Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:36:45 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8643
#KOTW8643
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுன் 25, 2012
ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளில் தேர்ச்சியிழந்த மாணவர்களுக்கு, காவாலங்காவின் சார்பில் வழிகாட்டு முகாம்! இக்ராஃ அலுவலகத்தில் நடைபெற்றது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2679 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நடைபெற்று முடிந்த ப்ளஸ் 2 அரசு பொதுத் தேர்வில், காயல்பட்டினம் பள்ளிகளில் பயின்ற 18 மாணவர்கள் தேர்ச்சியிழந்துள்ளனர்.

இம்மாணவர்கள் வருட இழப்பின்றி மீண்டும் கல்வி கற்று முன்னேற ஆர்வமூட்டும் நோக்குடன், இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்கா அமைப்பின் கடந்த பொதுக்குழுவில், செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காவாலங்கா அமைப்பின் சார்பில், 04.06.2012 திங்கட்கிழமை இரவு 08.30 மணியளவில் இக்ராஃ கல்விச் சங்கத்துடன் கலந்தாலோசனை செய்யப்பட்டது. கலந்தாலோசனையின் நிறைவில், தேர்ச்சியிழந்த மாணவர்களை இக்ராஃவில் ஒன்றுதிரட்டி, அவர்களின் கண்ணியம் குறையாத வண்ணம் அவர்களுக்கு மேற்படிப்பில் ஆர்வமூட்டி, தேர்ச்சியிழந்த பாடங்களை மீள்தேர்வு மூலம் எழுதச் செய்ய ஊக்குவிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

அதனடிப்படையில், தேர்ச்சியிழந்த மாணவர்களுக்கான வழிகாட்டு முகாம், 20.06.2012 புதன்கிழமை காலை 11.30 மணியளவில், இக்ராஃ கூட்டரங்கில் நடைபெற்றது. இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத், மக்கள் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமில், முகாம் நோக்கம் குறித்து, இக்ராஃ துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் துவக்கவுரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து, இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்கா அமைப்பின் சார்பில், ஹாஜி எஸ்.ஐ.புகாரீ மாணவர்களுக்கு வழிகாட்டு உரையாற்றினார்.



சில கவனச் சிதறல்களால் தமது வெற்றியை நழுவி விட்ட மாணவர்கள், இதுவே போதும் என்று இருந்துவிடாமல், அவர்களை ஒன்றுதிரட்டி, நடப்புலகில் உயர்கல்வியின் அவசியம் குறித்து அவர்களுக்கு உணர்த்தி, தேர்ச்சியிழந்த பாடங்களை அம்மாணவர்கள் மீள்தேர்வு எழுத - தம் மன்றம் இக்ராஃவின் ஒத்துழைப்புடன் ஊக்கமளிக்க திட்டமிட்டிருந்ததாகவும், அதனடிப்படையிலேயே இம்முகாம் நடத்தப்படுவதாகவும் மாணவர்களிடம் தெரிவித்த அவர், மேற்கல்வி கற்க ஆர்வமிருந்தும் பொருளாதாரத்தில் தாழ்நிலையிலுள்ள மாணவர்களிருப்பின், இருவருக்கு தம் மன்றம் மூலம் ரூ.50,000 செலவில் உயர்கல்விக்கு அனுசரணையளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இரண்டுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இதுபோன்று உதவிகள் தேவைப்பட்டாலும் கூட, அவர்களுக்கும் உதவிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இம்முகாமில் கலந்துகொள்ளக் கோரி, நடப்பாண்டு ப்ளஸ் 2 தேர்வில் தேர்ச்சியிழந்த 18 மாணவர்கள் மற்றும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சியிழந்த மாணவர்களுக்கு அஞ்சல் மூலம் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்களுள் 3 மாணவர்கள் முகாமில் பங்கேற்றனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நல்ல வாய்ப்பு
posted by Abdul Cader (Saudi Arabia) [25 June 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19602

காவா லங்காவின் வித்தியாசமான அணுகு முறையை நிச்சயமாக பாராட்டி ஆக வேண்டும். மேலும் +2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை அவர்களின் சம்மதத்தின் பேரில் பத்தாம் வகுப்பு சான்றிதழை வைத்து தொழிற்கல்வி படிக்க ஆர்வம் காட்ட வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மிக மிக நல்ல ஏற்பாடு! வாழ்த்துக்கள்!
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [25 June 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19603

அஸ்ஸலாமு அழைக்கும்.

தங்கள் ஏற்பாடு மிக பாராட்டக்கூடிய ஒன்று. தங்களின் நோக்கங்கள் முழுவதுமாக வெற்றியுடன் நிறைவேற வாழ்த்தும் நெஞ்சம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. ...
posted by Cnash (Makkah ) [25 June 2012]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 19605

அஸ்ஸலாமு அலைக்கும் ,

நல்ல முயற்சி.. வித்தியாசமான அணுகுமுறை.. பாராட்டுக்கள் .. .அதே வேளையில் இது போன்ற நிகழ்வுகளின் செய்தியை மட்டும் வெளியிட்டு போட்டோக்களை தவிர்க்கலாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்!!

பெயில் ஆனா மாணவர்கள் புகைப்படம் வெளியிட்டு காட்டுவதால்.. நாளை இது போன்ற நிலையில் உள்ள மற்ற மாணவர்களும் வெட்கப்பட்டு வர தயங்கலாம். நமது நோக்கம்தான் பெரிது... செய்தியும் புகைப்படமும் வெளியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. விமர்சனத்திற்காக அல்ல...தயவு செய்து அடுத்த நிகழ்வில் கருத்தில் கொள்ளவும்... Jazaakallaah !!

Moderator: இதனைக் கருத்திற்கொண்டே மாணவர்களின் முகம் தெரியாமல், நடத்துபவர்கள் முகம் மட்டும் தெரியும் வகையில் படம் எடுக்கப்பட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அருமையான சந்தர்ப்பம் - தவற விடாதீர்கள்
posted by S.A.Muhammad Ali (Dubai) [25 June 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19608

தேர்ச்சியிழந்த மாணவர்கள் அந்த பாடத்தை மட்டும் எழுதாமல் மேலும் எதாவது பாடத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்து இருந்தால் அதையும் நன்றாக படித்து எழுதவும். இதன் மூலம் அவர்களுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மீதம் உள்ள 15 மாணவர்கள் என்ன சூழ்நிலையில் உள்ளனர் என்று தெரியவில்லை. அவர்களது கல்வி பயணம் தொடர ஊக்கப்படுத்தவும்.

சந்தர்ப்பங்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லோரும் சரியாக பயன்படுத்துவதுமில்லை, சந்தர்ப்பங்கள் கிடைத்தும் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டவன் தன் இலக்கில் தளம்பாது உறுதியாக இருந்து வெற்றியினை கண்டுகொள்வான்.

Hatsoff to Kawalanka and all hands involved in this great effort.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. சந்தோசமும் கவலையும்..!!
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (காயல்பட்டினம் ) [26 June 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 19617

பாராட்டப்பட வேண்டிய ஒரு நிகழ்வு. இதில் சந்தோசமும் கவலையும் ஒன்றாக உள்ளது.

முதலில் சந்தோசம்.. முன்பு எல்லாம் பெயில்- ஆனா மாணவர்களை யாரும் கண்டுக்கொள்ளுவது இல்லை. உதாசீனப்படுத்தப்பட்டே வந்துள்ளது நம் சமுதாயம். கடைசியில் அவர்களின் வாழ்க்கை கடைநிலை ஊழியர்களாகவே அஸ்தமித்து விடுகிறது.

அவர்களை அடையலாம் கண்டு, தனித்தனியாக தொடர்பு கொண்டு, அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு ஏணி மரமாக இருக்கலாம் என்று முயற்ச்சிகள் செய்யும் காவாலங்காவின் தொண்டுகளை நினைத்து மிக்க சந்தோசம், அதிலும் கூடுதலாக சகோ.எஸ்.ஐ.புகாரீ காக்காவின் ஆர்வமும் துடிப்பும்.... மிக்க பூரிப்பு.

அடுத்தது கவலை..

ஊருக்கு விடுமுறையில் வந்தோமா.. குடும்பத்துடன் சந்தோசமாக இருந்தோமா என்று இல்லாமால், தங்களின் நேரம், உடல் உழைப்பு, பணம் ஆகியவற்றை செலவு செய்து, நம் மக்களுக்கு ஏதாவது ஒரு சிறு நன்மையாவது கிடைத்து விடாதாதா என்று செயல்படும் அவர்களுக்கு கிடைத்த விடை?? வெறும் மூன்றே மூன்று மாணவர்கள்தான் ரெஸ்பாண்ட் பண்ணியுள்ளார்கள்... என்னத்தை சொல்லுறது..

சாளை S.I.ஜியாவுத்தீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. ...
posted by ceylon fancy KAZHI. (jeddah,) [26 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19620

காவாலன்காவின் இந்த முயற்சி ஒரு பயனுள்ள ,மற்றும் மாணவர்கள் மீது அக்கரை உள்ள முயற்சி என்றே சொல்லலாம்.வாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள். மற்ற மாணவர்கள் ஒரு வேளை வெட்கப்பட்டு வராமல் இருந்ததிருக்கலாம்.எனவே நீங்கள் அவர்கள் இல்லம் தேடி சென்று அவர்களோடும் ,அவர்கள் வீட்டில் உள்ளவர்களோடும் பேசி அவர்களை எப்படியாவது மீண்டும் தேர்வு எழுத வைக்க முயற்சி செய்யலாம். ஒரு ட்ரை செய்து பாருங்கள்.இன்ஷா அல்லாஹ் , அல்லாஹ் வெற்றி தருவான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. ...
posted by Mauroof (Dubai) [26 June 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19625

வாழ்த்துக்கள். காவாலங்கா மற்றும் இக்ராஃ - வின் இவ்வமர்வு பொதுவாக "தாழ்வு மனப்பான்மை" என்ற நோயை போக்குவதற்கான ஓர் அருமையான மருத்துவ முகாம் எனலாம். ஆம் அந்த தா.ம. தான் வெற்றியின் மிகப்பெரிய எதிரி. "அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்" (நம்மால் இதைச் செய்ய முடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்) என்ற திருக்குறளுக்கு ஏற்ப தேர்வில் வெற்றி வாய்ப்பு கை நழுவிப்போன மாணாக்கர்கள் முயற்சி செய்து வெற்றிக்கனியை பறித்திட வேண்டும்.

நிகழ்வில் கலந்து ஆலோசனைகள் பெற்ற 3 வருங்கால பட்டதாரி / முனைவர் / பொறியாளர் / மருத்துவர் / தொழிலதிபர் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்.

கருத்துப்புயல் (து.த.-த.கா.ந.ம.) அவர்களின் கவலை நியாயமானதே. தேர்வில் வெற்றி பெற முடியாமல் போனதற்காக கவலையுற்று வீட்டில் அடைந்து கிடப்பதால் பயனில்லை சகோதரா. நம் இந்தியாவின் உயரிய படிப்புகளில் ஒன்றான “இந்திய ஆட்சிப் பணி” தேர்வுகளில் ஒரே முயற்சியில் வெற்றி பெற்று பதவியில் அமர்ந்தவர்களை விட பல முயற்சிக்கு பிற்பாடு வெற்றிக்கனியை பறித்து பதவிகளில் அமர்ந்தவர்களே அதிகம்.

ஏன் அவ்வளவு? 10 வகுப்பு வரை மட்டுமே படித்து இளநிலை உதவியாளராக அரசுப்பணியில் அமர்ந்து பதவி உயர்வுகள் பல பெற்று அதிகபட்சமாக மாவட்ட ஆட்சியர் பதவியில் சில வருடங்களுக்கு முன்னர் அமர்த்தப்பட்டவர்களும் உண்டு.

எனவே துவண்டு விடல் கூடாது சகோதரா தூங்கி விடவும் கூடாது. பிறர் இகழ்வதை எல்லாம் சட்டை செய்யாது புறப்படு வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு. அதுவும் உன் போன்றோருக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுக்க புறப்பட்டிருக்கும் "காவாலங்கா" போன்ற நல உள்ளங்களோடு. முடியும் என்று மட்டுமே சொல். மீண்டும் மீண்டும் சொல். "YES WE CAN" என்ற ஒரு வாக்கியத்தை தொடராக முழங்கியதே பராக் ஹுசைன் ஒபாமா அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற வழி வகுத்தது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved