Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:01:01 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7338
#KOTW7338
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், அக்டோபர் 4, 2011
உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 14893 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (109) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 23)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்குப் போட்டியிடும் ஆபிதா காயல்பட்டினம் நகர மக்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்குமுரிய காயல்பட்டினம் நகர பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர-சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 17.10.2011 அன்று நடைபெறவுள்ள காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில், நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்கு உங்கள் யாவரின் மேலான நல்லாதரவையும் எதிர்பார்த்தவளாக, மக்கள் வேட்பாளராகப் போட்டியிடுகிறேன்.

முக்கியம், 03.10.2011 அன்று (நேற்று) நான் சார்ந்துள்ள புதுப்பள்ளி ஜமாஅத் பெயரில், அதன் தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர் அவர்கள் இணையதளத்திற்கு (செய்தி எண்: 7336) ஓர் அறிக்கையை அளித்திருந்தார்கள். அந்த அறிக்கையில், நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிடும் முன் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையுடனான எனது நடவடிக்கைகள் குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளது.

பேரவையுடன் தொடர்பான எனது நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு எப்படியேனும் தெரிவித்தேயாக வேண்டும் என்று என் மனம் தூண்டியபோதெல்லாம் என்னை நான் கட்டுப்படுத்திக்கொண்டு, நாமாக ஏன் மக்களிடம் முந்திக்கொண்டு சொல்ல வேண்டும்... பின்னர் அதை ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் ஒரு செயலாக மக்கள் எடுத்துக்கொள்வார்களே... என்ற எண்ணத்தில் இதுகுறித்து எதையும் இதுவரை தெரிவிக்காமலிருந்தேன்.

ஒருபுறம் நல்லெண்ணத்துடன் நான் இவ்வாறு என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க, மறுபுறம் ஓர் ஊடகத்தில் இவ்வாறு விமர்சனத்தை வெளியிட்டு, ஊர் உலகறியச் செய்துள்ளதால், என் தொடர்பாக பேரவையுடன் என்ன நடந்தது என்று ஏராளமான மக்களும் கருத்துப்பதிவு செய்துள்ளனர். எனவே, நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்:-

நான் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்குப் போட்டியிட முடிவெடுத்தவுடன், 20.09.2011 அன்று மதியம் 01.00 மணியளவில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவைக்கு பின்வருமாறு எனது விருப்ப மனுவை அளித்தேன்:-





என்னைப் போலவே நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்குப் போட்டியிடும் பிறரும் விருப்ப மனுவை பேரவைக்கு அளித்திருந்தனர்.

நமதூரின் அனைத்து ஜமாஅத்தாரும் இதனை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்குடன், நகர பள்ளிவாசல்களின் முத்தவல்லிகளுக்கும் அவர்களின் இல்லங்களுக்கு நானே நேரில் சென்று, ஐக்கியப் பேரவைக்கு நான் அளித்த விருப்ப மனுவின் நகலுடன், பின்வருமாறு தனிக்கடிதம் அளித்தேன்.



இந்நிலையில், ஐக்கியப் பேரவைக்கு நான் விருப்ப மனுவை அளித்த அன்றிரவே அதன் சார்பாக ஒருவர் என்னைச் சந்தித்து பேரவையின் சார்பில் இரணடு பக்க மடலை என்னிடம் தந்து, அதில் இரண்டாவது பக்கத்தில் உடனடியாக கையெழுத்திட்டு, அன்றைய தினமே பேரவையில் ஒப்படைக்குமாறு என்னிடம் வலியுறுத்திக் கூறினார். “மடலில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை படித்து, சிந்தித்து முடிவெடுக்க அவகாசம் தராமல் அவசர கதியில் கையொப்பம் கேட்கலாமா?” என்று நான் கேட்டதால், “சரி, நாளைக்கு நான் வந்து வாங்கிக்கொள்கிறேன்; கையெழுத்திட்டு வை!” என்று கூறி, எனது பதிலை எதிர்பார்க்காமலேயே சென்றுவிட்டார். அந்த இரண்டு பக்க மடல் பின்வருமாறு:-





இது இவ்வாறிருக்க, நான் பேரவைக்கு மேற்படி விருப்ப மனு அளித்த நேரத்திலிருந்து எனக்கு மாற்றி மாற்றி பலர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கையெழுத்திட வற்புறுத்திக் கொண்டே இருந்தனர். சிலர் நேரிலும் என்னைச் சந்தித்து வற்புறுத்தினர். இது என் மனதில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மறுநாள் 21.09.2011 அன்று மதியம் 01.30 மணியளவில், ஏற்கனவே பேரவை சார்பில் என்னைச் சந்தித்த நபரும், மற்றொருவரும் என்னை நேரில் சந்தித்து, பேரவையின் மேற்படி மடலில் கையெழுத்து கேட்டனர்.

“நான் நகர்மன்றத் தலைவரானால் இதைச் செய்வேன்... அதைச் செய்ய மாட்டேன்...” என்ற அமைப்பில் ஏதேனும் வாசகங்களைப் பதிவு செய்து அதனடியில் கையெழுத்து கேட்டிருந்தால் அதில் கையெழுத்திடுவதில் எனக்கு எந்த தயக்கமும் இருந்திருக்காது. “எந்த விபரமும் தெரிவிக்கப்படாமல் மொட்டையாக அமைந்திருந்த அந்த மடலில் கையெழுத்திட என் மனம் ஒப்பவில்லை” என்று நான் அவர்களிடம் தெரிவித்தேன்.

அதன்பிறகு, அவர்களில் முதலாமவர் தொலைபேசியில், “சரி, நீங்கள் தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிடும் செய்தியை (நகரப் பிரமுகர் ஒருவரின் பெயரைச் சொல்லி) இன்னாருக்கு தொலைபேசியில் தெரிவித்து விடுங்கள்!” என்று என்னிடம் தெரிவித்தார். இவ்வாறு அவர் சொன்னது, பேரவையின் மேற்படி மடலில் கையெழுத்திடுவது குறித்த எனது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.

இதற்கிடையே, நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிட விரும்பாத பலரிடமும் வலியுறுத்தி மனு பெறப்பட்டதாகவும், பேரவையின் நகர்மன்றத் தலைவர் தேர்வுக்குழுக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பே, “இன்னாரைத்தான் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்...” என்ற ரீதியில் பெறப்பட்ட செய்திகளும் என்னை பெரிதும் சிந்திக்க வைத்துவிட்டது.

இறுதியாக, “இம்மடலில் நான் கையெழுத்திட மாட்டேன்...” என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்துவிட்டேன். அதன்பிறகு, தொலைபேசியில் பலர் என்னைத் தொடர்புகொண்டு கையெழுத்திட வலியுறுத்தியபோதும் நான் எனது மறுப்பை தெளிவாகத் தெரிவித்துவிட்டேன்.

26.09.2011 அன்று இரவு பேரவையின் நகர்மன்றத் தலைவர் தேர்வுக்குழுக் கூட்டம் நடைபெறவிருப்பதை அறிந்தேன். இதற்கு இடைப்பட்ட காலத்தில், நான் ஊர் பெரியவர்கள் அடங்கிய பேரவையை மதிக்கவில்லை என்றும், ஊர் ஜமாஅத்துகளுக்குக் கட்டுப்படவில்லை என்றும், ஊர் ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிப்பவள் போலவும் என்னைப் பற்றி ஊர் முழுக்க செய்திகள் பரப்பப்பட்டு வந்ததால், நான் கையெழுத்திட மறுத்ததற்கான காரணத்தை நாகரிகமாகப் பதிவு செய்து, கூட்டம் நடைபெறவிருந்த 26.09.2011 அன்று மதியம் பேரவை அலுவலகத்திற்கு நேரில் சென்று, பேரவை நிர்வாகிகள் பலர் முன்னிலையில் ஜனாப் காயல் அமானுல்லாஹ் அவர்களிடம் பின்வருமாறு எனது கடிதத்தை அளித்தேன்:-





“இது எனது தன்னிலை விளக்கம்... பேரவையின் மடலில் நான் கையெழுத்திடாமல் இருந்தமைக்கான காரணம் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது... இன்றிரவு நடைபெறும் கூட்டத்தில் அனைவரும் அறியும் வகையில் இக்கடிதத்தைப் படித்துக் காட்டுங்கள்...” என்று தெரிவித்தேன். “சரி, படிப்போம்...” என்று அவர் தெரிவித்தார். ஆனால் அன்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் நான் பேரவையின் மேற்படி மடலில் கையெழுத்திடவில்லை என்று மட்டும் தெரிவித்துவிட்டு, விருப்பமனு அளித்த வேட்பாளர்களின் பெயர்பட்டியலில் எனது பெயர் சேர்க்கப்படாமலேயே வாக்கெடுப்பு நடந்துள்ளதை அறிந்துகொண்டேன்.

இதுதான் நடந்த உண்மை நிகழ்வுகள் என்பதை அல்லாஹ்வை சாட்சியாக்கி உங்களிடம் திறந்த மனதுடன் தெரிவித்துள்ளேன்.

இவ்வாறிருக்க, நான் சார்ந்துள்ள புதுப்பள்ளி ஜமாஅத் பெயரில் அதன் தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சில அம்சங்களுக்கு விளக்கமளிப்பது நன்று என்று கருதுகிறேன்.

“அதன்படி பேரவையின் ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொண்ட நமது ஜமாஅத் தலைவரும் நமது ஜமாஅத் வேட்பாளரையே தெரிவு செய்யும்படி சிபாரிசு செய்திருக்கிறார்கள். இந்த சிபாரிசிற்கு பேரவையின் பல உறுப்பினர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் இருந்தது...” என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறிருந்தால், எனது விருப்ப மனுவை மட்டும் போதுமாக்கிக் கொண்டிருக்கலாமே...? ஏன் எதையும் தெரிவிக்காமல் மொட்டையான வாசகங்களடங்கிய ஒரு மடலில் என்னிடம் கையெழுத்து கேட்டனர்...? ஊர் நன்மைதான் முக்கியம் என்று பெரியவர்கள் கருதினால், நான் மட்டுமல்ல; அனைத்து போட்டியாளர்களும் அளித்த விருப்ப மனுவை மட்டுமே போதுமாக்கிக் கொண்டிருக்கலாமே...? அல்லது நான் ஏற்கனவே தெரிவித்தபடி, “ஊழலுக்குத் துணை போக மாட்டேன்... நேர்மையாக நடப்பேன்...” என்பன போன்ற சில நிபந்தனைகளைப் பதிவு செய்து அதனடியில் கையெழுத்து கேட்டிருக்கலாமே...?

நான் பேரவையையும், அதிலுள்ள பெரியவர்களையும் மதித்த காரணத்தால்தான் எனது 20.09.2011 அன்று எனது விருப்ப மனுவை பேரவையிடம் வழங்கினேன்.

நான் நமதூரின் அனைத்து ஜமாஅத் பொதுமக்களையும் மதித்த காரணத்தால்தான், அனைத்து பள்ளிவாசல்களுக்கும் / பள்ளிவாசல்களின் முத்தவல்லிகளது இல்லங்களுக்கும் நேரடியாகச் சென்று விருப்ப மனுவை அளித்தேன்.

மேற்சொன்ன அதே காரணங்களுக்காகத்தான், “பேரவையை மதிக்கவில்லை... பெரியவர்களை மதிக்கவில்லை...” என்றெல்லாம் செய்திகள் பரப்பப்பட்டவுடன் எனது தன்னிலை விளக்கத்தை 26.09.2011 அன்று பேரவையில் உடனடியாக வழங்கினேன்.

பேரவையில் எனது தன்னிலை விளக்கத்தை அளித்தபோதும், பேரவையின் நகர்மன்றத் தலைவர் தேர்வுக்குழு கூட்டத்தில், பொதுவேட்பாளர் என்று ஒருவர் தேர்வு செய்யப்பட்ட பின்னரும், “உன்னைத்தான் தேர்ந்தெடுக்க எல்லோரும் நாடியிருந்தோம்... இப்படி தேடி வந்த சீதேவியை எட்டி உதைத்துவிட்டாயே...?” என்று பலர் என்னிடம் நேரிலும், தொலைபேசியிலும் தெரிவித்தனர். இப்போது எனக்கு இருக்கும் சந்தேகமெல்லாம், ஆபிதாவாகிய என்னைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டிருந்தால், ஏன் மற்றவர்களிடமெல்லாம் விருப்ப மனு கேட்டனர்...? எதற்கு இந்த பொது வேட்பாளர் தேர்தல்...? இது எனக்கு இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

பேரவை தொடர்பான எனது நடவடிக்கைகள் குறித்து அறிய இந்த விளக்கம் போதுமானதாக இருக்கும் என்று கருதி, உங்கள் யாவரின் மேலான ஆதரவை எதிர்பார்த்து நிறைவு செய்கிறேன்.

வரும் 17.10.2011 அன்று நடைபெறவுள்ள காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் எனக்கு “புத்தகம்” சின்னத்தில் வாக்களித்து, அமோக வெற்றிபெறச் செய்யுமாறும், ஊருக்கு வெளியில் இருப்போர் அவசியம் வாக்களிக்க வருமாறும், உங்கள் குடும்பத்தாரிடம் சொல்லி வாக்களிக்கச் செய்யுமாறும் அன்புடனும், பணிவுடனும் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி, ஜஸாக்குமுல்லாஹு கைரா!


அனைத்தையும் நன்கறிந்தவன் அல்லாஹ் ஒருவனே! அவனே எனக்குப் போதுமானவன்!!

இவ்வாறு நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிடும் ஆபிதா தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by amzedmoosa (dammam) [04 October 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9517

உண்மை நிச்சயம் வெற்றிபெறும் தாங்கள் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் சகோதரி வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by ISMAIL KTM ST (Hong Kong) [04 October 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 9518

SALAM BR AND SIS

SIS U DO'NT WORRY ABT THESE PPL ALLAH WILL HELP U ,PROCEED WITH UR WORKS, DO'NT GET IN TO THIS ISSUE AGAIN (FORGET THIS ISSUE IMM) MEET ALL THE PPL PLS EXPLAIN THEM CLEARLY WHAT U R GOING TO DO INSHA ALLAH U WILL BE THE WINNER." WIN THE PPL NOT THE ORGANIZATION."


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஆண்டவன் நம்ம பக்கம்...
posted by முத்துவாப்பா (அல்-கோபர்) [04 October 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9521

தான்தோன்றித்தனம் , பேரவையை மதிக்காமை ,ஒற்றுமை கயிறு ,பம்பர கயிறு என்றெல்லாம் தம்பட்டம் அடித்தவர்களே .... நடந்தது என்னவென்று பார்த்தீர்களா ...!! இதை விட உங்களுக்கு என்ன ஆதாரம் வேண்டும் .

ஆபிதா லாத்தா அவர்களே நீங்கள் எதை பற்றியும் கவலை படாதீர்கள் .... அவர்கள் பக்கம் எந்த பேரவையும் , எந்த பெரிய சக்தி வேண்டுமானாலும் இருக்கட்டும் .... அறிவுயடைய மக்களும் ஆண்டவனும் நம்ம பக்கம் இருக்காங்க ... இறைவன் நாடினால் நம் வெற்றி நிச்சயம் .

ஆணவ போக்கல் ஆட்டம் போட்ட பெரிய கட்சிகளின் நிலையே சட்ட மன்ற தேர்தலில் என்ன ஆயிற்று என்று பார்த்திருப்பீர்கள் இவர்கள் எம்மாத்திரம் ... நம் மக்கள் புத்திசாலிகள் என்று நினைகின்றேன் .............


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohamed Noohu (chennai) [04 October 2011]
IP: 113.*.*.* India | Comment Reference Number: 9522

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதை போல ஆகி விட்டதே.

எங்களுக்கெல்லாம் தெரிந்த உண்மையை இவ்வலவு நாட்கள் கழித்து உலகிற்கு வெளிப்படுத்தியதற்கு நன்றி. உங்களுக்கு தெரிஉம் முன்பே எனக்கே தெரிந்து விட்டது இவரைதான் தேர்ந்தெடுக்க போகிறார்கள் என்று.

இவர்கள் ஊரை ஒற்றுமை படுத்த விரும்பவில்லை மாறாக பிளவு படுத்தவே விரும்புகிறார்கள். நம்மை யாராவது குற்றம் சாட்டி விடுவார்களோ என்ற பயத்தில் புதுப்பள்ளி ஜமாத் தார் தேவை இல்லாமல் மாட்டிகொண்டார்கள். அவர்களுக்கே தெரியாமல் எத்தனை சம்பவங்கள் நடந்திருக்கின்றது.

சகோதரி ஆபிதா சேக் அவர்களின் விளக்கம் அருமையான விளக்கம். லேட்டா வந்தாலும் லேட்டெஸ்ட்டா வந்திருக்கு இதை அப்படியே கை பிரசுரங்களாக அச்சடித்து நகரில் உள்ள அனைத்து பொது மக்களும்( இணைய தள உபயோகிக்காதவ்ர்கள்) தெரியும் வகையில் செய்தால் உங்கள் மேல் சுமத்தப்பட்ட கறை ( சுமை ) நீங்கிவிடுமே.

முடிவு எடுக்க கூட்டமா? அல்லது எடுத்த முடிவை அறிவிக்க கூட்டமா? என்று எல்லோருக்கும் தெரியும் வல்ல இறைவன் அனைத்தையும் பார்த்து கொண்டுதான் இருகிறான் என்றும் எல்லொருக்கும் தெரியும். எத்தனை காலம்தான் மக்களை இந்த கூட்டம் தவறாக வழி நடத்தப்போகிறது எல்லம் வரும் தேர்தல் முடிவு வரும் வரை தான். பொருத்து இருந்து பார்ப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஒரு அமைப்பு செயல்பட பொருளாதாரமும் மனித சக்தியும் அவசியம்.
posted by Pirabu Shuaibu (Hongkong) [04 October 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 9524

தயவு செய்து விமர்சனம் செய்பவர்கள் முதலில் உங்கள் கருத்துக்களை பேரவைக்கு தெரிவித்து, அது தக்க காரணமின்றி மறுக்கப்பட்டால் அப்போது பொது விவாதத்துக்கு கொண்டுவாருங்கள்.
----------------------------------
ஒரு அமைப்பு செயல்பட பொருளாதாரமும் மனித சக்தியும் அவசியம். விமர்சனம் எழுதும் நம்மில் எத்தனை பேர் பேரவைக்கு இந்த விசயத்தில் பங்கெடுத்தோம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by NUSKI MOHAMMED EISA LEBBAI (Riyadh -KSA) [04 October 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9526

சகோதரி ஆபிதா அவர்களே உங்கள் அறிக்கை நன்றாக தான் இருக்கிறது. ஒரு பிரச்சினைக்கு முடிவு காண வேண்டும் என்றால் மத்தியஸ்தர்கள் அனைவரிடமும் முச்சரிக்கை வாங்குவது நடைமுறையில் உள்ள ஒன்று. அதே போன்று தான் ஐக்கிய பேரவை பொது குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்து ஜமாஅத் , சங்கங்கள், தங்கள் சார்பில் பிரதி நிதிகளை தேர்வு செய்து ஐக்கிய பேரவைக்கு தெரிவு செய்து தர வேண்டும். அவர்கள் கூடி யார் யார் எல்லாம் தேர்தலுக்கு போட்டியிட மனு செய்து கொடுத்து இருகிறார்களோ அவர்களிடம் முச்சரிக்கை வாங்கி தெரிவு செய்வார்கள். ஒரு சமயம் விட்டுகொடுக்கும் எண்ணத்துடன் யாரும் இல்லை என்றால் இந்த ஜமாஅத் & சங்க பிரதி நிதிகள் வோட்டு போட்டு தேர்ந்து எடுப்பார்கள் என்று தெளிவான முடிவை எடுத்து இருக்கும் போது முச்சரிகையில் கைஎழுத்திட மாட்டேன் என்று அடம் பிடிப்பது எந்த வகையில் நியாயம் .

உங்கள் சமுதாய பணி என் போன்ற வர்களுக்கே தெரியும் போது ஊரில் உள்ள ஜமாஅத் பிரதிநிதிகளுக்கு தெரியாமலா போகும் . நம்பிக்கை இல்லை என்றால் எந்த ஒரு காரியமும் நடைபெறாது. அப்படியே நம்பிக்கை துரோகம் செய்வார்களே ஆனால் படைத்தது பரிபாரிக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் சும்மா விடுவானா?

ஆகவே உங்கள் விளக்கம் நன்றாக இருந்தாலும் பிடிவாதம் என்பது கூடாது. பொது சேவை செய்வதற்கு எத்தனையோ வழி இருக்கிறது .அல்லாஹ் நன்கு அறிந்தவன் . ஊர் ஒற்றுமை, ஐக்கியம் ஒன்று தான் எங்கள் எண்ணம். சின்ன சின்ன பிரச்சினைகளுக்காக இந்நேரத்தில் சண்டை இடுவது நன்றன்று.

என்றும் ஊர் நலனில்
M ,E .L .நுஸ்கி
மற்றும் ஊர் நலம் நாடும் அன்பர்கள்
ரியாத் சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Ibrahim Faisal (Riyadh) [04 October 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9528

சகோதரர் முத்து வாப்பா சரியாக சொன்னிர்கள்.

க க க போ | கருத்துகளை கச்சிதமாக கவ்வி கொண்டீர்கள் போங்கள்.

அல்லாஹ் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது,
அல்லாஹ் தடுக்க நினைப்பதை யாராலும் கொடுக்க முடியாது.

இவுலகின் ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும் அவன் வசமே உள்ளது. பொருத்து இருந்து பார்போம்.

நன்றி - வஸ்ஸலாம்
இவன்.
பைசல்ஸ் அண்ட் பாமிலி..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by SULAIMAN LEBBAI (riyadh - s.arabia) [04 October 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9529

ஒரு அருமையான தன்னிலை விளக்கம் சகோதரி ஆபிதா அவர்கள் நமக்கு தந்து உள்ளார்கள். இதை விட ஒரு தெளிவான விளக்கம் இனி நமக்கு தேவை படாது என்று நினைகிறேன்.

குறை இல்லாதவன் வல்ல நாயன் ஒருவன் மட்டுமே. அவன் நாடியதை யாராலும் தடுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது.

இனி நாம் நம் மனசாட்சி என்ன சொல்லுகிறதோ, அதன் படி நாம் வாக்கு அளிப்பதே மிக பொறுத்தமாக இருக்கும் என்று நான் நினைகிறேன்.

வல்ல நாயன் எல்லாவற்றிக்கும் போதுமாணவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by A.R.MUJEEBU (kayalpatnam) [04 October 2011]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 9530

தன்னலம் கருதாமல் சேவை மனப்பான்மையோடு போட்டியிடும் ஆபிதா லாத்தா அவர்கள் அரசு அலுவலக நடை முறைகளை எளிதாக அணுக கூடியவர்கள், (நான் அறிந்தவரையில்) ..

ஆகவே யார் பெரியவர் யார் சிறியவர் என்ற EGO வை தூரத்தில் வைத்து விட்டு கல்விப்பநியிலும் சமூக நல ஆர்வத்திலும் சிறபாக செஎல்படக்கூடிய ஆபிதா லாத்தா அவர்களை தேர்ந்தெடுங்கள் ,

முஜீபு (librarian)
KAYALPATNAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by mohudoom ali sahib (al-hasa) [04 October 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9531

நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். போலி ஒற்றுமையோ நிஜ ஒற்றுமையோ தயவு செய்து ஒன்று சேருங்கள். சமுதாய நலனுக்கு என்று சொல்லி சொல்லியே பல பிரிவுகளாய் பிரிந்து இந்த ஊர் பலவீனப்பட்டு போனது தான் மிச்சம்.

இயக்கவாதிகளே இயக்க மாயையிலிருந்து மீளுங்கள்.

கட்சிகரர்களே கட்சி மாயையிலிருந்து மீளுங்கள் சமுதாய நலன் நாடும் நல்லுள்ளங்களே இயக்க தலைமைகளிடம் ஒன்று பட வற்புறுத்துங்கள். வலியுறுத்துங்கள்..

"எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.

எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல் குர்ஆன்-2:286)

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!” ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by kudack buhari (doha-qatar) [04 October 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 9532

இதில் எந்த இடத்திலும் பேரவை தப்பு செய்ததாக தெரியவில்லை எல்லோரிடமும் கேட்டதை போல் தான் உங்களிடமும் கையொப்பம் கேட்டிருகிறார்கள் ,ஊர் ஒற்றுமைக்காக ஒருவர் தேர்ந்தேடுகபட்டால் மற்றவர் விலகி வழிவிட சொல்லிருகிரார்கள்

இதில் என்ன தவறு,உங்களுக்கு அப்படி வழி விட மனம் இல்லை, தவறாக யாரோ ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் களத்தில் நிற்கிறீர்கள்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohamed Buhary (Chennai) [04 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 9535

சகோதரி ஆபிதாவின் தன்னிலை விளக்கம் எல்லோராலும் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது. அல்லாஹ் அவருக்கு அவரது எண்ணம்போல் எல்லாவற்றையும் அமைத்துத்தர பிரார்த்திக்கிறேன்.

கடந்த காலங்களில் காயல்பட்டிணம் நகர்மன்ற தேர்தல்களில் யார் வர வேண்டும்? அல்லது யார் வரக் கூடாது? என்பதை ஐக்கியப் பேரவைதான் நிர்ணயித்துவந்துள்ளது. ஐக்கியப் பேரவையின் செயல்பாடுகள் வெளிப்படையானவையாக இல்லை என்பதை பல நேரங்களில் பல சகோதரர்கள் வாயிலாக அறிய முடிந்தது. இருப்பினும், குறிப்பிட்டுச் சொல்ல யாரும் முன்வரவில்லை. தற்போது நகர்மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளரைத் தெரிவு செய்யும் விஷயத்தில் ஐக்கியப் பேரவையின் நேர்மை (?) பளிச்சிட்டுள்ளது.

ஊருக்கு நல்லது நடக்க வேண்டும்; மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என தன்னார்வத்துடன் முன்வரும் ஒருவரிடம் எந்த அளவுக்கு ஐக்கியப் பேரவை நடந்துள்ளது என்பதைக் கேள்விப்படும்போது ஆதங்கப்படாமல் இருக்க முடியவில்லை. ஐக்கியப் பேரவை என்ற பெயரை வைத்துக்கொண்டு சில செல்வந்தர்கள், செல்வாக்கு படைத்தவர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் செயல்படுவது ஏன்?

கடந்த முறை பொறுப்பு வகித்தவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு சிலரதான் இலஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணியாற்றினார்கள் என்பதைக் கேள்விப்படும்போது எஞ்சிய நேர்மையற்றவர்களை ஐக்கியப் பேரவையால் தட்டிக் கேட்கவோ தண்டிக்கவோ முடியவில்லை. எதையும் எதிர்க்க துணிச்சலுடன் தட்டிக் கேட்க இயலாதவர்கள் நிச்சயமாக ஊரை ஐக்கியப்படுத்துவது சாத்தியமற்றது.

எனவே, ஐக்கியப் பேரவை பொதுக்குழுவை கலைத்துவிட்டு, புதுக்குழுவை ஏற்படுத்துங்கள்... முதலாவது ஐக்கியப் பேரவைக்கு தேர்தல் நடத்துங்கள். தகுதி வாய்ந்தவர்களை அதில் பொறுப்பாளர்களாக அமர்த்துங்கள். அப்போதுதான் நமதூருக்கு விடிவுகாலம் பிறக்கும். நாம் எல்லோரும் சேர்ந்து ஐக்கியப் பேரவைக்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய கட்டமிது.

சகோதரி ஆபிதா ஷேக் வெற்றி பெற நாம் வாழ்த்துவோம்...

வாழ்த்துக்கள்...

முஹம்மது புகாரீ
சென்னை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. SABR
posted by EassaZakkariya (Jeddah) [04 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9537

அருமை சகோதரியின் மடல் உண்மையை மட்டுமே சொல்லுமானால்:

காஷ்மீருக்கு எப்படி அழகே சாபமாஹி விட்டதோ (கவிக்கோ) பல நேரங்களில் நமக்கு அறிவே சாபமாஹிவிட்டதோ? என நினைக்க தோன்றுகிறது

வல்ல நயன் நாம் இதயங்களை விசாலமாக அகுவானாக -ஆமின்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Solukku M.I. Seyed Mohamed Sahib (SMI) (Jeddah, KSA.) [04 October 2011]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 9540

இதில் எந்த இடத்திலும் பேரவை தப்பு செய்ததாக தெரியவில்லை எல்லோரிடமும் கேட்டதை போல் தான் உங்களிடமும் கையொப்பம் கேட்டிருகிறார்கள் ,ஊர் ஒற்றுமைக்காக ஒருவர் தேர்ந்தேடுகபட்டால் மற்றவர் விலகி வழிவிட சொல்லிருகிரார்கள்.

அனைத்து ஜமாஅத் , சங்கங்கள், தங்கள் சார்பில் பிரதி நிதிகளை தேர்வு செய்து ஐக்கிய பேரவைக்கு தெரிவு செய்து தர வேண்டும். அவர்கள் கூடி யார் யார் எல்லாம் தேர்தலுக்கு போட்டியிட மனு செய்து கொடுத்து இருகிறார்களோ அவர்களிடம் முச்சரிக்கை வாங்கி தெரிவு செய்வார்கள். ஒரு சமயம் விட்டுகொடுக்கும் எண்ணத்துடன் யாரும் இல்லை என்றால் இந்த ஜமாஅத் & சங்க பிரதி நிதிகள் வோட்டு போட்டு தேர்ந்து எடுப்பார்கள் என்று தெளிவான முடிவை எடுத்து இருப்பதில் எந்த தவறுதலும் இருப்பதாக தெரியவில்லையே.

யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் மற்றோரின் நன்மைக்காக உழைத்திடுங்கள், உண்மையாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Md Sirajudeen (singapore ) [04 October 2011]
IP: 203.*.*.* Singapore | Comment Reference Number: 9541

Salaam Br And Sis

பொறுமையாக இருங்க .........உங்க மனசு என்ன சொல்லுதோ அதை படி நடக்க .ஒரு முடிவு எடுக்கும் போது பல முறை சிந்தித்து எடுங்க எதை செய்தாலும் .பிளான் பண்ணி பண்ணுக . யார் என்ன சொன்னாலும் பொறுமையா பதில் கொடுங்க..வெற்றி கிடைக்க முயற்சி எடுக்க ..... வெற்றி பெற நல்வாழ்த்துக்கள். ..வஸ்ஸலாம் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by fathima (kayalpatnam) [04 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 9542

அஸ்ஸலாமு அழைக்கும்

திருமதி ஆபிதா ஷேய்க் நீங்கள் கொடுத்தா பதில் மிகவும் நன்று யாருடைய பேச்சை கேடு நீங்கள் களத்தில் இறங்குகிறீர்கள் என்று அல்லாஹ்க்கு தெரியும் நீங்கள் உங்கள் மனசாச்சியின் கட்டு பாட்டின் கீழ் களத்தில் இறங்குகிறீர்கள்.. வாழ்க வளமுடன்

ஓங்குக உங்கள் புகழ் வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by zainab (kayalpatnam) [04 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 9543

அஸ்ஸலாமு அழைக்கும்
வாழ்த்துக்கள் ஆபிதா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Fasi Ismail (Jiangmen, China) [04 October 2011]
IP: 27.*.*.* China | Comment Reference Number: 9544

சகோதிரி ஆபித அவர்கள் சொல்வதை பார்த்தால் ஏதோ ஒரு சிலர் தூண்டுதலில் பேர்போல் உள்ளது. ஏனென்றால் ஆபிதா அவர்கள் இதை முன்கூட்டியே தெரிவித்திர்கவேண்டும். இப்போது தெரிவிப்பதல் மூலம் சந்தேகம் எழுகிறது எது எப்படியோ அல்லாஹ்வே நன்கு அறிந்தவன் .

கூத்தாடி இரண்டுப்பட்டால் பங்காளிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழி போல் நாம் இப்படியே இரண்டுப்பட்டு கொண்டால் மாற்று சகோதருக்கு நிச்சயம் கொண்டாட்டம் என்பது சந்தேகம் இல்லை.

சகோதிரி ஆபித அவர்களுக்கு,

நம் இறைவன் நமக்கு தந்த சின்ன அறிவுரை,

இவுலகத்தில் உள்ள அனைத்தும் (பதவியும் உள்பட) நிரந்தரம்மல்ல மாறாக மறுமையில் உள்ள அனைத்தும் நிரந்தரம் (பதவியும் உள்பட) மேலும்

ஆண்கள் பெண்களை நிர்வகிக்கக்கூடியவர்களாக உள்ளனர். Al Quran 4:34

ஆகையால் நீங்கள் சிலர் சொல்வதை கேட்டு இரண்டுபடுவதை விட ஐக்கியப் பேரவையின் ஆலோசனை கேட்டு ஒன்று படுவதே சிறந்தது. அல்லாஹ் உங்களுக்கு மறுமையில் பதவி தருவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. இனியும் ஏமாந்து போகாமல் இருக்கும் அளவுக்கு சுதப்பிய பேரவைக்கு நன்றி
posted by M Sajith (DUBAI) [04 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9545

ஊரின் நலன் என்றால் என்ன? ஊர் மக்கள் அனைவரின் நலமா அல்லது ஒரு குறிப்பிட்ட அமைப்பின் நலமா?

Undertaking நடைமுறையில் உள்ளது தானே என்பது சரிகானல் நுஸ்கி காக்கா.. நீங்கள் இதை சொல்லும் போது கூடவே நடந்ததில் தவறுள்ளது என்பதையும் குறிப்பிட்டு இருக்கவேண்டும். அதுதான் நியாயம்.

Undertaking என்பது சட்டப்படி சரியா? ஒருவரின் பிறப்புரிமையை பறிக்கும் நடவடிக்கையாக இருந்தாலுமா?

இந்த தேவையில்லாத ஒன்று, ஒரு வேளை, சகோதரி ஆபிதாவும் வக்களிப்பில் சேர்க்கப்பட்டு தெரிவு செயப்படாமல், பின் மனு தாக்கல் செய்திருந்தால் இன்று பேரவையை விமர்சித்து எழுதும் 'நியாயம்' கோரும் எல்லோரும் அவரை கன்டித்தும், உதாசீனப்படுத்தியும் இருக்கமாட்டார்களா?

இறைவன் மேல் ஆனையிட்டு ஒருவர் ஊருக்காக, ஊரின் நன்மைக்காக செயல்படுவேன் என்ற வாக்குறுதியை ஏற்றுக்கெள்ளாமல் - இதில் தான், என் படிவத்தில் தான் கையெழுத்திடவேண்டும் என்பது வரம்பு மீறல் இல்லையா?

பேரவையின் படிவத்தில் 'லஞ்சமோ' 'ஊழலோ' இல்லை, போட்டியிடமாட்டேன் என்பதை தவிர வேறு ஏதாவது இருக்கிறதா? - கவனம் 'கன்ட்ரோல்' லில் தானே தவிற மற்றது இல்லை என்பது போல இல்லயா?

ஒருவேளை, இவர்கள் ஏமாற்றிய வஹிதா லாத்தாவோ அல்லது மற்ற இருவருமோ போட்டியிட்டால் ஏதாவது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளதா? - மக்களின் உதாசிணம் தவிர வழிமுறை உள்ளதா? இதைத்தான் மக்கள் செய்வார்களே ஆபிதா செய்தாலும். ஆக என்ன சாதிக்க இந்த undertaking?

சகோதரர்: பிரபு ஸுஐபு, நடைமுறையின் இன்னும் ஒரு சரிகானலை தெரிவித்து இருக்கிறார்: இயக்கம் நடத்த பணம் அவசியமாம். பணம் தருபவரை 'மகிழ்ச்சி'யாக வைக்கவேண்டும் இதில் சத்தியம் செத்தால் "collateral" என்று ஒத்துக்கொள்ளவேண்டும் என்பதா இதன் பொருள்? அவர்தான் விளக்கவேண்டும். - இது தான் அவர் சொல்லவருகிறார் என்றால் அந்த அமைப்பு தேவையா?

அமைப்பு தெளிவாக, வெளிப்படையாக நடந்தால் இந்த விவாதங்கள் அவசியமா? நேரில் கேட்டாலும் , ஈமெயில் அனுப்பினாலும், தளத்தில் பதிவு செய்தாலும் பதில் தரும் அவசியம் இல்லை என்பது போல் நடந்து கொண்டது தானே இத்துனை குழப்பத்துக்கும் காரணம்.

தவறும், அதை மறைக்க ஒரு சப்பைக்கட்டும், பின் அதை சமாளிக்க ஒரு பொய்யுமாக பேரவை 'சுதப்பிவிட்டது' - ஒற்றுமையை 'பெரும்பான்மை' என்னும் அகம்பாவத்தால் அழித்துவிட்டது.

முதலில் ஆலோசனையை தீர்மாணம் என்றது. 25 பேர் என்றது, ஓட்டில்லை என்றது, முச்சரிக்கை என்றது, தகுதி இல்லை என்றது, வஹிதா லாத்தாவை தோற்கடித்தது, துரோகத்தின் உச்சகட்டமாக 'உம்மாவை' மாற்று வேட்பாளராக்கியது. இப்போது புதுப்பள்ளியை பயன்படுத்தி எதோ சரிகட்ட நினைத்து இருந்த அனுதாபத்தையும் இழந்துள்ளது.

மொத்தத்தில் இந்த தேர்தலில் போட்டி உண்மைக்கும் அதிகார துஸ்பிரயோகத்திற்கும் என்றாகிவிட்டது. மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள்.

தன்னை நம்பி இனியும் ஏமாந்து போகாமல் இருக்கும் அளவுக்கு சுதப்பிய பேரவைக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Muthu Ibrahim (Hong Kong) [04 October 2011]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 9548

இந்திய ஆதிக்க வர்க்கதில் ஒரு வழக்கம் உண்டு. இந்தியாவில் எந்த சம்பவம் நடந்தாலும் முதலில் குற்றம் சாற்றபடுவது பாகிஸ்தான் தான். அது போல் நம் ஊரில் ஐகிய பேரவையை குறிவைத்து சிலர் தாக்குகிறனர்.

சகோதரி ஆபிதா விசியதில் ஐகிய பேரவை என்ன தப்பு செய்துள்ளது? தான் யார் தயவிலும் சாராமல் தனியாகதான் போட்டி போடுவேன் என்றால் எப்படி ஐகிய பேரவை உங்களை பொது வேட்பாளராக அறிவிக்க முடியும் ? அதுவும் அதன் முச்செரிக்கையில் கையெழுத்திடாமல்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. ...:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by MOHAMMED (AR RIYADH) [04 October 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9550

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

தர்மத்தின் வாழுவுதனை சூது கவ்வும், தர்மம் மீண்டும் வெல்லும்... இந்த வாசகம் அனிதா ரா. கிருஷ்னனுக்கு அப்போதைய காலங்களில் அ.இ.அ.தி.மு.க தென் மாவட்டங்களில் வளர்க்க உதவியது. இதை இத்தருணத்தில் ஞாபகப்படுத்த விருப்புகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Vilack SMA (Hetang) [04 October 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 9551

அஸ்ஸலாமு அழைக்கும் .

சகோதரி ஆபிதா அவர்களே ! குழப்பங்களுக்கு மேல் குழப்பமாக சென்று கொண்டிருக்கும் இந்த தேர்தல் களத்தை பார்க்கும்போது , மனதிற்கு வேதனையாக உள்ளது . ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது , இது உங்களுக்கும் , மிஸ்ரியாவுக்கும் நடக்கும் ஆரோக்கியமான போட்டியாக இல்லாமல் , ஒரு சிலரின் தூண்டுதலால் , உங்களுக்கும் ஐக்கியப்பேரவைக்கும் நடக்கும் மல்யுத்தமாகவே உள்ளது .

நீங்கள் சொல்வது போல , ஐக்கியப்பேரவை உங்களுக்கு கொடுத்த format letter தான் அனைத்து போட்டியாளர்களுக்கும் கொடுக்கப்பட்டது . அவர்களெல்லாம் ஐக்கியப்பெரவையை நம்பி , கையெழுத்திடும்போது , நீங்கள் மட்டும் ஏன் ஐக்கியப்பேரவையை நம்ப வில்லை .

ஒருவேளை , நீங்கள் சொல்வதுபோல ," ஐக்கியப்பேரவை ஏற்கனவே ஒருவரை முடிவு செய்தாகி விட்டது , அதனால் நான் கையெழுத்து போட்டாலும் அது ஒரு " ஒப்புக்காகத்தான் " , ஆகவேதான் கையெழுத்து போடவில்லை " என்று நீங்கள் நினைத்தால் , உங்களுக்கு வந்த செய்திபோலத்தானே அது மற்ற போட்டியாளர்களுக்கும் அது எட்டி இருக்குமே !

ஒருவேளை , இந்த போட்டியில் நீங்கள் வெற்றியை நழுவ விடும் பட்சத்தில் , இப்போது உங்களை தூண்டிவிடும் நபர்கள் , ஒருவர் கூட அந்த சமயத்தில் உங்களை கண்டுகொள்ள மாட்டார்கள் . இது உறுதி , பொறுத்திருந்து பாருங்கள்.

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. தவளை தன் வாயால் கெடும். (பழமொழி)
posted by zubair (riyadh) [04 October 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9552

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு சகோதரியே...... உங்கள் அறிக்கை நன்றாக தான் இருக்கிறது. உங்களை போலவே...... பல,பல சகோதர, சகோதரிகள் காயலிலும், நம் நாட்டிலும் உண்டு. ஆனால் அனுசரணையும், தன்னம்பிக்கையும் கூடவே... இருக்கும் நபர்கள் தான் குறைவு.

நேர்மையாய் இருந்தால் - தன்னபிக்கையும், தைரியமும் இல்லை. தைரியமாக செயல் படுபவேருக்கு - நேர்மையும், ஒழுக்கமும் இல்லை. அப்படி இருப்பதால் தான்...... நாம் இப்படி இருக்கிறோம்.

தாங்களின் தன்னிலை விளக்க கடிதத்தில் ஒன்றை குறிப்பிட்டு இருந்தீர்கள். "ஐக்கிய பேரவையின் ஆதரவு பெற்ற வேட்ப்பாளராக என்னை தேர்ந்தெடுக்காமல் நிராகரித்துவிட்டால்...... " என்று தாங்கள் நினைத்ததே.............. உங்களின் பலவீனத்தை குறிக்கிறது. தாங்களைப்பற்றி எங்களுக்கு தெரியும் என்டிருக்கும் போது நீங்கள் ஏன் ஐக்கிய பேரவையால் நடாத்தப்பட்ட ஐக்கியத்திற்கு அனுசரணை கொடுக்கவில்லை? தன்னம்பிக்கை இல்லை. ஆகையால் அனுசரிக்கவில்லை என்பதே... நடுநிலையாளர்கள் கொள்ளும் அருத்தமும், உண்மையும்.

அன்பு சகோதரியே......... எந்த ஒரு காழ்ப்புணர்ச்சியும் எங்களுக்கு (நடுநிலையாளருக்கு) இல்லை. ஒற்றுமையை விரும்பி மட்டுமே.... தாங்கள் ஒத்துழைக்கும் பட்சத்தில் ஊர் ஒன்று படும். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by mariyam thahira (chennai) [04 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 9553

ஆபிதா அவர்கள் பக்கம் பக்கமாக அறிக்கை அதாவது சுயவிமர்சனம் எவ்வளவு செய்தாலும் அவரது செய்கை மெய்யாகாது. அவரது அறிக்கையில், என்னமோ இவர்தான் கயல் நகரை காப்பாற்ற வந்தவரை போலவும் மற்றவர்கள் காப்பாற்ற மாட்டார்கள் என்பது போலவும் இவரது அறிக்கை உள்ளது.

மேலும் ஐக்கிய சபை எங்கு தவறு செய்தது என்பதை சுட்டிகாட்டவில்லை. எல்லா இடத்திலும் "எனக்கு அவ்வாறு தோன்றியது" என்றுதான் குறிப்பிட்டு உள்ளாரே தவிர எதையும் அவரால் நிரூபிக்க முடியவில்லை. மேலும் அவருக்கு பதவி ஆசையே தவிர ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இல்லை. அவர் உண்மை உள்ளவராக இருந்தால், ஊர் நலனில் அக்கறை இருந்தால் அவர் போட்டியிலிருந்து விலகி, மக்களுக்கு சேவை செய்யலாமே? பதவியில் இருந்துதான் சேவை செய்ய வேண்டுமா என்ன?

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. திறந்த புத்தகமான அன்பு தங்கையே !!!
posted by Sahuban Ali (Dubai) [04 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9554

அன்பு தங்கை ஆபிதாவே,

நீதான் காயலின் பொது வேட்பாளர். உன்னைத்தான் நாங்கள் கண்டிப்பாக தேர்ந்தேடுப்போம். உண் பேச்சு திறனும், செயலாற்றலும், சமுதாய சிந்தனையும், முன்னோக்கு பார்வையும் உனக்கு உன் தந்தையாரால் இரத்தத்திலேயே இரண்டறக்கலந்த ஓன்று. நாங்கள் ஒன்றும் தங்கை மஸ்ரிய்யாவிர்க்கு குடும்ப எதிரீய்யோ அல்லது அந்த தங்கை நகர் மன்றத்திற்கு வரக்கூடாதோ என்று எங்களுக்கு எள் அளவும் எண்ணம் இல்லை.

ஆனால் அவர்களை புறக்கடை வழியாக கொண்டுவந்தவர்களின் குறுக்கு புத்தியைத்தான் மிகவும் வண்மையாக கண்டிக்கிறோம்.

அன்பு தங்கை மஸ்ரியா - நீ கூட உன்னை வைத்து அயிக்கிய பேரவை நடத்திய ஜனநாயக கேலிக்கூத்தை கண்டித்து உன்னுடைய பேராதரவை தங்கை ஆபிதாவிற்கு அல்லாஹ்வை முன்னிறுத்தி கொடுக்கலாமே.

இது ஒரு அழகிய முன்மாதிரியாக நம் ஊரின் வரலாற்றுசுவடிகளில் பதிக்கப்படும். நீ இந்த துறைக்கு புதிது என்பதால் இதில் இருக்கும் சூது வாதுகள் உனக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். இது இயற்க்கை தானே !!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by K S Muhamed Shuaib (KAYALPATNAM) [04 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9555

"நிஜம்: நடந்தது என்ன?" என்கிற தலைப்பில் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி வருமே அதுபோல் இருக்கிறது சகோதரி ஆபிதாவின் கடித வெளிப்பாடு. இந்த பக்கங்களில் ஏராளமானோர் ஐக்கியபபேரவையின் நோக்கங்களில் சந்தேகம் ஏற்ப்படும் விதமாக தங்களின் கருத்துக்களையும் மனக்குமுறலையும் வெளிப்படுத்தி இருந்தனர். சகோ. ஆபிதாவின் இந்த பதிவு அவைகளெல்லாம் உண்மைதானோ எனும் படியாக அமைந்துள்ளது. பேரவை எதற்கும் பதில் அளிக்காமல் இருப்பது சரியல்ல. இனியாவது என்ன நடந்தது என்பதை விளக்கி அறிக்கை கொடுப்பது அதன் எதிர் கால நலனுக்கு நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by M.A. MOHAMED THAMBY B.Sc., (CHENNAI) [04 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9556

அஸ்ஸலாமு அலைக்கும்

وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۚ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا 17:81. (நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக.

بَلْ نَقْذِفُ بِالْحَقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهُ فَإِذَا هُوَ زَاهِقٌ ۚ وَلَكُمُ الْوَيْلُ مِمَّا تَصِفُونَ

21:18. அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது; பின்னர் (அசத்தியம்) அழிந்தே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.

ஆபிதா சேக் அவர்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

உங்கள் பொது சேவைகள் நான் அறிந்ததே. நம் ஊர் மக்களும் அறிந்திருப்பார்கள். நம் புதுப்பள்ளி ஜமாத்தும் நன்கு அறிந்திருக்கும். புதுப்பள்ளி ஆதரவு இல்லாவிட்டாலும் புதுப்பள்ளி முகல்லாவாசிகள் அனைவர்கள் ஓட்டும் உங்களுக்கே. எங்கள் குடும்பத்தினர்கள் , என் நண்பர்கள் குடும்பத்தினர்கள் ஓட்டும் உங்களுக்கே. ஏன்? இந்த ஊர் மக்கள் ஓட்டும் உங்களுக்கே. வெற்றி நிச்சயம்.

ஐக்கியப் பேரவைக்கு நீங்கள் கையெழுத்து போடாமல் இருந்தது மிக மிக சரியே. நீங்கள் கையெழுத்து போட்டு இருந்தால் உங்களை தேர்ந்தெடுக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு ஐக்கியப் பேரவை election நடக்கும் முன்னரே தலைவியை தேர்ந்தெடுத்து விட்டார்கள் என்ற விசயம் ஊரில் flashback க ஓடி கொண்டு இருக்கிறது.

ஊர் ஜமாஅத்தரே ஒன்றுக்கு பல முறை சிந்திப்பீர்!

சுயநலமில்லா பொதுநல சேவகி சகோதரி ஆபிதா சேக் B.Sc., B.Ed. அவர்களுக்கு உங்களுடைய பொன்னான வாக்குகளை புத்தகம் சின்னத்தில் முத்திரையிட்டு அன்னாரை அமோக வெற்றிபெற செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் அன்பு தம்பி M.A.MOHAMED THAMBY B.Sc., Chennai.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by N.M. MOHAMED ISMAIL (DUBAI) [04 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9557

சகோதரி ஆபிதா உங்கள் profile இன்னும் விரிவாக இருந்தால் மக்கள் எல்லோருக்கும் இன்னும் உங்கள் மீது confident வரலாம். ஊர் முன்னேற்றத்க்கு உங்கள் involvement என்ன. இது வரை எத்தனையோ பிரச்சனைகள் வந்துள்ளன உங்கள் பங்கு என்ன. தேர்தல் வாக்குறுதிகள் என்ன என்பதனை தெரிவியுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by mohideen (jeddah) [04 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9558

அஸ்ஸலாமு அழைக்கும்

சகோதரி ஆபிதா அவர்களுக்கு

சகோதரர் நுஸ்கி ஹாஜியார் அவர்கள் சொல்லுவது சரியே. ஐக்கியப் பேரவை தங்களிடம் மட்டும் முச்சரிகையில் கைஎழுத்து கேட்கவில்லை. மாறாக எல்லோரிடமும் தான் கேட்டார்கள். தாங்கள் மட்டும் கைஎழுத்திட மாட்டேன் என்று அடம் பிடிப்பது எந்த வகையில் நியாயம். அப்படி கைஎழுத்து போட விருப்பம் இல்லை என்றால் ஆதரவையும் எதிர் பார்க்க கூடாது. அப்படி தாங்கள் கூறும் பட்சத்தில்

முன்பே, “இன்னாரைத்தான் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்...” என்ற ரீதியில் பெறப்பட்ட செய்தி உண்மை என்றால் ..............அல்லாஹ் போதுமானவன்

If the vote has been splitted, it is possible for other community has to be enter


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Kader Sulaiman (Kayalpatnam) [04 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9562

ஐக்கியப் பேரவை என்ன ஐநா சபையின் அங்கமா. இந்திய திருநாட்டில் யார் வேட்டுமானாலும் தேர்தலில் போட்டி போடலாம். எல்லோருக்கும் உரிமை உண்டு.

இங்கு புதுப்பள்ளி ஜமாஅத்தில் உள்ள தலைவர் உட்பட சிலர் ஐக்கியப் பேரவையின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்கள். புதுப்பள்ளியில் நடைபெற்ற பொதுக்குழுவில் 80 சதவிகிதம் பேர் ஜமாஅத் யாரையும் ஆதரிக்க வேண்டாம் என்று கூறியும் அதற்கு முக்கியஸ்தர்கள் ஐக்கியப் பேரவையின் நிர்பந்தம் என்று கூறி அநியாயமாக ஜமாஅத்தை பிரிக்க பார்க்கிறார்கள்.

தேர்தல் தேதி அறிவிக்கும் முன் அடிக்கடி தைக்கா தெருவில் உள்ள ஒரு முக்கியஸ்தர் வீட்டில் ஐக்கியப் பேரவையின் கதாநாயகன் அடிக்கடி மீட்டிங் போடுவார்கள். புதுப்பள்ளியில் நடக்கும் சம்பவங்கள் யாவும் தலைவர் மற்றும் நான்கு முக்கியஸ்தர்களுக்கு மட்டும்தான் தெரியும். எந்த ஒரு நடவடிக்கைகளையும் செயலாளர் பொருளாளர்களிடம் கலந்து ஆலோசிப்பது கிடையாது. தான் தோன்றித்தனமாக செயல்படுவதுதான் புதுப்பள்ளி ஜமாஅத்தின் வேலை. அன்று கூடிய பொதுக்குழுவில் தலைவிக்கு வாக்களிப்பதை பற்றி எந்த ஒரு பேச்சும் பேசவில்லை.

அவர்களாகவே நம் ஜமாஅத்தை சார்ந்த நல்ல ஒரு திறமையான வேட்பாளரை விட்டுவிட்டு ஐக்கியப் பேரவையின் நிர்பந்தத்தினால் மற்றொருவரை ஆதரிக்கிறார்கள். கூடிய விரைவில் நீங்கள் போடும் கணக்கு தப்புக்கணக்காகும். அந்நாள் வெகு தூரத்தில் இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by mohamed faiz (CHENNAI) [04 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9565

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹு) ஆபிதாஷேக் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by V D SADAK THAMBY (Guangzhou (China)) [04 October 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 9566

சகோதரி ஆபிதாவின் குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று.

கடிதங்களை பார்க்கும்போது ஐக்கியபேரவை மீது எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை .

"முச்செரிக்கை" என்பது வழக்கமான ஒன்றுதான். அது எல்லோருக்கும் பொதுவான ஒன்றுதான்.உங்களுக்கு மட்டும் வேறுவிதமான "முச்செரிக்கை" என்றால்தான் ,நீங்கள் கையெழுத்திட மறுத்ததில் நியாயமிருக்கும்.

முச்செரிக்கையில் நீங்கள் கையெழுத்திட மறுத்தது , "உங்களின் சந்தேக கண்ணோட்டம் , அனுபவமின்மை ,அறியாமை , அல்லது அதி மேதாவித்தனம் " என பொருள் கொள்ளாம்.

உங்களுக்கு "ஐக்கிய பேரவை" மீது நம்பிக்கை இல்லையெனில், நீங்கள் உங்களின் ஆதரவுக்கு ஐ. பேரவையை அணுகி இருக்கக்கூடாது .

இன்னும் சொல்லப்போனால் நீங்கள் உங்களை சார்ந்த ஜமா அத் மூலமாகத்தான் ஐ.பேரவையை அணுகி இருக்க வேண்டும்.

உங்களின் சொந்த ஜமா அத் ஆதரவே உங்களுக்கு கிடைக்கவில்லை.

மொத்த தவறும் உங்கள் பக்கமே இருக்கிறது.உங்களின் தவறுகளை திருத்திக்கொள்ள இன்னமும் வாய்ப்பு இருக்கிறது.

இப்போதும்கூட நீங்கள் போட்டியில் இருந்து வாபஸ் வாங்கி , ஐ.பேரவை யின் வேட்பாளரை ஆதரிக்கலாம்.

அதிலும் அல்லாஹ் உங்களுக்கு நன்மையே நாடி இருப்பான்.

ஒரு குறிப்பிட்ட சிறு குழுவினர்தான் உங்களை பகடை காயாக பயன்படுத்துகின்றனர்.எனவே கவனமாக செயல்படவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Abdul Majeed (Mumbai) [04 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 9567

ஒரு வேலை ஐக்கிய பேரவை நாங்கள் மனு அளித்த இதனை பேர்களின் பெயரை எழுதி குலுக்கி போட்டு தேர்ந்தேடுபோம் அதில் உங்கள் பெயர் வராத பட்சத்தில் போட்டியிட கூடாது என்று கையெழுத்து கேட்டிருந்தால் ஞ்யாயம் . அல்லது இந்த இந்த தகுதி அடிபடையில் பேரவை தேர்ந்து எடுக்கும் அதனால் நீங்கள் செய்ய போகும் பணிகள் என்ன என்று கேட்டு வாங்கி விவாதித்தால் அது ஞ்யாயம்.

இவை இல்லாமல் ஒருவரின் பெயர் தெருவை வைத்து செலக்ட் செய்திருப்பது , அவ்வாறு செலக்ட் செய்தவரை எல்லோரும் ஏற்க வேண்டும் என நினைப்பது எவ்வகையில் ஞ்யாயம் . vahidha மற்ற வேட்பாளரை விட எல்லோருக்கும் அறிமுகம் ஆனவர் .ஆனால் அவர் குறைவான vote பெற்று இருபதும் , அதிக சப்போர்ட் உள்ள ஆபித பெயரை பரிச்ளிக்காமல் இருந்ததும் பொலிடிக்ஸ் என்பது வெட்ட வெளிச்சம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. எங்கே அந்த (பழைய) காயய்பட்டணம் டாட் காம்...???
posted by M.N.L.முஹம்மது ரஃபீக், ராபியா மணாளன். (புனித மக்கா.) [04 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9568

ச்சே..! பெரிய தலைவலியா இருக்கு! அப்பப்பா!!! எப்ப பாரு உள்ளாட்சித் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்ன்னு... இதே வேலையாப் போச்சு! அயல்நாட்டிலிருந்து கொண்டு ஆடு செத்தது வரை இணயதளத்தில் ஊர் செய்தியாக கண்டுகளித்த எமக்கு,“ அண்ணன் எப்ப எழும்புவான் திண்ணை எப்ப காலியாகும்ன்னு, ”இருக்கு! சிந்துபாத் கதை மாதிரி பேரவையின் சிதம்பர ரகசியம் நீண்டுகிட்டே போகிறது சரியில்லை!

பேரவைக்குப் போர்வையைப் போர்த்தி மூடிவச்சிட்டு ஊர் சேதி வேறே ஏதாச்சும் இருந்தா உடனே அப்டேட் பண்ணூங்க! புன்னியமாப் போகும்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Pirabu Mujeeb (Riydah-KSA) [04 October 2011]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9570

நீங்கள் மக்களை மதிபவராக இருந்தால் முதலில் மனுவை வாபஸ் பெறவேண்டும். அப்போதுதான் உங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohideen (Jeddah) [04 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9571

சகோதரர் சாஜித் அவர்களே,

பேரவையில் நடந்த தவறு என்ன என்று கூறினால், மக்கள் வாக்களிக்க வசதியாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Riyaz Mohamed SH (HongKong) [04 October 2011]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 9572

காயல் நெஞ்சங்களே !

இத்தனை சந்தேகம் தேர்தலுக்கு முன்னமே சகோதரி ஆபிதாவுக்கு உள்ளது எண்றால், நாளை தலைவி சேரில் உட்கார்ந்த பிறகு எப்படி இவரால் ஊருக்கு நல்லது செய்ய முடிவு எடுக்க முடியும்.

அத்தனையும் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார் சகோதரி ஆபிதா, புதுப்பள்ளி ஜமாத்தும் விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள். எங்கும் தப்பு இருப்பதாக தெரிய வில்லை. அப்படி இருக்க சகோதரி ஆபிதா எந்த தைரியத்தில் பொதுப்பணி ஆற்ற முடியும் என்ற நம்பிக்கை வரும். ஆரம்பமே இத்தனை ஜமாத்தார்கள் பெரியவர்களை புறக்கணித நீங்கள், இத்தனை சந்தேகம் உள்ள நீங்கள் எப்படி ஊர் முன்னேற்றம் பண்ண முடிவு எடுப்பீர்கள் ?????

FIRST IMPRESSION IS THE BEST IPRESSION. STARTING ITSELF DONT HAVE SELF CONFIDENCE THEN HOW WE CAN GO WITH YOU.

சிந்தித்து நாம் செயல் படுவோம் ஊர் நலம் காப்போம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by abdul wadood (Bangkok) [04 October 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 9573

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரிய உங்களின் தன்னிலை விளக்கத்தை பார்க்கும்போது ஐக்கிய பேரவை நேர்மையாகவே நடந்துள்ளது உங்களுக்கு யாரோ ஒரு சிலரால் குழப்பம் ஏற்பட்டு நீங்கள் சந்தேக எண்ணத்துடன் ஐக்கிய பேரவை ஐ அணுகி உள்ளதாக் தெரிகின்றது

முச்சரிக்கை இல் கையழுத்து போட தவறியதற்கு கூறிய காரணம் சரியா கவும் பொருத் த மாகவும் இல்லை. அதனால் மின்டும் நன்கு ஆற அமர யோசித்து ஊர் ஒட்ற்றுமை கருதி ஒரு நல்ல முடிவை அறிவித்து ஊருக்கு பதவி இல்லாமலும் சேவை ப்ரியவூம் .பதவி நம்மை நாடி வர வண்டுமே தவிர நாம் பதவிய நாடி செல்ல கூடாது இது நபி ஸல் அவர்களின் அறிவுரை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by mohamed ibrahim (chennai) [04 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 9574

அஸ்ஸலாமு அழைக்கும். ஐக்கிய பேரவை நம் ஊருக் தேவையான ஒரு அமைப்பு. தனி மனிதன் செய்யாததை ஒரு பொது ஸ்தாபனம் தான் செய்யும். ஊருக் தேவையான ஈபி சப் ஸ்டேஷன் மற்றும் வாட்டர் பைப் லைன் இவைகளை நம் ஊருக் வர முயற்சி செய்வது தனிப்பட்ட நபரின் முயற்சி அல்ல . ஒரு பொது அமைப்பு தானே. அந்த அமைப்பு இந்த தேர்தலில் தவறு செய்யாது . நம்புவோம். இன்ஷா அல்லா, இறைவன் நாட்டப்படி நல்லதே நடக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by shaik (colombo) [04 October 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 9575

ஆபிதா அவர்களின் அறிக்கைக்கு ஐக்கிய பேரவைவின் பதில் என்ன?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by jafarullah (soudi arbia(madinah)) [04 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9576

அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உண்மை விளக்கங்களை தெரிவித்த ஆபிதா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. நீங்கள் வாபஸ் வாங்கிவிடுவீர்களோ என்று குழப்பத்தில் எல்லோர்களும் இருந்தார்கள். எல்லா குழப்பத்திற்கும் முற்று புள்ளிவைத்து தன்னிலை விளக்கம் போதுமனதாகி விட்டது.

இதிலிருந்து உங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. முழு மூச்சாக தேர்தல் கல பணியில் இறங்கி அன்பு தாய்மார்கள் ,அன்பு சகோதர சகோதரிகள், வணிகர்கள், ஆகியோர்களிடம் சென்று உங்கள் பொன்னான வாக்குகளை புத்தகம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அன்போடு கேளுங்கள்.

நன் நடத்திய கருது கணிப்பில் உங்களுக்கு வெற்றி வைப்பு பிரகாசமாக உள்ளது .காத்திருப்போம் வெற்றி விழாவை நோக்கி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by S.S. JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [04 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9577

மரியாதை மிகு சகோதரி ஆபிதாவின் தன்னிலை விளக்கம் ஏற்றுக்கொள்ள கூடியாதாக இல்லை.

மழலையர்களை பண்படுத்தும் இவர்கள் இப்படி தானாக எழுதியிருப்பர்களா? என்ற சந்தேகமும் எழுகிறது.

எந்த ஒரு பொது நிறுவனத்திலோ இல்லை பொது இயக்கத்திலோ தலைமை பொறுப்புக்கு பலர் விரும்பும் போது அதற்கு சில கட்டுப்பாடுகளை வைத்து வேட்பாளர் களை தேர்ந்தெடுத்து தேர்தல் நடத்தி வெற்றி பெற சில கட்டுபாட்டை எழுதி கையெழுத்து வாங்குவதும் தான் சுதந்திரமான தேர்ந்தெடுப்பு.

ஆனால் தாங்கள் கீழே குறிப்பிட்டுள்ள வாசகம் எப்படி பொருந்தும். " ஆபிதாவாகிய என்னைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டிருந்தால், ஏன் மற்றவர்களிடமெல்லாம் விருப்ப மனு கேட்டனர்...? எதற்கு இந்த பொது வேட்பாளர் தேர்தல்...? இது எனக்கு இன்னும் புரியாத புதிராகவே உள்ளது."

தங்கள் கருத்துப்படி அப்படியே செய்தால் (ஒரு வாதத்திற்கு) மரியாதைக்குரிய நம் நகராட்சியின் முன்னாள் தலைவர் வஹிதா ராத்தா அவர்களை அனுபவத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து இருக்கலாமே .

மாறாக தங்களை தேர்ந்தெடுத்தால் தாங்கள் கேட்கும் இதே கேள்வியை அவர்கள் கேட்கலாமே?

தற்போதும் ஒன்றும் கெட்டுபோகவில்லை. மற்றவர்களின் உந்துதலுக்கு கட்டுப்படாமல் ஊரின் பெரும்பான்மை ஜமா அதின் ஆதரவு பெற்ற வேட்பாளருக்கு வாக்களிக்கும் படி அறிக்கை விட்டு தாங்கள் ஒதுங்கினால் தங்கள் மதிப்பும் மரியாதையும் அணைத்து ஜமாத்திலும் ஓங்கும் முடிவு தங்களிடமே -சாதிக் ,ஜித்தாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by ashik (saudi arabia) [04 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9580

போட்டி நன்றாக கலை கட்டுகிறது...

போட்டி யார் இருவர்களுக்கும் இடையில் என்பது தான் சற்று குழப்பமாக இருக்கிறது . ஏன் என்றால் ஒரு புறம் ஆபிதா லத்தாவும் ,அவர்கள் செய்த அரும்பனிகளும்,கல்விதிரனும் , மக்கள் சேவையும் , தலைமைதுவமும் அவள்கள் தகப்பானர் செய்த அரும்பணிகளும் மக்கள் ஆதரவும் செல்வாக்கும்

மற்றொரு புறம் iikiya பேரவையும், பேரவை தலைவர்ஹலும் அவர்களை ஆதரிக்கும் மக்களும் கூடவே "ஊரு ஒற்றுமை" என்ற மந்திர சொல்லும் .

ஆபிதா லாதவை ஆதரித்தால் ஊர் வேற்றுமை அடைந்து விடுமா ?.. புரியலே

ஏன் மிஸ்ரியா லாத்தவை ஒரு சீனிலும் காணோமே ?.. அவர்களும் பட்டதாரி தானே ? அவர்களுக்கு உண்மையியகவே நல்ல கல்வித்திறன் , சிறு வயது முதல் மக்களுகாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் , தலைமை பொறுப்பு , பெரியோர்களை மதித்தல் போன்ற நல்ல குணங்கள் இருக்குமானால் அதை மக்களிடம் சொல்லி அல்லவா அவர்களை ஆதரிக்க கேட்டிருக்க வேண்டும் அப்படி ஒரு கம்மேன்ட்சும் என் கண்களில் தென்படவில்லை ...

25 பேர் கொண்ட iikiya பேரவையின் குழு சொன்ன ஒரு காரணமும் , ஊர் ஒற்றுமை என்ற போலியான காரணத்தையும் வைத்து ஊரில் உள்ள அணைத்து மக்களும் iikiya பேரவை கை நீட்டி காண்பித நபருக்கு எவ்வாறு கண்ணை முடி கொண்டு வாக்களிக்க முடியும் . 25 நபர்களை கொண்ட iikiya பேரவை குழு தேர்ந்தெடுத்தது iikiya பேரவையின் தலைவரை அல்ல . அவர்கள் தேர்ந்தெடுக்குமாறு சொல்வது பள்ளயிர்கனக்கான மக்களின் பிரதிநிதியை .அப்படி தேர்ந்துடுகும்போது நாடு நிலையோடு நடந்தார்களா என்றால் அதிலும் மர்மமே நீடிக்கிறது... அல்லாஹுவிற்கு தான் வெளிச்சம் .

ஊரின் பிரதிநிதியை தேர்ந்தெடுப்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கடமை . அதனை சிந்தித்து தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பது தான் புத்திசாலிதனம் .

அல்லாஹ்வே! ஆட்சியாளர்களுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய். (திருக்குர்ஆன் - 3:26)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Samu.A.B (Dubai) [04 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9583

சகோதரி ஆபிதவின் கடிதங்களை வைத்து ஐக்கிய பேரவை தவறு செய்துள்ளது என்று சொல்லுவதை ஏற்றுகொள்ள முடியாது. தங்களிடம் வின்னபிபவர்கள் இந்த declaration தரனும் என்பது ஐக்கிய பேரவையின் prerequisite. இதை உங்களால் தர முட்யாத பட்சத்தில் நீங்கள் ஐக்கிய பேரவைக்கு apply செய்ததே தவறு.

இந்த declaration சரியா தவறா என்பது விவாதத்திற்கு உரியது. ஐக்கிய பேரவையால் unanimous அக ஒருவரை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், வீண் பிரச்சனய்களை தவிர்க்க இந்த declaration மிகும் அவசியம் என்பது என் கருத்து. There may be different of opinion.

சகோதரி ஆபிதா அப்ளை பண்ண முன்பே தான் தான் unanimous candidate என்ற எண்ணத்தில் இருந்தது தெரிகிறது, that itself is wrong. There are lot of able candidates in kayal and there should be a process to choose. She cannot set terms to aykiya peravai. If she wishes to apply there, as like every other candidate, she should have given declaration. If not she should have kept away from there.

What she is claiming as Mr.X was canvassing for candidate Y are stories, and will remain as stories until proven otherwise. Further, peoples are claiming sister Abida as a social worker in kayal, can any anybody enlighten me in this regard by listing out her contribution to the upliftment of kayal society, especially poor and the downtrodden. Please don’t add her school in the list; parents who are paying fees for their kids may get angry.

There may be lot of problems in aykia peravai, but at least in this letter matter, we cannot find any fault with them.

Allah knows the Best


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Javed Nazeem (Chennai) [04 October 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 9585

ஒரு அமைப்பின் உதவி நாடப்படும் பொழுது, தனது நிபந்தனைகளை ஏற்க வேண்டும் எனக் கோர அந்த அமைப்பிற்கு நிச்சயம் உரிமை உள்ளது. அந்த நிபந்தனைகள், சரியானவையா அல்லது தவறானவையா என்பது விவாதத்திற்குரியதாக இருக்கலாம் - ஆனால் நிபந்தனைகளை வைக்க அந்த அமைப்பிற்கு நிச்சயம் உரிமை உள்ளது.

அப்படிக் கோரும் ஒரு அமைப்பு, நியாயமான ஒரு அமைப்பாக, சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளை கொண்ட ஒரு அமைப்பாக இருக்கும் பட்சத்தில், அந்த நிபந்தனைகளை ஏற்க மறுப்பவர் தவறிழைத்ததாக எண்ணும் வாய்ப்புக்கள் மிக அதிகம். இந்தப் பிண்ணனியில் ஐக்கியப் பேரவையின் சில செயல்பாடுகளை பார்க்கலாம்.

உள்ளாட்சி தலைவர் தேர்தல் தொடர்பாக விருப்ப மனு வாங்கும் முன், ஆலோசனை செய்யலாம் என அறிவித்து விட்டு தீர்மானங்களை மட்டுமே அறிவித்தது. அமைப்புகள் சாரா 25 நபர்களுக்கு வாக்குரிமை வழங்கியது. பின்னர் எதிர்ப்பு வலுக்கவே அதை கை விட்டது. சில பொது நல அமைப்புக்களுக்கு வாக்குரிமை வழங்கியது - அதன் அடிப்படை இன்று வரை தெளிவு படுத்தப்படவில்லை

விருப்ப மனு வாங்கிய பின், வேட்பாளர் தேர்வு நடைபெற்றபோது வேட்பாளர்களின் பெயர்களை முன்னமே அறியத் தராதது வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின் அதிகாரபூர்வ வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்படலாம் எனும் நிலையில், இரண்டாம் நிலையில் உள்ள வேட்பாளருக்கு வாய்ப்பு தராமல், அதிகாரபூர்வ வேட்பாளரின் தாயாரை மாற்று வேட்பாளராக நிறுத்தியது.

மேற்காணப்படும் செயல்பாடுகளை கவனித்தால், இவை ஒரு நியாயமான அமைப்பின் செயல்பாடுகள் அல்ல என்பதையும் உணரலாம். இப்படிப்பட்ட ஒரு அமைப்பின் நிபந்தனைகளை நிராகரிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

Mrs. Shaik, all the very best. Suggest getting some guidance in preparing public statements. Some innocent, plain sentences may be misinterpreted. Don’t take periyappa Shaik’s help – அவனுக்கு அரசியல் எல்லாம் தெரியாது :)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
46. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by ahmed meera thamby (makkah) [04 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9588

அன்பின் காயலர்ஹளுக்கு சலாம்,

நீங்கள் ஒற்றுமை இல்லாமல் இருப்பதை நம் ஊர் ஆட்கள்தான் பார்க்கிரார்ஹல் என்று நினைகாதீர்ஹல்.

நம்மை நாம் ஆள்ஓம்,அது எந்த ஜமாஅத் பிரமுஹராஹா இருந்தாலும் சரி

ஊர் ஒன்று பட்டாள் போதும் நாம் ஒற்றுமையா இருப்போம் ஊர் இரண்டு பட்டாள் நம்மை அளித்து விடுவார்ஹல் ஜாக்கிரதை,

உங்கள் எல்லோரையும் கெஞ்சி கேட்டு கொல்ஹிறேன் ஒற்றுமையா இருங்கள். இந்த புனித ஹரத்தில் நம் ஒற்றுமைக்கு துவா செய்ஹிறேன். நாம் எல்லோறும் ஒற்றுமையா வாழ்வோம் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன். வஸ்ஸலாம்

உங்கள் ஒற்றுமையை விரும்பும்
தமிழன் இஸ்மாயிலின் காக்கா
அஹ்மத் மீரா தம்பி
புனித மக்காஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
47. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Habeeb Rahman (Dubai) [04 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9590

அன்புள்ள சஹோதரி ஆபிதா அவர்களே! ஊருக்கு நன்மை செய்ய நினைப்பது நல்ல விஷயம்தான். அனால் அதை தான் மட்டும்தான் செய்ய முடியும் என்று நினைப்பதுதான் மகா தவறு. அதை காரணமாக சொல்வது கொஞ்சம் கூட பொருந்தவில்லை.

இஸ்லாத்தில் ஒற்றுமை என்பது எவ்வளவு தூரம் வலியுருத்தபட்டுல்லுது என்பது எல்லாரும் அறிந்ததே. பேரவை தவறு செய்திருந்தால் அதை இறைவன் பார்த்து கொள்வான். அவர்கள்தான் இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். நீங்கள் அல்ல!. உண்மையில் உங்களுக்கு மார்க்க பற்று இருந்தால் போட்டியிலிருந்து விலகுவதுதான் உங்களுக்கு அழகு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
48. இன்னும் விபரமாக
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [04 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 9591

FANTASTIC SELF EXPLANATARY STATEMENT BY SISTER AABIDHA.. SHE ACTED BY HER CONSCIENCE .. WHAT IS WRONG IN THAT?.. WHAT SHE SUSPECTED ABOUT THE JAMATH, WAS SUSPICION OF THE MOST.. IN HER SELF EXPLANATION, SOME PLACE SHE MENTION ED "ONE PERSON" WITHOUT NAMING THE INDIVIDUAL..

IF SHE DOES NAME THE PARTICULAR INDIVIDUAL, IT WOULD HAVE STILL FANTASTIC STATEMENT ... ALL THE BEST...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
49. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohideen (Jeddah) [04 October 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9592

சகோதரர் அப்துல் மஜீத் அவர்களே,

தாங்கள் சொல்லுவது போல், வேட்பாளர்கள் அனைவருமே தாங்கள் ஆற்ற போகும் பணிகலை சொல்லத்தான் செய்வார்கள்...... ஊரு ஒற்றுமையை நாடித்தான் ஜமாத்........ பேரவை...... கூடி வேட்பாளர்களை தேர்வு செய்கிறார்கள். சகோதரி ஆபிதா அவர்கள் ஏற்க போவது தலைமை பொறுப்பு, அதற்கு முதலில் தன்னம்பிக்கை வேண்டும். அது அவர்கள் இடத்தில இல்லை.

எது எப்படியோ அல்லாவின் நாட்டம் எதுவோ அதுதான் நடக்கும். தேர்தலில் வெற்றி பெற அணைத்து வேட்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
50. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohamed Ali (Madinah Al Munawwara) [04 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9593

சகோதரி ஆபிதா அவர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்,

தங்களின் விளக்கத்தை பார்க்கும்போது ஐக்கிய பேரவை அனைவரிடமும் நேர்மையாகவே நடந்துள்ளது, நிச்சயமாக ஊர் நலத்தில் அக்கறை இல்லாத சில விசமிகள் தங்களை நன்றாக ஏத்திவிட்டு வேடிக்கை பார்பதாக எமக்கு ஐயம்.

கடமை செய்ய பல வழிகள் உள்ளது ஊர் ஒற்றுமையை குலைத்து விடை காண்பதில் நிச்சயம் பலன் இல்லை. தாங்கள் ஒத்துழைக்கும் பட்சத்தில் ஊர் ஒன்று படும். எல்லாம் வல்ல இறைவன் நம் ஊரின் நாட்டத்தில் நன்மையே நாடுவானாக ஆமின். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
51. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by mohamed abdul kader (dubai) [04 October 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9594

யார் அந்த முதலாமனவர்? யார் அந்த நகரபிரமுகர்? அவர்கள் பெயரயும் சொல்ல வேண்டியதுதாணே சகோதரி ஆபிதா ஷேக் அவர்களே. அப்போது தான் எல்லோருக்கும் எங்கு தப்பு நடந்து உள்ளது என்று தெரியும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
52. காயல் தான் எனக்கு புடிச்ச ஊர்
posted by M.சுல்தான் (சூடான்) [04 October 2011]
IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 9595

இப்போவே கண்னே கெட்டுதே..... அப்பப்பா உள்ளாட்சி தேர்தல் வந்தாலும் வந்துச்சு காயல்.காம் ல வேற செய்தியை பார்க்கவே முடியலயே... முன்னெல்லாம் ஆபிஸ்ல வேலையை முடிச்சிட்டு ரூம்கு வந்த காயல் site ல சுவாரஸ்யமான செய்திகளை பார்க்கலாம்.. இப்பொம் என்னன்னா ஒரே தேர்தல் செய்தியா தான் இருக்கு.. ஷாலிஹ் பாய் தேர்தல் செய்தியோட கொஞ்சம் வேற செய்தியையும் update பண்ணுங்க... உங்களுக்கு புண்ணியமா போயிடும்...

எல்லோரின் கருத்தும் சும்மா இடி மின்னல் மாதிரி இருக்கு... அனைவரின் கருத்தும் அடை மழை தான் போங்க... கலக்குராங்க...

. நானும் ஏதோ எழுதனும்னு நினைக்கிறேன் ஆனால் வார்த்தை தான் வரமாட்டிருக்கு.... அப்பொம் பாட்டா படிச்சிடலாமா... ம்ம்ம... ஓகே அப்பொம் பாடிட வேண்டியதுதான்...

காயல் தான் நமக்கு புடிச்ச ஊரு..
இங்கு வாழும் மக்கள் எல்லாம் கலக்குராங்க பாரு..
காயல் தான் நமக்கு புடிச்ச ஊரு..

அழகும் காயலில் தான் ...
அழகான மக்களும் காயலில் தான்.
அதிக ஹாஃபில்கள் காயலில் தான்....
அதிக ஆலிம்களும் காயலில் தான்.. நம்ம ஆசபட்டு ரசிக்கும் ஊரு ..
நம்ம அழகு காயல் தான்
ஒற்றுமையின் சிகரம் காயல் தான்

(காயல் தான் எனக்கு புடிச்ச ஊர்....)

உள்ளாட்சி தேர்தல் வந்தாலும் நம்ம கவனம் எல்லாம் காயலில் தான்.....

கருத்து சண்டை பல இருந்தாலும் நம்ம விரும்பும் ஊரு காயல் தான்..

உலகமெல்லாம் சுத்தி வந்தாலும் நம்மை கவர்ந்த ஊரு காயல் தான்....

ஊருக்கூரு அமைப்பு வச்சு பல சேவை செய்வதும் காயலில் தான்....

கடல் தாண்டி நாம் இருந்தாலும் நம்ம மனசு எல்லாம் காயலில் தான்

நாலு நாளைக்கு ஒரு தடவ தண்ணி விடுவதும் காயலில் தான்...

அடிக்கடி பவர் கட்டு அதிகம் நடப்பதும் காயலில் தான்....

நம்மையெல்லாம் அதிர வைக்கும் அந்த அனுமின் நிலையும் காயலில் தான்...

இதையெல்லாம் நிவர்த்தி செய்ய நமக்கு நல்ல தலைவி தேவை தான்..

ஆபிதா லாத்தா வெற்றி பெற வாழ்த்துக்கள்,,,,,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
53. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Meera Sahib (kayalpatnam) [05 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9596

சகோதரி ஆபிதா அவர்களே!

தங்களுடைய தந்தையின் தன்னலமற்ற பொது சேவை ஒன்றே போதும் - தங்களைப்பற்றி அறிய. ஐக்கிய பேரவையை அணுகியிருக்க தேவை இல்லை. பல சந்தர்ப்பங்களில் ஐக்கிய பேரவையின் செயல்பாடு பற்றி விமரிசித்தவன் நான்.

ஆனால் தற்போதைய நிலைமையை சற்று சிந்தித்துபாருங்கள். நாம் அன்னியருக்கு இடம் கொடுக்கலாமா ? உங்கள் அனைவரது செயல்பாடும் அன்னியருக்கு இடமளிப்பது ஆகிறது . இது பற்றி தற்போது மிகவும் பரவலாக சந்தோசத்தோடு அன்னியர் மத்தியில் பேசப்படுகிறது . அதற்க்கு இடம் கொடுக்கலாமா ? எனவே தாங்கள் உட்பட அனைவரும் பேரவை தேர்ந்தெடுத்த வேட்பாளரின் வெற்றிக்கு உறுதுணையாக இருங்கள் . ஐக்கிய பேரவை தவறே செய்திருந்தாலும் நம் ஊர் நன்மை கருதி விட்டுகொடுப்போம் - பாடுபடுவோம். தங்கள் தந்தையின் நெடு நாளைய நண்பர் என்ற முறையில் இந்த வேண்டுகோளை முன் வைக்கிறேன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
54. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by TAM UMER (HONG KONG) [05 October 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 9597

அஸ்ஸலாமுஅழைக்கும்......... சகோதரி ஆபிதா ஐக்கிய பேரவைக்கு எழுதிய லெட்டர் பற்றி அவர் விடுத்து இருக்கும் அறிக்கையில், அவர் இறைவன் மீது சத்தியம் செய்து இருப்பதால், அவர் கூறுவது அள்ளவும் உண்மை என்றாய் எடுத்து கொள்ளலாம். இதை ஐக்கிய பேரவை அல்லாஹ் மீது சத்தியம் கூறி மறுத்தால்,

அப்போது தான், யார் கூறியது உண்மை என்று சர்ச்சை DEBATE வரும்..அதற்க்கு மேல் , அது அல்லாஹுக்கும், அவர்களுக்கும் இடையில்...

சரி, சகோதரி ஆபிதா பல இடங்களில், ஐக்கிய பேரவை சார்ந்த ஒருவர் அல்லது ஒரு பெரியவர் என்று குறிப்பிட்டதற்கு பதிலாக, அவர் யார் என்று குறிப்பு இருந்தால், இன்னும் இதற்க்கு வழு சேர்த்து இருக்கும்.

இதில் இருந்து நமக்கு தெரிவது, ஐக்கிய பேராவில் உள்ள சிலர் யாரை, தலைவாராக கொண்டு வர வேண்டும் என்று பல மாதங்களுக்கு முன் முடிவு செய்து காய் நகர்த்தி இருக்கிறார்கள்.. அனால் தமிழக அரசு பதவியை பெண்களுக்கு என்று ஒதுக்கிய உடன், குழம்பி போய், ஒரு முடிவுக்கு வரும் முன், ஆபிதா விருப்ப மனு கொடுத்ததால், அதை தள்ளுபடி செய்ய அவர்களால் ஆன முயற்சி எடுத்து வெற்றி பெற்றும் இருக்கிறார்கள்.. பிறகு ஒரு வேட்பாளரை முடிவு செய்த உடன், அதன் ஊரின் மீது திணிக்க , ஆபிதா முச்சரிக்கை லெட்டரில் கேய்யழுத்து போட மறுத்து விட்டார் என்று சொல்லி, அவரை போட்டி லிஸ்டில் வைக்காமல், தங்களது திட்டத்தை கச்சிதமாக நிறைவேற்றி விட்டார்கள்., அனால் அன்று ஆபிதா தான் ஏன் SIGN பண்ணவில்ல என்று எழுதிய கடிதத்தை ஏனோ கூட்டத்தில் படிக்க மறந்த இல்லை மறைத்து விட்டார்கள்.

உனுக்கு வர இருந்த சீதேவியை நீயே தட்டி உதைது வீட்டை என்று ஆபிதா பார்த்து சொன்னது கூட, நாங்க நினைச்சா, நீ எங்களுக்கு அடிமை சாஸ்திரம் எழுதி கொடுத்து இருந்ஹ்டால், நீ தலைவர் ஆவது மிக எளிது என்று மார் தட்டி இருக்கிரார்கல். எனவே, ஐம்பதாயிரம் மக்களை REPRESENT செய்யும் SOCALLED ஐக்கிய பேரவை , ஒரு சிலரின் கை விரல் காட்டுதலின் பேரில் தான் நடக்கிறது என்று தெளிவாகிறது.

சரி எந்த முச்சரிக்கை, கடிதத்தில், லஞ்சம் வாங்க மாட்டேன், ஊருக்கு நல்லது செய்வேன்,இறைவனுக்கு பயந்து நடப்பேன், நீத மாக நடப்பேன் என்று ஒரு வாசகம் இடம் பெற்று ஒப்புதல் கேட்டால் கூட, மனது ஆறிவிடும் .. ஆனால் முழுக்க முழுக்க , ஐக்கிய பேரவை ஏற்கனவே நினைத்துள்ள வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று மறைமுகமாக குறிப்பிட பட்டுள்ளது.. தங்கள் முடிவை ஏற்கவில்லை என்றவுடம், ஆபிதா மீது பல குற்ற சாட்டுகள்.

தனது ஜமாத்தில் உள்ள, நல்ல படித்த பிள்ளை தலைவராக வந்தால், நாளைக்கு தமது நிலைக்கு அவர் மேலே சென்று விடுவாரோ என்று பயந்தோ என்னமோ, ஜமாஅத் பிரமுகர் கூட ஆபிதா எதிர்த்து போட்டியிடும், வேட்பாழர்க்கு வோட் போடவேண்டும் என்று கூறி அறிக்கை வெளி இட்டு உள்ளார்கள். அதுவும் ஜமாத்தின் ஏகோபித்த கருத்தாக தெரிய வில்லை, அரசில்வாதிகளை விட மோசம் போய்விட்டார்கள் என்று என்ன தொன்று கிறது..

கடிசையில் ஒரு அரை கூவல்...ஆபிதாவின் அறிக்கை பொய் என்று ஐக்கிய பேரவை அல்லாஹுவின் மீது சத்தியம் செய்யுமா........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
55. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by AbdulKader (Abu Dhabi) [05 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9599

அஸ்ஸலாமு அழைக்கும்...

தங்களின் விளக்கத்தை பார்க்கும்போது ஐக்கிய பேரவை அனைவரிடமும் நேர்மையாகவே நடந்துள்ளது, நிச்சயமாக ஊர் ஒற்றுமை மற்றும் ஊர் நலத்தில் அக்கறை இல்லாத சிலர் உங்களுக்கு நல்ல யோசனைகளை தர மறுத்துவிட்டார்கள்.

முதலில் நீங்கள் செய்த தவறு... யாரோ சொல்வது கேட்டு... உங்களுடைய்ய விண்ணப்பத்தை நிராகரித்து விடுவார்கள் என்ற பயம். அல்லாஹ்வின் பெயரில் தன்னம்பிக்கை எனக்கு உண்டு என்று சொல்லும் நீங்கள்.... அல்லாஹ்வின் பெயரில் தவக்கல் வைத்து முச்ச்ரிக்கையில் கையெழுத்து போட்டு இருக்கவேண்டும்!

சொல்லுவார் சொன்னால் கேட்பாருக்கு புத்தி எங்கே போனது? பெண் புத்தி பின் புத்தி என்று சொல்லுவார்கள், அதற்க்கு நீங்கள் ஒரு முன் மாதிரியாக தங்களை ஆகிக்கொள்ளவேண்டாம்.

நான் அதிகம் தங்களுக்கு எழுத விரும்பவில்லை. இங்கும் சரி வேரு வலைப்பக்கத்திலும் சரி... உங்களை ஆதரிப்பவர்கள் கருத்துகளை படித்துப்பார்க்கும்போது... எங்கள் ஒட்டு உங்களுக்கு என்றுதான் சொல்கிறார்களே தவிர்த்து... உங்களுடைய்ய எதிர்காலத்தில் அக்கறை கொண்டவர்களாக இல்லை.

இஸ்லாத்தில் ஒற்றுமை என்பது எவ்வளவு தூரம் வலியுருத்தபட்டுல்லுது என்பது எல்லாரும் அறிந்ததே. பேரவை தவறு செய்திருந்தால் அதை இறைவன் பார்த்து கொள்வான். அவர்கள் எடுத்த முடிவிற்கு அல்லாஹ்விற்கு நீங்கள் அல்ல, அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

உண்மையில் உங்களுக்கு மார்க்க பற்று இருந்தால் போட்டியிலிருந்து விலகுவதுதான் உங்களுடைய்ய அந்தஸ்தை மேலும் உயர்த்தும். மேலும்... தாங்கள் ஒத்துழைக்கும் பட்சத்தில் ஊர் ஒன்று படும். ஊரை பிறித்த பாவம் என் அன்பு சகோதரியே.... உங்களுக்கு வேண்டாம்.

அட்மின் அவர்களே... என்னுடைய கருத்தின் நகலை சகோதரி ஆபிதா அவர்களுக்கு கொடுத்தால் நலம்.

வஸ்ஸலாம்
அப்துல்காதர் (பாதுல்அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
56. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by ISMAIL (KTM ST) (Hong Kong) [05 October 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 9600

SALAM

CAN ANYBODY EXPLAIN OTTURUMAI MEANS(UNITY) IN KAYAL ??? .TO MY KNOWLEDGE UNITY IN KAYAL MEANS:-

1. USC VS KSC
2. JAVIA VS MAHLARA
3. KODIMARTU PALLI VS JAVIA
4. JAMIUL AZHAR (SIM) AND OTHERS

PLS DO'NT TALK ABT UNITY, THAT IS ?????..........

SISTER ABITHA HAS THE RIGHT TO SUSPECT THE AKIYA PERAVAI THINGS. BZ THEY ARE NOT TRANSPARENT IS SELECTING THE CANDIDATE.

WHY SISTER MISHRA'S MOTHER FILED AS THE ADDITIONAL CANDIDATE (FOR ELECTROAL PRB AIYAK PERAVAI SHOULD HAVE REQUESTED SISTER WAHEDA TO FILE INSTEAD) WITH WHOSE CONSTENT SISTER MISHRA MOTHER TO FILED. IN THE AIKIYA PERAVAI MEETING THEY HAD VOTED OF SISTER MISHRA ONLY NOT FOR HER MOTHER. SO AIYKIAYA PERVAI APPROACH IS VERY SUSPICIOUS FOR A NORMAL MAN ITSELF,

SO SISTER ABITHA HAS THE DONE RIGHT THING. SISTER DO'NT GET IN THE TRAP BY NAMING ANY INDIVIDUAL THAT WILL LEAD TO CHOAS. EVERYBODY KNOW HIM VERY WELL. SO U PLS CONCENTRATE ON UR CAMPAIGN

REST ALLAH WILL HELP U SISTER.
PLS VOTE FOR SISTER ABITHA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
57. பாவத்திற்கு ஒரு நிமிடம்..... அதன் பரிகாரத்திற்கு ஒரு ஜென்மம்.
posted by zubair (riyadh) [05 October 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9615

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பு ஆபிதா அவர்களே......... தாங்கள் அல்லாஹ்வின் மீது ஆணை இட்டது எல்லாம் யாரும் மறுக்க மாட்டார்கள் ஐக்கிய பேரவையும் கூட. நீங்கள் தெரிவித்து இருப்பதில் ஐக்கிய பேரவை எந்த தவறுதலும் செய்ததாக தெரியவில்லை. முன்கூட்டியே பிளான் பண்ணிட்டார்கள், அப்படி செய்துவிட்டார்கள், இப்படி செய்துவிட்டார்கள் என்பதெல்லாம்..... ஒற்றுமையை குழைக்க ஊர் நலன், மார்க்க நலன் கருதாத்த ஒரு சில காயலின் கண்ணியத்தை குறைக்க புதிதாக வேரூண்டின காளான்கள் செய்யும் (உங்களை வைத்து காய் நகத்தும்) சைத்தானியத் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

அன்பு சகோதரியே............ இப்பொழுது நீங்கள் மனதோடு (சைத்தானோடு) போராடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதை முதலில் உணருக.... பாவம் செய்ய ஒருநிமிடம் போதும் அனால்............. செய்த பின் பரிகாரம் செய்யணும் என்று உங்களுக்கு தோனிவிட்டால் உங்களின் இந்த ஒரு ஜன்மம் காணாது. (ஊர்மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ஒருசிலர் மன்னித்தாலும், வேறொரு சிலர் மன்னிக்க மாட்டார்கள் ) ஏனெனில் நீங்கள் இப்பொழுது செய்யும் காரியம் ஊரும், மார்க்கமும் இணைத்த விஷயம். ஒற்றுமையும் கைகூடும் நிலை..... இப்படி இருக்க சிந்தித்து முடிவு எடுங்கள் மார்க்கத்திற்காக.... வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
58. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by drnoordeen (muscat) [05 October 2011]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 9618

சகோதரி ஆபிதவின் மடல் பார்த்தேன் இதில் என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை ஐக்கிய பேரவையின் மடலில் என்ன தவறை கண்டீர்கள் என்று தெரியவில்லை பிள்ளைகளுக்கு ஒற்றுமை படித்து கொடுக்கும் நீங்கள் இப்படி நடந்திருப்பது வேதனை அளிக்கிறது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
59. சகோதரி ஆபிதா விற்கு ஒரு சில கேள்வி
posted by Shaik Sadakathullah (Chennai) [05 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 9619

1) கண்டிப்பாக தேர்தலில் போட்டி இட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், தாங்கள் ஐய்ககிய பேரவையை அணுகியது ஏன்?

2) அங்கு ஊர் ஜமாத்தில் உள்ளவர்கள் ஒன்று கூடி பொது வேட்பாளர் ஒருவரை தேர்வு செய்வார்கள் என்று உங்களுக்கு தெரியாதா?

3) அந்த பொது வேட்பாளர் நீங்களாகத்தான் இருக்க வேண்டும் என்று தாங்கள் நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?

4) முச்சரிக்கையில் கையெழுத்து போடாமல் அதற்கு விளக்க கடிதம் அனுப்பியதற்கு பதிலாக அதில் கையெழுத்து போட்டு விட்டு, ஐய்கிய பேரவை வேட்பாளரை தேர்வு செய்ய நடத்திய கூட்டத்தில் தங்களை பற்றிய விவரங்களை அந்த கூட்டத்தில் விளக்க முயற்சி செய்து இருக்கலாமே? அவ்வாறு செய்யாதது ஏன்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
60. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by A.G.Abdul Azeez (Chennai) [05 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 9620

பிஸ்மில்லா ஹிர்ரஹுமா நிர்ரஹீம் !

அஸ்ஸலாமு அலைக்கும்...

சகோதரி ஆபிதா அவர்களே

உ ங்களின் விளக்க அறிக்கை யை படித்தாலே ஐக்கிய பேரவை அனைவரிடமும் நேர்மையாகவே நடந்துள்ளது என்பதில் சந்தேக மற தெரிகிறது. யாரோ ஊர் ஒற்றுமை யில் அக்கறை இல்லாத ஒரு சிலரின் தவறான யோசனைகளில் நீங்கள் சிக்கிவிட்டதாகவே தெரிய வருகிறேன் .

ஆம்,முதலில் நீங்கள் செய்த தவறு... யாரோ சொல்வது கேட்டு... உங்களுடைய்ய விண்ணப்பத்தை நிராகரித்து விடுவார்கள் என்ற பயம். அல்லாஹ்வின் பெயரில் தன்னம்பிக்கை எனக்கு உண்டு என்று சொல்லும் நீங்கள்.... அல்லாஹ்வின் பெயரில் தவக்கல் வைத்து முச்ச்ரிக்கையில் கையெழுத்து போட்டு இருக்கவேண்டும்!

"ஜமாஅத் இல்லாமல் இஸ்லாம் இல்லை, ஒரு தலைமை இல்லாமல் ஜமாஅத் இல்லை, கீழ் படிதல் இல்லாமல் தலைமை இல்லை " என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ள கருத்தின் சுருக்கத்தை சுட்டிகாட்ட விரும்பிகிறேன். இங்கு பேரவை தவறு செய்திருந்தால் அல்லாஹ்விடம் அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

எனவே , நீங்கள் உண்மையில் ஊரின் நலன் மீதும், சமுதாய ஒற்றுமை யைக்கருதியும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை வேண்டியும், போட்டியிலிருந்து விலகும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

தாங்கள் ஒத்துழைக்கும் பட்சத்தில் ஊர் ஒன்று படும். இன்ஷா அல்லாஹ் !

எல்லாம் வல்ல அல்லாஹ் இரு உலகிலும் நல்லருள் தந்தருள் வானாக! வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
61. உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Solukku M.I. Seyed Mohamed Sahib (SMI) (Jeddah, KSA.) [05 October 2011]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 9621

ஐக்கிய பேரவையில் தவறிருந்தால் அதனை சுட்டிக்காட்டி களைய முற்படவேண்டும் அதற்க்கு முதலில் நாம் பேரவையில் ஐக்கியமாக வேண்டும், அதிலிருப்பவர்கள் தவறி நடக்கும்போது எடுத்தோதி மாற்றவேண்டும், நம்மை ஒரு இயக்கத்தில் இணைத்துகொண்டல்தானே அதன் நிர்வாகத்தில் மாற்றம் வேண்டும் என்றால் செயல்படமுடியும்.

வெளியே இருந்துகொண்டு ஒரு இயக்கத்தின் நிர்வாகத்தை மாற்றவேண்டும் என்று சொல்வது எப்படி நியாயம்?, அப்படி வெளியே இருப்பவர்கள் ஒரு இயக்கத்தின் அமைப்பை மாற்றவேண்டும் என்று சொல்வதை செவி சாய்த்தால் ஊரில் இருக்கும் அனைத்து அமைப்புகளின் நிர்வாகத்தை தினமும் மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும்.

அதே சமயம் பொறுப்பிலிருப்பவர்கள் கடமை தவறினால் அதற்குத்தகுந்த கூலியை இறைவன் இம்மையிலும் மறுமையிலும் தந்தருள்வான், தவற்றை காணும் பொது சுட்டிகாட்டுவது நமது கடமை, அதேவேளையில் தவறு செய்பவர்கள் அந்த தவறை உணர்ந்து திருத்திக்கொள்ளும் வகையில் சுட்டிகாட்டவேண்டுமே அல்லாமல் அவர்களை காயப்படுத்துவதால் கிடைக்கவேண்டிய பலன் எதிர்பார்க்கிற வகையில் கிடைக்காமல் போய்விடும்.

இறைவன் எல்லோருக்கும் தெளிவான சிந்தனையையும் ஆரோக்கியத்தையும் தந்தருள்வானாக, அமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
62. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by M Sajith (DUBAI) [05 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9623

முச்சரிக்கை கலாச்சாரம் - இது என்ன புதுமை? இதை எப்படி சரிகான்கிறார்கள் என்பதே புரியவில்லை.

இது சட்டப்படி குற்றம். ஒருவரின் பிறப்புரிமையை பறிக்கும் செயல். அடிமை சாசனம், அதிகார துஸ்பிரயோகம்.

இது வழக்கம் தானே என்று கேட்போர், இதற்கு முன் பேரவை பரிந்துரைத்த யாரிடம் வாங்கி இருக்கிறது? சட்டமன்ற தேர்தலில் பரிந்துரை செய்த போது வாங்கியதா? இல்லை இதற்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட நாச்சி தம்பியிடம்யொ அல்லது? விளக்கு அப்பா விடம் பெறப்பட்டதா? - எதற்கு இப்போது?

நன்பர் அபுதாபி அப்துல் காதர், தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் போது,சில காரணங்கள் சொன்னார். கடந்த துணைத்தலைவர் செய்த தில்லுமுல்லுக்கு பிறகுதான் இப்படி ஒரு முடிவாம்!! நானும் ஏதும் இறைவனுக்கு பயந்து நடப்பேன் என்றோ, ஊழலுக்கு துனை போகமாட்டேன் என்றோ உற்தியளிக்க சொல்லியிருப்பார்கள் போலும் என்று நினைத்தேன். மீண்டும் படித்துப்பாருங்கள் இது குறித்து ஏதாவது உள்ளதா என்று.. வெரும் அதிகாரத்தை தக்கவைக்கும் முயற்சியை தவிர ஏதாவது இருக்கிறதா?

பேரவையை சந்தேகிக்காமல் இருக்க எதையாவது வெளிப்படையாக செய்தார்களா? அவர்களின் சூழ்ச்சிக்கும் மூடகமான செயலுக்கும் ஒரு வரைமுறையே இல்லையே...

ஐயா.திருத்துவராஜ் அவரது உரையில் சகோதரி வஹிதாவை முன்மொழிந்தார் அதன் பலன் தான் அவர் தோற்கடிக்கப்பட்டார். முன்பின் தெரியாதவர் 61 ல் 40 வாக்குகள் பெற்றார். இன்று வரை பேரவையின் வேட்பாளரின் PறோFஈளே சிதம்பர ரகசியம்.

நம்பி கையெழுத்திட்ட வஹிதா லாத்தாவுக்கு நன்றி கடனாக வேட்பாளரின் தாயாரை மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்யசெய்தது பேரவை (இது சகோ.அப்துல் காதிர் உறுதி செய்தார் உரையாடாலில், இது தவறு என்றும் சொன்னார். ஆனால் கேட்கவோ மக்களுக்கு தெரிவிக்கவோ மாட்டார் அவரும்) - நம்பினால் கிடைக்கும் ஒற்றுமைக்காக உழைக்கும் இவர்களின் கைமாறு.

துரோகம் எப்படி ஒற்றுமை உண்டாக்கும்? புரியாத சித்தாந்தம்.. பேரவைக்கே வெளிச்சம்.

கடைசி வரையில் வேட்பாளரின் இரகசியம் காத்த பேரவை, ஓட்டெடுப்பில் பங்கெடுக்கும் 'பொது நல' அமைப்பின் பெயர்களிலும் இரகசியம் காத்தது. Official statement இல் 9 ஓட்டை காணவில்லை. யார் ஆட்டைய போட்டா? என இதே தலத்தில் கேட்டதும் பேரவை உடனே திருத்தம் வெளியிட்டது.(அமானுல்லா மாமா தினமும் மாஸ்டர் கம்ப்யூட்டரில் பிரின்ட் எடுப்பதாக வந்த செய்தியை இதில் இருந்து உறுதி செய்ய முடிந்தது)

Moderator: சகோ. சாஜித் அவர்களே! இக்குறைக்கு பேரவையினர் பொறுப்பாக மாட்டார்கள். செய்தியை அச்சுக்கோர்வை செய்தபோது, ஒரு வரியை தவறுதலாக விட்டுவிட்டது எமது குறை மட்டுமே... அதற்காக வருந்துகிறோம்.

ஆனாலும், தாயாரின் மனு குறித்த கேள்வி, 25க்கு என்ன அடிபடை, விடுபட்ட அமைப்புகள் 'சுய நல' அமைப்புகளா? போன்ற கேள்விகள் மட்டும் வெளியில் இருந்து சொன்னால் கோட்காதாம், நேரில் சொல்ல வேண்டுமாம்- வக்காலத்து வாங்க ஒரு கூட்டம் வேறு.

2 வோட்டு சமாச்சாரம் இன்னொரு சூழ்ச்சி - இது தெரியாமல் நடந்த விஷ்யமில்லை.- இது "ட்ரம்ப் கார்ட்" பேரவையின் பின்னால் இயக்கும் நபர்களின் வழிக்கு ஒருவேலை இந்த சகோதரி இடைஞல் ஆனால் பயன் படுத்த உதவும் எற்பாடு. இல்லாவிட்டால் மாற்று ஏற்பாடாக 2 வோட்டுள்ள தாயாரை நிறுத்தும் அளவுக்கு 'புத்திகூர்மை' இல்லாதவர்களா?

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
63. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by nafeela (kayalpatnam) [05 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 9625

சகோதரி ஆபிதா அவர்களே!

அந்த பிரமுகர் யார் என்பதை கூறினால் அனைவருக்கும் தெரியும் எது சரி தவறு என்பது அதன் பிறகு தெரிய வரும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
64. Comment No. 9511 and Comment No. 9521
posted by Mohideen (Hong Kong) [05 October 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 9628

Brother Muthu Wappa in his Comment No. 9521 in this article and in Comment No. 9511 has written thus- quote, “Comment No. 9511 -மற்றவர்களை போல் ஒற்றுமை கயிறு, பம்பர கயிறு என்று சப்பை கட்டு கட்டாமல் நடந்தது என்ன என்பதை கண்டிப்பாக நீங்கள் விளக்க வேண்டும் & Comment No. 9521 - தான்தோன்றித்தனம், பேரவையை மதிக்காமை ,ஒற்றுமை கயிறு ,பம்பர கயிறு என்றெல்லாம் தம்பட்டம் அடித்தவர்களே .... நடந்தது என்னவென்று பார்த்தீர்களா ...!! இதை விட உங்களுக்கு என்ன ஆதாரம் வேண்டும்”.

Who is the brother ridiculing, is it the so called Peravai or the very words of Allah? How come the administrator let these two comments slip through without editing? Now that the parameters of the comments have crossed the threshold of press freedom and are infringing on Religious sentiments.

I am not here to defend any organization and I deem myself unfit to do so. However, the admin should take steps to remove those offensive & derogatory words at the very earliest.

Please refer to Yusuf Ali’s translation to the Surah: Ayah (3:103). Let us not let our overwhelmed emotion get overboard so as to insult our Holy Quran even unintentionally. Hope the administrator would take extreme care in weeding out words such as these.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
65. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by ABDUL RAZAAK (chennai) [05 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9631

அஸ்ஸலாமு அலைக்கும் .

காடு இருண்டால் ஓநாய்க்கு கொண்டாட்டமாம் . அது போல இருக்குது .சந்தேகம் இருந்தால் விசாரிப்பது நியாயம்தானே? . ஐக்கிய பேரவையை நாங்கள் மதிக்கிறோம் , ஆனால் வெளிப்படையக இருந்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்து இருக்கும் .

சகோதரி ஆபிதா அவர்களின் கட்டுரை நம்பும் படியாக இருக்கிறது . சகோதரி ஆபிதா அவர்களுக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற செய்தால் ஊழல் இல்லாத நிர்வாகம் அமையும் என்று எதிர் பார்க்கிறோம். அதற்க்கு தகுதியான படித்த நபரும் அவர்கள்தான் என்று எங்கள் மனதில் தோன்றுகிறது .

சகோதரி ஆபிதா அவர்களின் வெற்றிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
66. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Zainul Abdeen (Dubai) [05 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9638

நான் சிறிய வயதிலிருந்தே இப்படி சேவை மனப்பான்மையுடன் வளர்ந்தேன். இப்படி இருந்தேன் அப்படி இருந்தேன்....... என்றெல்லாம் கூறும் நீங்கள் , நகராட்சி தலைவர் பதவியில் இருந்தா இதை செய்தீர்கள். இந்த பேரும் புகழும் உங்களுக்கு ஆட்சி பீடத்திலா கிட்டியது.

ஏன் இப்போது மட்டும் உங்கள்ளுக்குள் இப்படி ஒரு வீனான ஆசை. வேண்டாம்.. பதவி ஆசை !!! பதவி என்பது ஒரு முள் கிரீடம் அது இருக்க வேண்டிய இடத்தில இருந்தால் தான் தங்க கிரீடம்.

நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ உங்களுக்கு கிடைத்த செய்தியை நம்பி (காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம் என்பது போல ) ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் கையெழுத்து போடவில்லை. அதனால் தான் இவ்வளவு குழப்பமும். நீங்கள் கையெழுத்து போட்டதர்கப்பால் உங்களுக்கு ஏதேனும் அநீதி ஐக்கியப் பேரவைனால் இளைகபட்டால் அப்போது நீங்கள் வெளியே வந்து மக்களிடம் மன்றாடுவது சரியே !! உங்களுக்கு வாதிட உங்களை விமர்சிப்பவர்களே முன் வரிசையில் நின்று இருப்பார்கள்.

காலம் கடந்துவிட்டது ... போட்டியின் முடிவை எதிர்பார்போம் இன்ஷா அல்லாஹ் , யார் வெற்றி பெற்றாலும் நீங்கள் உங்களுடைய மனசாட்சிக்கும், இறைவனுக்கும் பயந்து நடந்தால் போதுமே.

உங்களுக்கு அநீதி இழைத்துவிட்டார்கள் என்று கூப்பாடு போடுவதை நிறுத்திவிட்டு அதை அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிடுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
67. உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Solukku M.I. Seyed Mohamed Sahib (SMI) (Jeddah, KSA.) [05 October 2011]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 9640

Dear Moderator...i don't know you hide below sentences in my previous comment.

துபாயிலிருந்து நண்பர் சாமு குறிப்பிட்டப்படி சகோதரி ஆபிதா ஊருக்காக என்ன சேவையை செய்துவிட்டார் என்று விளக்கினால் நல்லது, மாத கட்டணம் வாங்கிகொண்டு பள்ளி நடத்துவதை சேவையாக சொன்னால் ஊரில் வாணிபம் செய்யும் அத்துணை வணிபர்களும் மக்களின் அன்றாட தேவைக்காகத்தான் பொருட்களை விற்கின்றோம் ஆதலால் நாங்களும் போதுசெவர்தான் என்றால் அதில் என்ன தப்பு இருக்க முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
68. Religion Vs elections
posted by ahamed mustafa (Dubai) [05 October 2011]
IP: 91.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9643

Gents, Salam Alikum

As I have seen some comments in this forum, depicting the influence of faith, religion, etc, I strongly oppose them. Religion is more important than anything else. It is every one's right to practice the way he/she feels right. No one can be a binding on this. I do feel that this election in iteself, has nothing to do with anyone's faith,ideology. Had this been a case there would have been umpteen contestors from the likes of MMK, TMMK or the backing up of TNTJ, & the rest. Remember these are major force in the scenario in the present day & we can not wipe them off.

Thanks to their non-interference of the socio- policy of Kayalpatnam that they backed away.

I do not see any reasons for targetting the folks with regards to their faith, ideology. This is their birth right & using their brains to culminate & decide what is right & what is wrong. Had this been a case we would not have seen kayalpatnam turing up to a massive fluorish of the so called new faithers, amongst all & there is a generation of kayalites born with this so called New faith. They need not have to step out of their erstwhile ideology.

I have my own faith & ideology, so does others. So to mix this dirty politics vis a vis Islam is compeletely unacceptable, atleast in our case.

I am not deviating the topic from elections to faith, but felt compelled to write here as I saw a comment from a bro. from KSA writing so. Surprising indeed from some in KSA still writing so.

Keep going with your topic & let not my writing here deviate us from the subject story.

Thanks & wasslam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
69. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by sulaiman (abudhabi) [05 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9647

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோதரி ஆபிதா அவர்கள்.தனது சிந்திக்கும் திறனை வளர்துகொள்ளவண்டும். இவரால் சிறந்த நிர்வாகத்தை தருவது மிகவும் கடினம்.இவருக்கு தலைமை பொறுப்பு பொருத்தமானது இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
70. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by M Sajith (DUBAI) [05 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9651

முச்சரிக்கை கலாச்சாரம் - இது என்ன புதுமை? இதை எப்படி சரிகான்கிறார்கள் என்பதே புரியவில்லை.

இது சட்டப்படி குற்றம். ஒருவரின் பிறப்புரிமையை பறிக்கும் செயல். அடிமை சாசனம், அதிகார துஸ்பிரயோகம்.

இது வழக்கம் தானே என்று கேட்போர், இதற்கு முன் பேரவை பரிந்துரைத்த யாரிடம் வாங்கி இருக்கிறது? சட்டமன்ற தேர்தலில் பரிந்துரை செய்த போது வாங்கியதா? இல்லை இதற்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட நாச்சி தம்பியிடம்யொ அல்லது? விளக்கு அப்பா விடம் பெறப்பட்டதா? - எதற்கு இப்போது?

நன்பர் அபுதாபி அப்துல் காதர், தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் போது,சில காரணங்கள் சொன்னார். கடந்த துணைத்தலைவர் செய்த தில்லுமுல்லுக்கு பிறகுதான் இப்படி ஒரு முடிவாம்!! நானும் ஏதும் இறைவனுக்கு பயந்து நடப்பேன் என்றோ, ஊழலுக்கு துனை போகமாட்டேன் என்றோ உற்தியளிக்க சொல்லியிருப்பார்கள் போலும் என்று நினைத்தேன். மீண்டும் படித்துப்பாருங்கள் இது குறித்து ஏதாவது உள்ளதா என்று.. வெரும் அதிகாரத்தை தக்கவைக்கும் முயற்சியை தவிர ஏதாவது இருக்கிறதா?

பேரவையை சந்தேகிக்காமல் இருக்க எதையாவது வெளிப்படையாக செய்தார்களா? அவர்களின் சூழ்ச்சிக்கும் மூடகமான செயலுக்கும் ஒரு வரைமுறையே இல்லையே...

ஐயா.திருத்துவராஜ் அவரது உரையில் சகோதரி வஹிதாவை முன்மொழிந்தார் அதன் பலன் தான் அவர் தோற்கடிக்கப்பட்டார். முன்பின் தெரியாதவர் 61 ல் 40 வாக்குகள் பெற்றார். இன்று வரை பேரவையின் வேட்பாளரின் PறோFஈளே சிதம்பர ரகசியம்.

நம்பி கையெழுத்திட்ட வஹிதா லாத்தாவுக்கு நன்றி கடனாக வேட்பாளரின் தாயாரை மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்யசெய்தது பேரவை (இது சகோ.அப்துல் காதிர் உறுதி செய்தார் உரையாடாலில், இது தவறு என்றும் சொன்னார். ஆனால் கேட்கவோ மக்களுக்கு தெரிவிக்கவோ மாட்டார் அவரும்) - நம்பினால் கிடைக்கும் ஒற்றுமைக்காக உழைக்கும் இவர்களின் கைமாறு.

துரோகம் எப்படி ஒற்றுமை உண்டாக்கும்? புரியாத சித்தாந்தம்.. பேரவைக்கே வெளிச்சம்.

கடைசி வரையில் வேட்பாளரின் இரகசியம் காத்த பேரவை, ஓட்டெடுப்பில் பங்கெடுக்கும் 'பொது நல' அமைப்பின் பெயர்களிலும் இரகசியம் காத்தது. Official statement இல் 9 ஓட்டை காணவில்லை. யார் ஆட்டைய போட்டா? என இதே தலத்தில் கேட்டதும் பேரவை உடனே திருத்தம் வெளியிட்டது.(அமானுல்லா மாமா தினமும் மாஸ்டர் கம்ப்யூட்டரில் பிரின்ட் எடுப்பதாக வந்த செய்தியை இதில் இருந்து உறுதி செய்ய முடிந்தது)

ஆனாலும், தாயாரின் மனு குறித்த கேள்வி, 25க்கு என்ன அடிபடை, விடுபட்ட அமைப்புகள் 'சுய நல' அமைப்புகளா? போன்ற கேள்விகள் மட்டும் வெளியில் இருந்து சொன்னால் கோட்காதாம், நேரில் சொல்ல வேண்டுமாம்- வக்காலத்து வாங்க ஒரு கூட்டம் வேறு.

2 வோட்டு சமாச்சாரம் இன்னொரு சூழ்ச்சி - இது தெரியாமல் நடந்த விஷ்யமில்லை.- இது "ட்ரம்ப் கார்ட்" பேரவையின் பின்னால் இயக்கும் நபர்களின் வழிக்கு ஒருவேலை இந்த சகோதரி இடைஞல் ஆனால் பயன் படுத்த உதவும் எற்பாடு. இல்லாவிட்டால் மாற்று ஏற்பாடாக 2 வோட்டுள்ள தாயாரை நிறுத்தும் அளவுக்கு 'புத்திகூர்மை' இல்லாதவர்களா?

ஒன்று செய்யலாம். வேறொரு தலத்தில் நன்பர் ஒருவரின் யோசனையை முயற்சி செய்யலாம். இதோ அவரின் கருத்து.(copy&pasted below)

_________________________________________________________
"ஐக்கியம் பேணுவதில் உண்மை ஆர்வம் உள்ளவர்கள் அனைவரின் கருத்தும் இதுதான். ஒற்றுமை மிகவும் அவசியம் என்பதில் பேரவைக்கு இருக்கும் அக்கறை அனைவருக்கும் தெரியும்.

யாராவது ஒருவர் விட்டுகொடுப்பதால் தன் நன்மை வரும், எனவே சிறியவளின் தவறை மன்னித்து பெரியவர்களான ஐக்கியப் பேரவை விட்டுக் கொடுக்கவேண்டும்.

இவரின் திறமையில் எந்த குறையும் இல்லாத நிலையில் இவரை உதாசீனப் படுத்துவது ஊருக்கு நல்லது செய்யும் ஆர்வம் கொண்ட இளையவர்களை இழிவு செய்வது போல ஆகிவிடும்.

பெரியவர்கள் நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டாமா?

என்ன வலிக்குதோ.. அப்ப உபதேசம் எல்லாம் ஊருக்கு தானோ ?"

__________________________________________________________

சரி இவர் சோனா மாதிரி ஒரு சேஞ்சுக்கு நீங்களுந்த்தான் கயிறு பிடிக்கிற வேலைய செய்யுங்களேன். அடிமை படுத்தும் புத்திய மாத்திகிட்டு..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
71. பெரியவர்கள் சுயநலங்களால் கண்மூடி திறப்பதற்குள் பறிபோகும் காயல் நகர்மன்ற தலைமை பொறுப்பு..
posted by B.G.Mujahidh Ali (kayalpatnam) [05 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 9656

காயல்பட்டினம் நகரசபையில் 13 ஆயிரத்து 683 ஆண் வாக்காளர்களும், 14 ஆயிரத்து 630 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 28 ஆயிரத்து 313 வாக்காளர்களும் உள்ளனர்.

கடந்த தமிழக சட்டசபைக்கான தேர்தலில் காயல்பட்டணத்தில் 68.64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் உள்ள 28,313 வாக்காளர்களில் (ஆண் - 13,683; பெண் - 14,630), 19,435 பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

சட்ட்டசபை தேர்தலில் நடந்த வாக்குகள் போன்று இருக்குமேயானால் முஸ்லிம்களின் வாக்குகளும், முஸ்லிம் அல்லாதோரின் வாக்குகளும் எவ்வாறு இருக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள்.

1. வார்டு 1 பதிவானவை - 573
2. வார்டு 7 பதிவானவை - 762
3. வார்டு 7 , வார்டு 3 பதிவானவை - 625
4. வார்டு 3 பதிவானவை - 877
5. வார்டு 6 பதிவானவை - 786
6. வார்டு 4, வார்டு 5 பதிவானவை - 429
7. வார்டு 5 பதிவானவை - 464
8. வார்டு 2 பதிவானவை - 350
9. வார்டு 4 பதிவானவை - 554
10. வார்டு 17 பதிவானவை - 454
11. வார்டு 4, வார்டு 17 பதிவானவை - 637
12. வார்டு 16 பதிவானவை - 824
13. வார்டு 11 பதிவானவை - 540
14. வார்டு 11 பதிவானவை - 462
15. வார்டு 10 பதிவானவை - 927
---------------------------------------------------------------
முஸ்லிம் வாக்குகள் = 9264
--------------------------------------------------------------
மீதமுள்ள தெருவாரியாக
(1) அப்பா பள்ளி தெரு, வார்டு 9
(2) காயிதேமில்லத் நகர், வார்டு 10
(3) சொழுக்கார் தெரு, வார்டு 8
(4) கொச்சியார் தெரு, வார்டு 8
(5) பண்டகசாலை தெரு, வார்டு 8
(6) முத்துவாப்பா தைக்காதெரு, வார்டு 8
(7) ஹாஜி அப்பா தைக்கா தெரு, வார்டு 13

முஸ்லிம் வாக்குகளின் எண்ணிக்கை 1450 பதிவாகி இருக்கலாம்.
முஸ்லிம் வாக்குகளின் எண்ணிக்கை மொத்தம் = 9264 + 1450 = 10714 பதிவாகி இருக்கலாம்.

-----------------------------------------------------------------------------------------

முஸ்லிம் அல்லாதோரின் வாக்குகளின் எண்ணிக்கை

1. வார்டு 18 பதிவானவை - 1 379
2. வார்டு 15 பதிவானவை - 1 598
3. வார்டு 14 பதிவானவை - 1 900
4. வார்டு 1 பதிவானவை - 760
5. வார்டு 13 பதிவானவை - 767
6. வார்டு 12 பதிவானவை - 1095
----------------------------------------------------------------------------
ருத்தம்மாள் பெறவிருக்கும் வாக்குகளின் எண்ணிக்கை = 7499 இருக்கலாம்.

-------------------------------------------------------------------------

சகோதரிகள் பி.எம்.ஐ. ஆபிதா எல்.எஸ்.எம். முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யா 10714 இருவரும் ஓட்டை பிரித்தால் விளைவு காயல்பட்டினம் நகரமன்ற தலைவர் பொறுப்பிற்கு............................??????????

இந்த இழிநிலையே உருவாக்குமா காயல் மக்கள்........?

பெரியவர்கள் சுயநலங்களால் கண்மூடி திறப்பதற்குள் பறிபோகும் காயல் நகர்மன்ற தலைமை பொறுப்பு..
ஒற்றுமை என்று பேசி உம்மா, மகள், மச்சி இவர்கள் நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிடும் வேட்பாளர்கள்.

நல்லா தான் காய் நகற்றுகின்றார்கள்...

ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் நிற்கின்றார்கள் என்றால் அவர்களுக்கு பதவி ஆசை அதிகமா இருக்கிறது போல.....

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது. புஹாரி 7148

செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப் படுபவை. (அல்குர்ஆன் 17:36)
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒருசமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாகநடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதைஅல்லாஹ் நன்கறிந்தவன். (அல் குர்ஆன் 5:8)

அல்லா மிக அறிந்தவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
72. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by OMER ANAS (DOHA QATAR.) [05 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 9657

M SAJITH உங்கள் கமாண்டை படித்தால், விபரம் அறிந்த கருத்தாக தெரியவில்லையே!!! சட்ட சபை வேட்பாளருக்கு, எப்படி ஐக்கிய பேரவை முச்செரிக்கை கையெழுத்து வாங்கும்? யாரிடம் வாங்கும்? அணிதாவிடமா? அம்மாவாசையிடமா? எந்தக் காதர் உமக்கு, சொன்னார் பேரவைதான் உம்மாவை நிறுத்தி பின்பு வாபஸ் வாங்கச்சொன்னது, அதற்க்கு வருத்தப் படுகிறேன் என்று? நிரூபிக்க யாராவது தயாரா? உங்கள் க்மாண்ட்களை படிப்பதை விட குமுதம்,ஆனந்த விகடன் கல்கி, அம்புலி மாமா காமிக்ஸ் படித்தாலாவது நேரம் போகும்! மச்சாஞ்சி இவங்கள்ளாம், ரூம் போட்டு யோசிப்பாங்களோ? காமடியா போச்சுப்பா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
73. ஏன் சொந்த கருத்து...
posted by AbdulKader (Abu Dhabi) [05 October 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9660

அஸ்ஸலாமு அழைக்கும்...

நான் சாஜித் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது... நான் அறிந்த உண்மை.... அவர் ஒரு சிறந்த பண்பாளர். அனால் அவர்களின் எழுத்து / கருத்து அவரது நல்ல பண்பை மக்களுக்கு புரிய வைக்கும் வகையில் இல்லை (எனக்கு வருத்தம் தான்.... நான் இதை அவர்களிடம் பேசுகையிலும் சொன்னேன்!)

நான் உங்களிடம் சொன்னது உண்மையானாலும்.... அது என்னுடைய சொந்த கருத்து. நான் நமதூர் முஸ்லிம் ஐக்கிய ஜாமத்தின் செய்தி தொடர்பாலன் இல்லை. ஆகையால் என்னுடைய சொந்த கருத்தை தயவுசெய்து தாங்கள் இங்கே பதிவு செய்து மக்களை வேறுதிசை திருப்பவேண்டாம்.

நாம் விவாதிப்பது எல்லாம்... சகோதரி ஆபிதவின் போட்டி இச்சமையம் தேவையா?

முச்சரிக்கையில் சகோதரி ஆபிதவை, எல்லா ஜமாதாரின் அங்கீகாரத்துடன் முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத், கையெழுத்து போடச்சொன்னது எந்த வகையில் தவறு?

இந்த இரண்டையும் பற்றி விவாதித்தால் நலம்!!

வஸ்ஸலாம்

அப்துல்காதர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
74. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Shahul Hameed (Hong Kong) [05 October 2011]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 9664

KSC யும் USC யும் ஓற்றுமையாக தான் இருகிறது. தாங்கள் ஊரில் அதிகம் இருபது கிடையது என நினைகிறேன். முன்பு அப்படிபட்ட சூழல் இருந்து இருக்கலாம், இப்போது அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் USC ல் பல்லாக் மாமா KSC ல் சதக் தம்பி மாமா போன்றோர் தலைமயில் இரண்டு அமைப்பும் மிக மிக ஒற்றுமையாக இருகின்றது.

ஜாவியா- மஹலரா பிரச்சனை இப்போது இல்லை.

அல் ஜாமிஉல் அஷ்ஹர் மற்றவையும் எந்த பிரச்சனையும் இல்லை.

இதற்கு காரணம் ஐகிய பேரவைதான். காரணம் அது அணைத்து தரப்பு மக்கள் அங்கம் வகிக்கும் அமைப்பாகும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
75. சூப்பர் ஒத்துமை போங்கோ ...!!
posted by M Sajith (DUBAI) [05 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9665

மெகாவை விமர்சிக்கும் போது சகோதர சமுதாய வேட்பாளரை ஆதரிக்க சொன்னாலும் சொல்வார்கள் என விளையாட்டாக சொன்னாலும் சகோ. ஸ்Mஅலி அவரது மனநிலையை அழகாக சொன்னார்..

அவரின் முதல் பதிப்பில் கட்சி வேண்டாம் அதனால் வஹிதாவுக்கு ஓட்டு இல்லை என்றார், பின் பெண்களுக்கு நகர்மன்றம் என அறிவிப்பு வந்ததும், நமதூரில் பிறந்தவர் தான் வரவேண்டும் என அவரின் வட்டத்தின் அளவு எவ்வள்வு என்பதை சொன்னார். விமர்சனங்கள் வந்ததும் சமாளித்தார்.

ஐக்கியப்பேரவை வஹிதா லாத்தாவுக்கு ஆப்பு வைத்ததும், நல்லவர் வல்லவர்,வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் என்றார்.

உடன்பாடில்லாத முன்மொழிதல் தவறு ஏன்றேன்.. என்னைப்போலவர்களை மக்கள் அடையாளம் காண்பார்கள் என்றார் (ஏதோ நான் அடுத்த தேர்தலில் நிற்கபோவது போலவும், அடையாளம் காண்பது இன்றியமையாதது போலவும்)

ஒற்றுமையென்றார், கழுத்தை நெரித்தாலும் கயிற்றை வடக்கூடாது என்றார். இப்போ ருத்ராம்மாள் வந்து விடுவார் என பயம் காட்டுகிறார்.

தெளிவாக சொல்லியிருக்கிறார் "ஷைத்தானாக இருந்ததாலும், நம்மவீட்டில் உள்ளதாக இருக்கனுமாம். புரிந்து நடந்து கொள்ளுங்கள் நல்ல அறிவுரை.. வீட்டில் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுங்கள் இவர் போதனையை. நமக்கு மட்டும் நன்மை இருக்கானுதான் பார்க்கனும், இதுக்கு யாருக்கும்(நம்பி கையெழுத்திட்டாலும்)ரிவிட் அடிக்கலாம், ரேட்டிலும் விடலாம் என்று. எதிர்காலத்தில் இந்த ஐக்கியமில்லாத பேரவையை நிர்வாகிக்கும் தகுதியை உருவாக்க உதவும்.

உண்மையின் மீது சிறிதேனும் நம்பிக்கை இருந்தால், பேரவையின் வேட்பாளரை 'இறைவன் மீது ஆனையிட்டு' கோமான் ஜமாத் லுக்மான் ஹாஜி கொடுத்ததுபோல ஒரு வாக்குறுதி கொடுக்க சொல்லுங்களேன் பார்ப்போம். ஒரு வேளை அந்த சகோதரி முன்வந்தாலும் விடுவீர்களா என்ன? - செய்தாலும் செய்வீர்கள்.

கையெழுத்திட்ட்வர்களுக்கே ஆப்பு வைப்பவர்கள் கைவிட்டு விடுவார்கள் ஜாக்கிரதை என சீனாவிலிருந்து எச்சரிக்கை செய்வதும். பதவி ஆசை கூடாது என அமீரகத்தில் இருந்து முற்றும் துறந்தவர்களை மட்டுமே கொண்ட பேரவையின் அடிவருடிகள் பேசுவது "சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது - அதும் சீன மொழிபெயர்ப்புடன்.

அமா, இன்னும் ஒரு போட்டி வேட்பாளர் சகோதரி கே.பி.செய்யித் மர்யம், ஐக்கிய பேரவை வேட்பாளரின் சொந்த மச்சியாமே...?

சூப்பர் ஒத்துமை போங்கோ ...!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
76. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by zainab (kayalpatnam) [05 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 9666

அஸ்ஸலாமு அழைக்கும்

ஐக்கியத்தை (ஒற்றுமையை) விரும்பும் காயலின் மக்களே ..சில சகோதரர்கள் சொல்வது போல் ஆபிதா மன்றாடவோ கூப்பாடு போடுவது போலோ தெரியவில்லை....தக்வா உள்ளத்தில் இருக்க வேண்டும் அநீதி அரசனே செய்தாலும் தட்டி கேட்க வேண்டும்

அது தான் மார்க்கம்.. சந்தர்பவாத ஒற்றுமை என்றும் நிலைக்காது நன்மையையும் பயக்காது ... ஆணவமும் அதிகாரமும் மற்றவர்களை அடக்கி ஆளும் thanamum இறைவனுக்கே pidikkathu அவை iraivanukku உரியது... மறைவானவற்றையும் உண்மைகளையும் நன்கு அறிந்தவன் வல்ல நாயன் அல்லா ஒருவனே

சிந்திப்போம் செயல்படுவோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
77. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by M.A. MOHAMED THAMBY B.Sc., (CHENNAI) [05 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9673

அஸ்ஸலாமு அலைக்கும்.

காயல் மாநகர மக்களே!

நமக்குள் ஏன் இந்த குழப்பம், வாதம், பிரிவு?

இந்த குழப்பங்கள் நீங்க ஒரே வழிதான் இருக்கிறது.

ஊர் தலைவியை தேர்ந்தெடுப்பது ஊர் மக்கள் அனைவரது கடமை.

ஊர் தலைவி நம்மை சார்ந்தவளே வர போகிறாள்.

காயல் ஐக்கியப் பேரவை குறிப்பிட்ட நபரை சொல்லாமல், ஊர் மக்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்கள், காயல் ஐக்கியப் பேரவையை சார்ந்து இருக்க வேண்டும் அன்று அனைத்து candidate இடமும் கையெழுத்து வாங்கி இருந்தால் ஏன் இந்த பிரிவினை ஏற்பட போகிறது?

மக்கள் ஒன்று பட்டு வாக்களிக்கலாமே. காயல் ஐக்கியப் பேரவைகக்கு எந்த களங்கமும் வந்திருக்காதே.

காயல் ஐக்கியப் பேரவை குறித்து பேசுகிறவர்கள் சிந்திக்கட்டும். அனைத்து தரப்பினரும் ஏற்று கொள்ளும் முகமாக காயல் ஐக்கியப் பேரவை சொல்லி இருக்க வேண்டும்.

இனியாவது சொல்வார்களா?

காயல் மாநகர மக்களே!

ஒன்றுக்கு பல முறை சிந்தித்து வாக்களியுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
78. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by zainab (saudiarabia) [05 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9677

அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ஆட்சியை வழங்குகிறான். தான் நாடியவரிடமிருந்து ஆட்சியைப் பறிக்கின்றான். ஏனெனில் ஆட்சி, அதிகாரம் அவனிடம் தான் உள்ளது, எனவே இவ்விஷயத்தில் நமக்குள் மேலும்மேலும் கருத்துவேற்றுமையை வளர்க்காமல் அல்லாஹ்விடம் நல்ல முடிவை வேண்டுவோம்.

பெண்கள் ஆட்சி புரிவதையும், பதவி ஆசை கொள்வதையும் இஸ்லாம் விரும்பவில்லை எனபது அனைவரும் அறிந்ததே! தம்மைதேடி வந்த ஆட்சி, அதிகாரத்தை விட்டு விலகி ஓடினர் நபித்தோழர்கள். இன்று நம்முடைய நிலை எப்படி உள்ளது? பதவியை நோக்கியல்லவா நாம் ஓடுகிறோம்.

அல்லாஹ்வே! எங்களுக்கு தக்வாவுடன் ஆட்சியைத் தரும் பண்பாளரை எங்களுக்கு தலைவராக்குவாயாக! எங்களுக்குள் ஒற்றுமையை அதிகரிக்கச் செய்வாயாக! என நாம் பிரார்த்திப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
79. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by syed omer kalami (colombo) [05 October 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 9678

mrs ABITHA SHAIK, YOU DID REALLY WONDERFUL WORK BY NOT SIGNING TO LETTER,

THIS SHOWS YOUR DETERMINATION,BOLDNESS,CAPABILITY IN HANDING PRESSURE.WHAT HAPPENED TO MRS WAHIDA ,SAME THING WOULD HAVE HAPPENED TO YOU IF YOU HAVE SIGNED.ALLAH HAVE SAVED YOU FROM THEIR TRAP,THIS SHOWS ALLAH BEHIND YOU.AFTER 22ND YOU GOING TO BE THE CHAIRPERSON INSHAALLAH.

DEAR KAYALITES VOTE FOR BOOK.

BY SYED OMER KALAMI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
80. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by M Sajith (DUBAI) [05 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9679

சகோதரர் அப்துல் காதிர் காக்கா அவர்களுக்கு..

கேள்விக்கு பதில் சொன்னாலே ஒருவர் பேரவயின் எந்த பொறுப்பிலும் இல்லை என்பது நமதூர் அறியும். பதில் தருவது என்பது பேரவையின் அஜென்டாவிலேயே கிடையாது என்பதும் அனைவருக்கும் தெரியும்.

தங்களின் சொந்தக்கருத்தை பதிந்தது, உங்களுக்கும் உள்ளம் இருக்கிறது, அதில் இறைவனின் பயமும் நிறைந்து இருக்கிறது என்பதை உணர்ந்ததால் தான்.

நல்ல கருத்து என்பது சரியை சரி என்றும், தவறை தவறென்றும் சொல்வது என்பதுதான் என கற்றுதந்துள்ளார்கள். பெரும்பான்மை பலம் இருப்பதால் அதிகாரம் செய்வதையும், அநீதியையும் கையாலோ, வாயாலோ தடுக்க முடியாத சூழ்நிலை இருந்தால் மட்டுமே மணதால் வெறுக்கவேண்டும் - இது ஈமானின் கடைசி நிலை என்பது நபி(ஸல்)கற்றுத்தந்தது. நம்மவர், சமுதாய ஒற்றுமைக்காக என்று சரிகாணுதலில் நபி(ஸல்) அவர்களின் முன்மாதிரி இல்லை.

இதான் நான் பேரவையின் திருகு தாளங்களை எழுதுவது தங்களை போலவர்களுக்கு வருத்தம் தரலாம். உண்மை பேச வேண்டும், நேர்மையாக நடக்கவேண்டும் என்னும் உபதேசம் எல்லாம் ஊருக்குத்தான் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

உண்மை புரிந்த நீங்களும், நன்மை, ஒற்றுமைகளை எடுத்து சொல்லும் போது - தவறுகளை சுட்டிகாட்டினால் இந்த சாடலுக்கும் வருத்தத்துக்கும் இடம் ஏது?

சரி தவறுகளை சமமாக விமர்சிக்கும் சூழல் இருந்தால் வாதமும் அவசியமில்லை. there is no need to prove your point and provoke discussion.

கனி இல்லாத போது காய்தானே வழி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
81. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by zainab (kayalpatnam) [05 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 9680

அஸ்ஸலாமுஅழைக்கும்

ஆபிதா அவர்களை தலைமை பதவிக்கு பொருத்தம் இல்லாதவர் என்று விமர்சிக்கும் சகோதரர் அவர்கள் மற்ற வேட்பாளர் எந்த வகையில் பொருத்தம் என்றும் AJ candidate என்ற தகுதி மட்டும் போதுமா...இல்லை அவர்கள் எந்த தகுதியில் அவரை தேர்தெடுத்தார்கல் என்று நீங்கள் தெரிந்தால் கூறுங்களேன் pls நாங்களும் தெரிந்து கொள்கிறோம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
82. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by M.A. MOHAMED THAMBY B.Sc., (CHENNAI) [05 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9691

ஆடு நனையுது என்று ஓநாய் அழுததாம்- பழமொழி

வாசகர் கருத்து கூறும் அன்பர்களே!

நகரில் மொத்தம் 7 பேர் தலைவி பொறுப்புக்கு மனு தாக்கல் செய்துள்ளார்கள்.

சகோதரி ஆபிதாவை மட்டும் வாபஸ் பெற சொல்வதில் என்ன நியாயம்?

உள் மனதிற்குள் தன்னை அறியாத பயம் வந்து விட்டதோ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
83. ஒற்றுமை ஐக்கியபேரவையின் செயல்பாட்டை பொறுத்தே அமையும்!!
posted by Rayyan's Dad!! (USA) [05 October 2011]
IP: 63.*.*.* United States | Comment Reference Number: 9695

சாடை அறியாதவன் சர்வ முட்டாள் என்பார்கள்...அதுபோல ஐக்கிய பேரவையின் பொது வேட்பாளர் உள்நோக்கம் அறிந்து...ஐக்கிய பேரவையின் நிபந்தனைக்கு ஒப்புகொள்ள மறுத்ததில் ஒரு தவறும் இருப்பதாக தோன்றவில்லை .

ஐக்கிய பேரவையின் பொது வேட்பாளர் தேர்தல் தேர்வு கூத்தாக இருக்கட்டும் அல்லது பொது வேட்பாளர் அறிவித்ததன் பின்பு தாயே மகளுக்கு போட்டிவேட்பாளர் செட் அப்பாக இருக்கட்டும். பின்னர் மகளின் மனு ஏற்று கொண்ட பின்...தாயார் மனு வாபஸ் (? என்ன ஒரு safeside game plan ) விசயமாக இருக்கட்டும் அல்லது புதுப்பள்ளி ஜமாஅத் மற்றும் அதன் தலைவரை தூண்டிவிட்டு (?)ஆபிதா அவர்களுக்கு எதிராக ஒரு அறிக்கையாக (அதை ஏன்...பேரவையின் கட்டுபாட்டில் உள்ள மற்ற போட்டி வேட்பாளர்களின் ஜமாஅத் தலைவர்கள் செய்யவில்லை அல்லது பேரவை அவர்களையும் அறிக்கை விட தூண்ட/சொல்ல வில்லை. ஏனென்றால் ஆபிதா அவர்களுக்கே பெருகி வரும் மக்கள் ஆதரவே இதுமாதிரியான அறிக்கைகளுக்கு காரணமோ??) இருக்கட்டும். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது நடுநிலையாளர்களுக்கு கூட இதே சந்தேகம் தான் எழுகிறது.

மற்ற அன்பர்கள் சொல்லுவது போல், பேரவைக்கு கட்டு பட்டு கையெழுத்து கொடுக்காதது மிகவும் தப்பாக இருந்து இருக்கும்...அது எப்பொழுது என்றால்...ஒருவேளை நமது பேரவை நியாயமான முறையில் ஒரு பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க முயன்று இருந்தால். ஆனால் நடந்தவைகளும் ...நடப்பவைகளும் நடுநிலையாளர்களுக்கு மேலும் சந்தேகத்தை அதிகரிக்கத்தான் செய்கிறதே தவிர வேறொண்டும் இல்லை. கடைசியில் இந்த கையெழுத்து விசயத்தால் வஹிதா அபு அவர்கள் பலிகடா ஆகிவிட்டார்கள்....ஆபிதா அவர்கள் எப்படியோ தப்பிவிட்டார்கள் போல் தெரிகிறது.

இதெல்லாம் எதற்காக??. ஐக்கிய பேரவை அல்லது அதை கன்ட்ரோல் பண்ணும் தனவந்தர்கள்(?), ஒரு puppet யை நகராட்சி தலைவர் பதவிக்கு கொண்டு வர முயற்சி செய்கிறார்களோ...அதற்கு பகடை காயாக ஊர் ஒற்றுமை, நன்மையோ தீமையோ...பேரவையின் பெரியவர்களுக்கு கட்டு படுங்கள் என்று நாம் உசுப்பேற்ற படுகின்றோமோ என்று நினைக்க தோனுகிறது. nichayamaaga நாம் அனைவரும் சிந்தித்து செயல்படவேண்டிய தருணம் . நமக்கு தேவை நல்லதொரு நகராட்சி தலைவி...not the puppet of any rich individiuals or group.

ஐக்கிய பேரவை தன்னை திருத்திக்காதவரை...மக்கள் விரும்பு மன்றமாக மாற்றிக்கொள்ளாதவரை...செயல்படாதவரை நடு கோடியில் இருந்து என்ன கூப்பாடு போட்டாலும் ஒற்றுமையை காயலில் கொண்டுவரமுடியாது...அல்லது அது கிலோ என்ன வில்லை என்றுதான் கேட்கப்படும்.

எது எப்படியோ...அல்லாஹ் எல்லாவற்றையும் அறிபவனாக இருக்கிறான். நியாயம் என்றும் வெற்றிபெற்றே தீரும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
84. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by mackie noohuthambi (kayalpatnam) [05 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9696

அன்பு சகோதரி ஆபிதா அவர்களே,

உங்களின் நீண்ட தன்னிலை விளக்க அறிக்கை படித்தேன். ஐக்கிய பேரவை முச்சரிக்காவில் நீங்கள் கையெழுத்திட மறுத்ததால் உங்களை ஐக்கிய பேரவை வேட்பாளர்களில் ஒருவராக உங்களை தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயம் ஐக்கிய பேரவைக்கு இல்லை. ஒருவேளை நீங்கள் தேர்ந்து எடுக்கப்படாமல் போய்விட்டால் மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கை நழுவி போய்விடுமே என்ற உங்கள் ஆதங்கம் உங்களை கையெழுத்து போடவிடாமல் தடுத்துள்ளது. இரண்டையுமே குறைகாண முடியாது.

மற்றப்படி நீங்கள் சந்தேகப்பட்டது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் என்பதை புரிய முடியவில்லை. ஒருவரைப்பற்றிய சந்தேகம் மனதில் விழுந்துவிட்டால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டும் சந்தேகத்துக்கு இடமானதாகவே அமைந்து விடுவது இயற்கை. இதற்குத்தான் அல்லாஹ் சொல்கிறான் சந்தேகப்படாதீர்கள், ஒருவரின் குற்றங்களை துருவி துருவி ஆராயாதீர்கள் என்று சொல்கிறான்.

" பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம். தீராத கோபம் யாருக்கு லாபம்". நீங்கள் கூறுவதெல்லாம் உண்மையாக இருந்தால், நியாயத்தின் பக்கம் அல்லாஹ் இருப்பான். காலம் தான் பதில் சொல்லும்.

ஒருகொடியில் இரு மலர்கள். இப்படி போட்டிபோட்டு நகர் மன்ற தலைவியாக வருவதற்கு நமது ஊர் தலைவர்கள் வழி வகுத்துக்கொடுத்து விட்டார்களே என்று வேதனையாக இருக்கிறது. உங்கள் கடிதங்களை படிப்பவர்கள், வீடு வீடாக நீங்கள் சென்று இந்த செய்தியை சொல்லும்போது உங்களுக்கு அனுதாப வோட்டுக்கள் விழுவதற்கு பாதை வகுத்து கொடுத்து விட்டார்கள். பெண்கள் மனது பெண்களுக்குதானே தெரியும். என்ன இருந்தாலும் நீங்கள் ஊரிலேயே பிறந்து இங்கேயே வளர்ந்து பள்ளிக்கூடம் நடத்தி எல்ல தாய்மார்களையும் கவர்ந்தவர்கள்.

"ஐக்கிய பேரவையா எங்களுடன் ஐக்கியமான பெண்மணியா?" என்ற விவாதத்தை துவக்கி வைத்துவிட்டீர்கள். ஆப்பிள் பழத்தை கொண்டு வந்து உலகை சுற்றிவருபவருக்கே இந்த பழம் என்று நாரதர் ஆரம்பித்து வைத்த வாதம் திருவிளையாடல் மிக சுவாரஸ்யமானது. குருவிக்குஞ்சிக்கு சீவன் போவது குழந்தைபிள்ளைக்கு விளையாட்டு. பெரியவர்களின் விளையாட்டு நடுநிலயாளர்களுக்கு மனநீரிதியான பாதிப்பு.

மக்கி நூஹுதம்பி 9865263588


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
85. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by M Sajith (DUBAI) [05 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9701

கத்தர் அனஸ் காக்கா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,

சரியான கேள்வி கேட்டுள்ளீர்கள், சட்ட மன்றத்துடன் இரு முன்னாள் நமதூர் மன்ற தலைமையும் குறிப்பிட்டதை காணவில்லையா?

இவர்களிடம் கையெழுத்து வாங்குவது சாத்தியமா? என்பது தான் கேள்வி. பலம் இல்லாதவர்கள் என்றால்தான் வாங்குவீர்களா? என்ன சாதிக்க இந்த புது பழக்கம்?

கையெழுத்து கொடுத்த பின் மாறினால் நடவடிக்கை எடுக்க ஏதாவது வழி உள்ளதா. மக்கள் நிராகரிப்புத்தான் என்றால் கையெழுத்து இல்லாமலும் இதை செய்வார்களே. மக்கள் மீதும் நம்பிக்கை இல்லையா?

அம்புலிமாமா படிப்பதில் சந்தோசம் கிடைத்தால் தொடர்ந்து செய்யுங்கள் ஐக்கிய பேரவை தடை செய்யும் வரை, அதன் பின் கேள்வி கேட்டகாமல் ஒற்றுமைக்கு தலைவணங்க வேண்டியது வரும்.

இதுவரை நானாக யாரின் பெயரையும் குறிப்பிட்டு எழுதவில்லை.. என்னை குறித்து (பெயருடன்) விமர்சித்தால் பதில் தராமல் ஒளிந்துகொள்ளும் அவசியமும் இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
86. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Pirabu Mujeeb (Riyadh-KSA) [05 October 2011]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9703

ஐக்கிய பேரவை நிலையை அறிய நான் ஆவலுடன் இருக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
87. சகோதரர் முஹைதீன் அவர்களே ..
posted by முத்துவாப்பா (அல்-கோபர்) [05 October 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9723

சகோதரர் முஹைதீன் அவர்களே உங்கள் மீதும் நம் அனைவரின் மீதும் அந்த ஓர் இறையின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக ....

உள்ளத்தில் உள்ளவற்றை அறியக்கூடிய சக்தி அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே உண்டு. நான் யாரை விமர்சித்து அந்த கருத்தை போட்டேன் என்று அனைவருக்கும் தெரியும் . ஆனால் அதை நீங்கள் குர்ஆணை வசனத்தை நான் விமர்சனம் செயவாதாக விளங்கி கொள்வீர்கள் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை.இருந்தாலும் நான் எதுகை மோனைக்காக எழுதிய வரிகள் உங்களை காயம் படுத்தியது என்னி வருந்துகிறேன்.நான் வேறு எந்த நோக்கத்தோடும் அதை எழுதவில்லை .

அட்மின் அவர்களே என்னுடைய கருத்துக்கள் Comment No. 9521 & Comment No. 9511 உள்ள ஒற்றுமை கயிறு, பம்பர கயிறு என்ற வார்த்தை சிலருக்கு தவறானா புரிதலுக்குறியதாக இருப்பதால் அதை நீக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்

Administrator: Edited as requested


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
88. ஏ..! இவியளுக்கு அவியமேலுன்னு ஆக்கிப்டாதீங்கள்ளே...?
posted by M.N.L.முஹம்மது ரஃபீக், ராபியா மணாளன். (புனித மக்கா.) [05 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9724

நாமெ எல்லோரும் இப்படியே குடிமிச் சண்டை போட்டுக்கிட்டு இருப்போம்! அவிய கொண்டையிலெ பூவெச்சு,கொடையும் நடத்தி,கும்பாபிஷேகமும் பண்ணிருவாங்கள்ள, அப்புறம் என்ன பண்ணுவியே?அந்தகரைக்கு போய் அந்தால,பொத்திக்கிட்டு உக்கார வேண்டியதுதான், ஏ! ச்சட்டுபுட்டுன்னு ஆகற காரியத்த பாப்பியளா? அடிச்சிகிட்டு சாவுவீளா? வெளங்கா பயவுள்ளைகளா..!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
89. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by zainab (kayalpatnam) [05 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 9727

அஸ்ஸலாமு அழைக்கும்

samu kaka from dubai & சொலுக்கு எஸ்.எம்.எஸ் காக்க அவர்கள் இருவருக்கும் பாவம் ஒரு common matter புரியவில்லை போலும் .... நம் பொதுவாக doctors,teachers,I.A.S,I.P.S,police etc etc இவர்களை எல்லாம் மக்கள் பணியாளர் என்றோ பப்ளிக் செர்வன்ட் என்றோ than சொல்வோம் அதகாக evkal எல்லாம் sambalam பெறாமல வேலை செய்கிறார்கள் ? இல்லையே! irunthalum இவர்கள் செய்வது சமுதாயப் பணியே !!!!!!! அந்த வகையில் மக்கள் சொல்வது சரியே

AS SAMU KAKA SAID,"PEOPLE ARE CLAIMING THAT SHE IS A SOCIAL WORKER IN KAYAL "...she is not telling like this.people of kayal only proclaimed like this...... solukku kakka pls try to understand one thing "TEACHING IS DIFFERENT FROM BUSINESS"

ஆபிதா அவர்கள் ithuvarai என்ன சேவை செய்து இருக்கிறார்கள் என்ற details தானே உங்களுக்கு வேண்டும் ..அவரின் latest நோட்டீஸ் பார்த்து நங்கள் தெரிந்து கொண்டோம் இன்ஷா அல்லா விரைவில் உங்கள் பார்வைக்கும் வரலாம் .....

சகோதரர்களே உங்களிடம் ஒரே ஒரு கேள்வி ஆபிதா அவர்களை இவளவு கேட்கும் நீங்கள் மற்ற வேட்பாளரின் full profile தெர்யும. தெரிந்தால் அவரின் சேவைகளை பற்றி எங்களுக்கும் சொல்லுங்களேன்.....need qualifications other than AJ candidate ...

last but not least teaching children is definitely a social work even if she get some money as a fee...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
90. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by OMER ANAS (DOHA QATAR. ) [05 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 9735

தம்பி JAJITH உன் கருத்துக்களில், வாக்குவாதம் இருக்குகின்றதே தவிர விளக்கம் இல்லை. நானும் யாரையும் பெயர் சொல்லி குற்றம் சாட்டுபவன் அல்ல. உண்மை விளங்கும் போது விளங்கும். திண்ணை பேச்சு இல்லை! உண்மை பேச்சு என்று.! நான் கேட்டது சட்ட சபைக்கு யார்? முச்சரிக்கை லட்டர் கொடுக்கணும் என்று! அப்புறம்,எந்த காதர் உமக்கு போனில்,வருத்தம் சொன்னார் என்பதே! இதுதான் என்னை அம்புலி மாமா காமிக்ஸ் வரை கொண்டு விட்டது. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! நன்றாக இருக்கும் உன் கமண்ட்ஸ் சொதப்பியதால், சுட்டிக் காட்டினேன்! நான் உமக்கு சொல்வதெல்லாம், கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது......? தொடரட்டும் உன் கமாண்ட்ஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
91. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Vilack SMA (Kangxi) [05 October 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 9736

சாடை அறியாதவன் சர்வ முட்டாள் என்பார்கள்---- comment ref : 9695 Rayyan 's Dad

அப்படியானால் , ஊர் ஒற்றுமையை மதித்தவர்கள் , முச்சரிக்கையில் கையெழுத்து போட்டவர்கள் .... ?

Adamshanif 's Dad


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
92. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by KADER (China) [06 October 2011]
IP: 216.*.*.* United States | Comment Reference Number: 9740

முச்சரிக்கை பற்றி எனக்கு தெரிந்த சிறு விளக்கம் .

ஒரு நபர் மட்டும் போட்டியிடும் போது முச்சரிக்கை அவசியமில்லாதது .

ஒன்றுக்கு மேற்பட்ட நபர் போட்டியிடும்போதுதான் முச்சரிக்கை கண்டிப்பாக தேவைப்படும்.ஏனெனில் உட் போட்டியில் தோற்றவர் மீண்டும் போதுப்போட்டிக்கு செல்லாமல் இது கட்டுப்பதுத்தும்.

இது உண்மையா இல்லையா என்று நீங்கள் எந்த ஒரு வக்கீலிடமும் கேட்டு தெரிந்து கொள்ளலாம் ..

மற்றபடி, ஜனநாயகம் எனது பிறப்புரிமை என்று பேசுபவர்கள் , பேரவையையே அணுகி இருக்கக்கூடாது .

பேரவையை மதிக்காதவர்கள் ஏன் பேரவையை அணுக வேண்டும் ?

அதிகம் பேர் நிற்பதுதான் ஆரோக்கியமான ஜனநாயகம் என்றால், வேற்றுமைவாதிகள் இன்னும் 50 பேரை களத்தில் இறக்கி இருக்கலாமே ? ஏன் ஒரு ஆபிதாவோடு நின்றுவிட்டார்கள் என்று தெரியவில்லை .

வஹீதா லாதவை பாருங்கள். எவ்வளவு கண்ணியமாக ஒதுங்கிக்கொண்டார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
93. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [06 October 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9757

ஆபிதா லாத்தா அவர்களை மட்டுமே போட்டியில் இருந்து விலக சொல்வது போல் அமைந்துள்ளது பலருடைய பதிப்புகள்.

ஆனால் என்னுடைய கேள்வி, பொது வேட்பாளரின் தாயார் போட்டியிட்டதன், (பின்னர் வாபஸ் வாங்கியதன்) நோக்கம் என்ன?

இவர் "ஐக்கிய" பேரவையால் நிருத்தப்பட்டவரா?

ஐக்கிய பேரவையால் நிறுத்தப்படவில்லை என்றால், அதை ஐக்கிய பேரவை ஒரு அறிக்கை மூலம் பொது மக்களுக்கு தெரிவிக்கலாமே? அதாவது ஐக்கிய பேரவையின் பொது வேட்பாளர் சகோதரி மிஸ்ரியா மட்டும் தான் என்று?

இப்பொழுது புதிய செய்தியாக, பொது வேட்பாளரின் மச்சி அவர்கள் களத்தில் உள்ளார்கலாமே? இதற்க்கு, ஆபிதா லாத்தாவை மட்டுமே குறி வைத்து Counter Attack செய்பவர்கள் என்ன கருத்து கூறுகின்றனர்?

"உம்மா – மகள் – மச்சி" – இப்ப எங்க போச்சி உங்க ஒற்றுமை?

இத்தனை கருத்து பரிமாற்றத்திற்கு பின்னும் ஐக்கிய பேரவை ஏன் இவ்விடயத்தில் மௌனமாக் இருக்கின்றது?

பேரவையின் பொது வேட்பாளர் மற்றும் ஆபிதா லாத்தா இவர்களை தவிர கலத்தில் இன்னும் நால்வர் இருக்கின்றனர், இதில்,

ஆயிஷா பர்வீன் – Lens
செய்யது மறியம் - Table FAN
எச்.எம்.முஹம்மத் இப்றாஹீம் உம்மா - Fountain Pen

இவர்களை வாபஸ் வாங்க சொல்லி ஒரு கருத்திலும், இதுவரை யாரும் சொல்லவில்லையே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
94. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by M Sajith (DUBAI) [06 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9773

முச்சரிக்கை கலாச்சார்த்தை நடைமுறைதான் என சரிகாணும் நம் சொந்தங்கள் அனைவருக்கும்...

எந்த தேர்தலில், யார முச்சரிக்கையில் கையெழுத்திட்டு தலைவரானார் / போட்டியிட ஒருமணதாக நியமிக்கப்பட்டர், சுமூகமாக முடிவெடுக்கப்பட்டது? புள்ளிவிவரத்தை தாருங்களேன்....

நடைமுறை என்பது, எனக்குத்தெரிந்த தமிழில் அன்றாடமோ அல்லது அது போல சூழ்நிலைகளில் பெரும்பாலும் நடப்பது.

முதல் குழப்பமே இந்த "புதுமையான" முச்சரிக்கைதான் - இதனால்தான் இன்று நாம் ஒருவருக்கொருவர் பகைத்துக்கொள்ளும் அளவுக்கு வாத விவாதங்கள் உருவாக்கியது.

இதில் இத்துனை பிடிவாதம் காட்ட என்ன உள்ளது? இதன் பின்னரும் ஒருவர் போட்டியிட்டால் ஏதாவது செய்யமுடியுமா? ஆக இந்த அவசியம் இல்லாத ஒரு செயலால் தொடங்கிய சந்தேகம், சகோதரி அபிதாவுக்கு மட்டும் இல்லை, பேரவையின் வேட்பாளரின் தாயார், மச்சி உட்பட நான்கு நபர்களுக்கு வந்துள்ளதே இதை எங்கே சொல்லி அழ ?

இதில் கையெழுத்திட்டவர்கள் 4 பேர், மறுத்தவர்கள் 5 பேர் (சகோதரி மிஸ்ரியாவின் தாயாரும் சேர்த்தால்). ஏதோ எல்லோரும் செய்தார்கள் இவர் மட்டும்தான் மறுத்தார் என்பது இன்னும் ஒரு கதை.

ஒரு வாதத்திற்கு இதை சரிகண்டாலும், இதில் போட்டி தவிற ஏதாவது உருப்படியான வாசகம் உள்ளதா? லஞ்சம், ஊருக்கு நல்லது செய்வேன், இறைவனை முன்னிருத்துவது ஏதாவது..?

எனக்கு தெரிந்தவகையில், இந்த முச்சரிக்கை ஒரே ஒரு காரியத்துக்குத்தான் பயன் பட்டது - அது நம்பி கையெழுத்திட்ட வஹிதா லாத்தவுக்கு துரோகம் செய்ய மட்டும் தான்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள் - பேரவை ஒரு கையெழுத்தால் மூன்று பேருக்கு ஒரே சமயத்தில் 'ஆப்பு' வைத்து அதன் வல்லமையை சொல்லியிருக்கிறது..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
95. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by zainab (kayalpatnam) [06 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 9778

அஸ்ஸலாமு அழைக்கும்

""வஹீதா லாதவை பாருங்கள். எவ்வளவு கண்ணியமாக ஒதுங்கிக்கொண்டார்கள்."" comment ref no:9740

வஹிதா மேடம் "கண்ணியமாக" ஒதுங்கி கொள்ளவில்லை....

வஹிதா மேடம் "CUNNING " ஆக ஒதுக்கப் பட்டார்கள் .............

என்பதே உலகறிந்த உண்மை ...சிலருக்கு மட்டுமே இன்னும் தெரியவில்லை அனைவரும் தெரிந்து கொள்ளும் நாள் வெகு தூரம் இல்லை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
96. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Zainul Abdeen (Dubai ) [06 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9779

சும்மா சும்மா கவுன்ட்டர் கமெண்ட்ஸ் அடிபதனால் எந்த பிரோஜனமும் இல்லை . எப்போ kayalpatnam dot com திறந்தாலும் யாரவது யாரையாவது விமர்சிப்பதும் அதுக்கு அவர் பதில் கொடுப்பதுமாக இப்படியே பல நாட்கள் கழிகின்றது.

ஊர் நல விரும்பிகள் மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும் என்று சொல்கின்றார்களே தவிர என்ன மாற்றம் வேண்டும் என்று குறிப்பாக சொல்லவில்லை. ஐக்கிய பேரவையின் செயல்பாட்டில் Transparency வேண்டும் வேண்டும் என்று சொல்லுகிறார்கள் .. இதற்குமேல் என்ன transparent எதிற்பர்கிரார்கள் என்று தெரியவில்லை.

ஆனா ஒன்னு மட்டும் உண்மை , இந்த தேர்தல் வரைதான் இப்படி ஆளுக்கு ஆள் சண்டை போட்டுகொள்வோம், அப்றோம வழக்கம்போல மச்சான், மாப்பிள்ளை என்று சொல்லிட்டு போக வேண்டியதுதான்.

இதோடு இரண்டு பழமொழிகளையும் பதிய விரும்புகிறேன்

01 சமாதானம் செய்து வைப்பவர் ஒருபோதும் தோல்வியே அடைவதில்லை

02 செயலே புகழ் பரப்பும்; வாய் அல்ல


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
97. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Vilack SMA (Hetang) [06 October 2011]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 9782

( எனக்கு தெரிந்தவகையில், இந்த முச்சரிக்கை ஒரே ஒரு காரியத்துக்குத்தான் பயன் பட்டது - அது நம்பி கையெழுத்திட்ட வஹிதா லாத்தவுக்கு துரோகம் செய்ய மட்டும் தான். ) comment Ref : 9773 by Mr . Sajith

சம்பத்தப்பட்ட நபரே இதுபற்றி ஒன்றும் சொல்லவில்லை . நீங்களாகவே ஒரு கற்பனையை ஏற்படுத்தி ஏன் இப்படியெல்லாம் பேசி , ஒற்றுமைக்கு எதிராக செயல்படுகிறீர்கள் ?

உங்களது அனைத்து கருத்துகளிலும் , தெளிவான கருத்துகள் என்று எதிலும் இல்லை .அனைத்துமே , ஒற்றுமைக்கு எதிரான குழப்பங்கள்தான் .

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
98. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by KADER (China) [06 October 2011]
IP: 216.*.*.* United States | Comment Reference Number: 9785

சகோதரர் ஒருவர் முச்செரிக்கை பற்றி விவரம் தெரியாமல் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

"முதல் குழப்பமே இந்த "புதுமையான" முச்சரிக்கைதான் - இதனால்தான் இன்று நாம் ஒருவருக்கொருவர் பகைத்துக்கொள்ளும் அளவுக்கு வாத விவாதங்கள் உருவாக்கியது இதில் இத்துனை பிடிவாதம் காட்ட என்ன உள்ளது? இதன் பின்னரும் ஒருவர் போட்டியிட்டால் ஏதாவது செய்யமுடியுமா? "

முச்சரிக்கையில் கையெழுத்திட்டவர் உள் தேர்தலில் தோற்றால் ஐக்கியபேரவையை மீறி நிச்சயமாக போட்டியிட முடியாது. அப்படி மீறி போட்டியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

இங்கு போட்டியிடும் 6 வேட்பாளர்களில் மிஸ்ரியா மட்டுமே முச்செரிக்கையில் கையெழுத்திட்டவர். இதர 5 பேரும் முச்செரிக்கையில் கைஎழுத்திடாதவர்கள்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
99. வாதம்+பிடிவாதம்+வாக்குவாதம்= குரோதம்.
posted by M.N.L.முஹம்மது ரஃபீக், ராபியா மணாளன். (புனித மக்கா.) [06 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9788

எப்பா! நல்லாயிருப்ப,ஸாஜித் ப்ளீஸ் போதும்மா! கருத்துக்களை சுருக்கமாச் சொல்லி நறுக்குன்னு குத்தினா போதாதா இப்படி வெளக்கஞ்சொல்லியே...வெளங்காமெ போனுமா?(பொருள் விளங்காமல் போகனுமா) என்ன இழவுக்கு இப்போ வாக்கு வாதம்? வாக்கெடுப்பு முடிஞ்சா தானாத் தெரிஞ்சிடப்போகுது!

குசும்பு:
கைவலிக்காமெ கமெண்ட்ஸ் எழுதுறீங்களே? டூட்டிலே இருக்கும் போதா?இல்லை டூட்டி முடிஞ்சப்புறமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
100. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by M Sajith (DUBAI) [06 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9798

ரபிக் சார்,

தப்பே செய்யலன்னு வாதம் பன்னரதலேதான் இத்துனை கோவமும். டூட்டிக்கு லீவு போட்டு எழுதறேன்

இந்த தேர்தலால எனக்கு ஒரு லாபம் - தமிழ் டைப்பிங் நல்ல வேகமா வருது இப்போ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
101. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Abdul Basith.I (Chennai) [06 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 9810

assalamualaikum !

I have perused above correspondences, In my view, sister Abida shaik's apprehension and allegation towards Ikeya Peravai is reasonable and genuine. As Ikeya peravai requested sister Abida's signature, on an affidavit with undemocratic covenants, which show's its arbitrariness and nontransparent attitude. And who knows, what is happening behind the candidates and which power is selecting the prospective candidate. And also the way people pressurized sis Abida to sign the affidavit is also suspicious and chances are very high that this same unfair affidavit might be used against the sister, if there any dispute arise and No prudent man, who have public spirit would submit to such exploiting attitude.

Let it be as it may, I wish Ikeya Peravai would be more transparent in future Insha Allah . And to be honest, i can see healthy views and counter views from brothers and sisters, i really appreciate all .As Sis Abida rightly said as a true believer, as she has left the issue to Allaah. Insha allah i am looking for a result which is beneficial for our township and help us to be unite in future. Ameen!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
102. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by PIRABU MUJEEB (RIYADH-KSA) [06 October 2011]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9817

சாஜித் நீங்கள் நன்றி சொல்லவிரும்பினால் காயல் வெப்சைட் தான் சொல்லவேண்டும். உங்களுக்கு தான் தமிழ் டைப் ஸ்பீட வருகிறதே. உள்ளஹ்சி தேர்தல் வைத்து காமடி கிமடி பண்ணலில.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
103. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohideen (Jeddah) [07 October 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9849

விட்டு கொடுப்பவர்கள் கெட்டுபோவதுமில்லை, கெட்டுபோரவர்கள் விட்டுகோடுபபதும் இல்லை.

இன்னும் காலம் முடியவில்லை. ஆகையால் பேரவை, ஊரில் உள்ள எல்லா ஜமாஅத்தும் ஒன்று கூடி யாரவது ஒரு வேட்பாளரை ( ஆதரவு ) நிறுத்தினால் நன்றாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
104. முச்செரிக்கை..ஒரு ஏமாற்றுவலை!!
posted by Rayyan's Dad!! (USA) [07 October 2011]
IP: 63.*.*.* United States | Comment Reference Number: 9874

Resp to comment Ref # 9736 (by Vilack SMA)

பேரவையை நம்பி முச்சரிக்கையில் கையெழுத்து போட்டு ஐக்கிய பேரவையை நம்பி (சூழ்ச்சியரியாமல்) ஏமாந்து போனவர்களிடம் கேட்டால் தான் தெரியும்....அவர்களும் முட்டாள்களாக ஆக்கபட்டர்களா அல்லது இல்லையா என்று. முடிந்தால்...KWT யின் இன்றைய அறிக்கையை முழுமையாக படியுங்கள். அதற்கும் பேரவையின் அன்பர்கள் எதாவது ஒரு பதில் வைத்து இருப்பீர்கள் என்பதில் நடுநிலையார்களுக்கு ஒரு ஆச்சர்யமும் இல்லை.

General comment:

ஆபிதா ஷேய்க் அவர்களின் முச்செரிக்கையில் கையெழுத்திடாதது பேரவையின் சூழ்ச்சியிலிருந்து தப்புவட்கான சமார்த்தியமே அன்றி வேறில்லை. ஆபிதா ஷேய்க் அவர்களும் கையெழுத்திட்டு இருந்தால் இன்னைக்கு நமது பேரவையின் வண்ட வாளம் தண்டவாளம் ஏறாமல் போயிருக்கும்.

ஒற்றுமை என்பதை நடைமுறை படுத்த வேண்டுமென்றால்....நமது ஐக்கிய பேரவை தன்னை (சூழ்ச்சிகளை/உள்நோக்கம் நிறைந்த செயல்பாட்டுகளை) குறைகளை திருத்திக்காதவரை...எல்லா மக்களும் விரும்பும் மன்றமாக(பிரதிபளிப்பாக) மாற்றிக்கொள்ளாதவரை(செயல்படாதவரை) தெருக்கோடியில் இருந்து என்ன கூப்பாடு போட்டாலும் முழுமையான ஒற்றுமையை காயலில் கொண்டு வருவது மிகக்கடினம்...மாறாக அது கிலோ என்ன வில்லை என்றுதான் கேட்கப்படும் என்றே நினைக்க தோனுகிறது.

எப்பெர்பட்டாவதாவது ஐக்கிய பேரவையும் அதன் பொது வேட்பாளார் கூத்துகளை மிக நன்றாக அறிந்தும்..அதை நியாயப்படுத்துவதோடு நில்லாமல்...ஊர் ஒற்றுமை, பேரவைக்கும் பேரவை பெரியவர்களுக்கும் கட்டு படுதல் என்றெல்லாம் சொல்லி (பூச்சாண்டி காட்டி) மற்றவர்களயும் convince பண்ண ஒரு சில அன்பர்கள் எவ்வளவோ முயற்சி செய்து வருகிறார்கள்.

உங்களுடைய கருத்து சுதந்திரத்தை மதிக்கின்ற அதே நேரத்தில் பேரவையின் மீதுள்ள நியாயமான குறைகளை நிவர்த்திசெய்ய முயற்சி எடுங்கள். அதற்கு இப்பொழுது தருணம் இல்லைஎன்றெல்லாம் சொல்லி காலம் தாழ்த்த்வேண்டாம்...அநியாயத்துக்கு துணை போய்விட வேண்டாம் என்பதே என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
105. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by KS MUHAMED SHUAIB (KAYALPATNAM) [07 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 9878

தம்பி சாஜித் மருமகனாரே ரபீக் உங்களுக்குள் போட்டி இருக்கலாம் பொறாமை இருக்ககூடாது. வம்பு இருக்கலாம் தும்பு இருக்கக்கூடாது. ( இது பழைய வீரப்பா பட வசன்ம்ப்பா....!)மாறி மாறி ஏம்ப்பா சண்டை போடுறீங்க....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
106. ஓர் ஐக்கியப் போர்வைக்குள் நாங்கள்...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக், ராபியா மணாளன். (புனித மக்கா.) [07 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9895

அருமை மாமனாரே! யார் கூறினர்? எமக்குள்,போட்டி,பொறாமை என்று? எவர் பிதற்றினர் எமக்குள் வம்பு,வீம்பு என்று,பாம்பறியும் பாம்பின் கால் என்பது போல் நண்பர் ஸாஜித்தின் வசன நடையைப் பல முறைக் கண்டு வியந்துள்ளேன்!

தமிழ் மொழிப் பற்றுடைய யாவரும் என் கேளிர் தாம்! குறள் கொண்டு பொருள் கூறும் மரபு எம் வழக்கம்.இவ்வழக்கம் அவர் பழக்கம்!எனவேதாம் யாம் இணைந்தோம் இணையதளதில் இனிய நண்பர்களாய், நட்புறவு நயந்து போதல்,நாகரீகம்,இவை யாவும் யாம் இருவருக்கும் இரு கண்கள்! ஐயம் வேண்டாம்! யாம் எப்போதும் இணைந்தே இருப்போம்! இனிய நண்பர்களாய்! இதயக் கனிகளாய்!!!

குசும்பு:

மாமா! சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்துறுவீங்க போலெ!!!இப்படி என்னை சங்க காலத்துக்கு சஞ்சரிக்க வெச்சுட்டீங்களே...? இது!உங்களுக்கே நல்லாயிருக்கா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
107. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by M Sajith (DUBAI) [07 October 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9903

ஆகா... வீரப்பா டயலாக்கோட லேசா வில்லத்தனமும் பன்னிட்டீங்களே ஷுஐபு காக்கா..

சும்மா இருக்காம நான் தான் ரபிக் சாரை வம்புக்கு இழுப்பேன் ஏதாவது குசும்பா சொல்லுவாரேன்னு. சீரியாசா சப்ஜக்ட் போகும் போது இடையில் இவரின் கமெண்டு எப்படா வராதுன்னு ஒரு பிரேக் கிடைக்குமேன்னு ஏங்கியிருக்கேன்..

சார் மாமா சொன்னார் மச்சான் சொன்னருன்னெல்லாம் நிறுத்தாதிங்க - கண்டிநியு..

தமிழில் நான் ரெம்ப வீக் - இரண்டு சுழியா மூனு சுழியானு முடிவெடுக்க நான் படும்பாடு ஆன்டவனுக்குத்தான் தெரியும். இதுல சங்க தமிழ் சவுக்க தமிழ்ன்னு எதோ எழுதியிருக்கீங்க அகரதி எடுத்து தேடித்தேடிக்கிட்டு இருக்கேன்..போங்க

அமா இந்த சங்கம்னா, நம்ம பெரிசுங்க தாம் தள்ளி டைம்பஸ் பனுவாங்களே அது இல்லயா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
108. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Noohu Amanullah (Makkah) [08 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9958

பார்த்தீர்களா நமது ஊரின் நிலமை இறுதியில் காமெடியில் தான் முடியும். தவறாக நினைக்க வேண்டாம் இது தான் உண்மை. ஆனால் மனசு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும் ஏத்துகிற மனசு இல்லையே நம்ம மக்கள்ட்ட.. நான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் தான்னு சொல்ற நம்மகிட்ட எப்படி ஒற்றுமை இருக்கும்? அதா எதிர் பாக்குறது கானல் நீரை பார்ப்பது போல..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
109. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by K S Muhamed shuaib (KAYALPATNAM) [08 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9977

ஏம்ம்ப்பா சாஜித் உனக்கா தமிழ் தெரியாது? கருத்துக்கு கருத்து "குறள்" எழுதுகிறாய்..தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று கணியன் பூங்குன்றனார் பாடலெல்லாம் சூப்பராக மேற்கோள் காட்டுகிறாய் நான் இதே வலைத்தளத்தின் இன்னொரு பகுதியில் கூட உன் குறள் ஆர்வத்தை காமெடி பண்ணியுள்ளேன்.

என் மருமகனாரை என்னவோ சங்கத்தமிழில் தள்ளிவிட்டாயாமே....என்னமோ நீங்களாச்சு...உங்கள் தமிழாச்சு...தமிழ் சண்டை போட்டு கொஞ்சம் ரசிக்க வைத்தால் சரி...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved