Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:49:27 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7871
#KOTW7871
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 20, 2012
09ஆவது வார்டு உறுப்பினர் ஹைரிய்யாவின் தொடர்முயற்சி காரணமாக, வெகுநாட்களாக சுத்தம் செய்யப்படாதிருந்த நீர்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3864 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (16) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத்தின் ஒன்பதாவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யாவின் தொடர் முயற்சி காரணமாக, காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்க வளாகத்திற்கருகில் அமைக்கப்பட்டுள்ள - நீண்ட காலமாக சுத்தம் செய்யப்படாதிருந்த மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி அண்மையில் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக, நீர்த்தேக்கத் தொட்டிகளை அடிக்கடி - குறைந்தபட்சம் மாதமொருமுறை சுத்தம் செய்ய வேண்டும் என அதிகாரிகளால் கூறப்பட்டது. ஆனால், காயல்பட்டினத்திலுள்ள நீர்த்தேக்கத் தொட்டிகள் அனைத்தும் பல வருடங்களாக சுத்தம் செய்யப்படாமலேயே அவற்றின் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

நாள்பட்ட சகதிகள் கடும் துர்வாடையை உருவாக்குவதோடு, கிருமிகளும் உருவாகிப் பெருகி, நோய்கள் பல ஏற்பட அவை காரணமாக அமைந்துவிடுகின்றன.

இந்நிலையில், காயல்பட்டினம் 09ஆவது வார்டுக்குட்பட்ட ரெட் ஸ்டார் சங்க வளாகத்திற்கருகில் அமைக்கப்பட்டுள்ள மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் இதுபோன்று பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமலேயே இருந்து வந்துள்ளது.

புதிய நகர்மன்றம் பொறுப்பேற்ற பின்னர், அந்த வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஹைரிய்யா இது விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி, நகர்மன்றத்தில் நடைபெற்று முடிந்துள்ள இரண்டு மாதாந்திர கூட்டங்களிலும் இதுகுறித்த தனது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அத்துடன் நின்றுவிடாமல், நகர்மன்றத் தலைவர், ஆணையர் மற்றும் குடிநீர் வினியோகம் தொடர்பான அலுவலர்களை தொடர்ந்து அவர் வற்புறுத்தி வந்ததன் காரணமாக, அண்மையில் அத்தொட்டி நகராட்சியால் சுத்தம் செய்யப்பட்டது.





தொட்டியுடன், அதனருகிலுள்ள குடிநீர் திறப்பு வால்வு தொட்டியும் சுத்தம் செய்யப்பட்டது.



சுத்தப்படுத்தும்போது, தொட்டிக்குள் அதிகமான உடைப்புகள் இருந்ததைக் காண முடிந்ததாகவும், துர்வாடை வீசியதை உணர முடிந்ததாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.







சுத்தப்படுத்தும் பணிகளை நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஹைரிய்யா முழுமையாக மேற்பார்வையிட்டார். அவருடன் அவரது கணவர் மாஸ்டர் பஷீருல்லாஹ், அப்பகுதி பொதுமக்களான நவ்ஃபல் ரிஜ்வீ, முஹம்மத் ஃபைஸ், சல்மான் ஆகியோர் பணிகளைப் பார்வையிட்டனர்.



படங்கள்:
முஹம்மத் ஃபைஸ்.
அப்பாபள்ளித் தெரு, காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:09ஆவது வார்டு உறுப்பினர் ...
posted by omar abdul latheef (riyadh) [20 January 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16052

well done , continue ur good service . jazakallah.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:09ஆவது வார்டு உறுப்பினர் ...
posted by Mohamed Salih (Bangalore) [20 January 2012]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 16054

மாஷா அல்லாஹ். நல்ல முயற்சி .. நல்ல ஆரம்பம் ..

இனி மற்ற வார்டு மெம்பெர் தங்கள் வார்டுக்கு உட்பட்ட குடு நீர் தொட்டியை சுத்தம் செய்ய ஆணை இடுங்கள் ..

09ஆவது வார்டு உறுப்பினர் ஹைரிய்யாவின் தொடர்முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ..

என்றும் அன்புடன்,
பெங்களூர் ரில் இருந்து,
முஹம்மத் ஷாலிஹ் கே.கே.எஸ்,
துணை செயலாளர்,
காயல் நல மன்றம் - பெங்களூர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:09ஆவது வார்டு உறுப்பினர் ...
posted by PS ABDUL KADER (JEDDAH) [20 January 2012]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16057

வரவேற்கப்பட வேண்டியவைதான், 9 வது வார்டு உறுப்பினரை பாராட்டி வாழ்த்துகிறேன்.

இதேநேரத்தில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்துவிட்டோம் என்பதைவிட தொட்டி உள்பக்கம் சுவர் (கம்பி துருல்பிடிதவரு வெடித்து இருப்பதை) கட்டட பணியாளரை வைத்து செப்பமிட நகராசிக்கு உத்தரவு புதுப்பிக்கவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:09ஆவது வார்டு உறுப்பினர் ...
posted by M.A.SEYED ALI (ABUDAHABI) [20 January 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16058

சகோதரி ஹைரியாவுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் நன்றியும்.தன்னை தேர்ந்தெடுத்த மக்களை முடிந்தவரை திருப்தி படுத்த முனைப்புக்காட்டும் இவர் மற்ற வார்டுகளின் தற்போதைய கவுன்சிலர்களுக்கும் அடுத்த உள்ளாட்சி தேர்தலில் நிற்க விரும்பும் வேட்பாளர்களுக்கும் ஒரு முன்னோடியாவார்.

இதுபோல் சகோதரி ஆபிதாவும் தன்னை தலைமைக்கு தேர்ந்தெடுத்த மக்களை ஏமாற்றவில்லை.அவருக்கும் என் பாராட்டுகளும் நன்றியும்.

இறைவன் இவர்களுக்கு மென் மேலும் ஊக்கத்தையும் தைய்ரியத்தையும் கொடுப்பானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. விட்டாமின்
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [20 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 16061

9 - வது வார்டு உறுப்பினரின் முயற்சி பாராட்டுதலுக்குரியது. இதை போல மக்களுக்கு பிரயோசனமான விஷயங்களில் எல்லா உறுப்பினர்களும் இறங்கி செயல்படுங்கள்.

பொதையல் எடுக்க போய் பூதம் கிளம்பிய கதையா தொட்டிய கழுவ போய் உள்ளே உள்ள வண்டவாளம் எல்லாம் தெரியுதே! அதாங்க இரும்பு கம்பி விஷயம் தான்!! இதை இப்படியே விட்டுவிடுவீர்களா? விட்டு விட்டீங்கன்னா மக்களுக்கு இரும்பு சத்தும் சேர்ந்து கிடைக்கும்ல.

இனி மேல் 9 - வது வார்டு மக்களுக்கு தண்ணீருடன் சேர்த்து விட்டாமின் "E" யும்லோ கிடைக்கும்.

ஹைதுரூஸ் ஆதில், கோழிக்கோடு-கேரளா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. ஹைரிய்யா லாத்தாவா கொக்கா ?!
posted by K.V.A.T.HABIB MOHAMED (QATAR) [20 January 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 16063

ஹைரிய்யா லாத்தா ! (நான் தம்பியா காக்காவா ன்னு அப்புறம் நம்ம சண்டைய வச்சுக்குவோம் ) உங்க முயற்சி பாராட்ட வேண்டிய ஒன்று ! உங்களுக்கு பின்னாடி உங்க துணைவர் எப்படி உற்சாக படுத்துறாங்க என்பதை கண்கூடாக கண்டவன் . உங்க தெருவில மரங்களை நடுவதற்கு இருட்டின பிறகு நாங்கள் வந்த சமயத்திலும் , உற்சாகமாக உங்கள் கணவரும் நீங்களும் எங்களை வரவேற்று அழகான தேநீர் தந்து , நடு தெருவில் இறங்கி வந்து மரங்களை நடுவதற்கு துணையாக நின்ற காட்சி , தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு ஒரு கவுன்சிலர் எப்படி செயல் பட வேண்டும் என்பதை தெள்ளதெளிவாக வெளிப்படுத்தியது வரவேற்கத்தக்கது . அந்த வரிசையிலே இப்போது தாங்கள் குடிநீர் தேக்கத்தொட்டியை துப்புரவு பண்ண முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துக்கள்... உங்களுக்கும் உங்களோடு துணை நின்ற அனைத்து நகராட்சி உறுப்பினர்கள் , தலைவர் , ஆணையர் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் உண்டாகட்டும் .

ஒன்று தெரியுமா? எங்க பகுதி குடிநீர் தொட்டி சுத்தம் பண்ண வேண்டிய அவசியமே இல்லையே.... அது சுகாதார கேடு ஆவது கிடையாது ஒரு போதும்! ஏன் தெரியுமா? அங்க தான் தண்ணீர் வருவதே இல்லையே....ஹஹஹஹஹாஹ் ...(மகுதூம் பள்ளி வளாகத்தில் அமைந்த மேல்நிலை தொட்டி தான் அது . இதுவரை அங்கு தண்ணீர் தேக்கி வைக்க எந்த முயற்சியும் நடந்ததா தெரில) ஒரு வேலை இந்த செய்தி வாறபோ அங்கு தண்ணீர் வந்திருந்தால் ஒரு பிக் ஸல் யூட் அனைவருக்கும் !

அன்புடன்,
K.V.A.T. ஹபீப்
கத்தார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. வஞ்சித்தவருக்கு வாழ்விலேயே கிடைக்கும்
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) [20 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16074

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

சகோதரி ஹைரிய்யா அவர்களின் விடா முயற்சியால் இந்த நீர்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்!.

இதனால் அந்த பகுதி மக்கள் சந்தோசம் அடைகிறார்களோ இல்லையோ! நகராட்சி அதிகாரிகள் சிறிய அளவில் சந்தோசம் அடைவார்கள் அது ஏன் என்பது அந்த அதிகாரிகளுக்கு நன்றாக தெரியும்.
-----------------------------------------------
சுகாதார அதிகாரியின் பொறுப்பு :

மாதத்திற்கொரு முறை சுத்தம் செய்ய வேண்டியதை மாமாங்கத்திற்கு ஒருமுறைகூட சுத்தம் செய்யவில்லை என்றால் அந்த குடிநீர் எப்படி சுகாதாரமாக இருக்க முடியும்?.

சுகாதாரமில்லாத குடிநீரை அருந்தினால் மக்களுக்கு பலவிதமான நோய்களும் வரத்தானே செய்யும்!!?.

நகராட்சியில் சுகாதார அதிகாரி இருக்கிறாரா ? அவர் அவருடைய கடமையை முறையாக செய்கிறாரா ?? இன்றைய தேதி வரை யாருக்கும் அது தெரியாது! - ஏன் அவருக்கே கூட இதெல்லாம் அவருடைய பொறுப்பு என்பது தெரியாது.
------------------------------------------
நோய் வராமல் இருக்காது :

குடிநீர்த் தொட்டியின் உள்புறத்தை பாருங்கள் எவ்வளவு அழுக்கு மற்றும் பாசி படிந்திருக்கிறது என்று ?

தண்ணீர் குடிக்கும்போது ஒரு சிறய தூசி, தும்பு இருந்தால்கூட வீட்டில் உள்ளவர்களை எவ்வளவு வசை பாடுகிறோம் ? அந்த தண்ணீரை குடிக்காமல் கீழே ஊற்றுகிறோம்.

ஆனால் மேல்நிலைத் தொட்டியில் இருந்து வரும் தண்ணீரை அதன் தரத்தை பற்றி யாராவது சிந்தித்தது உண்டா ?.

இந்த ஒரு தொட்டியின் அவல நிலையை பார்த்தாகிவிட்டது - மற்ற எல்லாத் தொட்டிகளும் இதை விட மோசமாகத்தான் இருக்கும் என்பதை மக்கள் உணர்ந்து அவைகளை சுத்தம் செய்ய அதிகாரிகளை வற்புறுத்துங்கள் - அவரவர் பகுதியில் உள்ள கவுன்சிலர்களை கேட்டு தொந்தரவு செய்யுங்கள்.

மேல்நிலை தொட்டியிலிருந்து வரும் நீரை எப்போதுமே கொதிக்க வைத்து ஆறிய பின்தான் குடிக்க வேண்டும் - ஆனால் இவ்வளவு மோசமான நிலையில் தொட்டி இருக்கும்போது எவ்வளவுதான் கொதிக்க வைத்து குடித்தாலும் நோய் வராமல் இருக்காது என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.
--------------------------------------------
தொட்டியின் " நிலை " பரிதாபத்திற்குரியது :

அந்த மேல் நிலை தொட்டியின் " நிலைமை " பரிதாபத்திற்குரியதாக " இருக்கிறது.

பாருங்கள் தொட்டியின் " உள் சுவர் " இடிந்து விழுந்து கிடப்பதை , கான்கிரிட் கம்பிகள் எல்லாம் வெளியே தெரிகிறது.

தொட்டியின் ஆயுளும் கேள்விக்குரியதே! அதை பழுது பார்க்காதிருந்தால் கம்பிகள் துருப் பிடித்து தொட்டியும் உடையும் - அந்த துரு குடிநீரில் கலக்கும் காரணமாக மக்களுக்கு வியாதியும் வரும்.

எனவே அனைத்து தொட்டிகளையும் உடனே சுத்தம் செய்ய , பழுதுபார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
--------------------------------------------
நகராட்சி நிர்வாகம் :

நகராட்சி நிர்வாகிகளே !

இந்த ஒரு தொட்டியின் நிலையை அறிந்த பின்னும் மற்ற எல்லாத் தொட்டிகளையும் போர்க்கால அடிப்படையில் உடனே சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யவில்லை என்றால் உங்களுடைய மனதை நீங்களே எடைபோட்டுக் கொள்ளுங்கள் - அது நகராட்சி ஆணையரோ, அலுவலர்களோ - நகராட்சி தலைவரோ , உறுப்பினர்களோ யாராக இருந்தாலும் சரியே!.

இறைவனுக்கு பயப்படுகிறீர்களோ இல்லையோ ? இறைவனின் தண்டனை வஞ்சித்தவருக்கு வாழ்விலேயே கிடைக்கும் என்பதை நினைவில் நிறுத்துங்கள். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:09ஆவது வார்டு உறுப்பினர் ...
posted by Salai. Mohamed Mohideen (USA) [20 January 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 16075

தன் தொகுதி (Ward) மக்களின் நலன் கருதி, தனது 'கடமை'யை செவ்வென நிறைவேற்றிய ஹைரிய்யா லாத்தாவுக்கு வாழ்த்துக்கள். நானும் நமது நகர்மன்ற உறுப்பினர்களில் யாரெல்லாம் 'உண்மையிலேயே' மக்களுக்காக (கரை படாத கைகளுக்கு சொந்தக்கார்களாக) உழைக்கின்றார்கள் என்று, ஊரில் உள்ள என்னுடைய ஒரு சில நண்பர்களிடம் அவ்வப்பொழுது கேட்டுக்கொள்வேன். அப்போது அவர்கள் ஒரு சில உறுப்பினர்களின் பெயர்களை சொன்னார்கள். அதில் உங்கள் பெயரும் இருந்தது. அதற்க்கு சான்றாக இந்த செய்தியும் மற்றும் என் மச்சான் KVAT ஹபீப் (பதிவு என் #6 ) அவர்களின் பதிவும் அமைந்துள்ளது.

உங்களை போன்ற நல்லவர்கள் மூலம் தான், தொட்டியை மற்றும் அல்ல... கறைபடிந்த நம் நகர்மன்றத்தையும் நம் தலைவி மற்றும் ஊர் நலன் நாடும் 'நல்லோர்கள்' துணை கொண்டு சுத்தம் செய்ய முடியும். தொடரட்டும் உங்கள் பணி!!

நகர்மன்ற உறுப்பினர்களே!! கொஞ்சம் உசாராக இருங்கள்.

உங்களுடைய சிறு உறக்கத்தில் ஐந்து வருடமும் ஓடி விட போகிறது. அது முடிவதற்க்குள், உங்கள் தொகுதி மக்களுக்கு எதாவது நீங்கள் செய்ய வேண்டிய 'கடமையாவது' செய்ய முயலுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்!!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:09ஆவது வார்டு உறுப்பினர் ...
posted by T,M,RAHMATHULLAH (KAYALPATNAM 04639 280852) [21 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16081

இந்த ஏற்பாடுகளுக்கெல்லாம் அல்லாஹ் விடமிருந்து பெரிய பெரிய தவாபுகள் எல்லாம் ஏற்ப்பாட்டாளர்களுக்கும் . இவைகளை தொடர்ந்து செய்தால் எல்லோருமே ஒலியாகி விடலாமே. ஆனால் எல்லாத்துக்கும் இஃகுலாஸ் வேண்டும். இது வெல்லாம் நகராட்சியர் செய்யாமல் ஊரில் ஒரு தரம் ஒரு இடத்தில் தண்ணீ தொட்டியில் நாய் விழுந்து செத்து. ஊரெல்லாம் விஷ காய்ச்சல். ....????இனி எழுத வேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:09ஆவது வார்டு உறுப்பினர் ...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [21 January 2012]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16089

வாழ்த்துக்கள் சகோதரி ஹைரியா அவர்களே! தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

அடிக்க அடிக்க தான் அம்மியும் நகரும். வாயுள்ள பிள்ளை பிழைக்கும், என்ற பழமொழியின் அடிப்படையில் சகோதரி ஹைரியா அவர்கள் சாதித்து உள்ளார்கள்.

இது போல் தேர்ந்தெடுக்கப்பட்ட அணைத்து உறுப்பினர்களும் அவரவர்கள் பகுதிகுட் பட்ட நீர் தொட்டியில் அதிக அக்கறை எடுத்து விரைவில் சுத்தம் செய்யவும் , செப்பனிடவும் ஏற்பாடு செய்ய வேண்டும். ஏனெனில் இதை விட பல பழைய தொட்டிகள் சுத்தம் செய்யபடாமல் மேல் மூடியும் பாதுகாப்பற்று இருப்பதாக அறிகிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Well done Mrs.Hairiyya Basheerullah.
posted by Salai.S.L.Khaja Muhyideen (Dubai) [21 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16091

Assalamu Alaikum.

Congratulation for your Effort and enthusiasm Mrs.Hairiya Basheerullah.

Along with this as the reinforcement is exposed ,kindly initiate our panchayath to do internal plaster completely and fill the water in the tank and do the water test immediatly in order to find the water is suitable for drinking before supplying to our town.

This same effort to be taken by other councilors also.

Thanks&Regards,
Salai.S.L.Khaja Muhyideen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:09ஆவது வார்டு உறுப்பினர் ...
posted by mackie noohuthambi (kayalpatnam) [21 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 16102

ஹைரியா சகோதரிக்கு பாராட்டுக்கள். ஏற்கெனவே முத்து ஹாஜரா அவர்கள் குப்பைகளை அகற்றி, சரி செய்துகொண்டிருக்கிறார்கள். எல்லா உறுப்பினர்களுமே பெண் உறுப்பினர்களாக இருந்திருந்தால் நகரமன்ற தலைவியும் சேர்ந்து நமது முதல்வரின் அதிரடி நடவடிக்கைகள்போல் நமதூரையும் மாதிரி கிராமமாக மாற்றிக் காட்டுவார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நான் ஐவேளை தொழுக செல்லும் மொகுதூம் பள்ளிக்கு வடக்கே தண்ணீர் தொட்டி கட்டி பலவருடங்கலாகின்றன, திறப்பு விழாவுக்கு இன்னும் நேரம் வரவில்லை. இந்த வார்டில் வேட்பாளர்களாக நின்றவர்கள், நான் தேர்ந்தேடுக்கப்பட்டால் இதனை உடனடியாக நிறைவேற்ற பாடுபடுவேன் என்றார்கள். தேர்ந்தேடுக்கப் பட்டவரையும் காணோம், ஒட்டுபோட்டவர்களும் இதைப்பற்றி பேசக்காணோம்.

நீரோட்டம் இல்லாமல் நிலம் விளைவதில்லை,
போராட்டம் இல்லாமல் நலம் விளைவதில்லை.

இந்த சகோதரிகள் செய்வதை பார்த்தாவது இந்த வார்டு உறுப்பினர் நடவடிக்கையில் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இதை பேசுமாறு அந்த வார்டு உறுப்பினரிடம் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:09ஆவது வார்டு உறுப்பினர் ...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [21 January 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16103

சகோதரி ஹைரிய்யா அவர்கள் கண்டிப்பாக பாராட்டுக்குரியவர்கள்தான். கூடவே அவர்களுக்கு உதவியாக இருந்த அனைவர்களுக்கும் நன்றிகள்.

வழமையாக மாதம் மாதம் நடைபெற வேண்டிய ஒரு கிளீனிங் நிகழ்வை, நாம் இப்படி அதிசயப்பட்டு பாராட்டுகிறோம் என்றால் அதன் நிலைமையை என்ன என்று சொல்லுவது.

போட்டோவைப் பார்த்தால் கன்றாவிதான். இந்த 9 ஆம் வார்டு தொட்டி அவ்வளவு பழையது அல்ல. இதன் நிலைமையே இப்படி இரும்புப் பல்லை காட்டிக்கொண்டு இளிக்கின்றது என்றால், இதன் அப்பாவான பழைய தொட்டிகளின் நிலைமை என்னவோ!!!

சென்ற நகர்மன்றத்தை, எங்களின் தம்மாம் காயல் நற்பணி மன்றம் அனுகி, இப்படி குடிநீர் தொட்டிகள் எல்லாம் துப்புரவு செய்யாமல் இருக்கின்றனவே, எங்களுக்கு அனுமதி தாருங்கள், எங்கள் மன்றத்தின் செலவில் அனைத்தையும் கிளீன் பண்ணி தருகிறோம் என்று கேட்டதும், அதற்க்கு அனுமதி மறுக்கப்பட்டது, என்ன காரணமோ புரியவில்லை.

எங்கள் குத்துக்கல் தெருவிலும், நெடு நெடு என்று ஒரு தொட்டி உள்ளது. அது இன்னும் பயன் பாட்டிற்க்கு வராததின் மர்மம் என்னவோ.

அதிலும் ஒரு நாள் தண்ணீரை நிறைத்தார்கள். சிறிது நேரத்திலே "பேடு போடாத குழந்தை ஒன்னுக்கு அடித்து, ஜட்டி பூராவும் கசிந்த மாதிரி" தொட்டி பூராவும் கசிவு. பார்ப்போம் அதன் வண்டவாளத்தை.

எப்பா.. எங்க கவுன்சிலர் தம்பி அஜ்வாஜு.. உன்னுடைய முதல் வாக்குறுதியே இந்த தொட்டியை திறப்பதுதான் என்றாயே.. எந்த நிலைமையில் உள்ளது... ஸ்கூல் திறக்குமா.. இன்ஷாஹ் அல்லாஹ்.. உன்னால் முடியும்.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:09ஆவது வார்டு உறுப்பினர் ...
posted by S.A.HABEEB MOHAMED NIZAR (Jeddah- K.S.A.) [22 January 2012]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16107

ஐயோ.. ஐயோ... எல்லா ஊருலயும்.... தண்ணீர் தொட்டி... இப்படித்தான்... இருக்குமோ....? பார்க்க சகிக்கவில்லை...

இந்த கடல்பாசி... கலந்த நீரையா நாம்... இந்தனை காலமாக... குடித்தோம்...?பார்க்கவே.... பயமாகவும்... அருவெறுப்பாக... இருக்கிறது....

தயவு...செய்து... நன்றாக...நீரை... கொதிக்கவைத்து.. பருகவும்.... அல்லது, பில்ட்டர், மினரல்வாட்டர்... உபயோகிக்கவும்..... இதற்காக... நம் கூடுதலாக... செலவு... செய்யவேண்டி வரும்.

எந்த ஒரு அரசையோ, அரசியல்வாதியையும்....நம்பி புரோஜனம்.. இல்லை. நம்மை நாம் தான் பாதுகாத்து கொள்ள வேண்டும். அல்லாஹு போதுமாணவன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:09ஆவது வார்டு உறுப்பினர் ...
posted by Husain Noorudeen (Abu Dhabi) [24 April 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18459

ஆமா, அப்புறம் இந்த செய்தி என்னாச்சு? ஒரு தொட்டிய கழுவுனதோட காரியம் முடிஞ்சு போச்சா?

வேற என்ன, நமக்கு தான் மெல்லுறதுக்கு SK Salih காக்கா புதுசு புதுசா கவர்ச்சியான தலைப்புல செய்திகள் போடுறாங்களே. அத படிச்சமா, நாலு கம்மென்ட் அடிச்சமா, அவ்வளவுதான், போயிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:09ஆவது வார்டு உறுப்பினர் ...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [24 April 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18467

அஸ்ஸலாமு அலைக்கும் நமது அன்பு சகோதரி ( 9ஆவது வார்டு ) உறுப்பினர் .ஹைரிய்யா அவர்களின் தொடர்முயற்சி காரணமாக, ரொம்ப நாட்களாக சுத்தம் செய்யப்படாதிருந்த நீர்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது என்பதை நாம் அறியும் போது உண்மையில் அன்பு சகோதரி ஹைரிய்யா அவர்களை பாராட்ட வேணும் . நம் மற்ற உறுப்பினர்களும் இவரை போன்று துரிதமாக செயல் பட்டு மற்ற எல்லா நீர்த்தேக்கத் தொட்டி களையும் சுத்தம் செய்யப்பட்டால் ரொம்ப சந்தோசம். துர்வாடை வீசியதை படித்ததும் மனதுக்கு சங்கடமாகி விட்டது .இவ்வளவு மட்டமாகவா நம் ஊர் நகராச்சி செயல் பட்டு வந்து உள்ளது. இப்பவாது நம் நகராட்சியால் மற்ற நீர்த்தேக்கத் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டாள்.மகிழ்சி தான் .

நீர்த்தேக்கத் தொட்டி சுத்தப்படுத்தும் பணிகளை நம் நகர்மன்ற உறுப்பினர் மேடம் A..ஹைரிய்யா அவர்கள் முழுமையாக மேற்பார்வையிட்டார்.என்பதை படித்ததும் இன்னும் இவர் மேல் நமக்கு முழு நம்பிக்கை வந்து விட்டது. இவர் மேலும் 9.வது வார்டுக்கு நிறையா நல்லது செய்வார் என்கிற நம்பிக்கை வந்து விட்டது . தொகுதி மக்கள் கொடுத்து வைத்தவர்கள். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved