Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:41:44 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7319
#KOTW7319
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, செப்டம்பர் 30, 2011
உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்கு வேட்பு மனு செய்த இருவருக்கு இரண்டு இடங்களில் வாக்குரிமை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4786 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 7)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் 22.09.2011 அன்று துவங்கியது. இம்மாதம் 29ஆம் தேதி (நாளை) வரை வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.

காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் பொறுப்பு இம்முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று (செப்.29) வேட்பு மனு அளிக்க கடைசி நாளாகும். வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளான நேற்று வரை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்கு 07 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களின் பட்டியல் பின்வருமாறு:-

(1) காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சார்ந்த இறைச்சிக்கடை சுல்தான் ஜமாலுத்தீன் என்பவரின் மனைவி கே.பி.செய்யித் மர்யம்.

(2) ஆறாம்பள்ளித் தெருவைச் சார்ந்த என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் என்பவரின் மனைவி முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யா.

(3) காயிதேமில்லத் நகரைச் சார்ந்த சிங்கப்பூரார் முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்பவரின் மனைவி எச்.எம்.முஹம்மத் இப்றாஹீம் உம்மா.

(4) மகுதூம் தெருவைச் சார்ந்த ஷேக் அப்துல் காதிர் என்பவரின் மனைவி ஆபிதா ஷேக்.

(5) ஆறாம்பள்ளித் தெருவைச் சார்ந்த அபூ முஹம்மத் ஸலாஹுத்தீன் என்பவரின் மனைவி ஆயிஷா பர்வீன்.

(6) ஓடக்கரையைச் சார்ந்த ஆல்பர்ட் நாடார் என்பவரின் மனைவி ஏ.ருத்தம்மாள்.

(7) ஆறாம்பள்ளித் தெருவைச் சார்ந்த செய்யித் முஹம்மத் என்பவரின் மனைவி நஃபீஸத்து தாஹிரா.

இவர்களுள், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் நகர்மன்றத் தலைவர் தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டதன் அடிப்படையில் 28.09.2011 அன்று வேட்பு மனு தாக்கல் செய்த, ஆறாம்பள்ளித் தெருவைச் சார்ந்த என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் என்பவரின் மனைவி முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யா என்பவருக்கும்,

வேட்பு மனு செய்ய கடைசி நாளான 29.09.2011 அன்று (நேற்று), வேட்பு மனுச் செய்ய கடைசி நேரமான மதியம் 03.00 மணிக்கு சில நிமிடங்களுக்கு முன் வேட்பு மனு தாக்கல் செய்த அவரது தாயார் - ஆறாம்பள்ளித் தெருவைச் சார்ந்த செய்யித் மஹ்மூத் என்பவரின் மனைவி நஃபீஸத்து தாஹிரா என்பவருக்கும் காயல்பட்டினம், திருச்சி (கிழக்கு) ஆகிய இரண்டு இடங்களிலும் வாக்குரிமை உள்ளது.





சட்ட விதிகளின்படி ஒருவருக்கு ஒரு இடத்தில் மட்டுமே வாக்குரிமை இருக்க வேண்டும். இந்நிலையில், இவ்விருவரின் பெயர்களும் காயல்பட்டினம், திருச்சி (கிழக்கு) ஆகிய இரண்டிடங்களிலுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது நேற்று முதல் நகரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, அந்த வேட்பாளர்கள் தரப்பில் விசாரித்தபோது, இவர்களின் திருச்சி (கிழக்கு) வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த வாக்குரிமையை நீக்கம் செய்ய விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by M Sajith (DUBAI) [30 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9157

சாரி ஜென்டில்மென்,

வேட்பாளர் profile லில், இதை குறிப்பிட மறந்துட்டாங்க.. அதான் alternate ஆக அவங்க உம்மாவ போட்டிருக்கோமே, இவங்க களத்துல இல்லேனா அவங்களுக்கு போடுங்க..

Remote conrol நம்மகிட்ட தானே இருக்கு வேண்டிய சேனலை நாம வச்சி பாத்துக்கலாம்.

"உல்லாச உலகம் நமக்கே சொந்தம் தையடா தையடா தையடா.."


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohamed Cnash (Kayalpatnam.) [30 September 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 9163

அப்போ இவங்க ரெண்டு பேரோட வேட்பு மனுவும் நிராகரிக்க பட்டால்.. அடுத்த வேட்பாளர் ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம் ) [30 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 9164

நல்ல கூத்து.

இப்படி நல்ல கோட்டை விடுங்க.

அப்புறம் ஒவ்வொருவரும் ஆளாளுக்கு ஓட்டை(வாக்குகளை) பிரித்து, நம் தெருவில் காய்கறி விற்று வந்த " ஓடக்கரையைச் சார்ந்த ஆல்பர்ட் நாடார் என்பவரின் மனைவி ஏ.ருத்தம்மாள் அக்காவை" நம் ஊரின் தலைவியாக தேர்ந்து எடுங்க.

அவிங்க எல்லாம் நல்ல்ல்ல விவரமாக இருக்காங்க. பார்த்து நடந்துக்கொள்ளுங்க.

சாளை S.I.ஜியாவுதீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by S.A.C Salih (Chennai) [30 September 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 9169

காயல் நகர வாக்காளப் பெருமக்களின் கவனத்திற்கு....

பாகிஸ்தானின் பெண் மந்திரி ஹினா ரப்பானி போன்ற அறிவுக்கூர்மையும், அனைவருடனும் இனிமையாக பழகும் பண்பாளரும் படித்த பட்டதாரியும், பல்வேறு சமூக சேவைகளில் தன்னலம் பாராமல் ஈடுபட்டு வருபவரும், கடந்த 12 வருட காலமாக Rafyas Rosery பள்ளி நிர்வாகத்தை முதல்வராக இருந்து சிறப்பாக நடத்தி வரும் அன்பு சகோதரி ஆபிதா B.sc., B.Ed., தற்போதுள்ள சூழ்நிலையில் நகர் மன்ற தலைவர் பொறுப்புக்கு மிகவும் பொருத்த மானவர்.

இவருக்கு ஏற்கனவே பல்வேறு IAS அதிகாரிகள் மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகளின் செல்வாக்கு உள்ளது.

தமது சொந்த பணத்தை செலவு செய்து பல்வேறு சமூக சேவைகள் செய்து வருகிறார். தற்போதுள்ள சூழ்நிலையில் இவரே நமது நகர் மன்றத்திற்கு பொருத்தமான தலைவர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Samu.A.B (Dubai) [30 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9173

....they plot, but Allah (also) plotteth; and Allah is the best of plotters. Al -Anfal 8 :30. Lets wait and see as the story unfold ......very sad state of affairs....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by புகாரி (சென்னை) [30 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 9174

Dear Admin,

சகோதரர் ஜியாவுதீன் குறிப்பிட்டது போல் பொருள்படும் கருத்தைதானே நானும் நேற்று குறிப்பிட்டு இருந்தேன். அனால் அது சர்ச்சைக்குரிய கருத்து என்று நிராகரிக்கப்பட்டு விட்டதே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATNAM) [30 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9185

நமதூரில் நிறையபேருக்கு இதுபோல் இருக்கிறது. ஆனால் அது உம்மாவீடு பெண்வீடு என்றிருக்கும். டபுள் என்றி. இது ஊர் கடந்து ஊர் என்றிருக்கிறது. நல்லவேளை முதலிலயே கவனித்தார்கள். இல்லையேல் வேட்ப்புமனு "ஸ்வாகா "ஆகி இருக்கும். "தப்பித்து வந்தானம்மா இவன் தனியாக நின்றனம்மா..." ஆமா தம்பி சாஜித் இந்த பழைய பாட்டெல்லாம் நீ எங்கிருந்து அறிந்தாய்,,,,!ஓல்ட் ஈஸ் கோல்ட் அப்பா...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Fuad (Singapore) [30 September 2011]
IP: 171.*.*.* Singapore | Comment Reference Number: 9193

அஸ்ஸலாமு அலைக்கும். நகரமன்ற தலைவர் பதவிக்கு ஐக்கியப்பேரவையால் தெரிவு செய்யப்பட்ட இரு வேட்பாளர்களுக்கும் திருச்சியில் ஓட்டு இருப்பதால் இதை முற்கூட்டியே ஐக்கியப்பரவையில் சரிபார்த்திருந்தால் இந்த குழப்பம் வந்திருக்க வாய்ப்பில்லை. அந்த இருவரையும் தவிர தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் நல்ல மற்றும் திறமையான நபரை ஐக்கியப்பேரவை சார்பாக அறிவிக்கலாம்.

அநேக மக்களின் கருத்துப்படி சகோதரி ஆபித தலைவர் பதவிக்கு தகுதியானவர். ஆகவே, ஐக்கியப்பேரவை,அனைத்து ஜமாஅத்துக்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் கூடி ஆலோசித்து ஒரு நல்ல முடிவை நம் மக்களுக்கு அறிவித்துவிடுங்கள். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by mackie noohuthambi (kayalpatnam) [01 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9241

அதிர்ச்சியளிக்கும் செய்தி. வழக்கறிஞர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். சட்ட வல்லுனர்கள் செயல்படும்விதம் கவலையளிக்கிறது. நமது நாட்டு ஜனநாயகம் எப்படியெல்லாம் கேலிகூததாகி விட்டது என்று மக்கள் வேதனைப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் நாம் ஒரே குடையின்கீழ் ஒன்று பட்டு தேர்தலை சந்திக்க முடியாமல்போய்விட்டதே என்று நடுநிலையாளர்கள் கதி கலங்கிக்கொண்டு அங்கலாய்த்துக்கொண்டு இருக்கும் இந்த வேளையில் இப்படி ஒரு வெடிகுண்டு வெடிக்கிறதே,

இறைவா என்ன சோதனை, நல்லாட்சி அமைய நீயே வழி காட்டு என்று நாம் அல்லாஹ்விடம் கை ஏந்தி கேட்போம். நேற்று மழைக்காக பிரார்திததுபோல் இன்று நல்லாட்சிக்காக பிரார்த்திப்போம். யா அல்லாஹ் எது எங்களுக்கு நன்மையோ அதை எங்களுக்கு தந்தருள்வாயாக எது தீமை பயக்குமோ அதை விட்டும் எங்களை பாதுகாத்து அருள்வாயாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by A.M. Syed Ahmed (Riyadh) [01 October 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9242

எல்லாம் சரிதான், திருச்சியில் இவர்கள் ஓட்டை வேறு யாரும் போட்டு விட போகிறார்கள்....இன்னும் பிரச்சனை ஆகிவிடும்.

ஐக்கிய பேரவை - முதியவர்கள் வழிவிடுங்கள் இளையவர்கள் ஆளட்டும்.....

Hamdan & Adnan


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by KADER (China) [01 October 2011]
IP: 69.*.*.* United States | Comment Reference Number: 9281

ஐக்கிய பேரவை வேட்பாளரின் வேட்புமனு செல்லுபடியகிவிட்டது என்ற செய்தி, இங்கு எசகுபிசகாக கருத்து தெரிவித்த துபாய் சகோதரகளுக்கு சரியான மூகுடைப்புதானே ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved