Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:05:15 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7222
#KOTW7222
Increase Font Size Decrease Font Size
வியாழன், செப்டம்பர் 15, 2011
செப்டம்பர் 22 க்குள் நகர்மன்ற தலைவர் பொறுப்புக்கு நிற்க விரும்புவோர் பெயர்களை சமர்பிக்கவும்: ஐக்கியப் பேரவை வேண்டுகோள்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3558 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (22) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எதிர்வரும் நகர்மன்ற தேர்தல் குறித்து காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

நடைபெறவுள்ள காயல்பட்டினம் நகராட்சித் தேர்தலில், தலைவர் மற்றும் உறுப்பினர் தேர்வு சுமுகமாகவும், அனைவரும் ஏற்கும்படியாகவும் நடைபெற வேண்டியது அவசியமாகும்.

இத்தேர்தலை உரிய முறையில் சந்திக்க வழிவகை காண வேண்டுமென. நகர்நலன் விரும்புவோர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை இதுவரி இத்தேர்தல் சம்பந்தமாக பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

துவக்கமாக நகரின் அனைத்து அரசியல் கட்சிகளையும் தனித்தனியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நடைபெறவிருக்கும் நகராட்சித் தேர்தலில் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு போட்டியிட விரும்புவோர் கட்சி சின்னங்களில் போட்டியிடாமல், பொது வேட்பாளராக போட்டியிட விருப்ப மனுத் தாக்கல் செய்ய வேண்டுமென பேரவை வேண்டுகோள் விடுத்தது. இதை உளமார ஏற்றுக் கையெழுத்திட்ட அரசியல் கட்சியினருக்கு உள்ளார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்தேர்த்தலுக்கெனத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினரால் அமைக்கப்பட்ட நகராட்சித் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவினர் நமது வேண்டகோளை ஏற்று, ஒத்துழைப்பு தர முன்வந்ததற்க்கு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பேரவை 08-09-2011 அன்று ஜலாலிய்யாவில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பங்கேற்று 11 தீர்மானங்களுக்கு ஒப்புதல் தந்த அணைத்த ஜமாஅத் மற்றும் பொது நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தீர்மானங்களை வரவேற்று, ஆதரித்துள்ள உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் காயல் வாசிகளுக்கும் இதயமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், வார்டுகளின் வேட்பாளராக நிற்க விரும்புவோர் ஜமாஅத்துகளுக்கும், தலைவராக நிற்க விரும்புவோர் பேரவைக்கும் விருப்ப மனுத் தாக்கல் செய்ய வேண்டுமென கேட்டுகொள்கிறோம். மேலும் தலைவர் மற்றும் உறுப்பினர் பொறுப்புகளுக்கு பொதுமக்களால் விரும்பப்படும் நபர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு, சிபாரிசு செய்யப்படும் மனுக்களை அனுப்பலாமென்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைவரைத் தேர்வுசெய்யும் தேர்வுக்குழு சம்பந்தமாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஜமாஅத்துக்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் உரிய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து விரைவில் பேரவைக்குத் தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். இது குறித்து ஜமாஅத்துக்கள் மற்றும் பொதுநல அமைப்புகளுக்கு பேரவையால் ஏற்கனவே கடிதம் மூலம் தகவல் தரப்பட்டுள்ளது.

மேலும் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தின் அடிப்படையில், உறுப்பினர் மற்றும் தலைவர் பொறுப்புக்கு விருப்ப மனுத் தாக்கல் செய்வோர், தலைவரைத் தேர்வு செய்யும் தேர்வுக் குழுவில் இடம் பெறக் கூடாது என கேட்டு கொள்கிறோம்.

பொருத்தமான வார்டு வேட்பாளர்களை ஜமாஅத்துக்கள் தேர்வு செய்ய வேண்டுமெனவும், தலைவர் தேர்வு சிறப்புடன் அமைய அனைவரும் ஒத்துழைக்கும்படியும் கேட்டுக் கொள்கிறோம்.

நகராட்சித் தலைவராக தேர்வு பெற விரும்புவோரும், தகுதியானவர்களை நகராட்சித் தலைவராக சிபாரிசு செய்ய விரும்புவோரும் உரிய மனுக்களை காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவைக்கு 22-09-2011க்குள் அனுப்பித்தருமாறு கேட்டு கொள்கிறோம்.

நமது நியாயமான உரிமைகளுக்கு இழப்பு ஏற்படாமலும், நமது ஐக்கியம் நிலைபெறவும், நமது சகோதர சமுதாயத்தினரிடையே நல்லிணக்கம் பேணிப் பாதுக்காக்கபடவும் இத்தேர்தலை மிக கவனமாகக் கையாள வேண்டுகிறோம்.

தூர நோக்கோடும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோடும் இத்தேர்தலைச் சந்தித்தால் மட்டுமே நாம் உரிய இலக்கை அடைய முடியும். இத்தேர்தலில் வேட்பாளராக நிற்க விரும்புவோரும், அவர்களை ஆதரிப்போரும் இதை மனதில் கொள்ள வேண்டுகிறோம்.

அனைத்து ஜமாஅத்துக்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் நகர பிரமுகர்களால் முறையாக தேர்வு செய்யப்படும் தலைவர் மற்றும் உறுப்பினர் வேட்பாளர்களை நகராட்சிக்கு அனுப்புவோம்.

உள்நோக்கம் ஏதுமின்றி, நகர் நலனை மட்டுமே முன்னிறித்தி, தூய நோக்கோடு மேற்கொள்ளப்படும் இம்முயற்சிக்கு ஆதரவு வழங்குவோம். கருத்து வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஓர் அணியில் ஒன்றுபடுவோம். இளைஞர்களின் ஒத்துழைப்பும், மூத்தவர்களின் ஆலோசனையும் இணைந்து இத்தேர்தலில் நன்மைகள் மலர உறுதி ஏற்போம். வல்ல இறைவன் நமது நன்நோக்கங்கள் நிறைவேற அருள் புரின்வானாக! ஆமீன்.

வஸ்ஸலாம்,
இவண்,
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, ௦60/118 கே.டி.எம். தெரு,
காயல்பட்டினம்.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
காயல் எஸ்.ஈ. அமானுல்லாஹ்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:செப்டம்பர் 22 க்குள் நகர்...
posted by Shaikna Lebbai (Singapore) [15 September 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 8157

அதற்க்கு முன்னால், ஐக்கிய பேரவையின் 25 உறுப்பினர்கள் கொண்ட நிலைபாட்டை எடுத்து சொல்ல முடியுமா? இன்னும் எல்லோரும் குழப்பத்திலே இருக்கின்றோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. தங்களின் நிலைப்பாடு என்ன?
posted by Firdous (Chennai) [15 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8166

ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்காமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எங்கனே! அனைத்து ஜமாதுகளும் எழுத்து மூலமாக ஒப்புதல் அளித்தார்களா!

"அனைத்து ஜமாஅத்துக்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் நகர பிரமுகர்களால் முறையாக தேர்வு செய்யப்படும் தலைவர் மற்றும் உறுப்பினர் வேட்பாளர்களை நகராட்சிக்கு அனுப்புவோம்."

நகர பிரமுகர்கள் ஊரின் ஏதோ ஒரு ஜமாத்துக்கு உட்பட்டுதனே இருப்பார்கள். பின்பு ஏன் ஐக்கிய பேரவைக்கு 25 பிரதிநிதிகள்?

பெரியோர்களின் அனுபவமும், உயரிய ஆலோசனையும் கண்டிப்பாக தேவை! ஆனால் அவை எங்களை சீரிய பாதைக்கு வழி நடத்த வேண்டும்! அந்த அவா எங்களுக்கு எப்போதும் உண்டு!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இதில் அ இ தி மு கழக கட்சியும் அடங்குமா ?
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [15 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8167

அஸ்ஸலாமு அழைக்கும்...

மதிப்புக்குரிய ஐக்கியப் பேரவைக்கு...

நகரின் அனைத்து அரசியல் கட்சிகளையும் தனித்தனியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நடைபெறவிருக்கும் நகராட்சித் தேர்தலில் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு போட்டியிட விரும்புவோர் கட்சி சின்னங்களில் போட்டியிடாமல், பொது வேட்பாளராக போட்டியிட விருப்ப மனுத் தாக்கல் செய்ய வேண்டுமென பேரவை வேண்டுகோள் விடுத்தது. இதை உளமார ஏற்றுக் கையெழுத்திட்ட அரசியல் கட்சியினருக்கு உள்ளார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்..என்று குறிப்பிட்டு இருக்கும் வாசகத்துக்கு ஒரு சிறிய விளக்கம் தேவை...

தாங்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அ இ தி மு கழகம்.. கட்சி சின்னங்களில் போட்டியிடாமல், பொது வேட்பாளராக போட்டியிட விருப்ப கையெழுத்திட்டார்களா ?

எந்தந்த அரசியல் கட்சியினருக்கு தங்கள் உள்ளார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறீர்கள்..?

எந்தந்த அரசியல் கட்சியினர் தாங்கள் பேரவைக்கு கட்சி சின்னங்களில் போட்டியிடாமல் இருக்க கையெழுத்திட்டார்கள்... ?

இதில் அ இ தி மு கழக கட்சியும் அடங்குமா ?

கட்சி வாரியாக குறிப்பிட்டு பேரவை ஊர் மக்களுக்கு விளக்கம் கொடுத்தால் மக்களும் விளங்கி கொள்வார்கள் அல்லவா ?

ஐக்கியப் பேரைவையே... தயவு செய்து எனது தாழ்மையான வேண்டுகோளுக்கு (குழப்பத்திற்கு) விளக்கம் தாருங்கள்... !

தாங்களின் விளக்கத்தை எதிர்நோக்கிய வண்ணம் உங்கள் சகோதரன் - தமிழன். முத்து இஸ்மாயில் - 0091 - 97 52 25227


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. காயலின் உதயம் கணவிலும் இல்லை...
posted by M. Sajith (DUBAI) [15 September 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8168

உடன்பாடு இல்லாத தீர்மானம் என்பதை கலந்து கொண்ட சிலரும் தெரிவித்துள்ளனர். நம்மைப்போன்ற பலரும் இனையதலங்கள் மூலமும் தெரிவித்துள்ளனர்., இது பற்றி எல்லாம் கவலை இல்லை "நாங்கள் சொன்னால் சொன்னதுதான்" என்பது போல உள்ளது இந்த அறிவிப்பு..

25 நபர் விசயத்தில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. நல்லவர்கள் ஊர் நலனில் அக்கரையுள்ளவர்களை அவரவர் ஜமாத்தே தேர்ந்து எடுக்குமே இதில் பேரவைக்கு என்ன சந்தேகம் - விளங்கவில்லை !!

இந்த சர்வாதிகார போக்கு நன்மை தராது. இது நல்ல முன்மாதிரி இல்லை.

பெரும்பான்மை நாங்கள் தான் என்னும் ஆணவப்போக்கால் "சிறு மக்கம்" ஜாகிலிய்யா காலத்து மக்கமாக மாறிவருவது மிகவும் வேதனைக்குறியது.

எத்தனை மெகாக்கள் வந்தாலும் பயனில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:செப்டம்பர் 22 க்குள் நகர்...
posted by Shaikna Lebbai (Singapore) [15 September 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 8172

நீங்கள் எடுக்கும் முடிவுகள் ஜீரணிக்க முடியவில்லை, என்னதான் நடக்குது ஐக்கிய பேரவையில்? பெரியவர்கள் அனுபவம் மிக்கவர்கள் என்று பழைய துதிபாடியே நீங்கள் எடுக்கும் பல முடிவுகள் சிறுபிள்ளை தனமாக இருக்கிறது.

இந்த வேண்டுகோளை கூட எல்லா ஜமாஅத்களை கேட்டறிந்த பின்பே வெளியிட்டு இருக்கவேண்டும்.

ஐக்கிய பேரவை என்றால் எல்லா ஜமாஅத்களின் கூட்டமைப்பு தான் ஒழிய குறிப்பிட்ட நபர்களின் முடிவு அல்ல.

எல்லா கருத்தக்களையும் பார்த்த பின்பு மக்கள் மனதை விட்டு ஐக்கிய பேரவை நீங்கிகொண்டே வருகிறது.

ஆகையால் தயவு கூர்ந்து இருமார்ப்புகளை களைந்து எல்லோருடனும் ஒன்றுபடுமாறு உங்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:செப்டம்பர் 22 க்குள் நகர்...
posted by AbdulKader (Abu Dhabi) [15 September 2011]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8175

அஸ்ஸலாமு அழைக்கும்,

தம்பி செக்கனா லெப்பை, தயவு செய்து தங்கள் கருத்தை மட்டும் பதவு செய்யுங்கள். "மக்கள்" சார்பாக நீங்கள் எழுத வேண்டாம்.

காரணம், நான் இந்த செய்தியை நான் படிக்கும் முன்பு 472 பேர் படித்துள்ளார்கள், நான்கு பேர் கருத்து பதிவு செய்துள்ளார்கள். அவர்கள் யாரும் மக்கள் சார்பாக பேசவில்லை.

வஸ்ஸலாம்
அப்துல்காதர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. உங்கள் தீர்மானத்தை (தீர்மான எண் 4) ஏற்று கொள்ளவில்லையே...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [15 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8176

ஐக்கியப் பேரவையே.... உங்கள் தீர்மான எண் 4 - இல் குறிப்பிடும் செய்தியாகிய ஐக்கியப் பேரவை அடையாளம் காட்டும் 25 நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற கருத்துக்கு அதிகமான எதிர்ப்புகள் வலுக்கிறது...!

பேரவையே... ஊர் விசியத்தில் (ஊரில்) உங்களின் தனி ஆதிக்கம் வேண்டாம்... இந்த ஆதிக்கம் எல்லாம் உங்களின் நிறுவனத்திலோ.. வீட்டிலோ... வைத்து கொள்ளுங்கள்...

அதற்க்கு முன்னால் ஐக்கிய பேரவையின் 25 உறுப்பினர்கள் கொண்ட நிலைபாட்டை எடுத்து சொல்ல முடியுமா? இன்னும் எல்லோரும் குழப்பத்திலே இருக்கின்றோம்.... தயவு செய்து ஊர் மக்களையும் ஊரில் உள்ள நல்ல அமைப்புகளையும் குழப்பத்தில் தள்ளாதீர்கள்...!

ஐக்கியப் பேரவை அடையாளம் காட்டும் 25 நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற தீர்மானத்தை ஊரில் எத்தனை ஜமாஅத் ஏற்று கொண்டு இருக்கிறது... ? உங்கள் தீர்மானத்தை (தீர்மான எண் 4) ஏற்று கொள்ளவில்லையே...

பேரவையே.. நீங்கள் நல்ல முடிவு எடுங்கள்

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. கொஞ்சம் கஷ்டம்தான் .
posted by Zainul Abdeen (அமீரகம் ) [15 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8178

இங்கு ஒன்று மட்டும் புரிய வில்லை .இங்கு பேரவையை குறை மட்டுமே சொல்லிக்கொண்டு இருப்பவர்களுக்கு என்னதான் பிரச்சனை ??? அவர்களுக்கு பிரச்சனை பேரவையின் கொள்கையின்மேலா?? ? இல்லை அதில் அங்கம் வகிப்பவர்கள் மேலா?. . இப்படி உங்களுடைய தனிப்பட்ட வெறுப்புகளை இந்த இணையதலமூலம் கொட்டுவதனால் எந்த பயனும் இல்லை மாறாக எங்களை போன்ற நடுத்தர வாதிகளுக்கு மேலும் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும்.

சிலபேர்கள் பேரவைமேல் தொடுகப்டவேண்டிய கேள்வியை இங்கு பொதுப்படையாக வாய்மொளியகவே பிறர் நக்கல் செய்யும் வண்ணம் எழுதிவருகிறார்கள். வெளிஊரில் , வெளிநாட்டில் இருந்தால் கூட பரவா இல்லை ஆனால் ஊரில் இருந்து கொண்டு, யாரிடம் கேள்விகேட்கனுமோ அவர்களிடம் கேட்காமல் இங்கு வந்து கொட்டுவதன் காரணம் என்ன?? எங்களைபோன்றவர்களுக்கு இன்னும் எரிட்சலைதான் தருமே அன்றி வேறேதும் இல்லை.

இப்படி MEGA என்றும் , KWT என்றும் இன்னும் பற்பல என்றும் நோட்டீஸ் வினோகித்து நம் ஊரு ஒற்றுமையை பங்கு போடுவதுக்கு (பிரிப்பதுக்கு) பதிலாக சட்டமன்றம் தேர்தல், பாராளுமன்றம் தேர்தல் போன்றதில் எப்படி வாக்காளர்கள் யாருடைய வழிகாட்டலும் இல்லாமல் தன்னுடைய விருப்பத்திற்கு தலைவர்களை தேர்ந்தெடுத்தார்களோ அப்படியே அவர்கள் விருப்பதிருக்கே விடுவதே சால சிறந்தது. ஒற்றுமை ஒற்றுமை என்று வாய்கிலிய பேசுபவர்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு அமைப்பும், ஆளுக்கு ஒரு மன்றம் என்று நடாத்தி வந்தால் ஒற்றுமை எங்கேந்து வரும். வெறும் வார்த்தைகளால் தான் வாய்ஜால போட முடியும்.

எழுத்து திறமை இருக்கும் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தினால் மக்களை ஒன்று சேர்க்காவிட்டாலும் பரவில்லை ஆனால் சின்னாபின்னமா ஆக்காமல் இருந்தால் சரியே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:செப்டம்பர் 22 க்குள் நகர்...
posted by sak shahulhameed (malaysia) [15 September 2011]
IP: 60.*.*.* Malaysia | Comment Reference Number: 8202

அனைத்துஜமாத்தும் இணைந்துதானே ஐக்யபேரவை அனைத்துஜமாத் நபர்களையும் சேர்த்துதானே குழு அமைக்கபடுகிறது பிறகு ஏன் இருபத்தைந்து பேரைவைசார்பாக நாட்டாமை செய்யவா

பொதுபிரச்னை என்றால் பல அதிருப்திகள் எதிர்ப்புகள் வரும் அனைத்தையும் உள்வாங்கி நடவடிக்கைகளை அமைத்து கொள்வதுதான் அனைவருக்கும் நன்மை பயக்கும். அதைவிடுத்து எதிர்க்ககூடாது பேசக் கூடாது என்றால் அதுதான் ஒற்றுமை செயல்பாட்டிற்கு வேட்டு வைக்கும் செயல் அதன் தாக்கம்தான் நகர்மன்ற தேர்தலுக்கான பல அமைப்புகள் என்னான்டோ போங்கடா என்று எதையும் கண்டுகொள்ளாதவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் மனிதவழக்கம்தனே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. ஏன் 25 பேர்?....
posted by AbdulKader (Abu Dhabi) [16 September 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8209

அஸ்ஸலாமு அழைக்கும் .......

நான் இந்த செய்திக்கு அதிகம் கருத்து பரிமாற்றம் வரும் என்று எதிர் பார்த்தேன், ஆனால் இதுவரை எட்டு கருத்தே (என்னுடைய முந்தய ஒன்றை சேர்த்து) பதிவு செய்யப்பட்டு உள்ளது! மேலும், மொத்தம் 26 ஜமாத்களில் இருந்து இதுவரை ஒரு ஜமாஅத் கூட்டு அமைப்பும் ஒரு பொது நல சேவை, மற்றும் MEGA மட்டுமே தங்களின் கருத்துக்களை இந்த ஊடகத்தின் வழியாக பதிவு செய்துள்ளது!

அப்படி என்றால்...... மற்ற ஜமாஅத், பொது நல சேவை, மற்றும் தேர்தல் வழிகாட்டும் இதர அமைப்புகள் இந்த செய்தியை படிக்கவில்லையா? அல்லது.... அவர்களுக்கு ஐக்கிய பேரவை எடுத்த முடிவு சம்மதமா?

குழப்பம் ஒன்றும் வேண்டாம்.....நன்கு சிந்திப்பவர்களுக்கு நான் எழுதுவது புரியும்...

வஸ்ஸலாம்
அப்துல்காதர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:செப்டம்பர் 22 க்குள் நகர்...
posted by Abdul Wahid Saifudeen (A.W.S.) (Kayalpatnam) [16 September 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 8213

Can we expect "Fairness" from unfair people?

Can we expect "Clarity " from confused blokes ?

Can we expect "Democracy" from undemocratic org?

The answer to above questions is a big " No ". Because "Old habits die hard".

There is another saying in English,

" You can't teach an old *** new tricks". which means it is difficult to make someone change the way they do something when they have been doing it the same way for a long time.

One can wake up a person if he really sleeping. But no one can wake him up if he pretends to be sleeping. People who are really sleeping can understand what am trying to say. Certainly "Jalraas" can't.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:செப்டம்பர் 22 க்குள் நகர்...
posted by Mohamed Salihu (New Delhi) [16 September 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 8215

"உள்நோக்கம் ஏதுமின்றி, நகர் நலனை மட்டுமே முன்னிறித்தி, தூய நோக்கோடு மேற்கொள்ளப்படும் இம்முயற்சிக்கு ஆதரவு வழங்குவோம்".

உள்நோக்கம் இல்லையென்றால், பல எதிர்ப்புகள் வந்த பின்பும் ஏன் 25 பிரதிநிதகளை தேர்வு செய்வதில் மும்முரம் காட்ட வேண்டும்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:செப்டம்பர் 22 க்குள் நகர்...
posted by Shaika Lebbai (Singapore) [16 September 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 8217

காயல்பட்டணம் நல அறக்கட்டளை மற்றும் MEGA அமைபபினரோடு திரும்பவும் கலந்து ஆலோசனை செய்யுங்கள். அதைதான் எல்லா மக்களும் எதிர்பார்கிறார்கள்.

அமானுல்லாஹ் காக்கா செய்வீர்களா?

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:செப்டம்பர் 22 க்குள் நகர்...
posted by samu (hong kong) [16 September 2011]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 8218

அஸ்ஸலாமு அலைகும்,

இங்கே அறியபட்டிருக்கும் செய்தியும், அதன் பொருள் விளைவாக இங்கே அடிக்கப்பட்டிருக்கும் கம்மேன்ட்களும்' சிரிக்கும் படிஇல்லை. கம்மேன்ட்களின் தரம் குறைந்து கொண்டிருக்கிறது. உடனடியாக கொஞ்சம் அட்மின் கவனம் தேவை. தயவு செய்து ஒரு நியூஸ் காஸ்டிங் வெப்சைட்டை களங்கபடுத்த வேண்டாம்.

என்னை போல் இந்த செய்தியை வாசித்தவர்களுக்கு தெரியும் இதன் விளைவு. தானாக விளக்கம் தருவதும், பின்னர் ஒத்துக்கொள்வதும் நம்மில் பலருக்கு வாடிக்கை. ஒற்றுமை, ஊர் நலன், பொது நல சேவை பற்றி பேசுவபர்களுக்கு பொறுமையும், சகிப்புதன்மையும் அதிகம் வேண்டும்.

இப்படி உங்களுடைய தனிப்பட்ட வெறுப்புகளை இந்த இணையதலமூலம் கொட்டுவதனால் எந்த பயனும் இல்லை. மீண்டும் ஒருமுறை ஜைனுல்அப்தீன் உடைய கமெண்டை படித்துபர்த்தால் புரியும், பொருள் விளக்கம். சிலபேர் பேரவைமேல் கேட்க வேண்டிய கேள்வியை இங்கு பொதுப்படையாக வாய்மொழியகவே பிறர் நக்கல் செய்யும் வண்ணம் எழுதிவருகிறார்கள். யாரிடம் கேள்விகேட்கனுமோ அவர்களிடம் கேட்காமல் இங்கு வந்து கொட்டுவதன் காரணம் என்ன? எங்களைபோன்றவர்களுக்கு இன்னும் எரிட்சலைதான் தருமே அன்றி சந்தோஷம் இல்லை.

நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்று நினைப்பவர்களில் நானும் ஒருவன்.

சாம் சிஹாபுதீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:செப்டம்பர் 22 க்குள் நகர்...
posted by Sheikna Lebbai (Singapore) [16 September 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 8220

சகோதரர் சாம் அவர்களே, ஏன் பயன் இல்லை? எங்களை போன்றவர்கள் மன எரிச்சலை எங்கே போய் கொட்டுவது. ஐக்கிய பேரவை இடம் மின்னஞ்சல் இல்லை, அங்கே உள்ள உறுப்பினர்கள் யாவரின் கைதொலைபேசி எண் கொடுக்கப்படவில்லை. யாரிடம் போய் என்ன சொல்வது. இந்த நிலைமையில் தான் இருக்கிறது ஐக்கிய பேரவை.

குறைந்தபட்சம் இந்த கருத்துக்களை படித்த பின்பு மாற்று கருத்தாவது கொடுத்தார்களா, இல்லை கொடுக்கவேண்டும் என்ற பொறுப்பாவது இருக்கா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Time to Introspect
posted by Abdul Rahim (U.K.) [16 September 2011]
IP: 80.*.*.* United Kingdom | Comment Reference Number: 8223

I fully subscribe to the views of Brothers Zainalabdeen & Sam Shihabdeen. It is highly disheartening to note the events that are taking place in this website.

I was of the opinion that this website is professionally run and administered by well educated person(s) but I now feel that, it is not so. Earlier, it was believed this website would unite all the Kayal Citizens but now ugly and unsavory comments appearing in the name of “Freedom of Speech” is crossing the civilized limits.

Please refer to Comment Reference Number: 8198 of News Item - News ID # 7226. The view posted by that individual insinuates that only people from that part of the town are educated and are religiously lettered. How come the administrator let this comment through? Is it because of his affinity to that area? I strongly condemn the words therein.

If the directors of this website wish to do good to the town, please stop your comments section altogether.

There is nothing vulgar or inappropriate in this post of mine and hence refrain from censoring this.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. வாசகர்களின் கருத்து....
posted by AbdulKader (Abu Dhabi) [16 September 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8231

அஸ்ஸலாமு அழைக்கும்..........

இந்த பக்கத்தில் என்னுடைய மூன்றாவது கருத்தை நான் பதிவு செய்கிறேன்! சகோதரர்கள் Zainul Abideen, Shamu and AbudulRahim ஆகியோரின் கருத்துக்களை நான் முழுமையாக எற்றுக்கொள்கிறேன்.

நடக்கப்போவது பஞ்சாயத் தேர்தல் மட்டும்தான். ஆனால் இதற்க்கு பின்பு நம்முடைய ஐக்கிய பேரவையை கொண்டு நாம் நிறைய்ய காரியங்கள் சாதிக்க வேண்டியது உள்ளது. நம் ஊரின் ஒருமைப்பாடு மற்றும் கண்ணியத்தில் அக்கறை உள்ளவர்கள் தயவு செய்து அல்லாஹ்விற்காக இந்த பக்கத்தில் பாதகமான கருத்துக்களை எழுத வேண்டாம்.

நாம் நல் பல கருத்துக்களை பெரியவர்களின் ஆலோசனைக்காக எடுத்துச்சொல்லலாம், தவறு இல்லை. அனால் குறை சொல்வதை தவிர்க்கவும்.

Please read Brother Zainul Abideen's Comment Reference Number: 7884.

பெரியோர்கள் எடுக்கும் முடிவில் வேகத்தை (வேகமுள்ளவர்கள்) காணவில்லை...... அனால் விவேகமுள்ளவர்கள் விவேகத்தை கண்டு கொண்டார்கள் என்றுதான் நான் சொல்லவேண்டும்! எதிலும் தொலைநோக்கு பார்வை வேண்டும்.

ஊரில் இருப்பவர்களும் இதில் கருத்து சொல்கிறார்கள், ஏன்..... மக்களை குழப்பவா? தயவு செய்து மக்களை தங்கள் கருத்து கொண்டு குழப்பவேண்டாம். மேலும் இந்த அறிய ஊடகத்தை நாம் நல் வழியில் பயன் படுத்தினால் நமக்குத்தான் நல்லது. வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:செப்டம்பர் 22 க்குள் நகர்...
posted by M Sajith (DUBAI) [16 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8240

விமர்சனம் செய்வது ஐக்கிய பேரவையையோ அல்லது அதன் பிண்ணனியில் செயல்படும் தனிநபர்களின் மீதுள்ள வெறுப்போ காரணம் இல்லை. எந்த ஓர் அமைப்புக்கும் வால் பிடிக்கவுமில்லை..

பெரும்பான்மை என்றால் ஏதும் செய்யலாம் என்பதை சரிகாண்பது என்னனும் நிலையை இந்தியமக்கள் அனைவரும் கொண்டால், பாசிச இயக்கங்களின் கொள்கை சரிகாணும் பெரும்பன்மை தான் நாட்டில் நிலவும் - நல்ல வேளையாக இதை சரிக்காணத பலரும் உள்ளதால் தான் இன்றளவும் நிம்மதி நாட்டில் உள்ளது.

தேர்தல் விசயத்தில், ஐக்கியப்பேரவையின் அணுகுமுறை நல்ல முன்மாதிரி இல்லை.

ஒருசிலரின் விரலசைவில் ஊர் உள்ளது போல் ஓர் மாயையை உருவாக்குவது பொதுமக்களுக்கு நல்லதில்லை.

Main Stream அரசியல் சார வேண்டாம் என கூறிக்கொண்டே Side Stream-ல் அரசியல் செய்வது - ஊர் நலம் நாடும் அமைப்புக்கு இலக்கணம் இல்லை..

இதை நம்மவர்கள் விமர்சிக்காமல் வேறு யார் செய்வார்? இதில் ஒற்றுமைக்கு என்ன பங்கம் வந்துவிடப்போகிறது.? பரவலாக கேள்வி எழும்போது அதை கருத்தில் எடுத்துக்கொள்வதும் அதற்க்கு விளக்கம் அளிப்பதும்தானே ஒரு பொறுப்பான அமைப்புக்கு சரி?

இதற்கு முன் பேரவையின் செயல்பாட்டை நம்மில் பலரும் பாராட்டியும், விமர்சித்தும், ஒத்துழைத்தும் இருக்கத்தானே செய்கிறோம்.இந்த விசயதில் சரி இல்லை என சுட்டி காட்டுவது தவறா? இது ஒற்றுமையை பாதிக்கும் என்பது வீட்டில் சிறு பிள்ளைகளுக்கு சொல்லும் "கப கபா" கதைப்போல இல்லயா?

25க்கு என்ன அடிப்படை.. யாராவது விவேகமுள்ளவர்கள் சொல்லுங்களேன்..!! நாங்களும் தெரிந்து கொள்வோம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Couselors - Any opportunity for ladies?
posted by Rayyan's Dad!! (USA) [17 September 2011]
IP: 68.*.*.* United States | Comment Reference Number: 8243

Its my understanding that, Jamath's are involved in identifying their counselors for their respective wards through Mashura & mostly men are selected. Is there any criteria that, they need to identify only 'Men' or they can identify 'Women's' as well? I'm just curious to know whether any opportunity for women this time as well to play couselor role or not?

Not sure who can clarify this....Aikkiya Peravai or MEGA?

Any how...thanks in advance!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. எனதருமை சகோதரர் சஜித் அவர்களுக்கு
posted by AbdulKader (Abu Dhabi) [17 September 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8246

அஸ்ஸலாமு அழைக்கும்.....

நான் உங்களுக்கு இந்த ஊடகத்தின் வழியாக பாடம் சொல்லித்தர இயலாது. அனால், என்னுடைய ஒரு பணிவான வேண்டுகோள்...... தாங்கள் இதுவரை பதிவுசெய்த கருத்துகளை (இந்த செய்திலும் சரி இன்னும் மற்ற செய்திகளிலும் சரி) நீங்களே படித்துப்பாருங்கள்.... உங்களின் தன்மை உங்களுக்கே தெரியும்!!!

என்றாலும் உங்களின் சிந்தனைக்கு.....

நம் ஐக்கிய பேரவை முன்பு இரண்டு நல்ல தகுதிவாய்ந்த தழைவர்களை ஊரின் அனைத்து ஜமாஅத் அனுசரணையுடன் தேர்ந்த்தெடுத்து தந்தது. அவர்களை(ஐக்கிய பேரவை) கொண்டு நம் ஊர் பல பயன்கள் பெற்றது. அனால் குறை என்று வரும்போது / வந்தபோது, ஐக்கிய பேரவையை மட்டுமே ஒற்றை படுத்தி காட்டுவது நம்மில் சிலருக்கு இயல்பாகிவிட்டது.

தேர்தல் விஷயத்தில் அன்று அவர்கள் இன்றயபோல் ஐக்கிய பேரவைக்கு இத்தனை ஓட்டு வேண்டும் என்று கேட்கவில்லை!! இன்று கேட்க காரணம்.....??? எல்லாம் அவர்களின் தொலைநோக்கு பார்வையும், அனுபவம்தான் என்று சொல்லவேண்டும்.

இனியும் தயவு செய்து மேலும் விளக்கம் கேட்காதீர்கள். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. தன்னிச்சையான அறிக்கை மட்டுமே!
posted by Firdous (Chennai) [17 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8251

நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்! நாங்கள் அறிக்கை மட்டுமே வெளியிடுவோம். இது என்ன நியாயம்!

சகோதர்களே! உங்கள் ஆலோசனைகள் மற்றும் விமர்சனகளை நீங்கள் ஐக்கிய பேரவை நேரில் சென்று கூறினால் எள்ளி நகையாடபடுவீர். எனது சொந்தத்தில் ஒருவருக்கு ஏற்பட்ட நிலை.

அமைப்பை விமர்சிப்பவர்கள் ஒரு சாராரோ, குறிப்பிட்ட இயக்கத்தை சார்ந்தவரோ இல்லை. யாருக்கும் தனிப்பட்ட கால்புனர்ச்சியோ இல்லை.

A P is an organisation, representing Kayal wholly. It means geographically covers all the 26 Jamaths. If so, why 25 representatives for AP alone. Brothers! Don't you feel something fishy.

Is the organization organized in democratically? How often and what way they conduct election to choose the leader and members? Still mystery!

வினாவிற்கு விடை எங்கே? எப்போது? MEGA வின் நோக்கம் நாறும் மன்றத்தை நகர்மன்றம் ஆக்குவதே! அவர்கள் பாடுபடுவது ஊரின் ஒற்றுமைக்காக! பிரிவினைக்கு அல்ல! அவர்களின் தூண்டுதலால் ஜமாஅத்கள் கூடி தகுந்த, நேர்மையான கவுன்சிலர்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. அல்லாஹ்வின் உதவியுடன் நாம் வெற்றி காண்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. STOP Assuming
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [18 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8377

Br. Abdul Rahim (UK). You are assuming the Admin & News Moderators are not professional and aren't educated (You said "but I now feel that, it is not so"). You also assume that praising one Jamath is automatically criticising other Jamaths. All i say is "Please, Stop assuming". If you have a doubt, please ask. You can email the administrator.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved