Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:53:24 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7640
#KOTW7640
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 1, 2011
DCW ஆலையை விரிவாக்க, மக்கள் கருத்துணரும் நிகழ்ச்சியில் CFFC கடும் கண்டனம்! ஆட்சியரிடம் ஆதாரங்களை வழங்கியது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3405 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தி, கடும் பாதிப்புகளை உருவாக்கி, விதி மீறல்களுடன் செயல்படும் தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் நகராட்சியில் அமைந்துள்ள சாகுபுரம் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் - நடப்பு செயல்பாடுகளை ஆதாரத்துடன் விளக்கியும்,

தற்போது அந்த ஆலை தன் உற்பத்தியை, ரூபாய் ஐநூறு கோடியில் விரிவாக்கம் செய்வதை தடுத்து நிறுத்தக் கோரியும் காயல்பட்டினம் புற்றுநோய் காரணி கண்டறியும் குழு (Cancer Fact Finding Committee - CFFC) சார்பில், ஆதார ஆவணங்கள் அடங்கிய கோரிக்கை மனு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமாரிடம் நேரில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதுகுறித்து, CFFC தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

பொதுமக்கள் கருத்துணர்வுக் கூட்டம்:
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட DCW ஆலையின் ரூ.500 கோடி மதிப்பிலான உற்பத்தி விரிவாக்கத் திட்டம் குறித்து, மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தலைமையில், 29.11.2011 அன்று காலையில் பொதுமக்கள் கருத்துணர்வுக் கூட்டம் நடைபெற்றது.



CFFC சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஒருங்கிணைப்பில், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது தலைமையில், எஸ்.கே.ஸாலிஹ், ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் (இளைஞர் ஐக்கிய முன்னணி - YUF), பொறியாளர் ஏ.பி.ஷேக் (ரெட் ஸ்டார் சங்கம்), எஸ்.அப்துல் வாஹித் (இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் - ஐ.ஐ.எம்.) ஆகியோர் கலந்துகொண்டு, DCW ஆலை துவங்கப்பட்டது முதல் இன்று வரையிலுமான, விதி மீறல்களுடன் கூடிய அந்த ஆலையின் செயல்பாடுகளை விளக்கி, அதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், இதுவரையிலான அதன் செயல்பாடுகளே விதிமீறல்களுடன் இருக்கையில், புதிய உற்பத்தி அல்லது விரிவாக்கம் எதற்கும் அனுமதி வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்திப் பேசினர்.

காயல்பட்டினம் நல அறக்கட்டளை சார்பில் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதன் இணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, கோமான் ஜமாஅத் சார்பில் பேசிய காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் ஹாஜி ஏ.லுக்மான் ஆகியோரும் அதேபோன்று தமது வலுவான எதிர்ப்பைத் தெரிவித்தும், புதிய விரிவாக்கம் - உற்பத்தி என எதற்கும் அனுமதியளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்திப் பேசினர்.





CFFC சார்பில் எஸ்.கே.ஸாலிஹ் பேசிய விபரம் பின்வருமாறு:-

இந்த DCW தொழிற்சாலை துவங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை, அரசு வகுத்துள்ள எந்த விதிமுறையையும் மதித்து செயல்படுவதில்லை...



கடலில் பாதரசம் கலந்த கழிவு நீர்...
இத்தொழிற்சாலையின் கழிவுநீர் கடலில் கலப்பது பல்லாண்டு காலமாக நடைபெற்று வருகிறது... காயல்பட்டினம் கடற்கரையையும், கடலின் அவ்வப்போதைய மாற்றங்களையும் நாங்கள் அனுதினமும் கூர்ந்து கவனித்து வருகிறோம்... கடலில் நிறமாற்றங்கள் ஏற்படும்போதெல்லாம் அதை படமெடுத்து, எங்கள் ஊரின் செய்திகளைத் தாங்கி வரும் www.kayalpatnam.com வலைதளத்தில் அதை செய்தியாகப் பதிவு செய்திருக்கிறோம்...

இவ்வாறு கடலில் கலக்கப்படும் கழிவு நீரில், பொதுமக்களுக்கு கொடிய வியாதிகளையும், உயிரிழப்புகளையும் தரும் MERCURY (பாதரசம்) அதிகளவில் உள்ளது...

காயல்பட்டினத்து மக்கள் பெரும்பாலும் வாரத்தில் மூன்று முதல் நான்கு தினங்கள் இந்த கடல் மீனைத்தான் உண்ணுகின்றனர்...

நகரில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு...
எங்கள் ஊரில் புற்றுநோயின் பாதிப்பு பெருமளவில் அதிகரித்து வருகிறது... இதுகுறித்து காயல்பட்டினத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள், பாதிப்பிற்குள்ளாகி தற்போது சிகிச்சை பெற்று வருவோர், சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தோர் குறித்த கணக்கெடுப்பை நடத்தி, நகரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த முழு விபரங்களை சேகரித்து வைத்துள்ளோம்...

இந்த பாதிப்பிற்குக் காரணமாக பல அம்சங்கள் கூறப்பட்டாலும், இந்த தொழிற்சாலையின் கழிவுகளே மிக முக்கிய காரணமாக இருப்பதாக நாங்கள் பெரிதும் அச்சப்படுகிறோம்...

நாங்கள் இந்த தொழிற்சாலையையோ, அதனால் சுற்றுவட்டாரத்திற்கும், நாட்டுக்கும் கிடைக்கும் தொழில் வளங்களையோ கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க விரும்பவில்லை... ஆனால் எங்கள் ஊரில் அனுதினமும் புற்றுநோயாளிகளைப் பார்த்துப் பார்த்து வெந்து போன எங்கள் கண்களுக்கு இந்த தொழிற்சாலையின் வளர்ச்சியை விட அதனால் ஏற்படும் பாதிப்புதான் தெளிவாகத் தெரிகிறது...

நிலக்கரி மாசு...
அடுத்து இந்த தொழிற்சாலை, தனது மின் தேவைக்காக மின் உற்பத்தி செய்வதாகவும், தேவைக்கதிகமாக உள்ள மின் உற்பத்தியை சந்தையில் விற்பதாகவும் தெரிவித்துள்ளது... இந்த மின் உற்பத்திக்கு மூலப்பொருளாக நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது...

கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற இதுபோன்ற பொதுமக்கள் கருத்துணர்வுக் கூட்டத்தின்போது, இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியையே இதற்கு மூலப்பொருளாகப் பயன்படுத்தப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இறக்குமதி செய்யப்படும் நிலகரியில் சுமார் 11 சதவீதம் - சாம்பல் (Ash Content) இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் ஏறத்தாழ 40 சதவீதம் - சாம்பல் (Ash Content) இருக்கும் உள்ளூர் நிலக்கரியை பயன்படுத்தப்போவதாக DCW தெரிவித்துள்ளது. இதனால் மாசு பிரச்சனை பெரிதும் அதிகரிக்கும்.

‘காயல்பட்டினம்‘ பெயர் இருட்டடிப்பு...
அடுத்து, இந்த தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் வெளியிடப்படும் செய்திகளாகட்டும்... அறிக்கைகளாகட்டும்... அல்லது தற்போது இந்த புதிய உற்பத்தி மற்றும் விரிவாக்கத்திற்காக அவர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையாகட்டும்! இவையனைத்திலும் காயல்பட்டினத்தின் பெயர் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதை அறிகிறோம்...

முறையான தகவலின்மை...
அதுபோல, காயல்பட்டினம் நகராட்சியின் கீழ் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையின் முக்கிய அறிவிப்புகள், தகவல்கள் எதுவும் முறைப்படி நகராட்சிக்குத் தரப்படுவதில்லை. இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த பொதுமக்கள் கருத்துணர்வுக் கூட்டத்தைக் கூட வெளியிலிருந்து அறிந்துகொண்டே நாங்கள் இங்கு வந்துள்ளோம்... காயல்பட்டினம் நகராட்சியிலிருந்து இதுகுறித்த எந்த அறிவிப்பும் இன்று காலை வரை வெளியிடப்படவில்லை என்று நாங்கள் உறுதியாகத் தெரிவிக்கிறோம்...

ஆதார ஆவணங்கள்...
நான் இதுவரை சொன்ன அம்சங்கள் மற்றும் இது தொடர்பான இதர விபரக்குறிப்புகள் அனைத்தையும், தகுந்த ஆதார ஆவணங்களுடன் இக்கூட்டத்தின் நிறைவில் மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியரிடம் வழங்கவுள்ளோம் என்று தெரிவித்து எனதுரையை முடித்துக்கொள்கிறேன், நன்றி.


இவ்வாறு, CFFC சார்பில் எஸ்.கே.ஸாலிஹ் தெரிவித்தார்.

முன்னதாக காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் கருத்து தெரிவித்தார்.



அனுமதியின்றி கடலில் கலக்கப்படும் கழிவுநீர்...
“The unit shall not discharge any wastewater into nearby water courses directly/indirectly”(Consent to Operate;Consent order No.21824) என்று சட்ட விதியிருக்க, DCW ஆலை நிர்வாகம் அதைப் பற்றி சிறிதும் கண்டுகொள்ளாமல், பாதரசம் கலந்த கழிவுநீரை தொடர்ந்து பல்லாண்டுகளாக கடலிலேயே கலக்கி வருகிறது... என்று அவர் தெரிவித்தார்.

காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்கத்தின் சார்பில் அடுத்து பேசிய பொறியாளர் ஏ.பி.ஷேக், கடலில் கலக்கப்படும் கழிவில் உள்ள பாதரசத்தின் அளவை ஆதாரக் குறிப்புகளுடன் விளக்கினார்.



காயல்பட்டினம் இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் - ஐ.ஐ.எம். சார்பில் எஸ்.அப்துல் வாஹித் கருத்து தெரிவித்தார்.



சட்டத்திற்குப் புறம்பாக உற்பத்தி செய்யப்படும் PVC...
DCW தொழிற்சாலையின் PVC உற்பத்திப் பிரிவு பல ஆண்டுகளாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலின்றியே செயல்பட்டு வருகிறது...

ஏற்கனவே அது செய்து வரும் உற்பத்தி கடந்த 2008ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் காலாவதியானது... அதனைத் தொடர்ந்து அனுமதியைப் புதுப்பிக்க ஆலை நிர்வாகம் கோரியதையடுத்து 2009 மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் (Tamilnadu Pollution Control Board - TNPCB) அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதற்குப் பிறகு, Consent to Operate என்ற முறையான அனுமதியைப் பெறவில்லை என்று, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு TNPCB விளக்கம் தெரிவித்துள்ளது...

ஆக, ஏற்கனவே செய்யப்பட்டு வரும் உற்பத்தியே illegal - சட்டத்திற்குப் புறம்பானது என்றிருக்க, அதே உற்பத்தியை விரிவாக்க அனுமதி கோருவது வேடிக்கையாக உள்ளது...


இவ்வாறு எஸ்.அப்துல் வாஹித் கருத்து தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு சமர்ப்பிப்பு:
பொதுமக்கள் கருத்துணர்வுக் கூட்டம் நிறைவுற்ற பின்னர், மதியம் 02.15 மணியளவில், CFFC சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஒருங்கிணைப்பில், இதர ஒருங்கிணைப்பாளர்களான ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூத், எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமாரை அவரது தனியறையில் சந்தித்து DCW தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்கான எதிர்ப்பு ,மற்றும் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வரும் விதி மீறல்கள் குறித்தும் அதற்கான ஆதாரங்களையும் நேரில் சமர்ப்பித்தனர். அத்துடன் இந்த தொழிற்சாலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் ஆய்வாளர்கள் கடந்த காலங்களில் அளித்த ஆய்வறிக்கைகள், நிழற்படங்கள் முதலியவற்றை உள்ளடக்கிய 51 பக்கங்களைக் கொண்ட ஆதார ஆவணங்களையும் ஆட்சியரிடம் ஒப்படைத்தனர்.

காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், ரெட் ஸ்டார் சங்கம் சார்பில் பொறியாளர் ஏ.பி.ஷேக், இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் - ஐ.ஐ.எம். சார்பில் எஸ்.அப்துல் வாஹித் ஆகியோர் இச்சந்திப்பின்போது உடனிருந்தனர்.

அயல்நாட்டு இந்திய தூதரகங்களிலும்...
இந்த 51 பக்க ஆதார ஆவணங்களை உள்ளடக்கிய கோரிக்கை மனு, CFFC-யின் வேண்டுகோளின்படி உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள காயல் நல மன்றங்களால் அந்தந்த நாட்டிலுள்ள இந்திய தூதுவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


இவ்வாறு, CFFC தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தகவல்:
Cancer Fact Finding Committee - CFFC சார்பாக
ஹாஜி N.S.E.மஹ்மூது,
தீவுத்தெரு, காயல்பட்டினம்.


செய்தியில் சில வாசகங்களும், ஒரு படமும் இணைக்கப்பட்டுள்ளது. (02.12.2011 - 10:25hrs)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:DCW ஆலையை விரிவாக்க, மக்க...
posted by M Sajith (DUBAI) [01 December 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13999

DCW விசயத்தில் விவேகமான செயல்பாடுகள்தான் ஏதாவது பலனைத்தரும், ஆவேசமான போராட்டங்களும் தர்ணாக்களும் முடிவு வரும்வரை தொடர்ந்து SUSTAIN செய்வதின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயமல் இறங்குவது சரியல்ல என்பது என் கருத்து..

அடையாள ஆர்ப்பாட்டங்களும் , பேரணிகளும் நடத்தலாம் என்றாலும் அதில் பெரிய பலன் என்ன கிடைக்கும் என்பது தெரியவில்லை.

CFFC யின் இந்த ஆய்வறிக்கைகளை முறையாக எல்லா நலமன்றங்களும் தூதரங்களில் சமர்பிக்கவேண்டும், ஏற்கனவே சில மன்றங்கள் இதை செய்துள்ளது சரி, மீதமுள்ளவர்களும் இதை உடனே செய்ய வேண்டும்.

இது விசயத்தில் இப்போதைய தேவை நல்ல ஒருங்கிணைப்பு (COORDINATION).

CFFC தான் இதையும் செய்யவேண்டும், எல்லா மன்றங்களுக்கும் முறையாக / நேரடியாக வேண்டுகோள் வைப்பதுடன் - இந்த விரிவாக்கத்துக்கு தடைகோர சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுக்கவும் முயற்சிகள் செய்யவும் ஒப்புதலும், ஒத்துழைப்பும் கோரினால் தொடர்ந்து இதை செய்வது சாத்தியம்.

புதிய தகவல்களை / ஆதாரங்களை அவ்வப்போது புதிய அறிக்கைகளாக மீண்டும் மீண்டும் தூதரகங்கள் வழி சமர்பிப்பதால் இதற்கு இடையிடையே உயிர் கொடுப்பதுடன்..

மறக்காமல் செய்தி தொடர்பாளர்களை நியமித்து, இது தொடர்பாக ஏதாவது வழக்குகள் ஏதாவது பதிவு செய்ய நேர்ந்தால், அதன் நிலமை என்ன என்பதை பொது நல வழக்குகளின் முடிவுகளில் ஆர்வமுள்ள VSM அலி காக்காவுக்கு இடையிடையே தெரிவிக்கவும்.

--------------------------------

அட்மின் சார், விமர்சனம் என்று கடைசிவரிகளுக்கு கத்திரி போட்டுவிடாதீங்க.. அலி பாய் ஒன்னும் கோவிசிக்க மாட்டாரு..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:DCW ஆலையை விரிவாக்க, மக்க...
posted by Shameemul Islam SKS (Chennai) [01 December 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 14002

ஊர்ல நோய்லாம் கொறஞ்சி போச்சின்னு இருந்தாலாவது இந்த DCW பிரச்னையை கொஞ்சத்துக்காவது மறந்து இருக்கலாம்ங்க, ஆனா இப்போ கூட ஒருத்தர் மாத்தி ஒருத்தர பத்தி அந்த பாழாய்ப்போன CANCER இருக்குதாம்னு சொல்றாங்க.

அதுவும் இப்ப CHENNAI-ல வேறு இருக்கறதால நம்மூர் செய்திய கேக்குறதுக்கு ஒரே பயம்மா இருக்குங்க.

பத்துல ரெண்டு செய்தியாவது இந்த CANCER பத்தி தான் வருது. அதுவும் இந்த சென்னைல அடையாறு CANCER அப்போல்லோ CANCER - னு வேற இருக்கா, அதான் ஒரே பயமா இருக்கு. இந்த நேரத்துல அழைக்காமலேயே போய் அறிவாப் பேசிட்டு வந்த நம்ம ஊரு ஆள்கள பாராட்டியே ஆகனும்.

என்ன தான் சந்தி சந்தியாக் கத்தினாலும் கூச்சல் போட்டாலும் சில விஷயங்கள கேக்குற இடத்துக்கு கேக்க வைக்கனுங்க. அப்ப தான் நடக்க வேண்டியது நடக்கும். இதுக்கு முதல் படியா இந்த கலெக்டர் சந்திப்பு இருக்கட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:DCW ஆலையை விரிவாக்க, மக்க...
posted by MOHAMMED LEBBAI MS (dxb) [01 December 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14004

கருத்துரைத்த காயலின் கண்மணிகளே உங்களைனவர்களுக்கும் என்போன்ற காயலர்களின் துஆ என்றும் உண்டு ,,,,,,,,,

இதோடு விட்டுறாதிங்க,,,,,,,,களம் அமைத்து போராடுவோம்.

முயற்சி செய்வோம் இறைவன் துணை இருப்பான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்ஷா அல்லாஹ் முடிவு கட்டுவோம்
posted by shahul hameed sak (malaysia) [01 December 2011]
IP: 60.*.*.* Malaysia | Comment Reference Number: 14005

ஆச்சரியம் அதிசயம் ஆனால் உண்மை நமது மக்களின் முயற்சி,உத்வேகம்,செயலாக்கம் முன்போல் காயல் மக்கள் இல்லை என்பதை செயல் படுத்தி காட்டியிருக்கிறார்கள் நமது சகோதரர்கள்.

இது பதவி பிரச்னையோ,மான பிரச்னையோ அல்ல உயிர் பிரச்னை உயிர் கொல்லி dcw வால் நமதூரில் எத்தனை குடும்பங்கள் நிராதரவாக,எத்தனை குழந்தைகள் அனாதைகளாக,விதவைகளாக நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது.

சென்ற வார அதிர்ச்சி எனது சொந்தத்தில் இரண்டு குழந்தைக்கு தாயான சிறு வயது பெண்ணிற்கு உயிர்கொல்லி நோய் என்ற தகவல் யா அல்லாஹ் இந்த நோயிலிருந்து அனைத்து மக்களையும் காப்பாற்று என்று கையேந்துவோம்.அதோடு நமது முயற்ச்சியும் வேண்டுமல்லவா.....

அமைதி கூடிய விவேகமுள்ள பெரியோர்களும், வேகம் கூடிய விவேகமுள்ள இளையோர்களும், இனைந்து உயிர் கொல்லி நிறுவனத்திற்க்கு முடிவு கட்டவேண்டும். ஒன்பது வருடங்களுக்கு முன்பு kmt பிரச்னைக்காக எப்படி ஊர்மக்கள் ஒன்றுபட்டு போராடினார்களோ அதை விட வீரியமாக மக்கள் ஒன்றினைவார்கள் இன்ஷா அல்லாஹ்.

முயற்ச்சித்தால் முடியாதது எதுவுமில்லை இவ்வுலகினிலே இன்ஷா அல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. உனக்கு நாள் குறிக்கும் நாள் நெருங்கி விட்டது...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா.) [01 December 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14007

மனித உயிருக்கே பெரும் அச்சுறுத்தலாக இருந்து கொண்டு பல நூறு உயிர்களைப் பழிவாங்கிக் கொண்டு,மேலும்,சட்ட விதிகளுக்குப் புறம்பாக செயல் பட்டுக்கொண்டிருக்கும் இம் மரண ஆலைக்கு சாவுமணியடிக்கப் புறப்பட்ட காயல் கண்மணிகளே! சல்யூட்...!!!

அதன் அவலங்களையும்,அராஜகப் போக்கையும் பொதுமக்கள் மத்தியில் புட்டுப் புட்டு வைத்து ஆலையின் அஸ்த்திவாரத்தையே அசைத்து விட்டீர்கள்! நரிக்கு இடம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு!அனால் இது ஆளைக் கொல்லும் அபாய நரி! துரத்தியடித்து விரட்டப்பட வேண்டிய ஆலை நரி!

வேதிப் பொருட்களால் எம் மக்களை வெந்தழியச் செய்யும் வேஷக்கார நரி! சாட்டை நம் கையில்...சுழற்றியடிப்போம்! இருந்தச் சுவடேத் தெரியாமல் விரட்டியடிப்போம்! காயலுக்குட்பட்ட சாகுபுரத்தில் இருந்து கொண்டு எம் காயலைச் சாகும்புரமாக மாற்றிவரும் டி.சி.டபுள்யூவே உனக்கு நாள் குறிக்கும் நாள் நெருங்கி விட்டது உறுதி...!!!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:DCW ஆலையை விரிவாக்க, மக்க...
posted by Mohamed Salih (Bangalore) [02 December 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 14017

அஸ்ஸலாமு அழைக்கும்..

கலந்து கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் என் , மற்றும் காயல் நல மன்றம் பெங்களூர் சார்பில் வாழ்த்துக்கள் ..

எல்லாம் வல்ல இறைவன் நம் எடுக்கும் முயற்சியை வெற்றி யாகி தருவானாக அமீன்..

எங்கள் அமைப்பு இன்ஷா அல்லாஹ் என்றும் உங்களுடன் துணை நிற்கும் .. கூடிய விரைவில் DCW அட்டகாசம் முறியடிக்கப்படும் ..

என்றும் அன்புடன் ,
பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் ஸாலிஹ் , மற்றும்
காயல் நல மன்றம் பெங்களூர் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. 3 'தி' . மதி நிதி நீதி
posted by சாளை நவாஸ் (Singapore) [02 December 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 14022

தப்பாக நினைக்க வேண்டாம், ஆனால் இது தான் நிதர்சனமான உண்மை.

இந்த தலைப்பை பற்றி இன்னும் இரண்டு நாட்கள் விவாதிப்போம், அப்புறம் மறந்து விடுவோம். அப்புறம் "செங்கடல் நம் தலை எழுத்து " என்று ஒரு தலைப்பு வரும், காரசாரமாக விவாதிப்போம், அப்புறம் மறந்து விடுவோம்.

அவர்களுக்கும் இது தெரிந்து இருக்கும், ஆகவே எதை பற்றியும் கவலை கொள்ளாமல் அவர்கள் வேலையை ஜரூராக நடத்திகொண்டிருக்கின்றனர். படிப்பறிவில்லாத கிராமங்களில் கூட தொழிற்சாலைகள் கட்ட மறுப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற இந்த காலத்தில் நாம் இதுவரை என்ன செய்து கொண்டிருந்தோம்? ஏன் போராட்டங்கள் என்றாலே பின்னோக்கி ஓடுகிறோம்? நமக்கு என்ன வந்து விட்டது ஊரே ஒன்னும் கண்டுக்கமே இருக்கு என்ற ஒரே காரணத்தினால?

இவர்களை இதுவரை வளர விட்டதே நாம் தான் என்ற உண்மையை நாம் ஒத்து கொண்டுதான் ஆகவேண்டும். நடப்பவைகளை கவனத்தில் கொண்டு, இது ஒவ்வொரு காயலர்களின் உரிமை போராட்டம் என்ற மனோபாவம் ஒவ்வொரு இதயத்திலும் ஓடவேண்டும்.

போராட்ட குணம் வேண்டும். அடிக்க அடிக்க தான் அம்மியும் நகரும். ஒரு போராட்டத்தால் எந்த நன்மையையும் வந்தடையாது என்றாலும் கூட அந்த போராட்டமே நம் வெற்றிக்கு படிக்கலாக அமையும். போராடி பெற்றதுதான் சுதந்திரம்.

போராட்டம் ஒரு புறம் ஓடிகொண்டிருக்க, நீதி மன்றத்தின் படிகளை மிதிப்போம். அதற்குண்டான செலவு? யார் போவது? எங்கே போவது?

நமக்காக CFFC உருவாக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். பெரிய வெற்றி ஒன்று பெறாவிட்டாலும், மக்களிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தி தொழிற்சாலையால் விடப்படும் எல்லா தீமைகளையும் ஆதாரபூர்வமாக பட்டியல் இட்டு பல காயல் நல மன்றங்கள் மூலம் அந்தந்த நாட்டு இந்திய தூதரகங்களில் கொடுத்து, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று எடுத்துரைத்தது வரை ஒருவகையில் வெற்றிதான்.

எல்லாவற்றுக்கும் தேவை 3 'தி' மதி நிதி நீதி. நிதி அளிக்க விரும்புவோர் கிழே உள்ள லிங்கை சொடுக்கினால் விவரம் கிடைக்கும்

http://www.kayalpatnam.com/cffc.asp

இது காயல் மண்ணுக்கே செய்யும் பேருதவி.

சாளை நவாஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. விழுமின் எழுமின்
posted by Salai Nawas (singapore) [21 December 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 14921

பார்த்தீங்களா பார்த்தீங்களா!!!!! DCW தொழிற்சாலை விஷயத்தை எவ்வளவு சீக்கிரமாக மறந்துவிட்டோம் என்று. இது தான் நம் பலவீனம் அவர்களுடைய பலம்.

இனிமேல் அடுத்த தடவை கடல் சிகப்பு நிறம் ஆனால் தாம் தீம்னு குதிப்போம். அப்புறம் அமைதி. எதோ கருத்து பதிப்பில் எதையாவது எழுதிவிட்டு நம் கடமை முடிந்தது என்று ஒதுங்கி கொள்கிறோமா?

உங்கள் வாழ்வாதாரங்களும் நாளைய சந்ததியினரின் வாழ்வியல்களும் உங்கள் கையில்.

ஐயோ !!! காயல் கண்மணிகளே விழித்தெழுங்கள்.

என் தாய் மண்ணை காப்பது இந்த மண்ணின் மைந்தனின் கடமை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved