Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:53:14 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7827
#KOTW7827
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஐனவரி 8, 2012
காயல்பட்டினம் நல அறக்கட்டளை ஏற்பாட்டில் நடைபெற்ற மன நல கருத்தரங்கங்களின் நிகழ்ச்சித் தொகுப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3265 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நல அறக்கட்டளை (KWT) ஏற்பாட்டில் கடந்த டிசம்பர் மாதம் 20, 21 தேதிகளில் காயல்பட்டினம் துளிர் அரங்கம், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி ஆகிய இடங்களில் மனநல கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை பின்வருமாறு:-

கடந்த மே.29 அன்று நமதூர் தஃவா சென்டரில் பண்பாட்டு சீரழிவு தொடர்பான கருத்தரங்கு ஒன்று நடைபெற்றதை நாம் அறிவோம் அதில் நமதூர் மக்களிடையே வளர்ந்து வரும் பண்பாடு வீழ்ச்சிக்கான காரணங்கள், விளைவுகள், தீர்வுகள் அலசி ஆராயப்பட்டன.

குறிப்பாக மண விலக்கு, தோல்வியில் வந்து முடியும் மண வாழ்வு, நம் குடும்பங்களில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகள், நமதூர் இளைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் ஒழுக்க ரீதியான சவால்கள் போன்ற எண்ணற்ற பிரச்சனைகள் நமதூரை பிடித்தாட்டும் தலையாய பிரச்சனைகளாக கண்டெடுக்கப்பட்டது.

இந்த பிரச்னைக்கான சிறந்த பல தீர்வுகள் விவாதிக்கப்பட்டன.அவற்றில் முக்கியமானதாக குடும்ப உளவள மையம் ஒன்றை நமதூரில் ஏற்படுத்துவதை பற்றி அனைவரிடமும் ஒற்றைக் கருத்து காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தொடர் ஆலோசனைக்கூட்டம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக காயல்பட்டினம் நல அறக்கட்டளை ஏற்பாட்டில் நடைபெற்ற மனவள விழிப்புணர்வு உரைகள், உளவள ஆலோசனைகள் சென்னை குடும்ப நல மையத்தின் ஆலோசகர் மற்றும் சமூக சேவகியுமான ஏ.ஸ் குர்ஷித் பேகம் தலைமையில் கடந்த டிசம்பர் 20,21 (செவ்வாய்,புதன்) ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

"உள்ளத்தை வெல்வோம்"

முதலாவதாக அன்னை ஆய்ஷா சித்தீக்கா மகளிர் கல்லூரியில் மாணவிகளின் மத்தியில தன்னம்பிக்கை, வாழ்வில் இலட்சியம் குறித்து உள்ளத்தை வெல்வோம்! என்ற தலைப்பின் கீழ் உரையாற்றினார்கள்.



அன்றைய தினத்தை முழுமையாக வாழும்போதுதான் நாம் வாழ் நாளை முழுமையாக பெற முடியும் என்பதை எளிய எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கினார்.படிப்பு சார்ந்த சிக்கல்கள் குறித்த மாணவிகளின் வினாக்களுக்கு விளக்கமளித்தார்.

ஆண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது. 250 க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்துக்கொண்டனர்.



"நிம்மதி உங்கள் சாய்ஸ்"

அன்று (20-12-11) மாலை துளிர் கேளரங்கில் குடும்ப பெண்மணிகளின் மத்தியில் மண வாழ்வு, மண முறிவு தம்பதியரிடையே உள்ள மண வேறுபாடு குறித்து நிம்மதி உங்கள் சாய்ஸ்! என்ற தலைப்பின் கீழ் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவி முன்னிலை வகிக்க ஹாஜி எஸ்.ஒ.அபுல் ஹசன் கலாமி மற்றும் டி.ஏ.எஸ் அபூபக்கர் ஆகியோர் தலைமை வகித்தனர்.

அதனைத்தொடர்ந்து முன்னாள் நகர்மன்றத்தலைவி வஹீதா அவர்கள் பெண்களுக்கான சுய வேலைவாய்ப்புகள் குறித்து சிற்றுரையாற்றினார்.

அதை தொடர்ந்து இந்த உரையாடல்கள் தொடர்பான வினாவும்,விளக்கமும் நடைபெற்றது. இதை நகர்மன்றத் தலைவி ஐ.ஆபிதா அவர்கள் தொடங்கி வைத்தார்.



மண வாழ்வு பிரச்னை குறித்து ஏராளமான கேள்விகள் பெண்கள் தரப்பில் இருந்து வந்தன.நேரமின்மையால் அவற்றிற்கு இயன்ற அளவு விளக்கங்கள் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியை காயல்பட்டினம் நல அறக்கட்டளையின் இணை செயலாளர்களில் ஒருவரான சகோதரர் எம்.என் அஹ்மது சாஹிப் நெறிப்படுத்தினார். நன்றி உரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது. திரளான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.



"சாதிப்போம் வாருங்கள்"

21-12-11 புதன் கிழமை காலையில் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி அரங்கில் கல்லூரி முதல்வர் திருமதி மெர்ஸி ஹென்றி M.A,Ph.D முன்னிலை வகிக்க மாணவிகளுக்கான ஆளுமை மேம்பாடு குறித்த உரை வீச்சு "சாதிப்போம் வாருங்கள்" என்ற தலைப்பின் கீழ் அமைந்தது.



மன நல ஆலோசகரை குறித்த அறிமுக உரையை காயல்பட்டினம் நல அறக்கட்டளையின் இணை செயலாலல்களில் ஒருவரான எம்.எம்.முஜாஹித் அலீ வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் 800க்கும் மேற்பட்ட மாணவியர் உற்சாகத்துடன் கலந்துக்கொண்டு, தமது பிரச்னைகளை மனந்திறந்து உரையாடினர்.

இச்செய்தியை வாசிக்கும் வாசகர்களுக்கு காயல்பட்டினம் நல அறக்கட்டளையின் சிறிய வேண்டுகோள்:

காயல்பட்டினம் நல அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்சியை நம்மவரின் முகம் பார்க்கும் கண்ணாடி என வர்ணித்தால் அது மிகை இல்லை.

இந்த உளவள நிகழ்ச்சியின் மூலம் நமதூரின் பிரச்னைகளை நேருக்கு நேராக கண்டு உணர முடிந்தது. நாம் புறத்தில் காணும் காயல் பதியில் அழகிய வேலைப்பாடுகளுடைய உயரமான வீடுகளும், நேர்த்தியாக உடை அணிந்த மக்களையும் கண்னுறுகிறோம்.

ஆனால் காயல்பட்டினத்தின் அகம் நைந்து கொண்டிருக்கிறது என்பதை மனம் திறந்து சொல்ல வேண்டி உள்ளது.

ஏற்றத்தாழ்வு பெரும்பான்மையான இல்லங்களிலும்,உள்ளங்களிலும் குடும்ப சிக்கல்கள் உளவியல் சிக்கல் புகை மூட்டம் போட்டு மண்டி உள்ளது.

இதனை இப்படியே தொடர அனுமதித்தால் நாளடைவில் நமதூரில் வசிக்கும் அணைத்து வயது தரப்பினரும் பல வித உள நெருக்கடிகளுக்கு இரையாகி வாழ்வை பகுதியாகவும்,முழுமையாகவும் இழக்கும் ஆபத்து உள்ளது.

நாங்கள் இக்கருத்தரங்குகள், உரை வீச்சுகளை ஏற்பாடு செய்ததின் நோக்கமே நம் ஊரின் குடும்ப உள மேம்பாட்டு மையம் (FAMILY COUSELING CENTRE ) ஒன்றை துவங்குவதற்காகத்தான் என்பதை வாசகர்களின் மேலான கவனத்திற்கு அறியப்படுத்துகிறோம்.

இந்த விழிப்புணர்வு கூட்டங்களை எங்களிடம் உள்ள மிக குறைந்த மனித வளம், பொருள் வளத்தை வைத்து பல சிரமங்களுக்கு நடுவே தான் நடத்தி உள்ளோம்.இனிமேலும் இந்த முயற்சி தொடங்க வேண்டுமெனில் பல கரங்கள் இணைய வேண்டும்.

தனி மரம் தோப்பாகாது.தேரை நகர்த்தி உள்ளோம் இனி அதை அழகுற வலம் வர செய்வது உங்களின்,எங்களின்,நமது அனைவரின் பொறுப்பாகும்.

எனவே இந்த முயற்சிகள் கட்டாயம் தொடர்ந்து நடைப்பெற்று மனநல நிறுவனங்கள் நமதூரில் உருவாக வேண்டும் என விரும்பும் நன்நெஞ்சங்கள் எங்களை அணுகுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

எங்களை அணுக வேண்டிய மின்னஞ்சல் முகவரி கீழ்வருமாறு:-

kayalpattinamwelfaretrust@gmail.com


இவ்வாறு, காயல்பட்டினம் நல அறக்கட்டளையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
ஃபிர்தவ்ஸ்,
செய்தித் தொடர்பாளர்,
காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Useful & worth a cause
posted by Ahamed mustafa (Dubai) [08 January 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15742

We can say that such workshops are needed in a society like ours where we have peculiar stigma or problems which are quite unique. But to how much the society listens is a million dollar question. Women in particular have so many issues arising out of their own families. Mental stress account for much of the problems & such counselling tactics are needed to our folks.

One other important thing which needs to be appreciated here is the family values & aquaintances which most of us in our town do not value for so many unknown reasons. This is quite common in our households and this is mostly uncommon elsewhere in this world. By writing this, I myself have encountered this path & been a culprit myself trying to come out of this situation & have succeeded to some extent, almost not 100%, yet.

If I am right we can see even among the siblings,parents to children & vice versa, and between lovable ones, there are egoistic clashes leading to valuable years of separation. This is a disaster & in some cases the individuals have to meet only on death beds or after death to get a glimpse of their so called loved ones. This is very much against our religion too & people are unwilling to shed their egos and to come forward to initiate a relationship that was pending for decades. It is a shame that we fail to smile to our brothers and sisters, for no reasons..

If problems like this & methods and the importance to get along with their close relatives was addressed in these workshops, it is really worth more than a cause. I am sure such workshops will focus attention in getting rid of this particular social evil which is prevailing in most of our Households. Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:காயல்பட்டினம் நல அறக்கட்ட...
posted by mackie noohuthambi (kayalpatnam) [09 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 15745

நல்லதொரு முயற்சி. நிம்மதி உங்கள் சொய்ஸ் நிகழ்ச்சியில் நானும் கலந்து நடப்பவைகளை அறிந்து கொண்டேன். நிம்மதிக்கான வழிமுறைகளை சொல்லிய அம்மையார் அவர்களிடம் நிம்மதிக்கான அணுகுமுறைகள் நிறைய காணப்பட்டன .

ஆனால் அவற்றை உள்வாங்கிக்கொள்ளக்கூடிய சூழலில் தேர்ந்தேடுக்கப்பட்ட இடம் அமையவில்லை எனபது என் தாழ்மையான கருத்து .

முதலாவது, இடம் துளிர் கேளரங்கில் நடந்ததால் அதிகமான பெண்கள் போவதற்கு வாகன வசதிகள் இல்லை. ஏற்பாடு செய்யப்பட காலம் குளிர் காலம், யாரும் அவ்வளவு தூரம் குளிரில் வர மாட்டார்கள். எளிதில் மக்கள் கூடும் இடமான ஊருக்கு மத்தியில் உள்ள அரங்குகளில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஏற்பாடு செய்தவர்களை அணுகி கேட்டபோது ஜலாலியாவில் இடம் கேட்டதாகவும் அவர்கள் மறுத்துவிட்டதாகவும் சொன்னார்கள். அகீதா பிரச்சினைகள் ஒரு பக்கம் இருக்கட்டும், அது அவரவர்கள் நிலைப்பாடு. ஆனால் இந்த மாதிரி பொது விஷயங்களுக்கு அவர்கள் ஏன் மறுப்பு தெரிவித்தார்கள் என்று தெரியவில்லை. அது ஒன்றுதான் தற்போது ஊரில் பெண்களும் ஆண்களும் தனித்தனியாக அமர்ந்து விஷயங்களை விளங்கி கொள்ள நல்லதொரு இடமாக இருக்கிறது.

சாதனையாளர்களை சந்தியுங்கள் என்ற இக்ராவில் அற்புதமான ஆக்கப்பூர்வமான நிகழ்சிகள் அங்கு நaடைபெற்றதை நான் பார்த்திருக்கிறேன். விற்பனையாளர்கள் தங்கள் ஷோரூம்களாக அதை வாடகைக்கு எடுத்து விற்பனையை பெருக்குவதை பார்த்திருக்கிறேன். அப்படியிருக்கும்போது இந்த நிம்மதி பற்றிய கருத்தரங்கம் நடத்த அவர்கள் அனுமதிக்காதது வருத்தம் தருகிறது. ஒரு வேளை, இதனை ஏற்பாடு செய்தவர்கள் முறையாக ஜலாலியா நிர்வாகத்தை அணுகவில்லையா எனபது தெரியவில்லை.

பொதுவாழ்வில் உள்ள பெரியவர்கள் இதனை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் இத்தகைய நல்ல விஷயங்களுக்கு இளைஞர்களுக்கு கைகொடுத்து ஊர் மக்களுக்கு நன்மை செய்யும் பணியில் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் நல்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

மக்கி நூஹுதம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் கனமழை!  (10/1/2012) [Views - 2768; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved