் வருகிறேன். நீங்கள் குறிப்பிட்டபடி தனியாக சிந்தித்தால், அது அகம்பாவம்!!! கூட்டாக சிந்தித்தால்,அது கண்ணியம்.இத நான் சொல்லவில்லை! உங்கள் ஆபிதா, அனைத்து மக்களின் ஒரு மித்த ஜமாத் மக்களின் பக்க பலத்தோடும் என்று SEP 24 சனிக்கிழமை 2011 அன்று சொன்னது நினைவில்லையா? முதலில் நம்மை நாம் அறிய வேண்டும்!!! பின்னால் தான் பதில் சொல்ல வேணும்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
52. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம்) [18 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 11208

சகோதரர் குடாக் புஹாரி மற்றும் சகோ. S.S. ஜகுபார் சாதிக் அவர்களுக்கு, இந்த மாதிரி ஒரு பதில் கமெண்ட்ஸ் வரனும் என்றுதான் வெயிட் பண்ணிக்கொண்டு இருந்தேன்.

நான் ஒன்றும் புறநகரை சார்ந்தவன் இல்லை. நானும் மத்திய காயல்தான். எங்கள் பூத் அமைந்தது சென்ட்ரல் பள்ளியில்தான். என் தங்கைக்கு முஹியத்தீன் பள்ளியில்தான். அவர்களை இங்கு விட்டு விட்டு 85 நிமிடங்கள் காத்து இருந்தேன்.

அங்கு என் அருகில் குழுமி இருந்த நம் சொந்தங்களின் கமெண்ட்ஸ் அடித்ததை பார்க்கணுமே.

நான் இரண்டு ஓட்டுதாண்டி போட்டேன், இப்போ ID கார்டு கேட்கிறார்கள் அதான் முடியவில்லை.

போப்போ.. முகத்தை காட்ட சொல்லுராங்கோ...

உண்டான ஓட்டை போடவே திணறுது- நீ வேறே உன் லாத்தா உடைய ஓட்டை போட சொல்லுரியே..

இன்னும் ஒரு பெண்மணி, என்னிடம் அவர்களின் மகனின் சிலிப்பை கொடுத்து " வாப்பா என் மகன் வரமுடியவில்லை, இதை நீயே போட்டுவிடேன்" என்று கூறி சிலிப்பை என்னிடம் தந்தார்கள். ( சிலிப் என்னிடம் உள்ளது). அவர்களுக்கு இது தவறு என்றே தெரியவில்லை.

நான் அங்கு நின்று இருந்த சமயம், ஒரு போட்டி வேட்பாளர் சகோதரி செய்யத் மரியம் அவர்கள் வரும் போது அவர்களை கேலி பண்ணி ஒய்யோ.. போட்டு கத்தி அவமானப் படுத்தியதையும், அதன் பின்பு சகோதரி ஆபிதா அவர்கள் வரும் போதும் அதே ஒய்யோ.. போட்டு கத்தியதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம் என்றாலும்,

உபயோகித்த வார்த்தைகளை அல்லாஹ் சாதாரணமாக எடுத்துக்கொள்வானா..

சகோதரி செய்யத் மரியம் அவர்களை ஒரு பெண்மணி கூறிய ஒரு கமெண்ட்ஸ் அப்பப்பா... ( இந்த வார்தைகளை கூட்டத்தில் இருந்த ஒரு சில பெண்மணிகள் தான் உபயோகித்தார்கள், பல பெண்கள் அப்படி எல்லாம் சொல்லாதே என்று கண்டிக்கவும் செய்தார்கள்)

சென்ட்ரல் பள்ளியில், மிகப் பெரிய, கண்ணியமான குடும்பத்தை சேர்ந்த பெண்மணி, 2 கள்ள ஓட்டுகள் போட்டு விட்டு, பின்பு அவருடைய உண்மையான ஓட்டை போடும் போது பிரச்சனை வந்து, அந்த அம்மணி வாசலில் வைத்து கத்திய கத்து.. விசாரித்து பாருங்கள் சகோதரர்களே.

ஓட்டு போட்ட கை மையை அழித்து விடுவதை தெருவில் யாருக்கும் பயப்படாமல் செய்ததை நான் கண்டதுதான். மற்ற தெருவில் நான் காணவில்லை. மறைந்து இருந்து செய்து இருந்தால் யாருக்கும் தெரிந்து இருக்காது.

ஆக இந்த செய்தியை அறிய பெண் உடை அணிந்து சென்று தான் பார்க்கணும் அல்ல.

நான் கேள்விப்பட்ட செய்தியை பதிக்கணும் என்றாலே, பலரிடம் ஊர்ஜிதம் செய்து, உண்மை நிலையை அறிந்துதான் பதிப்பேன். இந்த செய்திகள் அனைத்தும் என் கண்முன்னாடிதான் நடந்தது.

ஒருவேளை "கண்ணை நம்பாதே" என்று நீங்கள் சொன்னால், நான் பதித்த செய்திகள் அனைத்தும் தவறுதான்.

ஊரில் நடக்கும் செய்தியை அறியனும் என்றால் போலீஸ் ஆகவோ, பத்திரிக்கை காரனாகவோ இருக்கனும் என்ற அவசியம் இல்லை. ஒரு தனி மனிதனுடைய வீட்டில் நடப்பவைகளை அறிய, அவர்களின் வீட்டிற்க்குள் செல்லதான் இந்த தகுதிகள் தேவை.

இன்னும் விளக்கமோ, மனது கஷ்டப்பட்ட நிகழ்வுகளை எழுதனும் என்றோ தேவைப்பட்டால் பதிலை பதிவு செய்யுங்கள், நான் எழுதுகிறேன்.

மீண்டும் ஆரோக்கியத்துடன் சந்திக்கலாம், சரியா சகோதரரே.

சாளை S.I.ஜியாவுதீன், மத்திய காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
53. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by farook (jeddah) [18 October 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11221

மற்ற தெருவில் நான் காணவில்லை என்று ஜியா அவர்கள், சொன்னால் எல்லா பூத்திலும் எல்லா நேரமும் கண்காணித்தார? எல்லா பூத்திலும் கள்ள வோட்டு இல்லை என்று அறுதிட்டு சொல்ல முடியுமா? ஏன் கால்புனர்ச்சியோடு ஒரு பக்கமா எழுதணும். இது எழுத்தாளருக்கு நல்லதல்ல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
54. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by AbdulKader (Abu Dhabi) [18 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11231

அஸ்ஸலாமு அழைக்கும்..

அன்பர் சாளை S.I.ஜியாவுதீன் அவர்களே....

நீங்கள் ஒரு சிறந்த "கற்பனை" எழுத்தாளர் என்பதற்கு மாறாக "உண்மை" எழுத்தாளராக மாறிவிட்டீர்கள்!! இன்ஷாஅல்லாஹ் , இனி உங்களின் கற்பனையை கொண்டு குழப்பங்கள் ஏற்படாமல் அல்லாஹ் இங்குள்ள வாசகர்களை பாதுகாப்பானாக, ஆமீன்!!

சகோதரர் குடாக் புஹாரி மற்றும் சகோ. S.S. ஜகுபார் சாதிக், இருவரும் உங்களிடம் மறைமுகமாக சொல்லவந்தது... ““உங்களுக்கு ஏன் இந்த வன்பு என்று!”” நீங்கள் சரியாக புரியவில்லை போலும்!

சரி விடுங்கோ..... எல்லாம் நம் பிள்ளைகள்தானே. தயவு செய்து யாரும் இதை பெரிசுபடுத்த வேண்டாம்.

மத்திய காயல்வாசிகளே... பொறுமையுடன் செயல்படுங்கள்... அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான் என்பதை மறந்து தவறான கருத்துக்களை இங்கு பதிக்கவேண்டாம்.

வஸ்ஸலாம்
அப்துல்காதர்(பாதுல்அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
55. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [18 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11240

அன்பு தம்பி சாளை ஜியாவுதீன் அவரது பதிவில் கள்ள வோட்டிற்கு வியாக்கியானம் தந்துள்ளார்.

"கள்ள ஓட்டு, பணப்பட்டுவாடா, பாட்டில் சப்லை அனைத்தும் கண்டு மனது வெதும்பி தான் இருக்கின்றேன்."

மேலே கோடிட்டு காட்டியது தம்பி பதிவு செய்த வாக்கியம். கள்ள வோட்டிற்கு வியாக்கியானம் தந்த தம்பி ஜியா, மற்ற இரண்டையும் ஒரு வேளை ஊரின் கண்ணியம் கெட்டுவிடும் என அவர் கண்டதை எழுதவில்லையோ?

நமக்கு மார்க்கம் கற்றுத்தந்தது ஒரு தவறு நடந்தால் அதை செயலால் தடு, இல்லயேல் வார்த்தையால் தடு அதுவுமுடியாவிட்டால் மனதால் வெறுத்து அந்த இடத்தை விட்டு ஒதுங்கிவிடு என்பது தான்.

இதைதான் மறைந்த மர்ஹூம் சாளை ஐதுரூஸ் மாமாவும் இங்கு ஜித்தாஹ் வில் இருந்த நேரம் பல விசயங்களில் எங்களுக்கு அறிவுறித்தியது.

தொடர்ந்து தம்பி சாளை ஜியா அவர்களுக்கு பதிலளித்து இதை விவாத மேடையாக்க நான் விரும்ப வில்லை.

இனியாவது நமக்குள் பாகுபாடு இருந்தாலும், இல்லாததை எழுதி நம்மை நாமே காய படுத்திக்கொள்ள வேண்டாம். என சென்ற பதிவில் எழுதுயதை வலியுறித்தி முடிக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
56. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [18 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 11246

Do people from Jeddah, Riyadh, Qatar, China, Hong Kong, think that they are in a better position to inform Kayalites about what is going on and around Kayalpatnam ?

or

Do they simply refuse to believe what people living in kayalpatnam are writing about just because it is hard to believe?

But one thing they failed to understand is that "straight from the horse's mouth" is more authentic than any other form of media.

Believe it or not! Here is an another example of what had happened?

Yesterday (17th) afternoon a friend of mine who is a staunch supporter of Aikkiya Peravai called me from Chennai and asked me the following question.

“Is it true that Mr. X (supporter of Sis., Abidha )’s car was seized by police yesterday (16th night) for breaking the election rule and it is still been impounded / under the custody of authorities? .

My answer was a big “No” ,because hardly half an hour before (11:30 am on 17th ) I saw him coming out of a Voting Booth along with his family and getting into his car after voting. I told my friend what I witnessed. He said “may be” but his car was held by police yesterday. (He swallowed other half of the question) I asked him how u know? He answered saying “Through a reliable source”.

I knew it cannot be true because I knew Mr. X for quite some time and he does not indulge himself in illegal activities. But the same time I cannot discard my friend’s question about Mr. X. I knew immediately that something went wrong somewhere. My mind forced me to act on this news and I called few guys to find out as to what happened?.

I called a close associate of mine (Mr. AJ) and asked him about what I heard. He said that He was with Mr. X on 16th and no untoward incident happened either to Mr. X or to his car. He was very active the whole of yesterday looking for culprits who are distributing money.

Mr. AJ started narrating an incident which I think was twisted and spread by opponent of Mr. X. which was not true. On 16th morning around 10:30 am, Mr. AJ along with his friend stood near ICICI Bank corner. Suddenly they saw a red car belongs to Mr. Y, drove past them. They did not fail to notice Mr. Z, was travelling with Mr. Y. (Both of them appeared on public meeting arranged by Aikkiya Peravai on 10th Oct and addressed to the public) which caused suspicion.

They follow the car in their bike and the car passed through L.F. Road. Mr. AJ thought of giving up the chase because Mr. Y might be going to his residence in L.F.Road. But his friend overruled Mr. AJ’s decision and continued their chase. They saw the car did not stop at Mr. Y’s residence and continued towards west. Again at one point both of them wanted to give up thinking the car may be going to the petrol bunk (Kayal Fuel Centre) to fill petrol. Their instinct forces them to continue. The car went past petrol bunk and turned into L.R. Nagar and stopped in front of a house. A man (Non-Muslim) from that house came out and started talking to MR.Z.

Watching the whole drama unfolding, Mr. AJ and his friend smelled something fishy called Mr. X and informed them about incident. Mr. X, assured them saying they are on their way to L.R. Nagar and advised them to follow them closely. Meantime Mr. Y & Mr. Z. took the man in to the red car and sped away. Mr. AJ tries to chase them but failed. He lost them. After few minutes Mr. X, arrived with media people and friends. Mr. AJ and his friend narrated the incident in details and informed them about the disappearance of the car.

While they were talking, the neighbours said that, those two people took our man to negotiate the deal. He is amiddle-man. The red car re-appeared suddenly from the nowhere. Mr. Y & Mr Z shell-shocked to see Mr. X standing with media person and others at very same spot where they picked up the man. Not knowing what to do, these two politicians started blabbered , saying “ why are u here? we are not doing any wrong and why are u following us. Mr. X told Mr. Z, as long as you are here we will not move an inch. Mr. Y & Mr. Z. dropped the poor guy at his door step sped away in no time.

The vigilantes started interviewing the poor guy and came to know that they are trying to bribe the people in that locality through this poor human. Little later they came to know a deal was struck and money (Rs.500) will be distributed through this guy for the people in the neighbourhood for voting for a particular symbol. His neighbours came and said that, “Sir, “Had you people come few minutes late, you could have caught hold of those two (Mr.Y & Mr. Z) red handed while downloading their money from the boot of that red coloured vehicle.

Anyhow Mr. X, and their associates were happy that a wrong going was thwarted by their timely action.

(I have personally confirmed the alleged incident with the media person who had accompanied Mr. X, who claimed to be holding recorded evidence of the incident and will publish the story in more details in his medium)

This story was twisted by these two politicians in order to cover up their wrong doings. They spread false information to taint Mr.X’s reputation. If they do not desist from doing this, video recorded proof will be uploaded in “You tube”. They did all wrong doings in the name of Peravai. Peravai will have to bear the brunt of allowing these two people to appear on their stage. In other word, respected elders have to face the consequences for allowing Peravai to be high-jacked by these third class politicians.

I informed my chennai friend about the incident and thanked him for asked me question naively. He inadvertently instigated me to investigate the incident which ended up help revealing the truth.

"And do not overlay the truth with falsehood, and do not knowingly suppress the truth"; (Al-Quran 2:42))

"And say: "The truth has now come [to light], and falsehood has withered away: for, behold, all falsehood is bound to wither away!" (Al-Quran 17:81)

--------------------------------------- END ------------------------------------


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
57. Re:மாஷா அல்லாஹ்..
posted by OMER ANAS (DOHA QATAR.) [18 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 11250

கள்ள வோட்டு!!! லஞ்சம்!!! அதற்க்கு உடந்தை!!! இதை யார் செய்தாலும், குற்றம் குற்றமே!!! பாவம் பாவமே!!! அப்படி என்றால், மூன்று உறுப்பினர்களை உத்தமர்கள் என்று அழைத்து, சால்வை போட்டது, I I M . அதில் ஒரு உறுப்பினர் நான் வாங்கினேன் வாங்கி நல்ல காரியங்களுக்கு கொடுக்கச்சொன்னார்கள் கொடுத்தேன் என்ற போது, எங்கு போனது உங்கள் வியாக்கியானமும் கருத்துக்களும்.

எங்கு இருந்தார்கள் இந்த ஜியா தம்பியும், மண்ணின் மைந்தனும், இல்லை சாஜித், முத்து வாப்பா, மற்றும் கள்ள வோட்டை பற்றி பேசும்,கண்ணியவாங்களும்? அபப உங்கள் கருத்து வரவில்லையே? தப்பு என்று தெரியலையா? இல்லை, நீங்கள் செய்தால் தப்பே இல்லையா???



மாஷா அல்லாஹ் எங்களுக்கு ஒரு நியாயம் உங்களுக்கு ஒரு நியாயமா??? இந்த கருத்தை இதே வளை தலத்தில் வேறு விதமாக பதிவு செய்தேன் ரிஜக்டும் பண்ணவில்லை. போடவும் இல்லை>>> காரணம் மற்றவர்களை நாங்கள் கேட்க கூடாது என்பதாலா? இல்லை உண்மையினை இவர் ஏன் இப்ப சொல்ல வருகிறார் என்பதாலா? தொடர்வேன். பதிலுக்கு காத்திருக்கின்றேன்>>>>>>>>>!!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
58. Re:முழு பூசணிக்காய்.
posted by OMER ANAS (DOHA QATAR.) [18 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 11253

கமான்ட் 43 REF NO 11180 புதிதாக ஒரு முழு பூசணிக்காயை நெஞ்சில் மறைக்க பார்த்துள்ளார்.

போராவோடு ஒட்டு போட செல்லும் எல்லா பெண்களும் கள்ள வோட்டுதான் போட போகிறாகள் என்று நினைத்து, முகத்தை காட்டு முகத்திரையை கிழிப்பேன் என்றெல்லாம் உங்கள் ..... சொன்னதையும் சேர்த்து சொல்லி இருந்தால், உண்மை தெரிந்து விடும் மக்களுக்கு என்று பாதியை சொல்லி குழப்பி இருக்கின்ர்றார்.

கண்ணியமான பேச்சு இங்கேயே இல்லையே சகோதரிக்கு. அங்கே போனால் வரும் என்றா நினைக்கிறீர்கள்.?

ஆமா 3 ஆவது கருத்தை உங்களுக்கு சொன்ன அந்த பால் வடியும் முகத்துக்கு சொந்தக் காரர்,,, இவக உள்ளே போய் குழப்பியதை சொல்லலையா? கேட்டுப் பாருங்கள் மீண்டும்>>> அவர் வாபஸ் வாங்கி விடவார்....!!! தீர விசாரிக்காமல் நீங்கள் கண்ணால் காண்பது உண்மையானால், நாங்கள் காதால் கேட்பதும் உண்மையே!!!தேவைப்படின் தொடர்வோம்.உண்மையோடு.!!!! வர்ர்ரர்ர்ர்ர்ட்ட்ட்டட்ட்டா!!!!!

Moderator: இக்கருத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளரிடம் விசாரிக்கப்பட்டதில், “போட்ட ஓட்டுக்கான அடையாள மையை வெளிப்படையாகவே சயனைட் கொண்டு அழிக்கின்றனர்... இதற்காக, அனைத்து ஜமாஅத் ஒற்றுமை முழக்கமிட்ட ஒருவர் ஒளிவு மறைவின்றி சயனைட் வாங்கியும் வருகிறார்... சமயம் வரும்போது தவறு செய்வோரின் முகத்திரையைக் கிழிப்பேன்” என தான் கூறியதாகவும், அது அவ்விடத்திலேயே திரித்து அறியப்பட்டதைக் கேள்வியுற்று, அவ்வாறு தவறாகப் புரிந்துகொண்ட பெண்ணிடம் விளக்கிக் கூறி, “நான் அந்த பொருளில் சொல்லவில்லை... ஒருவேளை தாங்கள் தவறாகப் புரிந்துகொண்டால், அவ்வாறு தவறாகப் புரிந்துகொள்ளும் வகையில் எனது சொல் அமைந்ததற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்...” என்று தெரிவித்ததாகவும் கூறியதோடு, “இதற்கு மேலும் இதேபோன்று திரித்துக் கூறுவோருககு இதுவே எனது முதலும், இறுதியுமான விளக்கம்” என்றும் தெரிவித்துள்ளார்.

தனிநபரின் பெயர் குறிப்பிட்டு இக்கருத்து பதிவு அனுப்பப்பட்டுள்ளதால், அது தொடர்பானவரிடம் விசாரித்த பின், சகோ. உமர் அனஸ் அவர்களின் இக்கருத்து தணிக்கை செய்யப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
59. Humble Request to Mr. Sajith-Dubai
posted by Noordeen Prabu (Jeddah-Saudi Arabia) [18 October 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11262

What Mr. AWS says is absolutely right.

He quotes ----------- "But one thing they failed to understand is that "straight from the horse's mouth" is more authentic than any other form of media.""

இதே கருத்துப்பட தாங்க நானும் சகோதரர் சாஜித்-துபாய் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன். (News ID: 7378 dated 15-Oct-2011 & Comment Ref.: 11126 --- வாக்கு கோரி மிஸ்ரியா அறிக்கை என்ற தலைப்பில் வந்த செய்தி)

ஒரு வேளை அவர் என்னுடைய கருத்தை பார்க்காமல் கூட இருந்திருக்கலாம். It will be well & good if he sees my comment right now & clarify his stand on that issue.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
60. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATINAM) [18 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11269

சகோதர்களே.... சாளை.ஜியாவுத்தீனும் அப்துல் வாஹித் சைபுதீனும் சொல்வது அத்தனையும் உண்மை.. உண்மை.. உண்மையைதவிர வேறில்லை.

தம்பி குடாக் புஹாரி இன்னும் தம்பி அப்துல் காதர் பாதுல்அஷாப் இவர்களெல்லாம் பகுதி பாசத்தில் நிலை மறந்து எழுதுகிறார்கள். நானும் அதே பகுதியை சார்ந்தவன்தான்.

கள்ள ஒட்டு போட வந்ததால் போலீசில் ஒருவர் சிக்கினார். (அவர் பெயரை சொல்ல விரும்பவில்லை.) ஆனால் அதன் காரணமாக வாக்குப்பதிவு முடிந்த பிறகும் பூத்தை விட்டு வெளியே வரமுடியாமல் சதுக்கை தெரு இளைஞ்சர்களின் கோபத்திற்கு ஆளாகி பூத்தைவிட்டு மிகுந்த பாதுகாப்புடன் வெளியேறியவர் முஜம்மில் காக்கா. அவர் ஆபிதாவின் பூத் எஜென்ட்.

கள்ள ஓட்டை போட முயன்று இறுதியில் தனது உண்மையான ஓட்டையும் கூட போட முடியாமல் போன பெண்மணி எனது நெருங்கிய சொந்தக்காரர். எல்லாமும் உண்மை. இது எதுவும் ஜியவுதீனோ அப்துல் வாஹிதோ சொல்லி நான் அறிந்தவை அல்ல. ஓட்டுப்போட போன என் மனைவியும் மகளும் நேரில் கண்டு சொன்னது.

எனவே மத்திய காயல் வீர சிங்கங்களே... நீங்கள் நினைத்தால் நான்கு நிமிடத்தில் பெட்டியை நிரப்பி விடுவீர்களாம் . (இது நான் சொல்வதல்ல. உங்கள் ஐக். பேரவை பொதுக்கூட்டத்தில் ஒரு காங்கிரஸ் பிரமுகர் சொன்னது.) இதற்க்கெல்லாம் கோபம் கொள்ளாத நீங்கள் பொங்கி ஏலாத நீங்கள் உண்மையை எழுதும் சிலர் மீது மட்டும் பாய்வது ஏன் ?ஆனால் எது எப்படியோ அந்த காங்கிரஸ் பிரமுகர் உண்மையே சொன்னார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
61. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by Seyed Mohamed Sayna (Bangkok -Thailand ) [18 October 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 11273

Dear Admin,
Please post this comments ,
please dont reject this comments or Edit this comments Thanks

Comment Reference Number: 11198

அஸ்ஸலாமு அழைக்கும்,

அன்புள்ள சகோதரர் Omer Anas ,

ஒரு சின்ன வேண்டுகோள் தாங்கள் என்னுடைய பேயாரை தவறுதலாக உச்சரிததுக்கு நான் கோப படவில்லை , காரணம் எனக்கு என்னுடைய தாய் தந்தை இட்ட பெயர் Seyed Mohamed அதை சுருக்கி sayna muna என்று முதலில் குபிடார்கள் பிறகு அதும் பெய்ரியதாக இருக்கிறது என்று Sayna என்று குபிட்டர்கள் இபொழுது தாங்கள் சைனா என்று குப்பிடு கிறீர்கள் இது உம நன்றாக தான் இருக்கிறது ,

தாங்கல் என்னுடைய கருத்தை தினமும் பார்த்துதான் வருகிறீர்கள் முதல் கடன் அதற்கு நன்றி தேறி விகிறேன்

தாங்கள் குறிபிட்டு இருகிரீகள் உங்கள் ஆபிதா,என்று காயல் பதி இல் பிறந்த அனைவர்களும் எங்கள் சகோதர சகோதரிகள் இதில் நிகழும் வருவீர்கள்

தாங்கள் இநோன்றும் சொல்லி இருக்கிறீர்கள்அனைத்து மக்களின் ஒரு மித்த ஜமாத் மக்களின் பக்க பலத்தோடும் என்று SEP 24 சனிக்கிழமை 2011 அன்று சொன்னது நினைவில்லையா? முதலில் நம்மை நாம் அறிய வேண்டும்!!! பின்னால் தான் பதில் சொல்ல வேணும்!!!

எனக்கு நினய்வு இல்லை , என்னால் முடிந்த வரை , அல்லா எனக்கு குடுத்த அறிவை வைத்து நான் அறிந்து கொண்டேன் , உங்களுக்கு எதும் என்னை பத்தி தேரிந்தால் சொல்லுங்கள் தவறு இருப்பின் திருத்தி கொள்கிறேன் ,

எனக்கு பின்னால் பதில் சொல்ல தேறியது முகத்துக்கு முகம் பதில் சொல்லி விடுவேன் , (தாங்கள் கூறியது வேற அறுத்ததில் )

நாம் அனைவரு காயல் மண்ணின் மைதர்கள் ,
ஒருவரை ஒருவர் குற்றம் சொல்ல இங்கு வர வில்லை எனக்கு தெய்ரியாதது உங்களுக்கு தரிந்தால் கற்று தாருங்கள் கற்று கொள்கிறேன் ,

படித்தவன் எல்லாம் புத்தி சாலியும் அல்ல
படிக்காதவன் எல்லாம் முட்டலும் அல்ல

திரும்ப உம சொல்லி கிரேன் நான் எழுதியதில் தவறு எதும் இருப்பின் அல்லா ரசுளுக்காக மன்னித்து விடுங்கள் நான் வாதம் பண்ண விரும்ப வில்லை , இதுக்கு நீங்கள் பதில் கமெண்ட்ஸ் குடுத்தாலும் நான் பதில் அளிக்க விரும்ப வில்லை , காரணம் யான் வீண் பிரச்னை , இருவரும் யார் என்று தேரியாமல் இணைய தளம் மூலமாக சண்டை இட்டு பிறர் வேடிக்கை பார்த்து கிட்டு , எனகாக இறைவனிடத்தில் துஆ செயுங்கள் எனக்கு நல்ல ஹிதாயத்தை குடுக்க எல்லா வற்றிற்கும் வல்ல ரப்புல் ஆலமீன் போதுமானவன் மாசலம்

Seyed Mohamed (சைனா)
Bangkok - Thailand


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
62. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [18 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 11274

Allahumma Inni Auzubika Min Fitnatin Nisa va Fitnatin Rizal


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
63. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by Mohiadeen (Phoenix) [18 October 2011]
IP: 71.*.*.* United States | Comment Reference Number: 11276

http://www.dinamalar.com/district_detail.asp?id=333760

இதே படிங்க முதலே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
64. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by Palayam MAC (Kayalpatnam) [18 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 11291

தைக்கா தெரு , புதுக்கடை தெருவில் மிகுதியான அளவுக்கு கள்ள வோட்டு போடப்பட்டிருக்கிறது என்று நம்பத்தகுந்த செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது . ஒரு ஆசாரிக்கு பணம் கொடுத்ததை , என் உறவினர் ஒருவர் நேரில் பார்த்த சாட்சியும் உண்டு. ஆக , dear gentlemen , , யாரைப்பற்றியும் குறை கூறாதீர்கள். - comment # 11165

மேலே கூறப்பட்டிருக்கும் கருத்து முற்றிலும் பொய். சகோதரி மிஸ்ரிய அவர்களுக்கு அவர்களது மாமாவும், பெண் உறவினரும் சகோதரி ஆபிதா அவர்களுக்கு தோழிகளும் பூத் ஏஜன்ட்களாக இருந்ததாலும், வார்டு வேட்பாளர்கள் சாமு காக்கா, பாட்டா மஹ்மூது மற்றும் செயிது காக்கா ஆகியோருக்கு அவர்களது உறவினர்களே பூத் ஏஜென்ட்களாக இருந்ததால் கள்ள ஓட்டுகள் அங்கு போடப்படவில்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும். மேலும் சாமு மற்றும் செய்து கக்காமார்கள் இடையே கடும் போட்டி இருப்பதால் நிச்சயமாக அவர்கள் ஏஜண்டுகள் யவரையும் கள்ள வோட்டுகள் போட அனுமதித்திருக்கமாட்டர்கள்.

Note: இந்த வார்டில் எந்த ஒரு ஆசாரிக்கும் வோட்டு இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். சந்தேகம் இருந்தால் வாக்காளர் ஜாபிதாவை சரிபார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஒருவேளை வூடு போடவந்த வாக்காளர் யாராவது அந்த ஆசாரிக்கு அன்றைய கூலியை கொடுக்கும்போது பார்த்துவிட்டு தவறுதலாக உங்களுக்கு தெரிவித்து இருக்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
65. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by AbdulKader (Abu Dhabi) [18 October 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11296

அஸ்ஸலாமு அழைக்கும்.....

"உண்மை.. உண்மை.. உண்மையைதவிர வேறில்லை"..... எல்லாம் OK. நான் தவறை ஒரு போதும் சரி என்று சொல்லவில்லை!! தவறு எங்குதான் நடக்கவில்லை? காயல்பட்டிணத்தில் மாத்திரம்தான் இந்த அவலநிலை (அதிலும் மத்திய காயலில்) என்று நீங்கள் சொன்னால் யார்தான் பதிலடி கொடுக்காமல் இருப்பார்கள்? ஓட்டு பதிவு சதவிகிதத்தை எடுத்து பாருங்கள், எங்கு கூடுதல் ஓட்டு பதிவாகிஉள்ளது என்று!

நான் கேட்பது எல்லாம் ஒரே ஒரு கேள்வி...... உங்களை யார் இந்த உண்மைகளையெல்லாம் (குழப்பத்தை) இந்த வலைதளத்தில் பதியச்சொன்னது?! நீங்கள் எல்லோரும் உண்மையை கூறுகிறோம் என்று... இங்கு குழப்பத்தை தவிர வேறு ஒன்றும் கூடுதலாக செய்துவிடவில்லை!!!!

நமக்கு இங்கு தரப்பட்ட ஒரு "செய்தியை" செய்தியாக படித்தோமா... அல்லாது.... அதை கொண்டு "பித்னவை" (குழப்பத்தை) உண்டாக்குகிறோமா என்று நீங்கள் யாவரும் சிந்திக்க தவறிவிட்டீர்கள்.

நான் காயல்பதியில் எந்த பகுதியை சேர்ந்தவனாகவும் இருக்கட்டும். இங்கு பதியப்பட்ட கருத்துக்களின் விபரீதத்தால் அவமானம் என்று வரும்போது... நான் காயல்பட்டிணத்தை சார்ந்தவன் என்று சொல்ல வேக்கப்படவேண்டி வரும் போல் தெரிகிறது!!

சிந்திப்பவர்களுக்கு நான் மேலே கூறியது போதும் என்று நினைக்கிறேன்!???

வஸ்ஸலாம்
அப்துல்காதர்(பாதுல்அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
66. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by CNash (Makkah ) [18 October 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11298

இவ்வளவு நாள் ஓட்டை மட்டுமே குறியா கொண்டு ஊர் ஒற்றுமை, ஐக்கியம் என்று முழங்கியவர்கள் இன்று குறுகிய வட்டத்துக்குள் நின்று கொண்டு மத்திய காயல் மாநில காயல் என்றெல்லாம் கூறு போட ஆரம்பித்து விட்டார்கள்!!!

3 ஊர் தலைவர்களை தந்த பெருமை இருக்கலாம், ஆனால் ஒரு பெண் கள்ள ஒட்டு போட்டு அதுவும் பிடித்து வைக்க பட்டால் அது நமக்கு ஏற்பட்ட அவமானமாக கருதி அந்த செயலை கண்டிக்க செய்வது தானே முறை !!! அதை விடுத்து மத்தியம், பத்தியம் என்றல்லாம் பேசுவது தானா ஐக்கியம்!!

மகாத்மா காந்தி பிறந்த மண் என்பதற்காக .அந்த மண்ணில் பிறந்த மாகா கொடியவன் நரேந்திர மோடியையும் வாழ்தாவா முடியும்!! செய்யும் தவறை மட்டும் பார்க்கவும், தவறு என்றால் கண்டிக்கவும்!! அது என் தெருவில் இருந்தாலும் சரி உங்கள் தெருவில் இருந்தாலும் சரி !! பிறந்த இடத்தையும், பாரம்பரியத்தையும் அல்ல!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
67. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by Mohiadeen (Phoenix) [18 October 2011]
IP: 199.*.*.* United States | Comment Reference Number: 11300

"உண்மை.. உண்மை.. உண்மையைதவிர வேறில்லை..... நான் கேட்பது எல்லாம் ஒரே ஒரு கேள்வி...... உங்களை யார் இந்த உண்மைகளையெல்லாம் (குழப்பத்தை) இந்த வலைதளத்தில் பதியச்சொன்னது?! நீங்கள் எல்லோரும் உண்மையை கூறுகிறோம் என்று... இங்கு குழப்பத்தை தவிர வேறு ஒன்றும் கூடுதலாக செய்துவிடவில்லை!!!!"

இது ஓரு சகோதரின் கேள்வி.

வலைத்தளம் தான் பேரவையின் ஆணவ செயல்பாடுகளை வெளீய கொண்டு வந்து ஜனநாயத்துக்கு வழி செய்தது.

பேரவையின் தன் சொந்தம் கொண்டு சுய லாபம் தேடுவர்கள்ளு வலைதளத்தின் உண்மை கசகத்தான் செய்யும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
68. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by Mohiadeen (Phoenix) [18 October 2011]
IP: 199.*.*.* United States | Comment Reference Number: 11301

"உண்மை.. உண்மை.. உண்மையைதவிர வேறில்லை"..... எல்லாம் OK. நான் தவறை ஒரு போதும் சரி என்று சொல்லவில்லை!! தவறு எங்குதான் நடக்கவில்லை? காயல்பட்டிணத்தில் மாத்திரம்தான் இந்த அவலநிலை (அதிலும் மத்திய காயலில்) என்று நீங்கள் சொன்னால் யார்தான் பதிலடி கொடுக்காமல் இருப்பார்கள்?"

நானும் மத்திய காயல் தான் (குத்துக்கள் தெரு). உண்மை தான் சொல்லூறோம்.

http://www.dinamalar.com/district_detail.asp?id=333760

தவறை சுட்டிகாட்டினால் எற்று கொள்ளுவூம். பேரவை மாதிரி ஆணவ அறிக்கை விட மாட்டோம்.( "பதிலடி" என்று குழப்பத்தை உண்டாக்க வேண்டாம்)

இவ்வளவு நாள் ஓட்டை மட்டுமே குறியா கொண்டு ஊர் ஒற்றுமை, ஐக்கியம் என்று முழங்கியவர்கள் இன்று குறுகிய வட்டத்துக்குள் நின்று கொண்டு மத்திய காயல் மாநில காயல் என்றெல்லாம் கூறு போட ஆரம்பித்து விட்டார்கள்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
69. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by AbdulKader (Abu Dhabi) [18 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11302

அஸ்ஸலாமு அழைக்கும்...

அருமை தம்பி CNash அவர்களே.... நீங்கள் யாரை குறிப்பிட்டு சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. உங்கள் உள்ளம் என்னை பற்றி எதயாவது எழுதச்சொல்லியிருந்தால், கீழே படியுங்கள்.

தயவுசெய்து செய்திகளை நன்றாக படித்துவிட்டு பதில் கருத்து பதியுங்கள். இவை வீணான குழப்பத்தை விட்டும் நம்மை பாதுகாக்கும்.

இன்று குறுகிய வட்டத்துக்குள் நின்று கொண்டு மத்திய காயல் மாநில காயல் என்றெல்லாம் யாரும் கூறு போடவில்லை!! மத்திய காயல் மக்களை பற்றி புகார் வந்தபோது....வாக்குவாதம் மோசமாகிக்கொண்டு போனது. ஆகையால்... நான் மத்திய காயல் மக்களுக்கு பொறுமையை எடுத்துச்சொன்னேன்! அவ்வளுவுதான்!! வழமைபோல் உங்கள் ஈட்டி யாரையோ பதம்பார்க்க புறப்பட்டுவிட்டது.

வஸ்ஸலாம்
அப்துல்காதர்(பாதுல்அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
70. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by Mohamed Ali (Madina Al Munawwara) [18 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11306

அஸ்ஸலாமு அலைக்கும் .

பிற பகுதிகளை ( வார்ட்) விட மத்திய காயல் polling % ரொம்ப கம்மியாகவே உள்ளது .அதை kayal.com வார்டு வாரியாக பதிவான வாக்குகள் விபரம் மூலம் அறிந்து கொள்ளலாம் .எனவே மத்திய காயலில்தான் கள்ளவோட்டு அதிகம் போல் jimmick செய்வதை தவிர்க்கவும். எல்லாம் வார்டுகளிலும் கள்ள வோட்டு எனும் மோசடி செயல் அரங்கேறி இருக்கிறது.

கள்ள வோட்டு எனும் தவறை யார் செய்திருப்பினும் குற்றம் குற்றமே. தயவு செய்து குறிப்பிட்ட பகுதி பெண்களை மட்டும் நானும் மத்திய காயல் வாசிதான் என்று சொல்லிக்கொண்டு பெண்களை விமர்சிப்பது அநாகரிக செயல் .எல்லா பெண்களும் போற்றபடக்கூடியவர்கள் கண்ணியம் காக்கப்பட வேண்டியவர்கள் சற்று சிந்தியுங்கள் உங்கள் குடும்பங்களிலும் பெண்கள் இருக்கலாம் நாளை அவர்களும் விமரசிக்கபடலாம் (அல்லாஹு அப்படி இல்லாமல் காப்பானாக ) இந்த வலைதளம் நாம் மட்டும் பார்பதில்லை மற்ற பிற சமுடாயதவர்களும் காணக்கூடியது அது அவர்களுக்கு நமதூரின் பெண்களின் நிலை பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்தும்.

இதை குறை கூறுகிறேன் என்று எண்ணாமல் ஊரின் கண்ணியம் கருதி ஒரு தொலை நோக்கு (long term view) சிந்தனையில் யோசிக்கலாமே.இது குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் அல்ல அனைவர்களுக்கும் பொருந்தும்.அட்மின் தயவு செய்து கட் பண்ணி விடாதே . வஸ்ஸலாம். Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
71. காமாலை கண்ணுக்கு
posted by kudack buhari (doha-qatar) [18 October 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 11310

காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்

K S MUHAMED SHUAIB காக்கா சொல்கிறார் கள்ள ஓட்டை போட முயன்று இறுதியில் தனது உண்மையான ஓட்டையும் கூட போட முடியாமல் போன பெண்மணி எனது நெருங்கிய சொந்தக்காரர். உண்மையை சொன்னீர்கள்

உங்கள் சொந்தகாரர் ,புத்தகத்திற்கு கள்ள ஒட்டு போடா வந்து அது முடியாமல் போன விரக்தியில் தாங்கள் ஏதேதோ உளரி கொட்டி இருக்கிறீர்கள் ,

முதலில் நாம் நம் வீட்டை திருத்தலாம் அப்புறம் ஊரை திருத்த புறப்படலாம் ,

உண்மை.. உண்மை.. உண்மையைதவிர வேறில்லை.என்று தாங்கள் சொல்லுவது சகோதர்.... சாளை.ஜியாவுத்தீனும் அப்துல் வாஹித் சைபுதீனும் சந்தோசபடலாம் ,எனக்கு கோர்டில் டவாலி கூவுவது போலதான் இருக்கு ,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
72. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by OMER ANAS (DOHA QATAR.) [18 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 11311

அஸ்ஸலாமு அழைக்கும். சகோ செய்து முஹம்மது அவர்களே!!! நீங்கள் என்னை விட மூத்தவரோ இளையவரோ எனக்கும் தெரியாது. என் தம்பி (சகலை) ஸாலிஹ் இடமோ, லெப்பை குட்டி என்ற மச்சினர் மு.அ. காதரிடமோ தெரிந்து கொள்ளுங்கள்.

நான் ஊரை மட்டுமே விரும்பும் ஒரு சராசரி மனிதன். நானும் படித்த முட்டாள் இல்லை!!! எனக்கு மத்திய காயல் மாநில காயல் என்று ஒன்றும் தெரியாது. நாம் யாவரும் காயலர்களே!!!

ஊரில் சிலர் செய்யும் நல்ல காரியங்களை பாராட்டுவேன். மிரட்ட நினைப்பவர் யாராக இருந்தாலும், சுருக்கமாக அதே நேரம், பலமாக தட்டிக் கேட்பேன். எனது மூன்று கருத்துக்களை இதுவரை அட்மின் போடவும் இல்லை தனி நபர் விமர்சனம் என்று ர்ஜக்டும் பண்ணவில்லை காரணம் அதில் உண்மை உள்ளது!!!

உண்மையினை பொய்யர்கள் கூறும் போது சகோதரா, இந்த அட்மின் வெளியிடுகிறது. என் கருத்து உங்களை கேலி கிண்டல் செய்வதாக இருப்பின் நானும் வருந்துகிறேன். எனக்கு நல்ல காயல் அமைய வேண்டும் என்பதே தவிர, வேறொன்றும் அறியேன்!!!

இனி அது நடக்காது. காரணம். போட்டி,பொறாமை காரணமாக நாம் நம்மை அறியாமல் ஊழல்,லஞ்சம் சாராயம் என்று மக்களை திசை திருப்பி, வோட்டு வேட்டை ஆடி இருக்கின்றோம்!!! உண்மை விரைவில் வெளி வரும்!!! அப்ப கள்ள வோட்டு போட்டு ஜெயித்தார்கள் என்று சொல்வார்கள்.

நானும் கேட்கிறேன் தங்கையை விட்டு விட்டு இவ்வளவு நேரம் காத்திருந்த ஒருவர் தங்கையிடம் எவ்வளவு வாக்கு போட சொன்னார்? இன்றைக்கும் நாளைக்கும் இவரால் விளக்கம் தர முடியாத ஒரு விளக்கம் கேட்டும் பதில் இல்லையே? ஏன்? என்னை தப்பா எடுத்துக் கொள்ள வேணாம்.!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
73. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by BASHEER MARICAR (KAYALPATTINAM) [19 October 2011]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 11314

காயல்பட்டணத்தில் கள்ளவோட்டு என தினமலர் நாள்இதழில் செய்தியை படித்துவிட்டு காயலர்கள் மனம் புன்பட்டுருக்கும். மத்தியகாயலில் யாரும் கள்ளவோட்டு போடவில்லை என பொய்யை உரக்க கூறினால் உன்மையாகிவிடுமா?

இவ்இனையதளத்தில் வெளிவரும் செய்திகளுக்கு கருத்து தெரிவிப்போரில் ஆரோக்கியமாக கருத்து தெரிவிப்போர் மிக மிக குறைவு

கேலிகள், கின்டல்கள், காயல் ஒற்றுமைக்கு வேட்டு வைப்பது, பிறரை இதன் மூலம் விமர்சனம் பன்னுவது, கருத்தினை பதிவோரின் பெயரை குறிப்பிட்டு அவருக்கு பதில்லுரைப்பது, ஒரே செய்திக்கு ஒருவரே திரும்ப திரும்ப பதிலுக்கு பதில் செலால்வது, அதிகமாக உள்ளது. எனவே ஒவ்வெரு செய்திகளுக்கும் கருத்தினை பதிவு செய்யும் முறையினை பரிசிலிக்க வேண்டும்.

அன்புடன் : பஷீர் மரைக்கார். காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
74. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATINAM) [19 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 11333

தம்பி குடாக்புகாரி ....நான் இங்கு ஊரில் இருந்து நிலைமையை நேரில் கண்டு எழுதுகிறேன். ஆனால் நீங்கள் எங்கோ தோஹா (கத்தார்)வில் இருந்துகொண்டு எனக்கு மஞ்சள் காமாலை என்கிறீர்கள். பரவாயில்லை.

கள்ள ஒட்டுப்போட்டவர் எனது நெருங்கிய சொந்தம்தான். இன்னும் சொல்லப்போனால் அவர் உங்களுக்கும் தெரிந்தவராகவோ அல்லது சொந்தமாகவோ கூட இருக்கலாம். சில பல காரணங்களால் அந்த பெண்மணியின் பெயரை இங்கு என்னால் குறிப்பிடமுடியவில்லை அவர் புக் வாசிப்பவரில்லை. பஸ்சில் பயணம் செய்பவர்தான்.

உங்களுக்கு அவசியம் அந்த பெண்மணியின் பெயர் தெரியவேண்டும் எனில் கீழே எனது போன் நம்பர் தருகிறேன். விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். என் வீட்டில் யாரும் எந்த காலத்திலும் கள்ள ஒட்டு போட்டதில்லை. எனவே வீட்டில் இருந்து துவங்கும் அவசியம் எனக்கில்லை. முடிந்தால் உங்கள் அறிவுரையை கள்ள ஒட்டு போடும் நபர்களுக்கு சொல்லுங்கள்.

எனது போன் நம்பர் 04639 285141

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
75. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [19 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11336

சகோதரர்கள் உதாரணம் காட்டும் தினசரி செய்தி இன்று தமக்கு ஆதரவாக செய்தி வெளிட்டிருப்பதால் இவர்களுக்கு இதில் வரும் எல்லாம் வேத வாக்கோ?

இதே தினசரி பத்திரிகையை பற்றி தெரியுமா இவர்களுக்கு?

காயல் பட்டினத்தில் கருப்புப்பணம், வைரங்கள் சிக்கின என்று அதன் மதிப்போடு, இல்லாததை வெளியிட்டு நமதூர் இஸ்லாமியர்கள் வாழும் இடம் என்பதால் நம்மை கேவலப்படுத்தியது. தங்களுக்கு தெரிய வில்லையெனில் தங்கள் மூதாதையர் களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அன்று முதல் நமதூரில் Y.U.F போன்ற முன்னணி நூலகங்களில் இதை தடை செய்தார்கள். இன்றும் அதன் விசகருதுக்களை நம்மீதும் , நம் சமுதாயத்தின் மீது வீசுவதை யாரும் மறுக்க முடியாது.

எனவே தங்களுக்கு ஆதரவான செய்தி என நச்சுபாம்பின் விசத்தை சகோதரர் களே அமிர்தம் என்று பருகவேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
76. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [19 October 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11338

இப்போது சந்தோஷம் தானே. தினமலரில் செய்தி வெளிவந்து இருக்கிறது. ஊரின் ஒற்றுமைக்கு விரும்பாத மாபாவிகள் (அது யாராக இருந்தாலும் சரிதான்) பொய்யான வாக்குறிதிகளை புற நகரிலே அள்ளி தெளித்து புதிய நகர் மன்றம் அமைந்தால் சுனாமி குடிஇருப்புகள் தடை இன்றி நடைபெற வுதவி செய்வோம் என்று ஊரின் வருங்கால நலனை விரும்பாத புல்லுருவிகள், அற்பத்தனமான ஒரு வாக்குக்காக வேண்டி புற நகருக்கு புதிய வழியை பிரசுரம் மூலம் வெளிஇட்டவர்கள் வாழ்க.

இறை இல்லங்களின் பொறுப்பில் இருந்து கொண்டு வாக்களிக்க பணம் கொடுத்த, பொருள் கொடுத்த, வினியோகித்த சமுதாய புரட்சி வாதிகளே வாழ்க .

ஆயிரம் குழப்பம் ஏற்பட்டாலும் எங்களுக்கு அதை பத்தி எல்லாம் கவலை இல்லை. எங்களுக்கு கிடைக்கும் செய்திகளை வரி பிசகாது வெளி இடுவோம் என்று மார்தட்டும் வலை தளங்கள் வாழ்க .

குழப்பம் ஏற்படுத்துபவர் களுக்கு கண்மணிநபி நாயகம் அவர்கள் விடுக்கும் எச்சரிக்கை. தாங்கள் அறிந்து இருப்பீர்கள் . அல்லா தான் நம் ஊரை காப்பாற்ற வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
77. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by Shahul Hameed (Hong Kong) [19 October 2011]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 11342

நுஸ்கி காக்கா அவர்களே! சமிபகாலமாக புறநகர், புறநகர் என்று இந்த வலைதளதில் சிலர் வலம் வந்தார்கள். அவர்கள் உங்களுக்கு நட்புடன் விளக்கம் தருவார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
78. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by Vilack SMA (Hetang) [19 October 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 11343

< தைக்கா தெரு , புதுக்கடை தெருவில் மிகுதியான அளவுக்கு கள்ள வோட்டு போடப்பட்டிருக்கிறது என்று நம்பத்தகுந்த செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது . ஒரு ஆசாரிக்கு பணம் கொடுத்ததை , என் உறவினர் ஒருவர் நேரில் பார்த்த சாட்சியும் உண்டு. ஆக , dear gentlemen , , யாரைப்பற்றியும் குறை கூறாதீர்கள். - comment # 11165 >

( comment 11291 Palayam MAC ) இந்த தெருக்களில் கள்ள வோட்டு போடப்பட்டிருக்கிறது என்றுதான் சொன்னேன் தவிர , இங்கு ஆசாரிமார்கள் உள்ளனர் என்று சொல்லவில்லை . ஆனால் பிற பகுதிகளில் உள்ள ஆசாரிமார்களுக்கு உங்கள் ஆதரவாளர்கள் பணம் கொடுத்தது உண்மை. என்னுடைய உறவினர் பெண்மணி ஒருவர் இதை நேரில் பார்த்ததும் உண்மை .

தயவு செய்து அதிகம் கிளற வேண்டாம் . அசிங்கமாகிவிட வாய்ப்பு உண்டு . ( தேர்தல் நேரத்தில் ஆசாரியை தேடிப்பிடித்து கூலி கொடுக்கும் ஒரே ஆள் நீங்களாகத்தான் இருக்கும் . என் உறவினர் கண்ட அந்த ஆசாரி , தொழில் எதுவும் செய்யவில்லை . அவரை எனக்கு நன்றாக தெரியும் . தொழில் செய்யாத அவருக்கு கூலி எப்படி கொடுப்பீர்கள் ? )

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
79. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by OMER ANAS (DOHA QATAR.) [19 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 11345

அஸ்ஸலாமு அழைக்கும்.

அன்புள்ள அட்மினுக்கு.

தாங்கள் விளக்கம் வேண்டி என் கருத்தை பதிவு செய்யாமல், குறிப்பிட்ட சகோதரியிடம் கேட்டு விவரமாக வெளி இட்டதற்கு நன்றி!!! இது போல்தான் மற்ற கருத்துக்களும் அமைய வேண்டும்!

இதில் என் சாச்சி மகள் ராத்தா சொன்னது,போரா பெண்களிடம் சகோதரி ஆபிதா, கேட்க்கக் கூடாத கேள்வி கேட்டு விட்டு,தவறாக சொன்னதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார். மற்றபடி ஆபிதா எதுவும் பேசவில்லை நாங்களும் தவறாக ஒன்றும் பேசவில்லை என்கிறார்.

நான் கேட்பது ஒன்று மட்டும்தான். குழப்ப வாதிகள் என் IIM கேள்விக்கு பதில் தராதது ஏன்? சொல்ல வார்த்தை இல்லையா? பதில் இல்லையா?

சரியாக கேட்டு சொல்லுங்கள். என்னை பொருத்தவரை தம்பி SK ,ஸாலிஹ், சகோ சாமு காக்கா, தம்பி ஜகாங்கீர். இது போன்றோர் உள்ளே இருந்தாலே போதும் நாம் நினைத்த நகராட்ச்சி அமையும்.

அதே நேரம், ஜமாத்துக்கு கட்டு பட்ட ஒருவர் வந்தால் மட்டுமே , ஊர் சட்ட சபை ஆகாது!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
80. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by CNash (Makkah ) [19 October 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11350

Re: :கமெண்ட் # 69 Comment Reference Number: 11302

அஸ்ஸலாமு அலைக்கும்!

அன்பு பாதுல்அஷ்ஹப் காக்கா!! நீங்க சொன்ன அந்த ஈட்டி கீழேஉள்ள இலக்கை நோக்கித்தானே தவிர வேறொருவரின் மீதும் அல்ல!

மத்திய காயல்வாசிகளே!!!... குழப்பவாதிகளின் முக்கிய எண்ணம் "DIVIDE and RULE". ஆகையால்... .............. தயவு செய்து நமக்குள் பிரிவு வேண்டாம். பொறுமையுடன் செயல்படுங்கள்

மத்திய காயல் மாபெரும் சரித்திரம் படைக்கும்……………………..

குத்துக்கல் தெரு மக்கள் ….. 3 ப்ரெசிடென்ட் கொடுத்தவர்கள்

இப்படி குறிகிய வட்டத்தில் பலரிடம் இருந்து கருத்துக்கள் வந்து கொண்டே இருந்தன!! நீங்கள் மத்திய காயல்வாசிகளே என்று எச்சரிக்கை பண்ணாமல் பொதுவாக காயல்வாசிகளுக்கு நீங்கள் வேண்டுகோள் வைத்து இருந்தால் அது ஒற்றுமையின் நோக்காகவும் பரந்த வட்டமாகவும் இருந்து இருக்கும் என்பது எனது பணிவான வேண்டுகோள்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
81. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by AbdulKader (Abu Dhabi) [20 October 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11374

அஸ்ஸலாமு அழைக்கும்...

அருமை தம்பி CNash அவர்களே.... பாதிக்கப்பட்டவர்களுக்குதான் நான் சமாதனம் சொல்ல வேண்டும்?! அதன் அடிப்படையில் நான் மத்திய காயல் மக்களுக்கு பொறுமையை சொன்னேன்!

ஆகையால், தயவுசெய்து என்னுடைய்ய கருத்தில் குற்றம், குறை கண்டுபிடிக்க வேண்டாம். நான் ஊரை பிரிக்கிறேன் என்று சொல்லவதற்கு முன்... இங்கு கருத்துபதிவுசெய்யும் நம் நன்மக்களை குறிப்பிட்ட ஊரின் முஹல்லாக்களை பற்றி பிரித்து பேசவேண்டாம் / எழுதவேண்டாம் என்று உங்கள் சார்பாக ஓர் வேண்டுகோள் விடுங்கள். சரியா... ????

இன்னும் சொல்லப்போனால், அப்படி ஒரு (ஊரை பிரித்து எழுத்தப்படும்) கருத்தின் முதல் பதிவிலேயே (எனக்கு முன்பாக) நீங்கள் எல்லோரையும் கண்டித்து இருந்தால், ஏன் மீது குற்றம் சுமத்த நான் உங்களுக்கு உரிமையை தருவேன்! நானும் ஏன் மீது சுமத்தப்பட்ட பழியை ஏற்றுக்கொள்வேன்.

இன்றுமுதல் அடுத்தவரை குறை கூறும் பணியை உங்களை போன்றவர்கள் கைவிட்டால் ஊரின் நலனுக்கு நல்லது.

வஸ்ஸலாம்
அப்துல்காதர்(பாதுல்அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
82. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by Mohideen (Jeddah) [20 October 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11385

Comment Reference Number: 11350
Comment Reference Number: 11374

யார் குறுகிய வட்டத்தில் இருக்கிறார்கள் என்று தெரிய வில்லை. நான் கூறுயது பொதுவாகத்தான் அதில் சகோதரர் cnash இக்கு என்ன வருத்தமோ தெரியவில்லை. தவறு நடக்கவில்லை என்று சொல்லவில்லை. யாரோ சில பேர் செய்த தவறுக்காக ஒட்டு மொத்த குத்துக்கல் தெரு மக்களையும் குறை சொன்னதை தான் சொன்னேன். இதை கொடுத்தவர்களும் மறுப்பு தெரிவித்துவிட்டார்கள். (Comt Ref: 11151 )

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்லுவார்கள். அதனால் நாம் என்ன சொன்னாலும் குறை கண்டுபிடிக்க சில பேர் இருக்கத்தான் செய்வார்கள்.

so let us leave this matter.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
83. Re:வாக்குபதிவு இன்று காலை து...
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [20 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 11430

S.K.ஸாலிஹ் வெற்றி பெறவேண்டும் என்ற நல்லவுள்ளம் கொண்ட பலபேருக்குத் தெரியாத உண்மை.

S.K. ஸாலிஹ் போன்றவர்கள் நகராட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக ஐக்கியப் பேரவையுடன் ஐக்கியமானவர்கள், குறிப்பாக சொல்லவேண்டுமானால் நமதூர் பெயரை தங்களது பெயருக்கு முன்னாள் மறவாது போட்டுக்கொள்ளக் கூடியவர்களில் சிலர் எவ்வாறு தேர்தல் நாள் அன்று முயற்ச்சித்தார்கள் என்பதை இந்த ஊர் அறியும். குறிப்பாக சித்தன் தெருவைக் சார்ந்தவர்கள் அறிவார்கள். அந்த சந்தர்ப்பவாதிகள் பல கட்சிகளை சார்ந்தவர்களாக இருந்தாலும், இவர்களிடத்தில் இரு விஷயத்தில் ஒற்றுமை இருந்தது.

1 ) S.K, ஸாலிஹ் தோற்க வேண்டும்.
2 ) இவர்களுடைய "Qibla" சென்னை.

தேர்தல் அன்று சையனைடு கையுமாக அலைந்த நீண்ட தாடியுடன் கூடிய அந்த "தத்துப் பிள்ளை" தான் SKS ஐ தோற்கடிக்க எவ்வளவு முயன்றார்.

இன்ஷா-அல்லாஹ் தேர்தல் முடிவுக்குப் பின்

1 ) "தத்துப் பிள்ளை" சொந்தப் பிள்ளையாக ஆகிவிடுவாரா ? அல்லது "எடுப்பார் கை பிள்ளை" யாக மாறிவிடுவாரா?

2 ) "காயல்கள்" காயலர்களாக அழைக்கப்படுவார்களா?
அல்லது "கயவர்கள்" என்றழைக்கப்படுவார்களா?

3 ) Town Bus ஸில் வலம் வந்தவர்கள் Town வந்தடைவார்களா? அல்லது 'Breakdown" ஆகிவிடுவார்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved