Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:38:47 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7336
#KOTW7336
Increase Font Size Decrease Font Size
திங்கள், அக்டோபர் 3, 2011
புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் தன்னிலை விளக்கம்!
செய்திமாஸ்டர் கம்ப்யூட்டர்
இந்த பக்கம் 5385 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (29) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

புதுப்பள்ளி
தைக்கா தெரு, காயல்பட்டணம்

03-10-2011

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால்...

எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கவிருக்கும் புதுப்பள்ளி ஜமாஅத்தினர் மற்றும் 16வது வார்டு வாக்காளப் பெருமக்களின் மேலான கவனத்திற்கு ....

அன்புடையீர்!அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எதிர்வரும் நமதூர் நகர்மன்ற தேர்தலில் நமது புதுப்பள்ளி ஜமாஅத்திற்குட்பட்ட 16வது வார்டு உறுப்பினரையும், நகர்மன்ற தலைவரையும் தேர்ந்தெடுக்கப்பட்டது சம்பந்தமாக சில உண்மைகளை தங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவையில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் 05-09-2011 அன்று பேரவையில் நடைபெற்றது. அதில் தற்போதைய நகராட்சி நிலவரம் பற்றியும், வருங்காலத்தில் நகர்மன்றம் இயங்க வேண்டிய நிலை பற்றியும் விவாதிக்கப்பட்டது.

நமதூர் நலன் கருதி கலந்தாய்வில் எடுக்கப்பட்ட முடிவின்படி வரும் தேர்தலில் ஒவ்வொரு வார்டுக்கும் ஏகோபித்த ஒரு பொது உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கவும் நகரில் நேர்மையான ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் பேரவை ஈடுபடலாமா என்று ஆலோசனை கேட்டார்கள். குறைநிறைகளை பலரும் அவரவர் கோணத்தில் சொல்லி காண்பித்தார்கள். இறுதியில் 08-9-2011 அன்று அனைத்து ஜமாஅத்தையும் ஜலாலியாவில் கூட்டி அனைத்து ஜமாஅத்துக்கள் பொது நல அமைப்புகளின் ஒத்துழைப்புடன் தீர்மானம் முன்மொழிந்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து இந்த செய்திகளை நமது ஜமாஅத்திற்கு தெரிவித்து ஒப்புதல் பெறும் நல்ல நோக்கோடு 11-09-2011 அன்று புதுப்பள்ளி ஜமாஅத் கூட்டம் நடைபெற்றது. பேரவையில் நடைபெற்ற பதிவுகளை எடுத்துரைத்து, நமது 16வது வார்டுக்கும் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க வலியுறுத்தப்பட்டது.

இதற்கிடையில் நமது ஜமாஅத்திற்கு விருப்ப மனு தந்திருக்கும் 16வது வார்டைச் சார்ந்த சகோதரர்கள் பாளையம் செய்யது முஹம்மது, S.A. சாமு சிகாபுத்தீன், K.M. மூஸா நெய்னா, கலீபா செய்யது முகம்மது லெப்பை, M.M. மஹ்மூது ஆகிய ஐந்து நபர்களின் பெயர்களையும் வாசித்து காட்டப்பட்டது. கருத்துக்கள் கேட்டதில் பல தரப்பட்ட வாக்குவாதங்கள் நடைபெற்று எந்த முடிவும் எடுக்காமல், 20-09-2011 தேதி கடைசி நாளாகவும், இதற்குள் வேறு யாரும் மனு தாக்கல் செய்தால் அதையும் சேர்த்து 21,22 தேதிகளில் இன்னொரு கூட்டம் நடத்தி முடிவு செய்ய தீர்மானம் நிறைவேற்றி கூட்டம் நிறைவானது.

20-09-2011 வரை வேறு யாரும் விருப்ப மனு தராததாலும் அந்த ஐந்து பேரையும் வைத்துத் தான் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலையில் மீண்டும் பொதுக்குழுவைக் கூட்டும் முன் எந்த முறையில் செயல்படலாம் என்பதை முடிவு செய்ய 22-09-2011 அன்று நிர்வாகக்குழுவை கூட்டி விவாதிக்கப்பட்டது. நீண்ட நேரம் கருத்துக்களை கேட்டறிந்து வாக்குவாதங்கள் நடைபெற்றது. இறுதியாக விருப்ப மனு தந்துள்ள ஐந்து நபர்களையும் சந்தித்து நேர்காணல் செய்ய ஜமாஅத்தைச் சார்ந்த ஐந்து நபர் கொண்ட (Negotiators) குழு அமைக்கப்பட்டது. இதில் சகோதரர்கள் பாளையம் முஹியத்தீன் அப்துல் காதர், P.S.M. இல்யாஸ், S.A. முஸ்தபா, S.M.கலீல், S.A.செய்யது உமர் ஆகியவர்களை நியமிக்க செயற்குழு முடிவு செய்தது. இதில் பாளையம் முஹ்யித்தீன் அப்துல் காதர் அவர்களின் வர இயலாமையின் காரணமாக சகோதரர் B.M நஜ்முத்தீன் அவர்கள் அந்த இடத்தில் நியமிக்கப்பட்டார்கள்.

இந்த ஐவர் குழு விருப்ப மனு தந்துள்ள 5 நபர்களையும் அழைத்து கலந்தாலோசித்தார்கள். இக்கூட்டத்திலும் விவாதங்கள் தொடர்ந்து இந்த ஐவரில் மூத்த இருவர் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பேசி முடிவுக்கு வரும்பட்சத்தில் மற்ற மூவரும் வாபஸ் பெற்றுக் கொள்ள சம்மதித்தார்கள். இதை ஏற்றுக் கொண்ட ஐவர் குழு நிர்வாகக் குழுவிற்கு தகவல் தந்தது. ஆனால் மூத்த இருவருக்கிடையில் எவ்வித சமரசமும் ஏற்படாததால் நிர்வாகக்குழு 25-09- 2011 அன்று கூடி மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசனை செய்யப்பட்டது. அதன்படி 25-09-2011 அன்று நிர்வாகக்குழு கூடி கருத்துப்பரிமாற்றங்கள், வாதங்கள் கேட்டறிந்து 27-9-2011 அன்று பொதுக்குழு ஜமாஅத்தை கூட்டி 16வது வார்டுக்கு உட்பட்டவர்கள் மட்டும் வாக்களித்து விருப்ப மனு தந்த இந்த ஐவரில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில் 'ஜமாஅத்தாரின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றும் தன்னை தேர்ந்தெடுத்தால் நேர்மையாக பாகுபாடின்றி செயல்படுவேன் என்றும், தேர்ந்தெடுக்கப்படாத பட்சத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் வெற்றிக்கு பாடுபடுவேன்' என்ற ஒரு முச்சரிக்கையில் கையெழுத்திட ஆரம்பத்திலேயே இந்த ஐவரிடமும் கேட்கப்பட்டது. அவர்களில் சகோதரர்கள் K.M. மூஸா நெய்னா, S.A.சாமு சிகாபுத்தீன் ஆகியோர் கையெழுத்திட்டார்கள். மற்ற மூவரும் கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததோடு அல்லாமல், அதில் ஒருவர் 'கையெழுத்திடவும் மாட்டேன். ஜமாஅத் கூட்டத்திற்கு வரவும் மாட்டேன். ஒருவேளை பேரவையின் கவனத்திற்கு கொண்டு போனாலும் அங்கும் வர மாட்டேன்' என்று முடிவாக சொல்லி விட்டார்கள்.

இதனால் நிர்வாகக்குழுவில் உள்ளவர்களில் ஒரு சிலர் முச்சரிக்கையில் கையெழுத்திடாதவர்களை ஏன் தேர்வு செய்ய வேண்டும். கையெழுத்து போட்ட இருவருக்கு மட்டுமே தேர்வு நடத்தினால் போதும் என்றும் அபிப்பிராயப்பட்டார்கள். அதற்கு தலைவர் அவர்கள் நிர்வாகக்குழுவில் என்ன முடிவு செய்யப்பட்டதோ அதன்படி ஐந்து நபர்களையும் வைத்துத் தான் தேர்வு நடைபெறும் என்று கூறி விட்டார்கள். இப்பொழுது எதிர்வாதம் பேசுவோர் பேரவைக்கோ ஜமாஅத்திற்கோ கட்டுப்பட மாட்டோம் என்று முற்கூட்டியே முடிவு செய்திருந்தால் எதற்காக ஜமாஅத் அல்லது பேரவைக்கு ஆதரவு கேட்டு விண்ணப்பித்தார்கள் என்பது விளங்கவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட மனுக்கள் வரும் பட்சத்தில் எப்படி ஒருவரை தேர்வு செய்ய முடியும் என்பதை தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.

அந்த அடிப்படையில் தேர்தல் பணி அலுவலர்களாக 16வது வார்டுக்கு அப்பாற்பட்ட சகோதர்கள் P.S.A. பல்லாக் லெப்பை, S.A. முஸ்தபா, S.M. கலீல், B.M. நஜ்முத்தீன் ஆகியோரை நிர்வாகம் நியமித்தது. அதன்படி முறையாக ஒலிபெருக்கியிலும் தைக்கா தெரு சந்தியில் அறிவிப்பு பலகை மூலமும் அறிவித்து 27-09-2011 அன்று நேர்மையான முறையில் அமைதியாக காலை 10:30 மணி முதல் மதியம் 12:15 மணி வரை (லுஹர் பாங்கு சொல்லும் வரை) தேர்தல் நடைபெற்றது.

அவ்வாறே தேர்தல் நடந்து முடிந்த பின்னர் லுஹர் ஜமாஅத்திற்குப் பிறகு அனைவரின் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன.

மொத்தம் பதிவான வாக்குகள் - 104
செல்லாதவை - 5
செல்லத்தக்க வாக்குகள் - 99
இதில் S.A. சாமு சிகாபுத்தீன் - 72
பாளையம் செய்து முகம்மது - 11
K.M. மூஸா நெய்னா - 10
கலீபா செய்து முகம்மது லெப்பை - 6
M.M. மஹ்மூது - 0
என்றபடி 99 வாக்குகள் என பதிவாகி இருந்தன.

ஆகவே சகோதரர் S.A. சாமு சிகாபுத்தீன் அவர்களை நம் புதுப்பள்ளிக்குட்பட்ட 16வது வார்டின் அங்கீகரிக்கப்பட்ட பொது வேட்பாளராக தேர்வு செய்து அறிவிக்கப்பட்டது. ஜமாஅத்தில் கூடி இருந்த அனைவரும் இந்தத் தேர்வின் முடிவை ஏகமனதாக ஏற்றுக் கொண்டார்கள்.

நகராட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கான விண்ணப்பங்களும், தேர்வும் (நகர்மன்ற தலைவர் தேர்வு)

தலைவர் தேர்வு முறை பேரவையால் எடுக்கப்பட்ட முடிவு யாவரும் அறிந்ததே. இதர வேட்பாளர்களுள் நமது ஜமாஅத்தைச் சார்ந்த பாளையம் இப்ராஹீம் அவர்களின் மகள் சகோதரி P.M.I. ஆபிதா பேகம் B.Sc.,.B.E.d., அவர்களும் பேரவைக்கு விண்ணப்பம் செய்து நமது ஜமாஅத்திற்கும் முறைப்படி அறிவித்தார்கள். அதன்படி பேரவையின் ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொண்ட நமது ஜமாஅத் தலைவரும் நமது ஜமாஅத் வேட்பாளரையே தெரிவு செய்யும்படி சிபாரிசு செய;திருக்கிறார்கள். இந்த சிபாரிசிற்கு பேரவையின் பல உறுப்பினர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் இருந்தது. இருப்பினும் பேரவையின் முச்சரிக்கையில் கையெழுத்து வாங்கித் தந்தால் பரிசீலிப்பதாக சொன்னார்கள். இதைத் தொடர்ந்து பேரவை மூலமாகவும் நமது புதுப்பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் J.A. லரீஃப் அவர்களின் மூலமும் நிர்வாகத்தின் உதவித் தலைவர் சகோதரர் S.S.M. புகாரி அவர்கள் மூலமும் இறுதியில் தலைவர் அவர்கள் வேட்பாளரின் கணவரின் மூலமும் கேட்டும் முச்சரிக்கையில் கையெழுத்திட மேற்படி சகோதரி P.M.I. ஆபிதா அவர்கள் மறுத்து விட்டார்கள். ஏன் கையெழுத்து போடவில்லை என்பதற்கு பேரவைக்கு நேரடியாக கடிதமும் எழுதி விட்டார்கள். இருந்தும் 27-09-2011 அன்று பகல் 2 மணி வரை எதிர்பார்த்தும் கையெழுத்து கிடைக்காத பட்சத்தில், அன்று பின்னேரம் ஜலாலிய்யாவில் நடந்த அனைத்து ஜமாஅத்தார்கள் கூட்டத்தில் கையெழுத்திட மறுத்தவர்களை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாமா என்று பேரவையால் கேட்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட அனைத்து ஜமாஅத்தினரும் பொது நல அமைப்புகளும் அதற்கு அனுமதி வழங்கவில்லை. கையெழுத்து போட மறுத்தவர்களை நீக்கி விட்டு கையெழுத்து போட்ட நான்கு நபர்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில் வைத்து தேர்வு செய்து முடிவையும் அறிவித்திருக்கிறார்கள். இதன் மூலம் தெரிவிப்பது என்னவென்றால் நமது தலைவரோ அல்லது நிர்வாகமோ அல்லது பேரவையோ யார் பக்கமும் சார்ந்திராமல் பொதுவாகவே இருந்து வந்தார்கள் என்பது தான் உண்மை. எல்லாமே ஒழிவு மறைவின்றி நடத்தப்பட்டு முடிவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆகவே நகரின் நலன் கருதி நமது 16வது வார்டு அதிகாரப்பூர்வமான வேட்டபாளர் சகோதரர் S.A. சாமு சிகாபுத்தீன் அவர்களை நமது 16வது வார்டு உறுப்பினராகவும், நமதூர் அனைத்து ஜமாஅத்தார்களின் அதிகாரப்பூர்வமான வேட்பாளர் சகோதரி L.S.M. முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யா B.Com., அவர்களை நகர்மன்ற தலைவராகவும் தேர்ந்தெடுப்பதன் மூலம் நமது ஜமாஅத்தின் ஒற்றுமையையும், நகரின் ஒற்றுமையையும் நிலைநாட்டி மரியாதையையும் தேடித்தருமாறு அன்புடனும் பணிவுடனும் வேண்டிக் கொள்கிறேன். நன்றி. வஸ்ஸலாம்!!

' ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு'

என்றும் உண்மையுள்ள
S.M. உஸைர்
தலைவர் மற்றும் நிர்வாகிகள்,
புதுப்பள்ளிவாசல் ஜமாஅத்தார்,
தைக்கா தெரு
காயல்பட்டணம்

தகவல் : S.M. உஸைர்
தலைவர்
புதுப்பள்ளி ஜமாஅத்.
Mobile : +91 9486491547


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் ...
posted by Zainul Abdeen (Dubai) [03 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9382

"இதன் மூலம் தெரிவிப்பது என்னவென்றால் நமது தலைவரோ அல்லது நிர்வாகமோ அல்லது பேரவையோ யார் பக்கமும் சார்ந்திராமல் பொதுவாகவே இருந்து வந்தார்கள் என்பது தான் உண்மை. எல்லாமே ஒழிவு மறைவின்றி நடத்தப்பட்டு முடிவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. "

உண்மையை உறைத்தார்கள் புதுப்பள்ளி ஜமாத்தார்கள். இந்த செய்தி ஒன்றே போதும் ஐக்கிய பேரவையின் சார்பற்ற தன்மை நிலையை பறைசாற்ற !!!

ஐக்கிய பேரவையின் செயல்பாட்டின் மேல் ஐய்யம் உள்ளவர்களுக்கு இது ஒரு தெளிவை கொடுத்திருக்கும். இன்னியும் கள்ளம் பறையாமல் இருத்தல் நல்லது....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் ...
posted by சாளை நவாஸ் (singapore) [03 October 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 9383

சரி, அப்படியே அந்த முன்னெச்சரிக்கை கையெழுத்து கேட்ட அந்த சாசனத்தில் என்ன எழுதி இருந்தார்கள், ஏன் அதற்காக சகோதரி ஆபிதா கையெழுத்திட மறுத்தார் என்ற உண்மையும் இங்கே சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

உங்கள் ஜமாஅத்ஐ சேந்தவர்கள் இதற்காக விளக்கம் அல்லது நியாயம் கேட்டு போனார்களா? உஜைர் ஹாஜியார் அவர்கள் ஐக்கிய பேரவையில் முக்கிய அங்கம் வகிப்பதால் ஜமாஅத் ஆர்கள் வாய்மூடி இருந்தார்களா? இது உங்கள் ஜமாஅத் சார்த்த விஷயம் என்றாலும் இணையத்தில் வெளியிட்டு இருப்பதால், நானும் பொதுப்படையாக கேட்கிறேன்.

நான் யாருக்கும் பரிந்துரை பண்ணவில்லை மேலும் ஐக்கிய பேரவைக்கு எதிரும் அல்ல. சில குள்ள நரிகளால் பேரவை பாழ் பட்டுகொண்டிருக்கிறது என்ற வேதனையில் தான் எழுதிகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. சூப்பர் முடிவு
posted by kudack buhari (doha-qatar) [03 October 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 9386

புதுப்பள்ளி ஜமாத்தார்கள் எடுத்த முடிவு மிக கண்ணியத்துற்குரியதாகவும், பொதுமக்கள் கவனத்திற்கு உரியதாகவும் மனம் திறந்த கருத்தாகவும் உண்மையை உண்மையாக பதிய பட்டதாக இருக்கிது, இந்த முடிவினை நாங்களும் வாழ்த்துகிறோம்

ஆனாலும் சிலரின் செயல் ,.....குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா இதில் எந்த நேரமும் சண்டை ஓயாத (ஈகோஎனும் ) முரட்டு உலகமடா என்று யாரோ ஒரு கவிஞ்சன் எழுதிவைத்தது தான் நாபகம் வருது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் ...
posted by முத்துவாப்பா (அல்-கோபர்) [03 October 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9387

அஸ்ஸலாமு அலைக்கும்,

என் மனதில் தோன்றிய கேள்விகளுக்கு தன்னிலை விளக்கம் மூலம் விளக்கம் தந்த எமது ஜமாத்திற்கு மிக்க நன்றிகள் .

நமது ஜமாஅத் மூலம் 16 வது வார்டு வேட்பாளராக தேர்தெடுக்கப்பட்ட S.A. சாமு சிகாபுத்தீன் காக்கா அவர்களை அமோக வெற்றி பெற செய்வது எங்களது கடமை மற்றும் பொறுப்பு . ஆனால் நகர்மன்றத் தலைவர் வேட்பாளர் விசயத்தில் தயவு செய்து எங்களை நிர்பந்தம் செய்யாதீர்கள் . மேலும் நமது ஜமாத்திற்கு பல சேவைகள் புரிந்த பாளையம் இப்ராஹீம் காக்கா அவர்களின் அருமை புதல்வி , படித்து பட்டம் பெற்ற நமது ஜமாத்தை சேர்ந்த அருமை சகோதரி ஆபிதா அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் .

எங்களுக்கும் ஊர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் , ஐக்கியமாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் இருக்கின்றது ஆனால் இன்று இருக்கும் அமைப்புகளுக்கு அவர்களின் வீட்டில் மட்டும்தான் ஐக்கியம் இருக்கின்றது மகள் இல்லை என்றால் தாய் வேட்பாளர் இத்தகையவர்களை நம்பி எப்படி முச்சரிக்கையில் கையெழுத்திட முடியும். இன்று வஹிதா லாத்தா அவர்களுக்கு ஏற்பட்ட நிலை தான் கையெழுத்திட்டு இருந்தால் ஆபிதா லாத்தா அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் வல்ல அல்லாஹ் அதிலிருந்து நம்மை காப்பாத்தி கொண்டான் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் ...
posted by SEYED ISMAIL (Hong Kong) [03 October 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 9388

alaam, Brothers and Sisters pls vote for Sister Abitha (Br.Shaik's Wife) she is the capable candidate, don’t follow blindly under name of iykiya Jammath,

This Jammath has created more division among our kayalalites. They are acting and working for their personal interest only. They don’t care for the poor people; these groups have some hidden agenda.

Please don’t fall in to their trap so please think individually and cast your vote for the right candidate.

Sister Abitha, she is running a kindergarten successfully for years. So she will act truly to her knowledge and equally for all the norms of people. If you select that jamath candidate they will be surrounded by that jammath people so she will work for one section of people only.

So brothers and sisters please vote for Sister Abitha Please give her chance she will make a change for all Kayalites Not for so called section kayalites. Under Name the Unity they are trying to fool all the kayalites

Insh Allah Pls VOTE FOR ABITHA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் ...
posted by S.A.HABEEB MOHAMED NIZAR (jeddah) [03 October 2011]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9389

அஸ்ஸலாமு அழைக்கும்.... நம் ஜமாத்தார்கள்...எடுத்த... நல்ல முடிவுக்கு...கட்டு பட்டு...நடப்போம்...ஊர் ஒட்ற்றுமை...காண்போம், ...மேன்மை.. அடைவோம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் ...
posted by drnoordeen (muscat) [03 October 2011]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 9392

இப்போது தான் உண்மை நிலை விளங்குஹிறது உஜைர் காக சரியான நேரத்தில் இந்த தகவலை சொல்லி இருகிறார்கள் அல்லா எல்ல வற்றையும் நன்கு அறிந்தவன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் ...
posted by AHMED MOHIDEEN (dubai) [03 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9393

அஸ்ஸலாமு அலைக்கும்

புதுப்பள்ளி ஜமாத்தார்களுக்கு மிக்க நன்றி. ஒரு தெளிவான விளக்கம்

உண்மையில் நான் முதலில் select செய்த தலைவர் Mrs. Abitha அவர்கள் list இல் அதிகம் படித்தவர் ஒரு நல்ல சமுக சேவகரின் மகள் 12 வருடங்களாக ஒரு மழலையர் பள்ளியை தொய்வின்றி நடத்திவருகிறார்

but ஐக்கிய பேரவைக்கு கட்டுபடாத ஒரே காரணத்திற்காக சகோதரி மைமுனதுல் மிஸ்ரியா அவர்களையும் சகோதரர் S A சாமு சிஹாபுதீன் அவர்களின் வெற்றி பெற செய்து நமது ஊர் ஒற்றுமைக்கு வழிவகுப்போம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் ...
posted by Fuad (Singapore) [03 October 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 9395

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்புள்ள போட்டி வேட்பாளர்களே நமதூரின் கண்ணியத்தையும், ஐக்கியப்பேரவை, அனைத்து ஜமா அத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் கண்ணியத்தையும் காப்பாற்றும் விதத்தில் நீங்கள் அனைவரும் தயவுசெய்து போட்டியிலிருந்து விலகி ஐக்கியப்பேரவை மற்றும் அனைத்து ஜமா அத்துகள் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு உங்களின் மேலான ஆதரவை அறிக்கையின் வாயிலாக தெரிவிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன். மேலும், மேலும் முடிந்துபோன விஷயங்களை கருத்து தெரிவிப்பவர்கள் கிண்டவேண்டாம் என பணிவோடு வேண்டுகிறேன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. என்ன ஒரு தெளிவு ?!??
posted by AbdulKader (Abu Dhabi) [03 October 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9404

அஸ்ஸலாமு அழைக்கும்....

இப்படி ஒரு தன்னிலை அறிக்கையை கல்லம் கபடம் இல்லாமல் வெளியிட்ட புதுப்பள்ளி ஜமாத்தார்களுக்கு எனது முதற்கண் நன்றிகள்.

ஊரின் ஒற்றுமையை விரும்பாத ஜனநாயக வாதிகளுக்கு, ஐக்கிய முஸ்லிம் பேரவையால் பாரபட்சம் இன்றி தேர்வு செய்யப்பட நகரமன்ற தலைவர் ஆதரிக்க இதவிட என்ன ஆதாரம் வேண்டும்?

ஊரின் ஒற்றுமைக்காக, நாம் எல்லோரும் நகமன்ற தலைவர் பதவிக்கு சகோதரி பிஸ்ரியா B.Com., அவர்களை ஏகமதாக ஆதரிப்போமாக.

சிலர் கருத்து... அபிதா ராத்தா தேர்தலில் வென்றால், ஐக்கிய முஸ்லிம் பேரவைக்கு, அவமானம் என்று. அவமானம் ஐக்கிய முஸ்லிம் பேரவைக்கு இல்லை, அனால் நம் ஊர் மக்களுக்குத்தான் என்பதை நினைத்து சற்று சிந்தனை கொள்ளுங்கள்.

கூட்டாளி நவாசே, உனக்கு பிடிவாதம் எப்பொழுதும் கொஞ்சம் அதிகம்தான். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் ...
posted by seyed mohamed (ksa) [03 October 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9405

அப்படியே அந்த முன்னெச்சரிக்கை கையெழுத்து கேட்ட அந்த சாசனத்தில் என்ன எழுதி இருந்தார்கள், ஏன் அதற்காக சகோதரி ஆபிதா கையெழுத்திட மறுத்தார் என்ற உண்மையும் இங்கே சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற கேள்வி நியாயமானது. இதுக்கும் விளக்கம் தந்தால் எல்லோரும் அறிந்துகொள்ளலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் ...
posted by salih (bangkok) [03 October 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 9406

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் ஒரு தெளிவான தன்னிலை விளக்கத்திற்கு மிக்க நன்றி.

அனைத்து ஜமாஅத்தார்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினரும்,நகர்மன்ற தலைவியும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் ...
posted by Peena Abdul Rasheed (Riyadh) [03 October 2011]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9407

தம்பி சாளை நவாஸ் கருத்துப்படி எதற்கு ஆபிதா அவர்ஹல் கையெழுத்து போடமர்த்த காரணத்தை கூறினால் பொது வேட்பாளருக்கு ஓட்டுக்கிடைபது சுலபம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் ...
posted by s.e.m. abdul cader (bahrain) [03 October 2011]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 9423

MASHALLAH ,IT IS GOOD OPEN VIEW POINT AS WELL AS GOOD EXPLAITNATION TO THE PUBLIC. WELL, SAMU KAKA - I WISH YOU ALL THE BEST. I HAVE STRONG HOPE THAT YOU WILL DO THE BEST FOR OUR KAYALAITES, INSHALLAH. WASSALAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் ...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [03 October 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9424

அழகாகவும், தெளிவாகவும், புது பள்ளி ஜமாஅத் விளக்கம் தந்துள்ளது. ஒரு பிரச்சினைக்கு முடிவு காண வேண்டும் என்றால் இதை விட ஒரு முடிவு இருகின்றதா என்று தெரியவில்லை.

தலையை வெட்ட ஒருவன் வருகிறான் . இந்த நேரத்தில் கையில் புண்ணுக்கு மருந்து இட்டு கொண்டிருப்பது சரியா என்பதை எண்ணி பார்க்க வேண்டும். சகோதரி ஆபிதா அவர்கள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் என்று யாரும் சொல்ல வில்லை. அவர்கள் சார்ந்துள்ள ஜமாஅத், தலைவர் போட்டிக்கு ஐக்கிய பேரவை எப்படி முடிவு எடுத்தது என்பதை தெள்ள தெளிவாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இதற்கு மேல் என்ன வேண்டும். ஐக்கியம் அவசியம் . அதுவும் இந்நேரம் யார் வரகூடதோ அவர் வந்து விட்டால் வூரின் நாம் இவ்வளவு மஜோரிட்டி ஆக இருந்தும் என்ன பிரயோஜனம் . நமக்குள் இருக்கும் சில குறைபாடுகளை தேர்தல் முடிந்து பேசி கொள்ளலாம். ஒன்று படுவோம் ஊர் ஒற்றுமையை காப்போம். எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக. ஆமீன்

என்றும் ஊர் நலனில்
M .E .L .நுஸ்கி
மற்றும் காயல் நலம் நாடும் நண்பர்கள்
ரியாத்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:நடந்தது என்ன? ...
posted by OMER ANAS (DOHA GATAR.) [03 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 9427

அஸ்ஸலாமு அழைக்கும்..... புதுப் பள்ளி நிர்வாகம் எடுத்த முடிவு பாராட்ட பட வேண்டிய ஒன்று. அது போல், நடந்தது என்ன என்றும் மிக தெளிவாக சொல்லி வீணான மனக்கசப்பை நீக்கி இருக்கின்றார்கள். பாராட்டுக்கள்.

மறுப்பு கடிதம் ஐக்கியப் பேரவைக்கு ஆபிதா அவர்கள் கொடுத்ததாகத்தான் ஜமாத் சொல்கிறது. அதில் என்ன எழுதி இருந்தது, ஏன் கொடுத்தேன் என்று ஆபிதா சகோதரியே இங்கே சொல்லலாம்தானே!!!

என்ன எழுதி இருக்கும் என்றே தெரியாமல் ஜமாஅத் எப்படி சொல்லும்? இங்கு நீயா நானா போட்டி எதற்கு நமக்குள்? உண்மையை அவர் சொல்லட்டும்! நாம் எது சரி என்று பார்ப்போம்.!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. ஒற்றுமையின் அடிபடையில் சகோதரி மிஸ்ரியா அவர்களும் தங்கள் ஜமாத்தின் வேட்பாளர் S.A. சாமு சிகாபுத்தீன் அவசியம் நமது நகர்மன்றதிர்க்கு.
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [03 October 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9435

அஸ்ஸலாமு அழைக்கும்.

தற்போது காயலில் மிக அவசியம் திறமை விட ஒற்றுமை நிறுபிப்பது தான். ஒற்றுமையின் அடிபடையில் சகோதரி மிஸ்ரியா அவர்களும் தங்கள் ஜமாத்தின் வேட்பாளர் S.A. சாமு சிகாபுத்தீன் அவர்களும் தான் மிக மிக அவசியம் நமது நகர்மன்றதிர்க்கு.அவர்கள் வெற்றியானதும் தங்களின் பதவி என்பது என்ன, எவைகளை எல்லாம் சட்டத்திற்கு உட்பட்டு செயலாம் என்று அறிவதுடன், எந்த சூழ்நிலை இருந்தாலும் தனிப்பட்டவர்களின் ஆளுமைக்கு அடங்காமல் நீதி,நேர்மை, கடமை,தவராதவர்களாக நடக்க வேண்டும்.

அன்பான ஜமாதார்களே!!! தாங்கள் கொடுத்த விளக்கத்தில் மிக முக்கியமான மற்றும் பொது வேட்பாளராகிய சகோதரி மிஸ்ரியா அவர்களுக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அனைவர்களும் கேட்கும் கேள்வி இதுதான்.

சகோதரி P.M.I. ஆபிதா அவர்கள் மறுத்து விட்டார்கள். ஏன் கையெழுத்து போடவில்லை என்பதற்கு பேரவைக்கு நேரடியாக கடிதமும் எழுதி விட்டார்கள். அவர்கள் எழுதிய கடிதத்தின் நகலோ அல்லது அதன் கருத்தும் பேரவையின் முசரிக்கயின் விவரமும் தந்தாள் மிக நல்லதாக இருக்கும்.

இல்லை என்றால் சகோதரி ஆபிதா அவர்களே தங்களின் கடித நகலை, விளக்கத்தை தரவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் ...
posted by Azeez (Kayalpatnam) [03 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9444

இதில் இடம் பெற்றிருக்கும் இந்த அறிக்கை தலைவர் அவர்களின் சொந்த அறிக்கையே தவிர இந்த அறிக்கை பொதுக்குழுவோ அல்லது செயற்குழுவோ கூட்டப்பட்டு எடுத்த முடிவு அல்ல என்பதை இந்த ஜமாஅத்தின் பொதுக்குழு உறுப்பினர் என்ற முறையில் எடுத்துரைக்க விரும்புகிறேன்.

மேலும் இந்த விசயத்தில் ஜமாஅத் தலையிட்டதன் காரணமாக இப்பொழுது ஜமாஅத் பிளவுபட்டுள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை. மேலும் தலைவர் எஸ்.எம். உஸைர் அவர்கள் ஐக்கிய பேரவையில் முக்கிய பிரமுகர் (ஐக்கியப் பேரவையால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகர்மன்ற வேட்பாளர் எல்.எஸ்.எம். மைமூனத்துல் மிஸ்ரிய்யா வேட்புமனு தாக்கல் செய்யும் போது பக்கத்தில் நிற்கும் புதுப்பள்ளி ஜமாஅத் தலைவர் போட்டோவை பார்த்தாலே புரியும் - ஐக்கியப் பேரவைக்கு எவ்வளவு விசுவாசமானவர் என்பது) என்ற காரணத்தால் நிர்ப்பந்தத்தின் பேரில் இத்தகைய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தன்னலம் கருதாமல் பொதுநலனையே கருத்தில் கொண்டு சமூக சேவைகள் செய்து வரும் பாளையம் இபுறாகீம் அவர்களைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

எத்தகைய பெரிய அதிகாரிகளையும் எளிதில் தொடர்பு கொண்டு அணுகக்கூடியவர். அதே திறமையுடன் கூடியவர் தான் அவரது மகள் பி.எம்.ஐ. ஆபிதா என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

மேலும் புதுப்பள்ளி ஜமாஅத்திற்குட்பட்ட அநேகரும் ஆபிதாவிற்கே ஆதரவாக உள்ளனர். ஐக்கிய பேரவையின் இந்த செயல்பாட்டின் காரணமாக ஒற்றுமையின் இலக்கணமாக விளங்கிய புதுப்பள்ளி ஜமாஅத் தற்போது பிளவுபட்டு உள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. ஒற்றுமையை அரிக்கும் கரையான்களுக்கு சாவுமணி.....
posted by zubair (riyadh) [03 October 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9448

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு என் புதுப்பள்ளி ஜமாஅத் நிர்வாகிகளே...... நல்ல தருணத்தில் உண்மையை, ஒற்றுமையை நிலை நிறுத்த பாகுபாடிண்டி மதிக்க தெரிந்தவர்களை இனம் கண்டு..... ஊரின் ஒற்றுமைக்கு பங்கம்வரும் என்று கருத்தில் கொண்டு.... ஊர் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் பித்தலாட்ட காரர்களின் வாய் மூட ஜமாஅத்தாரின் தன்னிலை விளக்கம் தந்ததில் ரெம்பவும் சந்தோசம். மேலும் உறுதியான ஜமாஅத் என்பதை நிருபித்து விட்டீர்கள். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் ...
posted by mackie noohuthambi (kayalpatnam) [03 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9450

உஸைர் காக்கா அவர்களின் விளக்கம் காலம்கடந்து வந்துள்ளது எவ்வளோவோ தப்பபிப்பிராயங்கள் களயப்பட்டிருக்கலாம். JUSTICE DELAYED IS JUSTICE DENIED

கட்ற்றரிந்தவர்கள் இவ்வளவு நாள் கடத்தியிருக்க தேவை இல்லை. வெளிப்படைத்தன்மை, தகவல் அறியும் உரிமை என்றெல்லாம் நாட்டில் எல்லாமே வெட்டவெளிச்சமாக நடந்துகொண்டிருக்கும் போது நீங்கள் முன்கூட்டியே இவற்றை சொல்லி காயப்பட்ட உள்ள்ளங்களுக்கு மருந்திட்டு இருக்கலாம்.

வார்டு உறுப்பினரை பொறுத்தவரை நீங்கள் சொல்வது சரி. ஆனால் தலைவர் தேர்வு ஜமாத்துக்கு ஜமாஅத் வித்தியாசப்படுகிறது. உங்கள் ஜமாஅத் கூடி முடிவு எடுத்ததுபோல் எல்லா ஜமாஅத்களும் கூட்டப்படவில்லை, கருத்துக்கள் கேட்கப்படவில்லை.

எனவே தற்போது MEGA அறிவிதுள்ளதுபோல் மனசாட்சிப்படி வாக்களிப்பதா. அவர்கள்கூட மக்கள் மன்றத்தில் இந்த விவாதத்தை முன்கூட்டியே வைக்காமல் இப்போது இப்படிப்பேசுகிறார்கள்.

ஒற்றுமையை எற்படுததப்புறப்பட்டவர்களே இப்படி திசைமாறிய பறவைகளாகிவிட்டர்களே என்று நடுநிலையாளர்கள் அங்கலாய்துக்கொண்டிருக்கிரார்கள்.

தேர்தல் நாளில் யார் என்ன மனோநிலையில் வாக்களிக்கிறார்களோ அதன்படியே தீர்ப்புகள் அமையும்.

அல்லாஹ்வின் நாட்டம் நமதூரை ஒற்றுமையின்பால் அழைத்து செல்பவர்களை இந்த ஊரை ஆட்சிபுரிய செய்வானாக.

மக்கி நூஹுதம்பி 9865263588


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் ...
posted by AbdulKader (Abu Dhabi) [03 October 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9453

அஸ்ஸலாமு அழைக்கும்..

சகோதரர் அஜீஸ் குறிப்பிட்டதை பார்த்தால்... ரசூல் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் சுன்னத்துக்கு முரணாக, பிரிந்து சென்ற கூட்டம்... தலைவரை மதிக்கவில்லை போலும்?

கேவலம்.......... ஒரு நகராட்ச்சி தலைவர் தேர்தலுக்காக ஜமாஅத் இரண்டுபடுவதா? இதில் யாருக்கு கொண்டாட்டம், யாருக்கு சந்தோஷம்? சகோதரர் அஜீஸ் சொல்லுவார்களா?

தயவு செய்து சொந்த்க்கருத்துகளை இங்கே பதிவு செய்து மக்களை குழப்பவேண்டாம்.

மக்களே சிந்திப்பீர்...... செயல்படுவீர்!!! வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் ...
posted by Najeeb nana (Kayalpatnam) [03 October 2011]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 9454

ஜமாஅத் தலைவரின் அறிக்கையை நம்புவதா இல்லை Azeez அவர்களின் கமெண்ட்ஸ்-ஐ நம்புவதா? புதுப்பள்ளி ஜமாஅத் பிளவுபட காரணமாக ஐக்கிய பேரவை காரணமோ?

அல்லாஹ்விற்கே வெளிச்சம். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் ...
posted by N.ABDUL KADER (colombo) [03 October 2011]
IP: 203.*.*.* Sri Lanka | Comment Reference Number: 9466

அஸ்ஸலாமு அலைக்கும்,

என் மனதில் தோன்றிய கேள்விகளுக்கு தன்னிலை விளக்கம் மூலம் விளக்கம் தந்த எமது ஜமாத்திற்கு மிக்க நன்றிகள் .

நமது ஜமாஅத் மூலம் 16 வது வார்டு வேட்பாளராக தேர்தெடுக்கப்பட்ட S.A. சாமு சிகாபுத்தீன் காக்கா அவர்களை அமோக வெற்றி பெற செய்வது எங்களது கடமை மற்றும் பொறுப்பு . ஆனால் நகர்மன்றத் தலைவர் வேட்பாளர் விசயத்தில் தயவு செய்து எங்களை நிர்பந்தம் செய்யாதீர்கள் . மேலும் நமது ஜமாத்திற்கு பல சேவைகள் புரிந்த பாளையம் இப்ராஹீம் காக்கா அவர்களின் அருமை புதல்வி , படித்து பட்டம் பெற்ற நமது ஜமாத்தை சேர்ந்த அருமை சகோதரி ஆபிதா அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் .

எங்களுக்கும் ஊர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் , ஐக்கியமாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் இருக்கின்றது ஆனால் இன்று இருக்கும் அமைப்புகளுக்கு அவர்களின் வீட்டில் மட்டும்தான் ஐக்கியம் இருக்கின்றது மகள் இல்லை என்றால் தாய் வேட்பாளர் இத்தகையவர்களை நம்பி எப்படி முச்சரிக்கையில் கையெழுத்திட முடியும். இன்று வஹிதா லாத்தா அவர்களுக்கு ஏற்பட்ட நிலை தான் கையெழுத்திட்டு இருந்தால் ஆபிதா லாத்தா அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் வல்ல அல்லாஹ் அதிலிருந்து நம்மை காப்பாத்தி கொண்டான் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் ...
posted by drnoordeen (muscat) [03 October 2011]
IP: 188.*.*.* Oman | Comment Reference Number: 9476

சகோதரர் அஜீஸ் அவர்களே நீங்கள் சொல்லும் தகவல் சரிதானா தயவு செய்து நீருபிக்கவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Truth will prevails!!
posted by Rayyan's Dad (USA) [03 October 2011]
IP: 63.*.*.* United States | Comment Reference Number: 9482

Comments (#18) by Br.Aeez is completely making sense and creating doubt on credibility & reliability of this news (meaning Aabitha Sheik's matter). Let us see...whether it gets clarified by Uzair kaka or Puthupalli jamath since its been raised by fellow jamath member. I also get a feeling that, its a kind of push from our Aikkiya peravai to make such a statement to weaken or nullify the opponent candidates (esp. Aabitha Sheik). Another statement/news from THAKWA also an evident for the same.Not sure how many more to come like this. Let us see how long it goes. I hope our Jamaath's and KWA's will not become the puppet of our Peravai & blindly supporting it for no reason.

Definitely we all can smell (after seeing MEGA's statement and peravai's candidate selection critiques), something went wrong in peravai's candidate selection & our peravai is playing the smart game. Allah knows the best!!

Rathar than making too many statements or endorsements, I would think, let the municipal election goes fairly between these two potential candidates and see what the people thinks! Let them select whoever they want through their own decision.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் ...
posted by Abdulrahman (kayalpatnam) [04 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 9514

பேரவை யார் பக்கமும் சாரவில்லை என்பதை உங்களால் உறுதிட்டு ஸொல்லமுடிஉமா. மேலும் புதுப்பள்ளி ஜமாஅத் பொது குழு கூடத்தில் பெரும்பான்மையனவர்கள் நமது ஜமாஅத் இந்த வாடு உறுப்பினர்கள் தேர்வில் தலையிட வேண்டாம் என்ற கருத்தைதான் வல்யுருதினார்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் ...
posted by Samu (HKG) [05 October 2011]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 9636

நேரடி பதில் நண்பர்: Azeez ( கமெண்ட் 18 )

முதலில் இவர் புனை பெயரில் எழுதிகிறார்!

அவர் கூறியிருக்கும் செய்தியில் உண்மை இல்லை. அப்படி அவர் சொல்லும் செய்தி உண்மையாக இருக்குமானால் நேரடியாகவோ அல்லது எங்களிடம் தொலைபெசியிலோ பதில் தர வேண்டுகிறேன்.

தலைவர் S.M. Uzair அவர்களை அநியாயமாக சாடி, அவதூறு கூறியிருக்கிறார். இவரை போன்ற பல [edited] இந்த ஜமாத்தார்கள் சந்தித்து இருக்கிரார்கள். இவரை போன்றவர்கள் பலர் பல கொச்சையான கருத்துக்களை தேர்தலின் வாயிலாக இங்கே பதிவு செய்து கொண்டிரிக்கிறார்கள், இதை தயவு செய்து இந்த வளைய தளத்தின் உரிமையாளர்கள் கண்டிக்க முயலவேண்டும்.

எங்கள் ஜாமத்தின் தலைவர் இப்போது சொந்த வேலையாக சென்னையில் தான் இருக்கிறார், தாரளமாக தொடர்பு கொண்டு பேசலாம். ஒளிந்திருந்து கொண்டு சுவரில் கிறுக்குவது கோழைத்தனம். யாருமொன்றும் சொல்ல மாட்டார்கள் என்று நினைத்ததை எழுதும் பலரில் இவரும் ஒருவர்.

தலைவர் அவர்களை பற்றி எல்லோருக்கும் தெரியும், அவர் எந்த பேரவைக்கும் தொடர்பு இல்லாதவர். எந்த நிர்பந்தத்திற்கும் ஆளாக வேண்டிய அவசியமும், நோக்கமும் இல்லாதவர்.

சுருக்கமாக சொன்னால் நேரடியாக தொடர்பு கொண்டு எங்களிடம் பேசினால், தெளிவு கிடைக்கும். இப்படி [edited] வேளைகளில் இறங்கி நேரத்தை வீணாக்க தேவை இல்லை. மீண்டு அவர் தனி நபர் தாக்குதலில் ஈடுபட்டால் சட்ட ரீதியாக சந்திக்க வேண்டியது எங்கள் நியாமான கடமையாகும்.

நன்றி

வஸ்ஸலாம்.

சாம் சிஹாப்தீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் ...
posted by syed omer kalami (colombo) [05 October 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 9670

no real core in puthupalli thalaivar statement.what happened in meeting?what majority of the members said? All these matters are debatable,since it came in wire. people who presented in GB N EC meeting know well.fore most ALLAH knows all and he watching everything,don't forget. truth will come soon to light. by syed omer kalami


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் ...
posted by Abdul Majeed (Mumbai) [05 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 9676

கமெண்ட் 27 இல் கோமாளி கிறுக்கன் முட்டாள் என தனிநபர் தாக்கி எழுதி உள்ளதை அட்மின் எப்படி அனுமதிக்கலாம்? அட்மின் ஒரு தலை சார்பானவர ? பல கமெண்ட் கலை செய்திக்கு தொடர்பில்லை, விவாதம் வளர்க்கும் என கட் செய்யும் அட்மின் இடை எப்படி எடிட் செய்யாமல் அனுமதிக்கலாம் ?

Administrator: Thanks for pointing. Oversight. Rectified


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved