Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:33:47 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8639
#KOTW8639
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுன் 21, 2012
புகாரிஷ் ஷரீஃப் 1433: ஒற்றுமை, உலக சமாதானத்தை வலியுறுத்தி, அபூர்வ துஆ பிரார்த்தனை! பெருந்திரளானோர் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 6732 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



காயல்பட்டினம் கிழக்குப் பகுதியில், கடற்கரையையொட்டி அமைந்துள்ளது மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை. கடந்த 84 ஆண்டுகளாக வருடந்தோறும் ரஜப் மாதத்தில் அல்ஜாமிஉஸ் ஸஹீஹுல் புகாரீ எனும் நபிமொழிக் கிரந்தம் 30 நாட்கள் முழுமையாக ஓதப்பட்டு, அனுதினமும் ஓதப்படும் பொன்மொழிகளுக்கான விளக்கவுரைகள் மார்க்க அறிஞர்களால் வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பு 85ஆம் ஆண்டு நிகழ்வுகள் 23.05.2012 புதன்கிழமை துவங்கி, இன்று அபூர்வ துஆவுடன் நிறைவுற்றது.

அதிகாலை நிகழ்ச்சிகள்:
இன்று இவ்வாண்டின் இறுதி நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்று அதிகாலை 05.15 மணிக்கு, ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவின் ஆசிரியர் ஹாஃபிழ் எஸ்.எச்.ஷேக் தாவூத் இறைமறை குர்ஆனிலிருந்து சில வசனங்களை ஓதி, இறுதிநாள் நிகழ்ச்சிகளைத் துவக்கிவைத்தார்.

காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப், குருவித்துறைப் பள்ளிவாசல் ஆகியவற்றின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் - புகாரிஷ் ஷரீஃப் நிறைவு நாள் பாடத்தின் முதற்பகுதியை துவக்கமாக ஓதினார்.

காலை நிகழ்ச்சிகள்:
இன்று காலையில் ஓதப்படும் நபிமொழிகளுக்கு, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் மற்றும் முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ விளக்கவுரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, இலங்கை - கொழும்பு சம்மாங்கோட் பள்ளியின் கத்தீப் மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ கூட்டு துஆவின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மலையாள மொழியில் உரை இடம்பெற்றது. பின்னர், எஸ்.ஏ.காஜா முஹ்யித்தீன் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.

அபூர்வ துஆ பிரார்த்தனை:
மார்க்க சொற்பொழிவுகளைத் தொடர்ந்து, இறுதியாக, புனித மக்கா ஷரீஃப் முஃப்தீ இமாம் மவ்லானா செய்யித் அஹ்மதிப்னு ஜெய்னீ தஹ்லான் அவர்களால் தொகுக்கப்பட்ட கத்முல் புகாரிஷ் ஷரீஃப் எனும் அபூர்வ துஆ பிரார்த்தனையை, காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வரும், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ ஓதி, இவ்வாண்டு நிகழ்ச்சிகளை நிறைவுபடுத்தினார்.

உலக சமாதானம், ஒற்றுமை, நோய் நிவாரணம், தொழில் அபிவிருத்தி, மக்கட்பேறு, மழை உள்ளிட்ட பல்வேறு தேவைகளை முன்வைத்து பிரார்த்தனை செய்யப்பட்டது.

பங்கேற்றோர்:
இந்த துஆ பிரார்த்தனையில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், நகராட்சி ஆணையாளர் அஷோக் குமார் மற்றும் எம்.ஜஹாங்கீர், ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், அதிமுக நகர நிர்வாகிகளான என்.எம்.அஹ்மத், என்.டி.இஸ்ஹாக் லெப்பை, திமுக நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் மற்றும் நகரப் பிரமுகர்களும், காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.



















தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும், இதர வெளியூர்களிலிருந்தும் பெருந்திரளானோர் பேருந்து, தொடர்வண்டி மற்றும் தனி வாகனங்களில் வந்து பிரார்த்தனையில் கலந்துகொண்டனர். சிறப்பு ஏற்பாடுகள்:





















சிறப்பு ஏற்பாடுகள்:
மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு, காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். கே.எம்.டி. மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வாகனம் மருத்துவ உதவிக்காக நிறுத்தப்பட்டிருந்தது. மருத்துவ முதலுதவிக்காக ஆண்கள் - பெண்கள் பகுதிகளில் மருத்துவப் பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னெச்சரிக்கைக்காக தீயணைப்பு வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது.

புகாரிஷ் ஷரீஃப் வளாகத்திற்குள் இடநெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, முத்துவாப்பா தைக்கா தெரு, ஸீ-கஸ்டம்ஸ் சாலை, குருவித்துறைப் பள்ளி வளாகம், அப்பள்ளியின் மையவாடி பகுதிகளில் இருந்தவாறு ஆண்கள் துஆ இறைஞ்சினர்.

பெண்களுக்கு புகாரிஷ் ஷரீஃப் பெண்கள் பகுதி, அதன் வடக்குப்புற வளாகம், பெரிய முத்துவாப்பா தைக்கா வளாகம், ஈக்கியப்பா தைக்கா வளாகம், அதற்கருகிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகம் ஆகிய பகுதிகளில் இடவசதி செய்யப்பட்டிருந்தது.

அனைத்துப் பகுதிகளிலும், பொதுமக்கள் தாகம் தனிப்பதற்காக குடிநீர் வினியோகம் தொடர்ச்சியாக செய்யப்பட்டது. துஆ நிறைவுற்றதும், துஆ இறைஞ்சிய ஆலிமை, மஜ்லிஸின் வாயிலில் பொதுமக்கள் நறுமணப் பொருள் அன்பளிப்பளித்து வரவேற்றனர். பின்னர் அரபி பைத் முழக்கத்துடன் நகர்வலமாக அவரது இல்லம் வரை அழைத்துச் செல்லப்பட்டார்.





மாலை நிகழ்ச்சிகள்:
இன்று மாலையில், நபிகளார் புகழ்பாடும் மவ்லித் மஜ்லிஸ் நடைபெறுகிறது. மவ்லவீ ஹாஃபிழ் கே.எஸ்.கிழுறு முஹம்மத் ஃபாஸீ நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறார். நிகழ்ச்சிகளை ஹாஃபிழ் ஜே.எம்.ஷெய்க் அப்துல் காதிர் கிராஅத் ஓதி துவக்கி வைக்கிறார். மவ்லவீ ஹாஃபிழ் மக்கீ எம்.எம்.ஹாமித் லெப்பை துஆவுடன் மாலை நிகழ்ச்சிகள் நிறைவுறும்.

இரவு நிகழ்ச்சிகள்:
இன்றிரவு 07.00 மணிக்கு, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன மாணவர்களின் சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இரவு 08.45 மணிக்கு, மாதிஹுல் கவ்து அல்லாமா சே.கு.நூகுத்தம்பி ஆலிம் முஃப்தீ அவர்களால் கோர்வை செய்யப்பட்ட ராத்திபத்துல் அஹ்மதிய்யா திக்ர் மஜ்லிஸ் நடைபெறுகிறது. ஹாஃபிழ் எஸ்.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறார். காயல்பட்டினம் மஸ்ஜித் மீக்காஈல் இமாம் ஹாஃபிழ் இசட்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைக்கிறார். பின்னர், புகாரிஷ் ஷரீஃப் மஜ்லிஸ் கட்டிட வளைவுகளிலுள்ள நபிமொழிகளுக்கான விளக்கவுரையையும், மஜ்லிஸ் உருவாகிய வரலாறு மற்றும் சேவைகளையும் மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எஸ்.முத்து அஹ்மத் மஹ்ழரீ உரையாக வழங்குகிறார்.

நிறைவாக, மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் செயலாளர் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம் நன்றி கூற, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எல்.ஹாமிதுல்லாஹ் துஆவுடன் இரவு நிகழ்ச்சிகள் நிறைவுறுகிறது.

நேர்ச்சை வினியோகம்:
நாளை - 22.06.2012 வெள்ளிக்கிழமை காலை 06.00 மணி முதல் 08.30 மணி வரை தபர்ருக் - நேர்ச்சை வினியோகம் நடைபெறுகிறது.

ஏற்பாட்டாளர்கள்:
இவ்வாண்டின் நிகழ்ச்சிகள் அனைத்திற்கான ஏற்பாடுகளையும், மஜ்லிஸ் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ தலைமையில், ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர், ஹாஜி ஒய்.எஸ்.ஃபாரூக், ஹாஜி எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத், ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல், எம்.ஜே.செய்யித் இப்றாஹீம், ஹாஜி எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் ஆகிய நிர்வாகிகளும், ஹாஜி எம்.ஏ.அஹ்மத் லெப்பை, ஹாஜி எஸ்.எம்.செய்யித் இப்றாஹீம், நஹ்வீ எம்.எம்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஆகியோர் தலைமையிலான வைபவக் கமிட்டியினரும் செய்திருந்தனர்.

இன்று காலையில் நடைபெற்ற அபூர்வ துஆ நிகழ்ச்சி நேரலை செய்யப்பட்டது போல, மாலை மற்றும் இரவு நிகழ்ச்சிகள் அனைத்தும், மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் www.bukhari-shareef.com என்ற பிரத்தியேக இணையதளத்தில் நேரலை செய்யப்படுகிறது. இந்நேரலையை, காயல்.டி.வி இணையதளத்திலும், புகாரிஷ் ஷரீஃப் சிறப்புப் பக்கத்திலும் கேட்கலாம்.

தகவல்:
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் நேரலைக் குழு சார்பாக,
ஜாஃபர் சுலைமான்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:புகாரிஷ் ஷரீஃப் 1433: ஒற்...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) [21 June 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19492

சிறப்பாக இருந்தது ஊரில் இருந்த மாதிரியே புகைபடம எடுத்து எங்களை மஜ்லிசிலே கொண்டு விட்டு விட்டார் தம்பி சாலிஹ். அல்ஹம்துலில்லாஹ்.
துவா கேட்ட எல்லா மக்களுடைய ஹாஜதுகளை எல்லாம் வல்ல அல்லாஹ் நமது புஹாரி இம்மாம் பொருட்டால் னியாரி வெற்றி தருவானாக ஆமீன்

நுஸ்கி முஹம்மத் ஈசா லெப்பை
ரியாத்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:புகாரிஷ் ஷரீஃப் 1433: ஒற்...
posted by Zainul Abdeen (Dubai) [21 June 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19493

புனித புகாரிஷ் ஷரீஃப் சபையின் இறுதிநாள் நிகழ்வாக இன்று அபூர்வ துஆ பிரார்த்தனை முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ அவர்களால் ஓத பட்டு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.

இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லையே என்று வருந்தும் நேரத்தில் , ஒருஇடமும் விடாமல் அனைத்து இடங்களையும் புகைப்படம் எடுத்து வலைத்தளத்தில் கொண்டுவந்து எங்கள் மனதில் சந்தோசம் தந்தமைக்கு Kayalpatnam .comku நன்றிகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. اللهم طول حياة مجلس البخاري الشريف قاهر فطن
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari. (Singapore.) [21 June 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 19499

அஸ்ஸலாமு அலைக்கும். மாநபியின் மாமன்றம் புனித மஜ்ளிசுள் புஹாரிஷரீப் சபையின் 85- வருடத்தின் புனித "அபூர்வ து'ஆ" தின நிகழ்வுகளின் அணைத்து செயல்பாடுகளும் இறையருளால் இன்றே நடைபெற்ற செய்திகள் அறிந்து சந்தோசம். அல்ஹம்துலில்லாஹ்.

இப்புனித நாளில் ,இப்புனித மஜ்லிஸில், இப்புனித "கூட்டு துஆவில் " கேட்கப்பட்ட அணைத்து,மக்களின் இம்மை,மறுமை தொடர்ப்பான எல்லா துஆக்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் தாலா அங்கீகரித்து அருள்புரிவானாக !

பூமான் நபியின் புனித மஜ்ளிசின் தீனின் சேவை கியாம பரிபந்தம் தொடராக ,தொய்வின்றி நடைபெற்றுவர வல்லோன் நல்லருள் புரிவானாக!

இம்மஜ்ளிசிர்க்கு உடல்,பொருள் ,ஆவி அணைத்து வகையான உதவி, ஒத்தாசை புரிந்த,புரிகின்ற ,புரிய இருக்கின்ற எல்லா மக்களுக்கும் எல்லையில்லா கருணையாளன் வல்ல நாயன் ஈருலக சகல சௌபாக்கியங்களையும் வழங்குவானாக ! என இருகரமேந்தி இறைஞ்சிகிறேன் ! ஆமீன் ~! யா ரப்பல் ஆலமீன் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. புகாரிஷ் ஷரீஃப் 1433: ஒற்...
posted by hajasharif (sirkali) [21 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19500

இன்ஷா அல்லா, அடுத்த வருடம் இதில் கலந்து கொள்ள அல்லா எனக்கு வாய்ப்பு அளிப்பனாக. ஆமின்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:புகாரிஷ் ஷரீஃப் 1433: ஒற்...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [21 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19502

சபையின் நிகழ்ச்சி கள் அனைத்தும் சிறப்பாக நடந்தேற எல்லாவகையிலும் அருள் புரிந்த வல்ல நாயனுக்கே எல்லா புகழும் - அல்ஹம்து லில்லாஹ்.

இன்று சபையில் கேட்கப்பட்ட அணைத்து துஆக்களையும் வல்ல நாயன் ஒப்புக்கொண்டு நம் அனைவரின் தேவவைகளை நிறை வேற்றி நமது அனைவரின் பாவங்களையும் மன்னித்தருள்வானாக - ஆமீன்.

நம் முன்னோர் ஆரம்பித்த இந்த மஜ்லிஸ் இதன் சேவையை எந்த தொய்வுமில்லாமல் தொடர்ந்திட வல்லோனை இந்த நல்ல நேரத்தில் வேண்டிடுவோம்.

சபையின் இறுதி தின நிகழ்ச்சியின் போட்டோக்களை மிக சிறப்பாக பதிவு செய்து நேரில் கலந்து கொண்ட திருப்தியை ஏற்படுத்திய kayalpatnam.com வலை தளத்தின் சேவை இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:புகாரிஷ் ஷரீஃப் 1433: ஒற்...
posted by Salai Sheikh Saleem (Dubai) [22 June 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19511

புனித புஹாரி ஷரீஃப் பின் இறுதி நாள் நிகழ்சிகள் நெஞ்சை நெகிழ வைத்த அபூர்வ துஆ நிகழ்சிகள் யாவும் ஒலி பரப்பி நாங்கள் ஊரில் இல்லையே என்ற ஏக்கத்தை வருடா வருடம் போக்கிக் கொண்டிருக்கும் மஜ்லிசுள் புஹாரி ஷரீப் நிர்வாகத்தார்கள் அனைவருக்கும் என் போன்றவர்களின் நன்றிகளும் மேலும் மேலும் எந்த வித தொய்வும் இன்றி சிறப்பாக நடந்தேற துஆக்களும் உரித்தாகட்டும்.

அபூர்வ துஆ முடிந்ததும் லேசான மனதுடனும் இதயத்தில் சில சூளுரைகளுடனும் திரும்பி வரும்போது நமக்கு கிடைக்கும் ஒரு பரம திருப்தி இருக்கிறதே, அல்ஹம்துலில்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:புகாரிஷ் ஷரீஃப் 1433: ஒற்...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [22 June 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19520

அஸ்ஸலாமு அலைக்கும். புகாரிஷ் ஷரீஃப்பின் ...அபூர்வ துஆ பிரார்த்தனை முலம் இன்ஷா அல்லாஹ். வல்ல இறைவன் ஓவ் வொரு நபரின் துவாவையும் அவனின் மிக சிறப்பான வழி பாட்டால் கபுலாக்கி அருள் வனாகவும் ஆமீன். இந்த பாக்கியம் இன்ஷா அல்லாஹ் எங்களுக்கும் வருகின்ற வருடம் நேரில் இருந்து கேட்கிற பாக்கியத்தை தந்து அருள்வானகவும் ஆமீன் .

நாம் ஊரில் நேரில் இருந்தது போன்று திருப்தியாக இருந்தது. காரணம் சகோதரர் S.K.ஷாலிஹு அவர்களின் அருமையான போடோவால்தான்.

நாங்களும் இங்கு நேரலைல் கேட்டு கொண்டோம். மக்கள் கூட்டம் ரொம்பவும் அதிகமாகவே இருந்தது. ஒரு சில இடங்களில் சரியான படி பந்தல் அமைப்பும் + பாய் வசதியும் செய்யவில்லை போல்தான் தெரிகிறது.

இன்ஷா அல்லாஹ் வருகின்ற வருடம் இதை கொஞ்சம் புகாரிஷ் ஷரீஃப் நிர்வாகம் முழு கவனதில் எடுத்து கொள்ளும் படி கேட்டு கொள்கிறேன். வெயில் காலமாக இருபதால்தான்.

ஒரு மாதம் பூராவும் மிகவும் சிறப்புடன் நடத்திய வல்ல இறைவனுக்கே எல்லா புகழும்.மேலும் மிகசிறப்புடன் செயல் ஆற்றிய புகாரிஷ் ஷரீஃப் நிர்வாகதினர்களையும் பாராட்ட வேணும். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:புகாரிஷ் ஷரீஃப் 1433: ஒற்...
posted by sithi katheeja (kayalpatnam) [22 June 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 19522

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் புனித புஹாரி ஷரீப் சிறப்பஹா நடை பெற்று முடி\ந்தது அல்ஹம்து லில்லாஹ் அல்லாம் வல்ல இறைவன் இதில் கலந்து கொண்டவர்கள் இடை ஒதினவர்கள் இன்னும் காதினால் கேட்டவர்கள் இதற்காக சொல்லாலும் பொருளாலும் மற்றும் அனைத்து வகையிலும் உதவி செய்தவர்களின் அனைத்து ஹஜத்துகளையும் அல்லாஹ் நிறைவேற்றி வைப்பானாக .இந்த புகாரி ஷரீபை அல்லாஹ் கியாமம் வரை நடை பெற உதவி செய்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:புகாரிஷ் ஷரீஃப் 1433: ஒற்...
posted by vilack sma (HCM Vietnam) [22 June 2012]
IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 19526

நிகழ்ச்சிகள் அனைத்தும் அருமை. இவற்றையெல்லாம் நேரில் பார்க்கவும் ,கேட்கவும்முடியவில்லையே என்று ஏங்கும் எங்களைப்போன்றவர்களை திருப்திபடுத்த நேரலை ஒலிபரப்பு செய்ததில் நிகழ்ச்சியாலர்களுக்கு பாராட்டுக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved