Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:10:39 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8665
#KOTW8665
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுன் 28, 2012
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் ஜூன் மாத கூட்ட நிகழ்வுகள்! 14 உறுப்பினர்கள் வெளிநடப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 10241 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (54) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 14)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத்தின் ஜூன் மாதத்திற்கான மாதாந்திர கூட்டம், 28.06.2012 அன்று (இன்று) மதியம் 03.00 மணிக்கு, நகர்மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்றோர்:
இக்கூட்டத்தில்,
01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான்,
02ஆவது வார்டு உறுப்பினர் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா,
03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள்,
05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர்,
06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன்,

07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி,
08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய்,
09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா,
10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக்,
11ஆவது வார்டு உறுப்பினரும், துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன்,

12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு,
13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன்,
15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால்,
16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன்,
17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத்,

18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி
ஆகிய நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, 14ஆவது வார்டு உறுப்பினர் பாக்கியஷீலா ஆகியோர் கூட்டத்திற்கு வருகை தரவில்லை.

கூட்டப் பொருள்:
கூட்டத்தில், பின்வரும் கூட்டப்பொருள் குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டிருந்தது:-









கூட்டப்பொருளின் இறுதி பக்கத்தில், நகராட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளிலுள்ள இருப்புத் தொகை பட்டியல் இணைக்கப்பட்டிருந்தது:-



மாதப் பணம்:
கூட்டம் துவங்க ஆயத்தமான நேரத்தில், உறுப்பினர் ஒருவர் நகராட்சி அலுவலரை அவசரப்படுத்தியதையடுத்து, மன்ற உறுப்பினர்களுக்கான மாதத் தொகை காகித உறையில் வைத்து வழங்கப்பட்டு, கைச்சான்று பெறப்பட்டது.

உறுப்பினர்கள் வெளிநடப்பு:
பின்னர், கூட்ட நிகழ்வுகள் துவங்கும் நேரத்தில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், வேறு சில காரணங்களுக்காகவும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதாகத் தெரிவித்தவாறு ஒவ்வோர் உறுப்பினராக அடுத்தடுத்து கூட்டரங்கிலிருந்து வெளியேறினர்.

தலைவியின் அபாண்டமான குற்றச்சாட்டைக் கண்டித்து...
இணையதளத்தில் தன் மீது அபாண்டமாக தலைவி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும், அதனைக் கண்டித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதாகவும் 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தெரிவித்துவிட்டு கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்.



தன்னிச்சையாக செயல்படுகிறார் தலைவி...
கூட்டம் நடப்பதற்கு சில தினங்களே உள்ள நிலையில், கால அவகாசம் தராமலேயே கூட்டப் பொருள் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், இக்குறைக்கு தலைவியே முழுப் பொறுப்பென்றும், தலைவி தன்னிச்சையாகவே செயல்பட்டு வருவதாகவும், நகர்மன்ற உறுப்பினர்கள் யாரையும் மதிப்பதேயில்லை என்றும் கூறி, அவற்றைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி, 11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்.



குடிபோதையில் பேசியவருக்கு ஆதரவாக செயல்படும் தலைவி...
சங்கர் என்ற ஒருவர் குடிபோதையிலிருந்து நிலையில் அவதூறான சொற்களைப் பேசியதாகவும், நகர்மன்ற வளாகத்திலேயே தன்னைத் தாக்க முற்பட்டதாகவும், இவையனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த நகர்மன்றத் தலைவர், சங்கருக்கு சாதகமாக நடந்துகொண்டதாகவும், அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி, அனைவருக்கும் பின்வருமாறு தனதறிக்கையின் ஒரு நகலை அளித்துவிட்டு, 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன் கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்:-





இணையதளத்தில் ஒருதலைபட்சமாக செய்தி வெளியீடு...
இணையதளத்தில் தன் மீது காழ்ப்புணர்ச்சியோடு ஒருதலைப்பட்சமாக தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகவும் கூறி, 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்.



எஃப்.சி. இல்லாத வண்டி...
எஃப்.சி. இல்லாத வண்டியை பழுது நீக்க வேண்டாம்... புதிய வண்டியை வாங்கலாம் என்று ஒரு சில உறுப்பினர்களைத் தவிர அனைத்து உறுப்பினர்களும் தெரிவித்த நிலையிலும், பெரும்பான்மையை மதிக்காமல் நகர்மன்றத் தலைவர் தன்னிச்சையாக மினிட் புத்தகத்தில் தீர்மானத்தை மாற்றி எழுதியதாகவும், அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகவும் கூறி, 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்.



கடுஞ்சொற்களால் திட்டினார் தலைவி...
கடுஞ்சொற்களைப் பயன்படுத்தி நகர்மன்றத் தலைவர் தன்னை திட்டிப் பேசியதாகவும், அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகவும் கூறி, 03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள் கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்.



லைட் எரியவில்லை...
தனித்தனியாக தான் அளித்த 3 கோரிக்கைகளை நகர்மன்றத் தலைவர் ஒரே கூட்டப் பொருளில் சேர்த்துள்ளதாகவும், 16.04.2012 அன்று தனது வார்டு தேவைக்காக 2 சோடியம் லைட் உட்பட 12 தெரு விளக்குகள் பெறப்பட்டதாகவும், அவற்றில் 6 தெரு விளக்குகள் மட்டுமே இதுவரை பொருத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றிலும் 3 தெரு விளக்குகள் எரியவில்லை என்றும், இதனால் தனது வார்டு மக்களிடம் தனக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, இவற்றைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகத் தெரிவித்தவாறு 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்.



எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை...
முன்வைத்த எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை என்றும், அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகவும் கூறி 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால் கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்.



புதிய சாலை அமைக்கப்படவில்லை...
தனது வார்டில் புதிதாக போட தீர்மானமியற்றப்பட்ட சாலை இதுவரை போடப்படவில்லை என்றும், அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகவும் கூறி, 08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய் கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்.



இதுவரை வைத்த ஒரு கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லையென்றும், அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகவும் கூறி, 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்.



கூட்டத்தை வீடியோ எடுப்பது கலாச்சாரத்திற்கு மாற்றமானது...
நகர்மன்றக் கூட்டத்தை வீடியோ ஒளிப்பதிவு செய்வது கலாச்சாரத்திற்கு மாற்றமானது என்றும், அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகவும் கூறி, 09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்.



09ஆவது வார்டு உறுப்பினரின் குற்றச்சாட்டையே தானும் ஆமோதிப்பதாகவும், அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகவும் கூறி, 02ஆவது வார்டு உறுப்பினர் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்.

முன்வைத்த எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை என்றும், அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகவும் கூறி, 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன் கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்.



வரியைக் கூட்டிய தலைவி...
தலைவி வரியைக் கூட்டியதையெல்லாம் சுட்டிக்காட்டாமல், துவக்கம் முதலே தலைவிக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாகவே இணையதளம் செய்தியை வெளியிட்டு வருவதாகவும், அதனைக் கண்டிதது வெளிநடப்பு செய்வதாகவும், இன்டர்நெட்டை இக்கூட்டத்திலிருந்து ஒழித்த பின்னர் கூட்டத்தில் பங்கேற்பதாகவும் கூறி, 12ஆவது வார்டு உறுப்பினர் கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்.



இறுதி வரை இருந்த உறுப்பினர்கள்:
13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி ஆகிய இரண்டு உறுப்பினர்கள் மட்டும் கூட்டத்தின் இறுதி வரை அமைதியாக இருந்தனர்.





கூட்டரங்கில் பொதுமக்களில் சுமார் 10 பேர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.





வெளியில் சென்ற பின் வெளிநடப்பு (?!)
கூட்ட நிறைவுற்ற சில மணித்துளிகளில், நகர்மன்ற வளாகத்திலிருந்த செய்தியாளர் ஒருவரிடம், “நானும் வெளிநடப்பு செய்ததாக செய்தி போடுங்க!” என்று, 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி தெரிவித்தார்.

அதிருப்தி உறுப்பினர்கள் செய்தியாளர்களுடன் சந்திப்பு:
பின்னர் வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள் அனைவரும், கூட்டரங்கிற்கு வெளியே நின்றவாறு செய்தியாளர்களை சந்தித்தனர். நகர்மன்ற துணைத்தலைவரும், 11ஆவது வார்டு உறுப்பினருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் செய்தியாளர்களிடம் பின்வருமாறு பேட்டியளித்தார்:-



22.06.2012 அன்று நகர்மன்ற உறுப்பினர்கள் மீது தலைவி இணையதளத்தில் அபாண்டமாக குற்றச்சாட்டு அளித்துள்ளார்...

ஆவணங்கள் இல்லாத தண்ணீர் வண்டியைப் பழுது நீக்க தன்னிச்சையாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளார் தலைவி...

இ-டெண்டர் என்றால் என்ன என்று எந்த உறுப்பினருக்கும் விளக்கமளிக்காமலேயே இ-டெண்டர் மூலம் பொருட்களை வாங்க தலைவி ஒப்புதல் வழங்கியுள்ளார்... இதனால், கவுன்சிலர்களுக்கு கிடைக்க வேண்டிய இருபதாயிரம் ரூபாய் கமிஷன் நின்று போய்விட்டது என்று தலைவி பேசியிருக்கிறார்...

இவற்றையெல்லாம் கண்டித்து, நாங்கள் 15 உறுப்பினர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளோம்...


இவ்வாறு, நகர்மன்ற துணைத்தலைவரும், 11ஆவது வார்டு உறுப்பினருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.








Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. காயல் பதியில் களம் அமைக்கும் உங்கள் கனவுகள் பலிக்காது.
posted by s.s.md meerasahib. (riyadh) [28 June 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19680

நம் நகர்மன்ற தலைவியை இயக்கும் சக்திகளே........ உங்களுக்கு வைத்துவிட்டார்கள் ஆப்பு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மாதாந்திர வெளிநடப்பு கூட்டம் ???
posted by M.S.Kaja Mahlari (Singapore.) [28 June 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 19681

(இறுதி வரை இருந்த உறுப்பினர்கள்: 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி ஆகிய இரண்டு உறுப்பினர்கள் மட்டும் கூட்டத்தின் இறுதி வரை அமைதியாக இருந்தனர்.)பாவம்! இந்த இருவருக்கும் வெளிநடப்பு செய்ய காரணம் கிடைக்கவில்லைபோலும்! ஓர் அருமையான வெளிநடப்பு கூட்டம். தமிழக சட்டசபை கலாச்சாரம் நமது நகர் மன்றத்திலும் எதிரொலித்துள்ளது ! பேசாமல் இக்கூற்றதிர்க்கு "மாதாந்திர வெளிநடப்பு கூட்டம் என பெயர் வைதிர்க்கலாம் ! என்ன நடக்க போய்கிறதோ ! பொறுத்திருந்து பார்ப்போம் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. பூச்சாண்டி காட்டுற வேலை
posted by M.N.L.முஹம்மது ரபீக் (புனித மக்கா.) [28 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19682

இந்த பூச்சாண்டி காட்டுற வேலைக்கெல்லாம் சேர்மன் ஆபிதா அசந்துற மாட்டாங்க! என்னமோ ஒரு வேலையும் நடக்காத மாதிரி பொறுப்புள்ள காயல் சிங்கங்களான உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து, அதுலெயும் ஊழல் செய்ய பகிரங்கமாக திட்டம் தீட்டி இணையதளத்தால் நாறடிக்கப்பட்ட புன்னியவான்களும், இன்னொரு ஆளு,தண்ணி போட்டுட்டு உளறுனான்,அடிக்க வந்தான், ஆபிதாமேடம் சினிமா ஸ்டார் விஜய சாந்தி மாதிரி சும்மா பறந்து போயி ஃபைட் பண்ணி அவனை அடித்து வீழ்த்தவில்லை! கம்ளைண்ட் கொடுத்தேன் கடைசியிலெ காலை வாரிட்டாங்க! அதனாலெ வெளிநடப்பு,

இன்னொரு புன்னியவான் , இணையதளத்தில் தன் குரலோசை கேட்டு குடைச்சல் தாங்க இயலாமெ வெளிநடப்பு, ஊழலுக்கு ஒலிவடிவம் கொடுத்த உறுப்பினரைத் தட்டிக் கேட்க வக்கில்லாமல்சம்பந்தமே இல்லாமெ தானே முன் வந்து தலைவியை வசைபாடி சம்பவத்தை திசை திருப்பி விட்டுவிட்டு தன்னிலை விளக்கம் கொடுத்து தலைவியின் பதில் விளக்கத்தால் தள வாசகர்களிடமும் ஊர்மக்களிடமும் வாங்கி கட்டிக் கொண்டு இப்ப தலைவி அபாண்டமாக என் மீது பழி சுமத்துறாங்க அதனாலெ வெளி நடப்பு...?

இன்னொரு உத்தமர் ஊசி விழுந்தாலும் தேடிக் கண்டுபிடிச்சி அதை நியூஸாகப் போடுற இணையதளத்தை ஒழிக்கும் வரை ஓயமாட்டேன், கூட்டத்துக்கும்வரமாட்டேன்ன்னு சொல்லி வெளிநடப்பு லைட்டு

எரியவில்லை, பைப்பு போட வில்லை....வெளிநடப்பு....வெளிநடப்பு...என்ன? பூச்சாண்டிகாட்டுறீங்களா? ஒருபுறம் தலைவிக்கு ஒத்துழையாமை மறு புறம் ஒன்னுமே நடக்க வில்லைன்னு வெளிநடப்பு?

முடிவு பண்ணிட்டாங்க இனி சேர்மனுக்கு தலைவலிதான்.தனாக முன் வந்து ராஜினாமா செய்ய வைக்க கையாளும் கீழ்த்தரமான யுக்தி,சூழ்ச்சி, இன்னும் நாலு மாதம் முடிஞ்சா ஒரு வருஷம் அப்புறமென்ன “ஷா”க்களிடமிருந்து வரும் சாக்குப் பையில் உள்ளதை தலைக்கு ரெண்டுன்னு கொடுத்தாலும் கொடை வள்ளல் என்ன கொறஞ்சாப் போயிடப்போறாரு?

துனைத் தலைவர் தேர்வின் போது சாப்பிட்ட இனிப்பு இன்னும் வாயிலெ தித்திக்கிறதல்லவா? இது போன்ற சாணக்கியத்தனத்தால் ஆபிதாவுக்கு சேர்மன் பதவி மட்டும் தான் பறிபோகும்! அவங்க போய் நர்ஸரி ஸ்கூலெ ஹாயா ஜாயிண்ட் பண்ணிடுவாங்க ! அதனால் ஏற்படப்போகும் இழப்பும், சோதனையும் நம் காயலுக்குதான் .

இது போன்ற துடிப்புள்ள ஒரு தலைவரை, ஊழலை அடிவேறோடு பிடுங்கி எறிய பாடுபடும் ஒரு நல்லவரைக் காயல் மிக விரைவில் இழக்கப் போவது உறுதி! வெளிநடப்பு என்ன? நகர்மன்றத்தையே இழுத்து மூடுங்க..! எக்கேடும் கெட்டு போங்க...மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by P.S.ABDUL KADER (jeddah) [29 June 2012]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19684

மக்கள் திலகம் M G R தனது ஆட்சியில், பொது மக்களின் வெறுப்பை சம்பாதிக்காமல் இருந்ததற்கு ஒரு முக்கியமான காரணம், அவரது ஆட்சி காலத்தில் அவர் உள்ளாட்சிகளுக்கு தேர்தலையே நடத்தவில்லை என்பது ஆகும்.

அவரது ஆட்சியின் கடைசி கட்டத்தில் தான் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதில் தான் M G R முதல் முறையாக கலைஞரிடம் தோற்றார். சென்ற திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் சம்பாதிக்க பெரும் காரணம் உள்ளாட்சி அமைப்புகள் தான். இந்த நகர மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொள்ளை கூட்டங்கள். திருந்தாது,திருந்தவும் மாட்டார்கள். உள்ளாட்சி அமைப்புகளை கலைத்து விடுவது தான் சிறந்த வழி என ஏற்கனவே மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள்கூட மந்திரிகளையோ , M L A களையோ, கட்சி பதவியில் உள்ளவர்களையோ நம்பாமல் தன்னிச்சையாக தான், அரசு அதிகாரிகளை கொண்டு ஆட்சி நடத்துகிறார், எனவே மக்களை நேரடியாக பாதிக்கும் இந்த கவுன்சிலர் அல்லகைகள் தேவையில்லை காயல்பட்டின நகர மன்றத்தை கலைத்துவிடலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by Husain Noorudeen (Abu Dhabi) [29 June 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19685

சூப்பர் அப்பு. வீடியோ பாத்தா மாதிரியே இருக்கு. அதுக்கு அப்புறம் தலைவி எதுக்கு வீடியோ எடுக்க காண்ட்ராக்ட் விடுறாங்க. இப்படியே செய்திய கவர் பண்ணாலே போதுமே. அது சரி, இனிமே கவர் பண்ணுறதுக்கு கூட்டம் நடந்தாத்தானே.

ஆனா ஒன்னு மட்டும் உறுதியாயிடுச்சு. செம்மறி ஆட்டு கூட்டம் ஒண்ணா சேர்ந்திடுச்சு. ஊரு உருப்பட்டாப்புலதான். நடத்துங்க ராசாமாரே, நடத்துங்க.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Sarcastic
posted by Ahamed Mustafa (Dxb) [29 June 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19687

It seems the kayalpatnam people have sent a bunch of jokers as their representatives.

Finding reasons to walk out or is this the start of a threatening plot out of hypocracy.

One councillor says I dont want internet & the other says she doesn't want videos. If they have real problems, let them sit & discuss. By walking out they are eating the tax payers money.

Not so healthy habits. It's really a shame for having sent these bunch of councillors to represent us.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இரெண்டே ஆம்பளைங்கதான்
posted by Sarjoon (Kayalpatnam) [29 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19688

குள்ளநரி கொள்ளைக் கூட்டங்களோடு குலவுகின்றது. வெளி நடப்பிலும் ஒரு சந்தோசம். குறைந்தது இரண்டு தன் மானச் சிங்கங்களை அனுப்பி இருக்கிறோம் என்று. ஆமாம் எல்லோரும் வெளி நடப்பு செய்ததற்கு ஏதாவது காரணம் உண்டு. ஆனால் உள்ளங்கை நெல்லிக்கனிப் போல தெளிவாக ஹக்கைப் பேசியவரின் வெளி நடப்பிற்கு காரணம் என்னவோ? அந்த ஹக்குக்கே வெளிச்சம்

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (காயல்பட்டினம் ) [29 June 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 19691

வீட்டில் சும்மாதானே இருந்கின்றோம், நகராட்சியில் என்னதான் நடக்கின்றது, என்ன சுவராசியம் நடைபெறப் போகின்றது என்று அறிவோமே என்று நானும் இந்த கூட்டத்திற்கு சென்று இருந்தேன்.

மாலை மூன்று மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய கூட்டம், அறிவித்தப்படி மிகச்சரியாக 3,45 மணிக்கு ஆரம்பித்து விட்டது( நகராட்சி கடிகாரம் கடைசி வரை 7.43 என்றே காட்டியது வேறு விஷயம்).

இரண்டு உறுப்பினர்களை தவிர அனைவர்களும் வந்தார்கள், நோட்டில் கை எழுத்து வைத்தார்கள், அமர்ந்தார்கள், படி கவரை பெற்றார்கள், ஒவ்வொருவராக வெளிநடப்பு செய்தார்கள், இரண்டு உறுப்பினர்களை தவிர.

இரண்டு உண்மைகள் புரிந்தன,

ஒன்று..... இந்த அம்மாவை டார்சர் மேல் டார்சர் கொடுத்து (முன்னாள் தலைவர் வாவு ஹாஜி அவர்களுக்கு கொடுத்த டார்ச்சரை விட அதிகமாக ) , எந்த விதத்திலும் அவர்களை செயல்பட விடாமல் செய்து (அதிகாரிகளும் கூட..) முடக்கி விடனும் என்ற குறிக்கோள் புரிந்தன. (ஒரு சில உறுப்பினர்கள் தவிர).

இரண்டு.. நகராட்சி அதிகாரியின் செயல்பாடுகள்.. அனைந்து விசயங்களுக்கும் சரி, பார்க்கலாம், முடித்து விடலாம் என்றே தலை ஆட்டுதலுடன் மழுப்பலுடன் கூடிய செயல்படாத செயல்பாடு. நகர்மன்றம் கேட்கக்கூடிய அனைத்து கேள்விக்கும், பதில் அளிக்கக்கூடிய மற்றும் பொறுப்புகளுக்கு பொறுப்பாளியான அவரின் மௌனம்.. புரியவில்லை.

விசாரித்த வரை அவர் திறமையாக செயல்படக்கூடியவர்தான் என்றும், ஏன் இப்படி இருக்கிறார் என்று புரியவில்லை என்றும் கூறுகிறார்கள்.

** சில நாட்களுக்கு முன்பு "காயல்" என்ற பெயரை கொண்ட நபர், நகராட்சிக்கு வந்தார், கமிசனர் அறைக்கு சென்றார், கதவுகள் பூட்டப்பட்டன, சுமார் ஒரு மணி நேரம் பூட்டப்பட்ட அறைக்குள் என்ன நடந்தன என்பதை யாரும் அறியோம்.. வல்லோனை தவிர. ஆனால் கமிஷனரை பார்க்க காத்து இருந்த மக்கள் புலம்பலுடன் சென்றது உண்மை. அதன் பின்பு அதிகாரியிடம் இந்த மாற்றமோ?..!!

=== Admin அவர்களே, இந்த நிகழ்வை பலரிடம் கேட்டு ஊர்ஜிதம் செய்து தான் பதிவு செய்கிறேன். ஊர்ஜிதம் செய்யமுடியாதது என்று கத்திரி போட்டு விடாதீர்கள் ====

ஆக மொத்தம் அன்று நகராட்சியில் கிடைத்தது இரண்டு சுவாரசியங்கள் மற்றுமே.

1 . நகராட்சிக்குள் நடந்த அறுவை சிகிச்சை. குட்டி யானைக்குள் பல குட்டி குட்டி நாய்களை பிடித்து வந்து குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை நடந்து வந்தது (ஒரு நாய்க்கு 500 ரூபாயாம்).

2 . LR நகரில் இருந்து ஒரு சில இளைஞர்கள் டாஸ்மாக் உதவியுடன் நகராட்சிக்கு வந்து எப்படி எங்கள் நாயை பிடித்து வரலாம், அது சாதாரண நாய் அல்ல, அது பப்பி நாய்..!!, எங்களுக்கு அது திரும்பவும் வேண்டும் என்று வரம்பு மீறி வார்தைகளை உதிர்த்து பிரச்சனை பண்ணியதால் காவல் துறை அள்ளிக்கொண்டு சென்றது. (அந்த குறிப்பிட்ட நாயை நகராட்சி பிடித்து வராதது வேறு விசயம்)

ஆக மொத்தம் நேற்று 2 மணி நேரம் வேஸ்ட்.

சாளை S.I.ஜியாவுத்தீன், காயல்பட்டினம்

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by shahul hameed ( kayal nalan virumbi) (chennai) [29 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19694

நகர்மன்றம் செயல்படும் விதம் அருமைளும் அருமை . . . ! தலைவி ஒரு பக்கம் , உருபினர்களோ மற்றொரு பக்கம், அதிகாரிகள் எந்த பக்கம் என்று யாருக்கும் தெரியவில்லை. . .

உருபினர்களை கீட்போமையானால் தலைவி மதிபதில்லை என்று புலம்பல் . . . தலைவீயை கேட்டால் உருபினர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை என்ற குமுறல் மொத்ததியால் அவதி படுபவர்கள் மக்கள் மக்கள் மக்களே இந்த பிரச்னைக்கு தீர்வு எப்பொழுது . . . பூனைக்கு மணி கட்டுபவர்கள் யார் யார் . . . .?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. புறப்பட்டு விட்டது புண்ணிய படை ...
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (kayalpatnam) [29 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19696

ஆஹா அற்புதம்! பொறுப்புள்ள புண்ணியவான்களின் படையெடுப்பு. அந்த கடைசி இரு உறுப்பினர்களின் அந்தோணி அவர்களும் அப்படி இப்படி தத்தளித்து தோணியில் தொத்தி கொன்ன்டார். கடைசியாக மாட்டி கொண்டது சம்சுதீன் மட்டும்தான், சம்சுதீன் அவர்களே இது உங்களுக்கு தேவையா? என்ன நேரபோகுது என்று உங்களுக்கு தெரியுமா? நெற்றிக்கண் திறக்கபோகிறது என்று தெரியாமலேயே, சிறுபிள்ளை தனமாக........ அல்லாஹ்தான் உங்களை காப்பத்த வேண்டும்!

எப்படிப்பட்ட புகார்கள், தவப்புதல்வனை, தண்ணி போட்டு திட்டலாமா? தண்ணி வாடையை கூட நுகர முடியாத தலைவி ஒரு தலைவியா? 10 வார்டு உறுப்பினர் பதுஹ்க் முகத்தில் பால் விடிகிறது அந்த பட்சிலம் பாலகனைப்போய் பாவிகள் ஊழல் வருமானத்தை பங்குபோட்டதாக கூறும் நீங்களெல்லாம் உரிபடுவீர்களா?

புறப்பட்டு விட்டது புண்ணிய படை புறமுதிகிட்டு ஓடபோகிறார் தலைவி அவர்கள்.

சேது ரஹ்மான் ஹாஜியையே சின்னாபின்னமாக்கி செயலிழக்க செய்த இந்த சினம் கொண்ட குள்ளநரி கூட்டத்தின்தலைவர் பிடியிலிருந்து இந்த ஆபிதாவை அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்!

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by siddiq (kayalpatanam) [29 June 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 19697

தலைவி அவர்களே, 5 வருஷம் இருந்தோமா புறம்போக்கு நிலத்தை வளைத்து போட்டோமா, நம்ம நிலத்துக்கு ரோடு போட்டோமா, அவன்டயுவ்ம் இவன்டயுவ்ம் கிடைத்தை சுருட்டுநோமா, லேப்டாப்பை லஞ்சமா வாங்கிநோமானு இருந்தா உங்களை போற்றி இருப்பார்கள்.

தலைவி அவர்களே, இதற்க்கு முன்னாடி இருந்த தலைவி, தலைவர்கள் எல்லாம் ஊருக்கு நன்மை செய்தார்கள். ஆனால் தீமையே (லஞ்சம்) தடுக்கவில்லை. ஏன் உங்களுக்கு மட்டும் அந்த அக்கறை?. அதை தடுக்க நினைப்பதாலா உங்களுக்கு இவ்ளவு தொந்தரவு.

"மன்ற உறுப்பினர்களுக்கான மாதத் தொகை காகித உறையில் வைத்து வழங்கப்பட்டு, கைச்சான்று பெறப்பட்டது."

உறுப்பினர்களே, அது சரி இல்லை இது சரி இல்லை என்று சொல்லி வெளிநடப்பு செய்தீர்களே அது போல ஒன்றுமே செய்யாத இந்த நகராசிய கண்டித்து வாங்கின பணத்தயுவ்ம் திருப்பி கொடுத்துடுங்க.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh (Now @ KPM)) [29 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19699

மாதப் பணம்:

வெளிநடப்பு செய்ய திட்டமிட்டு வந்த உறுப்பினர்? கூட்டம் துவங்கும் நேரத்தில் நகராட்சி அலுவலரை அவசரப்படுத்தியதையடுத்து, மன்ற உறுப்பினர்களுக்கான மாதத் தொகை வழங்கப்பட்டுள்ளது???

ஆகா பணத்த வாங்கிட்டு வாங்குன பணத்துக்கு வேலை செய்யாமல் வெளிநடப்பு செய்துள்ளார்களோ?

தலைவியின் அபாண்டமான குற்றச்சாட்டைக் கண்டித்து...

உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களில் ஒருவர் என்பது ஊர் அறிந்த உண்மை, இருப்பினும் “நகர்மன்ற உறுப்பினர் பதவி என்பது நான் ஆசைப்பட்டு இதற்காக கடும் முயற்சி செய்து பெற்றது அல்ல. இந்த பொறுப்பு எங்கள் கோமான் ஜமாஅத்தால் என் மீது அமானிதமாக தரப்பட்டதாகும்.” என்கின்ற பொய்யுடன் தங்களின் தன்னிலை விளக்கம் ஆரம்பித்தீர்கள்......

தன்னிச்சையாக செயல்படுகிறார் தலைவி...

நகர்மன்ற துணைத்தலைவர் கூட்டரங்கிலிருந்து வெளியேறினார். துணை தலைவர் தேர்வில் நடந்தது என்ன என்பது ஊர் அறிந்த உண்மை.....

குடிபோதையில் பேசியவருக்கு ஆதரவாக செயல்படும் தலைவி...

M.N.L.முஹம்மது ரபீக் அவர்கள் கூறியது போல், அண்ணன் விஜயகாத் போல பறந்து பறந்து கராத்தே செய்ய வேண்டும்.

இணையதளத்தில் ஒருதலைபட்சமாக செய்தி வெளியீடு...

இனைய தளத்துக்கும் உங்க சேவைக்கும் என்ன சார் சம்பந்தம். அப்படியே ஒருதலை பட்சமாக வலைத்தளங்கள் செய்தி வெளியிட்டால் அதற்கும் தலைவிதான் காரணமா? என்ன சின்னபுள தனமா இருக்கு????

எஃப்.சி. இல்லாத வண்டி...

இது பற்றி மக்களுக்கு சரியான விளக்கம் தெரியாததால், தலைவி அவர்கள்தான் விளக்கம் சொல்ல வேண்டும்.

கடுஞ்சொற்களால் திட்டினார் தலைவி...

ஹா...... அல்லாஹ்வின் பேருதவியால் பல ஆண்டு காலம் பாளர் பள்ளி நடாத்திவரும் தலைவர் அவர்கள் கடும் சொல்லால் திட்டினார் என்று கூறுவது சிறுபிள்ளை தனம், அவாறு அவர் நடந்திருந்தாலும், அந்த நேரத்தில் ஆட்சொபனை தெரிவித்து இருக்க வேண்டுமே தவிர, இது போன்று வெளிநடப்பு கூடாது.

லைட் எரியவில்லை... எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை... புதிய சாலை அமைக்கப்படவில்லை...

அதான் எல்லோரும் சேர்ந்து தலைவிய செயல் பட விடாம இருக்க ஒன்று சேர்ந்துடீன்களே? அப்புறம் எங்க லைட்டு எரிய, பைப்பு லைன் போட, ரோடு போட......

கூட்டத்தை வீடியோ எடுப்பது கலாச்சாரத்திற்கு மாற்றமானது...

எல்லோரும் சந்தைக்கு போறாங்கனு நானும் சந்தைக்கு போறேன்குற மாதிரி இருக்கு....... அந்நிய ஆண்களுடன் ஒன்றாக இருந்து நகராட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வது எந்த கலாச்சாரமாம்?????

வரியைக் கூட்டிய தலைவி...

துவக்கம் முதலே தலைவிக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாகவே இணையதளம் செய்தியை வெளியிட்டு வருவதாகவும், அதனைக் கண்டிதது வெளிநடப்பு செய்வதாகவும், இன்டர்நெட்டை இக்கூட்டத்திலிருந்து ஒழித்த பின்னர் கூட்டத்தில் பங்கேற்பதாகவும் கூறி, 12ஆவது வார்டு உறுப்பினர் கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்..... இணையத்தளம் ஒருதலை பட்சமாக செய்தி வெளியிட்டதால் இனைய தளம் மீது புகார் கூறுங்கள் அத விட்டுட்டு வெளிநடப்பு??????

வெளியில் சென்ற பின் வெளிநடப்பு (?!)

கூட்ட நிறைவுற்ற சில மணித்துளிகளில், நகர்மன்ற வளாகத்திலிருந்த செய்தியாளர் ஒருவரிடம், “நானும் வெளிநடப்பு செய்ததாக செய்தி போடுங்க!” என்று, 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி தெரிவித்தார்...... உறுப்பினர்கள் இல்லாமல் தலைவி என்ன செய்கிறார் என்று கடைசி வரை இருந்து வேவு பாத்துட்டு, செய்தியாளரிடம் போய் நானும் வெளினடப்புன்னு சொல்றத எங்க போய் சொல்றது??????

காயல் நகர மன்றம் , காமெடி நகர மன்றம் ஆகி விட்டது......

சகோதரர் மீரா சாஹிப் அவர்களே, அவர்கள் ஆப்பு வைத்தது தலைவிக்கு அல்ல, நம்மை போன்ற பொது மக்களுக்குத்தான்.

இன்னும் நான்கு மாதம் அதாவது நகர்மன்றம் அமைய பெற்று ஒரு வருடம் ஆகும் வரை ஒன்றும் செய்ய முடியாது, எனவே இவர்கள் வெளினடப்பின் மூலம் இன்னும் சில மாதங்களுக்கு நகர மன்றம் செயல் படாது அதனால் பாதிக்க படுவது தலைவி அல்ல, நம் காயல் மக்கள் தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by PROF.DR,MOHAMED YASIN (UNIVERSITY OF DAMMAM) [29 June 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19700

UNHEALTHY சிடுஅடின்..,

I FIND A COUNCILLOR SAYS HEREBY THAT IN TAMIL AS FOLLOW “ இன்டர்நெட்டை இக்கூட்டத்திலிருந்து ஒழித்த பின்னர் கூட்டத்தில் பங்கேற்பதாகவும் கூறி, 12ஆவது வார்டு உறுப்பினர் கூட்டரங்கிலிருந்து வெளியேறினார். “

I STRONGLY SAY THAT “YOU RESPECTED COUNCILLORS HAVE BEEN SENT TO THE MUNICIPALITY ONLY TO REPRESENT THE CIVILIANS/PUBLIC”. WE PUBLIC DESERVE THE RIGHTS TO KNOW THE DISCUSSION, MEMORANDUM AND AMENDMENTS BE TRANSPARENT WITH NOTHING HIDE AND SEEK.

NONE OF THE COUNCILLORS HAVE THE RIGHTS TO SAY THAT “REMOVE THE MEDIA”.

I COULD BE ABLE TO REMEMBER தட் “COUPLE OF YEARS BEFORE, A PARTICULAR COUNCILLOR TRESSPASSED INTO A HOME AND DEMANDED THE BRIBE (AIMING FOR KATTAPANCHAYAT). HE USED ABUSIVE WORDS MERCILESSLY, AND THEN HE WAS HIGLY WARNED BY THE SUPERINDENTENT OF POLICE OF TUTICORIN DISTRICT”. THEN THIS ISSUE HAS REACHED UPTO THE CM CELL”.

GENERALLY IT IS THE DUTY OF A MANGER TO CONTROL THE HONESTY AND TRANSPERENCY IN THE OFFICIAL WORK OF HER SUBORDINATES SIGNIFICANTLY. HERE OUR CHAIRMAN IS THE MANAGER AND SHE IS DOING HER DUTY PROMPT AND PERFECT AND ALSO IN A PROFESSIONAL WAY.

IF INCASE OUR CHAIRMAN HAD STOPPED THE MEDIA AND TRANSPERENCY THEN IT IS NOT WONDER THAT HOW MANY COUNCILLORS WOULD HAVE APPROACHED FOR THE BRIBE TO GET THE WORKS DONE IN THEIR WARDS. NOW THEIR HANDS ARE LITTLE BIT TIED UP AND SO THEIR HANDS ARE CLEAN!?.

[WE MAY RECALL THE INCIDENT THE VICE CHAIRMAN OF KAYALPATNAM OF LAST RULING PERIOD SURRENDERD IN SHATHTHANKULAM COURT. WHAT IS THE ROUTE CAUSE? .., JUST THINK?]…, BY THAT TIME HELP OF MEDIA IS NOT MUCH BETTER AND TRANSPERNECY WAS LAGGING.

THANKS TO GOD.., BECAUSE OF STRONG MONITORING AND THE CONTROL OVER THE COUNCILLORS BY OUR CHAIRMAN , SO FAR NOTHING HAPPENED. HATS OFF TO THE CHAIRMAN.

WE PUBLIC SEND YOU THE COUNCILLORS BY CASTING THE VOTES FOR EXPECTING TO GET THE BENEFICAL WORKS LAWFULLY AND TRANSPERENT . WE DON’T SEND YOU FOR DISCUSSING YOUR PERSONAL DESIRES AND HATES.

BEHAVING SARCASTICALLY IS NOT SO HEALTHY. TRY TO CO-OPERATE THE BOARD OF MUNICIPALITY AND DO SOME BENEFITS FOR THE PUBLIC.

MEDIA IS HIGLY NEEDED……..,

THANKS TO KAYALWEBSITE ….

KAYAL WEBSITE IS NOT JUST PUBLISHING ITS OWN OPINION BUT IT DOES THE OPINION AND THOUGHTS OF CIVILIANS OF KAYALPATNAM. EXTENDING THANKS AGAIN TO KAYAL WEBSITE.., WITH THE HELP OF KAYAL.COM , MANY OF THE NRIs BE ABLE TO KNOW THE EXISTING SITUATION OF KAYALPATNAM…..,I PERSONALLY FEEL KAYAL.COM RUNS IMPARTIALLY AND USEFULLY.

NOBODY DESERVES THE RIGHTS TO STOP THE MEDIA..,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [29 June 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19704

அஸ்ஸலாமு அலைக்கும்.

அய்யோ ..... அய்.. அய்யோ .. என்னதாங்கோ......நம் ஊர் நகர் மன்றதிலே ..... நடக்குது .... காயல் மக்கள்ளாகிய நாம் இந்த காயல் மாநகரம் மிகவும் சிறப்படையும் என்று எதிர் பார்த்தால்....அது சுத்தமாக நடக்காது போன்று தான் தெரிகிறது. ஒரு அருமை சகோதரர் எழுதியது போன்று ..

நம் அழகிய காயல் '''' நாம் நினைப்பது மாதிரி ... மிக சிறந்த காயல் நகர் மன்றமாக மாறாதோ?? நமது கனவு எல்லாம் மெய் ஆக வாய்ப்பு இல்லாமல் போய் விடுமோ ?

ஓன்று மட்டும் நன்றாக தெரிகிறது. எங்கோ """ இகோ'''' தான் இவர்களின் '' கண்ணை ''' முழுமையாக மறைக்கிறது. இதை போக்குவது பெரிய விசியமே இல்லை. தயவு செய்து அருமை தலைவி அவர்களும் & நம் மரியாதை கூறிய நகர் மன்ற உறுபினர்கள் அனைவர்களும் ஒன்றாக உட்காந்து பேசினால் தான் ஒரு நல்லதோர் முடிவு பிறக்கும். இல்லை என்றால் நம் ஊர் தலை எழுத்து மோசம்தான்.

பொதுவாக நாம் முழுமையாக நம்பி இருப்பது.நம் தலைவி + நம் நகர் மன்ற உறுபினர்களையும் தானே ..... நாம் ஏன் இவர்களை தேர்வு செய்து நகர் மன்றத்துக்கு அனுப்பினோம். நம் ஊருக்கு தலைவியும் / நம் தெருவுக்கு நம் நகர் மன்ற உறுபினர்களையும் தானே . நல்லது செய்ய.... அனுப்பினோம்? இந்த இரு தலைவர்களின் சின்ன / சின்ன ....ஈகோ பிரச்னைகளால் கண்டிப்பாக பாதிக்கபடுவது மக்களாகிய நாம் தானே .யாஅல்ல எப்பதான் இவர்களை ஓன்று சேர்த்து இதற்க்கு ஒரு நல்ல முடிவு நீ தருவாய். உன்னை தான் நாங்கள் நம்பி உள்ளோம்.

PLZ ஒற்றுமையை கடை பிடித்து தாங்கள் அனைவர்களும் நிதானத்துடனும் / வேற்றுமையை மறந்தும் நம் ஊர் மக்களுகாக நல்லது செய்யும் படி மக்கள்ளாகிய நாங்கள் மிக தாழ்மையுடன் உங்கள் யாவர்களையும் கேட்டு கொள்கிறோம். செய்வீர்கள் என்கிற முழு நம்பிக்கையுடன் + எதிர் பார்ப்புடன் காத்துள்ளோம்.

தாங்கள் யாவர்களின் ஒற்றுமைதான் ..... மக்கள்ளாகிய எங்களின் பெரும் யானை பலம் & நம்பிகையும் கூட.

மான்புமிகு இரு அவை உறுபினர்கள் வெளி நடப்பு செய்யாமல் மன்ற நடவடிக்கையில் ( கலந்து கொண்டார்கள் )பொறுமை உடன் இருந்தார்கள் என்றால் நிச்சயமாக இவர்கள் தன் தொகுதி மக்களின் நலனுக்காகதனே என்று அர்தம். இது போன்று மற்ற நம் வார்டு நகர் மன்ற உறுபினர்களும் கொஞ்சம் நிதானத்துடன் பொறுமையாக நகர் மன்றம் செயல் பட உதவி இருக்கலாமே ....

சரி ஹையர் நடந்தவை ..... நடந்ததாக இருக்கட்டும் .... இனிமேல் நடப்பவை ( நம் ஊர் மக்களுக்கு ) நல்லவையாக இருக்கட்டும்.



இந்த மாதிரி தப்பாக செயல் பட்ட Mr.சங்கரின் குத்தகையை ஏன் கேன்சல் பண்ண கூடாது?? பிற்காலதில் இந்த நபர் மேலும் தண்ணி போட்டு விட்டு நம் மற்ற மரியாதை கூறிய நகர் மன்ற உறுபினர்களை தர குறைவாக பேச மாட்டார் என்பதில் என்ன கேரண்டி .......தலைவி அவர்களே PLZ கொஞ்சம் யோசித்து செயல் படவும்.

நம் ஊருக்கு நல்லது செய்ய நினைக்கும் நம் தலைவி யுடன் ஒன்றாக கூட்டு சேர்ந்து ( கைகோர்த்து ) நம் மரியாதை கூறிய நகர் மன்ற உறுபினர்களும் செயல் பட்டால் தான் கண்டிப்பாக நம் ஊர் முன்னேறும். இல்லை என்றால் நம் நகர் மன்றம் பழைய நகர் மன்றம் போல்தான் ஆகும் இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை ......

இப்படி நீங்கள் யாவர்களும் வீம்பு பண்ணி கொண்டு இருந்தால் நம் ஊர் பொது மக்களின் நிலைமைதான் என்ன ?

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by mackienoohuthambi (colombo) [29 June 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 19705

நான் முன்பு இந்த இணையத்தளத்தில் சகோதரர் லுக்மான் அவர்கள் கொடுத்துள்ள குற்றச்சாட்டுக்களை ஒரு பொது மேடை போட்டு மக்களுக்கு தெளிவு படுத்த சொல்லியிருந்தேன். இப்போது நடந்துள்ள வெளிநடப்பை பார்த்தால் ஒன்று தலைவியின் நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை அல்லது எல்லா உறுப்பினர்களும் தலைவிக்கு ஒத்துழைப்பு தருவதில்லை எனபது தெளிவாகிறது. இனிமேலும் நகரமன்ற தலைவி தலைமை பதவியில் தொடர்வது நகர்மன்றதை கேலிக்குரியதாக்கி விடும். யாரும் உங்களிடம் தங்கள் குறைகளை சொல்ல வரமாட்டார்கள். பேசாமல் ஆணையர் அவர்கள் இந்த நகர்மன்றதை கலைத்து விட்டு புதிதாக தேர்தல் நடத்த புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள். இனிமேல் அரசியல் கட்சிகள் ஆட்சிதான் வரும். ஊர் ஒற்றுமை என்று பேசுவதெல்லாம் மக்களை மடையர்களாக்கும் பேச்சு என்றே தெரிகிறது. வாழ்க நமதூர் ஒற்றுமை. நாம் எப்போது ஒன்று பட்டோம் இப்போது மட்டும் ஒன்றுபட.பிரிந்து இருப்பதே அழகு காயல்பட்டினத்தின் தனி தன்மை. மார்க்கமானாலும் மன்றமானாலும் பிரிந்து வாழ்வோம் வெற்றிகளை இழப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [29 June 2012]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 19707

யுக முடிவு நாளின் அடையாளமாக கூட இருக்கலாம். அல்லாஹ் அக்பர்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by SEYED ALI (ABUDHABI) [29 June 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19709

தமிழக சட்டசபை நோய் இங்கேயும் தொற்றிகொண்டது போலும்.வெளிநடப்பு செய்வதுதான் தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் சிறந்த தொண்டு என்ற சித்தாந்தத்தை உருவாக்கியதே நம் அரசியல் வித்தகர்கள் தானே.அதை நம்மூர் கத்துக்குட்டிகளும் அரங்கேற்றி இருக்கின்றன.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. பூனை கண்களை மூடின கதைதான்!!
posted by M Sajith (DUBAI) [29 June 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19711

சகோதரர் லுக்மான் தவிர மற்ற அனைத்து உறுப்பினர்களின் காரணங்களும் விவாத்துக்கு கூட தகுதி இல்லாதவை.

சகோதர் லுக்மான் அவர்களின் வெளிநடப்பு காரணத்தில் 'ஆடியோவில் பேசிய அயோக்கியர்கள்' கலந்துகொள்வதால் தாமும் கலந்து கொள்ளவில்லை என்றும் சேர்த்திருந்தால், அவரது நிலைப்பாட்டை மனப்பூர்வமாக பாராட்டியிருக்கலாம்.. என்ன செய்ய மறந்துட்டார் போல...

No Problem, இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை - இவர்களுடன் பணியாற்ற இயலாது என்று (உங்கள் அறிக்கையில் No.1 - ல் குறிப்பிட்டதுக்கு இணங்க) ராஜினாமா செய்துவிடுங்கள் !!! (கண்டிப்பாக செய்வீர்கள் - பதவி நீங்கள் கேட்டது இல்லையே - இதுவும் நீங்கள் சொன்னதுதான்...)

இந்த தலைமை மக்களால் நேரடியாக தேர்ந்து எடுக்கப்பட்ட தலைமை என்பதால், இவர்கள் கணவுகானும் நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தால் நீதிமன்ற வழக்குமூலம் மொத்த நகரவையையும் முடக்கலாம் - இவர்களின் அடிமடியிலேயே கைவைக்கலாம் என்பதும்.. வார்டு உறுப்பினர் செயல்பாடுகள் திருப்தியில்லை என்று மொத்த வார்டின் பொதுமக்களும் நிர்வாக அதிகாரிக்கும் கலக்டாருக்கும் கோரிக்கை வைத்தால் அவர்களையும் வீட்டுக்கு அனுப்பலாம் என்பதும் இதில் எத்தனை பேருக்கு தெரியும் என்பது புரியவில்லை...!!

தலைமையை மாற்றி புதிய தலைமையை உறுப்பினர்களாகவே தேர்வு செய்யலாம் என கணவுகளுடன் மனப்பால் குடித்துவரும் நன்பர்களுக்காவே ஸ்பெஷல் 'ஆப்பு' தயாரித்து உள்ளதை சமயம் வரும்போது தெரிந்துகொள்வர்

ஏதோ ஐந்து வருட குத்தகைக்கு தங்கள் வார்டையும், நகரவையையும் கொடுத்துவிட்டது போல ஒரு பிரம்மையில் இருக்கிறார்கள் இவர்கள்...

ஏற்கனவே தலைவி கட்சியில் இனையாததால் கடுப்பில் இருக்கும் தமிழக தலைமையும், அதைவிட அதிகக்கடுப்பில் இருக்கும் துனைத்தலைவர் கட்சி, அவரது கட்சி விடுத்த அரிக்கைகள் (அதாங்க கலைஞர் பட்டணம் மேட்டர்)- எல்லாமா சேர்ந்து சொந்த காசில் சூனியம் வைக்க ரெடியாவது தெரிகிறது...

இதில் இரு கருத்துச்செம்மல்,யாருக்கு வைத்து என்றே தெரியாமல் 'ஆப்பின் சிறப்பு' குறித்து (முதல்கருத்தாக) எழுதுகிறார்...

காயலின் பொதுமக்கள் ஊழலுக்கு இடம்தரப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கும்வரை - இவர்களால் எதுவும் செய்துவிட இயலாது - விடவும் மாட்டோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by Hameed Rifai (Yanbu (KSA)) [29 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19712

திருவாளர் லுக்மான் காக்கா அவர்களே!

நான் முன்னர் சொன்னது போல் நினைத்ததை சாதித்து இருக்கிறீர்கள் சபாஷ்!

கவுன்சிலர்கள் எல்லோருக்கும் லஞ்சமாக கிடைக்கும் பணத்தை தலைவி அவர்கள் எப்படி தடுக்கிறார்கள் என ஹக்கானவர் பேசிய பேச்சை மிக லாவகமாக திசை திருப்பி, தலைவி பற்றி தன்னிலை மறந்த ஒரு அறிக்கை வெளியிட்டு உங்கள் நோக்கத்தை நிறைவேற்றி பாதி வெற்றியும் கண்டுள்ளீர்கள்

இன்று வெளிநடப்பு - அதுவும் கூட்டத்தில் கலந்து கொள்ள படி பணம் 600 ருபாய் வாங்கி பத்திரமாக பாக்கட்டில் வைத்து விட்டு தலைவி அவர்கள் இணைய தளத்தில் தன்னை விமர்சித்து விட்டார்கள் என கூறி உள்ளீர்கள்!

முதலில் தன்னிலை மறந்த பொய்யான அறிக்கையை விட்டு தலைவியை விமர்சித்தது தாங்கள் அல்லவா மறந்து போயிடுச்சோ?

இரண்டாவது முறையும் விஷம் தோய்த்த அம்பை தலைவி மீது பதில் அறிக்கை என்று ஒரு அறிக்கை கொடுத்துள்ளீர்கள் அந்த அறிக்கையின் யோக்கியதையை அருமை சகோதரர் 13 வது வார்ட் உறுப்பினர் சம்சுதீன் காக்கா அவர்கள் மறுப்பு பதில் அளித்ததின் மூலம் நீங்கள் பொய்யர் என்பதை நிருபித்து இருக்கிறார்

உங்கள் வெளிவேஷம் எனும் முகத்திரை இதன் மூலம் கிழிக்கப் பட்டிருகிறதே...? இன்னுமா உங்களுக்கு புரியவில்லை? பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள் நீங்கள் வெறும் அம்புதானே? உங்களை ஏவியவர்கள் யாரென - ஏற்கனவே புரிந்து வைத்துள்ள நிலையிலும் மக்களுக்கு அதனை ஐயம் பிசகற புரிய வைத்துவிட்டீர்கள்!

ஆரம்பத்தில் கேவலமான உரையாடலை திசை திருப்பி உறுப்பினர்களுக்கும், தலைவிக்கும் இடையில் சிண்டு முடிந்தீர்கள்

அதன் பிறகு சம்சுதீன் காக்காவிற்கும் கோமான் தெரு நண்பர்களுக்கும் சிண்டு முடிக்க முனைந்து தோற்றுப் போனீர்கள்

இப்போது ஐக்கிய பேரவைக்கும் தலைவிக்கும் சிண்டு முடியும் வேலையை ஆரம்பித்திருக்கிறீர்கள்.

நல்ல குளிர் காயிறீங்க காக்கா... ஆனா என்ன ஒன்னு? உங்கள் சாயம்தான் வெகு சீக்கிரமே வெளுத்து விடுகிறது

அடுத்து புதுசா எதாவது ட்ரை பண்ணுங்க காக்கா ஏன்னா அடிபட்ட புலி Sorry Sorry சூடு பட்ட பூனை சும்மா இருக்காதுதானே?

அடுத்து துணை தலைவர் அவர்கள் கூறிய குற்றச்சாட்டு ஆச்சர்யத்தையே அளிக்கிறது. கூட்டம் நடப்பதற்கு சில தினங்களே உள்ள நிலையில், கால அவகாசம் தராமலேயே கூட்டப் பொருள் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், இக்குறைக்கு தலைவியே முழுப் பொறுப்பென்றும் கூறி வெளிநடப்பு!

இரண்டு முறை நகர்மன்ற உறுப்பினர் பதவியில் இருக்கும் தங்களுக்கு கூட்டப் பொருள் யார் வழங்குகிறார்கள் என்ற அடிப்படை கூட தெரியாமல் இருக்கிறீர்களா? அதனை செய்து கொடுக்க வேண்டியது ஆணையரின் பணி என்பதை மறந்துவிட்டீர்களா அலல்து வசதியாக மறைத்து விட்டீர்களா?என்ன பண்ண? மேலிடத்து உத்தரவு!!! உங்களுக்கும் வெளிநடப்பு செய்ய காரணம் வேணுமே...?

அடுத்து 16 வது வார்ட் உறுப்பினர் சாமு காக்கா வெளி நடப்புக்கு சொன்ன காரணம் - முகம் பார்க்கும் கண்ணாடி முன்னின்று சொல்ல வேண்டியது. இதைத் தவிர இதில் சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லை.

அடுத்து நம்ம கதாநாயகன் 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் அவர்கள் இணையதளத்தில் தன் மீது காழ்ப்புணர்ச்சியோடு ஒருதலைப்பட்சமாக தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகவும் கூறி, கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்.

ஒருதலை பட்சம்னா என்னங்க கொஞ்சம் சொல்லுங்களேன்?அதென்ன காழ்ப்புணர்ச்சி? உங்களுக்கும் அவர்களுக்கும் கொடுக்கல் வாங்களில் பகையா?? உங்களுக்கு ஒரு செய்தியை நினைவூட்ட விரும்புகிறேன். தேர்தல் சமயம் பாசத்திற்குரிய எனது அருமை நண்பர் முஸ்தாக் அவர்கள் தொடந்து என்னிடம் வலியுறுத்தி, உங்கள் பிரச்சாரத்திற்கு உதவுமாறும் அதற்காக நோட்டீஸ் மேட்டர் போட்டு பிரிண்ட் குடுக்குமாறும் வலியுறுத்தினார்கள் அப்பொழுது கூட உங்களை பத்தி நல்ல விதமான செய்திகள் எங்களுக்கு கிடைக்கவில்லையே?நாங்கள் எப்படி இவருக்கு உதவுவது என பதில் கேள்வி கேட்ட பிறகும், நீங்கள் முன்பு போல் இல்லை திருந்திவிடீர்கள் அதற்கு நான் உறுதியளிக்கிறேன் என என் நண்பர் சொன்ன காரணத்தினால், உங்களது பிரச்சாரத்திற்கு நானும் என்னால் ஆன உதவிகளைச் செய்ததோடு மட்டுமின்றி, இந்த இணையதளத்தில் செய்தி வெளியிடும் எனது அன்பு நண்பன் எஸ்.கே.ஸாலிஹ் இடம் நோட்டீஸ் மேட்டரும் போட்டுக் கேட்டேன். அவரும் தொழில் என்ற அடிப்படையில் தர தயாரானார். ஆனால் அது பிரிண்ட் செய்யப்படவில்லை. இவ்வாறு நாங்கள் பலரும் உதவி செய்தோம். நீங்களும் வெற்றி பெற்று வந்தீர்கள். உங்களுக்கு உதவியதற்காக இப்போது நண்பர் முஸ்தாக்கோடு சேர்ந்து நாங்களும் வெட்கப்படுகிறோம்.

ஆனால் ஒரு ஆளுக்கு மட்டும் எப்போதும் நன்றி சொல்லிக்கொண்டே இருங்கள்! அவர்தானே உங்கள் வண்டவாளத்தை பூதாகரமாக மக்கள் பேசவிடாமல் தன்னிலை மறந்த அறிக்கை வெளியிட்டு திசை திருப்பியது?

அடுத்து 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் அவர்கள் எஃப்.சி. இல்லாத வண்டியை பழுது நீக்க வேண்டாம்... புதிய வண்டியை வாங்கலாம் என்று ஒரு சில உறுப்பினர்களைத் தவிர அனைத்து உறுப்பினர்களும் தெரிவித்த நிலையிலும், மினிட் புத்தகத்தில் தீர்மானத்தை மாற்றி எழுதியதால் வெளி நடப்பு செய்திருக்கிறார்

FC இல்லாத வண்டி இன்று நேற்று அல்ல பல வருடங்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது. (அவ்வாறு இருக்கக் கூடாது என்பதில் இரு வேறு கருத்திற்கு இடமில்லை.) இதை மாற்றி புதிய வண்டி கண்டிப்பாக வாங்க வேண்டும் என உறுப்பினர்களும், தலைவி அவர்களும் சேர்ந்து தீர்மானித்தார்கள். ஆனால் அதற்கான முறைப்படியான வேலைகள் முடிநது, புது வண்டி வாங்க சில மாதங்கள் அவகாசம் எடுக்கும். அதற்குள் இருக்கும் வண்டியை சரி செய்து பயன்படுத்துவோம்.

கோயில் விசேஷம், ரமழான் மாத தேவைகள் என அடுத்தடுத்து பல தேவைகள் முன்னிற்க, தற்போது வாடகைக்கு வண்டி எடுத்தாலும் - அதற்கு செலவழிக்கும் தொகையை விட குறைவான தொகைதான் இருக்கும் வண்டியை பழுது நீக்க செலவாகும் என்று தலைவி கூட்டத்தில் தெரிவித்ததாகவும், அதற்கு அனைவரும் மறுப்பு தெரிவிக்கவில்லையென்றும் அறிந்துள்ளேன். இது உண்மைதானா என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.

ஒருவேளை, 05ஆவது வார்டு கவுன்சிலர் ஜஹாங்கீர் சொல்வது உண்மை என்று வைத்துக்கொண்டாலும், தற்போதைய வெளிநடப்புக்கு எல்லோரையும் போல நானும் ஒரு காரணம் சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் தாங்கள் சொன்னதாகவே தெரிகிறது1 அப்படித்தானா?

அடுத்து என் வீடு சார்ந்த 09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா அவர்கள் நகர்மன்றக் கூட்டத்தை வீடியோ ஒளிப்பதிவு செய்வது கலாச்சாரத்திற்கு மாற்றமானது என்றும், அதனைக் கண்டித்து வெளிநடப்பு

உணமைலையே மிகுந்த வேதனையும் ஆச்சர்யமும் அடைந்தது தாங்கள் கூறிய குற்றச்சாட்டில்தான்! நகர்மன்ற உறுப்பினர்களிலே அதிகம் படித்து ஆசிரியை பணியாற்றும் நீங்களே இப்படி ஒரு குற்றச்சாட்டை தேடி பிடித்து சொல்வீர்கள் என நானும் மற்ற நண்பர்களும் எதிர்பார்கவே இல்லை

உங்களுக்குமா நிர்பந்தம்? இன்னும் உங்கள் மீது நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை. சில சதிகாரர்களின் வலையில் தாங்கள் சிக்கிக் கொள்ள வேண்டாம்! சொந்தமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறன் உள்ள நீங்கள் இந்த சதி வலையில் இருந்து மீண்டு வருவீர்கள் என இன்னும் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.

சில உறுப்பினர்கள் கோரிக்கை நிறைவேற்ற படவில்லை என்ற காரனத்தால் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள் அவர்கள் இதற்கு முன்னால் நடந்த கூட்டதில் கூட இதே காரங்களை கூறி வெளிநடப்பு செய்திருக்கலாம்.

அடுத்து, 12ஆவது வார்டு உறுப்பினர் சுகு அவர்கள், இன்டர்நெட்டை கூட்டத்திலிருந்து ஒழித்த பிறகே கூட்டத்திற்கு வருவதாக சவடால் விட்டுச் சென்றுள்ளார். அப்படியானால், இன்னும் 4 ஆண்டுகள் 5 மாதங்களுக்கு இதுதுான் தங்களின் நிலையாக இருக்கும் போல!

இறுதியாக, பதவியேற்ற சில நாட்களில் திருவாளர் லுக்மான் அவர்கள் தெரிவித்த கருத்தையே என் கருத்தாக சொல்லி முடிக்கிறேன். இங்கு parellel நகராட்சி மன்றமே நடக்கிறது. அங்கு எடுக்கப்படும் முடிவுகள் இங்கு அமல்படுத்தப்படுகின்றன.

இங்கு எந்த பதவிக்கு யார் வரவேன்றும் என்பதை பெரிய மன்னர்கள் முடிவு செய்கிறார்கள்.

அவர்தம் மந்திரிகளும் மச்சான்களும் அமல்படுத்துகிறார்கள்.

மக்கள் பார்பதில்லை...
ஆனால் அல்லாஹ் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

இந்த parellel நகர்மன்றதை எங்கே நடத்தினீர்கள்?
எந்த மன்னரிடமிருந்து உத்தரவு வந்தது?
எந்த மந்திரி மச்சான் அமல்படுத்தினார் அதற்காக எவ்வளவு பட்டுவாடா செய்யப்பட்டது?
இன்னொரு தன்னிலை மறந்த அறிக்கை தருவீர்களா லுக்மான் காக்கா அதிலாவது பொய்யில்லாத யாரையும் சிண்டு முடியாத உங்கள் வயதுக்கும் அனுபவத்திற்கும் ஏற்ற அறிக்கை தருவீர்களா????

அன்புடன்
ஹாமித் ரிஃபாய்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by Mohamed Ali (Madinah Al Munawwara) [29 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19716

அஸ்ஸலாமு அலைக்கும்.

நல்லதை செய்ய துடிக்கும் தலைவி, இல்லை விடமாட்டோம் ஊழல் இல்லாத ஒரு நகராட்சியா ? என்கிறது பிணம் தின்னிகள் sorry பணம் தின்னிகள். அல்லாஹுவுக்கு பயந்து கொள்ளுங்கள். அவன் பிடி கடுமையானது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by OMER ANAS (DOHA QATAR.) [29 June 2012]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 19717

அஸ்ஸலாமு அழைக்கும்!

இப்பத்தான் ஆளாளுக்கு அறிக்கை விட்டு எங்களையும் குழப்பி ஊரையும் குழப்பி ஒருவழியா ஜூன் மாத கூட்டத்துடன் மக்களுக்கு நன்மை ஏதாவது கிடைக்கும் என்று பார்த்தால், உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு காரணம் சொல்லி வெளிநடப்பு செய்து, கொஞ்ச நஞ்சம் இருந்த மக்களின் நம்பிக்கையும் ஒட்டு மொத்தமாக காற்றில் பறக்க விட்டு சென்றுள்ளீர்கள்! சபாஸ்!

ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் சொன்ன வெளிநடப்புக்கான காரணம் உண்மையான, பொது மக்கள் மத்தியில் சீச் சீ இவர்களையா நாம் தேர்ந்து எடுத்தோம் என்று வெட்க்கப் படும் அளவிற்கு வேதனையினை தந்துள்ளது!

உண்மையில் உங்களுக்கு மக்கள் தேவை மீது சேவை நோக்கம் இருக்குமேயானால், உள்ளிருந்து அல்லவா போராடி எங்களுக்கு சேவை செய்து காட்ட தலைவியிடம் எடுத்து சொல்லி இருக்க வேண்டும்! உங்களது இந்த செயலால் முப்பது நாளை, நாங்கள்( ஒரு செயலும் நடைபெறாமல்) கழிக்க வைத்து விட்டீர்களே! இதிலே ஊழல் செய்யவே வந்து காத்திருக்கும் கழுகுகள், நமதூரின் கண்ணியத்தை ஒரு ஆடியோ கிளிப்பில், காற்றில் பறக்கவிட்ட பின்பும், வெளி நடப்பிற்கு காரணம் சொல்லி செல்கின்றன! என்ன நடக்கிறது நமதூரில்?

நமது தலைவியோ யாரை நம்புவது, யாரை நம்பக் கூடாது என்ற இரட்டை நிலையில் எந்த காரியத்தையும் செயல் வடிவத்திற்கு கொண்டு வர முடியாமல் தவிக்கிறார்!

ஒன்று மட்டும் புரிகிறது! ஒன்று பட்டு எல்லோரும் செயல் படாத வரை, கண்ணியமிகு காயலுக்கு இப்ப பிடித்துள்ள ஏழரை விடாது, விடாது, விடாது!

மக்களே! உலகம் இறைவனின் சந்தை மடம்
இங்கு வருவோரும் போவோரும் தங்குமிடம்
இதுவல்ல நமக்கு சொந்த இடம்
அங்கே இருக்குது வேறு உரிய இடம் !
என்ற E M ஹனிபாவின் குரலோசையினை கேட்டு விட்டு வழமை போல் தூங்க செல்லுங்கள்.

பாங்கின் ஓசை மீண்டும் ஒலிக்கும்,
பாப்பாக்களை எழுப்பிவிட!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by vilack sma (HCM Vietnam) [30 June 2012]
IP: 123.*.*.* Vietnam | Comment Reference Number: 19720

இவர்களின் இந்த செயல்களை கண்டித்து தலைவியும் கூடவே சென்றிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். பெத்தாதாய் நீங்களுமா ¡ தலைவிக்கு பெத்ததாய் போல் அரணாக இருப்பீர்கள் என்றுதானே உங்களை அங்கே அனுப்பிவைத்தார்கள் .

அனைவரது வெளிநடப்பு காரணங்களும் தமாசானவை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல்) [30 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19725

ஒரு இணைய தளத்தை கண்டித்து வெளி நடப்பா...!
ஐயோ... இந்த சாதாரண இணைய தளத்தில் அப்படி பயப்பட என்ன இருக்கு...? மக்கள் மன்றத்தில் (நகர் மன்றம்) கூட்டத்தின் நடப்பு செய்திகளை மக்கள் இடத்தில் கொண்டு செல்வதனாலா..? அப்படி செய்திகளை கொடுப்பது நியாயம்தானே...! அதற்காக ஓடி வெளி நடப்பு செய்தால் உங்களை தேர்ந்தெடுத்த வார்டு மக்கள் நிலை என்ன..?

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் இந்த தலைவியை அரசியல் பலம் கொண்டோ... பண முதலைகளை கொண்டோ... அவரின் தலைவி பொறுப்புக்கு ஆப்பு வைக்க நினைத்தால்... சந்தேகமே இல்லை திரும்பவும் அவரே... தலைவர் பொறுப்பு வருவார்... இதில் மாற்றம் இல்லை... உங்கள் சக்தியில் அவர் இந்த பொறுப்புக்கு வரவில்லை... மாபெரும் மெகா மக்கள் சக்தி கொண்ட சக்தி மூலம் தலைவராக வந்தார்.. மறந்து விட வேண்டாம்..

ஒற்றுமையாக இருந்து மக்களின் சேவை பணி செய்து மக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்கள்...

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by MAHMOOD HASAN(mammaash) (QATAR) [30 June 2012]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 19727

ரொம்ப சூப்பர் வாப்பா!!!

உங்களை நம்பி ஓடு போட்ட மக்களுக்கு எல்லாம் செருப்பால அடிச்சா மாதிரி இருக்கு....

வெளி நடப்புக்கு அழகான காரணங்கள்... அதுல என்ன ஒறுதன் திட்டிட்டான் நீங்க சண்டை போடாம பாத்துட்டு இருந்தீங்க தான் ரொம்ப சூப்பர்... உங்களுக்கு ஒட்டு போடவன்லாம் கண்டிப்பா நாலு நாளைக்கு தூங்க மாட்டான்...

இவனுங்கள நம்பி ஓட்டு போட நம்மள சொல்லணும்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by vilack sma (HCM Vietnam) [30 June 2012]
IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 19731

தமிழன் அவர்களுக்கு,

தயவுசெய்து மெகா புராணம் பாடாதீர்கள் . கொள்கையும் குறிக்கோளும் இல்லாத மெகாவினால்தான் உங்கள் தலைவி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் தலைவியும் அப்படிப்பட்டவராகத்தான் இருப்பார் என்று மற்றவர்கள் நினைக்க நேரிடும்.

தேர்ந்தேடுக்கப்பட்டவரை , அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் முழுமையான காலத்திற்கும் பணி செய்ய விடுவதே நம் நோக்கமாக இருக்க வேண்டும் .அதைவிடுத்து , அவர் ஒரு மெகா சக்தி , அழிக்க முடியாது , விரட்ட முடியாது என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே சுயபுராணம் பாடிக்கொண்டிருக்காதீர்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by hasbullah MACKIE (dUBAI) [30 June 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19736

கூட்டத்தில் வெளிநடப்பு... படி காசு 600RS மானமுள்ளவர்களாக அதையும் திருப்பி கொடுத்து விட்டு போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும். என் வார்டிக்கு இன்னென்ன விஷயங்கள் கேட்டேன் நிறைவேற்றபடுவதில்லை என்று கேட்டு அதற்கு விளக்கம் இல்லையென்றால் வெளிநடப்பு ஓகே? எனக்கு போலீஸ் பாதுகாப்பு கிடைக்கவில்லை அதனால் வெளிநடப்பு? இதற்கு தான் சொல்லுவது படித்தவர்களுக்கு ,அறிவுடைமை உள்ளவர்களுக்கு உறுப்பினர் பதவி கொடுக்க வேண்டும்.. மக்களே விழித்தேளுங்கள்

சில பணக்கார நபர்களிடமிருந்து பணம் கிடைக்கும் என்பதற்காக தனது மனசாட்சியை தொலைக்கும். உருபின்னர்கள், பணத்திற்கு அடிமையாகி சேவை செய்யும் உறுப்பினர்களை எப்படி இந்த மன்றத்திற்குள் அனுமதித்தீர்கள்...?

நாளை இவர்கள் வீடு கல்யாணத்திற்கு பந்தல் போட அனுமதி தரவில்லை என்றும் கூட வெளிநடப்பு செய்வார்கள் போலும்

உண்மையான செய்தியை வெளிப்படியாக நடத்த வீடியோ எடுக்க சொன்னதற்காக கலாசாரம் சீரழிவு என்ற பெயரில் வெளிநடப்பு.. என்றால் இவர்கள் வீட்டில் டிவி கிடையாதது போலும்., இன்னும் டிவி சீரியல் பார்கமாட்டார்களோ என்னவோ...

பெண்ணின் புத்தி அவ்வளவுதான். பகுத்தறிவுள்ள உறுப்பினர்களாக இருந்தால் சிந்தியுங்கள்...

புதிய வண்டிதான் வாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் உறுப்பினரே? தலைவர் இதனை மறுப்பதற்கு உள்ள காரணத்தை வெளிப்படுத்துங்கள்...

மக்களுக்கு சேவை செய்பவராக இருந்தால் கூப்பிட்ட சமயத்தில் ஓடி வரவேண்டியதுதானே? அதில் என்ன கவரவ பிரச்சினை ?

சகோதரர் லுக்மான் அவர்களின் அறிக்கையில் அந்த ஆடியோவில் இருக்கும் உறுப்பினர்கள் தெரியும் என்று சொன்னார் ? அவர்களை இந்த கூட்டத்தில் அடையாலப்படுதாதது ஏன்? எல்லோரும் சேர்ந்து வெளிநடப்பு செய்ய எவ்வளவு பணம் கைமாரியதோ? அல்லாஹ்வுக்கு தான் வெளிச்சம்...

சத்தியம் ஜெயிக்கும், அசத்தியம் அழிந்தே தீரும், அல்குரான்

ஆக மொத்தத்தில் இப்போது ஷைத்தான் வெற்றி பெற்று விட்டான்..

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by Sabeer (Mumbai) [30 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19738

உங்களைத் தேர்ந்தெடுத்த மக்களாகிய எங்களுக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடன்.

ஓன்றை மற்றும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள். இப்படியெல்லாம் நீங்கள் செய்வதால் பாதிப்பு மக்களுக்கே. வார்டு உறுப்பினராகிய உங்கள் மேல் அதிருப்தி ஏற்பட்டு அந்த வார்டு மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கையெழுத்து வேட்டை நடத்தி கலெக்டரிடம் மனு சமர்ப்பித்தால் அல்லது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தால் உங்கள் பதவியை இழக்க நேரிடும் என்பதை மறந்து விடாதீர்கள். அதற்கு நகராட்சி சட்ட விதிமுறைகளில் இடமிருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்.

அதுபோல் நகராட்சியை கலைத்து விட்டால் தலைவி அவர்களைப் பொறுத்தவரை அவர்கள்தான் அடுத்த தலைவர். மக்களிடத்தில் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கிறவர் என்ற பெயர் மக்களிடத்தில் மேலோங்கி இருப்பதால் அவர்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை. ஆனால் உங்களின் நிலைதான் பரிதாபம்.

குடிநீர் கட்டணத்திற்கு செலுத்தும் கட்டணத்தை விட அதிகமாக மினரல் வாட்டருக்கு செலவளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் கலந்தாலோசித்து மக்களின் அத்தியாவசிய தேவையைப் பூர்த்தி செய்வதை விட்டு விட்டு, 'சத்திய'வான்களைப் பார்த்து 'அந்தோ நீ' யுமா என்று பரிதாபப்படும் கூட்டத்துடன் சேர்ந்து கொண்டு வெளிநடப்பாம்! வெளிநடப்பு.

இணையதளத்தில் வெளியான அந்த ஆடியோவை ஊரில் அநேகர் தற்போது ப்ளுடுத் மூலம் ஒருவருக்கு ஒருவர் பரிமாறி கொள்வதாக அறிகிறேன். விரைவில் ரிங் டோன் ஆக வைத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. ஊழல் பேர்வழிகளுக்கு ஜால்ரா போடுவதை விட்டு விட்டு வார்டுக்கு நல்லது செய்ய முயற்சி எடுங்கள். இல்லையென்றால் கையெழுத்து வேட்டையைத் தவிர வேறு வழியில்லை.

கருத்துப் பதிவோருக்கு ஒரு வேண்டுகோள் : வார்டு உறுப்பினர்களின் செயல்பாடுகளில் குறைகாணப்பட்டால் அல்லது அவர் மீது அதிருப்தி ஏற்பட்டால் அவரை வார்டு உறுப்பினர் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்ய ஏதாவது வேறு வழிகள் உள்ளதா? என்பதை தெளிவு படுத்தவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by Mohamed Hassan (Jeddah) [30 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19741

ஹையோ இப்படி மாறி மாறி தலைவிய குற்றம் சாட்டிடே இருந்த எபபடி?யார் யார் குற்றம் செய்தாலும் அதன்னுடைய கூலி அல்லாஹ்விடம் நிச்சயம் இருக்கு.

அவங்க அவங்க வேலைய பாருகப்பா. உங்களுக்கு என்ன கம்மண்ட்ஸ் கொடுகலானு யோசிச்சே எங்கட வேலைலாம் கேட்டு போகுது.

அட்மின் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். இனிமேல் யாராவது வந்து தன்னிலை விளக்கம் கொடுக்கலாம் வந்த உடனே திருப்பி அன்னுபிடுக ப்ளீஸ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by K S Mhamed shuaib (Kayalpatinam) [30 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19743

மக்கள் மன்றங்களில் இருந்து அதன் தேர்ந்தர்டுக்கப்பட்ட உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து வெளிநடப்பு செய்வது ஜனநாயகம் அவர்களுக்கு கொடுத்துள்ள உரிமை. எனவே வெளிநடப்பை நாம் விமர்சிக்க முடியாது. அதை எதற்காக செய்தார்கள்? என்பதை மட்டுமே பார்க்கவேண்டும். உறுப்பினர் லுக்மானை முன்வைத்து பேசுவதாக இருந்தால் அவர் வெளிநடப்பு செய்ததில் குறை காண ஓன்று இல்லை. இணையதள வாசகர்கள் பலரின் பொறுப்பற்ற விமர்சனங்களால் அவர் பெரிதும் மனஉளைச்சல்களுக்கு ஆளாகி இருந்தார் என்பதை அவரோடு நேரடியாக நான் பேசும்போது உணரமுடிந்தது.

தம்பி சாஜித் அவர்களே...

லுக்மான் தனது ராஜினமா கடிதத்தை அவரது ஜமாத்தில் ஒப்படைத்துவிட்டார் என்பதே நான் நேற்று கேள்விப்பட்ட செய்தி. நானும் ஆபித அவர்களின் ஆதரவாளன்தான். அவர்களுக்குதான் நான் வாக்களித்தேன். ஆபிதா அவர்களின் செயல்பாட்டில் இப்போதும் ஒன்றும் எனக்கு பெரிதாக மனக்குறை இல்லைதான். நிர்வாக ரீதியான சில குறைகளை சுட்டிக்காட்டுவதால் யாரையும் ஆபிதாவுக்கு எதிரியாக பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. முதலில் இந்த போபியாவில் இருந்து நம்மவர்கள் வெளிவரவேண்டும். ஏதாவது குறைகளை சொன்னாலே அவர்களை ஒட்டுமொத்த மக்களின் எதிரியாக அடையாளப்படுத்துவதை மன ரீதியாக முதலில் நாம் தவிர்க்கவேண்டும். உள்ளபடியே பார்த்தால் "டிப்போ" ஒப்பந்தத்தை ரத்து செய்தது எவ்வளவு பெரிய நிர்வாக குறைபாடு? அதை விமர்சிக்க துணிவில்லாதவர்கள் இன்று என்னவெல்லாமோ பினாத்துகிறார்கள்.

யாருக்கும் ஆதரவாளராக இருந்துவிட்டு போங்கள். ரசிகர்களாக மாறிவிடாதீர்கள். ரசிக மனப்பான்மையி இருந்து முதலில் வெளிவாருங்கள். உண்மை தெளிவாகும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by JAHIR HUSSAIN VENA (BAHRAIN) [30 June 2012]
IP: 82.*.*.* Bahrain | Comment Reference Number: 19744

மானமுள்ளவர்களாக INR 600 திருப்பி கொடுத்து விட்டு போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. Specially Lukman kaka...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. இன்னும் சொல்ல நினைக்கிறேன் நாகரீகம் கருதி வேண்டாம் தோழரே.
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல்) [30 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19746

vilack sma அவர்களே...

கொள்கையும் குறிக்கோளும் இல்லாத நாலாந்தர அரசியல்வாதிகள் மற்றும் சுய நல பண ஆதிக்கவாதிகளின் பிடியில் நகர்மன்றம் சலாம் போட்டு மண்டி இட கூடாதென்ற நல்ல நோக்கில் ஊர் மக்கள் மற்றும் புறநகர் மக்களை இணைத்து தலைவர் தேர்வு விழிப்புணர்வு ஏற்படுத்தியது இந்த மெகா மாபெரும் சக்தி ஒன்றேதான்.. பண பலம்.. அரசியல் பலம்... இன்னும் சொல்ல நினைக்கிறேன் நாகரீகம் கருதி வேண்டாம் தோழரே.. அட்மின் கத்திரி போட்டு விடுவார் அதான் தவிர்க்கிறேன்...

அடுத்தவனுக்கு புராணம் பாடுவது...! கூஜா தூக்கும் பழக்கம்...! நமக்கில்லை... தோழரே... அது வேற யாராவது திண்ணை தூங்கிகள் இருப்பார்கள்...

துணை தலைவரை போல இந்த உறுப்பினர்கள் இந்த தலைவரை தேர்ந்து எடுக்கவில்லை.. மெகா மாபெரும் மக்கள் சக்தி ஒன்றே இவரை தேர்ந்து எடுத்தது என்பதை திரும்பவும் மறந்து விட வேண்டாம் தோழரே...

தாங்கள் யாரை சந்தோஷ படுத்த கருத்து எழுதிணீரோ தெரியவில்லை...!

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by OMER ANAS (DOHA QATAR.) [30 June 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 19748

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் இந்த தலைவியை அரசியல் பலம் கொண்டோ... பண முதலைகளை கொண்டோ... அவரின் தலைவி பொறுப்புக்கு ஆப்பு வைக்க நினைத்தால்... சந்தேகமே இல்லை திரும்பவும் அவரே... தலைவர் பொறுப்பு வருவார்... இதில் மாற்றம் இல்லை... உங்கள் சக்தியில் அவர் இந்த பொறுப்புக்கு வரவில்லை... மாபெரும் மெகா மக்கள் சக்தி கொண்ட சக்தி மூலம் தலைவராக வந்தார்.. மறந்து விட வேண்டாம்..

நட்ப்புடன் தமிழர் முத்து இஸ்மாயீல்............!

நினைவூட்டலுக்கு நன்றி தமிழர் முத்து இஸ்மாயீல் அவர்களே! உங்கள் உள் அர்த்தம் புரிகிறது எங்களுக்கு! ஆனாலும் மெகா (மக்கள் சக்தி கொண்ட) சக்தி மூலம் தலைவராக வந்தார்.. மறந்து விட வேண்டாம் என்பதுதான் புரியவில்லை. மெகாவினை சொன்னால் மட்டுமே பதில் கருத்து (நிச்சயம்) கொடுப்பேன் என்ற கொள்கை கொண்டோர், தேவை இன்றி வரும், இந்த தம்பியின் சீண்டு மூண்டளுக்கும், மெகா ஒருங்கிணைப்பாளர் மூலம் ஊர் ஒற்றுமைதான் மெகாவின் குறிக்கோள். இந்த தலைவியை வெற்றிபெறச் செய்வதற்காக மட்டுமே நாங்கள் ஒருபோதும் இந்த இயக்கம் தொடங்கி செயல்படவில்லை என்று விளக்கம் கொடுத்து நடுநிலையான MEGA என்று இவருக்கு புரிய வையுங்கள்!

அப்பதான் மக்களை தேவை இன்றி சீண்டுவோர் யார் என்று மக்களுக்கும் புரியும்.

வாழ்க வெளிநடப்பு!
வளர்க மக்களுக்கு ஆப்பு!
தொடரட்டும் பச்சோந்திகளின் இருமாப்பு!
வெற்றி கொள்வோம் நமது காயலை,
பகல் கனவில் மட்டும்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [30 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19749

ஆக நமது நகராட்சியின் வெளிப்படயான நிர்வாகம் ரெம்பவே வெளிப்பட்டுள்ளது. துணைத்தலைவர் தேர்தலில் தலைவியோடு இருந்தவர்களும் தற்போது அவர்களோடு இல்லை என்பதை பார்க்கும் போது நிர்வாகத்திறன் இல்லை என்பதே. அனைவரும் அனுபWAத்தோடு நிர்வாகத்திற்கு வருதில்லை. வந்தபின் அனுபவஸ்தர்களை அணுகி அனைவரும் ஒன்று கூடி குறைந்த பட்சம் மெஜாரிட்டி அடிப்படையில் முடிவெடுத்தால் அனுபவம் தானாக வளரும். இங்கோ நேர் மாறாகவே உள்ளது.

ஆக மொத்தம் நகர் மன்றம் செயல்பாடில்லாத மன்றமாக மாறிவிடுமோ என பயப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது.

இதை செயல்பட வைப்பது தலைவியின் கையிலேயே உள்ளது. சுய கௌரவத்தை விட்டு ஊர் நலம் பேணி ஒற்றுமையாக செயல் பட்டால் ஒழிய உங்களை நம்பி வாக்களித்தோருக்கும் மற்றோருக்கும் விடிவு ஏற்பட போவதில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by kader meeran sahib (Saudi arabia) [30 June 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19754

நகர்மன்ற கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தவர்கள் அப்படியே ஒட்டுமொத்தமாக வெளியே போயிடலாமே. உள்ளே இருந்து நீங்கள் ஒன்னும் செய்ய போறது இல்லை. நகர்மன்றத்தில் உள்ளே இருப்பதற்கும், மக்களுக்கு சேவை செய்வதற்கும் நாங்கள் தகுதியற்றவர்கள் என்பதை அவர்களே நிரூபித்து இருக்கின்றார்கள்.

உண்மையிலே இவர்கள் காயல் நகர மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் நிச்சயமாக நகர்மன்றதை விட்டும் வெளிநடப்பு செய்து இருக்கமாட்டார்கள். இவர்களெல்லாம் நமக்கு சேவை செய்யமாட்டார்கள். பணம் சம்பாதிக்கத்தான் இவர்கள் நகரமன்ற உறுப்பினர்களாகி இருக்கின்றார்கள். உங்களில் ஒருவர் அல்லாஹ்வை முன்னிலைபடுத்தி உங்களுடைய கல்பை தொட்டு கேட்டுப்பாருங்கள் மக்களுக்கு உண்மைலேயே நீங்கள் சேவை செய்யத்தான் நகரமன்ற உறுப்பினர் ஆகுநீர்களா? (எங்களுக்கு உங்கள் மீது இந்த மாதிரி நம்பிக்கையின்மை வருகிற அளவுக்கு உங்களுடைய நடவடிக்கைகள் இருக்கின்றது)

உண்மையிலேயே அந்த நல்லெண்ணம் உங்களிடம் இருந்திருந்தால் நிச்சயமாக நீங்கள் வெளிநடப்பு செய்து இருக்கமாட்டீர்கள். மாதப்பணத்தை மட்டும் கவரில் வாங்கி பாக்கெட்டில் வைத்துவிட்டு காயல் நகர மக்களுக்கு சேவை செய்வதற்காக போடப்படும் நகரமன்ற கூட்டத்தை விட்டும் வெளிநடப்பு செய்த நீங்கள் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு வெளியே போயிருக்கலாமே நீங்கள் அல்லாஹ்வுக்கு அடிமையா? பணத்துக்கு அடிமையா?

வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள் பணம் சம்பாதிக்க நமது நகரமன்ற தலைவி ஆபிதா லாத்தா தடையாக இருக்கின்றார்கள் போலும். அதனால்தான் சப்ப குற்றச்சாட்டுகளை நகர்மன்ற தலைவியின் மேல் சுமத்தியிருக்கின்றார்கள். நமது தலைவியே வெளியேற்றிவிட்டு அவங்க பாஸ் சொல்ற நபரை கொண்டு வந்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம். பணத்துக்கு விலை போன மாடுகள். நல்ல உறுப்பினர்கள் கூட அங்கே இருக்கின்றார்கள் அவர்களையும் கூட இவர்கள் மாற்றிவிட்டார்கள்.

தயவு செய்து கவரோட வாங்குன பணத்தை வெளிநடப்பு செய்த கவுன்சிலர்களே திருப்பி கொடுத்துவிடுங்கள்.

( நீ சொன்னா திருப்பி கொடுத்தரனுமா நாங்களே கஷ்டப்படாம வாங்குன சம்பளம்) கேவலம் பணத்துக்காக மக்கள் நலனையே பாதிக்க கூடிய அளவுக்கு உங்கள் நடவடிக்கைகள் இருக்கின்றது. இதுக்குத்தான் சொல்றது நல்ல படித்தவர்களையும், தக்வா உள்ளவர்களையும் நாம் இந்த பதவியிலே அமர்த்த வேண்டும். இதற்க்கு அவர்கள்தான் மிக்க தகுதியானவர்கள். (நம்ம மக்கள்தான் வெளுத்ததெல்லாம் பால்னு நினைக்கின்றார்களே) சம்பளம் வாங்குறது ஒருவரிடம் அதற்கு வேலை பாக்குறது இன்னொருவரிடம் இப்படித்தான் நம்ம உறுப்பினர்களுடைய நிலைமை இருக்கின்றது

உங்களை மாதிரி பணத்துக்கு விலை போற கவுன்சிலர்கள் இருந்தால் நம்ம ஊரை வளர்ச்சியடைய செய்யமுடியாது.

சிலர் நினைக்கின்றார்கள் அந்த பணக்காரன் பெரியவன் இந்த பணக்காரன் பெரியவன் என்று. எந்த பணக்காரனும் பெரியவன் இல்லை. அல்லாஹ்வை தவிர பெரியவன் யாரும் இல்லை. அல்லாஹ்தான் பணக்காரன். ஒருவனிடம் பணம் இருந்து அவன் உயிருடன் இருக்கும் வரைக்கும்தான் அவன் பணக்காரன். அவன் மரணித்தால் மய்யித் தான். யாராவது மய்யித்தை போயி பணக்காரனு சொல்லுவோமா. உடம்பில் உயிர் இருக்கும்போது பணக்காரனாக இருந்த ஒருவன் அவன் மரணித்த பின் அவனுடைய நிலைமை மய்யித் காரன். ஆனால் கருணைக்கடலான அல்லாஹ்வுக்கு மரணம் என்பதே இல்லை அப்படிப்பட்ட பணக்கரனாகிய அல்லாஹ் சொல்றப்படிதான் நாம் கேட்க்க வேண்டும். நடக்க வேண்டும் .

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் பொருட்டினால் நமது ஊரை அநியாயக்கரர்களிடம் இருந்து காப்பாற்றுவானாக! நமது ஊரை ஒற்றுமை உடைய ஊராக்கி வைப்பானாக! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. கண்டதும் கேட்டதும் (பொய்யல்ல)
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [01 July 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 19755

வியாழன் (28-06-2012 ) அன்று நகர்மன்றத்தில் நடைபெற்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பார்வையாளராக சென்றிருந்தேன்.

இரு பெண் உறுப்பினர்களைத் தவிர எல்லோர்களும் ஆஜராகியிருந்த்தார்கள். ஏட்டில் கையெழுத்து போட்டுவிட்டு தங்களது இடத்தில் அமர்ந்தார்கள். அவர்களது படி (கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படும் தொகை - Rs 600/- இருக்கும் என்று எண்ணுகிறேன்) தனித்தனி கவரில் போட்டு அவசர அவசரமாக கொடுக்கப்பட்டது. கூட்டம் ஆரம்பித்த முதல் நிமிடத்திலிருந்து ஒருவர் பின் ஒருவராக (இருவர்களைத் தவிர) சொல்லிவைத்தாற்போல் தங்களால் முடிந்த காரணங்களை சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்தார்கள். காரணம் கூற முடியாதவர் , " நான் அதை ஆமோதிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்தார்.

மொத்தத்தில் இரு உறுப்பினர்களை கொண்டு தலைவி கூட்டத்தை தொடங்கினார். Commissioner ம் உடன் இருந்தார். கொஞ்ச நேரத்தில் வெளிநடப்பு செய்யாத இரு உறுப்பினர்களில் ஒரு உறுப்பினரை காணவில்லை. வெளிநடப்பு செய்யாது கடைசிவரை இருந்த உறுப்பினர் சகோ., சம்சுதீன் மட்டுமே.

அவர்கள் வெளிநடப்பு செய்வது அவர்களின் உரிமை. வெளிநடப்பு செய்பவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகையை திருப்பி செலுத்திவிட்டு செல்வார்கள் என்று எண்ணினேன். ஒருவர் கூட நாம் கலந்துகொள்ளாத கூட்டத்தில் கலந்துகொண்டதற்க்காக வழங்கப்பட்ட தொகையை திருப்பி கொடுக்கவில்லை.

இப்படிப்பட்டவர்கள் ஊழலை ஒழிக்க தலைவிக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று நாம் நினைத்தோமேயானால் அது நம்மிடமுள்ள குறைபாடேயன்றி வேறில்லை.

இதில் எங்கள் ஜமாத்தை சார்ந்த இரு உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தார்கள். அதில் ஒருவர் பள்ளிக்கூடம் பக்கம் சென்றிப்பாரா என்பது சந்தேகம். மற்றொருவர் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசான் (பட்டதாரி). அவர் வெளிநடப்பு செய்வதற்கு அவர் சொன்ன காரணம் என்னை அதிர்ச்சியடைய வைத்தது.

இதோ அவர் சொன்ன வார்த்தைகள்.

" நகரமன்ற கூட்டங்களை video " ஒளிப்பதிவு செய்து மக்களுக்கு போட்டுக்காட்டுவது நமது நகர கலாசாரத்திற்கு மாறுபட்டது. வெளிநாட்டில் இருப்பவர்கள் அதை நெட்டில் பார்ப்பார்கள். இது நமது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. அதனால் ஒளிபதிவு செய்து மக்களுக்கு காட்டவேண்டும் என்ற உங்களுடைய (தலிவியுடைய ) இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நான் வெளிநடப்பு செய்கிறேன்".

(இதில் அவர் "வெளிநாட்டில் இருப்பவர்கள்" என்று குறிப்பிட்டது வெளிநாட்டவர்களை என்று நான் கருதுகிறேன். லோக்சபை, ராஜ்ய சபை மற்றும் சட்டசபை நிகழ்வுகள் தொலைகாட்சியில் காட்டப்படுவதை பாவம் இந்த ஆசான் அறியவில்லை போலும்)

சகோ.., சாமு அவர்கள் தனது அறிக்கையின் நகலை எல்லோருக்கும் கொடுத்துவிட்டு வெளிநடப்பு செய்தார். அவருடைய குற்றச்சாட்டில் சங்கர் என்பவர் குடி போதையில் இஸ்லாமிய சமுதாயத்ததின் மீது அவதூறாக பேசியதாக குற்றம் சுமத்தியுள்ளார். இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக நான் விசாரித்தவரை தெரியவில்லை. (நடந்திருக்கலாம்). ஆறுமுகநேரியை சார்ந்த சங்கர் ஒரு ஆறுமுகநேரி பஞ்சாயத்து உறுப்பினர் என்பது தெரிய வந்தது. பொறுப்புள்ள ஒரு பேரூராட்சி உறுப்பினர் அருகிலுள்ள் நகராட்சிக்குச் சென்று ஒரு சமுதாய மக்களை தரக் குறைவாக பேசியிருக்க வாய்ப்பில்லை. ஒரு பக்கத்து குற்றச்சாட்டை ஆதாரமாக வைத்து மறுபக்கத்தினரை குற்றவாளியாக கருதுவது ஆறாவது அறிவின் விளிம்பிளிருப்பவன் கூட செய்ய மாட்டான். (web site யில் பலர் comments என்ற பெயரில் இதை வாடிக்கையக்கிவிட்டார்கள் என்பது ஒரு பக்கம் ).

எனவே அட்மின் அவர்கள் இது விசயமாக சங்கர் அவர்களை சந்தித்து அவரது version ஐ வெளியிட்டால் நல்லது என்பது என் கருத்து. ஒரு வேலை சகோ.., சாமுவின் குற்றச்சாட்டு உண்மையென்றால் (அப்படி நடந்திருந்தால்) அது கண்டிக்கத்தகுந்தது.

லஞ்சம் வாங்குவது பற்றி பேசிய அந்த இரு உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் நகரமன்ற கூட்டங்களில் நான் கலந்துகொள்ள மாட்டேன் என்று சகோ.., லுக்மான் ஒரு அறிக்கை விட்டதாக எனக்கு ஞாபகம். அவர் வெளிநடப்பு செய்யும் பொழுது சொன்ன காரணத்தில் இதையும் (அந்த இரு உறுப்பினர்களும் இங்கு இருக்கிறார்கள், ஆதலால் வெளிநடப்பு செய்கிறேன் என்று) சேர்த்து சொல்லியிருந்தால் அது அவருடைய வாதத்திற்கு 50% வழு சேர்த்திருக்கும். ஆனால் அவர் கூறிய காரணம், "இணையதளத்தில் தன் மீது அபாண்டமாக தலைவி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும், அதனைக் கண்டித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதாகவும்" சொன்னார்.

ரோட்டில் போகும் பாம்பை சேலைக்குள் இழுத்துப்போடுவது என்பது இதுதானோ? Chennai Super Kings fans' clubஇல் இவரும் (விசிறியாக) சேர்ந்து விட்டாரோ என்று மக்கள் மானசீகமாக பேசவதை உணரமுடிகிறது.

இவர்கள் வெளிநடப்பு செய்ததினால் ஊருக்கு ஒரு நன்மை நடந்ததாக கூட்டத்தில் கலந்துகொண்டு கடைசிவரை கூட்டத்தை அவதானிதவர்களில் சிலர் பேசிக்கொண்டனர். அதாவது இரண்டாவது மீன் மார்கட் சம்பந்தமான் சிலமாதம் நிலுவையிலுள்ள ஒரு பிரச்சனைக்கு சுமுகமாக முடிவு கிட்டியதென்று (பெருமூச்சி விட்டனர்).

இவர்கள் வெளிநடப்பு செய்யவேண்டும் என்று எங்கு ரூம் போட்டு முடிவெடுத்தார்கள் என்று தெரியவில்லை. மொத்தத்தில் ஒரு முடிவுடன் இருக்கிறார்கள். தலைவி எப்படி காயை நகர்த்துகிறார் என்று பார்ப்போம். மக்கள் எப்படி இவர்களை நகர்த்துகிறார்கள் என்று பார்ப்போம்.

கடந்த பஞ்சாயத்து தலைவர்களின் தலைமையில் (ஆட்சி காலங்களில்) காயல்பட்டணத்தில் பாலாறும், தேனாறும் ஓடியது போலவும், சகோதரி ஆபிதாவின் ஆட்சியில் சாக்கடை ஓடுகிற மாதிரி ஒரு பிரம்மையை ஏற்படுத்த முனைகிற கூட்டத்திற்கு கைக்கூலிகளாக செயல்படுகிற நகராட்சி உறுப்பினர்களை மக்கள் அடையாளம் கண்டு அவர்களை செயலிழக்கவைக்கும் நாள் இன்ஷா அல்லாஹ் வெகுதூரத்திலில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by Shahul Jiffri Kareem (London) [01 July 2012]
IP: 189.*.*.* Mexico | Comment Reference Number: 19758

கருத்தகளை பதிவு செய்யும் நண்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்....

குறிப்பாக மூன்றாம் கருத்தை பதிவு செய்த அருமை நண்பர் M.N.L.முஹம்மது ரபீக் என்ற ராபியா மணாளன் அவர்கள் சில நேரங்களில் வரம்பு மீறி தனது கருத்துகளை பதிவு செய்கின்றார். குறிப்பாக இந்த செய்தியில் 'நமது ஊருக்கு பல பல நன்மைகளை செய்துவரும் மனித நேய ஆர்வலர்களை உண்மைக்கு புறம்பான கருத்துகளை கொண்டு இழிவு படுத்தி தனது கருத்துகளை பதிவு செய்கின்றார்.

உங்களுக்கு ஒரு பகிரங்க சவால்...நீங்கள் குறிப்பிடும் அந்த செல்வந்தர் நமது ஊருக்கு செய்த நன்மைகளை பட்டியல் இட நான் தயார்.... நீங்கள் நமது ஊருக்கு செய்த அறிய பல நன்மைகளை பட்டியல் இட தயாரா?????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by M Sajith (DUBAI) [01 July 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19760

அன்பின் ஷுஐபு காக்கா அஸ்ஸலாமு அலைக்கும்,

நான் ரசிகனுமில்லை, ஆபிதாவுக்கு வாக்களிக்கவுமில்லை (ஊரில் இல்லை)... இறுதி வரையிலும் பேரவையின் செயல்பாட்டைத்தான் விமர்சனம் செய்தேன், சகோதரி அபிதாவை ஆதரித்து அல்ல..

இதை எதார்தத்தில் எடுத்துக்கொள்ளாமல், எங்க ஏரியா பெரியவர்களை எப்படி விமர்சிக்கலாம் என மனம் பொறுக்காமல் அதுக்கு ஒரு புதிய கோனத்தை சிலர் வரிந்துகட்டி - கடைசியில் அகீதா அரசியல்கள் எல்லாம் புகுத்தி தங்களில் தரத்தையும் - என்ன சொல்கிறோம் என்றே தெரியாமல் சில 'கற்பூரங்கள்' புலம்பியதும் பழைய கதைகள்.

ஒரு தவறை சரிசெய்ய புதிய புதிய தவறுகளை செய்யும் நிர்பந்த்தம் தங்களுக்கு தாங்களே ஏற்பட்டுள்ளது அன்று பேரவைக்கு ஏற்பட்டது போல இவருக்கும்.....

அதே முயற்சியை, ஏதோ தலமைக்கு எதிராக பேசுவதால் சகோ.லுக்மானுக்கு எதிராக கருத்து பதிவது போல்வும், தலைமைக்கு துதி பாடுவதாகவும் (சிலர் அதையும் செய்கிறார்கள் என்பதும் உண்மை) என்ற சித்திரத்தை எதார்த்தத்தை அலசும் அனைவருக்கும் வழங்க முயற்சிப்பது தங்களுக்கு புரியாமலிருக்க வாய்ப்பில்லை..

பெரியவர்கள் மேலிருந்த பாசத்தால் அவர்கள் செய்த அதே வேலையைத்தான், ஷுஐபு காக்கா உங்கள் விமர்சனத்திலும் பார்க்கிறேன்...

லுக்மான் காக்கா ராஜினாமாவை ஏன் ஜமாத்தில் கொடுக்கவேண்டும், நகரவையில் அல்லவா தரவேண்டும் - இதில் இன்னொரு ட்ராமா உருவாகவா? - ஜமாஅத் ஒற்றுமை - ஜமாஅத் முடிவின்படி மட்டும்தான் அவரது நடவடிக்கைகள் இருக்கும் என்றால், அறிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவருவதையும் ஜமாத்தில் கொடுத்து அங்கீகரித்ததும்தான் வெளியிட்டார்களா?

நேர்மையில் சிரிதெனினும் ஆர்வமுள்ளவரெனில், வரும் கூட்டத்தில், ஆடியோ நாயகர்களை கண்டித்து ஒரு தீர்மாணம் கொண்டுவரச் சொல்லுங்களேன்!!

இதில் சம்பந்தப்பட்டவருடன் தாம் இல்லை என்று எல்லோருக்கும் தெரிந்த தகவலை, திசைதிருப்பும் நடவடிக்கையாக மாற்றியது உண்மையில் அவர் எண்ணம் இல்லை என்றால் அது அவருக்கும் இறைவனுக்கும் உரியது என விடலாம், அதையாவது அவர் சொல்லட்டுமே..!!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by EASA SHAFEEQ (RIYADH) [01 July 2012]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19764

அஸ்ஸலாமு அலைக்கும்

மிகவும் அருமையான கதைகளை நகர் மன்ற உறுப்பினர்கள் அரங்கேற்றி உள்ளார்கள்.

குறிப்பாக 16 வது வார்டு கவுன்சிலர் நடத்திய நாடகக் கதை மிகவும் அருமை. 6 வது வார்டு கவுன்சிலர் அவர்களே உங்களுடைய வார்டுக்கு உட்பட்ட தெருக்கள் எத்தனை என்று தெரியுமா? 8 வார்டு கவுன்சிலர் உங்களுக்கு என்ன வேண்டும் தாயே?

9 வது வார்டு கவுன்சிலர் நீங்கள் நகர் மன்றத்திற்கு வந்தது நல்ல கலாச்சாரம் தனா இல்லை கலாச்சார சீரழிவா? ஹக்கின் வெளிச்சம் ஹக்கிர்கே.18 வது வார்டு கவுன்சிலர் அவர்களே நீங்களுமா?? பிரச்சனைகளுக்கு வித்திட்ட முதல் வார்டு கவுன்சிலற்கு ஜெ.

நகராட்சி ஆணையர் ஒரு தரம் நகராட்சி உறுப்பினர்கள் இரண்டு தரம் நகராட்சி அலுவலர்கள் மூன்று தரம் ஏலம் எடுப்பவர்கள் யார்?

வாழ்க பணநாயகம் ஒழிக ஜனநாயகம்!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமார .....
posted by musthak ahamed (goa) [01 July 2012]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 19765

முதலில் எதற்கும் வளைந்து கொடுக்காது தன் தார்மீக பொறுப்பு உணர்ந்து நகர் மன்ற கூட்டத்தில் பங்குபெற்ற சம்சுதீன் காக்கா அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்...........

இந்த நிகழ்வு இப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...............

தலைவி அனுமதி மறுப்பு.................

ஊழலுக்கு ஆதரவாக, ஊழல் செய்ய வற்புறுத்தியும், பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாம் என்று வெளிப்படையாக பேசியது இணையதளங்களில் வெளியானாதால் அதனை கண்டித்து அந்த உறப்பினர் நகர் மன்றத்திற்கு உள்ளே வர அனுமதி மறுப்பு........

சம்ப்பந்தமே இல்லாமல் -சம்மன் இல்லாமல் ஆஜராகி - தலையிட்டு அசிங்கமான விஷயத்தை திசை திருப்பி மறைமுகமாக அந்த ஊழலுக்கு துணை போனவர், அதோடு மட்டும் அல்லாது தன் மீது அபாண்டமாக புழுதி வாரி தூற்றிய உறுப்பினர் - உள்ளே வர அனுமதி மறுப்பு.

இறுதியாக

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தலைமைக்கு கீழ் செயல் பட்டு இந்த ஊருக்கு ஏதாவது நன்மைகள் செய்வார்கள் என்ற மக்களின் நம்பிக்கையும் எதிர்ப்பார்ப்பையும் பொய்த்துப் போக செய்த, தனியாக நகர் மன்றம் ஒன்றை நடத்தி அதில் எடுக்கப்படும் தீர்மானங்களைத்தான் செயல் படுத்த வேண்டும் என்று மறைமுகமாகவும் நேரிடையாகவும் வற்புறுத்தி நகர் மன்றத்தையே முடங்க செய்த உறுப்பினர்களைக் கொண்டு இனிமேலும் செயல் பட முடியாது என்ற காரணத்தினால் தகுந்த சட்ட ஆலோசனைகள் மேற்கொண்டு இந்த நகர் மன்றம் கலைப்பு என்றிருந்தால் மனதிற்கு மிகவும் சந்தோசமாக இருந்திருக்கும்.

ஆனால் இங்கே நடந்ததோ வேறு.

உழைக்காமலே கூலிபெற்ற உத்தமர்களே..............நாளை
அல்லாஹ்வின் கேள்விக்கு என்ன பதில் சொல்வீர்கள்,

ஒரு குற்றத்தை செய்வது மட்டும் அல்ல அதற்க்கு உடந்தையாக இருப்பதும் குற்றமே என்பது தாங்கள் அறியாதது அல்ல. அடிப்படை அறிவு இல்லாத ஒருவருக்குக் கூட இந்த மாதிரி யோசிக்கத் தோன்றாது.

ஒரு விஷயம் வெடிக்கிறது. அதற்க்கு ஒரு அறிக்கை வருகிறது. அந்த அறிக்கையில் அதைப்பற்றிய எந்த விமர்சனமும் இல்லாமல் அந்த அசிங்கத்தை முழுதுமாக திசை திருப்பும் அனைத்து விசயங்களும் இருக்கிறது. கொஞ்சமாவது அறிவுக்கு தட்டுப்படவே மாட்டேன்கிறது.

எதற்காக லுக்மான் காக்காவின் அறிக்கை. அதன் தொடர்ச்சியான பிரதிபலிப்புகள் அவரே எதிர்பார்க்காதது. இதன் மூலம் தலைவர் மற்றும் சம்சுதீன் காக்கா தவிர மற்ற அனைத்து உறுப்பினர்களின் பேராதரவு. இன்னும் எவ்வளோ ஆதாயங்கள்........ ஒருவேளை பெரிய இடங்களில் இருந்து அடுத்த தலைவர் அல்லது துணை தலைவர் என்ற வாக்குறுதிகள் கிடைத்து இருக்கலாம். ரகசியங்களை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே. இதற்கெல்லாம்

வெளிநடப்பு போட்டோவில் எவ்வளவு அழகாக போடோவிர்க்கு போஸ் கொடுக்கிறார்கள்....... முகம் எங்கும் பொங்கி வழியும் சிரிப்பு.... எதையோ சாதித்த சந்தோசம்................ .. லுக்மான் காக்கா முகத்தில் தான் எத்தனை பிரகாசம்... எதையோ சாதித்து விட்ட பெருமிதம்........இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [01 July 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19768

தம்பி சாஜித்...!

ஜமாஅத் மூலமே தன்னை தேர்ந்து எடுத்ததால் லுக்மான் அந்த ஜமாத்திடமே ராஜினமா கடிதம் கொடுத்துள்ளார். ஒரு மாமன்ற உறுப்பினர் தனது பனியின் நிமித்தம் அன்றாடம் செய்ய வேண்டிய காரியங்களுக்கு எல்லாம் ஜமாஅத் அனுமதி பெற்றுத்தான் செயல்படவேண்டும் எனபது நடைமுறையில் சாத்தியம் ஆகாத காரியம். ஆனால் ராஜினாமா எனபது அவ்வாறானதல்ல. எந்த மக்கள் தன்னை தேர்ந்தெடுத்தார்களோ அந்த மக்களுக்கு பொறுப்பு சொல்லும் கடமை சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு உண்டு.

இதை அவர் சட்ட ரீதியாக செய்ய நினைக்கும் போது நகராட்சி கமிஷனரிடம் தனது ராஜினமா கடிதத்தை கொடுப்பார். நகரமன்ய்ற தேர்தலின் போது ஐகக்கிய பேரவை எடுத்த முடிவை உங்களை போன்றே நானும் எதிர்த்தேன். அதில் இப்போதும் தவறு செய்து விட்டதாக கருதவில்லை. நிர்வாக ரீதியாக ஏற்படும் தவறுகளை சுட்டிக் காட்டுபவர்களை ஐகிய பெரவையினராக கருதிக்கொள்ளும் மனப்பான்மை நம்மில் பலபேருக்கு ஏற்பட்டுள்ளது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் .இது ஒரு நோய். இதை மெல்ல மெல்லத்தான் குணப்படுத்த முடியும்.

உங்களை போல விவரம் அறிந்த தம்பிகளே இப்படியிருக்கும்போது வேறு யாரைப்போய் நோவது? ஆபிதாவுக்கு உண்மையான எதிரிகள் பலர் உள்ளனர். நீங்கள் "நிழல் எதிரி "கலை வேறு உற்பத்தி செய்கிறீர்கள். நிழல் எது ?நிஜம் எது ?என்கிற அறியாமை குழப்பத்திலேயே பாதி காலம் போய்விடும் போல்லுள்ளது. "விநாச காலே விபரீத புத்தி "என்பார்கள். அது போல நிகழாமல் இறைவன் நம் யாவரையும் காப்பாற்றுவானாக....!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by M.N.Sulaiman (Bangalore) [01 July 2012]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 19769

என்ன ஒரு ஒற்றுமை... அனைவரும் ஒன்றிணைந்து விட்டார்கள். தர்மத்தை எதிர்த்து அதர்மத்தை நிலைநாட்ட....! சிந்தித்து பாருங்கள், அன்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து பதவி ஏற்றீர்கள். ஆனால், இன்று நீங்கள் கூறும் காரணங்கள் அனைத்தும் மிகவும் பலவீனமானவைதான்.

நம் நகர்மன்றதை கூறுபோடும் விதமாக இரண்டு ஊழல் பெருச்சாளிகளின் உரையாடல்களை ஆதாரத்துடன் கேட்டும், அதன்மீது எந்த ஒரு நடவடிக்கை, ஏன் அதைபற்றி பேச கூட திராணி இல்லாத தன்மான சிங்கங்கள் வெளிநடப்புக்கு கூறின காரணங்களை நினைத்தால், வாக்களித்த மக்களை எந்த அளவு முட்டாள் ஆக்குகிறார்கள் என்பது தெரிகிறது.

வார்டு 4 : FC பற்றி காரணங்களை கூறும் கண்ணியமிகு கவுன்சிலர், தம் தொகுதி மக்களின் பல ஆண்டு வேண்டுகோள் ஆன "குப்பைமேட்டை" அகற்ற இதுவரை என்ன முயற்சி செய்தார்? தேர்தல் சமயத்தில் தங்களின் பிரத்தேக வாக்குறுதி அதுதானே...?

வார்டு 9 : மரியாதைக்குரிய ஹைரியா அவர்களே, நீங்கள் கூட இந்த கூட்டணியில் என்று நினைக்கும் போது மனம் வேதனையடைகிறது.

இறுதியாக, தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும்...தர்மம் மறுபடியும் வெல்லும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்
posted by Zubair Rahman (Doha-Qatar) [01 July 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 19771

அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் , பொறுமை எனும் வரம்பினை மனதில்கொண்டு ஒற்றுமை உணர்வுடன் பணியாற்றுங்கள் அதில் அல்லாஹுவின் பறக்கத் நிறைந்திருக்கும்.

தன் சொந்த சுய புத்தியைக்கொண்டு ஹராம் ஹலால் பேணி மக்களுக்காக உண்மையுடன் உழையுங்கள் அல்லாஹ் உங்களுக்கு துணை நிற்பான். அதனை தவிர்த்து, மனிதனின் உதவி வரும் என்று காத்திருந்து அவனுக்காக அவனின் ஏவல் படி பணியாற்ற தங்களை மக்கள் இச்சபைக்கு அனுப்பவில்லை என்பதனை மனதில் கொள்ளவும். மறுமையில் தங்கள் வீற்றிருக்கும் இந்த பதவியைப் பற்றியும் கேள்வி கணக்கு உண்டு என்பதனை மறக்க வேண்டாம்.

அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் அவனின் பிடி இறுக்கப்பட்டால் நீங்கள் எந்த மனிதனின் உதவியை நாடினாலும் பலனில்லை. ஐவேலை தவறாமல் தொழுகலாம் , தர்மம் செய்யலாம் , உம்ரா போகலாம், ஹஜ் போகலாம் - இதனை விட மேல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நல்ல முறையில் மக்களின் நலம் நாடி செய்யுங்கள். இதற்கு நிச்சயம் அல்லாஹுவிடம் மகத்தானா நற்க்கூலி உண்டு.

ஹராமானா வழியில் வரும் வருமானத்தைக்கொண்டு எந்த நல் காரியம் செய்தாலும் அதற்க்கு பலன் இல்லை அது நமது உடம்பில் சென்றால் நம்முடைய அமல்கள் அனைத்தையும் பாழாக்கிவிடும் நம்முடைய பிரார்த்தனை ஒப்புகொள்ளப்பட மாட்டாது என்பதனை மறக்க வேண்டாம். இது நாள் வரை செய்த அனைத்து கெட்ட செயலுக்கும் வல்லோனிடம் மன்னிப்புக்கோரி தூய வாழ்விற்கு திரும்பி மக்களின் நலப்பணியில் ஈடு படுங்கள் அல்லாஹ் பறக்கத் செய்வான். நம்மை நோக்கி புனித மாதம் வருகிறது அதனை நல்ல முறையில் நல்ல அமல்களைச்செய்து நன்மைகளின் பக்கம் நம்மை தூய ஹலாலான வாழ்க்கைக்கு கொண்டு செல்வோம்.

"ஒற்றுமை எனும் கையிற்றை பலமாக பிடித்துக்கொள்ளுங்கள் "

ஒற்றுமையை உருக்குலைக்க நினைக்கும் சக்திகளே
"அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் அவனின் பிடி இருக்கப்படும் காலம் வெகு தொலைவில்லை என்பதனை மறக்க வேண்டாம் "

தயவு செய்து ஒற்றுமை உணர்வுடன் மக்களுக்காக பாடு படுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by cader (JAIPUR) [01 July 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 19772

Comment Reference Number: 19345 என்னை பொறுத்தவரை இப்போதும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன் பதவியேட்ட நாள் முதல் இன்று வரை நான் லஞ்சம் வாங்கியதும் இல்லை. அல்லாஹ்வின் ஆணையக இனி வாங்கப்போவதும் இல்லை.

இப்பொழுது நீங்கள் கலந்து கொள்ளாத கூட்டத்திருக்கு (வெளிநடப்பு) எதற்கு ரூபாய் வாங்கி கொண்டிர்கள் வேலை செய்யாமல் வாங்குவது லஞ்சம் இல்லையா. லஞ்சம் என்றால் நீங்கள் வாங்குனது என்னது.

இணையதளத்தில் தன் மீது அபாண்டமாக தலைவி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும், அதனைக் கண்டித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதாகவும் 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தெரிவித்துவிட்டு கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்.

ஏ.லுக்மான் காக்கா முதலில் இணையதளத்தில் அபாண்டமாக தலைவி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சொன்னது நீங்கள்தான். ஏன் மறுபடியும் பொய்யான தகவல் தருகிறிர்கள். இதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள் கண்டிப்பாக சொல்விர்கள் என்று எதிர்ப்பாக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by sulaiman (abudhabi) [02 July 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19776

அஸ்ஸலாமு அழைக்கும் ,

சகோதரி ஆபிதா அவர்களின் இந்த எட்டு மாத நிர்வாக குளறுபடிகளயும், நிர்வாகத்திறமை இன்மையால் ஏற்பட்ட தடுமாற்றங்களையும் சுட்டிகாட்ட திராணி இல்லாத இவரின் புகழ் பாடிகள் அனவைரும் ஒருமித்த கருத்துக்கு வந்து உள்ளார்கள். இந்த நகராச்சி மன்றத்தில் வெளிநடப்பு செய்த அனைத்து உறுபினர்களும் ஊர் நலனில் அக்கறை இல்லாதவர்கள், தலைவிக்கு எதிர் ஆனவர்கள்.

கரணம் சகோதரி ஆபிதா அவர்களின் நிர்வாக குளறுபடிகளை வெளிபடுத்தியதால். இந்த எட்டு மாத காலத்தில் ஊருக்கு எந்த முன்னேற்றமோ ,மாறுதலோ செய்ய முடியாத நகராச்சி மன்ற தலைவி மட்டும் ரொம்ப நல்லவங்க. கரணம் தேர்தலின் போது இவருக்காக இந்த புகழ் பாடிகள் மக்கள் இடம் செய்த பிரசாரம் மற்றும் இவரை பற்றி மக்களிடம் அதீதமான நம்பிக்கையை ஏற்படுத்தியதன் விளைவு.

நன்மை ,தீமை சரி ,தவறு நல்லது ,கெட்டது இந்த அளவுகோலின் படி இல்லாமல் கண்ணைமூடிகொன்று ஆதரிக்கும் இந்த அதரவு நமது நகராச்சி மன்ற நிர்வாகத்தை எவ்வாறு சீரழிக்க போகிறதோ தெரியவில்லை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. ஊனமாகிவிட்ட கருத்துப்பரிமாற்றம்
posted by Zubair Rahman (Doha-Qatar) [02 July 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 19778

படைத்தவனின் கிருபை யாவர்மீதும் உண்டாகட்டும். நல்லுள்ளம் கொண்ட சகோதரர்களே நமக்குள் எதற்கு இந்த வேறுபாடு . ஒருவரையொருவர் சாடிக்கொண்டே போனால் கடைசியில் நமக்கு கிடைத்த உரிமைகள் நம் கையை விட்டு நழுவும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதனை மனதிற்கொள்ள வேண்டும். மதிப்பிற்குரிய நகராட்சி தலைவரின் பணியின் மேல் அதிருப்தி இருந்தால் அதனை சரி செய்ய வேண்டிய கடமை நம் மன்றத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் உள்ளது . எந்த ஒரு பிரச்சினையானாலும் சரி , அது அமர்வுகள் மூலம் சரியாகும். இப்படியே ஒருவரையொருவர் சாடிக்கொண்டிருந்தால் முடிவு தான் என்ன?

அதேபோல் கருத்துக்களைப்பதியும் சகோதரர்கள் எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் ஏதேதோ பதிக்கிறார்கள். நகராட்சி தலைவர் ஒன்றும் அவர் வீட்டுக்கு அள்ளிக்கொண்டு போகவோ, இல்லை அவரின் சொந்த கஜானாவை நிரப்பவோ இதெல்லாம் செய்யவில்லை . நமதூர் மக்களின் நன்மைக்காக செய்கிறார்கள். ஒருவர் அயராது பாடுபட்டு அதன் மூலம் ஊரே சுபிட்சம் பெருமானால் அது யாருக்கு நன்மை என்பதனை புரிந்துகொண்டு கருத்து சொல்லவும்.

"ஊனமுற்றவனே ஊன்றுகோலின் உதவி தேவை இல்லை"
என்கிறான் - ஆனால்
ஊனமுற்றவரைப்போல் நடிக்கின்றவர்களுக்கு எதற்கு ஊன்றுகோல்???

சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் மிகப்பெரிய சூழ்ச்சியாளன் அகிலத்தைப்படைத்து ஆளும் அல்லாஹ் ஒருவனே என்பதனை மறந்து வீறு நடை போடா வேண்டாம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
46. Please pay attention
posted by Riyath (HongKong) [02 July 2012]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 19779

Dear Brothers & Sister,

Here is the root cause for all conversions we made for couple of weeks now. We were diverting to different subjects and matters those not important. Is it possible to get this news highlighted by Admin, much appreciated if done.

வளைந்து கொடுக்கனும்னா இப்படித்தானோ?
http://kayalpatnam.com/shownews.asp?id=8616

I see - only 25 comments recorded on above news for the audio incident. But recorded more than 100 comments on unrelated news list below with brotherhood battle.

Who is going to pay attention to take legal action against 2 culprits spoken in audio since we knew whose those persons. Good joke is these guys were attended in June month council and went away with unworthy reason. I heard there was heavy competition in last election because of the reason these culprits spoken out to the people. Only after taken legal action, the best candidate will come out for serving our people.

Personally I am happy about current municipality council compare to the past in my experience (which is worth/countable in my life). One of the good things noted is an order announced from municipality to seize motors using for sucking drinking water. When i was in kayal, I used to pump the water with more struggle due to our dearest Muslim neighbors were using motors. I feel this is a good start and our municipality councilors should unite to support such useful things to our kayalites for better life style. Though, i still worried about how to find the status (in progress, completed. rejected, etc) of problems reported to the council during monthly people problem solving, internet, mails, etc.

காயல்பட்டினம் நகர்மன்ற 01ஆவது வார்டு உறுப்பினரின் தன்னிலை விளக்கம்!
http://kayalpatnam.com/shownews.asp?id=8628

உறுப்பினர் ஏ.லுக்மானின் அறிக்கைக்கு நகர்மன்றத் தலைவர் பதில்!
http://kayalpatnam.com/shownews.asp?id=8641

நகர்மன்றத் தலைவரின் பதிலுக்கு - உறுப்பினர் லுக்மான் பதில் அறிக்கை!
http://kayalpatnam.com/shownews.asp?id=8661

காயல்பட்டினம் நகர்மன்றத்தின் ஜூன் மாத கூட்ட நிகழ்வுகள்! 14 உறுப்பினர்கள் வெளிநடப்பு!!
http://kayalpatnam.com/shownews.asp?id=8665

**Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
47. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by MAHMOOD HASAN(mammaash) (QATAR) [02 July 2012]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 19781

FROM - வளைந்து கொடுக்கனும்னா இப்படித்தானோ?

ஆஹா நம்ம படம் ரிலீஸ் ஆஹிடும் போல CDய மாத்தனும்

காயல்பட்டினம் நகர்மன்ற 01ஆவது வார்டு உறுப்பினரின் தன்னிலை விளக்கம்!

உறுப்பினர் ஏ.லுக்மானின் அறிக்கைக்கு நகர்மன்றத் தலைவர் பதில்!

நகர்மன்றத் தலைவரின் பதிலுக்கு - உறுப்பினர் லுக்மான் பதில் அறிக்கை!

காயல்பட்டினம் நகர்மன்றத்தின் ஜூன் மாத கூட்ட நிகழ்வுகள்! 14 உறுப்பினர்கள் வெளிநடப்பு!! THE END

ஒட்டு போட்டு உங்களை அங்க உக்கார வச்ச எல்லாருக்கும் சங்கு...!!!நல்ல சீரியல் காட்ரீங்கப்பா...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
48. முழுக்க நின்றப்பின் முக்காடு எதற்கு...........? அட்மின் அவர்களே......!!!
posted by s.s.md meerasahib. (riyadh) [03 July 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19803

அன்பு காயல் நல்லுள்ளம்களே.......

நகர்மன்றத்தை.......... நகராத மன்றமாக்கியது யார்.......? இங்கு பலரும் முனாபிக்குக்கு துணை சென்று வாயிக்கு வந்தவாரல்லாம் கேள்விக்கணைகளை தொடுக்கின்றனர் நம் A.லுக்குமான் காக்கா..... அவர்களிடம். ஒற்றுமையை குலைத்ததும், ஊழல் வாதிகளை காப்பாற்ற தன்னிலை விளக்கம் கொடுத்து திசை திருப்பியதும், நகரமன்ற வெளிநடப்பு போன்ற எல்லாத்துக்கும் காரணம் இவர்களையே........... குற்றம் சாட்டுகின்றனர்.

அன்பு நண்பர்களே........... ஒற்றுமை விரும்பிகளே........ சிந்தித்து பாருங்கள். 13 :6 :2012 அன்று ஒரு செய்தி வெளியான சில மணி நேரத்தில் அவசர கோலத்தில்........ மக்களை......... மாக்களாக்க இந்த இணையதளத்தில் போடப்பட்டதுதான் "வளைந்து கொடுக்கனும்னா இப்படித்தானோ?" என்ற ஆடியோ கிளிப். ஆனால்..... கிளிப்பை போட்ட நீதிமான்கள் கிளிப்பில் உள்ள பெரிச்சாளிகளை இனம் காட்ட முடியாமல் தன் வாய்க்கு கிளிப்பை மாட்டிக்கொண்டனர். இது யாரின் குறைபாடு.......? நகர்மன்ற தலைவியின் நிர்வாக திறமையின்மையை மறைக்க இந்த இனைய தளத்தால் போடப்பட்ட சூழ்ச்சி. ஒற்றுமையை சிதைக்க பிண்ணப்பட்ட மாய வலை. இதில் பழியானது பாவம்.......... லுக்குமான் காக்கா அவர்கள்.

" அரசன் அன்றுகொல்வான்...... தெய்வம் நின்று கொல்லும்."

குறிப்பு:- அட்மின் அவர்களே.... "ஹஸ்பியல்லாஹு நிஃமல் வக்கீல்."


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
49. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by Zainul Abdeen (Dubai) [03 July 2012]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19805

இறைவன் மணிதனை மிருகங்களிடம் இருந்து வேற்படுத்தி காட்ட பேச்சாற்றலையும், எழுத்தாற்றலையும் கொடுத்தான் ஆனால் நம்மில் சிலர் அவ்வற்றளினால் மிருகத்தைவிட கீழ் தனமன செயல்கள் செய்து கொண்டு இருக்கிறோம்.

ஆடியோ ரிலீசில் துவங்கி ஜூன் மாத வெளிநடப்பு வரை எத்தனை கருத்துக்கள் பதியப்பட்டன ... எத்தனை கருத்துக்கள் 1 ம் வார்டு லுக்மான் காக்காவை வசை பாடின , எத்தனை ஐக்கிய பேரவையை தாக்கின. கருத்துக்கள் வேண்டாமே என்று கூறியே பல கருத்து பதிப்புகள்.

இன்னும் எத்தனையோ எத்தனை தேவை இல்லா பழிச்சொற்கள்

இது அனைத்திற்கும் முக்கிய காரணம் வெளிப்படையான நிர்வாகம் வேண்டும், மாற்றம் வேண்டும் என்று கூறியதின் விளைவே .... .

ஆக நமக்கிடையே சொற்போர் நடக்க இந்த இணைய தளமும் முக்கிய பங்கு வகிக்கின்றது என்று சொன்னால் மிகையாகது.

ஆகவே இன்ஷா அல்லாஹ் வர இருக்கிற ரமளானில் எந்த விசயத்திலும் விவாதம் செய்யாமல் அதை ஒரு அற்புத மாதமாக ஆக்கி, இறைவனின் சாபத்திலிருந்து தப்பிப்போம்.

தர்க்கத்திற்கு துணைபோகும் அத்துணை சாதனங்களையும், இயக்கங்களை விட்டு துரமாகுவோம் இறைவனுக்கும் நெருக்கமாக ஆகுவோம்.

நமக்கு தெரிந்த செய்திகளை இறைபொருத்ததிற்காக செய்வோம். தெரியாத செய்திகளை தெரிந்து கொள்ள முயற்ச்சிப்போம். ஆனால், வீண் தர்க்கத்திலிருந்து விடுபடுவோம். ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
50. Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by cader (JAIPUR) [03 July 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 19811

s.s.md meerasahib.காக்கா முனாபிக் யார் என்று அல்லாஹு ஒருவன் அறிவான் நாம் அதை சொல்ல நாமக்கு தகுதி இல்லை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
51. வளமான காயலுக்கு - மாற்றம் ஒன்றே மாறாதது !!
posted by Salai.Mohamed Mohideen (USA) [03 July 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 19814

பினாமி கட்டுரைகளில் தொடங்கி ஊழல் அன்பர்களின் ஆடியோ தன்னிலை அறிக்கைகள் மற்றும் வெளிநடப்பு என்று கடந்த மூன்று வாரங்களாக நமதூர் இணைய தளங்கள் அல்லோல பட்டு விட்டது. பல கருத்துக்களை படித்ததில் இதுவரை நாம் கேள்வி கேட்காத சமுதாயமாகவே வாழ்ந்திருக்கிறோம் என்பதனை உணர முடிந்தது மற்றுமன்றி அதற்க்காக வாய்ப்பை ஏற்படுத்தி தந்த இணைய தளத்திட்க்கு தான் நாம் நன்றி சொல்ல வேண்டும். கேள்வி கேட்க தெரியாத (விழிப்புணர்வற்ற) எந்த ஒரு சமுதாயமும் முன்னேறியதாக வரலாறு இல்லை.

நமது மக்கள் இன்று ஓரளவுக்கு விழிப்புணர்வு பெற்று விட்டார்கள் என்பதனை 'உள்ளங்கை நெல்லிக்கனி போல' நம்மால் அறிய முடிகின்றது. நமதூர் இன்னும் (எண்ணிக்கையில்) அதிகம் படித்த அறிவார்ந்த சிந்திக்கும் சமுதாயமாக மாறும்போது இதன் வீரியத்தன்மை (மாற்றங்கள்) இன்னும் அதிகமாகும். அதற்க்கான ஆரம்பமே இந்த விழிப்புணர்வு போராட்டங்கள். இதனை நகராட்சி விசயத்தில் மட்டுமல்லாது மற்ற (உதாரணத்துக்கு CFFC /DCW, ஹெல்த் / கான்சர் சர்வே (விசயங்களிலும் காணலாம்.

ஒரே ஒரு ஆதங்கம், இந்த இணைய தளங்களின் வாயிலாக இன்று ஏற்பட்ட இந்த விழிப்புணர்வு நமது முன்னாள் நகரமன்ற தலைவர் அவர்களின் தலைமை காலத்திலேயே ஏற்பட்டிருந்தால்... முன்னாள் தலைவரின் கரங்களையும் மக்களின் சக்தியால் வலுப்படுத்தி ஊழலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, தன் பதவி காலத்தில் அவர் அடைந்த மன உளைச்சளையும் தன் சொந்த பணத்தை ஊழல் பேர்வழிகளுக்கு வீண் விரயம் செய்ததையும் தவிர்த்திருக்கலாம். நமதூரும் முன்னேற்ற பாதையில் சென்றிருக்கும். ஊழல் பேர்வழிகளுக்கு (எண்ணம் கொண்டவர்களுக்கு) அன்றே சாவு மணி அடிக்க பட்டிருக்கும்.

இன்று நகர்மன்ற பதவி என்றால்... ஏதோ ‘பணம் காய்க்கும் மரம்’ என்ற மாயை ஒழிந்திருக்கும். நல்லவர்களும் வல்லவர்களும் அப்பதவிக்கு வந்து உண்மையாக உழைத்திருப்பார்கள். லஞ்ச எண்ணத்துடன் பணிக்கு வரும் அலுவலர்களும் மாறியிருப்பார்கள்.

இன்றைய இந்த இழிநிலைக்கு முதற் காரணம், இறைவன் மீது சத்தியமிட்டுவிட்டு லஞ்சத்துக்கும் அன்பளிப்புகளுக்கும் விலை போகும் கேவலமான/ பலகீனமான நிலையில் இன்றைய நம் சமுதாயத்தினர்கள் / மக்கள் பிரதி நிதிகள். ஒரு சாதாரண கவுன்சிலர் பதிவியிலேயே ‘ஈமான்’ பறிபோகும் அவல நிலையென்றால் மேற்கொண்டு அரசியல் உயர்வு பதவிகளை எண்ணி பார்க்க முடியவில்லை. இருப்பினும் நாம் நினைத்தால் மக்கள் சக்தி (ஒற்றுமை) என்ற பேரலையை கொண்டு ‘மாற்றத்தை சமுதாய முன்னேற்றத்தை’ கொண்டுவர முடியும். முயன்றால் முடியாதது ஒன்று மில்லை!!

இவைக்கான முதல் மாற்றமே ‘மக்களிடமிருந்து’ தான் வர வேண்டும். பேரவை பெரியவர்களே தேர்தல் முடிவுகளை மறந்து ஊர் நலன் நாடி நமது நகர்மன்றத்துடன் இணைந்து பணியாற்ற தொடங்கி விட்டார்கள். ஆனால் இன்று வரை, நாம் ஆதரித்தவர் / பேரவை வேட்பாளர் தேர்தலில் தோற்கடிக்க பட்டு விட்டாரே அல்லது பெரியவர்களை தன்னார்வ இயக்கங்கள் அவமானபடுத்தி விட்டார்களே என்ற எண்ணத்தில் / வருத்தத்தில்… ‘வெற்றி பெற்றவர்’ ஊருக்கு எது செய்தாலும் குறைகூறி (Fault finding machine) ஆக மாறி நிகழ்காலத்தை கசப்பாக்கியும் எதிர்காலத்தை இருட்டாக்கியும் வருகின்றோம்.

ஒரு சிலர் தலைவியின் செயல்பாட்டில் ‘திருப்தி’ அடைந்திருந்தாலும் பேரவை மேல் உள்ள அலாதி பிரியத்தால் மெகா- வை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் நகர்மன்றத்தின் செயல்பாடுகளை விமர்சித்து குளிர் காய நினைப்பதும் இன்னும் சிலர் வணக்க வழிபாடுகளில் இருக்க வேண்டிய மார்க்க கொள்கையை இதனோடு (நகராட்சி விசயத்தில்) போட்டு குழப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயலுகின்றோம்.

அதே நேரத்தில் தலைவியின் மீதுள்ள அலாதி நம்பிக்கையில் செயல்பாட்டு திருப்தியில்.. தலைவியின் சில நிர்வாக கவனக்குறைவுகள், கறைபடியாத உறுப்பினர்களுடன் ஏற்படும் புரிந்துணர்தலில் (misunderstanding) ஏற்படும் கோளாறுகளை களைய /சரி செய்ய முயற்சி செய்யணுமே தவிர அதனை ஊதி பெருக்குவதில், சம்பந்த பட்டவர்களை வெறுப்பேற்றுவதில், கருத்து ( சரியோ தவறோ) யுத்தம் புரிவதில் எவ்வித லாபமும் இல்லை.

மிச்ச மீதியிருக்கும் ஒன்றிரண்டு நல்ல உறுப்பினர்களை & மேற்கூறிய அதிருப்தியாளர்களை ஒன்றிணைத்து தங்கள் பக்கம் இழுத்து தங்களுக்கென ‘தனி இணையதள’ கூடாரத்தை (இணையதள பாப்புலாரிட்டி) அமைத்து நினைத்ததை சாதிப்பதட்க்கு கழுகு/ ஜால்ரா கூட்டங்கள் வழிகெடுத்து கொண்டிருக்கிறது.

இவர்கள் ஒரு காலத்தில் பேரவையை உசுப்பேற்றி அவர்களின் முதுகில் ஓசி சவாரி செய்தார்கள். இப்பொழுது உறுப்பினர்களையும் தலைவியையும் உசுப்பேற்றி பொது மக்களை திசை திருப்பி அது போன்ற சவாரிக்கு நம்மை பலிகடா ஆக்க பார்கின்றார்கள். அவர்களை பொறுத்த வரைக்கும் இது பொழுது போக்கு (Just for fun ).. ஆனால் நமக்கு?

கடந்த நகர்மன்ற உறுப்பினர்கள் (ஒரு சிலரை தவிர) செய்த அதே தவறை நீங்களும் (பெண்களும் இதற்க்கு விதி விலக்கல்ல?) செய்யாதீர்கள். உங்கள் வார்ட் மக்களுக்கு உண்மையாக உழையுங்கள். செல்வந்தர்கள் தரும் அன்பளிப்புகளை விட வல்ல இறைவன் உங்களுக்கு தரும் வெகுமதி… இம்மையிலும் மறுமையிலும் மிக சிறந்தது.

'லஞ்சமும் அன்பளிப்புகளும்' தான் உங்களின் பணத்தேவைகளை போக்குமென்றால் நீங்கள் வகிக்கும் பதவியை விட்டு விலகி அதற்க்கேன (ஆயிரத்தெட்டு?) வழிகளை பார்த்து கொள்ளுங்கள் அல்லது வார்ட் மக்களிடம் உங்கள் பணத் தேவையை கூறி உதவியை (இனாமாகவோ / கடனாகவோ) பெற்று கொள்ளுங்கள்.

அது யாரோ ஒரு செல்வந்தர்களிடம் உங்கள் சுய கவுரவத்தை அடகு வைத்து கும்பிடு போடுவதையும், நம்பி ஒட்டு போட்ட ஊர் மக்களுக்கு (& ரஹ்மானுக்கு செய்த சத்தியத்திட்க்கு) செய்யும் துரோகத்தையும் விட சாலச்சிறந்தது. காலம் ஒன்று கடந்து விட வில்லை. சிந்தியுங்கள் !!

இன்னும் இவைகளை காட்டு தீ போல ஊதி பெருக்க சிலர் முயல்வதட்க்குள் ‘ஈகோ’ மற்றும் கருத்து வேறுபாடுகளை களைந்து லஞ்சம் மற்றும் அன்பளிப்புகளை துறந்து நகர்மன்றத்தினர் ஒன்றிணைய வேண்டும். இதில் சமரசம் அடைவதே சாலச் சிறந்தது.

நன்மையை மட்டும் குறிக்கோளாக கொண்டு நமது விழிப்புணர்வு அமையுமானால், நமதூரை நிச்சயம் இறைவனின் துணை கொண்டு ஒரு முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல இயலும்.

நமதூர் வளம் பெற்றால் நாளை நம் சந்ததியினரும் தலை சிறந்து விளங்குவார்கள் என்பதனையும் மனதில் கொண்டு அதற்கான ஒரு கூட்டு முயற்சியை எடுப்போம் !! வல்ல ரஹ்மான் அதற்க்கு அருள் புரிவானாக !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
52. உங்களிடம் இருந்து விடை பெரும் உங்களின் S.S.MMS.
posted by s.s.md meerasahib. (riyadh) [03 July 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19817

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு நண்பர்களே........ zainul abdeen (dubai) சொன்னது போன்று புனித ரமளானின் நறுமணம் வீச ஆரம்பித்து இருக்கும் இந்த தருணத்தில் நம்மிடையே......... வாக்குவாதம்களை களைந்து, கருத்துப்போர்களை நிறுத்தி....... தர்க்கத்திற்கு துணைபோகும் அத்துணை சாதனங்களையும், இயக்கங்களை விட்டு துரமாகுவோம் என்ற உறுதி மொழியை எடுத்து அல்லாஹுக்கும், ரசூலுக்கும் பிடித்தமான காரியத்தில் ஈடுபட்டு இந்த ரமழானில் இறைவனுக்கு நெருக்கமாக ஆகுவோம். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
53. நேரம் போக வில்லையா....சும்மா கருத்தெழுதுங்க...(வேடிக்கையும், வேதனையுமாக உள்ளது)
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [04 July 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19818

அன்புக்குரிய ஓரு நண்பர் , புனித ரமளான் வருவதால் நமக்குள் கருத்து பேதங்களைக் களைந்து ஒற்றுமையுடன் இருக்க விவாதங்களைத் தவிர்த்து சற்று விலகி இருப்போம். (நல்ல விஷயம் தான்) எனவே, “உங்களிடம் இருந்து விடை பெரும் உங்களின் S.S.MMS”. எனக் கூறி விடை பெற்றிருக்கின்றார்.

நகர்மன்றம், தலைவி, மற்றும் இணையதள அட்மின் இப்படி யாரையும் அவர் விட்டு வைக்க வில்லை. கருத்து நீண்டு போகும் என்பதால் நண்பர் எழுதிய கருத்துக்களின் தலைப்பை மட்டும் இங்கே தருகின்றேன். உள்ளடக்கத்தை ஊகித்துக் கொள்ளுங்கள்.

1.முழுக்க நின்றப்பின் முக்காடு எதற்கு...........? அட்மின் அவர்களே......!!!

2.காயல் பதியில் களம் அமைக்கும் உங்கள் கனவுகள் பலிக்காது.

3.குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால்....... போச்சு.

4.அறிவுக்கொலுந்துகள் + புத்தி ஜீவிகள் = சுத்திர ஜீவிகள்.(துன்புறுத்தும் உயிரினம்)

5.காகித பூக்கள்...........

6.இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியமே.....

7.நான் சொல்வதெல்லாம் உண்மை. 999.9 உத்தரவாதம்.

8.கேள்க்கிறவன் கேணயனா இருந்தால்...... கேள்விறகிலும் நெய்வடியுமாம்..!!!

9.காயல் நகர்மன்றம் பஞ்சாயத்தாய் மாறியது.!!!

10.பூவா..... தலையா....... விளையாடி பார்க்கும் நகரமன்ற தலைவர்.

இப்படி விதவிதமான தலைப்புகளில் சும்மா நேரப்போக்கிற்காக கருத்தெழுதி விட்டு கடைசியில் (ஊருக்கு) உபதேசத்தோடு குட்...பை சொல்லியிருக்கின்றார். ஏன் இந்த விளையாட்டு? சீண்டுறது அப்புறம் சினுங்குறது. கருத்து மேடை என்பது நேரப்போக்கிற்காக சடவு சங்கங்களில் தாயம் விளையாடுறது மாதிரி ஆயிடுச்சு! இப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்களோ...? நல்லாயிருங்கப்பா...! அல்லாஹ் போதுமானவன்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
54. சுயகெளரவத்தையோ , சுயதேவையையோ விரும்பியவர்களாக ...
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம்) [07 July 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19886

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நகராட்சிக்கு உள்ளே என்ன நடக்குது என்பது மக்களுக்கு தெரியாது அதனால்தான் மக்களுடைய பிரதிநிதியாக மக்களுக்கு சேவை செய்வதற்காக உங்களுக்கு ஓட்டுபோட்டு உங்களை நகராட்சிக்கு உள்ளே அனுப்பினார்கள் மக்கள். ஆனால் நீங்களோ எந்த ஒரு முறையான காரணமும் இல்லாமல் " வெளிநடப்பு " என்ற பெயரில் வெளியே வருகிறீர்கள்.

பொதுவாக அரசியல் கட்சிகள்தான் இந்த மாதிரியான வெளிநடப்புகளை செய்தும் , கோஷம் போட்டும் நகர் மன்றத்தை செயல்பட விடாமல் முடங்கச் செய்யும் என்பதாலேயே அரசியல் கட்சிகள் அல்லாத நிர்வாகத்தை நம் ஊர் மக்கள் விரும்பி அதன்படி ஓட்டளித்து தேர்ந்தெடுக்கிறோம்.

நம்ம ஊர் என்றல்ல எந்த ஊருக்கும் உள்ளாட்சி நிர்வாகம் என்பது அரசியல் கலக்காமல் இருந்தாலே திறமையாக செயல்பட்டு மக்களுக்கு சிறந்த சேவையை செய்ய முடியும் - இதை மக்களுக்கு சேவை செய்யணும் என்ற எண்ணம் உள்ளவர்கள் உணர்ந்தார்களானால் " வெளிநடப்பு " என்றல்ல கோஷ்டி பூசல்களும் உண்டாகாது - மன்ற உறுப்பினர்களிடையே மனக்கசப்பு இல்லாமல் - சகிப்புத் தன்மையும் , பொறுமையும் கையாளப்பட்டு - கருத்துக்கள் பரிமாறப்பட்டு நகர்மன்றம் சேவைமிக்க மன்றமாக செயல்படும்.

இதைத்தான் அனைத்துத் தரப்பு மக்களும் விரும்புகின்றனர் - ஆகவே தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தங்களுடைய தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் - மக்களின் சேவைக்கு முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றுங்கள்.

-----------------------------------------------

வெளிநடப்பு :

கூட்டத்தில் எத்தனையோ முக்கியமான விசயங்களை பற்றி பேசி கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும் என்று இருக்க -கூட்டமே தேவை இல்லை என்று ஒவ்வொருவராக " வெளிநடப்பு " என்று சொல்லி வெளியேறி இருப்பது நல்லவர்களுக்கு உகந்தது அல்ல.

வெளிநடப்புக்கு கூறும் காரணங்கள் பொருத்தமற்றது - சில காரணங்கள் ஜீரனிக்க முடியாதது - வேறு சில காரணங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியது என்றாலும் அவைகள் சகித்துக் கொள்ளக்கூடியதே - அவைகளுக்காக வெளிநடப்பு செய்ய வேண்டிய அவசியமில்லை.

நகராட்சியை அரசியல் கட்சிகள் ஆளாவிட்டாலும் கோஷ்டிகள் சேர்ந்து பணியை முடக்க செய்வது எந்த விதத்திலும் நியாயமில்லை.

--------------------------------------

கூட்ட " படி " / சம்பளம் :

இந்த மாதம் கூட்டத்திற்கு போய் கையெழுத்து போட்டு விட்டு , கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்ய வேண்டும் என்று முடிவு செய்துதான் கூட்டத்திற்கு வந்திருக்கிறீர்கள் , அப்படியிருக்க இந்த மாத கூட்டத்திற்கான " படி " யை வாங்கியிருக்க தேவை இல்லையே.

நீங்கள் கேட்காமல் அவர்களாகவே உங்களுடைய, இந்த மாத கூட்டத்திற்கான " படி " யை தந்தால்கூட , நீங்கள் அதை வாங்க மறுத்து , நாங்கள் வெளிநடப்பு செய்யப் போகிறோம் எங்களுக்கு இந்த மாத கூட்டத்திற்கான " படி " வேண்டாம் என்று வாங்க மறுத்து உங்கள் நேர்மையை !? நிரூபித்திருக்கலாம்.

காரணம் மாதம் ஒரு கூட்டம் அவசியம் நடைபெற வேண்டும் அந்த ஒரு கூட்டத்திற்கு மட்டும்தான் " படி " கொடுக்கப்படும் - அந்த கூட்டத்திற்கு நீங்கள் தொடராக 3 முறை வரவில்லை என்றால் உங்கள் பதவிக்கு பாதிப்பு ஏற்படும்.

மற்றபடி அந்த மாதத்தில் எத்தனை கூட்டங்கள் நடைபெற்றாலும் அதற்கு என்று " படி" இல்லை - அந்த "படி" இல்லாத கூட்டத்தில் நீங்கள் கலந்துகொள்ளவில்லை என்றாலும் உங்கள் பதவிக்கு பாதகமில்லை.

மாதாந்திர கூட்டத்திற்கு வந்ததாக கையெழுத்து போட்டு பதவியை தக்க வைத்ததோடு நிறுத்தியிருக்கலாம் - " படி "யை வாங்கி இருக்க தேவையில்லை.

--------------------------------------

இணையத் தளம் :

ஒவ்வொரு காரணமாக விளக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன் - இருந்தாலும் ஒருசிலதை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன்.

இணையத் தளத்தில் காழ்ப்புணர்ச்சியோடு ஒருதலைப்பட்சமாக தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதனால் " வெளிநடப்பு " செய்கிறேன் என்பது எந்த விதத்தில் பொருந்தும் - இணையத் தளம் நகராட்சியுடைய சொந்த இணையத் தளமா ? தலைவரோ அல்லது உறுப்பினர்களோ தட்டிக்கேட்க வில்லை அதனால் வெளிநடப்பு செய்கிறேன் என்பதற்கு ?.

இணையத் தளம் காழ்ப்புணர்ச்சியோடு , ஒருதலைப்பட்சமாக உங்களை பற்றிய செய்தியை வெளியிட்டிருந்தால் , குறிப்பிட்ட அந்த இணையத் தளத்தவர்களிடம் முறையிட்டு அதை நிவர்த்தி செய்து கொண்டிருக்கலாம்.

இணையத் தளம் உங்கள் மீது அவதூறாக செய்தியை வெளியிட்டிருந்தால் , உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்றிருந்தால் நீங்கள் குறிப்பிட்ட அந்த இணையத் தளத்தின் மீது நடவடிக்கை எடுக்கலாமே வீணாக நகர்மன்ற கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்யவேண்டியதில்லை.

நீங்கள் வெளிநடப்பு செய்ததினால் இனிமேல் அந்த இணயத் தளம் உங்களுக்கு சாதகமாக செய்திகளை வெளியிடுமா இல்லை ஒரு வேளை உங்களிடம் ஏதும் தவறு இருந்தால் அதை வெளியிடாமல் மறைத்துவிடுமா ? என்ன ?.

---------------------------------------------------

சாலை போடப்படவில்லை :

" தனது வார்டில் புதிதாக போட தீர்மானமியற்றப்பட்ட சாலை இதுவரை போடப்படவில்லை "என்பதை காரணம் காட்டி வெளிநடப்பு.

இது நகைப்புக்குரியதாக இல்லையா ? சாலை போடுகிறது என்பது மளிகை கடையில் போய் வாங்கி வருகிற மளிகை சாமான்களா? பணத்தைக் கொடுத்து உடனே வாங்கி வருவதற்கு.

இதெல்லாம் வெளிநடப்பிற்கு ஒரு காரணமா ?

ஏதோ சில, பல வார்டுகளுக்கு சாலை போட்டுவிட்டு உங்கள் வார்டை புறக்கணித்தால் நீங்கள் " வெளிநடப்பு " செய்வதற்கு அது ஒரு காரணமாக அமையும்.

-----------------------------------------------------

வீடியோ ஒளிப்பதிவு :

நகர்மன்றக் கூட்டத்தை வீடியோ ஒளிப்பதிவு செய்வது கலாச்சாரத்திற்கு மாற்றமானது என்று சொல்லி 2 சகோதரிகள் வெளிநடப்பு செய்திருக்கிறீர்கள் - வீடியோ ஒளிப்பதிவு செய்வது கலாச்சாரத்திற்கு மாற்றமானது என்று நீங்கள் சொல்வது இந்த ஒரு கூட்டத்திற்கு மட்டும்தானா ? இல்லை எல்லாக் கூட்டத்திற்கும் பொருந்துமா ?.

காரணம் 30.12.2011 அன்று நடந்த கூட்டத்தில் (கூட்டம் எண் 4 பொருள் எண் 24 தீர்மானம் 141 ) கூட்ட நடப்புகளை வீடியோ பதிவு செய்து அந்த குறுந்தகடுகளை உள்ளூர் தொலைக் காட்சிகளுக்கும் , இணையத் தளங்களுக்கும் , இதர ஊடகங்களுக்கும் தர தீர்மானம் நிறை வேற்றபட்டப்போது அதை ஏன் நீங்கள் எதிர்க்கவில்லை.

அந்த தீர்மானம் கொண்டு வரும்போது வீடியோ எடுப்பது என்பது கலாச்சாரத்திற்கு மாற்றமாக தெரியவில்லையா ? இல்லை நீங்கள் இருவரும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லையா ?

சகோதரிகளே! உங்களை மதிக்கிறேன் தயவு செய்து அடுத்தவர்களுடைய சொல்லை கேட்டு, அடுத்தவர்களுடைய தூண்டுகோலினால் அருத்தமற்ற காரணங்களை கூறி " வெளிநடப்பு செய்து " உங்களுடைய பெயர்களை கெடுத்துக் கொள்ளாதீர்கள் - உங்களுடைய அறிவை பயன்படுத்தி அல்லாஹ்வை முன்னிறுத்தி எந்த ஒரு காரியத்தையும் செயல்படுத்துங்கள் - வாழ்வில் வெற்றி பெறுவீர்கள்.

-----------------------------------------------------

தனியறை ஒதுக்கீடு :

நகராட்சியில் ஆணையர் அவர்களுக்கு தற்சமயம் தனி அறை ஒதுக்கபடாததால் உடனடியாக தனியறை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று துணைத் தலைவர் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் - பாராட்டுகிறேன்.

அவசியம் தனியறை கொடுக்கப்படவேண்டும் அதில் மாற்றுக்கருத்தில்லை - அதே நேரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி தலைவர் அவர்கள் தனியறை இல்லாமல் முதல் ஐந்து மாதங்களாக அல்லல்பட்டு கொண்டிருந்தாரே அப்போது ஏன் அதைப்பற்றி யாரும் வாய் திறக்கவில்லை துணைத் தலைவர் உட்பட ?. - உறுப்பினர்களே சிந்தியுங்கள் !!!.

-----------------------------------------------------

வட்டாட்சியர் பதவிக்கு சமமானது :

ஒரு சகோதரி அவர்கள், நகராட்சி ஆணையர் அவர்களுக்கு தனி அலுவலகமில்லை என்றும் அது ஆணையருக்கும் அவரை சந்திக்க வரும் பலருக்கும் அசெளகரியமாக இருப்பதாகவும் மிகவும் நாசூக்காக விளக்கமாக எழுதி இருப்பதோடு நகராட்சி ஆணையர் அவர்களின் பதவி வட்டாட்சியர் அவர்களின் பதவிக்கு ஈடானதாகும் என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

நகராட்சி ஆணையர் அவர்களின் பதவி வட்டாட்சியர் பதவிக்கு சமமானது என்பது சரிதான் - இருந்தபோதிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ஒரு நகராட்சியின் தலைவரும் நகராட்சியின் ஆணையருக்கு கீழ்படிந்தவர் இல்லை என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

நகராட்சியின் தலைவர் மக்களின் பிரதிநிதி - நகராட்சியின் ஆணையர் அரசாங்கத்தின் பிரதிநிதி என்பதை மறந்திட வேண்டாம்.

ஆணையருக்கு தனி அலுவலகம் இல்லாததால் அசெளகரியமாக இருக்கிறது என்று கடிதம் எழுதும் சகோதரி - தலைவர் ஐந்து மாதமாக அலுவலகம் இல்லாமல் இருந்தாரே அதற்காக எதுவும் வேண்டுகோள் விடுத்தீர்களா ?.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் , தனக்கு என்று அலுவலகமில்லாமல் இருந்தபோது மக்களையும் மற்றவர்களையும் சந்திக்கும்போது அது அவருக்கும் அவரை சந்திக்க வரும் அனைவருக்கும் அசெளகரியமாகத்தானே இருந்திருக்கும்?.

ஆகவே சகோதரி மற்றவர்கள் சொல்வதை கேட்டு நடவாமல் இருந்தால், உங்கள் மதிப்பு மக்களிடையே மதிப்போடு இருக்கும்.

------------------------------------------------------

உலா வரும் எந்த செய்தியும் உண்மையல்ல :

முன்னால் நகராட்சி ஆணையரை வலுக்கட்டாயமாக அலுவலகத்தை விட்டு விரட்டி விட்டு அவருடைய அலுவலகத்தை நகராட்சி தலைவர் எடுத்துக் கொண்டார் என்ற ஒரு செய்தி பொதுவாகவே மன்ற உறுப்பினர்கள் சிலரிடமும், வெளியே உள்ள சில விவரமறியா பொது மக்களிடமும் நிலவுகிறது - இது தவறான செய்தி.

தேர்தல் முடிந்து புதிய தலைவர் பதவி ஏற்றவுடன் அவருக்கு தனி அலுவலகம் அமைத்துக் கொடுக்கவேண்டியது அன்று இருந்த (தற்காலிக) ஆணையரின் கடமை அதை செய்ய அவர் தவறினார் அல்லது அவர் சிலரால் தடுக்கப்பட்டார்.

தலைவர் தனது உரிமையை கேட்டுப்பெறவோ அதிகாரத்தை பயன்படுத்தி பெறவோ விரும்பவில்லை அல்லது கூச்சப்பட்டார் இதுதான் நடந்த சம்பவம்.

அலுவலகம் கொடுக்கப்படாமல் நகராட்சி தலைவர் அல்லல்படுகிறார் பலமுறைக் கேட்டும் கொடுக்கப்படவில்லை என்ற தகவல் பொதுநல ஆர்வலர்களால் மேலிடத்திற்கு தெரியவந்தபோது அன்றைய தற்காலிக ஆணையருக்கு மேலிடம் சட்டத்தை சுட்டிக்காட்டி அறிவுறுத்தியது - அந்த தற்காலிக ஆணையரும் மறு பேச்சின்றி தனது அறையை உடனே தலைவருக்கு கொடுத்துவிட்டு அவர் வேறு இடத்திற்கு சென்றார்.

அந்த தற்காலிக ஆணையர் அவருக்கென்று தனி அலுவலகம் ஏற்பாடு செய்வதற்கு முன்பே மாற்றலாகி சென்றதால் புதியதாக வந்த இன்றைய ஆணையர் அலுவலகம் இல்லாமல் அசெளகரியப்பட வேண்டியதாகிவிட்டது. இதுதான் சரியான தகவலே தவிர மற்றபடி உலா வரும் எந்த செய்தியும் உண்மையல்ல.

---------------------------------------------------

மாற்றி அமைத்துக் கொண்டால் :

ஆணையருக்கு தனி அலுவலகம் அவசியம் கொடுக்கப்பட வேண்டும் அதில் மாற்றுக்கருத்தில்லை. புதிதாக கட்டிடம் கட்டியபின்தான் என்றில்லை இப்போது இருக்கக் கூடிய அலுவலகங்களின் அமைப்புகளை மாற்றி அமைத்துக் கொண்டால் அவசியப்பட்ட அலுவலகங்கள் கிடைக்கும்.

புதிதாக கட்டிடங்கள் கட்டியபின் கூடுதலான வசதிகளுடன் பல அலுவலகங்களை தேவைக்கு எடுத்துக்கொள்ளலாம். முதலில் தேவை நகராட்சி அலுவலர்களுக்கும் , மக்கள் பிரதிநிதிகளுக்கும் பரஸ்பரம் புரிந்துணர்வு. அந்த புரிந்துணர்வு சீரானால் நிர்வாகம் இடையூறு இல்லாமல் நடைபெறும்.

நீங்கள் ஒருவரை ஒருவர் நேர்மையான விசயங்களில் புரிந்து கொண்டால் நடப்பவை எல்லாம் நல்லவையாகவே நடக்கும்.

-----------------------------------------------------

ஊடகங்கள் தலையீடு :

ஊருக்கும் , மக்களுக்கும் நல்லதை செய்யவேண்டும் என்று எல்லோரும் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டால் இந்த மாதிரியான வெளிநடப்புகள் தேவையில்லை.

நல்லதை செய்ய வேண்டும் என்று விரும்பும் சிலரும் சில நேரம் மதியை இழந்து விடுகிறார்கள் என்பதே வருத்தப்படக்கூடியதாக இருக்கிறது.

செய்தியாளர்கள் கூட்டத்திற்கு வந்து செய்திகளை சேகரித்து அனுப்புவதால்தான் இன்டர்நெட் மூலமும், செய்திதாள்கள் மூலமும் நகரமன்ற செய்திகளை மக்கள் அறிய முடிகிறது - செய்திகள் வெளியே போகும் என்பதை உணர்வதாலயே உறுப்பினர்கள் அடக்கத்துடன் உரையாட முடிகிறது - செய்தியாளர்கள் கூட்டத்திற்கு வரவில்லையெனில் அந்த கூட்டம் எப்படி இருக்கும் என்பதை உறுப்பினர்களே சிந்தியுங்கள்.

ஊடகங்கள் தலையீடு இருப்பதாலேயே நகராட்சியின் செயல்பாடுகள் அதன் குறைபாடுகள் மற்றும் ஊழல்கள் வெளியே தெரிகிறது.

அதனால் இன்டர்நெட் மற்றும் செய்தியாளர்கள் அவசியம் நகர்மன்றத்தை எப்போதும் சுற்றியே வருவது நல்லது அது குறிப்பிட்ட இன்டெர்நெட் என்றோ செய்தியாளர்கள் என்றோ இல்லை - யாரும் எவரும் வலம் வரலாம். ஆனால் செய்திகளை முறையாக மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

செய்தியாளர்கள் நேர்மையாகவும், உண்மையாகவும் செயல்படவேண்டும் ஒருதலைபட்சமாக இருப்பது அவர்களின் செய்திக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் - மக்களுக்கு உண்மையை விளக்க முடியாது போய்விடும்.

ஆகவே நேர்மையானவர்கள் செய்தியாளர்கள் வருவதை எதிர்க்கக்கூடாது அவர்கள் மன்ற உருப்பினரானாலும் சரி பொது மக்களாக இருந்தாலும் சரியே.

--------------------------------------------------------

பதவிகளை விட்டு விலகி செல்லுங்கள் :

மேலே சொல்லப்பட்ட வாசகங்களை படித்துப் பார்க்கும்போது நகராட்சி தலைவருக்கு சாதகமாக எழுதி இருப்பது போல் தெரியும்.

என்னை பொறுத்தவரை யாருக்கும் சாதமாக எழுதவேண்டும் , பேசவேண்டும் என்ற எண்ணம் இல்லை பொது நலனைக் கருத்தில் கொண்டே எழுதி இருக்கிறேன்.

மற்றபடி தலைவர் எனக்கு சொந்தக்காரருமில்லை உறுப்பினர்கள் வேண்டப்படாதவர்களுமில்லை - இன்னும் சொல்லப்போனால் உறுப்பினர்களிலே என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் சிலரும் - எனக்கு வேண்டியவர்கள் சிலரும் இருக்கிறார்கள் என்பதே உண்மையாகும். ஆகவே எப்போதும் என்னுடைய கருத்தக்களை நடுநிலையாகவே படித்துப் பார்த்து சிந்தியுங்கள்.

தலைவர் உட்பட உறுப்பினர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கருத்துவேறுபாடுகளை மறந்து, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்தால் மட்டுமே நகராட்சியை நன்றாக நடத்த முடியும்.

அதல்லாமல் சுயகெளரவத்தையோ , சுயதேவையையோ விரும்பியவர்களாக செயல்பட்டால் நிச்சயமாக உங்களால் நகராட்சி நிர்வாகத்தை செயல்படுத்த முடியாது.

அதுமட்டுமல்ல நேர்மையாக செயல்பட விரும்பும் நகராட்சி அலுவலர்களும் செயல்பட முடியாமல் போவார்கள் - மேலும் அவர்களை வழிக்கெடுப்பதற்கென்றே மக்களிலிருந்து ஒரு கூட்டம் அவர்களை சுற்றிக் கொண்டிருக்கிறது.

நீங்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் அதிகாரிகளும், அலுவலர்களும் முறையாக செயல்படுவார்கள் அவர்கள் முறை தவறி நடந்தாலும் நீங்கள் அவர்களை தட்டிக் கேட்கமுடியும் அதன்மூலம் அவர்கள் நேர்மையாக நடக்கமுடியும்.

ஆகையால் தயவு செய்து மக்களுக்காக உண்மையாக, நேர்மையாக சேவை செய்ய விரும்புபவர்கள் உங்கள் பதவிகளிலே தொடருங்கள் - அதற்கு பிரியமில்லாதவர்கள் யாருடைய சொல்லுக்கும் அடிபணியாமல் நீங்களாகவே உங்கள் சுய புத்தியை பயன்ப்படுத்தி உங்கள் பதவிகளை விட்டு விலகி செல்லுங்கள்.

அப்படி செய்தீர்களானால் இறைவனின் அருள் உங்களுக்கு கிடைக்கும்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved