Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:25:09 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7868
#KOTW7868
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஐனவரி 19, 2012
புறவழிச்சாலையில் தன்னிச்சையாக அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டுக் கல்லை அகற்ற நகர்மன்றத்தில் அரசியல் கட்சிகள் முறையீடு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3604 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் புறவழிச்சாலையிலும், உச்சினிமாகாளியம்மன் கோயில் தெரு திருப்பத்திலும் தன்னிச்சையாக அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டுக் கல்லை அகற்றுமாறு, நகர அரசியல் கட்சிகள் சார்பில் காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் 18.01.2012 அன்று (நேற்று) முறையிடப்பட்டுள்ளது.

நேற்று காலை 11.00 மணியளவில் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையாவை, நகராட்சி அலுவலகத்தில் சந்தித்த நகர அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், பொதுநல அமைப்புகளைச் சார்ந்தோரடங்கிய குழுவினர், காயல்பட்டினம் புறவழிச்சாலையிலும், உச்சினிமாகாளியம்மன் கோயில் தெரு திருப்பத்திலும், சட்ட விரோதமாக - “உச்சினி மாகாளியம்மன் கோயில் தெரு மயான சாலை” என்று குறிப்பிடப்பட்ட வழிகாட்டுக் கல் வைக்கப்பட்டுள்ளதாகவும், சமூக விரோதிகள் சிலரது தீய எண்ணத்தின் படி அது அமைக்கப்பட்டுள்ளதெனவும், அதனை உடனடியாக அகற்றிடுமாறும் முறையிட்டனர்.



கடந்த ஓராண்டுக்கு முன்பு இதேபோன்று அவ்விடத்தில் “மயான சாலைக்குச் செல்லும் வழி” என்று குறிப்பிட்டு ஒரு கல் வைக்கப்பட்டதாகவும், நகரின் பெரும்பாலான மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, திருச்செந்தூர் வட்டாட்சியர் தலையிட்டு, அரசுப்பதிவில் உள்ள விபரத்திற்கு மாற்றமாக யாரும், எதையும் நிறுவ அனுமதியில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்த பின்னர் அக்கல் அகற்றப்பட்டதெனவும் அவர்கள் நகராட்சி ஆணையரிடம் தெரிவித்தனர்.



நகரிலுள்ள பெரும்பான்மை சமூகத்தவர்களது நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் ஒரு சில சமூக விரோதிகளால் செய்யப்படும் இச்செய்கையை உடனடியாகத் தடுத்து நிறுத்தி, நகரில் சட்டம் ஒழுங்கு கெடாமல் பாதுகாக்குமாறு அக்குழுவினர் நகராட்சி ஆணையரிடம் கேட்டுக்கொண்டனர்.



அனைத்தையும் கேட்டறிந்த நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா, அது தொடர்பானவர்களுடன் பேசி, சுமுகமான முறையில் அவற்றை அகற்றிட ஆவன செய்வதாக தெரிவித்தார்.

பின்னர், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதாவை அவரது அறையில் அக்குழுவினர் சந்தித்து இதேபோன்று முறையிட்டனர்.



சட்டத்திற்குப் புறம்பாக செய்யப்படும் எந்த நடவடிக்கைகளையும் நகராட்சி அனுமதிக்காது என்று தெரிவித்த அவர், சுமுகமான முறையில் இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர அனைத்து முயற்சிகளும் விரைந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்ததையடுத்து, அக்குழுவினர் திரும்பிச் சென்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், அதன் நகரத் தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், நகர துணைச் செயலாளர்களான ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நகர தலைவர் ஜாஹிர் ஹுஸைன், தேசிய முற்போக்கு திராவிடர் கழக மாநில செயற்குழு உறுப்பினர் ஹாஜி எம்.எம்.அஹ்மத் ஹுஸைன் மற்றும் உமர் அனஸ் (கத்தர்), அஹ்மத் மீரான் (மக்கா), எம்.என்.எல்.ரஃபீக் (மக்கா), ஹாஜி எல்.எம்.இ.கைலானீ, தாவூத் மற்றும் பலர் அக்குழுவில் அடங்குவர்.



தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. சட்டத்திற்கு புறம்பான முறையில் அமைக்கப்பட்ட போர்டை அகற்ற சுமுகம் என்ன வேண்டிக்கிரக்கிறது?
posted by V D SADAK THAMBY (Abudhabi) [19 January 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16037

இந்த போர்டு சட்டதிர்க்குபுரம்பாக அமைக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும்.எனவே இதை அகற்றுவதில் சுமூகம் என்ன வேண்டிக்கிடக்கிறது? உடனடியாக அகற்ற வேண்டியதுதானே?

இதுமாதிரி விஷயங்களில் தமு மு க தலையிட்டதால்தான் ஒரு முடிவு கிடைக்கும்.சுமூகம் என்று அதிகாரிகள் சொல்லுவதெல்லாம் வேலையாகாது.

நகராட்சியின் சம்பந்தமானவர்களின் துணையுடன்தான் இது நடந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதுமாதிரி சம்பவங்களை முலையிலேயே கில்லி எறியவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:புறவழிச்சாலையில் தன்னிச்ச...
posted by OMER ANAS (KAYAL PATNAM.) [19 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16039

அஸ்ஸலாமு அழைக்கும்,

பெரியோர்களே!சுயநலம் பாரா மாற்று சமுதாய நண்பர்களே! இது நமது ஊரின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்க வேண்டும் என்றே, இதுபோன்ற திட்டமிட்ட வீண் விசமிகளால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்க்கான முடிவு?
==================
நாம் மட்டுமின்றி நமது நகராட்ச்சியும், இது போன்ற விசமத்தனமான செயல் புரிவோரை இனம் கண்டு யார் எவர் என்று பாராமல் சட்ட பிடிக்குள் கொண்டு வர வேண்டும்! அதற்க்கான முழு முயற்ச்சியை தலைவி அவர்கள்( நேற்றைய மக்கள் சந்திப்பில்)கூறியது போல் செயலாக்கி ஊர் ஒற்றுமைக்கு வழி காட்டிட வேண்டும்!செய்வார்களா?

நன்றி! நன்றி!
============
நேற்றைய தினத்தில் மக்கள் கண்ணியமாகவும் பொறுமையுடனும், நல்ல முடிவு வரும் என்ற எதிர் பார்ப்புடன் களைந்து சென்றார்கள். பாராட்டுக்கள் கலந்த நன்றி! நன்றி!

எச்சரிக்கை!
===========
இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் தங்களைத் தாமே மாற்றாவிடில் தகுந்த முறையில் பொது மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று எச்சரிக்கின்றோம்!

அன்புடன்,
உமர் அனஸ்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:புறவழிச்சாலையில் தன்னிச்ச...
posted by Mohmed Younus (Trivandram) [19 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 16040

இதற்கு எல்லாம் காரணம் நாம்தான். இன்று நேற்று இது நடப்பதல்ல. ஊரில் சொல்லப்பட்ட ஒரு சில நபர்களின் நிலத்தை ஆக்கிரமித்து, அங்கே முகவரி தெரியாத கோயில்களையும் நிர்மாணித்து, நம் கண் முன்னே மிகப்பெரிய அளவில் கொடை விழாவும் நடத்தி... இவ்வளவும் செய்த பிறகும்..... நிலத்தை கொடுத்த நபர்கள் மிகவும் அஜாக்கிரதையாக இன்னும் இருப்பதுதான் இதற்கு எல்லாம் காரணம்.

வழக்கு, கோர்ட், போலீஸ் நடவடிக்கை என்றால்.... எல்லா காயலர்களும் பயந்து விடுவார்கள்..... என்ற நம் மேல் உள்ள ஒரு குருட்டு நம்பிக்கையும் காரணம்...

இதை எல்லாம் தகர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. வாழ்த்துக்கள். இறைவன் துணை புரிவானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:புறவழிச்சாலையில் தன்னிச்ச...
posted by P.S.ABDUL KADER (JEDDAH) [19 January 2012]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16041

நகரில் அனைத்து சமுக மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் சமுக விரோதிகளை எந்த தயவு சட்சனை இன்றி அடையாளம் கண்டு ஒடுக்க நகராட்சி முன்வரவண்டும்.

புறவழிச்சாலையில் தன்னிச்சையாக அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டுக் கல்லை உடனே அகற்ற நகர மன்ற அன்னையர், தாமதமின்றி நகராச்சி பணியரலர்களை வைத்து நேரில் நின்று அகற்றுமாறு வேண்டுகிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. காவல்துறையும், நகராட்சி ஆணையரும் இந்த துவேச நோய் பரவலை தடுக்க நடுநிலை வகிக்க வேண்டும்..
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [19 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16044

பாரம்பரிய பெயர் கொண்ட பழைய பெயர்களை மாற்றி புதிய பெயர்களை மக்கள் மத்தியில் பரவ செய்து ஊரில் துவேசத்தை விதைத்து குழப்பம் விளைவிக்கும் விசமிகளை அடையாளம் கண்டு இவர்களை புறம்தள்ள வேண்டும்..!

இந்த புதிய கலாச்சாரம் நமதூரில் பரவாமல் தடுக்க அணைத்து அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், ஜமாத்துகள், மற்றும் நடுநிலை வாதிகள் அனைவர்களும் போராட வீதிக்கு வர வேண்டும்...!

காவல்துறையும், நகராட்சி ஆணையரும் இந்த துவேச நோய் பரவலை தடுக்க நடுநிலை வகிக்க வேண்டும்..

நகராட்சியில் அரசு பதிவேட்டில் அந்த (பிரச்சனைக்குரிய கல்வெட்டு பலகை) சாலைக்கு என்ன பெயர் பதிவாகி இருக்கின்றதோ அதன் பெயரை எழுதி மக்கள் பயன் பெரும் வகையில் நகராட்சி இதை முன்னின்று செய்ய வேண்டும்..!

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.
உறுப்பினர் - வி.சி.கட்சி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:புறவழிச்சாலையில் தன்னிச்ச...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [19 January 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16046

நிம்மதியாக இருக்கவே விடமாட்டார்கள் போல..

அனைத்து மக்களும் ஒற்றுமையுடன், சகோதரத்துடன் இருப்பது, ஒரு சில விஷமிகளுக்கு என்றுமே பிடிக்காது. அது, இது என்று அசட்டையாக இருக்காமல், சரியான "ஆன்டி-வைரஸ்" கொண்டு முழுமையாக அழிக்கனும்.

இந்த வைரஸ்கள் தலை தூக்காமல் இருக்க பாடுபடும் அனைவர்களுக்கும் நன்றிகள்.

விடுமுறையில் ஊர் சென்றாலும், ஊர் பிரச்சனைக்காக கூடி இருக்கும் நூர்தீன் காக்கா, வங்காளம் உமர் காக்கா, நண்பன் எம்.என்.எல்.ரஃபீக் மற்றும் பலரையும் கண்டும் மிக்க மகிழ்ச்சி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:புறவழிச்சாலையில் தன்னிச்ச...
posted by M.N Refai (Dar Es Salaam) [19 January 2012]
IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 16048

விசமிகளின் சூல்சிகளிருந்து அல்லாஹ் நம்மையும் நம் ஊரையும் காபாத்துவனாக ஆமீன்.

நகராட்சி தலைவிக்கு ஒரு வேண்டுகோள்

நகராட்சி கூட்டி தீர்மானம் போடுங்கள் இனி இது போன்று நிறுவும் பலகை களுக்கு நகராட்சி ஒப்புதல் எண்கள் இல்லாமல் யாரும் நிறுவ கூடாது மீறி நிறுவினால் உடனடியாக அகற்ற படும் என்று எச்சரிக்கை விடுங்கள்.

இந்த சட்டம் ஊரில் உள்ள அணைத்து சமுதயாமுகும் பொருந்தும்.

ஏற்கனவே நிறுவ பட்ட பலகைகளுக்கு ஒப்புதல் வாங்கி பலகை இல் குறிப்பிட வேண்டும் என்று ஆணை இடுங்கள்.

இதன் மூலம் இந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

M.N Refai
Dar Es Salaam , Tanzania.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இன்னும் நிறைய சதி வேலைகளை செய்ய ஒரு கூட்டம் (காவி) காத்துக்கொண்டு இருக்கிறது,
posted by SHAMS Kayal PFI (Kayalpattinam) [20 January 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 16050

அன்பான காயல் சகோதரர்களே, ஆம் இதுபோல் இன்னும் நிறைய சதி வேலைகளை செய்ய ஒரு கூட்டம் (காவி) காத்துக்கொண்டு இருக்கிறது, நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து இதுபோன்ற விசமசெயல்கள் நடந்திராவண்ணம் பாதுகாக்க வேண்டும். நம் மக்களிடையே இன்னும் இந்த காவி பயங்கரவாதத்தின் சூழ்ச்சிகள் குறித்த விழிப்புணர்வும் சமுதாயா ஒற்றுமையும் இன்னு நிறைய வளர மற்றும் வளர்க்கப்பட வேண்டும்,,!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:புறவழிச்சாலையில் தன்னிச்ச...
posted by M.S.ABDULAZEEZ ( H K) [20 January 2012]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 16055

முதல்ல அத புடிங்கி தூர எரிங்க சார்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. உருப்படியாக ஏதாச்சும் செய்யுங்களேன்
posted by Aarif O.L.M (Lanka) [20 January 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 16072

முதலில் எல்லா நடு ரோடுகளிலும் குமிந்து கிடக்கும் மண்ணை அகற்ற பஞ்சாயத் செயல்படுத்தி விட்டு பிறகு எங்கோ ஒரு ஓரத்தில கிடக்கிற ( நிற்கிற ) பெயர் பலகையை அக்ற்றுங்கலேன்.

ரொம்ப முக்கியமான வேலை செய்து விட்டார்கள் என்று எல்லோரும் DutyFree நபர்களை பாராட்டுகிறோம்.

உருப்படியா எதயாவது செய்து விட்டு போடோக்கு போஸ் கொடுங்கள் ,,,,,, பாராட்டுகிறோம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved