Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:39:09 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7735
#KOTW7735
Increase Font Size Decrease Font Size
சனி, டிசம்பர் 17, 2011
நகரில் ஒருவழிப்பாதைக்கு பரிசீலிக்கப்படும் அனைத்து வழித்தடங்களும் அளவீடு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4580 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (24) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெருக்கடியைப் போக்குவதற்காக ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, நகரில் ஒருவழிப்பாதையை செயல்படுத்த பரிசீலிக்கப்படும் பல்வேறு வழித்தடங்கள் இன்று காலை 11.30 மணியளவில் முறைப்படி அளவீடு செய்யப்பட்டன.

வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையில், காயல்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் செல்வலிங்கம் அளவீட்டாளர் கந்தப்பன் ஆகியோரடங்கிய குழுவினர், காயல்பட்டினம் ஓடக்கரையிலிருந்து பூந்தோட்டம் - தைக்காபுரம் வழியாக துளிர் பள்ளி வளாகத்தில் இணையும் சாலை அகலத்தை முதலில் அளவீடு செய்தனர்.



பின்னர், தாயிம்பள்ளி - மூப்பனார் ஓடை குறுக்குச் சாலை வழியாக மேல நெசவுத்தெரு - விசாலாட்சியம்மன் கோயில் தெருவின் அகலத்தை அளந்தனர்.

அடுத்து, அதே மூப்பனார் ஓடை குறுக்குச் சாலை வழியாக பெரிய நெசவுத் தெரு - எல்.கே.லெப்பைத்தம்பி சாலையின் அகலத்தை அவர்கள் அளவீடு செய்து பதிவு செய்துகொண்டனர்.













இறுதியில், அளவெடுக்கப்பட்டுள்ள அனைத்து வழித்தடங்களிலுள்ள சாதக-பாதகங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையில் ஒருவழிப்பாதை குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன், பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் மற்றும் பொதுமக்கள் சிலர் உடனிருந்தனர்.

பெரிய நெசவுத் தெரு பகுதியில் அளவீடு செய்யப்படும்போது, அத்தெருவைச் சார்ந்த பொதுமக்கள் சிலர், அதிகாரிகளின் வருகை மற்றும் அளவீடு செய்வதற்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் வினவினர்.



நகரில் ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பொருட்டு, பரிசீலிக்கப்படும் அனைத்து வழித்தடங்களும் அளவிடப்பட்டு வருவதாக அப்போது அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்தி திருத்தப்பட்டது. (18.12.2011 - 08:56hrs)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பேருந்தும் தண்ணீர் தொட்டி பேருந்து நிலையம் வந்து செல்ல கூடியதாக அமைய வேண்டும்..
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [17 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14757

எந்த வழி பாதையில் வாகனம் வந்தாலும் பராவில்லை ஆனால் இரு வழி தடத்தில் இயங்கும் அணைத்து பேருந்தும் தண்ணீர் தொட்டி பேருந்து நிலையம் வந்து செல்ல கூடியதாக அமைய வேண்டும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நகரில் ஒருவழிப்பாதைக்கு ப...
posted by mackie noohuthambi (kayalpatnam) [17 December 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 14760

முல்லைபெரியாறு அணை வலுவாக இருக்கிறது என்று நிபுணர்கள் குழு சொல்வதை கேரளா அரசு ஏற்றுக்கொள்வதில்லை.

கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது என்று நிபுணர்கள் குழு சொல்வதை போராட்டக்குழு ஏற்றுக்கொள்வதில்லை.

இரண்டு பேருக்குமிடையில் நாட்டின் சுப்ரீம் பவர் என்று சொல்லும் உச்ச நீதிமன்றம் சொல்வதை யாருமே ஏற்றுக்கொள்வதில்லை.

இப்படி நியாயத்தராசு சந்தர்ப்பவாதிகளால் சதிராடிக் கொண்டிருக்கும்போது, காயல்பட்டினத்தில் மட்டும் என்ன நடந்து விடப்போகிறது. ஒவ்வொருவருக்கும் அவர்கள் நலம்தான் பெரிதாகதெரிகிறது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, ஊருக்கு ஒரு நல்லது நடந்தால் அது நமது தெருவுக்கு பெருமைதானே என்று யாரும் நினைப்பதாக தெரியவில்லை.

EVERYTHING IS BASED ON "SELF", NOT SERVICE OR SACRIFICE. எனவே, ஒருவழிப்பாதை என்பதை அரசு தைரியமாக செயல்படுத்த முன் வர வேண்டும். அதனால் அடுத்த முறை நமக்கு ஒட்டு விழாது என்று ஓட்டை மட்டுமே நம்பியிருக்கும் அரசுகளால் எந்த நலத்திட்டத்தையும் தைரியமாக செயல்படுத்த முடியாது. இதுதான் நிதர்சன உண்மை.

"நாடு என்ன செய்தது நமக்கு என்று கேட்பதை நிறுத்தி நாம் என்ன செய்தோம் அதற்கு" என்று ஒவ்வொருவரும் சிந்தித்து அவர்களது சிறிய பங்களிப்பை இந்த ஊருக்கு செய்தால் மாத்திரமே ஒரு வழி பாதை சாத்தியமாகும். இல்லா விட்டால் அது ஒரு கானல் நீர்தான்.எனினும் அதன் சாத்தியக்கூறுகளை ஆராயும் குழுவினர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.எப்படியோ நல்லது இந்த ஐந்து வருட ஆட்சி காலத்துக்குள் நடந்தால் மகிழ்ச்சியடைவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நகரில் ஒருவழிப்பாதைக்கு ப...
posted by Abubacker Siddiq (Riyadh) [17 December 2011]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14764

அன்பிற்கினிய சகோதரர்களே, அஸ்ஸலாமு அழைக்கும்,

அ.மு.செய்யது முஹம்மது (பேரூராட்சியின் நிர்வாக அதிகாரி) அவர்களால் முன்பு எடுக்கப்பட்ட ஆய்வின் கீழ்க்கண்ட முடிவின்படி:

1. காவல்துறை பரிந்துரைப் பிரகாரம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நெரிசல் அதிகம் உள்ள இடங்களை விரிவாக்கம் செய்தல்.

2. ஏற்கனேவே பரிந்துரைக்கப்பட்ட பேரூராட்சி நிர்வாக அதிகாரியின் மாற்றுவழிப்பாதை திட்டம்

3. ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் பெரிய நெசவு தெரு வழியாக ஒரு வழிப்பாதை.

அறிந்தும் அறியாமலும் ஆக்ரமித்தவர்களின் கவனத்திற்கு:

ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் 'எவன் அநியாயமாக ஒரு சாண் அளவு (நிலத்தை) அபகரித்துக் கொள்கிறானோ அவனுடைய கழுத்தில் ஏழு பூமிகள் அளவுள்ள நிலப்பகுதி (மறுமை நாளில்) வளையமாக மாட்டப்படும்' ஹதீஸ்: புஹாரி

எனவே ஆக்ரமிப்புகளை அகற்றி பாதையை விரிவுபடுதுவதே முதன்மை தீர்வாகும்.

இரண்டாவதாக, ஒருவழிபாதைக்காக பெரிய நெசவு தெரு அல்லாது மாற்று வழிப்பாதை இருக்கும் பட்சத்தில் அதற்கே முன்னுரிமை கொடுத்து செயல்முறை படுத்துவதே சகோதரத்துவத்தின் அடையாளமாகும்...

இந்த வலையதலத்தில் சிலர் நெசவு ஜாமாத்தார்கள் ஊர் நன்மையை கருதாதவர்கள் என குற்றம் சாற்றுகிறார்கள்.

ஊர் நன்மையை கருதுபவர்களாக இருந்ததால் தான் எங்கள் ஜமாத்திற்கு உட்பட்ட சின்ன நெசவு தெரு பெருவழிபாதையாக நடைமுறையில் உள்ளது.

இதிலிருந்து தெளிவு படுத்த விரும்புவது என்னவென்றால், முதல் இரண்டு முடிவுகளை ஆராய்ந்து நடைமுறைபடுத்துவதே நம் அனைவருக்கும் நன்மையாக அமையும்.

அபூபக்கர் சித்திக்,
ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. உங்கள் சேவைகள் தொடரட்டும்
posted by saburudeen (dubai) [17 December 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14768

நமது நகரில் நாம் தான் பல காலங்களாக போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .நம் தலை முறைகளுக்கும் இதே நெருக்கடி நிலை தொடராமல் இருக்க. .இதற்கு எப்படியாவது ஓர்தீர்வை பெற்று விட வேண்டும் என்கின்ற நல்ல எண்ணத்தில்...[ஒருவழிப்பாதையை செயல்படுத்த அளவிடு செய்யும் அதிகாரிகளுக்கு] ஒத்துழைப்பு செய்த காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் எம்.ஜஹாங்கீர், ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன், பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் மற்றும் அணைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி... உங்கள் சேவைகள் தொடரட்டும். ஒரு வழி பாதை திட்டம் இன்ஷா அல்லாஹ் விரைவில் மலரட்டும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நகரில் ஒருவழிப்பாதைக்கு ப...
posted by Vilack SMA (Hongkong) [18 December 2011]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 14779

அரசியல்வாதி என்ற இனம் இருக்கும்வரை mackey noohuthamby அவர்கள் சொன்ன இந்த பிரச்சினைகள் முடிவுக்கு வராது . முடிவுக்கு வந்து விட்டால் இந்த " இனம் " பிழைப்புக்கு எங்கே போவது ?

ஊரின் அனைத்து மக்களுக்கும் பயன்படக்கூடிய ஒரு திட்டம் வரும்போது , ஒருசிலருக்கு " இழப்பு " வரத்தான் செய்யும் . இதை அவர்கள் விட்டுக்கொடுக்க முன்வர வேண்டும் . உண்மையில் KTM தெரு காரர்கள் செய்யும் தியாகத்தை போற்றத்தான் வேண்டும் . அங்கே , தெருவில் சிறுவர்கள் விளையாடியதையும் , தெருவில் பந்தல் போட்டு விழாக்கள் நடத்தியதையும் பார்த்ததே இல்லை . போக்குவரத்திற்காக இவர்கள் செய்த தியாகத்தை விடவா , பிரச்சினை பண்ணும் இந்த தெருவாசிகள் செய்துவிட்டார்கள் ?

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:நகரில் ஒருவழிப்பாதைக்கு ப...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [18 December 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14784

அப்பாடா ஒரு விடிவு காலம் வரப்போகிறது.

இனி திருசெந்தூரில் இருந்து வரும் வாகனங்கள் ஓடக்கரையிலிருந்து பிரிந்து பூந்தோட்டம் - தைக்காபுரம் சென்று துளிர் பள்ளிக்கூடம் வழியாக ஆறுமுகநேரி சென்று விடும். (இது தான் அகலம் அதிகம் உள்ள வீதி)

சதுக்கை தெருவில் இருந்து ஆறுமுகநேரி செல்லனும் என்றால், முதலில் ஆட்டோவில் துளிர் பள்ளிக்கு செல்லனும், இப்பவே பஜாருக்கு 35 ரூபாய், இனி துளிர் வரை 70 ரூபாய். பஸ் சார்ஜ் வேறு அதிகமாம்.. ஆக சென்னைக்கு ட்ரெயினில் சென்றுவரும் செலவில் நாம் ஆறுமுகநேரி சென்று வரலாம்.

சும்மாவே, சவுதி இல் இருந்து அனுப்பும் பணம் போதவில்லை என்று மூக்கை சிந்துகிறார்கள்.. இனி கணக்கு வழக்கு எல்லாம் எப்படி போகுமோ.

வாழ்க ஒற்றுமை..வாழ்க காயல்... ( இங்கு இருக்கும் நாங்க...)புரியவில்லையப்பா...ஒன்றும் புரியவில்லை.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நகரில் ஒருவழிப்பாதைக்கு ப...
posted by A.M.Syed Ahmed (Riyadh) [18 December 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14786

நெசவு தெரு ரோடுதான் - ரியாத்தில் உள்ள மலிக் பஹது ரோடுமாதிரி விசாலமானது...

எல்லாதயிம் ஆய்வு செய்யுங்கள், ஆனா தீர்ப்பை ஊர்மக்கள் நினைக்கிறமாதிரி சரியா எழுதுங்கள்.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:புதிய மெயின் ரோடு உருவாக்குதல்
posted by V D SADAK THAMBY (Guangzhou ,China) [18 December 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 14787

நான் முன்பொருமுறை பதிந்த கருந்தின்படி ,காயல்பட்டினம் ஓடக்கரையிலிருந்து பூந்தோட்டம் - தைக்காபுரம் வழியாக துளிர் பள்ளி வளாகத்தில் இணையும் சாலையை புதிய போக்குவரத்திற்கு பரிசீலனை செய்யலாம் .

தற்போது இருக்கும் இந்த குறுகிய சாலையையே நாம் எதிர்நோக்காமல் , அதை புதிய அகலமான (50 வருட ) எதிர்கால தேவைக்கு உபயோகமான சாலையாக அமைக்கப்பட வேண்டும்.

இது ஒருவழிப்பாதையாக இல்லாமல் நால்வழிப்பாதையாக மற்றும் குறுகிய வளைவு எதுவுமில்லாதவாறு அமையவேண்டும்.இதற்க்கு தேவையான நிலங்களை அரசு கையகப்படுத்த வேண்டும்.அவ்வாறு நிலம் கையகபடுத்தும்போது நாம் (நில உரிமையாளர்கள் ) எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க வேண்டும்.

அவ்வாறு அமையும் சாலை எதிர்காலத்தில் புதிய மெயின் ரோடாக அமையும்.

திருச்செந்தூர் செல்லும் வாகனங்களும் தூத்துக்குடி செல்லும் வாகனங்களும் , இந்த புதிய சாலையில் செல்லும்படியாக , இந்த சாலை அமையப்பட வேண்டும்.

இதன் மூலம் நம் நகர் விரிவடையும்.புதிய சாலையின் அருகாமையில் உள்ள நிலங்கள் ஏற்றம் பெரும்.

தற்போதைய மெயின் ரோட்டையும் தொடர்ந்து இருவழி போக்குவரத்திற்கு உபயோகிக்கலாம் . பெரிய நெசவுதெரு வாசிகளுக்கும் இதன்மூலம் இடையூறு ஏற்படாது.

அரசு அதிகாரிகள் இதி பரிசீலிக்கலாமே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:நகரில் ஒருவழிப்பாதைக்கு ப...
posted by mohmedyounus (Trivandram) [18 December 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 14794

எங்கள் தெருவுக்கு பஸ் வருது! பஸ் வருது! என்று குழந்தைகளும்,பெண்களும் வீட்டை விட்டு வெளியே வந்து தெருவுக்குள் வந்த பஸ்ஸை பார்த்து தங்களை ஆசுவாசு படுத்திய காலங்கள்.

எங்கள் தெருவுக்குள் பஸ்ஸே வரக்கூடாது என்று கொடி பிடிக்கின்ற இன்றைய காலம்

பஸ் வந்து போகின்ற தெரு மக்கள் அனுபவிக்கின்ற கஷ்டங்களைத்தான் எல்லாரும் பட்டியல் போடுகின்றனர்.... ஆனால்...

பஸ்ஸை விட்டு இறங்கி என் வீட்டுக்கு போக ஆட்டோவுக்கு கட்டணம் ரூபாய் 30. திருநெல்வேலிக்கு பஸ் டிக்கெட் ரூபாய் 25. இந்த கட்டணம் இந்த தெருவாசிகளுக்கு இல்லை.வீட்டு வாசலில் பஸ் பயணம்....

சில சமயங்களில் ஆட்டோ கிடைப்பது மிக அரிது.

நள்ளிரவு பயணம் என்றால்... கையில் வெத்தலையும்,பாக்கும் தேவை. ஆனால் இவர்களுக்கு பயமில்லா பயணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:நகரில் ஒருவழிப்பாதைக்கு ப...
posted by abbas saibudeen (kayalpatnam) [18 December 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 14795

அஸ்ஸலாமு அழைக்கும்

சகோதரர் சதக் தம்பி கருத்துப்படி ரோடு அமையவும்
(அல்லது)
தாயிம்பள்ளி வளைவில் இருந்து முபனார் ஓடை கிராஸ் வழியாக நேரே மேலநெசவு தெரு மற்றும் பழைய post ஆபீஸ் (visalatchi amman koil)வழியாக புது bus stand ய் அடையும் வழியும் வுண்டக்க தகுந்ததே. அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் நிறைவேற்ற ஆவல் கொள்கிறோம்.

மேலும், நெசவு தெருவாசிகள், அளக்க வந்த அதிகாரிகளிடம் கேட்ட கேள்விகளுக்கு பொறுமைவுடன் பதில் தந்த அதிகாரிக்கு இதன்முலம் நன்றியே தெரிவிதுகொள்கிரர்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:நகரில் ஒருவழிப்பாதைக்கு ப...
posted by Habeb Rahman (Abu Dhabi) [18 December 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14797

சகோதரர் mohamed younus எந்த தெரு என்று சொன்னால் நல்லது. அந்த தெரு வழியாக பஸ் விடுவதற்கு முழு முயற்சியையும் செய்யலாம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. வழி பிறந்தால் வலி பறக்கும் தங்கமேத் தங்கம்...!!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (காயல்பட்டணம்) [18 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14808

சிலரது வறட்டுப் பிடிவாதத்தால் ரோட்டை விட்டுக் கொடுக்காமல் கோட்டை விடப் போவது உறுதி! சும்மாவே காயல்பட்டணம் கொஞ்சங் கொஞ்சமாக் கரைஞ்சு, கடையக்குடி, கொம்புத்துறைன்னு வெவ்வேறு விதத்துலெ பரிணமித்து வருகின்றது. இனி புறநகர் வழியா பஸ்ஸு போனால் நாமெ இரத்தினாபுரிக்கு ஆட்டோலெ போய் ஆறுமுகநேரி, ஆத்தூர், தூத்துக்குடின்னு ஏறிப்போக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவோம்! அல்லாஹ் பாதுகாப்பானாக! ஆமீன்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:நகரில் ஒருவழிப்பாதைக்கு ப...
posted by mohamed abdul kader (dubai) [18 December 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14819

நண்பர் சாளை S.I.ஜியாவுதீன் அவர்களே தாங்கள் எழுதியது போல் சென்னைக்கு ட்ரெயினில் சென்றுவரும் செலவில் நாம் ஆறுமுகநேரி சென்று வரலாம். இல்லை சென்று வரபோகிறோம்

இனி திருசெந்தூரில் இருந்து வரும் வாகனங்கள் ஓடக்கரையிலிருந்து பிரிந்து பூந்தோட்டம் - தைக்காபுரம் சென்று துளிர் பள்ளிக்கூடம் வழியாக செல்லும் காலம் வரும்போது பஸ் பிரயானதிர்காக பொருளாதரத்தை வீண் விரயம் செயும்போது k.t.m.தெரு மக்கள் இதுவரை செய்த தியாகத்தை ஒருவளிபாதை எதிர்பாளர்கள் நினைப்பார்களோ இல்லையோ அவர்களின் சந்ததிகள் கஷ்டப்பட்டுகொண்டு ஒருவளிபாதை எதிர்பாலர்கலை திட்டுவார்கள் என்பது மட்டும் உண்மை.

S.I.ஜியாவுதீன் இது விடிவு காலம் இல்லை கஷ்டகாலம் வரப்போகிறது.

S.H.MOHAMED ABDUL KADER
K.T.M.STREET


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:நகரில் ஒருவழிப்பாதைக்கு ப...
posted by shajahan m.m (chennai) [18 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14825

உடன் நிறைவுசெய்யவும் நகரில் ஒருவழிப்பாதைக்கு
படத்தில் காணவில்லை எங்கு சென்றார் மும்பை மைதீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. ரத்தினாபுரியில் புதிய பேருந்து நிலையம்????
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [18 December 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14828

ஏற்கனவே காயல்பட்டிணம் புகை வண்டி நிலையம் ஆறுமுகநேரியில் அமைந்துள்ளது, இனி காயல்பட்டிணம் பேருந்து நிலையம் ரத்தினபுரியில் அமையும்.

திருநெல்வேலி தூத்துக்குடி செல்பவர்கள் இரத்தினபுரியில் சென்று பேருந்து ஏறும் காலம் விரைவில் வரும். ஆக மொத்தத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நல்ல வாசி, பேசாம ஊர்ல ரெண்டு ஆட்டோ வங்கி ஓட்டலாம்னு தோணுது நல்ல வசூல்.

ஒருவழி பாதையை எதிர்ப்பவர்கள் சற்று சிந்தியுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:நகரில் ஒருவழிப்பாதைக்கு ப...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [18 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14830

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மேட்டூர் அணை அமைக்கப்பட்ட போது நூற்றுக்கணக்கான கிராமங்கள் அன்று நீரில் மூழ்கிப்போயின. அதில் ஓன்று பிரபல சினிமா பாடலாசிரியர் வைரமுத்துவின் சொந்த ஊராகும். தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த தங்களது ஊரிலிருந்து அம்மக்கள் நீங்கா துயரத்தோடு புலம் பெயர்ந்தனர். அணையில் நீரின் அளவு குறையும் போது வெளித்தெரியும் தங்களது கிராமத்தின் நினைவுகளை புதுப்பித்துக்கொள்ள இன்றளவும் கூட அப்பகுதிகளுக்கு மக்கள் சென்று வருவதாக வைரமுத்து தனது நூலொன்றில் குறிப்பிடுகிறார்.

அந்த மேட்டூர் அணை இருப்பதால்தான் இன்று தமிழ் மக்கள் தண்ணீர் குடிக்க முடிகிறது. ஒன்றின் இழப்பில்தான் இன்னொரு நன்மை கிடைக்கிறது. இங்கு நாம் எதையும் இழக்க சொல்லவில்லை. சற்றே வசதி பண்ணித்தரும்படிதான் வேண்டுகிறோம். சம்பந்தப்பட்ட பகுதியினர் மனது வைக்கவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:நகரில் ஒருவழிப்பாதைக்கு ப...
posted by Cnash (Makkah ) [18 December 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14832

பஸ் வந்து போகின்ற தெரு மக்கள் அனுபவிக்கின்ற கஷ்டங்களைத்தான் எல்லாரும் பட்டியல் போடுகின்றனர்.... ஆனால்...பஸ்ஸை விட்டு இறங்கி என் வீட்டுக்கு போக ஆட்டோவுக்கு கட்டணம் ரூபாய் 30. திருநெல்வேலிக்கு பஸ் டிக்கெட் ரூபாய் 25. இந்த கட்டணம் இந்த தெருவாசிகளுக்கு இல்லை.வீட்டு வாசலில் பஸ் பயணம்.... (copy and paste )..

நண்பர் யூனுஸ், நாங்கள்படுகின்ற பாடு... இது வரை 3 முறை விரிவாக்கம் விரிவாக்கம் என்ற பேரின் கோட்டை, பால்கனி, படிகட்டு, எல்லாம் எங்கள் செலவில் நங்கள் இடித்து, திரும்ப சரி செய்து கட்டியதற்கான செலவு, முன்வீட்டில் உள்ளவர்கள் வீடு மழை காலங்களின் பஸ்ஸினால் சகதி பெயிண்ட் அடிக்க பட்டு...நீங்கள் எல்லாம் விஷேசங்களையொட்டி பெயிண்ட் அடிக்கும் போது, நாங்க வருஷம் ஒரு முறை பெயிண்ட் அடிச்சே ஆகா வேண்டிய கட்டாயம்!!

வீட்டுக்குள்ளே தூசி, ...கல்யாண விஷேசங்களுக்கு நாங்க உங்களை போல் எல்லாம் வீட்டு முன் தெருவை அடைத்து பந்தல் போட முடியாது, தாயும் பள்ளி வாளாகத்தில் ஆண்களுக்கு ஒரு பந்தல் செலவு, வீட்டு பின்புறம் வெட்டை (இடம் இருந்தால்) இல் பெண்கள் வைபோகங்களுக்கு என்று தனி செலவு,.இப்படி ஆயிரம் செலவுகள் உங்களைவிட மேலே எங்களுக்கு இந்த போக்குவரத்து ரோட்டால் இருக்கும் பொது, என்றைக்கோ ஒரு நாள் ஆட்டோ புடிச்சிபோறது நாங்கள் இழந்து இருக்கும் அத்தனை உரிமைக்கும், படும் கஷ்டங்களுக்கும் இந்த ஆட்டோ சார்ஜ் 30 ரூபாய் பகரமாக தெரியுதா?

இத்தனையும் ஊர் நலனுக்காக நங்கள் பொருத்து கொண்டிற்கிறோம் ஒருவர் கூட எதிர்க்க வில்லை. ..எங்கள் முன்னோர்கள் இதை எதிர்த்து இருந்தால்.. நீங்கள் 100 ஆட்டோ சார்ஜ் கொடுத்து ஆறுமுகநேரி சென்று பஸ் புடிக்க வேண்டி இருக்கும்!!

நண்பரே... எங்கள் தெருவின் நிற்பது டவுன் பஸ்சும், தனியார் பஸ்சும் தான் .. திருநெல்வேலி, தூத்துக்குடி போகணும் என்றால் கூட நாங்களும் ஆட்டோ புடிச்சி தான் பஸ் ஸ்டாண்ட் போகணும் என்பதையும் கருத்தில் கொண்டு கமெண்ட் செய்யவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:நகரில் ஒருவழிப்பாதைக்கு ப...
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [18 December 2011]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 14833

மக்கள் இத்தாலியில் உள்ள வெனிசை நினைத்து பார்க்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:நகரில் ஒருவழிப்பாதைக்கு ப...
posted by HAMEED SIRAJUDEEN (Pondicherry) [19 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14856

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சகோதரர்களே! இங்கு மட்டுமல்ல வேறு ஒரு அறிக்கைக்கு கருத்துச் சொல்லும் போது கூட கே.டி.எம் தெரு சகோதரர்கள் அனைவருமே தங்கள் ரோட்டில் பஸ் போவதால் ஏற்பட்ட / ஏற்படும் கஷ்டங்களையும் நஷ்டங்களையும் பலவாறாக பட்டியல் இடுகிறார்கள். ஒரு வழி பாதையாக மாற்றி விட்டால் இந்த பட்டியல் குறைந்து விடுமா? அதே பிரச்சனை தொடர தானே செய்யும்? அது மட்டுமில்லாமல் இப்போது இரண்டு தெருவாசிகளும் கஷ்டங்களை பட்டியலிட ஆரம்பித்து விடுவார்கள். K.T.M. தெருவாசிகள் இவ்வளவு பட்டியல் இட்ட பிறகும் கூட பெரிய நெசவு தெருவாசிகள் கவலைபடாமல் இருப்பார்களா? சற்றே சிந்தித்துப் பாருங்கள்.

ஒரு வழி பாதை என்பதைவிட ஊருக்கு வெளியே ஒரு பாதை என்பது தான் அவர்களின் (K.T.M. தெருவாசிகளின்) காயத்திற்கு மருந்தாக இருக்கும்.

ஊருக்குள் சினிமா தியேட்டர் வரக்கூடாது, குளம் இருக்க கூடாது, ரெயில்வே ஸ்டேஷன் கூடாது என்று முடிவு செய்து நடைமுறைப் படுத்திய நம் முன்னோர்கள் அதுபோல் ஊருக்கு வெளியிலேயே பஸ் போக்குவரத்தையும் வைத்திருந்தால் நாம் எல்லோரும் இன்று பழகி இருப்போம். இப்போது இரண்டு தெருவாசிகளுக்கும் நிம்மதியாக இருந்திருப்பார்கள்.

ஆட்டோ சார்ஜ் பற்றி எல்லோருமே கவலைப்படுகிறோம். ஆனால் சென்னையில் கோயம்பேடுக்கு பஸ் நிலையத்தை மாற்றிய போது எல்லோரும் கவலைப்பட்டார்கள். ஆனால் இன்று?

சிநேகத்துடன்
சிராஜுதீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:நகரில் ஒருவழிப்பாதைக்கு ப...
posted by G.M.SHAIK DAWOOD (MALDIVES) [20 December 2011]
IP: 123.*.*.* Maldives | Comment Reference Number: 14900

அன்புடையீர் அஸ்ஸலாமுஅழைக்கும்,

காயல்பட்டினம் ஓடக்கரையிலிருந்து பூந்தோட்டம் - தைக்காபுரம் வழியாக துளிர் பள்ளி வளாகத்தில் இணையும் சாலையை புதிய போக்குவரத்திற்கு பரிசீலனை செய்யலாம்.

தற்போது இருக்கும் இந்த குறுகிய சாலையையே நாம் எதிர்நோக்காமல் , அதை புதிய அகலமான எதிர்கால தேவைக்கு உபயோகமான சாலையாக அமைக்கப்பட வேண்டும். இது ஒருவழிப்பாதையாக இல்லாமல் நால்வழிப்பாதையாக மற்றும் குறுகிய வளைவு எதுவுமில்லாதவாறு அமையவேண்டும். அவ்வாறு அமையும் சாலை எதிர்காலத்தில் புதிய மெயின் ரோடாக அமையும்.

திருச்செந்தூர் செல்லும் வாகனங்களும் தூத்துக்குடி செல்லும் வாகனங்களும் , இந்த புதிய சாலையில் செல்லும்படியாக , இந்த சாலை அமையப்பட வேண்டும். இதன் மூலம் நம் நகர் விரிவடையும்.

அனைத்து பஸ்களும் புதிய பேருந்து நிலையம் வந்துபோகிற விதத்தில் அமைய வேண்டும் . இதன்மூலம்-KTM தெரு மக்களுக்கும் ஒரு விடிவு காலம் பிறக்கும் .

இதை விட்டுவிட்டு ஆட்டோ செலவு பற்றி மட்டும் பேசிகொண்டிருந்தாள் சரியாகாது . ஏனென்றால் ஒவ்வொரு தெருவிற்கும் பஸ் ஸ்டாண்ட் வைக்கமுடியாது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:நகரில் ஒருவழிப்பாதைக்கு ப...
posted by V D SADAK THAMBY (Guangzhou (China)) [20 December 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 14905

Comment Reference Number: 14900

அனைத்து பஸ்களும் புதிய பேருந்து நிலையம் வந்துபோகிற விதத்தில் அமைய வேண்டிய தேவை ஏற்படாது.(இந்த புதிய பேருந்து நிலையம் இனி பழைய பேருந்து நிலையம் ஆகிவிடும்) .அல்லது இந்த இடத்தை நகராட்சி வேறுவழிகளில் பயன்படுத்தலாம்.

மாறாக துளிர் பள்ளி - ரத்தினாபுரி சந்திப்பில் புதிய பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டியதிருக்கும்.அப்போதுதான் நீண்டதூர பேருந்துகள் சிரமமில்லாமல் காயல்பட்டணம் (இந்த புதிய)பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு , எளிதாக தன் பயணத்தை தொடர முடியும்.

மேலும் இந்த ரத்தினாபுரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து KAYALPATNAM BYEPASS சாலையையும் எளிதாக இணைக்க - நால்வழி இணைப்பு சாலையும் போடவேண்டும்.இதன் மூலம் DCW முனையிலிருந்து வரும் பஸ்கள் ஆறுமுகநேரி -அடைக்கலாபுரம் பாதையை தவிர்த்து எளிதாக KAYALPATNAM புதிய மெயின் ரோடு வழியாக திருச்செந்தூர் பயணிக்க முடியும்.

நம் தாலுகாவில் பயணிக்கும் டவுன் பஸ் மற்றும் குறுகிய தூர பஸ்கள் தற்போதைய மெயின் ரோட்டின் (போஸ்ட் ஆபீஸ்) வழியாக செல்ல அனுமதிக்கலாம் . இதன் மூலம் கொம்புதுரை ,ஆத்தூர், ஆறுமுகநேரி, நாசரத் , திருச்செந்தூர்,உடன்குடி செல்லும் பயணிகள் சிரமமில்லாமல் பயணிக்கமுடியும்..இதற்காக இவர்கள் ரத்னாபுரி புதிய பஸ் நிலையம் செல்ல வேண்டியதிருக்காது.

இந்த திட்டத்தின் மூலம் KTM தெரு - பெரிய நெசவு து மக்களுக்கும் சிரமமிருக்காது.காயல்பட்டணம் விரிவடையும்.புதிய மெயின் ரோடு பகுதிகள் ஏற்றம் பெரும்.இந்த பகுதி நிலத்தின் உரிமையாளர்களும் இதற்க்கு உடன்படுவார்கள்.

இதுதான் நீண்டகால அடிப்படையிலான திட்டம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:நகரில் ஒருவழிப்பாதைக்கு ப...
posted by V D SADAK THAMBY (Guangzhou (China)) [21 December 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 14934

ஒருவழிப்பாதை பிரச்சனையில் நாம் ஒருவருக்கொருவர் முரண்பாடான கருத்து வெளியிடுவது சரியில்லை. ஒருமித்த கருத்துடன்தான் நாம் இதை செய்ய முனைய வேண்டும். பெரிய நெசவு தெரு வாசிகளின் சம்மதமும் வேண்டும் . நாம் அவர்களை தனிமை படுத்துவது நல்லதல்ல.

நான் எனது பெரிய நெசவு தெரு நண்பர் ஒருவருடன் பேசும்போது , கீழ்க்கண்டவாறு தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தினார்.

1 . முடுக்கு வைத்து கட்டவில்லை என நெசவு தெருவாசிகள் மேல் குற்றம் சாட்டும் நபர்களுக்கு , காயல்பட்டணத்தில் பொது முடுக்கு வைத்து வீடு கட்ட இப்பொழுது அப்ப்ரூவல் கிடைபதில்லை என்பது தெரியுமா?. ஆறுமுகநேரி காவல் சரகத்தில் இதுவரை 2000 குற்றசாட்டுகளுக்கு மேல் முடுக்கு சம்பந்தப்பட்டவைதான் . சாதாரண முடுக்கு பிரச்சனைக்கே விட்டு தராத நாம் , முடுக்கு வசதியே இல்லாத நெசவு தெரு, தெருவையே விட்டு தர வேண்டும் என்று சொல்கிறோம். . நாம் பேசுவது நியாயம்தானா? இது தவறான நெருக்குதல் இல்லையா?

2 . மூணு முடுக்குகுள்ளே ஒரு தெருவுடைய வீடுகளையும் வசதியையும் பெற்றுள்ளவர்கள் அவ்வசதிகளை பெறாத மக்களுக்கு சிரமம் கொடுக்காமல் இருப்பதே சிறந்தது. சாதாரண உப்பு புளி விசயத்துக்கு கூட அவர்கள் தெருவை குறுக்காக கடக்கக்கூடிய நிர்பந்தம் உள்ளவர்கள். அவர்கள் விளையாடுவதும் தெருவில் தான். கல்யாணமும் தெருவில் தான்.அந்த தெருவையே நாம் விட்டுக்கொடுக்க சொல்வது நியாயமா?

3 . லியாவுல் காதிரிய்யா சங்கம் போன்ற சிறந்த தொலைநோக்கு பார்வையில் அமைக்கப்பட்ட, திருமணம், விளையாட்டு, நூலகம், கலந்தாலோசனை என எல்லா நிகழ்ச்சி வசதியும் உள்ள அமைப்பை நிறுவிய KTM தெரு முன்னோர்கள் மீது அல்லாஹ்வின் நல்லருள் நிலவட்டுமாக. KTM தெரு வாசிகளின் தியாகத்தை நாம் மதிக்கிறோம். அவர்களை யாரும் குறைசொல்லவில்லை.

4 மேலும் கே டி எம் தெரு ஜமாஅத் பிள்ளைகள் அவர்கள் ஜமாதுடைய அலியார் தெருவை ஒரு முடுக்கு வழியே சென்று அடைந்து ஜமாஅத் பிள்ளைகளோடு விளையாடலாம். அது விசாலமான தெரு தான்.

5 ஆனால் பெரிய நெசவு தெரு, அவர்களுடைய ஜமாஅத் பிள்ளைகளான சின்ன நெசவு தெருவுடனும் பகிர்ந்து கொள்ளபடுகிறது. சின்ன நெசவு தெரு ஏற்கனவே ஊர் நலனுக்கு கே டி எம் தெரு போல் பங்களித்து கொண்டிருக்கிறது. மேலும் காயல்பட்டனத்து நெசவு தெரு அல்லாத மக்களாகிய நாம் உம்மா வீடு வாப்பிச்சா வீடு என பல பகுதிகளையும் கலந்து கொள்ள வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள். ஆனால் நெசவு தெரு மக்களின் எல்லா விசயங்களும் இரண்டு தெருக்குள் தான். எனவே நாம் அவர்களை தனிமைப்படுத்தி கருத்து வெளியிட வேண்டாம்.எனவே நாம் மாற்று பாதை குறித்து ஆராய்வோம்..

6 கே டி எம் தெரு கவுன்சிலரும் நம் துணை தலைவருமான மும்பை முஹியதீன் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது கூட அவருடன் நின்ற நெசவு தெரு சகோதரர்கள் பொதுநல நோக்கில் தான் நின்று செயல்பட்டார்கள் .அதை Kayalpatnam.com செய்தியில் கண்ட பொழுது மிகவும் மகிழ்ச்சியடந்தோம்..

எனவே நாம் இணைந்து இருப்போன். நாம் யாரையும் தனிமைப்படுத்த வேண்டாம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான்.

மாற்றுவழி குறித்து ஆராய்வோம்.நீண்ட கால திட்டமிடுவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:நகரில் ஒருவழிப்பாதைக்கு ப...
posted by abbas saibudeen (kayalpatnam) [22 December 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 14957

அஸ்ஸலாமு அழைக்கும்

ஸாலிஹ் காக்கா அவர்களே இந்த அளவீடுக்கு பிறகு ஆக்கிரமிட்புகளுக்காக அதிகாரிகள் ஆய்வு செய்து அறிவுறுத்திய செய்தி உங்கள் kayalpatnam.com எங்கே? ஏன் போடவில்லை?உங்கள் செய்தியே முறையாக பதியுங்கள் kayalpatnam .com .வலைத்தளத்தில் வெளியிட்ட்ருந்தால் என்ன தலைப்பில் வெளியிட்டுவுள்ளீர்கள் அறியத்தரவும்.sorry for inconvenience


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:நகரில் ஒருவழிப்பாதைக்கு ப...
posted by HAMEED SIRAJUDEEN (Pondicherry) [22 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14968

@ V D SADAK THAMBY!
சகோதரரே மிக்க நன்றி!

எங்களின் தெருவில் உள்ள பிரச்சனைகளை மிக தெளிவாக எடுத்து கூறியிருக்கிறீர்கள். நாங்களே கூறுவதை விட வெளி தெருவை சேர்ந்தவர் கூறும் போது அதில் சுயநலம் என்ற பேச்சு அடிப்பட்டுவிடுகிறது.

மேலும், ஊர் நல்லது - பொது நலன் - என்று வரும் போது பாதிக்கப்படுபவரைத் தவிர மற்றவர்கள் காத்துக் கொடுக்கப் போகிறதில்லை என்பது தான் வருத்தம்.

"KTM தெருவாசிகள் கஷ்டம் கஷ்டம் என்று கூறும் போது எங்களால் எப்படி தெரிந்தே கிணற்றினுள் விழ முடியும்"

நமது ஊரின் உள்ளே சினிமா, குளம், ரெயில்வே ஸ்டேஷன் போன்றவை இருக்கக் கூடாது என்று திட்டம் போட்ட நமது முன்னோர்கள் பஸ் போக்குவரத்து இப்படி பெருகிப் போகும் என எதிர்ப் பார்த்திருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

ஆனால் இப்போதைக்கு மட்டும் சரி செய்யும் பிரச்சனை அல்ல இது. இனி வரும் தலைமுறைகளுக்கும் சேர்த்து யோசிக்க வேண்டும்.

தனியாக ஒரு BYE-PASS மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வாக முடியும். NATIONAL HIGHWAY ரோடுகளை எல்லாம் பை-பாஸ் போட்டு புதியதாக ஊருடன் இணைக்க முடிந்த நமது அரசாங்கம் நமது ஊருக்கும் அதுபோல் ஒரு வழி ஏற்படுத்திதர நிர்பந்தப் படுத்த வேண்டும். ஊர் முழுவதும் சகோதரர்களாக (முஸ்லிம்கள்) வாழும் ஒரு ஊரில் இது போன்ற ஒரு கோரிக்கையை கூட நிறைவேற்ற முடியாதா?

நான் பாண்டிச்சேரியிலிருந்து காயல்பட்டணம் பஸ் டிக்கெட் போட்டால், "காயல்பட்டணம் போகாது. ஆறுமுகநேரி அல்லது திருசெந்தூரில் இறங்கிக் கொள்" என்கிறார் பஸ் நடத்துனர். ஊருக்குள்ளேயே வராத பஸ், KTM தெரு வழியாகப் போனால் என்ன கடற்கரை வழியாக போனால் தான் என்ன?. என் பிரச்சனை என்று இதை நான் பேசவில்லை. இது போன்று பல ஊர்களில் இருக்கலாம்.

இன்று வெளியூரிலிருந்து வரும் பயணிகள் அதிகமாக ரெயிலை பயன்படுத்துகிறார்கள். நமது ஊரில் ரெயில்வே ஸ்டேஷன் ஊருக்கு வெளியில் தான் உள்ளது. அதற்காக யாரும் கவலைப் படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் இன்று பஸ் போக்குவரத்தை விட ரெயில் போக்குவரத்து தான் மலிவாக உள்ளது. அது போல் இரத்தினபுரியிலோ, ஓடக்கரையிலோ பஸ் ஸ்டாண்ட் இருந்தாலும் வரும் தலைமுறை கவலைப் படப்போவதில்லை.

ஊருக்கு வெளியே பை-பாஸ் போடுவதால் நமது ஊருக்குதான் நல்லது. புதிதாக பஸ் போகும் பாதையும் கடைவீதியாகும். வியாபாரம் செழிக்கும். ஊரில் இருப்போர் இன்னும் அதிகமாக சம்பாதிக்கலாம்.

அதைவிடுத்து குடியிருப்பு பகுதியிலேயே மீண்டும் பஸ் போக்குவரத்து விடுவதால் எந்த லாபமும் இல்லை. கஷ்டங்கள் தான் அதிகரிக்கும்.

சிநேகத்துடன்
சிராஜுதீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இலக்கிய மன்ற விழா  (19/12/2011) [Views - 2579; Comments - 0]
இரவில் சிறு சாரல்!  (19/12/2011) [Views - 2559; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved