Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:58:34 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7824
#KOTW7824
Increase Font Size Decrease Font Size
சனி, ஐனவரி 7, 2012
காயல்பட்டினத்திற்கு குடிநீர் வினியோகிக்கும் ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்தில் நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் ஆய்வு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4643 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (22) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தின் குடிநீராதாரம் குறித்த விபரங்களை அறிந்திடும் பொருட்டு, இரண்டாவது பைப்லைன் திட்டம் மூலம் நீர் வினியோகிக்கப்படுவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பொன்னன்குறிச்சி குடிநீர் வினியோகப் பகுதி மற்றும் ஆத்தூரிலிருந்து காயல்பட்டினத்திற்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வரும் காயல்பட்டினம் அபிவிருத்தி குடிநீர்த் திட்ட தெளிவு நீரேற்று நிலையம் ஆகிய பகுதிகளை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, கடந்த 10.11.2011 அன்று பார்வையிட்டு, துறைசார் அதிகாரிகளிடம் பல விபரங்களைக் கேட்டறிந்தார்.

அதன் தொடர்ச்சியாக, தான் பெற்ற விபரங்களை நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரையும் நேரில் அறியச் செய்யும் நோக்குடன், முன்னதாக அனைத்து உறுப்பினர்களுக்கும அழைப்பு விடுத்ததன் அடிப்படையில், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் (ஃபிட்டர்) நிஸார் ஆகியோரை, 05.01.2012 அன்று காலை 11.30 மணியளவில், காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்திலிருந்து, ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு, தாமிரபரணி ஆற்றிலிருந்து ஸ்ரீவைகுண்டம் வழியாக தண்ணீர் ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்திற்கு குடிநீர் வந்து சேருவதை அவர்கள் பார்வையிட்டனர்.



பின்னர், அங்கிருந்து மோட்டார் மூலம் சுத்திகரிப்பு படுக்கைக்கு தண்ணீர் அனுப்பப்படும் முறைகளைப் பார்வையிட்டனர்.







பின்னர், சுத்திகரிக்கப்பட்ட நீரில் கிருமி நாசினி - ப்ளீச்சிங் மருந்து கலக்கப்படுவதைப் பார்வையிட்டனர்.



பின்னர், அங்கிருந்து காயல்பட்டினத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு மோட்டார் மூலம் தண்ணீர் அனுப்பப்படும் முறை, தண்ணீர் வினியோகத்தின் ஒரு வினாடிக்கான அளவு, ஒரு நாள் முழுக்க அனுப்பப்பட்ட அளவுகளைக் காண்பிக்கும் மீட்டர் கருவி ஆகியவற்றையும், வினியோகக் குழாய்களையும் நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.







பின்னர், அலுவலகத்தில் ஊழியர்கள் தேவைக்காக வைக்கப்பட்டிருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் சுவைத்துப் பார்த்தனர்.



பின்னர், தாங்கள் சுவைத்த இந்த தண்ணீருக்கும், காயல்பட்டினத்தில் வினியோகிக்கப்படும் தண்ணீருக்கும் நிறைய வேறுபாடுகளை உணர முடிவதாகத் தெரிவித்த அவர்கள், நகரிலுள்ள மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் குறிப்பிட்ட காலத்தில் முறைப்படி சுத்தம் செய்யப்பட்டால், இதே சுவையை ஊரிலும் பெறலாம் என்று கருதுவதாகத் தெரிவித்தனர். பின்னர், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கேட்ட விபரங்களுக்கு, அங்கு தலைமைப் பணியிலிருக்கும் உதவி பொறியாளர் பாலசுப்ரமணியம் பின்வருமாறு விளக்கமளித்தார்.:-



*** காயல்பட்டினத்திற்கு தினமும் 20 லட்சம் லிட்டரிலிருந்து 23 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது... இதற்காக, தினமும் 17 மணி நேரம் மின் மோட்டர் இயக்கப்படுகிறது...

*** பகலில் ஒரு நிமிடத்திற்கு 2200 லிட்டர் என்ற அளவில் (வேகத்தில்) தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது... இரவில் பை-பாஸில் தண்ணீர் திறக்கப்படும்போது நிமிடத்திற்கு 2500 லிட்டர் வீதம் வேகமாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது...

*** வினியோகிக்கப்படும் குடிநீருக்கு, ஆயிரம் லிட்டருக்கு (ஒரு கிலோ லிட்டருக்கு) ரூ.4.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது...

*** இந்த தண்ணீர் வினியோகத்திற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு, காயல்பட்டினம் நகராட்சி சுமார் 55 லட்சம் ரூபாய் நிலுவைத்தொகை செலுத்த வேண்டியுள்ளது...


போன்ற விபரங்களை அவர் தெரிவித்தார்.

காயல்பட்டினத்திற்கு வினியோகிக்கப்படும் நீரின் அளவை அதிகரிக்குமாறு நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கோரியபோது, சுத்திகரிப்பு படுக்கைகளின் (ஃபில்டர் பெட்) எண்ணிக்கையை அதிகரிக்காமல், வழங்கப்படும் குடிநீரின் அளவை அதிகரிப்பது சாத்தியமற்றது என்றார் அவர்.

தனது பணிக்காலத்தில், இதுவரை எந்த ஊரிலிருந்தும் இப்படி தலைவர் உறுப்பினர்களுடன் ஒட்டுமொத்தமாக வந்து பார்வையிட்டு விசாரித்ததேயில்லை என்று அப்போது அவர் வியந்து பாராட்டினார்.

நகராட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படும் முறைகள் குறித்து கேட்கப்பட்ட விபரங்களுக்கு, காயல்பட்டினம் நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் விளக்கமளித்தார்.



தினமும் 20 முதல் 23 லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்படுவதாக, ஆத்தூர் குடிநீரேற்று நிலைய உதவிப்பொறியாளர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளபோதிலும், அதேயளவு தண்ணீர் காயல்பட்டினத்தில் பெறப்படுவதை அளக்கும் கருவியை நிறுவ, காயல்பட்டினம் புறவழிச்சாலையிலுள்ள ஓரிடத்தில் 8க்கு 8 என்ற அடிக்கணக்கில் அளவீட்டறை (மீட்டர் ரூம்) நகராட்சியால் கட்டப்பட்டதாகவும், அவ்விடம் தனியாருக்குச் சொந்தமானது என அறியப்பட்டதால் அங்கு மீட்டர் பொருத்த இயலாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வரும் வழியில், காயல்பட்டினம் எல்.எஃப்.வீதியிலுள்ள அவ்விடத்தின் உரிமையாளரை, அவரது இல்லத்தில் நகர்மன்றக் குழுவினர் நேரில் சந்தித்து, நகர்நலன் கருதி இடத்தை விட்டுத்தருமாறும், இதற்காக தொடரப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெற ஆவன செய்யுமாறும் கோரிக்கை விடுத்தனர்.



அவர்களின் வேண்டுகோளைக் கேட்டறிந்த, அவ்விடத்தின் உரிமையாளர் குடும்பத்துப் பெரியவரான ஹாஜி ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா, ஏற்கனவே தனது முன்னோர்கள் இந்த ஊருக்காக பல ஏக்கர் நிலங்களை தானமாக வழங்கியுள்ளதாகவும், அவர்களின் வழியைப் பின்பற்ற தானும், தன் குடும்பத்தினரும் என்றும் ஆவலோடு இருப்பதாகவும், இப்பிரச்சினை குறித்து தன் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து விரைவில் தகவல் தருவதாகவும் தெரிவித்தார்.



காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.லுக்மான், முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, சாரா உம்மாள், ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன், ஜெ.அந்தோணி, எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், ஏ.ஹைரிய்யா, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், ஏ.பாக்கியஷீலா, கே.ஜமால், எஸ்.எஸ்.சாமு ஷிஹாபுத்தீன், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி ஆகிய உறுப்பினர்கள் இக்குழுவில் அடங்குவர்.

தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ,
காயல்பட்டினம்.


கூடுதல் படம் இணைக்கப்பட்டது. (07.01.2012 - 23:15hrs)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:காயல்பட்டினத்திற்கு குடிந...
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [07 January 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 15699

*** வினியோகிக்கப்படும் குடிநீருக்கு, லிட்டருக்கு ரூ.4.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது... (Copy & Paste).

1000 லிட்டருக்கு என்பதே சரியான கணக்கு.

Administrator: News corrected. Thanks


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:காயல்பட்டினத்திற்கு குடிந...
posted by Sayyid Mohammed (kayalpatnam) [07 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 15708

"இன்று பதவியில் இருக்கும் நகர்மன்றத் தலைவரை ஒரு சிலர் இயக்கிக் கொண்டிருக்கின்றனர்... அவரது செயல்பாடுகள் அனைத்தும் மூடகமாகவே உள்ளது... வெளிப்படையான நிர்வாகத்தைத் தருவேன் என்று சொன்னவர்கள் ஏன் அதைச் செய்யவில்லை? ஊரின் ஒற்றுமை இன்று சீர்குலைக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணமானவர்கள் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும்" சொன்னவர் சகோதரர் மகபூப்.

ஆபிதா, ஏன் தேவையில்லாமல் இப்படி மூடகமாக யாரோ சிலர் உங்களை இயக்கி ஆத்தூர் , மஞ்சள் நீர் காயல் என்று ஊர் ஊராய் அலைகிறீர்கள். ஒருவர் இயக்க எப்படி இயங்கலாம் என்று 40 வருட அனுபவம் பெற்றவர்களிடம் பாடம் படியுங்கள். ஊர் ஒற்றுமையை குலைக்க முயலாதீர்கள். இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:காயல்பட்டினத்திற்கு குடிந...
posted by mackie noohuthambi (kayalpatnam) [07 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 15710

எல்லா உறுப்பினர்களையும் ஒட்டுமொத்தமாக பார்க்க நமக்கே சந்தோசமாக இருக்கும்போது அதிகாரிக்கு அந்த உணர்வு ஏற்படுவதில் ஆச்சரியமில்லை. நகரமன்ற வேலைகள் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டதாகவே தெரிகிறது. ஊடகங்கள், இணையதளங்கள் முக்கியமான பங்காற்றி வருவதை பார்க்கும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. விமர்சனங்களை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். பாராட்டுக்களும் விமர்சனங்களும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றது.அது உழைப்பவர்களுக்கு நல்ல டானிக். சுயநலமில்லாமல் பொது நலமே நோக்கமாக கொண்டு செயலாற்றினால் அடுத்த ஐந்து வருடத்துக்குள் நமதூரின் தண்ணீர் தேவையை முற்றிலுமாக நிறைவேற்ற முடியும்.

சில துணிச்சலான முடிவுகளையும் எடுக்க வேண்டும். மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுதல், தண்ணீர் வரி வீட்டு வரி செலுத்தாமல் இருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களை எச்சரித்து தண்டிக்க வேண்டும். எல்லோருக்கும் நல்லவராக இருக்க முடியாது.வெளிப்படையான, ஊழலற்ற, சுறுசுறுப்பாக செயலாற்றும் நகர்மன்றமாக மாற நாம் மனமார வாழ்த்துகிறோம்.எல்லாவற்றுக்கும் மேலாக எல்லோரும் இனைந்து செயல்படுகிறார்கள் என்ற உணர்வு மக்களிடையே ஏற்படும்படி உங்கள் பணிகள் அமையட்டும்.

மக்கி நூஹுதம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:காயல்பட்டினத்திற்கு குடிந...
posted by Prof.Dr.Mohamed Yaseen (KSA) [07 January 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15713

PLEASE WRITE THE COMMANDS IN A WAY THAT NOT HURTING ANYONE.

NEVER FORGET HUMAN ETHICS.

TRY TO APPRECIATE A WOMAN CHAIRMAN OF RELIABLE LEADERSHIP QUALITY


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:காயல்பட்டினத்திற்கு குடிந...
posted by M.Jahangir (Kayalpatnam) [08 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15715

அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்ததாக இங்கு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 5-வது வார்டு உறுப்பினராகி எனக்கு அங்கு சென்றுள்ள மற்ற உறுப்பினர்கள் வேனில் ஏறும்போது (அப்போதுகூட நகராட்சி தலைவிக்கோ அல்லது மற்ற உறுப்பினர்களுக்கோ எனக்கு தகவல் தர தோன்றவில்லை) நகராட்சி உறுப்பினர் அல்லாத நண்பர் எஸ்.கே.சாலிஹ், வரவில்லையா என்று கேட்டு ஆத்தூர் செல்லும் செய்தியை சொன்னதும்தான், அவர்கள் என்னை புறக்கணித்துவிட்டு ஆத்தூர் செல்வது தெரியும். எனவே குறுகிய நேரம் இருந்ததால் என்னால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. என்னை ஏன் புறக்கணித்தார்கள் என்றும் தெரியவில்லை.

இவண்,
என்றும் ஊர்நலனனை நாடும்,
5-வது வார்டு உறுப்பினர்,
ம.ஜஹாங்கிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:காயல்பட்டினத்திற்கு குடிந...
posted by A.Lukman (kayalpatnam) [08 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 15717

அஸ்ஸலாமு அழைக்கும்.

ஆத்துருக்கு குடிநீறேடும் இடத்தை பார்வை இட செல்லும்போது முதல் 5 வார்டு வுருப்பினர்களுக்கு தகவல் சொல்லும் பொறுப்பை தலைவி அவர்கள் என்னிடம் தான் ஒப்படைத்தார்கள்.தலைவி வீட்டுக்கு அருகில் தானே 5 வது வார்டு கவுன்சிலர் நண்பர் ஜகாங்கிர் அவர்கள் வீடு இருப்பதால் அவருக்கு தகவல் சொல்லிருப்பார்கள் என எண்ணி அவருக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்தது என்னுடைய தவறுதான்.

அதற்க்காக ஆத்தூர் புறப்ப்படுமுன்பாகவே என் தவறுக்கு அவரிடம் எல்லோரின் முன்னிலையில் மன்னிப்பு கேட்டு ஆத்துருக்கு வருமாறு அழைத்தேன். இது தான் நடந்த விஷயம்.இந்த தவறுக்கு தலைவி பொறுப்பாக மாட்டார். என்னுடைய இந்த தவறுக்கு மீண்டும் ஒரு முறை நண்பர் ஜகாங்கீர் அவர்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏ.லுக்மான்,
1 வது வார்டு உறுப்பினர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. பெருந்தன்மை
posted by Mauroof (Dubai) [08 January 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15721

"என்றும் ஊர் நலனை நாடும்" என்று பறைசாற்றும் உறுப்பினருக்கு பெருந்தன்மை வேண்டும். 5-வது வார்டு உறுப்பினர் சகோ. ம.ஜஹாங்கிருக்கு அழைப்பு விடுக்கும் விஷயத்தில் விடுபட்டமைக்கு 1 - வது வார்டு உறுப்பினர் சகோ. லுக்மான் அவர்கள் எல்லோர் முன்னிலையிலும் வருத்தம் தெரிவித்து அழைத்திருந்தும் அதை ஏற்கும் மனப்பக்குவம் இல்லாது, அதில் பங்கேற்காது போனது மட்டுமின்றி இணையத்தில் அதை ஒரு குறையாக பதிந்திருப்பது அவசியமற்றது. வரும் காலங்களில் இது போன்ற அழைப்புகளை நகராட்சி மன்றத்தின் அறிவிப்பு பலகையிலும் இடம்பெறச்செய்தல் வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:காயல்பட்டினத்திற்கு குடிந...
posted by M.Jahangir (Kayalpatnam) [08 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15724

நண்பர் மஃரூஃப் அவர்களே நான் ஊர் நன்மைக்காக செயல்பட்டாளும் எனது வார்டுக்கு தேவையானவற்றை நான் செய்து கொடுக்க கடமைப்பட்டுள்ளேன். இவர்கள் ஆத்தூருக்கு செல்வதாக முந்தைய தினம் இரவே அனைவருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இவர்கள் ஆத்தூர் சென்ற அன்று காலை 12:30 மணிக்கு தற்போது தமிழகமெங்கும் நடைபெறும் ரேஷன் கார்டு புதுப்பித்தல் பணிக்காக எனது வார்டுக்குட்பட்ட மொகுதும் தெரு ரேஷன் கடை ஊழியரை மொகுதும் தெருவிற்குள் வந்து நமது பெண்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் மிகவிரைவாக புதுப்பித்து செல்ல ஏற்பாடு செய்திருந்தேன். முற்கூட்டியே எங்கள் பகுதி மக்களுக்கும் தகவல் கொடுத்துவிட்டேன்.

இவர்கள் மற்றவர்களுக்கு சொன்னதுபோல் எனக்கும் முந்தைய தினம் இரவே தகவல்தந்து இருந்தால் நான் ரேஷன் கார்டு புதுப்பிக்கும் நேரத்தை மாற்றியமைக்க வசதியாக இருந்து இருக்கும். 1-வது வார்டு உறுப்பினர் சகோ.லுக்மான் அவர்கள் சொல்வது போன்று அவர்கள் எனக்கு ஃபோன் செய்யவில்லையே? நண்பர் சாலிஹ் ஃபோன் செய்யவில்லை என்றால் இவர்கள் அங்கு சென்ற விபரமே எனக்கு தெரியவந்திருக்காது.

உறுப்பினர் என்ற முறையில் எனக்கு தகவல் சொல்வதற்காக பணித்திருந்த 1-வது வார்டு உறுப்பினர் அவர்கள் மறந்து விட்டார்கள் சரி, நமதூருக்கு செயல்பட்டுவரும் இணையதள செய்தியாளர்களுக்கு தகவல் கொடுத்தது யார்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:காயல்பட்டினத்திற்கு குடிந...
posted by S.A.HABEEB MOHAMED NIZAR (Jeddah- K.S.A.) [08 January 2012]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15725

சகோதரர் ஜகாங்கீர்,

சில சமயம், இது போன்ற அறியாமை தவறுகள், நடந்திருக்கலாம், இதை பெரிது படுத்த வேண்டாம், இனி இந்த மாதுரி தவறுகள், வராமல் பார்த்துகொள்ளவும்..

எல்லாம் மக்களும், நம் உருக்காக உழைக்கும் அன்பு கண்மணிகள்...தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:காயல்பட்டினத்திற்கு குடிந...
posted by M.Jahangir (Kayalpatnam) [08 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15726

நண்பர் மஃரூஃப் அவர்களே நான் இதை குறையாக பதிவு செய்ய காரணமே இந்த செய்தியில் அனைத்து உறுப்பினருக்கும் தகவல் தரப்பட்டதாக கூறப்பட்டடுள்ளதோடு, இதில் கலந்து கொண்ட குழு என்று உறுப்பினர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளார்கள்.

இந்த செய்தியை பார்த்த எனது நண்பர்கள் ஏன் நீ செல்லவில்லை என்று கேட்கவும், நான் அவர்களுக்கு விளக்கம் கொடுத்தேன். இவர்களைப் போல்தானே மற்றவர்களும் நான் கலந்து கொள்ளாததற்கு என்னை தவறாக நினைப்பார்கள் என்ற எண்ணத்திலேயே எனது கருத்தை பதிவு செய்தேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. தன்னிலை விளக்கம்!
posted by S.K.Salih (Kayalpatnam) [08 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15727

நண்பர் ஜஹாங்கீர் அவர்களுக்கு,

௦04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா அவர்களை யதார்த்தமாக நான் அன்று காலையில் சந்திக்க நேர்ந்தபோது, (எனக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டு) “என் குழந்தைக்கு சுகமில்லை... எனவே நான் செல்லவில்லை... நீங்கள் ஆத்தூர் செல்லவில்லையா?” என்று கேட்டார்கள். நான் அவர்களிடம் விபரம் கேட்டபோதுதான் எனக்கு இப்படி ஒரு பயணம் இருப்பது தெரியவந்தது.

நகர்மன்றத் தலைவருக்கு உடனே நான் போன் செய்து, “எனது கேமரா நாசமாகிவிட்டதால் படம் எடுக்க இயலாதே...?” என்று நான் கேட்க, “அதான் ஜஹாங்கீர் வருகிறாரே...? அவரிடம் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்... இப்போது எங்களுடன் வந்து குறிப்பு மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்...” என்றார்.

நானும் நகராட்சிக்குச் சென்றேன். அங்கு சில கவுன்சிலர்கள் நின்றுகொண்டிருந்தனர். “ஜஹாங்கீரை இன்னும் காணவில்லையே...?” என தலைவிதான் என்னிடம் கேட்டார். “நான் இப்போ அவனுக்கு கால் செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு கால் செய்தபோதுதான் தங்களுக்கு நான்தான் முதல் தகவல் தருவதாக தெரிவித்தீர்கள். வியப்புற்ற நான் உடனடியாக தலைவியிடம் விசாரித்தேன்...

“5 வார்டுகளுக்கு ஒருவர் என்ற அடிப்படையில், தகவல் சொல்ல பொறுப்புகளை நான் ஒப்படைத்தேன்... லுக்மான் காக்கா, நீங்க சொன்னீங்களா, இல்லையா?” என்று தலைவி கேட்க, அவர் மறந்ததை நினைத்து வருந்தி, அவ்விடத்திலேயே மன்னிப்பும் கேட்டு கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் தங்களிடம் கெஞ்சினார். இருந்தும் தாங்கள் அசைந்து கொடுக்கவில்லை. நகர்மன்றத் தலைவி அவர்களும் தங்களுடன் பேசினார். இருந்தும் தாங்கள் இசையவில்லை.

அதற்குப் பிறகும், சுமார் 45 நிமிடங்கள் வேன் அவ்விடத்திலேயே நின்றது. இதேபோன்று 06ஆவது வார்டு உறுப்பினர் ஹாஜியார் மம்மி அவர்களுக்கும் தகவல் தாமதமாக போயிருந்ததாக அவர் தெரிவித்தார். எனினும், அழைத்த மறுகணம் அவர் வண்டியில் வந்து ஏறிக்கொண்டார்.

புறவழிச்சாலை வழியாக செல்லவிருந்த வாகனம், தங்களுக்காக - பேருந்து நிலையம் அருகிலிருக்கும் தங்கள் கடை வரை வந்து நின்றது. கவுன்சிலர் பதுருல் ஹக் வாகனத்திலிருந்து இறங்கிவந்து உங்களை அழைத்தும் தாங்கள் வரவில்லை என்பது மட்டுமின்றி, அவரிடம், “இப்டி நீங்களெல்லாம் செயல்பட்டால் நாளை உங்களுக்கு ஒன்று என்று வரும்போது நான் துணை நிற்கமாட்டேன்” என்று தாங்கள் சொன்னதாகவும் அவர் தெரிவித்தார்.

தகவல் சொல்லாத காரணத்தால், தங்களைச் சந்திக்க வெட்கப்பட்டு, வேனுக்குள் இருந்தவாறு கவுன்சிலர் லுக்மான் காக்கா மீண்டும் உங்களுடன் போனில் பேசி, மன்னிப்புக் கேட்டு கெஞ்சினார்... தாங்கள் மருந்துக்குக் கூட ஒரு நான்கு அடி எடுத்து வைத்து உங்கள் கடையிலிருந்து வந்து பார்க்கக்கூட இல்லை...

முற்கூட்டி தகவல் கிடைக்காததால் தங்களுக்கு வேறு வேலைகள் இருந்திருக்கலாம்... தவறில்லை. ஆனால், தங்கள் கடை முன் நிறுத்தப்பட்ட வேனுக்கருகில் வந்து ஒரு வார்த்தை தங்கள் இயலாமையைத் தெரிவித்திருக்கலாம்...

எங்கிருந்தோ கிடைத்த தகவலைப் பெற்று உடனடியாக விரைந்து வந்தேன்... என்னைப் போல மற்றொரு வலைதளத்தில் செய்தி வெளியிடும் நண்பர் ஹாஃபிழ் முஜாஹித் அவர்களை நான்தான் அழைத்தேன். அழைத்த மறுகணமே வந்துவிட்டார்...

நாங்களெல்லாம் செய்தியாளர்கள் மட்டுமே! ஆனால் தாங்களோ செய்தியாளரும், நகர்மன்ற உறுப்பினரும் ஆவீர்கள். இருந்தும் தங்களின் இந்த செயல்பாடு எங்களுக்கு வியப்பை அளித்துள்ளது என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.

மொத்தத்தில் நானோ, நண்பர் முஜாஹிதோ எங்கிருந்தோ நாங்களாகத் தெரிந்துகொண்டே வந்தோம். ஆனால் தலைவி தகவல் தரச்சொன்னது தங்களுக்கு மட்டுமே!

“யார் கொடுத்த தகவலின் பேரில் இணையதள செய்தியாளர்கள் வந்தர்ர்கள்?” என்ற தங்களின் கேள்வியைக் கண்ணுற்றதால், நான் கண்ட நிகழ்வுகளை இங்கு விளக்கமாகத் தர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டமைக்கு வருந்துகிறேன்... புரிநதுகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:காயல்பட்டினத்திற்கு குடிந...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [08 January 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15728

நண்பர் ஜகாங்கீர் அவர்களே,

சகோ. ஹபீப் நிஜார் அவர்கள் கூறியது போல் தவறுகள் மனித இயல்பு, இதுபோன்ற தவறுகள் இனிமேல் நடைபெறாமல் பார்த்துகொள்ளுங்கள்.

நண்பர் ஜகாங்கிர் அவர்களே, எங்கு சிறு தவறு நடைபெறாதா என்கின்ற கழுகு பார்வையில் சிலர் இருக்கும் இத்தருணத்தில், இதுபோன்ற சிறு தவறுகளை தாங்கள் பொருட்படுத்தாமல், தங்கள் வார்டிர்க்கும், காயல் நகருக்கும் செய்யவேண்டிய ஆக்கபூர்வமான செயல்களில் தங்களை ஈடுபடுத்திகொள்ளுங்கள்..

செய்த தவறுக்கு ஒருவர் வருத்தம் தெரிவிக்கும் பொழுது அதையேற்று, தொடர்ந்து பொதுப்பணியில் தங்களை ஈடுபடுத்தி, தங்களை தேர்ந்தெடுத்த உங்களின் வார்டு மக்களிடையே ஒரு சிறந்த "வார்டு உறுப்பினர்" என்ற நற்பெயரை சமபாதியுங்கள்.

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:காயல்பட்டினத்திற்கு குடிந...
posted by mohd ikram (saudi arabia) [08 January 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15729

பொது சேவை செய்ய நினைக்கும் உறுப்பினர்கள் ஈகோ பார்ப்பதில்லை. ஈகோவை விட்டு பொது சேவைகளை செய்ய நாடுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:காயல்பட்டினத்திற்கு குடிந...
posted by M.Jahangir (Kayalpatnam) [08 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15730

அன்பு நண்பர் S.K.சாலிஹ் அவர்களே உங்களை யார் அழைத்தார்கள் என்று நான் விவாதிக்கவில்லை.

மேலும் தாங்கள் 5 வார்டுகளுக்கு ஒருவர் என்ற அடிப்படையில், தகவல் சொல்ல பொறுப்புகளை நான் ஒப்படைத்தேன்... லுக்மான் காக்கா, நீங்க சொன்னீங்களா, இல்லையா?' என்று தலைவி கேட்க, அவர் மறந்ததை நினைத்து வருந்தி, அவ்விடத்திலேயே மன்னிப்பும் கேட்டு கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் தங்களிடம் கெஞ்சினார். இருந்தும் தாங்கள் அசைந்து கொடுக்கவில்லை. நகர்மன்றத் தலைவி அவர்களும் தங்களுடன் பேசினார். இருந்தும் தாங்கள் இசையவில்லை." என்று கூறியுள்ளீர்கள்.

அதற்கு நான் இச்செய்தியின் 10 கருத்தில் விளக்கம் அளித்து விட்டேன். என் வார்டு வேலை இருந்ததால் வரஇயலவில்லை என்று. நான் வரமுடியாத சூழ்நிலையில் இருக்கப்போய்தானே அங்கு வர சம்மதிக்கவில்லை. என் தெரு வாசிகளிடம் கேட்டால் தெரியும், ஏன் தலைவிக்கு கூட தெரியும் அன்று மதியம் 12:30 மணிக்கு ரேஷன் கார்டு புதுப்பிக்க நான் ஆள் ஏற்பாடு செய்தது.

என்கடை முன் வந்து நின்றதாக கூறுகின்றீர்கள். நான் வரவில்லை என்று சொன்ன பிறகு நீங்கள் வந்து காத்திருந்தால் அதற்கு நான் பொறுப்பாளியா? பதுருல்ஹக்கிடம் நானும் வரவில்லை நீயும் செல்ல வேண்டாம் என்று கூறியதாக எழுதியுள்ளீர்கள். பதுருல்ஹக் என்னோடு பேசிய டெலிஃபோன் உரையாடல் என்னிடம் உள்ளது. அப்படி நான் எதுவும் சொல்லவில்லை. எனது பெயரை தேவையில்லாமல் கலங்கப்படுத்த வேண்டாமே? யார் வேண்டுமென்றாலும் பதுருல்ஹக்கிடம் நேரடியாக விசாரிக்கலாம் அல்லது என்னிடம் உள்ள ஃபோன் ரிக்கார்டை கேட்கலாம். நான் ஈகோ பார்க்கவில்லை. எனது வார்டு பணி காரணமாகவே என்னால் செல்ல முடியவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. One Team One Dream
posted by Riyath (HongKong) [08 January 2012]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 15731

This is a good news that the starting point of getting more benefits to our kayalites, but the comments are going in different direction. All men do mistakes and some men ask apology, only good men accept the apology.

Forgiveness is the attribute of the strong.-- Mahatma Gandhi

Lets focus on developing our kayal as a team. **Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:காயல்பட்டினத்திற்கு குடிந...
posted by Cnash (Makkah ) [08 January 2012]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15732

அஸ்ஸலாமு அலைக்கும்,

நல்ல காரியம் என்று வரும் போது நான் முந்தி நீ முந்தி என்று செல்வது தானே பொதுவாழ்விற்கு அழகு. கவுன்சிலர் அப்படி நடந்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து இருக்கலாமே..

சகோ. லுக்மான் வயதில் பெரியவர், தான் மறந்த சம்பவத்திற்கு அனைவர் முன்னிலும் வருத்தம் தெரிவித்த பின்னும் நீங்கள் சென்றிருக்க வேண்டும் அதுதான் முறை, இல்லையெனில் அழகிய முறையில் காரணத்தோடு மறுத்திருக்க வேண்டும் அதை விட்டு விட்டு அழைக்கபடவில்லை என்று அதற்கான காரணம் தெரிந்த பின்னும் விவாதிப்பது முறையா?

கவுன்சிலர் லுக்மானோ, அல்லது தலைவியோ அவர்கள் வீட்டு சொந்த காரியத்திற்கு அழைக்க மறந்தாலோ மறுத்தாலோ நீங்கள் ஈகோ, கோபம் கொள்ளலாம், இது பொது காரியம்!!! இங்கே எதற்கு?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:காயல்பட்டினத்திற்கு குடிந...
posted by Abdul Cader S.H. (Jeddah) [08 January 2012]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15733

என்ன இது சிறுபிள்ளைதனமா இருக்கு! ஊர் நன்மைக்கு ஓடோடி சென்று சேவை செய்யவேண்டும். அதைவிடுத்து அடம் பிடிப்பது முறையாகுமா?

நகர் மன்றத்துடைய ஓர் உறுப்பினர் அலுவல் காரணமாக எந்நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் Red Carpet போட்டு அழைக்கும் அளவிற்கு நடப்பது முறை அல்ல அது நம் பண்பட்ட அறிவை பிரதிபலிப்பதில்லை. ஓடி விளையாடு பாபாக்கள் நம் நகர் மன்றத்திற்கு தேவை இல்லை என் மக்கள் நினைக்க தோன்றும்.

ஆகையால் புரிந்து செயல் படுவது நலம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. கூலா ஒரு ட்ரிங்க்ஸ் கொடுங்க
posted by S.A.MUHAMMAD ALI (Dubai) [08 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15736

சகோதரர் ஜகாங்கீர் அந்த நேரத்தில் கொஞ்சம் சூடாக இருந்திருப்பார் போலும். மற்றபடி நல்ல தங்கமான ஆள். இதை எல்லாம் எண்ணெய் விட்டு திரி ஏத்தாமல் கூலா ஒரு கூல் ட்ரிங்க்ஸ் ஊத்தி கொடுங்க. சரி ஆகிடுவார்.

எவ்வளவோ கம்மேன்ட்சை தம்முல போட்ட நீங்க ஜகாங்கீர் உடைய கம்மேன்ட்சையும் தம்முல போட்டு நேர போய் பேசி இருந்தால் இம்புட்டு கமெண்ட்ஸ் வந்து இருக்காது.

அடிச்சாலும் பிடிச்சாலும் அண்ணன் தம்பி நாங்க என்று அடுத்த முறை ஒன்றாக செல்லுங்கள். All the best to All of you.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:வெட்ட வெளிச்சமாகும் நகராட்ச்சி!...
posted by OMER ANAS (KAYAL PATNAM.) [08 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15737

சனி, ஐனவரி 7, 2012

காயல்பட்டினத்திற்கு குடிநீர் வினியோகிக்கும் ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்தில் நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் ஆய்வு!

வெட்ட வெளிச்சமாகும் நகராட்சி லச்சணம் என்று தலைப்பை மாற்றி இருக்கலாம்! தனக்கு கொடுத்த சின்ன வேலையினைக் கூட அவா பார்த்துப்பா என்று பெரியவா லுக்மான் பாய் நினைத்தது தவறுதான்! மறுப்பதற்கு இல்லை! மன்னிப்பும் கேட்டுள்ளார். ஓகே! (எல்லா உறுப்பினர் கைபேசி அழைப்பும் தலைவியிடமும், சக உறுப்பினர்களிடமும் இருக்கத்தானே செய்யும்???!!!)

ஆனால் வெளியில் நின்று கமண்ட் அடிப்பவர்கள், தம்பி ஜகாங்கீரை மட்டும் குறையோடு பார்ப்பது ஏன்? ஜகாங்கீரும் பொதுச்சேவை (ரேசன் கடை) காரணமாகவே மறுப்பு தெரிவித்து உள்ளார் என்பதை புரிய வேண்டும்.

அவர் வீட்டில் கல்யாண அழைப்பு இருக்கு வரமுடியாது என்று கூறவில்லை! முற்கூட்டி அழைத்து இருந்தால், மாற்று ஏற்ப்பாடு செய்து இருப்பேன் என்றுதான் அவரும் கருத்து பதிவு செய்துள்ளார்! அழைக்காமலேயே அனைவர்களையும் அழைத்தோம் என்று செய்தி வரும்போது விளக்கம் சொல்ல அவருக்கும் உரிமை உண்டு! திறந்த வெளி பஞ்சாயத்து என்று புகழாரம் சூட்ட நினைக்கும் நாம், அதில் சிலரின் தவறுகள் வெட்ட வெளிச்சம் ஆகும் போது, தவறு செய்தோரை விட்டு விட்டு தவறை சுட்டிக் காட்டுவோரை, சாடுவது பெருந்த்தமை என்று சுட்டிக் காட்டுவோருக்கு, பெருந்தன்மை இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:காயல்பட்டினத்திற்கு குடிந...
posted by Mauroof (Dubai) [08 January 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15738

5-வது வார்டு உறுப்பினர் சகோ. ம. ஜஹாங்கிர் அவர்களின் பதில் கருத்துக்கு நன்றி. உறுப்பினர் தனது தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரேஷன் கார்டு புதுப்பித்தல் பணிக்காக முன்னரே நேரம் ஒதுக்கி விட்டபடியால் காலம் தாழ்ந்து அறியத்தரப்பட்ட "குடிநீரேற்று நிலைய ஆய்வில்" பங்குபெற முடியாமல் போனது என தெரிவித்திருக்கிறார்.

இந்நிகழ்வில் பங்கு பெற முடியாமல் போனதின் விளைவாக மற்றவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியதானது அவருக்கு மன வருத்தத்தை தந்திருக்கலாம் என்றால் அதில் வியப்பில்லை. ஏன் எனில் நம் நகர மக்கள் கேள்வி கேட்பதில் வல்லவர்கள் அல்லவா!

ஆனால் பொதுப்படையாக அவரது கருத்துப்பதிவில் "புறக்கணிப்பு" என்ற வார்த்தை இடம்பெற்றதுதான் விவாதப்பொருளாக ஆகிவிட்டது என எண்ணுகிறேன்.

இத்தோடு இவ்விவாத பொருளுக்கு முற்று வையுங்கள் சகோ. ம.ஜஹாங்கிர் அவர்களே. "SMALL ISSUES ARE BIG THINGS & BIG THINGS ARE SMALL ISSUES " என ஆங்கிலத்தில் சொல்வார்கள் பொதுவாக. அது இதற்கும் பொருந்தும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:காயல்பட்டினத்திற்கு குடிந...
posted by fathima (kayalpatnam) [08 January 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 15744

சின்ன பிள்ளை தனமா இருக்கு

நீயா நானா போட்டி வைக்கலாம் போலா...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:காயல்பட்டினத்திற்கு குடிந...
posted by Vilack SMA (Hong Shen , Siacun) [09 January 2012]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 15746

சரி விடுங்க பிரச்சினையை . எங்கேயோ தவறு நடந்திருக்கு .

அப்புறமா , அவங்க குடிப்பதற்கு நல்ல தண்ணியாம் . ஓட்டுப்போட்ட ஊர் ஜனங்களுக்கு quality கம்மியா வருதாம் . இத என்னான்னு கவனிக்க சொல்லுங்க .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved