Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:35:17 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5705
#KOTW5705
Increase Font Size Decrease Font Size
புதன், பிப்ரவரி 23, 2011
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்களின் அலட்சியப் போக்கு! சேவை கண்ணியத்துடன் தொடரும் என நேரடி விசாரணைக்குப் பின் மண்டல அதிகாரி தகவல்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3906 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் பெரிய தெருவில் செயல்பட்டு வருகிறது ஐ.ஓ.பி. என்று சுருக்கியழைக்கப்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. காயல்பட்டினத்தைச் சார்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இவ்வங்கியில் கணக்கு வைத்துள்ளனர்.

அலுவலர்களின் அலட்சியம்:
கடந்த 18.02.2011 அன்று மதியம் அங்குள்ள அலுவலர்களின் அலட்சியப்போக்கால் நடந்த விவாகரம் குறித்து காயல்பட்டினம்.காம் வலைதளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அச்செய்தியைப் படித்தறிந்த பலர், உரிய நடவடிக்கை கோரி வங்கி மேலிடத்திற்கு தொலைபேசி மூலமும், மின்னஞ்சல்கள் - கடிதங்கள் மூலமும் தகவல் தெரிவித்துள்ளனர்.

மண்டல அதிகாரி நடத்திய அவசரக் கூட்டம்:
இந்நிலையில், வெளியிடப்பட்ட செய்தியின் அச்சுப்பிரதியுடன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தூத்துக்குடி மண்டல அலுவலர் திருநாவுக்கரசு கடந்த 21.02.2011 அன்று மதியம் 03.30 மணிக்கு காயல்பட்டினம் ஐ.ஓ.பி. அலுவலகத்திற்கு வந்தார். அங்கு நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் மேலாளர் மற்றும் அலுவலர்களிடம் அவர் இவ்விவகாரம் குறித்த விபரங்களைக் கேட்டறிந்தார். அந்நேரம் அங்கிருந்த வாடிக்கையாளர்களிடமும் அவர் குறைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் காயல்பட்டினம்.காம் ஆசிரியர் குழுவினரை அழைத்துப் பேசிய மண்டல அலுவலர் திருநாவுக்கரசு,

வாடிக்கையாளர்களிடம் ரகசியமாக குறைகேட்பு:
வங்கியின் உயரதிகாரி என்பதைக் காண்பிக்காமலேயே நான் அங்கிருந்த வாடிக்கையாளர்களிடம் சில குறைகளைக் கேட்டறிந்தேன். பணப்பட்டுவாடா தாமதம், அலுவலர்களின் அலட்சியப் போக்கு, அனைத்திலும் தாமதமான சேவை என அவர்களால் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துகொண்டேன்...

எங்கள் நிறுவனம் சார்ந்தவர்கள் என்பதற்காக இருக்கும் குறைகள் எதையும் மறைக்கவோ, சமாளிக்கவோ விரும்பவில்லை...

விரைவில் கூடுதல் பெண் அலுவலர் நியமனம்:
பெண்களை ஆண்கள் பகுதிக்கு வரவழைப்பது இனி இருக்காது. இக்குறையை நிரந்தரமாக போக்கிடும் வண்ணம் வரும் ஏப்ரல் மாதத்தில் இன்னொரு பெண் ஊழியர் நியமிக்கப்படுவார்...

மதிய உணவு இடைவேளை அறிவிப்புப் பலகை:
மதிய உணவு இடைவேளை 02.00 மணி முதல் 02.30 மணி வரை என்று அறிவிக்கும் அறிவிப்புப் பலகை வங்கியின் நுழைவாயிலிலும், காசாளர் பகுதியிலும் நிறுவப்பட்டுள்ளது...





விரைவான சேவைக்காக கூடுதல் ப்ரிண்டர்:
தாமதமான சேவையைத் தவிர்த்திடும் பொருட்டு இன்னுமொரு ப்ரிண்டர் சில தினங்களில் அனுப்பி வைக்கப்படும்...

புகார் வழிமுறை கூறும் அறிவிப்புப் பலகை இனி திறந்திருக்கும்!
புகார் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் அடங்கிய அறிவிப்புப் பலகை தற்சமயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதை மறைக்கும் வகையில் எவ்வித அறிவிப்பும் அதன் மேல் நிறுவக்கூடாது என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது...



இணக்கமாக நடந்திட அறிவுரை:
வாடிக்கையாளர்கள் பல மனநிலையில் வருபவர்களாக இருந்தாலும், வங்கிச் சேவையை மேம்படுத்திடும் பொருட்டு அவர்களுடன் இணக்கமாகவும், நளினமாகவும் நடந்துகொள்ள அலுவலர்கள் அறிவுறுத்தபட்டுள்ளனர்...

வாடிக்கையாளர் வருடாந்திர குறை தீர்ப்பு நாள்:
ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் வாடிக்கையாளர் குறை தீர்க்கும் நாள் அறிவிக்கப்படும்... அதுகுறித்த அறிவிப்பை முற்கூட்டியே வங்கி மேலாளர் உங்களுக்கு அறியத்தருவார்... உங்கள் வலைதளத்தில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டு, அனைத்து வாடிக்கையாளர்களையும் அக்கூட்டத்தில் அவசியம் கலந்துகொள்ளச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்...

இனியும் இதுபோன்று ஏதேனும் குறைகள் இருந்தால் வங்கி மேலாளரிடமோ, அதற்கு வாய்ப்பில்லாவிட்டால் +91 94432 39130 எனது கைபேசி எண்ணுக்கோ தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்... நியாயமான குறைகள் உடனுக்குடன் சரிசெய்யப்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்...


இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வங்கி மேலாளர் வேண்டுகோள்!
பின்னர் வங்கி மேலாளர் செல்வராஜன் கருத்து தெரிவிக்கையில்,

வங்கியில் நாங்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்து மேலாளரிடம் தெரிவித்துள்ளோம்... அவற்றைக் களைந்திடும் பொருட்டு பல நல்ல நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வதாக தெரிவித்திருக்கிறார்...

ஆண்டுக்கொருமுறைதான் வாடிக்கையாளர் குறை தீர்க்கப்படும் என்றில்லை... ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதியன்று வாடிக்கையாளர்கள் இவ்வங்கியில் என்னென்ன குறைகள் இருப்பதாக அவர்களுக்குத் தெரிகிறதோ அவற்றை உரிமையுடன் என்னிடம் தெரிவிக்கலாம்...

உண்மையில் அவை குறைகளில்லையெனில் அதுகுறித்து விளக்கப்படும்... குறைகளிருந்தால் உடனுக்குடன் களைந்திட ஆவன செய்யப்படும்...

எனவே, நிறைவான வங்கிச் சேவையை தங்களுக்களித்திடும் பொருட்டு, வாடிக்கையாளர்கள் என்றும்போல் தொடர்ந்து ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Appreciation
posted by Mahmoood Musthafa (Ajman -UAE) [23 February 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2812

Very nice response. better put Br.Manager Mob No


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Nice action..
posted by Moahmed Salih (Bangalore) [23 February 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 2817

Nice to here the action taken from the higher level manager.. the day ( when the investigation )happend .

my niece also go to bank to withdrawl money she seen the officer but she dont know he is the officer.. he enquire about the services of IOB to my niece. she compliant asusual to him.. ( he taken the compliant in his notes what he bring on the day )later only she came to know.. he is from higher level officer.. he listen all the things and said to my niece we will clear the problem soon...

Finaly he done the same ..Thanks to the officer..

Pls publish the officer mail id we like to send thanks message to him.. for taking the necessary action.. in good way..

We wish the team to publish the issue in our web site and also action taken in this regard.

Like this we should be unity in all the issue in kayalpatnam . insha allah we will succeed soon..

With best regards,
Moahmed Salih K.k.S & Wishses from KWA - Bangalore..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Wel.....
posted by M.S.ABDULAZEEZ (guangzhou) [23 February 2011]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 2819

Thats good tank you mrThirunavukarasu.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. பெண்கள் ஆண்கள் பகுதிக்கு வரக்கூடாது.
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen. Mahlari. (Singapore.) [24 February 2011]
IP: 175.*.*.* Singapore | Comment Reference Number: 2841

வங்கியின் மேலிடம் அறிவித்து இருப்பது மிக்க மகிழ்ச்சி. வங்கி வூழியர்கள் எவ்வளவு அசமந்தமாக செயல் புரிகிறார்கள் என்பது வாடிக்கையாளர்களின் திட்டு, ஏச்சு அர்ச்சனைகள் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.

பழைய பாஸ்புக்கை மாற்றி ஒரு புதிய பாஸ்புக் பெற நான் பட்ட பாடு அல்லாவுக்கு தெரியும், கோவத்தில் மேனேஜரிடம் செல்லுங்கள் என்று அங்குள்ள வூழியர்கள் சொல்ல மேனேஜரோ வூழியர்கள் பரவாஇல்லை என நினைக்கும் அளவுக்கு மகா அசமந்தம் என புரிந்து கொண்டேன்.

ஒரு முக்கிய விஷயம்! வங்கிக்கு ஒரு முறை சென்ற சமயம் ஆகா! தெரியாமல் அல்லவா பெண்கள் பகுதிக்குள் நுழைந்து விட்டோம் என யோசித்தேன்.பிறகுதான் தெரிந்தது இது ஆண்கள் பகுதிதான் .பெண்கள்தான் ஆண்கள் பகுதியை ஆக்கிரமித்து விட்டார்கள் என அறிந்தேன். ஆகவே ! ஆண்கள் பகுதிக்குள் கண்டிப்பாக பெண்கள் வரக்கூடாது என வங்கி நிர்வாகம் கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது மக்களும் இது விசயத்தில் கண்காணிப்பாக இருக்க வேண்டும்.

தாய்மார்களே! எல்லா விசயத்திலும் தனக்கு சரிசமம் வேண்டும் என நினைக்காதீர்கள். ஷரீயத்தை பேணி சரியாக நடந்துக் கொள்ளுங்கள்.

நமதூரில், மார்க்கத்தை, கலாட்சாரத்தை பேணி பெண்களுக்கு தனிவழி, தனிபிரிவு வேண்டும் என நமதூர் வுலமாக்கள், வுமராக்கள் எடுத்து வரும் முயற்சிகளை தயவுசெய்து நாசமாக்கி விடாதீர்கள்.

வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் மார்க்கத்தை பேணி நடக்க நல்லருள் புரிவானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும்
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [24 February 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 2857

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

பல ஆண்டுகளாக பலரும் அனுபவித்து வந்த மன உலைச்சல்களுக்கு தீர்வு கண்டிருப்பது திருப்திதான்.

தூத்துக்குடி மண்டல அலுவலர் திரு. திருநாவுக்கரசு அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் உண்மை நிலையை நன்கு அறிந்திருப்பார். மக்களின் பொறுமையையும் , சகிப்புதன்மையையும் புரிந்திருப்பார் என்றே நினைக்கிறேன்.

நமக்கு வேண்டியதெல்லாம் முறையான சேவையும் , நல்ல அணுகுமுறையும்தான் இந்த இரண்டும் நன்றாக இருந்தால் வேறு எந்த குறையும் கண்ணுக்குத் தெரியாது.

எனவே இனிமேல், எல்லாம் நல்லவிதமாக நடக்கும் என்று எதிபார்ப்போமாக.
-----------------------------------------------------
வாடிக்கையாளர்களே! மண்டல அலுவலர் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க

எவருக்கேனும் இனி, இதுபோன்று ஏதேனும் குறைகள் இருந்தால் வங்கி மேலாளரிடம் கூறுங்கள்.

அதற்கு வாய்ப்பில்லாவிட்டால் அல்லது அவர்மீதே குறையிருந்தால் மண்டல அலுவலரின் கைபேசி எண்ணுக்கு ( +91 94432 39130 )தொடர்புகொண்டு தெரிவியுங்கள் நியாயமான குறைகளை உடனுக்குடன் சரிசெய்து தருவார்.
------------------------------------------
குறைகள் மேலிடத்துக்கு தெரிய வந்ததினால்தான் கூடுதலான ஒரு பெண் அலுவலரும் நியமிக்கப்பட இருக்கிறார். மேலும் விரைவான சேவைக்காக இன்னுமொரு பிரிண்டரும் வர இருக்கிறது. இதன்மூலம் அலுவலர்களுக்கும் சுமை குறைவதோடு துரித சேவையும் ஆற்ற முடிகிறது.

இதைத்தான் " கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் " என்பார்களோ?.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. COUNTERFOIL -Reg
posted by L.T.Ibraheem (Kayalpatnam) [26 February 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 2888

I appreciate the people who had taken necessary action regarding the poor service given by many staff of I.O.B. I too, talked to the zonal manager and told him a query. The bank does not immediately issue the counterfoil after depositing the money. We are collecting the money from 3 or 4 neighbours to deposit in the bank. As we deposit, they ask us to come back after 30 minutes to collect the pass book. Meantime, we forget the account numbers. So, I told him to give instruction to the local manager to issue the counterfoil immediately.

The zonal manager seems to be a nice person and he heard everything from me and finally accepted and said that it should be given immediately and I will inform today itself.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved