Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:16:46 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7627
#KOTW7627
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, நவம்பர் 27, 2011
3 நோயாளிகளுக்கு ரூ.30 ஆயிரம் உதவி! அரசு மருத்துவமனைகளை ஆர்வத்துடன் பயன்படுத்த பொதுமக்களுக்கு மக்வா வேண்டுகோள்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3378 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

3 நோயாளிகளுக்கு ரூ.30,000 உதவி வழங்கியதுடன், அரசு மருத்துவமனைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் பயன்படுத்த வேண்டுமென மலபார் காயல் நல மன்ற செயற்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமர்று:-

கேரள மாநிலம், கோழிக்கோடு நகரில் செயல்பட்டு வரும் மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) 32ஆவது செயற்குழுக் கூட்டம் 25.11.2011 அன்று இரவு 09.15 மணிக்கு அவ்வமைப்பின் அலுவலகத்தில் கூடியது. மன்றத்தின் தலைவர் மஸ்ஊத் தலைமை தாங்கினார். செயலாளர் ஹைத்ரூஸ் ஆதில் முன்னிலை வகித்தார்.

தலைவர் உரை:
துவக்கமாக தலைவர் தலைமையுரையாற்றினார். மருத்துவ உதவி கோரி நமதூர் காயல்பட்டினத்திலிருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலிப்பதற்காகவே இக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தான் ஊரில் இருந்த காரணத்தால் மனுதாரர்களை தானே நேரில் சென்று விசாரித்த விபரங்களை கூட்டல் அவர் விரிவாக விளக்கினார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட செயற்குழு உறுப்பினர்களின் ஆரோக்கியமான கலந்தாய்வுக்குப் பிறகு மூன்று நோயாளிகளுக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 30,000 (முப்பதுதாயிரம்) வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.

பல்வேறு பணிச்சுமைகளுக்கிடையிலும் இம்மன்றத்தின் மூலம் அயராமல் நகர்நலப் பணிகளாற்றி வரும் செயற்குழு உறுப்பினர்கள், ஆர்வமுள்ள நண்பாகள் அனைவரையும் அவர் தனதுரையில் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

செயலாளர் உரை:
அதனைத் தொடர்ந்து மன்றத்தின் செயலாளர் ஹைத்ரூஸ் ஆதில் உரையாற்றினார். அவர் தனதுரையில்,

நம் ஊரில் இருந்து மருத்துவ உதவிகள் கோரி வரும் மனுக்களில் இணைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை மருந்து குறிப்புகள் மற்றும் பில் போன்றவற்றை பார்க்கும்போது, நம் ஊரை சுற்றி இருக்கும் தனியார் மருத்துவமனைகள் மருத்துவம் செய்கின்றோம் என்ற பெயரில் பணம் சம்பாதிப்பதை மட்டும் குறிக்கோளாக்க் கொண்டு செயல்பட்டு வருவதை போலவே உள்ளது...

மேலும் ஸ்கேன், குருதி சுத்திகரிப்பு, அறுவை சிகிச்சை, ரூம் வாடகை என மருத்துவத்திற்காக செய்யப்படும் செலவுகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்... மேலும் இதற்கான பில்லை பார்த்தல் தலை சுற்றி விடுகிறது...

இந்த இடத்தில் நாம் தனியார் மருத்துவமனைகளைக் குற்றம் சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை... ஆனால், நமது வரிப்பணத்தில் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படும் மருத்துவ உதவிகளைப் பெற்றிட நம் உள்ளங்கள் ஏனோ தயங்குகின்றன... அரசு மருத்துவமனைகளுக்கு செல்பவர்களை கூட ஒரு மாதிரியாக பார்ப்பது நம் ஊரில் வாடிக்கையாக உள்ளது...

இப்போது அரசு மருத்துவமனைகள் நவீன முறையில் மேம்படுத்தபட்டுள்ளது என்பதை நாம் நம் மக்களிடம் எடுத்து சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்...

திருநெல்வேலி, தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கெல்லாம் சென்று பார்த்த நம்மவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்... ஏன் தனியார் மருத்துவமனையாக இருந்தாலும், மிக சுகாதாரமான முறையில் நமக்காக கட்டப்பட்டுள்ள கே.எம்.டி. மருத்துவமனைக்குக் கூட சிகிச்சைக்காக செல்பவர்கள் மிகவும் குறைவு!

நாம் ஏன் நம் ஊருக்கு பக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று வீணாக பணத்தை செலவு செய்யவேண்டும்? வசதி படைத்தவர்களாக இருந்து தனியார் மருத்துவமனையை நாடினால் கூட பரவாயில்லை... மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் கூட தனியார் மருத்துவமனைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றால் ஏதோ கவுரவக் குறைச்சல் என்று நினைப்பவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள்...

எனவே, இந்த நிலையை மாற்றி, அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களை - குறிப்பாக வசதி குறைந்த மக்களைக் கேட்டுக்கொள்வதுடன், இதுபற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து அமைப்புகளையும், உலக காயல் நல மன்றங்களையும் வேண்டும்...


இவ்வாறு மன்றச் செயலர் ஹைதுரூஸ் ஆதில் உரையாற்றினார். அனைத்து உறுப்பினர்களும் அவ்வுரை மிகவும் அவசியமான உண்மைகளைப் பொதிந்துள்ளது என ஆதரித்துக் கூறினர்.

மேலும், இக்காலத்தில் வகை வகையாக நோய்கள் வந்து கொண்டிருப்பது ஒருபுறமிருக்க, அவற்றுக்குச் செலவழிப்பதற்கான வருமானம் நடுத்தர மக்களிடம் குறைந்து கொண்டே இருகின்றது என்றும், எனவே இதற்கென முறையான செயல்திட்டம் வகுக்க வேண்டுமெனவும் உறுப்பினர்கள் அப்போது தெரிவித்தனர்.

இவ்விஷயத்தில், அனைத்து காயல் நல மன்றங்களுடனும், பொதுநல அமைப்புகளுடனும் இணைந்து செயல்படலாம் என்றும் உறுப்பினர்கள் தெரிவித்ததையடுத்து அதை கூட்டம் தீர்மானமாக நிறைவேற்றியது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

தீர்மானம் 01 - மருத்துவ உதவி:
நம் நகரில் உள்ள மூன்று நோயாளிகளுக்கு மருத்துவ செலவினங்களுக்காக மன்றத்தின் சார்பில் ரூ.30,000 மருத்துவ உதவியாக வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 02 - அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்த மக்களுக்கு வேண்டுகோள்:
அரசு மருத்துவமனைகளை பயன்படுத்த பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைத்து பொது நல அமைப்புகளுக்கும், காயல் நல மன்றங்களுக்கும் இதுகுறித்து அழைப்பு விடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.


மேற்கண்டவாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இரவு 09.15 மணிக்குத் துவங்கிய கூட்டம் 10௦.45 மணிக்கு அனைவரின் துஆவுடன் நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
S.E.செய்யித் ஐதுரூஸ் (சீனா),
செய்தித் தொடர்பாளர்,
மலபார் காயல் நல மன்றம் (MKWA)
கோழிக்கோடு, கேரள மாநிலம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:3 நோயாளிகளுக்கு ரூ.30 ஆயி...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [27 November 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13839

அஸ்ஸலாமு அலைக்கும்

****முதலில் நாம் அனைவர்களும் நமதூரில் உள்ள ...3 . நோயாளிகளுக்கு ரூ.30,000 உதவி வழங்கிய..... கேரளா .... MKWA ...உறுப்பினர் யாவர்களுக்கும் அன்பான பாராட்டுகளை சொல்வோம்.

****உங்களின் இந்த நல்ல செயல் பாடுகள் மேலும் தொடர வல்ல நாயன் அருள் செய்வானாக ஆமீன்.

*****அந்த ..3 . நோயாளிகளின் குடுபத்தார்கள் உங்கள் யாவர்களின் ஹக்கில் நிச்சயமாக . துவா செய்வார்கள்.

*****நம் ஊர் மக்கள் .... அரசு மருத்துவமனைகளை ஆர்வத்துடன் பயன்படுத்த வேண்டுமென.... நீங்கள் கூறி இருப்பது சரியானதுதான். நாம் தான் மக்களுக்கு புரிய வைக்கவேணும். ( விழிப்புணர்வு ஏற்படுத்த வேணும் )

*****நமதூர் K.M.T. HOSPITAL. க்கு 24 மணி நேர ... MD DR. ஐ போட வேண்டியது.தானே.ப்ளீஸ் ...ப்ளீஸ் .. நாம் யாவர்களும் ( உள்ளூர் மக்கள் & வெளிநாடு மக்கள் ) முயற்சி எடுப்போமாக....நமதுருக்கு.K.M.T.H ,ரொம்ப அவசியம் தான் .

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH
SAUDI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:3 நோயாளிகளுக்கு ரூ.30 ஆயி...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [27 November 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13843

தங்களின் இந்த மக்கள் சேவைக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள். தொடரட்டும்..தொடரட்டும்...

தங்களின் கூற்றுப்படி யார் அரசாங்க மருத்துவமனையை உபயோகிக்கின்றார்கள்.

அங்கு தற்போது மிக அருமையான மருந்துக்கள் கொடுக்கின்றார்கள். முன்பு மாதிரி இல்லை, த.அ. மாத்திரையும், பால் மருந்தும் கொடுத்த காலங்கள் எல்லாம் மாறிவிட்டன.

நாம் சென்ற முறை தொண்டை வலி என்று அங்கு சென்று இருந்தேன், 2 வகை மாத்திரை, ஒரு சிரப்பும், சிறப்பாக கொடுத்தார்கள்.

ஆனால் அங்கு என்னைக்கண்ட நம் மக்கள் சிலர் தான் "என்ன.... நீங்க எல்லாம் இங்கு வந்து இருக்கின்றீர்கள்.."என்றும், இன்னும் ஒரு நண்பர் "மச்சான்... வித்தியாசமான வியாதி ஒன்றும் இல்லையே.. நீ அப்படிப்பட்ட ஆள் கிடையாதே"..இப்படியான பல கேள்விகள். கொடுமையப்பா.

ஊசி போடுவதாக இருந்தால் நீங்களே ஒரு disposable சிரிஞ் ஒன்று கொண்டு போங்க.

தனியார் மருத்துவ கொள்ளையை சொல்லணும் என்றால் ஒரு கட்டுரையே எழுதலாம்.

என்ன செய்வது "நான் MBBS சீட் வாங்க 50 லட்சமும்,MD க்கு 28 லட்சமும் செலவு செய்துள்ளேன், எப்படி அதை திருப்பி எடுப்பது, அதுவும் இல்லாமல் பங்கில் லோன் எடுத்து இந்த மருத்துவமனையை கட்டியுள்ளேன்..எப்படி கடனை அடைப்பது " என்று ஒரு மருத்துவர் (நண்பனின் தந்தை) என்னிடம் கூறினார்.

பதில் தான் எனக்கு தெரியவில்லை.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:3 நோயாளிகளுக்கு ரூ.30 ஆயி...
posted by A.Lukman (kayalpatnam) [27 November 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 13844

அஸ்ஸலாமு அழைக்கும்.

சுமார் 8 மாதங்களுக்கு முன் அரசு மருத்துவமனைக்கு கையில் சிறு அறிப்புக்காகே காட்ட சென்ற போது தான் அங்குள்ள அவல நிலையை தெரிந்து கொண்டேன்.டாக்டர் ஒரு நோயாளியை ஒரு நிமிடத்திற்கு மேல் பார்ப்பதே அரிது.மேலும் நோயாளியை தொட்டுப்பர்ப்பதே இல்லை .எதோ தீண்டதகதவர்கள் போல் நினைக்கிறார்கள்.

சரி இது தான் போகட்டும் என்று வூசி போடும் இடத்திற்கு சென்று பார்த்தால் அவர்கள் போடும் வூசியில் மருந்தை எடுத்தார்களா இல்லையா என்பது கேள்விக்குரிய விஷயம்.

பிறகு மாத்திரை தரும் இடத்திற்கு சென்றால் தர்மம் எடுக்க வருபாவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை கூட தர்ம ஆஸ்பத்திரிக்கு வருபாவர்களுக்கு கிடைக்காது என்பதை அறிந்து கொண்டேன்.

அங்கு பணிபுரிபாவர் அவ்வளவு அலட்சியமகே செயல்படுகிறார்.அங்கு பணிபுரியும் அதே டாக்டர் தனியார் ஆஸ்பத்திரியில் நோயாளியை கவனிக்கும் பாங்கே தனி.

இப்படி இருக்கும்போது எப்படி மக்கள் அரசு மருத்துவ மனைக்கு போவார்கள். அரசு மருத்துவமனை நகராட்சி மன்றத்துக்கு கட்டுப்பட்டதா என்பதை விசாரிக்க வேண்டும்.

A .லுக்மான்.
1 .வது வார்டு கவுன்சிலர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved