Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:28:38 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7631
#KOTW7631
Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 28, 2011
அசைவத்தில் துவங்கி சைவத்தில் முடிந்தது அமீரக கா.ந.மன்ற பொதுக்குழு மற்றும் காயலர் ஒன்றுகூடல்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4762 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மதியம் அசைவ உணவில் துவங்கி, இரவு சைவ உணவுடன் நிறைவுற்றுள்ளது அமீரக காயல் நல மன்ற பொதுக்குழு மற்றும் காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி.

கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் அதன் துணைத்தலைவர் ஹாஜி சாளை ஷேக் ஸலீம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் அமீரக காயல் நல மன்றத்தின் 2011Mம் வருடத்தின் பொதுக்குழு கூட்டம் துபை சத்வாவில் அமைந்துள்ள அல்-ஸஃபா பூங்காவில் இம்மாதம் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இதமான வானிலையில் இன்பமான ஒன்றுகூடல்:
வெள்ளிக்கிழமையன்று காலை முதல் மிகவும் இதமான வானிலை நிலவியதால், முற்கூட்டியே காயலர்கள் தம் குடும்பத்தார் மற்றும் நண்பர் வட்டங்களுடன் திரளாக கூட்ட நிகழ்விடத்தில் சங்கமிக்கத் துவங்கினர்.



மனமார்ந்த வரவேற்பு:
கூட்டத்தில் கலந்துகொள்ள வருவோரை வரவேற்று உபசரிப்பதற்காக வரவேற்புக்குழு அமைக்கப்பட்டிருந்தது.

பூங்கா வாயிலருகில் வந்த காயலர்களை வரவேற்புக்குழுவினர், புதுமணமகனை மணமேடை வரை அழைத்து வருவது போல கூட்ட நிகழ்விடம் வரை அழைத்து வந்து, தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கி உபசரித்து மகிழ்வித்தனர்.

தந்திரப் பதிவு:
ஆண்டுதோறும் இதுபோன்ற ஒன்றுகூடலில் உறுப்பினர் விபரங்களை சேகரிக்க முனைந்தபோதெல்லாம் அவை அரைகுறையாகவே முடிந்துள்ளது. அக்குறையைப் போக்கி, மன்ற உறுப்பினர்கள் அனைவரின் முகவரிகளுடன் கூடிய முழு விபரங்களைப் பெற்றிடுவதற்காக, அனைவருக்கும் படிவம் வழங்கப்பட்டது. அப்படிவத்தைப் பூர்த்தி செய்து, அதற்கென வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போடுமாறும், குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.



இந்த அறிவிப்பையடுத்து அனைத்து காயலர்களும் ஆர்வத்துடன் படிவங்களைப் பூர்த்தி செய்து, அதற்கான பெட்டியில் போட்டனர்.

மகிழ்ச்சிப் பரிமாற்றம்:
அமீரகத்தின் பல பிராந்தியங்களிலிருந்தும், இந்த ஒன்றுகூடலில் கலந்துகொள்வதற்காக காலையிலேயே வந்திருந்த காயலர்கள் ஆண்கள் - பெண்கள் என தனித்தனியே ஒன்றுகூடி, தமக்கிடையில் சுகம் விசாரித்து, முகமன் கூறி, மகிழ்ச்சிகளைப் பரிமாறிக்கொண்டனர். ஜும்ஆ நேரம் வரை இம்மகிழ்ச்சிப் பரிமாற்றம் நீடித்தது.



கூட்ட நிகழ்வுகள்:
பூங்கா அருகிலுள்ள பள்ளியில் ஜும்ஆ தொழுகையை அனைவரும் நிறைவேற்றினர். அதன்பின்னர், அமீரக காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் முறைப்படி துவங்கியது.

மன்றத் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ தலைமை தாங்கினார். ஹாஃபிழ் ஹஸ்புல்லாஹ் மக்கீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். ஜனாப் முஹம்மத் முஹ்யித்தீன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, ஹாஜி எம்.எஸ்.நூஹ் ஸாஹிப் மன்றத்தின் ஆண்டறிக்கையை வாசித்தார். மன்றத்தின் பல்வேறு சாதனைகளை உள்ளடக்கிய ஆண்டறிக்கை வாசித்து முடிக்கப்பட்ட பின்னர், மன்றத்திற்கு சந்தா என்ற பெயரில் நாம் செய்யும் சிறிய பங்களிப்பும் கலந்து இவ்வளவு நல்ல காரியங்கள் நடந்துள்ளதே என உறுப்பினர்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர். பின்னர் புதிய உறுப்பினர்கள் கூட்டத்தில் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

“என்னை விட்டுறுங்க!” -தலைவர்:
பின்னர் மன்றத்தின் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ தலைமையுரையாற்றினார்.

மன்றத்தின் செயல்பாடுகள் வெற்றியடைவதற்கு எல்லா உறுப்பினர்களும் உளமார ஒற்றுமையுடனும், மன உறுதியுடனும் உழைக்கவேண்டும்...

புதிய முகங்கள் இளைய தலைமுறைகள் மன்றத்தின் செயற்குழுவில் இணைந்து செயலாற்ற வேண்டும்...

மன்றத்திற்கு புதிய தலைமை வேண்டும்... நல்ல ஒரு தலைவரை நீங்கள் அடையாளம் காட்டும் பட்சத்தில் நான் அவர்களுக்கு வழிவிட ஆயத்தமாக உள்ளேன்... நான் பொறுப்பில் இல்லாவிட்டாலும் மன்றத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு என்றென்றும் என்னை அர்ப்பணித்துக்கொள்வேன்...

மன்றத்தின் செயல்பாடுகளில் ஏதேனும் கருத்து சொல்ல விரும்புவர்கள் நேரடியாக எனக்கோ அல்லது மன்றத்தின் நிர்வாகக் குழுவிற்கோ எழுத்து மூலமோ அல்லது நேரடியாகவோ தயக்கமின்றி தாராளமாய் சொல்லலாம்... இந்த மன்றத்தில் எல்லோருக்கும் சம உரிமை இருக்கிறது...

உறுப்பினர்கள் அனைவரும் தங்களது உறுப்பினர் சந்தா தொகையை தவறாமல் செலுத்தி மன்றத்தின் வெற்றிக்கு உறுதுணையாய் இருக்கவேண்டும்...

இம்மன்றம் ஊர் நலனிற்காக நல்ல பல திட்டங்கள் வைத்திருக்கிறது... நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நம் மன்றம் என்றும் முன்னோடியாக இருந்திருக்கிறது... இனியும் அந்நிலை தொடர - எல்லா நலத் திட்டங்களும் வெற்றியடைய அந்த வல்ல ரஹ்மான் உதவியுடன், உங்களின் மேலான ஒத்துழைப்பு என்றென்றும் அவசியமாகிறது... உங்கள் ஒத்துழைப்பு நிறைவாகக் கிடைத்தால், இன்ஷா அல்லாஹ் நாம் நமது சமூக சேவயை தொடர்ந்து செய்வோம்...


இவ்வாறு மன்றத் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ உரையாற்றினார்.



“இன்று போல் என்றும் வாழ்க!” -சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்து:
பின்னர், இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட திருச்சி எல்.கே.எஸ். ஹாஜி செய்யித் அஹ்மத், ஹாஜி எஸ்.ஓ.சேகு, காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஹாஜ்ஜா அ.வஹீதா, அவரது கணவர் ஹாஜி சின்னத்தம்பி ஆகியோர் உரையாற்றினர்.

கருமமே கண்ணாய்க் கருதும் இந்த அமீரக சூழலில், முதலில் இவ்வளவு எண்ணிக்கையில் உறுப்பினர்களை சேர்ப்பதே அரிது... ஆனால் இதையே வருடாவருடம் அமீரக காயல் நல மன்றம் சிறந்த முறையில் செய்து வருவது மிகவும் பாராட்டுக்குரியது... இதே ஒற்றுமை என்றும் நிலைத்திருந்து, அமீரக காயல் நல மன்றம் நமது சமுதாயத்திற்கு சேவையாற்றுவதில் மற்ற மன்றங்களுக்கு இன்று போல் என்றும் ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழவேண்டும் என்று இறையோனை பிரார்த்தித்தவர்களாய் சிறப்பு விருந்தினர்களனைவரும் தமதுரையில் வாழ்த்தினர்.

பின்னர், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்திக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.



நூல் அறிமுகம்:
பின்னர் நமதூர் எழுத்தாளர் எம்.எஸ்.அப்துல் ஹமீத் எழுதிய “இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்” என்ற தலைப்பிலான நூல் அறிமுகப்படுத்தப்பட்டது. அண்மையில் ஷார்ஜாவில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் இந்த நூல் இடம்பெற்ற செய்தியும், அக்கண்காட்சியில் இடம்பெற்ற ஒரே தமிழ் நூல் இதுதான் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்டதும் அனைத்து உறுப்பினர்களும் கரவொலியுடன் எழுத்தாளரை உற்சாகப்படுத்தினர்.

பின்னர் தனது படைப்பான அந்நூல் குறித்து எழுத்தாளர் எம்.எஸ்.அப்துல் ஹமீத் விவரித்துப் பேசி, துவக்கமாக கூட்டத் தலைவரும், மன்றத் தலைவருமான ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ அவர்களுக்கும், அதனைத் தொடர்ந்து அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் அந்நூலை வழங்கினார்.



அதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் கலந்துகொண்ட ஆண்களும், பெண்களும் அந்நூலை ஆவலுடன் வாங்கினர்.

மண(ய)க்கும் பிரியாணி...
பின்னர், பார்த்துப் பார்த்து பக்குவமாகச் செய்யப்பட்ட சுவைமிக்க ஃகாலித் "பிரியாணி" அனைவருக்கும் விருந்தாகப் பரிமாறப்பட்டது. ஹாஜி விளக்கு ஷேக் தாவூத் தலைமையில் பரிமாற்றப் பணிகள் நடைபெற்றன.



கூட்டத் தொடர்ச்சி... புதிய நிர்வாகக் குழு தேர்வு:
மதிய உணவைத் தொடர்ந்து மீண்டும் கூட்டம் துவங்கியது. இவ்வமர்வில் நிர்வாகக் குழுவிற்கான தேர்தல் நடைபெற்றது. துவக்கமாக, செயற்குழுவில் ஏற்கனவே பணியாற்றிய பல உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டு, புதிய உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர்.



வந்திருந்த அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த விருப்பம் மற்றும் வற்புறுத்தல் காரணமாக, நடப்பு தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ அவர்களே மீண்டும் மன்றத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்து உறுப்பினர்களும் உரத்த தக்பீர் முழக்கத்துடன் அதனை ஏற்றுக்கொண்டனர்.





மன்றத்தை இன்னும் சிறப்பாக வழிநடத்துவதற்குத் தேவையான அனைத்து ஆலோசனைகளையும், ஆக்கபூர்வமான விமர்சனங்கள், மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரின் நடவடிக்கைகள், மனோபாவம் மன்றத்தின் செயல்பாடுகள் என மன்றம் குறித்த எந்தக் கருத்தானாலும் அவற்றை தயக்கமின்றி மன்றத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அறியத் தருமாறு அப்போது அனைத்து உறுப்பினர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.



அர்த்தமுள்ள அரட்டை:
பின்னர் உறுப்பினர்களின் கலந்துரையாடல் சிறப்பான முறையில் நடைபெற்றது. மன்றத்தின் செயல்பாடுகள், ஊர் ஒற்றுமை, புதிய நகர்மன்றம் என பல்வேறு அம்சங்கள் குறித்து உறுப்பினர்கள் உற்சாகத்துடன் கருத்துப் பரிமாற்றமும், பயனுள்ள கருத்துக்களும் பரிமாறப்பட்டது.







அதிர்ஷ்ட ஆலிம்...
அறிவிக்கப்பட்டபடி நடைபெற்ற குலுக்கலில், மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எஸ்.முத்து அஹ்மத் மஹ்ழரீ தங்க நாணய பரிசை சொந்தமாக்கிக் கொண்டார்.



கேம் அங்கிள்...
இந்த குளிர்காலத்தில் பகல் நேரம் குறைவு என்பதால் சிறாருக்கான விளையாட்டு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. இருப்பினும், மன்றத்தின் செயலாளர் ஹாஜி டி.எஸ்.ஏ.யஹ்யாவின் அன்பு மகள் ஆமீனா, மன்றத்தின் துணைத்தலைவர் ஹாஜி சாளை ஷேக் ஸலீமிடம்,

“நீங்கள்தானே "கேம் அங்கிள்" (GAME UNCLE)...? இந்த முறை ஏன் எங்களுக்கு மட்டும் விளையாட்டுக்கள் இல்லை?" என்று, தன் சகாக்கள் துணையுடன் வந்து கேட்டதையடுத்து, மழலையரின் ஏக்கத்துடன் கூடிய அன்புக்கட்டளையைத் தவிர்க்க முடியாமல் உடனடியாக சிறாருக்கான விளையாட்டுகள் அவசர கதியில் ஏற்பாடு செய்யப்பட்டன.

"கேம் அங்கிள்" நல்ல முறையில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கும், இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து சிறாருக்கும் ஏராளமான பரிசுகளை வழங்கினார். பெண்களுக்கும் பெண்கள் பகுதியில் தனியே போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.



அயராதுழைத்த அன்பர்கள்...
கூட்டத்தின் உணவு ஏற்பாடுகளை, ஹாஜி துணி உமர், ஹாஜி விளக்கு ஷேக் தாவூத், ஹாஜி யஹ்யா முஹ்யித்தீன் உள்ளிட்டோர் இரவு பகல் பாராது கடின உழைப்பினால் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.

வாகன ஏற்பாடுகளை சகோதரர் ஆஸாத் சிறப்புற செய்திருந்தார். ஒலியமைப்பு ஏற்பாட்டை சகோதரர் ஸாஜித், சகோதரர் காதர் ஆகியோர் அழகுற செய்திருந்தனர். இதர ஏற்பாடுகளை சகோதரர் ஈஸா ஒருங்கிணைப்பில் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பொதுக்குழுவின் அனைத்து நிகழ்ச்சிகளையும், மன்றத்தின் துணை தலைவர் ஹாஜி சாளை ஷேக் ஸலீம் நெறிப்படுத்தினார்.

மன்றத்தின் சார்பில் வெளியிட்ட நன்றி அறிக்கையில் இந்த பொதுக்குழு வெற்றி பெற உறுதுணையாய் இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தலைவர் மற்றும் நிர்வாகக்குழு சார்பில் மனமார்ந்த நன்றியை காணிக்கையாக்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாலை சிற்றுண்டி:
மாலையில் வடையும், தேநீரும் வழங்கப்பட்டன. மஃரிப் தொழுகைக்குப் பிறகு மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வி இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீயின் துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவுற்றன. ஒரு முழு நாளையும் ஊர் மக்களுடன் மகிழ்ச்சியுடன் கழித்த திருப்தியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்தவர்களாய் காயலர்கள் கலைந்து சென்றனர்.

அசைவத்தில் துவங்கிய கூட்டம் சைவத்தில் முடிந்தது...
கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும், மன்றத்தின் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ அவர்கள் தமது சொந்த அழைப்பில் பேரில் தமது இல்லத்தில் அன்றிரவு விருந்திற்கு ஏற்ப்பாடு செய்திருந்தார்கள். சென்ற வருடம் ஹஜ் பெருநாள் மாலை அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற 'பெருநாள் வெட்டை' நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத அமீரகத்தில் வசிக்கும் அனைத்து காயலர்களும் இவ்விருந்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அங்கே, அவர்களது வில்லாவில் சட்னி சம்பாருடனும் சுடச்சுட இட்லி, உளுந்து வடை, தோசை பரிமாறப்பட்டது. அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டு, இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட நிலக்கடலை பாக்கெட்கள், இனிப்பு உள்ளிட்ட சிற்றுண்டியும் பரிமாறப்பட்டது.

மொத்தத்தில் அமீரக காயலர்களுக்கு இந்நாள் இனிய நாளாகக் கழிந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.


இவ்வாறு அமீரக காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு:
சாளை ஷேக் ஸலீம்
(துணை தலைவர்)

படங்கள்:
சாளை செய்யித் மூஸா காதிரீ
எம்.ஏ.சாஜித்
எம்.எஸ்.அப்துல் ஹமீத்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:அசைவத்தில் துவங்கி சைவத்த...
posted by K S muhamed shuaib (Kayalpatinam) [28 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13866

அட என்னெங்க ..நானும் எது அசைவம் சைவம் என்ற உடன் ஏதும் காரசாரவிவாதம் துவங்கி பிறகு அமைதியாக முடிந்துவிட்டதாக்கும் என்று நினைத்துக்கொண்டேன். பகலில் பிரியாணி சிக்கன் மீன்வருவல் என்று தின்றாலும் கூட இரவில் இட்லி சாம்பார் என்று "நம்மவர்"கலை காய வைத்தது அநியாம்தானுங்க...இது அடுக்குமாங்க.. ஏனுங்கோ..இந்த புளியாணம் எல்லாம் இல்லையாங்கோ.. இரவில் சாம்பாருக்கு பதிலாக இட்லி மேல் அதையாவது ஊற்றி இருக்கலாமுங்கோ.. (எனது இனிய துபாய் வாழ் காயலர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்....!மச்சான் ஷேக் சலீம் ,நண்பர் மீராசாகிப் தம்பி சாஜித் எழுத்தாளர் ஹமீத் இன்னும் பெயர் தெரியாத எல்லா சகோதரர்களையும் புகைப்படத்தில் கண்டதில் ரெம்ப சந்தொசமுங்கோ...)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:அசைவத்தில் துவங்கி சைவத்த...
posted by mackie noohuthambi (kayalpatnam) [28 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13868

அமீரகத்தில் இப்படி ஒரு பூங்கா இப்படி ஒரு ஒருமைப்பாட்டு கூட்டம், சுபுஹானல்லாஹ். வியக்கவைக்கிறது! இந்த நிலை நம் ஊரில் கூடும்போது ஏன் இல்லை, ஒரே ஊர், இணைந்த உள்ளங்கள், பாச பரிமாற்றங்கள். இந்த ஒற்றுமை உணர்வு உலகெங்கும் வாழும் காயலர்களின் இரத்தத்தில் கலந்திருக்க வேண்டும் என்ற எனது ஆசையும் துஆவும். அல்லாஹ் கபூல் செய்வானாக.

மீண்டும் தானை தலைவராக புஹாரி அவர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டது மன மகிழ்ச்சி தருகிறது. புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பது எனபது ஜனநாயக முறை. அதுவும் வேண்டும், தகுதிமிக்கவர்கள் தேர்ந்தேடுக்கப்படவும் வேண்டும். "இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன் கண் விடல்" என்று வள்ளுவம் கூறுகிறது. தகுதியானவர்கள் விலகிக்கொண்டால் தகுதி இல்லாதவர்கள் உங்களை ஆள ஆரம்பிப்பார்கள் என்ற கருத்துள்ள நபிமொழியும் இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

பதவிக்காக அலைபவர்களுக்கு பதவி கொடுக்கக்கூடாது என்பதும் நபிமொழியில் ஒன்று. இதுவரை இந்த மன்றம் ஊருக்கு என்னென்ன சேவைகளை செய்துள்ளது என்ற பட்டியல் வெளியிட்டிருந்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகியிருக்கும். உங்கள் சந்தோசங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது, சந்தோஷம் இரு மடங்காகிறது என்பதும், கவலைகளை பகிர்ந்துகொள்ளும்போது நமது கவலை பாதியாக குறைகிறது என்பதும் நிதர்சன உண்மைகள்.

வாழ்த்துக்கள்.மக்கி நூஹுதம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. தலைவா தலைப்பு தவறு தலைவா...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [28 November 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13874

தலைவா தலைப்பு தவறு தலைவா...தலைப்பை மாற்று தலைவா...!

காலையில் அனைவர்களுக்கும் தேநீருடன், சிற்றுண்டி கொடுத்தீர்களா...அந்த சிற்றுண்டி சைவமா அல்லது அசைவமா... சைவமாக இருந்தால் தங்களின் தலைப்பு தவறு தான்..

பல பல வருடங்களாக காண முடியாமல் இருந்த அன்பு நண்பர்கள்(குறிப்பாக துணி.அபூபக்கர்),மற்றும் சொந்தங்கள் அனைவர்களையும் ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து பூரிப்படைந்தேன்.

இந்த ஒற்றுமையான, மகிழ்சிகரமான நிகழ்வை கண்டு சந்தோசம்.

புதிதாக தெரிவு செய்யப்பட, பழைய தலைவர் ஆடிட்டர். புகாரி காக்காவிற்க்கும், கேம் மாமாவிற்கும், ஜனாப் துணி. உமர், ஜனாப். விளக்கு ஷேக் தாவூத் அவர்களுக்கும் (எந்த தைரியத்தில் பேத்தி கூட சாசா பலகையில் விளையாடினீர்கள், கீழே இருப்பதோ இரண்டு சிறிய ஸ்ப்ரிங்கள் தான், தைரியம் ஜாஸ்தி தான்), மற்றும் அனைவர்களுக்கும் நன்றிகலந்த பாராட்டுக்கள்.

மீண்டும் மீண்டும் கூடுங்க, சந்தோசமாக இருங்க, நன்றாக மக்களுக்கு உதவுங்க, புன்னகை மாறாமல் ஒற்றுமையாக இருங்க. வல்ல அல்லாஹ் துணைபுரிவான்.

தம்பி தாரிக் அவர்களை காணவே இல்லையே..வேளை அதிகமோ.!!

கடைசியில் ஆடிட்டர் வீட்டில் கடலை போட்டு (நிலக்கடலை) நிகழ்வு நிறைவு பெற்றதாக்கும்..

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:அசைவத்தில் துவங்கி சைவத்த...
posted by shaik abbul cader (kayalpatnam ) [28 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13876

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மாதுல்லாஹி வபரகாத்து ஹு எல்லா நிகழ்ச்சிகளிலும் நானும் கலந்து கொண்ட மகிழ்ச்சி ஏற்பட்டது . அல்ஹம்துலில்லாஹ் . இதில் விசேசம் என்னவென்றால் அப்பாவும் பேரனும் சீசா ஆடுவதுதான். வஸ்ஸலாம் .

பூட்டி அப்பா .

( http// shaikacader.blog.com )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:அசைவத்தில் துவங்கி சைவத்த...
posted by Vilack SMA (Siacun) [28 November 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 13882

மகிழ்ச்சியான ஒன்றுகூடல் . இது என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும். ஒருசில " சொந்தங்களை " இதுபோன்ற நிகழ்ச்சியின் புகைப்படத்தில்தான் பார்க்க முடிகிறது . GAME UNCLE , ( குழந்தைகள் மேல் அதிக பாசம் கொண்டவராக இருப்பதால் இவரை " சின்ன நேரு மாமா " என்று அழைப்பதுதான் சரி ) உங்களை நேரில் பார்க்க ஆவலாய் உள்ளேன் . இன்ஷா அல்லாஹ் , விரைவில் அங்கு வருவேன் . தம்பி Sajith அங்கேயா இருக்காரு ? அவரையும்தான் பார்க்கனும்னு ஆசை .

Vilack SMA ,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலெ வந்ததே...! நண்பனே..! நண்பனே...!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா.) [28 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13884

எங்கள்(காக்கா குரூப்) முனேற்றத்திற்கு முதல் படியாக தம் முதுகை வளைத்துத் தந்து எம்மைச் சுமந்துச் சென்ற இரட்டையர்கள்,அன்பிற்கினிய குவைலீத் காக்கா,அருமையான சாளை-சலீம் காக்கா இவ்விருவரையும் பல வருடங்கள் கழித்து ஒரே நிகழ்வில் பார்க்கும் போது எங்கள் ஸஹாராவின்(ஹோட்டல்) நினைவலைகளில் நான் நீந்திச் சென்றேன்.

அந்த அற்புதமான காலங்கள் இனி ஒரு போதும் எமக்குக் கிடைக்கப்போவதில்லை! என்ன செய்ய? பொருளாதாரத்தைத் தேடிச் சென்று அந்தப் பொற்காலத்தைத் தொலைத்து நின்றோம்!!!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:அசைவத்தில் துவங்கி சைவத்த...
posted by M. S. Shah Jahan (Colombo) [29 November 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 13909

Dubai always excels in AGM. Good.

M. S. Shah Jahan
President
Kawalanka
Colombo.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:அசைவத்தில் துவங்கி சைவத்த...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [29 November 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13910

அஸ்ஸலாமு அலைக்கும்

அப்பாடா,,, DUBAI. வாழ் நம் ஊர் மக்களை பார்த்த மகிழ்சி.

****.அசைவத்தில் துவங்கி >>>>>>சைவத்தில் முடிந்தது என்ன அருமையான கவிதை போல் உள்ளது ......செம ஜாலியோ >>>>.

ஆமா நீங்கள் குழந்தைகளுக்கு ஏற்பாடு.செய்தது தான் சரியானது. இவர்கள் மகிழ்சி தான் நம் யவர்களுக்கும் அவசியம் தேவை .

உங்கள் தலைவரின் உரை ( ஜனாப் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ அவர்கள் ) மாஷா அல்லாஹ் சூப்பர். பொதுவாக பழையவர்கள் வழி விடுவது தான் சரியானது.புதியவர்கள் வருவது தான் புத்தி சாலியானது. ( மன்றத்திற்கு புதிய தலைமை வேண்டும்... நல்ல ஒரு தலைவரை நீங்கள் அடையாளம் காட்டும் பட்சத்தில் நான் அவர்களுக்கு வழிவிட ஆயத்தமாக உள்ளேன்... நான் பொறுப்பில் இல்லாவிட்டாலும் மன்றத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு என்றென்றும் என்னை அர்ப்பணித்துக்கொள்வேன்...) சரியான வாசகம் >>>>>>

****உங்கள் செயல்பாடுகள் வெற்றி அடைய எங்கள் நல் வாழ்த்துகள்.

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH
SAUDI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:அசைவத்தில் துவங்கி சைவத்த...
posted by Mymoon Raheema Seyed Ibrahim (Deira,Dubai) [29 November 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13914

Assalamu alaikum varahmathullahi vabarakatuhu,

Masha Allah That was a nice meeting for us.We felt that we are in kayal.Thank you everybody for conducted that meeting.At every meeting days our mothers used to get tired on making dinner but in this meeting they escaped because of Mr.Buhari Uncle's dinner party..

we enjoyed very much & learn the secret of unity.Alhamdulillah may allah make us always in unity.

There were excellent talkings about our society&islam. we will have to put a minutes to record our activities&our talkings in the meetings.It will help the coming generations in the U.A.E.Insha Allah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:அசைவத்தில் துவங்கி சைவத்த...
posted by zakaria (kayal) [29 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13925

அஸ்ஸலாமு அழைக்கும். பல கொள்கையுடையவர்களாக இருந்தாலும் uae சகோதர்களிடம் உள்ள மிக நல்ல பண்பும் நாம் படிக்கவேண்டிய பாடமும் வேற்றுமையில் ஓற்றுமை. நானும் இதில் கலந்து கொண்டு இப்படி இருப்பதை அங்கு போய்தான் கற்றுகொண்டேன் என்று சொன்னால் அது மிகையாகாது.

எல்லாம் வல்ல அல்லாஹ் தங்கள் யாவருக்கும் அருள் புரிவானாக. புகாரி காகா அவர்களுக்கு அல்லாஹ் உறுதுணையாக இருப்பானாக! தங்கள் யாவருக்கும் என் இதயம் கனிந்த துஆவுடன் கூடிய வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Celebration Unlimited
posted by Mohamed Ismail (Chennai) [30 November 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 13938

I remember that I had been part of this anual celebration last year 2010. I really appreciate and thankful to the coordinated efforts by this organization in healthcare, education and upliftment of local which had borne fruit.

In the foto sequence, I truely happy to see my ever loving friends Mr TAS Meerashahib, Mr Huwailyd (Abu Dhabi) Mr Jamil Akbar and others. And I wish the dedicated service to our community to continue further.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:அசைவத்தில் துவங்கி சைவத்த...
posted by ahmed meera thamby (kayal) [30 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13958

அன்பர் ரபீக் சொன்ன ரியாத் சஹாரா நிஹல்உஹல் அவருடன் அனுபவித்த அந்த சுகமான நாட்கள் எனக்கும் நினைவுக்கு வருகிறது எங்கள் அருமை குவைலித் காக்கா, சலீம் காக்கா இவர்ஹளுக்கு பொது சேவை என்பதும் வயது வரம்பு இல்லாமல் ஜாலியாஹ கள்ளம் கபடம் இல்லாமல் பழகுவது அவர்ஹல் இரத்தத்துடன் ஊறியது இது போன்ற பொதுசேவையில் ஈடுபடும் எல்லோரையும் வல்ல அல்லாஹ் நல்லாக்கி வைப்பானாக

ஆமீன் ஆமீன்

வஸ்ஸலாம்
நட்புடன்_தமிழன் முத்துவின் காக்கா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved