Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:59:42 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7730
#KOTW7730
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, டிசம்பர் 16, 2011
கடலில் தத்தளித்த கற்புடையார்பள்ளி வட்டம் மீனவர்கள் மீட்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3558 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மணப்பாடு அருகில் கடலில் தத்தளித்த காயல்பட்டினம் சிங்கித்துறை மீனவர்கள் ஐவர் மீட்கப்பட்டனர்.

காயல்பட்டினம் கற்புடையார்பள்ளி வட்டம் பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் மகன் தாஹிர் (35). இவரும், சாகுல், ஃபரீத், யாசின் மற்றும் சீலன் ஆகிய ஐவரும் பைபர் படகு ஒன்றில் வெள்ளிக்கிழமை (இன்று) காலை மீன் பிடிக்க சென்றிருக்கின்றனர்.

மணப்பாடு அருகில் வெள்ளிக்கிழமை மதியம் 02.00 மணியளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது பைபர் படகு கவிழ்ந்து விட்டது. கடலில் விழுந்து தத்தளித்த ஐந்து மீனவரும் கவிழ்ந்த படகின் மீது ஏறி அமர்ந்து, கற்புடையார்பள்ளி வட்டத்திலுள்ள மீனவர்களுக்கு கைபேசி மூலம் தகவல் அனுப்பினர்.

இத்தகவலையறிந்து, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெ.அந்தோணி, பத்ருல் ஹக் ஆகியோர் கற்புடையார் பள்ளி வட்டம் கடற்கரைக்கு விரைந்து சென்றனர். நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தன் புறத்திலிருந்தும் தகவல் தெரிவித்து துரித நடவடிக்கை மேற்கொள்ளக் கோரினார்.

கற்புடையார்பள்ளி வட்டம் பகுதியைச் சார்ந்த மீனவர்கள் மணப்பாடு அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தங்கள் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கு தகவல் தந்தனர். அதனைத் தொடர்ந்து அந்த மீனவர்கள், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஐந்து மீனவர்களையும் மீட்டதோடு, அவர்களின் படகையும் இன்றிரவு கரைக்கு கொண்டு வந்தனர். படகு சேதமடைந்திருந்தது. மீனவர்கள் கரைக்கு திரும்பியதால் உறவினர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு காப்பற்றினான்.
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [16 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14680

விபத்துக்கள் ஏற்ப்படுவது அல்லாஹுவின் நாட்டம். அந்த அல்லாஹுவே இவர்களை பாதுகாத்தும் விட்டான். அல்ஹம்துலில்லாஹ்.

இந்த விபத்தில் சிக்கியவர்களில் நான்கு இஸ்லாமிய சகோதரர்கள் வெள்ளிக்கிழமை இன்று ஜும்மாவுக்கு போகணும் என்ற எண்ணம் கூட இல்லாமல் தொழிலுக்கு சென்றதை நினைத்து மனம் வேதனை படுகிறது.

ஊர் ஊராக சென்று அழைப்புப்பணி விடுக்கும் அன்பு சகோதரர்களே, நீங்கள் இவர்களை கவனித்து கொள்ளுங்கள். பக்கத்தில் உள்ளவர்களை மறந்து விடாதீர்கள். இவர்களுக்கு நாம் தான் நல்லபடி இஸ்லாத்தை எடுத்து வைக்கணும்.

ஹைதுரூஸ் ஆதில், கோழிக்கோடு-கேரளா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:கடலில் தத்தளித்த கற்புடைய...
posted by s.e.m. abdul cader (bahrain) [16 December 2011]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 14685

ALHAMTHULILAH, IF WE CALL ALMIGHTY ALLAH, HIS HELP WILL REACH US WHEREVER AND WHENEVER.THANK TO ALMIGHTY ALLAH.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:கடலில் தத்தளித்த கற்புடைய...
posted by Mauroof (Dubai) [16 December 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14687

சகோ. ஹைதுரூஸ் ஆதில் மிகச்சரியாகவே சொன்னார். கடலில் தத்தளித்த சகோதரர்களை அல்லாஹ் காப்பாற்றி இருக்கிறான். வாழ்க்கையை இஸ்லாத்தின் வழியில் அமைத்துக்கொள்வதும் பிறரை அதன் பக்கம் அழைப்பதும் ஒவ்வொருவர் மீதும் கடமை என்பதை உணர வேண்டும்.

யார் எந்த ஒன்றையும் அடைய எவ்வளவு முயற்சி சைகின்றாரோ அதற்கு தகுந்த பலன் கிடைக்கும். மார்க்கத்தை எடுத்து சொல்ல வருகிறார்கள் என்று அறிந்தாலே பல மயில்களுக்கு அப்பால் ஓடுபவர்களும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:கடலில் தத்தளித்த கற்புடைய...
posted by abbas saibudeen (kayalpatnam) [17 December 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 14712

அவனுக்கே எல்லா புகழும் புகழ்ச்சியும் ..........அவன் உடைய பாதுகாவல் நம் அனைவர்க்கும் வுண்டக்கட்டுமாக.ஆமீன்.......அல்லாஹ் நாட்டபடியே அவன் உலகம் இயங்கும்.அல்லாஹ் வே பாதுகாத்தான்... .........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:கடலில் தத்தளித்த கற்புடைய...
posted by Cnash (Makkah ) [17 December 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14750

அல்ஹம்துலில்லாஹ்!! அல்லாஹ் இதன் மூலம் உங்களுக்கு மறுவாழ்வை தந்து ஒரு படிப்பினையும் தந்திருக்கிறான் .

அல்லாஹ்வின் கட்டளையை மீறி சனிக்கிழமை மீன்பிடிக்க சென்று அல்லாஹ்வின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாகி குரங்காக உருமற்றம் செய்யபட்ட ஒரு சமூகத்தை அவர்களுக்கு எடுத்து கூறுங்கள்!! அல்லாஹ் அவர்களுக்கு நேர் வழி காட்டுவான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:கடலில் தத்தளித்த கற்புடைய...
posted by MACKIE NOOHUTHAMBI (KAYALPATNAM) [17 December 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 14761

சனிக்கிளமையிலே மீன் பிடிக்கபோகாதீர்கள் என்ற அல்லாஹ்வின் கட்டளையை மீறியவர்கள் அல்லாஹ்வினால் தண்டிக்கப்பட்டார்கள். அன்று அளவுக்கதிகமாக மீன் கிடைக்கும் நாள் என்பதால் அவர்கள் அதிக ஆசைப்பட்டு சென்று நஷ்டம் அடைந்தார்கள்.

வெள்ளிக்கிழமை தொழுகை நேரம் வந்து விட்டால் உங்கள் வியாபாரத்தை விட்டுவிடுங்கள் என்ற தெளிவான இறை வசனம் இருந்தும் இன்றும் பெரும் பணக்காரர்களும் தொழில் அதிபர்களும் அதை மதிப்பதில்லை, பாவம் ஏழை மீனவர்களை சொல்லி என்ன பயன். அவர்களுக்கு ஹராம் ஹலால்களை சொல்லிக்கொடுக்க என்ன முயற்சியை நாம் செய்தோம்.

என்றாலும் இம்மையில் இறைனம்பிக்கயாளருக்கும் இறை மறுப்பாளருக்கும் ஒரே மாதிரியாக கிருபை செய்யும் அல்லாஹ் இவர்களை காப்பாற்றி கரை சேர்த்திருக்கிறான்.

இனிமேலாவது அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்யாமல் இருக்க அவர்களுக்கு நாம் கற்றுக்கொடுப்போம். இல்லாவிட்டால் நமக்கும் அந்த பாவத்தில் பங்கு வந்துவிடும் அல்லாஹ் எல்லோரையும் காப்பாற்றுவானாக.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:கடலில் தத்தளித்த கற்புடைய...
posted by sulaiman (abudhabi) [17 December 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14762

அஸ்ஸலாமு அழைக்கும் ,அல்லாஹ்வின் மிகப்பெரிய கிருபையால் தமிழ் பேசக்கூடிய மக்கள் இஸ்லாத்தை தெரிந்துகொள்வது இப்பொழுது மிகவும் எளிமையக்கபட்டுள்ளது.

வெள்ளிகிழமை ஜூம்மாக்கான அழைப்பு விடுக்கப்பட்டது முதல் தொழுகை முடியும்வரை முஸ்லீம்கள் தொழில் செய்வது அல்லாஹ்வால் தடுக்கப்பட்ட காரியம். இந்த இஸ்லாமிய அறிவைகூட தெரிந்துகொள்ள முடியாமல் கடலுக்கு தொழிலுக்கு போயிருகிரார்கள் இந்த முஸ்லிம்கள்.

இனியாவது இந்த சகோதரர்கள் இஸ்லாத்தை தெரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும். அல்லாஹ் இந்த சகோதர்களுக்கு நேர்வழியை கொடுக்க போதுமானவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:கடலில் தத்தளித்த கற்புடைய...
posted by velli muhaideen (chennai) [19 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14867

வெள்ளி கிழமை மீன் பிடிக்க சென்றதுக்கு அல்லாஹ் வழங்கிய தண்டனை என்றே இதை நான் கருதுகிறேன் இனியும் இந்த மீனவர்கள் இது போன்ற தவறு செய்யாமல் திருந்தி கொள்ள வேண்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved