Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:25:41 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7648
#KOTW7648
Increase Font Size Decrease Font Size
சனி, டிசம்பர் 3, 2011
வட்டாட்சியர் அலுவலகத்தில், கற்புடையார் பள்ளி வட்டம் சுனாமி குடியிருப்பு குறித்த சமாதானக் கூட்டம்! இரு தரப்பினரும் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4699 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (31) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் பகுதியில் கட்டப்பட்டு வரும் சுனாமி குடியிருப்பு குறித்த சர்ச்சையை பேசித் தீர்க்கும் பொருட்டு, திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் பொற்கொடி தலைமையில் சமாதானக் கூட்டம் இன்று காலையில் நடைபெற்றது.

காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் பகுதியில் சுனாமி குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இது விஷயத்தில் ஆட்சேபனைக்குரிய பல அம்சங்கள் உள்ளதாகக் கூறி, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில், 04.01.2011 அன்று காலை முதல் நகர் முழுக்க கடையடைப்பும், மாலையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இருப்பினும், முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகள் எதற்கும் முறைப்படி தெளிவு வழங்கப்படாத நிலையில், கட்டிடப்பணிகள் அசுர வேகத்தில் தொடர்ந்து நடைபெற்றது. அதனையடுத்து, கட்டிடப் பணிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இருந்தும் கட்டிடப்பணிகள் நிறுத்தப்படாத நிலையில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகிகள் மற்றும் நகரப் பிரமுகர்கள் அடங்கிய குழு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, தகுந்த ஆவணங்களுடன் இதுகுறித்து முறையிட்டது. அதனடிப்படையில், கட்டிடப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

கட்டிடப் பணிகள் தற்காலிக நிறுத்திவைப்புக்கான காலக்கெடு நிறைவுறும் வரை, இத்திட்டத்தை ஆட்சேபித்த தரப்பினருக்கு எந்த விளக்கமும் முறைப்படி வழங்கப்படவில்லை. இந்நிலையில், காலக்கெடு நிறைவுற்றதும் மீண்டும் கட்டிடப்பணிகள் மும்முரமாக நடைபெற்றன.

இந்நிலையில் இத்திட்டத்தை எதிர்த்து, காயல்பட்டினம் நகராட்சியின் அப்போதைய தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், தூத்துக்குடி நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கின் அடிப்படையில், கட்டிடப்பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு, இன்று வரை அது நடைமுறையில் உள்ளது.

நீதிமன்றத்தால் இடைக்காலத் தடை வழங்கப்பட்டுள்ள நிலையிலும் கட்டிடப்பணிகள் அவ்வப்போது தொடரப்பட்டது அறியப்பட்டு, காவல்துறையிடம் முறையிடப்பட்டதன் பேரில், அதன் பின்னரே கட்டிடப் பணிகள் நிறுத்தப்பட்டன.

இவ்வாறிருக்க, இவ்வழக்கு குறித்து காயல்பட்டினம் நகராட்சியின் கருத்தை அறிவதற்காக கடந்த 22.11.2011 அன்று நடைபெற்ற நகராட்சியின் சாதாரண கூட்டத்திற்குப் பின்னர், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் வந்தனர். இவ்வழக்கை பதிவு செய்துள்ள நகர்மன்ற முன்னாள் தலைவரிடமிருந்து தேவையான விளக்கத்தைப் பெறாத நிலையில் எந்தக் கருத்து இதுகுறித்து தெரிவிக்க இயலாது என நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா மற்றும் அங்கிருந்த உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று காலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும். உடனடியாக வந்து அக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா, நகர்மன்றத் தலைவர் ஆபிதாவிடம் திடீரென தெரிவித்ததாகத் தெரிகிறது.

அதனையடுத்து, திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 12.00 மணிக்கு சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

வட்டாட்சியர் பொற்கொடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தை, தாசில்தார் வீராசாமி, துணை தாசில்தார் ரமேஷ் ஆகியோர் வழிநடத்தினர். காயல்பட்டினம் கிராம நிர்வாக அதிகாரி செல்வலிங்கம், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா ஆகியோரும் இக்கூட்டத்தில் அங்கம் வகித்தனர்.



துவக்கமாக, கற்புடையார் பள்ளி வட்டத்திலுள்ள தேவாலயத்தின் பங்குத்தந்தை சேவியர் ஜார்ஜ் பேசினார்.



இந்த 169 தொகுப்பு வீடுகளுக்கான பயனாளிகள் யாரும் புதிதாக இந்த ஊரில் குடியமர்த்தப்படப் போவதில்லை... ஏற்கனவே இங்கிருப்பவர்கள்தான்! அவர்கள் புதிய குடியிருப்புக்குச் சென்ற பின்னர் அவர்களது பழைய குடிசைகளை உடனடியாக காலி செய்வர்... அதன் பிறகு அவ்விடத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்...

ஓட்டை ஒழுக்குடன் உள்ள குடிசைகளில் குடியிருந்துகொண்டு அவர்கள் படும் வேதனையை எங்களால் பார்த்துக்கொண்டிருக்க இயலவில்லை என்பதால் நாங்கள் உங்களிடமே இதனை வேண்டுகோளாய் முன்வைக்கிறோம்...

எனவே, இவ்வழக்கை எப்படியேனும் திரும்பப் பெற்று, ஏழை மீனவ மக்களுக்கு நல்ல குடியிருப்பு கிடைக்க உதவுங்கள்...
என்று அவர் அப்போது கேட்டுக்கொண்டார்.

பின்னர், இத்திட்டம் குறித்து காயல்பட்டினம் நகர பொதுமக்கள் தரப்பில் சென்றிருந்தவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போதைய நகர்மன்றத் தலைவர் வழக்குப் பதிவு செய்தார் என்ற அடிப்படையில், இப்போதைய தலைவர் கைச்சான்றிட்டால், வழக்கை திரும்பப் பெற வாய்ப்புள்ளதாகவும், இதுகுறித்த கருத்தைத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அப்போது எழுந்து பேசிய காயல்பட்டினம் தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ், இப்பிரச்சினை இன்று நேற்று எழுப்பப்பட்டதல்ல! இத்திட்டத்தை ஆட்சேபித்து கடந்த ஜனவரி மாதம் 04ஆம் தேதி, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் கடையடைப்பும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டுள்ளது...

அதில், இந்த குடியிருப்புத் திட்டத்தின் பயனாளிகள் மற்றும் அவர்கள் சார்ந்த சமூகத்தினர் தவிர்த்து, நகரின் இதர அனைத்து தரப்பினரும் ஒட்டுமொத்தமாகக் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்று புதிய நகர்மன்றத் தலைவர், நகரின் பெரும்பான்மையோரின் உணர்வுகளைத் தாங்கிய இந்த முன் நிகழ்வுகளையும் கருத்திற்கொண்டுதான் செயல்பட முடியும்...

இக்கூட்டம் திடீரென கூட்டப்பட்டுள்ளது... இக்கூட்டத்தில் முக்கியமாகக் கலந்துகொள்ள வேண்டியவர்களான ஐக்கியப் பேரவை நிர்வாகத்தினர் யாரும் இல்லாத நிலையில் இக்கூட்டம் நடத்தப்படுவதை நாங்கள் கண்டிக்கிறோம்... அவர்கள் யாரும் கலந்துகொள்ளாத நிலையில் இதுகுறித்து நாங்கள் தனித்து எந்தக் கருத்தும் சொல்வதற்கில்லை...

எனவே, ஐக்கியப் பேரவை நிர்வாகிகளும் கலந்துகொள்ளும் வகையில் பிரிதொரு தேதியில் முன்னறிவிப்புச் செய்து இதுபோன்று கூட்டம் நடத்தினால், எங்கள் பேரவை நிர்வாகத்திலுள்ள பெரியவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கும், அவர்களின் முடிவுக்கும் இக்கூட்டத்திலிருக்கும் எங்கள் தரப்பினர் அனைவரும் கட்டுப்பட ஆயத்தமாக உள்ளோம்...
என்று தெரிவித்தார். மற்ற அனைவரும் அதனை ஒருமனதாக ஆமோதித்தனர்.

பின்னர், அரசு தரப்பில் இதுகுறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா,

இதுகுறித்து நம் மாவட்ட ஆட்சியர் மூன்று உறுதிமொழிகளைத் தந்துள்ளார்...

(1) புதிதாகக் கட்டப்படும் குடியிருப்புக்குச் செல்லும் பயனாளிகள் ஏற்கனவே குடியிருந்த குடிசைகள் முற்றிலுமாக அப்புறப்படுத்தப்படும்... அவ்விடத்தில் வேறு குடியிருப்புகள் வர அனுமதிக்கப்படாது...

(2) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பயனாளிகள் தவிர்த்து தகுதியுள்ள வேறு பயனாளிகள் யாரேனும் விடுபட்டிருப்பின், அதுகுறித்து தெரியப்படுத்தினால் வேறு திட்டங்கள் மூலம் அவர்களுக்கும் புதிய குடியிருப்புகள் கட்டித்தர ஆவன செய்யப்படும்...

(3) பயனாளிகள் புதிய குடியிருப்புகளுக்குச் சென்ற பின்னர், பழைய இடங்களை ஆக்கிரமிக்காதிருக்கும் வகையில், கடற்கரைப் பகுதியை சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்த சுற்றுலாத்துறை ஆயத்தமாக உள்ளது... அதன் முதற்கட்டமாக, ஐம்பது லட்சம் ரூபாய் வரையிலான செலவு மதிப்பிற்கு இப்போதே வரைவு திட்டத்தை முன்மொழியலாம்...
என்று தெரிவித்தார்.

இதில் மூன்றாவது அம்சம் குறித்து ஆட்சேபித்து கருத்து தெரிவித்த எஸ்.கே.ஸாலிஹ், காயல்பட்டினத்திற்கென ஒரு கலாச்சார கட்டுக்கோப்பு உள்ளது... கடற்கரை என்று அழகுபடுத்தப்பட்டதோ அன்று முதல் அக்கட்டுக்கோப்பு கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்பட்டு வருகிறது...

கடற்கரையில் எவ்வித மறைவிடமும் இல்லாதிருந்த வரை அங்கு சமூக விரோதிகள் துணிந்து வரத் தயங்கினர்... ஆனால் இன்று அழகுபடுத்தி கட்டிடங்கள் கட்டப்பட்ட பிறகு ஆங்காங்கே கிடைக்கும் மறைவுகளை சமூக விரோதிகள் தவறான வழியில் பயன்படுத்தி வருவது வழமையாக உள்ளது...

இதனால் பாதிக்கப்படுவோர் அனைத்து சமயங்களைச் சார்ந்த பெண்களும்தான்... எனவே, கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தைப் பொருத்த வரை எங்கள் ஐக்கியப் பேரவை அதை ஒருபோதும் ஏற்காது என்பதை அவர்கள் கூற நாங்கள் ஏற்கனவே அறிந்துள்ளோம்...
என்றார்.

நிறைவாக, ஐக்கியப் பேரவை நிர்வாகிகளுடன் கலந்து பேசிய பின்னர், இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து 24ஆம் தேதிக்குள் ஒரு தேதியில் இதுபோன்று மீண்டும் கூட்டம் நடத்தி பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் ஏ.லுக்மான், எம்.ஜஹாங்கீர், ஜே.அந்தோணி, பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோரும்,

காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் அவர்களின் மகன் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், காக்கும் கரங்கள் நற்பணி மன்றத் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், முஸ்லிம் லீக் தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் எம்.எச்.அப்துல் வாஹித், ஷேக் அப்துல் காதிர் ஆகியோரும்,

கற்புடையார் பள்ளி வட்டம் மீனவ சமுதாயத்தின் சார்பில், அதிமுக தூத்துக்குடி மாவட்ட மீனவரணி துணைச் செயலாளர் டி.பி.அந்தோணி, கற்புடையார் பள்ளி வட்ட மீனவர் சமுதாயத் தலைவர் சேவியர், அதன் செயலாளர் தஸ்னேவிஸ், அதன் முன்னாள் தலைவர் பிச்சையா, ஏ.மார்ட்டின் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:வட்டாட்சியர் அலுவலகத்தில்...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [03 December 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14074

வாழ்த்துக்கள். இது போன்று ஒவ்வரு விசயத்திலும் ஒற்றுமையாக செயல்பட்டால் நம்முள் எந்த காரியத்தையும் வென்று காட்டலாம். நமது வெற்றியை(காயல் ) நாளைய சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் .

மிகுந்த மகிச்சியுடன்
M .E .L .நுஸ்கி முஹம்மத் ஈஸா லெப்பை
மற்றும் காயல் அன்பர்கள்
ரியாத்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:சரியான நேரத்தில் சரியான முறையில் பதிலளித்த விதம் பாராட்டுதலுக்குரியது
posted by V D SADAK THAMBY (Guangzhou (China)) [03 December 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 14076

சகோதரர் SK சாலிஹு அவர்களின் கருத்து சரியான நேரத்தில் சரியான முறையில் சொல்லப்பட்ட கருத்து. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நம் ஊர் பிரநிதிகள் எல்லோருமே ஒரே குரலில் பதிலளித்து இருப்பது நிச்சயம் பாராட்டத்தக்கது. இதுதான் ஒற்றுமை. ஒரே குடையின் கீழ் நாம் செயல்பட்டால் நம்மை யாரும் எளிதில் வெல்ல முடியாது.

நாம் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை வாங்கியதாலேயே நம்மை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார்கள்.

இதுபோன்றுதான் DCW விஷயத்திலும் நாம் செயல்பட வேண்டும்.. அதன் விரிவாக்க பணிகளுக்கு முதலில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை வாங்க வேண்டும். மற்றவை எல்லாம் இயல்பாக நடக்க தொடங்கும். வழக்கு தொடுக்கும் அமைப்பு வலிமையானதாக இருக்க வேண்டும். DCW நிர்வாகம் இதை விலை பேச முயற்சிக்கலாம். எந்த சூழ்நிலையிலும் நாம் வழக்கிலிருந்து பின் வாங்க கூடாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ... அப்படி என்ன அவசரம்... ?
posted by தமிழன்.. முத்து இஸ்மாயில் - காயல்பட்டிணம் (காயல்பட்டினம்) [03 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14078

இக்கூட்டத்தில் முக்கியமாகக் கலந்துகொள்ள வேண்டியவர்களான ஐக்கியப் பேரவை நிர்வாகத்தினர் யாரும் இல்லாத நிலையில் இக்கூட்டம் நடத்தப்படுவதை நாங்கள் கண்டிக்கிறோம்... அவர்கள் யாரும் கலந்துகொள்ளாத நிலையில் இதுகுறித்து நாங்கள் தனித்து எந்தக் கருத்தும் சொல்வதற்கில்லை... எங்கள் பேரவை நிர்வாகத்திலுள்ள பெரியவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கும், அவர்களின் முடிவுக்கும் இக்கூட்டத்திலிருக்கும் எங்கள் தரப்பினர் அனைவரும் கட்டுப்பட ஆயத்தமாக உள்ளோம்... copy - paste

தம்பி எஸ்.கே.ஸாலிஹ் அவர்களின் கருத்து நமது ஊர் ஒற்றுமையை பிரதிபலிக்கிறது..

நமக்குள் சின்ன சின்ன பிளவுகள் இருக்கலாம்... அதை மற்றவர்கள் தனக்கு சாதகமாக அமைத்து விடலாம் என்று அவசரமாக ஒரு சமாதான கூட்டத்தை ஏற்பாடு செய்ததாக புரிய முடிகிறது...

தம்பி எஸ்.கே.ஸாலிஹ் அவர்களின் கண்டன கருத்து பதிவு பாராட்டப்பட வேண்டியது...

நகரமன்ற தலைவர் திருமதி ஆபிதா அவர்கள் ஊர் பெரியவர்கள், (ஐக்கியப் பேரவை) முக்கியஸ்தர்கள் இவர்களை கலந்து ஆலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க மாட்டார்... அதில் சந்தேகமில்லை...

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:வட்டாட்சியர் அலுவலகத்தில்...
posted by M.Sulthan (Sudan) [03 December 2011]
IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 14081

அஸ்ஸலாமு அலைக்கும்....

சகோதரர் S.K. ஸாலிஹ் அவர்களின் கருத்து வரவேற்கத்தக்கது...அதுல குறிப்பா "இக்கூட்டத்தில் முக்கியமாகக் கலந்துகொள்ள வேண்டியவர்களான ஐக்கியப் பேரவை நிர்வாகத்தினர் யாரும் இல்லாத நிலையில் இக்கூட்டம் நடத்தப்படுவதை நாங்கள் கண்டிக்கிறோம்... அவர்கள் யாரும் கலந்துகொள்ளாத நிலையில் இதுகுறித்து நாங்கள் தனித்து எந்தக் கருத்தும் சொல்வதற்கில்லை..."

சூப்பர்....... சூப்பர்......... ஊர் ஒற்றுமையை அரசு அதிகாரிகளுக்கு புரிய வைத்த சகோதரர் ஸாலிஹ் அவர்களுக்கு Special Thanks மாஷா அல்லாஹ்...

இந்த 169 குடும்பங்களின் பூர்வீகம் காயலர்கள் அறிந்த விஷயம்... காயல் பட்டனம் சுனாமியினால் பாதிக்கப்படவில்லை.. அவ்வாறு இருந்தும் ஏற்கன்வே மங்களாவடி அருகில் தொகுப்பு வீடு கட்டி கொடுத்தாச்சு. எங்கேயோ சுனாமியிலே பாதிக்க பட்டவர்களுக்கு காயல் பட்டனத்தில் தொகுப்பு வீடு கட்டி கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்..? ஏன் காயல் பட்டனத்தில் மட்டும் தான் கடற்கரை உள்ளதா? அந்த 169 குடும்பங்கள் அவர்கள் சொந்த ஊரில் இடங்கள் இல்லையா?

உள்ளூரில் ஏழைகள் இருக்கும் போது வெளியூர் செல்வந்தர்களுக்கு குடிசை மாற்று வீடுகளா.....? சுனாமியே பாதிக்காத ஊருக்கு சுனாமி வீடுகள் எதற்க்கு........? தடை செய்ய பட்ட இடத்தில் அரசாங்காமே வீடுகள் கட்டலாமா?

"காயல் பட்டனத்தின் கடற்கரையை அழகு படுத்த 1 கோடி செலவு செய்ய சுற்றுலாத்துறை ஆயத்தமாக உள்ளது.... " முதலில் நகரின் குப்பகளை அப்புறபடுத்துங்க .... நகரை முதலில் சுகாதாரமா வைக்க உதவி செய்யுங்க.. அதற்கான் நிதியை அரசிடமிருந்து எவ்வாறு பெறுவதுன்னு யோசிங்க.... இருக்கிற இம்சையே தாங்க முடியல இதுல அழகு படுத்த போறாங்களாம்... கடற்கரை அழகு படுத்துவதற்கு ஒரு போதும் எங்கள் ஐக்கியப் பேரவை சம்மதிக்காது...

லொள்ளு:
HAND WASH ன்னா கையை கழுவுறது.....
FACE WASH ன்னா முகத்தை கழுவுறது..... அப்போ
BRAIN WASH ன்னா மூளையை கழுவுறதா............?????????????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:வட்டாட்சியர் அலுவலகத்தில்...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [03 December 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14082

அஸ்ஸலாமு அலைக்கும்

உண்மையில் தம்பி எஸ்.கே.ஸாலிஹ் அவர்கள் . பேசியது அருமையானது. நாம் அணைவரும் இவரை பாராட்டுவோமாக. நாம் யாவர்களும் ஒற்றுமையாக இது போன்று இருந்தால் நம் ஊருக்கு ரொம்ப நல்லது .

பொதுவாக நம் யாவர்களுக்கும் நல்லது & ஊருக்கும் நல்லதுதான். நம் தலைவி ஆபிதா அவர்களும் இந்த நம் ஊர் விசியத்தில் நிதானமான முறையில் .நம் ஊர் ஐகிய பேரவையுடன் & நம் கவுன்சிலர்களுடனும் கலந்து ஆலோசித்து செயல் பட வேண்டியது தான் சரியானது .

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. ஆட்சியாளர்களின் சூழ்ச்சியும், நமதூர் ஒற்றுமையும்
posted by Saalai.Abdul Razzaq Lukman (Dubai) [03 December 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14083

அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு நமதூர் மக்களின் எண்ண உணர்வுகளை ஆணித்தரமாக பிரதிபலித்த தம்பி S.K.ஸாலிஹ்அவர்களுக்கு நன்றி.

"இவ்வழக்கு குறித்து காயல்பட்டினம் நகராட்சியின் கருத்தை அறிவதற்காக கடந்த 22.11.2011 அன்று நடைபெற்ற நகராட்சியின் சாதாரண கூட்டத்திற்குப் பின்னர், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் வந்தனர். இவ்வழக்கை பதிவு செய்துள்ள நகர்மன்ற முன்னாள் தலைவரிடமிருந்து தேவையான விளக்கத்தைப் பெறாத நிலையில் எந்தக் கருத்து இதுகுறித்து தெரிவிக்க இயலாது என நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா மற்றும் அங்கிருந்த உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக கருத்து தெரிவித்தனர்".Copy paste

சரியாக 10 நாட்கள் கழித்து ஏன் இந்த அவசர கூட்டத்தை, அதுவும் எந்த அவகாசமும் தராமல் அதே அதிகாரிகள் கூட்ட வேண்டும். இது அதிகாரிகளின் சூழ்ச்சி. அவர்களின் கணிப்பில், நடந்து முடிந்த நகராட்சி தேர்தலில், ஊர் இரண்டு பட்டுவிட்டது என்று நினைப்பு. இந்த நேரத்தில் கூட்டத்தை கூட்டினால், காயலர்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கும்.அதை பயன்படுத்தி, தங்களது சதி / சூழ்ச்சியை நிறைவேற்றி விடலாம் என்ற எண்ணத்துடன்தான் இந்த கூட்டத்தை கூட்டி இருக்கிறார்கள்.

ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ், சூழ்ச்சிகாரர்களுக்கு எல்லாம் மகா சூழ்ச்சியாளன். நம்மிடம் ஒற்றுமையை ஏற்படுத்தி, தம்பி ஸாலிஹ் மூலம் சரியான பதிலை கொடுத்துள்ளான். தலைவி அவர்கள் என்ன கருத்தை தெரிவித்தார்கள் என்று இந்த news -இல் இல்லை. இதை வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

"பின்னர், இத்திட்டம் குறித்து காயல்பட்டினம் நகர பொதுமக்கள் தரப்பில் சென்றிருந்தவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போதைய நகர்மன்றத் தலைவர் வழக்குப் பதிவு செய்தார் என்ற அடிப்படையில், இப்போதைய தலைவர் கைச்சான்றிட்டால், வழக்கை திரும்பப் பெற வாய்ப்புள்ளதாகவும், இதுகுறித்த கருத்தைத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது". copy பேஸ்ட்

இது தான் அதிகாரவர்கத்தின் பிரித்தாளும் தந்திரம். இதற்கு எக்காரணம் கொண்டும் சம்மதிக்க கூடாது என்பது மட்டுமல்ல. மாறாக நகரமன்றத்தை அவசரமாக கூட்டி, சென்ற நகரமன்ற தலைவர், ஹாஜி செய்யத் அப்துல் ரஹ்மான் அவர்கள் தொடுத்த வழக்கை, தீர்மானம் மூலம் உறுதி செய்ய வேண்டும். இனி நடக்க வேண்டிய நடவடிக்கைகளை துரித படுத்த வேண்டும்.

ஐக்கிய பேரவை தலைமையில் மீண்டும் கூட்டம் போட்டு இந்த வழக்கை மேலும் strong பண்ண வேண்டும். அதிகாரிகள் கூட்டும் அடுத்த கூட்டத்திற்கு ஐக்கிய பேரவையை உள்ளடக்கிய அனைத்து ஜமாத்தினரும் திரளாக சென்று சட்டரீதியாக அந்த அதிகாரிகளின் முயற்சியை முறியடிக்க வேண்டும். எப்பாடு பட்டாவது அந்த சுனாமி குடியிருப்பை தடுத்து நிறுத்த வேண்டும். காயலர்கள், இளிச்சவாயன்கள் இல்லை, அவர்களை இனியும், எந்த விஷயத்திலும் ஏமாற்ற முடியாது என்பதை இந்த அதிகார வர்க்கம் உணர வேண்டும்.

மேலும் நமது கடற்கரையை அழகு படுத்துவது பற்றி நம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு), தெரிவித்த கருத்துக்கு, தம்பி ஸாலிஹ் அவர்களின் பதில் மிக சரியே. ஆனால் இந்த கருத்தை தலைவி அவர்கள் தெரிவித்து இருக்க வேண்டும். தலைவி அவர்கள் உடனே நம் நகராட்சியின் அவசர கூட்டம் ஒன்றை கூட்டி, ஆணையரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து ஒரு தீர்மானமும், இனி வரும் காலங்களில் நமது கடற்கரையை அழகு படுத்த தேவையில்லை என்று இன்னொரு தீர்மானமும், ஒருமனதாக நிறைவேற்றி இந்த கருத்துகளுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்.

ஓங்குக ஊர் ஒற்றுமை என்று பிரார்த்திக்கிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:வட்டாட்சியர் அலுவலகத்தில்...
posted by M.I.மூஸா நெய்னா (மதினா முனவ்வரா) [03 December 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14086

சகோதரர் S.K. சாலிஹ் அவர்களின் ஆணித்தரமான கருத்துக்கு எனது பாராட்டுக்கள். எல்லா விஷயத்திலும் இந்த மாதிரி துடிப்புள்ள இளைஞர்கள் செயல்பட்டால் நமதூரின் எதிர்காலம் நிச்சயமாக பிரகாசமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

மர்ஹூம் S.K. மாமா தற்போது நம்மிடையே இல்லாத குறையை சாலிஹ் தீர்ப்பார் என்பதில் சந்தேகமில்லை. கூட்டத்தில் தெரிவித்ததைப்போல், ஊர் பெரியவர்களின், அனுபவசாலிகளின் அறிவுரையின்படி செயல்படும்படி கேட்டுக்கொள்கிறேன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:வட்டாட்சியர் அலுவலகத்தில்...
posted by PS ABDUL KADER (jeddah) [03 December 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14087

அவசர எற்பாடு கூட்டதின் ஆட்சியாளர் முன்னால் தம்பி SK சாலிஹு அவர்களின் கருத்து சரியான முறையில் சொல்லப்பட்ட கருத்து. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நமதூர் மக்கள் எல்லோருமே ஒரே குரலில் ஒத்துமையா பதிலளித்தமைக்கு வாழ்த்துக்கள். இப்படித்தான் இருக்க வேண்டும் காயலரின் ஒற்றுமை. இதன்படியே நாம் ஒவொரு விசியத்தில் செயல்பட்டால் நம்மவரை யாரும் எளிதில் வெல்ல முடியாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. நகர்மன்றத் தலைவரின் கருத்தும் இதுவே!
posted by S.K.Salih (Kayalpatnam) [04 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14091

தலைவி அவர்கள் என்ன கருத்தை தெரிவித்தார்கள் என்று இந்த news -இல் இல்லை. இதை வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சகோதரர் லுக்மான் வினவியுள்ளார்.

நான் பேசியது என் சொந்தக்கருத்து மட்டும் அல்ல. கூட்டத்திற்கு முன் - நகர்மன்ற தலைவி அவர்கள் எங்களிடம் வெளிப்படுத்திய அவரின் நிலைப்பாடு படியே நான் பேசினேன். மேலும் கூட்டத்திற்கு சென்ற அனைத்து காயலர்களின் கருத்தையே - அவர்களின் சார்பாக - நான் தெரிவித்தேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:வட்டாட்சியர் அலுவலகத்தில்...
posted by jahangir (Kayalpatnam) [04 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14092

சகோதரர் S.K.சாலிஹ் சொல்வது உண்மை நாங்கள் கூட்ட அரங்கிற்குள் செல்வதற்கு முன்பே இங்கு என்ன பேச வேண்டும் என்று முடிவு செய்த பிறகுதான் அங்கு சென்றோம்.

இது அவரின் சொந்த கருத்து அல்ல. தலைவி உட்பட அங்கு சென்ற அனைவரின் கருத்தும் இதுவாகவே இருந்தது.

இந்த சுனாமி குடியிருப்பு விஷயத்தில் தலைவி மற்றும் தற்போது நகராட்சியில் உள்ள பெரும்பாலான கவுன்சிலர்களின் நிலை என்னவென்றால், நமதூர் முஸ்லிம் ஐக்கிய பேரவை என்ன முடிவு செய்கின்றதோ அதையே பின்பற்றுவோம் என்பதே.

இவண்,
M.ஜஹாங்கிர்,
5-வது வார்டு உறுப்பினர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:வட்டாட்சியர் அலுவலகத்தில்...
posted by seyed mohamed (KSA) [04 December 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14093

ஐக்கிய பேரவை கேஸ் நிலைப்பாடு சரி, புதிய நகராட்சி இதுவிசயமாக வலுவான தீர்மானம் நிறைவேற்றுமா? ஐக்கய பேரவையை விட அரசு தொடபுடைய நகரச்சிக்குதான் வெயிட் அதிகம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:வட்டாட்சியர் அலுவலகத்தில்...
posted by சாளை. S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [04 December 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14096

இந்த ஒற்றுமையை தான் மக்கள் அனைவர்களும் எதிர்பார்க்கின்றார்கள்.

ஒரே தலைமையின்((ஐக்கிய பேரவை) கீழ் ஊர் வரனும், அவர்களின் முடிவுக்கு ஊரே கட்டுப்படணும், அதற்க்கு அவர்களும் இறைவனுக்கு பயந்து நடக்கணும். இதை இதை தான் அனைவர்களும் விரும்புகிறோம்.

இந்த ஒற்றுமை துளிர் விடுவதை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது. சபாஸ்...அனைவர்களுக்கும் நன்றிகள்.

குறிப்பாக சகோ. S.K.ஸாலிஹ் அவர்களின் வழமையான ஆணித்தரமான பேச்சுக்கு ஒரு கைதட்டலுடன் கூடிய பாராட்டுக்கள்.

இவர் மாதிரி ஆட்கள் நகர்மன்றத்திற்கு வரனும் என்று வால்லோனிடம் துஆ கேட்டோம், வல்ல ரஹ்மான் அங்கீகரிக்கவில்லை, எது நன்மை என்று அவனுக்கு தெரியாதா.!!

இந்த ஒற்றுமை தொடர வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக.

சாளை. S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:வட்டாட்சியர் அலுவலகத்தில்...
posted by Vilack SMA (Hong Shen , Siacun) [04 December 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 14099

s .k .Salih காக்காவின் பேச்சு சூப்பராத்தான் இருக்கு. நகரமன்ற தேர்தலுக்கு முன் அவருடைய மனநிலை எப்படி இருந்ததோ? ஏனெனில், தேர்தல் பிரச்சாரத்தின்போது, நமது தலைவி, அந்த மக்களிடம் சென்று, உங்களுக்கு சுனாமி வீடுகள் கிடைக்க உதவியாய் இருப்பேன் என்று சொல்லித்தான், அவர்களின் அன்பையும், பாசத்தையும் பெற்றிருக்கிறார். அப்போதெல்லாம் ஒன்றும் வாய் திறக்காத என் அருமை salih காக்கா, இப்போது ஆவேசமாக பேசுவானேன்? மொத்தத்தில் "பழம் தின்று, கொட்டை போட்ட " அரசியல்வாதிகளைஎல்லாம் மிஞ்சி விட்டார்கள் இந்த தலைவியும் , அவருடைய சகாக்களும் .

இவர்கள் அனைவரும் தேர்தல் களத்தில் , அல்லாஹ்வின் பெயரை சொல்லி இறங்கியவர்கள் .

ஐக்கியப்பெரவையால் இந்த சுனாமி வீடுகள் கட்டுமானத்திற்கு தடை வாங்கியிருப்பது தெரிந்தும் , நமது தலைவி எதற்காக பொய்யான வாக்குறுதியை கொடுத்தார்? இப்போது எதற்காக பேரவையின் ஆலோசனையை கேட்கிறீர்கள்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. பழையதை மறப்போம்... ஊர் ஒற்றுமையை காப்போம்... இதில் நாங்கள் தெளிவாக இருகிறோம்...!
posted by M.S.M சம்சுதீன் - 13வது வார்டு உறுப்பினர். (காயல்பட்டினம்) [04 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14100

சகோதரர் ஜனாப் S.K.சாலிஹ் அவர்கள் பேசியது நாங்கள் கூட்ட அரங்கிற்குள் செல்வதற்கு முன்பாகவே அங்கு என்ன பேச படுகிறது..? அதற்கு ஏற்ற பதிலை மட்டும் நாம் பேச வேண்டும் என்று முடிவு செய்த பிறகு தான் அங்கு சென்றோம்.

இது ஜனாப் S.K.சாலிஹ் அவரின் சொந்த கருத்து மட்டும் அல்ல கூட்டத்திற்கு முன் நகர்மன்ற தலைவி அவர்கள் எல்லோரிடமும் வெளிப்படுத்திய அவரின் நிலைப்பாடு படியே ஜனாப் S.K.சாலிஹ் அவர்கள் பேசினார் மேலும் கூட்டத்திற்கு சென்ற அனைத்து காயலர்களின் கருத்தையே தலைவி மற்றும் அங்கு சென்ற அனைவரின் கருத்தும் இதுவே..!

எங்களின் நிலைப்பாடு என்னவென்றால் நமதூர் முஸ்லிம் ஐக்கிய பேரவை பெரியவர்கள் அனுபவசாலிகள் என்ன முடிவு செய்கிறார்களோ அதுவே எங்களின் முடிவும் அதுவே..

பழையதை மறப்போம்... ஊர் ஒற்றுமையை அனைவர்களும் காப்போம்... இதில் நாங்கள் தெளிவாக இருகிறோம்... நமது ஐக்கிய பேரவை பெரியவர்கள் உடன் மேலும் ஐக்கியத்தோடு இருந்து ஊர் நலனுக்காக செயல் பட வல்ல இறைவன் கிருபை செய்வானாக ஆமின்...

அன்புடன் ஊர் நலன் விரும்பும்...
உங்கள் பிரதிநிதி - எம்.எஸ்.எம். சம்சுதீன்.
13-வது வார்டு உறுப்பினர் - சுயேச்சை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. ஐக்கியத்தின் வெளிப்பாடு
posted by Salai Sheikh Saleem (Dubai) [04 December 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14102

காயலர்களின் ஒட்டுமொத்த குரல்களையும் ஒரே குரலில் ஒலிக்க ஊன்றுகோலாய் இருந்த நமது நகர்மன்றத்தலைவி மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆணித்தரமாக நமது கருத்துக்களை சரியான நேரத்தில் சரியான தொணியில் பதிவுசெய்த என் மருமகன் இளைய தளபதி ஸாலிஹிர்க்கும் எல்லா காயலர்கள் சார்பிலும் இமாலய பாராட்டுக்கள்.

என்ன ஒரு முதிர்ச்சியான பேச்சு ! ஊர் நன்மையை மட்டுமே பிரதான நோக்கமாய் கொண்டு செயல்பட்டு வரும் SK ஸாலிஹ், இந்த அமர்வில் ஐக்கிய பேரவை இல்லாததை சுட்டிக்காட்டி ஊர் நலத்தில் பெரிவர்களின் பங்கீடு எந்த அளவிற்கு முக்கியம் என்பதையும் இளையவர்கள் முதியவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையும் உணர்த்திக்காட்டி, நம் எல்லோர் பாரட்டுக்களுக்கும், துஆக்களுக்கும் உரித்தானவராகிறார்.

முறையான ஐக்கிய பேரவை கண்டிப்பாக நமது நகருக்கு வேண்டும் என்பதே எல்லோருடைய கருத்துக்களும்.

என்று மலருமோ இந்த 'குறிஞ்சிப்பூ' ???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. மாஷா அல்லாஹ்,
posted by M Sajith (DUBAI) [04 December 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14103

ஆண்டான்டு காலமாக காயலின் இளைஞர்கள் இளமையையும் துடிப்பான காலங்கலையும் வெளிநாடுகளில் செலவளிக்க - ஊர் நலனிலும் பொது விசயங்களிலும் ஆடி ஓடி கலைத்தபின் நல்ல எண்ணங்கள் மட்டுமே துணையாக செயல்பட்டுவருவதால் - இதில் இடைபடும் அரசியல் வாதிகளால் 'சந்தர்ப்பங்கள்' சாதகமாக பயன்படுத்தப்படுது தான் நம் அடிப்படை 'வீக்னஸ்' ஆக இருந்துவந்தது..

இதனால்தான் பொதுநல மன்றங்கள் சிலரின் சுயநலனுக்காக வளைந்து கொடுக்கவும் சூழல்களை உறுவாககியது..

கடந்த DCW கருத்து கேட்பு கூட்டத்தில் நம் இளைய தலைமுறையின் உரிமைக்குரல்கள், இந்த கூட்டத்தில் பறைசாற்றிய நிதானம் - மாஷா அல்லாஹ் நல்ல விடியலின் ஆரம்பமாகவே தெரிகிறது.!

பேரவை (அதன் தலைவர் உவைஸ் அப்பா குறிப்பிட்டது போல) இனி வரும் காலங்களில் பேரவைக்கு சம்பந்தம் இல்லாதவர்களால் நிர்பந்திக்கப்படும் சூழலுக்கு இடமளிக்காமல், வழமை போல ஊரின் நன்மைகளை மட்டும் முன்னிறுத்தி செயல்பட இறைவனை வேண்டுவோம்.

இன்று ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களுக்கு, தங்கள் சொந்த நேரங்களை, அலுவல்களுக்கிடையில் நல்ல காரியங்களுக்கு செலவிட துணிந்த சகோதர்களுக்கு, அவர்களிள் தேவைகளை பூர்த்தி செய்து அதிகமான அபிவிருத்தியை வழங்க வல்லமை மிக்க இறைவனை மனதார பிறாத்திக்க காயலர்கள் அனைவரும் கடமைபட்டுள்ளோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:வட்டாட்சியர் அலுவலகத்தில்...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [04 December 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14105

வட்டாச்சியர் அலுவலகத்தில் நமதூர் மக்கள் சார்பாக தலைவி அவர்களின் தலைமையில் கலந்துகொண்டு நம் கருத்தை, எதிர்ப்பை சகோதரர் S .K . சாலிகு மூலம் பதிவு செய்த வர்களுக்கு பாராட்டுக்கள்.

இதை முறைப்படி எதிர்கொண்டு ஒற்றுமையாக, சென்ற நகராட்சி எடுத்த முடிவை, மாஜி தலைவர், ஐக்கிய பேரவையை கலந்து அவர்களுடன் இணைந்து இதை முடிவு செய்யவும்.

ஆங்கிலேயர்கள் வியாபாரத்திற்காக நம் நாட்டில் நுழைந்து நம்மையே அடிமையாக்கிய சரித்திரம் இந்த சுனாமி குடியிருப்பினால் நமதூருக்கும், நம் சமுதாயத்திற்கும், நம் கலாச்சாரத்திற்கும் நடக்காமலிருக்க நாம் மிகவும் உஷாராக நடந்துகொள்ள கடமை பட்டுள்ளோம்.

அது சரி மேற்படி கூட்டத்தில் துணை தலைவர் மற்றும் மீதமுள்ள உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லையா? பெண் உறுப்பினர்களை தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டிருக்கலாமே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. ஒற்றுமையின் பிரகாசம்.
posted by s.s. meera sahib (zubair) (riyadh) [04 December 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14110

அஸ்ஸலாமு அலைக்கும். கற்புடையார் பள்ளி வட்டம் சுனாமி குடியிருப்பு குறித்து நமது நிலைபாட்டை உறுதி படுத்திய நமது நகர் மன்ற உறுப்பினர்கள், மற்றும் s.k. salih க்கும் நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.

இந்த பேச்சுகள் தான் ஒற்றுமையின் அஸ்த்திவாரம். இந்த கொள்கையே.... நிலை நாட்டவும். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:வட்டாட்சியர் அலுவலகத்தில்...
posted by MS MOHAMMED LEBBAI (dxb) [04 December 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14114

அன்பின் ஸாலிஹ்,,, உன்னை என் குடும்பம் பெற்றதுற்கு பெருமை அடைகிறேன்..

சொல்லவேண்டிய கருத்தை அழகாக அதே சமயம் ஆணித்தரமாக பதிவு செய்த உமக்கு எல்லாம் வல்ல ரஹ்மான் நல்லருல்புரிவனாக ஆமின்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. தன்னிலை விளக்கம்!
posted by S.K.Salih (Kayalpatnam) [04 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14119

அன்பர் வி.எஸ்.எம்.அலீ அவர்கள் தனது கருத்தில் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவை,

(1) எஸ்.கே.ஸாலிஹ் தேர்தல் நேரத்தில் இருந்த நிலையிலிருந்து இப்போது மாறுபட்ட நிலைபாட்டில் உள்ளார்... இதற்கு எனது விளக்கம்...

இத்தேர்தலில் எனக்கு 3 பரிமாணங்களில் தொடர்பு இருந்தது.

முதலாவது,
நான் ஒரு செய்தியாளன் என்ற அடிப்படையில் நகராட்சித் தேர்தல் குறித்த அனைத்து தரப்பு செய்திகளையும் வெளியிட்டது...

இரண்டாவது,
நான் சார்ந்திருக்கும் MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION - நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு - MEGAவின் ஓர் அங்கமாக செயல்பட்டது...

மூன்றாவது,
ஆறாவது வார்டில் உறுப்பினர் பொறுப்பிற்கு நானும் போட்டியிட்டது...

இந்த மூன்றில் எந்த ஒன்றையும் மற்றொன்றுடன் நான் கலக்கவில்லை... அவ்வாறு விரும்பியதுமில்லை.

நிலைமை இப்படியிருக்க, இவர் என்ன குழப்பத்தை என்னிடம் கண்டுள்ளார் என்று எனக்குத் தெரியவில்லை.

(2) நகர்மன்றத் தலைவர் ஆபிதா, தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்கச் சென்றபோது கற்புடையார் பள்ளி வட்டத்தைச் சார்ந்த கிறிஸ்துவ மீனவ சமுதாய மக்களிடம், சுனாமி தொகுப்பு வீடுகள் அவர்களுக்குக் கிடைக்கச் செய்வதாக வாக்களித்தார்... இதற்கு நானறிந்த விளக்கம்: அவ்வாறு வாக்களித்ததாக சிலர் இக்கருத்துப் பகுதியில் தெரிவித்தனர். நகர்மன்றப் பொறுப்பிற்குப் போட்டியிடும் ஒருவர் குறித்து வரும் செய்தி இது என்ற அடிப்படையில் சகோதரி ஆபிதா அவர்களிடம் இதுகுறித்து நானே விளக்கம் கேட்டபோது,

“நான் அப்படி எங்கும், யாரிடத்திலும் சொன்னதில்லை... அதற்கு அவசியமுமில்லை... நான் பிரச்சாரத்திற்காக சென்ற இடத்தில் இதுகுறித்து அப்பகுதி மக்கள் என்னிடம் கோரிக்கை வைத்தது உண்மை! அவர்களிடம், இது தொடர்பான இருதரப்பு விபரங்களையும் முழுமையாகப் பெற்ற பின்னர், நியாய அடிப்படையில் பாரபட்சமின்றி என் பொறுப்பிற்குட்பட்டு நடவடிக்கை மேற்கொள்வேன் என்று மட்டுமே கூறினேன்...” என்று தெரிவித்தார். அதை நான் அச்செய்தியின் கருத்திலும் தெரிவித்திருந்தேன்.

அதன்பிறகும் அதுபோன்று அனுப்பப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் உறுதி செய்யப்படாதவை என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது.

இத்தனைக்குப் பிறகும், மீண்டும் மீண்டும் இவர் அதே கருத்தைச் சொல்வது ஆரோக்கியமற்றதாகவே தெரிகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:வட்டாட்சியர் அலுவலகத்தில்...
posted by mackie noohuthambi (kayalpatnam) [04 December 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 14123

அருமையான ஆட்சேபனைகள், பரிந்துரைகள். ஐக்கிய பேரவயின் முக்கியத்துவத்தை மிக சிறப்பாக எடுத்துரைத்த தம்பி ஸாலிஹ் அவர்களை பாராட்டுகிறேன். இந்த கூட்டம் ஐகியபேரவைக்கு அணி சேர்த்திருக்கிறது. தாமதிக்காமல் எல்லோரும் ஒன்று சேர்ந்து வியூகம் வகுத்து ஆட்சிதளைவருடன் மீண்டும் கலந்து பேசி நல்ல முடிவுக்கு வாருங்கள். ஊரே உங்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.

மக்கி நூஹுதம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:வட்டாட்சியர் அலுவலகத்தில்...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [04 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14126

சுனாமியால் பாதிக்கப்படாத ஊரில் சுனாமி குடியிருப்பு எதற்கு? இங்கு ஏற்கனவே வெளியூரில் இருந்துவந்து குடியேறிய மீனவ மக்களைக்கொண்டுதான் சிங்கித்துறை ,கொம்புத்துறை என இரண்டு மீனவ குடியிருப்புகளை உருவாக்கி இருக்கிறது. காயல்பட்டின சொந்த மக்களில் யாரும் மீனவர்கள் கிடையாது.

எந்த ஒரு ஊரிலும் அரசு தேவை கருதியோ அல்லது வேறு உள்நோக்கமுள்ள தேவை கருதியோ வெளியூர்களில் இருந்து மக்களை குடியேற்றுவது பிற்காலங்களில் தேவையற்ற பூசலை உருவாக்கும். பாராபரியாக வேலையின் நிமித்தமோ அல்லது தொழில் காரணமாகவோ அன்னியர்கள் குடியேறுவது புரிந்து கொள்ளத்தக்கது.

காயல்பட்டினத்தில் அப்படி நிறைபேர் குடியேறி இருக்கிறார்கள். அது எங்கும் எந்த ஊரிலும் நடப்பது.

ஆனால் மொத்த மொத்தமாக குடியிருப்புகளைக்கட்டி பெருந்திரளான வேற்றூர் மக்களை இங்கு குடிஎறச்செய்வது உள்ள்நோக்கமுடையது. இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தம்பி சாலிஹின் எதிர்ப்பு அர்த்தமுடையது. நமதூர் வருங்கால சந்ததியினரின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு இந்த எதிர்ப்பிலிருந்து வழுவாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:வட்டாட்சியர் அலுவலகத்தில்...
posted by Vilack SMA (Yi Li , Hetang) [04 December 2011]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 14130

எனது அன்பு s .k .salih காக்கா அவர்களுக்கு ,

நீங்கள் கூறியது போல , " நீங்கள் ஒரு செய்தியாளர் " . இது உங்களுடைய தொழில் .

நீங்கள் தேர்தலில் போட்டியிட்டது , இது உங்கள் உரிமை .

ஆனால் MEGA என்ற ஒரு அமைப்பின் அங்கமாக செயல்பட்டீர்கள். ஒரு செய்தியாளர் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு , இது போன்ற இயக்கங்களில் அங்கமாக இருக்கலாமா ? இந்த MEGA என்ற அமைப்பின்மூலம் ஊரே பிளவு பட்டிருக்கிறது என்று தெரிந்தும் , பொதுவான ,, பொறுப்பான செய்தியாளர் பணியில் இருக்கும் நீங்கள் , இந்த இயக்கத்தில் அங்கமாக இருந்ததின்மூலம் உங்களிடம் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும் ? அதனால்தான் என்னவோ பலரது கருத்துக்களின் உண்மைகள் வெளியே வராமல் " comments not approved " என்ற புதைகுழிக்கு சென்று விட்டதோ ?

இறுதியாக உங்களிடம் சொல்ல விரும்புவது , இந்த விவாதத்தை நான் மேலும் தொடர விரும்பவில்லை . இத்தோடு முடித்து விடுங்கள் .

"அனைவரது உள்ளத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:வட்டாட்சியர் அலுவலகத்தில்...
posted by PS ABDUL KADER (jeddah) [04 December 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14146

இந்த அவசர அழைப்பு கூட்டதுக்கு வந்த கற்புடையார் பள்ளி வட்டம் சுனாமி குடியிருப்பு உள்பட்ட 7 வது வார்டு உறுப்பினர் அந்தோனி சாச்சா அவருடைய வாதம் என்னவாம்!

ஊரில் அவர் பகுதி மக்களும், அவர் சமுதாய மக்களும் அவரை முனிலை வைத்துதானே சமரசம் செய்ய வந்தார்களா?

பரம்பரை பரம்பரையாக 7 வது வார்டு நம்மவரிடம் இருந்து நழுவியது இந்த தரணத்தில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த அரசும் இவர்கள் பக்கம்தான் தலைசாய்க்கும். நமக்கு அல்லாஹ்தான் துணை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. உங்கள் பொது சேவை தொடரட்டும்
posted by saburudeen (dubai) [05 December 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14148

நாம் தான் குடும்ப சூழ் நிலை கருதி வெளிநாடுகளில் பணிசெய்யும் காரணத்தினால் நம்மால் நேரடியாக காயல் மக்களுக்கு சேவை செய்ய முடியவில்லை. சகோதரர் s.k.ஸாலிஹ் அவர்கள் தனக்கு வெளிநாடுகளில் பணி செய்ய அணைத்து வாய்புகள் இருந்தும் மக்களுக்கு சேவை ஆற்றும் நோக்கத்தில் தவிர்த்து வருகிறார்.

அவர் மக்களுக்கான பொது நிகழ்ச்சிகள்நடைபெறும் போது மற்ற செய்தியாளர்கள் போல் தொழில் ஆக மட்டும் எண்ணி செய்தி சேகரித்து விட்டு போட்டோ எடுத்துவிட்டு இடத்தை காலி செய்து விடாமல் நம் மக்களுக்கு ஆதரவான கருத்துகளை ஆணித்தரமாக பதிவு செய்து பொது சேவையும் செய்வார்.

எனவே இது போன்ற தன்னலமற்ற சகோதரரின் பணிகளை முடக்கும் வகையில் கருத்துகளை பதிவு செய்யாமல் ஊக்கம் அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

சகோதரர் s .k.ஸாலிஹ் அவர்களுக்கு

பொது வாழ்வில் இறங்கி விட்டு விமர்சங்களை சந்திக்க நேரிடும் என்பது தாங்கள் அறிந்ததே .இதை எல்லாம் பொருட்படுத்தாமல் உங்கள் பொது சேவை தொடரட்டும் .அல்லாஹ் உங்களுக்கு துணை நிற்பான்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. இப்போ புரியுதா ...ஏன் நகராட்சி தேர்தலில் ஸாலிஹ் காக்கா தோற்றார் என்று!!!
posted by K.V.A.T.HABIB MOHAMED (QATAR) [05 December 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 14161

சபாஷ்! ஸாலிஹ் காக்கா... நீங்க ஏன் தோற்றீர்கள் என்பது உங்களுக்கே புரியாத புதிர்தானே? ஆனா உண்மையா சொல்றேன், யா அல்லாஹ், ஸாலிஹ் காக்கா வெற்றி அடையாம நீ பார்த்துக்கோ ன்னு மனம் உருகி துஆ கேட்டேன்.

ஒரு குறுகிய வட்டத்துக்குள் அவன் முடங்கி விடக்கூடாது மாறாக யாருக்கும் எதுக்கும் நிர்பந்தம் இல்லாம உண்மைய உரிய நேரத்தில் உரைக்க, அவன் சுதந்திரப் பறவையாக திரியனும் என்று.. அல்லாஹ்வும் கிருபை செய்தான். என்னை மாத்ரி எத்தனை பேர் துஆ செய்தார்களோ அல்லாஹ் ஒருவனுக்கே வெளிச்சம்.

அது மட்டும் இல்லாம பெரியவர்களின் பெருமையை, நம்ம ஊரின் ஒற்றுமையை, வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில், இடத்தில், தன் தந்தையார் S.K. மச்சான் மர்ஹூம் அவர்கள் போன்று சாதுர்யமாக (அந்த இடத்தை வேறு யாராலும் நிரப்பவே முடியாது...)இருந்து, நகரமன்ற தலைவி அவர்கள், உறுப்பினர்கள், பொது நல ஆர்வலர்கள் அனைவரின் முன்னிலையில், அரசு வர்க்கத்தினரிடம் ஆணித்தரமாக எடுத்துரைத்து, சூழ்ச்சியாக கூட்டப்பட்ட கூட்டத்தில் தந்திரமாக நடந்து, நமக்கெல்லாம் பெருமை சேர்த்து வந்த என் மரியாதைக்குரிய ஸாலிஹ் காக்கா அவர்களை நாம் ஒவ்வொருவரும் பாராட்டியே ஆகணும். அதுதான் அவருக்கு நாம் கொடுக்கும் டானிக்!

நம் பெரியவர்களும் அவர்களின் வழி காட்டுதலின் படி துடிப்பும தியாக உணர்வும் கொண்ட இளைய பட்டாளங்களும் இனி வரும் காலங்களில் இணைந்து செயல்பட்டு வலிமையான காயல்பதியின் வருங்காலத்தை வடிவமைப்போம் என்பதை இன்றைய நிகழ்வு ஒரு படிக்கல் என்பதை அனைவரையும் அறிய வைத்திருக்கும் உண்மை !

கண்ணியத்துக்குரிய நம் ஐக்கிய பேரவையின் தலைவர் உவைஸ் ஹாஜியார் அவர்கள் எங்களிடம் கூறியது போன்று புணர் அமைக்கப்பட்ட புதிய செயல்வடிவத்தோடு கூடிய ஐக்கிய பேரவை இன்ஷா அல்லாஹ், அமைந்து மென்மேலும் நம் ஒற்றுமை வளர்ந்து , பிரித்தாளும் குள்ள நரிகளின் சூழ்சிகள் ஒருபோதும் நம்மை பிளவுபடுத்த அணுகாமல் வல்ல இறைவன் அல்லாஹ் சீக்கிரம் துணை புரிவானாகவும் ..ஆமீன் !

நம் நகர பெரியவர், தலைமை பொறுப்பை திறம்பட செயல்படுத்தி நமக்கெல்லாம் வழி காட்டியாக இருக்கும் உவைஸ் ஹாஜியார் அவர்களை கண்ணியத்தின் உச்சியில் அந்த அவசர கூட்டத்தில் அமர்த்தி வந்த, ஸாலிஹ் காக்கா உங்களுக்கு ஒரு BIG SALUTE!!!

வாழ்த்தும் அன்பு தம்பி,
K.V.A.T. ஹபீப் முஹம்மத்
தோஹா/கத்தார்
kvat.habib@gmail.com
0974 55657147

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. வன்மையாக கண்டிக்கிறோம்
posted by M.W.HAMEED RIFAI (Yanbu - KSA) [05 December 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14164

சகோதரர் vilack sma அவர்கள் MEGAவை ஊரைப் பிளவுபடுததும் அமைப்பாக சித்தரித்துள்ளார். எதைச் சொல்வதாக இருந்தாலும் அதை அனைவரும் உணரும் வகையில் சொல்வதே நன்றாக இருக்கும்.

ஒருவரோ, ஓர் அமைப்போ நல்லதைச் செய்தால் அதைப் பிடிக்காதவர்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள். அதே போல ஒரு தீயதைச் செய்தால் அதையும் பிடிக்காதவர்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள். இங்கே MEGA செய்த செயலைப் பற்றி மற்றும் விமர்சித்தால் நன்றாக இருக்கும்.

MEGA ஒருபோதும் ஊரை பிளவுபடுத்தியதில்லை. பிளவு படுத்த நினைத்ததும் இல்லை.

MEGA பயணித்து வந்த பாதையையும், இனி அது பயணிக்கவுள்ள பாதையையும் உள்ளூரிலிருக்கின்ற - நல்லதை விரும்பும் நம் மக்கள், அறிவாளிகள், அறிஞர் பெருமக்கள் பெரும்பாலும் நன்கறிவார்கள். (சகோதரர் வி.எஸ்.எம்.அலி போன்ற ஒருசிலரைத் தவிர!)

"காரென நெஞ்சிருண்ட காந்தி மதி நாதனை பார் அதி சின்ன பயலே" என்று முழங்கிய எங்கள் முண்டாசு கவி பாரதியாரின் வரிகளை துணைக்கு இழுத்து முடிக்கிறேன்

வரும் காலங்களிலும் வெறும் வார்த்தைகளால் அல்ல, எங்களின் செயல்பாடுகளால் உங்களுக்கு தகுந்த பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி விடைபெறுகிறோம்.

ஊரின் நலனுக்காக எப்போதும் சிந்திக்கும் பலரில் நாங்களும் சிலர் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறோம்.

அட்மின் அவர்களே! செய்திக்குத் தொடர்பில்லை என்று இதைக் கத்தரித்து விட வேண்டாம். அவர் MEGAவைப் பற்றி விமர்சித்த காரணத்தால் மறுப்பளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டதற்கு வருந்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:வட்டாட்சியர் அலுவலகத்தில்...
posted by Vilack SMA (Yi Li , Hetang) [05 December 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 14166

K V A T Habib Mohamed காக்கா,

salih காக்காவின் மனதை ரொம்பத்தான் touch பண்ணிட்டீங்க . நான் உனக்காக , நீங்கள் தோற்க வேண்டும் என்று துஆ கேட்டிருக்கிறேன் என்று result வரும் முன்பு அவரிடம் சொல்லியிருந்தால் , அவரது மனது எப்படி இருந்திருக்கும் ?

இன்னும் என்னென்ன காரியங்களுக்கெல்லாம் துஆ கேட்டிருக்கிறீர்கள் என்பதை , அந்த காரியங்களின் ரிசல்ட் வரும் முன்பாக அறிய தந்தால் நன்றாக இருக்கும். ரிசல்ட் வந்த பிறகு என்னுடைய துஆவினால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்று சொன்னால் எப்படி ?

Vilack SMA

Request to moderater , pls do not sent this comment to " not approved " list and also do not scissor . Pls publish as it is.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. இது என் வாழ்வின் பொற்காலம்!
posted by S.K.Salih (Kayalpatnam) [06 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14173

நண்பர் ஹாமித் ரிஃபாய் உடைய ஆதங்கம் தேவையற்றதே!

“மெகா”வில் ஈடுபட்டு செயலாற்றியதற்காக ஊரில் தாங்கள் வாங்கி்க்கொண்ட வசவுகள், வெறுப்புகள், உறவு துண்டிப்புகள் கொஞ்சமா...? இத்தனையையும் தாண்டி, இந்த ந்ற்காரியங்களில் ஓரங்கமாக இருந்த உங்களுக்கு மனதிருப்தி இருந்ததுதானே...?

பிரச்சினைக்குரிய ஓர் அம்சம் குறித்து என்றைக்குமே ஒருபக்கம் மட்டும் விசாரித்து இதுபோன்ற சில அன்பர்கள் - குறிப்பாக வெளிநாட்டிலிருக்கும் சில அன்பர்கள் எழுதுவதாலும், உள்ளூரிலிருப்போர் தம் சார்பானவர்களிடம் மட்டுமே பேசிக்கொள்வதாலும்தான் இதுபோன்ற அறியாமை விமர்சனங்களை நாம் சந்திக்க நேருகிறது...

“மெகா” செயலாற்றிய நேரத்தில் வெளிநாட்டிலிருந்து விமர்சித்த பலர் தற்போது விடுமுறையில் ஊர் வந்தபோது தங்களிடம் விபரம் கேட்டறிந்தபின், “இப்படியாப்பா நடந்திச்சி...? எனக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது...” என்று சொல்லவில்லையா...? நாளைக்கே இந்த விமர்சகர் ஊர் வந்து, திறந்த மனதுடன் உண்மையைக் கேட்டறிந்தால் அவரும் நல்ல சிந்தனைக்கு வரலாம்... அல்லாஹ் அறிவான்.

எனவே, யார் மீதும் வருத்ததம் கொள்ளத் தேவையில்லை... நமக்கு ஒரு பணி சரி என்று தெரியும் வரை நாம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் செய்துகொண்டே இருப்போம்... அதன் நல்விளைவுகளை நமதூரே அனுபவிக்கட்டும்.

என்னைப் பொருத்த வரை, மெகாவில் அங்கம் வகித்த - வகிக்கின்ற இக்காலம் என் வாழ்வின் பொற்காலமே...! இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே! தேவையேற்படும்போது, “மெகா” செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக விளக்கம் தருவார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. ஆற்றில் உள்ள கிணற்றில் வசிக்கும் தவளை!
posted by Firdous (Colombo) [06 December 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 14217

சகோதர் ஹாமித் ரிபாயின் ஆதங்கம் நியாயமானதே! இருந்தாலும் நண்பர் ஸாலிஹ் கூறுவதுபோல் பொது வாழ்கையில் ஈடுபடுபவர்களுக்கு இந்தமாதிரி வசவு வருவது இயற்கை!

பழுத்த பழ மரம்தான் அதிக கல்லடி படும்! ஆகவே குறிகிய காலத்தில் மெகா கனிகளை காய்க்கும் நல்ல மரமாகிவிட்டது.

தவளை என்னதான் ஆற்றில் உள்ள கிணற்றில் இருந்தாலும் அது கிணற்று தவளைதான்! அதற்கு கிணறேதான் உலகம். கிணற்று தவளைகளின் வசவால் கடல்போன்ற சீரிய சிந்தனை கொண்ட மெகாவை செயலிழக்க இயலாது. ஆகவே தாங்கள் உங்களின் அடுத்த இலக்கிற்காக நேரத்தை உபயோகிங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களது சிந்தனையை வெற்றியாகி அதன் மூலம் நமதுஊரை வெற்றி பாதைக்கு வழிநடத்தி செல்வானாக! என்னைபோன்றவர்களின் துவாவும், ஆதரவும் எப்போதும் உண்டு.

சகோதர் கூறியதுபோல் MEGA ஊர் ஒற்றுமைக்கு உலைவைத்தது உண்மைதான்! ஆனால் அது போலியான ஒற்றுமை என்பதை நகராட்சி தேர்தலில் நன்கு அறிந்தோம்! உண்மை ஒற்றுமைக்கா பாடுபடும் அணைத்து அமைப்புகளுக்கும் எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. தங்க தாம்பாளத்தில் ஏற்படும் கீறல்களே !
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) [06 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14218

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இந்த குடியிருப்பு குறித்த வழக்கு நீதி மன்றத்தில் இருக்கும்போது - அதை இங்கே விவாதிக்க வேண்டிய அவசியமில்லை.

ஒரு வேளை இந்த வழக்கு முடிய 15 - 20 வருடங்கள் ஆகும் - அதனால் ஏதாவது ஓர் சமரச முடிவு செய்து இந்த பிரச்சனையை தீர்த்து வைக்கலாம் என்று உண்மையாகவே ஒரு நல்ல எண்ணம் யாருக்காவது இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்...

வழக்கு போட்டவர்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட அனைவரையும் கால அவகாசத்தோடு , முறையாக அழைத்து சமாதானம் செய்ய முயற்சித்திருக்கலாம் ஆனால் அப்படி செய்யவில்லை.

---------------------------------------------------------

இது ஒன்றும் அவசரக்கூட்டமில்லை :

குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் , இவ்வழக்கு குறித்து காயல்பட்டினம் நகராட்சியின் கருத்தை அறிவதற்காக முன் அறிவிப்பின்றி நகராட்சிக்கு கடந்த 22.11.2011 அன்று சென்று வந்தது ...................

திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பகல் 12.00 மணிக்கு சமாதானக் கூட்டம் நடை பெற இருப்பதற்கு அன்று காலைதான் நகர் மன்றத் தலைவியை அவசரமாக அழைத்தது.............

இப்படி ஒவ்வொரு நிகழ்வுகளையும் வைத்து பார்க்கும்போது எந்த நல்ல எண்ணமுமில்லை - மாறாக கால சூழ்நிலையை பயன்படுத்தி ஒருதலைபட்சமாக நடப்பதற்கே இந்த மாதிரியான சூழ்ச்சிகளை கையாள்வதாக தெரிகிறது.

இது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியாதா ? எப்படி கூட்டம் கூட்ட வேண்டும்? எத்தனை நாட்களுக்குமுன், அறிவிப்புக் கொடுக்க வேண்டும் என்பது?. மேலும் இது ஒன்றும் அவசரக்கூட்டமில்லை என்பதை அரசியலமைப்பு சட்டத்தை புரட்டிப் பாருங்கள் தெரியும்.

----------------------------------------------------------

பேச்சிலே நளினம் இல்லை நாடகம் உண்டு :

திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலே பேசிய கற்புடையார் பள்ளி வட்டத்திலுள்ள தேவாலயத்தின் பங்குத்தந்தை சேவியர் ஜார்ஜ் அவர்கள் மிகவும் நளினமாக " வேண்டுகோளாய் முன்வைக்கிறோம்..." என்று பேசி இருக்கிறார்.

ஆனால் அந்த பேச்சிலே நளினம் இல்லை நாடகம் உண்டு என்பதை அங்கு அந்த கூட்டத்திலே கலந்து கொண்ட அனைவரும் அறிவார்கள்.

முஸ்லிம் சமுதாயத்தவர்கள் சாந்தி, சமாதான குணம் உடையவர்கள் என்பதை நன்மக்கள் அனைவரும் நன்கு அறிவர் - அதிலும் காயல்பட்டணத்தவர்கள் சாந்த குணத்தில் எல்லோரையும்விட ஒரு படி மேலானவர்கள் என்பதை அதன் சுற்றுவட்டாரத்தார்கள் நன்கு அறிவர்.

இந்த வலைதளத்தில் பிரசுரமாகி இருக்கும் இந்த செய்தியை " கற்புடையார் பள்ளி வட்டத்திலுள்ள தேவாலயத்தின் பங்குத்தந்தை சேவியர் ஜார்ஜ் அவர்கள் " படித்தார் என்றால் நிச்சயமாக காயல்பட்டணத்தின் மக்கள் மேன்மக்கள் என்பதையும் அன்று இந்த கூட்டத்திலே கலந்து கொண்ட காயல்பட்டணத்தவர்கள் சாந்தி , சமாதானப் பிரியர்களே! என்பதையும் உணர்வார்.

உண்மையில் சாந்த குணமுள்ளவர்களாக இல்லாதிருந்தால் இந்த செய்தி எப்படி வந்திருக்க வேண்டும் என்பதையும் அவர் அறிவார் - அவர் அன்றைய கூட்டத்தில் நடந்த பேச்சுக்களை நினைவுப் படுத்தி பார்த்தால் தெரியும் எது சாந்தி - சமாதானம் என்பது.

----------------------------------------------------------

தப்புக்கணக்கு போட வேண்டாம் :

காயல்பட்டணத்துக்காரர்கள் என்னதான் அரசியலிலும் - ஏன் சிலநேரம் - ஆன்மீகத்திலும் பிளவு பட்டாலும் கூட உரிமையையும் , கலாச்சாரத்தையும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள்.

அவர்களுக்குள் ஏற்படும் பிளவுகள் எல்லாம் தங்க தாம்பாளத்தில் ஏற்படும் கீறல்களே அன்றி கண்ணாடி பாத்திரத்தில் ஏற்படும் கீறல்கள் அல்ல.

எனவே யாரும் தப்புக்கணக்கு போட வேண்டாம் அவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டிருக்கிறது , சந்தர்பத்தை பயன்படுத்தி திட்டங்களை தமக்கு சாதகமாக நிறைவேற்றலாம் என்று. -------------------------------------------------------------

அதிகாரிகளே! :

நீங்கள் எல்லோருக்கும் பொதுவானவர்கள் - சட்டத்திட்டங்கள்படி முறையாக செயல்படுங்கள் - எவருடைய சூழ்ச்சிக்கும் அடிபணியாதீர்கள்.

மதமோ, மார்க்கமோ, கட்சியோ, இயக்கமோ எதையும் நீங்கள் பார்க்க வேண்டியதில்லை - நீங்கள் அதில் ஏதாவதொன்றில் இருந்தாலும்கூட உங்களுடைய கடமையை சட்டத்திற்குட்பட்டுதான் செய்ய வேண்டும் - அதுதான் நேர்மை.

நேர்மை தவறிய எந்த அதிகாரியும் நிம்மதியாக வாழ்ந்ததில்லை என்பதை மனதில் நிறுத்தி செயல்படுங்கள் உங்கள் வாழ்வு மலரும்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved