Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:59:54 AM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9557
#KOTW9557
Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 5, 2012
கூலக்கடை பஜார் மழைநீர் வடிகால் பிரச்சினை! நகர்மன்றத் தலைவர், அதிகாரிகள் நேரில் ஆய்வு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3126 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கூலக்கடை பஜாரில் - மழைநீர்த் தேக்கம் வழிந்தோடுவதற்காக, பேருந்து நிலையம் முதல் பெரிய நெசவுத் தெரு வரை கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகால், சரியாகப் பராமரிக்கப்படாததால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும், தம் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் அப்பகுதியில் கடை வைத்திருப்போர் - நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

அவ்வப்போது மழை நீர் வடிகாலில் தேங்கும் குப்பைகளை அகற்றும் நகராட்சியின் துப்புரவுப் பணியாளர்கள் - அப்படியே வடிகாலின் மேற்பரப்பில் அவற்றைப் போட்டுவிட்டுச் சென்றுவிடுவதாகவும், விரைவில் அவற்றை அப்புறப்படுத்துவதாகத் தெரிவித்துச் செல்லும் அவர்கள் அதன்பிறகு அப்பக்கமே வருவதில்லை என்றும் தெரிவித்துள்ள அவர்கள், குப்பைகள் வடிகாலுக்குள் இருக்கும் வரையிலாவது அதன் நாற்றம் தம்மை அவ்வளவாகப் பாதிப்பதில்லை என்றும், துப்புரவுப் பணியாளர்கள் அவற்றைத் தோண்டியெடுத்த பின்னர் - அவற்றை அகற்றாமல் அவ்விடத்திலேயே விட்டுச் செல்வதால் ஏற்படும் நாற்றம் காரணமாக அப்பகுதியில் வணிகம் செய்யவே இயலாத சூழல் ஏற்பட்டு்ள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், மணல் - கற்களை நிரப்பி வடிகால் ஆங்காங்கே அடைக்கப்பட்டுள்ளது. குறைகள் சரிசெய்யப்படாத காரணத்தால் அப்பகுதியிலுள்ள கடை உரிமையாளர்கள் சிலர் தத்தம் கடைகளுக்கு முன்புள்ள வடிகாலுக்குள் அவ்வாறு மணல் - கற்களை நிரப்பி அடைத்துவிட்டதாகவும், நகராட்சியின் துப்புரவுப் பணியாளர்கள் அவற்றை அகற்ற முனைந்தபோது எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.











இந்நிலையில், கடந்த 05.10.2012 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்ற அவசரக் கூட்டத்தில், பெரும்பாலும் அழிந்துபோன இந்த மழைநீர் வடிகாலை மீண்டும் புதுப்பித்துக் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, 30.10.2012 செவ்வாய்க்கிழமையன்று காலை 10.00 மணியளவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகராட்சி ஆணையர் அஷோக் குமார். சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், அப்பகுதியை உள்ளடக்கிய 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், துப்புரவுப்பணி மேற்பார்வையாளர் லக்ஷ்மி உள்ளிட்டோர் கூலக்கடை பஜாருக்கு வந்து, ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகாலைப் பார்வையிட்டு, அப்பகுதியில் கடை வைத்திருப்போரிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.



பின்னர், அவர்களிடம் பேசிய நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், அப்பகுதியில் மழைநீர் வடிகால் புதிதாகக் கட்டப்படவுள்ளதாகவும், அதுவரை - தற்போதுள்ள வடிகாலில் பராமரிப்புப் பணிகளுக்காக வரும் நகராட்சியின் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.



தோண்டும் குப்பைகளையும் - சாக்கடைக் கழிவுகளையும் உடனுக்குடன் அப்புறப்படுத்தினால், அவர்களுக்கு ஒத்துழைப்பதில் தமக்கு எந்த ஆட்சேபனையுமில்லை என்று அப்போது அவர்கள் தெரிவித்தனர். அவ்வாறு மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பளிப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், பொதுநல ஆர்வலர்களும் தெரிவித்தனர்.





குறிப்பிடப்படும் குறைகள் எதுவுமின்றி வடிகாலை முறையாகப் பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும் என அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.




Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Cnash (Makkah ) [05 November 2012]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 23494

ஏன் பரவாது டெங்கு காய்ச்சல் இப்படி மழைநீர் தேங்கி சாக்கடையானால்!!! மழை தண்ணீர்ரை வடிகால் செய்யவே வழி இல்லை இந்த லட்சணத்தில் பாதாள சாக்கடை திட்டம் வேறே!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...ஆகாத மனைவி கால் பட்டால் குற்றம் கை பட்டால் குற்றம்
posted by mackie noohuthambi (kayalpatnam) [05 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23496

எடுத்ததற்கெல்லாம் நகர்மன்ற செயல்பாடுகளை குறை சொல்வது மக்கள் வழக்கமாக்கி கொண்டார்கள் போல் தெரிகிறது.

ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு உறுப்பினரை தேர்ந்து எடுத்து அனுப்பியுள்ளோம். அவரவர் வார்டில் உள்ள குறைகளை அவர்களிடம் போய் சொல்ல தோதுவாக அவர்கள் ஒரு நாளை ஏற்படுத்தி,(மனு நீதி நாள் என்பதுபோல்) அந்த நாளில் அவர்களிடம் குறைகளை சொல்ல, அவர்கள் நேரில் வந்து பார்வை இட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சொல்லி அதை நிவர்த்தி செய்ய வேண்டும்.

வார்டு உறுப்பினர்களும் தினசரி ஒரு விசிட் அவர்கள் தொகுதியை வலம் வந்து பார்க்க வேண்டும். இப்படி ஒரு அணுகுமுறை இருந்தால் நகர்மன்றதையோ தலைவியையோ குறை சொல்வது வெகுவாக குறையும். நகரமன்ற அதிகாரிகளும் ஊழியர்களும் ALERTட்டாக இருப்பார்கள். அதை விட்டு விட்டு நகரமன்ற உறுப்பினர்களை நமக்கு எதிரிகள் போல் நினைத்து அவர்களை சாடுவதும் நகரமன்ற தலைவியை சாடுவதும் ஒரு தவறான முன்னுதாரணமாகத்தான் இருக்கும்.... எதிர் விளைவுகள்தான் ஏற்படும்.

ஊர் முன்னேற்றம் என்பது ஒருவழி பாதை அல்ல, அது இருவழி பாதை. பொதுமக்களும் ஒத்துழைக்கவேண்டும். நகர்மன்றமும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.. சிந்திப்போமாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஊர் முன்னேற்றம் என்பது ஒருவழி பாதை அல்ல...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [05 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23505

சகோதரர் மக்கி நூஹு தம்பி அவர்களின் கருத்தே எமது கருத்தும்...

நகரமன்ற உறுப்பினர்களை நமக்கு எதிரிகள் போல் நினைத்து அவர்களை சாடுவதும் நகரமன்ற தலைவியை சாடுவதும் ஒரு தவறான முன்னுதாரணமாகத்தான் இருக்கும்.... எதிர்விளைவுகள்தான் ஏற்படும். ஊர் முன்னேற்றம் என்பது ஒருவழி பாதை அல்ல...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [05 November 2012]
IP: 37.*.*.* | Comment Reference Number: 23515

அஸ்ஸலாமு அலைக்கும்

பொது மக்களாகிய நாமும் ஒரே நகர் மன்றதையோ ..தலைவி அவர்களையோ & உறுப்பினர்களையோ குறை சொல்வதை முதலில் நிறுத்தவேணும் ...பொது மக்களாகிய நாமும் நகர் மன்றத்தோடு ( தலைவி / உறுப்பினர்கள் / நிர்வாக அதிகாரிகளுடன் ) ஒன்றாக இணைந்து சென்றால் தான் நம் ஊர் முன்னேற்றம் அடையும் ....

நமக்கே இந்த படத்தை பார்த்து சங்கடமாகத்தான் இருக்கிறது. மழை நீர் வடிகாலில் உள்ளே கிடக்கும் குப்பைகளை அகற்றும் துப்புரவுப் தொழிலாளிகள் .அதை எடுத்து செல்லாமல் .... அப்படியே வடிகாலின் மேற்பரப்பில் குப்பைகளை போட்டுவிட்டுச் செல்வது தான் ....முறையற்ற செயல் .... இது போன்ற செயலால் தான் ...தேவைகற்ற பிரச்சனைகளும் / பொது மக்களுக்கு டெங்கு காச்சல் போன்ற நோய்களும் வருகிறது ....சின்ன ...சின்ன ...பிரச்சனைகளை எல்லாம் ....அந்த ..அந்த ..தொகுதி ..உறுப்பினர்கள் தான் சரி செய்ய வேனுமே தவிர..எல்லாவற்றுக்கும். நம் நகர் மன்ற தலைவி அவர்கள் தான் வந்து சரி செய்வது என்பதும் & தலைவி அவர்களை குறை சொல்வதும் கூட.... முறையற்ற செயல்...தான் .....

தங்கள் தொகுதிகளை தக்க வைத்து கொள்வது ...நம் உறுப்பினர்களின் கையில் தான் உள்ளது ....இவர்களும் அடிக்கடி தங்கள் தொகுதி பக்கம் சென்று மக்கள் பிரச்சனைகளை தீர்க்க வழிவகுக்கும் .....அல்லவா ....

நாமே போட்டோவில் பார்க்கிறோம் ....கடைகள் முன்னாடி இருந்த மழை நீர் வடிகாலையே ... காணோம் ...& கடைக்காரர்கள் மழை நீர் வடிகாலின் உள்ளே .. மணல் / கற்களை நிரப்பி வடிகாளை சுத்தமாக மூடி இருப்பதும்...சரியான செயல் அல்லவே ....

இப்பொழுது இப்பிரசனையில். நகர் மன்ற தலைவி அவர்களும் / அத் தொகுதி உறுப்பினர் அவர்களும் ஈடு பட்டு இருப்பதாலும். நிச்சயமாக இதற்க்கு & நம் நகர் மன்றத்தால் நல்லதோர் தீர்வு கிடைக்கும் .

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved