Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:55:56 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7636
#KOTW7636
Increase Font Size Decrease Font Size
புதன், நவம்பர் 30, 2011
DCW ஆலை விரிவாக்கம் குறித்து தூ-டி.யில் பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம்! ஆதரித்தும், எதிர்த்தும் காரசாரமாக கருத்துக்கள் பதிவு!! காயல்பட்டினத்தினர் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5403 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (36) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் நகராட்சியில் அமைந்துள்ள சாகுபுரம் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் உற்பத்தியை, ரூபாய் ஐநூறு கோடியில் விரிவாக்கம் செய்வது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம், 29.11.2011 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள முத்து அரங்கில், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.







தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்ற இந்த கருத்து கேட்புக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அமிர்தஜோதி, திருச்செந்தூர் கோட்டாட்சியர் பொற்கொடி, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் நல பொறியாளர் முருகன், உதவிப் பொறியாளர் குமாரவேல் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களின் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.



டி.சி.டபிள்யு. நிறுவனத்தின் சார்பில் அதன் நிர்வாக துணைத்தலைவர் ஜி. சீனிவாசன், உற்பத்திப் பிரிவு துணைத்தலைவர்கள் ஆர். ஜெயக்குமார், சுபாஷ் தாண்டன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்கள் கேட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.



டி.சி.டபிள்யு. தொழிற்சாலையில் சுமார் ஐநூறு கோடி ரூபாய் மதிப்பில்,

டிரைகுளோரோ எத்திலின் உற்பத்தி திறனை ஆண்டுக்கு 7,200 டன்களில் இருந்து 15,480 டன்களாகவும்,

பாலி வினைல் குளோரைடு உற்பத்தி திறனை ஆண்டுக்கு 90 ஆயிரம் டன்களில் இருந்து 1.50 லட்சம் டன்களாகவும்,

இணை மின் உற்பத்தி நிலையத்தை 58.27 மெகாவாட்டில் இருந்து 108.27 மெகாவாட்டாகவும் விரிவுபடுத்தும் திட்டத்துக்காகவும்,

புதிய வினைபொருளான குளோரினேடட் பாலிவினைல் குளோரைடு ஆண்டுக்கு 14,400 டன் உற்பத்தி செய்யும் திட்டத்துக்காகவும் இந்த கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சித் தலைவர் என். சின்னத்துரை, அதிமுக முன்னாள் மாவட்டச் செயலர் பள்ளத்தூர் டி. முருகேசன், மாவட்ட சிறு தொழில் சங்கத்தைச் சேர்ந்த சின்னத்துரை, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே. பெருமாள்சாமி, பாஜகவைச் சேர்ந்த ராஜ கண்ணன், இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார், புன்னக்காயல் பங்குத்தந்தை ஜான்செல்வம் உள்ளிட்ட பலர் விரிவாக்கத் திட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

டி.சி.டபிள்யு தொழிற்சாலையால் ஆறுமுகனேரி பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது... பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது... பகுதி முன்னேற்றம் அடைந்துள்ளது... இந்த தொழிற்சாலையால் பாதிப்பு எதுவும் இல்லை... விரிவாக்கத் திட்டத்தால் மேலும் பலருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது... எனவே, விரிவாக்கத் திட்டம் தேவை என்பது இத்திட்டத்தை ஆதரித்துப் பேசிய இவர்களின் கருத்தாக இருந்தது.

அதே வேளையில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த புற்றுநோய் காரணி கண்டறியும் குழு (CFFC) வின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏ.தர்வேஷ் முஹம்மத் ஒருங்கிணைப்பில், என்.எஸ்.இ.மஹ்மூத் தலைமையில் சென்று இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த எஸ்.கே.ஸாலிஹ்,

இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் கருத்து தெரிவித்த எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய்,

இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - ஐ.ஐ.எம். சார்பில் கருத்து தெரிவித்த எஸ்.அப்துல் வாஹித்,

ரெட் ஸ்டார் சங்கம் சார்பில் கருத்து தெரிவித்த பொறியாளர் ஏ.பி.ஷேக்,

காயல்பட்டினம் நல அறக்கட்டளையின் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ,

காயல்பட்டினம் கோமான் ஜமாஅத் சார்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 01ஆவது வார்டு உறுப்பினர் ஹாஜி ஏ.லுக்மான் ஆகியோர் இந்த விரிவாக்கத் திட்டத்திற்கு ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.







மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் க.கனகராஜ், மதிமுக மாவட்டச் செயலர் எஸ்.ஜோயல், அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு அமைப்பாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி, நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் ஜான்சன் உள்ளிட்டோரும் இந்த விரிவாக்கத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த தொழிற்சாலையால் ஏற்கெனவே சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது... அதற்கு முதலில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்... அதற்கு பிறகே விரிவாக்க திட்டம் குறித்து யோசிக்க வேண்டும்... இப்போதைக்கு விரிவாக்கம் தேவையில்லை... என்பது அவர்களின் கருத்தாக இருந்தது.

ஏற்கனவே இதுபோன்று பல கருத்தக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் உயிர், உடல்நலம், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் மிகுந்த அக்கறை கொண்டு தாங்கள் பல்வேறு அலுவல்களுக்கிடையிலும் வந்து தெரிவித்த கருத்துக்களை இதுவரை பரிசீலிக்கவில்லை என்றும், ஒருபுறம் கருத்துக்கேட்பு என்ற பெயரில் கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றிவிட்டு, மறுபுறம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மக்கள் நலனில் சிறிதும் அக்கறையின்றி செயல்படுவதாகவும் அவர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

மேலும், இந்த விரிவாக்கத் திட்டம் தொடர்பாக டி.சி.டபிள்யு. ஆலையால் தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இறுதியாக, மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் பேசினார்.



டி.சி.டபிள்யு விரிவாக்கத் திட்டம் தொடர்பாக பொதுமக்கள் தெரிவித்த அனைத்து கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அக்கருத்துக்கள் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பிவைக்கப்ப்டும் என்றும், அதன்பேரில், மாநில - மாநில அளவிலான குழு இத்திட்டத்திற்கு அனுமதியளிப்பது தொடர்பாக முடிவு செய்யும் என்றும், இத்திட்டத்தை அனுமதிப்பதா அல்லது நிறுத்துவதா என்பது மாவட்ட நிர்வாகத்தின் கையில் இல்லை என்றும் மத்திய - மாநில அரசுகள்தான் முடிவு செய்யும் என்றும் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தெரிவித்தார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:DCW ஆலை விரிவாக்கம் குறித...
posted by MACKIE NOOHUTHAMBI (KAYALPATNAM) [30 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13945

பேச வேண்டிய இடத்தில பேசாமல் இருப்பதும் பேச வேண்டாத இடத்தில பேசுவதும், இரண்டுமே தவறுதான்.

அற்புதமான இளைஞர் கூட்டம். இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் புதிய பூமியாக காயல்பட்டணம் மாறி வருகிறது.

இவ்வளவு பெரிய கூட்டத்தில் DCW வின் விரிவாக்க திட்டதை ஆதரித்து பேசியவர்கள் மத்தியில் நமதூரின் நிலைப்பாட்டை ஆணித்தரமாக எடுத்து உரைதவர்களுக்கு பாராட்டுக்கள்.

நமதூரின் பெரியவர்களை காணோமே? அவர்களுக்கு தகவல் தெரியாதா அல்லது நாம் போய் என்ன சாதிக்க முடியும் என்று நினைத்தார்களா, அல்லது சிறியோர் வெள்ளாமை வீடு வந்து சேராது என்ற புழுத்துப்போன வாதங்களுடன் வாளாவிருந்தார்களா?

நாளைய சரித்திரத்தில் இந்த இளைஞர்கள் பெயர் எழுதப்படும். துணிச்சலான எதிர்ப்புகள்,நியாயமான வாதங்கள். வாழ்த்துக்கள் இளைஞர்களே, KEEP IT UP.

மக்கி நூஹுதம்பி
9865263588


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:DCW ஆலை விரிவாக்கம் குறித...
posted by Haji (Riyadh) [30 November 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13946

அன்புச் காயல் சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் ,

அனைத்து வெளிநாடு மற்றும் உள்நாடு வாழ் காயலர்கள் இந்த கருத்து பகுதி மூலமாக DCW ஆலை விரிவாக்கம் குறித்து ஒற்றுமையாக பலமான எதிர்ப்பை தெரிவித்து நம் காயல் மாநகரத்தை பாதுகாக்க முயற்ச்சி செய்ய வேண்டும், அது நம் கடமை....

எதிர்ப்போம்... எதிர்ப்போம் DCW விரிவாக்கத்தை எதிர்ப்போம்!!!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:DCW ஆலை விரிவாக்கம் குறித...
posted by MAK.JAINULABDEEN, president, kaakkum karangal narpani mandram (kayalpatnam) [30 November 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 13947

அஸ்ஸலாமு அலைக்கும். நமதூரின் சார்பாக கலந்து கொண்டு நமது குமுறல்களை ஆணித்தரமாக வெளிபடுத்திய சகோதரர்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள்.

நமதூருக்கு மிகப்பெரும் சாபக் கேடாகவும்,எண்ணற்ற நோய்களை உருவாக்கும் தொழிற் சாலையாகவும் இருந்துவரும் DCW ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு அல்ல, மிகப்பெரும் மக்கள் சக்தி கொண்டு மூடுவதற்கு நாம் அனைவர்களும் சேர்ந்து முயற்ச்சி எடுக்கவேண்டும்.

நமதூரையும்,நமது சுற்றுவட்டார ஊர்களையும் கொடிய நோய்களில் இருந்து பாதுகாக்க வல்ல நாயன் அருள் புரிவானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு போலி நாடகம் நிறைவேற்றம்...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [30 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13948

காயல்பட்டிணம் சுற்று வட்டார பகுதியில் பத்து ஆண்டுகளில் பல நூறு உயிர்களை கொல்ல காரணமாக விளங்கும் D C W தொழிற்சாலை மேலும் 500 கோடியில் ரசாயன உற்பத்தி விரிவாக்கம்.. ஒரு போலி நாடகம் நிறைவேற்றம்...

மக்கள் கருத்து கேட்பு கூட்டம் என்ற பேரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு போலி நாடகம் நிறைவேற்றம்... மக்கள் கருத்துக்கு முன்னுரிமை இல்லை.. தின செய்தி பத்திரிக்கைகளில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் என்ற அறிவிப்பு கிடையாது.. காயல்பட்டிணம் நகராட்சிக்கு இது விசியமாக அறிவிப்பு கிடையாது...

D C W தொழிற்சாலையின் சுற்று வட்டார காயல்பட்டிணம் மக்களுக்கு மொத்தத்தில் எந்த தகவலும் கிடையாது... இந்த தொழிற்சாலையால் பயன் பெரும் ஆதாயம் அடையும் நபர்களுக்கு மட்டுமே அழைப்புகள் கொடுக்கப்பட்டு சும்மா பேருக்காக ஒரு மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது

ஆனால் எதிர்பாரத விதமாக இந்த தொழிற்சாலையால் ஆபத்து மற்றும் பாதிப்புகளை உணர்ந்த நமதூர் மற்றும் சுற்றுவட்டார மக்கள் சில பேர் மட்டுமே அந்த மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு அதன் ஆபத்துகள் மற்றும் பாதிப்புகளை புற்று நோய்யால் மனித உயிர் பலிகள், கால்நடைகளின் சாவுகள், நிலத்தடி நீரின் நச்சு தன்மைகள் பட்டியிலிட்டு எடுத்துரைத்தார்கள்..

இந்த தீமையை சொல்வதற்க்கு இன்று சரியான.. உண்மையான.. நேர்மையான.... நபர்கள் யாரும் இல்லை எல்லாரும் இந்த D C W தொழிற்சாலைக்கு ஜால்ரா போட்டு தனக்கு என்ன ஆதாயம், தான் அங்கம் வகிக்கும் சங்கத்துக்கு நன்கொடைகள், தனது வாரிசுக்கு என்ன (JOB) வேலை ? வாங்கலாம் இதை தான் இன்று நிறைவேற்றுகிறார்கள்...

ஊர் நலனுக்காகவும் சுற்றுவட்டார அணைத்து மக்களின் புற்று நோய் பாதுகாப்புக்காகவும், கால்நடைகளின் அழிவிர்க்காகவும் இந்த D C W தொழிற்சாலையின் போலி நாடகத்தை உள்ளதை உள்ளபடி எடுத்து சொன்ன அணைத்து நல் உள்ளங்களையும் பாராட்டுகிறேன்...

வெளி நாட்டில் இயங்கும் அணைத்து காயல் மன்றங்களும் இதன் பாதிப்புகளை பற்றி அங்குள்ள இந்திய தூதரகத்தில் எடுத்துரைத்தால் நல்லது.. சுற்று வட்டார அணைத்து சமூக மக்களையும் அழைத்து செல்வது சிறந்தது...

நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் - வி.சி.கட்சி தொண்டன். ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வெத்து வேட்டாய் இருப்பதை விட வெடித்துவிடுவதே சிறப்பு!!
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [30 November 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13949

DCW விற்கு எதிராக குரல் கொடுத்த அணைத்து நல்லுள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் .

ஏற்கனவே இருக்கின்றதையே மூடணும்னு சொல்லிட்டு இருக்கோம் இதுல புதுசா வேற தயாரிக்க போரங்கலாமே.... நல்ல கதையாலோ இருக்கு .. ஒருத்தி சீலை இல்லை என்று சித்தி வீட்டுக்கு போனாளாம் , அவள் ஈச்சம் பாயை கட்டிகொண்டு எதிரே வந்தாளாம் . "

இவர்களுக்கு இந்த தைரியம் வர நாம் தான் காரணம் ... சுனாமி குடி இருப்பு பிரச்சனைக்கு போராட்டம் பண்ணின நம்மால் ஏன் நம் குடியை கெடுக்கும் , பல உயிர்களை உறிஞ்ச காரணமாக இருந்த இவர்களுக்கு எதிராக ஏன் இதுவரை ஒரு ஊர் போராட்டம் நடத்த முடியவில்லை . அது எப்படி நாம் போராட்டம் நடத்துவோம், நாம் ஒரு இஸ்லாமிய மாநாடு நடத்தினாலும் அவர்களிடமும் காசு வாங்கி அவர்களை நம் இஸ்லாமிய மாநாட்டு புத்தகத்தில் போட்டல்லவா அழகு பார்க்கின்றோம் .

போதும் மக்களே இழந்தது போதும் , இனி வரும் இழப்பையாவது முடிந்த வரை தடுப்போம் . நம் பலம் படுத்தப் படுக்கையாகிவிட்டதால் வருபவனெல்லாம் கால் துடைத்து விட்டுச் செல்லும் மிதியடியாக நாம் மாறி விடுவோம் .வெத்து வேட்டாய் இருப்பதை விட வெடித்துவிடுவதே சிறப்பு!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:DCW ஆலை விரிவாக்கம் குறித...
posted by Habeeb Rahman (Abu Dhabi) [30 November 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13950

கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டு நம் அனைவர்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் முகமாக எதிர்ப்பை பதிவு செய்த சகோதரர்களுக்கு நன்றி!

இதனை ஆதரித்த பா ஜ க இந்துமுன்னணி மற்றும் வெட்டி அரசியல் தலைகளின் செய்கைகளில் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றும் இல்லை.ஓன்று அவர்களுக்கு கிடைக்கும் தனிப்பட்ட "ஆதாயம்". இன்னொன்று இதன் பாதிப்பு காயலான்களுக்கு மட்டும்தானே என்ற இளக்காரம்! மற்றவர்களுக்கு அதிகம் ஒன்னும் இல்லையே என்று இவர்கள் நினைத்திருக்கலாம். இவர்களிடம் திருசெந்தூரில் பக்தர்கள் கடலில் குளிக்க போய் பாவத்தை கலைப்பதற்கு பதில் அரிப்போடு வெளியே வந்த கதையையும் சொல்லியிருக்க வேண்டும்.

DCW வினால் நம் ஊருக்கு ஒரு நயா பைசா பிரயோஜனமில்லை.

நாம் இதனை ஒருபோதும் அனுமதிக்க கூடாது! இதனை எதிர்க்கும் நல்ல சில கட்சிகளோடு கூட்டுசேர்ந்து போராட்டத்தில் ஈடுபடவேண்டும். இதன் உற்பத்தியை அதிகரிக்க மட்டும் இல்லை, இதனை உள்ள படியே தொடர கூட அனுமதிக்க கூடாது. உள்ளதே "ஊத்தி"கிட்டிறுக்குது! இவங்க இன்னும் அள்ளி ஊத்தனுமாம்!(புது மொழி) என்ன கதையப்பா இது!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:DCW ஆலை விரிவாக்கம் குறித...
posted by Noohu Sahib (DUBAI) [30 November 2011]
IP: 80.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13951

தரங்கதர ஆலை விரிவாக்கம் குறித்து மிக அருமையான ஆதாரத்துடன் வாதாடிய அருமை இளம் சிங்கங்களுக்கு எனது இதய பூர்வமான நன்றியினை தெரிவித்து கொள்ளுஹிறேய்ன்.

நீங்கள் உங்கள் பணியில் வெற்றி பெறுவதற்கு அல்லா துணை இருப்பான் ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:DCW ஆலை விரிவாக்கம் குறித...
posted by SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [30 November 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13953

நமது ஊரு மக்களுக்கு ஒரு தீங்கு வருமேயானால் , நாம் அனைவரும் ஓன்று இணைந்து அதை தடுக்க நாம் குரல் கொடுப்பது இந்த கால கட்டத்தில் மிக, மிக அவசியமான ஒரு செயல். அது நம் அனைவரின் கடமையும் ஆகிறது .

நாம் நம் உரிமைக்கு குரல் கொடுப்போம். அதில் மூலம் வெற்றியும் பெறுவோம். அல்லது நமக்கு வெற்றி கிடைக்கும் வரை குரல் கொடுத்து கொண்டே இருப்போம். வல்ல நாயன் அதில் நமக்கு வெற்றியினை தருவான்.

DCW விற்கு எதிராக குரல் கொடுத்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:DCW ஆலை விரிவாக்கம் குறித...
posted by sulaiman (abudhabi) [30 November 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13954

அஸ்ஸலாமு அழைக்கும்,

D.C.W விரிவாக்கத்தை ஆதரித்தவர்கள் இனம் இனத்தோடு சேரகூடிய கூட்டம். நம் மக்களுக்கு எந்த விதத்திலும் நன்மையில்லாத. மாறாக கொடூர நாசகரத்தை ஏற்படுத்திக்கொண்டுஇருக்கும் இந்த D C W விரிவாக்கத்தை அல்லாஹ்வின் உதவியால் நாம் எப்படியாவது தடுக்கவேண்டும்.

D.C.W வின் கொடுரத்தை பற்றி நம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் .தேவைபட்டால் ஒட்டுமொத்த நம்முடிய மக்களையும் களம் இறக்கி போராட தயார்படுத்த வேண்டும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:DCW ஆலை விரிவாக்கம் குறித...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [30 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13955

இக்கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு நமதூர் மக்களின் சார்பாக நம் எதிர்ப்பை பதிவு செய்த அணைத்து பொது நல இயக்கங்கங்களின் பிரதி நிதிகளுக்கும், அந்தந்த பொது நல இயக்கங்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்.

இதை இத்தோடு நிறுத்தி விடாமல் மாநில அரசு மற்றும் மத்திய அரசுகளையும் உரிய முறையில் அணுகி இதை எப்படியும் தடுத்து விட வேண்டும்.

இதில் நமக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்று பட்டு இப்போதே செயல் பட்டால் தான் காரியம் நடக்கும்.

நம்மை அடுதுள்ளவர்கக்ளும் இதன் மூலம் இவர்கள் பழைய காயாலான்கள் அல்ல என்பதை உணறுவார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. உயிரைப்பற்றி பேசும்பொழுது மின்சாரத்தை பற்றி பேசி என்ன பயன்?
posted by M.சுல்தான் (சூடான்) [30 November 2011]
IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 13957

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமதூரின் சார்பாக கலந்து கொண்டு நமது மன குமுறல்களை தைரியமாக வெளிபடுத்திய சகோதரர்களுக்கு மனமார்ந்த நன்றி, வாழ்த்துக்கள்.

அதரவு தெரிவிச்ச நண்பர்கள் கிட்ட நான் ஒன்னு கேட்க விரும்பறேன். நீங்க DCW கிட்ட உங்க வீட்ட மாத்திக்கிட்டு வர சம்மதமா?

வருடத்தில் சில மாதங்கள் மட்டுமே சூரிய ஒளியை மிதமாகப் பெறும் ஜெர்மனி நாடு அணு உலைகளை மூடிவிட்டு சூரிய ஆற்றலைப் பெருக்க முடிவெடுத்துள்ளது .மக்கள் உயிருக்கு மதிப்பளிக்கும் தலைவர்களைக் கொண்ட நாடு அது .ஆனால் எத்தனைபேரை பலிகொண்டாவது நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவேண்டும் என எண்ணும் நாடாக நமது நாடு உள்ளது என எண்ணும்போது வேதனையாக உள்ளது ....

உயிரைப்பற்றி பேசும்பொழுது மின்சாரத்தை பற்றி பேசி என்ன பயன்?

M.சுல்தான்..... சூடான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:DCW ஆலை விரிவாக்கம் குறித...
posted by mohamed ibrahim (chennai) [30 November 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 13959

அஸ்ஸலாமு அழைக்கும். dcw means disease creating way. நோயை உருவாக்கும் காரணி. முதலில் அவர்ஹல் நடத்தும் பள்ளிகூடதைவிட்டு நம்முடைய இளவல்களை வரும் வருடம் முதல் திருப்பி பெறவேண்டும். கோவப்பட்டு பேசுவது பிரயோஜனம் இல்லை. செயலில் இறங்கவேண்டும். RTI மூலமாக அந்த கம்பனியில் என்ன நடைபெருஹிறது என தெளிவான விளக்கம் பெறவேண்டும். அதன் பிறகு மசுகட்டுபட்டுவரியதிடம் நாம் மோதுவோம். இன்ஷால்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:DCW ஆலை விரிவாக்கம் குறித...
posted by mohammed lebbai MS (dxb) [30 November 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13961

அஸ்ஸலாமுஅலைக்கும்,,,,,,,, அன்பின் சகோதர்களே,,,

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு எதிர்ப்பு தெரிவித்த அணைத்து நல்லுங்களுக்கும் மனமார வாழ்த்துக்கள் & நன்றிகள்,,,,,,,,,,,,, dmk admk கட்சிகாரங்கள காணோமே,,,,,,,

வேண்டாம் சகோதர்களே நம்ம ஊர் சுற்றுசூழல் நாசமாபோறதுக்கு நாமே துணையா இருக்ககூடாதுங்க,,,,,,,

------------------------------

அன்பின் வெளிநாடுவாழ் மக்களே அந்தந்த நாட்டில் உள்ள நம் இந்திய தூதரகத்தில் இதுவிசயமாக ஆதாரங்களை திரட்டி விரைந்து கம்ப்ளைன்ட் செய்யுங்கள்,,,

இன்ஷாஅல்லாஹ் பலன்கிடைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:DCW ஆலை விரிவாக்கம் குறித...
posted by Cnash (Makkah) [30 November 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13962

அஸ்ஸலாமு அலைக்கும்,

இதில் கலந்து கொண்டு நமது நிலைபாட்டையும் கருத்தையும் பதிவு செய்த அனைவருக்கும் நன்றி. மிக தெள்ள தெளிவாக தெரிகிறது, இந்த கருத்து கேட்கும் கூட்டம் (PUBLIC HEARANING) பொது மக்கள் நன்மைக்காக நடத்தப்பட்ட கூட்டம் அல்ல., மாறாக இந்த DCW இந்த விரிவாக்க பணிக்கு முன்அங்கீகாரம் கொடுக்கும் முயற்சி தான் என்பது அதை அங்கீகாரம் செய்ய ஒரு கூட்டமே வரிந்து கட்டி கொண்டு வந்து இருப்பதில் இருந்து தெரிகிறது.

எந்த ஒரு INDUSTRIAL EXPANSION PROJECT ஆகா இருந்தாலும் EC எனப்படும் ENVIRONMENT CLEARANCE ..அது சம்பந்த பட்ட சுற்றுசூழல் அமைச்சகத்திடம் (Ministry of Environment and Forests ) பெறபட்டால் தான் மற்ற நடவடிக்கைகளை தொடர முடியும், இந்த EC பெறுவதென்றால் கலெக்டர் முன்னிலையில், தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் பிரதிநிதிகள், மற்றும் கலெக்டர் அவர்களால் தேர்வு செய்ய பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் கருத்து கேட்பு நடத்தப்பட வேண்டும் என்பது சட்ட விதி......

ஆனால் PUBLIC HEARING முன்னாடி குறிப்பிட்ட கால அவகாசத்தில் அந்த புதிய திட்டம் பற்றிய எல்ல தகவல்களையும் அந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதும் விதி தான் இது எல்லாம் பின்பற்றபட்டதா என்பது தெரியவில்லை. எந்த முறையில் யாரெல்லாம் அழைக்கபட்டார்கள் என்று தெரியவில்லை . ஆனால் சம்பந்தம் இல்லாதவர்களில் தலைகள் தான் அதிகம் தென்படுகிறது. .

இந்த விரிவாக்கம் பற்றிய தகவல் அறிக்கை DCW நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்டு தற்போது நம் பார்வைக்காக தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.. கீழே உள்ள இணைப்பை அழுத்தி படித்து பார்க்கவும்

http://www.tnpcb.gov.in/pdf/Exe_sum_DCW_tam.pdf

அதில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் திட, திரவ கழிவுகள் வெளியேற்றும் முறை, சுத்திகரிக்கப்படும் முறை பற்றி எல்லாம் ஏட்டில் (?) அழகாக சொல்லிவிட்டு.. செயலில் கடலில் கலக்க விடபடுவடை கண்ணால் நாம் பார்க்கிறோம். .

அவர்கள் திட்டம் போட்டு நடத்துகிறார்கள்....இந்த கருத்துகேட்பு என்ற FORMALITY முடிந்து விட்டது...வேண்டும் என்று சொன்னோரில் கருத்தே மேலோங்கி நிற்கிறது. இனி NOC அப்புறம் SIA போன்ற secretriate level Approval தான் பாக்கி இனி அவர்கள் திட்டம் வெற்றி கரமாக நடத்தபடும் .

கலெக்டர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உண்மையான பாதிப்புள்ளாகி இருக்கும் நமதூர் போன்ற ஊரில் உள்ள மக்கள் குறிப்பிட்ட அளவில் அழைக்கபட்டதை போல தெரியவில்லை. பாதிப்பில்லாமல் பயனடையும் ஊரை சேர்த்தவர்கள் தான் அதிகம் அழைக்க பட்டு இருக்கிறார்கள் அவர்கள் குரலும் மேலோங்கி இருகிறது.. இடையில் அவர்கள் போடும் இரைக்கு அலையும் சில அரசியல் வாதிகள் மற்றும் துவேச அரசியல் நடத்தும் கட்சிகள். ஆகவே இந்த கருத்து கேட்டபின் முடிவும் எப்படி இருக்கும்!!!!

இனி நாம் என்ன செய்ய வேண்டும், CFFC இன் ரிப்போர்ட் மட்டும் அது சம்பந்தமான ஆய்வுகளை நாமே ஊரு சார்பாக தமிழ் நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்திற்கும், சுற்றுசூழல் அமைச்சகத்திற்கும் இந்த விரிவாக்க திட்டதை காரணமாக வைத்து அனுப்பலாமா. இது சம்பந்தமான நடவடிக்கையும், அறிவுரைகளையும் எதிர்பார்க்கிறோம். அதுத்த கட்ட நடவடிக்கைக்கு என்ன செய்ய வேண்டும். யாரை அணுகலாம்.!! தனி தனியாக நாமே Tamil nadu Polluttion Control Board க்கு E-mail or FAX மூலம் இது சம்பந்தமாக நமது கருத்தை அனுப்பி வைக்கலாமா?

அப்புறம் நமதூரில் அரசியல் கட்சிகள் என்று சில உள்ளதே அவர்கள் தான் ஊரையும் ஊர் மக்களையும் பாதுகாக்கிறோம் என்றுலாம் பேசிட்டு அலைந்தார்களே அவர்கள் கொஞ்சம் இப்போ ஊரு நலனுக்காக விழித்து எழுவார்களா..இல்லை election வந்தால் மட்டும் தான் வருவீர்களா ஊரை காக்க.. எது எதுக்குலாமோ தன் பணத்தை வரி இறைத்த வள்ளல்கள் இதற்காக கொஞ்சம் அக்கறை காட்டி தங்கள் அதிகாரத்தை இந்த நல்ல விஷயத்தில் காட்டுங்களே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:DCW ஆலை விரிவாக்கம் குறித...
posted by Vilack SMA (Siacun) [01 December 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 13963

ஊர் நலனில் அத்தனை பேருக்கும்தான் அக்கறை உண்டு. அதற்காக அத்தனை பெரும் , அங்கே சென்று பேச முடியுமா ? நமதூர் சார்பாக ஒருசிலர் , அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு , தங்களது கருத்தை சொல்லி இருக்கிறார்கள் . இதுவே போதுமானது . தேவையில்லாமல் , அவர் போகவில்லையே , இவர் போகவில்லையே என்றால் , ஊரில் இருக்கும் நீங்கள் ஏன் போகவில்லை ? இந்த ஊர் நலனில் உங்களுக்கு அக்கறை இல்லையோ ! என்று மற்றவர்கள் நினைத்தால் எப்படி இருக்கும் ?

யார் மூலமாவது இந்த ஊருக்கு நன்மை கிடைக்கிறதே என்று திருப்தி கொள்ளுங்கள் , பெரியவர் , சிறியவர் என்று யாரையும் குறை கூறாதீர்கள் .

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:DCW ஆலை விரிவாக்கம் குறித...
posted by சாளை நவாஸ் (Singapore) [01 December 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 13964

எங்கோ நம்பிக்கை துளிர் விடுகிறது !!!!

கலந்து கொண்ட யாவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

பல இந்திய தூதரகங்களிலும் இதை பற்றிய அறிக்கை கொடுத்தாச்சு. ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. நம்மிடம் ஆணித்தரமான ஆதாரம் இருக்கிறது, DCW நம்முடைய சுற்றுசூழலை மாசுபடுத்துகிறார்கள் என்று. எதையும் நம்பி பலன் இல்லை, போராட்டம் போராட்டம் போரட்டதினாலேயே இதற்க்கு முடிவு கட்ட முடியும்.

உடல் அளவிலோ பொருள் அளவிலோ ஒவ்வொரு காயலர்களும் இதில் ஈடுபட வேண்டும். வழிகாட்ட CFFC உங்களுக்காக காத்துகொண்டு இருக்கிறோம்.

- போராட்டத்தில் முதல் ஆளாய் மண்ணின் மைந்தன்

சாளை நவாஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. கண்துடைப்பு நாடகம் அரங்கேற்றம்.
posted by zubair (riyadh) [01 December 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13965

அஸ்ஸலாமு அலைக்கும். என் அன்பு காயல் சகோதரர்களே..... கண்துடைப்பு நாடகம் அரங்கேறி இருப்பது தெள்ளத்தெளிவு. நண்பர் Cnash (makkah) அவரின் கருத்தையே.... நானும் ஆமோதிக்கிறேன். நேற்றைய தினமணி நாளிதழில் என்ன பதிவாகி இருக்கிறது என்பதை கவனிக்கவும். அதுதான் உண்மையான ரிகார்டாக தமிழக அரசும், மத்திய அரசும் அங்கீகரிக்கலாம்.

மலையாளியாக இருந்தால் கம்பெனியை தாங்களே.... பூட்டி கையில் சாவியை கொடுத்து இருப்பார்கள். கோழிக்கோடு மாவூர் என்ற வூரில் ஒரு கொட்டன் தயாரிக்கும் கோளியரைன்ஸ் (வடமாநில) கம்பெனி ஆலை நீண்ட நெடுங்காலமாக இயங்கி..... சுற்று வட்டார ஒவ்வொரு வீட்டின் தலைவருக்கும் கிட்டத்தட்ட வேலை வழங்கி..... வெளி நாட்டில் வேலை பார்த்தால் போலும் கிடைக்காத சம்பளமும், அலவன்சும், ஏக தடபுடலாக கொடுக்கப்பட்டன. அங்கும் நாம் கூறும் இதே பிரச்சனை குளிர்காலத்தில் புகை மூட்டமும், ஏனைய எல்லா நாட்களிலும் அருகாமையில் உள்ள ஷாலியார் ஆற்றில் கழிவு நீரை திறப்பதால் செங்கடல் போன்று காட்ச்சியளிப்பு... மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசும், சில சாதாரண நாட்களிலும் நடுநிசியில் புகையின் தாக்கத்தால் சுற்றுவட்டார மக்களும் எழுதிரிக்கும் வன்னம் சுவாசம் விடமுடியாமை ஏற்ப்பட்டு ஜன்னல், கதவுகளையெல்லாம் இருக்க பூட்டியும் காலத்தை தள்ளி இருக்கிறார்கள்.

பூனைக்கு மணிகட்ட ஆள் இல்லாமை மட்டுமல்ல..... எல்லாவீட்டிலும் கைநிறைய பணமும், குடும்பமே மெடிக்கல் பெறலாம், நான்கு மதத்திற்கு ஒருமுறை ஒரு போனஸ் மற்றும் பல,பல அலவன்சுகள் கிடைத்ததால் மக்களுக்கு தயக்கம் கம்பெனிக்கு பூட்டு போட...... கடைசியில் கேன்சர் நோயில் சுற்றுவட்டாரமே.... பாதிக்கப்பட்டு வேறு வழியின்றி போராட்டத்தை துடங்கி உடனேயே..... (குறிப்பிட்ட வருஷத்தில்) பூட்டை போட்டு சாவியை கையில் கொடுத்தனர்.

இவற்றை குறிப்பிட காரணம் காக்கை கண்டறியும்..... கொக்கு கொன்றயும். கொக்குபோல இருந்தால் நம் ஊரே....... அழிந்து போகும் அபாயம். உஷார்...... வஸ்ஸலாம்.

குறிப்பு:-
எல்லா ஜும்ஆவிலும் இதற்க்கு (பூட்டுவதற்கு) வேண்டி விசேஷ பிரார்த்தனை நடத்தினால் எல்லாம் வல்ல அல்லாஹ் மிக இலகுவாக நடத்தி தருவான் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:DCW ஆலை விரிவாக்கம் குறித...
posted by siddiq (chennai) [01 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 13966

RTI மூலம் உண்மையே தெரிந்து கொண்ட நபரின் வாயே அடைக்க வாரிசுக்கு வேலை கொடுத்தது DCW . அவரும் வாயே முடிகொண்டார். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை RTI மூலம் குடைந்தால் எல்லாம் வெளிவந்துவிடும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:DCW ஆலை விரிவாக்கம் குறித...
posted by Mohamed Salih (Bangalore) [01 December 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 13967

எல்லா புகழும் வல்ல இறைவனுக்க..

கலந்து கொண்ட அணைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி ..

என்றும் அன்புடன் .

பெங்களூர் ரில் இருந்து .
முஹம்மத் ஸாலிஹ் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. கயவர்களுக்கு இந்த நாடக மேடை முதல் சாவு மணி அடித்துள்ளது............
posted by A.W.Abdul Cader Aalim bukhari (Mumbai) [01 December 2011]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 13968

அஸ்ஸலாமு அலைக்கும் எனது அன்பான காயல் சொந்தங்களே!!

தூங்கினது போதும் விழித்தெழுங்கள்..நாம் இன்னும் தூங்கினால் நம்மை முழுமையாக தூங்க வைத்துவிடுவார்கள்.அந்த மோசமான நேரம் வரும் முன் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!ஆமீன்......

காயர்களின் உயிரை சூரையாடி லாபம் சம்பாதிக்க எண்ணும் கயவர்களுக்கு இந்த நாடக மேடை முதல் சாவு மணி அடித்துள்ளது என்று நம்புகின்றேன். மேலும் அதன் தொடராக நமது பிள்ளைகளை அந்த பள்ளிக்கூடத்திலிருந்து எடுத்து அடுத்த எதிர்ப்பை காட்ட வேண்டும்............

அதற்கு முன்னால் நமதூரின் சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு போராட்டம் உடனடியாக நடத்தப்பட வேண்டும்..யா அல்லாஹ் நீ தான் எங்கள் ஊரை காப்பாற்றுவாயாக !! உன்னைத்தவிர காப்பாற்ற தகுதியானவர் வேறுயாருமில்லை.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:DCW ஆலை விரிவாக்கம் குறித...
posted by A.M. Syed Ahmed (Riyadh) [01 December 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13969

This is the drama of DCW & Collector is a HERO......You are all Audience on the free show...

Anyhow this will be approved by (State & Central) and expanded....

Let us know what exactly our people talked in the meeting.

Request to pass the special resolution in our municipality regarding this issue by saying stop the expansion, untill the existing issues is justified and send the copy to the Ministry of environment & all the concerned, tomorrow it can stand on the court of law.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:DCW ஆலை விரிவாக்கம் குறித...
posted by Seyed Mohamed (KSA) [01 December 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13971

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விரிவாக்க எதிர்ப்பு தெரிவித்த அனைத்து சமுதாய மக்களுக்கும் நன்றி. எவனோ சம்பாதிக்க நம் உயிரு பலி. ரைட் டு தி information பயன்படுத்தி, அனைத்து சுற்று வட்டார மக்களயும் ஒருங்கிணைத்து கோர்ட் மூலம் தீர்வு காணனும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:DCW ஆலை விரிவாக்கம் குறித...
posted by saburudeen (dubai ) [01 December 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13972

நபிகள் நாயகம் [ஸல் ] அவர்கள் சொன்னார்கள் ;
உங்கள் கண் முன்பு ஒரு தீங்கு நடைபெறுகின்றது என்றால் நாவினால் தடுங்கள் அல்லது கரம் கொண்டு தடுங்கள் அல்லது ஒதுங்கி கொள்ளுங்கள். என்றதன் அடிப்படையில். பலர் ஒதுங்கி கொண்ட வேளையில் .ஊர் மக்களின் நலன் கருதி மக்களுக்கு பெரும் கேடு விளைவிக்கும் dcw எனும் தீங்கு மேலும் பெரிதாக பரவி நம் மக்கள் மேலும் பாதிக்க கூடாது .என்ற நல்ல எண்ணத்தில் இத்தீங்கை நாவினால் தடுத்து முயற்சி செய்த நம் சகோதரர்கள் அனைவர்க்கும் என் நன்றிகள் பல .

உங்கள் சேவைகள் தொடரட்டும் .அல்லாஹ் நம் மக்களை ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பானாக !ஆமின்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:DCW விரிவாக்கம் ..கோர்ட் மூலம் தடை பெறவும் முயற்சிக்க வேண்டும்..
posted by V D SADAK THAMBY (Guangzhou ,China) [01 December 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 13973

அரசுகள்/தொழிற்சாலை நிர்வாகம் பலம்/பணபலம் வாய்ந்தவை.எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்கும்.நம் கோரிக்கைக்கு செவிசாய்க்காது.

கருத்து கேட்பு என்பது ஒரு கண்துடைப்புதான். சட்ட வழிகளின் வாயில்லாக அவர்கள் செயல் படுகின்றனர்.

நாமும் அதே சட்ட வழிகளின் மூலம் அணுக வேண்டும்,நாம் கோர்ட் மூலமாகவே தடை கோர முயற்சிக்க வேண்டும்.

விரிவாக்கபணிகளுக்கு முன்பாகவே தடை கோரினால் எழிதில் தடை கிடைக்கும்.விரிவாக்க பணிகள் தொடங்கியபிறகு தடை கிடைப்பது கடினம்.தனி நபராக தடை கோருவதைவிட ஒரு (போராட்ட) அமைப்பாக செயல்பட்டு கோர்ட் மூலம் தடை பெற முயற்சிக்கலாம். கோர்ட் மூலம் நாம் தடை பெற்றால், ஆலை நிர்வாகமும் நம்மை ஒரு பார்ட்டியாக கருதி நம்மை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்.

சட்ட வழிகளின் மூலமாக போராடினால் வெற்றி கிட்டும் இன்ஷா அல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:DCW ஆலை விரிவாக்கம் குறித...
posted by Mauroof (Dubai) [01 December 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13974

ஆலை விரிவாக்கம் தொடர்பாக அப்பகுதி மக்களின் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படவேண்டும் என்ற சட்டத்திற்கு உட்பட்டு இக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளதே அன்றி உண்மையாகவே இப்பகுதி மக்களின் கருத்தை அறிவதற்காக இது நடைபெறவில்லை என்பதை நாம் அறியாமல் இல்லை.

எனினும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு இந்த நாசகார DCW மூலம் காயல்மாநகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்கள் அனுதினம் நேரடியாகவும் மறைமுகமாகவும் அடைகின்ற பாதிப்புகளை ஆதாரத்துடன் பதிவு செய்திட்ட CFFC மற்றும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

மேலும் இதன் பாதிப்புகளை நன்கு உணர்ந்தும் அந்த நிறுவனத்தினால் பெறப்படும் வசதி வாய்ப்பிற்காக மற்றும் இன்னபெற காரணங்களுக்காகவும் "ஜால்ரா" அடித்து தங்களது விசுவாசத்தை வெளிப்படுத்திய நயவஞ்சகர்களின் கணக்கை முடிக்க படைத்தவனே போதுமானவன்.

DCW மற்றும் நமது மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ள மற்ற நாசகார உயிர்கொல்லி ஆலைகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் எதிர்ப்புணர்வு இன்னும் மேம்பட வேண்டும். அதன் மூலம் இவைகளுக்கு வெகு விரைவில் மூடு விழா நடத்தப்படவேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம் அரசாங்கம் என்ன முடிவு எடுக்கிறது என்று.

காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்டது என்று சொல்லப்படும் இந்த நாசகார DCW அது குறித்து கூட்டப்படும் கூட்டத்திற்கு நகர்மன்றம் அழைப்பு பெறவில்லை என்று சகோ. எஸ்.கே. ஸாலிஹ் கூறியுள்ளது (www .kayalnews .com) குறித்து நகர்மன்றம் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் இக்கூட்டத்தின் ஏற்பாட்டாளர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும். மேலும் நகர்மன்றத்தின் அடுத்த கூட்டத்தில் இது குறித்து விவாதித்து தீர்மானங்கள் இயற்றப்படவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:DCW ஆலை விரிவாக்கம் குறித...
posted by SUAIDIYA BUHARI (chennai) [01 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13976

assalmualikum

மக்கள் போராட்டம் அவசியம் வேண்டும். இல்லை என்றால் நாம் இன்னும் அதிகம் இழப்புகளை சண்திக்க வேன்டி இருக்கும். அல்லா அனைத்து மக்களையும் காப்பான்னாக.

முக்கியம் நம் ஊர் மக்கள், இதை போண்டு factory களுக்கு நம் மக்களை job காக சிபாரிசு பண்ணாதீர்கள், அடுத்து sponsorship or நன்கொடை அவர்களீடம் பெறாதீர்கள்.

சின்ன மீனை போட்டு, பெரிய மீனை பிடீத்த கதையகீடும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:DCW ஆலை விரிவாக்கம் குறித...
posted by Vilack SMA (Siacun) [01 December 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 13977

VD Sadak Thamby அவர்கள் சொன்னதைப்போல , இந்த கூட்டம் ஒரு கண்துடைப்புதான் . பெரிய அளவில் தொழிற்சாலை நடத்துபவர் , மக்களை அணுகி , வேண்டுமா , வேண்டாமா என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க மாட்டார் . விரிவாக்கம் என்பது அவர்களால் முடிவு செய்யப்பட்ட ஒன்று . ஆக , நீதிமன்றம் மூலம் மட்டுமே இதை தடுக்க முடியும் . செய்வார்களா ? ( தேர்தலில் போட்ட வழக்கிற்கே இன்னும் முடிவு தெரியவில்லை )

இந்த கூட்டத்தில் , நமதூர் நலன் கருதி குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள் .

Moderator: தனிநபர் விவாதத்தைத் தூண்டும் வாசகங்கள் தவிர்க்கப்படுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:DCW ஆலை விரிவாக்கம் குறித...
posted by Mohmed Younus (Trivandram) [01 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 13978

அற வழி சாத்தியம் இல்லை என்றால் அணைத்து சமுதாய மக்களை உள்ளடக்கிய தீவிர போராட்டம் ஒன்றுதான் வழி.
500 கோடி ரூபாய் முதலீட்டில் நானோ கார் தொழிற்சாலை தொடங்கும் முன்பு, நடை பெற்ற மிகபெரிய மக்கள் போராட்டத்தினால், டாட்டா நிறுவனம் மேற்கு வங்க மாநிலத்தை விட்டு வெளியேறியது, மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இன்றும் நடை பெறுகின்ற கூடங்குளம்,ஜாட்புர் போன்ற இடங்களில் நடை பெறுகின்ற போராட்டங்கள் நமக்கு மிக வலிமையான முன்மாதிரி.

அரசியல்வாதிகள் இது போன்ற கூட்டங்களுக்கு அழைக்கபட்டால் ,அந்த நிறுவனம் நமது ஊரில் கூட கடை விரித்துவிடும். அந்த அளவுக்கு ஆத்மார்த்த அரசியல் வாதிகள் நம்மவர்கள். மேலும் அரசியல் இங்கு கொண்டுவரப்பட்டால், பல வர்ணங்கள் பூசப்படும்.

அரசியல்,மத சாயம் பூசாத மிக தீவிரமான மக்கள் போராட்டம் தான் இததற்கு முடிவு காண முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:DCW ஆலை விரிவாக்கம் குறித...
posted by Mohmed Younus (Trivandram) [01 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 13979

27. Re:DCW ஆலை விரிவாக்கம் குறித...

VD Sadak Thamby அவர்கள் சொன்னதைப்போல , இந்த கூட்டம் ஒரு கண்துடைப்புதான் . பெரிய அளவில் தொழிற்சாலை நடத்துபவர் , மக்களை அணுகி , வேண்டுமா , வேண்டாமா என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க மாட்டார் . விரிவாக்கம் என்பது அவர்களால் முடிவு செய்யப்பட்ட ஒன்று . ஆக , நீதிமன்றம் மூலம் மட்டுமே இதை தடுக்க முடியும் . செய்வார்களா ? ( தேர்தலில் போட்ட வழக்கிற்கே இன்னும் முடிவு தெரியவில்லை )

சகோதரர் vilak sma அவர்களே,

ஜெயலலிதா கருணாநிதி மேல் போட்ட வழக்கு

கருணாநிதி ஜெயலிதா மேல் போட்ட வழக்கு

இந்திரா காந்தி எம் ஜி ஆர் மேல் போட்ட வழக்கு

ராஜாஜி ஜெயபிரகாஷ் நாரயணன் மேல் போட்ட வழக்கு

டிராப்பிக் ராமஸ்வாமி ஜவஹர்லால் மேல் போட்ட வழக்கு

நம் சமுதாய மக்கள் போட்ட பாப்ரி மஸ்ஜித் விவகார வழக்கு

இதற்கு எல்லாம் முடிவு தெரியா வில்லை. எப்படி மெகா போட்ட தேர்தல் வழக்குகளுக்கு விரைவில் விடை கிடைக்கும்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:DCW ஆலை விரிவாக்கம் குறித...
posted by sithi katheeja (singapoore) [01 December 2011]
IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 13980

dcw வளர்ச்சிக்குஎதிர்ப்பு தெரிவித்து வாதாடிய நம் காயல் இளவர்கலுக்கு நன்றி நமதூரில் பரவி வரும் கேன்சர் போன்ற வியாதிகளுக்கு அங்குள்ள நச்சுத் தன்மையே காரணம் என்று ஒரு சாரார் கூறி வருகிறார்கள்.அல்லாஹ் மிஹவும் அறிந்தவன். அல்லாஹ் நம் அனைவர்களையும் இந்த கொடிய நோயிலிருந்து காப்பாற்றுவானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. நல்லதோர் ஆரம்பம்
posted by Salai Sheikh Saleem (Dubai) [01 December 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13984

CFFC போன்ற தன்னார்வல அமைப்பால் - அதுவும் ஒரு ரிஜிஸ்டர் செய்யப்படாத அமைப்பால் எப்படி இது போன்ற விஷயங்களை அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்வது என்று நாங்கள் கவலையுற்று இருந்த நேரம், வல்லமை பொருந்திய அல்லாஹ்வால் தான் இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பம் நமக்கு கிடைத்து அதையும் நமது இளைய தளபதிகள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சரி அரசாங்கத்தின் கவனத்தையும் ஈர்த்தாகிவிட்டது, இனி என்ன செய்ய வேண்டும் ?

ஆங்காங்கே இருக்கும் காயல் நல மன்றங்கள் தயவுசெய்து CFFCயின் ஆய்வறிக்கைகளை தத்தம் இந்திய தூதரகத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட அலுவலகத்திலோ உடனடியாக சமர்ப்பியுங்கள். எல்லா தரப்பிலிருந்தும் நெருக்கடி தொடர வேண்டும்.

இந்தக்கூட்டம் என்னவோ DCWவின் உற்பத்தி திறனை கூட்டலாமா என்று நம்மைக் கேட்கத்தானே ஒழிய இருக்கும் இழவை எப்படி கொண்டாடுவது என்று நம்மை கலந்தாலோசிக்க அல்ல.

எனவே, தயவு செய்து ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை தாருங்கள் CFFC உங்களின் கட்டளைகளை செயலாக்க காத்துக்கொண்டிருக்கிறது. இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:DCW ஆலை விரிவாக்கம் குறித...
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [01 December 2011]
IP: 119.*.*.* India | Comment Reference Number: 13985

DCW is really a Dilemma.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:DCW விரிவாக்கம் -வழக்கு ஒன்றே வழி
posted by V D SADAK THAMBY (Guangzhou (China)) [01 December 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 13986

கருத்து கேட்பு கூட்டம் DCWயின் வெறும் சட்டபூர்வமான நடவடிக்கையே .நம் கருத்துப்படி நடப்பதற்காக அல்ல.இதில் நாம் பேசி எதுவும் ஆகப்போவதில்லை.அரசும், அரசு அதிகாரிகளும் இதற்ககு உடந்தைதான் .மாசுக்கட்டுபாட்டு வாரியம் சிறு தொழில் அதிபர்களிடம் தான் கெடுபிடியாக இருப்பார்கள்.பெரும் தொழில் அதிபர்களிடம் இவர்களின் வேலை நடக்காது.ஏனெனில் இவர்கள் எல்லோரையும் வாங்கும் சக்தி படைத்தவர்கள்.

தற்போது இருக்கும் தொழிற்சாலையை நம்மால் அகற்ற முடியாது. அனால் மாசு கட்டுபாட்டு வாரியத்தின் விதிமுறைகளை 100 % கடைபிடிக்கசொல்லி நாம் அவர்களுக்கு கோர்ட் மூலமாகவே நெருக்கடி கொடுக்க முடியும்.முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஆலை நீரையே கடலுக்குள் விடவேண்டும் .ஆலை வெளிவிடும் நீர் மாசுபட்டது என்றால் நாம் அதை சட்டபூர்வமாக கோர்ட்டில் நிரூபிக்க வேண்டும் .

மேலும் புதிய விரிவாக்க பணியை தொடரவிடாமல் நாம் கோர்ட் மூலாமாக எழிதாக தடை வாங்க முடியும்.தனி நபராக செய்வதை விட பொது அமைப்பு மூலமாக செய்தால் அதிக பலன் கிடைக்கும்.அவ்வாறு வழக்கு தொடுக்கும் பொதுநல அமைப்பு வழுவானதாக இருக்க வேண்டும்.ஏனெனில் DCW நிர்வாகம் அவர்களையும் எழிதாக விலை பேச முயற்சிக்கும்.நாம் SUPREME COURT வரை செல்ல வேண்டியதிருக்கும்.வழக்கு முடிய நெடுநாள் ஆகலாம். வழக்கு பயணத்தை நாம் பாதி வழியில் நிறுத்தக்கூடாது . வழக்கு தொடுப்பதற்கு முன்பு நாம் இதையெல்லாம் கருத்தி கொள்ள வேண்டும்.

இதுவெல்லாம் நம்மால் முடியுமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:DCW ஆலை விரிவாக்கம் குறித...
posted by K S muhamed shuaib (Kayalpatinam) [01 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13987

D C W ஆலை இனி ஒரு இன்ச் கூட விரிவாக்கம் செய்ய நாம் அனுமதிக்கக்கூடாது. மக்களின் உயிரோடு விளையாடும் வேதிநச்சுப்பொருட்களை தயாரித்து பல்லாயிரம் மக்களை மரணப்படுகுழிக்குள் தள்ளும் அந்த ஆலையை ஒட்டு மொத்தமாக ஊரைவிட்டும் துரத்தும் வேலையை மட்டுமே இனி நாம் பார்க்கவேண்டும்.

தூத்துக்குடிக்கு ஒரு ஸ்டெர்லைட் என்றால் நமதூருக்கு இந்த தாரங்கதாரா பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளின் மூலதனத்தோடு இயங்கும் இந்த நச்சு கம்பெனியை நமது முழு சக்தி கொண்டு எதிர்க்கவேண்டும்.

இதோ எதிர் வரும் டிசம்பர் நான்காம் நாள் போபால் (யூனியன் கார்பைடு )நினைவு தினம் வருகிறது. அதையே நாம் ஒரு ஆதரிச தினமாகக்கொண்டு நமது போர்ராட்டத்தை துவக்கலாம். இந்த நச்சுகம்பெனியை எதிர்த்து குரல் கொடுத்த அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:பிள்ளையை கில்லி தொட்டிலாட்டும் சிறார்கள்!..
posted by OMER ANAS (DOHA QATAR.) [01 December 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 13992

அஸ்ஸலாமு அழைக்கும்.

நம் சமுதாய மக்களுக்காகவும், ஒட்டு மொத்த மனித சமுதாயத்துக்காகவும், ஒன்று பட்டு குரல் கொடுத்த அனைத்து சகோதரர்களுக்கும், குறிப்பாக இளைய தளபதி N S E மஹ்மூத் மாமா, எ.லுக்மான் பாய்,இவர்களுக்கும் (இவர்களும் இளைஞ்சர்களே!) நன்றி.

கருத்து நம்பர் 15 ந்து SUPER பதில்.

ஆனாலும் இப்படியெல்லாம் குடையக் கூடாது. பிள்ளையை கில்லி தொட்டிலாட்டும் சிறார்கள் என்று விட்டு விடவும்! ஊரே ஒன்று பட்டு செயல் பட்டால், நம் சகோதரர்களுக்கு கேன்சர் எனும் சாவு மணி அடிக்கும் முன் நிச்சயம் நாம் D C W க்கு ஆப்பு மணி அடிக்கலாம்!!!

தம்பி ஜியா, மற்றும் நல்ல பல கருத்துக்களை பதிவோர், தங்களின் ஆழமான கருத்தினை இதில் பதியாதது ஆச்சரியமாக இருக்கின்றது! ஊருக்கு சொல்லி புரிய வைக்கவே முடியாது என்று ஆதங்கமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. 100 வருடம் ஆனாலும் ஒன்னும் ஆகாது...
posted by சாளை S.I.ஜியாவுதீன், (அல்கோபார் ) [01 December 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13997

இந்த முக்கியமான நிகழ்வுக்கு எழுத கமெண்ட்ஸ் பகுதி எல்லாம் பத்தாது. தனி கட்டுரையே எழுதனும். சகோதர வலை தளத்தில் கட்டுரையாக எழுதலாமே என்று இருந்தேன்...ஓகே...

இந்த நிகழ்வுக்கு சென்று வந்த நம் இதயத்தின் ஒரு பகுதியான அனைத்து சகோதரர்களுக்கும், கருத்துக்களை வீசிவிட்டு வந்த கண்மணிகளுக்கும் நன்றி என்று ஒரு வார்த்தை மட்டும் பத்தாது.

சொந்த விசயமாக ரேஷன் கடைக்கு கூட செல்லாத நம் சகோதரர்கள், ஊருக்கு என்றதும் ஒன்று கூடி, அக்கறையுடன், ஒற்றுமையுடன் சென்றதை நினைத்து மிக்க மகிழ்ச்சி.

அங்கு சென்று எதை கூறுவது, எப்படி கூறுவது, என்ன ரெகார்ட் உள்ளது என்ற பயத்தை போக்கி, ஒரு ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டையே கையில் கொடுத்த CFFC (புற்றுநோய் காரணி கண்டறியும் குழு) அவர்களின் சேவைகளையும் நினைத்து உள்ளம் பூரிக்கின்றது.

நடந்த கூட்டம் அவர்களின் பார்மாலிட்டி பிரகாரம் நன்றாக நடந்து முடிந்துள்ளது.

மாவட்ட நிர்வாகமும் இந்த "கருத்து கேட்புக் கூட்டம்" பல மக்களின் ஆதரவுடனும், சிலரின் எதிர்ப்புடனும் நடந்து முடிந்தது என்று ரிப்போர்ட் அனுப்பும்.

DCW என்பது நாம் நினைப்பது போல சாதாரன பெட்டிக்கடை அல்ல. பண பலம், அரசியல் பலம் பொருந்திய பெரிய மலை.

எந்த தலைவரும் ( அத்வானி.. முதல்.. அம்மையார்... வரை) தென் தமிழகம் வந்தால் அவர்களை தங்க வைப்பது முதல், தங்க தாம்பலம் விரிப்பது வரை இவர்கள் தான். இந்த தலைவர்கள் இவர்களுக்கு உதவியாக இருப்பார்களா அல்லது ஒரு ஊர் மக்களுக்கா.

போராட்டம் நடத்துவோம் அப்படி இப்படி என்று கருத்து கூறுபவர்கள் கொஞ்சம் சிந்திக்கனும். நம்ம போராட்டம் எப்படி, நம் மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது நமக்கு தெரியும்.

அண்மையில் நடந்த தாவா செண்டர் பிரச்சனையில் நடந்த கண்டன கூட்டத்தில் யார் யார் கலந்து கொண்டார்கள், மற்றவர்களின் நிலைப்பாடு எப்படி இருந்து, அதன் வீரியம் என்ன என்று நாம் அறிந்தது தான். ஒரு சிறிய காவல் துறை அதிகாரியை கூட சிறிதளவு அசைத்து பார்க்க கூட முடியாத நாம், பெரிய மலையை என்ன செய்வது.

சிறு உளியை வைத்து மலையை பெயர்த்து எடுத்துவிடலாம் என்று கூறலாம், சும்மா உளியை எடுத்து சென்று மலை உச்சியில் உட்கார்ந்து கொண்டு அடித்துக்கொண்டு இருந்தால் 100 வருடம் ஆனாலும் ஒன்னும் ஆகாது.

ராஜ தந்திரத்துடன், எங்கு உளியைக்கொண்டு அடித்தால் மலை கொஞ்சம் கொஞ்சமாக உடையுமோ அதை செய்யனும். முதலில் நாட வேண்டிய இடம் நீதி மன்றமும், உண்மையில் மக்களுக்காக உழைக்கும் அரசியல் கட்சியையும் தான்.

நல் உள்ளம் கொண்டவர்களே , நாளைய நம் சந்ததிகளுக்கு நாம் கொடுக்கும் சொத்து நிம்மதியான, நோய்கள் இல்லாத வாழ்வு ஒன்று தான்.

வல்ல ரஹ்மான் அனைத்து காரியத்தையும் நன்மையாக அக்கிவைப்பானாக. இதற்காக உழைக்கும் அனைவர்களுக்கும் நற்கூலியை கொடுப்பானாக.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved