Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:47:14 PM
ஞாயிறு | 6 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1893, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்08:35
மறைவு18:06மறைவு20:29
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2005:44
உச்சி
12:05
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2718:5119:15
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5704
#KOTW5704
Increase Font Size Decrease Font Size
புதன், பிப்ரவரி 23, 2011
மாணவியர் உதவித்தொகை குறித்த ம.சே.கரங்கள் - தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளி விவகாரம்! மாவட்ட கல்வி அதிகாரி முன்னிலையில் இக்ராஃ துணையுடன் தீர்வு காணப்பட்டது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3665 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நடுவண் அரசின் சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் உதவித்தொகைகளைப் பெறுவதற்காக, மாணவியரால் சமர்ப்பிக்கப்படும் விண்ணங்களுடன் இணைக்கப்படும் சான்றிதழ்களிலுள்ள சிறு சிறு எழுத்துப் பிழைகளைக் காரணங்காட்டி, அவர்கள் உதவித்தொகையைப் பெற்றிட முட்டுக்கட்டையாக இருப்பதாக, காயல்பட்டினம் அரசு மகளிர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை மீது காயல்பட்டினம் மக்கள் சேவாக்கரங்கள் அமைப்பின் நிறுவனர் பா.மு.ஜலாலி குற்றம் சுமத்தியிருந்தார்.

மாணவியர் நன்மைக்காகவே தாம் செயல்பட்டு வருவதாகவும், முறைப்படி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டால் அது அம்மாணவியருக்கே நன்மையளிக்கும் என்றும் கருதியே தாம் அவ்வாறு செய்ததாக காயல்பட்டினம் தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை யு.திருமலை தெரிவித்திருந்தார்.

இதுகுறித்த செய்தி காயல்பட்டினம்.காம் வலைதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், உதவித்தொகை தேவையில்லை என ஏராளமான மாணவியரின் பெற்றோரிடமிருந்து கடிதம் பெறப்பட்டுள்ளதாகவும், அக்கடிதங்களை மாணவியரின் பெற்றோர் மனமொப்பி அளிக்கவில்லை எனவும், எனவே இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்துமாறும் கோரி மாவட்ட தலைமைக் கல்வியதிகாரி அலுவலகத்திற்கு மக்கள் சேவாக்கரங்கள் அமைப்பின் நிறுவனர் பா.மு.ஜலாலீ கடிதம் மூலம் கோரியிருந்தார்.

இதுகுறித்து நேரடி விசாரணை செய்வதற்காக, தூத்துக்குடி மாவட்ட கல்வியதிகாரி தமிழ்ச்செல்வி நேற்று மதியம் 02.30 மணிக்கு காயல்பட்டினம் தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளிக்கு வந்திருந்தார்.

பள்ளி தலைமையாசிரியை உள்ளிட்ட ஆசிரியர் குழுவினர், மக்கள் சேவாக்கரங்கள் நிறுவனர் பா.மு.ஜலாலீ ஆகியோர் இடம்பெற்றிருந்த அப்பேச்சுவார்த்தையில், மாவட்ட கல்வி அதிகாரி தமிழ்ச்செல்வியின் அழைப்பின் பேரில், உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோரும் கலந்துகொண்டனர். விவகாரம் குறித்து அப்போது மாவட்ட கல்வியதிகாரி இருதரப்பினரிடமும் கேட்டறிந்தார்.



பின்னர் கருத்து தெரிவித்த இக்ராஃ அங்கத்தினர், அரசு வழங்கும் சலுகைத் திட்டங்களை மாணவியருக்கு முழுமையாகக் கிடைக்கச் செய்ய வேண்டுமென்பதே மக்கள் சேவாக் கரங்கள் அமைப்பின் நோக்கமாக அறியப்படுவதாகவும்,

அதே நேரத்தில், மாணவியர் முறையான பதிவுகளுக்குப் பின் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அவர்களுக்கு வருங்காலத்தில் உதவிகரமாக அமையும் என்பதே தலைமையாசிரியரின் எண்ணமாக இருக்கும் என்றும் தெரிவித்துவிட்டு, பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட கடிதங்களை அங்கேயே கிழித்தெறிந்து பிரச்சினைக்கு தீர்வு காணுமாறும் தெரிவித்தனர்.

அத்துடன் உதவித்தொகை பெறுவதற்கான உண்மை விதிமுறைகள் குறித்து மாவட்ட கல்வியதிகாரியிடம் இக்ராஃ குழுவினர் வினவினர்.

அதற்கு விடையளித்த மாவட்ட கல்வியதிகாரி தமிழ்ச்செல்வி, அரசின் கல்வி உதவித்தொகையைப் பெற்றிட மாணவியர் பெயரில் தனி வங்கிக் கணக்கு அவசியமற்றது எனவும், மாணவியரின் தந்தை அல்லது தாய் பெயரிலிருக்கும் வங்கிக் கணக்கைக் காண்பித்து கூட பணத்தைப் பெற்றுக்கொள்ளவியலும் என்றும் தெரிவித்தார்.

பின்னர், பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட கடிதங்களை அங்கேயே கிழித்தெறிந்த அவர், உதவித்தொகை இதுவரை பெறாத மாணவியரும், உதவித்தொகை வேண்டாமென பெற்றோர் மூலம் கடிதம் பெறப்பட்டிருந்த மாணவியரும் வரும் 28ஆம் தேதிக்குள் உரிய ஆவனங்களை பள்ளி தலைமையாசிரியரிடம் சமர்ப்பித்து கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தார்.

இவ்வாறு விவகாரம் சுமூகமாக தீர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, இனி பழைய விவகாரங்களை யாரும் மனதிற்கொள்ளத் தேவையில்லை என இருதரப்பாருக்கும் அறிவுறுத்தப்பட்டது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Jazaakumullah, Thanks to You all.
posted by Shameemul Islam SKS (Chennai) [23 February 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 2801

This is a very remarkable step and with this effort many our children are going to be benefitted soon, insha Allah. Helping hands are more superior than Praying lips (and talking mouths).

I congratulate these brothers who silently working towards such a wonderful achievement. Let us not stop here, please spread this message in the form of notice during Jumu'a prayers to all our Kayalites and encourage them to utilise it.

Also we can set a stall or stand (set up with table and chair)near all schools on a particular date during school hours and help students and parents to fill in the application without mistake by using volunteers.

This way we can atleast do some service to the needy people and wipe out their tears.

This is simply my request. May Allah make it to happen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அன்பு மாணவிகளே!
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [23 February 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 2832

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இந்த விவகாரத்துக்கு இக்ராஃ துணையுடன் தீர்வு காணப்பட்டது நல்ல செயல். இது பகை உணர்வு இல்லாத, எவரையும் பாதிக்காத, நட்புடன் கூடிய தீர்வு என்பதால், மாவட்டக் கல்வி அதிகாரிக்கே புரிந்திருக்கும் இந்த ஊர் மக்களிடம் பகைமை இல்லை, பழித் தீர்க்கும் எண்ணமில்லை, ஆனால் உரிமைக்காகப் போராடுபவர்கள் என்று.
--------------------------------------------------
காயல்பட்டினம் மக்கள் சேவாக்கரங்கள் அமைப்பின் நிறுவனர் பா.மு.ஜலாலி அவர்கள் தக்க நேரத்தில் எடுத்த நடவடிக்கையின் காரணமாக இன்று நல்லதொரு முடிவு கிடைத்திருக்கிறது. இதனால் பலரும் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான வழிகள் பிறந்திருக்கிறது.

எனவே இனிமேல் இதுபோன்ற இடையூறுகள் மக்களுக்கு ஏற்படும்போது , பொது நலத் தொண்டுகளைத் தொடர்புக் கொண்டு நமது உரிமைகளைப் பெற வழி வகுங்கள். விழிப்புணர்வு அடையுங்கள்.
--------------------------------------------------
அன்பு மாணவிகளே!

மாவட்ட கல்வி அதிகாரி தமிழ்ச்செல்வி அவர்கள் உதவித்தொகை பெறுவதற்கான உண்மை விதிமுறைகள் குறித்து விளக்கம் அளித்ததுடன், உதவித்தொகை இதுவரை பெறாத மாணவியரும், உதவித்தொகை வேண்டாமென பெற்றோர் மூலம் கடிதம் பெறப்பட்டிருந்த மாணவியரும் வரும் 28ஆம் தேதிக்குள் உரிய ஆவனங்களை பள்ளி தலைமையாசிரியரிடம் சமர்ப்பித்து கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆகையால் மிகக் குறைந்த நாட்களே இருப்பதால் உதவித்தொகை தேவையுள்ள மாணவியர் உடனே ஆவணங்களை சமர்ப்பித்து உதவித்தொகையைப் பெற ஆயத்தமாகுங்கள்.

வஸ்ஸலாம்.

அன்புடன், " மஹ்மூது மாமா "


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Good job..
posted by Ismail (Dammam) [24 February 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2844

Again Good job done by IQRA and its active team.
keep it up..

بارك الله فيكم


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Good job
posted by M.S.K. SULTHAN (Deira, duabi) [24 February 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2852

Good Job.

I appreciate and congrats to Mr. P.M. Jalali involved in this job.

In future, Continue their social service successfully.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. மக்கள் சேவாக்கரங்கள் தன்னிலை விளக்கம்.
posted by Palappa Jalali (Kayalpatnam) [28 February 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 2918

மாணவியர் உதவித் தொகை குறித்த தீவுத் தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளி விவகாரம் மக்கள் சேவாக்கரங்கள் தன்னிலை விளக்கம். சேவை செய்தது ஒரு அமைப்பு. பெயர் வாங்குவது இன்னொரு அமைப்பா?

சிறுபான்மை மாணவியர்களுக்கான கல்வி உதவித் தொகை பெறுவதில் உள்ள விதிகளுக்கு அப்பாற்பட்டு, சில விபரங்கள் கூடுதலாக தீவுத் தெரு அரசு மகளிர் மேனிலைப் பள்ளி தலைமையாசிரியையால் வேண்டப்பட்டதன் விளைவாக எமது அமைப்பிற்கும் மேற்படி தலைமையாசிரியைக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டன. இதன் கோப்பு போட்டோக்களையும், செய்திகளையும் கடந்த 15-10-2010 அன்று www.kayalpatnam.com இணையதளத்தில் தாருத்திப்யான் நெட்வொர்க் மூலம் பதிவேற்றம் செய்ததை படித்தறிந்திருப்பீர்கள்.

சட்டவிதிகளுக்கு அப்பாற்பட்டு, மாணவியர்களுக்கு இடர்ப்பாடுகள் ஏற்பட்டதை தவிர்க்க வேண்டி சம்பந்தப்பட்ட கல்வி அமைச்சர், கல்வி அலுவலர்களிடம் முறையீடு செய்யப்பட்டது. அதன் பயனாக, விதிமுறைகளுக்கு உட்பட்டு தலைமையாசிரியை செயல்பட்டு, மாணவியர்களின் குறைகளை நிவர்த்தி செய்து தர முன்வந்தார் தலைமையாசிரியை. காலத்தின் கட்டாயம் கருதியும், மாவட்ட கல்வி அதிகாரியின் அறிவுறுத்தலின்படியும் தலைமையாசிரியை இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினார்.

ஆனால் சில மாணவியர்களிடம் மட்டும் 'எங்களுக்கு Scholarship தேவையில்லை' என்று கூறி பெற்றோர்களின் ஒப்புதல் இன்றி மாணவியர்களிடம் கடிதம் எழுதி வாங்கி வைத்திருந்தார் தலைமையாசிரியை. அந்த கடிதங்களை அகற்றி, திரும்ப மாணவியர்களிடம் ஒப்படைக்க வேண்டியும், அந்த மாணவியர்களிடம் மீண்டும் உதவித் தொகை விண்ணப்பம் பெற்று, உதவித் தொகை கிடைக்க ஏற்பாடு செய்து தர தலைமையாசிரியையிடம் நாங்கள் வேண்டினோம். அதற்கு தலைமையாசிரியை மறுத்து விட்டார். எனவே, வெகுண்டு எழுந்து, வழமை போல் மாவட்ட கல்வி அலுவலர் செ. தமிழ்ச்செல்வியிடம் முறையீடு செய்தோம்.

அண்மையில் 17-12-2011ல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற சிறுபான்மை கமிஷன் சிறப்பு கூட்டத்தில் அழைப்பாளராக கலந்து கொண்ட எமது அமைப்பின் நிறுவனராகிய நான், மேற்படி மாவட்ட கல்வி அலுவலரிடம் வேண்டிக் கொண்டபடி, அவர்கள் நமதூருக்கு வருகை தந்து இந்த லெட்டர்கள் கிழித்து போடும் விவகாரத்தை முடித்து தருவதாக வாக்களித்து, அதன் பயனாக கடந்த 22-02-2011ம் தேதி மதியம் 2:30 மணியளவில் தீவுத்தெரு பெண்கள் மேனிலைப்பள்ளிக்கு வருகை தந்து பிரச்சினையைத் தீர்த்து வைத்தார்.

இது முழுக்க முழுக்க, மக்கள் சேவாக் கரங்களின் சேவையே தவிர, வேறு எவர்களது துணையும் இல்லை என்பதை இதன் மூலம் தெரியப்படுத்துகின்றோம்.

சாட்சிக்காகவும், தகவல் தொடர்பை வெளிப்படுத்த மட்டுமே, சில கல்வி ஆர்வலர்கள் அழைக்கப்பட்டனர். மாவட்ட கல்வி அலுவலர் யாரையும் இது விஷயமாக சமரசம் செய்து வைக்க அழைக்கவும் இல்லை என்பதை தெரியப்படுத்துகிறோம்.

இதன் பின்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட விபரங்கள் மாவட்ட கல்வி அதிகாரி மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளதால் தகவல் அறியும் உரிமைச் சட்ட கடிதம் விலக்கிக் கொள்ளப்பட்டது என்பதை பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

இது போன்ற விஷயங்களில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

நன்றியுடன்.
பா.மு. ஜலாலி
நிறுவனர்
மக்கள் சேவாக்கரங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. மக்கள் சேவாக்கரங்கள் நிறுவனரின் தன்னிலை விளக்கத்திற்கு இக்ராஃ கல்விச் சங்கத்தின் மறுப்பு!
posted by A.Tharwesh Mohamed, Administrator, IQRA Educational Society (Kayalpatnam) [01 March 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 2959

இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களை மக்கள் சேவா கரங்கள் நிறுவனர் சகோ. பா.மு.ஜலாலி தெளிவாகப் புரிந்துகொள்ளவில்லை என தெரிகிறது.

காரணம், அவர் குறிப்பிட்டுள்ளதைப் போன்று, மாணவியர் கல்வி உதவித்தொகை குறித்த அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியையுடனான விவகாரத்தில், அவர் மேற்கொண்ட முயற்சிகளை இக்ராஃ மேற்கொண்டதாக இச்செய்தியின் எந்தப் பகுதியிலும் குறிப்பிடப்படவில்லை

மாறாக, அவர் செய்த முயற்சிகளையும், அவரது நோக்கங்களையும், மறுபுறம் தலைமையாசிரியை தரப்பில் கூறப்பட்ட நோக்கங்களையும் செய்தியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் கூற வரும் குற்றச்சாட்டு:-

தனக்குக் கிடைக்க வேண்டிய நற்பெயரை இக்ராஃ பறித்துவிட்டது என்பதே! ஆனால், இக்ராஃவுக்கு இதை வைத்துதான் பெயர் பெற வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. காரணம், இதையெல்லாம் தாண்டி - நகர மாணவ சமுதாயத்தின் கல்வி முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு பல முக்கியமான கல்விப் பணிகளை, மிகுந்த சிரமங்களுக்கிடையிலும் பெரிய அளவில் பல ஆண்டுகளாக இக்ராஃ செயல்படுத்தி வருவதை உள்ளூர் மக்களும், வெளியூர் - வெளிநாடுவாழ் மக்களும் நன்கறிவர்.

இக்ராஃவின் பல்வேறு கல்வி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி (CEO), மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் போன்ற அரசுத் துறைகளைச் சார்ந்த பலர் இக்ராஃவின் கல்விச் சேவைகளை வியந்து பாராட்டியதை நேரிலும், செய்திகள் வாயிலாகவும் மக்கள் நன்கறிவர்.

மேலும், இக்ராஃ கல்விச் சங்கம் என்பது ஒரு நபர் சங்கமல்ல! இதில் தலைவர், பல துணைத்தலைவர்கள், செயலாளர்கள், ஏராளமான செயற்குழு உறுப்பினர்கள், பல நூறு உறுப்பினர்கள் என்று முறைப்படியாக செயல்பட்டு வரும் அரசுப் பதிவு செய்யப்பட்ட ஓர் அமைப்பு.

எனவே, இக்ராஃவிற்கென்று ஒரு கோட்பாடு, தொலைநோக்குப் பார்வை, அனைத்து தரப்பினரையும் மதித்து செயலாற்றும் தன்மை, நடுநிலை பிசகாமை போன்றவற்றை அது துவங்கிய காலம் தொட்டு கடைப்பிடித்து வருவதை அனைவரும் நன்கறிவர்.

நகரின் அனைத்துப் பள்ளிகளின் நிர்வாகங்களும், ஆசிரியர் வட்டமும் இக்ராஃவுடன் இணக்கமான தொடர்புடன் இருப்பதையும், இக்ராஃ மேற்கொண்டு வரும் கல்விச் சேவைகளுக்கு அவர்கள் மனப்பூர்வமாக முழு ஒத்துழைப்பளித்து வருவதையும் காண்கிறோம்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை அவர்கள் இக்ராஃ துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் அவர்களைத் தொடர்புகொண்டு, (மாணவியர் கல்வி உதவித்தொகை தொடர்பாக மக்கள் சேவாக் கரங்கள் அமைப்புடனான) இதுகுறித்த விபரங்களைத் தெரிவித்து, அதில் இக்ராஃ தலையிட்டு தீர்த்து வைக்குமாறு கேட்டுக் கொண்டதாக என்னிடம் கூறினார்.

அச்சமயம், இக்ராஃ புற்றுநோய் குறித்த தகவல் சேகரிப்புப் பணியில் முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருந்த காரணத்தால், உடனடியாக இப்பிரச்சினையைத் தீர்க்கவியலவில்லை. எனவே, ஓரிரு தினங்கள் கழித்து, சகோ. பா.மு.ஜலாலி அவர்களையும், அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை அவர்களையும் ஒன்றாக வைத்துப் பேசலாம் என்ற எனது எண்ணத்தை இக்ராஃ துணைச் செயலர் எஸ்.கே.ஸாலிஹ் அவர்களிடம் தெரிவித்தேன்.

இந்நிலையில், சம்பவ தினத்தன்று மதியம் 3 மணியளவில் அலுவலகத்திலிருந்து உணவருந்த நான் வீடு நோக்கிப் புறப்பட்டபோது, இக்ராஃ துணைச் செயலர் எஸ்.கே.ஸாலிஹ் அவர்கள் - ஏற்கனவே தெரிவித்த பிரச்சினைகள் சம்பந்தமாக பேசுவதற்காக மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் அரசு மகளிர் மேனிலைப்பள்ளிக்கு வந்துள்ளதாகவும், அவரும், பள்ளி தலைமையாசிரியையும், பா.மு.ஜலாலீ அவர்களும் அழைத்ததன் பேரில் தான் அங்கே இருப்பதாகவும், என்னை உடனே வருமாறும் கைபேசியில் கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து நானும் உடனடியாக அங்கு சென்றேன்.

இரு தரப்பு பிரச்சினைகள் குறித்தும் அங்கு பேசப்பட்டது. இதில், இக்ராஃ சார்பாக நடுநிலையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அரசின் விதிமுறைகள், தற்போது பேணப்படும் முறைகள் குறித்தும் இக்ராஃ சார்பில் கல்வி அதிகாரியிடம் கேட்டு விளக்கம் பெறப்பட்டது.

இறுதியில், இனி வருங்காலங்களில் இரு தரப்பினரும் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயல்படுமாறும், பழைய பிரச்சினைகளை அத்தோடு மறந்துவிடுமாறும் இக்ராஃ சார்பாகவும், மாவட்ட கல்வி அதிகாரி அவர்களாலும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

அச்சமயத்தில் கூட மாவட்ட கல்வி அதிகாரி அவர்கள் சிரித்துக்கொண்டே ஒரு விஷயத்தை சொன்னார்:

“நான் இந்த காயல்பட்டினம் ஊருக்குள் நுழையும்போது, டிரைவர் சொன்னார்... இந்த ஊரில் காவல் நிலையமே இல்லை என்று! கேட்டு பெருமைப்பட்டேன்... காரணம், இங்குள்ள மக்கள் ஒருவருக்கொருவர் இணக்கமாகவும், ஒற்றுமையுடனும் வாழ்கின்றனர் என்பதைப் புரிந்துகொண்டேன்...

அப்படிப்பட்ட உங்கள் ஊரில் என்னை வரவழைக்காமல் நீங்களே இவ்விஷயத்தைத் தீர்த்துக் கொண்டிருக்கலாமே...?” என்று புன்னகையுடன் கூறினார்.

அதன்பிறகு, இதுகுறித்த செய்தியை காயல்பட்டினம்.காம் வலைதளத்தில் வெளியிடும் பொருட்டு, இன்று இரவுக்குள் தாங்களே எழுதித் தாருங்கள் என்று சகோ. பா.மு.ஜலாலியிடம் எஸ்.கே.ஸாலிஹ் கேட்டுக்கொண்டார். ஆனால், அவர் மறுநாள் இச்செய்தி வெளியிடப்படும் வரை அவ்வாறு செய்தியறிக்கை எதுவும் எழுதித் தரவில்லை என்றும், எனவே நடந்தவற்றை கவனித்ததன் அடிப்படையில் நானே செய்தியை வெளியிட்டு விட்டேன் என்றும் எஸ்.கே.ஸாலிஹ் என்னிடம் தெரிவித்தார்.

இதுவே நடைபெற்ற சம்பவம்.

இதில் மக்கள் சேவாக்கரங்கள் எடுத்த முயற்சியை, அதன் நிறுவனர் தெரிவித்த படி அவருக்குக் கிடைக்க வேண்டிய பெயரை இக்ராஃ எங்கே - எப்போது - எப்படி தட்டிச் சென்றது என்பது புரியவில்லை.

இக்ராஃ செய்திடும் பணிகளில் சில செய்திக்கு வருகிறது. சில செய்திகளில் இடம்பெறுவதில்லை. காரணம், இக்ராஃ ஒருபோதும் விளம்பரத்தை விரும்பியதில்லை. அது மட்டுமல்ல! வேறு எவரோ செய்த சேவைகளை இக்ராஃ செய்ததாகக் கூறியதாக இதுவரை எந்தக் குற்றச்சாட்டையும் இக்ராஃ இதுவரை சந்தித்ததில்லை.

மட்டுமல்ல! மாணவர் சமுதாயத்திற்குச் செய்யப்படும் எந்த சேவைக்கும் இக்ராஃ அவர்களிடமிருந்து ஒருபோதும் கட்டணம் பெற்றதில்லை. அரசின் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களைக் கூட அரசு இணையதளத்திலிருந்து இக்ராஃ பதிவிறக்கம் செய்து இலவசமாகவே இன்றளவும் வினியோகித்து வருகிறது. இக்ராஃவின் தன்னலமற்ற சேவைகளை ஊர் நன்கறியும்.

எனவே, பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள், மக்களுக்கு சேவை செய்வதாகக் கூறிக்கொள்பவர்கள் இதுபோன்ற விஷயங்களில் குறுகிய மனப்பான்மையுடன் செயல்படாமல் இருக்க வேண்டும். அத்துடன், ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளாமல அல்லது கவனமாக படித்தறியாமல் அவசரப்பட்டு இதுபோன்று குற்றஞ்சாட்டுவதை, தவறான கருத்துக்களைப் பரப்புவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் நமது பொன்னான நேரங்களை நன்மையான பல காரியங்களில் பயன்படச் செய்ய இயலும் என்பது எங்களது தாழ்மையான கருத்து!

எல்லாம்வல்ல அல்லாஹ் நம் யாவரையும் உளத்தூய்மையான சேவைகளில் ஈடுபடுத்தி, அவற்றுக்கான முழு பலன்களையும் இம்மையிலும், மறுமையிலும் தந்தருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved