Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:10:30 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7870
#KOTW7870
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 20, 2012
வீணாக்கப்படும் குடிநீர்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3111 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் மூன்று நாட்களுக்கொருமுறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்பட்டு வரும் நிலையில், காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சில இடங்களில் குடிநீர் வீணாக்கப்பட்டு வருவது வேதனையளிப்பதாக உள்ளது.

காயல்பட்டினம் சேதுராஜா தெரு - கோமான் புதூர் சந்திப்பில் உள்ள ஒரு கிணற்றில் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதும், கூலக்கடை பஜார் பகுதியில் ஜீ-ஸ்நாக்ஸ் கடை எதிரிலுள்ள சாலையில் பல காலமாக வீணாக வெளியேறி வழிந்தோடி வரும் குடிநீர் ஆகியன இதற்கான சான்றுகள்.

அகநகரின் சில பகுதிகளிலும், புறநகரின் பல பகுதிகளிலும் குடிநீர் வினியோக பொதுக்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விடங்களில் செவ்வக வடிவில், படிகள் அமைக்கப்பட்ட நிலையில் தொட்டி கட்டப்பட்டு, அதனடியில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கும். குடிநீர் வினியோகிக்கப்படும் நேரங்களில் இக்குழாயில் வரும் நீரை, சுற்றுப்புறப் பகுதி மக்கள் தம் தேவைக்கு எடுத்துச் செல்வர்.

ஆனால், காயலப்ட்டினம் சேதுராஜா தெரு மேல் முனையில், கோமான் புதூர் செல்லும் சாலையையொட்டி அமைந்துள்ள கிணறு இந்த அளவுகோலிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது.



யாரும் இறங்கி குடிநீர் எடுக்குமளவுக்கு இது தொட்டியாகவும் கட்டப்படவில்லை. படிகளுமில்லை. வெறுமனே கிணறு மட்டும் உள்ளது. அதில் ஒரு குடிநீர் வினியோகக் குழாய் கிணற்று உறையுடன் ஒட்டினாற்போல் - வெளியில் தெரியாத நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. (பின்வரும் படத்தில் அது வட்டமிடப்பட்டுள்ளது.)



தண்ணீர் வரும் காலங்களில், இப்பகுதியைச் சார்ந்த மக்கள் இக்குடிநீர் குழாயிலிருந்து பீறிட்டு வரும் குடிநீரை வாளி மூலம் இறைத்து எடுத்துச் செல்கின்றனர். அவர்கள் தேவைக்குப் போக எஞ்சிய நீர் நீண்ட நேரம் கிணற்றுக்குள்ளேயே வீணாகச் செல்கிறது.

இந்த காட்சி, இக்குடிநீர் இணைப்பு நகராட்சியால் முறைப்படி வழங்கப்பட்டதுதானா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இது ஒருபுறமிருக்க, காயல்பட்டினம் கூலக்கடை பஜார் சாலையில், ஜீ-ஸ்நாக்ஸ் கடை எதிலிருள்ள பகுதியில் தண்ணீர் உடைப்பெடுத்து வழிந்தோடுகிறது.





“இந்நிலை இன்று நேற்றல்ல! பல மாதங்களாக இதே நிலையில்தான் உள்ளது! எங்கள் வீடுகளுக்கு முறையாக தண்ணீர் கிடைக்காத நிலையில், இங்கு தண்ணீர் வழிந்தோடுவதைக் காணக்காண எங்கள் வயிறு எரிகிறது!” என்றனர் அப்பகுதியை அடிக்கடி பயன்படுத்தும் சிலர்.

ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்திலிருந்து தினமும் காயல்பட்டினத்திற்கு வினியோகிக்கப்படும் தண்ணீரைக் கொண்டு தினமும் நகரில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்க இயலும் என்று அதிகாரிகளால் கூறப்பட்டு வரும் நிலையில், மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. பெறப்படும் நீர் முழுமையாக யாருக்கும் கிடைக்காத நிலையில் அது எங்கே செல்கிறது என்றும் அண்மையில் “காயல்பட்டின குடிநீர் வினியோகம்: ஒரு புரியாத புதிர்!” என்ற தலைப்பில், காயல்பட்டணம்.காம்-இல் எழுப்பப்பட்ட வினா.

அதற்கு விடையளிக்கும் வகையில் அமைந்துள்ள சிற்சிறு சான்றுகளே இவையாகும்.

தகவல் & படங்கள்:
உமர் அனஸ் (கத்தர்).


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இருக்கிறவன் ஒழுங்கா இருந்தால்தான்....... சிரைக்கிறவன் ஒழுங்கா சிரைப்பான்.
posted by s.s.md meerasahib (zubair) (riyadh) [20 January 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16053

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு என் சொந்தம்களே...... நமதூருக்கு ஆத்தூரில் இருந்து தண்ணீர் பாம்பிங் பண்ணுவதில் எந்த முறைகேடும் இருக்க வழி இல்லை. ஆனால் நமதூருக்கு நுழைவாயிலில் மீட்டர் வைத்து அதே.... அளவை பெறப்படனும்.

எல்லா வார்டு மெம்பரும் தங்களின் வார்டுக்குட்பெட்ட இடம்களில் குடி தண்ணீர் வீணாக பூமிக்கு செல்வதை உடனே..... தடுத்து நிறுத்தி தினமும் வீடுகளுக்கு கிடைக்க கவனம் செலுத்தவும்.

மனிதன் உயிர் வாழ காற்றும், தண்ணீரும் இன்றியமையாதவை. மூன்று நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் விடுகிறார்கள் என்று நகர்மன்றத்தை குறை சொல்லும் நாம்...... நம் வீடுகளில், தெருக்களில் மாதக்கணக்கில் தண்ணீர் வீணாவதை கவனத்தில் எடுத்தீர்களா....?

இன்றே... ஒரு ஆய்வில் இறங்கிப் பாருங்கள். இரவு தூங்கும் போது நமது வீட்டில் நல்லியில் ஒரு சொட்டு தண்ணீர் விழும்படி வைத்து கீழே.... ஒரு வாளியை வைத்து காலையில் எழுந்ததும் பாருங்கள் வாளி நிறைந்து வழிந்து ஓடுவதை காணலாம். வாளி வைக்கவில்லை என்றால் எவ்வளவு வேஷ்ட்டாகி இருக்கும். ஒரு சொட்டுக்கே இப்படி என்றால் 24 மணி நேரமும் முக்கால் இன்ச் பைப்பில் எந்த ஒரு தடை இன்றி தண்ணீர் வேஷ்ட்டாக செல்வது பொறுப்புள்ள வார்டு மெம்பர்கள் கவனித்திற்கு எடுக்கணும்.

பல ஆய்வாளர்களின் கருத்து பிரகாரம் "இனி ஒரு உலகப்போர் நடக்குமேயானால்........ அது குடி தண்ணீருக்காக வேண்டி இருக்கும்" என்று கூறி இருப்பதை மனதில் கொண்டு தண்ணீரை வீண் விரயம் செய்வதை நிறுத்திடுவீர்.

முஸ்லிம்கள் தொழுகைக்கு வேண்டி உடல் சுத்தம் செய்ய உபயோகம் செய்யும் (ஒழு) தண்ணீர் கூட அதிகம் உபயோகம் செய்வது இஸ்ராப் (வீண் விரயம்) என்று உள்ளது. வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:வீணாக்கப்படும் குடிநீர்! ...
posted by V D SADAK THAMBY (ABU DHABI) [20 January 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16056

REF : Comment Reference Number: 16053

கருத்து தலைப்பு நன்றாக இல்லை .தயவு செய்து மாற்றவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:வீணாக்கப்படும் குடிநீர்! ...
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [20 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 16070

சட்டு புட்டுன்னு வேலைய முடிச்சுட்டு கிணற்றுக்கு மூடி போன்ற வழிய பாருங்க!

யாருக்காவது கிணற்றுள விழுந்த அனுபவம் இருக்கா?
அனுபவம் இருகிறதால சொல்றேன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. ஆத்துல போட்டாலும் அளந்து போடணும். கமாண்டு அடித்தாலும் கணீர்டு இருக்கணும்.
posted by s.s.md meerasahib (zubair) (riyadh) [21 January 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16093

இப்பம் புரிகிறது எங்களுக்கு.....!

ஓட்டை பானையில் தண்ணீர் நிறைக்க கஷ்ட்டப்படும் காயல்பட்டணம் நகர்மன்ற நிர்வாகத்தைபற்றி...... ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் என்ற பழமொழிக்கு ஏற்ப கிணத்துல விட்டாலும் சரி,குளத்துல விட்டாலும் சரி, காயல்பட்டணத்தில் ஆறு,குளம் இல்லாத்ததை நிவர்த்தி செய்ய ரோட்டில் 24 மணிநேரம் தண்ணீரை விட்டாலும் சரி மீட்டர் பொருத்தி திறந்து விடுங்கள். அப்பம்தான் அடுத்தவர்களை குறை கூறாமல் இருக்க முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved