Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:44:45 PM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7660
#KOTW7660
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், டிசம்பர் 6, 2011
பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம் 2011: சமுதாய அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3966 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய நாட்டின் உத்தரபிரதேசம் மாநிலத்திலுள்ள அயோத்தி நகரில் அமைந்திருந்த சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜித், 1992ஆம் ஆண்டு டிசம்பர் 06ஆம் தேதியன்று மத தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது.

இந்த மஸ்ஜித் இடிப்பு தினத்தையொட்டி, ஆண்டுதோறும் டிசம்பர் 06ஆம் தேதியன்று இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள், தொடர்முழக்கப் போராட்டங்கள், சமய நல்லிணக்க நிகழ்ச்சிகள், கடையடைப்புகள், கவன ஈர்ப்பு நிகழ்ச்சிகள் என இன்றளவும் முஸ்லிம் அமைப்புகளாலும், சமய நல்லிணக்கம் விரும்பும் இதர அமைப்புகளாலும் நடத்தப்பட்டு வருகிறது. இன்று பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தையொட்டி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில், இன்று நண்பகல் 12.00 மணியளவில், காயல்பட்டினம் பிரதான வீதியில், ‘பாபரி மஸ்ஜித் மீட்பு - ஒரு வரலாற்றுக் கட்மை‘ என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் பரப்புரை நடத்தப்பட்டது.



பாபரி மஸ்ஜித் இடிப்பு குறித்த சரித்திர நிகழ்வுகளைத் தாங்கிய பிரசுரங்கள் இந்நிகழ்வின்போது பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

அதுபோல, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தூத்துக்குடி மாவட்டப் பிரிவின் சார்பில், தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலக கட்டிடம் முன்பு கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. காயல்பட்டினத்திலிருந்தும் அவ்வமைப்பின் சார்பில் போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.

தகவல் மற்றும் படங்கள்:
ஹாஃபிழ் இஸ்ஸத் மக்கீ,
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:பாபரி மஸ்ஜித் இடிப்பு தின...
posted by Shamsudeen.H (Abu Dhabi) [06 December 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14197

பாபரி மஸ்ஜித் என்றதும் நம் நினைவில் நிழலாடுவது சிதிலமடைந்த மூன்று கும்பங்கள் கொண்ட ஒரு கட்டடமும், பின்னர் அது மணல் மேடாகத் தகர்க்கப்பட்டதும், பயங்கரவாத ஃபாசிச ஹிந்துத்துவ கோர முகங்களும், நாடு முழுவதும் அதனையொட்டி நடந்த முஸ்லிம் இனப் படுகொலைகளும், இழந்த முஸ்லிம்களின் ரத்தமும், சதையும், அதனை மீட்டெடுப்பதற்கான முஸ்லிம்களின் நீண்டகாலப் போராட்டமும்தான்!

“மீண்டும்அதே இடத்தில் பாபரி மஸ்ஜித் கட்டித் தரப்படும்” என்று அன்றைய பிரதமர் நரசிம்மராவ் நானிலம் அறிய வாக்களித்த பொழுது மீண்டும் முஸ்லிம்களுக்கு நப்பாசை தொற்றிக்கொண்டது. ஆனால் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் அந்த நப்பாசையிலும் மண்ணை அள்ளிப் போட்டன.

இந்த நம்பிக்கைத் துரோகம் 1992ல் தொடங்கியதல்ல. மாறாக, என்று பாபரி மஸ்ஜிதின் மிம்பரில் ராமர் சிலை கள்ளத்தனமாக வைக்கப்பட்டதோ அந்த 1949-ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி இரவிலிருந்து இந்த நம்பிக்கைத் துரோகம் தொடங்குகிறது.

1984-ம் ஆண்டு அக்டோபரில் ராமஜென்ம பூமியை விடுவிக்கப் போவதாகக் கூறி ஹிந்துத்துவ வி.ஹெச்.பி.யின் பயங்கரவாதிகள் ஊர்வலம் நடத்தினர். அப்போது “ராமர் கோயிலைக் கட்ட வேண்டும்” என்று அராஜகமாக அறிவிக்கப்பட்டது. எல்.கே. அத்வானியின் தலைமையில் ‘ராமர் கோயில் இயக்கம்’ ஒன்றும் துவங்கப்பட்டது.

1986ம் ஆண்டு பிப்ரவரியில் ஃபைஸாபாத் நீதிமன்றம் பாபரி மஸ்ஜிதை ஹிந்துக்களுக்கு மட்டும் திறந்து விடுமாறு உத்தரவிட்டது. ஆட்சேபணை செய்த முஸ்லிம்கள் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்கள்.

1987-ம் ஆண்டு ஜனவரி முதல் “இராமாயணம்” என்ற தொலைக்காட்சித் தொடர் இந்தியா முழுவதும் தூர்தர்ஷன் மூலம் ஒளிபரப்பப்பட்டது. இது மக்களிடையே ராமர் மீது அதிகப்படியான பக்தியை உண்டாக்க உதவியது. இது ராமர் இயக்கத்திற்கு மேலும் வலுவைத் தந்தது.

1989ம் ஆண்டு செப்டம்பரில் ஹிந்துத்துவ பயங்கரவாத வி.ஹெச்.பி.யினர் நாடு முழுவதும் “ராம் சிலா” பூஜையை நடத்தி, ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று மக்கள் ஆதரவை – முக்கியமாக இந்துக்கள் ஆதரவைத் தேடினர்.

1990 நவம்பரில் எல்.கே.அத்வானி தனது ர(த்)த யாத்திரையைத் துவங்கினார். சோம்நாத்திலிருந்து அயோத்தியை நோக்கிச் சென்று வழிநெடுகிலும் இந்துக்களின் ஆதரவைப் பெறத் திட்டமிட்ட அத்வானியின் ரத யாத்திரை சென்ற இடமெல்லாம் முஸ்லிம்களின் ரத்தம் ஓட்டப்பட்டது.

இந்த நம்பிக்கைத் துரோகத்தின் உச்சகட்டம்தான் கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அலகாபாத் உயர்நீதிமன்றம் பாபரி மஸ்ஜித் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் பல வருடங்களுக்குப் பிறகு அளித்த தீர்ப்பு. அந்த நிலத்தை மூன்று கூறுகளாகப் பிரித்து ஒரு பங்கை மட்டும் முஸ்லிம்களுக்குக் கொடுக்கவேண்டும் என்ற அந்தத் தீர்ப்பு நீதி செத்துவிட்டதையே பறைசாற்றியது. முஸ்லிம்கள் அந்தத் தீர்ப்புக்கெதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்கள்.

இப்படி ஹிந்துத்துவ ஃபாசிச பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்.ஸும், அதன் துணை அமைப்புகளும் பாபரி மஸ்ஜிதைத் தகர்ப்பதில் கவனமாகத் திட்டமிட்டு, மிகவும் கச்சிதமாக நடந்து கொண்டன.மேலும் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தையும், அதனைச் சுற்றியுள்ள நிலத்தையும் ஆக்கிரமித்து அங்கே ஓர் இராமர் கோயிலைக் கட்டவேண்டும் என்ற திட்டத்தினை செயல்படுத்துவதில் அவைகடும் முயற்சியில் இறங்கின. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக “இராமர் கோயிலைக் கட்டுவதற்காக பாபரி மஸ்ஜிதை விட்டுக் கொடுத்துவிடலாம்” என்றொரு மனநிலையை அவை பொதுமக்களிடம் உருவாக்கி, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளன.

இந்த மனநிலை மாற்றம் முஸ்லிம்களில் சிலருக்கு வந்திருப்பதுதான் வேதனையிலும் வேதனை. அவர்கள் பாபரி மஸ்ஜித் பிரச்னையை வெறும் கட்டடத் தகர்ப்புப் பிரச்னையாகப் பார்க்கின்றார்கள். அது முஸ்லிம்களின் வழிபாட்டுச் சின்னம் என்று அவர்கள் பார்க்கவில்லை. அது முஸ்லிம்களின் அடையாளம் என்று அவர்கள் பார்க்கவில்லை. அது முஸ்லிம்களின் வாழ்வாதாரப் பிரச்னை என்று அவர்கள் பார்க்கவில்லை. இந்த மஸ்ஜிதோடு இது நிற்கப்போவதில்லை, 3000 மஸ்ஜிதைக் காவு கொண்டாலும் இது நிற்கப் போவதில்லை என்று அவர்கள் பார்க்கவில்லை. இந்தப் பிரச்னைக்குப் பின்னணியிலுள்ள நீண்டகால சதித்திட்டத்தின் ஒரு கருவிதான் பாபரி மஸ்ஜித் என்று அவர்கள் பார்க்கவில்லை.

1949ம் ஆண்டு நடந்த நிகழ்வுகளில் மஸ்ஜித் மட்டும் அல்ல பிரச்னை. அயோத்தியாவில்ஒரு முஸ்லிம்கூட வசிக்கக் கூடாது, முஸ்லிம்களின் உடல்கள் அங்கே அடக்கம் செய்யப்படக் கூடாது, முஸ்லிம்களின் கடைகள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று பல விஷயங்களை ஆர்.எஸ்.எஸ். அங்கே அமுல்படுத்த முயன்றது. இதற்கு ஆளும் வர்க்கத்தில் இருந்த வல்லபாய் படேல், கே.கே.கே. நாயர் போன்றவர்களும் முழு உடந்தையாக இருந்தனர்.

ஹிந்துத்துவ சங்கப் பரிவாரங்களுக்கு பாபரி மஸ்ஜித் மட்டும் பிரச்னை அல்ல. ஒட்டுமொத்த முஸ்லிம்கள்தான் அவர்களுக்குப் பிரச்னை.அயோத்தியாவை ஒர் இந்து ராஷ்டிரத்தின் சோதனைக் களமாகமாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களது குறிக்கோள். முஸ்லிம்களின் மனதிலிருந்து பாபரி மஸ்ஜிதை எடுத்துவிட்டால் ஆர்.எஸ்.எஸ். தனது இந்து ராஷ்டிரத்தின் சோதனையில் வெற்றி பெற்றுவிட்டதாக நம்புகின்றது. அதற்கு அரசும், ஊடகங்களும் துணை போகின்றன.

நாம் கேட்பது கோயில் நிலத்தை அல்ல. மாறாக 483 ஆண்டு காலமாக நமது சொத்தாக இருந்து வந்திருக்கும் நம் நிலத்தைத்தான் கேட்கின்றோம். “அதே இடத்தில் மீண்டும் பாபரி மஸ்ஜித் கட்டித் தரப்படும்” என்று முஸ்லிம்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத்தான் கேட்கின்றோம். அதனைச் சுற்றி வாழ்ந்த முஸ்லிம்கள் மீண்டும் அங்கே நிம்மதியாக வாழத்தான் கேட்கின்றோம். நாம் இல்லையென்றால் நம் சந்ததிகள் அங்கே தொழ வேண்டும்.

இதற்காக மக்களை ஒன்று திரட்டுவோம். நம் தரப்பு நியாயத்தை மக்கள் மன்றம் முன் எடுத்துவைப்போம். நீதிக்காகக் குரல் கொடுப்பவர்களை, நியாயத்திற்காக போராடுபவர்களை ஓரணியில் ஒருங்கிணைப்போம். இதனைப் பெருந்திரள் மக்கள் போராட்டமாக மாற்றுவோம். இன்ஷா அல்லாஹ் பாபரி மஸ்ஜிதை மீட்டெடுப்போம்.,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:பாபரி மஸ்ஜித் இடிப்பு தின...
posted by M. S. Shah Jahan (Colombo) [06 December 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 14213

An excellent piece. Well written.

M.S.Shah Jahan
Colombo.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:பாபரி மஸ்ஜித் இடிப்பு தின...
posted by M. S. Shah Jahan (Colombo) [07 December 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 14220

Correction; I referred to Br Samsudeen's note as excellent and well written.

M. S. Shah Jahan
Colombo.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:பாபரி மஸ்ஜித் இடிப்பு தின...
posted by MS MOHAMMED LEBBAI (dxb) [07 December 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14226

நம் கருத்தை பதிவு செய்யலாம் என்றுபார்த்தால்,,, மஷால்லாஹ் ஜனாப் சம்சுதீன் அவர்கள் நம் எல்லோருடைய கருத்தாய் வச்சிட்டாரே. அல்லாஹ் அவருக்கு ரஹ்மத் செய்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:பாபரி மஸ்ஜித் இடிப்பு தின...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [07 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14252

சகோதரர் சம்சுதீன் எழுதி இருப்பது எல்லாமும் மறுக்கமுடியாத உண்மைகள். ஆனால் இங்கு ஒன்றை வருத்ததோடு பதிவு செய்ய வேண்டிஉள்ளது. வருடா வருடம் வரும் "பாபரி மஸ்ஜித் நினைவு தினம்" ஒரு அலுப்பு தரக்கூடிய சடங்காகிவிட்டது.

டிசம்பர் 6 ஆ அன்று ஒரு நாள்கடையடைப்பு ஆர்ப்பாட்டம் என்று அது சுருங்கிவிட்டது. அரசாங்கமும் அன்று ஒருநாள் கெடுபிடி காட்டும் .அதோடு சரி இனி அடுத்த வருஷம்தான் கந்தூரி. இதுவும் கூட இன்னும் ஒரு பத்து வருசத்துக்கு நடக்கும் அப்புறம் முஸ்லிம்களுக்கே அது மறந்துவிடும். (தயவு செய்து அட்மின் கத்தரி போடவேண்டாம்) பலரது மனங்களிலும் உள்ளோடும் ஒரு எண்ணத்தை இங்கு நான் பதிவு செய்கிறேன் இதை சொல்வதால் நான் இனத்துரோகியாக சிலரால் நினைக்கப்படக்கூடும். அது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை .

பாபர் மசூதி இனி திரும்ப வர வாய்ப்பில்லை. அது போனது போனதுதான். இனிவரக்கூடிய எந்த அரசும் பெரும்பான்மை சமூகத்தை பகைத்துக்கொண்டு நமக்கு பாபரிமஸ்ஜிதை திரும்ப கட்டிக்கொடுக்காது. அதற்க்கான சூழல் நாட்டில் இல்லை. இது நம்மவர்களுக்கே நிரம்ப பேருக்கு தெரிந்த விஷயம்தான். சும்மா வருடா வருடம் எந்த நம்பிக்கையும் இல்லாமல் ஆர்ப்பாட்டம் பேரணி என நடத்தி என்ன பயன்?

போராட்டம் நடத்துபவர்களுக்காவது இந்த நம்பிக்கை இருக்கிறதா?சடங்குகளால் எந்த விழைவும் ஏற்ப்பட்டு விடாது. இனி முஸ்லிம்களை பாதிக்கக்கூடிய விவகாரங்களில் எச்சரிக்கையாக இருப்பதோடு முஸ்லிம்களின் கல்வி பொருளாதார சம்பந்தப்பட்ட காரியங்களில் முன்கை எடுப்பதோடு அவர்களின் அடிப்படை ஜீவாதார உரிமைகள் பரிபோயவிடாதபடி பார்த்துக்கொள்ளவேண்டிய்த்து மட்டுமே முஸ்லிம் இயக்கங்களின் வேலைத்திட்டமாக இருக்கவேண்டும். தயவு செய்து நமது சக்தியை வீணாக்கவேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:பாபரி மஸ்ஜித் இடிப்பு தின...
posted by Javed Nazeem (Chennai) [09 December 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 14321

சகோதரர் ஷுஐபு அவர்களே, உங்களின் மேல்கூறிய பதிவோடு சிறிது மாறுபட வேண்டி இருக்கிறது.

இடிப்பு தினம் குறித்த எதிர்ப்புகள் பெரும்பாலும் சடங்கு போல் ஆகி விட்டது உண்மையே. அதே வேளையில் "போனது போனது தான்" என்று நீங்கள் உறுதியாக கூறுவது ஆச்சரியமாக உள்ளது. வருங்காலம் பற்றிய உண்மை உங்களுக்குத் தெரியுமா? நாளை நடப்பதை அறிந்தவன் இறைவன் ஒருவனே அல்லவா?

தன்னுடைய பொருள் அநியாயமாக பறிக்கப்பட்டால், மிருகங்களும் மனிதர்களும் கூட இயன்ற வரை முயற்சி செய்வார்கள். இயன்ற வரை, இறுதி வரை எனும் வரைமுறைகள் இறைவனுக்கு இல்லை என்பது நாம் அறிந்தது தானே?. தன்னுடைய இல்லத்தை மீட்காமல் விட்டு விட அவன் சக்தி அற்றவன் இல்லை (அஷ்தஹ்பிருல்லாஹ்). அப்ரஹாவிடம் அப்துல் முத்தலிப் கூறிய வார்த்தைகளின் சாராம்சம் இது தானே?

மூசா நபியின் வரலாற்றையும் நாம் அறிந்திருக்கின்றோம். ஒரு புறம் பிர்அவ்னும் பெரும் படையும் முன்னோக்கி வர, மறு புறம் பெரும் கடல் ஆர்ப்பரிக்க, தப்பிச் செல்ல வழி இல்லாத நிலையில் நாம் அழிந்தோம் என்று தான் நபி மூசாவின் தோழர்கள் கூறினர். ஆனால் அவரோஅந்த நிலையிலும் இறைவன் காப்பாற்றுவான் என்றார். அது தானே இறைவனின் சக்தியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை.

கடல் பிளந்து மூசா நபி காப்பாற்றப்பட்ட பிறைவழி நாட்குறிப்பு தினமும், இறை இல்லம் இடிக்கப்பட்ட ஆங்கில நாட்குறிப்பு தினமும் இவ்வருடம் ஒரே நாளில் வந்தது ஆச்சரியமான விஷயம் தானே. (Continued in the next post)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:பாபரி மஸ்ஜித் இடிப்பு தின...
posted by Javed Nazeem (Chennai) [09 December 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 14322

(Contd..)

இறைவன் நாடினால் எதுவும் அற்ப வினாடியே - அவன் ஆகுக என்கிறான் ஆகி விடுகின்றது என்பதை எல்லாம் நன்றாக அறிந்த பின்னும் நம்மை அறியாமல் சமுதாயத்தின் கையாலாகாத தன்மையினால் சில நேரம் தவறான கருத்துக்களை கூறி விடுகின்றோம்.

சரி, இறைவனின் நாட்டம் கை கூடும் வரை சமுதாயம் என்ன செய்ய வேண்டும்? இந்த விஷயத்தில் இது வரையிலும் ஆர்பாட்டம், நீதி மன்ற வழக்கு என்கிற அணுகுமுறைகள் தான் கடை பிடிக்கப்பட்டிருக்கின்றது. அந்த அணுகு முறை சற்றே மாற வேண்டும். இடித்து தள்ளிய மத வெறியர்கள், ஏமாற்றி வரும் அரசு, விடை தராத நீதி மன்றம், செய்வதறியாத சமுதாயம் இவற்றை தான் இந்த விஷயத்தில் நாம் கவனித்து வருகிறோம். இங்கே இன்னொரு மதத்தின் உணர்வுகளும் அடங்கி இருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். மத வெறியர்களின் வெ(ற்)றி இடித்ததில் சொற்பமே - ஆனால் அந்தப் பள்ளி ஒரு கோயிலை, அதுவும் ஒரு அவதார புருஷனின் பிறப்பிடத்தை இடித்து பின்னர் கட்டப் பட்டது என்பதை அனைவரும், குறிப்பாக பெரும்பாலான இந்துக்கள் நம்பும் வகையில் தொடர்ந்து பரப்பியது தான் அவர்களின் மிகப்பெரிய வெற்றி. இது எந்த அளவு பொய் பிரச்சாரம் என்பதை இந்துக்கள் தெளிவாகப் புரியும் வண்ணம் எடுத்து சொல்லாமல் விட்டது தான் இன்றளவும் முஸ்லிம்களின் மிகப் பெரிய தவறு.

1.. இராமருக்கு அந்த இடத்தில் கோயில் இருக்கவில்லை. அப்படி ஒரு கோவிலை பற்றி அன்றைய கால கட்டத்தில் கோவில்கள் பற்றி வெளி வந்த எந்த ஒரு சரித்திர நூலும் தெரிவிக்கவில்லை

2. இல்லாத கோவிலை பாபர் இடிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு வேளை அப்படி இடித்து இருந்தால் அன்றைய கால கட்டத்தில் இந்துக்கள் ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தி இருப்பர் - ஆனால் அப்படி எந்தக் குறிப்பும் இல்லை

3. ஒரு முஸ்லிம் என்ற முறையில் தனக்கு அனுமதிக்கப்பட்ட மாட்டு இறைச்சியை கூட, இந்துக்கள் மனம் புண் படும் என்கிற காரணத்தினால் ஒதுக்கி விடும் அளவுக்கு இணக்கம் பேனும் மன்னராக பாபர் இருந்தார். அப்படிப் பட்டவர் ஒரு கோவிலை இடித்திருப்பாரா?

4. 1857 க்கு பிறகு இது வெள்ளையரின் பிரித்தாளும் சூழ்ச்சியால் விளைந்த பொய்

இது போன்ற உண்மைகள் இந்து சகோதரர்கள் (இங்கே நான் குறிப்பிடுவது நாத்திகர்களாகி விட்டவர்களை அல்ல) உணரும் வண்ணம் தெளிவாகவும் பொறுமையாகவும் முன்னெடுத்து சொல்லப்படவேண்டும். இப்படி தொடந்து செய்து வருவதன் மூலம் உண்மையை அவர்கள் உணரும் காலம் வரும். அப்படிப்பட்ட சூழல் தான் அரசும், நீதி மன்றமும் சுதந்திரமாக முடிவெடுக்க வழி வகுக்கும். இதெல்லாம் சாத்தியமா என்று எண்ணுவார்கள் முதல் பகுதியை மீண்டும் படிக்கவும். இது வரை எடுத்து வரும் முயற்சிகள் எந்த பலனையும் அளிக்காத நிலையில் இப்படிப் பட்ட அணுகு முறையை கையில் எடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும்.

என்னுடன் பணி புரிந்த ஒரு உயர் சாதிப் பெண்மணி, பாப்ரி மஸ்ஜித் இடிக்கப் பட்டதை அறிந்த தனது தாயார் கடும் சினம் கொண்டதாகச் சொன்னார். இறைவன் பெயரில் உள்ள ஒரு ஆலயத்தை இடிப்பதை எக்காரணம் சொன்னாலும் ஏற்க முடியாது என்பது தான் அவரது சினத்திற்கான காரணம். இப்படிப் பட்ட நல்லுள்ளங்கள் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். இராமரின் ஆலயத்தை பாபர் இடித்தார் என்கிற அவப்பெயரை நீக்குவது தான் இங்கே முதல் கட்டப் பணியாக இருக்க வேண்டும். அது இறைவன் அருளால் வெற்றிகரமாக செயல் படுத்தப்பட்டால், நான் மேற்கூறியதைப் போல எத்தனையோ இந்து சகோதரர்கள் கூட நம் புறத்தில் நின்று குரல் கொடுப்பார்கள். இன்ஷா அல்லாஹ்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
முரும்பு! (?!)  (7/12/2011) [Views - 3849; Comments - 13]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved