Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:02:22 AM
புதன் | 8 மே 2024 | துல்ஹஜ் 1742, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4612:2003:3606:3307:46
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:00Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்05:52
மறைவு18:28மறைவு18:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4605:1205:38
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5019:1619:42
அமாவசை @ 04:29
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7681
#KOTW7681
Increase Font Size Decrease Font Size
சனி, டிசம்பர் 10, 2011
காயல்பட்டின குடிநீர் விநியோகம்: ஒரு புரியாத புதிர்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4883 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (16) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

குடிநீர் விநியோகம் - காயல்பட்டினத்தின் நீண்டகாலமாக தொடரும் ஒரு முக்கிய பிரச்சனையாகும். தற்போது - நகருக்கு, மேல ஆத்தூரில் அமைந்துள்ள கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தினசரி சுமார் 20 லட்சம் லிட்டர் (2 மில்லியன் லிட்டர்) தண்ணீர் வழங்கப்படுகிறது. அதாவது மாதத்திற்கு சுமார் 60 மில்லியன் லிட்டர் தண்ணீர் நகருக்கு வழங்கப்படுகிறது.

இதற்காக - தண்ணீர் வழங்கும் TWAD (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) நிறுவனத்திற்கு - 1000 லிட்டருக்கு ரூபாய் 4.50 என்ற விதத்தில் - ஆண்டுக்கு சுமார் 35 லட்சம் ரூபாய் காயல்பட்டினம் நகர்மன்றம் கட்டணமாக செலுத்துகிறது. இது தினசரி சுமார் 9000 ரூபாய் ஆகும்.

நகராட்சி இணையதளத்தின் ஒரு பகுதியில் இரண்டு நாளைக்கு ஒரு முறை என்றும், மற்றொரு பகுதியில் மூன்று நாளைக்கு ஒரு முறை என்றும் நகரில் குடிநீர் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் நடைமுறையில் பார்க்கும்போது நகரில் நான்கு நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.





பாதாள சாக்கடைத் திட்டம் இல்லாத நகராட்சிகளில் தலைக்கு 90 லிட்டர் தண்ணீர் தினமும் விநியோகம் செய்யப்படவேண்டும் என்பது அரசின் அளவுகோள் ஆகும். இந்த அளவுகோள்படி தினமும் 36 லட்சம் லிட்டர் குடிநீர் நகரில் வினியோகிக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது நகருக்கு தினமும் கிடைப்பது வெறும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர்தான். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யவே - இரண்டாம் பைப்லைன் குடிநீர் திட்டம் காயல்பட்டினத்தின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

2011ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி - நகரின் மக்கள் தொகை - 40,500 ஆகும். தலைக்கு தினமும் 60 லிட்டர் தண்ணீர் என்ற விதத்தில் குடிநீர் விநியோகம் நகரில் நடைபெறுவதாக நகர்மன்ற இணையதளம் தெரிவிக்கிறது. ஆனால் நடைமுறையில் - தலைக்கு 60 லிட்டர் தண்ணீர் கிடைக்கிறதா என்பது சந்தேகமே.

நகரில் உள்ள குடிநீர் இணைப்புகள் எண்ணிக்கை சுமார் 8000 ஆகும். மக்கள் தொகையை கணக்கில் எடுக்கும் போது - ஒரு இணைப்புக்கு சுமார் 5 பேர் உள்ளனர் என அறியமுடிகிறது. ஆக - சராசரியாக ஒரு இணைப்புக்கு தினமும், 300 லிட்டர் தண்ணீர் (தலைக்கு 60 லிட்டர் x 5 பேர்) வழங்கப்படவேண்டும். அப்போதுதான் நகர்மன்றம் கூறும் - தலைக்கு 60 லிட்டர் தண்ணீர் என்ற கணக்கு சரியாக இருக்கும். அவ்வாறு வழங்கப்படுகிறதா?

மேலே கண்டதுபோல் நகரில் குடிநீர் விநியோகம் 4 நாட்களுக்கு ஒரு முறைதான் நடைபெறுகிறது. ஓர் இணைப்புக்கு, தண்ணீர் திறந்து விடப்படும் (ஒரு) நாளில், 1200 லிட்டர் (தினமும் 300 லிட்டர் x 4 நாட்கள் ) தண்ணீர் கிடைக்க வேண்டும். ஆனால், உண்மையிலேயே ஓர் இணைப்புக்கு 1200 லிட்டர் தண்ணீர் கிடைக்கிறதா என்பது மிகப்பெரிய கேள்வியே . நகர்மன்றத்தில் இதுகுறித்து - சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விசாரித்ததில், ஒரு இணைப்புக்கு 1000 லிட்டர் தண்ணீர் தாராளமாக கிடைக்கும் என உறுதியாகக் கூறுகிறார்.

நகரில் தண்ணீர் திறந்து விடப்படும் நாளில் - தண்ணீர் சுமார் 1 மணி நேரமே திறந்து விடப்படுகிறது. நிமிடத்திற்கு 17 லிட்டர் என்ற கணக்கில் நீரை சேகரித்தால்தான் - 60 நிமிடங்களில் 1000 லிட்டர் தண்ணீர் பெற முடியும். ஒரு பெரிய குடத்தின் அளவு சுமார் 20 லிட்டர் என்பதனை கவனத்தில் வைத்துக்கொள்ளவும். உண்மையாகவே 1000 லிட்டர் தண்ணீர் ஒரு இணைப்புக்கு வழங்கப்பட்டால் - ஒவ்வொரு இணைப்புக்கும் சுமார் 50 குடம் அளவில் தண்ணீர் கிடைக்கவேண்டும். அவ்வாறு கிடைக்கிறதா?!

எவ்வளவு அளவு தண்ணீர் கிடைக்கிறது என நகரில் சிலரை விசாரித்ததில், அதிகபட்சமாக 250 லிட்டர் முதல் 300 லிட்டர் தண்ணீர் வரைதான் கிடைப்பதாகக் கூறுகின்றனர். அதாவது 4 நாட்களுக்கு ஒருமுறை என்ற கணக்கில், மாதத்திற்கு 7 - 8 முறை தண்ணீர் ஒவ்வோர் இல்லத்திற்கும் வழங்கப்படுகிறது என்றால், ஒவ்வோர் இணைப்புக்கும், ஒவ்வொரு மாதமும், சுமார் 1750 - 2400 லிட்டர் அளவு தண்ணீர் மட்டுமே சராசரியாக கிடைக்கிறது.

கணக்கிட்டுப் பார்த்தால் - நகரில் 8000 இணைப்புகள் உள்ளன என்ற பட்சத்தில், ஒரு மாதத்தில் - நகரில் கூடுதலாக சுமார் 19 மில்லியன் லிட்டர் அளவு தண்ணீரே பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. ஆனால் நகருக்கு - TWAD நிறுவனத்தால் - மாதம் வழங்கப்படும் குடிநீர் அளவோ 60 மில்லியன் லிட்டர் ஆகும். அதற்குரிய கட்டணமே நகர்மன்றமும் TWAD நிறுவனத்திற்கு செலுத்துகிறது. அப்போது - சுமார் 40 மில்லியன் லிட்டர் தண்ணீரின் நிலை தான் என்ன?

TWAD நிறுவனம் - தான் நகர்மன்றதிற்கு வழங்கும் தண்ணீரை உயர்த்தி கூறுகிறதா? நகருக்கு தண்ணீர் வழங்கும் TWAD நிறுவனம் - மேல ஆத்தூரில் உள்ள நீர்த்தேக்கத்தில் இருந்து அனுப்பப்படும் தண்ணீரினை அளவிட - மீட்டர் பொருத்தி உள்ளதாக தெரிவிக்கிறது. ஆகவே - தான் வழங்குவதாக கூறும் அளவு சரியென்றே TWAD கூறுகிறது.

அப்போது பிரச்சனை எங்கிருக்க வாய்ப்புள்ளது? மேல ஆத்தூரில் இருந்து - காயல்பட்டினதிற்கு சுமார் 10 கிலோமீட்டர் நீளத்திற்கு - குழாய் போடப்பட்டுள்ளது. அதன் வாயிலாகவே தினமும் - தண்ணீர் நகருக்கு அனுப்பப்படுகிறது. அவ்வாறு அனுப்பப்படும்போது வழியில் தண்ணீர் திருடப்படுகிறதா?

நகருக்கு இவ்வாறு வந்து சேரும் தண்ணீரின் அளவு கணக்கிடப்படுகிறதா என நகர்மன்றத்தில் விசாரித்ததில் - மீட்டர் அறை ஒன்று, பைபாஸ் சாலையில் அமைக்கப்பட்டதாகவும், அதன் அருகில் உள்ள நில உரிமையாளர் வழக்கு தொடர்ந்ததால் - தண்ணீர் மீட்டர் செயல்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

நகருக்கு வந்து சேரும் குடிநீரின் அளவினை - அது வந்து சேர்ந்த பின்னர், நகரில் உள்ள 19 நீர்தேக்கத் தொட்டிகளுக்கும் பிரித்து அனுப்பப்படும் இடத்திலதான் மீட்டர் அறை விரைவில் அமைக்கப்படவேண்டும். அப்போதுதான் - TWAD நிறுவனம் அனுப்பும் தண்ணீர் அளவு சரியென்றும், இடையில் எங்கும் தண்ணீர் திருடப்படவில்லை என்றும் உறுதியாக கூறமுடியும்.

குடிநீரை பொருத்த வரை அது சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் பொருளாகும். TWAD நிறுவனம் - நகர்மன்றதிற்கு 1000 லிட்டருக்கு ரூபாய் 4.50 என கட்டணம் விதிக்கிறது. அதே TWAD நிறுவனம் - தொழிற்சாலைகளுக்கு வழங்கும்போது, 1000 லிட்டருக்கு ரூபாய் 15 என்ற அதிக கட்டணத்தில் விநியோகிக்கிறது. இந்த கட்டணங்கள் - கூட்டு குடிநீர் திட்டத்தில் தனது பங்கை (Proportionate Cost) வழங்கியுள்ள அமைப்புகளுக்குதான்.

தனது பங்கை வழங்காத தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் குடிநீர் - 1000 லிட்டருக்கு ரூபாய் 60 என்ற அதிக கட்டணத்திலும், மருத்துவமனைகளுக்கு 1000 லிட்டருக்கு ரூபாய் 50 என்ற அதிக கட்டணத்திலும், கல்விசாலைகளுக்கு 1000 லிட்டருக்கு ரூபாய் 30 என்ற அதிக கட்டணத்திலும் - TWAD நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. ஆகவே - இவ்வாறு வேறுபடும் கட்டணங்களின் காரணமாக - கறுப்புச் சந்தையில் - நகர்மன்றத்தின் குடிநீருக்கு நல்ல மவுசு உண்டு.



காயல்பட்டினம் நகர்மன்றத்தின் - குடிநீர் விநியோகம் புரியாத புதிராகவே உள்ளது. இந்த புதிருக்கான விடை - 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள இரண்டாம் பைப்லைன் குடிநீர் திட்டம் துவக்கப்படுவதற்கு முன் கிடைத்தால், புதிய திட்டம் பயனுள்ளதாகவும், எந்த குளறுபடிகள் இல்லாததாகவும் அமையும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:குடிநீர் விநியோகத்தில் ஒழுகல்/திருட்டு.
posted by V D SADAK THAMBY (Guangzhou (China)) [10 December 2011]
IP: 219.*.*.* China | Comment Reference Number: 14333

மின்சார வாரியத்திற்கும் குடிநீர் வாரியத்திற்கும் உள்ள பொதுவான பிரச்சனைதான் இது.

பொதுவாக தண்ணீர்/மின்சாரம் விநியோகத்தில் ஏற்படும் இழப்புதான் . ஒழுகலாகவும் இருக்கமுடியும்.திருட்டாகவும் இருக்கமுடியும்.

விநியோகத்தில் இழப்பு மிக குறைவாக இருந்தால் நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை.

இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளதை பார்த்தல், தண்ணீர் விநியோகத்தி திருட்டு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது

முதலில் காயல்பட்டணம் நகராட்சியின் குடிநீர் அளவிடும் கருவி சரியாக செயல்பட்டால் , இது திருட்டுதானா என்பதை உறுதிசெய்ய முடியும்.அவ்வாறு திருட்டு நடத்திருந்தால்,யார் திருடியிருக்கமுடியும் என உறுதியாக கூற முடியாதா நிலை..

எனினும் இடையிலுள்ள தொழிற்சாலை மீது சிறிய சந்தேகக்கண்.அவ்வாறிருப்பின் இதற்க்கு உடந்தையான நபர் யார் என்பதயும் கண்டறிய வேண்டும்.திருட்டு என்பது உண்மையாயின் தொழிற்சாலை-நகராட்சி நபர்கள் கூட்டில்லாமல் எதுவும் நடந்திருக்க முடியாது.

தண்ணீர் விநியோகத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய kayalpatnam.com க்கு நன்றிகள் பல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. கொஞ்சநேரம் குனிஞ்சி நின்றாலும்..... நமக்கு தெரியாம அறுத்துட்டு போற காலம் இது.... உஷார்.....!
posted by s.s.md meerasahib. (riyadh) [10 December 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14335

அஸ்ஸலாமு அலைக்கும்.

காயல்பட்டின குடிநீர் விநியோகம்: ஒரு புரியாத புதிர்! அதன் துப்பறியும் முறையும் மிக,மிக சூப்பர்... நன்றி காயல்பட்டணம் டாட் காமிற்கு....

இப்படி துப்பறிவது நம் ஒவ்வொரு மீதும் கட்டாய கடமை. காயல் மக்கள் (இஸ்லாமியர்கள்) மற்றவர்களின் உரிமையில் மூக்கை நுழைப்பவர்கள் அல்ல.... ஆகையால் நமக்கு கிடைக்கவேண்டியதிலும் கவனம் செலுத்துவதும் இன்றுவரை இல்லை. இனியாவது இதுபோன்ற விசயத்தில் கவனம் செலுத்தினால்.... நம்முடைய வரிப்பணம் பாது காப்பதுடன்... தண்ணீர் தாட்டுபாடு என்பதே..... இருக்காது.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:காயல்பட்டின குடிநீர் விநி...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [10 December 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14336

மிகவும் அருமையான பதிவு.. மூளைக்கு வேலையை கொடுத்துள்ளார்கள். புரியாத புதிர்தான்..

சிறுவனாக இருக்கும் போது, கம்மா அவர்கள் கடையில் 3 துண்டு தேங்காய் வாங்கிட்டு வா என்று சொல்லுவார்கள், கடைக்காரரும் 3 பெரிய துண்டு கொடுப்பார், முடுக்கில் வைத்து ஒவ்வொன்றிலும் கொஞ்சம் சொஞ்சம் கடித்து கொரம்பி, கம்மாவிடம் ரீச் ஆவதோ ஒன்னரை துண்டுதான். திட்டு யாருக்கு - வழமையாக கடைக்காரருக்கு தான்.

ஆக, TWAD சரியாக தான் அனுப்புகிறான், வழியில் ஆட்டையை போடுவது யாரோ..

ஒரு வீட்டிற்கு 1000 லிட்டர் தாராளமாக கிடைக்கும் என்று நகராட்சி கூறுவது வினோதம் தான்.. சென்ற முறை மாங்கு மாங்கு அடித்து பார்த்ததில், ஒரு குடம் தண்ணீர் நிறையவே தாவு தீர்ந்து விடுகின்றது. அவர்கள் கூற்றுப்படி மோட்டார் வைத்து உறிஞ்சினால் தான் அவ்வளவு தண்ணீர் கிடைக்கும்.

இன்னும் சில வீடுகளில் ( நீர் தேக்க தொட்டிக்கு அருகில்), சாதாரணமாக பைப்பை திறந்தால் பீச்சிக்கொண்டு அடிக்கும். தேவைக்கு போக அவர்கள் மரங்களுக்கும், அதற்கும் கொடுமையாக கிணற்றிலும் குடிநீரை திறந்து விடுவது....என்னத்தை சொல்ல.. இறை பயம் இருந்தால் இப்படி செய்வார்களா...

நல்ல தகவல் தந்த ADMIN அவர்களுக்கு பாராட்டுக்கள்.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:காயல்பட்டின குடிநீர் விநி...
posted by Salai Nawas (singapore) [10 December 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 14337

ஒரு சமயம் இப்படி இருக்குமோ? ஆற்றில் வருகிற கழிவு நீரை உறிஞ்சி எடுத்து, சுத்தம் பண்ணி சிவப்பு நீரை கடலில் கலக்குறான்களோ என்னவோ!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:காயல்பட்டின குடிநீர் விநி...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [10 December 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14339

கயல்பட்டனத்தின் குடிநீர் விநியோகம் இன்றல்ல என்றோ போட்ட புதிர்தான் இது, இதற்கு இன்னும் விடயம் தான் கிடைக்கவில்லை.

நமது அப்பா மார் காலத்தில் நமக்கு குடிதண்ணீர் திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டிய அரசாங்கம் நமக்கு செய்து தராததால் L.I.C யில் கடன் வாங்கி இந்த திட்டத்தை நிறைவேற்றினோம். கடன் தீரும் வரை நாம் RS10/= ( எனக்கு தெரிந்தவரை) மாதந்தோறும் கட்டவேண்டும் என கட்டினோம்.

நமது பணத்தில் உருவாக்க பட்ட இத்திட்டத்தில் நம்மை சுற்றியுள்ளவர்கள் இலவசமாகவே அனுபவிதுக்கொண்டார்கள்.

L.I.C கடன் பாக்கி கடந்த பல வருடங்களுக்கு முன் வட்டியுடன் செலுத்தப்பட்டு விட்டது. முறையே நமது தண்ணீர் வரி ரத்து செய்யப்பட வேண்டும். மாறாக RS100/= என உயர்த்தி மக்கள் போராட்டத்திற்கு பின் RS50/= என குறைத்து பேருராட்சி மன்றம் அறிவித்து அதனை தொடர்ந்து கட்டிவருகிறோம்.

இதில் குறிப்பிட்ட சில தெருக்களில் அடிபம்பில் தண்ணீர் தானாக கொட்டுகிறது. பல தெருக்களில் உயிரை கொடுத்து பம்பை அடித்தாலும் நீர் கிடைப்பது அரிதாகவே உள்ளது. ஆனால் வரியை உயர்த்தி வாங்கும் நிர்வாகமோ ஆசிரியர் குறிப்பிட்டுள்ளது போல் தனது கடமையை சரிவர செய்யாமல், நமக்கு வரவேண்டிய தண்ணீர் வருகிறதா என கண்காணிக்காமல் நம்மை உறிஞ்சுகிறது.

விரைவில் இதற்கு விடயம் கிடைக்குமா? புதிய நிருவாகத்தின் மூலம் கிடைக்கும் என எதிர்பார்ப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. வெட்கக்கேடு !!!!
posted by Salai Sheikh Saleem (Dubai) [10 December 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14343

நமதூருக்கு எவ்வளவு அளவு தண்ணீர் வழங்கப்படுகிறது என்று தெரியாமலே மாதம் கிட்டத்தட்ட 40 மில்லியன் லிட்டர் தண்ணீருக்கு நமது சூப்பர் நகராட்சி தன்னுடைய மக்களின் வரிப்பணங்களை வாரி இறைத்திருக்கிறது. தம்பி ஜியா சொன்ன துண்டுதேங்காய் கதையில் ஒன்றரை துண்டு கூட மிஜ்ஜியது போல் இல்லாமல் அரை துண்டுதானே கம்மா கையில் கிடைக்கிறது.

எங்கே போகிறது இந்த தண்ணீர் ?

எல்லாவற்றிற்கும் மேலாக தண்ணீர் எங்கு வந்து சேர்கிறதோ அங்கே தண்ணீர் வரத்தை அளக்கும் கருவி வைக்காமல் எங்கோ பைபாஸ் சாலையில் அதுவும் ஒரு பிரச்சனைக்குண்டான இடத்தில வைத்து அந்த கருவியே செயல்படாமல் புத்தம் புதிதாகவே வைத்திருக்கும் நம் நகர் மன்றத்தின் முன்னாள் தலைவர்களும் கவுன்சிலர்களும் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்கள் தானே ? இதிலும் ஏதோ வேண்டும் ஏற்று செய்யப்பட்டதுபோல் இருக்கிறதே ???

எனவே, மதிப்புக்குரிய நகரமன்ற தலைவி அவர்கள் உடனடியாக இதில் தவறு எங்கே நடந்திருக்கிறது என்பதை கண்டிபிடித்து "அந்த" கறுப்பாடுகளை ஊருக்கு அடையாளம் காட்ட வேண்டும். ஊர் நலன் கருதி நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு உங்களுடன் ஒத்துழைப்பு தர இந்த ஊரே தயாராக இருக்கும் போது, தயவு செய்து எதற்கும் தயங்க வேண்டாம்.

ஒரு ஊர் நலம் கருதும் உண்மையான, நம்பிக்கைக்குரிய ஒரு பத்திரிகை தர்மத்தை நிலைநாட்டியிருக்கும் காயல்பட்டினம் டாட் காம் க்கும், அவர்களோடு துணைநின்ற அனைவருக்கும் காயலர்கள் சார்பில் ஒரு பெரிய நன்றிகள். தொடரட்டும் உங்களின் சீரிய பணிகள்.

இன்னும் என்னென்ன குளறுபடிகள் நடந்துகொன்டிருக்கிறனவோ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:காயல்பட்டின குடிநீர் விநி...
posted by mackie noohuthambi (kayalpatnam) [10 December 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 14344

தண்ணீர் தண்ணீர் என்று எங்கும் நிறைந்து நிற்கும் இந்த பிரச்னை தீராது. முல்லை பெரியாறு பிரச்னை தீர்ந்தாலும் நமதூர் தண்ணீர் பிரச்னை தீராது.

நமதூரில் சட்டத்துக்கு புறம்பாக எத்தனை குடி நீர் இணைப்புகள் உள்ளன, எத்தனை வீடுகளில் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சப்படுகிறது என்ற கணக்கு நகரமன்ற தலைவரின் மேஜையில் எப்போது வைக்கப்படுகிறதோ, எப்போது இந்த ஹராமான தண்ணீரை மக்கள் குடிக்காமல் இருக்கிறார்களோ அப்போது தண்ணீர் பிரச்னையில் பாதிக்கு மேல் தீர்ந்து விடும்.

பானை நிறைய நீர் ஊற்றினாலும் பானையில் ஆங்காங்கே ஓட்டை இருந்தால் பானை எப்படி நிறையும். எனவே, குறைபாடு வேறெங்கும் இல்லை. நம்மிடமே உள்ளது. ஹராம் ஹலால் பேண வேண்டிய நாமே தவறு செய்தால், அல்லாஹ்வின் உதவி வருமா?

மங்கை சூதகமானால் கங்கையில் நீராடலாம், கங்கையே சூதகமானால் எங்கே நீராடுவது என்று தமிழில் ஒரு பழமொழி உள்ளது. "INNALLAAHA LAA YUGHAYYIRU BI KOWMIN HATTHAA YUGHAYYIROO MAA BI ANFUSIHIM" என்று உலமாக்கள் ஒரு இறை வசனத்தை நமக்கு சொல்லிக்காட்டுவார்கள்.

திருடனாய்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. நம்மை நாமே திருத்திக்கொள்வோம், தண்ணீருக்கு தானாக வழி பிறக்கும். மக்கி நூஹுதம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:காயல்பட்டின குடிநீர் விநி...
posted by மு.அ.பஷீர் மரைக்கார் (காயல்பட்டணம்) [10 December 2011]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 14346

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

துணிச்சலான செய்தி, பாராட்டுக்கள்...

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலிருந்து வரும் குடிநீர் அளவை கணக்கிட பைபாஸ் ரோட்டில் உச்சிமாகாளி அம்மன் கோயில் தெரு சமீபம் தான் குடிநீர் மீட்டர் ரூம் கட்டப்பட்டுள்ளது. இந்த ரூம்மிலிருந்து 300 மீட்டர் தொலைவிலிருந்து தான் உச்சிமாகாளி அம்மன் தெரு, இரத்தினாபுரி, லெட்சுமிபுரம் மற்றும் அழகாபுரி ஆகிய இடங்களிளுள்ள குடிநீர் நீர்தேக்கத் தொட்டிகளுக்கு மெயின் குழாயில் இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே குடிநீர் அளவை கணக்கிட மீட்டர் ரூம் கட்டப்பட்டுள்ள இடம் சரியே.

மீட்டர் ரூம் கட்டப்பட்டுள்ள இடம் பைபாஸ் ரோடு சாலை ஓரத்தில் மாநில நெடுச்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில்தான் கட்டப்பட்டுள்ளது. கட்டடத்தின் அளவு கிழமேல் 8அடி தென்வடல் 5அடியில் மொத்தம் 40 சதுரஅடியில் மெயின் குழாய் பதிக்கப்பட்டுள்ள இடத்தின் மேல்பகுதியில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதன் அருகில் உள்ள நிலஉரிமையாளர் என்நிலத்தின் ரோட்டு முகப்புபகுதி மறைக்கிறது என வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.

முக்கியமாக மீட்டர் ரூம் மட்டும்தான் கட்டப்பட்டுள்ளது இன்னும் மீட்டர் பொருத்தப்படவில்லை. அது வெரும் காலிரூம் தான்.

இன்னும் ஒன்று கவனித்தீர்களா ? தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு வருடத்திற்கு 35 இலட்சம் நகராட்சி குடிநீர் கட்டணம் செலுத்துகிறது மற்றும் வருட குடிநீர் பராமரிப்பு செலவு தோரயமாக 15 இலட்சம் செலவிடப்படுகிறது. மொத்தம் 50 இலட்சம் செலவிடப்பட்டு, பொதுமக்களிடம் நகராட்சி குடிநீர் கட்டணமாக வருடத்திற்கு 8000 இணைப்புகளுக்கு மாதம் ஒன்றுக்கு 50ரூபாய் 12 மாதத்திற்கு ஆக 48 இலட்சம் வசூலிக்கப்படுகிறது. நகராட்சிக்கு இழப்பிடு 2 இலட்சம். இதையல்லாம் கணக்கிட்டு இன்னும் குடிநீர் மாத கட்டணத்தை உயர்த்தினாலும் உயர்துவார்கள். பார்போம்.

அன்புடன்.
மு.அ.பஷீர் மரைக்கார்.
காயல்பட்டணம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. கீரனூர் அருகே சோதனை தேவை
posted by Seyed Ibrahim (Thoothukudi) [10 December 2011]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 14347

தூத்துக்குடி நெடுஞ்சாலை இல் வரண்டியவேல் பாலம் கழிந்து தெற்கு ஆதூர்கு முன்னால் கீரனூரில் ரோடு ஓரம் அருகே தண்ணீர் குழாய்( Water Distribution Channel ) ஒன்று பலகாலமாக ஓடைகப்பட்டு அல்லது ஓட்டைத்து கொடுக்கப்பட்டு வழி போக்கர்களின்(Lorry Drivers bathing, lorry cleaning, pasu mattu cleaning etc )நிரந்தர பயன்பாட்டில் உள்ளது !!! ???..

ஷை தண்ணீர் குழாய் மூலமாக ஆறுமுகநேரி பஞ்சாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லபடுகிறது என்று சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் இந்த செய்தியை பார்க்கும் பொழுது ஷை தண்ணீர் குழாய் நம் நகருக்கு உரியதாய் இருக்கலாம் என ஐயம் எழுகிறது. எனவே மக்கள் நலம் கருதி நம் நகர்மன்றம் உடனடி சோதனை மேற்கொள்ள வேண்டுகிறேன். நன்றி வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:காயல்பட்டின குடிநீர் விநி...
posted by Cnash (Makkah ) [10 December 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14348

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த புரியாத புதிர் ஒன்று இருக்கிறது என்பதை கூட என்போன்ற எண்ணற்றவர்களுக்கு இந்த செய்தியின் மூலம் புரிய வைத்த அட்மின் அவர்களுக்கு பாராட்டுக்கள்!! இந்த ரிப்போர்ட்இன் மூலம் பல மறைந்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்தததற்கு நன்றிகள்!! இந்த கார்ப்ரேட் உலகத்தில் கல்வி அறிவும், ஆற்றலும் காசாக மாறிக்கொண்டு இருக்கும் யுகத்தில் எந்த ஒரு வியாபார நோக்கமும் இல்லாமல், ஊரின் நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு உங்கள் உழைப்பையும் ஆற்றலையும் இது போன்ற பணிகளுக்கு பயன்படுத்துவதற்கு வல்ல அல்லாஹ் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் தருவான். ..இடையில் நூறு விமர்சனங்கள் பழிசொற்கள்!!!

நகராட்சியின் அவல நிலையை நினைத்து பார்த்தால் ஆச்சர்யமாகவும் அதே சமயம் ஆத்திரமாகவும் வருகிறது. இத்தனை வருடங்கள் நாம் பணம் கொடுத்து பெறும் தண்ணீரை கூட அளந்து பார்க்க ஒரு நிர்வாகம் இல்லை.. நொண்டி சாக்குகள் ஆயிரம்... தங்கள் வீட்டு பொருளை அப்படி வாங்குவார்களா!!

பைபாஸ் ரோட்டில் உள்ள இடத்தில் கருவி பொருத்தப்பட்டுள்ளது.. அனுப்பும் தண்ணீர் சரியாக அனுப்ப படுகிறது (அவர்களின் அளவு படி). ஆனால் பெறப்படும் தண்ணீருக்கு கணக்கு இல்லை.. அதை சரி செய்ய எந்த முயற்சியும் இல்லை.. ஆனால் கட்டும் தொகையோ தினமும் 9000 வீதம் வருடத்திற்கு 35 லட்சம்.. (Rs.32.85 லட்சம்தான் கணக்கு வருது.. இதில் ஏதும் கோல்மால் இல்லையே....??)

முந்தைய நிர்வாகத்தில் அலட்சிய போக்குதான் இதற்கு காரணம், இந்த அலட்சியத்தால்தான் நம் பணம் வீணடிக்க படுகிறது. இது வெறும் குறை சொல்லுவதற்காக இல்லை, மாறாக முந்தைய சீர்கேட்டில் இருந்து இன்றைய நிர்வாகம் பாடம் படிக்க வேண்டும் அந்த தவற்றை திருத்தி கொண்டு துணிவுடன் நடவடிக்கை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வந்து நம் பணமும் உரிமையும் வீணாக கூடாது என்பதற்காகத்தான்!!

இதற்கிடையில் அமைந்துள்ள DCW தொழிற்சாலை, சமீபத்தில் தனது விரிவாக்க பணிக்காக வெளியிட்ட ENVIRONMENTAL IMPACT ASSESSMENT REPORT இல் அதன் தினசரி தண்ணீர் பயன்பாடு தற்போதுள்ள நிலையில் (உற்பத்திக்கு மட்டும்) 6944 CUBIC மீட்டர் அதாவது 6 ,944 ,000 லிட்டர் (SIX MILLION NINE HUNDRED FORTY FOUR THOUSAND) என்றும், அது விரிவாக்க பணிக்கு பிறகு தண்ணீரில் பயன்பாடு 11 ,822 CUBIC METER அதாவது 11,822,000 லிட்டர் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது..

ஆனால் இதற்கான SOURCE வெறுமனே தாமிரபரணி ஆறு என்றுதான் காட்டபட்டிர்கிறது!! அப்படி என்றால் அது எந்த முறையில் பெறப்டுகிறது என்பதை RTI மூலம் அறிந்து கொள்ள வேண்டிய கடமை நம் தற்போதைய நகராட்சிக்கு உண்டு!! அதன் மூலம் நம் தண்ணீரும் உரிமையும் கொள்ளை போகிறதா என்பதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் நகராட்சி இருக்கிறது..

இதை தனிப்பட்ட நபரோ அல்லது அமைப்போ செய்வதை விட நகராட்சி மூலம் அணுகுவதில்தான் கூடுதல் பலம் உள்ளது. அதற்கான நடவடிக்கை இந்த புதிய நகராட்சி துவக்குங்கள் , மக்கள் அனைவரும் முன்னின்று ஆதரவளிக்கிறோம்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:காயல்பட்டின குடிநீர் விநி...
posted by suaidiya buhari (chennai) [10 December 2011]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 14349

assalamualikum

அட்மின் எல்லோரையும் இந்த நியூஸ் மூலம் தண்ணீர் பற்றாக்குறையை அறிய செய்ததுக்கு மிக்க நன்றி .........

முதலில் கள்ளதனமாக மோட்டார் மூலம் தண்ணீரை உருஞ்சும் நபர்களை களைஎடுத்தால் பாதி problem சரியாகி விடும். இதனை சரி செய்ய வார்டு மெம்பெர் அவர் அவர்கள் ஏரியாக்களில் தண்ணீர் வரும் பொழுது கவனித்து கண்டிப்பது நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:காயல்பட்டின குடிநீர் விநி...
posted by hm ahamed (sellavappa) (kpm) [10 December 2011]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 14350

அஸ்ஸலாமு அழைக்கும். varah

காயல்.காம் க்கு mudhalil நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.. இன்று மாலைதான் ஆத்தூர் வரை சென்று வந்தேன்.ஆத்தூர் பாலத்தை கடக்கும்போதுதான் 1 நிமிடம் நின்று பார்த்தேன் பாலத்தின் மீது.. ஒரு பக்கம் iyyappa பக்தர்கள் குளித்து கொண்டு erunthargal பின்பு இடது புறம் பார்த்தேன் பன்றியும் எருமையும்தான் குளித்து கொண்டு இருந்தது..

இந்த கழிவுகளை எல்லாம் yedthu கொண்டுதான் நம் ஊருக்கு தண்ணீர் வருகிறது.. இதற்கு இடையில் எத்தணை இடங்களில் pipe line லீக்கேge என்று தெரியாது.. அல்லாவிற்குதான் வெளிச்சம்.. இதை எல்லாம் எபோழுதும் சுட்டி காட்டி கொண்டு தான் இருக்கிறோம் எப்பொழுதுதான் நம் ஊருக்கு suthamana குடிநீர் வருமோ என்று தெரிவில்லை..

தயவு செய்து காயல் மக்களுக்கு சிறு வேண்டுகோள் தயவு செய்து தண்ணீரை சுட வைத்து sutham செய்து குடியுங்கள் இல்லையெனில் mineral வாட்டர் வாங்கி குடியுங்கள்.. அல்லா எலோருடைய naatangalayum niraivaetri tharuvanaha aammeen

Moderator: நமதூருக்கு வரும் தண்ணீர் அல்ல அது! ஆத்தூர் ஊருக்குள் செல்லும் பாதையில் உள்ளது அந்த நீரேற்றும் நிலையம். அதிலிருந்து முறையாக சுத்திகரிக்கப்பட்ட நீர்தான் நமதூரை வந்தடைகிறது. எனினும் வழியில் பல அசுத்தப் பிரச்சினைகள் இருக்கலாம். எனவே எல்லாக் காலங்களிலும் - குறிப்பாக, மழைக்காலங்களில், நீரை நன்கு கொதிக்க வைத்து அருந்துவது நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:காயல்பட்டின குடிநீர் விநி...
posted by OMER ANAS (DOHA QATAR.) [11 December 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 14356

மக்களை தட்டி எழுப்பிய அட்மினுக்கு நன்றி. இங்கே அவரவர்கள்,தங்கள் கருத்துக்களை மிகச்சரியாக பதிந்தும் உள்ளார்கள்.அவர்களுக்கும் நன்றி. நானும் எனக்கு தெரிந்த உண்மையினை சொல்கிறேன்.

நமது சேது ராசா தெருவில் மேற்குப் பகுதியில், அதாவது சுல்தான் அவர்களின் மாட்டுக் கொட்டகைக்கு அடுத்து ஒரு கிணற்றில் எப்பவும் ஒரு பைப் மூலம் தண்ணீர் அந்த கிணற்றில் விழுந்து கொண்டே இருக்கும். முதலில் நீர் ஊற்று என்றுதான் நினைத்தேன் பிறகுதான் தெரிந்தது அந்த வார்டு புண்ணியவான் அந்த பகுதி மக்களுக்கு செய்த (நரிக்கடன்) நன்றிக்கடன் என்பது. நான் கண்டது ஒரு வருடம் முன்பு.இது இப்பவும் தொடர்கிறதா என்று தம்பி S K ஸாலிஹ் ஒரு விசிட் அடித்து பார்த்து வரவும்.

உண்மை என்றால் முறைபடி தலைவிக்கு அறிவித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவும்! மக்களே இது போல் உங்கள் பகுதியிலும் நடை பெற்று வந்தால் வெளிச்சமிட்டு காட்டுங்கள் இது நம் கடமை.நன்றி காயல்.காமிற்கு!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. புறநகரில் இயங்கி வரும் தொழிற்சாலை முகப்பில் 4 இன்ச் குழாய் மூலம் இந்த தொழிற்சாலை திருடலாம் அல்லவா ?
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [11 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14358

மேல ஆத்தூரில் இருந்து - காயல்பட்டினதிற்கு சுமார் 10 கிலோமீட்டர் நீளத்திற்கு - குழாய் போடப்பட்டுள்ளது. அதன் வாயிலாகவே தினமும் - தண்ணீர் நகருக்கு அனுப்பப்படுகிறது. அவ்வாறு அனுப்பப்படும் போது வழியில் தண்ணீர் திருடப்படுகிறதா?

புறநகரில் இயங்கி வரும் தொழிற்சாலை முகப்பில் 4 இன்ச் குழாய் மூலம் இந்த தொழிற்சாலை திருடலாம் அல்லவா ?

நமதூருக்கு வரும் தண்ணீர் அளவு குறைகிறது என்றால் தொழிற்சாலை முகப்பில் தோண்டி பார்த்தால் நமது சந்தேகம் தெளிவு பெரும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:காயல்பட்டின குடிநீர் விநி...
posted by sithi katheeja (singapoore) [11 December 2011]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 14360

சகோதரி சுவைத்ய்யா அவர்கள் சொன்னது போல் மோட்டார் போட்டு தண்ணீர் உறிஞ்சும் வீடுகளை தடுத்து நிறுத்துவது நல்லது. இதை சகோதரி ஆபிதா அவர்கள் இவ்விஷயத்தில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:காயல்பட்டின குடிநீர் விநி...
posted by PS ABDUL KADER (jeddah) [11 December 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14366

எந்த பைப்பு லைன் திட்டதில் இருந்தாவது நகருக்கு தண்ணீர் கொண்டுவந்தாலும் சரி, நகர தலைவி என்னதான் சட்டம் போட்டு (கள்ள பைப்பு லைன் வைத்து இருபவர்களையும், தண்ணீர்க்கு சரியான முறையில் கட்டணம் செலுத்தாமல் வருகிறவர்களையும், மோட்டார் முலம் தண்ணீர் உரிந்து எடுபவர்களையும்) தடுத்து நிறுத்தினாலும் சரி. காலம் காலமாக திருட்டு தண்ணீர் குடித்து வந்த கூட்டம் வார்டு உறுப்பினர், நகர மண்ட பணியாளர் உதவியுடன் தண்ணீரை திருடி எடுத்துகொண்டு இருப்பார்கள்.

திருடர்களாக பார்த்து அல்லாஹ்க்கு பயந்து, நமதுரை தொத்தும் நோய்களுக்கு பயந்து தண்ணீரை திருடாது இருந்தால் மட்டும்மே நகரில் தண்ணீர் பஞ்சம் தீரும்.

வருத்ததுடன் ப.ச.அப்துல் காதர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
தொடரும் கனமழை!  (10/12/2011) [Views - 2871; Comments - 4]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved