Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:41:10 AM
புதன் | 17 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1721, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்13:37
மறைவு18:27மறைவு01:41
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7650
#KOTW7650
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, டிசம்பர் 4, 2011
உலமாக்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு இலவச மிதிவண்டி! அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3357 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

உலமாக்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று தூத்துக்குடி ஜாமிஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கலந்துகொண்டு, இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.





பின்னர் அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் பிரிவைச் சேர்ந்த முகமதியர்களில் உலமாக்கள் நலவாரியத்தில் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொண்டவர்களுக்கு தமிழக அரசால் இலவச மிதிவண்டிகள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்மக்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது.

இலவச கண் கண்ணாடிக்கான உதவித்தொகை,
உருது மொழியை கற்பிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துதல்,
மத்ரஸா கல்வி முறையினை நவீனப்படுத்துதல், மவ்லானா ஆஸாத் கல்வி அமைப்பின் மூலம் கல்விக் கூடங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்துதல்,
சிறுபான்மையினர் வாழும் குடிசைப் பகுதிகளின் நிலையை மேம்படுத்துதல்,
கல்வி கடன், தனிநபர் கடன், குழுக்கடன் போன்ற பல்வேறு வகையான கடன்களை வழங்குதல்
என இந்த அரசு சிறுபான்மையின மக்களுக்காக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.


இவ்வாறு அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜேஸ்வரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சுரேஷ் மற்றும் உலமாக்கள் நலவாரிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:உலமாக்கள் நல வாரிய உறுப்ப...
posted by Cnash (Makkah ) [04 December 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14133

அம்மாவின் அமைச்சர் எங்கிருந்து இந்த புதுபுது வார்த்தை பிரிவு எல்லாம் கண்டுபிடிசாரோ!! அது என்ன சிறுபான்மை பிரிவை சேர்த்த முகம்மதியர்கள்....தமிழக முஸ்லிம் சிறுபான்மையினர் என்று தானே அரசால் அங்கீகரிக்கபட்ட பிரிவாக இருக்கிறது இது என்ன புது உட்பிரிவா? இப்படி தான் அந்த அம்மா தலித் முஸ்லிம்கள் என்று இல்லாத ஒரு இனத்தை முன்னே சொன்னார்.!!!

சரி சைக்கிள் கேப்லே மத்திய அரசின் திட்டங்களான மதரசா கல்வி முறையினை நவீனப்படுத்துதல், மொளலான ஆசாத் கல்வி அமைப்பின் மூலம் கல்வி கூடங்களில் கட்டமைப்புகளை மேம்படுத்துதல்,சிறுபான்மையினர் வாழும் குடிசைப்பகுதிகளின் நிலையை மேம்படுத்துதல் போன்ற திட்டங்களை எல்லாம் உங்க திட்டம் என்று சொல்லிட்டீங்க!! என்னமோ எப்படி திட்டம் எல்லாம் இருக்க தான் செய்யுது, சிறுபான்மை மக்களை வந்து சேருதா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:உலமாக்கள் நல வாரிய உறுப்ப...
posted by M.Sulthan (Sudan) [04 December 2011]
IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 14134

நம்ம ஊர் உலமாக்கள் பயனடைந்தார்களா?

"உருது மொழியை கற்பிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துதல்" அய்யா அது உருது மொழி இல்லேங்கோ..... அது அரபி மொழி... யாராவது சொல்லி கொடுத்திருக்கலாம் லொள்ளு:
பஸ் போயிட்டா பஸ் ஸ்டாண்ட் அங்கே தான் இருக்கும்..... ஆனால் சைக்கிள் போயிட்டா சைக்கிள் ஸ்டாண்டும் கூடவே போகும்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:உலமாக்கள் நல வாரிய உறுப்ப...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [04 December 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14135

கொடுக்கட்டும்.. கொடுக்கட்டும்.. என்ன ஒன்றும் இல்லாததற்கு இதாவது கொடுக்கிறார்களே.. சந்தோசம்.

உலமாக்களின் வாழ்க்கை தரத்தை நிரந்தரமாக முன்னேற்ற நாம் தான் பாடுபடனும்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. துரோகம்
posted by shahul hameed sak (malaysia ) [04 December 2011]
IP: 60.*.*.* Malaysia | Comment Reference Number: 14141

கோயில்களுக்கு கோடிகணக்கில் ஒதிக்கி விட்டு முஸ்லிம்களுக்கு????? சைக்கிள் சந்தில் சிந்துபாட வேண்டாம். முஸ்லிம்களுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புவது முஸ்லிம்களுக்கு இழைக்கும் அநீதி,துரோகம் இல்லையா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:உலமாக்கள் நல வாரிய உறுப்ப...
posted by MOHAMMED LEBBAI MS (dxb) [04 December 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14143

சைக்கிள் எல்லாம் கொடுத்து சைக்கிள் கேப்ளே சைக்கிள் ஓட்டலாம் .......... பழையமாதிரி அரசியல் ஓட்ட முடியாது...

ELECTION மேடையில் சொன்ன மாதுரி எங்களுக்கு இடஒதுக்கீடு கொடுங்க,,,,,,,, சைக்கிள் நீங்க கொடுக்கவேண்டாம்,,, நாங்கள் வங்கி கொள்கிறோம்....... ஓகேயா ,,,,,,,,,,,,,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:உலமாக்கள் நல வாரிய உறுப்ப...
posted by PS ABDUL KADER (jeddah) [04 December 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14145

உலமாக்கள் விசியத்தில் அதிக அக்கறை கொண்டவர் மக்கள் திலகம் MGR தான், இதில் எந்த சன்தேகமும் இல்லை. இன்று அவருடைய தொண்டர்கள் தலைவர் பாவனையை பின்பற்றி வருகிறார்கள்.

உலமாக்கள் நல வாரியதில் இருந்து நல்ல பல சலுஹைகள் நமதூர் ஆலிம்களுக்கு மாதம் மாதம் சரியாக வந்து பயன் பெருகிறார்களா? என்று பாருங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:உலமாக்கள் நல வாரிய உறுப்ப...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [05 December 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14169

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஆமா.நமது உலமாகளுக்கு.அம்மா அவர்கள் .இலவச மிதிவண்டிகள் வழங்க உத்தரவு செய்தது நல்ல விசியம் தான். மேலும் நமது இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு எவ்வளவு முக்கியமான நல்ல காரியங்கள் உள்ளது. நிச்சயம் அம்மா அவர்கள் செய்வார்கள் என்று நாம் நம்புவோமாக.

நமது இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு வல்ல நாயன் துணை நிற்பானாக ஆமீன். மினிஸ்டர் ஐயா.உருது மொழி அல்ல .அது அரபி மொழி கற்பிப்பதற்கான வசதியை தான் அரசு ஏற்படுத்தி உள்ளது .

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH
SAUDI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:உலமாக்கள் நல வாரிய உறுப்ப...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [07 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14256

"முகமதியர்கள்" என்ற சொல் ஆங்கிலேயேர்கள் காலத்து சொல். சென்னையிலுள்ள பிரசிடென்சி காலேஜ் "முகமதியன் காலேஜ்"என்று அழைக்கப்பட்டது. இன்னும் கூட நிறையப்பேர் இதை தவறாக சொல்கிறார்கள். இதற்கும் அம்மாவுக்கும் என்ன சார் சம்பந்தம் ?

ஐய்யாவின் 108 ஆம்புலன்ஸ் திட்டம் கூட மத்திய அரசின் திட்டம்தான்.. ஐய்யா தனது திட்டம் போல "வாரி'விட்டாரே... அதயெல்லாம் கண்டுக்காதீங்க...அம்மா ஏதாவது செய்தால் மட்டும் "நொட்டை"சொல்ல வந்துடுங்க...உலாமாக்கள் ஓய்வுஊதிய திட்டம் கொண்டுவந்ததே எங்கள் பெரிய ஐய்யா எம். ஜி. ஆர்தான்.

இப்போது நம்ம தானைத்தலைவருக்கு ஏதாவது ஓய்வூதியம் கொடுக்கலாமா...என அம்மா யோசிப்பதாக கேள்வி..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:உலமாக்கள் நல வாரிய உறுப்ப...
posted by Cnash (Makkah) [07 December 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14271

முகம்மதியர் என்ற சொல் ஆங்கிலேயர் உடைய வழக்கு சொல் இல்லை.. அதற்கு 1100 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட முஸ்லிம் மன்னர்களை குறிக்கும் சொல்லாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்!! இந்தியாவை ஆண்ட முதல் முஸ்லிம் மன்னர் முஹம்மது பின் காசிம்...அவருக்கு பின் முஹம்மது கஜினி ....அப்புறம் முஹம்மது கோரி இவர்களது ஆட்சி தான் முகம்மதியர் ஆட்சி என்றும் ..அவர்களில் படையெடுப்பு முகம்மதியர் படையெடுப்பு என்றும் வரலாற்றில் குறிப்பிட படுகிறது!!

அந்த சொல்லை எதற்கு அம்மாவின் அமைச்சர் பயன்படுத்த வேண்டும்!! அரசு குறிப்பில் தெளிவாக பிற்படுத்த பட்ட முஸ்லிம்கள் என்று தானே இருக்கு இதை தான் குறிப்பிட்டேன்...

முகம்மதியர் என்ற பெயர் நாம் முஹம்மது நபி (ஸல்) அவர்களில் உம்மத் என்பதற்காக வந்தது என்றால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளலாம்!! ஆனால் யாரோ ஒரு மன்னன் படையெடுத்து வந்தான் ஆண்டான் என்பதற்காக நம்மை அப்படி ஏன் அழைக்க வேண்டுமா...அதே போல தான் துருக்கியர் என்ற சொல்லில் இருந்து வந்த துலுக்கரும் ..இதில் வரலாற்று ஆசிரியர்களில் துவேசமும் தெரிகிறதே..!! இது தான் என் கருத்தே தவிர ..இதுக்கும் அம்மாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெரிந்ததே!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved