Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:14:59 AM
வெள்ளி | 3 மே 2024 | துல்ஹஜ் 1737, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:59
மறைவு18:27மறைவு14:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8300
#KOTW8300
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஏப்ரல் 12, 2012
மீன் வளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு ஏப்.15 முதல் மே 29 கடலில் மீன் பிடிக்கத் தடை! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2329 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மீன் வளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு இம்மாதம் 15ஆம் தேதி முதல் மே மாதம் 29ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு, விசைப்படகு மற்றும் இழுவைப் படகுகள் மூலம் கடலில் மீன் பிடிக்க தடை விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை பின்வருமாறு:-

தமிழ்நாடு அரசின் கடல் மீன் பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983இன் படி, தமிழ்நாடு கடல் பகுதியில் மீன் வளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, திருவள்ளூர் வருவாய் மாவட்ட கடல் பகுதியிலிருந்து, கன்னியாகுமரி மாவட்ட நகர எல்லை வரையிலான கிழக்கு கடற்கரை பகுதி முழுவதும் 45 நாட்கள் - அதாவது, ஏப்ரல் 15ஆம் நாள் முதல் மே 29ஆம் நாள் வரை (இரு நாட்களும் உட்பட) உள்ள கால அளவில் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் கடலில் மீன்பிடிக்கத் தடை செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

அரசு ஆணையின்படி, இந்த ஆண்டு 2012 ஏப்ரல் 15 முதல் 2012 மே 29ஆம் தேதி வரை தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் கடலுக்குச் செல்ல தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே தடை செய்யப்பட்ட காலமான 2012 ஏப்ரல் 15 முதல் 2012 மே 29ஆம் தேதி வரை மீன் பிடிக்க மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கடலுக்குச் செல்லக்கூடாது என கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.


இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மீனம்மா...மீனம்மா....மீன்கள் தங்கம்மா...!!!
posted by M.N.L. முஹம்மது ரஃபீக், ஹிஜாஸ் மைந்தன். (காயல்பட்டணம்.) [12 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18206

சும்மவே மீன் விற்கிற விலைக்கு தலைகிறங்குது இனி இது வேறெயா? நம்தூர் மீன் மார்க்கெட்டில் ஒரு வியாபாரியும்,கஸ்டமரும் பேசிக்கொண்டது நினைவுக்கு வருகின்றது.

“காக்கா சும்மா கண்ணை மூடிக்கிட்டு வாங்கிட்டுப் போங்க, நம்ம தராசு நகைக்கடையிலெ தங்கத்தை நெறுக்கிற மாதிரி அவ்ளோ கரெக்ட்டா இருக்கும்”,

“ஆமா! ஆமா! இப்பல்லாம் நகைக்கடை வைக்கிறவன் பைத்தியக்காரன்! ஊர்லெ இருக்கிற அத்தனை ஜுவல்லரியையும் மூடிவிட்டு பேசாமெ இந்த மீன் வியாபாரத்தை ஆரம்பிச்சுடலாம் போலிருக்கு! சரி,சரி முதல்லே உன் ஆள் காட்டி விரலெ தராசு முள்ளுலேர்ந்து எடு! அது தங்கமா? தகரமான்னு? அப்புறமா யோசிக்கலாம்”.

துடி துடித்துப்போன வியாபாரி தன் ஆள்காட்டிவிரலை சட்டென நீக்க, “காக்கா சத்தியமா நம்ம கிட்டெ அந்த விளையாட்டெல்லாம் கிடையாது! நீங்க எங்க வேணும்னாலும் கொண்டு போய் எடை போடுப் பாருங்க இருநூறு கிராம் கூடெ இல்லைன்னா என் பேரை மாத்திக்கங்க”.

“அட போப்பா! உன் பேரை மாத்தி எனக்கென்ன ஆகப்போறது? நீ ஒரு துண்டு மீனை கூட போடு அது போதும்”. குசும்பு” கடல் நிறைய மீன் கிடந்தலும் கரைக்கு வரும் போது அவங்க சொன்னது தான் விலை! அதை வாங்கித் தின்பது தான் நம் நிலை.

-ராபியா மணாளன். காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. سبحان الله.
posted by M.S.Kaja Mahlari. (Singapore.) [14 April 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 18239

ஏதோ கடலில் உள்ள மீன்கள் இன்னும் 45 நாட்களுக்கு தான் ஸ்டாக் உள்ளது .அதற்கு பிறகு இனிகடலில் மீன் அனைத்தும் முடிந்துவிடும் என்பது போன்று கலெக்டரின் அறிவிப்பு இருக்கிறது.

அல்லாஹ்வின் அருள் கரையைவிட கடலில் தான் ஏழு மடங்கு உள்ளதாக ஹதீஸ் குறிப்புகள் அறிவிக்கின்றன ! கடலில் உள்ள பெரிய,பெரிய மீன்களுக்கு சிறிய மீன்களை இறைவன் இரையாக ஆக்கிஉள்ளான். இல்லையெனில் கடலில் மீன்களின் எண்ணிக்கை பெருத்து ,கடல்நீரின் அளவுக்கு மீன்கள்தான் நிறைந்து இருக்கும் என கடல் சம்பந்தமான நமது சன்மார்க்க நூல்கள் அறிவிக்கின்றன ! والله خير الرازقين:


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved