Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:10:46 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8640
#KOTW8640
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுன் 21, 2012
ஐக்கியப் பேரவை சார்பில் துணை மின் நிலைய அடிக்கல் நாட்டு விழா! நகர்மன்றத் தலைவர், மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5144 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (22) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையால் நேற்று நடத்தப்பட்ட துணை மின் நிலைய அடிக்கல் நாட்டு விழாவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். விபரம் பின்வருமாறு:-

காயல்பட்டினத்தில் வீடுகளுக்கான மின் வினியோகத்தில் அழுத்தம் குறைவாக இருந்து வருகிறது. பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப மின் வினியோகம் செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களை ஆய்ந்தறிந்து, நகரில் துணை மின் நிலையம் (Sub Station) அமைக்கப்பட்டால் இப்பிரச்சினை நிரந்தரமாகத் தீரும் என மின் வாரிய உயரதிகாரிகள் ஆலோசனையளித்ததாகக் கூறப்படுகிறது.

அதனைக் கருத்திற்கொண்டு, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் - நகரில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு இடம் வாங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. நிறைவில், காயல்பட்டினம் துளிர் பள்ளிக்கு தென்கிழக்கில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, 22.10.2011 அன்று காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் அதன் தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் - அந்நிலத்தை மின்வாரியத்திடம் கையளித்ததாக அறிவிக்கப்பட்டது.

அந்நிலத்தில், துணை மின் நிலையம் அமைவதற்கான கட்டிட அடிக்கல் நாட்டு விழா 20.06.2012 பதன்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.



காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் விழாவிற்குத் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் முன்னிலை வகித்தார். துவக்கமாக மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துஆ ஓதி அடிக்கல் நாட்டு விழாவைத் துவக்கி வைத்தார். பின்னர் மின்வாரிய அதிகாரிகள் சார்பில் சடங்குகள் செய்யப்பட்டது.





பின்னர் துவங்கிய மேடை நிகழ்ச்சியில், ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். அவர் தெரிவித்த கருத்துக்களின் சுருக்கம் பின்வருமாறு:-

“காயல்பட்டினத்தில் துணை மின் நிலையம் அமைவதற்கு ஒரு ஏக்கர் நிலம் தேவை... கால தாமதமானால் இத்திட்டம் வேறு ஊருக்கு மாற்றப்பட்டு விடும்” என்று மின்வாரிய செயற்பொறியாளர்கள் என்னிடம் தெரிவித்தனர். இது விஷயத்தைக் கருத்திற்கொண்டு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை காரியத்தில் இறங்கி, காயல்பட்டினம் புளியங்கொட்டையார் குடும்பத்தினருக்குச் சொந்தமான 90 சென்ட் நிலத்தை 18.5 லட்சம் ரூபாய்க்கு பெற்றனர். இதற்குத் தேவைப்படும் தொகைக்கு தன் பங்களிப்பாக ஹாஜி எம்.எம்.உவைஸ் அவர்கள் ஐம்பதினாயிரம் ரூபாய் தந்தார்கள்... இதர நகரப் பிரமுகர்களும் தம் பங்களிப்பை தந்தார்கள்...

பின்னர் எனது தலைமையில் சென்னையில் வசூலில் இறங்கினோம். அதன் பலனாக, ஹாஜி எஸ்.அக்பர்ஷா அவர்கள் தன் பங்களிப்பான 3 லட்சம் ரூபாய் தொகையுடன், எல்.கே.எஸ். கோல்டு ஹவுஸ் நிறுவத்தார் சார்பில் மொத்தம் 7 லட்சம் ரூபாய் நன்கொடையளித்தார்.

இவ்வாறாக தொகை ஒருவாறு சேகரிக்கப்பட்டு, நில உடமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலத்திற்குச் சொந்தமான புளியங்கொட்டையார் குடும்பத்தினர் இந்த ஊரில் பேருந்து நிலையம், மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளிட்ட பல்வேறு காரியங்களுக்கு நிலங்களை தானமாக வழங்கியவர்கள்... இன்றும் இந்நிலத்தை அவர்கள் வழமையாக விற்கும் தொகையை விட குறைந்த தொகைக்கு வழங்கியுள்ளனர். அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பின்னர் இந்நிலம் மின்வாரியத்திடம் சட்டப்படி வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர்கள் சில சோதனைப் பணிகளை மேற்கொள்ள இவ்வளவு நாள் கால அவகாசம் ஆயிற்று.

இங்கே விழாவில் கலந்துகொள்ள வருகை தந்திருக்கும் - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்றத் தலைவி ஆபிதா ஷேக் அவர்களை நான் மனதார வரவேற்கிறேன். அத்துடன், இங்கே வந்திருக்கின்ற நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகளையும் நான் வரவேற்கின்றேன்.


இவ்வாறு ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத் உரையாற்றினார்.

அவரைத் தொடர்ந்து, மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) தியாகராஜனும், அவரைத் தொடர்ந்து, மின்வாரிய செயற்பொறியாளர் தாமோதரன் உரையாற்றினர். காயல்பட்டினத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்பட வேண்டிய அவசியம் எப்போதோ ஏற்பட்டுவிட்டபோதிலும், இப்போதுதான் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்த அவர், மின் வாரியமே செய்து தர வேண்டிய இப்பணியில் - தற்போது மின் வாரியத்திடம் நிதி பற்றாக்குறை இருப்பதன் காரணமாக பொதுமக்களின் உதவி நாடப்பட்டதாகவும், இந்த ஊர் பெரியவர்கள் களமிறங்கி, இன்று இந்த நிலத்தைப் பெற்றுத் தந்தமைக்காக தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தாமோதரன் தெரிவித்தார்.

அடுத்து உரையாற்றிய மின்வாரிய மதுரை மண்டல கட்டுமான செயற்பொறியாளர் சிவலிங்கசாமி, அதிகபட்சமாக எதிர்வரும் 31.12.2012 தேதிக்குள் துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் நிறைவேற்றி முடிக்கப்படும் என்றும், அதற்கான தளவாட சாமான்கள் அனைத்தும் ஆயத்தமாகவே உள்ளதாகவும் தெரிவித்ததுடன், இவ்வாண்டு பருவ மழை குறுக்கிடாவிட்டால் அடுத்த நான்கு மாதங்களில் கூட இப்பணியை முடித்துவிடலாம் என்றும் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து, ஆறுமுகநேரி துணை மின்நிலைய வினியோகத்துறை உதவி செயற்பொறியாளர் எலியேசர் உரையாற்றினார். காயல்பட்டினத்திற்கருகில் பணிபுரியும் தன்னை காயல்பட்டினத்தைச் சார்ந்த பெருமக்கள் தம் குடும்பத்தினருள் ஒருவராகவே கருதி வந்ததாகப் பெருமிதப்பட்டுக்கொண்ட அவர், தான் பணி நிறைவு செய்ய இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், தனது பொறுப்புக்காலத்திலேயே இத்துணை மின் நிலையம் இந்நகரில் அமையப்போவது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.

அடுத்து, சலுகை விலையில் நிலம் வழங்கிய புளியங்கொட்டையார் குடும்பத்தினர் சார்பில் ஜே.ஏ.லரீஃப் உரையாற்றினார்.

இந்தப் பகுதியில் துணை மின் நிலையம் அமைந்திட ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ், ஒருங்கிணைப்பாளர் சொளுக்கு முத்து ஹாஜி, ஹாஜி பிரபுத்தம்பி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்த அவர், இதற்கு முழு முனைப்புடன் செயல்பட்ட காயல்பட்டினம் மின்வாரிய துணைப் பொறியாளர் முருகனுக்கு மிகவும் நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.

புளியங்கொட்டையார் குடும்பத்தினர் இந்நகரின் பல்வேறு நலப்பணிகளுக்கு நிலங்களை தானமாக வழங்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், தற்போது இந்த நிலம் தாங்கள் திட்டமிட்டிருந்ததை விட குறைந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதுபோல, காயல்பட்டினம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு இந்நகரின் முன்னோர்கள் தமது பெருவாரியான நிலங்களை தானமாக அளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த துணை மின் நிலைய அமைவிடத்திலுள்ள இரண்டு சாலைகளும் குறுகலானவை என்று சுட்டிக்காட்டிய அவர், மின்வாரியத்தினர் எதிர்பார்ப்பது போல், 30 அடி நீளம் கொண்ட கன்டெய்னர் லாரி வளைந்து திரும்பும் வகையில் இந்தச் சாலைகளில் ஒன்றை அகலமாக்கித் தர, இங்கே வந்திருக்கும் நகர்மன்றத் தலைவர் அவர்கள் ஆவன செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.



அடுத்து, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் உரையாற்றினார். அவரது உரை சுருக்கம் பின்வருமாறு:-



காயல்பட்டினத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்படுவதற்கான இந்நிகழ்வு நகர சரித்திரத்தில் முக்கியப் பதிவாகும்... இதற்காக முயற்சித்த காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை பெரியவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாயிருந்த நகர மக்களுக்கும் காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நல்லெண்ணம், நல்ல முயற்சிகள் செய்வது யாராக இருந்தாலும் அவர்களுக்கு இறைவனின் நற்கூலி நிச்சயமாக உண்டு என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது செய்து முடிக்கப்பட்டுள்ள இந்த நற்பணி போல, இனி வருங்காலங்களிலும் அனைத்து விஷயங்களிலும் இந்நகரின் பெரியோர்கள் முழு ஆதரவளிக்க வேண்டும்... பொதுமக்களும் முழு ஒத்துழைப்பளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், விரைவிலேயே நம் நகராட்சி தமிழகத்திலேயே ஒரு முன்மாதிரி நகராட்சியாகத் திகழும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த மின் நிலையத்திற்குத் தேவையான அகலச் சாலையை அமைப்பதற்கு, நானும் - அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் இணைந்து தேவையான அனைத்து காரியங்களையும் செய்து தருவோம் என இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த துணை மின் நிலையத்தின் மூலம் நம் நகரின் மின்சாரத் தேவைகள் அனைத்தும் நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டும் என்ற எனது ஆவலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துணை மின் நிலைய திறப்பு விழாவின்போதும் இதே உற்சாகத்துடன் நாம் அனைவரும் இணைந்து பங்கேற்க வேண்டும். அதற்கு வல்ல இறைவன் துணை புரிய வேண்டும் என இந்த நேரத்தில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் அ.வஹீதா சில மணித்துளிகள் வாழ்த்துரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து, அதிமுக மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம் உரையாற்றினார்.

கடந்த ஐந்தாண்டுகளாக இந்த துணை மின் நிலையம் அமைவதற்கு கடந்த ஆட்சியில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தற்போது அம்மாவின் ஆட்சியில்தான் அது கைகூடியுள்ளது... இங்கு துணை மின் நிலையம் அமைவதற்காக கட்சியின் சார்பில் அனைத்து ஒத்துழைப்புகளையும் தருவோம்... மக்களும் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பளிக்க வேண்டும்... என்று தெரிவித்தார்.

அடுத்து, திமுக காயல்பட்டினம் நகர கிளை செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் உரையாற்றினார். அதிமுகவின் சார்பில் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம் பேசியதை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், கடந்த ஐந்தாண்டுகளாக இத்துணை மின் நிலையம் அமைவதற்காக பல்வேறு அலைச்சல்களுக்கிடையில் திமுக சார்பில் நான் பல முயற்சிகளை மேற்கொண்டேன்... எங்களது துரதிஷ்டம் காரணமாக தற்போது ஆட்சி மாறிய நிலையில் அது திறக்கப்படவுள்ளது... என்று தெரிவித்தார்.

அடுத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உரையாற்றிய அதன் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், இதற்காக இரண்டு கட்சிகளும் கருத்து வேறுபட்டுக்கொள்ளத் தேவையில்லை என்றும், யார் குத்தியாவது அரிசியானால் சரிதான் என்றும் தெரிவித்தார்.



நிறைவாக, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் உரையாற்றினார்.



மிகுந்த சிரமங்களுக்கிடையில், இந்நகர மக்களின் ஒத்துழைப்புடன் தற்போது இந்த நிலம் வாங்கப்பட்டு, மின்வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டள்ளதாகத் தெரிவித்த அவர், இந்நகரில் ஐக்கியம் பேணப்பட வேண்டுமென்றும், அது இருந்தால்தான் நல்ல காரியங்களைச் செய்திட வாய்ப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தார். இந்நகரில் நல்ல பணிகள் நடைபெறுவதற்கு அனைத்து கட்சிகளின் பங்களிப்பும் அவசியம் என்று மேலும் தெரிவித்தார்.

மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துஆவுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், பொருளாளர் எம்.கே.டி.செய்யித் முஹம்மத் அலீ, ஒருங்கிணைப்பாளர் சொளுக்கு முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் பெருமாள், ஜெயபிரகாஷ், வெங்கடேசன், செல்லப்பாண்டியன், காயல்பட்டினம் மின்வாரிய உதவி பொறியாளர் முருகன் மற்றும் ஊழியர்களும்,

காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், உறுப்பினர்களான ஏ.லுக்மான், வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, பி.எம்.எஸ்.சாரா உம்மாள், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, ஜெ.அந்தோணி, ஏ.ஹைரிய்யா, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பாக்கியஷீலா, கே.ஜமால், எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன், ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி ஆகியோரும் நகர பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.





படங்களில் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஐக்கியப் பேரவை சார்பில் த...
posted by Zainul Abdeen (Dubai) [21 June 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19496

துணை மின் நிலையம் அமையபெருவதர்க்கு முக்கிய காரணமாக திகழ்ந்த ஐக்கிய பேரவையின் நிர்வாகிகளுக்கும், ஊர் பிரமுர்கள் மற்றும் இதற்காக நிதி உதவி செய்த, செய்ய தூண்டிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் போதுமான பறக்கத் செய்வானாக !!

"காயல்பட்டினத்தில் வீடுகளுக்கான மின் வினியோகத்தில் அழுத்தம் குறைவாக இருந்து வருகிறது. நகரில் துணை மின் நிலையம் (Sub Station) அமைக்கப்பட்டால் இப்பிரச்சினை நிரந்தரமாகத் தீரும் என மின் வாரிய உயரதிகாரிகள் ஆலோசனையளித்ததாகக் கூறப்படுகிறது"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஐக்கியப் பேரவை சார்பில் த...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) [21 June 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19497

பார்க்க ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. இது போன்று எல்லா ஊர் நல திட்டத்திலும் இது போன்று பெரியவர்களோடு ஒன்று பட்டு நமதூருக்கு வரவேண்டிய திட்டங்களை போராடி பெற வேண்டும் என ரியாத் வாழ் காயல் மக்களின் சார்பில் அன்போடு கேட்டு கொள்கிறேன்.நன்றி

நுஸ்கிமுஹம்மத் ஈசா லெப்பை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ஐக்கியப் பேரவை சார்பில் த...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல் - 97152 25227) [21 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19498

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் விழாவிற்குத் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் முன்னிலை வகித்தார். செய்தி படிக்கும் போது மிக சந்தோசமாக உள்ளது...

இது தான் ஊர் நல பல திட்டத்திற்கு (ஒற்றுமைக்கு) எடுத்துக்காட்டு.. மின் துறை அதிகாரிகள் சொன்னது போல் இந்த வருடமே 2012 இறுதியில் இந்த துணை மின் நிலையம் செயல் பட வாழ்த்துக்கள்...

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ஐக்கியப் பேரவை சார்பில் த...
posted by சாளை S.I. ஜியாவுத்தீன் (காயல்பட்டினம்) [21 June 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 19504

பார்க்க, படிக்க சந்தோசமாக உள்ளது.

ஒற்றுமை / ஐக்கியம் துளிர் பள்ளிக்கு அருகில் துளிர் விட ஆரம்பித்துவிட்டது... !! மிக்க மன நிறைவு.

இன்ஷா அல்லாஹ், இந்த ஐக்கியம் நீடித்து இருக்கவும், மக்கள் பணியில் அனைவர்களின் பங்களிப்பும் ஒற்றுமையும் சேர்ந்து இருக்கவும், கூடிய விரைவில் நம் நகராட்சி ஒரு முன்மாதிரி நகராட்சியாக திகழவும், வல்ல ரஹ்மானை இறைஞ்சுகிறேன்.

இந்த பணிக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நற்கூலி கிட்டட்டும். பாராட்டுக்கள்.

சாளை S.I. ஜியாவுத்தீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ஐக்கியப் பேரவை சார்பில் த...
posted by A.M.Syed Ahmed (Riyadh) [21 June 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19505

Well done and the things moving on the right path....

Happy to see Aikiyya Peravai with President Abitha and unity will win always..........

Many thanks to the doners.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:ஐக்கியப் பேரவை சார்பில் த...
posted by Salai.Mohamed Mohideen (USA) [21 June 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 19507

நினைத்தது போல இந்த துணை மின் நிலையம் கூடிய விரைவில் அமைக்கப்பட்டு நமது மக்களின் மின் தேவையை பூர்த்தி செய்ய இறைவன் அருள் புரிவானாக!!

இதற்காக உழைத்த ஐக்கியப் பேரவைக்கும் நன்கொடையாளர்களுக்கும் வாழ்த்துக்கள். இது போன்று எல்லாவிதமான நல்ல காரியங்களில் நமது பெரியவர்களும் நகர்மன்றமும் ஒன்றிணைந்து பணியாற்ற வாழ்த்துக்கள்.

நமது மரியாதைக்குரிய பேரவை பெரியவர்களும் பொது மக்களும்... நமக்கு கிடைத்த துடிப்பான நல்லதொரு நகர்மன்ற தலைவியின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அசுத்தங்கள் (கழிவு நீர்) வெளியேறி ஊரும் ஊர் மக்களும் வளம் பெறுவர்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:ஐக்கியப் பேரவை சார்பில் த...
posted by Cnash (Makkah ) [21 June 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19508

மிகுந்த சந்தோஷம்!! இந்த ஒற்றுமை உணர்வு என்றும் நமதூர் நன்மைக்காக தழைத்து ஓங்க அல்லாஹ் அருள் புரிவான்!!

இதற்காக உழைத்த நல்லோர்கள், பொருளுதவி வழங்கிய அன்பர்கள் அதற்க்கு முயற்சித்தோர் அனைவர்களுக்கும் அல்லாஹ்வின் புறத்தில் இருந்து அதற்குரிய கூலியும் நன்மைகளும் என்றும் உண்டாக துஆ செய்கிறோம்!!

நன்மையான காரியங்களில் நம் அனைவரையும் அல்லாஹ் ஒன்றிணைத்து நமதூரை நனிசிறப்பாக்கி தருவானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:ஐக்கியப் பேரவை சார்பில் த...
posted by Salai Sheikh Saleem (Dubai) [22 June 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19510

மாஷா அல்லாஹ், நகர் மன்ற தலைவி சுற்றம் சூழ ஊர் பெரியவர்கள் இதுதான் நமதூருக்கு கிடைத்த வெற்றி. எல்லோரும் ஊரின் பொது நன்மை கருதி ஓரணியில் நின்றாலே எல்லாம் வல்ல அல்லாஹ் நாம் மேற்கொள்ளும் அனைத்து நல்ல காரியங்களையும் வெற்றியின் பக்கமே வீறுநடை போட வைத்து விடுவானே !!!! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ...
posted by sheit (Dubai) [22 June 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19512

அஸ்ஸலாமு அலைக்கும்

வரப்பு உயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர கோன் உயரும்
பாலர் பள்ளியில் படித்த ஞாபகம்
கூட்டுறவே நாட்டுயர்வு
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

நன்மையான காரியத்தில் அனைவரும் ஒற்றுமையாய்
செயல் பட்டால் உப மின் நிலையம் உதாரணம்.

இந்த விடயத்தில் பங்களித்தவற்கு இம்மையிலும் மறுமையிலும் நற்பேறு பெற இறைவனிடத்தில் துவா செய்கிறேன்.

சேட்
துபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:ஐக்கியப் பேரவை சார்பில் த...
posted by MOHAMMED LEBBAI MS (dxb) [22 June 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19513

இரண்டு செண்டு நிலம் இருந்தாலே பிளாட் போட்டு விற்கும் இந்த காலத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை மிக குறைந்த விலையில் விற்க முனைந்த புளியங் கொட்டையார் குடும்பத்தினருக்கு அல்லாஹ் இருவுலகிலும் நல்லருள் புரிவானாக ,ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:ஐக்கியப் பேரவை சார்பில் த...
posted by HASAN JAFFER (khobar) [22 June 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19515

பார்க்கவே சந்தோசமாக இருக்கிறது. இதைதான் என்னை போன்றவர்கள் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் விரும்பி கொண்டு இருக்கிறோம்.

நான் முன்னர் சொல்லியது போல பெரியவர்கள் பெரியவர்கள்தான். ஒற்றுமையை பேணிக் கொள்ளுங்கள். நன்மை எவர் செய்யினும் எண்ணம் அல்லாஹ்விற்காக .வேண்டி இருக்க வேண்டும். அதன் பயனை அவர் திண்ணமாக பெற்றுகொள்வார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. வாழ்க வளமுடன்!
posted by kavimagan kader (qatar) [22 June 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 19516

இந்த துணைமின் நிலையம் அமையப் பாடுபடும் பெரியவர்கள்,சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைத்து நல்ல இதயங்களும் இறையருளால் நீடூழி வாழ்க!

நான்கைந்து மாதம் முன்னர் நடந்த, கே.வி.ஏ.டி. அறக்கட்டளை மூலம் வார்டுக்கு குப்பைவண்டி அர்ப்பணித்த விழாவில், கே.வி.ஏ.டி.ஹபீப் ஹாஜியார் கேட்டுக்கொண்டதன் பேரில், கண்ணியத்திற்குரிய உவைஸ் ஹாஜியார் அவர்களை, நான் நேரில் சென்று அழைத்ததும், இன்முகத்தோடு ஹாஜியார் அவர்கள் கலந்து கொண்டு, கொடியசைத்து துவக்கி வைத்த அந்த விழாவில் நகர்மன்றத் தலைவி அவர்களும் இணைந்து கலந்து கொண்ட நல்ல நிகழ்வினை நினைத்துப் பார்க்கிறேன்.

இன்ஷாஅல்லாஹ் நடப்பவைகள் அனைத்தும் நன்மையிலேயே முடியட்டும். வாழ்க வளமுடன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:ஐக்கியப் பேரவை சார்பில் த...
posted by Vilack SMA (Ho Chi Minh) [22 June 2012]
IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 19517

" பேரவை பெரியவர்கள் " உங்களின் தூய எண்ணங்களால் நீங்கள் என்றென்றும் உயர்ந்தவர்கள் .

இந்த திட்டத்திற்கு உதவிய அனைவருக்கும் அல்லாஹ் மேலும் பறக்கத்துகளை அளிப்பானாக .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:ஐக்கியப் பேரவை சார்பில் த...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [22 June 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19518

அஸ்ஸலாமு அலைக்கும்.

மாஷா அல்லாஹ்... பார்பதற்கே..... நம் ஊர் மக்கள் யாவர்களின் மனதில் எப்படி ஒரு சந்தோசம் ( மகிழ்சி ) அடடா..... இந்த """" ஐக்கியப் பேரவை சார்பில் துணை மின் நிலைய அடிக்கல் நாட்டு விழா """ போட்டோவை பார்த்து ..... பார்த்து ......மகிழ்வோடு .... நம் ஊர் முக்கிய பிற முகர்களின் அழகிய வார்த்தைகளையும் படித்தும் .... இந்த நம் ஊர் ஒற்றுமை எண்ணி ....எண்ணி ... மனதுக்கு ''குற்றால சாரல் போல் ''''' குளிர்சியாக இருக்கிறது.

இந்த மாதிரி ''குற்றால சாரல் போல் ''''' குளிர்சியாக மன ஒற்றுமையுடன் எப்போதும். நம் ஊர் மக்கள் இருக்க வல்ல நாயன் கிருபை செய்து தருள் வானகவும் ஆமீன்.

நம் ஊர் ஐக்கியப் பேரவையின் ""மரியாதைக்குரிய பெரும் தலைவர்கள் அவர்கள் & நகர்மன்றத் தலைவர் அவர்கள் மற்றும் நம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் அவர்கள் என்று இப்படி ஒரு காயல் குடும்பமாக இருக்கும் '''' இந்த ஒரு அற்புதமான """ போட்டோவே நம் ஊர் மக்களாகிய நாம் யாவர்களும் இப்படி ஒற்றுமையாகவும் + நேர்மையகவும் / நம் ஊர் பெரியவர்கள் ''' கொடுத்து சிவந்த கை என்பதையும் ... இது முலமே மேலும்( ஒற்றுமையை ) செயல் படுத்தி வருகிறோம். மின்வாரிய அதிகாரிகள் அவர்களே நம் ஊர் பெருமையை பாராட்டும் போது நம் மனதுக்கு மேலும் 4000 வாட்ஸ் பவரை விட படு மகிழ்சியகவே உள்ளது .

இது போன்று நம் ஊருக்கு தமிழக அரசால் வரகூடிய பல நல்ல அறிய திட்டக்களை கிடைக்க பெறவும் & நம் ஊருக்கு பல நல்ல அறிய திட்டக்களை நமது நகர்மன்றத் முலம் பெற்று நல்லது செய்திடவும். ஐக்கியப் பேரவை + நம் ஊர் முக்கியமான ஜமாதுகளும் / ஊருக்கு பல நல்ல காரியங்கள் செய்து வருகின்ற ...அமைப்புகளும் /சங்ககளும் /ஊர் பெரிய மனிதர்களும் /நம் நகர்மன்றத் தலைவர் அவர்களும் மற்றும் மரியாதை கூறிய நமது வார்ட் தலைவர்களும் ஒற்றுமையுடன் ஒன்றாக இப்போது இருபது போன்று கைகோர்த்து எப்போதும் இருக்க வேணும் என்பது தான் நம் யாவர்களின் கனவும் + நினைபோடு உள்ளோம்.அப்போது தான் நம் தலைவி சொன்னது போன்று நம் நகர் மன்றத்தை ....தமிழகதிலேயே மிக சிறந்ததோர்... நகர் மன்றமாக உருவாக்கி கட்டலாம்.

இதை நினைவாக்க நம் மன்ற தலைவிக்கு சாப்போடு தேவை பட்டது. அது இப்போது கிடைத்து விட்டது. நம் ஊருக்கு கண்டிப்பாக """ ஐக்கியப் பேரவையும் தேவை என்பதை பொதுவாக நம் மக்களும் புரிந்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

நம் ஐக்கியப் பேரவை தலைவர் அவர்களும் & நம் நகர்மன்றத் தலைவர் அவர்களும் பக்கதில் ஒன்றாக இருந்து மகிழ்வோடு உரையாடுகிற ஒரு அற்புதமான காட்ச்சியே .... நம் ஊர் மிகவும் சிறப்புடன் விளங்க போகிறது என்று தெரிகிறது.

நமது நகர்மன்றத் தலைவர் அவர்களின் பேச்சே மிக கண்ணியமாகவும் / ஒற்றுமையாகவும் ( பண்புடன் ) உள்ளது.

நமது ஊருக்கு துணை மின் நிலையம் கண்டிப்பாக தேவை தான். இதற்காக பெரும் பாடு பட்ட நமதூர் ஐக்கியப் பேரவைகும் / பெரிய மனிதர்களுக்கும் / நிலத்தை குறைந்த விலைக்கு தந்த அந்த நல்ல மனித குடும்பதுக்கும் ( நம் ஊருக்க இந்த குடும்பம் எவ்வளவு நிலங்களை தந்து உதவி உள்ளார்கள் என்பதை பார்க்கும் போது இவர்களின் ஹக்கில் நாம் ஒவ்வொருவரும் துவா கேட்டே வரணும் ) இதற்காக கடுமையாக உலைத்த நல்ல உள்ளங்களுக்கும் / பொருள் உ தவி தந்த மரியாதை கூறியவர்களுக்கும் மனதார நாம் பாராட்டி துவா செய்வோமாக.

மின்வாரிய அதிகாரிகள் அவர்களே தாங்கள் கூறியது போன்று இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் எங்கள் ஊரில் ஏற்பட்டு இருக்கும் இந்த பவர் பற்ற குறையை நீக்கி தருவிர்கள் என்கிற முழு நம்பிகையுடன் காத்தும் ..... எதிர் பார்த்தும் .... உள்ளோம். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. ஏன் இந்த தேவை இல்லாத சடங்குகள்??
posted by ceylon fancy kazhi. (Jeddah) [22 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19519

ஊருக்கு ஒரு நன்மை நடக்கிறது என்றால் ஊர் மக்கள் அனைவருக்கும் சந்தோசம்தான். அதில் மாற்று கருத்துக்கு இடமே இல்லை .வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள்!!! ஆனால் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பூமி பூஜை போன்ற சடங்குகள் நடந்துள்ளதே ,ஊர் பெரியவர்கள் ஏன் இதை கண்டு கொள்ளவில்லை? நம் மக்களுடைய பணத்தில் வாங்கி கொடுக்கப்பட்ட நம்முடைய நிலம் தானே! இதில் எதற்கு மாற்று மத கலாச்சார சடங்குகள்?நம்முடைய ஈமான் பலவீனமாகி விட்டதோ என்று எண்ண தோன்றுகிறது...அல்லாஹ் நம் அனைவருடைய ஈமானையும் பலபடுத்துவானாக ....ஆமீன்.

Moderator: துஆவுடன் அடிக்கல் நாட்டு விழா துவக்கப்பட்டது மட்டுமே ஐக்கியப் பேரவை சார்பில் செய்யப்பட்டது. மற்ற பூஜை காரியங்கள், (முஸ்லிமல்லாத) மின் வாரிய அதிகாரிகளால் செய்யப்பட்டது. களத்தில் கண்டதை முழுமையாக அளிக்கவேண்டும் என்ற அடிப்படையிலேயே இச்செய்தியில் பூஜை நிகழ்வும் குறிப்பிடப்பட்டுள்ளது. நடைபெற்ற பூஜையில் மின்வாரிய அங்கத்தினரைத் தவிர வேறெவரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்...
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (kayalpatnam) [22 June 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 19528

மாஷா அல்லாஹ்! ஊரின் ஒற்றுமையும், உன்னத மார்க்கத்தின் ஒன்றுபட்ட வழிகாட்டுதலின் வலிமையையும் நம்மூருக்கு உணர்த்தும் ஒப்பற்ற காட்சி .

இக்க காட்சியைக்காணத்தான் காலமெல்லாம் காத்து கிடந்தோம். அக்கனவு கனிகள் நினைவுக் கனிகளாக கனிந்து நம் கைகளில் தவழுகின்ற நிலையை தந்திட்ட அந்த அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்,புகழ்ச்சியும் உரித்தாகட்டும்!

இப்புண்ணிய பணிக்கு பெருந்தன்மையுடன் பாடுபட்ட அத்தனை நல் உள்ளங்களுக்கும் அல்லாஹ்வின் அத்தனை உதவியும் கிடைகட்டுமாக! அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:ஐக்கியப் பேரவை சார்பில் த...
posted by Mohamed Salih (Bangalore) [23 June 2012]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 19542

பார்க்க மிக சந்தோசம் ,, எல்லா புகழும் வல்ல இறைவனுக்க ..

என்றும் அன்புடன்
பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் ஸாலிஹ் கே.கே.எஸ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியமே.....
posted by s.s.md meerasahib. (riyadh) [23 June 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19556

அஸ்ஸலாமு அலைக்கும். என் அன்பு காயல் நல்லுள்ளம்களே.... நமக்கு இந்த நிகழ்வை பார்ப்பதர்க்கு ரெம்பவும் சந்தோசமாக உள்ளன. நமது பெரியவர்களின் பெரும் முயற்ச்சியால் துணை மின் நிலைய அடிக்கல் நாட்டு விழா! மற்றும் கூடிய விரைவில் முடிவு அடைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஒன்றிணைத்து நம் ஒற்றுமையை வெளிப்படுத்திய நம் அனைத்து இயக்கம்களுக்கும் நல் வாழ்த்துக்கள்.

இது போன்றே........ நம் பெரியவர்களிடம் ஊரின் எல்லா நல்ல விசயத்திலும் நகர்மன்ற தலைவர் ஒன்றுபட்டு, கலந்தாலோசித்து முடிவெடுத்தால் காயலுக்கு வெற்றி நிச்சயம். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:ஐக்கியப் பேரவை சார்பில் த...
posted by VSM.HASSAN (dubai) [23 June 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19558

பார்க்க மிகவும் சந்தோசமா இருக்கு. உண்மைலேயே நீங்கள் பெரியவர்கள்தான். உங்களின் பணி நம் ஊருக்கு அவசியம் தேவை. இன்னும் பல உதவிகளை பெரியவர்களாகிய நீங்கள் செய்ய எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்வனக ஆமின்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:ஐக்கியப் பேரவை சார்பில் த...
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [23 June 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 19566

Though number of invitations concerning kayal's welfare given by Chairman have largely fallen on deaf ears, Chairman has responded positively to the invitation extended by the elders for a good cause. "Reciprocation" is the need of the hour, not "ego".

"United we stand, divided we fall".

Congratulation to all.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:ஐக்கியப் பேரவை சார்பில் த...
posted by S.A. புஹாரி (smb) (makkah) [24 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19593

மாஷா அல்லாஹ் பார்க்க படிக்க மிகுந்த சந்தோசம். இந்த ஒற்றுமை உணர்வு என்றும் நமதூர் நன்மைக்காக தழைத்து ஓங்க அல்லாஹ் அருள் புரிவான் இந்த திட்டத்திற்கு உதவிய இப் பணிக்கு பெருந்தன்மையுடன் பாடுபட்ட அத்தனை நல் உள்ளங்களுக்கும் அல்லாஹ் மேலும் மேலும் பறக்கத்துகளை அளிப்பானாக ஆமீன்.......

புஹாரி மக்காஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. அருள்வாய் யாஅல்லாஹ்!...
posted by s.m.h. mohideen thamby ( KUDACK ) (QATAR) [24 June 2012]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 19595

நகரத்தின் மதிப்பிற்குரிய பெரியவர்களும், நகர் மன்ற பொறுப்பாளர்களும், சமூக அமைப்புகளும், மின்வாரிய ஊழியர்களும் கலந்து கொண்டுள்ள, துணை மின் நிலையத்திற்கான இடம் அர்ப்பணிப்பு விழா மாஷாஅல்லாஹ் கண்கொள்ளாக் காட்சி.

எல்லாம் வல்ல இறைவன், என்றும் நமது ஊருக்காகப் பாடுபடும் நமது பெரியவர்கள், இளைஞர்கள், சமூக ஊழியர்களுக்கு நன்னலத்தையும், வாழ்வில் எல்லா வளத்தையும் அருள வல்ல இறைவனை, இரு கரமேந்தி இறைஞ்சுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved