Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:10:06 AM
ஞாயிறு | 1 செப்டம்பர் 2024 | துல்ஹஜ் 1858, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5612:2215:2518:3119:41
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:09Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்04:40
மறைவு18:26மறைவு17:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5805:2305:48
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4719:1119:36
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8661
#KOTW8661
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுன் 28, 2012
நகர்மன்றத் தலைவரின் பதிலுக்கு - உறுப்பினர் லுக்மான் பதில் அறிக்கை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 6215 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (39) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 8)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்ற 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தன்னிலை விளக்கம் ஒன்றினை அண்மையில் வெளியிட்டிருந்தார். அதில் இடம்பெற்றிருந்த - நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் குறித்த விமர்சனங்களுக்கு - நகர்மன்றத் தலைவர் பதில் அளித்திருந்தார். நகர்மன்றத் தலைவரின் பதிலுக்கு - உறுப்பினர் லுக்மான் மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மரியாதைக்குரிய நகர்மன்றத் தலைவி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த 16.06.2012 அன்று நான் வெளியிட்ட தன்னிலை விளக்கத்திற்கு தாங்க்ள 22.06.2012 அன்று என் மீது பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி நீண்ட விளக்கம் அளித்திருந்தீர்கள். இந்த அறிக்கை யுத்தம் தொடர வேண்டாம் என்று அன்பர்கள் சிலர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இருந்தாலும் தாங்கள் என் மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்தால் தான் நடுநிலையான மக்களுக்கு உண்மை தெரியவரும் என்ற அடிப்படையில் கீழ்க்கண்ட விளக்கத்தை தருகிறேன்.

1. அதிகாரிகளின் செயல்பாடு குறித்து:

தலைவி அவர்களே, தங்களிடம் ஒரு அலுவலரின் பெயரைச் சொல்லி அவர் லஞ்சம் வாங்கியதை ஆதாரத்துடன் சொன்ன பிறகும,; அவரை அழைத்து குறைந்த பட்சம் எச்சரிக்கை கூட செய்யவில்லையே ஏன்? இது தங்கள் பணியில் அலட்சியத்தைக் காட்டவில்லையா?

முன்னால் ஆணையர் (பொறுப்பு) சுப்புலெட்சுமி அவர்களை மாற்ற ஏற்பாடு செய்ததாக சொல்லும் தாங்கள், நேர்மையான அதிகாரியான சக்திகுமார் அவர்களும் அலுவலர் அஜித் குமார் அவர்களும் மற்றறாலாகி செல்லும் போது அமைதி காத்தது ஏன்? தாங்கள் நினைத்தால் உயர் அதிகாரிகளிடம் சொல்லி அவர்களை இங்கேயே பணியைத் தொடர செய்திருக்க முடியாதா? விளைவு, அலுவலர்கள்; பற்றாக்குறை.

2. உறுப்பினர்களுடன் பழகியது குறித்து :

தலைவி அவர்களே, நீங்கள் உறுப்பினர்கள் மீது மன்றக் கூட்டத்திலேயே கடுஞ்சொற்களை உபயோகித்தத்தற்கும் பிறகு வருத்தம் தெரிவித்தற்கும் அங்கு இருந்த அனைவருமே சாட்சி ஆவார்களே!

உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை பெற்ற பிறகு எல்லா உறுப்பினர்களுடன் ஒன்றாக அமர்ந்து பேச மாட்டேன், வேண்டுமானால் தனித்தனியாக பேசத்தயார் என்று கூறினீர்கள். இப்போது வசதியாக ஒன்றாக அமர்ந்து பேச மாட்டேன் என்று சொன்னதை மறைத்து விட்டு கூறுகிறீர்களே ஏன்? தனித்தனியாக அழைத்து பேசுவது தான் TEAM WORK ஆகுமோ? ஏன் இந்த பிரித்தாளும் சூழ்ச்சி.

இந்த சந்திப்பின் போது கவுன்சிலர்கள் எல்லோர்களும் லஞ்சம் வாங்க முடியாமல் போனதால் தான் எல்லோர்களும் ஒன்று சேர்ந்திருக்கிறீர்கள் என்று ஆவேசமாக ஒட்டுமொத்தமாக எல்லோர்கள் மீதும் பழி சுமத்தினீர்களே? இது உண்மை தானா? என்று உங்கள் மனசாட்சிக்கும,; இறைவனுக்கும் நன்கு தெரியும் தானே?

3. தன்னிச்சையாக முடிவெடுப்பதாக விமர்சனம் :

தலைவி அவர்களே, நான் எனது அறிக்கையில் கூறாததை நீங்களாகவே கேள்வி எழுப்பி பதில் சொல்லியிருக்கிறீர்கள். நான் இது வரை ஒரே ஒரு கூட்டத் தீர்மானத்தை எழுதும்போது மட்டும் தான் தங்களுடன் உடன் இருந்திருக்கின்றேன். ஆனால் இதுவரை 7 கூட்டங்கள் நடந்திருக்கின்றன.

2-வது கூட்டத்தில், 5-வது வார்டு உறுப்பினர் ஜஹாங்கீர் அவர்கள் முன்வைத்த பொருளான, உறுப்பினர்கள் சார்பாக மற்றவர்கள் செயல்படக் கூடாது என்ற பிரச்சனைக்கு மன்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக மினிட் புக்கில் தீர்மானம் எழுதியிருக்கிறீர்கள். அது சட்டத்திற்கு புறம்பானது என்பது தங்களுக்கு தெரியாதா?

4. துணைக் குழுக்கள் அமைத்திட முயற்சி :

தலைவி அவர்களே, துணைக்குழுக்கான ஆலோசனைக் கூட்டத்தை 12-வது வார்டு உறுப்பினர் சுகு அவர்கள் வீட்டில் நடத்த தலைவி ஆகிய நீங்களும் சேர்ந்து தான் ஆர்வத்துடன் முடிவெடுத்து விட்டு, மற்றவர்கள் கூறினர் என்று சொல்லியிருக்கிறீர்கள். இப்படி முடிவெடுத்த மறுநாள், தலைவி ஆகிய நீங்கள் எனக்கு போன் செய்து சுகு வீட்டிற்கு வர முடியாது, உங்கள் வீட்டில் நடத்தலாம் என்றீர்கள். அதற்கு நான், உங்கள் வீட்டிற்கு வரமாட்டோம், எங்கள் வீட்டில் கூட்டத்தை நடத்துவோம் என்று சுகு அவர்களிடம் தடாலடியாக என்னால் சொல்ல இயலாது. வேண்டுமானால் நகர்மன்றத்தில் நடத்தலாம் என்று கூறி அதன்படி நடந்தது.

அப்படி குழுக்கள் அமைப்பது பற்றி ஆலோசனையிலும் கூட, குழுக்கள் அமைத்தாலும் நான் சொல்வதுபடி தான் முடிவெடுக்க வேண்டும். அந்த குழுக்களுக்கு அதிகாரம் இருக்கக் கூடாது என்று TEAM WORK முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டீர்கள். இப்போது உறுப்பினர்கள் ஒத்துழைக்கவில்லை என்ற பொய்யான குற்றச்சாட்டை கூறுகிறீர்கள்.

5. மக்கள் குறைதீர் கூட்டம் :

தலைவி அவர்களே, மக்கள் குறைதீர் கூட்டம் அவசியம் இல்லை என்று ஒருபோதும் கூறவில்லை. முந்தைய கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் மீது என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பதைப் பற்றி ஆராயத்தான் சொன்னேன். சுமார் 90% மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை என்பது தான் உண்மை நிலை. அதனால் தான் ஏப்ரல் மாதம் நடந்த கூட்டத்திற்கு நான் வரவில்லை என்றேன்.

மாறாக மக்கள் குறைதீர்க் கூட்டங்கள் அவசியம் இல்லை என்று நான் கூறியதாக பச்சையாக பொய்யுரைக்கிறீர்கள்.

6. உறுப்பினர்களின் ஆலோசனைகளை மதிப்பதில்லை :

தலைவி அவர்களே, தெரு விளக்கு பராமரிப்பதில் மின்வாரிய அலுவலகம் அலட்சியம் காட்டுவதால் பல விளக்குகள் நீண்ட நாட்களாக எரியாத நிலையில் உள்ளதால் (சில உறுப்பினர்கள் அல்ல), இரு உறுப்பினர்களைத் தவிர மற்ற எல்லா உறுப்பினர்களும் தனியாரிடம் பொறுப்பை வழங்கலாம் என்ற கூறியதின் அடிப்படையில் தங்களின் வேண்டுகோளின் பேரில் தான் துணைத்தலைவர் அவர்களும், சுகு அவர்களும், நானும் நாகர்கோவில் சென்று அங்கு நடைமுறையில் இருக்கும், தெரு விளக்கு தனியார் பராமரிப்பு ஒப்பந்த விபரம் நகல்கள் அனைத்தையும் ஜனவரி மாதம் கொண்டு வந்து கொடுத்தோம்.

அதன்பிறகும் அதை ஏற்றுக்கொள்ளாமல் ஒரு சில தனி நபர்கள் கூறிய ஆலோசனையின்படி LED விளக்குகளை நாம் வாங்கி பொறுத்தலாம். தனியார் வசம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றே கூறி வந்தீர்கள். இப்போது பிரச்சனை அதிகமான போது தான் தனியாருக்கு வழங்குவது பற்றிய விசாரணையில் ஆர்வம் காட்டுகிறீர்கள். இந்த முயற்சியை ஜனவரி மாதமே எடுத்திருந்தால் இப்போது பிரச்சனை தீர்ந்திருக்கும்.

நான் தலைவியாகிய தங்களுக்கு மதிப்பு அளிக்கும் நோக்கத்தில் தான் மின்வாரிய பொறியாளரை நீங்கள் உங்கள் அலுவலகத்திற்கு அழைத்து பேசுங்கள் என்றேன்.

சுனாமி குடியிருப்பு விஷயமாக ஐக்கிய பேரவைக்கு சென்று பேசலாம். வாருங்கள் என்று நான் கூறிய போது நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்றத் தலைவி. அவர்கள் வேண்டுமானால் என்னை வந்து சந்திக்கட்டும் என்ற உங்களுக்கு மின்வாரிய பொறியாளரை சந்திக்கப் போகும் போது மட்டும் நீங்கள் உயர்ந்த பதவியில் உள்ள தலைவி என்ற நிலை மறந்து விட்டதோ? அல்லது மி.வா.பொறியாளரை விட ஐக்கிய பேரவை நிர்வாகிகள் தகுதியில் குறைவானவர்கள் என்ற நினைப்பா?

பெண் கவுன்சிலர்கள் உட்பட ஒரு சில கவுன்சிலர்களிடம் மின்வாரிய ஊழியர்கள் சிலர் மிகவும் தன்மையற்ற முறையில் பேசியதால் தான,; நான் புகார் கொடுக்க முயன்றேன். ஆனால் யாரிடமும் நான் இதுவரை அவர்களைப் பற்றி, புகார் கொடுக்கவே இல்லை. என் புகாரினால் தான் அவர்கள் நகராட்சிக்கு வர மறுக்கிறார்கள் என்கிறீர்கள். அவர்கள் வர மறுத்த பிறகுதான் நான் புகார் கொடுக்கவே முற்பட்டேன். இருந்தாலும் புகார் கொடுக்கவில்லை.

7. அப்பட்டமான பொய் :

தலைவி அவர்களே, சென்னை செல்லும்போது பயணத்திற்கு டிக்கட் எடுக்கும் வேலைக்கான பொறுப்பை யாராவது ஒருவர் மேற்கொள்வது எனவும், செலவுகள் அனைத்தையும் வருகின்றவர்கள் பகிர்ந்து கொள்வது என்றும், ஆரம்பத்திலேயே நீங்கள் உட்பட எல்லோர்களும் சேர்ந்து முடிவு செய்து, அந்த பொறுப்பை சுகு அவர்களிடம் ஒப்படைத்தோம். அதன்படி அவர் தான் டிக்கட் புக் செய்தார். அதன் பிறகு அதற்கான தொகை அவரிடம் கொடுக்கப்பட்டது. நீங்கள் சொல்வதுபோல் வேண்டாம் என்று தடுத்திருந்தால் வேறு யாராவது அல்லவா டிக்கட் எடுத்திருக்க வேண்டும். இதற்கு எல்லா உறுப்பினர்களும் சாட்சி.

மேலும் மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல், ஒர் அப்பட்டமான, பொய்யான குற்றச்சாட்டை நான் வேறு ஒன்றுக்கு கூறியதை சென்னை செல்லும் நிகழ்ச்சியோடு ஒப்பிட்டு பேசுகிறீர்கள்.

அது என்னவென்றால் பதவியேற்ற புதிதில் தலைவி உட்பட எல்லா உறுப்பினர்களுக்கும் T.Nagar LKS டைரியும், காலண்டரும், துணைத் தலைவர் அவர்களால் அன்பளிப்பாக தரப்பட்டது.

இதைப் பற்றி பேசும்போது தான் இப்படிப்பட்ட அன்பளிப்புகள் மார்க்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது தான், இது தவறில்லை என்று கருத்து கூறினேன். இதை அப்படியே உல்டாவாக மாற்றி, சென்னை செல்லும் நிகழ்ச்சியோடு பொறுத்துகிறீர்கள்.

அது சரி, அந்த டைரியை நீங்களும் பெற்றுக் கொண்டீர்களே அப்போது அதில் சென்னை தொழிலதிபரின் பணம் இருக்கிறது என்று தங்களுக்குத் தெரியாதா?

8. மீன் சந்தை குறித்து :

தலைவி அவர்களே, மீன் சந்தை பிரச்சனையில் கூட இப்போது பேச வேண்டாம், இன்றும் நாட்கள் இருக்கிறது பேச்சு வார்த்தையை ஒத்திப் போடலாம் என்று நீங்கள் சொன்னபோது, தங்களிடம் எதையும் ஒத்திப்போடாதீர்கள் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண முயலுவோம் என்றேன். அதை வசதியாக மறைத்து விட்டு எதற்கெடுத்தாலும் மக்கள் மக்கள் என்று கூறாதீர்கள் என்று வேறு ஒரு சம்பவத்தின் போது, இன்னொரு உறுப்பினர் சொன்ன வார்த்தையை நான் சொன்னது போல் ஜோடிக்கிறீர்கள்.

பொதுநல அமைப்புகள், பொது நல அமைப்புகள் என்று அங்கலாய்க்கிறாரே ஐக்கிய பேரவை என்ற பொதுநல அமைப்பு ஒன்று இருப்பது இவருக்கு தெரியாதா? என்றைக்காவது எந்த பிரச்சனைக்காவது ஐக்கிய பேரவையை இவர் அழைத்திருக்கிறாரா? ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி.

TWAD குழு நகராட்சிக்கு வந்தபோது, கவுன்சிலர்களுடன் எங்கள் கோமான் தெருவைச் சார்ந்த 2 நபர்கள் இருந்தததை 13- வது வார்டு கவுன்சிலர் சம்சுதீன் அவர்கள் என்னிடம் ஆட்சேபம் தெரிவித்து அவர்களை வெளியே போகச் சொல்லுமாறு சொன்னபோது, அதை நான் சொல்ல முடியாது, தலைவி அவர்கள் தான் சொல்ல வேண்டும் என்று நான் கூறுகிறேன். அதன் பிறகு தலைவி அவர்களிடம் கவுன்சிலர்களுடன் TWAD குழு மீட்டிங் என்று சொல்லி விட்டு, எங்களுக்கு தெரிவிக்காமலே தனி நபர்களை அழைப்பதை ஆட்சேபித்தது உண்மை. ஆனால் எங்களுக்கு சமமாக எப்படி அவர்களை உட்காரச் சொல்வீர்கள் என்று நான் கூறவே இல்லை. நான் சொல்லாத வார்த்தையை சொல்லியதாக கூறி எங்கள் கோமான் ஜமாத்திலும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்ள நினைக்கிறீர்கள்.

தலைவி அவர்களே, எங்கள் கோமான் ஜமாஅத்தில் எங்களுக்குள் என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் உங்களைப் போன்ற மூன்றாம் நபர்களின் சூழ்ச்சிக்கு இறையாகி ஒரு போதும் நாங்கள் பிரிந்து விட மாட்டோம். எனவே அந்த முயற்சியை கைவிட்டு விடுங்கள்.

நகராட்சி தலைவருக்கு வாகனம் ஏற்பாடு செய்யுமாறு நாங்கள் கேட்டது உண்மை. ஆனால் அதில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்று சொல்வது தான் பொய். அப்படி விருப்பம் இல்லாமலா எனக்கு 600 ரூபாய் படி வேண்டாம். கார் வாங்கி தாருங்கள் என்று நகர்மன்றக் கூட்டத்திலே எழுந்து நின்று ஆர்வமாக கூறினீர்கள்.

வரவு செலவு கணக்குகளை நகர்மன்றக் கூட்டத்தில் விவாதித்தால் தான் மினிட் புக்கில் ஏற்ற முடியும் என்ற காரணத்தினால்தான் Unofficial கூட்டம் வேண்டாம் என்கிறோம்.

வெளியூர் ஒப்பந்தக்காரர்கள் பதிவு செய்வதை யாரும் ஆட்சேபிக்கவில்லை. IUDM திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தை செலவழிக்கவில்லை என்றால் அது நகராட்சிக்கு மிச்சமாகாது. அரசுக்குத்தான் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற விஷயம் தெரியாமல் நகராட்சிக்கு 12 லட்சம் மிச்சம் பிடித்து கொடுத்ததாக சொல்கிறீர்கள்.

9. முன்மாதிரியான நகராட்சி :

தலைவி அவர்களே, ஊருக்கு நல்லது செய்ய எல்லா பொது நல அமைப்புகளுடன் (ஐக்கிய பேரவை தவிர, ஏனென்றால் அவர்கள் ஊருக்கு கெடுதி செய்ய நினைப்பவர்கள்?) ஆலோசித்து நகருக்கு தேவையான நலத்திட்டங்கள் கிடைக்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்று நான், நான் என்று தன் புராணம் பாடாதீர்கள்.

அப்படி என்றால் உறுப்பினர்கள் யாரும் எந்த முயற்சியும் செய்வதில்லையா? உறுப்பினர்களான நாங்களும் எங்களால் ஆன முயற்சிகளை செய்யத்தான் செய்கிறோம். ஆனால் நாங்கள் கேமராமேன் துணையுடன் செல்லாததால் அது வெளியே தெரிவதில்லை.

குறுக்குவழியில் செல்வோருக்கோ, லஞ்சம் வாங்க முனைவோருக்கோ நீங்களென்ன, நாங்களும் தான் துணை போக மாட்டோம். அது அதிகாரிகளாக இருந்தாலும் சரி நகர்மன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி நகர்மன்றத் தலைவியாக இருந்தாலும் சரி.

இறுதியாக உங்களைப்போல் தான் நாங்களும் கூறுகிறோம். உறுப்பினர்களின் உதவியோடு ஒன்றிணைந்து செயல்படுவோம், வாருங்கள் என்று. ஆனால் நீங்கள் தான் உறுப்பினர்கள் ஒன்றிணை வேண்டாம். தனித்தனியாக என்னிடம் ஆலோசனை கூறுங்கள் என்கிறீர்கள்.

தலைவி அவர்களே! இன்னும் காலங்கள் இருக்கிறது. உறுப்பினர்களை அரவணைத்து அவர்களும் உங்களைப் போல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் என்று மதித்து, அவர்களின் நல்ல ஆலோசனைகளை ஏற்று கூட்டாக செயல்பட்டு நல்ல நிர்வாகத்தை மக்களுக்கு அளிக்க முன்வாருங்கள்.

இறுதியாக, ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகிறது. நாம் யாரை ஆதரிக்கிறாமோ அவர்களைத் தொடர்ந்து ஆதரித்துக் கொண்டு தான் இருக்க வேண்டும். யாரை எதிர்க்கிறாமோ அவர்களைத் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டு தான் இருக்க வேண்டும். நாம் ஆதரிப்பவர்களிடம் குறை கண்டு அவர்களை எதிர்த்தால் மக்கள் நமக்கு பல பட்டங்களைச் சூட்டத் தயாராக இருக்கிறீர்கள்.

அவர் அவர்கள் செயல்களுக்கு அவர் அவர்களே பொறுப்பாளி ஆவார்கள். எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்.

வஸ்ஸலாம்.

இவண்,
A.லுக்மான்
(1-வது வார்டு உறுப்பினர்)


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நகர்மன்றத் தலைவரின் பதிலு...
posted by koman babu (India) [28 June 2012]
IP: 123.*.*.* Malaysia | Comment Reference Number: 19649

லுக்மான் அவர்கள் நடுநிலை இல்லாமல் தடுமாறி பதில் தருகிறார் என்பது இந்த அறிகையின் வாயிலாக தெரிகிறது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நகர்மன்றத் தலைவரின் பதிலு...
posted by Nafeela (Bangkok) [28 June 2012]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 19650

சபாஷ் சரியான போட்டி

தலைவியோட அறிக்கை பார்த்து சிலர் சகோதரர் லுக்மான் பொய் சொல்வதாக கருதினார்கள் இப்ப தெரிந்தது யார் பொய் சொல்றாங்கன்னு !

இப்படி நகர்மன்றம் இருந்ததால் விளங்கி விடும் "காயல் "


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நகர்மன்றத் தலைவரின் பதிலு...
posted by P.S.ABDUL KADER (JEDDAH) [28 June 2012]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19653

தன்னிலை விளக்கம் என்ற பெயரில் காயல்பட்டிணம் நகர மன்றத்திற்க்கு அவதூர்,வீண் பழி ஒருவர்க்கு ஒருவர் சொல்லிக்கொண்டு இருக்காமல் நடந்த தவறுதனை உணர்ந்து, அந்தந்த பகுதி மக்களின் தேவைகளை ஒளிவு மறைவு இல்லாமல், காலம் தாழ்தாது,பிரதிபலன் எதிர் பாராமல் ஆக்கபூர்வமாக நகரமன்ற தலைவியின் ஒத்துழைப்புடன் அணைத்து வார்டு உறுபினர்களும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Enough is Enough !!
posted by M Sajith (DUBAI) [28 June 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19654

"வேண்டாத மருமகள் கைபட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்" என்ற கதையாகிவிட்டது...

சகோதரர் லுக்மான் அவர்களே, தங்கள் மீது யாவரும் நம்பிக்கை இழக்கவுமில்லை உங்களை மற்ற உறுப்பினர்கள் அனைவரைவிடவும் கண்ணியமானவராகத்தான் இன்றும் கருதுகிறோம்...

பரஸ்பரம் புரிதலில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு அறிக்கை வடிவம் தந்து ஒரு நிர்பந்த்தத்தை தங்களுக்கு தாங்களே ஏற்படுத்திக்கொண்டது தான் உண்மை.

தலைவி தவறுக்கு அப்பாற்பட்டவரில்லை என்பதும் தெரியாத ஒன்றில்லை. தவறுகளே இல்லாத மனிதனுமில்லை. (மனித இனம் அனைவருமே தவறு செய்பவர்தாம், அதில் சிறந்தவர் தம்மை திருத்திக் கொள்பவர் - என்ற இறைவசனத்தை நான் சொல்லித்தெரியும் நிலையில் நீங்கள் இல்லை)

அனாவசியமான இந்த "ஈகோ" போரால், அவசியமான கருத்து பரிமாற்றங்கள், சாடுவதிலும் பாடுவதிலிலுமாக கழிய காரணம் உங்களில் முதல் அறிக்கைதான் - இது தான் வருத்தமான உண்மை.

ஒளிப்பதிவில் கேட்ட குரல்கள் தங்களது இல்லை என்பது பரவலாக எல்லோருக்கும் தெரியும் - இதில் பேசப்பட்ட தகவல்களை விடுத்து அவசியமில்லாத திசை திருப்பத்தை ஏற்படுத்தியது உங்களின் நோக்கமானால் - இறைவனுக்கு நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

அது உங்கள் நோக்கமில்லை என்றால், தொடர்ந்தது காரணங்களும், விளக்கங்களும் அளித்து அடிப்படை பிரச்சினையான ஊழலுக்கு (கண்டுகொள்ளாமல் இருந்தது) துணை போய்விடவேண்டாம்.

துணை தலைவர் தேர்வு முதலே 'ஒத்துழையாமை' வழியை தொடங்கிய கூட்டம், ஆறுமாதம் தாங்காது என்றனர், ஆறுமாதமும் தாண்டியதால் அடுத்த முயற்சியில் இறங்கியுள்ளனர். தலைமையை "Unfit" என சித்தரிப்பதால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரலாம் (ஒரு வருடம் கழித்துத்தான் இதை செய்ய முடியும் என்பதால்) இப்போதே அதற்கான வேலையை துவங்கிவிட்டனர்.

இதற்கு தாங்களும் துணை போனால், மற்ற எவரையும் விட நீங்கள், தவறின் குற்றத்துக்கும் இறைவன் மீது ஆணையிட்டு உறுதி மொழி வழங்கியதுக்காகவும் குற்றம் பிடிக்கபடுவீர்கள் என்பதை உணர்ந்தது செயல்பட இறைவனின் துணைக்காக பிராத்திக்கிறோம்...

உங்கள் பணிகளை தொடருங்கள், தவறை சுட்டிகாட்டுங்கள் அதற்கு அறிக்கைகளும் தன்னிலை விளக்கங்களும் அவசியமில்லை...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நகர்மன்றத் தலைவரின் பதிலு...
posted by shaik sinan (bangkok) [28 June 2012]
IP: 115.*.*.* Thailand | Comment Reference Number: 19655

ப்ளீஸ் இனி eantha கமெண்டும் போட வண்டாம். மனஸ்தாபம் தான் வரும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:நகர்மன்றத் தலைவரின் பதிலு...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [28 June 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 19657

திருபவும் முதல்லிருந்த....? சபாஹ்.. சரியான போட்டி ? எப்பிடியோ ஒரு உண்மை வெளியில் வந்தால் அனைவர்க்கும் (காயல் மக்கள்) நலம். இனி கருத்து மழைதான்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நகர்மன்றத் தலைவரின் பதிலு...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh (Now @ KPM)) [28 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19659

1வது வார்டு உருப்பினர் அவர்களே, மக்கள் தங்களை தேர்ந்தெடுத்தது அவர்களுக்கு சேவை செய்ய தானே? இப்படி அறிக்கை மேல் அறிக்கை விட அல்ல, தாங்கள் கூறும் குற்றச்சாட்டு உண்மையகாக இருக்கும் பட்சத்தில் தகுந்த ஆதாரத்துடன் அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து தலைவி மேல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுங்கள்.

“நகர்மன்ற உறுப்பினர் பதவி என்பது நான் ஆசைப்பட்டு இதற்காக கடும் முயற்சி செய்து பெற்றது அல்ல. இந்த பொறுப்பு எங்கள் கோமான் ஜமாஅத்தால் என் மீது அமானிதமாக தரப்பட்டதாகும்” என்று தங்களின் தன்னிலை விளக்கத்தில் கூறியிருந்ததும், தேர்தல் சமயம் வார்டு உறுப்பினர் பதவிக்கு தாங்கள் போட்டியிட விருப்பு மனு அளித்தவர்களில் ஒருவர் என்று இதே வலைதளத்தில் வெளியான செய்தியும் மக்கள் அனைவருக்கும் தெரியும். பதவிக்கு ஆசை படாதவர் ஏன் விருப்ப மனு அளிக்க வேண்டும்? உண்மைக்கு புறம்பான தங்களின் தன்னிலை விளக்கத்தின் இந்த முதல் வரி அனைவரும் அறிந்ததே........

Dear Admin:

தன்னிலை விளக்கம் என்கின்ற பெயரில் இனி அனைத்து துறை சார்ந்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும், இது ஒன்றும் Personal Blogspot-இல்லை, எனிவே அதுபோன்ற கட்டுரைகள்/தன்னிலை விளக்கங்களை பிரசுரித்து வலைதளத்தின் தரம் தாழ்த்திகொள்ளவேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:நகர்மன்றத் தலைவரின் பதிலு...
posted by mohamed mukthar (mumbai) [28 June 2012]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 19661

அட போங்கப்பா ஆ ஊ நா தன்னிலை விளக்கம்.. போயி வேலையே (சேவை செய்ய) போங்கப்பா!. கொஞ்ச விட்ட நல்லதான் போகுது... நீங்கள் செய்வது இறை பணி, மக்களிடம் அதற்கான கூலியை எதிர் பார்பதும், தங்களை நியாய படுத்துவதும் பிறரை எதிர்ப்பதும் சிறந்ததல்ல. நமது அணைத்து கருத்துகளும் பிற மத சகோதரர்களால் நன்கு கவனிக்க படுகிறது. ஒரு முஸ்லிமின் குறையை வெளிபடுத்துவதை விட நாம் அவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கலாம்.

வல்ல அல்லாஹ் நம் அனைவர்க்கும் பொறுமையும், நல்ல எண்ணங்களையும் தருவானாக! ஆமீன்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:நகர்மன்றத் தலைவரின் பதிலு...
posted by nizam (kayalpatnam) [28 June 2012]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 19662

லுக்மான் காக்க அவர்களுக்கு நான் உங்கள் மேல் எந்த அளவுக்கு மரியாதை வைத்திருக்கிறேன் என்பதை இதே கமெண்டில் பழையதை அழுத்தி பார்த்தால் புரியும். தயவு செய்து மீண்டும் ஐக்கிய ஜமாத்தை பெரிய ஆளாக ஆக்க முயற்சி செய்ய வேண்டாம்.

கடந்த தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு ஊரில் ஆதரவு இல்லை என்பது நிரூபணம் ஆகிவிட்டது. அல்லா மீது ஆணையாக சொல்கிறேன். இவ்வளவு செயல்படும் தலைவரை நான் என் வாழ்நாளில் கண்டதில்லை. தங்களும் தலைவிக்கு ஆதராக ஆதரவாக செய்யல பட்டு இந்த ஊரின் அடித்தட்டு மக்களுக்கு பாடுபடவும்.

அட்மினிக்கு தாழ்வான வேண்டுகோள் தயவுசெய்து இது சம்பந்தமான விசயங்களை வெளியிட வேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. அனுவவம் புதுமை...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [28 June 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19663

ஒரே வரியில் இதற்கு பதில் சொல்லி விடலாம். வலுவிழந்த குற்றச்சாட்டுக்கள். அன்பளிப்பு, டயரி, கலண்டர், உறுப்பினர்களின் துனைக் குழு, இப்படி சிறு சிறு குறைகளை ஏதோ இமாலயத் தவறு போல் சித்தரிப்பது சரியில்லை. நிர்வாகத்தில் இது போன்ற நிறை, குறைகள் இருக்கத்தான் செய்யும். சேர்மன் ஆபிதா ஒன்றும் IAS,IPS, படிச்சுட்டு வந்தவரோ? அல்லது பல முறை நகராட்சி மன்றத்தின் தலைவராக இருந்தவரோ? அல்ல! நல்ல திறமை, நாணயம், நம்பிக்கை, கைசுத்தம் இவைகள்தாம் அவருடைய சர்ட்டிஃபிக்கேட்ஸ். இதுக்குப் போய் பக்கம் பக்கமா கருத்து எழுதுவது சுத்தமா வேஸ்ட்

மரியாதைக்குரிய ஏ.லுக்மான் காக்கா அவர்கள் சேர்மன் ஆபிதா அவர்கள் மின்வாரிய அதிகாரியை சந்தித்த போல் ஐக்கிய பேரவைத் தலைவர்களை சந்திக்கவோ? கலந்தாலோசிக்கவோ முன்வராதது பேரவைக்கு அவமானம் எனத் திரி ஏற்றுவதும், ஒட்டு மொத்த உறுப்பினர்களையும் லஞ்சம் வாங்குறதா சொல்லுறாங்கன்னு அனைத்து உறுப்பினர்களுக்கும் தனக்கு சாதகமா இழுக்குறதும், அன்பளிப்பு (அதாங்க டயரி மேட்டர்) தந்தவங்களுக்கு விசுவாசமா நடக்கிறதும், துனைக்குழு முடிவெடுக்கிறதை தலைவி கேட்டே ஆக வேண்டும் எனத் தலைவியின் அதிகார வரம்பை ஓர் குறுகிய வட்டத்துக்குள் கொண்டு வந்து அவர்களை செயல்பட விடாமல் செய்வதற்கான முயற்சிகளும், முகம் சுளிக்கும் படியாகவே உள்ளது.

இனி மரியாதைக்குரிய சேர்மன் அவர்கள் இக்குற்றச்சாட்டுகளை மனதில் கொண்டு வருங்காலங்களில் ஒற்றுமைக் குலையாமல் உறுப்பினைகளை அரவணைத்து (அதுக்காக வளைந்து கொடுக்கனும்ன்னு அவசியமில்லை) சிறப்பான நல்லதோர் நிவாகத்தை தர முன்வர வேண்டும்.

நடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும் . இனி நடப்பவை நல்லவைகளாக நடக்கட்டும்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:நகர்மன்றத் தலைவரின் பதிலு...
posted by Sarjoon (Kayalpatnam) [28 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19664

எது எப்படியோ....ஒன்று மட்டும் தெளிவு... தேவை இல்லாத கருத்துக்களை தேவை இல்லாத இடங்களில் பேசி குழப்பங்களை உருவாக்குவதில் சகோதரர் லுக்மானுக்கு நிகர் அவர் மட்டுமே.

இரு நகர்மன்ற கழிசடைகள் தரம் கெட்டு பேசிய நிகழ்வில் அதைப்பற்றி மட்டுமே பேசி இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு நகர்மன்ற தலைவி மீது குற்றங்களை சாட்டி அந்த நிகழ்வை திசை திருப்பிய உங்களின் நகர்மன்ற சகோதர பாசம் பாச மலர்களை தாண்டிய புதிய பரிமாணம். நகர்மன்ற தலைவியின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்க ஒருவார காலம் எடுத்த நீங்கள் இப்பொழுது எங்கேயுமே பேசப்படாத, நகர்மன்றத் தலைவி குற்றச்சாட்டு சொல்லாத ஐக்கிய பேரவை என்ற தேரை முச்சந்தியில் கொண்டு வந்து விட்டுள்ளீர்கள்.

ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் எனபது போல உங்கள் செயல்பாடு உள்ளது. உங்களின் செயல்கள் உங்கள் மேல் இருந்த நம்பிக்கையை தகர்த்துவிட்டது. எது எப்படியோ... கடந்த வருடங்களைப் போல காயல் நகர்மன்றம் என்றென்றும் ஊழல்வாதிகளின் கூடாரமே. சீக்கிரம் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை கொண்டு வந்து நூறு சதம் ஊழல் மன்றமாக மாற்றுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. உண்மையை உண்மையாக நகரமன்ற செய்திகளை தரும் காயல்பட்டணம்.காம் வாசகர்களுக்கு எனது விளக்கம்..
posted by M.S.M. சம்சுதீன் - உறுப்பினர் - 13 வது வார்டு (KAYALPATNAM ) [28 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19668

உண்மையை உண்மையாக நகர்மன்ற நடப்பு செய்திகளை மக்களுக்கு உடன்குடன் செய்தி தரும் காயல்பட்டணம்.காம் வாசகர்களுக்கு எனது விளக்கம்.. மற்றும் எனது அன்பு காயல் சகோதரர்கள் அனைவர்களுக்கும்.. அஸ்ஸலாமு அழைக்கும்..

நகராட்சி உறுப்பினர் சகோதரர் லுக்மான் அவர்களின் நகராட்சி தலைவர் அவர்களுக்குரிய (பதிலுக்கு) இவரின் பதில் அறிக்கையில் என்னை குறிப்பிட்டு (என் பெயர்) இருப்பதால் அதற்க்கு என் பதிவை (விளக்கத்தை) அணைத்து காயல் சகோதரர்களுக்கும் விளக்கம் தர கடமை பட்டுள்ளேன்...

இதோ..!

TWAD குழு நகராட்சிக்கு வந்தபோது, கவுன்சிலர்களுடன் எங்கள் கோமான் தெருவைச் சார்ந்த 2 நபர்கள் இருந்தததை 13- வது வார்டு கவுன்சிலர் சம்சுதீன் அவர்கள் என்னிடம் ஆட்சேபம் தெரிவித்து அவர்களை வெளியே போகச் சொல்லுமாறு சொன்னபோது, அதை நான் சொல்ல முடியாது, தலைவி அவர்கள் தான் சொல்ல வேண்டும் என்று நான் கூறுகிறேன். அதன் பிறகு தலைவி அவர்களிடம் கவுன்சிலர்களுடன் TWAD குழு மீட்டிங் என்று சொல்லி விட்டு, எங்களுக்கு தெரிவிக்காமலே தனி நபர்களை அழைப்பதை ஆட்சேபித்தது உண்மை. ஆனால் எங்களுக்கு சமமாக எப்படி அவர்களை உட்காரச் சொல்வீர்கள் என்று நான் கூறவே இல்லை. நான் சொல்லாத வார்த்தையை சொல்லியதாக கூறி எங்கள் கோமான் ஜமாத்திலும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்ள நினைக்கிறீர்கள்.

தலைவி அவர்களே, எங்கள் கோமான் ஜமாஅத்தில் எங்களுக்குள் என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் உங்களைப் போன்ற மூன்றாம் நபர்களின் சூழ்ச்சிக்கு இறையாகி ஒரு போதும் நாங்கள் பிரிந்து விட மாட்டோம். எனவே அந்த முயற்சியை கைவிட்டு விடுங்கள். - இது அவரின் அறிக்கையில் என்னை சம்மந்த படுத்திய வாசகம்.)

உண்மை நிலவரம் இதோ...

கோமான் தெருவைச் சார்ந்த சகோதரர்கள் (2 நபர்கள்) நகராட்சியில் இருந்ததை ஆட்சேபமோ... அந்த சகோதரர்களை அங்கு இருந்து வெளியே போகச் சொல்லுமாறு சகோதர் லுக்மான் அவர்களிடம் நான் சொல்லவோ இல்லை...! மற்றும் அதை நான் சொல்ல முடியாது, தலைவி அவர்கள் தான் சொல்ல வேண்டும் என்று சகோதரர் லுக்மான் அவர்கள் என்னிடம் சொல்லவும் இல்லை...!

நகராட்சிக்கு வந்து இருந்த அந்த இரு சகோதர்கள் மத்தியில் எனக்கு எந்த முன் பகையோ.. பிரச்சனையோ கிடையாது...! நல்ல நட்புடன் சகோதர மனப்பான்மையுடன் பழகி வரும் கோமான் தெரு வழி சகோதர்களிடம் என்று வரை சகோதர்களாக பழகி வருகிறேன்...

என்னிடம் நல்ல நட்புடன் பழகி வரும் சகோதரர் லுக்மான் அவர்களுக்கு ஏன் இந்த தடுமாற்றம்...? எனக்கு விளங்கவில்லை...!

அறிக்கை மேல் அறிக்கைகள் தொடராமல் நல்ல நகர்மன்றமாக திகழவும் நகரமன்றத்தின் சில குறைபாடுகள் களையவும் வல்ல நாயன் நேர்வழி புரிவனாக ஆமின்... அவன் ஒருவனே அணைத்து குறைகளையும் அறிந்தவன்..

என்றும் - M.S.M. சம்சுதீன்.
உறுப்பினர் - 13 வது வார்டு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:நகர்மன்றத் தலைவரின் பதிலு...
posted by Sarjoon (Kayalpatnam) [28 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19669

அப்படிப் போடு அருவாளை. சகோதரர் லுக்மான் அவர்கள் ஒவ்வொரு விளக்கத்திற்கும் யாராவது ஒரு நகர்மன்ற உறுப்பினரையோ அல்லது வெளி நபரையோ சாட்சியாக சொல்லி இருப்பாராயின் இந்நேரம் தெரிந்து இருக்கும் அவற்றின் யோக்கியதைகள்.

ஆக இன்னுமொரு நகர்மன்ற உறுப்பினரின் முகத்திரை கிழிகிறது. போங்கோ போங்கோ போயி போட்டி நகர்மன்றத்துல கலந்து அடுத்து என்ன பண்ணலாம்டு திரைக்கதை வசனம் எழுதிட்டு வாங்கோ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. ஏன் முன்னுக்கு பின் முரணான பேச்சு ?
posted by ceylon fancy KAZHI. (jeddah,) [28 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19670

இப்படி ஒருவரை ஒருவர் குறை சொல்லி கொண்டே இருந்தால் உருப்படியான ஒரு காரியமும் நமது நகர் மன்றத்தில் நடைபெறாது. இதிலேயே காலமும் நேரமும் வீணாக போய்விடும்.

ஏன் இந்த தடுமாற்றம்? இவர் அந்த உருப்பினர் சொன்னார் என்கிறார் .அந்த உறுப்பினரோ நான் சொல்லவே இல்லை என்று மறுப்பு தெரிவிக்கிறார். எதை நாம் எடுத்துக்கொள்வது? ஏன் இந்த முன்னுக்கு பின் முரணான தகவல்?

தயவு செய்து அனைத்து உறுப்பினர்களும் கசப்புணர்வை மறந்து ஒற்றுமையாக செயல் படுங்கள் .உங்களை தேர்ந்தெடுத்த காயல் மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்யுங்கள் ,அதிலே உறுதியாக இருங்கள்.

அல்லாஹ் உங்கள் மனதிலுள்ள கசப்புணர்வை நீக்கி அருள் புரிவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. கண்டது கேட்டதும் (பொய்யல்ல)
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [28 June 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 19671

ஐக்கிய பேரவை பெயரை தேவை இல்லாமல் சகோ. லுக்மான் அவர்கள் இழுத்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.

காரணம் அவர்கள்தான் தேர்தல் முடிவுக்குப் பிறகு தலைவி விசயத்தில் நாங்கள் தலையிட மாட்டோம் என்ற பாணியில் அவர் அழைத்த பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ளக் கூடாது என்று (வாழ்த்துக்கள் கூட தெரிவிக்கக் கூடாது என்று நல்லெண்ணத்துடன்) ஒதுங்கியிருக்கிறார்கள். ஊர் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட ஜமாஅத் கூட்டங்களுக்கு எங்களை ஏன் அழைத்தீர்கள் என்று (அழைப்பிதழ்கள் கொடுத்தும் வருகை தராததன் மூலம்) சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். மொத்தத்தில் அவங்க வேலையை அவங்க பார்துக்கொடிருக்கிறார்கள்

அவர்களை ஏன் சகோ. லுக்மான் வம்புக்கு இழுப்பதுபோல் இழுத்திருக்கிறார் என்று தெரியவில்லை.

------------------------- --------------- --------------------------

Moderator: செய்திக்குத் தொடர்பற்ற வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:நகர்மன்றத் தலைவரின் பதிலு...
posted by cader (JAIPUR) [28 June 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 19673

சபாஷ் சரியன போட்டி தொடரட்டும் இந்த போட்டி வெல்ல போவது யார் இந்த ஒரு கோடி aaaaaaaaaaaaare you ready.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. இதோ இன்னொரு முபலஹா ரெடி ஆகி விட்டது
posted by ansari (abu dhabi) [28 June 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19674

அல்லாஹு அக்பர் இதோ இன்னொரு முபலஹா ரெடி ஆகி விட்டது.

சகோதரர் லுக்மான் நகர் மன்ற தலைவி சொன்னது பொய் .எங்கள் கோமான் ஜமாஅத் எப்பொதும் யாராலும் பிரிக்க முடியாது என்று சொன்னார்கள் .அல்ஹம்து லில்லாஹ் .அது முற்றிலும் சரியே .எந்த ஒரு அந்நிய சக்தியும் கோமான் ஜமாத்தை பிரிபதற்கு முடியாது .ஆனால் அதே சமயம் யாரும் எங்களை பற்றி தர குறைவாக பேசுவதை அனுமதிக்க மாட்டோம்.

அதே நேரத்தில் சகோதரர் லுக்மான் அவர்கள் (TWAD குழு நகராட்சிக்கு வந்தபோது, கவுன்சிலர்களுடன் எங்கள் கோமான் தெருவைச் சார்ந்த 2 நபர்கள் இருந்தததை 13- வது வார்டு கவுன்சிலர் சம்சுதீன் அவர்கள் என்னிடம் ஆட்சேபம் தெரிவித்து அவர்களை வெளியே போகச் சொல்லுமாறு சொன்னபோது, அதை நான் சொல்ல முடியாது, தலைவி அவர்கள் தான் சொல்ல வேண்டும் என்று நான் கூறுகிறேன்) இப்படி சொன்னார்கள் ஆனால் ஜனாப் சம்சுதீன் அவர்கள்

(உண்மை நிலவரம் இதோ...

கோமான் தெருவைச் சார்ந்த சகோதரர்கள் (2 நபர்கள்) நகராட்சியில் இருந்ததை ஆட்சேபமோ... அந்த சகோதரர்களை அங்கு இருந்து வெளியே போகச் சொல்லுமாறு சகோதர் லுக்மான் அவர்களிடம் நான் சொல்லவோ இல்லை...! மற்றும் அதை நான் சொல்ல முடியாது, தலைவி அவர்கள் தான் சொல்ல வேண்டும் என்று சகோதரர் லுக்மான் அவர்கள் என்னிடம் சொல்லவும் இல்லை...!

நகராட்சிக்கு வந்து இருந்த அந்த இரு சகோதர்கள் மத்தியில் எனக்கு எந்த முன் பகையோ.. பிரச்சனையோ கிடையாது...! நல்ல நட்புடன் சகோதர மனப்பான்மையுடன் பழகி வரும் கோமான் தெரு வழி சகோதர்களிடம் என்று வரை சகோதர்களாக பழகி வருகிறேன்...

என்னிடம் நல்ல நட்புடன் பழகி வரும் சகோதரர் லுக்மான் அவர்களுக்கு ஏன் இந்த தடுமாற்றம்...? எனக்கு விளங்க வில்லை...! ) இப்படி சொல்கிறார்கள் அல்லாஹ்தான் உண்மை நிலை அறிந்தவன் .

ஆனால் ஒரு விஷயம் மட்டும் உண்மை. யார் கோமான் தெருவைச் சார்ந்த சகோதரர்கள் அங்கு இருந்து வெளியே போகச் சொல்லுமாறு சொன்னாலும் சரி எங்களை அவர்களோடு அமர்வதற்கு தகுதி இல்லைன்னு சொன்னாலும் சரி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை .மரியாதையை குறைச்சலும் இல்லை. ஏன் ஈனில் சகோதரர் லுக்மான் மட்டும் இல்லை அணைத்து நகர் மன்ற உறுப்பினரும் எங்களுக்கு எங்களின் தேவை கலை பூர்த்தி சித்து தருவதருகு நாங்கள் தே ர் உ செய்யபட்ட நபர்கள் என்பதும் எங்களின் வரி பணத்தில் சம்பளம் மற்றும் படி வாங்கும் நபர்கள் என்பதும் மறக்க வேண்டாம்.

ப்ளீஸ் இத்தோடு இந்த விவாதத்தை முடித்து விடுங்கள் .யாரும் இனி கோமான் ஜமாஅத் மக்களை பார்த்து யார் அந்த வார்த்தைகளை சொன்னார்கள் என்பதை பற்றி ஆராச்சி செய்ய வேண்டாம் .ஏன் ஈனில் அல்லாஹ் சொல் கிறான்.

9:13 يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُم مِّن ذَكَرٍ وَأُنثَىٰ وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا ۚ إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ

49:13. மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.

(உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். ) இந்த வார்த்தை மட்டும் யார் சொனர்களோ சொல்லவில்லையோ நியாபகம் இருக்கட்டும்.

ஒரு முறை ஒரு சஹாபி அருமை நாயகம் صلى الله عليه وسلم இடம் இப்படி கே ட்டார் கள் ஒரு முமின் சிர்க் செய் வாரா ? அதற்கு நபி صلى الله عليه وسلم ஆம் செய்வார் என்று பதில் சொன்னார்கள் .அதற்கு பிறகு அந்த சகாபி ஒரு முமின் கொலைசெய்வாரா? என்று கேட்டார். அதற்கு நபி صلى الله عليه وسلم ஆம் செய்வார் என்று பதில் சொன்னார்கள் .அதற்கு பிறகு அந்த சகாபி ஒரு முமின் விபசாரம் செய்வாரா ?என்று கேட்டார். அதற்கு நபி صلى الله عليه وسلم ஆம் செய்வார் என்று பதில் சொன்னார்கள் அதற்கு பிறகு அந்த சகாபி ஒரு முமின் திருடுவரா ?என்று கேட்டார். அதற்கு நபிصلى الله عليه وسلم ஆம் செய்வார் என்று பதில் சொன்னார்கள் . பிறகு அந்த சகாபி ஒரு முமின் பொய் சொல்லுவாரா? என்று கேட்டார். அதற்கு நபிصلى الله عليه وسلم ஒரு முமின் பொய் சொல்லமாட்டார் என்று பதில் சொன்னார்கள் .(ஸஹிஹ் புஹாரி - கிதாபுல் ஈமான்)

நான் இல்லை நீ இல்லை என்று ஒருவர் மிது ஒருவர் சக தியை அள்ளி விசும் சகோதரர் கல் இந்த நபி மொழியை மறக்க வேண்டாம் .டியர் அட்மின் எதையும் கத்துரி வைக்க வேண்டாம் ப்ளீஸ்.

Moderator: தெளிவற்ற வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:நகர்மன்றத் தலைவரின் பதிலு...
posted by sulaiman (abudhabi) [28 June 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19676

அஸ்ஸலாமு அழைக்கும்,

சகோதரர் லுக்மான் அவர்கள் மீது இந்த வலையதள பெரும்பான்மை கருத்தாளர்களால் விமர்சரிக்க பட்ட ஒன்று இவர் பணக்காரருக்கு சாய்ந்துவிட்டார் என்பதாகும். இந்த விமர்சனத்துக்கு காரணம் சமிபத்தில் சகோதரி ஆபிதா அவர்கள் தன்னுடைய நீண்ட அறிக்கையில் இவர்மீது வைத்த குற்றசாட்டு. (நகராச்சி மன்ற தலைவி ,உறுபினர்களின் சென்னை பிரயாண செலவு விவகாரம்)

இப்பொழுது சகோதரர் லுக்மான் அவர்களின் இந்த பதில் அறிக்கையில் அந்த குற்றசாட்டை மறுத்துள்ளார். இவரின் இந்த முக்கியமான, வலையதள கருத்தாளர்களால் அதிகம் விமர்சரிக்கப்பட்ட இந்த மறுப்பை இங்கு யாரும் கண்டுகொள்ளவேயில்லை. ஏன்? இதில் பொய்யாகஅறிக்கைவிட்டது யார்? நகராச்சி தலைவி அவர்கள் இந்த விசியத்தில் குழப்பதிலோ, மறதிலோ தவறான தகவலை குடுத்து இருந்தால் இப்பொழுது இவருக்கு தேவை நல்ல மன அமைதி, தெளிவு.

அடுத்து நகராச்சி மன்ற தலைவி மற்றும் இவரின் கண்மூடித்தனமான புகல்பாடிகளின் பிரதான கோஷம் ஊழல் ஒழிப்பு (ஊழல் கண்டிப்பாக வேரோடும், வேறடி மண்ணோடும் ஒழிக்கப்பட வேண்டும் அதில் எந்த மாற்றுகருதுக்கும் இடமில்லை) இந்த இவர்களின் ஊழல் ஒழிப்பு கோஷத்துக்கு ஒரு சறுக்கல் ஏற்பட்டுள்ளது. சகோதரர் லுக்மான் அவர்களின் பதில் அறிக்கையில். ஒரு நகராச்சி அலுவலர் செய்த ஊழலை நகராச்சி தலைவியிடம் ஆதாரத்துடன் சொன்னபிறகும் அந்த அலுவலர் மீது எந்த நடவடிகையும் எடுக்கவில்லை என்று குற்றசாட்டுவைதுள்ளார். சகோதரி ஆபிதா அவர்களுக்கு ஏன் இந்த தடுமாற்றம்.

சகோதரி ஆபிதா அவர்கள் தன்னுடைய சுய சிந்தனையுடனும், நல்ல ஊருபினர்களின் ஆலோசனைகளின் பிரகாரமும் நகராச்சி நிர்வாகத்தை நல்ல முறையில் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்,

இனி வரும் காலங்களில் ஊருக்கு நல்ல பல நன்மைகளை, முன்னேற்றங்களை, மாறுதல்களை ஏற்படுத்தவேண்டும். இன்ஷாஅல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. தொலைந்து போன நம்பிக்கைகள்..........
posted by musthak ahamed (goa) [28 June 2012]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 19677

மதிப்பிற்குரிய லுக்மான் காக்கா அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மதுல்லாஹி வ பரக்காதுஹு ... உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக......ஆமீன்.

உங்களை யார் என்று எனக்கு முன்பு தெரியாது.... முதன் முதலாக நீங்கள் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் போது உங்கள் அறிக்கை மூலமாகத்தான் உங்களைப்பற்றி தெரிய நேர்ந்தது.. அதன் பிறகு நீங்கள்தான் துணை தலைவராக வர வேண்டும் என்று ஆசை பட்டேன்..... எப்படி உங்கள் அறிக்கை மூலமாக உங்களை பிடித்துப் போனதோ அதை போலே தற்போதைய உங்கள் அறிக்கை மூலமாக உங்களை பிடிக்காமல் போனதும் நிஜம்.........

உங்கள் அறிக்கை கதிர் வீச்சில் கருகிப்போனது,,,, உங்கள் மீதான எங்கள் நம்பிக்கை குருவிகள்தான்.........

யார் துணை தலைவராக வந்தால் தூய்மையாகும் என்று நினைத்தோமோ அவரின் ஆடை எங்கும் கறைகள்..................... இன்னொரு சத்தியத்தை தவிர்ப்பதற்காக ஒரு சின்ன விளக்கம் இங்கே கறை என்று குறிப்பிட்டது கை நீட்டுவது மட்டும் அல்ல.............

எங்களுக்கு உள்ளம் அறிய சக்தியற்ற நிலையில் உங்கள் அறிக்கையே உங்கள் உள்ளமானது. உண்மை அறியும்போது மிகவும் கவலையாக இருக்கிறது.

ஒரு விஷயம் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். இப்போதும் சரி சென்ற இரு அறிக்கைகளிலும் சரி உங்களக்கு எதிராக கருத்து பதிவு செய்தவர்களில் பல பேர் நீங்கள்தான் துணை தலைவராக வரவேண்டும் என்று விரும்பியவர்கள்............... ஆனால் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்........ நீங்கள் துணை தலைவராக வந்திருந்தால் இந்த ஆறு மாதம் கூட ஒழுங்காக தலைமையை செயல் பட விட்டிருக்க மாட்டீர்கள் என்றுதான் தோன்றுகிறது..............

எந்த சார்பும் அற்றவராக கருதப்பட்ட நீங்கள் உங்கள் அறிக்கையின் மூலம் உங்கள் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி உள்ளீர்கள். ஆக எல்லாம் தயார்..........................

வாழ்த்துக்கள்,,,,,,,,,,,,,,,,,,,

ஒரு பக்கம் நீங்கள் ஜெயித்து விடுவீர்கள் என்றுதான் தோன்றுகிறது.

உங்களிம் பின் புலம், உங்களின் சாமார்த்தியமான காய் நகர்த்தல்கள்............ நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து விடலாம்.. சட்டத்தின் சட்டைப்பைகளை அணிந்து நீங்களே அடுத்த தலைவராக வந்துவிடலாம். அதற்க்கான எல்லா தகுதிகளும் உங்களுக்கு இருப்பதாகவே தோன்றுகிறது.......... பின்னர் நீங்கள் நினைத்த மாதிரி ஐக்கிய பேரவையிலேயே ஒரு அலுவலகம் வைத்துக் கொள்ளலாம்......... அறை எங்கும் நிரம்பி வழியும் காலண்டர்களும் டைரிகளும்.

பாவம் மக்கள்................. ஹாமித் ரிபாய், சுல்தான் காக்கா, கவி மகனார் உங்கள் எழுத்துக்களில் மிளிரும் நடை அழகு ஒரு விசயத்தை வெளிப்படுத்தும் பாங்கு........... உங்களால் நல்ல பல இலக்கியங்கள் தரமுடியும் என்றுதான் தோன்றுகிறது...... எழுத்து மேடையில் பங்கு பெற்று உங்கள் நேரத்தை பயனுள்ளதாக ஆக்கிகொள்ளுங்கள்..............

சலீம் காக்கா........ உங்களுக்கு இருக்கும் திறமைக்கு உங்கள் பணிகளில் முழு கவனம் செலுத்தி இன்னும் பல உயரம் தொட்டு சிறப்படைய முயற்சி செய்யுங்கள். மற்றபடி உங்கள் முயற்சிகள் எல்லாம் விளையாத நிலத்திற்கு இறைத்த நீர்போல் ஆகிவிடும்..ஆகிவிட்டது...............

இங்கே எதுவும் மாறப்போவது இல்லை. மாற்ற நினைப்பவர்கள்தான் மாறி போய் இருக்கிறார்கள்................

சுற்றிலும் எங்கும் நிசப்தம்......... ஊரே உறங்கி கிடக்கிறது.............. அதிகாலை இரண்டு மணியாகிவிட்டது.......... குடும்ப நிகழ்வுகளையும் தாண்டி அறிக்கைகள் ஏற்படுத்திய காயம் உறங்க விடாமல் வேதனை செய்கிறது........... ஏனோ மூசாவின் ஞாபகம் வருகிறது..............

"ஒத்தனும் சரியில்லை அல்லாபிச்சை .............எல்லாத்தையும் போலீசிலே புடிச்சிக்கொடுக்கணும்"

இப்போதும் அவன் கோபம் கலந்த குரல் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.................

முஸ்தாக் அஹ்மத்
கோவா ...

குறிப்பு:
மூசா ..... உங்களுக்கு அலியார் தெரு ktm தெரு நண்பர்கள் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்........... இந்த கருத்தின் வலி புரியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. நாரதர் வேலையும் & 'தண்ணி' லை அறிக்கையும் சாதித்தது என்ன ??
posted by Salai.Mohamed Mohideen (USA) [28 June 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 19678

ஒரு வரி பதில்... சின்னபுள்ளைதனத்தின் வெளிப்பாடு!!

இது போன்ற ஒற்றுமையை சீர்குலைக்கும் & Loose Talk அறிக்கைகளுக்கு கருத்து எழுத வேண்டிய அவசியம் இல்லையென்றாலும் இந்த அறிக்கையை படித்தால் தலைவிக்கும் -> உறுப்பினர் களுக்கும் & ஐக்கிய பேரவைக்கும் சிண்டி முடியும் / நாரதர் வேலையே நன்றாக உணர முடிகின்றது.

உண்மையிலேயே நன்மையை ஊர் நலன் நாடுபவர்கள், பதிலறிக்கை பார்த்த பிறகு நகர்மன்ற தலைவரிடம் பரஸ்பரம் (கருத்து வேறுபாடுகளை களைந்து) ஆகி ஒற்றுமையை பேணியிருப்பார்கள். ஆனால் இவர்களின் உண்மையான எண்ணம் நிறைவேறாத வரை ஓய மாட்டார்கள் போல் தெரிகின்றது.

குறைகளுக்கு அப்பாற்பட்டவன் நம்மை படைத்தவனே. நகர்மன்ற தலைவியிடமும் உறுப்பினர்களிடமும் சில குறைபாடுகள் இருக்கலாம். அதனை மறுப்பதற்கில்லை. ஆனால் அதனை வெளிச்சம் போட்டு காண்பிப்பதாக நினைத்து 'தன்னிலை' சாதித்தது என்ன தெரியுமா??

தேவையற்ற (தலைவருக்கும் & உறுப்பினர்களுக்கும் 'சிண்டி முடிக்கும்' வேலை?) தன்னிலை விளக்கம்... நேற்றைய நகர்மன்ற கூட்டத்தை 'அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்' என்ற உத்தம புத்திர நகர்மன்ற உறுப்பினர்கள் இதனையே சாக்காக வைத்து நகர்மன்ற கூட்டத்தை வெளிநடப்பு செய்து விட்டதாக அறிந்தேன்.

வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள்... யோக்கியர்கள் உத்தமர்கள் சத்தியத்திட்க்கு நியாயத்திட்க்கு கட்டு பட்டவர்களாக இருந்திருந்தால் முதலில் அந்த ஆடியோவில் பேசிய 'களவாணி' எண்ணம் கொண்ட அந்த இரு உறுப்பினர்களை நகர்மன்ற கூட்டத்திலிருந்து முதலில் வெளியேற்றி / நீக்கி விட்டு அப்புறம் புறக்கணிப்பு செய்திருக்கலாம். ஆனால் அவர்களின் கூட்டோ அக்கயர்வர்களிடம்தானோ?

இவர்கள் அனைவர்களின் ஒரே குறிக்கோள் தலைவியை பழிவாங்க (துரத்தி விட) ஆசை... ஏனென்றால் நீங்கள் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க & அபிமான பணக்காரரிடம் பிச்சை (அன்பளிப்பு ?) எடுக்க விட மாட்டேன்கிறார்.

முன்னாள் நகர்மன்ற தலைவருக்கு செய்த அதே சூழ்ச்சிகள் நெருக்கடிகளை தந்து (இதில் முன் அனுபவம் கொண்டவர்களை வைத்து அப்படியே அச்சு பிசகாமல் ) வீட்டுக்கு அனுப்பலாம் என்று மனப்பால் குடித்து அலைவது பயன் தரப் போவதில்லை. ஏனென்றால்... தற்போதைய தலைவர் பொது மக்காளால் தேர்தெடுக்க பட்டவர். லஞ்ச லாவண்ய உறுப்பினர்களால் தனவந்தர்கள் லெட்டர் பேட் இயக்கங்களின் ஆதரவினால் அல்ல.

தலைவியை தூக்கி விட்டு 'டம்மி தலைவரை' கொண்டு வர பாடுபடும் ஊழல் நகரமன்ற உறுப்பினர்களும் / அலுவலர்களுக்கும் அவர்களை ஆட்டுவிக்கும் 'மகாராஜாக்களும்' விரும்பினர். அதற்காக எல்லோராலும் நல்லவர் / வல்லவர் (?) என்று அறியபட்ட ஒருவரை வைத்தே நினைத்ததை அழகாக சாதித்து விட்டனர் & மக்களையும் குழப்பி பிளவு படுத்தி (Divide & Rule) விட்டனர். வாழ்க ஜனநாயகம் !!

ஐக்கிய பேரவையை இங்கே இழுத்ததின் அவசியம் என்னவோ. பேரவையே தேர்தலுக்கு அப்புறம் அமைதியாக ஒதுங்கியிருக்கிறார்கள். இங்கே ஐக்கிய பேரவைக்கும் நகரமன்ற தலைவிக்கும் நாரதர் வேலை செய்ய வேண்டியதின் அவசியம் புரியவில்லை. ஓஹ் ... பெரியவர்களுக்கும் கட்டுபட மாட்டேன்கின்றார் என்பதனை உணர்த்துகின்றீர்களோ அல்லது பேரவையை / பேரவையின் ஆதரவாளர்களை உசுப்பெற்றி குளிர் காயவா??

தொழிலதிபர் நிறுவனத்தை இழுத்ததை பார்த்தால் சூசகமாக (?) பேசப்பட்ட நபர் அவர்தானோ என்று பலரும் விளங்கி கொள்வதற்க்காக தேவையில்லாமல் எல்லோருக்கும் வெளிச்சம் போட்டு காண்பித்தது (சனீஸ்வரன் நடு உச்சியில் இருக்கிறான்) போல தெரிகின்றது.

ஒரு காலத்தில் (குறிப்பாக துணை தலைவர் & portfolios தேர்தலின்போது ) உங்களையும் ஒரு சிலரையும் தவிர மற்ற பெரும்பாலான உறுப்பினர்கள் கையூட்டு பெற்று விட்டார்கள் என்று உங்களை உயர்வாக நினைத்து புகழ்ந்து மற்றவர்களை குறைகூறிய போதெல்லாம்... இந்த சக உறுப்பினர்களின் மீது அன்றில்லாத பாசத்தை... அணியாயதிட்க்கு தலைவியின் மீதுள்ள 'காண்டை' சாக்காக வைத்து தற்போது அவர்களின் மீது அதீத அக்கறை ... அவர்களுக்காக உரிமைக்குரல் குரல் கொடுப்பதுபோல காட்டுவதன் (நடிப்பதன்) அவசியம்தான் விளங்கவில்லை. கொஞ்ச காலம் பொறுங்கள். இந்த ஊழல் / சூழ்ச்சி கூட்டம் உங்களுக்கும் வெகு விரைவில் 'ஆப்பு' வைக்கும்... நீங்கள் லஞ்சம் வாங்காதிருக்கும் வரை.

நாரதர் வேலைக்கும் & டீம் வொர்க்கும் (Team work) என்ன சம்பந்தம்???

இப்போதெல்லாம் இது போன்ற வெட்டி (?) தன்னிலை அறிக்கைகள், பிறரிடம் கையூட்டு / அன்பளிப்பு பெறுபவர்கள் அல்லது தனக்கு 'படி' அளக்கும் (sponsors for anything) பணக்கார முதலைகளிடம் தன் நன்றி விசுவாசத்தை காட்டுவதற்க்காக தனிநபர் கட்டுரைகள், letter pad - களின் மனுக்கள், சிலரின் கருத்துக்கள் / எண்ணலைகள் கூட அதிருப்தி செய்திகள் (நம்பிக்கையை ஏமாற்றிவிட்டார்) என்ற பெயரில் அவதூறுகளாக / குறைகளாக வருவதே 'பேசன்' ஆகி விட்டது. ஒவ்வொன்றுக்கும் வாசகர்கள் கருத்தெழுதி நகரமன்ற தலைவி விளக்கமளித்து உங்களுடைய பொன்னான நேரத்தை வேஸ்ட் பண்ண வேண்டுமா என்று சிந்தியுங்கள் !!

இதுபோன்ற ஒற்றுமையை சீர்குலைக்கும் / சீண்டி முடியும் அறிக்கைகளை நம்புகின்ற நிலையில் சிந்திக்கின்ற வாசகர்கள் பொதுமக்கள் எவரும் இல்லை !!

நல்ல தலைவி கிடைத்தும் நகர்மன்றத்திட்க்கு விடிவுகாலம் இல்லை என்று ஒதுங்கி நிற்க நமதூர் மக்கள் ஒன்று படிக்காத பாமரர்கள் இல்லை. சிந்திக்க தெரிந்த கூட்டம். சத்தியத்தின் பக்கமே என்றும் இக்கூட்டம் நிக்கும்!! ஓடி ஒளிந்து கொள்ள நம் மக்கள் ஒன்றும் தயிர் சாதம் / சட்னி சாம்பார் கூட்டம் இல்லை.

அட்மின் பார்வைக்கு : KOTW போன்ற professional மீடியாக்கள் Letter pad அமைப்பின் மற்றும் 'தனி நபர்' அவதூர்/அதிருப்தி செய்திகளுக்கு முக்கியம் தராது (அதனை வெளியிடாது) கடைபிடித்த அந்த 'நல்லதொரு' நடைமுறையை.... ஒற்றுமையை சீர்குலைக்கும் இது போன்ற விளக்கங்களை (குழப்பங்களை) வெளியிடாமல் இருப்பது எல்லோருக்கும் ஊர் ஒற்றுமைக்கும் நல்லது !!

இவர்களை போன்றவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் சுய லாபத்திற்க்காக ஆதரவு கரம் நீட்டுபவர்கள் அதில் குளிர் காய நினைப்பவர்கள் வேண்டுமென்றால் வெளியிடட்டும்.

Last but least.... this fight/statement is Good for nothing!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால்....... போச்சு.
posted by s.s.md meerasahib. (riyadh) [28 June 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19679

அன்பு நண்பர்களே........ ஓப்பன் நகர்மன்ற நிர்வாகத்தை ஆதரிப்பவர்கள் இதோ....... A . லுக்குமான் அவர்களின் விளக்கத்துக்கு பின் நம் நேர்மையான அட்மினிடம் கோரிக்கை வைக்கின்றனர். அறிக்கைகளையும், கட்டுரைகளையும், விமர்சனம்களையும், நிறுத்தனுமாம். இவர்களுக்கு. உண்மையை ஆதரிக்க..... மனம் இல்லாத்த இவர்கள் பொய் என்ற புழுதி வாரி தெளித்தார்கள். நல் மனுசுக்காரர்கள் சுட்டிக்காட்டியவர்களையும் தூற்றுவதில் சும்மாவிட்டதில்லை இவர்கள். மலையாளத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் "தூராத்தவன் தூரும்போது தீட்டம் கொண்டு ஆராட்டுவானாம்." அதாங்க...... பேலாத்தவன் பேலும் போது அதை வைத்துக்கொண்டு ஆராட்டிக்கொண்டு இருப்பானாம். இங்கு கருத்து பதிக்கும் பலரும் தவறை சுட்டிக்காட்டாமல் இதைதான் செய்கிறார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. கனியிருப்பக் காய்கவர்ந்தற்று- இது வள்ளுவனின் வாய் மொழி...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [29 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19686

இது ஓர் தனி நபர் விமர்சனமல்ல...!!!

Comment Reference Number: 19679 இக் கருத்தை பதிவு செய்த நபர் தன் கருத்துக்கு தலைப்பாக “குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு” எனக் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி உதாரணம் சொல்வதற்கு எத்தனையோ பல நல்ல பழமொழிகள் நம் தாய் மொழியில் இருந்தும் மலையாள மொழியில் முகம் சுளிக்க வைக்கும் மலம் சம்பந்தப்பட்ட கீழ்த்தரமான பழமொழியையும் குறிப்பிட்டுள்ளார். கருத்து மேடைக்கென்று ஒரு கன்னியம் உள்ளதை அவர் கையாளத் தவறியுள்ளார்.

கருத்து எழுதுவது அவரது உரிமை அதே நேரம் பிறர் முகம் சுழிக்கும் வண்ணம் இருத்தல் கூடாது. இது அடியேனின் தாழ்மையான வேண்டுகோள்! சரி உங்கள் தலைப்பின் படி இங்கே யார் குடிகாரர்? தன்னிலை விளக்கம் தந்த கன்னியத்திற்குரிய ஏ.லுக்மான் காக்காவா? அல்லது பதில் அளித்த சேர்மன் ஐ.ஆபிதா ஷேக் அவர்களா? அதுவுமில்லை எனில் கருத்துக்களை பகிந்து கொள்ளும் இத் தளத்தின் மதிப்பு மிக்க வாசகர்களா? விளங்கும் படியாகச் சொன்னல் விளங்கிக் கொள்ளலாம். உங்க ஸ்டைலில் மலையாள மொழியில் இப்படியும் ஒரு பழமொழி உள்ளது.

“வடி கொடுத்து அடி மேடிக்குந்ன்னது போலெ, தோளத்து இருந்ன்னு செவி தின்னுந்னது போலெ, அல்ப்பனு ஐஸ்வர்யம் வந்ன்னால் அர்த்தராத்ரிக்கும் குட பிடிக்கும், அட்டயெப் பிடிச்சி மெத்தயில் கிடத்திய போலெ, தோக்கில் கயறி வெடி வெக்கிரது கேட்டோ! இனி ஈக்காரியம் பறஞ்ஞு கொண்டு ஆசானெப் படிப்பிக்கான் வரரது. இது போத்திண்டெ செவியிலு வேதம் பறஞ்ஞ்ச கதையாவுமோ? எந்தோ? இன்னும் ஒரு நல்ல பழமொழி “முல்லப்பூம் பொடி ஏற்று கிடக்கும் கல்லினுமுண்டாம் சவ்ரப்யம்”.

இப் பழமொழிகளின் பொருள் தமிழில்-

1) கையில் கம்பைக் கொடுத்து தன்னையே அடி என்பதப் போல்- லுக்மான் காக்கா தானாக முன் வந்து தந்த தன்னிலை விளக்கம் போல்,

2) தன்னைச் சுமந்து செல்பவனின் தோளில் இருந்துகொண்டே சுமப்பவனின் காதக் கடித்து போல்,

3) அற்பனுக்கு வாழ்வு வந்தால் நடு ராத்திரியிலும் குடைபிடிப்பான் என்பதைப் போல்,

4) அட்டைப்பூச்சியைப் பிடித்து மெத்தியில் போட்டால் அது கிடக்காது. அது நெளிந்து சுளிந்து நகர்ந்து கொண்டே தான் இருக்கும்.

5) துப்பாகிக்குள்ளேயே புகுந்து சுட நினைப்பதைப் போல்.

6) வாத்தியாருக்கே பாடம் நாடத்தும் மானவனைப் போன்று,

7) எருமை மாட்டின் காதுகளில் வேதம் ஓதியதைப் போன்று,

8) மணமுள்ள ஒர் முல்லைப்பூங்கொடி படர்ந்து கிடக்கும் பாறைக்கல்லானாலும் கூட அதுவும் மணக்கும்.

இவைகள் அனைத்தும் தன்னிலை விளக்கத்திற்கு பொருந்தும்.இதுவே போதும் என நினைக்கின்றேன், இல்லையெனில் தெலுங்கு, மராத்தி, ஹிந்தி என இந்திய ரூபாய் நோட்டுகளில் உள்ள அனைத்து மொழிகளிலும் பழமொழிகள் வேண்டுமா...?

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. கண்டதும், கேட்டதும் (பொய்யல்ல)
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [29 June 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 19689

நேற்று நகர்மன்றத்தில் நடைபெற்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பார்வையாளராக சென்றிருந்தேன்.

இரு பெண் உறுப்பினர்களைத் தவிர எல்லோர்களும் ஆஜராகியிருந்த்தார்கள். ஏட்டில் கையெழுத்து போட்டுவிட்டு தங்களது இடத்தில் அமர்ந்தார்கள். அவர்களது படி (கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படும் தொகை - Rs 600/- இருக்கும் என்று எண்ணுகிறேன்) தனித்தனி கவரில் போட்டு அவசர அவசரமாக கொடுக்கப்பட்டது. கூட்டம் ஆரம்பித்த முதல் நிமிடத்திலிருந்து ஒருவர் பின் ஒருவராக (இருவர்களைத் தவிர) சொல்லிவைத்தாற்போல் தங்களால் முடிந்த காரணங்களை சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்தார்கள். காரணம் கூற முடியாதவர் , " நான் அதை ஆமோதிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்தார்.

மொத்தத்தில் இரு உறுப்பினர்களை கொண்டு தலைவி கூட்டத்தை தொடங்கினார். Commissioner ம் உடன் இருந்தார். கொஞ்ச நேரத்தில் வெளிநடப்பு செய்யாத இரு உறுப்பினர்களில் ஒரு உறுப்பினரை காணவில்லை. வெளிநடப்பு செய்யாது கடைசிவரை இருந்த உறுப்பினர் சகோ., சம்சுதீன் மட்டுமே.

அவர்கள் வெளிநடப்பு செய்வது அவர்களின் உரிமை. வெளிநடப்பு செய்பவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகையை திருப்பி செலுத்திவிட்டு செல்வார்கள் என்று எண்ணினேன். ஒருவர் கூட நாம் கலந்துகொள்ளாத கூட்டத்தில் கலந்துகொண்டதற்க்காக வழங்கப்பட்ட தொகையை திருப்பி கொடுக்கவில்லை.

இப்படிப்பட்டவர்கள் ஊழலை ஒழிக்க தலைவிக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று நாம் நினைத்தோமேயானால் அது நம்மிடமுள்ள குறைபாடேயன்றி வேறில்லை.

இதில் எங்கள் ஜமாத்தை சார்ந்த இரு உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தார்கள். அதில் ஒருவர் பள்ளிக்கூடம் பக்கம் சென்றிப்பாரா என்பது சந்தேகம். மற்றொருவர் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசான் (பட்டதாரி). அவர் வெளிநடப்பு செய்வதற்கு அவர் சொன்ன காரணம் என்னை அதிர்ச்சியடைய வைத்தது.

இதோ அவர் சொன்ன வார்த்தைகள்.

" நகரமன்ற கூட்டங்களை video " ஒளிப்பதிவு செய்து மக்களுக்கு போட்டுக்காட்டுவது நமது நகர கலாசாரத்திற்கு மாறுபட்டது. வெளிநாட்டில் இருப்பவர்கள் அதை நெட்டில் பார்ப்பார்கள். இது நமது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. அதனால் ஒளிபதிவு செய்து மக்களுக்கு காட்டவேண்டும் என்ற உங்களுடைய (தலிவியுடைய ) இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நான் வெளிநடப்பு செய்கிறேன்".

(இதில் அவர் "வெளிநாட்டில் இருப்பவர்கள்" என்று குறிப்பிட்டது வெளிநாட்டவர்களை என்று நான் கருதுகிறேன்.)

சகோ.., சாமு அவர்கள் தனது அறிக்கையின் நகலை எல்லோருக்கும் கொடுத்துவிட்டு வெளிநடப்பு செய்தார். அவருடைய குற்றச்சாட்டில் சங்கர் என்பவர் குடி போதையில் இஸ்லாமிய சமுதாயத்ததின் மீது அவதூறாக பேசியதாக குற்றம் சுமத்தியுள்ளார். இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக நான் விசாரித்தவரை தெரியவில்லை. (நடந்திருக்கலாம்). ஆறுமுகநேரியை சார்ந்த சங்கர் ஒரு ஆறுமுகநேரி பஞ்சாயத்து உறுப்பினர் என்பது தெரிய வந்தது. பொறுப்புள்ள ஒரு பேரூராட்சி உறுப்பினர் அருகிலுள்ள் நகராட்சிக்குச் சென்று ஒரு சமுதாய மக்களை தரக் குறைவாக பேசியிருக்க வாய்ப்பில்லை. ஒரு பக்கத்து குற்றச்சாட்டை ஆதாரமாக வைத்து மறுபக்கத்தினரை குற்றவாளியாக கருதுவது ஆறாவது அறிவின் விளிம்பிளிருப்பவன் கூட செய்ய மாட்டான். (web site யில் பலர் comments என்ற பெயரில் இதை வாடிக்கையக்கிவிட்டார்கள் என்பது ஒரு பக்கம் ).

எனவே அட்மின் அவர்கள் இது விசயமாக சங்கர் அவர்களை சந்தித்து அவரது version ஐ வெளியிட்டால் நல்லது என்பது என் கருத்து. ஒரு வேலை சகோ.., சாமுவின் குற்றச்சாட்டு உண்மையென்றால் (அப்படி நடந்திருந்தால்) அது கண்டிக்கத்தகுந்தது.

லஞ்சம் வாங்குவது பற்றி பேசிய அந்த இரு உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் நகரமன்ற கூட்டங்களில் நான் கலந்துகொள்ள மாட்டேன் என்று சகோ.., லுக்மான் ஒரு அறிக்கை விட்டதாக எனக்கு ஞாபகம். அவர் வெளிநடப்பு செய்யும் பொழுது சொன்ன காரணத்தில் இதையும் (அந்த இரு உறுப்பினர்களும் இங்கு இருக்கிறார்கள், ஆதலால் வெளிநடப்பு செய்கிறேன் என்று) சேர்த்து சொல்லியிருந்தால் அது அவருடைய வாதத்திற்கு 50% வழு சேர்த்திருக்கும். ஆனால் அவர் கூறிய காரணம், "இணையதளத்தில் தன் மீது அபாண்டமாக தலைவி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும், அதனைக் கண்டித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதாகவும்" சொன்னார்.

ரோட்டில் போகும் பாம்பை சேலைக்குள் இழுத்துப்போடுவது என்பது இதுதானோ? Chennai Super Kings fans' clubஇல் இவரும் (விசிறியாக) சேர்ந்து விட்டாரோ என்று மக்கள் மானசீகமாக பேசவதை உணரமுடிகிறது.

இவர்கள் வெளிநடப்பு செய்ததினால் ஊருக்கு ஒரு நன்மை நடந்ததாக கூட்டத்தில் கலந்துகொண்டு கடைசிவரை கூட்டத்தை அவதானிதவர்களில் சிலர் பேசிக்கொண்டனர். அதாவது இரண்டாவது மீன் மார்கட் சம்பந்தமான் சிலமாதம் நிலுவையிலுள்ள ஒரு பிரச்சனைக்கு சுமுகமாக முடிவு கிட்டியதென்று (பெருமூச்சி விட்டனர்).

இவர்கள் வெளிநடப்பு செய்யவேண்டும் என்று எங்கு ரூம் போட்டு முடிவெடுத்தார்கள் என்று தெரியவில்லை. மொத்தத்தில் ஒரு முடிவுடன் இருக்கிறார்கள். தலைவி எப்படி காயை நகர்த்துகிறார் என்று பார்ப்போம். மக்கள் எப்படி இவர்களை நகர்த்துகிறார்கள் என்று பார்ப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. உங்களுக்கு கிடைக்கும் சராசரி மரியாதை !...
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (kayalpatnam) [29 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19693

ஊழல் பெருச்சாளிகளின் உரையாடல் என்ற "பாம்" வெடித்த உடனேயே ,எங்கப்பன் குதுருக்குள் இல்லை என்று முதலாவதாக முண்டியடித்து கொண்டு "முபாலா" வரை சத்தியம் என்று சரணடைந்த நீங்கள், அந்த கள்ளத்தனமான கருப்பு ஆடுகளின் கயமை தனத்தை காயலருக்கு காட்சி பொருளாக காட்ட முயற்சிக்காமல் அவர்களை அப்படியே அம்போ என்று விட்டு விட்டு

ஆபிதா அவர்களுடன் அறிக்கைப்போர் களத்தில் அசராமல் பல ரவுண்டுகள் வளம் வந்து கொண்டிருக்கிறீர்கள். ஆரம்பத்தில் காசுகொடுத்தாவது கானதுடித்த உங்களின் வீர வசன காட்சிகளை, இப்போ கைகூப்பி கூப்பிட்டு உட்காரச் சொன்னாலும் இவருக்கு வேற வேலையே இல்லையா என்ற வெறுப்புடன் உங்கள் ஆட்டத்தை குலோஸ் பண்ணத்தான் துடிக்கிறார்கள். லுக்மான் அவர்களே ஆட்டத்தை குலோஸ் பண்ணுங்கள் பிளீஸ்!

புதருக்குள் பதுங்கி இருந்த உங்கள் பகல் வேஷம் களைந்து விட்டது. சாயம் வெளுத்து விட்டது .இனி சந்நியாச மௌனம்தான் உங்களுக்கு கிடைக்கும் சராசரி மரியாதை ! அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!

ஆதங்கத்துடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:நகர்மன்றத் தலைவரின் பதிலு...
posted by Kudack Mohudoom Mohamed (Kuwait) [29 June 2012]
IP: 149.*.*.* Kuwait | Comment Reference Number: 19698

Assalamualaikkum ,

தலைவியின் துதிபாடிகளே உங்கள் தலைவியிடம் 1st Pointக்கு தெளிவான குழப்பாமல் பதில் கேட்டு சொல்ல முடியுமா? இல்லை என்றால் எங்களை போன்ற நடுநிலையாளர்கள் தலைவியேயும் லஞ்சம் என்ற லிஸ்ட்லிஸ் சேர்க்க நேரிடும். இதற்கும் தலைவி விளக்கம் கொடுக்க தேவை இல்லை, அவருக்கு பல வேலைகள் உண்டு என்று வரிந்து கட்டி பதில் எழுதவேண்டாம், இது தலைவி மேல் கூறப்பட்டுள்ள குறை, இதை தலைவி அவர்கள் தெளிவு படுத்த வேண்டும்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:நகர்மன்றத் தலைவரின் பதிலு...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [30 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19739

நிறைய வாசக சகோதரர்கள் பொறுப்பற்றும், கண்மூடித்தனமாகவும் கருத்துக்களை பதிவு செய்கின்றனர். தேர்தலில் ஒருவரை ஆதரித்து விட்டதனாலேயே அவர் செய்யும் எல்லா செயல்களுக்கும் "வக்காலத்து "வாங்கும் அடிமை புத்தியை முதலில் நாம் விட்டு ஒழிக்க வேண்டும் கண்மூடித்தனமான குருட்டு ஆதரவுதான் பல அரசியல்வாதிகளை தடுமாரவைத்துள்ளது. இன்றைக்கும் தமிழ்நாட்டில் நிலவும் தி.மு.க அ .தி.மு க அசிங்கங்களுக்கு எதையும் ஆராயாத (என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன் )நமது இந்த அடிமை சேவக மனப்பான்மைதான் காரணம்.

ஒரு உறுப்பினர் தலைவி மீது சில (குற்றச்சாட்டுகள் அல்ல) மனத்தாங்கல்களை வைக்கிறார் எனில் அது எதனால் சொல்லப்படுகிறது, சொல்லும் உறுப்பினரின் தரம் என்ன ?என்பதை எல்லாம் ஆராய மாட்டீர்களா? உடனே எலி அம்மணமாக ஓடுகிறது. .உன் மனைவியை இப்படி சொல்லுவியா? இதெல்லாமா "கமெண்ட்ஸ்"?

ஆபிதா நல்லவர்தான். அதே அளவுக்கு லுக்மானும் ஒன்றும் மோசமானவர் அல்ல. நகரமன்ற துணை தலைவர் பதவிக்கு இணையதள வாசகரில் பெரும்பாலோரால் பரிந்துரை செய்யப்பட்டவர். இதை நான் முன்பு எனது ஒரு பதிவில் சொன்னபிறகுதான் இங்கே சிலர் அதுபற்றி குறிப்பிட்டுள்ளனர்.

கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் பலர் அவதூறுகளையே மழையாக பொழிந்துள்ளனர். இது எந்தவகையிலும் நல்லதல்ல. நமது ஜனநாயகத்தின் முதுகெலும்பே "கூட்டாட்சி "தத்துவம்தான். நல்ல முடிவையோ அல்லது கெட்டமுடிவையோ இங்கு தனிநபரால் எடுக்க முடியாது. அதனால்தான் சட்டமன்றம் உறுப்பினர்கள், மசோதா விவாதம், வாக்கெடுப்பு என்று வைத்திருக்கிறார்கள்.

இது ஒன்றும் எம்.ஜி.ஆர் சினிமா அல்ல. ஒருவன் நூறு பேரை சமாளிப்பதற்கு. இதை மனதில் கொண்டு எதையும் எழுத வேண்டும். ஆபிதா பெற்ற வெற்றி மகத்தானது. வெற்றியோடு நின்றுவிடுவதில்லை காரியம் நமது சகோதரர்களில் பலர் இன்னும் அந்த வெற்றி மாயையில் இருந்து வெளிஎவரவே இல்லை. ஒரு மன்ற உறுப்பினரின் வார்டு தேவைகளை நிறைவு செய்து தருவது தலைவியின் கடமை. ஏனெனில் சம்பந்தப்பட்ட பகுதி மக்களின் குறைபாடுகளுக்கு நேரடியாக முகம் கொடுக்கவேண்டியவர்கள் வார்டு மெம்பர்தான் தலைவியல்ல.

லுக்மானும் படித்தவர். தலைவியும் பட்டதாரி. உறுப்பினர் சாமி பொறியியல் பட்டதாரி. எனவே இவர்கள் மூவரும் நாகரீகமான முறையில் தங்களுக்கிடியே உள்ள கருத்து வேற்றுமைகளை தீர்த்துக்கொள்ளவேண்டும். நான் எல்லா வாசக நண்பர்களையும் மிக பணிந்து கேட்டுக்கொள்வது தயவு செய்து பொறுப்புணர்ந்து எழுதுங்கள் என்பதே...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:நகர்மன்றத் தலைவரின் பதிலு...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [30 June 2012]
IP: 37.*.*.* | Comment Reference Number: 19752

அஸ்ஸலாமு அலைக்கும்.

எங்களின் அருமை காக்கா. லுக்மான் அவர்களுக்கு.

தங்களின் பதில் அறிக்கையில் எந்த ஒரு சரியான பதிலே இல்லை. தலைவி அவர்கள் எவ்வளவு முழுமையான ஆதரத்துடன் தங்களுக்கு பதில் தந்து உள்ளார்கள். நீங்கள் ஏன் நீங்களும் குழம்பி / நம் ஊர் மக்களையும் ஒன்றாக சேர்த்து தேவைக்கு இல்லாமல் குழப்புகிறீர்கள் ? நீங்கள் தேவைகற்ற பிரசனைகளை தேவைக்கு இல்லாமல் வளர்த்து கொண்டே போகிறீர்கள் என்று தான் நாங்கள் நினைக்கிறோம்.

நீங்கள் தேவைக்கு இல்லாமல் 13 .வது வார்டு உறுபினர் ஜனாப் .M.S.M.ஷம்சுத்தின் காக்கா அவர்களையும் இந்த பிரச்சசைனைக்கு இழுத்து ..... அவர்களும் தம் தொகுதி மக்களுக்கு செய்ய கூடிய வேலைகளை செய்ய விடாமல்..... தங்களுக்கு பதில் அறிக்கை தரகூடிய சூழ் நிலைமைக்கு தள்ளி விட்டீர்கள்.

தயவு செய்து ஜனாப் .லுக்மான் காக்கா அவர்களே தாங்கள் கொஞ்சம் நிதானத்தையும் & பொறுமையும் கடை பிடித்து தங்களையே முழுமையாக நம்பி உள்ள தங்களின் கோமான் தெரு மக்களுக்காக வேண்டியாவது. தாங்கள் நம் நகர் மன்ற தலைவி அவர்களுடனும் / தங்களோடு ஒன்றாக உள்ள சக மன்ற உறுபினர்.அவர்களுடனும் + நகர் மன்ற அதிகாரிகளுடனும் மனம் விட்டு பேசி .....நம் ஊர் / தங்கள் தெரு மக்களுக்காக முழுமையாக உழைக்கும் படி மிகவும் தாழ்மையுடன் தங்களை கேட்டு கொள்கிறேன் .....

இன்னும் தங்களை முழுக்க நம்பி உள்ள மக்களுக்கு உழைக்க குறைந்தது 4 1 / 4...வருடம் இருக்கிறது. தங்களின் நேர்மையில் முழு நம்பிக்கை எங்களுக்கு உண்டு. கொஞ்சம் மனகசபுகளை தூரம் தள்ளி வைத்து விட்டு. நம் ஊருக்கா நல்லதே செய்ய நினைக்கும் & நம் ஊரை முன்னுக்கு கொண்டு வரவும் துடிக்கும் நம் அருமை . தலைவி அவர்களுடன் ஒன்றாக இணைந்து பழைய படி ( இணைந்து ) செயல் ஆற்றும் படி கேட்டு கொள்கிறேன்.

நீங்களும் மற்ற மன்ற உறுபினர் அவர்களும் இப்படியே நம் தலைவி அவர்களுடன் சின்ன .... சின்ன ..... பிரச்சனைகளை பண்ணி கொண்டே இருந்தால் இந்த அம்மா அவர்கள் தான் ஊருக்கு என்ன செய்வார்கள்.நீங்கள் யாவர்களும் கொஞ்சம் யோசியுங்கள்..... இந்த அம்மாவை நல்ல முறையில் வேலை பார்க்க விடுங்கள்.

இந்த 5 வருடதில் நம் தலைவி அவர்கள் நம் ஊர் நகர் மன்றதை...... தமிழகத்திலேயே மிக சிறந்த நகர் மன்றமாக மாற்றி காட்டுவேன் என்று சொல்கிற ஒரு மிக சிறந்த நம் தலைவியை ஏன் நீங்களும் ஒரு சில மன்ற உறுபினர் அவர்களுடன் சேர்ந்து கொண்டு நல்ல முறையில் செயல் ஆற்ற விடமாட்டேன் கிறீர்கள் .காரணம் என்ன ??? தங்களுக்கும் """ ஈகோ """ பிரச்சனையா ???? அல்லது தாங்களும் ஊழல் வாதியுடன் கூட்டு சேரும் என்னமா ??? தாங்கள் நம் ஊர் மக்களின் மனதில் இப்பொழுதும் நல்ல முறையில் தான் பதிந்து உள்ளீர்கள். தங்களின் நேர்மையில் இன்னும் முழு நம்பிக்கை நாங்கள் வைத்து இருக்கிறோம். அந்த என்னத்தை வீணாக்கி விடாதிர்கள்.....

நம் ஊரில் இதற்கு முன் இருந்த தலைவர்களை விட இந்த தலைவி அவர்கள் ஒரு வித்யாசமாக செயல் பட்டு / நம் ஊரை முன்னுக்கு கொண்டு வரதுடிகிறார்கள்...... நாம் அதையும் தான் பார்ப்போமே....... நீங்கள் யாவர்களும் ஏன் குறுக்கே நிற்கிறீர்கள் ?

மன்ற உறுபினர் அவர்களுடன் சேர்ந்து தாங்களும் தனைவிக்கு முழுமையான சப்போட்டு பண்ணினால் தானே. நம் ஊர் சிறப்பு பெரும் . ( வளர்ச்சி அடையும் )

நீங்கள் இனி தலைவி இடம் இருந்து பதில் வரும் என்று எதிர் பார்க்காமல் ..... அவரை வேலை செய்ய விடவும் . தாங்களும் அவர்களுடன் உட்காந்து பேசி .நம் ஊருக்கா நல்லது செய்யவும். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Every coin has two sides
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [01 July 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 19756

K S Muhamed shuaib (Kayalpatinam) அவர்களே,

உங்கள் கருத்தில் நீங்கள் உண்மையாளராக இருந்தால், சகோ. லுக்மான் அவர்களிடம் பேசியதுபோல, சகோதரி. ஆபிதா அவர்களிடமும் பேசிவிட்டு உங்கள் கருத்தை பதிவு செயுங்கள்.

ஆபிதா அவர்கள் வெற்றிக்கு உழைத்தவர்கள் அவரின் ரசிகர்களாக மாறக்கூடாது எனபது போல உங்கள் கருத்தை எழுதியுள்ளீர்கள். சரியான் கருத்து, வரவேற்க தகுந்த கருத்து. அதே நேரத்தில் தேர்தலில் அடைந்த தோல்வியை ஜீரணிக்க முடியாதவர்கள் தங்கள் கருத்துகள் மூலம் வாந்தி எடுக்கிறார்களே அப்படிப்பட்டவர்களுக்கு தங்களின் அறிவுரை என்ன ?

உணவு ஜீரனிக்கவில்லை என்றால் வாந்தி அல்லது பேதி மூலம் வெளியே வந்துதான் ஆக வேண்டும் என்று சொல்லிவிட்டு நழுவி விடாதீர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:நகர்மன்றத் தலைவரின் பதிலு...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [01 July 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19766

சகோதரர் வாஹித் சைபுதீன் அவர்களே...

நிச்சயமாக சகோதரி ஆபிதா அவர்களை சந்திக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவர் பக்க நியாயத்தையும் நான் கேட்பேன். எனக்கு எதுவும் முன் முடிவுகள் கிடையாது. நான் தோற்றவன் அல்ல. எனக்கு எதையும் வாந்தி எடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. நீங்கள் வேறு யாரையோ மனதில் வைத்துக்கொண்டு இதை எழுதுகிறீர்கள்.

நானும் ஆபிதாவைத்தான் ஆதரித்தேன். ஆபிதாவுக்குத்தான் வாக்களித்தேன். அப்படியிருக்க என்னை எந்த வகையில் தோற்றவன் என்று நீங்கள் எழுதுகிறீர்கள் என்று தெரியவில்லை. உண்ட உணவு செரிக்காமல் வாந்தி எடுப்பவர்கள் உண்டு. வேண்டும் என்றே விரலை வாய்க்குள் விட்டு வாந்தி எடுப்பவர்களும் உண்டு. இதில் நீங்கள் எந்த வகை என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இங்கு யார் எடுத்த வாந்தி அதிகமாக நாறுகிறது என்பதையும் அப்படியே முடிவு செய்யுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. அன்புள்ள மாமா அவர்களுக்கும் மருமகன் எழுதிக் கொள்வது....
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா) [01 July 2012]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19773

அட! என்னப்பா இது? சும்மாவே நகர்மன்றம் வேக்காடு எடுத்து காந்தித் தொலையுது. இதுலெ வேறெ நீங்க வாந்தி, பேதி, மலம்ன்னு கருத்தெழுதிக்கிட்டு, உதாரணம் சொல்ல நல்ல வார்த்தைகளே இல்லையா?

மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஷுஐபு அவர்களே! உங்களுக்கு பதில் கொடுக்க வேண்டாம் என எண்ணியிருந்தேன். ஏற்கெனவே இப்பதிவில் தாங்கள் என் கருத்துக்களை சாடியும், உங்கள் அபிமான உத்தமரை வாழ்த்தியும் சில வார்த்தைகளைக் கையாண்டு இருந்தீர்கள்.

நினைவிருக்கின்றதா ஒரு முறை தாங்கள் கிரிக்கெட் பற்றி கட்டுரை எழுத, அதை விமர்சித்தவர்களோடு கருத்துப்போர் புரிந்து நம் வீடு, குடும்பம் என விமர்சனத்திற்கு ஆளாகினோமே? அதுக்குள்ளேயே மறந்துட்டீங்களா? உங்கள் மருமகன் எனும் உரிமையில் சொல்லுகின்றேன். விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம்தான் பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மூலதனம்!

நீங்கள், அவர்களே! இவர்களேன்னு பெயர் போட்டு வேறு பதில் எழுதி விடுகின்றீர்கள். கருத்துக்களை சொல்வதோடு நாம் நிதானித்துக் கொள்ள வேண்டும். தேவைக்கு மட்டுமே பதில் கொடுக்க வேண்டும். இந்தப் பழக்கம் உங்களுக்கும் இல்லை! நீங்க ஆதரிக்கும் மரியாதைக்குரிய சத்தியவான் லுக்மான் அவர்களுக்கும் இல்லை!

நகர்மன்றத் தலைவியைப் பாருங்கள். பதில் கொடுத்தார்கள். தீர்ப்பை மக்ககளிடம் விட்டுவிட்டார்கள். நகர்மன்ற நிகழ்வுகளால் பிரதிபலிக்கும் கருத்துக்கள் ஊடகங்களின் வாயிலாக கத்திரி போட்டும் போடாமலும் வந்த வண்ணம் இருக்கின்றன. நான் நகர்மன்றத் தலைவரோடு பழகிய சில காலங்களில் அவரது துடிப்பையும், நகர் நலத்தின் மீது அவர் கொண்டுள்ள அக்கறையையும் கண்கூடாகப் பார்த்தேன். அதில் உண்மை, உறுதி, வேகம், விவேகம்,பற்று, பாசம் என பல நல்ல தன்மைகள் அவரிடத்தில் இருந்தது. எனவே தாம் கருத்தெழுதினேன்.

உண்மை எப்போதும் கசக்கத்தான் செய்யும். தாங்கள் சொல்லுவதைப் போன்று ஆதரவு கருத்தாளர்கள் ஒருபோதும் ரசிகர்கள் அல்ல! மாற்றுக் கருத்துடையவர் எதிரியும் அல்ல! முதலில் நல்ல மாத்திரைகளை உட்கொண்டு இந்த வாந்தி, பேதிகளை நிறுத்த முயலுங்கள்.

தினமும் என்னை அர்ச்சித்து குறைந்தது பத்து ஈமெயில் வரத்தான் செய்கின்றது. அவற்றில் சில “ஷா”க் கடிக்கிற மாதிரி வரும். சில ஏம்ப்பா உனக்கு இந்த வேண்டாத வேலை? ”காக்கா” ப்புடிச்ச மாதிரி எழுது, மாசா மாசம் எதாவது உனக்கு அனுப்பித் தருகின்றேன். என்றும் வந்துள்ளது.

இன்னும் சிலர் நான் பொய்யன், பிதற்றல்வாதி, காசுக்கு கருத்தெழுதுகின்றவன். மக்காவை விட்டு வெளியேற வேண்டும். அதையும் தாண்டி “ அவர் அங்கிருந்து வெளியேற மாட்டார். அபுஜஹில், அபுலஹப், உத்பா, சைபா போன்ற பொய், புரட்டு, பித்தலாட்டம் ஆகியவற்றின் தலைமகன்களும் இந்த புனித பூமியில்தானே உலாவினார்கள் என்று ஒருவேளை தன்னை சமாதான படுத்தி கொள்கிறாரோ என்னவோ?” என, உத்தம திருநபியின் உம்மத்தான எனக்கு அவர்கள் கொடுத்துள்ள பட்டப் பெயர்கள்தான் இவை.

இவர்கள் அத்தனை பேர்களுக்கும் நான் தனித்தனியாக பதில் எழுதிக் கொண்டிருதால் என் காலமும்.நேரமும் விரயமாகிக் கொண்டேதான் இருக்கும்! அன்பு மாமனாரே! மருமகன் எனும் உரிமையில் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன். கேட்பதும் கேளாததும் உங்கள் விருப்பம்.

என்றும் அன்புடன்.
ராபியா மணாளன்.

Moderator: பிற உடகங்களை மேற்கோள் காட்டும் வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:நகர்மன்றத் தலைவரின் பதிலு...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [02 July 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19780

அன்பு மருமகனார் ராபியா மணாளன் அவர்களே...!

"பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் பக்குவம் வேண்டும் "என்கிறீர்கள். அதெல்லாம் பொதுவாழ்க்கையை வயிற்று பிழைப்பாக கொண்டு திரிகிறார்களே.. அவர்களுக்கு வேண்டுமானால் உங்களின் புளித்துப்போன விமர்சனம் சரியாக இருக்கலாம். ஒரு சேவை மனப்பான்மையோடு ஏதோ நமது மக்களுக்கு நம்மால் இயன்றதை செய்யவேண்டும் என்கிற தூய உள்ளத்தோடு பொதுவாழ்க்கைக்கு வருகிறவர்கள் "கருத்து சுதந்திரம் "என்ற பெயரில் முன்வைக்கப்படுகிற அவதூறுகளை சகித்துக்கொள்ளத்தான் வேண்டுமா..?

உங்களுக்கு ஆபிதா அவர்களை ஆறு மாதமாகத்தான் தெரியும் எனக்கு லுக்மான் 20 வருட பழக்கமுள்ளவர். நானும் அவரும் ஆந்திராவில் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து இருக்கிறோம்.

இங்கு விஷயம் யாருக்கு எத்தனை வருடம் யார் பழக்கம் எனபது குறித்தல்ல. நூறு வருடம் ஒருவன் எனக்கு பழக்கமாக இருந்தாலும் அவர் தவறு செய்தால் அது தவறுதான். நான் இங்கு ஆபிதா அவர்களையும் குற்றம் சுமத்தவில்லை. ஒரு நல்ல நிர்வாகத்தை மக்களுக்கு தர அந்த சகோதரி முயன்று கொண்டிருக்கிறார். அதில் அவருக்கு நாம் உறுதுணையாக இருப்போம்.

நீங்கள் நாட்டுக்கு வெளியே இருப்பதால் உங்களுக்கு பலவிஷயங்கள் தெரிய வாய்ப்பில்லை. லுக்மான் தனது இரண்டாவது அறிக்கையை வெளியிடும் முன்பு தலைவிக்கும் அவருக்கும் இடையே ஒரு சமாதான முயற்சி இங்குள்ள சிலரால் மேற்கொள்ளப்பட்டது. அதுவரை அந்த அறிக்கையை வெளியிடாமல் இருக்கும்படியும் பார்த்துகொள்ளப்பட்டது. முயற்சிகள் தோல்வி அடைந்ததால் இரண்டாவது அறிக்கை வேறுவழியின்றி வெளியானது.

பதிலுக்கு தலைவி அவர்கள் அறிக்கை வெளியிடாதது பாராட்டத்தக்கது. எனது ஆதங்கமெல்லாம் கருத்து எழுதிய பலருக்கும் தனிப்பட்டு தலைவியையும் தெரியாது .லுக்மானையும் தெரியாது. ஆபிதா ஒன்றும் ஜெயலலிதாவும் இல்லை. லுக்மான் ஒன்றும் கருணாநிதியும் இல்லை. இரண்டு பேருமே சாதாரண இரண்டு நபர்கள். குடும்பம், குழந்தைகள், தொழில் என உள்ளவர்கள். இரண்டு பேருக்குமே அவரவர்கள் குடும்பம் சார்ந்து, சமூகம்சார்ந்து சுய கவுரவமும் சமூக மரியாதையும் உள்ளவர்கள். இரண்டு பேரில் யார் ஒருவருக்கும் இவைகள் பாதிக்கப்படும்போது உள்ளபடியே வருத்தம் இருக்கத்தான் செய்யும்.

ஒரு நிர்வாகம் எனில் அதில் பல்வேறு பிரச்சினைகள், குளறுபடிகள் இருக்கத்தான் செய்யும். அதிலும் நகர்மன்றம் போன்ற மக்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கருத்துவேறுபாடுகளும், வாத பிரதிவாதங்களும் சகஜம். ஒரு குறைபாட்டை சுட்டிக்காட்டினாலே அவரை தரக்குறைவாக விமர்சிப்பதும், துரோகி என்று சாடுவதும் ,மனம்போனபோக்கில் கண்ணைமூடிக்கொண்டு அவதூறுகளை அள்ளி வீசுவதும் என்ன நியாயம்? இங்கே "கமெண்ட்ஸ் "என்கிற பெயரில் எழுதபட்டிருக்கும் பலவும் இந்த ரகமானதுதான். ஒரு மாற்றமான அரசியலை நாம்வேண்டி நின்றால் இங்கே இன்னொரு தி. மு.க அ.தி.மு.க அசிங்கத்தை அல்லவோ இங்கு சிலர் உண்டு பண்ண முயற்சிக்கிறார்கள்..?தலைவி மீது புகழ் பாடும் கட்டற்ற சில கமெண்ட்ஸ் கலை சற்று உற்று நோக்கினால் எங்கே இன்னொரு ஜெயலலிதா உருவாகிவிடுவாரோ...என்று பயமாக இருக்கிறது. மற்றபடி எனக்கு யார்மீதும் எந்த கால்புணர்ச்சியும் இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. தங்களின் அறிவுரை என்ன?
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [02 July 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 19784

சகோ., சுஹைப் அவர்களே,

என்னுடைய கருத்தை மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு உங்கள் கருத்தை (அறிவுரையை) எழுதுங்கள்.

"(நகராட்சி) தேர்தலில் தான் ஆதரித்த வேட்பாளர் தோல்வியடைந்ததை ஜீரணிக்க முடியாதவர்கள் கருத்து எழுதுகிறேன் என்ற பெயரில் "vomit" எடுக்கிறார்களே அவர்களுக்கு தங்களுடைய அறிவுரை என்ன? என்றுதான் நான் கேட்டேனே தவிர நீங்கள் தோற்றதாகவும், நீங்கள் "vomit" எடுத்ததாகும் நான் எழுதவில்லை.

கவனக் கோளாறா? புரிந்துகொள்வதில் கோளாறா? நீங்கள் இதில் எந்த வகையை சார்ந்தவர் என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. சங்குகள் காத்திருக்கின்றன... தக்க சமயத்தில் அது ஊதப்படும்.
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [03 July 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19789

அன்புள்ளள மாமா, உங்களின் புளித்துப்போன விமர்சனம் சரியாக இருக்கலாம் என பதில் தந்துள்ளீர்களே? வாந்தி, பேதி எல்லாம் போய் இப்ப புளிப்பு ஏப்பம் வந்திருக்கா?

அது சரி! பித்தம் தலைக்கேறினால் அத்தனையும் புளிப்பாகத்தான் தெரியும். தங்களின் எழுத்தாற்றலால் வார்த்தைகளை வடிவமைக்கும் அசாத்திய திறமையைக் கண்டு நான் நான் பல முறை வியந்திருக்கின்றேன். தாங்கள் நல்ல ஒரு எழுத்தாளர் என்பதை நான் உளப்பூர்வமாக ஒப்புகொள்கின்றேன்.

ஒரு மனிதனைப் புரிந்து கொள்ள ஆறு மாதங்களோ இருபது வருடங்களோ தேவையில்லை. நாட்கணக்கில் அநியாயத்துக்கு நல்லவனா இருக்கும் ஒருவன் தன் செயல்பாட்டின் மூலம் நொடிப்பொழுதில் நாணயமற்றவனாக மாறிவிடுகின்றான். தாவிக் குதிக்கும் மனிதனின் மனம் குரங்கிற்குச் சமம்! அது எந்தக் கிளையில் இருக்கும், எப்ப தாவும்ன்னு யாராலும் அவதானிக்க இயலாது. குடும்பம் குழந்தைன்னு இருக்கிறவங்க என்கிறதாலெ அவர் செய்யும் தவறுகளுக்கு அங்கீகாரம் கொடுத்து விட முடியாது.

நகராட்சிக்குள் நடக்கும் நாசூக்கான சூழ்ச்சிகளை பூதக்கண்ணாடி வைத்து கூர்ந்து பார்க்கும் இணையதள சக்திகள் இன்று இருக்கின்றன. எனவேதாம் ஒரு உறுப்பினர் வெளிநடபிற்கு இணையதளத்தைக் காரணம் காட்டினார். உங்களுக்குப் பரிச்சயமானவர், பழகினவர் என்பதால் அவர் செய்யும் தவறுகளை சாடக் கூடாதென்பது எவ்விதத்தில் நியாயம்?

தாங்கள் என் மனைவியின் தந்தை என்பதையும் தாண்டி உங்கள் கருத்துக்கே நான் உடன்படாத நிலையில், ஊருக்கு ஊறு விளைவிக்கப் புறப்பட்ட கூட்டத்தை சும்மாவா விட்டு விடுவேன்? படாத பாடுபட்டுத் தேடிக்கொடுத்த வெற்றிகனியைத் தட்டிப்பறித்து மண்ணில் புதைக்க நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்!

கருத்தெழுதியே ஒரு சரித்தரத்தைப் போட்டோம். மறந்து விட்டீர்களா? எதிரணியில் உள்ளவர்கள் கூட ஆணியின் கூர்முனைகொண்ட இக்கருத்துப்பதிவுகள் இணயதளத்தின் மூலம் மக்கள் மனதில் பதித்து வருவதக் கண்டு பயந்தார்களே? அதன் விளைவு எத்தனை அமைப்புகள்? எத்தனை ஜமாஅத்துகள்? அத்தனையும் மக்கள் எனும் மகா சக்தி புறந்தள்ளி புதிய சகாப்தம் படைதார்களே? அவ்வளவு சீக்கிரத்தில் அதை காவுகொடுக்க ஒருபோதும் நாங்கள் துனை போக மாட்டோம்.

சற்றே பொறுத்திருங்கள்...! சங்குகள் காத்திருக்கின்றன. தக்க சமயத்தில் அது ஊதப்படும். அன்று அடங்கும் இவர்களின் அணவ ஆட்டங்களும், அதிகார கொட்டங்களும். சட்ட ரீதியாக காய் நகர்த்த நகர்நலம் நாடும் வல்லுநர்கள் தயாராகி விடனர். சுருக்கமாச் சொன்னா பருப்பு வேகாது...! அவ்ளோதான்...!

-உங்கள் ராபியாவின் மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:நகர்மன்றத் தலைவரின் பதிலு...
posted by Kudack Mohudoom Mohamed (Kuwait) [03 July 2012]
IP: 213.*.*.* Kuwait | Comment Reference Number: 19795

Assalamualaikkum ,

அட்மின் அவர்களே,

இதோடு இந்த செய்தியின் கருத்து பதிவினை நிறுத்தினால் நல்லது என்று நினைக்கிறன், குடும்பத்துக்குள் (மாமனார் மற்றும் மறுமகன்) குழப்பம் வர உங்கள் இணையத்தளம் காரணமாக ஆகவேண்டாம் என்று இதை சொல்லுகிறேன், இது என்னுடைய வேண்டுகோலே தவிர முடிவு உங்கள் கையில்.

வஸ்ஸலாம்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:நகர்மன்றத் தலைவரின் பதிலு...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [03 July 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19808

அன்புக்குரிய மருமகனாரே....!

உங்கள் கருத்துக்குதான் நான் பதில் எழுதி இருக்கிறேன். நீங்கள்தான் "ஆபிதா அவர்களை ஓரிருமுறை சந்தித்திருப்பதாகவும் துடிப்பான செயல்படும் தலைவி "என்றும் எழுதி இருக்கிறீர்கள். அதையொட்டிதான் தங்களுக்கு தலைவி அவர்களை ஆறு மாதம்தான் பழக்கம் என்றும் ,எனக்கு லுக்மானை இருபது வருட பழக்கம் "என்றும் எழுதினேன். ஒருவர் பழக்கம் என்பதால் மட்டுமே அவர் செய்யும் தவறுகளை நாம் அங்கீகரிப்பதில்லை.

அதை சுட்டும் முகமாகத்தான் "நூறு வருடம் ஒருவர் பழக்கம் எனினும் அவர் தவறு செய்தால் தவறுதான் "என்றும் எழுதியிருக்கிறேன். தாங்கள் கவனமாக படிக்கவில்லை போலும்..! நான் என்றும் என்னை பெரிய எழுத்தாளராகவோ, அறிவு ஜீவியாகவோ நினைத்துக் கொள்வதில்லை. நீங்களாகவே ஏதேதோ கற்பனை செய்து எழுதினால் அதற்க்கு நான் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டேன்.

நீங்கள் யாருக்கு சங்கு ஊதுவீர்களோ, அல்லது யாருக்கு பாடை கட்டுவீர்களோ, அது எனக்கு தேவையில்லாத விஷயம். ஒரு தனிப்பட்ட நபர் மீது எதையும் ஆய்ந்தறியாமல் மனம் போன போக்கில் "கண்ணா பின்னா "என்று சிலர் எழுதியதை மட்டுமே இங்கு நான் குறிப்பிட்டு விமர்சனம் செய்தேன். மற்றபடி நான் யாருக்கும் ஆதரவாளனோ, யாரையும் எதிர்ப்பவனோ அல்ல. பொதுவாழ்வில் இருப்பவர்கள் ஒன்றும் வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள் அல்ல. அவர்களும் நம்மைப்போன்று மனிதர்கள்தான்..!

பொதுவாழ்வில் இருந்தால் என்ன ?என்னவேண்டுமானாலும் பேசலாமா..? எப்படிவேண்டுமானாலும் ஏசலாமா ? குடும்பம், குழந்தைகள், தொழில் என நான் லுக்மானை மட்டும் குறிப்பிடவில்லை. தலைவி அவர்களையும் சேர்த்தே குறிப்பிட்டுள்ளேன். எனது பதிவை மீண்டும் ஒரு முறை கவனமாக படித்துப்பாருங்கள். ஆபிதா அவர்களுக்கு நிஜ எதிரிகள் ஏராளமான் பேர் உள்ளனர். நிழல் எதிரிகளை நீங்களாகவே ஏன் உற்பத்தி செய்து கொள்ளுகிறீர்கள் ? நிழலோடு யுத்தம் நடத்தினால் உங்கள் சக்திதான் வீணாகப்போகும்.

"பொதுவாழ்க்கையில் இருப்போருக்கு விமர்சனங்களை தாங்கி கொள்ளும் பக்குவம் "இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் "தொட்டால் சிணுங்கி "தனம் மட்டும் கூடவே கூடாது.

அதற்க்கு உங்கள் ரசிகர் பட்டாளன்களே சாட்சி....!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. குற்றசாட்டும் பதில் குற்றசாட்டும்
posted by Saalai.Abdul Razzaq Lukman (Kayalpatnam) [03 July 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19813

அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்த நீண்ட நெடிய குற்றசாட்டுகளும் எதிர் குற்றசாட்டும் அதற்கான பதிலும் மாறி மாறி வந்து அதற்கான comments -ல் வாந்தி, புளிப்பு எல்லாம் வந்து விட்டது. இந்த விவாதங்களுக்கு அச்சாரம் போட்டது News ID # 8616. ஒரு செய்தியை போடும்போது அதிலும் குறிப்பாக sting operation பற்றிய செய்தியை போடும்போது சம்பந்த பட்ட நபர்கள் யார் என்று குறிப்பிடவேண்டும். வாசகர்களின் யூகத்திற்கு விடக்கூடாது. ஆனால் நகரமன்ற உறுப்பினர் லுக்மான் அவர்கள் இந்த செய்திக்கு தன்னிலை விளக்கம் என்ற பெயரில் நகரமன்ற தலைவி மீது குற்றம் சாட்ட தேவை இல்லை. மாறாக தனியாக தலைவியின் நடவடிக்கை பற்றி குற்றம் சாட்டிஇருக்காலம். உறுப்பினர் லுக்மான் அவர்கள் தலைவி பற்றி ஊழல் குற்றசாட்டு ஒன்றும் சொல்லவில்லை. மாறாக நிர்வாக குறைபாடு பற்றி தான் குறை சொல்லியுள்ளார். தலைவியின் ஆதரவாளர்கள் அதை கூட தாங்க முடியாமல் அவரின் மீது சேற்றை வீசியுள்ளனர்.

அந்த குற்றசாட்டுக்கு பதில் அளித்த நகரமன்ற தலைவி அவர்கள் நீண்ட அபரிமிதமான தகவல்களுடன் எல்லா உறுப்பினர்களையும் ஊழலுக்கு துணை போவது போலவும் தான் மட்டும் தான் ஊழலை தடுப்பது போலவும் சொல்லியுள்ளார். அதில் சில குற்றசாட்டுகள், நேரடியாக உறுப்பினர் லுக்மான் அவர்களை நோக்கி வீச பட்டது. அதற்கு விளக்கம் அளித்த உறுப்பினர் லுக்மான் அவர்கள் அதனை மறுத்ததோடு இல்லாமல் மேலும் சில குறிப்புகளையும் அளித்துள்ளார். அதற்கும் நகரமன்ற தலைவியின் ஆதரவாளர்கள் உறுப்பினர் மீது வசை பாடியுள்ளனர்.

நகரமன்ற தலைவியின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினரின் ஆதரவாளர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கருத்தை பதிவு செய்யட்டும். இருவரின் குற்றசாட்டுகளின் merit and reliabilty மட்டும் பார்க்கவும். அதை விட்டு விட்டு நம் ஆதரவு பெற்றவரை மற்றவர் குறை சொல்கின்றாரே என்று அவர் மீது வசை பாட வேண்டாம். ஏன் என்றால் இதில் கருத்து பதிவு செய்த நபர்களில் இதன் உண்மை அறிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

இந்த குற்றச்சாட்டுகளின் உண்மையை, நம்மை படைத்து பரிபாலிப்பவன் மிக அறிந்தவன். இந்த குற்றசாட்டு & எதிர் குற்றச்சாட்டுகளில் அவதூறு அல்லது பொய் இருந்தால், அதனை சம்பந்தப்பட்ட நபர் மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.

நகரமன்ற தலைவி மீது உறுப்பினர் லுக்மான் அவர்கள் கூறிய குற்றசாட்டு போல், வேறு சில குற்றசாட்டுகளும் நகரமன்ற தலைவி மேல் சுமத்தப்பட்டுள்ளது. viewers நடுநிலையோடு வாசிக்கவும். இந்த குற்றசாட்டுகள் தலைவியை நோக்கி உள்ளதால், தலைவியின் ஆதரவாளர்கள், அந்த குற்றசாட்டின் உண்மை தன்மை அறிந்து, விளக்கம் கேட்டு comments பதிவு செய்ய வேண்டுகிறேன்.

1 ) ஏப்ரல் மாத கூட்டத்தில் "நகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகளை வருவாய் உதவி ஆய்வாளர் உதவியுடன் மறு அளவீடு செய்து மண்டல வாரியாக பிரித்து சரியான முறையில் முறையாக அளவில் வரி விதிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க மன்றத்தின் அனுமதிக்கு" இந்த கோரிக்கைக்கு கருத்து தெரிவித்தபோது உறுப்பினர்கள் அனைவரும் வீடுகளுக்கான வரியை உயர்த்தக் கூடாது என்று விவாதித்த பிறகு "நகரளவில் மறு அளவீடு செய்ய தற்போது அவசியம் இல்லை என மன்றம் தீர்மானிக்கிறது" என்று மினிட் புக்கில் எழுதினார்களே, அது நம் தலைவி நமதூர் மக்களுக்கு வைக்க நினைத்த ஆப்பு.ஆனால் வீடுகளுக்கு வரி உயர்த்தும் கோரிக்கையை எதிர்த்தது தலைவிக்கு எதிராக செயல்பட்டது உறுப்பினர்கள் செய்த குற்றம்தான்.

2 ) அதே ஏப்ரல் கூட்டத்தில் "நகராட்சி பகுதிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு காலிமனை வரி வசூலிப்பது சம்பந்தமாக மன்றத்தின் அனுமதிக்கு" என்ற கோரிக்கைகு தலைவி ஆதரவாக பேசினார்கள். அதற்கு உறுப்பினர்கள் காலிமனை என்றால் நகரின் அனைத்து பகுதிகளிலும் நிலங்கள் வாங்கி வைத்திருக்கின்ற அனைவரின் மீதும் வரி என்ற பெயரில் சுமை ஏற்றவேண்டாம் என்று கூறியும், கூட்டம் நிறைவடைந்ததும் மினிட் புக்கில் "இது குறித்து ஆவண செய்ய மன்றம் அனுமதி வழங்குகிறது" என்று எழுதி இருக்கிறார். இதுவும் நம் தலைவி நமக்கு செய்த அளப்பரிய சேவை. ஆனால் இதற்கு ஆதரிக்காதது உறுப்பினர்களின் குற்றம்தான்.

3 ) மேலும் அக்கூட்டத்தில் பொருள் எண் 12-ல் "பொதுசுகாதார பிரிவில் உள்ள தண்ணீர் வணடி தெருக்களுக்கு பொது நிகழச்சிகளுக்கும், பள்ளி வாசல்களுக்கும், விழாக்களுக்கும் தண்ணீர் கொடுக்க வேண்டியது இருப்பதாலும் அதனை பழுது பார்க்க உத்தேச மதிப்பீடு ரூ.65.000-த்திற்கு மன்ற அனுமதி வேண்டப்படுகிறது" என்ற கோரிக்கைக்கு அந்த வண்டிக்கு எந்தவித டாக்குமெண்ட்களும் இல்லை அதற்கு இவ்வளவு செலவு செய்வதைவிட புதிய வண்டி வாங்கலாம் என்று ஒரு உறுப்பினர் கூறியதற்கு, அனைத்து உறுப்பினர்கள் மற்றும் தலைவியும் இணைந்துதானே அந்த கருத்தை ஏற்றுக்கொண்டார்கள். பிறகு மினிட் புக்கில் "மன்றம் அனுமதி வழங்குகிறது" என்று ரிப்பேர் செய்ய அனுமதி வழங்கி எழுதியது ஏன்?

புதிய வண்டி வாங்குவதற்கு காலதாமதம் ஆகலாம் அதனால்தான் பழைய வண்டியை ரிப்பேர் செய்ய கூட்டத்திற்கு பிறகு சில உறுப்பினரின் அனுமதியோடு அனுப்பப்பட்டது என்று தற்போது தலைவி கூறினாலும் 18 உறுப்பினர்களையும் அழைத்து நாம் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றி விட்டோம், தற்போது சூழ்நிலை இப்படி இருக்கின்றது என்று கூறினால், யாரும் வேண்டாம் என்று சொல்லப்போகிறோமா? தாங்கள் ரிப்பேருக்கு அனுப்பியதை யாரும் குறைகூறிவிடகூடாது என்பதற்காக மினிட் புக்கில் கூட்டத்தில் முடிவு செய்ததற்கு மாற்றமாக எழுதலாமா?

4 )ஏப்ரல் மாத கூட்டம் பொருள் எண் : 15-ல் "காயல்பட்டணம் நகராட்சி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக மேல ஆத்தூரில் அமைந்துள்ள திட்டம் மூலமாக குடிநீர் பெற்று வருகிறது. அவ்வகைக்காக காயல்பட்டணம் நகராட்சி தமிழ்ந்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பாக்கி வைத்துள்ளது. அப்பாக்கியினை தமிழ்ந்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு செலுத்திட முடிவு செய்வது குறித்து நகர்மனற தலைவரின் கடிதம் மன்றத்தின் அனுமதிக்கு" என்ற தங்களது கோரிக்கை விவாதத்திற்கு வந்தது இக்கோரிக்கைக்கு ஆதரவாக எத்தனை உறுப்பினர்கள் பேசினார்கள்? எதிர்ப்புதானே அதிகமாக இருந்தது. தற்போது கட்டவேண்டாம் என்று பல உதாரங்களை எடுத்துக்கூறியும் மினிட் புக்கில் "காயல்பட்டணம் நகராட்சி தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்திற்கு வைத்துள்ள பாக்கியினை செலுத்திட மன்றம் அனுமதி வழங்குகிறது" என்று உங்கள் எண்ணத்தை பதிவு செய்தால். இந்த நகராட்சி கூட்டம் எதற்கு? விவாதம் எதற்கு? தலைவியே தனியாக கூட்டம்போட்டு தீர்மானம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டியதுதானே?

உறுப்பினர்கள் நகராட்சி கூட்டங்களில் ஊரின் நலனுக்காக இதுபோன்ற விசயங்களில் வாதிட்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மினிட் புக்கில் மாற்றி எழுதப்பட்டால் அவர்கள் உள்ளே விவாதங்கள் செய்து என்ன பயன்? கூட்டத்தில் கலந்து என்ன பயன்? அவர்களே கூட்டத்தை நடத்தட்டும், அவர்களே தீர்மானங்களை நிறைவேற்றி மினிட் புக்கில் ஏற்றட்டும். தற்போது இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து கூட்டப் பொருள் மற்றும் மினிட் புக்கில் ஏற்றப்படும் தீர்மானங்கள் அனைத்து நகராட்சியின் தனி இணையதளத்திவ் வெளியிடப்பட்டுள்ளன. அவைகளை காண http://municipality.tn.gov.in/kayalpattinam/salient_council.html இங்கு கிளிக் செய்யவும்.

தலைவியும் மற்றைய அனைத்து உறுப்பினர்களும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்க பட்டவர்கள்தான். ஊர் நலனுக்காக எல்லோரும் இணைந்தால்தான் ஊருக்கு நன்மை கிடைக்கும். அதை விட்டுவிட்டு நீ பெரியவனா நான் பெரியவனா என்று நினைத்தால், அதற்காக அவர்களின் துதிபாடிகள் தூபம் போட்டால் ஊருக்கு நன்மை கிடைப்பதற்கு பதில் கெடுதி தான் அதிகம் ஏற்படும். அதை கவனத்தில் கொண்டு, இருதரப்பு ஆதரவாளர்களும் நடக்க வேண்டுகிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், நம் யாவருக்கும் உண்மையை, உண்மையாக அறிய உதவி செய்வானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:நகர்மன்றத் தலைவரின் பதிலு...
posted by M Sajith (DUBAI) [04 July 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19831

ரஜாக் காக்கா அழகாக ஆரம்பம் செய்து " உறுப்பினர் லுக்மான் அவர்கள் இந்த செய்திக்கு தன்னிலை விளக்கம் என்ற பெயரில் நகரமன்ற தலைவி மீது குற்றம் சாட்ட தேவை இல்லை" என்று விளக்கி இந்த விவாதம் திசைதிரும்பியது எங்கே என்பதை குறிப்பிட்டுள்ளார்...

இதையே சொன்னதால் ஷுஐபு காக்கா ரசிகர் பட்டம் தந்தார்கள்., தலைமையில் குறையே இல்லை என வதிட எவருமில்லை - அவரும் மனிதர்தான் என்பதில் சந்தேகமுமில்லை...

விரும்பி செய்ததோ விரும்பாமல் செய்ததோ, கவனம் ஆடியோவில் இருந்து திசை திரும்பியது உண்மையா இல்லையா?

இதில் வார்த்தை பிரயோகங்களும் மேற்கோள்களும் அவரவரின் முதிர்வை வெளிப்படுத்தும். 'ஆப்பு' என அரம்பம் செய்து முடிவில் 'முனாபிக்' என்று முடித்த பின்னர் 'ரமலானை' சொல்லி ஆறுதல் கண்ட சில முதிர்ந்தவர்களின் வேக்காடுகள் கடந்த தேர்தலின் பாதிப்புக்கள் தவிர வேறு இல்லை. தாங்கள் மேற்கோள் காட்டிய வார்த்தைகள் அனைத்துமே அங்கிருந்துதான் வந்தது என்பதையும், மீண்டும் ஒருமுறை படித்தால் தெரியும்.

ஷுஐபு காக்கா ஏற்கனவே குறிப்பிட்ட கண்மூடித்தனமான கட்சி வெறியில் ஊரிய பாதிப்புக்கள் இவை. எதிர்க்கவேண்டும் என்பது முதல் குறிக்கோள் அதற்கு காரணம் வரும்வழியில் தானாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பயணம் செய்கின்றனர். It is all about individual comprehension capabilities - அவ்வளவுதான்

முடிவில் தாங்கள் ஒட்டுமொத்தமாக பதிவு செய்திருக்கும் 'துதிபாடிகள்' - என்ற அவதூறுக்கும் "அதனை சம்பந்தப்பட்ட நபர் மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்." என்ற தங்களின் மேற்கோள் பொருந்தும் என்பதை நினைவூட்டுகிறேன்.

Moderator: கருத்தாளரின் வேண்டுகோளுக்கிணங்க சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. துதிபாடிகளும், வசைபாடிகளும், நகர்நலம் நாடிச் செய்திருந்தால் நலமே...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [04 July 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19837

குற்றச்சாட்டுகளும் பதில் குற்றச்சாட்டுகளும் எனும் தலைப்பில் சகோதரர் சாளை-அப்ப்து ரஜாக் லுக்மான் எழுதிய கருத்துக்கள் கிளிப்பிள்ளைக்கு சொல்லிக் கொடுத்தாற்போல் கனக்கச்சிதமான வார்த்தைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எந்த காலத்தில் நகர்மன்ற நிகழ்வுகளைப் பற்றி நாம் இப்படி அலசினோம்? ஆராய்ந்தோம்? இது ஒன்றே போதும் மக்கள் மாக்களல்ல என்பதற்கு! தெளிவு பெற்று விழிப்புடன் எம் காயலர்கள் இருந்து ஆயிரம் கேள்விக் கனைகளைத் தொடுத்து வருகின்றனர். இதில் ஆதரவாகவும், எதிப்பாகவும் பல பதிப்புகள் வந்துள்ளன.

நகராட்சிக்கு உறுப்பினராகப் “போகிறவங்கெல்லாம் புதையல் எடுக்கலாம்” எனும் சித்தாந்தம் ஒழிந்து விட்டது. கனவில் கூட கை நீட்ட முடியாத படி கண் விழித்துக் காத்திருக்கும் இணையதளங்களில் கழுகுப் பார்வையில் திக்குமுக்காடி தினறியதால் தாம் இன்று இணையதளங்களுக்கு தடை போடத் துடிக்கின்றனர்.

ஒரு காலத்தில் நகராட்சி என்பது பரிசுத்தமான தலைவர்களால் வழி நடத்தப்பட்டு தொலை நோக்குச் சிந்தனையோடு நம் மக்களுக்கு அரும் பணியாற்றி அல்லாஹ்வின் திருப்பொருத்ததை அடைந்த பெரியவர்கள் பலர். அதுவே காலப்போக்கில் கழிசடைகளின் கூடாரமாகி ஊழல் ஊற்றெடுத்துப் பெருக ஊறித்திளைத்து உடம்பை வளர்க்க பயன்படும் சத்திரமாக மாறிவிட்டது.

நல்உள்ளம் படைத்த பலரும் அதில் புகுந்து மூச்சுத் தினறி, விட்டால் போதும் எனம் நிலையில் வெளியேறினர்.

இந்நிலையில் நகர்மன்றம் பல மர்மங்கள் நிறைந்த அலிபாபா குகை போல தொட்டால் காசு! விட்டால் காசு! என மக்களுக்கு சேவையாற்றி வந்தது. செல்வாக்கு உள்ள பலரும் சொல்வாக்குகளால் செழிப்பாக இருந்து வந்தனர்.

இன்றைய நிலை அப்படியில்லை! மிகப்பெரிய மாற்றமும், தெளிவும் மக்களிடையே விழிப்புணர்வும் மேலோங்கியிருப்பதால்தான் இச்செய்திக்கு இத்தனை கமெண்ட்ஸுகள்!

இந்த முன்னேற்றத்திற்கு மூலகாரணமானவர்களை வசைபாடிகள் என்றோ? ரசிககள் என்றோ? துதிபாடிகள் என்றோ? முனாஃபிக் என்றோ? கண்மூடித்தனமான ஆதரவாளர்கள் என்றோ? பொய்யன், பிதற்றல்வாதி, காசுக்கு கருத்தெழுதுகின்றவன் என்றோ? இன்னும் ஒருபடி மேலே போய், மாநபி பெருமானார் அவர்களுக்கு மக்காவில் இடையூறு செய்த மகாக் கொடியவர்களான அபுஜஹில், அபுலஹப், உத்பா, சைபா போன்றவன் என்றோ? அழைப்பவர்கள் அழைக்கட்டும்!

இது போன்ற வசைமொழிகளைத் தெரிந்தோ? தெரியாமலோ? மக்களின் விழிப்புணவுக்கு ஒரு சிறு பங்களித்த எம் போன்றோர் சகித்தேதான் ஆக வேண்டும். தவறு செய்த யாரும் அந்த வல்லோனின் பார்வையிலிருந்து தப்ப முடியாது!

இனி வருங்காலங்களிலாவது நம் நகர்மன்றம் நல்லதோர் நகர்மன்றமாகச் செயல்பட்டு மற்ற நகர்மன்றங்களுக்கெல்லாம் முன் உதாரணமாகத் திகழ வாழ்த்துகின்றேன். இன்ஷா அல்லாஹ்! திகழும்!

(முற்றும்)

-ராபியா மணாளன்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:நகர்மன்றத் தலைவரின் பதிலு...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல் - 97152 25227) [06 July 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19866

திருவாளர் அப்துல் ரசாக் லுக்குமான் அவர்களே... உங்கள் கருத்து பதிவில்..

2 ) அதே ஏப்ரல் கூட்டத்தில் "நகராட்சி பகுதிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு காலிமனை வரி வசூலிப்பது சம்பந்தமாக மன்றத்தின் அனுமதிக்கு" என்ற கோரிக்கைகு தலைவி ஆதரவாக பேசினார்கள்.

நகராட்சிக்கு வந்த அரசின் G O அடிப்படையில் காலியாக உள்ள இடங்களுக்கு காலிமனை வரி வசூலிப்பது விசியமாக தலைவர் அவர்கள் அரசுக்கு சாதகமாக காலிமனை வரி வசூல் செய்ய பேசி ஆதரவு செய்து இருக்கலாம்... இதை நம் குறை காண முடியாது... அரசின் (G O) நிர்பந்தம்..

அரசு G O க்கு எதிராக தலைவர் நடக்க முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கலாம்... இது எனது கருத்து... மன்னிக்கவும் தாங்களுக்கு சொந்தமான நமதூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அதிகமாக காலிமனைகள் பல ஏரியாக்களில் பல ஏக்கர் கணக்கில் உள்ளதா...? தாங்களின் கருத்தில் உணர முடிகிறது...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved