Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:28:33 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7225
#KOTW7225
Increase Font Size Decrease Font Size
வியாழன், செப்டம்பர் 15, 2011
ஐக்கியப் பேரவைக்கு காயல்பட்டினம் நல அறக்கட்டளை பதில்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3506 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எதிர்வரும் நகர்மன்ற தேர்தலில் - தலைவரை தேர்வு செய்யும் விஷயமாக, தேர்தல் குழு ஒன்று அமைக்க காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை முடிவுசெய்துள்ளது. ஜமாஅத்துகளுக்கு தலா இரு பிரதிநிதிகள் என்றும், பொதுநல அமைப்புகளுக்கு தலா ஒரு பிரதிநிதி என்றும், ஐக்கியப் பேரவை தேர்வு மூலம் 25 பிரதிநிதிகள் என்றும் அக்குழுவில் அங்கம்வகிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து - ஐக்கியப் பேரவை சார்பாக நகரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், பல சமூக அமைப்புகளுக்கும் -செப்டம்பர் 10 தேதியிட்ட கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் - ஐக்கியப்பேரவை அமைக்கும் தேர்தல் குழுவிற்கு பிரதிநிதிகளின் பெயரினை அனுப்பும்படி கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

அக்கடிதத்திற்கு - நகரின் பொது நல அமைப்புகளில் ஒன்றான காயல்பட்டினம் நல அறக்கட்டளை (Kayalpatnam Welfare Trust - KWT) பதில் அனுப்பியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நமதூர் நகராட்சி சம்பந்தமாக கடந்த 08.09.2011 அன்று ஜலாலிய்யா நிக்காஹ் மண்டபத்தில் தங்கள் அமைப்பால் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்திற்கு, எங்கள் அமைப்பும் இடம் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அழைத்தமைக்கு எங்கள் அமைப்பின் சார்பாக நன்றியினை முதற்கண் தெரிவித்து கொள்கிறோம்.

எங்கள் காயல்பட்டணம் நல அறக்கட்டளை அமைப்பு உதயமாகி சில மாதங்களே ஆனாலும் அதனுடைய அசுரவேக சமூகப்பணியால் ஈர்க்கப்பட்டு தங்கள் அமைப்பு எண்களின் அமைப்புக்கு ஆதரவுகரம் ஏந்தி, அங்கீகாரம் தந்த பெருந்தன்மையை பாராட்டுகிறோம்.

கடந்த 08.09.2011 அன்று ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் ஆலோசனை கூட்டம் என்று கூட்டப்பட்டு, தங்கள் அமைப்பின் தீர்மான முன்வடிவம் என்று பெயர் மாற்றம் பெற்று பல தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு, முடிவில் இதுதான் தீர்மானம் என்று முடிவெடுத்தாகி விட்டது என்ற செய்தியை தெரிவிக்கும் விதமாக தீர்மான நகலை 10.09.2011 தேதியிட்ட கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளீர்கள்.

உங்கள் 10.09.2011 தேதியிட்ட கடிதத்திற்கு பதில் அளிக்கும் முகமாக எங்கள் அமைப்பின் சார்பாக ஒரு சில கருத்துக்களை கூற விரும்புகிறோம்.

1. 08.09.2011 அன்று ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அழைக்கப்பட்டோம். ஆனால் அன்று ஆலோசனை கூட்டமே நடைபெறவில்லை

2. எங்கள் அமைப்பின் சார்பாக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், எங்கள் அமைப்பின் கொள்கை முடிவை தீர்மானிக்கக் கூடிய முழு அதிகாரம் பெற்றவர்கள் அல்ல. எங்கள் அமைப்பின் பிரதிநிதிகள்தான் கலந்து கொண்டார்கள்

3. உங்கள் அமைப்பின் தீர்மானத்தில் நல்ல கருத்தொற்றுமை நிறைந்திருந்தாலும், தீர்மான எண் 4 - இல் குறிப்பிடும் செய்தியாகிய ஐக்கியப் பேரவை அடையாளம் காட்டும் 25 நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற கருத்தை எங்கள் அமைப்பு இம்மியளவும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில், ஐக்கிய பேரவை நான்கு உறுப்பினர்களை அனைத்து, ஜமாஅத்துகள், அனைத்து அமைப்புகள் அடங்கிய கூட்டுக் குழுவின் சம்மதத்தோடு தேர்வு செய்யலாம் என்ற யோசனையை எங்கள் காயல்பட்டணம் நல அறக்கட்டளையின் கருத்தாகத் தெரிவிக்கிறோம்

ஆகவே எங்கள் அமைப்பின் கருத்துக்களுடன், பல ஜமாஅத்து மற்றும் பல அமைப்பு ஆகியோர்களின் கருத்துகளுக்கேற்ப, அனைவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, ஒரு கருத்தொற்றுமையை தீர்மானமாக வடிவமைத்து எங்களுக்கு தெரிவித்தால், அதை எங்கள் அமைப்பு பரிசீலித்து, அத்துனை அங்கத்தினர்களின் ஒட்டுமொத ஒருங்கிணைந்த முடிவு எதுவோ, அதையே எண்களின் இறுதி முடிவாக அறிவிக்க இருக்கிறோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்

எது எப்படி இருந்தாலும், எவரவர் எந்தெந்த கோணத்தில் சிந்தித்தாலும், எதிர்காலத்தில் ஒரு நேர்மையான, தூய்மையான நகராட்சி அமைத்திட, நாம் அனைவரும் உள்ளத் தூய்மையாக பணியாற்றிட வேண்டும் என்று வெள்ளை உள்ளதோடு உளமார வேண்டுகிறோம்! நீதியுடைய நடுநிலையாளர்களுக்கு அல்லாஹ் எப்பொழுதும் துணை புரிவான். ஆமீன் வஸ்ஸலாம்.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
முஹம்மது ஆதம் சுல்தான்,
பொது செயலாளர், காயல்பட்டணம் நல அறக்கட்டளை.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஐக்கியப் பேரவைக்கு காயல்ப...
posted by M Sajith (DUBAI) [15 September 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8177

was trying to post my below comment in the earlier news item few times - but failed saying 'Invalid security text" I'm happy to see this thought being reflected .. Alhamdulliah another good start..

""பேரவை 08-09௨011 அன்று ஜலாலிய்யாவில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பங்கேற்று 11 தீர்மானங்களுக்கு ஒப்புதல் தந்த அணைத்த ஜமாஅத் மற்றும் பொது நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்."

இது அறிக்கையின் வாசகம்..
v ஐக்கிய பேரவையின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்யும் இந்த வேளையில் - இந்த வாசகங்களுக்கு மறுப்பு தெரிவிப்பது உடண்பாடு இல்லாத ஜாமாத்துக்களின் கடமையில்லையா?

ஏன் இந்த மௌனம்?
v ஜமாத்தை கூட்டி விவாதித்து நிலைப்பாட்டை இப்போது கூட தெரிவிக்காமல் இருப்பது சரியா?

இதை செய்ய தவரினால் நீங்களும் அநீதிக்கு துணை செய்ததவர்களாக ஆகமாட்டீர்க்ளா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஐக்கியப் பேரவைக்கு காயல்ப...
posted by Zainul Abdeen (Dubai) [15 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8179

இது எப்போ ???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ஐக்கியப் பேரவைக்கு காயல்ப...
posted by Zainul Abdeen (Dubai) [15 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8180

"ஐக்கிய பேரவையின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்யும் இந்த வேளையில் - இந்த வாசகங்களுக்கு மறுப்பு தெரிவிப்பது உடண்பாடு இல்லாத ஜாமாத்துக்களின் கடமையில்லையா?"

ஆம் கடமைதான் அதை அவர் அவர்கள் அந்த அந்த ஜமாத்தில் உள்ளவர்களாக இருந்தால் அவர்கள் ஒன்று கூடி முடிவெடுத்து சொல்லுவார்கள். அதை ஜமாத்தில் உள்ளவர்கள் கவனித்துகொள்வார்கள். அப்படி முடிவெடுக்கும் தருவாயில் குழப்புவதிருக்கு என்றே இருப்பவர்கள் அங்கும் இருக்கத்தான் செய்வார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் யார் என்ன முடிவு எடுக்க முடியும்.

ஆனால் கூட்டம் முடியும் போது ஒரு தீர்மானத்துக்கு வந்துதான் ஆவர்கள் இருப்பினும் பலருக்கு கருத்து வேற்பாடுகள் இருக்கத்தான் செய்யும். எனவே இது முடிவில்லாதது .......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ஐக்கியப் பேரவைக்கு காயல்ப...
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [15 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8184

Sajith Bro

You need to try after clear cookies.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ஐக்கியப் பேரவைக்கு காயல்ப...
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [15 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8185

ஐக்கிய பேரவை இன்னும் மாறவே இல்லை போலும்.

கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்.

http://kayalpatnam.com/shownews.asp?id=170
http://kayalpatnam.com/shownews.asp?id=171


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. பாம்பின் கால் பாம்பறியும்...
posted by M Sajith (DUBAI) [15 September 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8188

உன்மைதான், ஒரு முடிவு என்பதில் 100% ஒத்தக்கருத்து வருவது கோமான் ஜமாத்தினரைத்த்விர நம்மில் அநேகருக்கு கடிணம்தான்.

இது அவர்களிடம் அனைவரும் கற்க வேண்டிய பாடம்ன்னு சொன்னால் பலரின் நெஞ்சு வலிப்பதும் வழக்கம்தான்.

அனாலும்,

தானே தயாரித்து, அதைவாசித்து ஆட்சேபம் செய்தால் மைக்கை ஆப் செய்து, பின் நாரே தக்பீர் என வாயடைக்கும் இந்த புதிய பழக்கம் சரியில்லை

எல்லோரும் ஐக்கிய ஜமாத்துக்கு அடிமை சாசனம் ஒன்றும் தரவில்லை. தங்களை துளியும் கருத்தில் கொள்ளாத,ஊர் ஒற்றுமை என வெரும் கதை சொல்லும் அமைப்பு தங்களுக்கு ஒரு பயனும் தராது.

இதை கூட புரியாத, அடிப்படை அறிவும், மதியும் இல்லாத மக்கள் எந்த ஜமாத்திலும் இல்லை. இதனை எடுத்து சொல்ல தெரியாத தலைமையும் / நிர்வாகமும் இல்லை.

இறைவன் மீது பயமும், கேள்வி கேட்கப்படும் என்ற எண்ணமும் இருக்கிறதா என்பது அவரவருக்குத்தான் தெரியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Peravai open the mouth plz!!
posted by Rayyan's Dad (USA) [15 September 2011]
IP: 63.*.*.* United States | Comment Reference Number: 8193

Its so sad to see, the discussion around this ME going back & forth without any solution. Even not sure whether we are going to reach any amicable agreement before the end of this election.

I'm pretty sure 'Peravai' is also watching the news/comments on this or any kayal webistes. Still am wondering...why Aikkiya Peravai is not responding or clarifying to that '#25 representatives for Peravai' since most of us (incl. MEGA & KWT) having dissent & circling back to the same issue. Peravai can either try to justify it or arrive at some # which is something acceptable to everyone.

After going through news on this Municipal election for the past one month, I guess enough has been discussed and criticized. Nothing is going to benefit if we keep on discussing or criticizing it. So let us keep moving & someone (esp. MEGA which is set up for ME guidance) can comeforward/take the lead to bring everyone (esp.Pervai,KWT,orgs etc) to the table to arrive at consensus on this.

Unity is possible only through kicking out our personal/organizational level egos & be open for required compromise which benefits our people and society.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:ஐக்கியப் பேரவைக்கு காயல்ப...
posted by A.R.Refaye (Abudhabi) [16 September 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8212

அஸ்ஸலாமு அழைக்கும்,

தற்போது ஐக்கியப் பேரவையை நோக்கி வரும் மடல்களில் குறிப்பாக ஐக்கியப் பேரவை அடையாளம் காட்டும் 25 நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற கருத்தை பல அமைப்பு மற்றும் சமுதாய நலனில் அக்கரைகொண்டோண்டோர் இம்மியளவும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் இருப்பதை அறிய முடிகிறது.இந்த சூழ்நிலையில் ஐக்கியப் பேரவைக்கே இன்னும் ஆலோசகர்கள் வேண்டும் போல் தெருகிறது.

ஊர் ஒற்றுமைக்காகவும் அறிய நற்திட்டங்களை ஊருக்காக பெற்று தந்த இந்த சீரிய பேரவை நகராச்சி தலைவரை ஒட்டு மொத்த காயல் மக்களும் ஏற்க்கும் ஏற்றம் பெற வைக்கும் நல்ல தலைவரை இனம் காட்டுங்கள் பல அமர்வுகளும் தேர்வுகளும் தொடங்கட்டும் போட்டி இன்றி தலைவரையும் கவுன்சிலர்களையும் தேர்ந்தெடுத்து வரலாற்று சிறப்பு நிரந்த இம்மண்ணின் மகத்துவத்திற்கு மீண்டும் பெருமை சேர்த்து நமது தமிழகமும் இந்தியாவும் நம் நகராச்சியை திரும்பி பார்க்க வைப்போம். வெறும் கதையாக இல்லாமல் நிஜமாக்கி காட்டுவோம்.

பெரும் கருணையாளன் துணை வேண்டி அவனிடம் கரம்தூக்கி நல்ல தலைவரை தர தவறாமல் வேண்டுவோம்.

A.R.Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. ஐக்கியப் பேரவைக்கு காயல்ப...
posted by Solukku Seyed Mohamed Sahib SMI (Jeddah) [17 September 2011]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 8265

எல்லா ஜமாதாலும் இரு பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்பட்டு அந்த ஜமாத்துக்களின் பிரதிநிதிகளை கொண்டு ஐக்கிய ஜமாஅத் உருவாக்கப்பட்டிருந்தால் இப்படியான கருத்துவேறுபாடுகள் வந்திருக்காது.

இப்படியான தருணங்களிலாவது அப்படியான ஓர் கட்டமைப்பை உண்டாக்க வேண்டும், தற்போது பதவி வகிப்பவர்கள் தன்னலம் பாராது ஐக்கிய பேரவையின் நிர்வாக குழுவை கலைத்துவிட்டு மேற்கூறிய முறைப்படி பேரவையின் நிர்வாககுழுவை ஏற்படுத்தினால் எல்லாம் நலமாகும். ஐக்கியம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் ஏற்படும்.

எல்லோருக்கும் தன்னலம் பாராத சிந்தனையை அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:ஐக்கியப் பேரவைக்கு காயல்ப...
posted by Hameed Mohdoom Mohamed (Seena) (Kayalpatnam,) [17 September 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 8288

உலகில் ஒரு ஐக்கிய நாடுகள் சபை என்று ஒரு சபையை வைத்து கொண்டு உலக நாடுகளுக்கெல்லாம் நாட்டாமை பண்ணுவது போல இங்கே ஐக்கிய பேரவை ஒன்று அமைக்க பட்ட நோக்கத்தை மறந்து ஏதோ VETO அதிகாரம் உள்ளது போல 26 பேரை தன்னிச்சையாக நியமனம் செய்வது...தங்கள் விரும்பும் படி தீர்மானம் போடுவது......இதை எல்லாம் மறைக்க ஐக்கியம், ஊரு ஒற்றுமை என்ற போர்வைவையை போட்டு கொள்வது இது தான் வழக்கமான கேலி கூத்த போச்சி!!!

உருவாக்கப்பட்ட நோக்கம் மறந்து அனிதா விற்கு தேர்தலில் பகிங்கர ஆதரவு...ஐக்கிய பேரவையை அழகிரி பேரவையா மாற்றியது...இதற்கெல்லாம் எந்த ஜமாத்தை கூப்பிட்டு ஆலோசனை கேட்டார்கள். இதனால் என்ன பலன் தற்போது ஆளும் கட்சியின் எதிர்ப்பை சம்பாதித்தது...நல்ல திட்டங்கள் நமது ஊருக்கு வருவதற்கு முட்டு கட்டையா உங்கள் கட்சி பாசம் கொண்டு வந்து விட்டிர்கிறது....

பேர் அளவுக்கு மட்டும் ஐக்கியம் உள்ள பேரவை...தேவை இல்லை உண்மையான ஊர் நலனை மட்டும் பேணும் பேரவை தான் வேண்டும் ...சிந்திப்போம் ...செயல்படும் நேரம் வந்துவிட்டது !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved